அறிவில் ஆதவர்களும் மாட்டுக்கார வேலர்களும்

79 views
Skip to first unread message

செல்வன்

unread,
Dec 30, 2015, 8:50:50 AM12/30/15
to Neander Selvan

ஜல்லிகட்டு மாடுகளை காப்பாற்ற சிறந்தவழி ஜல்லிகட்டை தடுத்து அவற்ரை கசாப்புகடைக்கு அனுப்ப வழிவகுப்பதே என்பதை கண்டுபிடித்த அனிமல் ரைட்ஸ் போராளிகள் 

 வரும் பொங்கல் முதல் மாட்டுக்கார வேலர்கள் என அன்போடு சமூகத்தில் அழைக்கபடுவதாக!

நாலாயிரம் ஆண்டுகளாக மாடுகளை வளர்த்து வரும் தமிழ்விவசாயிகள் மிருகவதை செய்கிறார்கள் என்பதை 21ம் நூற்ரான்டில் கண்டுபிடித்து 2000 ஆண்டு மரபான ஏறுதழுவதை தடை செய்த மிருகவதை சங்கத்தினர் வரும் பொங்கல் முதல் "அறிவில் ஆதவர்கள்" என அன்போடு அழைக்கப்டுவதாக (அறிவில் ஆதவர்கள் என்பதை சேர்த்திபடித்தால் நான் பொறுப்பல்ல :-)

--

yesu rajan

unread,
Dec 30, 2015, 8:56:11 AM12/30/15
to mintamil
நாலாயிரம் வருடமா ஒருத்தன் முட்டாளா இருந்தால் அதை தொடரனுமா

அன்புடன்

யேசுராஜன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Megala Ramamourty

unread,
Dec 30, 2015, 9:12:27 AM12/30/15
to மின்தமிழ்
யேசுராஜரே,

ஏறுதழுவுதலைச் செய்தவர்கள் முட்டாள்கள் என்ற விமர்சனத்தை இப்போதுதான் முதல்முறையாகக் கேட்கிறேன்.  அவ்வ்வ்வ்!


அன்புடன்,
மேகலா

yesu rajan

unread,
Dec 30, 2015, 9:17:40 AM12/30/15
to mintamil
ஏறு தழுவுதல் அந்த கால கட்டத்தின் வீரத்தில் வெளிப்பாடாக இருக்கலாம்

தற்போது ஏன் ஏறு தழுவுதல் என்ற கலாசாரம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதே எனது கேள்வி


கால் நடைகளை விவசாயத்திற்கு பயன்படுத்திய தமிழன் அவற்றை கொண்டு
ஏறு தழுவுதல் என்ற நிகழ்வை நடாத்தில் வீரத்தை பறை சாற்றி இருக்கலாம்

அப்போது இரண்டு விசயங்கள் பிரதானம்

ஒன்று போர் இன்னொன்று விவசாயத்தை மையமாக கொண்ட வாழ்நிலை

அவை இரண்டும் மாறி விட்ட சூழலில் அதே விதமாக மாட்டை இம்சிப்பதுதான் புகழ் தர கூடியதா

காலம் மாறும் போது கருத்தும் மாறுகிறது

பழையது எல்லாம் பழமை அல்ல


யேசுராஜன்

செல்வன்

unread,
Dec 30, 2015, 9:21:00 AM12/30/15
to mintamil
மாடுகள் இப்போதும் விவசாயத்துக்கு பயனாகின்றன

மாட்டை உழவுக்கு பழக்கபடுத்த, ஏரில் பூட்ட அதை கட்டுபடுத்துவது எப்படி என மக்களுக்கு பயிர்சி கொடுப்பதே ஜல்லிகட்டு

தறிகொன்டு ஓடும் மாட்டை எப்படி அடக்குவது என்பதை ஊர்மக்களுக்கு சொல்லிகொடுக்க வேன்டாமா?

yesu rajan

unread,
Dec 30, 2015, 9:23:11 AM12/30/15
to mintamil
ஓடும் மாட்டை பிடிக்கனும் ஆனா மாட்டை ஓடவிட்டு அது மேல பத்து பேர் பாய கூடாது

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு பார்த்திருக்கீங்களா ?

--

Megala Ramamourty

unread,
Dec 30, 2015, 9:31:59 AM12/30/15
to மின்தமிழ்
யேசுராஜன் ஐயா,

மாடுகள் இன்னமும் நம் மண்ணைவிட்டு மறைந்துபோய்விடவில்லை. விவசாயத்திற்கு அவற்றைப் பயன்படுத்தும் உழவர் பெருமக்கள் இன்றும் இருக்கவே செய்கின்றார்கள். அத்தோடு ஏறுதழுவுதல் ஓர் வீரக்கலையே (it's also a martial art) அன்றிப் போரில்லை.

இதனை முறையாகச் செய்தால் மாடுகள் துன்புற மாட்டா. மாடுகளுக்கு ஊறுநேராவண்ணந்தான் அன்று முல்லைநிலத்து இளைஞர்கள் ஏற்றைத் தழுவினர். இன்றைய நடைமுறையில் மாடுகளுக்குக் கேடுநேரும் விதிமுறைகள் இருந்தால் அவற்றை மாற்றவேண்டியது அவசியம். 

நம்மிடம் எஞ்சியிருக்கும் அந்த ஒரேயொரு வீரவிளையாட்டையேனும் காப்பாற்றி, அதில் இளைஞர்களை முறையாகப் பயிற்றுவித்து ஈடுபடுத்துவது நம் மரபையும் மண்ணையும் போற்றுவதாக இருக்கும். 

இதனை அரசியலாக்குவது தேவையற்றது.

அன்புடன்,
மேகலா








--

செல்வன்

unread,
Dec 30, 2015, 9:34:38 AM12/30/15
to mintamil

2015-12-30 8:23 GMT-06:00 yesu rajan <yesura...@gmail.com>:
ஓடும் மாட்டை பிடிக்கனும் ஆனா மாட்டை ஓடவிட்டு அது மேல பத்து பேர் பாய கூடாது

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு பார்த்திருக்கீங்களா ?


ஓடும் பாட்டை பிடிக்க சிறந்த வழி அதன்மேல் 10 பேர் விழுந்து அமுக்குவதுதான்

ஆயுளில் ஒரு மாட்டையாவது பிடித்ததுண்டா அல்லது மாட்டை ஏரில் பூட்டி உழுததுண்டா? இல்லையெனில் தான் இப்படி காமடி செய்வீர்கள்

yesu rajan

unread,
Dec 30, 2015, 9:37:57 AM12/30/15
to mintamil
நீங்க அலங்காநல்லூர் ஜல்லி கட்டை நேரில் பார்திருக்க மாட்டீர்கள்

மாடு பிடிப்பது ஒன்றும் வீரத்துக்கல்ல - அதில் கிடைக்கும் பரிசுக்குத்தான்

திமில பிடிச்சுட்டு அந்த மாட்டு  தொத்தி கிட்டே போனால் ஒரு பரிசு

இதற்கு பேர்தான் ஏறு தழுவுதல்

கூட்டத்தை பார்த்தவுடன் மிரண்டு ஓடும் மாட்டின் மேல் திமுதிமுவென பத்து பேர் விழுவாங்க மாடு மிரண்டு போய் உதரி தள்ளும் அப்பையும் விடாம தொத்திட்டு போரது வீரம்

இதக்கு மாநில முதல்வர் மத்திய அரசுக்கு லெட்டர் எழுதுகிறார்



--

செல்வன்

unread,
Dec 30, 2015, 9:39:53 AM12/30/15
to mintamil

yesu rajan

unread,
Dec 30, 2015, 9:40:29 AM12/30/15
to mintamil
//

இதனை முறையாகச் செய்தால் மாடுகள் துன்புற மாட்டா. மாடுகளுக்கு ஊறுநேராவண்ணந்தான் அன்று முல்லைநிலத்து இளைஞர்கள் ஏற்றைத் தழுவினர். இன்றைய நடைமுறையில் மாடுகளுக்குக் கேடுநேரும் விதிமுறைகள் இருந்தால் அவற்றை மாற்றவேண்டியது அவசியம். 

நம்மிடம் எஞ்சியிருக்கும் அந்த ஒரேயொரு வீரவிளையாட்டையேனும் காப்பாற்றி, அதில் இளைஞர்களை முறையாகப் பயிற்றுவித்து ஈடுபடுத்துவது நம் மரபையும் மண்ணையும் போற்றுவதாக இருக்கும். //

வீரம் என்றால் என்ன ?

மாபெரும் தீங்கு விளையும் போது அதை தட்டி கேட்க வீரு கொண்டு எழுவது வீரம்

மாட்டின் பிடரியை பிடித்தால் வீரம் வருமென்றால் சிங்கத்தின் பிடரியை பிடித்தால் இன்னும் அதிகமாக வீரம் வருமே

yesu rajan

unread,
Dec 30, 2015, 9:43:27 AM12/30/15
to mintamil

வீரமும் மானமும்

ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு என்ற நிலை இப்போது மாறிவிட்டது. இன்று போட்டிக்காகவும் பரிசுப் பொருள்களுக்காகவுமே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. காளைகள் பிடிபடாமல் இருக்க போதை; பிடிக்கும் ஆள்களும் போதை. எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் மதிப்பவர் இல்லை. வீரமும், மானமும் இன்று விலை போய்விட்டன. அன்று விளையாட்டின் முடிவுகளை பெருந்தன்மையுடன் இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இன்று அந்த பெருந்தன்மை யாரிடமும் இல்லை. நடத்தி பலரும் துன்பப்படுவதைவிட, தடை விதிப்பதே சரி!

அ. கருப்பையா, பொன்னமராவதி.

 

உயிருக்கு ஆபத்து

எத்தனையோ விதமான விளையாட்டுகள் இருக்கின்றன. அந்த விளையாட்டுகளில் இளைஞர்கள் தங்களின் திறமையையும், வீரத்தையும் காண்பிக்க வேண்டியதுதானே. ஐந்து அறிவு உள்ள மிருகத்திடமா காண்பிப்பது? காளைகள் அவிழ்த்து விடப்பட்ட உடன் கூட்டத்தை பார்த்து மிரண்டு அங்குமிங்கும் ஓடுவதால், பிடிக்க வரும் இளைஞர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. மேலும் காளைகளும் பல்வேறு முறையில் துன்புறுத்தப்படுகின்றன. ஆதலால் ஜல்லி கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து மிகச் சரியே.

என்.கே. திவாகரன், சரவணம்பட்டி.

பகை வெறி

காளைகளை, எப்போது பார்த்தாலும் மூர்க்கமாக வளர்த்து அவற்றை பகை வெறி கொண்ட காளையாக்கி விடுகிறார்கள். அது மட்டுமல்ல ஜல்லிக்கட்டுக்கு காளைகளைத் தயார்படுத்தும்போது அவற்றுக்கு போதைப் பொருள்களும் ஊட்டப்படுகின்றன. இப்படி பல வகைகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதால் ஜல்லிக்கட்டிற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து மிகவும் சரி.

மு. கிருட்டிணசுவாமி, வேலூர்.

கால மாற்றம்

ஜல்லிக்கட்டு என்னும் பெயரால் வீரம் கோரமாகிறது; விளையாட்டு சோகமாகிறது; அதனால் உயிர் சேதமாகிறது. இப்போது போர் புரிவதற்கு வேல், வாள், வில், அம்பு இவையெல்லாம் இல்லை. அவை துப்பாக்கிகளாக, குண்டுகளாக, பீரங்கிகளாக மாற்றம் பெற்று விட்டன! இது காலத்தின் கட்டாயம். காலம் மாறும்போது வீரமும் மாறுகிறது. அதுபோலவே விளையாட்டும் மாற வேண்டும். எனவே ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியே.

காளைகள் வலிமை

ஆண்டுதோறும் வீர விளையாட்டு என்ற பெயரில் காளைகள் துன்புறுத்தப்படுவதோடு, அப்பாவி மக்கள் பலரும் இறக்க நேரிடுகிறது. அதனால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியே. இக்கால வாலிபர்கள் ராணுவத்தில் சேர்ந்து, நம் நாட்டைக் காப்பதில் தம் வீரத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்தக் கால வாலிபர்கள் காளைகளை அடக்கும் அளவுக்கு வலிமை பெற்றிருந்தனர். இந்தக் காலத்தில் வாலிபர்களைவிடக் காளைகளே வலிமை பெற்றுள்ளன.

ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.

 

என்ன நியாயம்?

மாட்டையும் மனிதனையும் துன்புறுத்துவது என்ன நியாயம்? மாடு முட்டி காயமடைந்த நபர்கள் மருத்துவமனைகளில் இருக்கும்போது இதனை "வீர விளையாட்டு' என்று எப்படிகூற முடியும்? மருத்துவம், சட்டம், பொறியியல் படித்த எந்த இளைஞனாவது மாடு பிடிக்கச் செல்வானா? படிக்காத, உடலுழைப்பு செய்யும் தொழிலாளிகளே வீரம் என்ற பெயரில் தனக்கு கேடு விளைவித்துக் கொள்கின்றனர். எனவே ஜல்லிக்கட்டுக்கு தடை தேவை.

கீர்த்தி மோகன், தஞ்சாவூர்.

வியாபாரம்

வீர விளையாட்டாகக் கருதப்பட்ட ஜல்லிக்கட்டு, இன்று, வியாபாரமாக மாறிவிட்டது. தங்கள் காளை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அதற்கு போதை பொருள் கொடுத்து வெறியையும் மூர்க்கத்தையும் ஊட்டும் கொடுஞ்செயல்களும் மறைமுகமாக நடத்தப்படுகின்றன. எனவே இந்த விளையாட்டை தடை செய்வது நியாயமே.

என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

 இதெல்லாம் பலருடைய கருத்து பத்திரிக்கையில் வந்தது படிச்சு திருத்திகங்க கருத்தை

Megala Ramamourty

unread,
Dec 30, 2015, 9:56:14 AM12/30/15
to மின்தமிழ்
//மாபெரும் தீங்கு விளையும் போது அதை தட்டி கேட்க வீரு கொண்டு எழுவது வீரம்//

ஐயா, வீரத்திற்குப் பல definitions உண்டு; அதில் ஒன்று நீங்கள் மேலே சுட்டியிருப்பது; ஆனால் அதுமட்டுந்தான் ’வீரத்துக்கான விதி’யென்று அதன் எல்லையைச் சுருக்கிவிட முடியாது.  :-))

//மாட்டின் பிடரியை பிடித்தால் வீரம் வருமென்றால் சிங்கத்தின் பிடரியை பிடித்தால் இன்னும் அதிகமாக வீரம் வருமே//

Of course... you are absolutely correct! அதையும் செய்தவர்கள்தாமே நம் வீரத்தமிழர்கள். புலியைப் பொருதுகொன்று ‘புலிகொன்றான்’, என்றெல்லாம் விருதுப்பெயர் பெற்றவர்கள் அவர்கள். நடுகற்களில் தேடிப்பாருங்கள்...இவற்றிற்கெல்லாம் ஆதாரங்கள் கிடைக்கும்.  :-))


//ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு என்ற நிலை இப்போது மாறிவிட்டது. இன்று போட்டிக்காகவும் பரிசுப் பொருள்களுக்காகவுமே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது//

ஜல்லிக்கட்டு எனும் வீரவிளையாட்டு இன்று வியாபாரமாக மாறியிருப்பதை நான் மறுக்கவில்லை. அது மனிதர்களின் குற்றமே. அதனைச் சரிசெய்யுங்கள். மீண்டும் அந்த வீரவிளையாட்டை பழைய form-க்குக் கொண்டுவாருங்கள். அதற்கேற்ப விதிமுறைகளை மாற்றுங்கள். அதைவிட்டுவிட்டு பலகாலமாக நாம் போற்றிவரும் வீரவிளையாட்டை அழித்துவிடாதீர்கள்! 

(இப்படி, வீரத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாக்கலைகளையும் 
நாம் ஏதோ ஒரு குறைசொல்லிச்சொல்லியே  மண்ணைவிட்டு விரட்டிவிட்டதால்தான் இன்றைய ஆண்களெல்லாம் ’புல்தடுக்கி பயில்வான்களாக’ ஆகிவிட்டார்கள்.)  :-))

 அன்புடன்,
மேகலா

Tthamizth Tthenee

unread,
Dec 30, 2015, 10:17:00 AM12/30/15
to mint...@googlegroups.com
ஒரு பெண்ணை கண்முன்னால் ஒருவன் தவறாக நடத்துகிறான் 

ஒரு சாதாரனத் தொழிலாளியை  ஒரு முதலாளி ஏமாற்றுகிறார்

பொது மக்களை வாக்குறுதிகள் அள்ளித் தெளித்து வாக்குகள் பெற்று எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் அரசியல்வாதிகள் ஏமாற்றுகிறார்கள்
மாதம் முழுவதும் உழைத்து ஈட்டிய  பணத்தில்  ஒரு தலைக்கு  200 ரூபாய்கள் என்று ஒரு குடும்பத்துக்கு  வாரம் ஒரு முறை 1000 ரூபாய்களை தட்டிப் பறிக்கிறார்கள்  திரைத்துறையினர்

சாலைகள் போடும் போது  தோசை வார்ப்பது போல்   தார் போடுகிறார்கள் ஒப்பந்தக் காரர்கள்

நம்முடைய  அடிப்படைத் தேவைகள் அனைத்தும்    மறுக்கப்படுகின்றன

கட்சித் தொண்டனுக்கு  பிரியாணி போட்டுவிட்டு  அவன் உழைப்பை உறிஞ்சி தலைவர்கள்  மந்திரிகள் ஆகிறார்கள்  அதன் பின்னே தொண்டன் மீண்டும் உழைக்கிறான்    

பிள்ளைகளுக்கு  நியாயமாகத் தரவேண்டிய  கல்வியை வியாபாரமாக்கி  கல்வியாளர்கள் கொள்ளை அடிக்கிறார்கள்

நடக்க சரியான   நடைபாதைகள் இல்லை  கடைக்காரகள் ஆக்ரமிக்கிறார்கள்

நாம் பாடுபட்டு தேடிய ஒரு மாத  வருமானத்தை  கொள்ளையர்கள் அடித்துக் கொண்டு போகிறார்கள்

பெண்களின் தாலியையும்  தங்க நகைகளையும்   கண்ணெதிரே பறித்துச் செல்கிறார்கள்

வீட்டின் பின் புறம் துளையிட்டு   அல்லது  பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து  நம் செலவத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்

பள்ளிகளின் அருகிலே  சாராயக் கடைகளும்  போதை வஸ்துக்களும்  விற்று வருங்காலத் தூண்களாகிய  இளைஞர்களைக்  கெடுக்கிறார்கள்

மக்கள் வெள்ளத்தால் அவதிப்படும் போது  பால் முதற்கொண்டு  அத்யாவசியப் பொருட்களை ஆயிரம் ரூபாய்ய்க்கும் மேலாக கள்ளச் சந்தையில்  விற்று பணம் சேர்க்கிறார்கள் சில கயவர்கள்

பச்சிளங் குழந்தைகளைக் கடத்தி விற்கிறார்கள் சிலர்

இவற்றையெல்லாம் பார்த்தும்   வராத வீரம்  காளைகளை  அடக்கினால்  வந்துவிடுமா?

 யாரோ பிழைக்க  யாரையோ  பலிகொடுக்கிறார்கள்  அதைப் புரிந்து கொள்ளாமல்  இதிகாச  சரித்திர காலத்தில் இருக்கும் இளைஞர்களை  வலுவான  இளைஞர்களை  மனக்கண்ணிலே கண்டு   மது குடித்து  தளர் நடைபோடும்   இளைஞர்களை வெறி மூட்டி  மாட்டின்  கொம்பால்  அவர்களின் குடலைச் சரிக்க  ஏற்பாடுகள் செய்வது  வீரமா

லட்டிய பெண்டாட்டியை காப்பாற்ற வக்கில்லாத பலர் , மனைவி இருக்க மாற்றான் பெண்களைக் பாலியல் செய்து கொல்கிறார்கள் பலர்  
இவர்களைப் பார்த்தால் கண்டிக்கத் தோன்றாத இளஞர்களுக்கு  மாடு பிடிக்க கற்றுக் கொடுத்தால் வீரம் வந்து விடுமா?

சுய மரியாதையோடு  தன்மானம் பாதிக்கப் படும் போது  பொங்கி எழுதலே  வீரம்
அநியாயம் நடக்கும் போது  தட்டிக் கேட்டலே வீரம் இப்படிப்பட்ட நியாயமான் வீரங்களை  சொல்லிக் கொடுக்காத நாடு   ஏறு தழுவுதலை ஆதரித்து என்ன  பயன்

அரசியல்வாதிகளின்   கைப்பொம்மையாக ஆட்டிவைக்க இளைஞர்களை தூண்டி  வாக்கு வங்கி  சேகரிக்க அரசியல்வாதிகள் திட்டமிடுகிறார்கள்  என்பதைப் புரிந்து கொள்ளாத மக்கள்   எப்போது   அநியாயங்களைக் கண்டு குமுறி  தட்டிக் கேட்கத் தொடங்குகிறார்களோ  அப்போதுதான்  நாடும் செழிக்கும்  நம் வீரமும்  எடுபடும்.

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 30, 2015, 11:58:00 AM12/30/15
to mintamil

ஐயா வணக்கம்.
"முட்டாள்களுக்கு அறிவாளிகள் செய்வதெல்லாம் முட்டாள் தனமாகத் தெரியும் " என்று கேள்விப் பட்டதில்லையா!

குழந்தைகளுடன் விளையாடுவது போன்றதொரு விளையாட்டே இது.
இதில் மாடுகள் துன்புறுத்தப் படுவதில்லை ஐயா.

Oru Arizonan

unread,
Dec 30, 2015, 2:01:24 PM12/30/15
to mintamil
2015-12-30 7:12 GMT-07:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
யேசுராஜரே,

ஏறுதழுவுதலைச் செய்தவர்கள் முட்டாள்கள் என்ற விமர்சனத்தை இப்போதுதான் முதல்முறையாகக் கேட்கிறேன்.  அவ்வ்வ்வ்!


அன்புடன்,
மேகலா

2015-12-30 8:56 GMT-05:00 yesu rajan <yesura...@gmail.com>:
நாலாயிரம் வருடமா ஒருத்தன் முட்டாளா இருந்தால் அதை தொடரனுமா

அன்புடன்

யேசுராஜன்

ஸ்பெயினில் இப்படி ஒரு விளையாட்டு நடக்கிறது.  அதைக்காண உலகேங்கினுமிருந்து மக்கள் செல்கிறார்கள்.  பலருக்குப் படுகாயமும் ஏற்படுகிறது.  அது தடைசெய்யப்படுவதில்லை.  மேலும் காளைகளின்மேல் பயணித்துத் தம்வீரத்தை நிலைநாட்டும் ரோடியோவும் அமெரிக்காவில் நடக்கிறது.  இதையெல்லாம் முட்டாள்தனம் என்று யாரும் சொல்வதில்லை.தமிழ்நாட்டில்மட்டும் பழையபழக்கவழக்கங்களைஎல்லாம் மூடப்பழக்கம் என்று குறிப்பிடுவது தமிழனான எனக்கு மனவருத்தத்தைத் தருகிறது.

ஒரு அரிசோனன்
Inline image 1
bull running, spain
Inline image 3
ஆணுக்குச் சளைக்காமல் ஏறுதழுவி, விழுப்புண்பெறும் வீராங்கனை

Inline image 2
bull riding rodeo, USA

Oru Arizonan

unread,
Dec 30, 2015, 2:08:30 PM12/30/15
to mintamil


2015-12-30 7:56 GMT-07:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
//(இப்படி, வீரத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாக்கலைகளையும் நாம் ஏதோ ஒரு றைசொல்லிச்சொல்லியே  மண்ணைவிட்டு விரட்டிவிட்டதால்தான் இன்றைய ஆண்களெல்லாம் ’புல்தடுக்கி பயில்வான்களாக’ ஆகிவிட்டார்கள்.)  :-))//

🙏👏🔨
ஒரு அரிசோனன்
Inline image 1
ஏறுடன் ஓடுதல், ஸ்பெயின்

Seshadri Sridharan

unread,
Dec 30, 2015, 5:39:19 PM12/30/15
to mintamil
2015-12-30 19:47 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:

அவை இரண்டும் மாறி விட்ட சூழலில் அதே விதமாக மாட்டை இம்சிப்பதுதான் புகழ் தர கூடியதா - யேசுராஜன் 

ஒரு மாடு 10 டன் இரும்பு ஏற்றிய வண்டியை இழுத்து கழுத்தெல்லாம் புண்ணோடு வாழவதினும் பெரும் துன்பம் கொண்டதல்ல ஏறுதழுவல். மஞ்சுவிரட்டு மாடுகள் எந்த தொழிலுக்கும் பயன்படுத்தப்படாமல் வளர்க்கப்படுகின்றன. ஏறுதழுவல் பண்டுபோல் கொடுமையான முறையில் நடத்தப்படுவதில்லை. ஓடிக்கொண்டிருக்கும் மாட்டை ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை தொத்திப்பிடிக்க வேண்டும். அவரே வீரர் என அறியப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. அவ்வளவே. இது ஒரு மரபு. இதை வதை என்றால் புலவிற்காக கால்நடைகளை பறவைகளை வளர்ப்பதே தவறு என்றாகிவிடும்.   

ஓடமன்   

yesu rajan

unread,
Dec 30, 2015, 11:19:02 PM12/30/15
to mintamil
சூப்பர் தமிழ் தேனி அய்யா,

தனிநபர் வாதமே சரியானதென்று சமூக பார்வை மறுக்கப்படும் காலகட்டத்தில் சமூக பார்வையை மாட்டின் பக்கம் போகவிட்டு விட்ட வீரனின் வீரம் மாட்டின் குளம்படியில் கிடக்கும் போது சமூக பார்வையும் சமூக அநீதிகளை கண்டு பொங்காமல்  வீரத்தை காட்டாமல் மாட்டை வளர்த்தல் அதை ஓடவிடுதல் அதை பிடித்தலே
மாபெரும் வீரம் என எண்ணி வாழும் ஆயிரகணக்கான இளைஞர்கள் சக்தி வீணடிக்கப்படுகிறது.

உங்கள் வாதம் மிகச்சரி

நமது வாழ்நிலை உற்பத்தியை மறுத்து செல்கையில் புல் தடுக்கி பயில்வான்கள் உருவாகிறார்கள்

காலை முதல் மாலை வரை கம்யூட்டர் முன் உக்கார்த்தால் காளையை அல்ல

காபி டம்ளரை கூட பிடிக்க சக்தி இருக்காது

--

nkantan r

unread,
Dec 31, 2015, 6:08:56 AM12/31/15
to மின்தமிழ்
from america to australia there are individuals and organisations who oppose and protest rodeo; (courtesty google: www.animalsaustralia.org/issues/rodeos.php --  and alos look at peta hsus etc; btw horses are used in american rodeo which i have seen); so opposition and support are across the world and not specifc to tamil practice.

i will not call a jallikattu supporter as a courageous and cruel not would i go to extend of calling non-supporters as fools and weaklings.

as regards spain, catalonia and canary islands have banned bull-fighting; but bull-dodging a sort of jallikattu is now allowed

regards
rnkantan

nkantan r

unread,
Dec 31, 2015, 6:12:33 AM12/31/15
to மின்தமிழ்
i am sure people would read the content and not worry about typographical errors and mistakes in grammar!

yesu rajan

unread,
Jan 8, 2016, 10:48:11 PM1/8/16
to mintamil
எப்படியோ ஜல்லி கட்டுக்கு அனுமதி பெற்று விட்டீர்களே அறிவில் ஆதவர்களே

Megala Ramamourty

unread,
Jan 8, 2016, 10:59:17 PM1/8/16
to மின்தமிழ்
ஆமாம்... தமிழ்மரபு குறித்த அறிவில்லாதவர்கள் தொடுத்த வழக்கை வென்றுவிட்டனர் அறிவில் ஆதவர்களான சல்லிக்கட்டு ஆதரவாளர்கள். 
இந்த தைப்பொங்கல் தமிழகத்துக்கு அட்டகாசமான பொங்கலாக இருக்கப்போகிறது என்பதற்கான அறிகுறி இது அண்ணே!  :-)) 



On Fri, Jan 8, 2016 at 10:48 PM, yesu rajan <yesura...@gmail.com> wrote:
எப்படியோ ஜல்லி கட்டுக்கு அனுமதி பெற்று விட்டீர்களே அறிவில் ஆதவர்களே

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jan 8, 2016, 11:20:29 PM1/8/16
to மின்தமிழ்
இவ்வளவு நடக்கிறது ....
ஆனால் ஒருவர் கூட மாட்டிடம் போய் உனக்கு சம்மதமா, உன்னை விரட்டி விடுவோம், பயமுறுத்துவோம், பத்து பேர் மேலேறி உன்னை அமுக்குவோம்   உனக்கு சம்மதமா,
என யாருக்குமே மாட்டையும் ஒருவார்த்தை கேட்போமே, சம்பந்தப் பட்டவரின் கோணம் என்ன என்று கேட்காததில் எனக்கு  ஆதங்கமே.... 

ஆராய்ச்சி மணி அடித்து நியாயம் கேட்க மனுநீதிச் சோழன் இல்லையே இப்பொழுது என்றும் எனக்கு மனக்குறை 

நாய்களே வந்து நம்மை அழைக்கும், பந்து விளையாடக் கூப்பிடும் அதிலிருந்து அதற்கு விளையாடுவதில் ஆசை எனப் புரியும் 
என்றாவது மாடுகள் வந்து விளையாடக் கூப்பிட்டுள்ளனவா? வாயில்லா மாட்டின் மனநிலை யாரே அறிவார்?
மாடுகள் வந்து நீதிமன்றத்தில் எதிர்முறையீடு செய்யாதது எல்லோருக்கும் வசதியாகப் போய்விட்டது.

மாடுகளின் ஆதரவாளி 
.... தேமொழி 


Megala Ramamourty

unread,
Jan 8, 2016, 11:32:22 PM1/8/16
to மின்தமிழ்
//மாடுகள் வந்து நீதிமன்றத்தில் எதிர்முறையீடு செய்யாதது எல்லோருக்கும் வசதியாகப் போய்விட்டது.//

ஹா...ஹா...ஹா!

அருமைத் தேமொழி,

ஜல்லிக்கட்டுக்குப் பயன்படுத்தப்படும் மாடுகள் வீரமும் ஆற்றலும் பொருந்தியவை. சாதாரண நோஞ்சான் மாடுகளை இவ்விளையாட்டுக்குப் பயன்படுத்தமாட்டார்கள். :-)
சிறியதாக இருக்கும்போதிலிருந்தே அவற்றைச் சல்லிக்கட்டில் ஈடுபடுத்துவதற்கென்றே போர்க்குணத்தோடு வளர்ப்பார்கள்; போட்டிக்குத் தயார்ப்படுத்துவார்கள். எனவே ஜல்லிக்கட்டு என்றதும் அந்த ஏறுகள் துள்ளிக்கொண்டு கிளம்பும். அழுதுகொண்டு ஆராய்ச்சிமணியெல்லாம் அடிக்காதாக்கும்!   :-))



அன்புடன்,
மேகலா



Oru Arizonan

unread,
Jan 8, 2016, 11:35:51 PM1/8/16
to mintamil
தாங்கள் சொல்வது மிகச் சரியே, தேமொழி அவர்களே!

அதுபோல, ஆடு, மாடு, கோழி இவற்றை அடித்துச் சாப்பிடும்போது...

வாயில்லா இவ்வுயிர்களின் மனநிலையை யாரே அறிவர்?

இவைகள் வந்து நீதிமன்றத்தில் எதிர்முறையீடு செய்யாதது எல்லோருக்கும் வசதியாகப் போய்விட்டது. 

ஓரூ அரிசோனன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Jan 8, 2016, 11:53:38 PM1/8/16
to மின்தமிழ்
விலங்கு நல ஆர்வலர் உச்ச மன்றத்தில் வழக்குத் தொடந்துள்ளார்.  முடிவு எப்படியும் இருக்கலாம் கண்ணைமூடித் தியானம் செய்து திங்கள் கிழமைவரை கையைப் பிசைந்துகொண்டு காத்திருக்கவும்

இணைய தருமி 2016

Nagarajan Vadivel

unread,
Jan 8, 2016, 11:56:39 PM1/8/16
to மின்தமிழ்

2016-01-09 9:50 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆராய்ச்சி மணி அடித்து நியாயம் கேட்க

​அது பெண் மாடு அல்லவோ.  காளைகள்​ பாவம் உழைப்புக்கும் விழாக் காலத்தில் இந்த வில்லங்க விளையாட்டுக்கும் ஆளகும் கொடுமை பெண் பசுக்களுக்கு இல்லையே

yesu rajan

unread,
Jan 9, 2016, 12:05:54 AM1/9/16
to mintamil
//றியதாக இருக்கும்போதிலிருந்தே அவற்றைச் சல்லிக்கட்டில் ஈடுபடுத்துவதற்கென்றே போர்க்குணத்தோடு வளர்ப்பார்கள்; போட்டிக்குத் தயார்ப்படுத்துவார்கள். எனவே ஜல்லிக்கட்டு என்றதும் அந்த ஏறுகள் துள்ளிக்கொண்டு கிளம்பும். அழுதுகொண்டு ஆராய்ச்சிமணியெல்லாம் அடிக்காதாக்கும்!   :-))//

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வெள்ளையம்மா உன் காளைக்கு வந்ததடி ஆபத்துன்னு ஒரு வசனம் வரும் என்னமோ தெரியலை ஒரு வெள்ளையம்மாளாக காளையுடன் உங்களை வைத்து கற்பனை செய்ய தோணுகிறது : )

(காமெடி)

தேமொழி

unread,
Jan 9, 2016, 12:12:11 AM1/9/16
to மின்தமிழ்
இதிலிருந்து பெண் / பசுக்களுக்கு நியாயம் கேட்கத் தெரியும்.
ஆண் /காளைகள் அசமஞ்சங்கள் (https://ta.wiktionary.org/s/2rxb) எனத் தெரிகிறது.

..... தேமொழி 

Oru Arizonan

unread,
Jan 9, 2016, 12:22:12 AM1/9/16
to mintamil


2016-01-08 22:12 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
//ஆண் /காளைகள் அசமஞ்சங்கள் (https://ta.wiktionary.org/s/2rxb) எனத் தெரிகிறது.//

அதானே பார்த்தேன்;  ஆண் பிறவிகள் இன்னும் பழிக்கப்படவில்லையே என்று!

தேமொழி

unread,
Jan 9, 2016, 12:40:23 AM1/9/16
to மின்தமிழ்
என் பதில்கள் எதிர்வினைகள் 
எதிர்வினைகள் காரணமின்றி தானே தோன்றுபவை அல்ல.

வேலியில் உள்ள ஓணானை   வேலியிலேயே  வெயில் காய விட்டுவிடவேண்டும்...

...... தேமொழி 

yesu rajan

unread,
Jan 9, 2016, 12:41:55 AM1/9/16
to mintamil
ஏன் பழமொழியை பாதி சொல்கிறீர்கள்

--

தேமொழி

unread,
Jan 9, 2016, 12:47:00 AM1/9/16
to மின்தமிழ்
:))  மீதியை சொன்னால் மேலும் வம்பு வராதா?

அப்பாவி 
.... தேமொழி 



On Friday, January 8, 2016 at 9:41:55 PM UTC-8, yesu rajan wrote:
ஏன் பழமொழியை பாதி சொல்கிறீர்கள்
2016-01-09 11:10 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
என் பதில்கள் எதிர்வினைகள் 
எதிர்வினைகள் காரணமின்றி தானே தோன்றுபவை அல்ல.

வேலியில் உள்ள ஓணானை   வேலியிலேயே  வெயில் காய விட்டுவிடவேண்டும்...

...... தேமொழி 



On Friday, January 8, 2016 at 9:22:12 PM UTC-8, oruarizonan wrote:


2016-01-08 22:12 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
//ஆண் /காளைகள் அசமஞ்சங்கள் (https://ta.wiktionary.org/s/2rxb) எனத் தெரிகிறது.//

அதானே பார்த்தேன்;  ஆண் பிறவிகள் இன்னும் பழிக்கப்படவில்லையே என்று!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

yesu rajan

unread,
Jan 9, 2016, 12:49:53 AM1/9/16
to mintamil
உலகத்தில் மாறாத விசயமே இல்லை எல்லாமே மாறிகிட்டே இருக்குது

5300 ஆண்டுகளுக்கு முன் கோரை புல்லில் சுவெட்டேர் செய்து போட்டுட்டு இருந்தான் ஒடிசி இன்று அப்படி போடுகிறோமா

4000 வருடத்துக்கு முன்பு காளைகள் காடுகளில் மேய்ந்து வந்தன அவற்றை அடக்கி வயலுக்கு பூட்ட போராட்டம் நடத்தினால் மாடு பிடித்தான்

அதை இன்னும் செய்யனுமா ?

வீரம் என்பதை மாட்டிடம் காட்டாமல் நமக்கு எதிரா நடக்கும் அநீதி மீது காட்டலாம்

இன்னும் தனியே செல்லும் பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாகிறார்கள் வீரர்கள் திரண்டு அவர்களை உண்டு இல்லைன்னு ஆக்கலாம்

டிராபிக் ராமசாமிதான் என்னை பொறுத்தவரை வீரன்

எத்தனை பொதுநல பிரச்சனை எடுத்துட்டு போராடுகிறார்

ஒரு மாட்டின் வாலால் அடிபட்டால் கூட விழுந்துடும் உடம்மை வச்சிட்டு

yesu rajan

unread,
Jan 9, 2016, 12:50:56 AM1/9/16
to mintamil
வரட்டுங்க பார்த்துக்களாம் எவ்வளோ பார்க்கிறோம் இத பார்க்க மாட்டோமா ?

வேட்டியை உருவினா அது சட்ட மன்றம்

2016-01-09 11:16 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
:))  மீதியை சொன்னால் மேலும் வம்பு வராதா?

அப்பாவி 
.... தேமொழி 


On Friday, January 8, 2016 at 9:41:55 PM UTC-8, yesu rajan wrote:
ஏன் பழமொழியை பாதி சொல்கிறீர்கள்
2016-01-09 11:10 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
என் பதில்கள் எதிர்வினைகள் 
எதிர்வினைகள் காரணமின்றி தானே தோன்றுபவை அல்ல.

வேலியில் உள்ள ஓணானை   வேலியிலேயே  வெயில் காய விட்டுவிடவேண்டும்...

...... தேமொழி 



On Friday, January 8, 2016 at 9:22:12 PM UTC-8, oruarizonan wrote:


2016-01-08 22:12 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
//ஆண் /காளைகள் அசமஞ்சங்கள் (https://ta.wiktionary.org/s/2rxb) எனத் தெரிகிறது.//

அதானே பார்த்தேன்;  ஆண் பிறவிகள் இன்னும் பழிக்கப்படவில்லையே என்று!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 9, 2016, 1:04:33 AM1/9/16
to mintamil
ஜல்லிக்கட்டு நிகழ்வால் விலங்குகள் மட்டும் வதைபடவில்லை. மனிதர்களும் துன்பப்படுகிறார்கள். பக்கத்தூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த மஞ்சுவிரட்டில் மூவர் இறந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர். காளையும் மனிதரும் வெறியிலிருந்தால் இப்படித்தான் நிகழும்.
தடையால் விலங்குகள், மனிதர் துன்பமும் இராது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


தேமொழி

unread,
Jan 9, 2016, 1:24:37 AM1/9/16
to மின்தமிழ்


On Friday, January 8, 2016 at 10:04:33 PM UTC-8, சொ.வினைதீர்த்தான் wrote:
ஜல்லிக்கட்டு நிகழ்வால் விலங்குகள் மட்டும் வதைபடவில்லை. மனிதர்களும் துன்பப்படுகிறார்கள். பக்கத்தூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த மஞ்சுவிரட்டில் மூவர் இறந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.


இந்தப் படத்தின் கதையே ஜல்லிக்கட்டின் விளைவை அடிப்படையாகக் கொண்டதுதான்.


 ..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Jan 9, 2016, 1:50:56 AM1/9/16
to மின்தமிழ்

2016-01-09 10:42 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இதிலிருந்து பெண் / பசுக்களுக்கு நியாயம் கேட்கத் தெரியும்.

​ஒரு வேளை பெண் பசு உசிலம்பட்டியைச் சேர்ந்ததாக இருந்து இறந்த ஆண் கன்றுக்காக நியாயம் கேட்கப் போயிருக்குமோ
தமிழ்த் தாய்களுக்கு என்ன இருந்தாலும் ஜான் பிள்ளையாக இருந்தாலும் ஆண்பிள்ளை அல்லவா மேல்

yesu rajan

unread,
Jan 9, 2016, 2:17:16 AM1/9/16
to mintamil
பெண்கள் நியாயம் கேட்பதில் சிறந்தவர்கள் - ஆண்கள் நியாயமாக நடப்பதிலும் நியாயம் தவறும் போது உயிரை விட்டாவது ஈடு செய்வார்கள்

கண்ணகி - பாண்டிய மன்னன் (பெயர் மறந்து போச்சு)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 9, 2016, 4:07:02 AM1/9/16
to mintamil
வணக்கம்.
2016-01-09 9:50 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஒருவர் கூட மாட்டிடம் போய் உனக்கு சம்மதமா, உன்னை விரட்டி விடுவோம், பயமுறுத்துவோம், பத்து பேர் மேலேறி உன்னை அமுக்குவோம்   உனக்கு சம்மதமா,
என யாருக்குமே மாட்டையும் ஒருவார்த்தை கேட்போமே, சம்பந்தப் பட்டவரின் கோணம் என்ன என்று கேட்காததில் எனக்கு  ஆதங்கமே.... 
எனக்கும் இதே ஆதங்கம் இருந்தது.
ஒரு உண்மையான காளைமாட்டிடம் போய்க் கேட்டேன்.
அண்ணே, “மஞ்சவிரட்டு ஜல்லிக்கட்டு இவற்றை எதிர்க்கும் ஆட்களிடம் நைசாகப் பேசி விழா நடைபெறும் இடத்திற்குக் கூட்டிக் கொண்டு வந்து, அவர்களை எனக்கு அடையாளம் மட்டும் காட்டுங்கள், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்“ என்று சொல்லியுள்ளது.

எனவே மாடுகளின் ஆதரவாளர் யாரேனும் சிறாவயல் மஞ்சுவிரட்டு பார்க்க ஆவலாக இருந்தால் காரைக்குடிக்கு வரலாம்.  மற்றனவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.

அன்பன்
காளை




--

Innamburan S.Soundararajan

unread,
Jan 9, 2016, 6:57:20 AM1/9/16
to mintamil
இவ்வளவு நடக்கிறது ....
ஆனால் ஒருவர் கூட மாட்டிடம் போய் உனக்கு சம்மதமா, உன்னை விரட்டி விடுவோம், பயமுறுத்துவோம், பத்து பேர் மேலேறி உன்னை அமுக்குவோம்   உனக்கு சம்மதமா,
என யாருக்குமே மாட்டையும் ஒருவார்த்தை கேட்போமே, சம்பந்தப் பட்டவரின் கோணம் என்ன என்று கேட்காததில் எனக்கு  ஆதங்கமே.... 

ஆராய்ச்சி மணி அடித்து நியாயம் கேட்க மனுநீதிச் சோழன் இல்லையே இப்பொழுது என்றும் எனக்கு மனக்குறை 

நாய்களே வந்து நம்மை அழைக்கும், பந்து விளையாடக் கூப்பிடும் அதிலிருந்து அதற்கு விளையாடுவதில் ஆசை எனப் புரியும் 
என்றாவது மாடுகள் வந்து விளையாடக் கூப்பிட்டுள்ளனவா? வாயில்லா மாட்டின் மனநிலை யாரே அறிவார்?
மாடுகள் வந்து நீதிமன்றத்தில் எதிர்முறையீடு செய்யாதது எல்லோருக்கும் வசதியாகப் போய்விட்டது.

மாடுகளின் ஆதரவாளி 
********
நான் உசிலம்பட்டி ஆசாமி. எத்தனையோ ஜல்லிக்கட்டுப் பார்த்தவன். இன்றைய ஹிந்து இதழில் ஒரு கமெண்ட் அடித்தேன்: 'பிஜேபி தன்மானம் இழந்து விட்டது. ஓரளவு நான் மதிக்கும் பிரதமர் தலை குனிய வேண்டும்.' மட்டுறுத்திவிடுவார்கள்.

நான் தேமொழி கட்சி. அப்பாடா! ஒரு சமாச்சாரமாவது கிடைத்ததே. பசுமாடு எல்லாம் எருது ஆகிவிட்டால், கோபூஜா ஆரெஸெஸ் என்ன செய்வார்கள்!? கலித்தொகை வீரம் வேறே. ஜல்லிக்கட்டு சூரம் வேறே! ஒன்று கவனித்தீர்களோ? காளைமாடுகள் பீதியில் ஓடுகின்றன. நாலு இளந்தாரிகளை ஓடவிட்டு, காளைப்படை அனுப்ப வேண்டும்.இன்னம்பூரான்

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jan 9, 2016, 7:48:58 AM1/9/16
to மின்தமிழ்
நளனுக்கு மாறி மாறி தூது போகச்சொல்லி "அன்னத்தை"விரட்டி
அன்னம் என்ற "பக்ஷியே"இல்லாமல் செய்து விட்டாளோ தமயந்தி?
இதை பிராணி வதைத்தடுப்புக்காரர்கள் கவனிப்பார்களா?
இது போகட்டும் "யானைத்தோலை" உரித்து வதம் செய்த‌ சிவபெருமானை விட்டு வைப்பார்களா என்ன? தெரியவில்லையே.
"பம்மல் கே சம்பந்தம்"படக்கூத்து தான் தற்போதைய கூத்தும்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍===================================================ருத்ரா


On Wednesday, December 30, 2015 at 5:50:50 AM UTC-8, செல்வன் wrote:

ஜல்லிகட்டு மாடுகளை காப்பாற்ற சிறந்தவழி ஜல்லிகட்டை தடுத்து அவற்ரை கசாப்புகடைக்கு அனுப்ப வழிவகுப்பதே என்பதை கண்டுபிடித்த அனிமல் ரைட்ஸ் போராளிகள் 

 வரும் பொங்கல் முதல் மாட்டுக்கார வேலர்கள் என அன்போடு சமூகத்தில் அழைக்கபடுவதாக!

நாலாயிரம் ஆண்டுகளாக மாடுகளை வளர்த்து வரும் தமிழ்விவசாயிகள் மிருகவதை செய்கிறார்கள் என்பதை 21ம் நூற்ரான்டில் கண்டுபிடித்து 2000 ஆண்டு மரபான ஏறுதழுவதை தடை செய்த மிருகவதை சங்கத்தினர் வரும் பொங்கல் முதல் "அறிவில் ஆதவர்கள்" என அன்போடு அழைக்கப்டுவதாக (அறிவில் ஆதவர்கள் என்பதை சேர்த்திபடித்தால் நான் பொறுப்பல்ல :-)

--

Megala Ramamourty

unread,
Jan 9, 2016, 8:51:20 AM1/9/16
to மின்தமிழ்

ஜல்லிக்கட்டுக்குத் தடை: விளையாட்டும் இன அழிவும்


பெருமாள்முருகன் 

மாடு என்னும் சொல்லுக்குச் ‘செல்வம்’ என்று பொருளுண்டு. மாட்டுக்கும் மனிதர்களுக்குமான உறவுகள் பற்றிப் பல செய்திகள் வரலாறு நெடுகிலும் உள்ளன. மாடுகளைப் பழக்கி வேளாண்மையில் ஈடுபடுத்தியதாலேயே மனிதன் நிலைகொள்ள முடிந்தது. மனிதன் நாகரிகம் அடைவதற்கு மாடுகளும் அவற்றின் உழைப்பும் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. பசுக்களும் எருமைகளும்கூட வேளாண் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டன எனினும் அவற்றின் முதன்மையான உற்பத்திச் செயல்பாடு பால் வழங்குவதுதான். இன்றைக்கும் பால் பெரும் விற்பனைப் பொருள்களுள் ஒன்று.

எருமைக் கிடாக்கள் உழவுக்கு இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றன. எனினும் உழவு, ஏற்றம், வண்டி, தாம்பு முதலிய வேலைகளுக்குக் காளைகளே ஏற்றவை. காயடிக்கப்பட்டபின் எருது என்னும் பெயர் பெறும் அவற்றின் உழைப்பை எல்லாக் காலத்திலும் பயன்கொண்டதோடு போற்றியும் வந்திருக்கிறது மனித சமூகம். பதின்பருவத்து ஆண்மகனைக் காளை, மிடல், ஏறு என்றெல்லாம் அழைப்பதுண்டு. மாட்டு மந்தையின் அளவை வைத்து ஒரு குழுவின் செல்வத்தை அளவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. ஒரு குழு மற்றொரு குழு வோடு போர் தொடங்குகிறது என்றால் முதலில் மாட்டு மந்தைகளைக் கவர்ந்து வருவது மரபு.

போர் பற்றிய புறப்பொருள் இலக்கணத்தில் முதல் திணை வெட்சி. ‘வெட்சி நிரை கவர்தல்.’ அதாவது வெட்சிப்பூவைச் சூடிச் சென்று ஆநிரைகளைக் (மாட்டு மந்தை) கவர்ந்து வருதலை விவரிக்கும் திணை இது. ஆநிரை மீட்டல் கரந்தைத் திணை. மாடுகளைக் கவர்ந்து வருவது, அவற்றை அனைவருக்கும் பகிர்ந்து வழங்குவது, அவற்றை மீட்பது எனப் பல துறைகள் புறப்பொருள் இலக்கணத்தில் உண்டு. கன்றுகளாகத் துள்ளித் திரியும் மாடுகளை வேலைகளுக்குப் பழக்குவது அருங்கலை. அதுவும் பாய்ச்சல் மாடுகளாக இருப்பவற்றைப் பழக்கப் பெரும்பிரயத்தனம் தேவை. பலரது உதவியும் உழைப்பும் வேண்டும். கி.ராஜநாராயணனின் ‘கோபல்லபுரம்’ நாவலில் காட்டு மாடு ஒன்றைப் பிடிப்பதும் அவற்றை வேலைகளுக்குப் பழக்குவதுமாகிய நிகழ்ச்சி வருகிறது. கந்தர்வனின் ‘கொம்பன்’ என்னும் சிறுகதையில் கிடையில் சுதந்திரமாகத் திரியும் கொம்பன் மாடுகளைப் பிடித்து வந்து உழவு வேலைகளுக்குப் பழக்குவது தொடர்பான அரிய காட்சிச் சித்திரம் உள்ளது.

மாடுகளின் துள்ளலை அடக்கி அவற்றை வேலைகளுக்குப் பயன்படுத்துவதை ஒரு விளையாட்டாக்கிய செயல்தான் ‘ஏறு தழுவுதல்.’ ஆடுமாடுகள் வளர்ப்பதையே தம் தொழிலாகக் கொண்டிருந்தது முல்லை நிலம். இங்கு குறைவான அளவிலேயே உழவுத்தொழில் நடைபெறும். பால், தயிர், மோர் ஆகியவை பண்டமாற்று விற்பனைப் பொருளாக இருந்தமைக்குச் சங்க இலக்கியச் சான்றுகளே உண்டு. மாடு வளர்ப்பையே தம் பிரதான தொழிலாகக் கொண்ட முல்லை நிலத்தில்தான் ‘ஏறு தழுவுதல்’ என்னும் வீர விளையாட்டு நடந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் ஒன்றாகிய கலித்தொகையின் ‘முல்லைக்கலி’ பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஏறு தழுவுதலை விவரிக்கின்றன. அவற்றில் காளைகளின் வகைகள், அவற்றின் சீற்றம், காளைகளைத் தழுவிப் பிடிக்கும் ஆண்களின் வீரம் ஆகியவை பேசப்பட்டுள்ளன.

காளைகளோடு போராடி உயிர் துறப்பது வீரமாகக் கருதப்பட்டுள்ளமையையும் காண முடிகின்றது. காளையை அடக்கி வீரத்தை நிறுவுபவனையே முல்லை நிலத்துப் பெண் மணம் செய்துகொள்வாள். ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்பது முல்லைக்கலிப் பாடலில் வரும் புகழ்பெற்ற அடிகள். ‘எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்’ என ஏறு தழுவுதல் நடக்கும் களம் பற்றிய சித்திரமும் வருகின்றது. ஏறு தழுவும் களத்தில் புகும் மாடுகளைப் பற்றிய வருணனைகள் மிகச் சிறப்பாக அப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. ‘நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவை’ என்கிறது ஒரு பாடல். தமிழ் மரபு, பண்பாடு சார்ந்த பெரும்பதிவைக் கொண்டிருக்கும் கருவூலம் இந்தப் பாடல்கள்.

இதன்பின் இலக்கியப் பதிவுகள் இல்லை என்றாலும் ஏறு தழுவுதல் நடந்தமையைக் காட்டும் பருண்மைச் சான்றுகளாக நடுகற்கள் விளங்குகின்றன. வீரப் போர் புரிந்து இறந்தவனுக்கு எடுத்து வழிபடப்படுவது நடுகல். இவ்வழிபாடே மக்கள் தெய்வங்களாகக் காடுமேடுகளில் எல்லாம் கோயில்களாகப் பரவிக் கிடக்கின்றது. எதிரியோடு போராடி மாண்டவனுக்கு மட்டுமல்ல, விலங்குகளோடு போராடி வீர மரணம் அடைந்தவனுக்கும் நடுகல் உண்டு. புலியோடு போராடி மாண்டவனுக்கு எடுக்கப்பட்ட கல்லைப் ‘புலிக்குத்திக் கல்’ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதுபோலப் பன்றிகுத்திக் கல், குதிரைகுத்திக் கல், யானைப்போர் நடுகல் எனப் பலவகைகள் உண்டு. அவற்றுள் ஒன்று ‘எருது பொருதார் கல்’ என்பதாகும். இதில் காளையின் கொம்புகளைத் தன் கைகளால் பிடித்துப் போரிடும் வீரனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிற்பங்களைக் கொண்ட நடுகற்கள் தமிழகம் முழுவதும் பரவலாகக் கிடைத்துள்ளன. தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கிடைத்துள்ள கற்கள் குறிப்பிடத்தக்கவை. சில நடுகற்களில் எழுத்துக்களும் உள்ளன. சேலம் மாவட்ட ‘எருது பொருதார் கல்’ ஒன்றில் காணப்படும் வாசகம் இது:

கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடி பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்ட கல்லு.

கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடிப் பட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவன் மகன் பெரியபயல் எடுத்த நடுகல் இது. இதில் ‘எருது விளையாடி’ என்னும் தொடர் இடம்பெறுவது கவனத்திற்குரியது. ஏறு தழுவுதலை ஒரு விளையாட்டாகக் கருதியுள்ளார்கள் என்பதன் சான்று இது. இக்கல் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய கற்கள் வெவ்வேறு நூற்றாண்டைச் சார்ந்தவையாக உள்ளன. ஆகவே ஏறு தழுவும் விளையாட்டு தொடர்ந்து தமிழ் மரபில் நிலவி வந்திருக்கிறது என்பது தெரிகிறது.

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் இத்தகைய விளையாட்டுக்கள் நடந்தமைக்குப் பல சான்றுகள் கண்கூடாகக் கிடைக்கின்றன. ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம், குபராவின் வீரம்மாளின் காளை, சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் ஆகியவை முக்கியமான இலக்கியப் பதிவுகள். திரைப்படங்களில் பல காட்சிகள் உள்ளன. தாய்க்குப் பின் தாரம், வீர பாண்டிய கட்டபொம்மன், முரட்டுக்காளை, விருமாண்டி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. வீரபாண்டிய கட்டபொம்மனில் வரும் ‘அஞ்சாத சிங்கம் என் காளை அது பஞ்சாப் பறக்கவிடும் ஆளை’ என்னும் பாடல், காளையின் வீரத்தைப் புகழ்கிறது. புகைப்படப் பதிவுகளும் பல.

இவ்விளையாட்டு தமிழர் திருநாளாகிய தைப்பொங்கலோடு நெருங்கிய தொடர்புடையது. அறுவடைத் திருநாளாகிய பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வெவ்வேறு வகையில் தொடர்ந்து நடைபெறக்கூடியது. சூரியன் பொங்கலாகிய வாசல் பொங்கல், மாட்டுப்பொங்கல் ஆகியவற்றோடு முடிவுறுவது அல்ல இது. அவற்றைத் தொடர்ந்து வரும் காணும் பொங்கல் என்பதன் பரிமாணங்கள் பல. சென்னையில் உள்ளோர் பெருங்கூட்டமாகக் கடற்கரையில் ஒருநாள் மாலை கூடுவதையே காணும் பொங்கல் என்று இன்று கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது. கிராமங்களில் காணும் பொங்கல் அன்று கூத்து நடத்துவது வழக்கம். அன்று மட்டுமல்ல, தொடர்ந்து பல நாட்கள். மூத்தோர் வழிபாடும் கூத்தும் இணைந்திருக்கும். குலதெய்வ வழிபாடும் கலை நிகழ்ச்சிகளும் இணைந்திருக்கும். பொங்கலும் விளையாட்டுக்களும் பிரிக்க முடியாதவை. இவையெல்லாம் தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும். இவற்றைக் கொண்டாட்ட மாதங்கள் எனலாம். இக்கொண்டாட்டத்தில் மாடுகளுக்கும் பங்குண்டு. ஜல்லிக்கட்டு என்னும் விளையாட்டு மட்டுமே ஊடக வெளிச்சம் பட்டு வெளியுலகிற்குத் தெரிந்திருக்கிறது. மஞ்சு விரட்டு, மாடு விடுதல் முதலிய பல விளையாட்டுக்கள் உள்ளன. இவை பொங்கல் பண்டிகையோடு இரண்டறக் கலந்தவை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமும் மரபும் கொண்ட விளையாட்டு இது என்பதற்குப் பதிவுகளும் நடைமுறைகளும் என இப்படிப் பல சான்றுகள் உள்ளன. இன்று ‘மிருகவதை’ என்னும் ஒற்றை நோக்கில் மட்டும் பார்த்து இவ்விளையாட்டிற்குத் தடை விதித்திருக்கிறது நீதிமன்றம். மிருகவதை என்றால் முதலில் தடை செய்ய வேண்டியவை என ஒரு பெரும்பட்டியலே தரலாம். கோழிப் பண்ணைகள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு நடப்பது என்பதே மறந்துபோன விஷயம். இன்னும் ஆட்டுப் பண்ணைகள், மாட்டுப் பண்ணைகள், முயல் பண்ணைகள், காடைப் பண்ணைகள் எனப் பலவகைப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் வளர்க்கப்படும் மிருகங்களும் பறவைகளும் சுதந்திர வெளியில் நடமாடுகின்றனவா? இறைச்சிக்காக மிருகங்கள் கொல்லப்படும் விதம் பற்றி இந்த மிருக வதைத் தடுப்பாளர்கள் ஏன் பேசுவதில்லை?

பன்றியைக் கொல்வதற்குக் குத்தூசி என்னும் ஒருவகைப் பெரிய ஊசி பயன்படுத்தப்படுகின்றது. பின்னங்காலுக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அவ்வூசியைச் சொருகுகிறார்கள். பன்றி கிட்டத்தட்டப் பத்து நிமிடம் துடிதுடித்துச் சாகிறது. அடிமாடுகளைக் கொல்லப் பலமுறைகள் உள்ளன. எந்த முறையாக இருந்தாலும் மாடு சாவதற்குக் கால் மணி நேரம் ஆகிறது. இவற்றைவிட மாடுகளைப் பயன்படுத்தும் எந்த விளையாட்டும் கொடூரமானதல்ல. பண்ணைகளில் பெருநிறுவனங்கள் முதலீடு செய்யும் காலம் இது. இறைச்சி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகும் முக்கியப் பண்டம். ஆகவே மிருகவதைத் தடுப்பாளர்கள் அவற்றில் தலையிட மாட்டார்கள்.

ஜல்லிக்கட்டில் மாடு எதுவும் கொல்லப்படுவதில்லை. சாராயம் கொடுத்து வெறியேற்றுதல் முதலியவை நடந்திருக்கின்றன. எல்லா இடங்களிலும் அது வழக்கமல்ல. அவற்றை முன்னரே நீதிமன்றம் தடுத்து நிபந்தனைகள் விதித்திருக்கிறது. அந்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்பட்டால் போதுமானது. விபத்துக்கள் நடைபெறுகின்றன என்பதால் நாற்கரச் சாலைகளையும் சுங்கச் சாவடிகளையும் மூடி விடுவார்களா? விபத்துக்களைத் தடுக்க ஆயிரம் யோசனைகள் சொல்லப்படுகின்றன. ஜல்லிக்கட்டிலும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கடுமையாக்கலாமே தவிர அதைத் தடை செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஜல்லிக்கட்டில் மனித உயிர்கள் பறிக்கப்படுகின்றன என்னும் வாதமும் வைக்கப்படுகின்றது. எத்தனையோ விளையாட்டுக்களில் களத்திலேயே வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அடிபட்டிருக்கிறார்கள். அதற்காக அவ்விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டனவா? கிரிக்கெட்டிலோ கால்பந்திலோ ஒரு வீரர் லேசாகக் காயம்பட்டாலே காத்திருக்கும் மருத்துவக் குழு உடனடியாக ஓடிவந்து களத்திலேயே முதலுதவி செய்கிறது. தேவைப்பட்டால் களத்திற்கு வெளியேயும் சிகிச்சை தரப்படுகின்றது. ஜல்லிக்கட்டு நடக்கும்போது அவ்விதம் மருத்துவக் குழுக்கள் தயாராக வைக்கப்பட வேண்டும் என்னும் விதி அமல்படுத்தப்பட்டால் போதாதா? பணக்கார விளையாட்டுக்களுக்கு ஒரு நியதி, சாதாரண மக்கள் விளையாட்டுக்களுக்கு வேறு நியதியா?

ஜல்லிக்கட்டில் மாடும் மனிதனும் தொடர்புபட்டிருக்கிறார்கள். இந்தத் தொடர்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே தொடங்கிய பந்தம். அதன் எச்சமே இன்று விளையாட்டு வடிவில் உள்ளது. ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, மாட்டோடு தொடர்புடைய விளையாட்டுக்கள் பல. மஞ்சு விரட்டு என்பது ஊரில் உள்ள மாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைச் சுதந்திர வெளியில் திரிய விடுவதாகும். பாய்ச்சல் மாடுகள் அதில் பயன்படுத்தப்படுவதில்லை. வட மாவட்டங்களில் இவ்விளையாட்டு உயிர்ப்புடன் நிலவுகின்றது. ஊருக்குள்ளும் காட்டுப்பாதைகளிலும் ஓடும் மாடுகளும் அவற்றை விரட்டிச் செல்லும் மக்களும் கொண்டாட்டத்தில் இணைகிறார்கள். மாடுகள் வயல்களிலும் தீவனப் போர்களிலும் சென்று தஞ்சமடைகின்றன. அவற்றை உரிமையாளர்கள் தேடிச் சென்று பிடித்து வருகிறார்கள். கயிற்றால் கட்டப்பட்டுக் கிடக்கும் மாடுகளுக்கு ஒருசில மணி நேரம் சுதந்திரம் தரும் விளையாட்டு இது.

நாமக்கல், சேலம் மாவட்டங்களில் மாடு விடுதல் என்னும் விளையாட்டு நடைபெறுகின்றது. இது மாடுகளுக்கு இடையே நடைபெறும் ஓட்டப் பந்தயம் போன்றது. ஒவ்வொரு ஊர் சார்பாக வளர்க்கப்படும் மாடுதான் இந்தப் பந்தயத்தில் பங்கு பெறுகின்றது. அம்மாடு வருடம் முழுக்க எந்தக் கட்டுப்பாடும் இன்றி வளர்கிறது. வரிசையாக நிறுத்தப்படும் வெவ்வேறு ஊர் மாடுகள் ஒரே சமயத்தில் சீழ்க்கை ஒலியுடன் விரட்டப்படுகின்றன. அவற்றுள் எந்த மாடு முதலில் வருகின்றதோ அதற்குப் பரிசு தரப்படுகிறது. இந்தப் போட்டி ஒவ்வொரு ஊரிலும் ஒரு நாள் எனக் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தப்படுகின்றது. அறுவடை முடிந்து மக்கள் மகிழ்ச்சியாக விளையாடி மகிழும் விளையாட்டுக்கள் இவை. இவற்றில் பயன்படுத்தப்படும் மாடுகள் போற்றப்படுகின்றன. அவற்றைப் பேணி வளர்க்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்குப் பயன்படுத்தப்படும் மாடுகளின் வளர்ப்பும் அப்படித்தான். விளையாட்டுக்களுக்கென மாடு வளர்ப்பது என்பதே தனிக்கலை. அவற்றுக்கு என்ன வகைத் தீனி தர வேண்டும் என்பது தொடங்கி உடற்பயிற்சிகள் வரை பலவகைப் பேணல்கள் உண்டு. இப்போது விதிக்கப்பட்டிருக்கும் தடை மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள காலகாலத்திற்குமான பந்தத்தை அறுக்கும் முயற்சி. புராணக் கதை எதற்கும் உட்படாமல் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகையின் உயிர்ப்பைப் பறிக்கும் செயல்.

தமிழ்நாட்டு மாட்டினங்கள் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்டவை. நாட்டு மாடுகள் எனப்படும் இவை இன்று உயிர்த்திருப்பதே ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுக்களில்தான். நாமக்கல் மாவட்டத்தில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரபலம். இந்த ஜல்லிக்கட்டில் காங்கேயம் காளைகளே பெரிதும் பங்கேற்கின்றன. கும்பகோணம் வகை, அந்தியூர் வகை, நாட்டு மாடு என்றே அழைக்கப்படும் ஓர் இனம் ஆகியவையும் பங்கேற்கின்றன. இவற்றின் கொம்பு, திமில், உருவம் ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு. மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் புலிக்குளம், மலைமாடு, கும்பகோணம், உம்பலாச்சேரி ஆகிய இனங்கள் பங்கேற்பதாக அறிகிறேன்.

ஜல்லிக்கட்டு இல்லையென்றால் இந்த இனங்களின் நிலை என்ன? அழிவுதான். உழவு வேலைகளுக்கு இன்று மாடுகள் பயன்படுத்தப்படுவது அரிது. மாட்டு வண்டிகளும் அருகி வருகின்றன. பாலுக்கெனக் கலப்பினங்களும் வெளிநாட்டு இனங்களும் வளர்க்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு முதலிய விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டதும் நாட்டு மாட்டினங்கள் சந்தைகளில் அடிமாடுகளாக விற்பனை செய்யப்படும் செய்திகள் வருகின்றன. அந்தியூர் மாட்டுச் சந்தை, மோர்ப்பாளையம் மாட்டுச் சந்தை முதலிய மாட்டுச் சந்தைகளும் இனிக் களையிழந்து போய்விடும். மாடுகளின் சுழிகளை வைத்தும் வால், திமிலை வைத்தும் அவற்றின் தகுதியும் தரமும் நிர்ணயிக்கப்படுதலாகிய மரபும் முடிந்துவிடும். இவ்விதம் தமிழினம் காலகாலமாக வளர்த்துப் பயன்பெற்று வந்த நாட்டு மாட்டினங்களின் அழிவை இந்தத் தடை விரைவுபடுத்துகின்றது.

உலகமயமாக்கல் காலத்தில் உலகின் பல்வேறு மனித இனங்கள் தம் பண்பாட்டு வேர்களைக் கண்டறிந்து போற்றிப் பாதுகாக்கும் உத்வேகம் பெற்றுள்ளன. ஜல்லிக்கட்டுத் தடைச் சட்டத்தின் மூலமாகத் தம் பண்பாட்டை வெகுவேகமாகப் பறி கொடுக்கும் இனமாகத் தமிழினம் முதன்மை பெறுகின்றது.


(நன்றி: காலச்சுவடு)


(மண்ணின் மைந்தரும் பிரபல எழுத்தாளருமான பெருமாள் முருகன் சொல்லுறதைக் கேளுங்கப்பா!  கண்மூடித்தனமா, மரபு விளையாட்டுக்கெல்லாம் தடைவிதிச்சுட்டு, டீவி முன்னாடி உக்காந்துகிட்டு எப்போதும் கிரிக்கெட் பாத்துக்கிட்டு இருந்தீங்கனா அப்புறம் தமிழ்நாட்டில் மாடும் இருக்காது...நம் இனத்தில் அடையாளமும் இருக்காது.)

செல்வன்

unread,
Jan 9, 2016, 1:31:16 PM1/9/16
to mint...@googlegroups.com


On Jan 8, 2016 10:20 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> இவ்வளவு நடக்கிறது ....
> ஆனால் ஒருவர் கூட மாட்டிடம் போய் உனக்கு சம்மதமா, உன்னை விரட்டி விடுவோம், பயமுறுத்துவோம், பத்து பேர் மேலேறி உன்னை அமுக்குவோம்   உனக்கு சம்மதமா,
> என யாருக்குமே மாட்டையும் ஒருவார்த்தை கேட்போமே, சம்பந்தப் பட்டவரின் கோணம் என்ன என்று கேட்காததில் எனக்கு  ஆதங்கமே.... 


கோழியை பர்மிசன் கேட்டுட்டா குழம்பு வெக்கறாங்க? :-)

Reply all
Reply to author
Forward
0 new messages