இன்று மாலை ஒரு அலுவலக விருந்தில் ஃபிஜித்தீவிலிருந்து வந்திருந்த ஒரு
பெண்ணைப் பார்த்தேன். அவர்களைப் பார்த்தவுடன் இந்திய வம்சாவளி என்று
தெரிந்தது. மிஸ் கரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பேச்சில்
புரிந்தது இவரது தாத்தா சின்னத்தம்பி முதலியார் தமிழகத்திலிருந்து தோட்ட
வேலை பார்க்க ஃபிஜி போயிருக்கிறார். அங்கு போய் ஒரு வட இந்தியப் பெண்னை
மணந்து கொண்டு இருக்கிறார்.
முதலியார் என்கிறீர்களே அப்படியெனில் தமிழகமா என்றேன். ஆம் ‘சென்னை’ என்றார்.
அடடா! பிறகென்ன தமிழில் பேசலாமே என்றேன்.
முடியாது, ஏனெனில் நான் ஃபிஜிப்பெண் எனக்கு பிஜி அல்லது இந்திதான் தெரியுமென்றார்.
மூன்று தலைமுறையில் தமிழ் போச்சு. முதல் தலைமுறை இந்தியனான நான் இந்தியப்
பொதுமொழியான இந்தியில் அவளோடு பேச முடியவில்லை. தமிழ் மூன்றாம் தலைமுறைப்
பெண்ணான அவரால் என்னுடன் தமிழிலோ, இந்தியிலோ பேசமுடியவில்லை.
எனவே அங்கிலத்தில் உரையாடினோம்!!
ஐரோப்பாவில் குடிபுகுந்திருக்கும் ஈழத்துத் தமிழர்களின் சந்ததியினர்
கதையும் இதேதான். டென்மார்க்கில் இருந்து வரும் பேரன் டேனிஷ் பேசுவான்,
இன்னொரு பேத்தி கானடாவிலிருந்து வருவதால் ஆங்கிலம் பேசுவாள், இன்னொரு
பேரன் ஜெர்மன் மட்டுமே பேசுவான். ஈழத்துத் தாத்தா பேரன், பேத்திகளோடு
உட்கார்ந்திருந்தும் எந்த மொழியில் பேசுவது என்று தெரியாமல் மலைத்துப்
போய் எல்லோரும் ஸன் ரிவி (டிவி) பார்த்து மகிழ்வார்கள் (நம்மவூர் டி.வி
தமிழ் பேசி அதன் மூலம் எங்காவது தமிழ் போய்விடப்போகிறதே என்று கவனமாக
ஆங்கிலத்திலோ, தமிலங்கிலத்திலோ பேசுவார்கள்).
க.>
2010/11/15 Sri Sritharan <ksth...@hotmail.com>
அன்பின் ஸ்ரீதர், லிங்க்குக்கு நன்றி. படித்தேன்.
100+ பேர் பேசுகிற, எழுதப்படா மொழிகளைப்
பற்றி அவ்வப்போது மொழியாசிரியர்கள்
சொல்லும் பேட்டிகள் வெளிவரும். இந்தியாவில் ஏராளமான டிரைபல் பேச்சுகள்
பக்கத்தில் உள்ள ஆதிக்க மொழிகளால் கபளீகரம் செய்யப்பட்டுவிடும். ஒருமுறை,
பேரா. எமனோ (திராவிட வேர்ச்சொல் அகராதி தயாரித்தவர்) தமிழ்நாட்டில்
மலைவாசி பாஷைகள் ஆகிய படுகா, தோடா, கோத்தா, இருளா, ... போன்ற அரிய
திராவிட மொழிகள் தமிழால் விழுங்கப்பட்டுவிடும் என்று மிகக் கவலையோடு
சொன்னார். இந்தியாவின் காடு, மலை வாசிகளின் கலாச்சாரம் அவர்கள் மொழி
அந்தந்தப் பிராந்திய ஆதிக்க மொழிகளின்
ஆக்கிரமிப்பால் அழிவதன் முன் எழுதியும், ரெக்கார்ட் செய்தும்
ஆவணப்படுத்தல் அவசியம். அரசு செய்யுமா? மிஷனரிகள், மொழி ஊழியர்கள்,
பல்கலைக்கழகங்கள், ... விட்டால் உடனே வந்து தம்
பணிகளைச் செய்வர். ஒரிசா, மேகாலயா, நாகாலாந்து, ... போன்றவற்றில்
கேரளாவில் இருந்து ஏராளமானவர்கள்
சமயப் பணிகளில் ஈடுபடுவோர் உண்டு. அவர்கள் மொழியியல் பயிற்சி
பெற்றால் பல ஆவணங்கள் ரெக்கார்ட் ஆகும். 19-ஆம் நூற்றாண்டிலே
பாதிரிகள், கலெக்டர்கள் எழுதியவையே நமக்கு இன்று கிடைக்கும்
காலனிய ஆட்சி ஆவணங்கள். அதுபோன்ற ரெக்கார்டிங்ஸ் தொடர
அரசு வழிவகுக்கலாம். சின்னஞ்சிறு பேச்சுகள் அழிவதன் முன்
ஆடியோ, வீடியோ ஆகவேண்டும். பல மாணவர்கள் பின்னால்
ஆராய இவை துணையளிக்கும்.
இந்தியாவின் அரசியல் அமைப்பில் இடம்பெறும் தெலுங்கு, தமிழ்,
ஒரியா, ... போன்ற மொழிகள் வாழ கணினி மயம் ஆகணும்.
ஒரு தலைமுறையிலே தமிழை இழப்போர் அதிகம் அமெரிக்காவில்
பார்க்கிறேன். தாத்தா தமிழாசிரியராய், பேராசிரியராய் இருந்திருப்பார்.
மகன், மகள் அமெரிக்கா வந்தபிறகு குழந்தைகளுக்கு
தமிழ் பேசக்கூட தெரிவதில்லை. எழுத்து சொல்லவே வேண்டாம்.
இந்நிலை மாற தமிழ் இலக்கணம் எளிதாய்ச் சொல்லிக்கொடுக்க
எழுதப்படணும். விரும்புவோர் படிக்க பெரியார் விடுதலை
பத்திரிகையில் அச்சாகும் சீர்மை எழுத்து (இணையப் பல்கலை
வலைதளத்தில் அறிஞர் வாசெகு முன்மொழிவுப் பேருரை உள்ளது)
பரவலாகக் கணினியில் பரவவேண்டும். விரும்புவோர் கிளிக்கினால்
வலைத்தளங்கள் (உ-ம்: விடுதலை இதழ்) சீர்மை எழுத்தில்
படிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.
தென்னிந்தியாவின் மாநில முதல் அமைச்சர்கள் போராடி
அரசியல் சாசனத்தில் எல்லா எழுத்துக்களும் சமம் என்ற
உரிமை பெறல் வேண்டும்.
தமிழர்கள் இந்தியை கிரந்த எழுத்துக் கொண்டே கணியில் படிக்க
முடியும். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் செய்ததுபோல்,
இந்தி, தெலுங்கு, வங்கம், மலையாளம், ... வாசகங்களை
மேற்கோள் இடும்போது வலைப்பக்கத்திலும், அச்சுப் புஸ்தகங்களிலும்
நாம் கிரந்த எழுத்தையே மேற்கொள்ள வேண்டும். இந்தி எழுத்தும்,
தமிழ் எழுத்தையும் விட அழகாக இருப்பது தமிழும் கிரந்தமுமே.
கல்வெட்டுக்களைப் பாருங்கள். இந்தி, தெலுங்கு, மலையாளம், ...
என்று பிறமொழி வாக்கியங்களை மேற்கோளிட, படிக்க
கிரந்த எழுத்தைப் பயன்படுத்துவோம். மறைமலையடிகள்
சாகுந்தலத்தை மொழிபெயர்த்தவர். அனந்தை சுந்தரம்பிள்ளையவர்கள் வடமொழி
பழுதற அறிந்தவர். ஆறுமுக நாவலர், காசிவாசி செந்திநாதையர், ...
பயன்படுத்திய கிரந்த எழுத்தை
இனி தென்னிந்தியரும், இலங்கையிலும் தமிழல்லா
மொழி இலக்கிய மேற்கோள்கள் காட்டப் பயன்படுத்த
வசதி வருகிறது.
நா. கணேசன்
I have several times tried to draw the attention of some people who are
active in the Tamil Wikipedia
on the fact that it is not sustainable to have a page on Complex numbers
where you hesitate between the expression சிக்கலெண் , the expression செறிவெண்
and the expression "கலப்பெண்"
My most recent attempt took place in April 2010,
when I wrote to someone what follows:
****************************
"What is the official Tamil translation for "complex numbers"?"
I [...] see, on page 137 inside a book contained on the site [...]
<http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Maths-TM-1.pdf>
that the official term used by Tamil math teachers is "கலப்பெண்கள்".
(other books are reachable on:
<http://www.textbooksonline.tn.nic.in/>)
I had been wondering why,
inside the Tamil Wikipedia
there was a contradictory terminological usage usage
Some people use செறிவெண் and some people use சிக்கல் எண் .
Still others use "கலப்பெண் ", but with at least 2 different meanings.
****************************
However,
the History page
<http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D&action=history>
shows that there is not attempt at improving the page.
Is this not considered as important?
Is Tamil not a language for science?
-- Jean-Luc Chevillard
On 15/11/2010 21:51, N. Ganesan wrote:
>
> On Nov 15, 9:59 am, விஜயராகவன்<viji...@gmail.com> wrote:
>> This only shows a language, any language including Tamil, is only a
>> reflection of life. In an age of globalization many smaller languages
>> which can't cope with changes in the conditions of life get
>> eliminated. Or saved for special purposes like religion.
>>
>> History is totally blind to slogans like தமிழ்த் தாய் or கன்னித்
>> தமிழ்
>>
>> Vijayaraghavan
>>
>> Vijayaraghavan
>>
> Economically, Tamil may not be able to withstand globalization forces,
> it's true.
> For example, there is no Science and Technology original research
> done in India's languages including Tamil or Telugu or Malayalam.
>
> Only in Culturescapes, Tamil can survive. For example, Sun TV
> companies promoting Tamil as a modern means of News and Entertainment,
> and also Religion& Bhakti movement among Tamils will have
> a way to save Tamil among Tamils. And, discussion groups
> in Unicode Indic scripts.
>
> For money making, the world is becoming one& more& more
> of the trade& business& science Space is occupied by English
> & its journals. French, Germans, Chinese, Indians, Japananese, ...
> all publish in English more& more. Science journals in Indian
> languages does not exist.
>
> Dr. V. C. Kulandaswamy, a student of Devaneya PaavaaNar
> at Salem college (when Ramasamy Kavundar was its principal)
> chose to attend Salem college. Even though he got admissiosn
> in colleegs like St. Joseph's college, Tiruchy. To learn Tamil
> from teachings of PaavaaNar. VCK told me that D. PaavaaNar
> was confidant that Science can only be taught at College level
> via English. Paavaanar is correct with a foresight that's hard
> to find. With globalization, Tamil parents spend all their income
> to give good English education to their children. Tamil neologisms
> for English technical words is welcome& can become a
> cottage industry by itself, English for jobs in India& abroad
> is important for growth economically. Much % of India
> ia young& less than 25 years old, to ensure a bright future
> for them economically& Govt.s need to provide jobs
On Nov 16, 4:22 am, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
>
> பார்த்தீர்களா, இதுவரைகாலமும் சன் டிவி என்று எழுதி வந்ததை உங்களை அறியாமல் இப்போது ஸன் டிவி என்று எழுதுகிறீர்கள்.
> இதைத்தான் நா. கணேசன் இவ்வாறு எழுதியிருந்தார் போலும்:
>
சிறீதர்,
நான் நீங்கள் குறிப்பிடுவதை எழுதவில்லை.
> >இந்தி, தெலுங்கு, வங்கம், மலையாளம், ...
> > வாசகங்களைமேற்கோள் இடும்போது வலைப்பக்கத்திலும், அச்சுப்
> > புஸ்தகங்களிலும்நாம் கிரந்த >எழுத்தையே மேற்கொள்ள
> > வேண்டும். இந்தி எழுத்தும்,தமிழ் எழுத்தையும்
> > விட அழகாக இருப்பது தமிழும் கிரந்தமுமே.
>
> தமிழ் அழியும் காலம் வெகு விரைவில்:(
>
ஆறுமுக நாவலர் அச்சிட்ட புத்தகங்களைப் பாருங்கள்.
தமிழ் அல்லாத வாக்கியங்கள் வரும்போது கிரந்த
எழுத்தில் எழுதியிருப்பார். அதைச் சொன்னேன்.
ஹிந்தி எழுத்தைவிட, கிரந்த எழுத்தால்
ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், வடமொழி, ...
வாக்கியங்களை மேற்கோள் காட்டும்போது
பயன்படுத்த முடியும். தமிழ் எழுத்துக்கு
இயைந்தது ஹிந்தி எழுத்தை விட, கிரந்த
எழுத்து என்று குறிப்பிட்டேன்.
ஸ்ரீதர் என்னும் வார்த்தையை கிரந்தத்திலும்,
தமிழிலும் எழுதிப் பாருங்கள். புரியும்.
ஹிந்தியில் ஸ்ரீதர் என்னும் வடசொல்லை
விட கிரந்தத்தில் எழுதும்போது எளிதில்
புரிந்துகொள்ளலாம். அதனால் தான்
இன்னும் ஈழநாட்டில் கிரந்தப் பயிற்சி
உள்ளது - மயூரகிரி சர்மா எழுதியிருந்தாரே.
நா. கணேசன்
> அன்புடன்
> சிறீதரன்
>
>
>
>
>
> > 2010/11/15 Sri Sritharan
>
> > > Living in the age of language death
>
> > > Of 6,800 languages existing today, only 3,000 will still be around in 2100
>
> > >http://www.day.kiev.ua/316136- Hide quoted text -
தமிழ் ஆராய்ச்சியில் வேர்ச்சொல் அகராதியில் பாவாணருக்கு
நிகர் யாருமில்லை. இங்கே தமிழ் முனைவர்
ராஜம் அவர்கள் பாவாணர் அவர்களின் விசிறியாக
எழுதியதைப் படிக்கவும்.
தமிழ் ஆராய்ச்சி வேறு, புதிதாய் தொழில்நுட்பம்,
அணுவியல், வானியல் ஆய்வுகள் வேறு.
தொழில்நுட்பம், விஞ்ஞானம் போன்றவற்றிற்கு
உலக அளவில் ஆங்கிலத்தில் ஆராய்ச்சி
செய்வதுபோல தமிழரும் செய்ய வேண்டும்
என்று விரும்பியவர் பாவாணர்.
நா. கணேசன்
> Vijayaraghavan
இங்கே ஞானபாரதி சில மடல்கள் எழுதி உறுப்பினராக உள்ளார்.
அவரது கொலோன் 2009 இண்பிட் மாநாட்டுக் கட்டுரை
அரங்கில் வாசித்தார். முத்து நெடுமாறன் , அருண் மகிழ்நன்,
... போன்ற கணினி அறிவு மிக்கவர்களால் ஞானபாரதி
குறிப்பிட்ட நடைமுறைச் சிக்கல்கள் பற்றிய கட்டுரை பாராட்டப்பட்டது.
ஞானபாரதி கட்டுரையில் அவரே வடித்துத் தரும் புதிய
எழுத்து வடிவங்கள் பல இருக்கின்றன. புதிதான அவை
பிரபலமாகுமா? என்ற ஐயம் எனக்கு உண்டு. ஆனால்,
தமிழ் அல்லாத (உ-ம்: ஹிந்தி, மலையாளம், ஒரியம், ஆங்கிலம்,
வங்கம், கன்னடம், ஸம்ஸ்க்ருதம், ...) வாக்கியங்களை
மேற்கோள் காட்ட தமிழரும், ஒரோவழி தென்னிந்தியரும்
பயன்படுத்திய கிரந்த எழுத்துமுறை இருக்கிறது.
நிறுத்தக் குறியீடுகள் போல் தனி தமிழ் எழுத்தில்
டையாகிரிட்டிக்ஸ் இட்டும் ஒரு வார்த்தையைக் குறிக்கமுடியும்
- அறிஞர்கள் ஒன்று கூடி டையாக்கிரிட்டிக்ஸ் முடிவு
செய்யக் கூடும்.
தமிழல்லா மொழிகளின் வாக்கியங்களை எழுத
கிரந்த எழுத்து பயன்படலாம். உதாரணமாக,
பௌத்த மதம் சார்ந்த ஐந்தாம் நூற்றாண்டின் பெரிய
இலக்கண காரர் பர்த்ருஹரி. அவரது வாக்யபதீயம்
- இலக்கணம் பற்றி பல அறிஞர்கள் படித்துவரும்
இந்தியாவின் புகழ்பெற்ற நூல். அஷோக் அக்லுஜ்க்காரின்
பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.
ஃழான் லூய்க் அவர்கள் கிரந்த எழுத்தில்
வாக்யபதீயத்தை எழுதிவருகிறார்.
பிடிஎப் பார்க்கவும்:
http://groups.google.com/group/grantha-lipi/msg/bed7ac1528dd273e
ஸ்ரீலஸ்ரீ நாவலர் புஸ்தகங்களை அவர் அச்சுப்போட்டாற்போல
இணையத்தில் தட்டெழுதி வெளியிட தமிழ், கிரந்தம்
உதவும்.
நா. கணேசன்
On Nov 16, 6:11 am, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> ----------------------------------------
>
> > Date: Tue, 16 Nov 2010 03:03:38 -0800
> > From: naa.gane...@gmail.com
>
> > தமிழல்லா மொழிகளின் வாக்கியங்களை எழுத
> > கிரந்த எழுத்து பயன்படலாம்.
>
> Aung San Suu Kyi என ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள், ஆனால் ஆங் சான் சூ சீ எனக் கூறுகிறார்கள். அது போல சன் என எழுதிவிட்டு ஸன் எனச் சொல்ல முடியாதா என்ன?
>
>
>
> > ஸ்ரீலஸ்ரீ நாவலர் புஸ்தகங்களை அவர் அச்சுப்போட்டாற்போல
> > இணையத்தில் தட்டெழுதி வெளியிட தமிழ், கிரந்தம்
> > உதவும்.
>
> நீங்கள் புஸ்தகங்கள் என எழுதும் போதே எனக்குக் குமட்டல் தான் வருகிறது:)
>
>
எல்லோரும் சிறீதர் என்று எழுதவேண்டுமா?
ஸ்ரீதர் என்றும் எழுதலாம்.
புஸ்தகம் என்பது வடசொல்.
நா. கணேசன்
>
On Nov 16, 6:11 am, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> நீங்கள் புஸ்தகங்கள் என எழுதும் போதே எனக்குக் குமட்டல் தான் வருகிறது:)
>
விக்கியிலா எழுதுகிறேன் :)
நா. கணேசன்
யாரோ லிங்கிஸ்ட் ஒரு அரசாங்க பணத்தில் 100 பேர்
பேசும் பேச்சு அழிகிறது, ரெக்கார்ட் செய்ய க்ராண்ட்
வேண்டும் என்று எழுதுவது அப்பப்ப வரும்.
அப்போது தமிழ் அழிந்து விடும் என்று இ-மெயில்கள் வரும்.
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சகலமும் ஸன் டிவி மயம் !!
பை த வே! ’ஹ’ தமிழ் இல்லையென்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? அவஹ வந்தாஹ,
போனாஹ..என்ற கிராமத்துப்பேச்சில் ஒரே ‘ஹ’ ஒலிதான். அதைக் ‘க’ என்று
எழுதாவிடில் தமிழின் ‘கற்பழிந்து போகும்’ என்பது போல் நம்புவது,
அப்படியொரு எண்ணத்தைப் பரப்புவது, அதற்காகப் போராடுவது இதுதான் ஒரு
இயற்கையான மொழியை செயற்கைக் கூட்டுக்குள் போய் மரிக்கச் செய்யும்!
க.>
2010/11/16 Sri Sritharan <ksth...@hotmail.com>:
> பார்த்தீர்களா, இதுவரைகாலமும் சன் டிவி என்று எழுதி வந்ததை உங்களை அறியாமல் இப்போது ஸன் டிவி என்று எழுதுகிறீர்கள்.
> இதைத்தான் நா. கணேசன் இவ்வாறு எழுதியிருந்தார் போலும்:
>