இராமாயண, மகாபாரதங்கள் சொல்லுவதும் புராணங்கள் பேசும் தொன்மங்களும் தென்னகத்தில் புழங்கி அது பின்னர் வடமொழியில் எழுதப்பட்டது என்றொரு முன்னீடு (Proposal) சில தமிழறிஞர்களால் வைக்கப்படுகின்றது. எனக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது. பழைய இராமாயணங்கள் என்று
ஹரியண்ணா.
ஆமாம். தங்கள் இராமாயணக்கட்டுரைகளைப் பற்றி அண்மையில் சொன்னவன் நான் தான். அக்கட்டுரைகளை முன்பு படிக்கும் போது இலக்கியச் சுவைக்காக மட்டுமே படித்தேன். அண்மைக்காலத்தில் தான் 'இலக்கியத்தில் இறை' என்று ஒரு தொடர் எழுதுவதற்காக ஆய்வு நோக்கில் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினேன். இப்போது மீண்டும் உங்கள் கட்டுரைகளைப் படித்தால் என் தொடருக்கு உதவும் பல செய்திகள்/தரவுகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அவற்றை எங்கே படிக்கலாம் என்று கூறுங்கள்.
'ஐயிரு தலையின் அரக்கர் கோமான்' என்று இராவணனைக் குறிக்கும் குறுந்தொகைப் பாடலினை இந்தக் கட்டுரையை என் வலைப்பதிவில் இட்ட போது ஒரு அன்பர் பின்னூட்டமாக இட்டார். அப்போது அறிந்து கொண்டேன்.
பரிபாடலில் அகலிகைக் கதை வருவதை எடுத்துக் காட்டி சென்ற வாரம் தான் ஒரு கட்டுரையை என் வலைப்பதிவில் இட்டேன். நீங்கள் தந்துள்ள மற்ற குறிப்புகளையும் அறிவேன்; ஆனால் நீங்கள் சொன்ன முறையில் தொடர்புறுத்திப் பார்த்ததில்லை. 'இராமன் என்று தானே சங்க பாடல் குறிக்கிறது? திருமால் என்றோ கடவுள் என்றோ சொல்லவில்லையே?!' என்றொரு கேள்வி அண்மையில் இங்கே மின் தமிழிலேயே வைக்கப்பட்டது. அந்த அன்பர் சிலம்பின் ஆய்ச்சியர் குரவையிலிருந்து தாங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் தரவைப் படிப்பார் என்று நம்புகிறேன்.
தங்களின் வழிகாட்டுதல்களுக்கு மிக்க நன்றி.
அன்பன்,
குமரன்.
கடுந்தெறல் - மிக்க இன்பத்தை விளைவிக்கும் தேனை (நிறைய கொண்டிருக்கும், நிறைய உண்ட)
இராமன்
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
கடுந்தெறல் - மிக்க இன்பத்தை விளைவிக்கும் தேனை (நிறைய கொண்டிருக்கும், நிறைய உண்ட)
இராமன்கடும்தேறல் வேறுகடுந்தெறல் வேறு. = மிக்க சினம் கொண்டவன்
2008/8/31 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
கடுந்தெறல் - மிக்க இன்பத்தை விளைவிக்கும் தேனை (நிறைய கொண்டிருக்கும், நிறைய உண்ட)
இராமன்கடும்தேறல் வேறுகடுந்தெறல் வேறு. = மிக்க சினம் கொண்டவன்மிகச் சரி. இந்தப் பிழையை நானும் கவனிக்கவில்லை. கடுந்தெறல் என்பதற்குக் கடுஞ்சினத்துடன் 'போரில் ஈடுபடுபவனான' என்று இந்த இடத்தில் பொருளை வருவித்துக்கொள்ள வேண்டும்.
அனுமன்:வார்ப்பும் வனப்பும் என்றொரு நூலை நான் எழுதி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ராமாயணப் பாத்திரப் படைப்புகளை (character study) ஆயும் வரிசையில் முதல் நூல். அதன் தொடக்க அத்தியாயத்தில் இந்தப் பாடலை, இதன் சூழலுடன் விளக்கி எழுதியிருக்கிறேன். அந்தப் பகுதியை மட்டும் இங்கே தருகிறேன்:--
>> தமிழர்களை அரக்கர்கள் என்றும் குரங்குகள் என்று வடநூலார் இராமாயணத்தில் எழுதியிருக்கிறார்கள் என்ற கருத்து மிகுந்த வலிவுடன் நம்மிடையே இருக்கிறது.
நூல் நயமறியும் திறத்தோர் இப்படியெல்லாம் பிறழ்பட பொருள் கொள்ள மாட்டார்கள் ;-)
சூரிச்சில் நடந்த கம்பன் விழாவில் சுகி சிவம் அவர்கள் கம்பனின்
பாத்திரப்படைப்புகள் பற்றிச் சொல்லும் போது, தெய்வம், மனிதன், விலங்கு
(குரங்கு), அரக்கன் எனும் நான்கு வகை மனோநிலைகளை கம்பன் எவ்வளவு அழகாக
சித்தரித்துள்ளான் என்று விரிவாகச் சொன்னார். அதன் சுருக்கம். தெய்வம்
என்பது ஒப்பு உயர்வற்ற உயர்ந்த தனி நிலை. அதை அப்பழுக்கற்ற இராமன்
கதாபாத்திரத்தின் மூலம் சித்தரிக்கின்றான். அடுத்து மனித நிலை. இது நடு
நிலை. மேலேயும் போகலாம், கீழேயும் போகலாம். எனவே மனிதருள் குரங்குண்டு,
அரக்கனுமுண்டு. விலங்கில் மனிதனுண்டு, தெய்வமும் உண்டு. அரக்கனில்
மனிதனுண்டு, விலங்குமுண்டு. இப்படி (உதாரணங்களை எளிதாக யூகிக்கலாம்).
அரக்கன் என்பது தெரிந்தே ஒரு தவறைச் செய்வது. செய்த பின் நிற்க
அதற்குத்தக என இருப்பது.
அவ்வளவுதான். தமிழர்களில் தெய்வமுண்டு, மனிதருண்டு, விலங்குகளுமுண்டு,
அரக்கர் பலவுண்டு :-)
கண்ணன்
அகோ! வாரும் பிள்ளாய்...
வள்ளுவம் என்னவென நம்மாழ்வாரையும் கேட்கலாமே!
வள்ளுவமும் வைணவமும் 1
http://thirumozi.blogspot.com/2007/08/073.html
வள்ளுவமும் வைணவமும் 2
http://thirumozi.blogspot.com/2007/08/074.html
வள்ளுவம் சமயச் சார்ப்பற்றது என்று யார் சொல்வது?
கண்ணன்