1. சக்குபாய் சரித்திர டிராமா - இந்த நாடகம் சக்குபாய் என்பவரைப் பற்றி கூறும் நாடகம் என்றும் பாடல்கள் மிகுதியாக அமைந்தும் உரையாடல்கள் இடைக்கிடையே கொஞ்சம் அமைந்தும் இருக்கும் நாடகம் என்று தெரிகின்றது. இதனை 1932ம் ஆண்டு சென்னை வி.ர. தியாகராச செட்டியார் எழுதியிருக்கின்றார்.2.சகதேவன் சூழ்ச்சி - மகாபாரத கதையைச் சார்ந்து அமைக்கப்பட்ட ஒரு நாடகம் இது. இந்த நாடகத்தின் மையக் கருத்து சகுனி, துரியோதனன், துச்சாதனன் போன்றவர்களின் தீய குணங்களை காட்டுவதும், வஞ்சகம் செய்து சகாதேவனிடம் போருக்கு நாள் குறிப்பது என்பவை அமைந்துள்ளன.இந்த நாடகத்தின் ஆசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் என்றும் 1928ம் ஆண்டு இந்த நாடக நூல் வெளிவந்த்து என்ற செய்தியையும் நூலில் காண்கின்றேன்.இந்த நாடகங்களைப் பார்த்தவர், கேள்விப்பட்டவர் யாரேனும் நம்மிடையே இருக்கின்றீர்களா?
அன்புடன்சுபா--Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

நாடகங்களை இப்போது எண்பது வயதான பெரியோர்கள் பார்த்திருக்கலாம். விசாரிக்கணும்.1. சக்குபாய் சரித்திர டிராமா - இந்த நாடகம் சக்குபாய் என்பவரைப் பற்றி கூறும் நாடகம் என்றும் பாடல்கள் மிகுதியாக அமைந்தும் உரையாடல்கள் இடைக்கிடையே கொஞ்சம் அமைந்தும் இருக்கும் நாடகம் என்று தெரிகின்றது. இதனை 1932ம் ஆண்டு சென்னை வி.ர. தியாகராச செட்டியார் எழுதியிருக்கின்றார்.2.சகதேவன் சூழ்ச்சி - மகாபாரத கதையைச் சார்ந்து அமைக்கப்பட்ட ஒரு நாடகம் இது. இந்த நாடகத்தின் மையக் கருத்து சகுனி, துரியோதனன், துச்சாதனன் போன்றவர்களின் தீய குணங்களை காட்டுவதும், வஞ்சகம் செய்து சகாதேவனிடம் போருக்கு நாள் குறிப்பது என்பவை அமைந்துள்ளன.இந்த நாடகத்தின் ஆசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் என்றும் 1928ம் ஆண்டு இந்த நாடக நூல் வெளிவந்த்து என்ற செய்தியையும் நூலில் காண்கின்றேன்.இந்த நாடகங்களைப் பார்த்தவர், கேள்விப்பட்டவர் யாரேனும் நம்மிடையே இருக்கின்றீர்களா?
அன்புடன்சுபா--Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
சரியாக 81 வருட்ங்களுக்கு முன்னால் பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகமேடை அனுபவங்கள் கட்டுரைகள் உள்ளன. ஸ்கேன் செய்து அனுப்ப முயல்கிறேன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதுசு, அதனால் என்னுடைய வேண்டுகோளில் எதாவது தவறு இருந்தால் என்னை மன்னிக்கும்படி மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அறக்கு மாளிகை நாடகம்
ஆரவல்லி சூரவல்லி கதை
கர்ண மகாராஜன் சண்டை
மயிலி இராவணன் கதை
குச லவ வாக்கியம்
பஞ்ச பாண்டவர் வனவாசம்
இராம நாடகக் கீர்த்தனை
வள்ளி திருமணம்
பவளக்கொடி நாடகம்
மேலே குறிப்பிட்டுள்ள கதைகள் மற்றும் நாடகங்களை நான்
தமிழ் மரபு அறக்கட்டளை http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html
யில் இருந்து நான் Download செய்து பெற்றுக்கொண்டேன். ஒவ்வொன்றும் படிக்க மிகவும் சுவாரசியமாக இருப்பதோடு பாடல் வடிவில் இருப்பது மிகவும் பிடித்து இருக்கிறது .
கீழே குறிப்பிட்டுள்ள நாடகம் மற்றும் புராணங்களோ அல்லது கீழே குறிப்பிட்டுள்ள புராணங்கள் தொடர்பான நாடகங்கள் இருந்தால் அதை Pdf file வடிவிலோ அல்லது Image file வடிவிலோ அளித்தால் மிகவும் நன்மையாய் இருக்கும்.
B. இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களும் மிகவும் விருப்பமுடையது.இவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள் இருந்தாலும் சந்தோசம்தான்.
சிவபுராணம்
விஷ்ணுபுராணம்
விநாயகபுராணம்
கந்தபுராணம்
ஆஞ்சிநேயர் புராணம்
ராமாயணம்
மகாபாரதம்
ஸ்ரீராமர் தரிசன நாடகம்
ராஜசூய நாடகம்
நளாங்கினி மாலையிடு நாடகம்
மதுகயிடாசூர சம்மார நாடகம்
அஞ்சுமதி கலியாண நாடகம்
மதிவல்லபண் கலியாண நாடகம்
பனிரண்டாநாள் சண்டை நாடகம்
விறகு விற்ற படல நாடகம்
தண்டகாசூரன் சண்டை நாடகம்
பத்மாசூர சம்மார நாடகம்
இராமரிஷி நாடகம்
அமராவதி மோக்ஷ நாடகம்
அபிமன்னன் சண்டை நாடகம்
சயிந்தவன் சண்டை நாடகம்
இராவணன் சம்மார நாடகம்
கர்ன மோக்ஷ நாடகம்
வாலி மோஷ நாடகம்
மாடுபிடி சண்டை நாடகம்
மின்னொளி குறவஞ்சி நாடகம்
விநாயகர் திருக்கலியாண நாடகம்
ஸ்ரீராமர் பட்டாபிஷேக நாடகம்
சந்திரகலை கர்வபங்க நாடகம்
அரவான் கடபலி நாடகம்
சந்திரகாச நாடகம்
கிருஷ்ண விலாசம்
பதினெட்டாம்போர் நாடகம்
சயிந்தவ நாடகம்(வி.கிருஷ்ணப் பிள்ளை இயற்றியது)கீசகன் சம்பார நாடகம்
கண்ணன் கபட நாடகம்
அர்ஜுனன் தபசு நாடகம்
தாடகை சம்பாரம் நாடகம்
கிருஷ்ணன் பிறப்பு நாடகம்
வன்னிய நாடகம்
பிரகலாதன் பள்ளிக்கூடம் நாடகம்
சுந்தரி மாலையிடு நாடகம்
1. அவருடைய ஆர்வம் நம் ஆரவத்தை ஊக்குவிக்கிறது. வாழ்த்துக்கள். நமபர் 147 நலங்குப்பாட்டு & பாதர் வெள்ளை: B. இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ் பிரசுரம் என்று ஞாபகம்.2. நான் ஒரு தவறு செய்துவிட்டேன்.மின்னாக்கத்துக்கு வருவதாக வாக்களித்த ஒருவரும் வரவில்லை என்றேன். தவறு. நிவாரணம். என் கை நலிந்த போது, பல நூல்களை வாங்கிச்சென்று மின்னாக்கம் செய்தார், தமிழ்த்தேனீ மட்டும். நன்றி. சுவாமி.
ஆமாம். இருக்கின்றன. மறைமலை அடிகளார், பாகனேரி, மு.வ.வின் நூலகம் போன்ற இடங்களில் அவை காணக்கிடைக்கின்றன.
| சுபாஷினி, பழைய கடைகளில் கிடைக்குமா ? ஆனால் கன்னிமாரா நூலகத்தில் கேட்டுப்பெற்றால் மின்னாக்கம் செய்ய பல பொக்கிஷங்கள் கிட்டுமே. எனது சிறிய சஜஷன் . கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Mon, 3/12/12, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote: |
சுபா,என்னிடம் பல பழைய குறிப்புகள் உள்ளன. எடுத்து வைத்துள்ளேன். சிறிது கால அவகாசம் கிடைத்தால் முழு நீளக் கட்டுரை கிடைக்கும். மணிமேகலை காலத்திலிருந்து வரும் :-)
சுபாஷினி,
பழைய கடைகளில் கிடைக்குமா ?
ஆனால் கன்னிமாரா நூலகத்தில் கேட்டுப்பெற்றால் மின்னாக்கம் செய்ய பல பொக்கிஷங்கள் கிட்டுமே.
எனது சிறிய சஜஷன் .
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
எனக்குக்கூட நாடகம் எழுத ஆசை.
நானும் பதினாலு நாடகங்கள் எழுதி இயக்கி உள்ளேன், அவ்வை ஷண்முகம் விருது, பம்மல் சம்பந்த முதலியார் விருது போன்றவைகளை வாங்கி உள்ளேன்
தரமான நாடகங்களை மேடையேற்றவேண்டும் நான் எழுதி இயக்கத் தயார
மகிழ்ச்சி சார்.
திரைப்படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும் நான் நடித்தாலும் நாடகம் நடிக்கும்போது உடனடியாக மக்கள் அளிக்கும் கைதட்டலும் உறசாகமூட்டலும் கிடைக்கும் போது அனுபவிக்கும்ஆனந்தமே தனிதான்
மிகவும் சரி. எனக்கும் ஒரு வகையில் வாய்த்தது.
40 ஆண்டுகள் பணியில் 30 ஆண்டுகள் நிர்வாகப் பணியிலும் பின்னர் வணிகப் பணியிலும் கழிந்துவிட்டாலும் கடைசி 10 ஆண்டுகள் பயிற்சியாளாராகக் கல்விப் பணி வாய்த்தது. பல்வேறு வயதினர். சூழலில் வந்தவர்கள்.
இயக்குனர் திரு விசு அவர்களின் அண்ணன் எம் ஆர் ராஜாமணி என் குரு
அவர்கள் நாடகக் குழுவில் இணைந்து 15 ஆண்டுகள் நடித்தேன்திரைப்படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும் நான் நடித்தாலும் நாடகம் நடிக்கும்போது உடனடியாக மக்கள் அளிக்கும் கைதட்டலும் உறசாகமூட்டலும் கிடைக்கும் போது அனுபவிக்கும்ஆனந்தமே தனிதான்
2014-02-23 21:51 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
எனக்கும் இருந்ததாலெ அப்பிடி ஒரு ஆசெ எங்கள் குடும்ப தளத்திற்கு ஒர் நாடகம் எழுதினேன், "பல்லாங்குழியும் பல் போன கிழவியும் என்று அதன் ஒன்றிரெண்டு பகுதிகளை மோன்றே பேர் படித்ததாகத் தெரிந்தது வந்த பின்னூட்டங்களில் இருந்து.
அதை இண்டு இணைத்துள்ளேன். நேரம் கிடைத்தால் படித்துப் பார்த்து உங்கள் கருத்தினைச் சொல்லவும்.
--இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
2014-02-24 9:32 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
எனக்குக்கூட நாடகம் எழுத ஆசை.நாங்களும் பாலபருவத்தில் நாடகம் எழுதி நாடகம் நட்ச்சவங்கதான்
நாடகத்தை ரசிக்கவும் நாடக நடிகைகளைக் கவரவும் கைதேர்ந்த வித்தைக்காரர்கள் தஞ்சாலூர்க்காரவுகதான்
அதிலும் நாகபட்டினம் சொல்லவே வேண்டாம்.நாடகத்துக்கென்றே ஒரு ரயிலும் யாழ்ப்பானத்தில் இருந்து பாய்மரச் சேவையும் நாகபட்டின நாடகத்துக்கு நடந்ததுன்னாப் பாத்துக்கங்க
இந்த நாடகக் கலை நாட்டார் கதையாகப் பலர் ஆழ்மனத்தில் அடிமனத்தில் உறங்குகிறதுயாராவது வெட்கத்தைவிட்டு எடுத்துவிட்டால்தான் உண்டு
மெளனம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இந்த இழையில் மேலும் சில நாடகங்கள் நாடக நூல்கள் பற்றிய தகவல்களைப் பார்ப்போமா..23. சந்திரகாச நாடகம் - இது பாலையூர் கி.இராமசாமி ஐயங்கார் என்பவரால் எழுதப்பட்ட நாடகம். சென்னை அ.மாமுண்டி பிள்ளை, நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை என்ற பதிப்பகத்தாரால் 1911ம் ஆண்டு வெளியிடப்பட்டது இந்த நாடக நூல். 216 பக்கங்களைக் கொண்ட இந்த நாடக நூலின் கதை மகாபாரதக் கதையை தழுவியது. பாண்டவர்கள் ஐவரும் அசுவமேதயாகம் செய்த போது அர்ச்சுணனுக்கு கண்ணபிரான் கூறிய கதை இங்கே நாடகமாக்கப்பட்டது. இந்த நாடக நூல் உரைநடையும் கவிதையும் என கலந்ததாக அமைந்துள்ளது.24.சந்திரகாந்தன் சரித்திரம் - கள்வர்கள் கூட்டத்தினரால் கவரப்பட்ட அரச குல இளவரசன் சந்திரகாந்தன் பின்னர் தனது வரலாறு அறிந்த பின்னர் எதிரிகளிடம் போரிட்டு தன் நாட்டைக் காப்பாறுவதே இந்த நாடகம். இது ஒரு வகையில் 50, 60ம் ஆண்டுகளில் வந்த தமிழ் சினிமா கதை போல இருக்கின்றது. சினிமா படங்கள் இத்தகைய நாடகங்களையே பின்னர் கதையாக்கியிருக்கலாம் என்றே கருதத் தோன்றுகின்றது.இந்த நாடக நூலை தி.தி. அப்பாவு பிள்ளை என்பவர் எழுதியிருக்கின்றார். சி.எஸ். சொக்கலிங்கம் பிள்ளை எலக்ட்ரிக் அச்சியந்திர சாலை என்ற பதிப்பகத்தாரால் 1925ம் ஆண்டில் இந்த நாடக நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.24. சந்திரகாந்தா - சே.ஆர். அரங்கராசு என்பவர் எழுதிய நாடக நூல் இது. சென்னை இராசு பிரஸ் என்னும் பதிப்பகத்தாரால் 1923ம் ஆண்டில் இது வெளியிடப்பட்டிருக்கின்றது.கதைச் சுருக்கம் மிக சோகமானது. கதாநாயகி சந்திரகாந்தா ஒரு பணக்கார சீமான் ஒருவனிடம் சிக்கிக் கொள்கின்றாள். அங்கு மிகக் கொடுமைப்படுத்தப்படுகின்றாள். துன்பங்கள் பல ஏற்பட்ட பின் சந்திரகாந்தா காப்பாற்றப்படுகின்றாள் என்பது தான் கதை.25. சந்திர குப்தன் - சந்திரகுப்த விக்கிரமாதித்தனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்த ஒரு நாடகம் இது. நாடக நூலை எழுதியவர் ஆர்.நாராயணசாமி ராவ். கும்பகோணம் ஆரியன் பிரஸ் வெளியீடாக 1924ம் ஆண்டில் இந்த நூல் வெளிவந்திருக்கின்றது. சந்திரகுப்தனின் வீரச் செயல்கள், ஆட்சிச் சிறப்புக்கள் என்பன நிறைந்த ஒரு நாடகம் இது.இந்த நாடகங்கள் பற்றி அறிந்தோரும் நாடகக் கலையில் ஆர்வம் உள்ளவர்களும் உங்கள் அனுபவங்களையும் சேர்த்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.தொடரும்..சுபா2014-02-23 11:13 GMT+01:00 Subashini Tremmel <ksuba...@gmail.com>:சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது. நாடகப் பிரியர் ஒருவர் கேட்டமையினால் என்னிடம் இருக்கும் நாடகக் களஞ்சியம் நூலிலிருந்து பழைய தமிழ் நாடகங்கள் தொடர்பான விஷயங்களை இந்த இழையில் பகிர்ந்து வந்தேன்.மீண்டும் இன்று இதனை தொடர்கிறேன்.நம் குழுவில் தமிழ் நாடகங்கள், தமிழக நாடகங்களில் ஆர்வமுள்ளோர் யாராகினும் இருப்பின் அவர்களும் இணைந்து இந்த இழையை தொடரலாம்.21. சதுரங்கம் - தவம், சதுரங்கம், சலனம், தீர்ப்பு, சங்கமம், இது ஒரு கோணம், கரியும் வைரமும், வைகறை, துருவன் ஆகிய ஒன்பது நாடகங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பாக இந்த நாடக நூல் வெளிவந்தது. பழனியப்பா பிரதர்ஸ் 1975ல் இந்த நூலை வெளியிட்டிருக்கின்றனர். இந்த நூலிலுள்ள நாடகங்களை எழுதிய ஆசிரியர் தி.பட்சிராசன்.இந்த ஒன்பது நாடகங்களும் அக்கால சமூக நிலையைப் பிரதிபலிக்கும் விஷயங்களைப் பின்னனியாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது நூல் விளக்கத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.22. சந்திரகரி (சந்திரஹரி) - இது பம்மல் சம்பந்த முதலியார் எழுதி வெளியிட்ட நாடகம். 1923ம் ஆண்டு பியர்லசு அச்சுக்கூடத்தின் வெளியீடாக இது வந்தது. 60 பக்கங்களைக் கொண்ட நூல் இது.கதையைப் பார்க்கும் போது மிக சுவாரஸியமாக இருக்கின்றது. தன் வாழ் நாளில் ஒரு உண்மை கூட சொல்லக் கூடாது என உறுதியாக இருக்கும் மன்னன் சந்திரஹரி. அவனை மாற்ற சிட்டவாசி முனிவர் பல தந்திரங்களைச் செய்து பார்க்கிறார். ஆனால் ஏதும் பலிக்கவில்ல்லை. இறுதியில் தன் தோல்வியை முனிவர் ஒப்புக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் பரமசிவன் தோன்றி கல்மழை பெய்வித்து அவை இயமன் உலகுக்கு அனுப்புகிறார்.அங்கோ அவனை ஏற்க மறுக்கின்றனர். அங்கு ஏற்கனவே இருக்கும் பாவிகளை சந்திரஹரி மேலும் கெடுத்துவிடக் கூடாது என இயமனுக்கு பயம். அவனை அங்கிருந்து மீண்டும் மண்ணுலகிற்கு அனுப்புகின்றனர்.அரிச்சந்திரன் நாடகத்தை நையாண்டி செய்வது போல அமைக்கபப்ட்ட ஒரு நாடகம் என்றும் தெரிகிறது.தொடரும்...சுபா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
குறிப்பு - நாடகக் களஞ்சியம் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.சபாபதி துணுக்குகள் என்ற நாடகத்தில் 5 நாடகங்கள் இடம்பெறுகின்றன என முந்தைய பதிவினில் குறிப்பிட்டிருந்தேன்.பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள் இவை. இதில் இரண்டு கதாபாத்திரங்கள் சபாபதி என்ற பெயருடன் வலம் வருகின்றன. ஒன்று சபாபதி என்ற வேலைக்காரன், மற்றொரு கதாபாத்திரம் சபாபதி முதலியார் என்ற முதலாளி மகன்.1. சபாபதியும் தமிழ் வாத்தியாரும் - இது இந்த நூலில் முதலாவதாக இடம்பெறும் நாடகம். சின்னச்சாமி என்ற தமிழாசிரியர் ஒருவர். அவர் பாடம் நடத்தத் தெரியாதவர், ஒழுங்கு இல்லாதவர் என்ற பெருமைகளை :-) உடையவர். இந்த நாடகத்தில் சபாபதி அவரை பலவகையில் கிண்டல் செய்வதாக கதையமைப்பு அமைந்துள்ளது. சபாபதியின் கிண்டலைப் பார்த்து மாணவர்கள் சிரிக்கின்றனர். பள்ளித் தலைமை ஆசிரியரோ மாத ஊதியத்தைக் குறைத்து விடுவதாக எச்சரிக்கின்றார்.நாடகம் முழுமைக்கும் நான்கே கதைமாந்தர்களைக் கொண்டது இந்த நாடகம்.2. சின்னசாமி வாத்தியாரும் கன்னியம்மாளும் - இது இந்த நூலில் இரண்டாவதாக இடம்பெறும் நாடகம். இதிலும் சின்னசாமி ஒரு தமிழ் ஆசிரியர் கதாபாத்திரத்தில் வருகின்றார். அவர் ஏழை. ஏழ்மை நிலையை வைத்து ஏதோ ஒரு வகையில் அவரது மனைவி கன்னியம்மாள் சின்னசாமியை ஏமாற்றுகின்றார். பதிலுக்கு சின்னசாமியும் கன்னியம்மாளை ஏமாற்றுகின்றார். சூசகமாக இந்த இருவரது பண்புகளும் இந்த நாடகஹ்ட்தில் உணர்த்தப்படுகின்றன. அக்காலத்தில் தமிழாசிரியர்களுக்கு மதிப்பு குறைந்து வந்த நிலை இந்த நாடகத்தில் பூடகமாகக் காட்டப்படுகின்றது.நாடகம் முழுமைக்கும் மூன்றே கதைமாந்தர்களைக் கொண்டது இந்த நாடகம்.
3. வேலைக்கார சபாபதியும் சிவகாமுவும் - இது இந்த நூலில் மூன்றாவதாக இடம்பெறும் நாடகம். வேலைக்காரன் சபாபதியும் வேலைக்காரி சிவகாமுவும் யாரும் அறியாமல் மறைவாகச் சந்தித்துத் தாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புவதைத் தெரிவித்து தாங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை சொல்கின்றனர். திருமணமும் நடக்கின்றது. இவர்களது கதையையே இந்த நாடகம் விவரிக்கின்றது. இது ஒரு நகைச்சுவை நாடகம்.நாடகம் முழுமைக்கும் இரண்டே கதைமாந்தர்களைக் கொண்டது இந்த நாடகம்.4. சபாபதி முதலியார் பாடம் கற்றது - இது இந்த நூலில் நான்காவதாக இடம்பெறும் நாடகம். இதுவும் ஒரு நகைச்சுவை நாடகமே. இளைஞன் சபாபதி முதலியாருக்குப் பாடம் ஏறுவதில்லை. குறிப்பாக கணிதம் புரியவே புரியாது. இந்த சபாபதிக்கு பக்கத்து வீட்டு ஞானாம்பாளை திருமணம் செய்ய உறுதி செய்கின்றார்கள். ஞானாம்பாள் தன் வருங்கால கணவனுக்கு யாருக்கும் தெரியாமல் வந்து கணக்குப் பாடம் கற்றுத் தருகின்றாள். ஒரு நாள் சபாபதியின் தந்தை இதனை கண்டு பிடித்து விடுகின்றார். பாடம் தொடர்கின்றது. சபாபதி ஞானாம்பாள் கற்றுக் கொடுத்து நன்கு கற்று தேர்விலும் வெற்றி பெருகின்றான். இதுவே நாடகம்.
நாடகம் முழுமைக்கும் நான்கே கதைமாந்தர்களைக் கொண்டது இந்த நாடகம்.5. சபாபதி முதலியார் விடம் சாப்பிட்டது - இது இந்த நூலில் நான்காவதாக இடம்பெறும் நாடகம். இந்த நாடகத்தில் சபாபதி முதலியார் தேர்வில் தோற்றுவிட்டதால் சாக நினைக்கின்றான். வேலைக்கார சபாபதியிடம் தனக்கு நஞ்சு வாங்கி வரக் கூறுகிறான். வேலைக்கார சபாபதி மருத்துவரிடம் சென்று இதனைக் கூற, மருத்துவர் நஞ்சுக்குப் பதில் இனிப்பு பாயாசம் கொடுத்து அனுப்புகின்றார். இந்த பாயாசத்தை நஞ்சு என நினைத்து சாப்பிட்டு விட்டு சாவு இன்னமும் வரவில்லையே என காத்திருக்கின்றான் சபாபதி முதலியார். அப்போது மனைவி ஞானாம்பாளும் மருத்துவரும் வந்து விஷயம் அறிந்து கேட்டு சிரிக்கின்றனர்.இதே நாடகத்தில் வேலைக்கர சபாபதியை எல்லோரும் அவன் தலையில் மண்ணாங்கட்டி இருப்பதாக சொல்வதை நினைத்து வீட்டுக்குச் சென்று தலைகீழாக அவன் நிற்கின்றான். அப்படி நின்றால் இரத்தம் தலைக்கு வந்து மண்ணாங்கட்டி கரைந்துவிடும் என்று நிற்பதாகத் தன் மனைவியிடம் சொல்கின்றான். தன் மனைவியிடம் தான் கற்ற பாடங்களை தப்பும் தவறுமாகச் சொல்லி அவளையும் சிரிக்க வைக்கின்றான்.
ஆறு கதாமாந்தர்களைக் கொண்ட நாடகம் இது. ஒரு நகைச்சுவை நாடகம் இது என்பதில் சந்தேகம் இல்லை.தொடரும்..
2014-07-25 22:13 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
--
சுதேசமித்திரன் வார இதழில் தொடர்ந்து சம்பந்த முதலியார் எழுதி வந்த் கட்டுரைகள் (!@) உள்ளன. சென்னைக்குச் சென்ற பிறகு விவரம் சொல்கிறேன்
.
சபாபதி திரைப்படம் நாலைந்து முறையாவது பார்த்திருப்பேன். சபாபதியும் தமிழ் வாத்யாரும் மறக்க முடியாத காட்சிகள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் நடித்திருக்கிறேன். சுகுணவிலாஸ் சபா: 1952. டைரக்ஷன்: ஒய்.ஜி.பட்டு.
--
கடந்த 13 ஆண்டுகளாக திண்ணையில் [http://puthu.thinnai.com/ ; http://www.thinnai.com/index.php; http://jayabarathan.wordpress.com/ ] வெளிவந்த எனது மூல நாடகம் சீதாயணம், தமிழாக்க நாடகங்கள் ஆஸ்கர் ஒயில்டின் ஸாலமி, பெர்னாட்ஷா & ஷேக்ஸ்பியரின் கிளியோபாத்ரா, ஜூலியஸ் சீசர், உன்னத மனிதன், ஜோன் ஆஃப் ஆர்க், ஆயுத மனிதன், ஆப்ரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், வேதாளத்தின் மாணாக்கன், படக்கதை நாடகம் முக்கோணக் கிளிகள் போன்றவை.சி. ஜெயபாரதன்.
என்னிடம் அல்லி அரசாணி மாலை என்றொரு புத்தகம், தொட்டாலே உடைந்துவிடும் நிலையில் இருக்கிறது. இது ஏற்கனவே மின் தமிழ் சேகரிப்பில் இல்லை என்றால் புத்தகத்தை மின்னாக்கம் செய்ய அனுப்பி வைக்கிறேன். ( பெங்களூர் திரும்பியதும் )
--
என்னிடம் அல்லி அரசாணி மாலை என்றொரு புத்தகம், தொட்டாலே உடைந்துவிடும் நிலையில் இருக்கிறது. இது ஏற்கனவே மின் தமிழ் சேகரிப்பில் இல்லை என்றால் புத்தகத்தை மின்னாக்கம் செய்ய அனுப்பி வைக்கிறேன். ( பெங்களூர் திரும்பியதும் )
தமிழகத்தின் 20ம் நூற்றாண்டு நாடக முயற்சிகளைப் போலவே இலங்கையில் நிகழ்த்தப்பட்ட நாடகங்களைப் பற்றியும் தகவல் சேகரிக்கச் சொல்லி சில நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனைச் செய்ய நிச்சயம் இலங்கைத் தமிழ் நண்பர்களின் உதவியும் எனக்குத் தேவை.
--
--
மேதினம் அன்று ரிலீஸாகும் என்று நம்பி எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ’தமிழ்த்தேனியாரின் நாடக அனுபவங்கள்’ என்று ரிலீஸாகும் என்று கேட்கிறார்கள். தொடர்பு கொண்டு கேட்டால் ‘நீங்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளீர்கள்’ என்று வருகிறது. தமிழ்த்தேனியாரைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ;-)
***
--
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ"ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி கதாபாத்திரமாகவே வாழ்ந்துகாட்டுவது நடிப்பல்லமீண்டும் எந்த வினாடியும் தன் இயல்பு நிலைக்கு வர இயன்றால் அதுவே நடிப்பின் உச்சம்"

-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ 57. சவிட்டு நாடகம் - சவிட்டு நாடகம் என்பது மிகப்புதுமையான ஒரு பெயராக எனக்குத் தோன்றுகின்றது. நாடகக்களஞ்சியம் நூலில் அ.நா.பெ என்பவர் இது பற்றி விளக்கியுள்ளதாக குறிப்பு உள்ளது. அதன் அடிப்படையில், சவிட்டு நாடகம் எனப்படுவது கேரளாவில் இலத்தீன் கிறித்துவரிடம் வழக்கத்தில் உள்ளது. இது போர்த்துக்கீசியரால் அறிமுகம் செய்யப்பட்டதாக அறியப்படுவது. சவிட்டு நாடகத்திற்கும் 17ம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன்றிய ஓபரா நாடக வகைக்கும் ஒப்புமை உள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த சின்னத்தம்பி அண்ணாவி சவிட்டு நாடகத்தைக் கேரளாவிற்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. சவிட்டு நாடகக் காட்சிகளில் நடிப்பு வேகமும் அளவுமுறைத் தன்மைகளும் இருப்பதாக அறியமுடிகின்றது. பாய்ச்சல் துள்ளல் தன்மைகள் உள்ளன. இது சுவடு முறைத் தன்மையைக் காட்டும் சுவடு முறைகளும் பாடல்களும் இணைந்த நாடக வகையாகக் கருதலாம். இதில் விருத்தப்பாக்கள் மிகுதியாக இடம் பெறும். இசைப்பாடல்கல், உரை நடை உரையாடல்கள், கண்ணிகள் விரவி வரும். கையெழுத்துப் படியாக உள்ள மூவரசர் நாடகம் அல்லது மூவரசர் நாடக வாசிப்பு நடிக்கப் பெற்ற சவிட்டு நாடகம் (அ.நா.பெ.)சுபா
சில வாரங்கள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தொடர்கின்றேன்.
தமிழகத்தில் குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களை தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்கு தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.
67. சாந்தி - 1957லும் மீண்டும் 1975லும் இருபதிப்புக்களாக வெளிவந்த நாடக நூல் இது. இன்று பலரும் நன்கறிந்த பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரின் வெளியீடாக இந்த நாடக நூல் வெளி வந்தது. ஏழு ஓரங்க நாடகங்கள் அடங்கிய நாடகங்களின் தொகுதி என அறியமுடிகின்றது. அவை, சாந்தி, நீதி, கனிவு, பக்தி, தோல்வி, மானம் சாவு என்ற ஏழு நாடகங்களாகும்.சாந்தி - இது பழங்கால வரலாற்று விசயம் ஒன்றின் நாடக வடிவம். கலிங்கப்போரில் மாபெரும் வெற்றி பெற்ற மாமன்னன் அசோகன் போர்க்கள அவலங்களைக் கண்டு மனம் நொந்து இனி போரிடுவதே வேண்டாம் என முடிவு எடுக்கின்றான். இதனை தனது ஆட்சிக்குக் கீழ் இருக்கும் நாடுகளிலும் இச்செய்தி பரவுமாறு ஆட்களை அனுப்பி தெரிவிக்கின்றான். எங்கும் சாந்தியும் அமைதியும் நிலவ வேண்டும் என்பதை தன் அரசியல் கொள்கையாக அறிவிக்கின்றான். இதுவே இந்த நாடகத்தின் மையக் கதை.நீதி - ஒரு நாட்டில் எல்லா பிரஜைகளுக்கும் ஒரே வகையான நீதி இருக்க வேண்டும். அரசனுக்கு ஒன்றும் ஆண்டிக்கு ஒன்றும் என இருக்கக் கூடாது தவறுசெய்யும் எவரும் குற்றவாளிதான் என்னும் கருத்தை மையமாக வைத்து மன்னர் மக்கள் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை கொண்ட நாடகம் இது.கனிவு - போரினால் ஏற்படும் இன்னல்களைக் காஞ்சி மன்னன் தொண்டைமானிடமும் தகடூர் மன்னன் அதியமானிடமும் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்தும் ஔவையின் கதை.பக்தி - தன் நாட்டு மன்னனைக் காக்க வேண்டி செயல்புரியும் ஒரு கோயில் பூசாரியின் கதையைப் பின்புலமாகக் கொண்ட நாடகம்.தோல்வி - அப்சல்கான், சிவாசி என்ற இரு பாத்திரங்கள். அதில் பிசப்பூர் சுல்தானின் தளபதி சிவாசியைக் கொலை செய்ய செய்யும் சதி வேலையைக் கதைப்பின்னனியாக கொண்ட நாடகம் இது.மானம் - சாதாரணக் குடிமகன் ஒருவனின் தன்மான உணர்வுகளைச் சித்தரிக்கும் ஒரு நாடகம் இது. அரசனிடமிருந்து தன் மகளைக் காக்க பெற்றோரே மண்ணில் குழி வெட்டி தன் மகளை புதைத்து விடும் ஒரு கதை. இது ஒரு வகை கொலை. ஆயினும் இங்கு தன்மானம் என்ற வகையில் நாடகத்தின் மையக்கருவாக வைத்து பின்னப்பட்டுள்ளது.சாவு - சேரன் இரும்பொறையைச் சோழன் கோச்செங்கணான் ஒரு போரில் தோற்கடித்து சிறை வைக்கின்றான். அவனை மிக மோசமாக சிறையில் நடத்த மனம் பொறுக்காது சோழனின் முறையற்ற செயலை எண்ணி வாடி இறந்து போகின்றான் சேரன். அரசர்கள் வரலாற்றுக் கதை இந்த நாடகத்தின் மையக் கருவாக அமைந்துள்ளது.இந்த ஏழு நாடகங்களையும் எழுதியவர் தே.ப.பெருமாள் என்பவர்.தொடரும்.சுபா
2015-09-02 23:48 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
--
--
தமிழகத்தில் குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்கு தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.
தமிழகத்தில் குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.
On 4 Aug 2016 21:41, "Suba" <ksuba...@gmail.com> wrote:
>
> தமிழகத்தில் குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.
>
> 88. சித்திரசேனன் சண்டை நாடகம் - இந்த நாடக நூலை ஆதிமுத்து செட்டியார் என்பவர் எழுதி ராமசாமி நாயுடு அண்டு சன்சு, சென்னை சிறீலட்சுமி பிரசு ஆகிய இரண்டு அச்சகங்கள் நூலாக 1907ம் ஆண்டில் வெளியிட்டனர். 64 பக்கங்கள் கொண்ட நாடக நூல் இது. இது இராமாயண இதிகாசத்தின்
-மகாபாரதம் என்றிருக்க வேண்டும். தவறுதலாகிவிட்டது.
ஒரு பகுதி கதையைத் தழுவிய நாடகம். இதில் சித்திரசேனன் என்பவன் துரியோதனன் சகிதம் 100 பேரையும் அவர்களின் மனைவியரையும் கட்டி சிறையில் போட்டு விடுகின்றான். இதனைக் கேள்விப்பட்ட தருமர் தனக்கு தீமை செய்த துரியோதனன் என்றும் பாராமல் சித்திரசேனனை வென்று துரியோதனைனையும் அவன் சகோதரர்களையும் மனைவிமார்களையும் மீட்பதாகக் கதை.
> என்ன.. துரியோதனன் சற்று யோசித்திருக்கலாம். தீங்கு செய்தவருக்கு தண்டனை கொடுக்கும் போது அமைதியாக ஒதுங்கிப் போயிருக்கலாம். மாறாக காப்பாற்றி பிறகு அவர்களாலேயே சிரமப்பட்டிருக்க வேண்டுமா என சற்று சிந்திக்கத்தான் தூண்டுகின்றது.
>
> 89.சித்திரசேனன் சரித்திர நாடகம் - கோதண்டம் உபாத்தியாயர் என்னும் ஒருவர் எழுதிய நாடகம் இது. இது மேற்குறிப்பிட்ட அதே ராமாயண இதிகாசத்தைச்
-மகாபாரதம் என்றிருக்க வேண்டும். தவறுதலாகிவிட்டது.
சுபா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தமிழகத்தில் குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.
நாட
க பிரியர்களுக்காக.. கடந்த நூற்றாண்டு தமிழகத்தில், குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த தமிழ் நாடக முயற்சிகளைப் பற்றிய தகவல்களைத் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடான நாடகக் களஞ்சியம் நூல் வாசிப்பிலிருந்து இங்குத் தொடர்ந்து பதிந்து வருகின்றேன். அதன் தொடர்ச்சியைக் காண்போம்.
source: https://www.pinterest.com/pin/14636767523306996
picture: https://i.pinimg.com/736x/60/b0/7c/60b07ce2293eeb926b66b93e8e0a4c92.jpg
டி.கே.எஸ்.சகோதரர்கள்
http://tamizhnatakavaralaru.blogspot.com/2016/03/8.html
டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை-சீதையம்மாள் தம்பதியருக்கு நான்கு மகன்கள். டி.கே.சங்கரன், டி.கே.முத்துசாமி, டி.கே.ஷண்முகம், டி.கே.பகவதி., இந்த நால்வரும் நாடக உலகில், திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் நுழைந்த போது பள்ளிச் சிறுவர்கள்.ஆறாவது வகுப்பு, நான்காவது வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று முறையே படித்துக் கொண்டிருந்தனர்.கடைசி மகன் பகவதி கைக்குழந்தை.
ஷண்முகம் இளமையிலேயே ,துடிப்பு, ஆர்வம்,சிந்தனைக் கூர்மை, உடையவராய் விளங்கினார்.சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த "அபிமன்யு சுந்தரி" நாடகத்தில் அபிமன்யுவாக நடித்து புகழ் பெற்றார். தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், எம்.கந்தசாமி முதலியார் ஆகிய நாடக ஆசிரியர்களிடம் ஷண்முகம் நடிப்புப் பயின்றார்.
1925 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் டி.கே.எஸ்.சகோதரர்களின் "ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை" என்ற நாடகக் குழுவைத் தொடங்கி 1950 வரை தமிழ் நாட்டிலும், மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் தொழில் முறை நாடகக்குழுவாக ஏராளமான நாடகங்களை நடத்தி நாடக உலகிற்கு மறுமலர்ச்சியை அளித்தனர்.
1937ல் சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளைக் கலைக் கண்ணோடு எடுத்துக் காட்டி திரு டி.கே.முத்துசாமி எழுதிய "குமாஸ்தாவின் பெண்"நாடகத்தை அரங்கேற்றினார்கள். 'அன்ன பூர்னிகா மந்திர்" என்ர வங்காளி நாவலைத் தழுவி எழுதப்பட்டது இந்நாடகம்.
பின்னர் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "வித்யா சாகரர்" என்ற நாவலும் முத்துசாமி அவர்களால் நாடக மாக்கப்பட்டு நடந்தது
தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் சிறப்புச் செய்யும் வகையில் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் எழுதிய "சிவலீலா" நாடகத்தை நடத்தினர்.இந்நாடகம் தொடர்ந்து 108 நாட்கள் நடந்தது.108ஆவது நாள் மதுரை தமிழ்ச் சங்கப் புலவர்கள் வருகை புரிந்து "முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினங்கள்" என்ற பட்டத்தை வழங்கினர்.
1942ஆம் ஆண்டு ஃபெப்ருவரி 2ஆம் தேதி மதுரையில் , பி.எத்திராஜுலு அவர்கள் எழுதிய ஔவையார் நாடகம் அரங்கேறியது. இந்நாடகத்தில் கதாநாயகன் கிடையாது.கதாநாயகி உண்டு...ஆனால் கதாநாயகியும் ஒரு மூதாட்டி.காதல் காட்சிகள் இல்லை.நாடக இலக்கணப்படி தோன்றல், திரிதல் ஆகிய முறைகளை அனுசரித்து எழுதப்படாத புதுமை நாடகம்.இந்நாடகம் மகத்தான வெற்றி பெற்றது. தமிழ் நாடக உலகிற்கே மாபெரும் வெற்றி எனலாம்.இந்நாடகத்தில் ஔவையாராக நடித்தார் டி.கே.சண்முகம் அவர்கள்.இது அவரது நாடக வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த மாபெரும் பேறு எனலாம்.இதற்கு பின்னர் ஔவையார் என்ற அடைமொழியோடு "ஔவை சண்முகம்' என்று அழைக்கப்பட்டார் அவர்.
கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை, டி.கே,எஸ். சண்முகத்தின் ஔவையார் நடிப்பைப் பாராட்டி கவி ஒன்று புனைந்தார்
மந்திரமோ தந்திரமோ மாயமோ சண்முகத்தின்
விந்தை நடிப்பு விசித்திரமோ? - செந்தமிழ்நாடு
அன்றுகண்டு போற்றி அடிபணிந்த ஔவையைநாம்
இன்று கண்ட காட்சி இது
ஔவையின் நடிப்பை விமரிசித்த கல்கி அவர்கள்-
"நடிப்புத் திறமையை பொறுத்த வரையில் இந்நாடகத்தில் ஔவைப்பாட்டியாக நடிக்கும் திரு டி.கே.சண்முகம் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என சிபாரிசு செய்கிறேன்.வேஷம்,பேச்சு,நடை, உடை, பாவனை எல்லாம் அவ்வளவு பொருத்தம்.நடிப்பு அபாரம்" என்று கல்கியில் (3-6-42)விமரிசித்தார்
திரு ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய பில்ஹணன், டி.கே.முத்துசாமி எழுதிய காளமேகப் புலவர்,கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய அந்தமான் கைதி, ப.நீலகண்டன் எழுதிய முள்ளில் ரோஜா, ஆகிய நாடகங்களை அரங்கேற்றினர்.
நாடு சுதந்திரம் அடைந்தபின், முதல் வரலாற்று நாடகமாக ரா.வெங்கடாசலம் எழுதிய இமயத்தில் நாம் நாடகமும், (இது சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தை அடிப்படையாகக் கொண்டது),, தொடர்ந்து திரு நாரண துரைக்கண்ணன் எழுதிய உயிரோவியம் என்ற தமிழ்ச்சுவையும்.நகைச்சுவையும் நிறைந்த நாடகங்கள் அரங்கேறின.
"மனுஷ்யன்" எனற பா.ஆதிமூலம், நா.சோமசுந்தரம் ஆகியோர் மலையாள நாடகத்தைத் தழுவி எழுதிய "மனிதன்" நாடகம் சமுதாய நாடகங்களில் புரட்சியை ஏற்படுத்தியது எனலாம்.
அடுத்ததாக இவர்கள் அரங்கேற்றிய நாடகம் அகிலன் எழுதிய "புயல்".தமிழ் நாடகப் போட்டியில் பரிசு பெற்றது.
திரு ரா.வெங்கடாச்சலம் எழுதிய முதல் முழக்கம் என்ற நாடகத்தை நடத்தி னர் 1950ல் டிகேஎஸ் "ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை" நாடகக் குழு தன் நிறைவு விழாவை நடத்தியது.
அதற்கான காரணம் என்ன? பின்னர் என்ன செய்தார்கள் சகோதரர்கள் என பார்ப்போம்
தொலைக்காட்சி வந்தப் பிறகு நாடகங்கள் அழிந்துவிடும் என ஆங்காங்கே கூக்குரல் கேட்டுக் கொண்டே இருந்தது போல....அன்று..பேசும்படம் வந்த காலகட்டத்தில்..நாடக மேடை அழிந்துவிடும் என்றனர்.
இது குறித்து திரு சண்முகம் அவர்களின் கருத்துக் கேட்கப்பட்டது.அவர் சொன்னார்....
"நாடக மேடையை நல்ல முறையில் கையாண்டவர்கள் யாரும் அழிந்து விடவில்லை.திரைப்பட வளர்ச்சியால் நாடக மேடையும் புதிய புதிய நுணுக்கங்கள் பலவற்றை கையாண்டு போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ச்சி பெற்றது" என்றார்
இன்றும் அது பொருந்துகிறது அல்லவா? ஆனால் என்ன ஒன்று...
"அந்த நாட்களில் நாடகக் கொட்டகை எல்லாம்...திரைப்பட கொட்டகைகளாக மாற்றிவிட்டனர்.ஆகவே நாடகம் நடத்துபவர்களுக்கு அரங்குகள் கிடைக்கவில்லை.அப்படியே கிடைத்தாலும் பலமடங்கு வாடகை அதிகமாக கொடுக்க வேண்டியிருந்தது.அது நாடக வளர்ச்சிக்கு தடையாய் இருந்தது.டி.கே,சண்முகம் அவர்களின் நாடகசபையும் இந்த காரணத்தினாலேயே மூடுவிழா கண்டது.
பின்னர் 1950ல் நாடகக் கழகம் தோன்றியது.நாடக அரங்குகள் இல்லாத குறையைத் தீர்க்க திறந்தவெளி அரங்குகள் தோன்றின.கலைவிழாக்கள் நடந்தன.ஐயாயிரம் நாற்காலிகள் போடப்பட்டு....முதல் வகுப்பு எட்டணா...இரண்டாம் வகுப்பு நாண்கனா என்று குறைந்த கட்டணத்தில் நாடகங்கள் நடந்தன.பம்மல் முதலியார், டி.கே.எஸ்., ஆகியவர்கள் முயற்சியால் நாடகங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்குக் கிடத்தது.
மீண்டும் டி.கே.எஸ்., குழுவினர் நாடகம் நடத்த ஆரம்பித்தனர்.நா.சோமசுந்தரம் எழுதிய, "இன்ஸ்பெக்டர்". ரா.வெங்கடாசலம் எழுதிய "மனைவி". கல்கியின் "கள்வனின் காதலி" (இதை எஸ்.டி.சுந்தரம் நாடகமாக்கினார்), டி.கே.கோவிந்தனின் :'எது வாழ்வு', ஸ்ரீதரின் "ரத்தபாசம்" (எம்.எஸ்.திரௌபதி முக்கிய வேடம் ஏற்றார்)ஆகிய நாடகங்களை அரங்கேற்றம் செய்தனர்.தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் "தமிழ்ச்செல்வம்" என்ற கல்வி பிரச்சார நாடகம் எழுதினார்.
இந்நேரத்தில்தான் அரு.ராமநாதன் எழுதிய "இராஜ ராஜ சோழன்" எழுதிய நாடகத்தையும் டி.கே.எஸ்.நடத்தினார்.(பின்னர் இன்றுவரை பல நாடகக் குழுக்கள் இந்நாடகத்தை மேடையேற்றி வருகின்றனர்)தஞ்சையில் நடந்த இந்நாடகம் காண 21000க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனராம்.
பின்னர் அகிலன் எழுதிய"வாழ்வில் இன்பம்" நாடகமும் நடந்தது. குழந்தைகளுக்காக "அப்பாவின் ஆசை" என்ற நாடகத்தையும் சிறுவர்கள் நடிக்க அரங்கேற்றினார் சண்முகம்.இந்நாடகத்தில் தான் கமல்ஹாசன் சிறுவனாக இருக்கையில் நடித்தார்.
டி.கே.சண்முகத்தின் நண்பர் பொதுவுடமைக் கட்சி ஜீவானந்தம்.அவருடன் சேர்ந்து பாரதியாரின் பாடல்களை நாட்டுடமையாக்க முயன்று வென்றார்.
இனி டி.கே.சண்முகம் அடைந்த பொறுப்புகளும், விருதுகளும்-
1950ல் நாடகக் கழகம் அமைக்கப்பட்டு...முதல் தலைவர் ஆனார்.நாடகங்களுக்கு கேளிக்கைவரி பெற்று தந்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திவந்த "நடிகன் குரல்" பத்திரிகைக்கு பொறுப்பாசிரியராக மூன்றாண்டுகள் பணியாற்றினார்
தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொருளாளராக நான்காண்டுகள் இருந்தார்.
தவிர்த்து, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம், தில்லி சங்கீத நாடக அகடெமி ஆகியவற்றில் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார்
1941ல் மதுரை தமிழ்ச் சங்கத்தின் "முத்தமிழ்க் கலாவித்துவ ரத்தினம்" , 1944ல் ஈரோட்டில் நாடகக் கலை மகாநாட்டில் "ஔவை" பட்டம்,புதுவை ராமகிருஷ்ணா பாடசாலை வழங்கிய "நாடக வேந்தர்:" பட்டம்,குன்றக்குடி அடிகளாரால், "நாடகக் கோ" பட்டம்,1960ல் தமிழ்நாடு சங்கீத நாடகக் கழகம் வழங்கிய,"சிறந்தத் தமிழ் நாடக நடிகர்" பட்டம்,1962ல். புதுதில்லி சங்கீத நாடக அகடெமி வழங்கிய , "சிறந்த நாடக நடிகர்" விருது, 1966ல் கோலாலம்பூரில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு, அம்மாநாட்டில்"தமிழ் நாடக வரலாறு" என்னும் தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரையை வழங்கினார்.
திரு அண்ணாதுரை அவர்கள் தமிழக முதல்வர் ஆனபோது சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவி அளித்தார்
1971ல் இந்திய அரசின் தேசிய விருதான "பத்மஸ்ரீ" விருது பெற்றார்.
தமிழ் நாடகத் தலைமையாசிரியர், நாடகக் கலை, நெஞ்சு மறக்குதில்லையே, எனது நாடக வாழ்க்கை ஆகிய நூல்களை எழுதினார்.
1973 ஃபெப்ருவரி 15ல் மறைந்தார்.
இவரது நூற்றாண்டை இவரது மகன்கள் டி.கே.எஸ்.கலைவாணன், புகழேந்தி ஆகியோர் 26-4-2012 அன்று சிறப்பாகக் கொண்டாடினர்.இன்று நாடக உலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூறு கலைஞர்களுக்கு "நாடகச் செல்வம்" என்று விருது கொடுத்து கௌரவித்தனர்.
அன்று விருது பெறும் பேறு அடியேனுக்கும் கிடைத்தது.
..... தேமொழி