நாலடியார்

3,857 views
Skip to first unread message

சீனுத்தாத்தா

unread,
May 22, 2011, 11:37:52 AM5/22/11
to மின்தமிழ், see...@gmail.com
திரு சைன முனிவர் இயற்றிய நாலடியார் பாடல்களை
திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளையவர்கள்
வழங்கிய் உரைகளுடன் வெளியிடுவதற்கு ஆவலுள்ளவனாய் இருக்கிறேன்.
குழுவினரின் வரவேற்பு கிடைக்குமென் அறிந்து கொண்டவுடனே நான் துடங்கி
விடுவேன்.

நன்றியுடனும் ஆவலுடனும் விடை பெருகிறேன்.
வி. சீனிவாசன் (சீனுத்தாத்தா)

Innamburan Innamburan

unread,
May 22, 2011, 11:49:41 AM5/22/11
to mint...@googlegroups.com
வாங்கோ! நாங்கள் காத்திருக்கிறோம்.


2011/5/22 சீனுத்தாத்தா <see...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
May 22, 2011, 8:00:55 PM5/22/11
to mint...@googlegroups.com
அவசியம் செய்யுங்கள்.

காத்திருக்கிறோம்.

நா.கண்ணன்

2011/5/23 சீனுத்தாத்தா <see...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

சீனுத்தாத்தா

unread,
May 24, 2011, 5:25:31 PM5/24/11
to மின்தமிழ்
பதினெண் கீழ்க்கணக்கு

சைன முனிவர் இயற்றிய

நாலடியார்

திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளையவர்கள்
(இளவழகனார்)
உரை


கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.

(பொருள்.)வான்இடு வில்லின்-மேகத்தால் உண்டாகின்ற இந்திரவில்லைப்போல, வரவு
அறியா வாய்மையால் - பிறப்பின் வருகையை அறிந்துகொள்ளக்கூடாத உண்மையினால்,
யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை
நிறைவேறுக என்று கருதி, கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில்
படிதலில்லாத அருட்கோல இறைவனை, நிலம் சென்னி உற வணங்கி - தரையில் எமது
முடி பொருந்தும்படி தொழுது, சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்.

(கருத்து.)பிறப்பின் தோற்றம் முதலியவற்றை நாம் முழுதுந் தெரிந்துகொள்ளக்
கூடாமையால், விரும்பும் நலங்களின் பொருட்டு இறைவனைத் தொழுது
அடைக்கலமாவோம்.

பதிப்புரை

தண்டமிழ் மக்கள் கண்ட நூல்களுள் சங்க மேறிச் சிறப்புப் பெற்றன பற்பல.
அவற்றுள் மாண்டன போக இன்றளவும் நின்று புகழொளி வீசுவன சிற்சில. அவை
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பன. இவற்றுள்,
கீழ்க்கணக்கில், ஒருசில பிற்காலத்தன எனக் கருதப்படுமாயினும் பெரும்பாலன
சங்க காலத்தனவே.

கீழ்க்கணக்காவன குறைந்த அடிகளுடையன வாய், வெண்பா யாப்பினவாய், அறம்
பொருளின்பங்கள் நுவன்று, அம்மை முதலிய அழகுகளுடையவாய் வருவன. இவற்றில்
பாக்கள் ஐம்பதின் மிக்கும் ஐந்நூற்றிற் குறைந்து வருமென்பர். களவழி
முதலிய சில ஐம்பதிற் குறைந்தும், குறள் ஐந்நூற்றின் மிக்கும் வந்தன.

நானூறு பாக்கள் கொண்டவற்றை அகநானூறு புறநானூறு என வழங்கும் மரபுபற்றி,
நாலடியாலான இந்நானூறு பாக்களை நாலடி நானூறு என வழங்கினர். அது சுருங்கி
நாலடி என்றும், உயர்வு சிறப்பு விகுதிபெற்று நாலடியார் என்றும்
வழங்கப்பெறும்.

இந்நூல் சொன்னயம் பொருணயஞ் சிறந்து விளங்குவது ; நீதி நூல்களுள்
தலைசிறந்து உலகுக்கொல்லாம் பொது நூலாக விளங்குந் திருக்குறளுக்கு
அடுத்தபடியிற் பெருமையுற்று விளங்குவது.

"பழகு தமிழ்ச், சொல்லாருமை நாலிரண்டில்," ஆலும் வேலும் பல்லுக்குறுதி,
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " என்பன பழமொழிகள். சங்க நூல்களின்
உரையாசிரியர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார்
முதலியோரால் இந்நூல் மேற்கோளாக எடுத்தாளப்படும் பெருமையினையுடையது.

சிற்சில அதிகாரங்களில் அவ்வதிகாரங்கட்குப் பொருத்தமிலாப் பாக்கள்
கலந்திருத்தலானும், கூறிய கருத்தே பின்னுங் கூறியது கூறலாக வருதலானும்,
இன்னும் இவைபோன்ற பல்லேதுக்களானும் இந்நூல் ஒருவரான் இயற்றப்படாது
பல்லோராற் பாடப்பட்டுப் பின்னொருகால் மற்றோரால் தொகுக்கப்பட்டிருத்தல்
வேண்டும் என்று கொள்ளக்கிடக்கின்றது. மேலும், தமிழ் கூறு நல்லுலகத்து
ஆங்காங்கே வழக்கும் நீதிகளை முதலாகக்கொண்டு பாடப்பட்டதெனக் கொள்ளக்
கிடக்கின்றதன்றி, இஃதொரு மொழிபெயர்ப்பு நூல் என்று கொள்வதற்கு யாதொரு
சான்று மின்றென்க.

இந்நூலில் பெருமுத்தரையர் வள்ளன்மை பற்றிய குறிப்புக்கள் வந்துள்ளமையின்
பெருமுத்தரையர் காலத்திலேனும், அதற்குச் சற்றுப் பின்னரேனும் இந்நூலின்
பாக்கள் பாடப்பட்டிருத்தல் வேண்டும். பெருமுடத்தரையர் என்பார்
பாண்டியர்க் கடங்கிருந்த சிற்றரசராவர் ; பாண்டியரையே அப்பெயர்
குறிக்குமென்று கூறுவாருமுளர்.

இந்நூலைப் தொகுத்து ஓருரையும் இயற்றினார் பதுமனார் என்பர். அவ்வுரை
கிடைத்திலது.

இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்றாகப்
பகுக்கப்பட்டுள்ளது. அறனவாது ஆன்றோர்களால் விதித்தன செய்தலும் விலக்கியன
ஒழிதலுமாம். மக்களின் புற உலக வாழ்க்கைக்கு வேண்டிய பல்வகைப்பட்ட
பொருள்களையும் விளக்கிக் கூறும் பகுதி பொருட்பால் எனப்பட்டது. பல்வகைப்
பொருளும் சிறப்புறுதற்கு அரசியலமைப்பே பெரிதும் ஏதுவாதலின் இஃது
இப்பகுதிக்கண் விரித்து விளக்கப்படுகின்றது. பொருளாலடையும் காதலின்பம்
காமத்துப்பாலில் விளக்கப்படுகின்றது. காதலின்பமாவது ஒத்த தலைவனுந்
தலைவியுங் கூடியடையும் இன்பம்.

இந்நூலுக்கு உரைகள் பல இருப்பினும் அவை அயல் மொழி கலவாதும், பாக்களின்
போக்குக் கொப்ப முரண்பாடின்றியும் இல்லாமையோடு சொற்களை உடைத்து வீணான
கொண்டு கூட்டுக்களுடனும் உள்ளன. இத்தகைய குறைபாடுகளின்றிக் குறளுக்குப்
பரிமேலழகரால் எழுதப்பட்ட உரையையொப்ப இந்நூலுக்கும் திட்ப நுட்பஞ் செறிந்த
ஓருரை இன்றியமையாத தாயிற்று.

இத் தேவையை முற்றச் செய்வான் வேண்டிக் கழகப் புலவர் திரு.
இளவழகனாரவர்களால் உரை எழுதப்பெற்று இப்போது இந்நூல் வெளியிடப்
பெறுகின்றது. தமிழுலகம் இதனைப் போற்றிப் பயனெய்தும் என நம்புகின்றோம்.

--சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்

செல்வம் நிலையாமை

அறத்துப்பால்
(அறத்தின் பகுப்பு உணர்த்துவது, அறம், இம்மை மறுமை வீடு என்னும் மூன்றுந்
தருவதனால், இது முதலில் நின்றது).
1. செல்வம் நிலையாமை
[செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது]

1 அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.

(பொ-ள்.) அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள்,
அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி
தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் -
ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர்,
எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று
அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று.

(க-து.) செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக்
கருதற்குரியதன்று.

(வி-ம்.) ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல்
- மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என
வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால்
அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல்
வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை
தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு
உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.

2 துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

(பொ-ள்.) துகள்தீர் பெரு செல்வம் - குற்றமற்ற சிறந்த செல்வம்,
தோன்றியக்கால் - உண்டானால், தொட்டு - அது தொடங்கி, பகடு நடந்த கூழ் - ஏர்
நடந்ததனால் உண்டான உணவை, பல்லாரோடு உண்க - விருந்தினர் முதலிய பலரோடுங்
கூடி உண்ணுக, ஏனென்றால் ; செல்வம் - பொருள், அகடு உற யார்மாட்டும்
நில்லாது - உறுதி பொருந்த யாரிடத்திலும் நிலைத்திராமல் , சகடக்கால்
போலவரும் - வண்டியுருளைபோல மாறிப் புரளும்.

(க-து.) செல்வம் யாரிடத்திலும் நிலைத்திராமையால், அது தோன்றினால் உடனே
பலர்க்கும் அளித்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

(வி-ம்.) பொருள் நல்ல வழியில் வரவேண்டும் என்பது தோன்றத் ‘துகள் தீர்'
என்றும், செல்வம் தோன்றுவது உறுதியன்று என்பது தோன்றத் ‘தோன்றியக்கால்'
என்றுங் கூறினார். பெருஞ்செல்வம் என்பது இங்கே மேன்மையான செல்வம் ;
வேளாண்மையால் வருகின்ற செல்வமே பெருஞ்செல்வம் என்பது குறிப்பு.
தோன்றியக்கால் ஒற்று மிகுந்தமையால் வினையெச்சமாகப் பொருள் கொள்ளப்படும்.
பகடு - கடா ; இங்கே அது பூட்டிய ஏர். நடந்த என்னும் பெயரெச்சம்
காரணப்பொருளில் வந்தது ; ஆகவே, ‘நடந்ததனால் உண்டான' என்று உரைத்துக்
கொள்ள வேண்டும். பல்லார், பல பிரிவினர் என்பது காட்டும் ; அவர்
விருந்தினர், சுற்றத்தார், நண்பர் முதலியோர், அகடு - உறுதி. யார்மாட்டும்
என்றது. எவ்வளவு விழிப்புடையவரிடத்தும் என்பது. நில்லாது - நில்லாமல்,
வரும் - கை மாறி மாறி வரும்.

(தொடரும்)
பி.கு. "மின் தமிழில்' பரிசுரிப்பது இது தான் எனது முதல்
முயற்சி. இப்படியே மேலும் துடர்ந்தால் பரவாயில்லை என்று குழு அன்பர்கள்
அறிவித்தால் நன்றியுள்ளவன் ஆவேன். யாவரும் அறிவர், மொத்தம் நானூறு
பாடல்கள் (நான்கு அடி கொண்டது) உளன.

rajam

unread,
May 24, 2011, 10:05:24 PM5/24/11
to mint...@googlegroups.com, சீனுத்தாத்தா
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். மிக நல்ல முயற்சி. கட்டாயம் தொடர்ந்து செய்யவேண்டியது. என்னைப்போல் சிலருக்காவது மிகவும் பயன்படும்!
400 பாடல் + உரை எல்லாமாகச் சேர்ந்து தட்டெழுதக் காலமும் சிரமமும் நிறைய; அது தங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் இருக்கும் இடத்தில் மின்தமிழ் நண்பர்கள் -- மதுரை சந்திரா, திரு தி.வா, போன்றவர்கள் இருந்தால் scan செய்யலாமே. உங்களுக்குத் தொல்லை குறையுமே, இல்லையா?
இளவழகனார் உரையைக் கழகத்தார் பதிப்பிட்ட காலத்தையும் குறிக்க முடியுமா? நன்றி.

அன்புடன்,
ராஜம்

Banukumar Rajendran

unread,
May 24, 2011, 11:30:20 PM5/24/11
to mint...@googlegroups.com
பேரன்புடையீர்,

வாழ்த்துக்கள்! நற்பணி!!

பத்மாவதியம்மன் துணையிருப்பாள்!



இரா.பானுகுமார்,
சென்னை.




2011/5/25 சீனுத்தாத்தா <see...@gmail.com>

ganesan theiva kannaiyan

unread,
May 24, 2011, 7:45:44 PM5/24/11
to mint...@googlegroups.com
2011/5/25 சீனுத்தாத்தா <see...@gmail.com>
                      பதினெண் கீழ்க்கணக்கு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
அருமையான முயற்சி !

வாழ்த்துக்கள்
--
Er.Ganesan.T.K
Coimbatore

Innamburan Innamburan

unread,
May 25, 2011, 1:21:25 AM5/25/11
to mint...@googlegroups.com
மிக்க நன்றி,ஐயா, படித்தேன். பயன் பெற்றேன். மாணவர்களுக்கு முடிந்தவரை படித்து சொல்லிக்கொடுக்கலாம். நாலடி எடுத்து வைத்துவிட்டீர்கள். நூறு வ்ரை எங்களை இழுத்திச் செல்லவும்.
இன்னம்பூரான்

2011/5/25 ganesan theiva kannaiyan <sivagam...@gmail.com>

Subashini Tremmel

unread,
May 25, 2011, 3:18:29 AM5/25/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
உங்கள் முயற்சிக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும். அருமையான பணி. தொடருங்கள் சீனு தாத்தா. நான் அவ்வப்போது இவற்றை தொகுத்து வைக்கின்றேன். முடிந்ததும் முழு மின்னூலாக்கி வைக்கலாம்.
 
அன்புடன்
சுபா

2011/5/24 சீனுத்தாத்தா <see...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

karuannam annam

unread,
May 25, 2011, 3:45:27 AM5/25/11
to mint...@googlegroups.com
பெருமைக்குரிய ஐயா
தங்களின் பெரும் முயற்சிக்குக் தலை வணங்குகிறேன்.
நாலடியாருக்கு இளவழகனார் உரை கீழ்க்கண்ட சுட்டித் தொடர்பில் முழுமையும் இருந்தாலும் தாங்கள் பகுதியாக வழங்கும்போது படிப்பதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் ஏதுவாக உள்ளது. தங்கள் பணிக்கு மீண்டும் போற்றிகள்.
நன்றியுடன்
சொ.வினைதீர்த்தான்.
   

தொடர்பு சுட்டி:
 http://www.tamilvu.org/library/libindex.htm    தமிழ் கல்விக் கழகம் (முந்தைய தமிழ் இணையப் பல்கலைக் கழகம்) நூலகம் பகுதி. 

Geetha Sambasivam

unread,
May 25, 2011, 4:33:14 AM5/25/11
to mint...@googlegroups.com, சீனுத்தாத்தா
சீனு மாமா,

எனக்கு அனுப்பி வையுங்கள்.  தட்டச்சுப் பணியை நான் செய்து தருகிறேன்.  மேலும் புத்தகம் மின்னாக்கமும் இப்போது கற்றுக்கொண்டிருப்பதால் அதையும் செய்யப் பார்க்கிறேன்.  தங்கள் உடல் நலம் கருதி,

கீதா சாம்பசிவம்.

2011/5/25 சீனுத்தாத்தா <see...@gmail.com>
                      பதினெண் கீழ்க்கணக்கு

                 சைன முனிவர் இயற்றிய

                              நாலடியார்

        

Innamburan Innamburan

unread,
May 25, 2011, 4:42:18 AM5/25/11
to mint...@googlegroups.com
ஏற்கனவே http://www.tamilvu.org/library/libindex.htm இருப்பதை மறுபடியும் செய்யவேண்டாமே. சீனுத்தாத்தா தவணைமுறையில் நம்மை படிக்க வைக்கிறார்.


2011/5/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

சீனுத்தாத்தா

unread,
May 25, 2011, 2:03:28 PM5/25/11
to மின்தமிழ்

"சீனுத்தாத்தா தவணைமுறையில் நம்மை படிக்க வைக்கிறார்" என்பது முற்றிலும்
உண்மை. அப்படியே மேலும் தொடரலாமா, அல்ல்து விட்டு விடட்டுமா?
யாருக்கும் என்னால் கால விரயம் எல்லாம் வேண்டாம்.
மன்னிக்க வேண்டும்.

On May 25, 1:42 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> ஏற்கனவேhttp://www.tamilvu.org/library/libindex.htmஇருப்பதை மறுபடியும்


> செய்யவேண்டாமே. சீனுத்தாத்தா தவணைமுறையில் நம்மை படிக்க வைக்கிறார்.

> *இ
> *
> 2011/5/25 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>> சீனு மாமா,


>
> > எனக்கு அனுப்பி வையுங்கள்.  தட்டச்சுப் பணியை நான் செய்து தருகிறேன்.  மேலும்
> > புத்தகம் மின்னாக்கமும் இப்போது கற்றுக்கொண்டிருப்பதால் அதையும் செய்யப்
> > பார்க்கிறேன்.  தங்கள் உடல் நலம் கருதி,
>
> > கீதா சாம்பசிவம்.
>
> > 2011/5/25 சீனுத்தாத்தா <see...@gmail.com>
>
> >>                        பதினெண் கீழ்க்கணக்கு
>
> >>                  சைன முனிவர் இயற்றிய
>
> >>                               நாலடியார்
>
> >> --
>
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Innamburan Innamburan

unread,
May 25, 2011, 2:28:23 PM5/25/11
to mint...@googlegroups.com
தொடருங்கோ, சார்.

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
May 25, 2011, 3:23:55 PM5/25/11
to mint...@googlegroups.com
அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய திரு சீனு மாமா அவர்களுக்கு  நமஸ்காரம்
 
மகிழ்ச்சியாய் உள்ளது  தொடருங்கள்
 
நானூறு பாடல்களையும் எழுதுங்கள் படிக்க ஆவலாய் உள்ளோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/5/25 சீனுத்தாத்தா <see...@gmail.com>
                      பதினெண் கீழ்க்கணக்கு

N. Ganesan

unread,
May 25, 2011, 4:26:06 PM5/25/11
to மின்தமிழ்

On May 24, 9:05 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> மதிப்பிற்குரிய ஐயா,...
>

>
> வணக்கம். மிக நல்ல முயற்சி.  
> கட்டாயம் தொடர்ந்து  
> செய்யவேண்டியது.  
> என்னைப்போல்  
> சிலருக்காவது மிகவும்  
> பயன்படும்!
>
> 400 பாடல் + உரை எல்லாமாகச்  
> சேர்ந்து தட்டெழுதக்  
> காலமும் சிரமமும் நிறைய;  
> அது தங்களுக்கும்  
> தெரியும் என்று  
> நினைக்கிறேன்.
>
> நீங்கள் இருக்கும்  
> இடத்தில் மின்தமிழ்  
> நண்பர்கள் -- மதுரை  
> சந்திரா, திரு தி.வா,  
> போன்றவர்கள் இருந்தால்  
> scan செய்யலாமே.  
> உங்களுக்குத் தொல்லை  
> குறையுமே, இல்லையா?
>
> இளவழகனார் உரையைக்  
> கழகத்தார் பதிப்பிட்ட  
> காலத்தையும் குறிக்க  
> முடியுமா? நன்றி.
>

1964.

Cheenu Thatha is putting the text from Tamil Virtual University,
which is changing its contents to Unicode for about 2 years now.
Hopefully, as Govt. works go, we may have Ilavazakan's urai
in TVU site in a few years' time. (by 2020?)

Anbudan
N. Ganesan

> > குறிக்குமென்று  - Hide quoted text -
>
> - Show quoted text -

karuannam annam

unread,
May 26, 2011, 12:36:38 AM5/26/11
to mint...@googlegroups.com
The text is very much available in the Tamil Virtual University web in Unicode. http://www.tamilvu.org/library/libindex.htm
Regards
S.Vinaitheerthan

Innamburan Innamburan

unread,
May 26, 2011, 12:57:07 AM5/26/11
to mint...@googlegroups.com
ஏன் துணுக்கு, துணுக்காக அவர்கள் தருகிறார்கள்? ஒரு பீ.டி.எஃப் நூலாக, யூனிகோடில் தரலாகாதா?

கி.காளைராசன்

unread,
May 26, 2011, 1:21:00 AM5/26/11
to mint...@googlegroups.com
ஐயா சீனு அவர்களுக்கு வணக்கம்.

நான் பள்ளியில் முழுமையாகப் படிக்காத பாடங்களில் இந்த நாலடியாரும் உண்டு.
தாங்கள் தொடர்ந்து எழுதினால் என்போன்றோர் தினம் தினம் படித்துப்
பயன் பெறுவோம். எனவே தொடர்ந்து எழுதிட வேண்டுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

சீனுத்தாத்தா

unread,
May 26, 2011, 4:37:11 AM5/26/11
to மின்தமிழ்
எனதன்பிற்கும் பெருமதிப்பிற்குமுறிய உண்மையிலேயே இயல்பாய்த் தனி திறமை
வாய்ந்த எழுத்தாளர் தமிழ்த் தேனீ அவ்ர்கள் "தொடருங்கள்" என்று
உற்சாக்ப்படுத்திய பிறகு எனக்குக் கவலையில்லை. அவர்களுக்கு எனது
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஆவலுடன் தொடருவேன்.

சீனுத்தாத்தா

unread,
May 26, 2011, 4:53:34 AM5/26/11
to மின்தமிழ்
எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய "இளைய சகோதரி' கீதா சாம்பசிவ்ம
அவர்கள் 'புத்தகம் மின்னாக்கத்தை'ப் பற்றி எழுதியதின் பொருள் இந்த
மடையனுக்கு இப்பொழுது தான் புரிந்தது. இதுவரை 'வெப்சைட்டில்' (website)
வந்திராத தமிழ் படைப்புகளைப் 'மின்னாக்கம்' செய்து கொடுக்கிறேன் என்று
பெருந்தன்மையுடன் கூறியிருக்கிறார். நான் வெட்கத்துடன் கூனி குனிந்து
கூறுகிறேன் (முன்பே அறிவித்து விட்டேன் என நினைக்கிறேன்) தமிழ் இணையப்
பலகலைக் கழகத்திலிருந்து தான் நாலடியார் பாடல்களை எடுத்துப் பரிசுரிக்கத்
துடங்கினேன்.

ranganathan venkatachariar

unread,
May 25, 2011, 6:34:46 PM5/25/11
to mint...@googlegroups.com
mikavoom நன்றாக உள்ளது

ரங்கநாதன் இங்கு

2011/5/25 ganesan theiva kannaiyan <sivagam...@gmail.com>
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
May 26, 2011, 9:53:41 AM5/26/11
to மின்தமிழ்

On May 26, 12:21 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> ஐயா சீனு அவர்களுக்கு வணக்கம்.
>
> நான் பள்ளியில் முழுமையாகப் படிக்காத பாடங்களில் இந்த நாலடியாரும் உண்டு.
>  தாங்கள்  தொடர்ந்து எழுதினால் என்போன்றோர் தினம் தினம் படித்துப்
> பயன் பெறுவோம்.   எனவே தொடர்ந்து எழுதிட வேண்டுகிறேன்.
>

சீனு தாத்தா தொடர்ந்து பல நூல்களை அளிக்க வேணும்.

அன்பன்
நா. கணேசன்


> அன்பன்
> கி.காளைராசன்
>
> --

> திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,http://www.freewebs.com/thirupoovanam/

N. Ganesan

unread,
May 26, 2011, 9:56:25 AM5/26/11
to மின்தமிழ்

On May 25, 11:57 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:


> ஏன் துணுக்கு, துணுக்காக அவர்கள் தருகிறார்கள்? ஒரு பீ.டி.எஃப் நூலாக,
> யூனிகோடில் தரலாகாதா?
> இன்னம்பூரான்

இதில் ஒரு நன்மை உண்டு. கூகுளில் தேடுவோருக்கு
(உ-ம்: ஒரு வார்த்தை கொடுத்து) அகப்படும்.
பல வருஷங்கள் கழிந்த பின்னும்.

பிடிஎப் (இப்போதைக்கு) கோப்பில் இட்டால்
கூகுளில் சிக்காது.

/க/

Innamburan Innamburan

unread,
May 26, 2011, 10:14:36 AM5/26/11
to mint...@googlegroups.com
பாயிண்ட் மேட். இதுவும் வேணும்; அதுவும் எளிதாகத் தரலாம். சீனுத்தாத்தாவிடம் ஒரு விண்ணப்பம். மூலத்தை சுட்டுவது என்றும் நலம்.
இன்னம்பூரான்
26 05 2011


Venkatram Shrinivas

unread,
May 27, 2011, 5:06:57 PM5/27/11
to மின்தமிழ்
எண்பது வயதான இந்த முதியவன், 'வடி கட்டின முட்டாள்' என்று தன்னையே நொந்து 
கொண்டு குழுவினருக்கும், எனது இளைய சகோதரியாய் நான் பாவிக்கும் திருமதி கீதா
சாம்பசிவம் அவர்களையும் மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டு, நான் நாலடியார் 
பாடல்களைத் துடருகிறேன். முகவுரையையும் வாழ்த்துப் பாடலகளை முதலிலே அனுப்பி 
விட்டேன். அதன் பிற்கு 'செல்வம் நிலையாமை' அதிகாரத்திலிருந்து அரைகுறையாக 
பாடல்களைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆண்டவனை வேண்டிக் கொண்டு நாளைக் காலையில் (28 மே 2011 -பங்களூரு) தொடங்குகிறேன்




2011/5/25 சீனுத்தாத்தா <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
May 28, 2011, 6:41:15 AM5/28/11
to மின்தமிழ்
நாலடியார்

அறத்துப்பால்

(அறத்தின் பகுப்பு உணர்த்துவது, அறம், இம்மை மறுமை வீடு என்னும் மூன்றுந் தருவதனால், இது முதலில் நின்றது).
1. செல்வம் நிலையாமை
[செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது]
1அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.

(பொ-ள்.) அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று.

(க-து.) செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று.

(வி-ம்.) ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.

2 துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

(பொ-ள்.) துகள்தீர் பெரு செல்வம் - குற்றமற்ற சிறந்த செல்வம், தோன்றியக்கால் - உண்டானால், தொட்டு - அது தொடங்கி, பகடு நடந்த கூழ் - ஏர் நடந்ததனால் உண்டான உணவை, பல்லாரோடு உண்க - விருந்தினர் முதலிய பலரோடுங் கூடி உண்ணுக, ஏனென்றால் ; செல்வம் - பொருள், அகடு உற யார்மாட்டும் நில்லாது - உறுதி பொருந்த யாரிடத்திலும் நிலைத்திராமல் , சகடக்கால் போலவரும் - வண்டியுருளைபோல மாறிப் புரளும்.

(க-து.) செல்வம் யாரிடத்திலும் நிலைத்திராமையால், அது தோன்றினால் உடனே பலர்க்கும் அளித்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

(வி-ம்.) பொருள் நல்ல வழியில் வரவேண்டும் என்பது தோன்றத் ‘துகள் தீர்' என்றும், செல்வம் தோன்றுவது உறுதியன்று என்பது தோன்றத் ‘தோன்றியக்கால்' என்றுங் கூறினார். பெருஞ்செல்வம் என்பது இங்கே மேன்மையான செல்வம் ; வேளாண்மையால் வருகின்ற செல்வமே பெருஞ்செல்வம் என்பது குறிப்பு. தோன்றியக்கால் ஒற்று மிகுந்தமையால் வினையெச்சமாகப் பொருள் கொள்ளப்படும். பகடு - கடா ; இங்கே அது பூட்டிய ஏர். நடந்த என்னும் பெயரெச்சம் காரணப்பொருளில் வந்தது ; ஆகவே, ‘நடந்ததனால் உண்டான' என்று உரைத்துக் கொள்ள வேண்டும். பல்லார், பல பிரிவினர் என்பது காட்டும் ; அவர் விருந்தினர், சுற்றத்தார், நண்பர் முதலியோர், அகடு - உறுதி. யார்மாட்டும் என்றது. எவ்வளவு விழிப்புடையவரிடத்தும் என்பது. நில்லாது - நில்லாமல், வரும் - கை மாறி மாறி வரும்.

3 யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.

(பொ-ள்.) யானை எருத்தம் பொலிய - யானையின் கழுத்து விளங்கும்படி, குடை நிழல் கீழ் - குடை நிழலில சேனைத் தலைவராய் - பல சேனைகட்குத் தலைவராக, சென்றோரும் - ஆரவாரமாய் உலாச்சென்ற அரசர்களும், ஏனைவினை உலப்ப - மற்றத் தீவினை கெடுக்க அதனால், தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள - தாம் திருமணஞ் செய்துகொண்ட மனைவியையும் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி, வேறு ஆகி வீழ்வர் - முன் நிலைக்கு வேறான வறுமையாளராகி நிலைகுலைவர்.

(க-து.) அரசரும் வறியராவர்.

(வி-ம்.) இவர் ஏறியதனால் யானையின் கழுத்துக்கு அழகு உண்டாயிற்று என்று குறிப்பதனால் இவரது பெருமை சிறப்பிக்கப்பட்டது. ‘நிழற் கீழ்' என்பதிற் ‘கீழ்' ஏழாவதன் உருபு. ஏனை வினை - மற்றை வினை ; அது தீவினை என்னுங் குறிப்பில் வந்தது. ‘உலப்ப' என்னும் வினையெச்சம் காரணப் பொருளுள்ளது. மனையாளையும் என்று உம்மை விரித்துக் கொள்வது சிறப்பு. யானை யெருத்தத்திற் சென்றோரும் இங்ஙனம் நிலைகுலைவர் என்றமையால் ஏனையோர் நிலைகுலைதல் சொல்லாமலே பெறப்படும். தம் மனையாளைப் பிறர் கவர்ந்து கொள்ளுதலைவிட இழிவானதொன்று வேறின்மையின், அடியோடு ஆற்றலைக் கெடுத்துவிட்ட வறுமையின் பெருங் கொடுமைக்கு அதனை எடுத்துக்காட்டினர்.

4நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.

(பொ-ள்.) வாழ்நாள் - உடம்போடு கூடிவாழுமாறு ஏற்பட்ட நாட்கள், சென்றன சென்றன - செல்கின்றன செல்கின்றன; கூற்று - நமன், செறுத்து உடன் வந்தது வந்தது - சினந்து விரைந்து வருகின்றான் வருகின்றான் ; ஆதலால் ; நின்றன நின்றன - நிலைபெற்றன நிலைபெற்றனவென்று நினைத்துக்கொள்ளப்பட்ட செல்வப் பொருள்கள், நில்லா என - நிலைபெறா என்று, உணர்ந்து - தெரிந்து, ஒன்றின ஒன்றின - இசைந்தன இசைந்தனவாகிய அறங்கைள, செயின் - செய்யக் கருதுவீர்களானால், வல்லே செய்க - விரைந்து செய்வீர்களாக.

(க-து.) வாழ்நாள் கழிந்துகொண்டே யிருத்தலால் நிலையில்லாத செல்வப் பொருள்கள் கொண்டு உடனே அறம் செய்யவேண்டும்.

(வி-ம்.) ஒல்லும் அளவு அறஞ் செய்க என்றற்கு, ‘ஒன்றின ஒன்றின செய்க' எனவும், செய்தலின் அருமை தோன்றச் ‘செயின்' எனவுங் கூறினார். ‘செல்கின்றன' என்னுங் கருத்து விரைவு பற்றிச் 'சென்றன' என்றும், ‘வரும்', என்னுங் கருத்துத் துணிவு பற்றி ‘வந்தது' என்றுஞ் சொல்லப்பட்டன. முதல் இரண்டு அடுக்குகள் பன்மையும், பின் இரண்டு அடுக்குகள் அவலமும் உணர்த்தும், "கூற்று - வாழ்நாள் இடையறாது செல்லுங் காலத்தினைப் பொருள் வகையாற் கூறுபடுத்தும் கடவுள் " என்னும் நச்சினார்க்கினியருரை1 இங்கே நினைவு கூரற்பாலது.

(4)


1. தொல், புறத். 24.

5என்னாலும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
தொடுத்தாறு செல்லும் சுரம்.

(பொ-ள்.) என் ஆனும் ஒன்று - யாதாயினும் ஒரு பொருளை, தம் கை உற பெற்றக்கால் - தமது கையில் கிடைக்கும்படி பெறுவராயின், பின் ஆவது என்று - மூப்புக் காலத்தில் பயன்படுவதென்று, பிடித்து இரா - இறுகப் பிடித்துக்கொண்டு சும்மா இராமல், முன்னே கொடுத்தார் - இளமையிலேயே அறஞ்செய்தவர், கோடு இல் தீக் கூற்றம் - நடுவுநிலைமையுள்ள அருளில்லாத கூற்றுவன், தொடுத்து செல்லும் சுரம் ஆறு - கயிற்றாற் கட்டிக் கொண்டுபோகின்ற காட்டு வழியை, உய்ய போவர் - தப்பிப் புண்ணிய உலகம் புகுவார்.

(க-து.) இளமையிலேயே அறஞ் செய்தவர் புண்ணிய உலகம் புகுவர்.

(வி-ம்.) சிறிது கிடைத்தாலும் அறஞ் செய்க என்பதற்கு ‘என்னாலும்' என்றார். பொருள் கிடைப்பதன் அருமை நோக்கிப் ‘பெற்றக்கால்' என்றார். கிடைப்பது அங்ஙனம் அருமையாயிருத்தலின், கிடைத்த உடனே அறத்திற் செலவிடுக என்பது கருத்து. பிடித்திருத்தல், தாமும் உண்ணாது இறுக்கஞ் செய்து கொண்டிருத்தல். ‘முன்னே ' என்பது முதற்காலத்திலேயே என்னுங் கருத்தில் வந்தது ; அஃதாவது, பெற்ற உடனே என்பது ; கோடு இல் - கோணுதல் இல்லாத, நடுவு நிலைமையுள்ள அறஞ்செய்வார் கூற்றுவனுலகுக்குச் செல்லும் வழி தப்பிப் புண்ணியவுலகுக்குப் போவர் என்பது பின் இரண்டடிகளின் பொருள்.


6 இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத்
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.

(பொ-ள்.) இழைத்த நாள் எல்லை இகவா - உடலோடு கூடிவாழ அளவு செய்துள்ள நாள்கள் தம் அளவைக் கடவா ; பிழைத்து ஒரீஇ - அந்த அளவில் தவறி நீங்கி ; கூற்றம் குதித்து உய்ந்தார் - கூற்றுவனிடத்தினின்றும் அப்புறப்பட்டு உயிர்பிழைத்திருப்பவர் ; ஈங்கு இல்லை - இவ்வுலகத்தில் இல்லை ; நாளை - நாளையொருகால், தண்ணம் தழீஇம் தழீஇம் படும் - சாவுப்றை தழீஇம் தழீஇம் என்று ஒலிக்கும் ; ஆதலால், பெரும் பொருள் ஆற்ற வைத்தீர் - பெருமையைத் தருவதாகிய பொருளை மிகுதியாக வைத்துள்ள செல்வர்களே ! வழங்குமின் - உடனே அப்பொருளைப் பிறர்க்கு உதவுங்கள்.

(க-து.) குறித்த ஆயுளுக்குமேல் யாரும் உயிர் வாழ்தல் கூடாமையின் , உடனே அறஞ்செய்து நலம்பெறுதல் வேண்டும்.

(வி-ம்.) இழைத்த - உண்டாக்கிய ; வைத்தீர், இங்கே பெயர். தழீஇம் தழீஇம் என்பது ஒலிக்குறிப்பு. படும் - ஒலிக்கும் ; இறப்பு நேரும் என்றற்குத் ‘தண்ணம் படும்' என்றார். தமக்கு வேண்டிய அளவுக்குமேற் பொருள் படைத்திருப்பவர், அங்ஙனம் மேற்பட்ட பொருளைப் பிறர்க்கு வழங்குங் கட்டாயமுடைய ராதலின், இச்செய்யுள் அவரை நோக்கிற்று.


7தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ; ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் ; யாரும்
பிறந்தும் பிறவாதா ரில்.

(பொ-ள்.) கூற்றம் - யமன், தோற்றம் சால்ஞாயிறு, காலையில் தோன்றுதல் பொருந்திய பகலவனை, நாழி ஆக - நாழி என்னும் அளவுகருவியாகக்கொண்டு, நும் நாள் வைகலும் அளந்து உண்ணும் - உம் வாழ்நாளாகிய தானியத்தை நாள்தோறும் அளவு செய்து உண்ணுவான் ; ஆதலால் ; ஆற்ற அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் - மிகுதியாகப் பிறர்க்கு உதவி செய்து உயிர்களிடத்தில் அருளுடையீராகுக, யாரும் - அங்ஙனம் ஆகாதவர் யாரும், பிறந்தும் பிறவாதாரில் - பிறவியெடுத்தும் பிறவாதவரிற் சேர்ந்தவரே யாவர்.

(க-து.) அருளுடையராதலே பிறவியின் பயனாதலால், அறஞ்செய்து அருளுடையராகுக.

(வி-ம்.) ஞாயிறு தோன்றுதலும் மறைதலுமே ஒரு நாளுக்கு அடையாளமாதலால், அது ‘தோற்றம் சால்' என்னும் அடைமொழி கொடுத்து, அளவு கருவியாக உருவகஞ் செய்யப்பட்டது. பகலவனை நாழியாகக் கொண்டமையால் , கூற்றுவன் உண்ணுவதற்கு, நாள் தானியமாகக் கொள்ளப்பட்டது. ‘ஒறுக்குங்' குறிப்புத் தோன்ற, ‘உண்ணும்' என்றார், ‘பிறவாதாரில் ' என்பதன் பின் ஒரு சொல் வருவித்துக் கொள்க. உயிர் அருள்வடிவாகுமளவும் அறஞ்செய்து கொண்டேயிருக்க என்றற்கு ‘ஆற்ற அறஞ்செய்து' எனப்பட்டது.1 "அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாஞ் செயல்" என்பதனாலும் இக்கருத்து அறிந்துகொள்ளப்படும்.

(7)


1. குறள், 4, 3

8 செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.

(பொ-ள்.) செல்வர் யாம் என்று - நாம் செல்வமுடையோம் என்று களித்து, தாம் செல் உழி எண்ணாத - தாம் இனிச் செல்லவிருக்கும் மறுமையுலகத்தை நினையாத, புல் அறிவாளர் பெரு செல்வம் - சிறிய அறிவுடையவரது மிக்க செல்வம், எல்லில் - இரவில், கரு கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி - கரியமேகம் வாய் திறந்ததனாலுண்டான மின்னலைப்போலச் சிறிதுகாலந் தோன்றி நின்று, மருங்கு அற கெட்டுவிடும் - இருந்த இடமும் தோன்றாமல் அழிந்துபோம்.

(க-து.) மறுமையுலகத்தை எண்ணி வாழாதவர்களுடைய செல்வம், மின்னலைப்போல தோன்றி அழியும்.

(வி-ம்.) செல்உழி - செல்லும் இடம் ; இங்கே மறுமை குறித்து நின்றது. செல்லுழி என்பது ‘செல்வுழி ' என மருவி முடிந்தது ; "எல்லா மொழிக்கும்"1 என்னுந் தொல்காப்பிய நூற்பாவின் நச்சினார்க்கினியருரை கருதுக. அறியாமையில் மிளிருஞ் செல்வமாதலின், இருளில் ஒளிரும் மின் உவமையாயிற்று. கொண்மூ நீரைக்கொள்வது என்னுங காரணப் பெயர். மின்னு ; மின்னுதல் என்னுந் தொழிற் பெயரில் வந்தமையின் அப்பொருள் தோன்ற உகரச்சாரியை பெற்று, அதுவே பின் தொழிலாகு பெயராயிற்று. மருங்கும் என எச்சவும்மை கொள்க. செல்வம் இயல்பாகவே நிலையாமை யுடையதாயினும் அது மின்னலைப்போல் அத்தனை விரைவில் அழிந்து போதற்குக் காரணம், ‘செல்வர் யாம் ' என்னுஞ் செருக்கும் , அச்செருக்கினால் மறுமையைப் பொருள் செய்து வாழாத தாறுமாறான வாழ்க்கைநிலையும் முதலாயின வென்பது இச் செய்யுட் குறிப்பு .

(8)


1. தொல் . புண : 38.

9 உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திரும்பானேல், அ ஆ
இழந்தானஎன் றெண்ணப் படும்.

(பொ-ள்.) உண்ணான் - இன்றியமையாத உணவுகளை உண்ணாமலும், ஒளி நிறான் - மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், ஓங்கு புகழ் செய்யான் - பெருகுகின்ற உரையும் பாட்டுமாகிய புகழைச் செய்துகொள்ளாமலும், துன் அருகேளிர் துயர் களையான் - நெருங்கிய பெறுதலரிய உறவினரின் துன்பங்களை நீக்காமலும், வழங்கான் - இரப்பவர்க்கு உதவாமலும், கொன்னே பொருள் காத்திருப்பானேல் - ஒருவன் வீணாகச் செல்வப் பொருளைக் காத்துக்கொண்டிருப்பானாயின், அ ஆ இழந்தான் என்று - ஐயோ அவன் அப்பொருளை இழந்தவனேயென்று, எண்ணப்படும் - கருதப்படுவான்.

(க-து.) ஒரு செல்வன், தனது செல்வத்தை அறவழிகளிற் செலவு செய்யாதிருந்தால் அவன் அதனை இழந்தவனாகவே கருதப்படுவான்.

(வி-ம்.) ஒளி - மதிப்பு ; "ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை"1 என்னுமிடத்து, ‘ஒளி - மிக்குத் தோன்றுதலுடைமை' என்பர் பரிமேலழகர் . உண்ணான் முதலியன முற்றெச்சம். ‘கொன்னே காத்திருப்பானேல்' என்று சேர்த்துக்கொள்க. அ ஆ: இரக்கக் குறிப்பு . செல்வம்தான் இறக்குமளவும் அழியாமலிந்தாலும் அதனாற்கொண்ட பயன் யாதொன்று மில்லாமையின், அவன் உடையவனா யினும் இழந்தவனே என்றார். செல்வத்தைச் செலவு செய்தற்குரிய துறைகள் பலவும் இச்செய்யுள் எடுத்துக் காட்டினமை நினைவிருத்துதற்குரியது.

(9)


1. குறள், 98 : 1.

10உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட !
உய்த்தீட்டும் தேனீக் கரி.

(பொ-ள்.) வான் தோய் - வானத்தைப் பொருந்துகின்ற, மலைநாட - மலைநாட்டுத் தலைவனே ! உடாதும் - நல்ல ஆடைகள் உடுக்காமலும், உண்ணாதும் - உணவுகள் உண்ணாமலும், தம் உடம்பு செற்றும் - தம் உடம்பை வருத்தியும் ; கெடாத நல் அறமும் செய்யார் - அழியாத சிறந்த புண்ணியமுஞ் செய்யாமலும், கொடாது - வறிய வர்க்குக் கொடாமலும், ஈட்டி வைத்தார் - பொருளைத் தொகுத்து வைத்தவர்கள், இழப்பர் - அதனை இழந்து விடுவர், உய்த்து ஈட்டும் தேன் ஈ- பல பூக்களிலிருந்து கொண்டுபோய்த் தொகுத்து வைக்கும் தேனீக்கள், கரி - அதற்குச் சான்று.

(க-து.) அறவழியிற் பொருளைச் செலவு செய்யாதவர், ஒரு காலத்தில் தேனீயைப்போல அப்பொருளை இழந்துவிடுவர்.

(வி-ம்.) கள்ளர் பகைவர் முதலியோராற் கட்டாயம் இழந்து விடுவர் என்பது கருத்து; அதன் பொருட்டே, கட்டாயம் ஒரு காலத்தில் தான் தொகுக்குந் தேனை இழந்துவிடுந் தேனீ உவமையாயிற்று. உடாமையும் உண்ணாமையுங் காரணமாக நோய் முதலியவற்றை உண்டாக்கித் தம் உடம்பை வருத்திக்கோடலின், ‘தம் உடம்பு செற்றும்' என்றார். துறவோரைப் போல அங்ஙனம் வருத்திக் கொண்டாலும் அவர்போல் அறச்செயலேனுஞ் செய்கின்றனரோவெனின் அதுவுமின்றென்றற்குக். ‘கெடாதநல் அறமுஞ்செய்யார்' என்று அதன்பிற் கூறினார். மலைநாட என்று ஓர் ஆண்மகனை முன்னிலைப் படுத்திக் கூறும் முறைமையில் இச் செய்யுள் அமைந்தது. 

இறுக்க நினைவினாற், பகை முதலியன உண்டாதல் பொருளைக் காக்கும் அறிவு மடம் படுதல் முதலாயின உண்டாதலின் அவை பொருளை இழத்தற்குக் காரணங்களாகும்.


(தொடரும்)
2011/5/28 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
May 28, 2011, 3:06:42 PM5/28/11
to மின்தமிழ்
இளமை நிலையாமை 
 
அறத்துப்பால்
2. இளமை நிலையாமை
(இளமையின் நிலையில்லாமையை உணர்த்துதல் .)
11நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.

(பொ-ள்.) நல் அறிவாளர் - பழுதற்ற அறிவினையுடையோர், நரை வரும் என்று எண்ணி - மூப்பு வருமென்று கருதி, குழவியிடத்தே துறந்தார் - இளமையிலேயே பற்றுள்ளத்தை விட்டார், புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே - குற்றம் நீங்குதலில்லாத நிலையில்லாத இளமைக் காலத்தை அறவழியிற் பயன்படுத்தாமல் நுகர்ந்து களித்தவர்களே, கோல் ஊன்றி இன்னாங்கு எழுந்திருப்பார் - மூப்பு வந்து கையிற் கோல் ஒன்று ஊன்றித் துன்பத்தோடு எழுந்து தள்ளாடுவார்கள்.

(க-து.) இளமைப் பருவத்தை அறவழியிற் பயன் படுத்தாமல் நுகர்ந்து மயங்கியவர்கள், பின்பு மூப்பினால் வருந்துவார்கள்.

(வி-ம்.) ‘நரை' மூப்புப் பருவமும், ‘குழவி' இளமைப் பருவமும் உணர்த்துங் குறிப்பில் வந்தன. துறத்தல் - பற்றுள்ளம் விடுதல். ‘புரை தீரா' ‘மன்னா' இரண்டும் இளமைக்கு அடைமொழிகள். மகிழ்தல் - இங்கு நுகர்தல ; இளமையை அறஞ்செய்தற்குக் கருவியாகக் கொள்ளாமல் , அதனையே துய்க்கும் பொருளாகக்கொண்டு இன்புறுதல் பிழை என்றபடி. நல்லறிவாளர் துறந்தார் எனவே, இளமை மகிழ்ந்தார் புல்லறிவாளர் என்பது பெறப்படும் . ‘பட்டாங்கு' என்பதுபோல, ‘இன்னாங்கு' என்பதும் ஒரு சொல். பற்றுள்ளம் விட்டு எம்முயற்சியையும் இளமையிலேயே செய்க என்பது பொருள். அங்ஙனம் செய்தார்க்கு, மூப்பும் வராது ; வரினும் இன்னல் செய்யாது என்பது உணர்த்தப்பட்டது.

(1)

12 நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன ;- உட்காணாய் ;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.

(பொ-ள்.) நட்பு நார் அற்றன - நேயமும் கயிறு அறுந்தன ; நல்லாரும் அஃகினார் - சான்றோரும் அணுக்கங் குறைந்தனர், அன்பு தளையும் அவிழ்ந்தன - பொது மக்களிடம் உண்டான அன்பு என்னுங் கட்டும் நெகிழ்ந்தன, உள் காணாய் - அகமாக எண்ணிப் பார், வாழ்தலின் ஊதியம் என் உண்டு - இளமையை மகிழ்ந்து வாழ்தலினால் பயன் என்ன உண்டு, ஆழ்கலத்து அன்ன கலி வந்தது - கடலில் மூழ்கிவிடுகின்ற மரக்கலத்தை ஒத்த துன்பம் இதோ வருகின்றது.

(க-து.) இளமையையே பொருள் செய்து வாழ்வதனால், நண்பர் சான்றோர் பொதுமக்கள் முதலியோரது தொடர்பு குறைந்து வாழ்நாளுங் கெடும்.

(வி-ம்.) அற்றன அவிழ்ந்தன என்று பன்மையாக வந்தமையால், நட்புகள் அன்புகள் என்று அவ்வினைகளின் வினைமுதல்களையும் பன்மையாகக் கொள்க ; பலராற் பலவகையாகக் கொள்ளப்படுதலால் அவை பன்மையாயின. அன்பு என்றது, அற்பு என்றாயிற்று ! இடையிலுள்ள எழுத்து வலித்தது. இளமையைப் பொருளாக நினைத்துப் பற்றுள்ளத்தோடு உயிர் வாழ்ந்தமையால், நண்பர் முதலியோர் அற்றனர். இங்ஙனம் நட்பு முதலியன அகல ஒருவன் உயிர் வாழ்தலால் உண்டான பயன்றானும் ஏதுமில்லை. கடலுள் மரக்கலம் ஆழ்ந்தாற்போல இவ்வுடம்பு திடுமெனக் கூற்றுவன்வாய் அழிவதுதான் அதனாற் கண்ட பயன் என்றற்கு ‘வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி ' என்றார். வந்தது என இறந்த காலத்தால் நின்றது, விரைவில் துணிவுப் பொருட்டு.1

(2)


1 குறள், 92 : 8



13சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.

(பொ-ள்.) சொல் தளர்ந்து - பேச்சின் வலி குறைந்து, கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய் - கையிற் கோல் ஊன்றித் தள்ளாடிய நடையை உடையவராய், பல் கழன்று - பற்கள் உதிர்ந்து, பண்டம் பழிகாறும் - இவ்வுடம்பாகிய பண்டம் பழிக்கப்படுமளவும், இல் செறிந்து காமநெறி படரும் கண்ணினார்க்கு - மனைவியோடு பற்றுக் கொண்டிருந்து காமவழியிற் செல்லும் சிற்றறிவுடையாருக்கு, ஏமம் நெறி படரும் ஆறு - மெய்யின்ப நெறியில் செல்லும் வகை, இல்லையே - உண்டாவதில்லை.

(க-து.) வாழ்நாளளவுங் காம நோக்கமுடையவர் பேரின்ப நெறி செல்லுதல் இல்லை.

(வி-ம்.) பண்டம் - பொருள் ; இங்கே உடம்புக்கு வந்தது. உயிரிருந்தும் உயிர்க்குரிய அறவினைகட்குப் பயன்படாமையால் உயிரில்லாததுபோல இழிவாக்கிப் பண்டம் என்றார். அது பழிக்கப்படுதலாவது இறக்குமுன் நெடுங்காலம் நோய் முதலியன கொண்டு பிறரால் இழித்துக் கூறப்படுதல். ‘பண்டம் பழிகாறும்' என்றது , சாகு மளவும் என்னும் குறிப்பின்மேல் நின்றது. மனைவியின்பால் அறிவான் அன்புறாமற் காமத்தான் பற்றுக்கொள்ள லென்பது, ‘செறிந்து' என்பதன் குறிப்பினாற் பெறப்படும். இல்லையே என்னும் ஏகாரம் இரக்கப் பொருட்டு.

14 தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.

(பொ-ள்.) தாழா - முதுகு தாழ்ந்து , தளரா - உடம்பின் கட்டுத் தளர்ந்து, தலை நடுங்கா - தலை நடுங்கி, தண்டு ஊன்றா - கையில் தடி ஊன்றி, வீழா - விழுந்து, இறக்கும் - இறக்கப்போகும் மூப்பு நிலையிலுள்ள, இவள் மாட்டும் - இத்தகைய ஒருத்தியிடத்தும், காழ் இலா - உறுதியான அறிவில்லாத, மம்மர்கொள் மாந்தர்க்கு - காம மயக்கத்தைக் கொள்ளுகின்ற மக்களுக்கு, தன் கைக்கோல் - அவள் இப்போது பிடித்திருக்கும் கையின் ஊன்றுகோல், அம்மனைக்கோல் ஆகிய ஞான்று - அவள் தாயின் கைக் கோலாயிருந்த காலத்தில், அணங்கு ஆகும் - வருத்துகின்ற காமத் தன்மையையுடைய அழகுருவம் இருந்திருக்கும்.

(க-து.) முன்பு, கண்டோரைப் பிணிக்கும் அழகுருவோடு திகழ்ந்த மகளிர் பின்பு உடம்பு கூனித் தலைநடுங்குகின்ற இரங்கத்தக்க மூப்பு நிலையை அடையக் காண்டலின் இளமையை ஒரு பொருட்டாக எண்ணிக் காமத்தில் ஆழ்ந்து அதனால் அறச்செயல்களைக் கைநழுவ விடுதலாகாது.

(வி-ம்.) முதுகு வளைந்து கூன் அடைந்து என்றதற்குத் தாழா எனப்பட்டது. ‘இவள் மாட்டும்' என்னும் உம்மை இழிவு சிறப்பொடு எச்சமும் உணர்த்திற்று. காழ் - உரம் ; இங்கே அறிவு உரம். அணங்கு - வருத்தும் அழகுருவம் ; பரிமேலழகர், "அணங்கு காமநெறியான் உயிர் கொள்ளுந் தெய்வமகள்"என்றதும் இப்பொருட்டு. அணங்கா யிருந்திருக்கும் என்னும் பொருளில் "அணங்காகும் " என வந்தது. இப்போது மூத்திருக்கும் இவள் கையின் கோல் இவள் தாயின் கையில் ஊன்றுகோலாயிருந்த போது இவள் இளமையுடையவளாய் இருந்திருப்பாள் என்பது குறிக்கத் ‘தன்கைக்கோல் அம்மனைக் கோலாகிய ஞான்று' எனப்பட்டது. இவள் இளமைக் காலத்தில் என்று குறித்தற்கு இங்ஙனம் வந்தது ; ஈதுகாண் உலகியல்பு என்று அறிவுறுத்துதற்கு. இது மேற் செய்யுளாலும் உணரப்படும்.

(4)


1. குறள், 92 : 8.

15 எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் ;- தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்
டேகும் அளித்திவ் வுலகு.

(பொ-ள்.) எனக்குத் தாய் ஆகியாள் - எனக்குத் தாயாயிருந்தவள், என்னை ஈங்கு இட்டு - என்னை இவ்வுலகத்தில் விட்டுவிட்டு, தனக்குத் தாய் நாடி - தனக்குத் தாய் விரும்பி, சென்றாள் - இறந்துபோனாள் ; தனக்குத் தாய் ஆகியவளும் - அப்படிப் போன அவளுக்குத் தாயாக நேர்ந்தவளும், அது ஆனால் - அவ்வாறே போனால், தாய் தாய்க்கொண்டு - ஒரு தாய் தனக்குத் தாயைத் தாவிக்கொண்டு , ஏகும் அளித்து இவ்வுலகு - போகின்ற எளிமையையுடையது இந்த உலகம் என்க.

(க-து.) இன்று இளையராயிருப்பவர் நாளை மூத்து இறந்துபோதலே இயல்பாதலால், இளமை நிலையாதென்பது திண்ணம்.

(வி-ம்.) ‘இட்டு' என்னுஞ் சொல், ‘என்னை இங்கே பெற்றெடுத்து விட்டுத் தன்னை ஒருத்தி பெற்றெடுக்கு மாறு பிரிந்தாள்' என்னுங் குறிப்பின் உறுப்பாய் நின்றது. ஏ : இசைநிறை. தாய்க்கொண்டு - தாவிக்கொண்டு. இயல்பாயிருத்தலின், உலகுக்கு எளிமை கூறினார்.


16வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.

(பொ-ள்.) வெறி அயர் வெம் களத்து - வெறியாடு தலைச் செய்கின்ற கொடிய பலிக்களத்தில், வேல்மகன் பாணி - வெறியாடுவோனுடைய கைகளிற் கட்டியுள்ள, முறி ஆர் நறு கண்ணி - தளிர்கள் இடையிடையே பொருந்திய மணமமைந்த மலர்மாலை, முன்னர் தயங்க - தன்னெதிரில் விளங்கா நிற்க, மறி - அதைக் கண்ட பலி ஆடு, குளகு உண்டு அன்ன - அதிலுள்ள தளிரைத் தனக்கு உணவாக உண்டு மகிழ்ந்தாற் போன்ற. மன்னா மகிழ்ச்சி - இளமையால் வரும் நிலையா மகிழ்ச்சி, அறிவுடையாளர்கண் இல் -அறிவுடையாரிடத்தில் இல்லை.

(க-து.) அறிவுடையவர்கள், இளமை யெழுச்சிகளை அறவினைகட்கு ஊறு செய்வனவாகக் கருதி அஞ்சுவரே யல்லால் அவற்றை நுகர்ந்து களியார்.

(வி-ம்.) வெறி - தெய்வமேறி யாடுந் தன்மை ; அயர்தல் - அதனைச் செய்தல் ; பலியிடுதலின், கொடிய களமாயிற்று. வேலைத் தன்கையில் அடையாளமாகப் பிடித்துக் கொண்டு ஆடும் மகனாதலில். வெறியாட்டாளன் ‘வேல மகன்' எனப்பட்டான் ; வேலன் என்று கூறுதலும் உண்டு; இது குறிஞ்சி நிலத்து வழக்கம் ; அங்கே முருகன் தெய்வமாகலின் இங்ஙனமாயிற்று. பூக்களுடன் இடையிடையே இலைகளும் இட்டு மாலை தொடுப்பராகலின், ‘முறி ஆர் நறுங்கண்ணி ' எனப்பட்டது. குளகு - தழையுணவு. பலிக்கடா, தான் கொலையுறுதற்கு அடையாளமாயுள்ள வேலன் கை மாலைக்கு அஞ்சாமல். அறியாமையால் அதிலுள்ள தழையைத் தனக்கு உணவாகக் கருதி உண்டு' சின்னேர இன்பம் நுகர்ந்தது ; அறிந்தோர்க்கு அச்செயல் ஏழைமையுடையதாய்த் தோன்றும். இளமையெழுச்சிகளின் மயங்கி, ‘மற்றறிவாம் நல்வினை யாம் இளையம்' 1 என்று மக்கள் ஒழுகுதலும் அத்தகையதேயாம் பின்வரும் பேரிடையூறு கருதாமற் சிறிதின்ப நுகர்வுக்காக அறவினைகள் கைவிட்டு நிற்றல் தவறென்பது உணர்த்தப்பட்டது.

17 பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து.

(பொ-ள்.) இளமை - இளமைப் பருவம், பனி படு சோலை பயன் மரம் எல்லாம் - குளிர்ச்சி பொருந்திய சோலையிலுள்ள பயன் தரும் மரங்களெல்லாவற்றினின்றும், கனி உதிர்ந்து வீழ்ந்து அற்று - பழங்க ளுதிர்ந்து வீழ்ந்தாற்போலுந் தன்மையது ; இவளும் குனிந்து - இவ்விளமையுடையவளும் ஒரு காலத்திற் கூனாகி, கோல் கண்ணள் ஆகும் - வழிதெரிந்து நடப்பதற்கு ஊன்று கோலையே கண்ணாக உடையவளாவள். ஆதலால் ; வேல் கண்ணள் என்று - இப்பொழுது வேல்போலுங் கண்ணுடையாளென்று, இவளை - இந்த இளந்தன்மையாளை. நனி பெரிதும் வெஃகன்மின் - மிகப்பெரிரும் விரும்ப வேண்டாம்.

(க-து.) இப்போது கனிந்தும் குளிர்ந்தும் தோன்றும் இளமை ஒரு காலத்தில் நிலைமாறிக் கெடும்.

(வி-ம்.) உவமையிற் சுட்டிய தன்மைகள் பொருளுக்கும் ஒக்கும். இளமை யாவர்க்கும் ஒரு படித்தாய்க் கெடுதலின், ‘மரமெல்லாம்' என்றார். வீழ்தலின் லிரைவு தோன்ற ‘உதிர்ந்து வீழ்ந்தற்று' என்றார். "நனிபெரிதும்" ஒரு பொருளில் வந்த இருசொல் ; அது வெஃகுதலின் முடிவின்மையையும் இளமைத் தன்மையை அளவாகப் பயன்படுத்திக் கொள்ளுங் கடமையையுங் குறித்துநின்றது. இவள் என்னுஞ் சுட்டுக்கள் இரண்டுள் முன்னது ஒரு மாதையும் பின்னது அவள் இளமைப் பண்பையுஞ் சுட்டி நின்றன. கோல்கொண்டு வழி தெரிந்து செல்லுதலின் ‘கோல் கண்ணள்' எனப்பட்டது. மற்று: வினைமாற்று.

18 பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.

(பொ-ள்.) பருவம் எனைத்து உள - வயது எவ்வளவு ஆகியிருக்கின்றன. பல்லின்பால் ஏனை - பல்லின் தன்மை எப்படியிருக்கின்றன, இரு சிகையும் உண்டீரோ - இரண்டு பிடியேனும் உண்கின்றீர்களா, என்று வரிசையால் - என்று ஒன்றன்பின் ஒன்றாக, உள் நாட்டம் கொள்ளப்படுதலால் - இங்ஙனம் பிறரைப்பற்றித் தமக்குள் ஆராயும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதனால், யாக்கைக் கோள் - உடம்பின் இளமையை, எண்ணார் அறிவுடையார் - அறிவுடையோர் ஒரு பொருளாகக் கருதமாட்டார்கள்.

(க-து.) இளமை கழிதலை யாரும் தமக்குள் உணர்தலின், அறிவுடையோர் அந் நிலையா இளமையை ஒரு பொருளாக மதித்து மகிழார்.

(வி-ம்.) வயது என்பது இத்தனை ஆண்டுகள் என்னுங் கருத்தில் வந்தமையின், ‘உள' என்று பன்மை வினைகொண்டது . ‘பல்லின் பால்' என்பதிற் ‘பால்' தன்மை யென்னும் பொருட்டு ; ‘பான்மை' என்பதிற் போல. சிகையும் - சிகையேனும், ஆண்டு முதிர்ந்து பல்பழுதாகிக் குடலுங் கெடுதலின் இங்ஙனம் ஒருவரைப்பற்றி ஒருவர் நலம் உசாவும்உள் எண்ணம் கொள்ளப்படுகின்றது. யாக்கைக் கோள் - யாக்கையின் தன்மை ; இளமை, இவ்வாற்றால் , இளமை நிலையாமை உணர்த்தப்பட்டது.

19 மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்;
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.

(பொ-ள்.) மற்று அறிவாம் நல்வினை - நற்செயல்களைப் பின்னால் தெரிந்து செய்து கொள்ளலாம், யாம் இளையம் - இப்போது யாம் இளமைப் பருவமுடையேம், என்னாது - என்று கருதாமல், கைத்து உண்டாம் போழ்தே - கையில் பொருள் உண்டானபொழுதே. கரவாது அறம் செய்ம்மின் - ஒளியாமல் அறஞ் செய்யுங்கள் ; ஏனென்றால், முற்றியிருந்த கனி ஒழிய - பழுத்திருந்த பழங்களேயல்லாமல், தீ வளியால் - கோடைக் காற்றினால், நல் காய் உதிர்தலும் உண்டு - வலிய காய்களும் மரங்களிலிருந்து விடுதலுண்டு.

(க-து.) மூத்தோரே யல்லாமல் இளையோரும் திடுமென இறந்துபோதல் உண்டாகலின், கையிற் பொருள் உண்டான இளமைக் காலத்திலேயே அதனை அறஞ்செய்து பயன் கொள்ளவேண்டும்.

(வி-ம்.) ‘யாம் இளையம்' என்ற குறிப்பு ‘இப்போது யாம் இளமையுடையேம் ; அவ்விளமை யின் பங்கள் நுகர்தற்குப் பொருள் தேவை ; ஆதலின் , அறவினைகளை மூப்பு வந்தபின் செய்வேம்,' என்று நினைத்தலாகாது என்னுங் கருத்தை உட்கொண்டு நின்றது. கைத்து - கையிலுள்ளது ; அது கைப்பொருள் ; செல்வம். இளமைப் பருவத்தைக் ‘கைத்துண்டாம் போழ்து, என்று விதந்தார். அப்பருவமே முயன்று பொருள் தேடுதற்குரிய காலமாகலின், ‘கனியொழிய' என்பதை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, பழங்கள் உதிராமல் மரத்தில் நிற்கக் , காய்கள் உதிர்ந்துவிடுதலும் உண்டு எனவும் ஒரு கருத்துக்கொள்க. மூப்புடையோர் இறவாமுன் இளமையுடையோர் இறந்து போதலும் உண்டு என்பது இதன் கருத்து. காயுதிர்தல் சிறுபான்மையாகலின், காயுதிர்தலும் என எதிர்மறையும்மை கொடுக்கப்பட்டது.

20 ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய் அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.

(பொ-ள்.) ஆள் பார்த்து - தான் உயிர் பிரித்துக் கொண்டு போகும் ஆளைக் கருதி, உழலும் - அதே வேலையாகத் திரிகின்ற, அருள் இல் கூற்று - இரக்கம் இல்லாத கூற்றுவன், உண்மையால் - ஒருவன் இருக்கின்றானாதலால், தோள் கோப்பு - மறுமையாகிய வழிக்குக் கட்டுச் சோறு போல் உதவும் புண்ணியத்தை, காலத்தால் - இளமையாகிய தக்க காலத்திலேயே , கொண்டு உய்ம்மின் - உண்டாக்கிக் கொண்டு பிழையுங்கள், பீள் பிதுக்கி - முற்றாத இளங்கருவையும் வெளிப்படுத்தி, பிள்ளையை - குழந்தையை, தாய் அலறக் கோடலான் - தாய் அலறியழும் படி உயிர் கொள்ளுதலால், அதன் கள்ளம் - அக்கூற்றுவனது கடுமையை, கடைப்பிடித்தல் நன்று - நினைவில் இருத்திக் காரியங்கள் செய்தல் நல்லது.

(க-து.) இளங் கருவையும் அழிக்கும் கூற்றுவன் உண்மையால் இளமை நிலையாமை விளக்கமாதலின், இம்மை மறுமைக்குரிய புண்ணிய காரியங்களை இளமை யுடையோர் உடனே செய்துகொள்ள வேண்டும்.

(வி-ம்.) கூற்றுவன் கருத்தாயிருக்கி றானென்பதற்கு ‘ஆட் பார்த்து' எனவும், அதுவே வேலையாயிருக்கிறானென்பதற்கு ‘உழலும்' எனவும், கடமையைச் செலுத்தும் போது கண்ணோட்டங் குறுக்கிட இடந்தரான் என்பதற்கு ‘அருள்இல்' எனவும், உயிரை மட்டும் உடம்பினின்று பிரித்துக்கொண்டு போவான் என்பதற்குக் ‘கூற்று' எனவும், அவன் என்றும் உள்ளான் என்பதற்கு ‘உண்மையால்' எனவும் , உயிருடன் நெடுகச் செல்லத்தகுந்த புண்ணியத்தைத் தேடுமின் என்பதற்குத் ‘தோட்கோப்புக் கொண்டுய்ம்மின்' எனவுங் கூறினார். பீள் - முதிராக் கருப்பம். கள்ளம் என்றது இங்கே ‘உள் எண்ணம்' என்னும் பொருளில் வந்தது. கூற்றுவன் தன் உட்கருத்தை உறுதியாகச் செய்தே முடித்தலின், அக்கடுமை தோன்றக் ‘கள்ளம்' என்றார். தோள் கோப்பு - தோளில் கோத்துச் செல்லுங்கட்டுணா. மறுமையாகிய வழிக்கு அதுபோல் உதவும் புண்ணியத்தை அச்சொல்லாற் கூறினார். "கூற்றங் கொண்டோடத் தமியே கொடுநெறிக்கட் செல்லும் போழ்தின், ஆற்றுணாக் கொள்ளீர்," என்றார் சிந்தாமணியினும்,1 காலத்தாலேயே என்னுந் தேற்றேகாரமும், பீளையும் என்னும் இழிவு சிறப்பும்மையும் விகாரத்தால் தொக்கன.

(10)


1. சிந் : 6 : 136

(தொடரும்)
--
V.Shrinivas (Seenu)

N. Ganesan

unread,
May 28, 2011, 3:23:34 PM5/28/11
to மின்தமிழ்

நன்றி ஐயா. தொடர்ந்து தமிழமுதம் அளிக்கவும்.

நா. கணேசன்

On May 28, 2:06 pm, Venkatram Shrinivas <see...@gmail.com> wrote:
> *இளமை நிலையாமை*
>
> *அறத்துப்பால்
> 2. இளமை நிலையாமை*
> (இளமையின் நிலையில்லாமையை உணர்த்துதல் .)11நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்


> குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா
> மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
> இன்னாங் கெழுந்திருப் பார்.
>

> *(பொ-ள்.)* நல் அறிவாளர் - பழுதற்ற அறிவினையுடையோர், நரை வரும் என்று எண்ணி -


> மூப்பு வருமென்று கருதி, குழவியிடத்தே துறந்தார் - இளமையிலேயே பற்றுள்ளத்தை
> விட்டார், புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே - குற்றம் நீங்குதலில்லாத
> நிலையில்லாத இளமைக் காலத்தை அறவழியிற் பயன்படுத்தாமல் நுகர்ந்து களித்தவர்களே,
> கோல் ஊன்றி இன்னாங்கு எழுந்திருப்பார் - மூப்பு வந்து கையிற் கோல் ஒன்று
> ஊன்றித் துன்பத்தோடு எழுந்து தள்ளாடுவார்கள்.
>

> *(க-து.)* இளமைப் பருவத்தை அறவழியிற் பயன் படுத்தாமல் நுகர்ந்து மயங்கியவர்கள்,


> பின்பு மூப்பினால் வருந்துவார்கள்.
>

> *(வி-ம்.)* ‘நரை' மூப்புப் பருவமும், ‘குழவி' இளமைப் பருவமும் உணர்த்துங்


> குறிப்பில் வந்தன. துறத்தல் - பற்றுள்ளம் விடுதல். ‘புரை தீரா' ‘மன்னா'
> இரண்டும் இளமைக்கு அடைமொழிகள். மகிழ்தல் - இங்கு நுகர்தல ; இளமையை
> அறஞ்செய்தற்குக் கருவியாகக் கொள்ளாமல் , அதனையே துய்க்கும் பொருளாகக்கொண்டு
> இன்புறுதல் பிழை என்றபடி. நல்லறிவாளர் துறந்தார் எனவே, இளமை மகிழ்ந்தார்
> புல்லறிவாளர் என்பது பெறப்படும் . ‘பட்டாங்கு' என்பதுபோல, ‘இன்னாங்கு' என்பதும்
> ஒரு சொல். பற்றுள்ளம் விட்டு எம்முயற்சியையும் இளமையிலேயே செய்க என்பது பொருள்.
> அங்ஙனம் செய்தார்க்கு, மூப்பும் வராது ; வரினும் இன்னல் செய்யாது என்பது
> உணர்த்தப்பட்டது.
>
> (1)

> 12நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்


> அற்புத் தளையும் அவிழ்ந்தன ;- உட்காணாய் ;
> வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே
> ஆழ்கலத் தன்ன கலி.
>

> *(பொ-ள்.)* நட்பு நார் அற்றன - நேயமும் கயிறு அறுந்தன ; நல்லாரும் அஃகினார் -


> சான்றோரும் அணுக்கங் குறைந்தனர், அன்பு தளையும் அவிழ்ந்தன - பொது மக்களிடம்
> உண்டான அன்பு என்னுங் கட்டும் நெகிழ்ந்தன, உள் காணாய் - அகமாக எண்ணிப் பார்,
> வாழ்தலின் ஊதியம் என் உண்டு - இளமையை மகிழ்ந்து வாழ்தலினால் பயன் என்ன உண்டு,
> ஆழ்கலத்து அன்ன கலி வந்தது - கடலில் மூழ்கிவிடுகின்ற மரக்கலத்தை ஒத்த துன்பம்
> இதோ வருகின்றது.
>

> *(க-து.)* இளமையையே பொருள் செய்து வாழ்வதனால், நண்பர் சான்றோர் பொதுமக்கள்


> முதலியோரது தொடர்பு குறைந்து வாழ்நாளுங் கெடும்.
>

> *(வி-ம்.)* அற்றன அவிழ்ந்தன என்று பன்மையாக வந்தமையால், நட்புகள் அன்புகள்


> என்று அவ்வினைகளின் வினைமுதல்களையும் பன்மையாகக் கொள்க ; பலராற் பலவகையாகக்
> கொள்ளப்படுதலால் அவை பன்மையாயின. அன்பு என்றது, அற்பு என்றாயிற்று ! இடையிலுள்ள
> எழுத்து வலித்தது. இளமையைப் பொருளாக நினைத்துப் பற்றுள்ளத்தோடு உயிர்
> வாழ்ந்தமையால், நண்பர் முதலியோர் அற்றனர். இங்ஙனம் நட்பு முதலியன அகல ஒருவன்
> உயிர் வாழ்தலால் உண்டான பயன்றானும் ஏதுமில்லை. கடலுள் மரக்கலம் ஆழ்ந்தாற்போல
> இவ்வுடம்பு திடுமெனக் கூற்றுவன்வாய் அழிவதுதான் அதனாற் கண்ட பயன் என்றற்கு
> ‘வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி ' என்றார். வந்தது என
> இறந்த காலத்தால் நின்றது, விரைவில் துணிவுப் பொருட்டு.1
>
> (2)

> ------------------------------


>
> 1 குறள், 92 : 8
>

> 13சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்


> பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
> காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
> ஏம நெறிபடரு மாறு.
>

> *(பொ-ள்.)* சொல் தளர்ந்து - பேச்சின் வலி குறைந்து, கோல் ஊன்றி சோர்ந்த


> நடையினர் ஆய் - கையிற் கோல் ஊன்றித் தள்ளாடிய நடையை உடையவராய், பல் கழன்று -
> பற்கள் உதிர்ந்து, பண்டம் பழிகாறும் - இவ்வுடம்பாகிய பண்டம் பழிக்கப்படுமளவும்,
> இல் செறிந்து காமநெறி படரும் கண்ணினார்க்கு - மனைவியோடு பற்றுக் கொண்டிருந்து
> காமவழியிற் செல்லும் சிற்றறிவுடையாருக்கு, ஏமம் நெறி படரும் ஆறு - மெய்யின்ப
> நெறியில் செல்லும் வகை, இல்லையே - உண்டாவதில்லை.
>

> *(க-து.)* வாழ்நாளளவுங் காம நோக்கமுடையவர் பேரின்ப நெறி செல்லுதல் இல்லை.
>
> *(வி-ம்.)* பண்டம் - பொருள் ; இங்கே உடம்புக்கு வந்தது. உயிரிருந்தும்


> உயிர்க்குரிய அறவினைகட்குப் பயன்படாமையால் உயிரில்லாததுபோல இழிவாக்கிப் பண்டம்
> என்றார். அது பழிக்கப்படுதலாவது இறக்குமுன் நெடுங்காலம் நோய் முதலியன கொண்டு
> பிறரால் இழித்துக் கூறப்படுதல். ‘பண்டம் பழிகாறும்' என்றது , சாகு மளவும்
> என்னும் குறிப்பின்மேல் நின்றது. மனைவியின்பால் அறிவான் அன்புறாமற் காமத்தான்
> பற்றுக்கொள்ள லென்பது, ‘செறிந்து' என்பதன் குறிப்பினாற் பெறப்படும். இல்லையே
> என்னும் ஏகாரம் இரக்கப் பொருட்டு.

> 14தாழாத் ...
>
> read more »

Venkatram Shrinivas

unread,
May 29, 2011, 3:05:33 PM5/29/11
to மின்தமிழ்
யாக்கை நிலையாமை 
 
அறத்துப்பால்
3. யாக்கை நிலையாமை
(உடம்பின் நிலையாமையை உணர்த்துவது)
21மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.

(பொ-ள்.) மலைமிசை தோன்றும் மதியம்போல் - மலையின் உச்சியில் தோன்றுகின்ற முழு நிலாவைப்போல, யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - யானையினது தலையின் மேல் கொள்ளப்பட்ட குடைநிழலிற் சென்ற அரசரும் , நிலமிசை - இந் நிலத்தில் , துஞ்சினார் என்று -இறந்து மண்ணானார் என்று, எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால் - குறித்து இழித்துரைக்கப்பட்டாரேயல்லாமல், எஞ்சினார் இவ்வுலகத்து இல் - இறவாமல் நின்றவர் இவ்வுலகத்தில் இல்லை.

(க-து.) மக்களாய்ப் பிறந்தவர் எத்தகையோ ராயினும் அவர் இறந்து போதல் உறுதியாதலின், இருக்கும் போதே யாவரும் அறஞ் செய்து கொள்க.

(வி-ம்.) ‘யானைத் தலை' என்றதற்கேற்ப உவமையிலும் ‘மலையின் உச்சி' யென்று உரைத்துக் கொள்க. குடையர் - குடையையுடையராய் அதன் நிழலில் இருக்கும் அரசர். குடையரும் என உயர்வுசிறப்புக் கொள்க. இறுதியில் ‘இவ்வுலகத்து' என வருதலின் ‘நிலமிசை' யென்றது. மண்ணில் என்னும் பொருட்டு, மண்ணில் வீழ்ந்து மண்ணோடு மண்ணானார் என்பது குறிப்பு. எத்துணை உயரத்தில் ஏறிச் சென்றோர்க்கும் முடிவில் இருப்பிடம் மண்ணே எனவும் ஒரு நயம் காண்க. எனவே ஏனையோர் இறத்தல் பற்றிக் கூற வேண்டாதாயிற்று. இறந்தாரென்னுஞ் சொல் இழிவு தருதலின், தூற்றப்பட்டார் எனப்பட்டது.

22 வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின் ; யாரும்
நிலவார் நிலமிசை மேல்.

(பொ-ள்.) வாழ்நாட்கு - ஆயுள்நாட்களுக்கு, அலகா - அளவு காணும்படி, வயங்கு ஒளி மண்டிலம் - விளக்குகின்ற கதிரவன் என்னும் ஒளிவட்டம், வீழ்நாள் படாது எழுதலால் - வீண் நாள் படாமல் தொடர்பாகக் தோன்றி வருவதனால், வாழ்நாள் உலவாமுன் - அம் முறையே கணக்கிடப்பட்டு ஆயுள்நாள் அற்றுப்போகுமுன், ஒப்புரவு ஆற்றுமின் - உதவி செய்யுங்கள்; மேல் - அந்த ஆயுள் நாளுக்குமேல், யாரும் நிலவார் நிலமிசை - யாரும் இவ்வுலகத்தில் நிலைக்கமாட்டார்கள்.

(க-து.) கதிரவன் நாடோறுந் தோன்றுதலால் நாட்கணக்குத் தெரிதலின், அக் கணக்குக் கொண்டு வாழ்நாள் கழியுமுன் அறஞ் செய்துகொள்க.

(வி-ம்.) அலகா - அலகாக, அஃதாவது அலகு கண்டு கொள்ளும் வகையில் , அலகு - அளவு ; ஒளி மண்டிலம் - இங்கே பகலவன். ஒரு நாளாவது தவறாமல் என்றற்கு ‘வீழ்நாள் படாது' எனப்பட்டது. வீழ்நாள்; தவறும் நாள் ; தப்பிப்போகும் நாள் உண்டாகாதபடி என்பது பொருள். நிலவார் என்பதற்கு பகுதி நில் என்பதாகலின், நிலைக்கமாட்டார் எனப பொருளுரைக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுதலாலேயே இருவரறிவும் ஒத்து இணக்கமுறுதலின், உதவி ‘ஒப்புரவு' எனப்பட்டது.

23 மன்றம் கறங்க மணப்பாறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் -பின்றை
ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.

(பொ-ள்.) மன்றம் கறங்க - பேரவை முழுதும் ஒலிக்கும்படி, மணப்பறையாயின - திருமண மேளமாய் முழங்கியவை, அன்று அவர்க்கு ஆங்கே - திருமண நாளன்று திருமண மக்களுக்கு அத்திருமணக் கூடத்திலேயே, பிணப்பறையாய் பின்றை ஒலித்தலும் உண்டாம் என்று - சாவுமேளமாய்ப் பின்பு ஒலித்தலும் நேருமெனக் கருதி, உய்ந்து போம் ஆறே - நன்னிலையுற்றுச் செல்லுவதற்கான அறவழியிலேயே, வலிக்குமாம் மாண்டார் மனம் - அறிவு மாட்சிமைப்பட்டோரது நன்மனம் துணிந்து நிற்கும் என்ப.

(க-து.) மணப்பறையே பிணப்பறையாகவும் மாறுமாதலின், யாக்கையின் நிலையின்மை கருதி உடனே அறஞ்செய்க.

(வி-ம்.) மன்றம் - அவை ; இங்கே, திருமணப் பேரவை, மணமக்கள் ஆணும் பெண்ணுமாயிருத்தலின் அவ்விருபாலார்க்கும் பொருந்த ‘அவர்க்கு' எனப் பலர் பாலாற் கூறினார். பெரும்பான்மை யன்றாகலின் ‘ஒலித்தலும் உண்டாம்' என்னும் உம்மை எதிர்மறை. ‘உய்ந்து போம் ஆறு' ,என்றது, பொதுவாக அறவழி. ஏகாரம்: பிரிநிலை. இளமையைத் துய்ப்பதா அறவழியிற் செல்வதா என இருதலைப்பட்டு ஐயுறும்போது, மாட்சிமைப்பட்டாரது மனம் அறவழியின் பக்கமே ஈர்ப்புறும் என்னும் இயல்பை ‘வலிக்கும்' என்னும் ஒரு சொல்லால் விளங்க வைத்தார். வலிக்குமாம் என்பதில் ‘ஆம்' என்ப என்னுங் குறிப்பினது ; அன்றி, அசையெனலும் ஒக்கும்.

24 சென்றே எறிப ஒருகால் ; சிறுவரை
நின்றே எறிப பறையினை - நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து.

(பொ-ள்.) சென்று - இறந்தவர் வீட்டுக்குப் போய், எறிப ஒரு கால் - பறையடிப்போர் ஒருமுறை பறைகொட்டுவர், சிறுவரை நின்று - சிறிது பொழுது நிறுத்தி, எறிப பறையினை - மீண்டும் அச் சாவுமேளத்தைக் கொட்டுவர், முக்காலைக் கொட்டினுள் - மூன்றாம் முறையாகக் கொட்டுமுன், செத்தாரைச் சாவார் சுமந்து - இறந்தவரை இனி இறப்பவர் சுமந்துகொண்டு, மூடி தீ கொண்டு எழுவர் - துணியால் மூடித் தீயைக் கைக்கொண்டு இடுகாட்டுக்குப் புறப்படுவர், நன்றே - இந்நிலை இன்பந் தருவதோ, காண் - எண்ணுக.

(க-து.) இறந்த பின்னும் உடல் சிறிது நேரமேனும் வீட்டிலிருக்க இடமில்லாமையின், யாக்கையின் நிலையாமையைக் கருதி, உடனே அறவழிக்கண் நிற்க.

(வி-ம்.) நன்றே என்னும் ஏகாரம் எதிர்மறை ஏனைய அசை . வரை- பொழுதின் அளவு ; சிறுவரை - சிறு பொழுதளவு. நின்று - நிறுத்தி என்னும் பொருட்டு, முக்காலைக் கொட்டினுள் - மூன்றாம் பொழுதின் கொட்டுதலுக்குள். சுமந்து எழுவர் என்று கொள்க. சாவார் - சாவோர் ; இவர் நிலையும் இன்னதே என்றதற்குச் ‘சாவார் சுமந்து என அச் சொல்லாலேயே கூறினார். இந்நிலையில்லா வாழ்வை நிலையாக எண்ணி இன்புறுவாரை நோக்கி,இது நன்றாகுமோ நினைமின் என்பார்' நன்றேகாண், என்றார்.

25 கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங் கொண்டீன்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.

(பொ-ள்.) கணம் கொண்டு - கூட்டம் கொண்டு, சுற்றத்தார் - உறவினர், கல் என்று அலற - கல்லென்று அலறி அழ, பிணம் கொண்டு - பிணத்தை எடுத்துக்கொண்டுபோய், காடு உய்ப்பார் கண்டும் - இடுகாட்டிற் கிடத்துவாரை நேரிற் பார்த்தும், மணம் கொண்டு - திருமணம் செய்து கொண்டு, ஈண்டு உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினான் - இவ்வுலகத்தில் இன்பம் உண்டு உண்டு உண்டு என்று கருதிம மயங்குகின்ற மயக்க உணர்வினையுடையானுக்கு, டொண் டொண் டொடு என்னும் பறை - டொண் டொண் டொடு என்று ஒலிக்கின்ற சாவு மேளம், சாற்றும் - அங்ஙனம் ஓரின்பம் இல்லை இல்லை இல்லை என்று சொல்லும்.

(க-து.) இவ்வுலக வாழ்க்கையை அறவழியிற் பயன் படுத்திக்கொள்ள வேண்டுமே யல்லாமல், இதில் இன்பம் உண்டென்று மயங்கலாகாது.

(வி-ம்.) கணங்கொண்டு, கூடி யென்னும் பொருட்டு. கல் : ஒலிக்குறிப்பு . உய்த்தல் - சேர்த்தல். உணர்வினாற்கு என நான்கனுருபு கொள்க. சாற்றுமே, அறிவுறுத்துமே என்பது அடுக்கு துணிவுக்கு1, உண்டு உண்டு உண்டு என்றதன் கருத்தை, அவ்வொலி போன்றதொன்றால் ஏளனத்தோடு மறுக்கும் முறையில் டொண் டொண் டொடு என்பது வந்தது ; சாப்பறையின் ஒலி முறையும் இவ்வொலிக் குறிப்போ டிருப்பது அதற்கு இயைந்தது.

(5)


1. தொல். எச். 15

26நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.

(பொ-ள்.) தோல் பையுள் நின்று - தோலாலான பையாகிய உடம்பினுள் இருந்து, தொழில் அறச்செய்து ஊட்டும் - தொழில்களை முடியச் செய்து அவ்வுடம்பை உண்பித்து வருகின்ற, கூத்தன் - கூத்தனை ஒத்த உயிர், புறப்பட்டக்கால் - வெளிப்பட்டு விட்டபின், நார் தொடுத்து ஈர்க்கில் என் - அவ்வுடம்பை நாரினாற் கட்டி இழுத்தா லென்ன, நன்று ஆய்ந்து அடக்கில் என் - நன்றாகத் தூய்மைசெய்து அடக்கஞ்செய்தால் என்ன, பார்த்துழிப் பெய்யில் என் - கண்ட இடத்திற் போட்டா லென்ன, பல்லோர் பழிக்கில் என் - அதனாற் பலரும் பழித்தாற்றான் என்ன ; வருகின்ற பெருமை சிறுமைகள் ஒன்றுமில்லை.

(க-து.) உயிர் நீங்கிய பின் உடம்பு இகழப்படுவ தொன்றாதலால், இவ்வுடலை ஓம்பி மகிழ்வதற்காக நற்செயல்களைக் கைவிடற்க.

(வி-ம்.) பார்த்தஉழி எனப் பிரிக்க; இழிவு தோன்றத் ‘தோற்பை', என்றார். அறச் செய்து என்றது, வேண்டுமளவும் என்னும் பொருட்டு ; இது முயற்சி மிகுதியைக் காட்டிற்று. கூத்தன் என்றார். அசைவோன் அவனே ; இவ்வுடம்பில் ஒன்றுமில்லை ; ஆதலால் இவ்வுடலை ஓம்புதற்காக அவ்வுயிரை ஓம்பும் அறச்செயல்களைக் கைவிடற்க என்றற்கு. உயிரைக் கூத்தன் என்றது உருவகம்.

27படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.

(பொ-ள்.) படு மழை மொக்குளின் - மழை நீரில் தோன்றுகின்ற குமிழியைப்போல, பல்காலும் தோன்றிக் கெடும் இது ஓர் யாக்கை - பல தடவையும் தோன்றித் தோன்றி விரைந்து அழிந்து போகின்ற ஓருடம்பு இது. என்று எண்ணி - என்று இதன் இழிவு கருதி, தடுமாற்றம் தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை - இங்ஙனம் பிறவியில் தடுமாறுதலை யாம் நீக்க முயல்வேம் என்று மெய்யுணரும் உறுதியான அறிவுடையவரை, நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல்- ஒப்பவர் யாவர் இப்பெரிய நிலவுலகத்தில் ; ஒருவருமில்லை.

(க-து.) யாக்கையின் நிலைமை நீர்க்குமிழி போன்றதாதலால், பிறவித் தடுமாற்றத்தைத் தீர்க்க முயல்பவரே உயர்ந்தவராவர்.

(வி-ம்.) மழை படு மொக்குள் என்று மாற்றிக்கொள்க ‘பல்காலும்' என்னுங் குறிப்பால் விரைந்து கெடுதலும் பெறப்படும். உவமையின் இயல்பு பொருளில் விளக்கப்பட்டது. தோன்றிக் கெடுதல் - பிறந்து இறத்தல். இது, ஓர் என்பன, இகழ்ச்சிப்பொருள். தடுமாற்றம், பிறவித் தடுமாற்றம், அது தீர்த்தலாவது, யாக்கை இன்பத்தை ஒரு பொருளாகக் கருதியொழுகாமல், அறவழியில் நின்று மெய்யுணர்ந்து வீடுபெற முயலுதல், மயங்கி வலைப்படாமையின், 1‘திண்ணறிவாளர்' என்றார். நோப்பார் யாருமில்லையெனவே, மேம்படுவாரின்மைதானே பெறப்பட்டது.

(7)


1. குறள். 35 :8.

28யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.

(பொ-ள்.) யாக்கையை - உடம்பை, யாப்பு உடைத்தாப் பெற்றவர் - உறுதியுடையதாகப் பெற்றவர், தாம் பெற்ற யாக்கையால் - தாம் அங்ஙனம் முன் நல்வினையினால் அரிதின் அடைந்த அந் நல்யாக்கையினால் , ஆய பயன் கொள்க- ஆகக்கூடிய புண்ணியப் பயனைக் காலந்தாழாமற் செய்து கொள்க. ஏனென்றால் ; மலை ஆடு மஞ்சுபோல் தோன்றி - மலையுச்சியில் உலவுகின்ற மேகம் போலக் காணப்பட்டு, மற்று ஆங்கே நிலையாது நீத்துவிடும் -பின்பு அங்ஙனம் காணப்பட்டபடியே நிலையாமல் இவ்வுடம்பு அழிந்துவிடும்.

(க-து.) நல்ல யாக்கையை அடையப் பெற்றவர்கள், அதனாலான அறப்பயன்களை உடனே செய்து முடித்துக் கொள்ளவேண்டும்.

(வி-ம்.) யாப்பு - உறுதி : நோயில்லாத நல்ல யாக்கையாகப் பெற்றவர்கள் என்பது கருத்து. பெறுதலின் அருமை நோக்கிப் ‘பெற்றவர்' என்றும், தாந்தாம் செய்த முன்னை நல்வினையினாலேயே அதனை அடைதல் கூடுமென்று அங்ஙனம் அடைதலில் இருந்த அருமையை மேலும் வலியுறுத்தக் கருதித் ‘தாம் பெற்ற,' என்றுங் கூறினார். ஆயபயன் - அறம்.

மேகம் திடுமெனத் தோன்றினாற் போலவே திடுமென அழிந்தும்போம் என்றற்குத் 'தோன்றி ஆங்கே' எனப்பட்டது. மற்று : வினைமாற்று. நீத்துவிடும் என்னுஞ்சொல் அழிந்துவிடும் என்னும் பொருளது. மேகம் நீரிலிருந்து தோன்றி அழகிதாய் வடிவமாய் நிறமாய் ஒளி ஒலிகளோடு பிறர் விரும்பி எதிர்நோக்கும்படி மேன்மையான இடத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்து பின் நீராகவே உருவழிந்து மறைந்துவிடுதல் போல, இவ்வுடம்பும் மண்ணிலிருந்து தோன்றி அழகியதாய் வடிவமாய்ப் பார்வையொளி பேச்சொலிகளோடு பிறர் விரும்பி எதிர் நோக்கும்படி செல்வாக்கான இடத்தில் உலவிக் கொண்டிருந்து பின் மண்ணாகவே உருவழிந்து போகும் என்று உவமையை விரித்துக் கொள்க.

29 புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை ; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.

(பொ-ள்.) புல் நுனிமேல் நீர்போல் - புல் நுனியில் நிற்கும் நீர்த்துளி போன்றது, நிலையாமை - யாக்கை நிலையாமை யென்பது ; என்று எண்ணி - என்று கருதி, இன்இனியே - இப்பொழுதே - இப்பொழுதே, செய்க அறவினை - அறச்செயல்கள் செய்க, ஏனென்றால் ; இன் இனியே நின்றான் இருந்தான் கிடந்தான் - இப்போதுதான் ஒருவன் இங்கே நின்றான் இருந்தான் படுத்தான், தன் கேள் அலறச் சென்றான். உடனே தன் உறவினர் அலறி அழும் படி இறந்துவிட்டான், எனப்படுதலால் - என்று உலகத்திற் சொல்லாப்படுவதனால் என்க.

(க-து.) புல் நுனி நீர்போல உடம்பு நொடிப்பொழுதிலும் மாய்தல் நேர்தலின் உடனே நற்செயல்கள் செய்து கொள்க.

(வி- ம்.) ‘எனப்படுதலால்' நிலையாமை புல் நுனி மேல் நீர்போல் ஆகும் என்று கூட்டுக. நுனிமேல் - நுனியில் . நீர்- பனிநீர் ; அது துளிநீராதலின் விரைந்து ஆவியாய்ப் போகும் ; யாக்கையின் நிலையாமை அத்தகையது. இனி இனி என்னும் அடுக்கு ‘இன்னனி ' யெனத்திரிந்து நின்றது ; "இன்னினி வாரா" 1என்றார் பிறரும்; இந்நொடியே என்னும் விரைவுப் பொருளது. நின்றான் இருந்தான் கிடந்தான் சென்றான் என்றதும் மிக்க விரைவு புலப்படுத்துதற்கு.

(9)


1. ஐங், 23 : 2

30கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.

(பொ-ள்.) வாளாது சேக்கை மரன் ஒழிய - சும்மா கூடு மரத்தில் கிடக்க, சேண் நீங்கு புள்போல - அதிலிருந்து தொலைவிலே பறந்து போய்விடும் பறவைகள் போல - மாந்தர்கள் - மக்கள், கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி - ஒருவரையும் கேளாமலே வந்து சுற்றங்களாய் ஒரு குடும்பத்தில் பிறந்து, யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து - பின்பு தம் உடம்பை உறவினரிடம் கிடக்கும்படி நீக்கி விட்டு, வாளாதே போவர் - பேசாமலே இறந்து போய் விடுவார்கள்.

(க-து.) சொல்லாமலே போய்விடுவதனால் இன்ன போது இறக்கும் நேரமென்பது தெரியாமையின், உடனே அறஞ்செய்து கொள்க.

(வி-ம்.) ‘வாளாதே' என்னுஞ் சொற்கள் இரண்டனுள் ஒன்று உவமத்துக்கும் ஒன்று பொருளுக்குங் கொள்க. மரம் மரன் என வந்தது போலி. சேண் நீங்கு என்னுங் குறிப்பால், திரும்பாமை புலப்பட்டது. புட்களில் அங்ஙனம் சேண் நீங்கிவிடும் புட்களே ஈண்டைக்கு உவமை. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தற்காகக் கூடுகட்டியிருந்து வினை முடிந்தபின் அக்கூட்டைவிட்டுச் சேண் நீங்கிவிடும் புட்கள் இவ்வுவமத்துக்குப் பொருந்தும் ; உயிரும் பிறர்க்குப் பயன்படும் பொருட்டே இவ்வுடம்பெடுத்துத் தங்குதலின் ஈது ஒக்கும். அதனாற்றான், கேளாதே வந்து வாளாதே போவர்; தமரின் பொருட்டு எடுத்த உடலாதலின் அத்தமர்க்கே அது கிடக்கும்படி நீத்து என்றார். ‘மாந்தர்கள் தோன்றிப், புட்போல நீத்துப் போவர்' எனக்கொள்க.

(தொடரும்)


2011/5/29 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Innamburan Innamburan

unread,
May 29, 2011, 3:11:41 PM5/29/11
to mint...@googlegroups.com

மணப்பாறையா? மணப்பறையா?
இ 

சீனுத்தாத்தா

unread,
May 29, 2011, 10:12:26 PM5/29/11
to மின்தமிழ்
மணப்பறை தான் சரி. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் கொடுக்கப் பட்ட
பொருள் = முரசு
On May 30, 12:11 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:

கி.காளைராசன்

unread,
May 30, 2011, 7:29:06 AM5/30/11
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம்
படித்து வருகி​றேன்,.

Venkatram Shrinivas

unread,
May 30, 2011, 3:04:30 PM5/30/11
to மின்தமிழ்
திரையை மூடுகஅறன் வலியுறுத்தல் 
 
அறத்துப்பால்
4. அறன் வலியுறுத்தல்
31அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.

(பொ-ள்.) மேலைத் தவத்தால் - முன் பிறப்பில் செய்த தவத்தின் பயனான செல்வ நிலைமையால், தவம் செய்யாதார் - மறுபிறப்பிற்கு வேண்டுந் தவத்தைச் செய்யாமல் இறந்து பிறந்தவர், அம் மறுபிறப்பில் ; அகத்து ஆரே வாழ்வார் - இம்மாளிகையில் வாழ்வார் எத்தகையவரோ, என்று எண்ணி அண்ணாந்து நோக்கி - என்று மதிப்பாகக் கருதித் தலை நிமிர்ந்து மாளிகையின் மேனிகையைப் பார்த்து, தாம் புகப்பெறார் - தாமாக உள்நுழையப் பெறாராய், புறங்கடை பற்றி - தலைவாயிலைப் பிடித்துக் கொண்டு, தாம் மிக வருந்தி இருப்பார் - தாம் மிகவும் வாடி ஒரு பயனுமின்றி நின்றுகொண்டிருப்பர்.

(க-து.) இப் பிறப்பில் அறஞ்செய்யாதவர் வருபிறப்பில் இரந்து நிற்பர்.

(வி-ம்.) அறஞ் செய்தல் உயிரோடு கூடவே அது நிலையாயிருந்து வருபிறப்பிலும் உதவும் என்று அதன் வலியுரைத்து வற்புறுத்தியவாறு. ‘அகத்து ஆரே' என்று பிரிப்பது பொருட் சிறப்புடையது. ஏ : வினா. தவமும் தவமுடையார்க்கு ஆகு 1மாதலின், ‘தவத்தால் தவஞ் செய்யாதார், ' என்றார்.


1. குறள், 27 : 2.(1)

32 ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறமறந்து
போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே - ஓவாது
தின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள்
சென்றன செய் துரை.

(பொ-ள்.) ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து - அறத்தை மறந்து பொருளை விரும்பி முயன்று நாம் மேலும்மேலும் பெருஞ் செல்வராவோம் ; போவாம் நாம் - நாம் இவ்வளவு விரைவில் இறந்துபோக மாட்டோம் ; என்னா - என்று எண்ணி, புலைநெஞ்சே - தாழ்ந்த தன்மையையுடைய நெஞ்சமே, ஓவாது நின்று உஞற்றி வாழ்தி எனினும் - இடைவிடாமல் தொழிலில் நிலையாயிருந்து முயன்று நீ நினைத்தபடியே வாழ்கின்றா யென்றாலும், நின் வாழ்நாட்கள் சென்றன - நின் ஆயுள் நாட்கள் இதோ கழிந்துவிட்டன, செய்வது உரை - மறுமைக்காக இனி என்ன செய்குவை சொல்.

(க-து.) பொருள்வாழ்வு முதன்மையன்று ; அறவாழ்வே முதன்மையானது.

(வி-ம்.) ஆவாம் போவாம் என்பன முறையே உடன் பாட்டிலும் எதிர்மறையிலும் வந்தன. போவாம் என்பது செய்யாம் என்புழிப் போலக் கொள்ளப்படும். நாம் இரு

33 வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்தனைத்
தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்
தெல்லை இகந்தொருவு வார்.

(பொ-ள்.) பேதை - அறிவில்லாதவன், வினைப்பயன் வந்தக்கால் - முன் தீவினையின் பயனாக இடர்கள் இப்போது வந்து தாக்கினால், வெய்ய உயிரா - உடனே கடுமையாகப் பெருமூச்சு விட்டு, மனத்தின் அழியும் - மனத்தின் வருந்தி ஊக்கங் கெடும் ; நினைத்து அதனைத் தொல்லையது என்று உணர்வாரே - ஆராய்ந்து அவ்விடரைப் பழைய வினையினால் வந்ததென்று தெரிந்து அதற்கேற்ப ஒழுகுவோரே, தடுமாற்றத்து எல்லை இகந்து ஒருவுவார் - கலக்கத்தின் எல்லையைக் கடந்து அப்பால் நீங்குவர்.

(க-து.) துன்பம் வந்தால் அதற்கு மனமழியாமல் அது நீங்க முயலவேண்டும்.

(வி-ம்.) பயன் என்றது இடர் ; வந்தக்கால் : வினையெச்சம், ‘அழியும்' என்பதற்கு அழிந்து ஊக்கங் கெடும் எனவும், ‘உணர்வார்' என்பதற்கு உணர்ந்து அதற்கேற்ப ஒழுகுவார் எனவும் உரைத்துக்கொள்க. ஏகாரம் : பிரிநிலை. நற்செயல்களினிடையே இடர் வந்தால், அந்நற்செயல்களால் அது வந்ததெனக் கருதி அவை செய்தலில் ஊக்கங் கெடாமல், தொல்லை வினையால் வந்ததெனத் தெளிந்து, அந்நல்வற்றைத் திருந்தச் செய்து நலம் பெற வேண்டும் என்பது பொருள்.

34அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க ; - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.

(பொ-ள்.) அரும்பெறல் யாக்கையை -அடைதற்கரிய உடம்பை, பெற்ற பயத்தால் - அடைந்த ஆக்கங்கொண்டு, பெரும்பயனும் - பெரும்பயன் என்னப்படும் புண்ணியச் செயல்களும், ஆற்றவே கொள்க - இயன்றவளவும் செய்துகொள்க ; கரும்பு ஊர்ந்த சாறுபோல் சாலவும் பின் உதவி - கரும்பு ஆட்டியெடுத்த சாறுபோல மிகவும் மறுமைக்கு அறப்பயன் உதவி, மற்று - பின்பு, அதன் கோதுபோல் போகும் உடம்பு - அக் கரும்பின் சக்கை போல இவ்வுடம்பு கழிந்துபோகும் இயல்பையுடையது.

(க-து.) உடம்பைத் தக்கவழியிற் புண்ணியச் செயல் கட்குப் பயன்படுத்திக் கொள்க.

(வி-ம்.) ‘அரும்பெறல் யாக்கை' யென்றமையால் மக்கள் யாக்கை என்பது பெறப்படும். "மக்களுடம்பு பெறற்கரிது,"1 என்றார் பிறரும். யாக்கை கிடைத்தது ஓர் ஆக்கம் ; உலகத்தில் வாழவும் காரியங்கள் செய்யவும் முடிந்தது ; அந்த ஆக்கத்தைக் குறித்தற்கு ‘யாக்கைபெற்ற பயம்' என்றார். அப்பயன் கொண்டு அறமும் செய்து கொள்க என்றற்குப் ‘பெரும் பயனும்' எனவும் இயன்ற அளவும் என்றற்கு ‘ஆற்றவே' எனவுங் கூறினார். ஏகாரம் இசை நிறை. ஊர்ந்த சாறு ஊர்ந்ததனால் உண்டான சாறு. ஆலைக்காரனுக்குக் கரும்பு அவன் பின் உதவிக்காக மிகவும் சாறு உதவித் தான் சக்கையாய்க் கழிந்தது ; அப்படியே அறவொழுக்முடையானுக்கு உடம்பு அவன் மறுமையுதவிக்காக மிகவும் புண்ணியம் உதவித் தான் கோது போலக் கழியும் தன்மையது என்று உவமையை விரித்துக் கொள்க ; நற்செயல்களில் உடம்பைச் சாறுபோலப் பிழிய வேண்டும் என்பது இது ; "வருந்தி உடம்பின் பயன் கொண்டார்,"2 என்பர் மேலும். அறவழிகளில் நல்ல உழைப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கருத்து.

1. அறநெறிச் . 69 .
2. நாலடி 4 : 5.

4)

4. அறன் வலியுறுத்தல்
35கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் ;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.

(பொ-ள்.) சிறு காலை - மிக்க காலைநேரத்தில், கரும்பு ஆட்டி - கரும்பை ஆலையில் ஆட்டி, கட்டி கொண்டார் - சருக்கரைக் கட்டியைச் செய்துகொண்டவர், துரும்பு எழுந்து - அக் கரும்பு பின் துரும்பாகித் தோன்றி, வேம் கால் - தீயில் வேகும்போது, துயர் ஆண்டு உழவார் - அது கண்டவிடத்தில் துன்பத்தினால் வருந்தார், அதுபோல் வருந்தி உடம்பின் பயன் கொண்டார் - நற்செயல்களில் உழைத்து உடம்பாலான அறப்பயனைப் பெற்றவர், கூற்றம் வருங்கால் - நமன் வருகின்ற காலத்தில், பரிவது இலர் - தம் உடம்பின் கேடு குறித்து இரங்குதல் இலராவர்.

(க-து.) மிக்க இளமையிலிருந்தே அறச்செயல்களில் உழைத்து வந்தால், இறந்துபோகும்போது துன்பமுண்டாகாது.

(வி-ம்.) கரும்பை மிக்க கலைநேரத்தில் ஆலையில் இட்டுச் சாறு பிழிந்தால் அது பதங்கெடாததுபோல அறப்பயன் கோடலும் வாழ்நாளின் காலை நேரமான இளமைப் பருவத்திலேயே நிகழ்தல் வேண்டுமென்பதும் அறிவுறுத்தப்பட்டது. சிறுகாலை - இளங்காலைநேரம். வேம் - வேகும் ; ‘வேங் கால்' என்பதிற் காலம் பெறப்பட்டமையால், ‘ஆண்டு' என்பதற்கு இடப்பொருள் உரைக்கப்பட்டது. சாறு அற்ற கோது எரிதலில் தவக்கமில்லாததுபோல உழைத்து அறம் பயந்த உடம்பும் இறத்தலில் வேதனையின்றிக் கழலும்.

36 இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.

(பொ-ள்.) இன்றுகொல் அன்றுகொல் என்று கொல் என்னாது பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி - இன்றோ அன்றோ என்றோ என்று இகழ்ந்திராமல் பின்னாலேயே இருக்கின்றான் நமன் என்று மதித்து, ஒருவுமின் தீயவை - தீய செயல்களை நீக்குங்கள் ; ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம் - மாட்சிமைப்பட்ட நல்லோர் கூறும் அறச் செயல்களை இயன்ற வகையினால் தழுவிச் செய்யுங்கள் .

(க-து.) கூற்றுவன் எந்த நேரத்திலும் வருவான் என்று கருதி உடனே நல்லன செய்யவேண்டும்.

(வி-ம்.) நமன் வருவது இன்றோ அன்றோ என்றோ என்றற்கு, இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்றார். கொல் : ஐயப்பொருட்டு. இன்று அன்றும் இளமை முதுமைகளைச் சுட்டின. என்று என்றது வருங்காலம் உணராமையைச் சுட்டியது. அறஞ்செய்து மாட்சிமைப்பட்டவ ராதலின், ‘மாண்டார் அறம்' என்றார்.

37 மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.

(பொ-ள்.) மக்களால் ஆய பெரும்பயனும் - மக்கட் பிறவியினால் செய்யதக்க பெரும்பயனான நற்செயல்களும், ஆயுங்கால் - எண்ணிப் பார்க்கும்போது, எத்துணையும் ஆற்றப் பல ஆனால் - எவ்வளவும் மிகப் பலவாகு£தலால், தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாது - பல கருவிகளோடு கூடிய இவ்வுடம்புக்கே உதவிகள் செய்து கொண்டிராமல், உம்பர்க் கிடந்து உண்ணப் பண்ணப்படும் - மேலுலகத்தில் எளிதாக இருந்துகொண்டு இன்பம் நுகரும் பொருட்டு உயிருக்கான அறவினைகளே மிகவும் செய்து கொள்ளப்படுதல் வேண்டும்.

(க-து.) கருவியாக வந்த உடம்புக்கே காரியங்கள் செய்து கொண்டிராமல், உயிருக்கான காரியங்களையே மிகவும் செய்து கொள்ளல் வேண்டும்.

(வி-ம்.) உயிர்க்குரிய அறச்செயல்கள் ‘பெரும்பயன்' எனப்பட்டன. எச்சவும்மை, உடம்பிற்குரிய சிறுபயனைத் தழீஇயிற்று. உடம்பிற்குரிய சிறு செயல்களைச் செய்தற்கிடையே உயிர்க்குரிய எவ்வளவோ மிகப் பலவான பெருஞ்செயல்களையுஞ்செய்து கொள்ளலாமென்றற்கு, ‘எத்துணையும் ஆற்றப் பல' என்றார். ஆற்ற - மிக ; ஆனால் - ஆதலாலென்னும் பொருட்டு. உடம்பு, தன் காரியங்களைச் செய்துகொள்ளுதற்கு, இதயப் பை, மூச்சுப்பை, இரைப்பை, முதலிய அகக் கருவிகளும்; நா, பல் , கை, கால், கண், காது முதலிய புறக்கருவிகளும் பெற்றிருக்கின்றது ; இங்ஙனங் கருவிகள் தொக்க உடம்பாயிருத்தலால் அவ்வுடம்பு தானே தன் காரியங்களைச் செய்துகொள்ளும் என்றற்குத் ‘தொக்க உடம்பு ' என்று நினைவு கூட்டினார்; சிறப்பாகத் தாமே இயலுகின்ற அகக் கருவிகளை நினைந்தே அங்ஙனங் கூறப்பட்டது. ஆதலால், உடம்புக்கே உதவிசெய்து கொண்டிருக்க வேண்டிய கட்டாயமில்லை; செய்யவேண்டுவது உயிருக்கே என்று அறிவுறுத்தப்பட்டது. உடம்பு அதனியற்கையில் இயங்குமாறு விழிப்பாக நடந்துகொண்டால், அதன்பொருட்டுச் செயற்கையாக முயற்சிகள் எடுக்க வேண்டுங் கட்டாயமில்லாமற் போம் என்னுங் கருத்தும் இதுகொண்டு உணர்ந்துகொள்ளப்படும். ‘இடையறாமல் இங்ஙனம் செய்கை முயற்சிகளைச் செய்துகொண்டு வருந்தற்க,' என்றற்கு ‘ஒழுகாது,' என்றார். கிடந்து என்றது, எளிமை தெரியும் பொருட்டு.

38உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.

(பொ-ள்.) உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து - சிறிய அளவினதான ஓர் ஆலம் விதை, ஈண்டி - தழைத்து, இறப்ப நிழல் பயந்தாங்கு - மிகவும் நிழல் கொடுத்தாற் போல, அறப்பயனும் - அறச்செயல்களின் பயனான புண்ணியத்தைத் தரும் பொருளும், தான் சிறிதாயினும் - தான் அளவில் சிறியதேயானாலும், தக்கார் கைப்பட்டால் - தகுதியுடைய பெரியோர் கையிற் சேர்ந்தால், வான் சிறிதாப் போர்த்துவிடும் - வானமும் சிறிதென்னும்படி அவ்வளவு பெரிய புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும்.

(க-து.) சான்றோர்க்குச் செய்யும் உதவி மிகச்சிறியதாயினும், அது பெரும்பயன் தரும்.

(வி-ம்.) உறக்குதல் - சுருங்குதல் ; சிறிதாதல் . ஈண்டி - அடர்ந்து ; இங்குத் தழைத்து எனப்பட்டது. 'பயந்து ஆங்கு' எனப் பிரிக்க. அறத்தின் பயனைத் தரும் பொருள், ‘அறப்பயன் ' எனப்பட்டது. தக்கார் - ஞானவொழுக்கங்களால் உண்டாகும் தகுதியை உடையவர். தக்கார் கைப்பட்டக்கால் என்பதன் கருத்தைத் , தக்க இடத்தில் விதை முளைக்குமானால் என்று உவமத்துக்குங் கொள்க. புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும் என்றற்குப், ‘போர்த்து விடும்' என்றார்.

(8)

"உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
"

என்னும் குறள் ஈண்டு நினைவு கூரற் பாற்று.

39வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.

(பொ-ள்.) வைகலும் - நாடேறும், வைகல் வரக்கண்டும் - நாட்காலம் தோன்றிவரக் கண்டும், அஃது உணரார் - அறத்தைக் கருதாதவராய், வைகலும் - என்றும், வைகலை வைகும் என்று இன்புறுவர் - நாட்பொழுதை அது நிலைத்திருக்கும் என்று கருதித் துய்த்து மகிழ்வர் ; அவர் யாரெனின், வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல் - ஒவ்வொரு நாளும் அந் நாட்பொழுது தம் ஆயுள் கழிதலின்மேல் நிற்றலாக, வைகலை வைத்து உணராதார் - அந் நாட்காலத்தைக் கருத்திருத்தி அறியாதவர்.

(க-து.) நாடோறும் வாழ்நாட்கள் ஒவ்வொரு நாளாகக் கழிந்து போதலின், அந் நாட்களைத் துய்த்து இன்புற்றுக்கொண்டிராமல் உடனே அறஞ்செய்து கொள்ளவேண்டும் என்பது.

(வி-ம்.) வைகலை வைத்து உணராதார் அஃது உணராராய் இன்புறுவர் என்று கொள்க, வாழ்நாட்கள் ஒவ்வொரு நாளாகக் கழிந்து போவதற்கு நாட்கள் அடையாளமாய் நிற்றலின் ‘வைகல் வரக்கண்டும்' எனப்பட்டது. வைகலை உணராதார் என்று ஈற்றடியில் வருதலால் அஃதுணரார் என்றது அறத்தைக் கருதாதவராய் என்பது உணர்த்தும். அதிகாரம் அறன்வலியுறுத்தலாதலாலும், வைகலை இன்புறுதலுக்கு வேறானது அறஞ்செய்தலாதலாலும், அறத்தை அஃதெனச் சுட்டினார். "அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று,"1 என்றார்போல.

1. குறள், 5 : 9.

40மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.

(பொ-ள்.) ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் - இழி தொழில்களால் உண்பித்த இடத்தேனும், உறுதி சேர்ந்து இவ்வுடம்பு நீட்டித்து நிற்கும் எனின் - உறுதி பொருந்தி இந்த உடம்பு காலம் நீண்டு நிலைபெறுமென்றால், மான அருங்கலம் நீக்கி - மானமாகிய பெறற்கரிய அணிகலனை விடுத்து, இரவு என்னும் ஈன இளிவினால் வாழ்வேன் மன் - இரத்தல் என்னும் ஏளமான இழிதொழிலினால் உயிர் வாழ்வேன் ; ஆனால் அவ்வுடம்புதான் நிலைக்கப்போவதில்லையே.

(க-து.) என்றும் நிலையாயிருக்கும் உயிர்க்குணங்களுக்குரிய அறச்செயல்களே செய்யத்தக்கவை.

(வி-ம்.) இழந்தால் மீண்டும் பெறற்கரியதாகலின், ‘அருங்கலம்' என்றார் ; உடம்பு நிலையாது என்னும் ஒழிந்த பொருளைக் காட்டுதலின், மன ஒழியிசை. உறுதி - கட்டுத் தளராத நிலை. நீட்டித்து : தன்வினைப் பொருளாது.


2011/5/30 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
May 31, 2011, 3:08:25 PM5/31/11
to மின்தமிழ்
தூய்தன்மை 
 
அறத்துப்பால்
5. தூய்தன்மை
(அஃதாவது, தூயதல்லாமை; உடம்பின் அழுக்குடைமையை உணர்த்திற்று. மகளிருடம்பு அழகியதெனக் கருதப்படுதலின் அதன் தூய்தல்லாமையைப் பெரும்பாலும் இவ்வதிகாரம் விளக்கிற்று.)
41மாக்கேழ் மடநல்லாய் என்றரற்று சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.

(பொ-ள்.) மா கேழ் மட நல்லாய் என்று அரற்றும் சான்றவர் - மாந்தளிர் போன்ற இளநங்கையே என்று மாதரை நோக்கிப் பலகாலுங் கூறி உருகும் பெரியோர்கள், நோக்கார்கொல் நொய்யது ஓர் புக்கிலை - அம் மாதராரது தாழ்ந்த சிற்றுடம்பின் இயல்பை எண்ணிப் பாரார்களோ , யாக்கைக்கு ஓர் ஈச்சிறகு அன்னது ஓர் தோல் அறினும் - அவ்வுடம்புக்கு ஓர் ஈயின் சிறகைப் போன்றதொரு தோல் அறுபட்டாலும், வேண்டுமே காக்கை கடிவதோர் கோல் - காக்கையைத் துரத்துவதொரு கோல் வேண்டியிருக்கும்.

(க-து.) உடம்பு அழுக்குடையதென்று உணர்ந்ததொழுக வேண்டும்.

(வி-ம்.) மா - மாந்தளிர் ; கேழ் : உவமப்பொருளது. இச்செய்யுள் உடம்பை நோக்கியதாகலின், நல்லாய் எனப்தற்குப் பொதுவில் ‘பெண்' என்று உரைத்துக் கொள்ளவேண்டும். தாங் காமுற்றும் மாதரார்பால் இங்ஙனம் பல முறையுங் கூறி உள்ளங்கரைந்து குறையிரப்பது தோன்ற ‘அரற்றும்' என்றார். சான்றவர் என்றது, இகழ்ச்சி . உயிர் புகுந்திருக்கும் இல்லமாதலின், உடம்பு ‘புக்கில் ' எனப்பட்டது. "புக்கில் அமைந்தின்று கொல்லோ " என்றார் வள்ளுவரும். ஓர் - சிறிய என்னும் பொருட்டு. பின் இரண்டடிகளில் யாக்கையின் தூய்தல்லாமை காட்டப்படுதலாலும் உடம்பின் தாழ்ந்த தன்மை தோன்ற இங்கும் ‘நொய்யது' என்றொரு சொல் வந்தமையாலும் மீண்டும் இழிவு தோன்றும்படி ‘துச்சில்' எனப்பாடங் கொள்ளுதல் சிறப்பன்று ; புக்கில் என்னும் பாடம் பொருட் போக்குக்கும் பொருந்தும். மிகச்சிறிய அளவுக்கும் மீந்தோல்நிலைமைக்கு ‘ஈச்சிறகு' கூறினார். காகத்தைக் கூறினமையின், புண் மிகுதி தோன்றிற்று.

42தோல்போர்வை மேலும் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித் துடம்பானால் - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.

(பொ-ள்.) தோல் போர்வை மேலும் தொளை பல வாய் - தோலாலான போர்வையின் மேலும் தொளைகள் பலவாகி, பொய் மறைக்கும் மீ போர்வை மாட்சித்து உடம்பானால் - அவற்றின் உள் அழுக்குகளை மறைக்கும் மேற்போர்வையாகிய ஆடையின் பெருமையையுடையது இவ்வுடம்பென்றால், காமம் புகலாது -அவ்வுடம்பைக் காமத்தால் மகிழாமல், மீப்போர்வை பொய் மறையா - அம்மேற் போர்வையாகிய ஆடையை அழுக்கு மறைக்குந் திரையாகவும், மற்றதனை - மற்றொரு போர்வையாகிய தோற் போர்வையை, பை மறியா - ஒரு பையின் திருப்பமாகவும், பார்க்கப்படும் - நினைத்துப் பார்த்து விருப்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.

(க-து.) உடம்பின் அழுக்குடைமையை எண்ணிப் பார்த்து அதன்மேல் உண்டாகும் அவாவை நீக்கிக்கொள்ள வேண்டும்.

(வி-ம்.) பலவாய் என்னும் வினையெச்சம் காரணப்பொருட்டு ; தொளை பலவானமையால் மேலே ஆடை போர்க்க வேண்டியதாயிற்று என வருதலின். மாட்சித்து என்றது, இகழ்ச்சி. மறையா மறியா : இரண்டிடத்தும் ஈறு கெட்டது ; எண்ணும்மை விரித்துக் கொள்க. மற்று : பிறிதென்னும் பொருட்டு. பையின் உட்புறத்தை மேற்புறமாகத் திருப்பிப் பார்ப்பதுபோல என்றற்குப் ‘பைம்மறியா' எனப்பட்டது. இங்கே தோலின் உட்புறத்தை நினைத்துப் பார்க்க வேண்டுமென்பது கருத்து. பார்க்கப்படுமென்பது ஒரு வியங்கோள் ஈறு ; பார்த்து நீக்கப்படும் என்னுங் கருத்தும் அடங்கி நின்றது. "மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்"1 என்றார் பிறரும்.

(2)

1. மணிமே 4 : 120 - 1.
43தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடி
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டு வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.

(பொ-ள்.) தக்கோலம் தின்று - தக்கோலம் முதலிய மணப்பொருள்களை வாயில் மென்று, தலை நிறையப் பூ சூடி - தலை நிரம்ப மணமலர் சூடி, பொய் கோலம் செய்ய - செயற்கை அழகுகளைச் செய்து கொள்வதனால், ஒழியுமே - நீங்கிவிடுமோ?, எக்காலும் உண்டி வினை உள் உறைக்கும் எனப் பெரியோர் கண்டு கைவிட்ட மயல் - எப்பொழுதும் உணவுத் தொழில் உள்ளே அழுக்கை மிதக்கும் என்று பெரியோர் தெரிந்து விருப்பத்தை ஒழித்த இவ்வுடம்பின் அழுக்கு.

(க-து.) செயற்கையாக எவ்வளவு மணப்பண்டங்கள் ஊட்டினாலும் உண்ணுந்தொழில் அழுக்கை மிகுத்துக் கொண்டேயிருக்குமாதலால், இவ்வுடம்பின் மேல் விருப்பங் கொள்ளுதலிற் பயனில்லை.

(வி-ம்.) இயல்பல்லாத கோலம் பொய்க்கோலம் எனப்பட்டது. ஏகாரம், வினா. உறைத்தல் - தனது நிலையை மிகுவித்தல். மயல், அழுக்கென்னும் பொருட்டு. ‘மயல் ஒழியுமே' என்று கூட்டிக்கொள்க. ஒழியாது என்றபடி.

44தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.

(பொ-ள்.) தெள் நீர் குவளை - தெளிவான நீரில் உள்ள குவளைமலர், பொரு கயல் - புரள்கின்ற கயல்மீன், வேல் - வேற்படை, என்று - என்று சொல்லி, கண்இல் புன் மாக்கள் - மெய்யறிவில்லாத தாழ்ந்த மக்கள், கவற்ற விடுவெனோ - எனதுள்ளத்தைக் கவலைப்படுத்த இடம் விடுவேனோ, உள்நீர் களைந்தக்கால் - உள்ளுள்ள நீர் நீக்கப்பட்டால், நுங்கு சூன்றிட்டு அன்ன - நுங்கு தோண்டி விட்டாற்போன்ற, கண் நீர்மை கண்டு ஒழுகுவேன் - கண்ணின் இயல்பை அறிந்து பற்றற் றொழுகுவேனான நான்.

(க-து.) உடம்பின் அழுக்கியல்பு தெரிந்து அதன் கண் பற்றற் றொழுகுதல் வேண்டும்.

(வி-ம்.) கண்களைக் குவளைமலர் என்றும் கயல்மீன் என்றும் ஒப்புமையாற் கூறும் மரபுபற்றி அவற்றைக் குறிப்பிட்டார். மாதரை அவர்க்குரிய பெண்மைப் பண்பு1 அறிந்து போற்றாமல் காமங் காரணமாக அவருடம்பை நச்சித் திரிவாரை உட்கொண்டு, ‘கண்ணில் புன்' என்றதன் மேலும் மக்கட்பண்பில்லாதவர் என்னுங் கருத்தால் மாக்கள் எனவுங் கூறினார். மாக்கள் என்பது மக்கட் பிறவியின் முன்நிலை.2 உள்நீர் - கண்ணின் உள்ளுள்ள நீர். கண்டொழுகுவேன் கவற்றவிடுவெனோ என்று கொள்க. ஓகாரம், எதிர்மறை. மேல்வருஞ் செய்யுட்கும் இவ்விளக்கத்திற் சில கொள்க.

(4)

1. கலி. 23 :12

2. தொல் . மரபி : 32

45முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
எல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.

(பொ-ள்.) முறுவல் முல்லை முகை முத்து என்று - மாதர் பற்கள் முல்லையரும்புகள் முத்துக்கள் என்று, இவை பிதற்றும் - இப் புனைவுகளை அறிவின்றிச் சொல்லிக்கொண்டிருக்கின்ற, கல்லாப் புன்மாக்கள் - மெய்ப்பொருள் கல்லாத தாழ்ந்த மக்கள், கவற்றவிடுவெனோ - எனதுள்ளத்தைக் கவலைப்படுத்த விடுவேனோ!, எல்லாரும் காணப்புறங்காட்டு உதிர்ந்து உக்க பல் என்பு - எல்லாரும் பார்க்கும் படி சுடலையில் பலவாய் வீழ்ந்து சிந்திய அவர்போன்றாருடைய பல்லெலும்புகளை, கண்டு ஒழுகுவேன் - பார்த்து அதனாற் பற்றற் றொழுகுவேனான நான்.

(க-து.) முன் செய்யுட்குக் கூறியதே கொள்க.

(வி-ம்.) பிதற்றுதல் - அறிவு மயங்கிச் சொல்லுதல். ஊருக்கும் புறம்பேயுள்ள காடாதலின், புறங்காடெனப்பட்டது.

46 குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.

(பொ-ள்.) குடரும் கொழுவும் குருதியும் என்பும் தொடரும் நரம்பொடு தோலும் இடையிடையே வைத்த தடியும் வழும்பும் ஆம் இவற்றுள் - குடலும் கொழுமையும் குருதியும் எலும்பும் தசைநாரும் நரம்பும் தோலும் இவற்றின் இடையிடையே வைத்த தசையும் கொழுப்பும் ஆகின்ற இவ்வுடற் பொருள்களுள், எத்திறத்தாள் ஈர் கோதையாள் - எப்பகுதியைச் சேர்ந்தவள் இனிய மாலையையணிந்த மாது.

(க-து.) பெண்மை யென்பது பெண்ணின் உடம்பில் இல்லை.

(வி-ம்.) பெண்ணுடம்பில், வெறுங் குடர் கொழு நரம்பு தோல் முதலியனவே உள ; ஆதலின் அவ்வுடம்பிற் பற்றுவைத்து அறத்தைக் கைவிடுதல் ஒவ்வாது என்றபடி . மேல் வழும்பு என வருதலின் கொழுவென்றது, இங்கே இளமைச் செழுமை, தொடர் வேறாகவும் நரம்பு வேறாகவும் கொள்க. மகளிரின் அழகிய பண்பை அவரது உயிரறிவில் வைத்துக் காணின் அவருடம்பிற் பற்று நீங்குமாகலின், இவ் வுடற்பொருள்களுள் மாது எப்பகுதியினள் என்றார்.

ஈர்-இனிமை: "ஈர்ங்கொடிக்கே"1 என்னுந் திருக்கோவை யார்க்குப் பேராசிரியரும் இவ்வாறு பொருளுரைத்தமை காண்க.

1. திருக்கோ : 28.
47 ஊறி உவர்த்தக்க ஒன்பதுவாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.

(பொ-ள்.) ஊறி உவர்த்தக்க - அழுக்குகள் ஊறி அருவருக்குத் தக்க, ஒன்பது வாய்ப்புலனும் - ஒன்பது சந்திடங்களும், கோதிக் குழம்பு அலைக்கும் கும்பத்தை - சீய்த்து அவ் வழுக்குக் குழம்பை அசைத் தொதுக்கும் உடலாகிய ஒரு குடத்தை, பேதை - அறிவிலான ஒருவன், மீ போர்த்த கருந்தோலால் கண் விளக்கப்பட்டு - அவ்வுடம்பின் மேலே போர்த்த பசுந்தோலினால் அவன் கண்கள் ஒளி செய்யப்பட்டு அதனால், பெருந்தோளி பெய்வளாய் என்னும் - பெரிய தோளையுடையாளே இட்ட வளையலுடையாளே என்று சொல்லி அழைப்பான். (என்னே பேதைமை! )

(க-து.) உடம்பின் அழுக்கு நிலையை உணர்ந்து அதன்மேல் பற்று நீங்கி அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

(வி-ம்.) ‘ஒன்பது இடங்களும் அழுக்கை ஒதுக்கும் படியான மலக்குடத்தைப், பேதையான், பெருந்தோளி பெய்வளாய் என்று அழைப்பான் , ‘என்பது தொடர் . மேல் போர்த்த தோல் உள் அழுக்கை மறைத்துத் தனது மேல் நிறத்தால் அவன் கண்களுக்கு அழகொளி தந்தன ; அதனால் அவன் கண்கள், உள் அழுக்கு உணர்ந்து இருளாமல் மேல் அழகு தெரிந்து விளக்கப்படுதலால், இங்ஙனம் அழைக்க விரும்பினன் என்பது. உண்மை இதுவாகலின், உடம்பின்மேற் பற்றறுகவென்பது கருத்தாயிற்று. தோளி :இயல்பு விளி. வளாய் : ஈறு திரிந்த விளி. 1 கண் விளக்கப்பட்டு : காரணப் பொருளது. கருமை, பசுமைப் பொருளில் வருதல், "கார்க் கரும்பின்,"2 என்னுமிடத்துப் "பசிய கரும்பின்" என நச்சினார்க்கினியர் எழுதிய உரையினால் அறிக.

1. தொல். விளி . 4.

2. பட் . 9.

48பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்
முடைச்சாகா டச்சிற் றுழி.

(பொ-ள்.) பண்டம் அறியார் - உடம்பாகிய பண்டத்தின் இயல்பை அறியாதவராய், படுசாந்தும் கோதையும் கொண்டு - அவ்வுடம்பின்மேல் அணியப்படும் சந்தனமும் மாலையுங் கருதி, பாராட்டுவார் - அவ்வுடம்பினமேற் பற்றுவைத் தொழுகுகின்றவர், கண்டிலர்கொல் - அறிந்திலர் போலும் ! மண்டி - நெருங்கி, பெடைச் சேவல் வன்கழுகு - பெண்ணும் ஆணுமான வலிய கழுகுகள், பேர்த்திட்டுக்குத்தும் முடைச் சாகாடு - உறுப்புக்களைப் புரட்டிக் குத்துகின்ற முடைநாற்றமுடைய இவ்வுடம்பாகிய வண்டியை, அச்சு இற்ற உழி - அவ் வண்டிக்கு அச்சுப்போன்றதான உயிர் முறிந்துவிட்டபோது.

(க-து.) செயற்கை யழகுகளால் இவ்வுடம்பைத் தூயதாகக் கருதிக்கொள்ளாலாகாது.

(வி-ம்.) பண்டம் என்றார், இழிவு கருதி, படுசாந்து - அணிந்த சாந்து. ‘முடைச் சாகாட்டை அதன் அச்சு இற்றபோது கண்டிலர் கொல் ' என்று கொள்க. அப்போது அதனைக் கண்டால் கழுகுகள் அதனைப் புரட்டிக் குத்தும் இயல்பு தெரியும் என்பது கருத்து. சாகாடு - வண்டி. உடம்பை வண்டி யென்றமையின் அதன் இயக்கத்துக்குக் காரணமான அச்சு உயிராயிற்று. ‘மண்டிப் பேர்த்திட்டுக் குத்தும் முடைச் சாகாடு,' என்று கூட்டுக. ‘குத்தல், என்னும் பாடம் கட்டுரைச் சுவைஉடையதன்று.

49கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து.

(பொ-ள்.) கழிந்தார் இடுதலை - இறந்துபோன வரது எரிக்கப்பட்ட தலை ஓடு, கண்டார் நெஞ்சு உட்கக் குழிந்து ஆழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - பார்த்தவர் மனம் அஞ்சும்படி உட்குழிந்து ஆழ்ந்த கண்ணிடங்களையுடையனவாய் இடுகாட்டில் தோன்றி, ஒழிந்தாரை - இறவாதிருக்கும் மற்றவரை, சிரித்து - ஏளனமாக நகைத்து, இற்று இதன் பண்பு - இவ்வுடலின் இயல்பு இப்படிப்பட்டது, போற்றி நெறி நில்மின் - அறத்தைக் கடைப்பிடித்து அவ்வழியில் நில்லுங்கள், என்று சாற்றுங்கொல் - என்று சொல்லும் போலும் !

(க-து.) அறம் கடைப்பிடித்து அந்நெறியில் நிற்க வேண்டும்.

(வி-ம்.) இடுதலை என்பதில், இடுதல் நெருப்பிலிடுதல் என்னுங் கருத்துடையது ; இடுகாடு எனப்பட்டதும் இப்பொருட்டு. ‘ஒழிந்தாரைச் சிரித்துச் சாற்றுங்கொல்' என்று கொள்க. கழிந்தார் என முன் வந்தமையின் ஒழிந்தார் இனி இறக்கவிருப்பார் மேல் நின்றது. இயல்பு கூறுதலின் ‘இற்று'1 எனப்பட்டது.

(9)

1. தொல் : கிளவி . 19
50 உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ண மென்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.

(பொ-ள்.) உயிர் போயார் வெண்தலை - உயிர் போனவரது தசை நீங்கிய வெண்ணிறமான எலும்புத் தலை, உட்கச் சிரித்து - கண்டார் அஞ்சும்படி நகைத்து, செம்மாப்பவரைச் செயிர் தீர்க்கும் - இவ்வுடம்பின் காரணமாக இன்புறுகின்றவரை அக் குற்றத்தினின்றும் விடுவிக்கக் கூடும், செயிர் தீர்ந்தார் - இதற்குமுன் இயல்பாகவே அப்பிழை நீங்கினவர், கண்டு இற்று இதன் வண்ணம் என்பதனால் - தாமே அறிந்து இத்தகையது இவ்வுடம்பின் தன்மை என்னுங் கருத்தினால், தம்மை ஓர் பண்டத்துள் வைப்பது இலர் - தமதுடம்பை ஒரு பொருளில் வைத்து மதிப்பதிலர்.

(க-து.) உடம்பின் தூயதல்லாத தன்மையை நினைத்தால், அதனை இன்புறும் பற்றுள்ளம் நீங்கும்.

(வி-ம்.) வெண்டலை - இடுகாட்டில் உருளுந் தசை நீங்கிய தலை. செம்மாத்தல் - இன்பத்தால் இறுமாந்திருத்தல். "மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்,"1 என்றார் நாயனார் . தம்மையென்பது, இங்கே அவரதுடம்பை. (உலகத்தின் நிலையாமை உணர்ந்து யான் எனது என்னும் இருவகைப் பற்றும் விட்டு மெய்யுணர்வில் ஒழுகுதல், உடம்பின்மேல் உள்ள பற்று, யான் என்னும் அகப்பற்று. செல்வம் முதலியவற்றின்மேல் உள்ள பற்று, எனது என்னும் புறப்பற்று. துறத்தல் - இவ் விருவகைப் பற்றுகளையும் விடுதல்.)

(10)

1. குறள் 108 : 4

(தொடரும்)


2011/5/31 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

கி.காளைராசன்

unread,
Jun 1, 2011, 6:04:53 AM6/1/11
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம்
படித்துக் ​கொண்டிருக்கி​றேன்,

சீனுத்தாத்தா

unread,
Jun 1, 2011, 1:26:56 PM6/1/11
to மின்தமிழ்
உக்கமூட்டும் மடலுக்கு எனது மகிழ்ச்சி கலந்த ஆசிகளும் வந்தனமும்
தங்களுக்கு உரித்தாகுக.

Venkatram Shrinivas

unread,
Jun 1, 2011, 3:12:05 PM6/1/11
to மின்தமிழ்
துறவு 
 
அறத்துப்பால்
6. துறவு

(உலகத்தின் நிலையாமை உணர்ந்து யான் எனது என்னும் இருவகைப் பற்றும் விட்டு மெய்யுணர்வில் ஒழுகுதல், உடம்பின்மேல் உள்ள பற்று, யான் என்னும் அகப்பற்று. செல்வம் முதலியவற்றின்மேல் உள்ள பற்று, எனது என்னும் புறப்பற்று. துறத்தல் - இவ் விருவகைப் பற்றுகளையும் விடுதல்.)
51 விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.

(பொ-ள்.) விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு - ஓரிடத்தில் விளக்கொளி வர அங்கே இருந்த இருட்டு நீங்கினாற்போல, ஒருவன் தவத்தின் முன் நில்லாது பாவம் - ஒருவனது தவமுயற்சியின் முன் அவன் அதற்குமுன் செய்ததீவினை நில்லாது, விளக்கு நெய் தேய்விடத்து - விளக்கின் நெய் குறையுமிடத்தில், சென்று இருள் பாய்ந்தாங்கு - இருட்டு மீண்டும் போய்ப் பரவினாற்போல, நல்வினை தீர்விடத்து நிற்கும் தீது - நல்வினை நீங்குமிடத்தில் தீவினை சென்று சூழ்ந்து நிற்கும்.

(க-து.) இடைவிடாமல் தவஞ் செய்யவேண்டும்.

(வி-ம்.) விளக்கென்பது தவம் : விளக்கெரிவதற்குக் காரணமான நெய்யென்பது, தவம் நிகழ்தற்குக் காரணமான நல்வினை என்று கொள்க. முன் நல்வினையினாலேயே தவம் நிகழுமென்பது, "தவத்தால் தவம் செய்யாதார்"1 என்று முன் வந்தமையின் பெறப்படும். ஆம் : இரண்டிடத்தும் அசை. புக மாய்ந்தாங்கு எனவும் தேய்விடத்துப் பாய்ந்தாங்கு எனவும் வருதலால், தவம் இடை விடாமாற் செய்யப்படும் என்பது பெறப்பட்டது. இஃது உவமையணி.

(1)


1. நாலடி 4 : 1.

52 நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.

(பொ-ள்.) நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - நிலையாமையியல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து, தலையாயார் - சிறந்தவர்கள், தம் கருமம் செய்வார் - தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள், தொலைவு இல்லா சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும் பித்தரின் - கற்று முடிதலில்லாத இலக்கண நூலும் கோள் நூலும் என்று இவை போல்வன கூவிக்கொண்டிருக்கும் பித்தரைவிட, பேதையார் இல் - அறிவிலாதவர் பிறர் இல்லை.

(க-து.) இலக்கணம் முதலிய கருவி நூல்களையே என்றுங் கற்றுக்கொண்டிராமல் நிலையாமை முதலியன உணர்ந்து உடனே தவஞ்செய்ய வேண்டும்.

(வி-ம்.) எண்ணும்மையும் ‘உள்ளன' வென்னும் ஒரு சொல்லெச்சமும் வருவித்துக் கொள்க. முதலில் நிலையாமை கூறினமையின், நோய் மூப்புச் சாக்காடு என்பன அவற்றால் வருந் துன்பங்களை உணர்த்தி நின்றன. தவம் உயிர்க்குரிய முயற்சியாதலின், தம் கருமம் எனப்பட்டது. "தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்"1 என்னும் பெருநாவலர் திருமொழியும் இங்கு நினைவு கூரற்குரியது. நல்வினை செய்யாமல் தீவினை செய்வார் கடையானவரும், மறுபிறவியின் நற்பயன் கருதி நல்வினை செய்வார் இடையானவரு மாகலின், பிறவியையே அஞ்சிப் பயன் கருதாது, தம் கடமையென்று கடைப்பிடித்துத் தவஞ்செய்வார் தலையானவரானார். கற்கக் கற்கத் துணிவு பெறாமல் பல்வேறு ஐயங்களுடன் முடிவின்றிச் செல்லுதலின், ‘தொலைவில்லாச் சத்தமும் சோதிடமும்' என்றார். ‘கலகல கூஉந் துணைல்லால்'2 என்றலின், இலக்கணம் இங்கே ‘சத்தம்' என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்டது; இலக்கண நூல் உணர்ச்சியே நல்ல கல்வித் திறமாதலாலும் அக்கருவிக் கல்வியைத் தக்கவாறு கற்றுக் கொண்டு உடனே மெய்யுணர்விற் செல்லுதல் வேண்டுமாதலானும் ‘சத்தம்' என்பதையும், நடப்பன நடக்குமென்று துணிந்து தவமுயலாமல் வாழ்நாள் நலங்களையே மேலும் மேலும் விரும்பிக் கோள் நூலையே அலசிக் கொண்டிருத்தல் நன்றாகாதாதலால் ‘சோதிடம்' என்பதையுங் குறித்தார். என்றாங்கு இவை யென்பதற்கு ‘என்று இவை போல்வன' என்றுரைத்துக் கொள்க. பிதற்றல் - அறிவின்றி இடைவிடாமற் கூறிக் கொண்டிருத்தல். கற்றும் மெய்யுணர்விற் செல்லாமையின் கல்லாதாரினும் இவர் பேதையார் என்றற்கு, ‘இவை பிதற்றும் பித்தரின் பேதையார் இல்' எனப்பட்டது.

(2)


1. குறள். 27 : 6
2. நாலடி . 14 : 10.

53 இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம் உய்யக் கொண்டு.

(பொ-ள்.) இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம் செல்வம் வலி என்று இவையெல்லாம் - இல்வாழ்வு, இளமை, எழுச்சி, அழகு, உயர்சொல், பொருள், வலிமை என்று இப்பேறுகளெல்லாம், மெல்ல நிலையாமை கண்டு - மெல்ல மெல்ல நிலையாமற் போதலை அறிந்து, தலையாயார் - பெரியோர்கள், தாம் உய்யக்கொண்டு - தாம் உய்யுங் கருத்துக்கொண்டு, நெடியார் துறப்பர் - காலம் நீட்டியாதவராய் உடனே இருவகைப் பற்றுந் துறப்பர்.

(க-து.) நிலையாமை உணர்ந்து துறவுள்ளங் கொள்வோரே துன்பங்களினின்றும் பிழைப்பவர்.

(வி-ம்.) எழில் இளமையின் கொழுந்து ; அஃதாவது அதன் வளர்ச்சி நிலையாகிய தோற்றப்பொலிவு ; வனப்பு - உறுப்புக்களின் திருந்திய அமைப்பு ; "சீயமன்னான் இளமையும் வனப்பும் ஏரும்"1 என்றார் பிறரும். மீக்கூற்றம் - மேம்பாடான சொல் ; என்றது, தன் சொல் உலகத்திற் செல்லுதலை. இல்லம் என்பதிற்போலக் கூற்றம் என்பதிலும் அம் சாரியை. வலி - துணைவலி முதலியன. ஒவ்வொன்றாக நிலையாமற் போதலின் ‘மெல்ல நிலையாமை' யென்றார். தலையாயார் நிலையாமைக் கண்டு தாம் உய்யக் கொண்டு நெடியாராய்த் துறப்பர் என்க.

(3)


1. சிந். 7 : 165.

54 துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா
றடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.

(பொ-ள்.) ஏழையார் - அறிவிலார், துன்பம் பல நாள் உழந்தும் - பல நாட்கள் துன்பத்தால் வருந்தியும், ஒரு நாளை இன்பமே - சிறிதுபோழ்து நுகரும் ஒரு நாளைய இன்பத்தையே, காமுறுவர் - விரும்புவார் ; ஆன்று - கல்வி கேள்விகளால் நிறைந்து, அமைந்தார் - அதற்குத் தக்கபடி அடங்கி யொழுகும் பெரியோர், இன்பம் இடை தெரிந்து -இன்பம் அங்ஙனம் இடையே சிறிது உளதாதல் தெரிந்து - இன்னாமை நோக்கி - துன்பத்தின் மிகுதியை அறிந்து மனை ஆறு - இல் வாழ்க்கையின் வழியில், அடைவு - சார்ந்து நிற்பதை, ஒழிந்தார் - நீங்கினார்.

(க-து.) உலகத்திற் பல துன்பங்களினிடையிற் சிறிது இன்பமுண்டாதலின், அந் நிலை தெரிந்து தவம் முயலுதல் வேண்டும்.

(வி-ம்.) ‘நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை செல்வம்,'1 ஆதலின் இங்கே ஏழையார் என்றது அறிவில் வறுமையுடையாரை. மனையாறு அடைவொழிந்தார் என்றது, மேன்மேலும் இளமை துய்த்தலிற் பற்றுள்ளம் நீங்கினாரென்றற்கு.

(4)


1. நாலடி. 26 : 1.

55கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே
பிணியொடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
பிணியொடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
என்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு.

(பொ-ள்.) கொன்னே கழிந்தன்று இளமையும் - இளமைப் பருவமும் வீணே கழிந்தது, இன்னே பிணியொடு மூப்பும் வரும் - உடனே நோயோடு கிழத்தனமும் வரும், ஆல் - ஆதலால், துணிவு ஒன்றி என்னொடு சூழாது எழு நெஞ்சே - துணிதல் பொருந்தி என்னோடு ஆராயாமல் புலன்களின் வழியிற் செல்கின்ற நெஞ்சமே, போதியோ நல் நெறி சேர நமக்கு நல்வழி உண்டாக நீ என்னுடன் வருகின்றனையா ?

(க-து.) புலன்வழிச் செல்லுதலைத் தவிர்த்து மனத்தைஅறவழியிற் செலுத்துதல் வேண்டும்.

(வி-ம்.) கழிந்தன்று - கழிந்தது ; அன் : சாரியை இன்னே - உடனே என்னும் பொருட்டு ; இது நெஞ்சத்தின் இயல்பு கூறித் திருத்திபடியாம்.

56 மாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லெனினும்
பூண்டான் கழித்தற் கருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார்.

(பொ-ள்.) மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல் எனினும் - திருமணம் ஆனபின் மனைவிக்கு மாட்சிமைப்பட்ட குணத்தோடு குழந்தைப்பேறும் இல்லை யென்றாலும், பூண்டான் கழித்தற்கு அருமையால் - கொண்ட கணவன் அவளை விட்டுவிடுவதற்கு அருமையாகுமாதலால், பூண்ட மிடி என்னும் காரணத்தின் - மேலும் தனக்கு உண்டாகும் வறுமை யென்னும் காரணமுங்கொண்டு, மேன்முறைக் கண்ணே - மேலான ஒழுக்க நெறியிலே, கடி என்றார் கற்றறிந்தார் - பற்றினை நீக்கு என்றனர் கற்றறிந்தோர்.

(க-து.) இளமையிலேயே தவம் முயலுதல் நல்லது.

(வி-ம்.) காரணத்தின் என்பதற்கு காரணத்தினாலும் என இறந்தது தழீஇய எச்சவும்மை கொள்க. மேலான ஒழுக்கநெறி யென்றது, இங்கே தவநெறி, அந்நெறிக்கண் நிற்கும் ஆற்றலாலேயே பற்றினைக் கடியும் உள்ளம் தோன்றுதலின், ‘மேன்முறைக் கண்ணே கடி' யென்றார்1 எனப்பட்டது. "அப்பற்றைப் பற்றுக, பற்று விடற்கு," என்பதனானும் இம்முறைமை பெறப்படும்.

(6)


1. குறள். 35 : 10.

57 ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.

(பொ-ள்.) ஊக்கித் தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய - முயன்று தாம் மேற்கொண்ட நோன்புகள் உள்ளத்தில் தளர்வடையும்படி, தாக்க அருந் துன்பங்கள் தாம் தலைவந்தக்கால் - போக்குதற்குரிய துன்பங்கள் தம்மிடம் வந்தடைந்தால், நீக்கி நிறூஉம் உரவோரே - எப்படியானும் அத் துன்பங்களைப் போக்கித் தம் நோன்புகளை நிலை நிறுத்திக் கொள்ளும் வலியுடையோரே, நல்லொழுக்கம் காக்கும் திருவத்தவர். துறவொழுக்கத்தினைக் காத்துக் கொள்ளும் பேறுடையவராவர்.

(க-து.) இன்னல்களை எதிர்த்துத் தவம் முயலுதல் வேண்டும்.

(வி-ம்.) ‘தாங்கரு' என்பது ‘தாக்கரு' என வலித்ததெனினும் ஒக்கும். ‘துன்பங்கள் தாம்' என்பதில் தாம் சாரியை, நிறூஉம் - நிறுத்தும் ; உள்ள உரம் உடையோரே இடைவரும் இன்னல்களை நீக்கித் தம் நோன்புகளை நிலை நிறுத்திக் கொள்ளுதல் கூடுமாகலின், ‘உரவோரே ' என்றார். ஏகாரம் பிரிநிலை. நல்லொழுக்க மென்றது இங்கே துறவொழுக்கத்தை. திருவத்தவர் என்பதில் ‘அத்து' ‘அ' சாரியைகள். முற்றுகர ஈறு, வேற்றுமையில் அத்துச் சாரியையுடன் வகர உடம்படுமெய் பெற்றுப் புணர்ந்தமை, ‘கிளந்தவல்ல'1 என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்ளப்படும்.

(7)


1. தொல். குற்றிய ; 78.

58தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.

(பொ-ள்.) தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி - காரணமின்றித் தம்மைப் பிறர் இகழ்ந்தமையைத் தாம் பொறுத்துக் கொள்வதல்லாமல், எம்மை இகழ்ந்த வினைப் பயத்தால் - எம் போல்வாரை இங்ஙனம் இகழ்ந்த தீவினையின் பயனால் , உம்மை - மறுமையில், எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று - ஒரு கால் அழலிடமான நரகத்தில் அவர் வீழ்வரோ என்று, பரிவதும் சான்றோர் கடன் - இரங்குவதும் தவம் நிறைந்தவரது கடமையாகும்.

(க-து.) தவமுயற்சியில் நிற்பவர், தம்மை இகழ்பவர் பால் பொறுமையும் இரக்கமுங் கொள்ளவேண்டும்.

(வி-ம்.) மற்று ; வினைமாற்றுப் பொருளது. எம்மை தன்மைப் பன்மை; தனித்துத் தம்மை நினையாராகலின் பிறரையும் உட்கொண்டே ‘எம்மை' யெனக் கூறுவரெனக் கொள்க. நல்லோர்பாற் பிழை செய்தமையின் அவரிரக்கத்தால் ஒருகால் உய்தலும் கூடுமாதலின், ‘வீழ்வர்கொல் ' என்பதிற் ‘கொல்' என்பதை ஐயப்பொருட்டாகவே கொள்ளுதலில் இழுக்கில்லை. சான்றோர் பரிவையும் அது மிகுதிப்படுத்தும், சான்றோர் அவர்பாற் பரிவு கொள்ளா விட்டால், அவருள்ளம் ஒருகால் அப்பிழை செய்தோர்க்குக் கேடு நினைந்து தன்னையே மாசுபடுத்திக் கொள்ளவும் கூடுமாதலாலும், தவத்தோர் நல்லது நினைத்தால், அவர் ஆற்றலுடையோராதலின், பிழை செய்தவர் திருத்தவுங் கூடுமாதலாலும் அங்ஙனம் பரிவதனைக் ‘கடன்' என்றார்.

59மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும

(பொ-ள்.) மெய் வாய் கண் மூக்கு செவி எனப் பேர் பெற்ற - , ஐ வாய வேட்கை அவாவினை - ஐந்து வழிகளாகச் செல்லுதலையுடைய பற்றுள்ளத்தால் உண்டாகும் அவாவை , கலங்காமல் காத்து - தீயவழிகளில் நிலைமாறிச் செல்லாமல் பாதுகாத்து, கைவாய் உய்க்கும் ஆற்றலுடையான் - ஒழுக்கநெறியிற் செலுத்தும் வல்லமையுடையவனே, விலங்காது வீடு பெறும் - தவறாமல் வீடுபே றடைவான்.

(க-து.) ஐம்புல விருப்பங்களை ஒழுக்கநெறியிற் செலுத்தி உய்தல் வேண்டும்.

(வி-ம்.) பேர், பெயர் என்பதன் மரூஉ. வேட்கை - பற்றுள்ளம் அவா - அதனாலுண்டாகும் விருப்பம். நச்சினார்க்கினியர் கருத்தும் இது. 1கை - ஒழுக்கம் ; கைவாய் உய்க்கும் எனக் கூட்டிக் கொள்க. ‘கலங்காமற் காத்து' என்பது இடைப் பிறவரலாதலின் ‘கைவாய் கலங்காம' லென ஒற்று மிகாது இயல்பாயிற்று. விடுதலை, பற்றுக்களினின்றும் விடுதலை. புலனடக்கம் என்பது, அதனை நல்வழியிற் செலுத்தலே என்று இதன்கண் அறிவுறுக்கப்பட்டமை கருத்திருத்துதற்குரியது; "ஐந்தும் அடக்கா அறிவறிந்தேனே,"2 என்றார் பிறரும்.

(9)


1. தொல் . உயிர்மயங் - 86.

2. திருமந். ஐந்திந்திரியம் அடக்குமுறைமை . 3.

60 துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.

(பொ-ள்.) துன்பமே மீதூரக் கண்டும் - வாழ்க்கையில் துன்பமே மேலும் மேலும் மிகுந்து வருதல் உணர்ந்தும் ; துறவு உள்ளார் - பற்றில்லாமலிருத்தலை நினையாராய், இன்பமே காமுறுவர் ஏழையார் - இடையே தினையளவாக உண்டாகும் இன்பமே விரும்பி நிற்பார் மனவலிமையில்லாதார், இன்பம் இசைதொறும் - ஆனால் அச் சிற்றின்பம் கிடைக்கும்போதெல்லாம், அதன் இன்னாமை நோக்கி - அதனால் உண்டாகும் பெருந்துன்பங் கருதி, பசைதல் பரியாதாம் மேல் - அதனை விரும்புதலை மேற்கொள்ளார் மேலோர்.

(க-து.) வாழ்க்கையிற் சிறிய இன்பத்துக்காகப் பெருந்துன்பம் உண்டாதலின், அச் சிற்றின்பத்திற் பற்று வைக்கலாகாது,

(வி-ம்.) ஏகாரங்கள் பிரிநிலை. உள்ளவலியில்லாதவராதலின், இரக்கந் தோன்ற ‘ஏழையார்' என்றார். இசைதல் வந்து பொருந்துதல் ; கிடைத்தல் . மற்று ; அசை பரிதல், "காய்பரீஇ" 1 என்புழிப்போலக் கொள்ளுதற் பொருளில் வந்தது.

(10)


1. சிந். கனக. 90.

(தொடரும்)


2011/6/1 Venkatram Shrinivas <see...@gmail.com>

2011/5/31 Venkatram Shrinivas <see...@gmail.com>
<td colspan="2" style="font-family:GIST-TMOTChanakya;font-size:9pt;text

கி.காளைராசன்

unread,
Jun 2, 2011, 3:05:25 AM6/2/11
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம்.
படித்துக் கொண்டிருக்கிறேன்

அன்பன்
கி.காளைராசன்

--

திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

Venkatram Shrinivas

unread,
Jun 2, 2011, 3:10:54 PM6/2/11
to மின்தமிழ்
சினம் இன்மை 
 
அறத்துப்பால்
7. சினமின்மை
(என்றது, குற்றம் ஒருவனிடத்து உண்டானபோதும் சினமில்லாமையை உணர்த்துவது)
61மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.

(பொ-ள்.) மதித்து இறப்பாரும் இறக்க - தம்மைப் பொருள் செய்து நடப்பாரும் நடக்கட்டும் ; மதியா மிதித்து இறப்பாரும் இறக்க - அங்ஙனம் மதியாமல் கீழ்ப்படுத்தி நடப்பாரும் நடக்கட்டும், மிதித்து ஏறி ஈயும் தலைமேல் இருத்தலால் - ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் இருத்தலினால், அஃது அறிவார் -அந் நிலைமையைத் தெரிந்து சிந்திக்குஞ் சான்றோர், காயும் கதம் இன்மை நன்று - எரிந்து விழுஞ் சினமிலராயிருப்பது நல்லது.

(க-து.) பிறர் மதித்தாலும் மதிக்காவிட்டாலும் சான்றோர் சினம் கொள்ளலாகாது.

(வி-ம்.) இறத்தல் இங்கே ஒழுகுதல் என்னும் பொருட்டு. மதியா : ஈறு கெட்டு நின்றது. உம்மைகள், எச்சம். தாழ்ந்ததென்று கூறும்பொருட்டு ஈயைக் கூறினார். "ஈச்சிறகு அன்னதோர் தோல் அறினும்"1 என முன்னும் வந்தது. கதம் இன்மை கதம் உடையராகாமை .

(1)


1. நாலடி. 5 : 1

62தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.

(பொ-ள்.) மண்டி அடிபெயராது ஆற்ற இளிவந்த போழ்தின் - அடர்ந்து அடிதவறாமல் அடுக்கி மிக்க இழிவு நேர்ந்த காலங்களில், முடிகிற்கும் உள்ளத்தவர் - தாம் மேற்கொண்ட காரியங்களை முடிக்கும் ஊக்கமுடைய நல்லோர், தண்டாச் சிறப்பின் தம் இன் உயிரை - அழியாச் சிறப்பினையுடைய தமது இனிய உயிரை, தங்காது கண்டுழியெல்லாம் துறப்பவோ - சிறிதே இடர் கண்ட நேரங்களிலெல்லாம் பொறுத்துத் தாங்கிக்கொண்டிராமல், சினந்து விட்டு விடுவார்களோ?

(க-து.) இடர்கள் கண்டு சினத்தால் உயிரை விடுதல் ஆகாது.

(வி-ம்.) கண்டதற்கெல்லாம் உயிரை இழக்குமளவுக்குச் சினம் மிகுவாரை நோக்கிற்று இச்செய்யுள். வீடுபேறடையும் அழியாத பேரின்பச் சிறப்புக்குரிய இனிய உயிராதலின் ‘தண்டாச் சிறப்பின் இன் உயிர்' எனப்பட்டது. ஓ : வினா. அடிபெயராதென்றதனால், அடுக்கி வருதல் உணர்த்தினார். முடிகிற்கும் என்பதிற் ‘கில்' ஆற்றலுணர்த்துவதோர் இடைநிலையாகலின், இடத்திற்கேற்ப அது பயன்படுத்தப்பட்டது. தெளிவு பெறுதற்குத் தோன்றிய, பிறவியை அந்நோக்கத்துக்கு மாறாக வீணே இழந்து விடுலாகாமையின், இச்செய்யுள் அந்நோக்கத்தையும் எடுத்துக்காட்டி அவ்வுள்ளத்தவர் துறப்பரோ என அறிவுறுத்திற்று.

63 காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாத தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

(பொ-ள்.) காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் - அடக்காமல் சினத்தினால் ஒருவன் தன் வாய்விட்டுச் சொல்லியே சினச்சொல், ஓவாது தனனைச் சுடுதலால் - என்றைக்குமே தன்னை வருத்துதலால், ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் - இடைவிடாமல் ஆராய்ந்து பண்பட்ட கேள்வி ஞானத்தையுடையவர்கள், எஞ்ஞான்றும் - எப்பொழுதும், காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து - மனம் வெதும்புதலால் அமைந்த சுடுமொழிகளைச் சினந்து சொல்லமாட்டார்கள்.

(க-து.) சினப்பது தன்னையே சுடுமாதலால், பண்பட்ட உள்ளமுடையோர் சினங்கொள்ளார்.

(வி-ம்.) உள்ளடங்காது வெளிவருதல் தோன்ற ‘வாய் திறந்து ' எனப்பட்டது. ஏகாரங்கள் இரண்டனுள் முன்னது தேற்றம் ; மற்றது அசை . வருத்துதலின் மிகுதி தோன்றச் ‘சுடும்' என்றார் ‘ஆய்ந்தமைந்த ' என்பது கேள்விக்கு அடைமொழி. ஓவாதே உடையார் எனக் கொள்க. ஆய்தல் - நூலான் வந்த அறிவைத் தம் பழக்கத்தால் உணர்ந்து முடிவு செய்தல். அமைதல் - அம் முடிவின் வழிப் பண்படுதல். ‘காய்ந்தமைந்த' என்னுமிடத்துக் ‘காய்ந்து ' காரணப்பொருட்டும், ‘அமைந்த' அமைந்த சொற்கள் என்னும் பொருட்டுமாம். ‘கறுத்தல்' : உரிச் சொல் அடியாகப் பிறந்த சொல்.1 சினமில்லாமலித்ததற்குப் பண்பட்ட கேள்வி ஞானம் இன்றியமையாததென்னும் உண்மையும் இச்செய்யுட்கண் அறிவுறுத்தப்பட்டமை கண்டு கொள்க.

(3)


1. தொல். உரி . 74.

64நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்தனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.

(பொ-ள்.) நேர்த்து நிகரல்லார் - சமானமில்லாதவர்கள் தம்மைச் சமானாமாகக் கருதிக்கொண்டு, நீரல்ல சொல்லியக்கால் - தகைமையல்லாத சொற்களைச் சொன்னால், வேர்த்து வெகுளார் விழுமியோர் - சிறந்தவர்கள் மனம் புழுங்கிச் சினந்து கொள்ளமாட்டார்கள் ; ஆனால் ; கீழ் - கீழ்மக்கள், ஓர்த்து அதனை உள்ளத்தான் உள்ளி - ஆராய்ந்து அத் தகைமையற்ற சொல்லை மனத்தாற் பலகாலும் நினைத்து, உரைத்து உராய் ஊர் கேட்ப - ஊரிலுள்ளவர்கள் கேட்கும்படி அங்கங்கும் சொல்லித் திரிந்து, துளளித் தூண்முட்டும் - அதனால் மேன்மேலும் பெருகுங் கோபத்தினால் உடம்பு துடித்து அருகிலிருக்குந் தூணில் மோதிக் கொள்வார்கள்.

(க-து.) தகுதியல்லாதவர்கள் சொல்லும் சொற்களுக்குச் சான்றோர் சினந்து கொள்ளமாட்டார்கள்.

(வி-ம்.) ‘நிகரல்லார் சொல்லியக்கால் வெகுளாரெனவே, நிகருள்ளோரும் மிக்கோரும் தக்கவை சொல்லின் அவற்றின் வழி விரும்பித் திருந்துவர் என்பது அருத்தாபத்தியாற் பெறப்படும். வேர்த்து வெகுளா ரென்றதனோடு அச்சொல்லை அறிவான் ஓரார் ; உள்ளத்தான் உள்ளார் ; பிறர்பாற் சென்று கூறார் ; இழிதகைமையாகத் துள்ளி முட்டிக் கொள்ளார் என்பனவும் ஏனையோர் செயலாகக் கூறியவற்றினின்று எதிர்முகமாகக் கூட்டிக்கொள்க. ஓர்த்தல், அறிவினால் அதன் தகைமையின்மையை ஆராய்ந்து பகைமை கொள்ளுதல் ; பின்பு உள்ளல் என்றது, அப்பகைமையை மேலுமேலும், நினைந்து நெடுங்காலம் உள்ளத்து நிகழச்செய்தல். "இகலொடு செற்றம்"1 என்பதன் உரை இங்கு நினைவுகூரற்பாலது. உராய் - உலாவி, திரிந்தென்னும் பொருட்டு. சினத்தை அடக்கமாட்டாத எளிமை மிகவுந் தோன்றத் ‘துள்ளித் தூண் முட்டுமாங் கீழ்,' என்றார். ஆம் : அசை.

(4)


1. முருகு, 131 - 2.

65இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

(பொ-ள்.) இளையான் அடக்கம் அடக்கம் - இளமைப் பருவமுடையவனது புலனடக்கமே அடக்கமெனப்படும், கிளைபொருளில்லான் கொடையே கொடைப்பயன் - கிளைக்கும் பொருளில்லாதவனது ஈகையே பயனெனப்படும் ஈகையாம் (அவைபோல) எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை - எதனையும் அழிக்க வல்ல வலிமையறிவினை யுடையோன் பொறுத்துச் சினம் ஆறும் பொறுமையே பொறுமை யெனப்படும்.

(க-து.) தமது சினம் செல்லக்கூடிய இடங்களிற் பொறுத்துக் கொள்ளுதலே சிறந்த பொறுமையாகும்.

(வி-ம்.) அடக்கம் என்னுமிடத்தில் பிரிநிலை ஏகாரங் கூட்டுக. கிளைக்கும் பொருளென்றது பலமுகமாக மேன்மேற பெருகுஞ் செல்வத்தை. பொருளாலாம் பயன் கொடையாதலின், கொடைப் பயன் எனப்பட்டது. எல்லாம் என்றது, எத்தகையதனையும் என்னும் பொருட்டு. ஒறுத்தல் - இங்கு அழித்தல். ‘எல்லாம் ஒறுக்கும்' என்ற குறிப்பால், உரனுடையாளன் என்றது, தவமுடையானை. வலிமை மிக்க அறிவு தவ அறிவேயாதலின், மதுகையுர மெனச் சிறப்பிக்கப்பட்டது. அதிகாரம் நோக்கி, முன்னிரண்டு கருத்துக்களை ஏனையதற்கு உவமமாகக்கொள்க. இங்கே காட்டிய அடக்கம் முதலியனவே உள்ளமாட்சிமைக் காவன வென உரைத்தபடி.

66கல்லெறிந் தன்ன கயர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.

(பொ-ள்.) ஒல்லை இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் - மந்திரித்து இட்ட திருநீற்றால் உடனே படம் சுருங்கிச் சினம் ஒடுங்கிய நல்ல பாம்பைப்போல, தத்தம் குடிமையான் வாதிக்கப்பட்டு - தங்கள் உயர்குல ஒழுக்கத்தால் தடை செய்யப்பட்டு, கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல் - கற்களை வீசினாற் போன்ற கீழ்மக்கள் வாயிற்றோன்றிய துனபச் சொற்களை, எல்லாரும் காணப் பொறுத்து உய்ப்பர் - அனைவரும் அறியப் பெரியோர் பொறுத்துக் கொண்டு தமது மேற்கோளை நடத்திச் செல்வர்.

(க-து.) தமது உயர்நிலை கருதிச் சான்றோர், கீழ் மக்கள் சொற்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

(வி-ம்.) ‘எறிந்தன்ன இன்னாச்சொல்,' என்க. ‘கயவர்' என்பதற்குக் "குணங்கள் யாவும் இலராய கீழோர்" 1 என்று உரை கூறுவார் பரிமேலழகர். பொறுப்பதினும், பலரெதிரிற் பொறுத்துக் கொள்வது அரியதொன்றாதலின், ‘எல்லாருங் காணப்பொறுப்பர்' என்றார். ஒல்லை, உடனே பை - படம் ; அவிந்த - அவிந்து ஒடுங்கிய. தத்தம் என்னும் அடுக்குப் பன்மை. உயர்குலம் என்றது, நல்லோர் கூட்டம் ; அவரிணக்கத்தால் உண்டாகும் பெருந்தன்மையான ஒழுக்கமே உயர்குலவொழுக்கம் எனப்பட்டது. குடிமை யென்றது அது ; அஃதாவது, பெருந்தன்மை. கயவர் என வந்தமையின், பொறுத்துய்ப்பவர் பெரியோர் எனப்பட்டது. மேற்கோளை என்றது, தம் நற்கொள்கைகளை, ‘கல்லெறிந்தன்ன' என்றமையால் இன்னாச் சொல்லால் உண்டாகுஞ் சுறுக்கென்ற துன்பமும், ‘பையவிந்த நாகம்' என்றமையாற் சீற்றந் தணிதலும் பெறப்படும்.

(6)



1. குறள் . 108 ஆம் அதி . விளக்கம்.

67 மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.

(பொ-ள்.) மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு - தமக்குப் பகைவராயிருநது அப் பகைமையைப் பாராட்டுகின்றவர் பொருட்டு, ஏலாமை ஆற்றாமை என்னார் அறிவுடையோர் - தாமும் அப்பகைமையைப் பெரியோர்கள் மேற்கொள்ளாமையை அறிவுடையோர் மாட்டாத தன்மை என்று சொல்லி இகழமாட்டார்கள் ; ஆற்றாமை நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் - தம்முடைய தீய தன்மைகளை அடக்கிக் கொள்ளமாட்டாமல் எதிர்த்து அப்பகைவர் துன்பங்கள் செய்தால், தாம் அவரைப் பேர்த்து இன்னா செய்யாமை நன்று - தாம் அவர்களுக்குத் திருப்பித் துன்பங்கள் செய்யாமை நல்லது.

(க-து.) தமக்குத் துன்பஞ் செய்தவர்களுக்குத் தாமுந் துன்பஞ் செய்வது ஆற்றலன்று ; துன்பஞ் செய்யாமையே ஆற்றலாவது.

(வி-ம்.) அவரை என்றது உருபு மயக்கம்.1 நான்கனுருபு : பொருட்டு. ஏலாமை ஆற்றாமையன்று ; மாறு ஏற்றலே ஆற்றாமை என்பது போன்ற, ஈரிடத்தும் ‘ஆற்றாமை ' யென்னுஞ் சொல் வந்தது. இன்னா - இனிமையல்லாமை. மற்று ; அசை . முன்னிரண்டடிகள் மனத்தளவாய் மாறுகொள்ளலும் பின்னிரண்டடிகள் அப்பகைமையைச் செயலிற் காட்டுதலுமாக விளக்கப்பட்டன.

(7)


1. தொல் . வேற்றுமை மயங் . 23.

68நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.

(பொ-ள்.) நெடுங் காலம் ஓடினும் - நீண்ட காலம் சென்றாலும், நீசர் வெகுளி - கீழ்மக்கள் கோபம், கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - தணியுங்காலம் இல்லாமலே பெருகிக்கொண்டு போகும் ; ஆனால், அடுங் காலை நீர் கொண்ட வெப்பம்போல் - காய்ச்சுங் காலத்தில் தண்ணீர் அடைந்த வெப்பத்தைப்போல, தானே தணியும் சீர் கொண்ட சான்றோர் சினம் - பெருமை மிக்க சான்றோரது கோபம் தானே தணிந்துவிடும்..

(க-து.) கோபம் விரைவில் தணிந்துவிட வேண்டும்.

(வி-ம்.) கெடுங்காலம் - கோபம் தணிகின்ற காலம். இயல்பாகத் தண்மையாயிருக்கும் நீர், காய்ச்சும்போது சூடேறிப் பின்பு தானே தணிந்து முன்போல் தண்ணீராய் விடுகின்றது; அதுபோலச் சான்றோரும் இயல்பாகவே குளிர்ந்த மனமுடையவராயிருப்பர்; பிறர் துன்புறுத்தும் போது மனவருத்தத்தால் சினம் எழுந்தாலும், விரைவில் அது தானே தணிந்துவிடும். அவரும் முன்போற் குளிர்ச்சியுடையவராகவே யிருப்பர்; ஆற்றலுள்ளவர்க்குச் சினம் எழுவது இயல்பு; அவ்வாற்றலோடு சான்றாண்மையும் உள்ளவரானால் அவர் அதனைப் பரக்கவிடாமல் தணித்துக் கொள்வர். காய்ச்சும் வரையில் நீர் வெப்பமாயிருந்து பின் தணிந்து விடுவது போலப் பிறர் துன்புறுத்தும் வரையில், சான்றோருள்ளம் கொதிப்பாயிருந்தாலும் பின் அறவே தணிந்துவிடும்; இது, ‘நீர் கொண்ட வெப்பம்' என்னும் உவமையாற் பெறப்படும். ‘தானே தணியும் ' என்றமையால், துன்பஞ் செய்தவர்களைத் திரும்ப ஒறுப்பதில்லாமல் தானே தணிந்துவிடும் என்பது கொள்ளப்படும். "நீரிற் கிழித்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம் ', என்னும் வாக்கை ஈண்டு நினைவு கூர்க.

69 உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.

(பொ-ள்.) உபகாரம் செய்ததனை ஓராது - தாம் முன்பு உதவி செய்ததை நினையாமல், தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் பிறர் தம்மிடம் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும், உபகாரம் தாம் செய்வதல்லால் - அவருக்குத் தாம் திரும்பவும் உதவி செய்வதல்லாமல், தவற்றினால் தீங்கு ஊக்கல் - அவர் குற்றங் காரணமாக அவருக்குத் தீங்கு செய்யமுயலுதல், வான் தோய் குடிப்பிறந்தார்க்கு இல் - உயர்குலத்தில் தோன்றிய மேலோர்களுக்கு இல்லை.

(க-து.) தாம் நன்மை செய்தும் தமக்குத் தீமை செய்வோர்க்கு மேலுமேலும் நன்மை செய்வதல்லாமல், தீங்கு செய்ய முயலார் சான்றோர்.

(வி-ம்.) பிறர்பால் உண்டாகும் தீய நினைவை அவருக்கு நன்மை செய்து செய்தே மாற்றுதல் இயலும் என்பதனாலும், தமக்கும் அம் மனப்பான்மை மேன்மேலும் ஞான விளக்கத்துக்கு இடஞ் செய்யுமென்பதனாலும் இங்ஙனங் கூறப்பட்டது. உயர்வை நன்கு புலப்படுத்தும் பொருட்டு, ‘வான் தோய் குடி' என்றார் ; "வானுயர் தோற்றம்"1 என்புழிப்போல. இதனை ‘இலக்கணை' என்ப.

(9)


1. குறள். 28 : 2


70கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
1பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.

(பொ-ள்.) கூர்த்து நாய்கௌவிக் கொளக் கண்டும் - சினம் மிகுந்து நாய் தமதுடம்பை வாயினால் கடித்துத் தசையைப் பிடுங்குதலைப் பார்த்து, தம் வாயால் பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை - அதற்கு எதிராகத் தமது வாயினால் திருப்பி நாயைக் கடித்தவர் இவ்வுலகத்தில் இல்லை ; அதுபோல ; நீர்த்து அன்றிக் கீழ் மக்கள் கீழாய சொல்லியக்கால் - தகுதியான சொல் அல்லாமல் கீழ்மக்கள் தாழ்வான சொற்களைச் சொன்னால், சொல்பவோ மேன்மக்கள் தம் வாயால் மீட்டு - மேன்மக்கள் தம் வாயினால் திருப்பி அத் தாழ்வான சொற்களையே சொல்வார்களோ ?

(க-து.) கீழ்மக்களுக்கு எதிராக மேன்மக்கள் ஒருகாலும் தாழ்வான சொற்களைத் திருப்பிச் சொல்ல மாட்டார்கள்.

(வி-ம்.) இப்பா எடுத்துக் காட்டுவமையணியாம். திரும்ப வாயாற் கடிப்பது இல்லாமை போலத் திரும்பித் தாழ்வான சொற்களால் பேசமாட்டாரென்பது ஒப்புமை. கூர்த்து - மிகுத்து ; சினத்தை மிகுத்து . நீர்த்து - நீர்மையுடையது ; தகுதியான சொல் சுருக்கமாகவும் தாழ்வான சொல் பலவாகவும் வருதலின் ‘நீர்த்து' என ஒருமையாகவும் ‘கீழாய' எனப் பன்மையாகவும் சுட்டப்பட்டன. "எதிர்மறை யெச்சம் எதிர்மறை முடிபின" 2 வாதலின், சொல்பவோ என நிறுத்தினார் ; சொல்லார் என எதிர் மறை முடிபு உரைத்துக் கொள்க.

(10)


1. பழமொழி . 49.

2. தொல். எச். 36.


(தொடரும்



2011/6/2 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 4, 2011, 3:04:21 PM6/4/11
to மின்தமிழ்
பொறையுடைமை 
 
அறத்துப்பால்
8. பொறையுடைமை
(பிறர் தமக்குக் காரணத்தினாலாவது அறியாமையினாலாவது குற்றஞ் செய்தால் தாமும் அவர்க்குக் குற்றஞ் செய்யாமற் பொறுமை யுடையராயிருத்தல்.)
71கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ டியாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.

(பொ-ள்.) கோதை அருவிக் குளிர்வரை நல் நாட - மாலைபோல ஒழுகுகின்ற அருவிகளையுடைய குளிர்ச்சி பொருந்திய நல்ல மலைகளையுடைய நாடனே, பேதையோடு யாதும் உரையற்க - அறிவில்லாதவனோடு ஏதொன்றும் பேசவேண்டாம் ; உரைப்பின் பேதை சிதைந்து உரைக்கும் - பேசினால் அப்பேதை முறைமை தவறி எதிர் பேசுவான் ; ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று - கூடுமான வழிகளால் அவன் தொடர்பிலிருந்து தப்பி நீங்குதலே நல்லது.

(க-து.) தகுதியறியாதவரோடு பேசுதல் நல்லதன்று .

(வி-ம்.) யாதும் என்றார். நன்மையாவதொன்றும் என்றற்கு. பேதை சிதைந்துரைக்கும் என்று தொடர்க. சிதைதல் - இங்கு முறையினின்றுந் தவறுதல். பதமாகத் தப்பித்துக் கொள்ளுதல் என்றற்கு, ‘வழுக்கி' எனப்பட்டது ; "கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை"1 என்றார் பிறரும்.

(1)


1. பழமொழி. 15.

72 நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற் -றோரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.

(பொ-ள்.) நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக் கால் - தமக்குச் சமானமல்லாதவர் குணமல்லாதனவான சொற்களைச் சொன்னால், அது தாரித்து இருத்தல் தகுதி - சான்றோர் அதனைப் பொறுத்திருத்தல் தகுதியாகும்; மற்று - அங்ஙனம் பொறுத்திராமையை, ஓரும் புகழ்மை யாக் கொள்ளாது - கருதத் தகுந்த புகழ்க்குரிய குணமாகக் கொள்ளாமல் , பொங்குநீர் ஞாலம் - கடல் சூழ்ந்த இவ்வுலகம், சமழ்மையாக் கொண்டு விடும் - பழிப்புக்குரிய இழிகுணமாகக் கருதிவிடும்.

(க-து.) தமக்குச் சமானமல்லாதவர்கள் தம்மை ஒன்று சொன்னால் அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

(வி-ம்.) நேரல்லாரென்றது கீழோரை. மற்று இரண்டனுள் முன்னது அசை; பின்னது பிறிதென்னும் பொருட்டு ஒரும் : அசை; "அஞ்சுவதோரும் அறனே"1 என்புழிப்போல. தரித்து என்பது முதல் நீண்டது. இருத்தல் - மேன்மேலுந் தனதொழுக்கத்திலேயே நிலைத்திருத்தல் . ‘ஞாலம்' என்றது உயர்ந்தோரை. கொண்டுவிடும் என்னும் முடிபு ஞாலம் என்னும் சொன்னிலை கருதியது. சமழ்மை என்றது இழிவு ; "கள்வன் சமழ்ப்புமுகங் காண்மின்"2 என்னும் பரி பாட்டினும் இப்பொருளுண்மை பெறப்படும்.

(2)


1. குறள். 37 : 6

2. பரி. 20 : 36.

73 காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலின் தீதாமோ - போதெலாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப !
ஆவ தறிவார்ப் பெறின்.

(பொ-ள்.) போது எலாம் மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண்சோப்ப - பேரரும்புகளிலெல்லாம் விருப்பத்தையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும் வளம் நிறைந்த கடலையுடைய குளிர்ச்சிபொருந்திய கடற்கரைத் தலைவ! ஆவது அறிவார்ப் பெறின் - தமக்கு முன்னேற்றமாவதை அறிந்து செய்வாரைப் பெற்றால், காதலால் சொல்லும் கடுசொல் - அவர்கள் உள்ளன்பினால் நன்மை கருதிச் சொல்லும் கொடிய சொல், உவந்து உரைக்கும் ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ - மனமகிழ்ந்து கூறும் அயலவர் இன்சொல்லினுந் தீதாகுமோ ? ஆகாது.

(க-து.) அன்புடையார் கூறுங் கடுஞ்சொல் அயலவர் கூறும் இன்சொல்லினும் நல்லதாகலின், அதன்மேற் பொறுமை கொள்ளவேண்டும்.

(வி-ம்.) ‘கடுஞ் சொல்' லென்றது இங்கே செவிக் கினிமையல்லாத சொல். உவத்தல் அகமகிழ்ச்சியாதலின், ‘மனமகிழ்ந்' தென உரைக்கப்பட்டது, ஏதிலார் - அன்பும் பகைமையுமில்லாத அயலவர். எதுவுமில்லாதவரென்பது பொருள். மாதர் என்னும் அடைமொழி வண்டுகளின் விருப்ப உள்ளத்தினை உணர்த்தும்.1 அறிவார்ப் பெறின் என்பதற்கு, அறிந்து செய்வாரைப் பெறின் என்று உரைத்துக்கொள்க. பெறுதல் அரிய தொன்றாகலின், ‘பெறின்' என்றார். அயலவர் இன்சொல்லில் தமக்கு முன்னேற்றமாவதொன்றும் இல்லாமையால், அதனையுடைய அன்புடையாரது கடுஞ்சொல் நல்லதாயிற்று. ஆதலின் பொறுத்துக் கொள்க என்பது கருத்து. அயலவர் மகிழ்ந்து பேசுதலை நல்லதென்று நினைத்தலின், அதனினுந்தீதாமோ எனப்பட்டது ; இன் சொல்லினும் என உயர்வு சிறப்பும்மை கொள்க. அயலவர் இன்சொல்லில் தீங்கில்லாமையாலும், அன்புடையார் வன்சொல் இன்சொல்லாக இருப்பது இன்னும் நல்லதாதலாலும் ‘ஏதிலார் இன்சொல்லின் நன்றாகு' மென்னாது. ‘ஏதிலார் இன் சொலின் தீதாமோ' என மறைமுகமாகக் கூறினார். இனி, ‘ஏதிலா' ரென்பவரைப் ‘பகைவர்' எனக் கருதி உள்ளே பகைமை கொண்டு மேலே முகம் மகிழ்ந்து பேசும் பகைவரது இன்சொல்லைப் போலத் தீதாகுமோ என்றுரைப்பாரும் உளர் ; இது வெளிப்பாடையாகலின், இதனினும், மேலே கூறிய உரை ஒன்றோடொன்று ஒப்பிட்டுரைப்பதற் கேற்ற பெருமைவாய்ந்து நுண்ணியதாய்ச் சிறக்கின்றமை துணியப்படும்.

(3)


1. தொல் . உரி. 30.

74அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.

(பொ-ள்.) அறிவது அறிந்து - நூல் வழக்கிலும் உலக வழக்கிலுந் தெரிந்து கொள்ளவேண்டுவன தெரிந்து கொண்டு, அடங்கி - அடக்கமுடையவராய், அஞ்சுவது அஞ்சி - அஞ்சத்தக்க நிலைகளுக்கு அஞ்சி, உறுவது - தமக்குத் தகுதியாகத் தாமே பொருந்துஞ் செயல்களை, உலகு உவப்பச் செய்து - உலகம் பயன்கொண்டு மகிழும்படி செய்து, பெறுவதனால் அதுகொண்டு அடைந்த ஊதியத்தினளவில், இன்புற்று வாழும் இயல்பினார் - மகிழ்ந்து வாழ்க்கை நடத்தும் தன்மையுடையவர். எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது - எந்தக் காலத்திலும் துன்பமடைந்து உயிர்வாழ்வது இல்லை.

(க-து.) அறிந்து அடங்கி அஞ்சி நேர்ந்ததைச் செய்து, கிடைத்தது கொண்டு வாழ்வோர்க்கு எப்போதுந் துன்பமில்லை.

(வி-ம்.) அறிவது அஞ்சுவது உறுவது பெறுவது என்பன சாதியொருமை. தமக்குத் தகுதியாகப் பொருந்திய தொரு செயலைப் பிறர்க்கு நலம் பயக்க வேண்டுமென்னும் எண்ணத்துடன் திருத்தமாகவும் பற்றில்லாமலுஞ் செய்து, கிடைத்த ஊதியத்தினளவில் மகிழ்ந்து, வாழ்க்கை நடத்த வேண்டுமென்று இச் செய்யுளிற் புலப்படுத்தியிருப்பது மிக்க மாட்சிமையானது. இனிய வாழ்க்கை நடத்துவதற்கு இது சிறந்த வழி . "பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி ஓம்பாது உண்டு கூம்பாது வீசி"1 என்னுஞ் சான்றோர் செய்யுட்கள் போல்வன இங்கு நினைவு கூரற்குரியன.

(4)


1. புறநா. 47.

75வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.

(பொ-ள்.) வேற்றுமையின்றிக் கலந்து இருவர் நட்டக்கால் - வேறுபாடில்லாமல் மனங் கலந்து இரண்டு பேர் நேசித்தால், தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் - தக்கதென்று பெரியோரால் தெளியப்படாது ஒதுக்கிய தகாத நடத்தை ஒருவனிடத்தில் உண்டானால், ஆற்றுந் துணையும் பொறுக்க - பொறுக்கக் கூடுமளவும் மற்றவன் பொறுத்துக்கொள்க ; பொறானாயின் - அதன்மேற் பொறுக்கக் கூடாதவனாயின், தூற்றாதே தூரவிடல் - அக் குற்றத்தைப் பலரும் அறியப் பழிக்காமல் அவன் தொடர்பை , மீண்டும் அணுகவொட்டாதபடி நெடுந் தொலைவில் விட்டு விடுக.

(க-து.) நண்பனிடத்திற் பொறுக்குமளவும் பொறுமை கொள்க. பொறுக்கக் கூடாதவிடத்து அவனுக்குத் தீங்கேதுஞ் செய்யாமல் தூர விலகிக்கொள்க.

(வி-ம்.) தகுதியென்று தெளியப்படாத ஒழுக்கம் இங்குத் ‘தேற்றா வொழுக்கம்' எனப்பட்டது. ‘தேற்றா' என்பது இங்கே ‘தன்வினைக்கண்' வந்தது ; "தேற்றாய் பெரும் பொய்யே"1 என்புழிப் போல. தூற்றி விடுதலினின்றும் பிரித்தலின், ஏகாரம் : பிரிநிலை . ‘தூர விடல்' என்பதற்குத் தூர்ந்துபோகும்படி மெல்ல விட்டுவிடுக என உரைத்தலும் ஒன்று. இச் செய்யுள் நண்பரிடத்துப் பொறுக்கும் முறைமை கூறிற்று.

(5)


1. புறநா. 59.

76இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட
விலங்கிற்கும் விள்ளல் அரிது.

(பொ-ள்.) இன்னா செயினும் - நண்பர் தனக்கு இன்னல் தருவன செய்தாலும், இனிய ஒழிக என்று - அவை இனியவாய் வந்து கழிக என்று பொறுமையாய் நடந்து கொண்டு, தன்னையே தான் நோவின் அல்லது - அதற்குக் காரணமான தனது முன் வினையை நினைந்து தன்னையே தான் நொந்துகொள்ளின் அல்லாமல் துன்னிக்கலந்தாரைக் கைவிடுதல் - நெருங்கி மனங்கலந்து பழகினவரை ஒருவன் கைவிடுதலென்பதோ, கானக நாட - காடுகள் சிறந்த நாடனே, விலங்கிற்கும் விள்ளல் அரிது - தாழ்ந்த விலங்குகளுக்கும் அங்ஙனம் விட்டுவிடுதல் அருமையாகும் ; ஆதலின் அது மக்கட்கு முகவும் அரியதொன்றாகும்.

(க-து.) நண்பர் தீங்கு செய்த காலத்தும் அதனைப் பொறுத்துக் கொள்வதன்றி அவரைக் கைவிட்டுவிடுதல் மக்கட்கு அழகன்று.

(வி-ம்.) செயினும் என்னும் உம்மை பெரும்பாலும் அவர் அங்ஙனம் செய்யாமையை உணர்த்தி நின்றமையின் எதிர்மறை. பிறர் செய்யுந் தீங்குகளும், தாம் நடந்து கொள்ளும் நன் முறைமைகளால் யார்க்கும் இனிமையாக வந்து கழியுமாதலின், ‘இனியவாய் ஒழிக என்று பொறுத்திருத்தல்' இங்குக் குறிப்பிடப்பட்டது. ‘தன்னையே தான் நோவின் அந்நேரத்து நிலை எளிதாவதல்லது, கைவிடுதல் என்பதோ அரிது' என்பது கருத்து . கைவிடுதல் என்பது, விலங்கிற்கும் விள்ளல் அரிது என்பதனால், இசையெச்சமாகத் தனக்கும் அம் முடிபு பெற நின்றது. விலங்கிற்கும், என்பதன் உம்மை இழிவு சிறப்பு . கைவிடுதல் அரிது எனக் கொள்ளுமிடத்து ‘அரிது' என்னுஞ் சொல் , ‘அது மக்கட் பண்பாகாது' என்னுங் கருத்துணர நின்றது.

77 பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்பஎன் றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட
நல்லசெய் வார்க்குத் தமர்.

(பொ-ள்.) பெரியார் பெருநட்புக் கோடல் - சான்றோர்களது மேன்மையாகிய நேயத்தை யாரும் விரும்பித் தேடிக் கொள்ளுதல், தாம் செய்த அரிய பொறுப்ப என்றன்றோர் தாம் செய்துவிட்ட அரிய குற்றங்களையும் அவர்கள் பொறுப்பார்கள் என்று கருதித்தானே?, ஒல் என் அருவி உயர்வரை நல் நாட - ஒல் என்று ஒலிக்கும் அருவி களையுடைய உயர்ந்த மலைகள் சிறந்த நல்ல நாட்டையுடையவனே ! , அரியரோ நல்ல செய்வார்க்குத் தமர் - பிழையில்லாத நல்ல செயல்களையே செய்யும் மேம்பாடுடையவர்க்கு நண்பராவோர் அரியரோ ? அல்லரென்றபடி.

(க-து.) தம்மோடு பழகுவார் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்வதே சிறந்த நட்பாகும்.

(வி-ம்.) பிழை பொறுப்பவர் பெரியாராகலின் அவரைப் பெரியாரென்றும், அவரது நட்டைப் ‘பெருநட்பு' என்றும் ஆசிரியர் கூறினார். அரிய - பெருங்குற்றங்கள் ; என்றது, பொறுத்தற்கரிய குற்றங்கள் ; அருமை இங்குப் பெருமை மேல் நின்றது ; அரியவும் என்னும் உம்மை உயர்வு சிறப்பு. பிழைபொறுக்கும் பெரியார் நட்புக் கிடைப்பதுதான் அருமை ; பிழையில்லாமல் நல்லனவே செய்வார்க்கு நண்பராவோர் அங்ஙனம் அரியரல்லர் ; பலராவர் ; ஆதலின் நட்பிற் சிறந்தது, பிழைபொறுக்கும் நட்பேயாகும் என்று உணர்த்தியபடி. பொறுப்ப : பலர்பால் முற்று , இதற்கு விகுதி பகரமெனக் கொள்க : அகரமெனக் கொள்ளின் பலவின்பால் முற்றாகும். ‘அரியரோ' வென்பதன் ஓகாரம் எதிர்மறை. ‘உயர் வரை' யென்பதற்குப் பண்பு விரித்தலாகாது ; ‘உயர்' என்பது வினைச்சொல்லின பகுதியாய் வினைத்தன்மையில் நிற்றலின் வினைத்தொகை. எனவே. ‘உயர்ந்த வரை' என்று உரை கொள்க. நச்சினார்க்கினியர் ‘உயர்த்திணை' என்பதற்கு உயர்ந்த ஒழுக்கமென உரைத்து, இது காலந்தோன்ற நிற்றலில்' எனக் காரணமுங் காட்டினமை1 இங்கு நினைவு கூரப்படும்.

(7)


1. தொல், கிளவி . 1.

78 வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத்
துறக்குந் துணிவிலா தார்.

(பொ-ள்.) வற்றி ஆற்றப் பசிப்பினும் - உடம்பிற் செந்நீர் சுண்டும்படி மிகப் பசித்தாலும், பண்பு இலார்க்கு - பிறர் நிலையறிந்து ஒழுகும் தன்மையில்லாதவர்களுக்கு. அற்றம் அறிய உரையற்க - தமது இல்லாமையை அவர் அறியும்படி சொல்லவேண்டாம் ; தம்மைத் துறக்குந் துணிவிலாதார் - தம்மைத் துறவு நெறியிற் செலுத்துந் தெளிவில்லாதவர், அப்படிச் சொல்ல விரும்பினால், அற்றம் மறைக்குந் துணையார்க்கு உரைப்ப - தமது இல்லாமையை நீக்கும் உதவியாளர்க்குச் சொல்லுவர்.

(க-து.) இல்லையென்று கூறிப் பெறாமல் மதிப்போடிருந்து பொருள் தேடவேண்டும்.

(வி-ம்.) வற்றியென்னுஞ் செய்தென் எச்சம் செயவென் எச்சமாகக் கொள்ளப்பட்டது. மற்று : அசை. பண்பென்றது, பிறர்பாடு அறிந்து ஒழுகுதலை. 1 அற்றம் - யாவும் அற்ற நிலைமை ; அது, வறுமை. மறைக்குமென்பது "தம் வயிற் குற்றம் மறையாவழி "2 என்புழிப் போல நீக்குதலென்னும் பொருளில் வந்தது. ‘மறைக்குந் துணையார்க்கு' என்பதை ‘நீக்குமளவான தகுதியுடையார்க்கு' என்று உரைத்தலும் ஒன்று. துறக்குந் துணிவிலாதார் உரைப்ப என்றமையின் அத்துணுவுடையார் ஆண்டும் உரையார் என்றபடி. துறவு நெறியிற் செல்லுந் துணிவுடையார் காய் கனி சருகு முதலியன உண்டு பசி தீர்வர் ; மக்கள் அவர்களாகவே ஏதும் உதவின் உண்பர் ; தாம் அவர் பால் தமக்கு இல்லையென்று தெரிவியார். ஏனெனில் அவர் இறைவனை நம்பி அவன் அருளாகிய இயற்கையின் பாற் சென்றவர்.

(8)


1. கலி. 133 : 8

2. குறள், 85 : 6.

79இன்பம் பயந்தாங் கிழிவு தலவைரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட !
பழியாகா ஆறே தலை.

(பொ-ள்.) இன்பம் பயந்த ஆங்கு - இன்பம் உண்டான இடத்தில், இழிவு தலைவரினும் இன்பத்தின் பக்கம் இருந்தைக்கு - தாழ்வுகள் நேர்ந்தாலும் இன்பத்தையே எண்ணி அதன்கண் நிலைத்திருந்த நினக்கு, இன்பம் ஒழியாமை கண்டாலும் - அச் செயலில் பின்னும் பின்னும். இன்பம் இடையறாமை கண்டாலும், ஓங்கு அருவி நாட - பெருகுகின்ற அருவிகளையுடைய மலைநாடனே ! பழி ஆகா ஆறே தலை - பழித்தல் உண்டாகாத வழியே நினக்குச் சிறந்தது.

(க-து.) இன்பம் இடையறாமல் உண்டாவதாயினும் பழிப்பில்லாத நற்செயல்களே செய்யத்தக்கது.

(வி-ம்.) இன்பம் பயந்தாங்கு - இன்பம் பயந்த செயலிடத்து என்று கொள்க. உம்மை : ஆக்கம் ‘இருந்தைக்க' என்பதன் ஈற்றில் அகரம் சாரியை ; "கடிநிலையின்றே ஆசிரியர்க்க" 1 என்பதிற் போல.

(9)


1. தொல். புள்ளி. 94.

80 தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல்.

(பொ-ள்.) தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க - ஒருவன் தான் கெடுவதாயிருந்தாலும் அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோர் கெடுதலை எண்ணாதிருக்கக்கடவன், தன் உடம்பின் ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க - தனதுடம்பின் தசை பசியால் உலர்வதாயினும் நுகரத்தகாதவரது பொருளை நுகராமலிருக்க வேண்டும் ; வான் கவிந்த வையகமெல்லாம் பெறினும் உரையற்கபொய்யோடு இடைமிடைந்த சொல் - வானத்தால் கவியப்பெற் றிருக்கும் உலகம் முழுமையும் பெறுவதாயிருந்தாலும் தனது பேச்சினிடையில் பொய்யொடு கலந்த சொற்களைச் சொல்லாம லிருப்பானாக.

(க-து.) மேலோர் கெடுதலை நினைதலும், தகாதவர் பொருளை நுகர்தலும், பொய்யுரை மொழிதலும் ஒருவனுக்கு ஆகா.

(வி-ம்.) கைத்து - பொருள் ; "கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்"1 என முன்னும் வந்தது. தான் கெடுதலும் பெறுதலும் பொருளல்ல ; தக்க உணர்வுகளை ஓம்புதலே பொருளாவது என்பது இச் செய்யுளால் உணர்த்தப்பட்டது.

(10)


1. நாலடி , 2 : 9.


(தொடரும்)


2011/6/3 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 5, 2011, 9:31:36 PM6/5/11
to மின்தமிழ்
பிறர்மனை நயவாமை 
 
அறத்துப்பால்
9. பிறர்மனை நயவாமை
(காம மயக்கத்தாற் பிறர் மனைவியரை விரும்பாமை.)
81அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால் -நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.

(பொ-ள்.) அச்சம் பெரிதால் - உண்டாகும் அச்சம் பெரிதாதலாலும், அதற்கு இன்பம் சிற்றளவால் - அப்பேரளவான அச்சத்துக்கு ஈடாக அடையும் இன்பம் சிறிதளவேயாதலாலும், நிச்சம் நினையுங்கால் கோ கொலையால் - நாடோறும் நினைக்கு மிடத்து அதற்கு ஏற்ற தண்டனை உண்மையாக அரசனது கொலைக் கட்டளை யாதலாலும், நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் - நாடோறும் அழல்வாய் நரகுக்கே உருவாகிய செயலாதலாலும். பிறன் தாரம் நம்பற்க நாணுடையார் - பழிபாவங்கட்கு அஞ்சுதலுடையார் பிறன் மனைவியை விரும்பாமலிருப்பாராக !

(க-து.) பிறன் மனைவியை விரும்பி யொழுகு வார்க்கு எந்நாளும் இருமையிலும் துன்பமே யாகும்.

(வி-ம்.) ஆல் - ஆதலால் : உம்மை விரித்துக் கொள்க. நிச்சம் - உண்மையாக. கும்பியென்பது ‘தீச்சூளை' யாதலின் இங்கு ‘அழல்வாய் நரகம்' எனப்பட்டது. கூர்தல் - உள்ள தன்மை சிறந்து வருதல். ஆதலின், இங்கே அது ; நரகுக்கே உருவாகிவரும் செயல் என்னும் கருத்தில் வந்தது. "நம்பும் மேவும் நசையாகும்மே"1 என்பது தொல் காப்பியமாதலின், ‘நம்பற்க' என்பதற்கு ‘விரும்பற்க' என்பது பொருளாயிற்று.

(1)


1. தொல். உரி. 31.

82 அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
அச்சத்தோ டிந்நாற் பொருள்.

(பொ-ள்.) அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் - புண்ணியம் புகழ் தக்கார் நேயம் ஆண்மை என இந் நான்கும் ; பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன் மனைவியை விரும்புவாரிடத்திற் சேரமாட்டா ; பகை பழி பாவம் என்று அச்சத்தோடு இந் நாற்பொருள் - பிறர் பகையும் பழியும் பாவமும் அச்சமும் என்று இந் நான்கு பொருள்களும், பிறன் தாரம் நச்சுவார்ச் சேரும் - பிறன் மனைவியை விரும்புவாரிடத்துச் சேரும்.

(க-து.) பிறன் மனைவியை விரும்புவார்க்குப் புண்ணியமும் புகழும் தக்கார் கூட்டுறவும் வீரமும் உண்டாகா.

(வி-ம்.) பெருமையென்றது பெருமிதம் : ஆவது ஆண்மை. பிறிது கூறுவாருமுளர். அறம் முதலியவற்றிற்கு நேராக ஆசிரியர். பாவம் பழி பகை அச்சம் என நான்கும் முறையே கூறுதலின், அம்முறைமைப்படி அச்சத்துக்கு எதிராக உரைக்குமிடத்துப் பிறருரை சிறவாமை கண்டு கொள்க. பாவம் பழி பகையென நிற்றற்குரியவை, செய்யுளாதலின் பகை பழி பாவமெனப் பிறழ நின்றன. அச்சத்தோடு என்பதில் ஓடு என்னும் இடைச்சொல் உம்மைப் பொருட்டு ; ‘பாவம் என்று' என்பதிலுள்ள ‘என்று' என்பதை ‘அச்சமும் என்று இந்நாற்பொருள்' பெருமை என்று இந்நான்கும்' எனக் கூட்டிக்கொள்க.1'அகப்பொருள்' ‘புறப்பொருள்' என்றாற்போல, இங்கும் பண்புகள் ‘பொருள்' எனப்பட்டன.

(2)

"பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்"

என்பது தமிழ்மறை.


1. தொல் . இடை . 46.

83 புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமற் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.

(பொ-ள்.) புக்கவிடத்து அச்சம் - புகும்போது அச்சம் ; போதரும்போது அச்சம் - திரும்பிவரும்போது அச்சம் ; துய்க்குமிடத்து அச்சம் - நுகரும்போது அச்சம் தோன்றாமல் காப்பு அச்சம் - பிறர்க்குத் தெரியாமல் காத்துக் கொள்ளுதல் அச்சம் ; எக்காலும் அச்சம் தரும் - இங்ஙனம் எந்நேரமும் அச்சம் தரும் ; எவன் கொலோ உட்கான் பிறன் இல் புகல் - ஏனோ இவற்றைக் கருதானாய் ஒருவன் பிறன் மனைவியை விரும்பியொழுகுதல்?

(க-து.) பிறன் மனைவியை விரும்பி யொழுகுதலில் முழுதும் அச்சமேயல்லாமல் இன்பமில்லையே.

(வி-ம்.) எவன் கொலோ என்பதற்கு என்ன பயன் கருதியோ என்பது பொருள். கொல் : அசை; ஓ : இரக்கப் பொருளது. உட்குதல் இங்குக் கருதுதல்;1 "நின்னை, உட்கிச் சிறந்தோர் அஞ்சிய" என்புழிப்போல. புகல் விரும்புதல்; என்றது விரும்பி யொழுகுதல் என்க.

(3)


1. பரிபா, 14 : 25 -6.

84 காணின் குடிப்பழியாம் ; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி; நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு.

(பொ-ள்.) காணின் குடிப்பழியாம் - பிறர் கண்டு விட்டால் குடிப்பழிப்பாம்; கையுறின் கால் குறையும் - கையில் அகப்பட்டுக் கொண்டால் கால் ஒடியும், ஆண் இன்மை செய்யுங்கால் அச்சமாம் - ஆண்மை யில்லாமையாகிய இப் பிறர்மனை புகுதலைச் செய்யுங்கால் அச்சம் நிகழும்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் - நெடுங்கால் நிரயத் துன்பத்தைப் பின்பு உண்டுபண்ணும். துச்சாரி - தீயொழுக்க முடையோய் ; நீ கண்ட இன்பம் எனைத்து எனக்குக் கூறு - நீ நுகர்ந்த இன்பம் இதில் எவ்வளவு ? எனக்குச் சொல்.

(க-து.) பிறன்மனை நயத்தலில் இடுக்கணும் இன்னலுமின்றி இன்பம் சிறிதுமில்லை.

(வி-ம்.) பிறன்மனை புகுகின்ற தொழில் பற்றிக் "கால் குறையு" மென்று முதன்மையாக எடுத்துக் கூறினாரேனும் இயையு பற்றிப் பிற உறுப்புகள் குறைதலுங் கொள்ளப்படும். "பிறன்மனை நோக்காத பேராண்மை"1 என்றாராகலின், பிறன்மனை நோக்குதல் இங்கு ‘ஆணின்மை' யெனப்பட்டது. ஆல் : அசை.

(4)


1. குறள் 15 : 8.

85 சம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே, இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.

(பொ-ள்.) செம்மை ஒன்று இன்றி - நடுவுநிலைமை என்னும் குணம் சிறிதுமில்லாமல், சிறியார் இனத்தராய் - கீழ்மக்கள் கூட்டத்தோடு கூடியவராய், கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ - திரட்சி பொருந்திய கோல மெழுதிய மார்புகளையுடைய பெண்மகளின் தோள்களைச் சேர விரும்பி, உம்மை - முற்பிறப்பில், வலியால் பிறர் மனைமேல் சென்றாரே - தமக்குள்ள இடம் பொருள் ஏவல் என்னும் வலிமைகளால் அயலார் மனைவியர்பாற் சென்றவரே, இம்மை - இப்பிறப்பில், அலியாகி ஆடி உண்பார் - அலித்தன்மையுடையவராய்க் கூத்தாடி வயிறு பிழைப்பவராவர்.

(க-து.) முற்பிறப்பிற் பிறர்மனைவியரைக் கூடியவரே இப் பிறப்பில் கூத்தாடி இரந்து உண்பவர்.

(வி-ம்.) செம்மையென்பது நடுவுநிலைமைக்கே சிறப்பாக வழங்கும் பெயர். திருவள்ளுவரும் இதனைச் ‘செப்பம்' 1 என்பர். ஒன்று - சிறிதென்னும் பொருட்டு. சிறியாரினம் என்றது, ‘வறுமொழியாளர் வம்பப்பரத்தர்'2 முதலாயினோர். பொதுவாகப் பெண்ணென்னும் பொருட்டுக் ‘கொம்மை வரிமுலையாள்' என்றார். ‘பெண்ணின் சேர்க்கையை விரும்பி' என்பது கருத்து. மரீஇ - விரும்பியென்னும் பொருட்டு. அலி, ஆண் தன்மையிழந்த பிறவி ; பெண்ணின் நலத்தைத் துய்க்க இயலாத பிறவி. ஆடியுண்பாரென்றது, தெருக்களிற் பிறர் நகைக்கக் கூத்தாடிப் பிச்சையேற்று வயிறு பிழைத்தலை யுணர்த்திற்று. முற்பிறப்பில் ஆண் தன்மையும் வளம் முதலிய வலிமையும் உடையவராய்ப் பிறர் மதிக்க வாழ்ந்திருந்தவர், அவ் வாண்டன்மையையும் வலிமையையும் அப்போது தவறாகச் செலுத்தினமையின், இப் பிறப்பில் அவ்விரண்டையும் முற்றுமிழந்து பிறர் அருவருக்க வருந்துவரென்றற்கு, ‘அலியாகி' எனவும், ‘ஆடியுண்பர்' எனவுங் கிளந்து கூறினார். ‘சென்றாரே' யென்னும் ஏகாரம் பிரிநிலை.

(5)


1. குறள், 12 : 2.

2. சிலப். 16 : 63 - 5.

86பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணஞ் செய்து கடிப்புக்க - மெல்லியற்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு.

(பொ-ள்.) நாள் கேட்டு - நல்ல நாள் கேட்டறிந்து பல்லார் அறியப் பறை அறைந்து - அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டி, கல்யாணம் செய்து கடிபுக்க மெல் இயல் காதல் மனையாளும் இல்லாளா - திருமணம் செய்து தன் காவலிற் புகுந்த மென்றன்மை வாய்ந்த அன்புடைய மனையாட்டியும் தன் இல்லத்தில் இருப்பவளாக, என் ஒருவன் ஏதில் மனையாளை நோக்கு - ஏன் ஒருவன் அயலான் மனைவியைக் கருதுதல் ?

(க-து.) தன் மனைவி இல்லத்திலிருக்க ஒருவன் அயலான் மனைவியைக் கருதுவது எதற்கு?

(வி-ம்.) தனக்கு அழகும் அன்பும் உடைய, மனைவியிருந்தும் பிறன் மனைவியைக் கருதும் ஒருவனது பெருங்காம மயக்கத்தை இது கண்டித்தபடி. மகளிர்க்கு அழகு என்பது மென்றன்மை யென்றற்கு ' மெல்லியல்' என்றார். நல்ல ஒழுக்கமுடையவன் போலப் பலரும் அறியத் திருமணஞ் செய்ததன் பயன் என்னாயிற்று என்றற்கு முதலிரண்டு வரிகள் கூறப்பட்டன. இதனால் அவன் ஒரு நெறிமுறைமையில் நில்லாமை கண்டிக்கப்பட்டது. பறை, இங்கே மணப்பறை ; அறைதல் - பிறர்க்கு அறிவிக்கும் பொருட்டுக் கொட்டுதல் . காவல் என்பது தனக்கே உரிமையை உணர்த்தி நின்றது. மனையாள் இல்லாத போதே பிறன்மனை புகுதல் பிழையாயிருக்க, மனையாளும் இருக்கும்போது அது கருதுதல் எத்தனை பெரும்பிழை என முன் எஞ்சியதை உணர்த்துதலின் உம்மை எச்சமாகும். இல்லாளாக என நிற்கவேண்டுவது ‘இல்லாளா' என ஈறுகெட்டு நின்றது. ‘நோக்கு' இங்கு மனத்தாற் கருதுதல்.1

(6)


1. தொல் . வேற்றுமை மயங். 10.

87 அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு ; பாம்பின்
தலைநக்கி யன்ன துடைத்து.

(பொ-ள்.) அம்பல் அயல் எடுப்ப - அயலார் பழித்தல் செய்ய, அஞ்சித் தமர் பரீஇ - அதனால் தன்னைத் தடுப்பரென்று அஞ்சித் தம் உறவினரினின்றும் நீங்கி வம்பலன் பெண் மரீஇ மைந்து உற்று - அயலான் மனைவியைச் சேர்ந்து களிப்படைந்து, நம்பும் நிலைமை இல்நெஞ்சத்தான் துப்புரவு - எவராலும் நம்புதற்குரிய நிலைமையில்லாத நெஞ்சத்தையுடையானது அக் காமநுகர்ச்சி, பாம்பின் தலை நக்கியன்னது உடைத்து - பாம்பின் மழமழப்பான தலையை நாவினால் தடவி இன்புற்றத்தைப் போன்ற தன்மையையுடையது.

(க-து.) பிறர் மனைவியர்பால் நிகழ்த்துங் காம வொழுக்கம் எப்போதும் இடரானது.

(வி-ம்.) அம்பல் - வாயோடு முணுமுணுப்பது. 1 பரிதல் , இங்கு நீங்குதலென்னும் பொருட்டு, வம்பலன் என்பதில் அல் எதிர்மறையன்று ; சாரியை; ‘வம்பன்' என்பதே சொல் ; புதியவன் ; அஃதாவது அயலான் என்பது அதற்குப் பொருள். "மனக்கினியாற்கு நீ மகளாயதூஉம்" 2 என்புழிப் போலப் ‘பெண்' என்பது இங்கு ‘மனைவி' யென்னும் பொருளில் வந்தது. உவமை உயிர்க்கு இறுதி தரும் இடரை உணர்த்தி நின்றது.

(7)


1. தொல் . கள. 48 ; இறைய . 22.

2. மணிமே . 21 : 30.

88பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா ;
உரவோர்கண் காமநோய் ஓ ! ஓ ! கொடிதே ;
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
உரையாதுஉள் ஆறி விடும்.

(பொ-ள்.) பரவா - அறிஞர்களிடத்திற் காமநினைவுகள் பரவமாட்டா ; வெளிப்படா - ஒரோவொருகாற் பரவினாலும் அவை வெளிப்படமாட்டா ; பல்லோர்கண் தங்கா - அப்படி வெளிப்பட்டாலும் அவர்களுக்கு உரிமை மனைவியரிடத்தன்றி அயல் மாதர் பலரிடத்துஞ் சென்று நில்லா ; உரவோர்கண் காமநோய் ஓ. கொடிது - அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ, கொடிது - அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ, கொடுமையுடையது!, விரலாருள் நாணுப்படல் அஞ்சி - அங்ஙனம் அவர்கள் மனைவியரிடத்தே சென்று தங்கினாலும் அம் மனைவியர் அந்நினைவு கலவாதவராயிருப்பின், அப்போது அவ்வறிஞர்கள் நாணப்படுவதற்குப் பின்னிடைந்து, யாதும் உரையாது உள் ஆறிவிடும் - சிறிதும் வெளிப்படாமல் உள்ளேயே தணிந்துவிடும்.

(க-து.) அறிவுடையோர் காம நினைவுக்கு இடங்கொடார்.

(வி-ம்.) ‘உரவோர்கண் காமநோய்ஓ கொடிதே' யென்றது. இடையே பொதுவாக ஆசிரியர்க்கு அச்சத்தினால் தோன்றியதொடர் ; அவர் ‘உரன் என்னுந்தோட்டியான் ஓரைந்துங் காப்பவ'1 ராதலின். மற்றவை, எடுத்த பொருள்மேற் செல்லுந் தொடர்கள். பொறுத்தற்குரிய பொறுப்புக் கருதி ‘ஓ கொடிதே' என்றார். ‘யாதும் உரையாது' என்பது சிறிதும் வெளிப்படாமை சுட்டுங் குறிப்புமொழி. அறிஞர்கள் காம நுகர்வை மென்மையாக ஆளுந்திறமும் இப்பாட்டிற் புலப்படும்.

(8)


1. குறள், 3: 4.

89அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; - வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும்.

(பொ-ள்.) அம்பும் அழலும் அவிர் கதிர் ஞாயிறும் - வில்லம்பும், தீயும், ஒளிர்கின்ற கதிர்களையுடைய சூரியனும், வெம்பிச் சுடினும் புறம் சுடும் - வெதும்பிச் சுட்டாலும், வெளிப்பொருளையே சுடும், வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால் காமம் அவற்றினும் அஞ்சப்படும் - அழன்று கவலைப்படுத்தி உள்ளத்தைச் சுடுவதனால் காமம் என்பது அவற்றைப் பார்க்கிலும் அஞ்சப்படும்.

(க-து.) காமம் என்பது உள்ளத்தை வெதுப்புங் கொடுமையுடையது.

(வி-ம்.) அம்பு பெரும்பான்மைக்கு உரிய ‘சுடும்' என்னும் வினையை ஏற்றது. நன்றாய்ச் சுடுகின்றபோது வெம்பிச் சுடவேண்டுதலின், அவ்வியல்புபற்றி அச்சொல் இரண்டிடங்களிலுங் கூறப்பட்டது. புறம் என்றது, "பைம்புறப் படுகிளி"1 என்புழிப்போல உடம்பை ; உடம்பைச் சுடுதலினும் உள்ளத்தைச் சுடுதல் கொடுமையாதலின், அவற்றினும் அஞ்சப்படும் என்றார். உள்ளம் சுடப்பட்டால், அதனால் உடம்பும் உயிரும் வாடுதல் ஒருதலையாகலின், அது கொடுமையுடையதாயிற்று. மேலும் ஆறாத முறையிற் சுடுதல் தோன்றக் கவற்றிச் சுடும் எனவுங் கூறப்பட்டது.

(9)


1. ஐங். 26 ; 10.

90ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்.

(பொ-ள்.) ஊருள் எழுந்த உரு கெழு செந்தீக்கு ஊர்நடுவில் பற்றிக்கொண்ட ஓங்கிய அச்சம் மிக்க செந்தழலுக்கு, நீருள் குளித்தும் உயலாகும் - அருகிலிருக்கும் நீருள் மூழ்கியும் பிழைத்தல் கூடும்; ஆனால், நீருள் குளிப்பினும் காமம் சுடும் குன்று ஏறி ஒளிப்பினும் காமம் சுடும் - நீருள் மூழ்கினாலும் காமம் எரிக்கும்; மலை ஏறி ஒளித்தாலும் காமம் எரிக்கும்.

(க-து.) காமம், தீயினுங் கொடியது.

(வி-ம்.) ஊருள் என்பதில் ‘உள்' நடுவென்னும் பொருட்டு. எழுந்த, மேலே ஓங்கிய ; உரு - அச்சம் ; "உரு உட்காகும்"1 என்பது தொல்காப்பியம். கொடுமை போன்றப் பெருந் தீ என்றற்குச் ‘செந்தீ' எனப்பட்டது. நீருள் என்றது, நீர்நிலையுள் குளித்தும் என்னும் உம்மை எளிமையைச் சிறப்பித்தமையின் சிறப்பும்மை. இச் செய்யுட் பொருள் "காமத்தீ நீருட்புகினுஞ் சுடும்"2 என்னுங் கலித்தொகை பகுதியிலும் வந்துள்ளது. ஏகாரம். தேற்றம்; மற்றொன்றுக்கும் ஒட்டுக. காமம் இரண்டிடத்தும் வந்தது, சொற்பின் வருநிலை.

(10)


1. தொல். உரி. 4.
2. கலி. 144 : 61 : 2.

(தொடரும்)


2011/6/5 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 8, 2011, 2:27:30 AM6/8/11
to மின்தமிழ்
ஈகை 
 
அறத்துப்பால்
10. ஈகை
(வறியார்க்கு ஒன்று ஈதல்.)
91இல்லா விடத்தும் இயைந்த அளவினால்
உள்ள விடம்போற் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்(கு)
அடையாவாம் ஆண்டைக் கதவு.

(பொ-ள்.) இல்லாவிடத்தும் - பொருளில்லாத காலத்திலும், இயைந்த அளவினால் - கூடிய அளவினால், உள்ள இடம்போல் பெரிது உவந்து - பொருளுள்ள காலத்தைப் போல மிகவும் மகிழ்ந்து, மெல்லக் கொடையொடு பட்ட குணன் உடைய மாந்தர்க்கு - ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல் தொழிலோடு பொருந்திய அருட்குணத்தையுடைய மக்களுக்கு, ஆண்டைக் கதவு அடையா - அவ்வுலகக் கதவுகள் வழியடைக்கமாட்டா.

(க-து.) ஈகைக் குணமுடையவர்கள் மறுமையின்பம் பெறுவர்.

(வி-ம்.) இடம் என்றது இங்கே காலங் குறித்து நின்றது. மெல்ல - மென்மையாக ; உவந்து என்னும் வினையெச்சம் பட்ட என்னும் பெயரெச்சத்தோடு இயைந்தது. அவ்வுலகமென்றது துறக்கம். ஆம் : அசை, அறிவு, அன்பு முதலிய உயிர்க்குணங்களிலும், உதவுகின்ற இயற்கையோடு கூடிய குணங்களே மாட்சிமையுற்று மறுமைப் பயனுக்கு ஏதுவாகலின், ‘கொடையொடு பட்டகுணன்' என்றார். ‘அடையாவாம் ஆண்டைக் கதவு' என்னுங் கருத்து, மேலும்1 வரும். குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம். நின்றது வாயில் திறந்து'2என்றார் பிறரும். 'கதவு அடையா' என்றது, செய்ததுபோலக் கிளத்தல்.3

(1)


1. நாலடி. 28 : 1.

2. அறநெறிச். 62.

3. தொல். வினை. 49.

92முன்னரே சாநாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள: - கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதுங்
கரவுன்மின் கைத்துண்டாம் போழ்து.

(பொ-ள்.) முன்னரே சாம் நாள் முனிதக்க மூப்பு உள - வெறுத்தற்குரிய கிழப்பருவமும் இறக்கும் நாளும் எதிரிலேயே உள்ளன. பின்னரும் - அவையல்லாமலும், பீடு அழிக்கும் நோய் உள - வலிமையைக் குலைக்கும் நோய்களும் வரவிருக்கின்றன, ஆதலால்; கைத்து உண்டாம் போழ்து - செல்வம் உண்டாகுங் காலத்திலேயே, கொன்னே - வீணாக, பரவன்மின் - மேலுந் தேட அலையாதிருங்கள், பற்றன்மின் - இறுக்கிப் பிடியாதிருங்கள்; பாத்து உண்மின் - பலருக்கும் பகுத்து உண்ணுங்கள்; யாதும் கரவுன்மின் - சிறிதும் ஒளியாதிருங்கள்.

(க-து.) பொருளுண்டானபோதே, மேலும்மேலும் அதனைத் தேட அலையாமல், நன்முறைகளிற் பயன் படுத்திக் கொண்டு அமைதியாக வாழ்க்கை நடத்துதல் வேண்டும்.

(வி-ம்.) காட்சியளவையை நினைந்து, முன்னரே என்றார். முனி : முதனிலைத் தொழிற்பெயர்; அனைவரும் பொருள் தேடி மகிழ வேண்டுமாதலின் ஒருவரே மேலுமேலுந் தேடுதல் மன்பதைக்குக் கேடும் வீணுமாமெனக் கருதிப் ‘பரவன்மின்' எனவும், சிக்கனம் பிடியாமல் முறையாகத் துய்த்தல் உடல்நலம் அறிவு நலம் முதலியனகொள்ள ஏதுவாகலின், ‘பற்றன்மின்' எனவும், பலர்க்கும் பகுத்தீதலின் உலகமும் நன்றாம், தமக்கும் உயிர்ப் பண்பு வளர்ச்சி பெறுமாதலின்' ‘பாத்துண்மின்' எனவும், பொருளோடு பற்றின்றி யொழுகும் பண்பு கைவந்து தெளிவுண்டாமாதலின். ‘கரவன்மின்' எனவுங் கூறினார்.

93 நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்;
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்.

(பொ-ள்.) செல்வம் - பொருள், கொடுத்துத் தாம் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் - பிறர்க்குக் கொடுத்துத் தானும் நன்றாக நுகர்ந்தாலும் திரளுதற்குரிய காலத்தில் மேலுமேலுந் திரளும், வினை உலந்தக்கால் - நல்வினை முடிந்துவிட்டபோது, இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது விடுக்கும் - அச் செல்வத்தை எவ்வளவுதான் இறுக்கிப்பிடித்தாலும் அது நில்லாமல் தனது தொடர்பை நீக்கிக் கொள்ளும், நடுக்குற்றுத் தன் சேர்ந்தார் துன்பம் துடையார் - இவ்வுண்மைகளை அறியாதார், வறுமைத் துன்பத்துக்கு அஞ்சித் தம்மை அடைந்தவர்களின் இன்னலைப் பொருள் கொடுத்துத் தீர்க்கமாட்டார்கள்.

(க-து.) செல்வம் நிலைப்பதற்கும் நில்லாததற்கும் ஏது இறுக்கிப் பிடித்தலும் பிறர்க்குக் கொடுத்தலும் அன்றாதலின், அவை முன்வினை காரணமாக நிகழ்வன எனக் கருதிப் பிறர்க்கு ஒன்று கொடுத்தலை மகிழ்வோடு நெகிழாமற் செய்துவரல் வேண்டும்.

(வி-ம்.) தளர்ந்து நிலைகுலைதல் ‘நடுக்குற்று' எனப்பட்டது. தன் : ஒருமைப்பன்மை மயக்கம். ‘தற்சேர்ந்தார் துன்பந் துடைத்தலே வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதனாலேதான் வாழ்க்கைக்கு விளக்கமுண்டாகின்றது' என்னும் உண்மை இதன்கண் விளங்கிற்று. ‘மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார், ஒற்கம் கடைப்பிடியாதார்' என்னுஞ் சான்றோர் செய்யுட்களிலும் இம்முடிபு தீர்த்துரைக்கப்படும். தக்கவாறு தெளிவில்லாமையினாலேயே உலகத்தில் நற்செயல்கள் நிகழாமற் போதலின் இப்பாட்டுத் தகுமுறையிற் காரணங்காட்டுவதாயிற்று.

(3)


1. ஐநதிணையைம் . 48.

94இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர்.

(பொ-ள்.) இம்மியரிசித் துணையானும் - ‘இம்மியரிசி எனப்படும் ஒருவகைச் சிறிய அரிசியின் அளவாவது, வைகலும் நும்மின் இயைவ கொடுத்துண்மின் - நாடோறும் உமக்குக் கூடியன பிறர்க்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்; ஏனென்றால் குண்டு நீர் வையத்து அடா அடுப்பினவர் உம்மைக் கொடாதவரென்பர் - கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் சமைத்தலில்லாத அடுப்பினையுடைய வறியவர்கள் முற்பிறப்பிற் பிறர்க்கு ஒன்று உதவாதவர்கள் என்று சான்றோர் கூறுவர்.

(க-து.) இயைந்த அளவாவது பிறர்க்கு உதவுதலை மேற்கொள்ள வேண்டும்.

(வி-ம்.) ‘இம்மியரிசி' யென்பதை "மத்தங்காய்ப் புல்லரிசி" என்பர் நச்சினார்க்கினியர் சிந்தாமணியுரையில்;1 மிகச் சிறியதாகலின், ‘இம்மி யரிசி' நுவலப்பட்டது. பிறர்க்குக் கொடுக்க இயலாத நாளை இன்னாத நாளாகக் கருதுவாராகலின், ‘வைகலும்' எனப்பட்டது. உம்மை - முற்பிறப்பு, குண்டுநீர், ஆழமான நீர்நிலை என்னும் பொருட்டாய்க் கடலை உணர்த்திற்று. மிகக் கொடிய வறுமை தோற்றுதற்கு ‘அடாஅ அடுப்பினவர்' எனப்பட்டது; இரக்கம் என்னும் உயிர்ப்பண்பு மிகும் பொருட்டு இங்ஙனம் இப்பிறப்பில் அவர் துன்புறுவோராயினர்.

(4)


1. சிந். 3 : 3.

95மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்.

(பொ-ள்.) மறுமையும் இம்மையும் நோக்கி - மறுமை இம்மை நிலைகளைக் கருதி, ஒருவற்கு உறுமாறு இயைவ கொடுத்தல் - கூடிய பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும்; வறுமையால் ஈதல் இசையாதெனினும் - அப்படிக் கொடுப்பது வறுமையினால் மாட்டாதாயினும் , இரவாமை - பிறரை இரவாமலிருப்பது, ஈதல் இரட்டி உறும் - அவ்வறுமைக் காலத்தில் கொடுத்தலினும் இரு மடங்கு தக்கதாகும்.

(க-து.) வறுமைக் காலத்தில் தான் பிறரை இரவாதிருத்தலும், தன்னிடம் இரந்து வந்தவர்க்கு இயைந்தன கொடுத்தலும் ஒருவனுக்குக் கடமை.

(வி-ம்.) உறுமாறு கொடுத்தல் - உள்ளமும் உரையும் செயலும் இனியனாய்த் தருதல்; பொருந்தும் வகையில் என்றபடி.

96நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.

(பொ-ள்.) பலர் நச்ச வாழ்வார் - பலரும் தம்மை விரும்பி அணுகும்படி வள்ளன்மையுடன் வாழ்பவர்கள், நடுவூருள் வேதிகை சுற்று கோட் புக்க படுபனை அன்னர் - ஊர் நடுவில் மேடையினால் சூழ்ந்துகொள்ளுதலைப் பொருந்திய காய்த்தலயுடைய பெண்பனையை ஒப்பர் ; குடி கொழுத்தக்கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள் - தமது குடி செல்வமிக்க காலத்தும் பிறர்க்கு வழங்கியுண்ணாத மாக்கள், இடுகாட்டுள் ஏற்றைப் பனை - சுடுகாட்டுள் நிற்கும் காய்த்தலில்லாத ஆண்பனையே யாவர்.

(க-து.) பிறர்க்கு வழங்கிப் பலர் நச்ச வாழ்தல் வேண்டும்.

(வி-ம்.) படுதல், இங்குக் காய்க்குந் தன்மையுடையதாதல், கொழுத்தக்கண் : வினையெச்சம். ‘ஏற்றை' எனவே ஆசிரியர் தொல்காப்பியர் ஒரு பெயர் குறிப்பாராதலின்,1 அதன் ஈற்று ஐகாரம் சாரியையெனக் கூற வேண்டுவதின்று.

(6)


1. தொல். மரபி . 2.

97 பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப !
என்னை உலகுய்யு மாறு.

(பொ-ள்.) கயல் புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப - கயல் மீனின் புலால் நாற்றத்தைப் புன்னை தனது மலர் மணத்தால் நீக்குகின்ற அலைமோதுங் கடலின் குளிர்ந்த கரையினையுடைய தலைவனே, பெயல்பால் மழை பெய்யாக்கண்ணும் - பெய்தற்குரியதான மழை பெய்யாத போதும், உலகம் செயற்பால செய்யாவிடினும் - உயர்ந்தோர் பிறர்க்குச் செய்தற்குரிய உதவிகளைச் செய்யா விட்டாலும், என்னை உலகு உய்யுமாறு - உலகத்துயிர்கள் பிழைக்கும் வகை எவ்வாறு?

(க-து.) மழையைப்போலப் பெரியோர் பிறர்க்கு உதவியாயிருக்க வேண்டும்.

(வி-ம்.) காலத்திற் பெய்தல், கைம்மாறு கருதாது பெய்தல், வேறுபாடின்றிப் பெய்தல், மீண்டும் மீண்டும் பெய்தல் முதலியன மழையின் இயல்புகளாகக் கொள்ளப்படும். "அறுகுளத் துகுத்தும் அகல்வயற் பொழிந்தும், உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும், வரையா மரபின் மாரிபோல"1"கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்"2 என்பவை முதலிய சான்றோர் செய்யுட்களினெலாம் இவ்வியல்புகள் காண்க.

(7)


1. புறம். 142. 2. புறம். 203.

98 ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா
தற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து.

(பொ-ள்.) மலி கடல் தண் சேர்ப்ப - வளம் நிறைந்த கடலின் குளிர்ந்த கரையை யுடையவனே, ஆற்றின் - ஒருவர்க்கு ஒன்று உதவுவதானால், ஏற்ற கை மாற்றாமை என்னானும் தாம் வரையாது - இரந்த கையை மாறாமல் இயன்றது எதையேனும் வேறுபாடின்றி, ஆற்றாதார்க்கு ஈவது ஆம் ஆண் கடன் - கைம்மாறு செய்ய இயலாத வறிஞர்க்கு உதவுவதே ஓர் ஆண் மகனின் கடமையாகும். மாறு ஈவார்க்கு ஈதல் பொலி கடன் என்னும் பெயர்த்து - எதிருதவி செய்வார்க்கு ஒன்று உதவுதல் விளக்கமான கடன் என்னும் பெயருடையது.

(க-து.) எதிருதவிஏதுஞ் செய்தலியலாத வறிஞர்க்கு இயன்றதை மாறாமல் உதவுவதே ஆண்மை யாகும்.

(வி-ம்.) "ஆற்றா மாக்கள் அரும்பசிகளைவோர், மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை"1யாதலின் இங்ஙனம் கூறினார். பொதுவான கடனிலும் விளக்கமான கடன் என்றற்குப் ‘பொலி கடன்' எனப்பட்டது ; எல்லார்க்குந் தெரிந்த கடன் என்பது கருத்து. "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து" என்பது பொய்யாமொழி.

(8)


1. மணிமே . 11 : 63 - 4.

99 இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும்
அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.

(பொ-ள்.) இறப்பச் சிறிது என்னாது - நம்மிடமிருப்பது மிகவுஞ் சிறியது என்று கருதாமலும், இல் என்னாது- இல்லை என்று மறுத்துவிடாமலும், என்றும் - எப்போதும், அறப்பயன் யார்மாட்டும் செய்க - பயனுடைய தான அறத்தை அனைவரிடத்தும் செய்துவருக, (அச்செயல்) முறைப்புதவின் - வாயில்கடோறும், ஐயம் புகும் தவசிகடிஞை போல் - பிச்சையெடுக்கும் தவசியின் உண்கலத்திற்போல, பைய நிறைத்துவிடும் - மெல்ல மெல்ல அறப்பயனை நிறைவாக்கிவிடும்.

(க-து.) சிறிய உதவியாயினும் மறாமற் செய்து வந்தால் மெல்ல மெல்லப் புண்ணியம் நிறைந்துவிடும்.

(வி-ம்.) வேறுபாடின்றி என்றற்கு ‘யார் மாட்டும்', என்றார். ‘செய்க' என்றது ஈண்டுக் கொடுத்து வருக என்னும் பொருட்டு. முறைப்புதவின் - முறையே வாயில்களில்; அஃதாவது வாயில்கடோறும் என்பது. ‘புதவு' வாயிலென்னும் பொருட்டாதல், "பூரித்துப் புதவந்தொறும்"1 என்னும் சிந்தாமணியிற் காண்க. தவசியின் பிச்சைக் கலம் எடுத்துக்காட்டினமையின் புண்ணியமும் ஆற்றலோடு நிரம்புமென்பது கொள்ளப்படும்.

(9)


1. சிந். 12 : 146.

100 கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரெனப்படுஞ் சொல்.

(பொ-ள்.) கடிப்பு இடு கண் முரசம் காதத்தோர் கேட்பர் - குறுங்கோலால் ஒலிக்கப்படும். கண்போன்ற இடத்தையுடைய முரசினது ஒலியைக் காத எல்லைவரையிலுள்ளோர் கேட்பர்; இடித்துமுழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர் - இடித்து முழங்கிய மேகத்தினொலியை ஒரு யோசனை எல்லை வரையிலுள்ளோர் கேட்பர்; சான்றோர் கொடுத்தார் எனப்படும் சொல் அடுக்கிய மூவுலகும் கேட்கும் - தக்கோரால், ‘இவர் உதவி செய்தவர்' என்று மகிழ்ந்து கூறப்படும் புகழுரை அடுக்காகவுள்ள மூன்று உலகங்களில் உள்ளாரனைவருங் கேட்டு நிற்பர்.

(க-து.) பிறர்க்கு உதவி செய்யும் வள்ளன்மையே ஒருவர்க்கு யாண்டும் புகழ்பரப்பும்.

(வி-ம்.) கடிப்பு - முரசறையுங் கோல், காதம் - ஏழரை நாழிகை வழி யென்ப. முழங்கியதென்பது முழங்கிய ஒலியென்னும் பொருட்டாதலின் ஈண்டுப் பெயர். சிந்தாமணியுரையில் ‘யோசனையென்பது நாற்காத எல்லை'1 என்பர் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். சான்றோராற் கூறப்படுஞ் சொல் எனப்படுதலின், ஞான ஒழுக்கங்களிற் சிறந்த அத்தகையோர்க்கு ஒன்று உதவுதலே சிறந்த ஈகையாகும் என்பது பெறப்படும்; "நன்றாய்ந் தடங்கினார்க்கு ஈத்துண்டல்" 2 என்றார் பிறரும்.

(10)


1. சிந் . 8 : 13.

2. அறநெறிச். 62.

(தொடரும்)



2011/6/6 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 8, 2011, 3:05:04 PM6/8/11
to மின்தமிழ்
அறத்துப்பால்
11. பழவினை
(முற்பிறப்பிற் செய்த வினைகளின் விளைவைப்பற்றி நுவல்வது)
101பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.

(பொ-ள்.) பல் ஆவுள் உய்த்துவிடினும் - பல ஆக்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ; குழக் கன்று - இளைய ஆன்கன்று, வல்லதாம் தாய் நாடிக் கோடலை - தன் தாய் ஆவினைத் தேடித் தெரிந்தடைதலை, வல்லதாகும்; தொல்லைப் பழவினையும் - பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும், தன் செய்த கிழவனை நாடிக் கொளற்கு - தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அன்ன தகைத்தே - அத்தகைய தன்மையுடையதேயாகும்.

(க-து.) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்.

(வி-ம்.) "மழவுங் குழவும் இளமைப் பொருள"1 வாதலின் குழக்கன்றென்றது, இளங்கன்றை. தாய், இரு திணைக்கும் பொதுப் பெயர்; ‘பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்' 2 என்ற விடத்து, "எல்லாப் பெயரும்" என்றதனால் இம்முறைப் பெயரும் பெறப்பட்டது. ‘தொல்லை' யென்றார், தொடர்ந்து வருதல் தோன்ற. கிழவன் - உரிமையுடையோன். விடாது பற்றும் என்றற்கு, இவ்வுரிமைப் பொருள் உணர்த்துஞ் சொல் வந்தது. (1)



1. தொல் . உரி. 14.

102 உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
நின்றுவீழ்ந் தக்க துடைத்து.

(பொ-ள்.) உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும் ஒருவழி நில்லாமை கண்டும் - தோற்றமும் இளமை நிலையும் மேன்மை வாய்ந்த செல்வமும் நன்மதிப்பும் எல்லாரிடமும் ஒரே வகையாகப் பொருந்தாமை நேரிற் பார்த்தும், (அதற்குக் காரணம் பழவினையே யென்றும், ஆகவே, நல்வினைகள் செய்தால் மேற்பிறவிகளில் நன்னிலைமைகள் பொருநதும் போலுமென்றும் அறிந்தொழுகாமல்), ஒருவழி ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை - யாதானும் ஒரு வகையால் ஒரு நல்வினையையேனும் செய்யாதவனது உயிர் வாழ்க்கை, உடம்பு இட்டு நின்று வீழ்ந்தக்கது உடைத்து - உடம்பு தோற்றிச் சிலகாலம் பயனில்லாமல் இருந்து பின் இறந்துபோகும் வீண் நிலையினையே யுடையதாகும்.

(க-து.) நல்வாழ்வுக்குக் காரணம் நல்வினையே யென்றறிந்து அதனை இயன்ற அளவிலாயினுஞ் செய்து பிறவியைப் பயனுடையதாக்குதல் வேண்டும்.

(வி-ம்.) செல்வம், அறம் முதலிய நோக்கங்கட்குப் பயன்படுத்தற்குரியதாகலின், ‘ஒண்பொரு' ளெனப்பட்டது. நில்லாமை - நின்று பொருந்தாமை. ‘உடம்பு இட்டு' என்பதற்குத் ‘தம்மைப் போல் உடம்பு மாத்திரையாக உணர்ச்சியில்லாச் சில குழந்தைகளைத் தோற்றி' என உணர்த்தலும் ஒன்று. வீழ்ந்தக்கது என்பது ‘வீழுந்தகையது' என்னும் பொருட்டு; இதனால் உட்கு முதலியன இல்லாத வாழ்க்கை வீண் என்பது பெறப்பட்டது; "உட்கில் வழி வாழா வூக்கம் மிக இனிதே"என்றார் பிறரும்.

(2)


1. இனியவை நாற் - 27.

103 வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம்1 அவரவ ராற்றான் ;
விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்
காரெனச் செய்தாரும் இல்.

(பொ-ள்.) வளம்பட வேண்டாதார் யார் யாரும் இல்லை - செழுமை பெற விரும்பாதவர் உலகில் ஒருவருமில்லை, அளந்தன போகம் அவரவர் ஆற்றல் - ஆனால் இன்பநுகர்வு அவரவர் முன்வினைப்படியே அளவு செய்யப்பட்டுள்ளன. விளங்காய் திரட்டினார் இல்லை களங்கனியைக் கார் எனச் செய்தாரும் இல் - விளங்காயை உருண்டை வடிவினதாக அமைத்தவரும் இல்லை, களம்பழக்கத்தைக் கரிய உருவினதாகச் செய்தவரும் இல்லையாதல் போல வென்க.

(க-து.) அவ்வவற்றின் முறைப்படியே அவையவை அமைதலின், வளம் பெற விரும்புவோர் அதற்கேற்ப நல்வினை செய்தல் வேண்டும்.

(வி-ம்.) யார்யாரு மில்லை என்னும் அடுக்கு எஞ்சாமைப் பொருளது. ஆற்றால் - வினைவழியே. ‘திரட்டினாரில்லை; செய்தாருமில்' என்றது, எடுத்துக்காட்டுவமையணி.

(3)


1. சிந். நாம. 184.

104உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா
பெறற்பா லனையவும் அன்னவாம்; மாரி
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்.

(பொ-ள்.) உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா - உருத்து வருந் தீவினைகளை நீக்குதல் சான்றோர்க்கும் ஆகாது, பெறற்பால் அனையவும் அன்னவாம் - அங்ஙனமே அடைந்தின்புறற்குரிய நன்மைகளும் அப்பெரியோர்களால் தடை செய்தற்குரியன அல்லவாம், மாரி வறப்பின் தருவாரும் இல்லை, சிறப்பின் அதனைத் தணிப்பாரும் இல் - மழை பெய்யாதொழியின் அதனைப் பெய்விருப்பாருமில்லை ; மிகப் பெய்யின் அதனைத் தணிப்பாருமில்லை யாதல்போல வென்க.

(க-து.) இருவினைகளும் பொருந்தியே தீருமாதலின், தீவினைகளை நீக்கி நல்வினைகளைச் செய்தல் இன்றியமையாததாகும்.

(வி-ம்.) உறுவர் - தக்கோர் . ஆகா ; பன்மையன்று ஈறுதொகுத்தல். தீவினைகளை ஒப்பவே தவறாது வந்து பொருந்துவவான என்றற்கு ' அனையவும் ' எனப்பட்டது. தருவாரும் தணிப்பாருமென்னும் உம்மைகள் ஒன்றையொன்று தழீஇ நின்றன. ஆற்றலாகிய வினையின் விளைவு அமையினன்றி மாரி தருவாருமில்லை, தணிப்பாருமில்லை என்பது கருத்தாகக் கொள்க.

105 தினைத்துணைய ராகித்தந் தேசுள் ளடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை
வினைப்பய னல்லாற் பிற.

(பொ-ள்.) தினைத்துணையராகித் தேசுஉள் அடக்கிப் பனைத்துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர் - பனையளவினரான பெருமையுடையோர் சிலர் நாடோறும் பெருமை குறைந்து தினையளவினராய்ச் சிறுத்துத் தமது மேன்மையை உள்ளத்தில் அடக்கிக் கொண்டு உலகில் உயிர்பொறுத் திருக்கின்றனர்; நினைப்பக் கிடந்தது எவன் உண்டு மேலை வினைப்பயன் அல்லால் பிற - இதற்குக் காரணம் முன்னை வினைப்பயனல்லால் வேறு கருதக் கிடந்தது யாதுண்டு!

(க-து.) முன்னைத் தீவினை எத்தகைய பெரியோரையும் உருத்து வருத்தும்.

(வி-ம்.) தினை பனை யென்னும் அளவுகள் கண்ணியங் கருதின. எவனுண்டாம் என்பதில், ‘ஆம்' அசைநிலை. பிற, வேறு என்னும் பொருட்டு, தேசு என்பது மேன்மைப் பொருட்டாதல் "வலிச்சினமும் மானமும் தேசும்"1 என்னும் புறப்பொருள் வெண்பா மாலையினுங் காண்க.

(5)


1. புறம். வெ. 2 : 4.

106பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிதிரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.

(பொ-ள்.) பல் ஆன்ற கேள்விப்பயன் உணர்வார் வீயவும் கல்லாதார் வாழ்வது அறிதிரேல் - பலவகைப்பட்ட பரந்த நூற்கேள்விகளின் பயனை அறிந்தொழுகுங் கற்றோர் உலகில் விரைவில் இறக்கவும் கல்லாதார் நீடு வாழ்வது எங்ஙனமென்று கருதுவீர்களானால்; (அதற்குக் காரணம்) சேதனம் என்னும் அசசேறு அகத்து இன்மையால் கோது என்று கொள்ளாதாம் கூற்று - அறிவென்னும் அப்பிழிவு அவர்கள் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறுங்கோது என்று கருதிக் கழித்துவிடுவான் கூற்றுவன் என்பது.

(க-து.) சாதல் நேரினும் கற்றல் கேட்டல் முதலிய நல்வினைகளைச் செய்து புண்ணியம் பெறுதல் வேண்டும்.

(வி-ம்.) கேள்வியின் பயனாவது மெய்யுணர்வுப்பேறு, அறிந்து ஒழுகுவாரென்றற்கு ‘உணர்வார்' எனப்பட்டது. கற்றோர் அறிவுச்சாறு பெற்றுக் கனிந்துவிட்டோராதலின், பிறவிப்பயனை அவர் அடைந்துவிட்டமை கருதி அதனினும் மேனிலையுறும் பொருட்டு விரைவில் அவரது ஊனுடல் கழற்றப்பட்ட தெனவும். கல்லாதார் இன்னும் அத்தகுதி பெறாமையால் இவ்விடமே கழித்து விடப்பட்டனரெனவுந் தெரிவித்து, அம்முகமாக, விரைவில் நல்வினை செய்து நன்னிலையுறுகவென அறிவுறீஇயது இச் செய்யுள். ‘அச்சேறு' என்னுஞ் சுட்டுக் கல்வி கேள்வி யறிவு கருதியது.

108 அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல் - வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும்.

(பொ-ள்.) வளி ஓடி நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப - காற்று வீசி நெய்தல் மலர்த் தேன் சிந்தும் பரந்த குளிர்ந்த கடற்கரையின் தலைவனே! அறியாரும் அல்லர் அறிவது அறிந்தும் பழியோடு பட்டவை செய்தல் செய்த வினையான் வரும் - மக்களிற் சிலர் அறியா தாருமல்லராய் அறியத்தக்கதை அறிந்தும் பழியோடு கூடிய தீச்செயல்களைச் செய்தல் முன் செய்த தீவினையால் நேர்வதாகும்.

(க-து.) அறிஞராய் விளங்குதலோடு பழிப்படா நல்வினைகளுஞ் செய்து புண்ணியப் பேறுடையராதல் வேண்டும்.

(வி-ம்.) ‘இது தீது : இது செய்யின் இதன் விளைவு இத்தனை துன்பமாகும்,' என்பதை அறிந்தவரே யென்றற்கு, ‘அறியாருமல்லர்' எனப்பட்டது. ‘அறிவது' என்றது, ஒழுக்க முறைமைகள். ஓடியென்னும் எச்சம் காரணப்பொருட்டு. நெய்தல் - ஒரு மலர். "சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகா,"1ராதலின். இதுமுன் வினைப்பாலதாயிற்று.

(8)


1. அகநா. 112.

109 ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்
வேண்டார்மன் தீய ; விழைபயன் நல்லவை ;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுத லரிது.

(பொ-ள்.) ஈண்டு நீர் வையத்துள் - மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், எல்லாரும் எத்துணையும் வேண்டார் தீய - யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். விழை பயன் நல்லவை - எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால தீண்டாவிடுதல் அரிது - மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாதொழிதல் இல்லை.

(க-து.) இன்பந் தரும் நல்லவற்றையே மக்கள் விரும்புதலால், அவற்றிற்கேற்றபடி நல்வினைகளைச் செய்து வரல்வேண்டும்.

(வி-ம்.) மன் : அசைநிலை. ‘தீண்டா' என்னும் வினையெச்ச ஈறு தொக்கது. அரிதென்றது, "மனக்கவலை மாற்றலரிது"1 என்புழிப்போல இன்மைப் பொருட்டு.

(9)


1. குறள். 1 : 7.

110 சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு

(பொ-ள்.) சிறுகாலைப் பட்ட பொறியும் - கருவமையுங் காலத்திலேயே அமைந்த ஊழ்வினைகளும், சிறுகா பெருகா முறை பிறழ்ந்து வாரா உறுகாலத்து ஊற்றாகா ஆமிடத்தே ஆகும் - குறையமாட்டா, மிகமாட்டா, முறைமாறிப் பொருந்தமாட்டா, உற்ற காலத்தில் உதவியாக மாட்டா, உதவியாதற்குரிய காலத்தில் உதவியாகும், அதனால் - ஆதலால், இறுகாலத்து என்ன பரிவு - ஊழ் வினையால் கெடுங்காலத்தில் வருந்துவது ஏன் ?

(க-து.) ஊழ்வினைகளை நுகர்ந்தே தீரவேண்டுமாதலின், தீவினைகள் செய்யாதிருத்தல் வேண்டும்.

(வி-ம்.) ‘ஊன்றாகா ' என்பது ஊற்றாகா என நின்றது. ஊன்று - ஈண்டு ஊன்றுகோல் : ஊன்றுகோல் போல் உதவியாகா என்பது கருத்து. எவ்வளவு துன்புற்றாலும் வினை உருத்து வருத்துமேயல்லது அவ்வுற்ற நேரத்தில் உதவிசெய்யா தென்றற்கு அங்ஙனம் கூறப்பட்டது. உதவி செய்தற்குரிய நல்வினையாயின் உதவும் என்றற்கு ‘ஆமிடத்தே ஆகும்' எனப்பட்டது; சிறுகாலை யென்றது பிறவித்தொடக்கத்தை; ஈண்டுக் கருவியின் நிலையை உணர்த்திற்று. பொறியும் என்னும் உம்மை எதிரது தழீஇயதாய்ப் பின்னர்ச் செய்யும் ‘வினைகளும் அத்தகையனவே என்பதைப் புலப்படுத்தி நின்றது, என்னை' யெனப்பட்டது. பயனில்லை யென்றற்கு, பரிவு என்றார், பெற்ற காலத்துற்ற அன்பினால் வருந்துதலின். இக்கருத்து, சிந்தாமணியில் ‘நோதலும் பரிவுமெல்லாம்' 1 என விதந்துரைக்கப்பட்டது.

(10)


1. சிந். 1 : 240.

107இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாருங் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்.

(பொ-ள்.) அடம்பப்பூ அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப - அடம்பங்கொடியின் மலரை அன்னப் பறவைகள் கோதுகின்ற அலைமோதுங் கடலின் குளிர்ந்த துறைவனே, இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண நெடுங்கடை நின்றுழல்வதெல்லாம் - மக்களிற் சிலர், துன்பம் மிக்க உள்ளத்தவராய் எல்லாருங் காணும்படி பெரிய வீடுகளின் நெடிய தலைவாயிலில் நின்று பிச்சையேற்றுழல்வதெல்லாம், முன்னை வினையாய் விடும் - ஆராய்ந்து பார்க்குங்கால் பழவினைப்பயனாய் முடிந்து நிற்கும்.

(க-து.) நல்வினையுடையோர் இரந்துழலார்.

(வி-ம்.) ஏளனமும் இரக்கமுந் தோன்ற ‘எல்லாருங் காண' எனவும், உழல்வாரது ஏழைமை நன்கு வெளிப்பட ‘நெடுங்கடை' எனவுங் கூறப்பட்டன. அடம்பு நெய்தல் நிலத்து நீர்ப் பூங்கொடி. "அடும்பிவர் அணியெக்கர்"1 என்றார் பிறரும்.

(7)


1. கலி. 132 : 16.


2011/6/8 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/6/6 Venkatram Shrinivas <see...@gmail.com>

2011/6/5 Venkatram Shrinivas <see...@gmail.com>
1. குறள். 37 : 6<p style="font-family:GIST-TMOTChanakya;font-size:9pt;font



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 9, 2011, 3:35:51 PM6/9/11
to மின்தமிழ்
அறத்துப்பால்
12. மெய்ம்மை
(‘மெய்ம்மை' யாவது ஒன்றன் இயற்கைத் தன்மை; ஈண்டு உலகத்தின் இயல்பு இனைத்தென்று நுவன்றபடி.)'
111இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்ற முடைத்து.

(பொ-ள்.) இசையா ஒரு பொருள் இல் என்றல் - கொடுக்க இயலாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று கூறிவிடுதல், யார்க்கும் வசை அன்று வையத்து இயற்கை - யார்க்கும் பழியாகாது, அஃது உலகத்தின் இயற்கையேயாகும்; நசை அழுங்க நின்று ஓடிப்பொய்த்தல் - ஆசையால் நையும்படி உதவுவார்போல் தோன்றிக்காலம்.

நீடிப் பின் பொய்த்துவிடுதல், நிரைதொடீ - ஒழுங்காக அமைந்த வளையல்களையணிந்த மாதே!, செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து - ஒருவர் செய்த நன்றியை அழித்தாரது குற்றத்தை யொப்பத் தீ துடைத்தாகும்.

(க-து.) இயன்றதை உடனே உதவிடுதல் உண்மை அறம்.

(வி-ம்.) ஓடி - காலந்தாழ்த்தென்னும் பொருட்டு, தன் வினைக்கண் வந்தது, அஃது அவன் செயலாதலின்; நெடுங்காலம் நம்பி அதுகாறும் வள்ளல் நிலையில் வைத்துப் பெருமைப்படுத்தினமையின் இரப்போர் நன்றி செய்தவராகின்றனராதலின், அவரைப் பொய்த்தல் செய்ந்நன்றி கொல்லுங் குற்றத்தோடோப்பதாயிற்று ; அக்குற்றமாவது, கழுவாய் இல்லாதகுற்றம். 1இச்செய்யுட்பொருள், "ஒல்லுவதொல்லும் என்றலும் யாவர்க்கும், ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும், ஆள்வினை மருங்கிற் கேண்மைப்பாலே ; ஒல்லா தொல்லும் என்றலும் ஒல்லுவது இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே, இரப்போர் வாட்டலன்றியும் புரப்போர் புகழ் குறைபடூஉம் வாயில்"2என்னும் புறச்செய்யுட்கண்ணும் கண்டுகொள்ளப்படும்.

(1)



1. புறம். 34. 2. புறம். 196.

112தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர் ! - அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.

(பொ-ள்.) தக்காரும் தக்கவரல்லாரும் தம் நீர்மை எக்காலும் குன்றல் இலராவர் - சான்றோரும் சான்றோரல்லாதாரும் தத்தம் இயல்புகள் எப்பொழுதும் குறைதல் இலராவர், அக்காரம் யாவர் தின்னினும் கையாது - கருப்பங்கட்டியை யார் தின்றாலும் கைக்காது, கைக்கும் தேவரே தின்னினும் வேம்பு - தேவரே தின்றாலும் வேப்பங்காய் கசக்கும்.

(க-து.) நல்லோரும் தீயோரும் அவரவரியல்பை எந்நிலையிலுங் காட்டிக் கொண்டிருப்பர்.

(வி-ம்.) நீர்மை என்றது, இங்கே இயற்கைப் பண்பு, எக்காலுமென்றது. வறுமையிலுஞ் செம்மையிலும் தக்கார் முன்னுந் தகாதார் முன்னும் என்க. ஏகராமும் ஆம் என்பதும் அசை. தேவரே யென்னும் ஏகாரம் பிரிநிலை. யாவரே யென்றார் தேவரல்லாதாரு மென்றற்கு. தேவர்; ஈண்டு நல்லோரென்னும் பொருட்டு.

113 காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் - ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர்.

(பொ-ள்.) காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து ஆடு மீனின் பலர் ஆவர் - சாய்கால் உண்டான காலத்தில் மேலே வானத்தில் விளங்குகின்ற விண்மீன்களைப்போல நெருங்கிய உறவினர் பலராவர், ஏலா இடர் ஒருவர் உற்றக்கால் - ஒவ்வாத வறுமையை ஒருவர் அடைவராயின், ஈர் குன்ற நாட - குளிர்ந்த மலைகளையுடைய நாடனே!, தொடர்புடையேம் என்பார் சிலர் - அக்காலத்தில், நட்புடையேம் என்று உரிமை பாராட்டுவோர் சிலராவர்.

(க-து.) சாய்காலுள்ளபோது பலரும் சூழ்ந்து நின்று, வறுமை வந்தபோது அவர் பிரிந்துபோவது உலகியற்கை.

(வி-ம்.) உலகில் உண்மை நட்புடையோர் சிலர் என்றபடி - கால் ஆடு போழ்தில் - காலம் ஆக்கமாக நடைபெறுகின்ற போழ்தில் என்க; சாய்கால் என்பதன் பொருளும் அது; இலக்கணையால் ஈங்குச் செல்வாக்ககுணர்த்திற்று. விண்மீன்கள் பன்மைக்குஞ் செறிவுக்கும் உவமை. ‘சிலராவர்' எனவும், ‘ஒருவர் காலாடு போழ்தில்' எனவும் ஒட்டிக்கொள்க. சிந்தாமணியுரையில் நச்சினார்க்கினியர் ‘கண் ஆடி ஒன்று' என்று வருமிடத்தில் "கண் எல்லாரிடத்தும் உலாவிவென்று; கால் ஆடு போழ்தின், என்றாற் போல"1 என்றுரைத்து இதனை எடுத்துக் காட்டினார். இதனாற் ‘கால்' என்பதை உடம்பின் உறுப்பாகிய கால் என்று அவர் கருதினமை பெறப்படும். இதனினுங் ‘காலம்' என்னும் மேலுரை அதற்குச் சிறக்குமா றறிந்துகொள்க.


1. சிந். 11 : 1

114 வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவண தெய்த இருதலையும் எய்தும்
நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்
தடுவது போலுந் துயர்.

(பொ-ள்.) வடு இலா வையத்து மன்னிய மூன்றில் குற்றமில்லாத உலகத்தில் இன்றியமையாதனவாய்ப் பொருந்திய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று உறுதிப் பொருள்களுள், நடுவணது எய்த இருதலையும் எய்தும் - நடுவில் நின்றதான ‘பொருள்' என்பதை ஒருவன் அடைய அது காரணமாக அதன் இருபக்கத்தனவான ‘அறம்' ‘இன்பம்' என்னும் இரண்டையும் அவன் அடைவான், நடுவணது எய்தாதான் - அவ்வாறு நடுவில் நின்றதான செல்வப்பொருளை அடையாதவன், எய்தும் உலைப்பெய்து அடுவதுபோலும் துயர் - கொல்லன் உலையில் இட்டு இரும்பைக் காய்ச்சுவது போலும் வறுமைத் துன்பத்தை அடைந்து நைவன்.

(க-து.) தக்கோர்க்குப் பொருள் ஏனையெல்லா அறங்களையும் நல்கும்.

(வி-ம்.) அறமுதலா உறுதிப் பொருள்களை நாடும் நல்லோரை நினைந்து ‘வடுவிலாவையம்' எனப்பட்டது. மூன்றறங்கள் கூறினார், இவற்றின் விடுதலை வீடாகலின் மன்னியவென்னும் நிலைபேற்று மொழியாற் கூறியது; இவற்றின் பேறு பல பிறவிகளிலுந் தொடர்தலின் என்க. ஒன்றன் படர்க்கையாதலின்1 எய்தும் என்னுஞ் செய்யுமென் முற்று வந்தது. இச்செய்யுட்கு ஒரு விரிவுரை போலப் "பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே அம்மூன்றும், ஆராயிற் றானே அறம்பொருளின்ப மென்று, ஆரார் இவற்றின் இடையதனை எய்துவார், சீரார் இருதலையும் எய்துவர்"2 என நாலாயிரப்பனுவல் விளக்கிச் செல்லுதலும் இங்கு நினைவு கூரற்பாலது.

(4)


1. தொல். வினை ; 30.

115 நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.

(பொ-ள்.) நல் ஆவின் கன்றாயின் நாகும் விலை பெறூஉம் - உயர் இனத்து ஆவின் கன்றாயின் இளங்கன்றும் மிக்க விலைபெறும், கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச்சொல் செல்லும் - ஆதலின் படியாதவரேயாயினும் செல்வரது வாய்ச்சொல் மதிக்கப்படும். நல்கூர்ந்தார் சொல் புல் ஈரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லா - வறிஞரது வாய்மொழி, அவர் கற்றவரே யாயினும், சிறிது ஈரமுள்ள காலத்தில் உழுகின்ற உழவுபோல மேலளவாய்ச் சென்று உள்ளே மதிக்கப்படாதொழியும்.

(க-து.) கல்வியுடையராயினும் உலகத்திற் செல்வமும் எய்தி வாழ முயலவேண்டும்.

(வி-ம்.) ‘நல் ஆ' என்றது செல்வரையும், ‘நாகு' என்றது அவருட் படிப்பில் இளையராயினாரையும், ‘புல் ஈரம்' என்றது செல்வமில்லாக் கல்வியாளர்பால் உலகு காட்டுஞ் சிறு மதிப்பையுங் குறிப்பால் உணர்த்தின. ஏ, ஆம் : அசை. புலவர் சொல்லேருழவ ராதலின், 1ஈண்டு உழவுவமை ஆற்றலுடைத்து.

(5)


1. புறம். 46

116 இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்;- தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

(பொ-ள்.) இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் - விரிவுமிக மெய்யுணர்வு நூல்களை என்றுங் கற்பினும், அடங்காதார் என்றும் அடங்கார் - இயல்பாக அமைந்தொழுகாதவர் என்றும் அமைந்தொழுகார்; தடம் கண்ணாய் -அகன்ற கண்களையுடைய மாதே!, உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும் - உப்பொடு நெய் பால் தயிர் பெருங்காயம் இட்டுச் சமைத்தாலும், கைப்பு அறா பேய்ச் சுரையின் காய் - பேய்ச்சுரையின் காய்கள் தம் கசப்பியல்பு நீங்கா.

(க-து.) இயற்கைத் தன்மை எதனாலும் நீங்காது.

(வி-ம்.) ஞானம் : ஆகுபெயர். என்றுங் கற்பினுமெனக் கொண்டு வாழ்நாள் முழுமையும் கற்றாலும் என்று உரைத்துக்கொள்க. கண்ணாள் என்பது விளித்தலிற் கண்ணாய் என நின்றது.1 பொதுவாம் முதன்மை நோக்கி உப்பு ஒடுக்கொடுத்துப் பிரிக்கப்பட்டது. நெய் பால் தயிர் என்பவற்றுள் எதனை இட்டு அடினும் என்பது கருத்து.

(6)


1. தொல். விளி. 29.

118 ஆவே றுருவின வாயினும், ஆபயந்த
பால்வே றுருவின வல்லவாம்;- பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி, ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.

(பொ-ள்.) ஆ வேறு உருவினவாயினும் ஆ பயந்த பால் வேறு உருவினஅல்ல - ஆக்கள் வேறுவேறு நிறத்தன வாயினும் அவ்வாக்கள் உதவிய பால்கள் அவ்வாறு வேறு வேறு நிறத்தன அல்ல; பால்போல் ஒரு தன்மைத்தாகும் அறம் - பாலைப்போல் அறம் ஒரே தன்மையுடையதாகும்; நெறி ஆ போல் உருவு பல கொளல் ஈங்கு - இவ்வுலகில் அவ்வறத்தை ஆற்றும் முறைகள் ஆக்களைப் போல் பல செயல்களாக உருக்கொள்ளற்குரியது.

(க-து.) இயன்ற செயல்களின் வாயிலாக அறத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்.

(வி-ம்.) உரு, நிறத்திற்காயிற்று; ‘களங்கனியன்ன கதழ்ந்து கிளர் உருவின்‘1 என்றார் பிறரும். கொளல் என்னும் முற்று ஈண்டு உடன்பாட்டிற் படர்க்கைக்கண் வந்தது. பல செயல் முகமாகவும் அறந் தேடிக் கொள்ளுதற்குரியதாக உலகத்தின் இயல்பு அமைந்திருக்கின்றதென்பது பொருள். ஆம் : அசை.

(8)



1. மலைபடு, 36.


117 தம்மை இகழ்வாரை தாமவரின் முன்னிகழ்க;
என்னை அவரொடு பட்டது?- புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப
உறற்பால யார்க்கும் உறும்.

(பொ-ள்.) தம்மை இகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க - தம்மைப் புறக்கணிப்பவரை அவரினும் முற்படத் தாம் புறக்கணிக்க; என்னை அவரொடு பட்டது - என்ன அவரோடு உண்டான தொடர்பு!, புன்னை விறல் பூகமழ் கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப - புன்னையின் வெற்றி வாய்ந்த மலர் மணங் கமழ்கின்ற சோலைகளையுடைய கடற்கரைத் தலைவ! உறற்பால யார்க்கும் உறும் - வரற்குரிய நன்மை தீமைகள் யார்க்கும் வரும்.

(க-து.) வருவன வந்தே தீருமாதலின் அதன் பொருட்டு உலகத்தில் யாரும் தம் கண்ணியத்தைக் குறைத்துக்கொள்ளுதலாகாது.

(வி-ம்.) இகழ்தல் ஈண்டுப் புறக்கணித்தற்பொருட்டு அவரின் முன் - அவர் இகழ்தற்குமுன்பே. எதுவும் தம்பழ வினைப்படியே வருதலின், ‘என்னை அவரொடு பட்டது" என்றார். ‘உறற்பால தீண்டா விடுதல் அரிது,‘1 என்றார் முன்னும் கடலின் புலால் நாற்றத்தைக் கடிதலின் புன்னைமலர்க்கு விறல் நுவலப்பட்டது. வீங்கு நீர் - கடல்; மிக்க நீர் என்னும் பொருட்டா வந்தது. பிறர்க்குத் தாழ்ந்தொழுகுவாரை நினைந்து ‘யா£க்கும்' என்றாரென்க.

(7)


1. நாலடி, 11 ; 9.

118 ஆவே றுருவின வாயினும், ஆபயந்த
பால்வே றுருவின வல்லவாம்;- பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி, ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.

(பொ-ள்.) ஆ வேறு உருவினவாயினும் ஆ பயந்த பால் வேறு உருவினஅல்ல - ஆக்கள் வேறுவேறு நிறத்தன வாயினும் அவ்வாக்கள் உதவிய பால்கள் அவ்வாறு வேறு வேறு நிறத்தன அல்ல; பால்போல் ஒரு தன்மைத்தாகும் அறம் - பாலைப்போல் அறம் ஒரே தன்மையுடையதாகும்; நெறி ஆ போல் உருவு பல கொளல் ஈங்கு - இவ்வுலகில் அவ்வறத்தை ஆற்றும் முறைகள் ஆக்களைப் போல் பல செயல்களாக உருக்கொள்ளற்குரியது.

(க-து.) இயன்ற செயல்களின் வாயிலாக அறத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்.

(வி-ம்.) உரு, நிறத்திற்காயிற்று; ‘களங்கனியன்ன கதழ்ந்து கிளர் உருவின்‘1 என்றார் பிறரும். கொளல் என்னும் முற்று ஈண்டு உடன்பாட்டிற் படர்க்கைக்கண் வந்தது. பல செயல் முகமாகவும் அறந் தேடிக் கொள்ளுதற்குரியதாக உலகத்தின் இயல்பு அமைந்திருக்கின்றதென்பது பொருள். ஆம் : அசை.

(8)



1. மலைபடு, 36.

119யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர்
இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர்
கடைபோகச் செல்வம்உய்த் தார்?

(பொ-ள்.) தேருங்கால் - உலகியலை ஆராயுமிடத்து, யார் உலகத்து ஓர் சொல் இல்லார் - உலகத்தில் ஒரு பழிச் சொல் இல்லாதவர் யார்?, யார் உபாயத்தின் வாழாதார் - யாதானும் ஓர் ஏதுவினால் உலகில் வாழாதவர் யார்?, யார் இடையாக இன்னாதது எய்தாதார் - வாழ்வின் இடையே இடர் அடையாதார் யார்?, யார் கடைபோகச் செல்வம் உய்த்தார் - முடிவுவரையிற் செல்வத்தை நுகர்ந்தவர் யார்?, யாருமில்லை.

(க-து.) இன்ப துன்பங்கள் கலந்து வருவதே உலகியற்கை.

(வி-ம்.) யார் என்னும் வினா ஒருவருமிலர் என்னும் விடையை உட்கொண்டது. ஈதொப்பதை ‘அறிபொருள் வினா' என்பர் சேனாவரையர்.1 அறியலுறவினை அறிவுறுத்துதலின், இங்ஙனம் வினாவும் விடையாகும் என்பது. உபாயம் என்பது, பலவகைப்பட்ட தொழிலேதுக்களை உணர்த்தும். உய்த்தல் - ஆளல்; ஈண்டு நுகர்தலென்க.

(9)


1. தொல். கிளவி. 13.



120 தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்
றியாங்கணும் தேரின் பிறிதில்லை:- ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே,
கூற்றங்கொண் டோடும் பொழுது.

(பொ-ள்.) தேரின் - ஆராய்ந்தால், தாம் செய்வினையல்லால் தம்மொடு செல்வது யாங்கணும் பிறிது இல்லை - தாம் செய்த நல்வினை தீவினைகளல்லாமல் தம் உயிரோடு துணைவருவது எப்பிறவியிலும் பிறிதெதுவுமில்லை, ஆங்கு தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயம் இன்று கூற்றம் கொண்டு ஓடும்பொழுது - கூற்றுவன் உயிரைப் பிரித்தெடுத்துக்கொண்டு செல்லும்பொழுது அதுகாறும் தாம் பாதுகாத்து அழகுகள் செய்துகொண்ட உடம்பும் அவ்வாறே பயனின்றாயிற்று.

(க-து.) செல்லுங் கதிக்கு உறுதுணையாக நல்வினைகள் செய்துகொள்ளல் வேண்டும்.

(வி-ம்.) மற்று, ஏ : அசை. ஆங்கு, பிறிதெதுவும் துணை வராததுபோல என்னும்பொருட்டு. போற்றிப் புனைந்தவென்பது, அச்செயல்களினும் புண்ணியம் ஈட்டுஞ் செயல் முதன்மையான தென்னுங் குறிப்பிற்று இது, குறிப்பெச்சமாக1 வருவித்து உணர்ந்து கொள்ளப்படும்.

(10)


1. தொல். எச். 44.



2011/6/9 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 11, 2011, 3:16:29 PM6/11/11
to மின்தமிழ்
தீவினை அச்சம் 
 
அறத்துப்பால்
13. தீவினையச்சம்
(தீவினை செய்தற்கு அஞ்சுதல்)
121துக்கத்துள் தூங்கித் துறவின்கட் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.

(பொ-ள்.) சுடுகாடு துக்கத்துள் தூங்கித் துறவின் கண் சேர்கலா மக்கள் பிணத்த - உலகத்திலுள்ள சுடுகாடுகள், வாழ்க்கைத் துன்பங்களிற் கிடந்தழுந்தி, அவற்றினின்று நீங்குதற்குரிய துறவற நெறியிற் சார்ந்தொழுகாத கீழ்மக்களின் பிணங்களையுடையன; புலன் கெட்ட புல்லறிவாளர் வயிறு - ஆனால் நல்லறிவு கெட்ட புல்லறிவாளரின் வயிறுகளோ, தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடு- தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இடுகாடுகளாயிருக்கின்றன.

(க-து.) பிற உயிர்களைக் கொன்றுண்ணுந் தீ வினைக்கு அஞ்சுதல் வேண்டும்.

(வி-ம்.) அருளொழுக்கமுடைய சான்றோர் நோய்கொண்டு மறையாமல், செயற்கருஞ் செயல்கள் செய்து தூயராய் மறைதலால்1 அவர்கள் மறையும் இடம் புனிதமாகப் போற்றப்படுதலின், ‘சுடுகாடுகள் கீழ்மக்கள் பிணங்களையுடையன' எனப்பட்டது. அக்கீழ்மக்களினும் இழிந்தனவான சிற்றுயிர்களின் பிணங்களையுடையன புல்லறிவாளர் வயிறுகள் என்க. பல காலுந் தின்று உள்ளே செலுத்துதலின் ‘தொக்க' எனவும், நல்லோர் கூறும் அறவுரைகளையேனுங் கேட்டொழுகுதலில்லாமையின் ‘புல்லறிவாளர்' எனவும் உரைக்கப்பட்டன, ஏகாரம், ஈற்றசை.

(1)


1. புறம். 191, 218.

122இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்க்
கரும்பார் கழனியுட் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.

(பொ-ள்.) சுரும்பு ஆர்க்கும் காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும் கூட்டுளாய்க் கொண்டு வைப்பார் - வண்டுகள் ஆரவாரிக்கும் இனிய காட்டில் இருந்து உயிர் வாழும் கவுதாரியையும் காடையையும் கூட்டில் இருந்து வருந்தும்படி பிடித்துக்கொண்டு வந்து சிறை வைப்பவர். இரும்பு ஆர்க்கும் காலராய் ஏதிலார்க்கு ஆளாய் கரும்பார் கழனியுள் சேர்வர் - இருப்பு விலங்குகளாற் பூட்டப்பட்ட கால்களையுடையராகவேனும் அயலார்க்கு அடிமைப்பட்டவர்களாகவேனும் கட்டுப்பட்டு வலிய பார்நிலத்திலாதல் விளைநிலத்திலாதல் போய்த் தொழில் செய்து உழல்வர்.

(க-து.) சிற்றுயிர்களைச் சிறைப்படுத்துந் தீவினைக்கும் அஞ்சுதல் வேண்டும்.

(வி-ம்.) "பூவைகிளி தோகைபுணர் அன்னமொடு பன்மா, யாவையவை தங்கிளையின் நீங்கி அழவாங்கிக், காவல் செய்து வைத்தவர்கள் தங்கிளையின் நீங்கிப் போவர்புகழ் நம்பி இது பொற்பிலது கண்டாய்"1 என்றார் பிறரும். காலராய்க் கரும்பார் சேர்வர், ஆளாய்க் கழனியுட் சேர்வர் என நிரனிறையாகக் கொள்க. கரும்பார் சேர்தல் சிறைச்சாலைகளுட் செய்யுந்தொழில். இரும்பு : ஆகுபெயர். சிவலும் குறும்பூழுமென்றது, இலக்கணையாற் பிற சிற்றுயிர்களையும் உணர்த்தும். பின் அடிகளில் வரும் ஆய் இரண்டனுள் முன்னது செய்தெனெச்சமும் பின்னது செயவெனெச்சமுமாகக் கொள்க.

(2)


1. சிந். 13 : 277


123அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.

(பொ-ள்.) அக்கால் அலவனைக் காதலித்துக் கால் முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக்கால் - முற்பிறப்பில் நண்டின் ஊனை விரும்பி அதன் கால்களை ஒடித்துத் தின்ற பழவினை இப்போது வந்தடைந்தால், அக்குபோல் அங்கை ஒழிய விரல் அழுகித் துக்கத் தொழிநோய் எழுப - சங்கு மணிபோல வெண்ணிறமாய் உள்ளங்கைகள் மட்டும் இருக்க ஏனை விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பத்திற்கேதுவான தொழுநோய் உண்டாகப் பெறுவர்.

(க-து.) ஊனுண்ணுந் தீவினைக்கு அஞ்சி அதனைவிடல் வேண்டும்.

(வி-ம்.) ஏகாரங்கள் அசைநிலை, ‘அங்கை' யென்பது "அகமென் கிளவிக்கு"1 என்னும் விதிப்படி ‘அகங்கை' என நின்றது. ‘எழுப' வென்பது ஈண்டு உயர் திணை யீறு. அக்கால் கால் முரித்த விரல் இக்கால் அழுகிக் குறைந்த தென்பது.

(3)


1. தொல். புள்ளி. 20.


124நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவவநோய் ஆக்கும் - பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து.

(பொ-ள்.) நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய்போல்வதும் எரிப்பச் சுட்டு எவ்வம் நோய் ஆக்கும் - உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பின் அழற்சியைப் பொருந்தினால், எரிந்து தீயும்படி சுட்டு மிக்க வருத்தந்தரும் நோயை உண்டாக்கும்; கோடாரும் கடுவினைய ராகியார்ச்சார்ந்து கோடிப் பரப்பக் கொடுவினையராகுவர் - நெறிகோணாத நல்லோரும் தீவினையாயினாரைச் சார்ந்து அதனால் நெறிகோணி மிக்க கொடுந்தொழிலுடையராவர்.

(க-து.) தீச்செயலாளரோடு சேர்தற்கு அஞ்சுதல் வேண்டும்.

(வி-ம்.) ‘போல்வது' மென்பது ஒப்பில்போலி.1 சார்ந்து என்னும் எச்சம் காரணப்பொருட்டு. இயல்பில் நல்லோரும் தீய சேர்க்கையால் திண்ணமாய்த் தீயோராக மாறி விடுவர் என்று அவ்வகையில் ஐயமின்மையை இச்செய்யுள் உணர்த்திற்று.

(4)


1. தொல். இடை. 30.


125 பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.

(பொ-ள்.) பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும் - சான்றோர் நட்பு பிறைத்திங்களைப் போல ஒவ்வொரு நாளும் முறைமுறையே வளரும்; சிறியார் தொடர்பு வான் ஊர் மதியம்போல் வைகலும் வரிசையால் தானே தேயும் - கீழோர் உறவு வானத்தில் தவழுகின்ற முழுத் திங்களைப்போல ஒவ்வொரு நாளும் முறையாகத் தானே தேய்ந்தொழியும்.

(க-து.) சிற்றினத்தாரோடு சேர்தற்கு அஞ்சுதல் வேண்டும்.

(வி-ம்.) முழுத்திங்கட்கு ‘மதி' எனவும், குறைத்திங்கட்குப் ‘பிறை' எனவும் வரும் சொல் வழக்குக் கருத்திருத்துதற்குரியது. தானே என்பதை முன்னும் கூட்டலாம். ‘வரிசை வரிசையா' என்னும் அடுக்கு உவகைப்பொருட்டு. வான் ஊர்தல் பிறைக்கும் உரியதேனுஞ் சிறப்பு நோக்கி மதியத்துக்கு அடைமொழியாக வந்தது. இச் செய்யுளின் உவமமும் பொருளும் "நிறைநீர நீரவர்கேண்மைபிறை மதிப், பின்னீர பேதையார் நட்பு" 1 என்னுந் திருக்குறளில் உள்ளவாறே உள்ளன.

(5)


1. குறள். 79 : 2

126 சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தாய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.

(பொ-ள்.) சான்றோர் என மதித்துச் சார்ந்தாய்மன் - நீ சிலரைக் குணநிறைந்தவர் எனமதித்து மிகுதியும் உறவு கொள்கின்றனை; சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் -அவ்வாறு உறவு கொள்ளும் நினக்கு நீ சார்வோரிடத்தில் குணநிறைவு காணப்படாதாயின், சார்ந்தாய் கேள் - ஆராயாமல் உறவுகொள்வோனே, கேட்பாய்; சாந்து அகத்து உண்டு என்று செப்புத் திறந்து ஒருவன் பாம்பு அகத்துக் கண்டது உடைத்து - அச்செயல், சந்தனம் உள்ளே இருக்கின்றதென்று கருதிச் சிமிழைத் திறந்து , ஒருவன், பாம்பை அதனுள் கண்டாற்போன்ற தன்மையுடையது.

(க-து.) எவரோடும் ஆராயாமல் நட்புக்கொள்வதற்கு அஞ்சுதல் வேண்டும்.

(வி-ம்.) இச் செய்யுள் மனத்தை விளித்துக் கூறியபடி; மன் : மிகுதிப்பொருட்டு. நிகழ்கால வினைகள் மனத்தின் விரைவு நோக்கி இறந்தகால வினைகளாக வந்தன. 1 உவமையிற் பாம்பென்றது பொருளில் தீக்குணங்களை. கருதி என ஒரு சொல் வருவிக்க.

(6)


1. தொல். வினை. 44.


128 உள்ளத்தான் நள்ளா துறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை -தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும்.

(பொ-ள்.) உள்ளத்தான் நள்ளாது உறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை அகத்தால் நேயங்கொள்ளாது, ஆனால் உறுதியான நேயத்துக்குரிய செய்கைகளை மேலே உடையவராய்க், கரவினால் நேயஞ் செய்தவரது மிக்க நட்பு! புனல் தெள்ளிநின்று செதும்பு அலைக்கும் பூ குன்ற நாட - நீர் தெளிவுடைய தாய் ஒழுகிச் சேற்றை அலைத்தொதுக்கும் அழகிய மலைகள் விளங்குகின்ற நாட்டையுடையவனே!, மனத்துக்கண் மாசாய்விடும் - என்றும் மனத்தில் வேதனை தருங் குற்றமாய் முடியும்.

(க-து.) மேலோடு செய்யும் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும்.

(வி-ம்.) உன்ளத்தானென்றது ஈண்டு அகத்தன்பினால் என்னும்பொருட்டு; கழிகேண்மையென்றார் அத்தகைய நட்புக்கு முதலில், அவ்வாறு மிக நெருக்கமாயிருப்பதும் ஓர் அறிகுறியாதலின். ‘அல்வழியெல்லாம் உறழென மொழிப'1 வாதலின் எதுகை நோக்கிப் ‘புனற்செதும்பு' எனத் திரிபேற்றது.

(8)


1. தொல். புள்ளி. 73.


129 ஓக்கிய ஒள்வாள்தான் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையுஞ் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு.

(பொ-ள்.) ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கைப்பட்டக்கால் ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஓங்கிய தனது ஒளிமிக்க வாள் தன் பகைவர் கையில் அகப்பட்டு விட்டால். அது தனது மனவலிமையைக் கெடுப்பதும் திண்ணமாகும்; ஆக்கம் - அவ்வாறே தீயோர் கைப்பட்ட தனது செல்வம் இருமையும் சென்று சுடுதலால் - இம்மை மறுமை என்னும் தன் இருமைப் பயன்களையும் தொடர்ந்து கெடுத்தலால், நல்ல கருமமே கல்லார்கண் தீர்வு - அத்தகைய மூடர்களிடத்தினின்று நட்பு நீங்குதல் அறச்செய்கையேயாகும்.

(க-து.) கல்லாத முடர் சேர்க்கையினின்று அஞ்சி விலகுதல் வேண்டும்.

(வி-ம்.) ‘ஊக்கம் அழிப்பதும்' என்னும் உம்மை ‘மேல் உயிரை அழிப்பதும்' என்னும் எதிரது தழீஇயது. ‘கைப்பட்டக்கால்' என்பதை ஆக்கம் என்பதற்கும், ‘ஆகும்' என்பதைக் கருமமே என்பதற்குங் கொள்க. தனது பொருள் கல்லாத மூடர்வழியாகப் பலர்க்குந் தனக்குந் தீங்கு விளைத்தலாலும், இம்மையிற் செய்த வினைகள் மறுமையிலுந் தொடர்தலாலுந் ‘இருமையுஞ் சென்று சுடுதல்' நுவலப்பட்டது.

130மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே - எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.

(பொ-ள்.) மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென்று ஏங்கி - மக்கட்கு நல்வாழ்க்கை அமையும் பொருட்டு மனம் ஏங்கி வாழ்க்கைப்பற்றை இன்னும் விடமாட்டாய்; எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே - நெஞ்சமே, அதற்காக நீ எத்தனை ஊழி வாழவிருக்கின்றனையோ? எனைத்தும் சிறுவரையேயாயினும் செய்தநன்றல்லால் உறுபயனோ இல்லை உயிர்க்கு - சிற்றளவாயினும் செய்த அறச் செயலன்றி உயிர்க்கு அடையும் பயன் வேறு சிறிதும் இல்லை.

(க-து.) செய்யும் நல்வினைகளே உயிரோடு தொடர்ந்து வரும்.

(வி-ம்.) "வாழச் செய்த நல்வினை யல்லது, ஆழுங் காலைப்புணைபிறி தில்லை"என்றார் பிறரும். வாழ்நாள் சிறிதாதலை நினைந்து ‘எனைத்தூழி வாழ்தியோ' எனப்பட்டது. எனைத்தும் இல்லை என்று கூட்டுக : ‘உயிர்க்கு' என்ற¬யிமயன் மறுமை பெறப்படும்.


1. புறம். 362.


அறத்துப்பால் முற்றும்

127 யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.

(பொ-ள்.) யார் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் துணைமை உடையவர் - எவரொருவர், ஒருவரது உள்ளத்தைத்தேர்ந்து துணியும் ஆற்றலுடையவர்?, சாரல் கன மணி நின்று இமைக்கும் நாட கேள் - மலைச்சாரலில் பெரிய மாணிக்க மணிகள் கிடந்து ஒளிவிடும் நாடனே கேள்; மக்கள் மனம் வேறு செய்கையும் வேறு - உலகத்தில் மக்களின் உள்ளமும் வேறு செய்கையும் வேறாயிருக்கின்றனவே!

(க-து.) நட்பாராய்தலிலும் பலகால் பலவழியால் ஆராய்ந்து துணிதல் வேண்டும்.

(வி-ம்.) நற்செயல் கண்டவுடன் உள்ளமும் அத்தகையதென்று உடனே துணிந்துவிடலாகாதென்பது பொருள். ‘யாரொருவர் உடையவர்' என்னும் வினா, அரிதாதல் நோக்கி எழுந்தது. துணைமை, துணையால் உண்டாம் ஆற்றல் கருதி அப்பொருட்டாயிற்று.

(7)





2011/6/10 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 12, 2011, 3:28:16 PM6/12/11
to மின்தமிழ்
பொருட்பால்
[இது பொருளை உணர்த்தும் பகுதி; அறத்தைப்போல் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றற்கும் நேரே காரணமாதலின்றித், துய்த்தலானும் வழங்குதலானும் முறையே இம்மை மறுமை இரண்டற்கு மட்டும் ஓராற்றால் காரணமாதல் பற்றி, இப் பொருட்பால் அறத்துப்பாலை அடுத்து நின்றது.]
14. கல்வி
[கற்றற்குரிய நூல்களைக் கற்றல், பொருளைத் தேடுதற்கும் தேடிய பொருளைப் பயன்படுத்துதற்கும் கல்வி காரணமாதலின் இதுபொருட்பாலின்கண் அமைந்தது.]
131குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

(பொ-ள்.) குஞ்சி அழகும் கொடுதானைக் கோடு அழகும் மஞ்சள் அழகும் அழகு அல்ல -மயிர்முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும்ஆடையின் கரையழகும் மஞ்சட் பூச்சின் அழகும்மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல; நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு -நாம் நல்லமாக ஒழுகுகின்றோம் என்று தம் மனம்அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால்மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.

(க-து.) நல்லொழுக்கம் பயக்கும்கல்வியே மக்கட்கு உயர்வான அழகாகும்.

(வி-ம்.) குஞ்சி, ஆடவர் தலைமயிர்முடி; மஞ்சள், சிறப்பாக மகளிர் பூசிக்கொள்ளும் மஞ்சள் நிறமான மணப்பூச்சு; தானைஇருபாலார் ஆடைக்கும் ஒக்கும்; ஆதலின்,இச்செய்யுள் பொதுவாக மக்கட்குரிய கல்வியழகைஉணர்த்திற்றென்க. "நடை வனப்பும் நாணின்வனப்பும் வனப்பல்ல, எண்ணோ டெழுத்தின் வனப்பவனப்பு"1 எனப் பெண்பாலாரையும்உட்கொண்டு பிறரும் அறிவுறுப்பர்.

‘குஞ்சி' முதலியன இலக்கணையால்பிற அழகுகளையும் உட்கொண்டன. நெஞ்சத்து என்றார்,மனமறிய என்றற்கு; நடுநிலைமையா லென்றார்.உண்மையாக உணரும் என்றற்கு. ‘யாம் நல்லம்' என்றது,தலைமைபற்றி வந்த தன்மைப் பன்மை.

(1)


1. ஏலாதி. 75.

132 இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.

(பொ-ள்.) இம்மை பயக்கும் -நல்வாழ்க்கையாகிய இம்மைப்பயனை விளைவிக்கும்;ஈயக் குறைவு இன்று - பிறர்க்குக் கற்பித்தலால்குறைவுபடுதல் இல்லை; தம்மை விளக்கும் - தம்மைஅறிவாலும் புகழாலும் விளங்கச் செய்யும்; தாம்உளராக் கேடு இன்று ஆல் - தாம் இருக்க அது கெடுதல்இல்லை ஆதலால், எம்மை உலகத்தும் யாம் காணேம்கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து -எப்பிறவியின் உலகத்திலும் கல்விபோல்அறியாமை மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தை யாம்காண்கின்றிலேம்.

(க-து.) கல்வியே, எல்லா வாழ்க்கையின்னல்கட்குங் காரணமான அறியாமையாகியமயக்கத்தைத் தீர்க்கும்.

(வி-ம்.) ஆல் காரணப் பொருட்டால்ஒவ்வொன்றனோடும் வந்தது. ஈதல் - ஈண்டுக்கற்பித்தல், மக்கள் பல நாள் உள்ளவராகச்செல்வம் அதற்கு முன்னரே கெட்டொழிதலும்உண்டாதல் போலக் கல்வி கெடுதல்இல்லையென்றற்குத் ‘தாம் உளராக் கேடு இன்று'எனப்பட்டது. தேவருலகத்து அமிழ்தமும் உடற் பிணியைநீக்குமன்றி உயிர்ப்பிணியாகிய மருட்சியைத்தீர்க்காதாதலின் ‘எம்மை யுலகத்துங் காணேம்'என்றார். அறத்தீர்க்கும் என்றற்கு அறுக்கும் எனவந்தது; "துயரங்கள் அண்டா வண்ணம்அறுப்பான்"1 என்புழிப்போல.

(2)


1. தேவா, 50:1.


133 களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;
கடைநிலத்தோ ராயினுங் கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்.

(பொ-ள்.) களர் நிலத்துப் பிறந்தஉப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின்விழுமிதாக் கொள்வர்-உவர் நிலத்தில் தோன்றியஉப்பைப் பெரியோர் விளைநிலத்தில் உண்டாகும்நெல்லினும் மிக்க பயனுடையதாகப் பயன்படுத்துவர்;கடைநிலத்தோராயினும் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும் - ஆதலால், கீழ்க்குடியிற்பிறந்தோராயினும் கற்றறிந்தோரைமேற்குடியாரினும் மேலிடத்து வைத்து மதித்தல்உண்டாகும்.

(க-து.) கல்வி, மாந்தரைஉயர்வகுப்பாரினும் மேலவராக மதிக்க வைக்கும்.

(வி-ம்.) "கீழ்ப்பாலொருவன்கற்பின் மேற்பாலொருவனும் அவன்கட் படுமே"என்றார் பிறரும். தேவராகக் கருதச் செய்யும்என்றபடி, தேவர்க்குப் புலவரென ஒரு பெயருண்மையானும்."தேவரனையர் கயவர்"2 என்னுங்குறிப்பால் ‘தேவரனையர் புலவர்'3 என்னும்அதன் மறை புலப்படுதலானும் இவ்வுண்மை தேறப்படும்.பயன் தெரிவோர் என்னுங் கருத்தால் ‘சான்றோர்'என உயர்த்துக் கூறப்பட்டது. கடைநிலம்என்றவிடத்து, நிலம், பிறந்த விடத்தைஉணர்த்திற்று, ‘கற்றறிந்தோரை வைக்கப்படும்'என்னும் முடிவு "வஞ்சரை அஞ்சப்படும்"4என்றாற்போல நின்றது.

(3)


1. புறம். 183

2. குறள். 108:3.

3.. நான்மணிக். 75

4.. குறள். 83:4.


134 வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச்செய்வன
விச்சைமற் றல்ல பிற;

(பொ-ள்.) வைப்புழிக்கோட்படா -வைத்த இடத்திலிருந்து பிறரால் கரவிற்கொள்ளப்படாது; வாய்த்து ஈயின் கேடு இல்லை -நன்மாணாக்கர் வாய்த்து அவர்க்குக் கற்பிக்கநேருமானால் அதனால் அழிதல் இல்லை; மிக்கசிறப்பின் அரசர் செறின் வவ்வார் - தம்மினும்மிக்க செல்வாக்கினால் அரசர் வெகுளல் நேரினும்கவர இயலாதவராவர்; எச்சம் என ஒருவன் மக்கட்குச்செய்வன விச்சை மற்று அல்லபிற - ஆதலால்; வைப்புஎன ஒருவன் தன் மக்கட்குத் தேடி வைக்கத்தக்கவைகல்வியே, பிற அல்ல.

(க-து.) கல்வியே மக்கட்குத் தேடிவைக்கத் தக்க அழியாத செல்வம்.

(வி-ம்.) "கேடில்விழுச்செல்வங் கல்வி"1 யாதலின்இங்ஙனங் கூறினார். வாய்த்து என்றார். வாய்ப்பதுஅருமையாதலாலும், தக்கோர்க்கு ஈயின் அவர்வாயிலாகத் தமக்கும் வேறு பிறர்க்கும்பெருகுதலுண்டாதலாலுமென்க. மற்று : அசை; பிற என்னுங்குறிப்புச் செல்வத்தின்மேற்று.

(4)


1. குறள். 40 : 10


135 கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

(பொ-ள்.) கல்வி கரை இல -கல்விகள் அளவில்லாதன; கற்பவர் நாள் சில -ஆனால், கற்பவர் வாழ்நாட்களோ சிலவாகும்; மெல்லநினைக்கின் பிணி பல - சற்று அமைதியாகநினைத்துப்பார்த்தால் அச் சில வாழ்நாட்களில்பிணிகள் பலவாயிருக்கின்றன; தெள்ளிதின்ஆராய்ந்து அமைவுடைய கற்ப நீர் ஒழியப் பால்உண்குருகின் தெரிந்து - நீர் நீங்கப் பாலைஉண்ணும் பறவையைப்போல அறிஞர்கள் பொருத்தமுடையநூல்களைத்தெரிந்து அவற்றைத் தெளிவுகொள்ளஆராய்ந்து கற்பார்கள்.

(க-து.) தக்க மெய்ந்நூல்களையேதெரிந்து தெளிவாகக் கற்றல் வேண்டும்.

(வி-ம்.) மேலும்1 இக் கருத்துவரும். கல்வியென்றது ஈண்டுக் கலை நூல்களும் பலதலையான சமய நூல்களுமாகும். பாலுண்குருகு, நீரைஉண்ணுதலொடு அமைதியடையும் பல பறவைகள்போலன்றிப் பாலுண்ணுதலில் மகிழ்வு மிகுதியுமுடையபறவையாகும்; அதனை அன்னப்புள் என்பது வழக்கு.அமைவென்றது, ஈண்டுத் தகுதி; அது மெய்யுணர்வைஉணர்த்தும். தெரிந்து ஆராய்ந்து கற்ப என்க.

(5)


1. நாலடி. 14:10.


136தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.

(பொ-ள்.) தோணி இயக்குவான்தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்றுஇகழார் அவன் துணையா ஆறுபோயற்று - படகுசெலுத்துவோன் பழைமையான சாதிகளில்,நினைக்குமிடத்துக் கடைப்பட்ட சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணியாராய் அவன் துணையாகஆற்றைக் கடந்துபோன தன்மையை ஒக்கும்; நூல்கற்றமகன் துணையா நல்ல கொளல் - அறிவு நூல்கள் கற்றபெருமகனொருவன் துணையாக மெய்ப்பொருள்களைஅறிந்து கொள்ளுதல் என்க.

(க-து.) கல்விக்கு முன் பிறப்பின்உயர்வு தாழ்வு கருதத்தக்கன அல்ல.

(வி-ம்.) ‘நல்ல கொளல் ஆறுபோ யற்று' என்க;தோணியியக்குந் தொழில் இந்நாட்டிற் பழைமையானதென்பது தோன்றத் ‘தொல்லை வருணத்து' எனவும்,பிறப்பின் உயர்வு தாழ்வு கருதுதல் இயல்பன்று,என்பது தோன்றக் ‘காணின்' எனவும், எக்குடிபிறப்பினுங் கல்வி கேள்விகளுடையோரே மக்கள் எனமதிக்கற்பாலரென்பது தோன்ற ‘மகன்' எனவுங்கூறப்பட்டன. இகழார்; முற்றெச்சம்; காணாய்:முன்னிலை அசை. ஆறு கடத்த லென்னுங் குறிப்பால்,வாழ்க்கையாற்றைக் கடந்து கரை சேர்தற்குக்கற்றோர் துணை இன்றியமையாததென்பது பெறப்படும்.

137தவலருந் தொல்கேள்வித் தன்மையுடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்(து)
உம்ப ருறைவார் பதி.

(பொ-ள்.) தவல் அரு தொல்கேள்வித் தன்மையுடையார் இகல் இலர் எஃகுஉடையார் தம்முள் குழீஇ நகலின்இனிதாயின்-அழிதலில்லாத பழைமையான நூற்கேள்விப் பேறுடையராய் முரணிலராய்க்கூரறிவுடையராய் விளங்குங் கற்றோருட் சேர்ந்துஅளவளாவி மகிழ்தலினும் இனிமையுடையதாயின்,காண்பாம் அகல்வானத்து உம்பர் உறைவார் பதி-அகன்ற விண்ணின் மேலிடத்தில்உறையுந்தேவர்களின் திருநகரைக் காண முயல்வோம்.

(க-து.) துறக்க வின்பத்தினுங்கல்வியின்பமே உயர்ந்தது.

(வி-ம்.) இஃது, அறிவு பொருளாகத்தோன்றும் உவகை;1 தொன்றுதொட்டுஆசிரியமரபினாற் கேட்கப்பட்டு வரும் நூற்கேள்வியென அதன் சிறப்பியல்பு தோன்றும்பொருட்டுத் ‘தொல் கேள்வி' யென்றதோடு,அவ்வகைத் தன்மையுடையா ரெனவுங்கிளந்தோதப்பட்டது. இகலென்றது ஈண்டு, நூல் நெறிஉலக நெறியென்னும் இருவகை வழக்கோடும் முரண் என்க.இனி தாகாதென்றற்கு இனிதாயிற் காண்பாம்எனப்பட்டது. காண்பாமென்றது, பாராமுகமான சொல்,மேலிடம். என்றது, துறக்க வுலகை. பதி, அமராவதியென்ப: கல்வியைப் போலத் துறக்கவுலகம் பேதமைகெடுத்து நிலையான அறிவொளியின்பம்நல்காதாகலின், இவ்வாறு நுவலப்பட்டது.

(7)


1. தொல். மெய்ப். 11.



138 கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே1 - நுனிநீக்கித்
தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர்

(பொ-ள்.) கனைகடல் தண்சேர்ப்ப -ஒலிக்கும் கடலின் குளிர்ந்த துறைவ!.கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்பு தின்றற்று- கற்று மெய்ப்பொருள் அறிந்தொழுகுவாரது நேயம்கரும்பை அதன் நுனியிலிருந்து தின்று சுவைப்பதைப்போன்றது; நுனி நீக்கித் தூரின் தின்றன்ன தகைத்துபண்பு இலா ஈரம் இலாளர் தொடர்பு - நுனியை விடுத்துஅடிப்பகுதியிலிருந்து அதனைத் தின்றாற் போன்றதன்மையையுடையது அக் கல்விப் பண்பும் அன்பும்இல்லாதவரது நேயம்.

(க-து.) கற்றோர் தொடர்பு வரவரவளர்ந்து இனிக்குந் தன்மையது.

(வி-ம்.) கல்வியறிவு ஈண்டுப் பண்புஎனப்பட்டது. அதனால் இயற்கையறிவுசெம்மைப்படுதலின். கல்வி பெறாதோரது நிலையைநன்கு விளக்குவார் ‘பண்பு இலா ஈரம் இலாளர்'என்றார். கரும்பை நுனியிலிருந்து தின்னல்மேன்மேற் சுவைத்தற்கு உவமை; தூரென்றது"வேருந்தூருங் காயும்"1என்புழிப்போலஈண்டுக் கரும்பின் அடிப்பகுதியை யுணர்த்தும்.

(8)


1. நாலடி 22:1.

2. பரிபாடல். 6 : 47.


139கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

(பொ-ள்.) கல்லாரேயாயினும்கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும்தலைப்படுவர் - தாம் கல்லாதவரே யாயினும்கற்றாரைச் சேர்ந்து பழகினால் பண்பட்டமெய்யறிவு வரவர உண்டாகப்பெறுவர்; தொல்சிறப்பின் ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால்புது ஒடு தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு -இயற்கைமணச் சிறப்பினையுடைய விளக்கமான நிறம்அமைந்த பாதிரிமலரைச் சேர்தலால் புதியமட்பாண்டம் தன்கண் உள்ள தண்ணீர்க்குத் தான்அம்மணத்தைத் தந்தாற்போல வென்க.

(க-து.) கல்வி பயிலும்பேறில்லாதார் கற்றாரோடு சேர்ந்து பழகுதலாவதுமேற்கொள்ள வேண்டும்.

(வி-ம்.) முறைமுறையே என்றற்கு‘நாளும்' எனவும், இயற்கை மணச்சிறப்பென்றற்குத்‘தொல்சிறப்' பெனவும் வந்தன. ஓடு : ஆகுபெயர்; புதியமட்பாண்டத்தில் முதலில் பாதிரி மலர்களைப்பெய்துவைத்துப் பின்பு அதில் நீரூற்றி நீர்க்குநறுமணங் கூட்டுதல் மரபாதலின், ‘பாண்டம் மணத்தைஏற்றுப் பின் நீர்க்குத் தரும் என்றற்குத் தான்பயந்தாங்கு' எனப்பட்டது. ஈண்டுத் ‘தான்' என்பதுபொருள் பயந்து நின்றது. உவமையணி.



140அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)
உலகநூ லோதுவ தெல்லாங் - கலகல
கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்
போஒந் துணையறிவா ரில்.

(பொ-ள்.) அலகுசால் கற்பின்அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவதெல்லாம் -அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல்களைக்கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரியவாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது, கலகல கூம் துணையல்லால்- கலகல என்றுஇரையும் அவ்வளவேயல்லால், கொண்டு தடுமாற்றம்போம் துணை அறிவார் இல்-அவ் வுலக நூலறிவு கொண்டுபிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையைஅறிகின்றவர் யாண்டும் இல்லை.

(க-து.) கருவிக் கல்வி கொண்டுமெய்யுணர்வுக் கல்வி பெறுதலே, நோக்கமாதல்வேண்டும்.

(வி-ம்.) உலக நூலென்றது முன்,"சத்தமும் சோதிடமும் என்றாங்கிவை"1எனப்பட்டவை. கலகலவென்பது இரட்டைக் கிளவி;பிரிந்திசையா2 எல்லாம் என்றது, என்றும்அவற்றையே ஓதுங் குறிப்பின்மேற்று. கூவும் போவும்என்பன கூம்போம் என நின்றன.

(10)


1.நாலடி. 6;

2.தொல். கிளவி. 18.



2011/6/12 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

karuannam annam

unread,
Jun 13, 2011, 1:37:01 PM6/13/11
to mint...@googlegroups.com
சிறந்த பணி ஐயா.
ஒவ்வொரு அதிகாரமாகத் தருவது படிக்க ஏதுவாக உள்ளது.
நன்றி 
சொ.வினைதீர்த்தான்.

2011/6/13 Venkatram Shrinivas <see...@gmail.com>

Venkatram Shrinivas

unread,
Jun 13, 2011, 3:24:50 PM6/13/11
to மின்தமிழ்
பொருட்பால்
15. குடிப்பிறப்பு
[ குணத்தால் உயர்குவத்திற் பிறத்தலின் மேன்மை; ஈண்டுக் ‘குலம்’ என்றதுசாதியன்று: ஒவ்வொரு சாதியிலும் உயர்ந்த குலங்கள் உண்டு. திருக்குறளுரையில் உரையாசிரியர் பரிமேலழகர் "உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகலின்" என1 உரையெழுதிச் செல்லுதல் கருத்திற் பதிக்கற்பாலது.]'

141 உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புற் கறிக்குமோ மற்று.

(பொ-ள்.) இடுக்கண் தலைவந்தக்கண்ணும் அரிமா கொடிப் புல் கறிக்குமோ -பசித்துன்பம் மிகுந்து நின்ற போதும் சிங்கம்படர்புல்வைத் தின்னுமோ? அதுபோல்; உடுக்கை உலறிஉடம்பழிந்தக் கண்ணும் குடிப்பிறப்பாளர் தம்கொள்கையின் குன்றார் - உடை பொலிவழிந்து உடல்மெலிவடைந்த காலத்திலும் உயர்குடிப் பிறந்தோர்தமக்குரிய ஒழுகலாற்றிற் குறைவுபடார்.

(க-து.) உயர்குடிப்பிறந்தோராயின், இயல்பாகவேநல்லொழுக்கத்தினின்றும் வழுவார்.

(வி-ம்.) உலறுதல்செழுமைகெடுதலாதலின் பொலிவழிந்தெனப்பட்டது;உடம்பழிந்தக்கண்ணு மென்பதில் உணவில்லாதகாலத்தும் என்னும் பொருள் குறிப்பிற் புலப்படும்கொள்கையென்றது, நல்லுணர்வு நல்லாழுக்கங்கள்,தலைவருதல் ஈண்டு மிகுதிமேற்று. கொடியோடிப் படரும்புல் கூறினார் வளம் உணர்த்தற்கு, "பசிபெரிதாயினும் புல்மேயா தாகும் புலி"2 என்பர்பிறரும். மற்று : அசை.

(1)


1.குறள், 96 ஆம் அதி. உரை.

2.பழமொழி . 70.


142 சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது - வான்றோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.

(பொ-ள்.) வான் தோயும் மைதவழ்வெற்ப - மேகங்கள் தவழ்கின்ற வானளாவியமலைகளையுடைய நாடனே!, சான்றாண்மை சாயல் ஒழுக்கம்இவை மூன்றும் வான்தோய் குடிப்பிறந்தார்க்கல்லதுபடா பெருஞ் செல்வம் எய்தியக்கண்ணும் பிறர்க்கு -பெருந்தன்மை, மென்மை, கடைப்பிடி என்னும் இவைமூன்றும் உயர்வு பொருந்திய குடியிற்பிறந்தவர்க்கல்லது மிக்க செல்வம் உண்டானகாலத்தும் பிறர்க்கு உண்டாகமாட்டா.

(க-து.) நல்லொழுக்கங்கள்உயர்குடிப்பிறந்தோர்க்கு இயல்பாகவே மலரும்.

(வி-ம்.) "சான்றாண்மை தீயினம் சேரக்கெடும்"1 என்புழிப்போல ஈண்டும்அச்சொல் பெருந்தன்மைமேற்று, "சாயல் மென்மை”2யென்பர்ஆசிரியர் தொல்காப்பியர். ஒழுகுதலாவது ஒன்றைத்தொடர்புறச் செய்தலாதலின். அதுகடைப்பிடியென்றறியற்பாற்று, திருவள்ளுவரில்அன்புடைமை, விருந்தோம்பல், இனிமை கூறல்முதலியவாக நல்லொழுக்கங்கள் பலவுங் கூறிவரும்ஆசிரியர், இடையே ‘ஒழுக்கமுடைமை' எனத்தனியதிகாரம் ஒன்று நிறீஇயதும் இக் கருத்தின்கண்ணதென்க. பெருஞ் செல்வம் எய்தியக்கண்ணும்பிறர்க்குப் படா வெனவே, அஃதெய்தியக்கண்உயர்குடிப் பிறந்தார்க்கு இன்னும் அவ்வியல்புகள்சிறந்து தோன்றுமென்பது பெறப்பட்டது.

(2)


1.நாலடி. 18 : 9.

2.தொல். உரி. 27.

143 இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோ டின்ன-குடிப்பிறந்தார்
குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ
டொன்றா வுணரற்பாற் றன்று.

(பொ-ள்.) இருக்கை எழலும்எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோடு இன்ன -பெரியோரைக் கண்டால் தன் இருக்கையிலிருந்துஎழுதலும், சற்று எதிர்சென்று வரவேற்றலும், அவர்பிரியும்போது சற்றுப் பின்சென்று அவர் விடைதரஏனைப் பிரிந்து வருதலுமாகிய இத்தகைய பணிவுக்குணங்களை, சூடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கமாகக்கொண்டார், உயர்குடிப் பிறந்தார் கைவிடாநல்லொழுக்கமாக மேற்கொண்டொழுகுவர்; கயவரோடுஒன்றா உணரற்பாற்றன்று-இத் தகுதி, கீழ்மக்களாற்சிறந்ததொன்றாக உணர்ந்துகொள்ளுதற்குரியதன்று.

(க-து.) உயர்குடிப் பிறந்தாரேபணிவின் உயர்வை அறிந்துகொள்ளுந் தகுதியுடையர்.

(வி-ம்.) கயவரோடு என்னும் உருபு,"ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்"1என்புழிப்போல நின்றது.

(3)


1. தொல். வேற். 12- உரை.


144நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் தூற்றும் பழியாகும்; - எல்லாம்
உணருங் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ,
புணரும் ஒருவர்க் கெனின்?

(பொ-ள்.) நல்லவை செய்யின்இயல்பாகும் தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும் -உயர்குடிப் பிறந்தார் நற்காரியங்கள் செய்தால்அஃதவர்க்கு இயல்பென்று. கொள்ளப்படும். தீயவைசெய்தால் பலருந் தூற்றும் பழியாக முடியும்; எல்லாம்உணரும் குடிப்பிறப்பின் ஊதியம் என்னோ புணரும்ஒருவர்க்கெனின் - அவ்வாறானால்,உயர்குடிப்பிறப்பு ஒருவர்க்கு வாய்க்குமாயின்எல்லா நன்மைகளும் இயல்பாகவேஉணர்ந்தொழுகுதற்குரிய தகுதி வாய்ந்த அக்குடிப்பிறப்பினால் அவர் அடையும் ஊதியந்தான்யாதோ!

(க-து.) நல்லவை செய்தலை இயல்பாகஉடையது உயர்குடிப் பிறப்பெனின் அந்நிலையேஆக்கம் என்பது.

(வி-ம்.) பல்லவர் என்னும் மிகுதிப்பாடு, தீயவைசிறிது செய்யினும் என்னும் பொருட்குறிப்புஉணர்த்திற்று. இது போல்வன "குறிப்பிற்றோன்றலும்"1 என்பதனால் உணரப்படும்.எல்லாம் உணரும் என்றது, குடிப்பிறப்பின்சிறப்பியல்பு உணர்த்திற்று. ஊதியமென்னோஎன்றது, அதனினும் ஊதியம் மற்றென்னோ என்னும்உட்கோளுடையது. புணரும் ஒருவர்க்கெனின் என்றது,அதன் அருமை தோன்ற நின்றது. இச்செய்யுள்,பழித்தது போலப் புகழ்தலாய்க்குடிப்பிறப்பின்உயர்வை விளக்கிற்று. மேல்வருஞ் செய்யுளும்இத்தகைத்து.

(4)


1. தொல். பெய. 3.

145 கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம்,
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம், - எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
மாணாக் குடிப்பிறந் தார்.

(பொ-ள்.) கல்லாமை அச்சம்,கயவர் தொழில் அச்சம், சொல்லாமை யுள்ளும் ஓர்சோர்வு அச்சம். எல்லாம் இரப்பார்க்கு ஒன்றுஈயாமை அச்சம் - உயர்குடிப் பிறந்தார்க்குப்,படியாமை ஓர் அச்சம், கீழோர் தொழிலொன்றுசெய்தலும் அச்சம், சொல்லத் தகாதவற்றுள்தவறிச் சொல்லிவிடுதலொன்றும் அச்சம்,இரப்பார்க்கு ஒன்று ஈயாமை முழுவதும் அச்சம்; இம்மாணாக் குடிப் பிறந்தார் மரத்தார் - இவ்வாறுமாட்சிமையில்லா உயர் குடியிற் பிறந்தார்,நடுக்கடலில் மரக்கலத்திற் செல்வாரைஒத்தவராவர்

(க-து.) தீயவற்றிற்கு அஞ்சிவாழ்தற்குரிய உயர் குடிப் பிறப்பே சிறந்தது.

(வி-ம்.) எல்லாம் என்றது முழுமையும்என்னும் பொருட்டு. ஈதல் இல்லொழுக்கங்களுள்தலையானதாதலின், அதற்கு இயலாமை நேரின் அதுமுற்றும் அஞ்சுதற்குரிய1தென்பது கருத்து.மரக்கலம் என்னும் பெயர், கலம் என்னுஞ்சொல்லால் வழங்குமாப்போல் மரம் என்னும்பெயராலும் வழங்குவதாயிற்று. முற்செய்யுளைப் போல்இதுவும் பழித்ததுபோலப் புகழ்தலாதலின்,‘மாணாக்குடி' எனப்பட்டது.

(5)


1. குறுந். 137.

146இனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி
முத்தோ டிமைக்கு முழங்குவரித் தண்சேர்ப்ப!
இற்பிறந்தார் கண்ணே யுள.

(பொ-ள்.) கனமணி முத்தோடுஇமைக்கும் முழங்கு உவரித் தண்சேர்ப்ப-சிறப்புடைய மாணிக்க முதலிய மணிகள்முத்துக்களுடன் கிடந்து ஒளிர்கின்றஒலிக்குங்கடலின் குளிர்ச்சியான துறைவனே!இனநன்மை, இன்சொல், ஒன்று ஈதல், ஏனை மனநன்மைஎன்று இவையெல்லாம் இல்பிறந்தார் கண்ணேஉள-நல்லார் கூட்டுறவு, இன்சொல்லுடைமை,வறியார்க்கு ஒன்று ஈதல், ஏனை மனத் தூய்மைஎன இந்நற்பண்புகளெல்லாம் உயர்குடிப் பிறந்தாரிடமேஅமைந்திருக்கின்றன.

(க-து.) உயர்குடிப் பிறப்புநற்பண்புகட்கு இடமானது.

(வி-ம்.) எல்லாவற்றிற்கும்அடிப்படையாகிய மன நன்மையை வேறு பிரித்தற்கு‘ஏனை' யென்றார். மற்று ஏனை என்னும் இரண்டும்ஈண்டுப் பிறிதென்னும் ஒரு பொருட்கண் வந்தன.கடலுக்கு முத்துச் சிறப்பாதலின், வேறு பிரித்துக்கூறினார். இமைக்கும் சேர்ப்ப என்க. ஏகாரம்:பிரிநிலை.

147 செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை.

(பொ-ள்.) செய்கையழிந்து சிதல்மண்டிற்றாயினும்பொய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்தாகும் - வளமானபெரிய வீடு வளங்குறைந்த காலத்தில்கட்டுக்குலைந்து கறையான் கவ்விற்றாயினும் அது மழைஒழுக்கில்லாத ஒரு பக்கத்தை உடையதாயிருக்கும்,அதுபோல; எவ்வம் உழந்தக்கடைத்தும்குடிப்பிறந்தார் செய்வர்செயற்பாலவை-வறுமையினால் மிக்க துன்பத்திற்சிக்கி அலைப்புண்ட காலத்தும் உயர்குடியிற்பிறந்த நல்லோர் தாம் செய்தற்குரியநற்செயல்களைச் செய்துகொண்டேயிருப்பர்.

(க-து.) வறுமையிலுங் குடிப்பிறந்தார் தம் கடமைகள்செய்தலில் வழுவார்.

(வி-ம்.) செய்கை - செய்த அமைப்பு; என்றது,கட்டுக்கோப்பு; செயற்பாலவை என்பன,"அறவோர்க் களித்தல் அந்தணரோம்பல்"1முதலிய கடமைகள்.

(7)


1. சிலப். 19 : 71-3.


148 ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்
கொல்கார் குடிப்பிறந் தார்.

(பொ-ள்.) ஒரு புடை பாம்புகொளினும் ஒரு புடை அங்கண்மா ஞாலம் விளங்குறூஉம்திங்கள்போல் - ஒரு பக்கம் இராகுவென்னும் பாம்புபற்றிக் கொண்டாலும் தனது மற்றொரு பக்கத்தால்அழகிய இடமகன்ற பெரிய உலகத்தை ஒளிவிளங்கச்செய்யுந் திங்களைப்போல, செல்லாமை செவ்வன்நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார்குடிப்பிறந்தார் - வறுமையினால் மாட்டாமைநிலைநன்றாக முன்நிற்பினும் உயர்குடிப் பிறந்தார்பிறர்க்கு உதவி செய்யும் வகைக்குத்தளரமாட்டார்.

(க-து.) பிறர்க்கு உதவும் வகையில்வறுமையிலும் - குடிப்பிறந்தார் தளரார்.

(வி-ம்.). "இடனில் பருவத்தும்ஒப்புரவிற்கு ஒல்கார்"1 என்றார்திருவள்ளுவரும். பாம்பு கொளல் என்பது, திங்களைக்கோள்பிடித்து அதனொரு பகுதியை மறைத்தல்.வறுமையுடையார் சொல்லுஞ் செயலும் உலகில்செல்லாமை நினைந்து, அவ் வறுமை நிலையை ஆசிரியர்‘செல்லாமை' யென்றே விதந்தார்.

(8)


1. குறள், 22:8.


149 செல்லா விடத்துங் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்துஞ் செய்யார் சிறியவர்; - புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று.

(பொ-ள்.) செல்லாவிடத்தும்குடிப்பிறந்தார் செய்வன செல்லிடத்தும்செய்யார் சிறியவர் - வறுமையினால் மாட்டாநிலையிலும் உயர்குடிப்பிறந்தார்செய்யுங்கடமைகளைச் செல்வாக்கு நிலையிலுங்கீழ்குடிப் பிறந்தார் செய்யமாட்டார்; புல்வாய்பருமம் பொறுப்பினும் பாய் பரிமாபோல் பொரும்முரண் ஆற்றுதல் இன்று-மான். சேணந் தாங்கினாலும்பாயும் இயல்பினையுடைய குதிரையைப்போல்மாறுபட்டுப் போர் செய்யும் செருக்கினைச்செய்தல் இல்லை.

(க-து.) வறுமையிலும்குடிப்பிறந்தார் தங் கடமைகளைச் செய்யும்ஆற்றலுடையராவர்.

(வி-ம்.) பருமம், சேணம் என்னும்பொருட்டு; "பருமம் களையாப் பாய்பரிக்கலிமா" என்னும் நெடுநல்வாடையினும்இப்பொருள் காண்க. பொருதற்குரிய சேணந்தாங்கினும் பொருகின்ற முரணுள்ளம் மானுக்குஇல்லாமைபோல, உதவுதற்குரிய செல்வம் பெறினும்உதவுகின்ற வண்மையுள்ளம் கிழோர்க்கில்லையெனக்கொள்க. மேல், ‘கயமை' என்னும் அதிகாரத்தில்வரும் ‘ஏட்டைப் பருவத்தும்'2 என்னுஞ்செய்யுளுங் கருதற்பாலது. எடுத்துக்காட்டுவமை.

(9)


1. நெடுநல். 179.

2. நாலடி. 36 : 8.

150 எற்றொன்றும் இல்லா இடத்துங் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவர்;
அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.

(பொ-ள்.) எற்று ஒன்றும்இல்லாவிடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத் தன்சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர் - கையில்எத்தகையதொரு பொருளும் இல்லாத காலத்தும்உயர்குடிப் பிறந்தார் ஆதரவற்றுத்தம்மையடைந்தவர்க்கு அவரது தளர்ச்சிக்காலத்தில் ஊன்றுகோல் போல் உதவுவர்; அற்றக்கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக் கால் தெற்றெனத்தெள்நீர் படும் - நீரற்ற காலத்தும், அகன்ற ஆறுசற்றுக் குழிதோண்டியகாலத்தில் விரைவாகத்தெளிநீர் ஊறி உதவும்.

(க-து.) குடிப்பிறந்தார்எந்நிலையிலும் தம்மை அண்டியவரின் தளர்ச்சிக்காலத்தில் ஊன்றுகோல் போல் உதவுவர்.

(வி-ம்.) எற்றொன்று மென்றார், சிறிதுமென்றற்குஊன்றுகோல் ஊன்றெனநின்று பின் ஊற்று என வலித்தது."உடம் புயிர்க்கு ஊற்றாக"1 என்றார்பிறரும். மேல், பெருமை'2 யென்னும்அதிகாரத்தில் வரும் ‘உறைப்பருங்காலத்தும்'என்னுஞ் செய்யுளையுங் கருதுக.

(10)


1. கலி. நெய். 29.

2. நாலடி. 19 : 4.





2011/6/13 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 14, 2011, 3:21:16 PM6/14/11
to மின்தமிழ்
பொருட்பால்
16. மேன்மக்கள்
[மேன்மக்களின் இயல்புகள் இன்னவென்பது; மேன்மக்களாவார், குணத்தான்மேம்பட்ட நன்மக்கள்.]
151அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.

(பொ-ள்.) அங்கண் விசும்பின்அகல் நிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர் மன் - அழகியஇடமகன்ற வானத்தில் விரிந்த நிலவொளியைப்பரவச் செய்யும் திங்களும் மேன்மக்களும் தம்மிற்பெரும்பாலும் ஒத்த பெருமையுடையவராவர்; திங்கள்மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்துதேய்வர் ஒரு மாசு உறின்-ஆனால்; திங்கள்களங்கத்தைத் தாங்கும்; மேன்மக்கள்தமதொழுக்கத்திற் சிறிது கறையுண்டானால் அதுபொறாராய் உள்ளங் குழம்பி அழிவர்.

(க-து.) திங்களைப்போற்சான்றோர் மறுவாற்றாராதலின், அவர் அதனினுஞ்சிறந்தவராவர்.

(வி-ம்.) ஒப்பரென்னும் முடிபுதிணைவழுவமைதி; "மூத்தோர் குழவி எனுமிவரை"1என்புழிப்போல. ஒப்புஇருள் நீங்கித் தண்ணொளிவழங்குதலிற் கொள்க. மன்: மிகுதிக்கண் வந்துஈண்டுப் பெரும்பாலுமென்னும் பொருட்டாயிற்று;ஆதலால், அதனாற் பெறப்படுகின்ற சிறுபான்மைவேறுபாடு, பின் இரண்டடிகளில் விளக்கப்பட்டது.ஆற்றார்:முற்றெச்சம். வேற்றுமையணி.

(1)


1. சிலப். 21 : 54.

152 இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர்; - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,
அரிமாப் பிழைப்பெய்த கோல்?

(பொ-ள்.) இசையும் எனினும் இசையாதெனினும் வரை தீர எண்ணுவர் சான்றோர் -கைகூடுமெனினும் கை கூடாதெனினும் பழித்தலில்லாதவகையில் அரிய காரியங்களையே மேன்மக்கள்எண்ணிச் செய்வர்; விசையின் நரிமா உளம்கிழித்த அம்பினின் தீதோ அரிமாப் பிழைப்புஎய்த கோல் - விரைவோடு நரி என்னும் விலங்கின்நெஞ்சைக் கிழித்துச் சென்ற அம்பைவிடப்பழிப்புடையதோ, சிங்கத்தினிடம் தவறுதலைப்பொருந்திய அம்பு?

(க-து.) அரிய காரியங்களையேஎண்ணிச் செய்வது மேன்மக்கள் இயல்பு.

(வி-ம்.) வசையாவது, ‘சிறியர்செயற்கரிய செய்கலாதார்"1 என்பது,‘அரிமாப் பிழைப்பெய்த' என்பதற்கு, அரிமாதவறிப் போதலுக்கு ஏதுவான நிலையையடைந்த கோல்என்பது கருத்து. "கான முயலெய்த அம்பினில் யானை,பிழைத்தவேல் ஏந்தல் இனிது"2 என்னுந்திருக்குறளை ஈண்டு நினைவு கூர்க.

(2)


1. குறள். 3 : 6.

2. குறள், 78 : 2.

153 நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்
குரம்பெழுந்து குற்றங்கொ ண்டேறார்; - உரங்கவறா
உள்ளமெனும் நாரினாற் கட்டி உளவரையாற்

செய்வர் செயற்பா லவை.

(பொ-ள்.) நரம்பெழுந்துநல்கூர்ந்தா ராயினும் சான்றோர் குரம்பெழுந்துகுற்றங்கொண்டு ஏறார் - உடம்பில் நரம்பு மேலேதோன்றும்படி1 வறுமையெய்தினாராயினும்மேன்மக்கள் தமது நல்லொழுக்கத்தின் வரம்புகடந்து பிழையான வழிகளை மேற்கொண்டு அவற்றில்தொடர்ந்து செல்லமாட்டார்; உரம் கவறாஉள்ளமெனும் நாரினால் கட்டி - அறிவு பனைவிட்டமாகமுயற்சியென்னும் நாரினால் அத் தீய நினைவைக்கட்டுப்படுத்தி, உளவரையால் செய்வர் செயற்பாலவை- செய்தற்குரியநற்செயல்களைத் தமக்குள்ளபொருளளவினால் செய்து வருவர்.

(க-து.) வறுமையினால் மேன்மக்கள்,தவறிய வழிகளிற் செல்லார்.

(வி-ம்.) குரம்பென்னுஞ் சொல்வரம்பென்னும் பொருட்டு; "குரம்புகொண் டேறி"2என்றார் பிறரும். நார் என்று வந்தமையாற் கவறுஎன்பது பனைவிட்டத்துக் காயிற்று; பிளவுள்ளபனம்பட்டை கவறெனப்படும்; கவர் என்னுஞ்சொல்ரகர றகர வேற்றுமையின்றிக் கவறு என வந்தது.

(3)


1. திருமுருகாற். 130.

2. மணிமே. 18 : 3.

154 செல்வுழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சிலநாள் அடிப்படின்
கல்வரையும் உண்டாம் நெறி:

(பொ-ள்.) செல்வுழிக்கண் ஒருநாள்காணினும் சான்றவர் தொல்வழிக் கேண்மையின்தோன்றப் புரிந்துயாப்பர் - வழிச்செல்லுங்காலத்தில் ஒருவரை ஒரு நாள் கண்டாலும்மேன்மக்கள் பழைமைவழியான நேயம்போல் தோன்றஅன்புசெய்து அவரைப் பிணிப்பர்; நல்வரை நாட -உயர்ந்த மலைகளையுடைய நாடனே!. சில நாள்அடிப்படின் கல் வரையும் உண்டாம் நெறி - சில நாள் நடந்து பழகியதாயின் கல்லுள்ளமலையும் வழி உண்டாகப் பெறும்.

(க-து.)ஒரு நாள் பழகினும் சான்றோர் பிறருள்ளத்தைக் கவர்ந்துவிடுவர்.

(வி-ம்.) பலகாற் பழகியநேயம்போல் என்றற்குத் ‘தொல்வழிக்கேண்மையின்' எனப்பட்டது. அடிப்படின் - பயின்றால்;கால் பட்டுப் பயின்றாலென்க. பலநாட்பழகியகாரணத்தால் நட்புண்டாகப் பெறுதலில்வியப்பொன்று மில்லையே என்றற்கு, ‘அடிப்படின்நெறியுண்டாம்' என்றார். தூய உணர்ச்சிச் சிறப்பேநட்புக்கு ஏதுவென்பது இச்செய்யுட் கருத்து;"உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்"1என்றதுங் காண்க.

(4)


1. குறள். 79 : 5


155 புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி
நல்லார் வருந்தியுங் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.

(பொ-ள்.) புல்லா எழுத்தின்பொருளில் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும் -பொருந்தாக் கல்வியையுடைய மெய்யுணர்வில்லாதவீணோரவையில் கல்வியறிவு நிரம்பப்பெறாதஒருவன் உரையாடவும், கண்ணோடி நல்லார் வருந்தியும்கேட்பர் அவன் பல்லாருள் நாணல் பரிந்து-மேன்மக்கள் கண்ணோட்டமுற்று, உள்ளம்வருந்தியுங் கேட்டுக்கொண்டிருப்பர், தாம்கேளாதொழியின் அவன் பலரிடையில் நாணங்கொள்ளநேர்தற்கு இரங்கியென்க.

(க-து.) மேன்மக்கள் கல்வியறிவும்மெய்யுணர்வும் வாய்ந்து அவையில் அடக்கமுங்கண்ணோட்டமு முடையராயிருப்பர்.

(வி-ம்.) எழுத்து, ஈண்டுக்கல்வியென்னும் பொருட்டு; "மயங்கா மரபின்எழுத்துமுறை காட்டி" 1என்பதும் ஈண்டுநினைவுகூர்தற்குரியது. ‘பொருள்' என்றது மெய்ம்மை;"பொய்யுரையே யன்று பொருளுரையே"2என்றார் பிறரும்; இங்கு மெய்யுணர்வு என்னும்பொருட்டு. ‘வறுங்கோட்டி' என்னுமிடத்து வறுமைபயனின்மை: "வெள்ளைக் கோட்டியும் விரகினில்ஒழிமின்"3 என்புழிப் போல, உம்மைஇரண்டனுள் முன்னது எச்சமெனவும் பின்னதுஇழிவுசிறப்பெனவுங் கொள்க.மற்று:அசை.

(5)


1. தொல். சிறப்புப்பா. 12.

2. சிலப். 9 : 18.

3. சிலப். 30 : 198.

156கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.

(பொ-ள்.) கடித்துக் கரும்பினைக்கண் தகர நூறி இடித்து நீர் கொள்ளினும்இன்சுவைத்தேயாகும் - கரும்பினைப் பல்லினாற்கடித்தும், கணுக்கள் உடையும்படி ஆலையிலிட்டுச்சிதைத்தும், பிற கருவிகளால் இடித்தும் அதன்சாற்றைக் கொண்டாலும், அச் சாறு இனியசுவையுடையதேயாகும்; வடுப்பட வைது இறந்தக்கண்ணும்குடிப்பிறந்தார் கூறார் தம் வாயின் சிதைந்து -பழியுண்டாகும்படி தம்மைப் பிறர் பழித்து வரம்புகடந்தபோதும்1 மேன்மக்கள் தமதுபெருந்தன்மையிற் குறைந்து வாயினால் தீயன கூறார்.(ஆண்டும், இனியரேயாவர் என்றபடி.)

(க-து.) பிறரால் இடுக்கணுற்றவிடத்தும் சான்றோர் இனியராகவே ஒழுகுவர்.

(வி-ம்.) கடித்தும் நூறியும்இடித்தும் என்று கொள்க. தம் வாயின் சிதைந்து, தமதுஉண்மை நிலையினின்றும் மாறி எனினுமாம், ஆவது, தம்பெருந்தன்மையினின்றுங் குறைந்து என்க.எடுத்துக்காட்டுவமை,

(6)


1. நாலடி. 7 : 1.


157 கள்ளார், கள் ளுண்ணார், கடிவ கடிந்தொரீஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார், - தள்ளியும்
வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயிற் பரிவ திலர்.

(பொ-ள்.) வடு அறு காட்சியார் -மாசு நீங்கிய தெளிவினையுடையார், கள்ளார் -பிறர் பொருளைக்கவரார்; கள் உண்ணார் - கள்அருந்தார்; கடிவ கடிந்து ஒரீஇ- விலக்கத் தகுந்ததீயவற்றை விலக்கி அவற்றின் நீங்கித் தூயராகி,எள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார் - பிறரைஅவமதித்து இகழ்ந்து உரையாடாமல் விளங்குவர்;தள்ளியும் வாயின் பொய் கூறார் - சோர்ந்தும்தம் வாயினாற் பொய் சொல்லார், சாயின் பரிவதுஇலர் - வினைவயத்தால் தம் செல்வாக்குக்குறையின், அதற்காக வருந்துவதும் இலராவர்.

(க-து.) சான்றோர்பால்இயல்பாகவே தீய குணங்கள் இல்லை.

(வி-ம்.) ஓரீஇ என்னும் எச்சத்தைஓரீஇ நிற்பர் என ஒரு தனிக் கருத்தாகக்கொள்ளலும், தள்ளியும் என்பதற்குப் பிறர் தம்மைஅவமதித்து ஒதுக்கியும் எனலும் ஆம், காட்சியார்,பெயர்.


158பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்
தேதிலா ரிற்கட் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.

(பொ-ள்.) பிறர் மறையின்கண்செவிடாய் - பிறருடைய மறைந்த கருத்துக்களைக்கேட்டலிற் செவிடுடையனாய், ஏதிலார் இல்கண்குருடனாய்-அயலார் மனைவியரைக் காமக் கருத்துடன்நோக்குதலிற் குருடுடையனாய். தீய புறங்கூற்றின்மூகையாய்-தீயவான புறங்கூற்று மொழிகளைக் கூறுதலில்ஊமையுடையனாய், திறன் அறிந்து நிற்பானேல் -வாழ்க்கையில் துன்பம் உண்டாகுங் கூறுகள்இவையென்றறிந்து ஒருவன் ஒழுகுவானாயின், யாதும்அறம் கூறவேண்டா அவற்கு - அவனுக்குப் பிறர் வேறுயாதும் அறம் அறிவுறுக்கவேண்டா.

(க-து.) வாழ்க்கையில் துன்பம்உண்டாக்குங்கூறுகள் இவையென்றறிந்து மேன்மக்கள்அவற்றின் நீங்கியொழுகுவர்.

(வி-ம்.) திறனறிந்து நிற்பானேல்என்க. காதிருந்தும் கண்ணிருந்தும் வாயிருந்தும்ஒருவன் செவிடாய்க் குருடாய் ஊமையாய்நிற்கவேண்டுமிடம் இன்னவென்றது. இச் செய்யுளில்நயமுடையது. "சொல்லும் மறையிற் செவியிலன்தீச்சொற்கண் மூங்கை"1 முதலிய பிறர் வாய்மொழிகளும் நினைவு கூர்க. இம் மூவகை யறமேபோதுமென்பார் "யாதும் அறங் கூறவேண்டா"என்றார்.

(8)


1. ஏலாதி.19

159பன்னாளுஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப; - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்டொறுஞ் செய்வர் சிறப்பு:

(பொ-ள்.) பல் நாளும்சென்றக்கால் - பலமுறையும் ஒருவர் சென்றால்,‘பண்பிலார் - நற்பண்பில்லாத கீழ் மக்கள், தம்உழை என்னானும் வேண்டுப என்று இகழ்ப - தம்மிடம்ஏதாவது உதவி வேண்டுவார் என்று அவரை அவமதிப்பர்;விழுமியோர் - ஆனால் மேன்மக்கள், என்னானும்வேண்டினும் நன்று என்று - அவர் ஏதாவது உதவிவிரும்பினாலும் நல்லது என்று கருதி, காண்டொறும்செய்வர் சிறப்பு - அவரைப்பார்க்கும்போதெல்லாம் பெருமை செய்வர்.

(க-து.) மேன்மக்கள் பிறர்க்குஉதவி செய்தலில் விருப்பமுடையவராயிருப்பர்.

(வி-ம்.) பன்னாளென்றது, பலமுறையென்னும் பொருட்டு. ‘பண்பிலார்' என்னுஞ் சொல்படர்க்கையாதலின்.1 ‘சென்றக்கால்'என்னும் படர்க்கையிடத்திற்குரிய வினை வந்தது.என்னானும் வேண்டினும் என்றற்கு எது வேண்டினாலும்என்றுரைத்தலும் ஒன்று.

(9)


1. தொல். கிளவி. 30.


160 உடைய ரிவரென் றொருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வர் - உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட விடத்து.

(பொ-ள்.) உடையார் இவர் என்று ஒருதலையாப்பற்றிக் கடையாயார் பின் சென்றுவாழ்வர் - பொருளுடையார் இவர் என்று உறுதியாகப்பற்றி மக்களிற் பெரும்பாலார் கீழ்மக்கள்பின்சென்று உயிர் வாழ்வர்; உடையபிலம்தலைப்பட்டது போலாதே நல்ல குலம் தலைப்பட்டவிடத்து-சிறந்த மேன்மக்களினத்தைச்சேரப்பெற்ற போது, அஃது உரிமையுடைய ஒருபொருட்சுரங்கத்தைத் தலைப்பட்டதுபோ லாகாதோ?

(க-து.) மேன்மக்கள் சேர்க்கையேஎல்லா நலங்களும் பெருக அடைவதற்குரியது.

(வி-ம்.) பொருளொன்றே கருதியென்றற்கு ‘உடையார் இவர்' என்றும்,பொருளுடையராயினுங் குணநலமில்லாதார்கீழ்ப்பட்டவரே யென்றற்கு ‘கடையாயார்' என்றுங்கூறினார். பற்றி-ஆதரவாகக் கொண்டு. தொங்கித்தொடரும் எளிமை, தோன்றப் ‘பின்சென்று வாழ்வர்'என்றார். மேன்மக்கள் எஞ்ஞான்றும்பிறர்க்குரியராதலின், உரிமையுடைய பிலம்என்றற்கு ‘உடையபிலம்' எனப்பட்டது.தமக்குடைமையான பிலம் எனப் பொருள்விரித்தலுமாம். "உடைப்பெருஞ் செல்வர்"1என்றார் பிறரும். ஏகாரம் : வினா.

(10)


1. புறம், 188.



(7)



2011/6/14 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/6/13 Venkatram Shrinivas <see...@gmail.com>

2011/6/12 Venkatram Shrinivas <see...@gmail.com>
<span style="font-family:'Times New Roman';font



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 15, 2011, 4:25:20 PM6/15/11
to மின்தமிழ்
பொருட்பால்
17. பெரியாரைப் பிழையாமை
[பெரியாரை அவமதித்து நடவாமை]
161பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது.

(பொ-ள்.) பொறுப்பர் என்றுஎண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பனசெய்யாமை வேண்டும் - பொறுத்துக் கொள்வார் என்றுநினைத்து மாசுநீங்கிய பெரியோரிடத்திலும் அவர்வருந்தத்தக்க பிழைகளைச் செய்யாதிருத்தல்வேண்டும்; வெறுத்தபின் - அவர் உள்ளம் அதனால்வருந்தியபின், ஆர்க்கும் அருவி அணி மலை நல் நாட -ஆரவாரித்தொலிக்கும் அருவிகளையுடைய அழகியமலைகள் பொருந்திய சிறந்த நாடனே; பேர்க்குதல்யார்க்கும் அரிது - அவ் வருத்தத்தால் உண்டாகுந்தீங்கை நீக்கிக் கொள்ளுதல் எத்தகையவர்க்கும்இயலாது.

(க-து.) பெரியோரைஅவமதித்தொழுகினால் தீர்வில்லாததீங்குண்டாகும்.

(வி-ம்.) பெரியோர்பொறுத்தற்குரியோராயினும் அவர் உள்ளத்துக்குஆகாதன அவரொழுகலாற்றிற்கு ஊறு பயக்குமாதலின்‘வெறுப்பன செய்யாமை வேண்டும்' எனவும், இவைபொருந்தாதன என்று அவர் கருதுதலே ஈண்டுவருந்தியதாகுமாதலின் ‘வெறுத்தபின்' எனவும்.எத்தகைய ஆற்றல் படைத்தவர்க்கும் அதனால்விளையுந்தீங்குகளை நீக்கிக்கொள்ளுதல்அரிதாகுமாதலின் ‘யார்க்கும்' எனவுங் கூறினார்."பூவுட்கும் கண்ணாய் பொறுப்பரெனக் கருதியாவர்க்கேயாயினும் இன்னா செயல் வேண்டா"1என்றார் பிறரும். புரை தீர்ந்தார் மாட்டும்என்னும் உம்மை உயர்வொடு எச்சம்.

(1)


1. பழமொழி. 43.

162 பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.

(பொ-ள்.) பொன்னே கொடுத்தும்புணர்தற்கு அரியாரை - பொன்னையே விலையாகக்கொடுத்தும் நட்புச் செய்தற்கு அரியரானபெரியோர்களை, கொன்னே தலைக்கூடப்பெற்றிருந்தும் - பொருட் செலவில்லாமலே அவரைநட்புச் செய்து கொள்ளும் நிலை பெற்றிருந்தும்.நல்ல நயம் இல் அறிவினவர் அன்னோ பயனில்பொழுதாக் கழிப்பரே - சிறந்த பண்புடைமையில்லாதஅறிவினையுடைய பேதையர் ஆ, தம்முடையவாழ்நாட்களைப் பயன் இல்லாத வீண் காலமாகக்கழிக்கின்றனரே!

(க-து.) பெரியார் இணக்கம்வாழ்க்கை யின்பம் மிகுத்து அதனைப்பயனுடையதாக்கும்.

(வி-ம்.) பொன்னே என்பதன்ஏகாரம் தேற்றமும், கழிப்பரே என்பதன் ஏகாரம்ஈற்றசையுமாம். அன்னோவென்னும் இடைச்சொல்இரக்கப்பொருள் குறித்தது. சான்றவர் மேன்மையில்மரீஇ இன்புறும் நயமின்மை கருதி; ‘நயமில்அறிவினவ' ரென்றார்; பயனில் பொழுது கழிக்கும்வீணரை நயமில் அறிவினவரென விதந்தது, மிக்கநயமுடைத்து. "நயனிலனென்பது சொல்லும் பயனில,பாரித்துரைக்கும் உரை"1 என்பதுதிருக்குறள்.

(2)


1. 20 : 30

163 அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான் மதிக்கற் பால; -நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.

(பொ-ள்.) அவமதிப்பும் ஆன்றமதிப்பும் இரண்டும் மிகைமக்களான் மதிக்கற்பால-மதிப்பின்மையும் மிக்க மதிப்புமாகிய இரண்டும்மேன்மக்களாகிய பெரியோர்களால்மதித்தற்குரியனவாகும்; நயம் உணராக்கையறியாமாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் -நன்மையை உணர்தலில்லாத ஒழுக்கமறியாக்கீழ்மக்களின் இழிப்புரையும் உயர்த்தும்ஏத்துரையும், வடித்த நூலார் வையார் - தெளிந்தநூலறிவினையுடையோர் ஒரு பொருளாகமனத்துட்கொள்ளமாட்டார்கள்.

(க-து.) மேன்மக்கள்பால்மதிப்புப்பெற முயலுதல் வேண்டும்.

(வி-ம்.) ஆன்ற மதிப்பென்றது,நன்கு மதித்தலை உட்கொண்டு நின்றது. மிகைமக்கள்- மக்களில் மேம்பட்ட நன்மக்கள்;பொதுமக்களினும் மேம்பட்டோரென்று கொள்க.மாக்களென்போர் அப்பொதுமக்களினுங்கீழ்ப்பட்டோர். கை, ஈண்டு ஒழுக்கமென்னும்பொருட்டு, உணரா அறியா மக்கள் என்க; "மூவா முதலாவுலகம்"1 என்புழிப்போல.சான்றோராயின், உலகில் நிகழுந் தகுதிகளைத்தம்உள்ளத்துமதித்து மகிழ்வர்; நிகழ்வனதகுதியற்றனவாயின் அவற்றை மதியாமல்வாளாவிடுப்பரல்லது தூற்றார். நயமுணராக்கையறியாமக்களாயின், இழித்தலாயினும் அன்றிஏத்துதலாயினும் தம் வாய்விட்டுக் கூறுவர்.இவ்வியல்பு புலப்படுத்துவார், ‘இழிப்பும்எடுத்தேத்து' மென்று அவரது வாயுரைக்கண் வைத்துஆசிரியர் விளக்கின ரென்க.

(3)


1. சிந். 1.


164 விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.

(பொ-ள்.) விரிநிற நாகம் விடர்உளதேனும் உருமின் கடு சினம் சேண் நின்றும் உட்கும்- படம் விரித்தலையுடைய நாகப்பாம்பு நிலத்தின்வெடிப்பினுள்ளே உள்ளதானாலும் இடியின் கொடியஒலிச்சீற்றமானது தொலைவில் இருந்தும் அதற்குஅஞ்சும், அதுபோல; அருமையுடைய அரண் சேர்ந்தும்பெருமையுடையார் செறின் உய்யார் - அருமைப்பாடுடையபாதுகாப்பிடத்தைச் சேர்ந்திருந்தாலும்,மேன்மையுடைய பெரியோர் சீறுவாராயின், ஏனைச்சிறியோர் அதற்குத் தப்பமாட்டார்.

(க-து.) பெரியோர்க்குப் பிழைசெய்து பின் அதிலிருந்து தப்புதல் இயலாது.

(வி-ம்.) விடரென்பது பிளப்பு:"விடர் முகையடுக்கம்"1 என்பது அகநானூறு.இடி முழக்கத்தின் மேன் மேற் கடுமைசினமெனப்பட்டது. "அரண்சேர்ந்தும்'என்றதனால், என்றதனால், பெருமையுடையாரது சினம்அவ்வரண் முதலியவற்றையுங் கெடுக்குமென்பது பெறுதும்.பெருமையுடையார் செறின் என்றமையின் ஏனைச்சிறியோர் உய்யார் என, வினை முதல் தானேபெறப்பட்டது.

(4)


1. அகநா.47

165 எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று: - தம்மை
அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்.

(பொ-ள்.) எம்மை அறிந்திலிர்எம்போல்வார் இல் என்று தம்மைத்தாம் கொள்வதுகோள் அன்று - ‘எமது தகுதியை நீவிர்அறிந்தீரில்லை; எம்மைப்போன்ற தகுதியுடையார்பிறர் ஈண்டு இல்லை' என்று தம்மைத் தாமேபெருமைப்படுத்திக் கொள்வது சிறந்த மதிப்பாகாது;தம்மை அரியரா நோக்கி அறன் அறியுஞ் சான்றோர்பெரியராக் கொள்வது கோள்-தம்மைஅருமையுடையராகக் கருதி, அறமுணருஞ் சான்றோர்பெரியரென்று மதித்தேற்றுக் கொள்ளுதலேபெருமையாகும்.

(க-து.) தம்மைச் சான்றோர்பெரியரென மதித்தேற்குமாறு தாம் செய்கையில்ஒழுகுதலன்றித், தம்மைத் தாமே பெரியரென -வாயுரையாப் புலப்படுத்திக் கொள்ளுதல்மதிப்புடைமையாகாது.

(வி-ம்.) "வியவற்கஎஞ்ஞான்றுந் தன்னை"1 என்றார் பிறரும்.‘அரியரா, பெரியரா' ஈறு தொகுத்தல்.தக்கோரென்னும் பொருட்டு, அறனறியுஞ்சான்றோரென்றார். அறிதலாவது ஈண்டுஅறிந்தொழுகுதல்.

(5)


1. குறள்: 44 : 9.

166நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழற் போல
விளியுஞ் சிறியவர் கேண்மை: - விளிவின்றி
அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.

(பொ-ள்.) நளி கடல் தண் சேர்ப்ப- பெரிய கடலின் குளிர்ந்த துறையையுடையவனே!சிறியவர் கேண்மை நாள் நிழல்போலவிளியும்-சிறியோர் நட்புக் காலை நேரத்தின்நிழல்போலக் குறைந்து கெடும்; விளிவுஇன்றி-அவ்வாறு குறைந்து கெடுதலில்லாமல், அல்குநிழல்போல் - மாலை நேரத்தின் நிழல்போல,தொல்புகழாளர் தொடர்பு அகன்று அகன்று ஓடும்-பழைமை தொட்டு வரும் புகழினையுடையரான பெரியோர்நட்பு வளர்ந்து பெருகும்.

(க-து.) இருக்க இருக்கப் பெருகும் நேயமாட்சிக் குரியபெரியோரிடம் பிழைத்தலின்றி யொழுகி நலம்பெறல் வேண்டும்.

(வி-ம்.) நாள், நாளின்தோற்றநேரமாகிய காலைப் பொழுதை யுணர்த்திற்று,அல்கு, என்பது முதலிலைத் தொழிற்பெயர்: சுருங்குதல்என்பது பொருள்: பொழுது சுருங்குதலையுடைய நேரம்என்னுங் கருத்தில் ஆகுபெயராய் இங்கு அது மாலைக்காலத்தை உணர்த்தி நின்றது. மாலையென்றது ஈண்டுப்பிற்பகல். அடுக்கு மிகுதிப் பொருளது.தொல்புகழாளர் என்றார். புகழுக்குரியநல்லியல்பும் பழக்கமும் இயற்கையாகவும்செயற்கையாவும் நெடுங்காலமாக உடையரென்னும்பொருட்டு.

167மன்னர் திருவும் மகளிர் எழினலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கட் சென்றார்க் கொருங்கு.

(பொ-ள்.) மன்னர் திருவும் மகளிர்எழில் நலமும் - அரசர் வளமும் மகளிரின்எழுச்சியழகும், துன்னியார் துய்ப்பர் - அவர்களுடன்நெருங்கிக் கலந்திருப்பவர் நுகர்வர்: தகல்வேண்டா-நேயம் என்னும் அந் நெருக்கமல்லதுஅதற்குத் தகுதியுடைமை வேண்டா: துன்னிக்குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரமெல்லாம் -நெருங்கத் தழைகள் பொருந்தித் தாழ்ந்துள்ளகுளிர்ச்சியான மரங்களெல்லாம், உழை தங்கட்சென்றார்க்கு ஒருங்கு - தம்மிடம் வந்தடைந்தாரனைவர்க்கும் வேறுபாடின்றி நிழலிடமாகும்.

(க-து.) ஆதலால், நேயத்தால் தம்மைஅடைந்தவரிடம் தகுதி வேறுபாடுகள் கருதாமல்,பெரியோர் அளவளாவியிருந்து அவரை மகிழ்விப்பரென்க.

(வி-ம்.) உவமைகள் மூன்றும்இருவகையாகப் பெரியோர் மாட்சிமை யுணர்த்தினசிறப்பாக நேய நெருக்கமுடையோர் துய்த்தற்குமுதலிரண்டு உவமைகளும், தகுதி வேறுபாடு கருதாமைக்குப்பின் ஓர் உவமையும் வந்தன வென்க. இதனாற்பெரியோரது திருநலம் விளங்கிற்று. தகல்:தொழிற்பெயர். துன்னியென்பதற்குக் கிளைகள்நெருங்கியென உரைத்தலுமாம். குளிர் மரமாதலின்குழை கொண்டு தாழ்ந்தவெனக் கூறப்பட்டது. உழை -இடம்; ஈண்டு நிழல் பயக்கும் இடமென்க. ஒருங்குஎன்றார், வேறுபாடு கருதாமைப் பொருட்டு.

168 தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மாட்டும்
கலவாமை கோடி யுறும்.

(பொ-ள்.) தெரியத் தெரியும்தெரிவிலார் கண்ணும் நூற்பொருள்களை விளங்கத்தெளியும் தெளிவில்லாதவரிடத்தும், பிரியப்பெரும்படர் நோய் செய்யும் - அவரைப் பிரிய அப்பிரிவு பெரிய நினைவுத் துன்பம் உண்டாக்கும்;பெரிய உலவா இரு கழிச் சேர்ப்ப-வளங்கெடாதகருநிறமான பெரிய கழிக்கரையை யுடையோனே, யார்மாட்டும் கலவாமை கோடி உறும் - ஆதலால்,பெரியோரிடத்தன்றிப்பிறர் யாரிடத்திலும்நேயங்கொள்ளாமை கோடிப்பங்கு நன்மையாகும்.

(க-து.) ஆராய்ந்து பெரியோரிடமேநேயங்கொள்ளுதல் வேண்டும்.

(வி-ம்.) பிரிய அப் பிரிவு நோய்செய்யும் என்று கொள்க. படர்-நினைவு "படரேஉள்ளல்"1 என்பது தொல்காப்பியம்; படர்நோய்-நினைதலாலுண்டாகும் வருத்தம். நெய்தல்நிலம் கார் காலத்தில் நெல்விளைத்தும் வேனிற்காலத்தில் உப்பு விளைத்தும் என்றும்வளங்கொடாதிருத்தலின் "உலவாக் கழி"எனப்பட்டது. ‘வானம் வேண்டா உழவின் எம் கானலஞ்சிறுகுடி'2 என்பதும் நினைவு கூர்க.

(8)


1. தொல். உரி. 42.

2. நற். 254.

169 கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும், - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.

(பொ-ள்.) கல்லாது போகிய நாளும் -கற்றற்குரிய நூல்களைக் கல்லாமற் கழிந்தநாட்களும், பெரியவர்கண் செல்லாது வைகியவைகலும்-கேள்வியின் பொருட்டுப் பெரியோர்பாற்செல்லாது நின்ற நாட்களும், ஒல்வகொடாது ஒழிந்தபகலும் - இயன்ற பொருள்களை உரியவர்களுக்குஉதவாமல் நீங்கிய நாட்களும், உரைப்பின் -சொல்லுமிடத்து, பண்புடையார்கண்படா-நல்லியல்புடைய பெரியோர்களிடம்உண்டாகமாட்டா.

(க-து.) கல்வி கேள்விகளும்ஒப்புரவும் என்றும் பெரியோர் உடையராயிருப்பர்.

(வி-ம்.) சாந்துணையுங் கற்றலும்,1செவிக்குணவில்லாத போழ்து வயிற்றுக்கு ஈதலும்,2‘இரவரலர்க்கு அருங்கலம் வீசி வாழ்தல் வேண்டும்இவண் வரைந்த வைக' லெனக் கருதலும்,3நல்லோர் இயல்பாகலின், இங்ஙனம் கூறினார். ஒல்வ: வினையாலணையும் பெயர். அளபெடைகள் செய்யுளோசைநிறைத்து நின்றன. ஆம்: அசை.

(9)


1. குறள். 40 : 7

2. குறள். 42 : 2

3. புறம். 367

170 பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்
குரியா ருரிமை யடக்கம்; - தெரியுங்கால்,
செல்வ முடையாருஞ் செல்வரே, தற்சேர்ந்தார்
அல்லல் களைப வெனின்.

(பொ-ள்.) பெரியார் பெருமை சிறுதகைமை - கல்வி கேள்விகளிற் பெரியாருடையபெருமைக் குணமாவது யாண்டுந்தாழ்வுடைமையாயிருத்தல்; ஒன்றிற்கு உரியார்உரிமை அடக்கம் - வீடுபேற்றிற்கு உரியரானமெய்யுணர்வாளர்க்கு உரிமையான பண்பாவாதுமனமொழி மெய்கள் அடக்கமாயிருத்தல்;தெரியுங்கால் - ஆராயுமிடத்து, செல்வமுடையாரும்செல்வரே தற் சேர்ந்தார் அல்லல் களைப எனின் -தம்மை அடைந்தவர்களுடைய வறுமைத் துன்பங்களைநீக்குவார்களாயின் செல்வம் படைத்தவர்களும்செல்வரேயாவர்.

(க-து.) செல்வமும் கல்வியும்மெய்யுணர்வுமுடைய பெரியோர், யாண்டும் உதவியும்பணிவும் அடக்கமு முடையராயிருப்பர்.

(வி-ம்.) சிறியதன்மையுடையார்போல் தாழ்வுடையராயிருத்தலின்அப் பணிவுடைமையை ஈண்டுச் சிறு தகைமையென்றார்.சிறப்பு நோக்கி வீடுபேறு, ஒன்றெனப்பட்டது.தற்சேர்ந்தார், ஒருமை பன்மை மயக்கம்."தற்சேர்ந்தார் ஒற்கம் கடைப்பிடியாதார்"1என்றார் பிறரும். பெரியாராயினார்இத்தகையினராதலின் இது தெரிந்து இந்நிலைகட்கேற்ப அவர்பாற் பிழைபடா தொழுகிக்கொள்க வென்பது கருத்து. இவ்வதிகாரத்தில்பெரியாரியல் புரைப்பனவாய் வந்திருக்கும் இதுபோன்ற செய்யுள்கட்கும் இவ்வாறுரைத்துக் கொள்க.

(10)


1. ஐந். ஐம். 48.



2011/6/15 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 16, 2011, 3:01:39 PM6/16/11
to மின்தமிழ்
நல்லினம் சேர்தல் 
 
பொருட்பால்
18. நல்லினம் சேர்தல்
[உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்.]
171அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு.

(பொ-ள்.) அறியாப் பருவத்துஅடங்காரோடு ஒன்றி நெறியல்ல செய்தொழுகியவும் -அறிய வேண்டுவன அறியாத சிறுபருவத்தில்அடங்கியொழுகாத தீயோருடன் சேர்ந்துமுறையல்லாதவற்றைச் செய்தொழுகிய தீயகுணங்களும்,வெயில் முறுகப் புல் பனிப்பற்றுவிட்டாங்கு-வெயில் கடுகுதலால் புல்நுனியைப்பனியின் பற்றுதல் விட்டாற்போல, நெறியறிந்தநற்சார்வு சாரக் கெடும் - நன்னெறிதெரிந்தொழுகும் உயர்ந்த பெரியோர் சார்பைச்சார்ந்து பழகுதலால் கெடும்.

(க-து.) தீய குணங்கள் நீங்கும்பொருட்டு நல்லாரினத்திற் சார்ந்து பழகுதல்வேண்டும்.

(வி-ம்.) அடங்கார்:வினையாலணையும் பெயர்: செய்தொழுகி யவ்வும்என்பதில் வகரம் விரிந்தது: உம்மை நல்லோர்சேர்க்கையால் நல்லன பெறுதலோடு என்னுங்கருத்துணர்த்துதலின் எச்சம்.

172 அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

(பொ-ள்.) அறிமின் அறநெறி - கடமையொழுங்கை அறிந்தொழுகுங்கள்; அஞ்சுமின் கூற்றம் -நமன் வருதற்கு அஞ்சி யொழுகுங்கள்; பொறுமின்பிறர் கடுஞ்சொல்-பிறர் கூறும் வன்சொற்களைப்பொறுத்துக் கொள்ளுங்கள்; போற்றுமின் வஞ்சம் -வஞ்சித்தொழுகுதலைக் காத்துக் கொள்ளுங்கள்;வெறுமின் வினை தீயார் கேண்மை - செய்கை தீயவரதுநட்பை வெறுத்தொதுக்குங்கள்; எஞ்ஞான்றும்பெறுமின் பெரியார்வாய்ச் சொல் -எக்காலத்திலும் பெரியார் வாயிலிருந்து வரும்நன்மொழிகளை ஏற்று ஒழுகுங்கள்.

(க-து.) நல்லாரினத்தைச் சார்ந்துபழகி அதனால் அறநெறியறிதல் முதலிய நலன்களைப்பெறுதல் வேண்டும்.

(வி-ம்.) இச்செய்யுள் நல்லினம்சார்தற்குரியாரை நோக்கிற்று, அறிமின் முதலியன,அறிந்து அந்நெறி நிற்றலை யுணர்த்தா நின்றன.கூற்றம் அஞ்சுதலாவது அருள்வழி நின்றொழுகுதல்.‘வஞ்சம் போற்றுமின்' என்றது, தம்மைச் சாராதவாறுகாத்துக்கொள்ளுதலென்க. "புறஞ் சொற்போற்றுமின்"1என்றார் பிறரும். வினைதீயார் - தீய செயலுடையார். பெரியார் வாய்ச்சொல் பெறுதற்கு அறநெறி யறிந் தொழுகுதல் முதலியனஇன்றியமையாதன வாதலின், அவற்றை முறையேமுற்கூறினார்.
ஒரோவொருகாற் பிற நெறிகள் தவறினும் பெரியார்வாய்ச்சொல் பெறுதல் ஒருபோதுந் தவறலாகாதென்றற்கு, எஞ்ஞான்றும் என்னுஞ் சொல்அதனையடுத்து நின்றது.

(2)


1. சிலப் 30 : 188.

173 அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.

(பொ-ள்.) அடைந்தார்ப் பிரிவும்அரு பிணியும் கேடும்- இயற்கையாகவும்செயற்கையாகவுஞ் சார்ந்தவரான உறவினர் நண்பர்முதலியோரைப் பிரிந்து நிற்றலும், தீர்தற்கரியநோயும், இறப்பும், உடங்கு உடம்பு கொண்டார்க்குஉறலால் -பிறவியெடுத்தவர்க்கு ஒருங்கேபொருந்துதலால், தொடங்கி - ஆராயத் தொடங்கி,பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை -பிறப்புத் துன்பந் தருவது என்றுணர்ந்துபற்றற்றொழுகும் பெரிய அறிவினரான ஞானியரை,உறப் புணர்க என் நெஞ்சு - என் உள்ளம் மிகக் கூடுக.

(க-து.) துன்பந் தரும் பிறப்பைஅதன் இயல் பறிந்து பற்று நீங்கி யொழுகும்ஞானியரான நல்லாரினத்தைச் சார்ந்தொழுகுதல்வேண்டும்.

(வி-ம்.) ‘உற்றோர்முதலியோரைப் பிரிந்து நிற்க நேர்ந்தால்,அப்போது இவ்வுடம்புக்குப் பற்பல வசதிகள் குறைந்துதுன்பங்கிளைத்தலால் அவையெலாம் ‘அடைந்தார்ப்பிரிவும்' என்பதில் அடங்கும். உடங்கு உறலால்என்க. உடம்பு இலக்கணையாற் பிறவியைஉணர்த்திற்று. இத்துன்பப்பிறவியை மகிழ்தல்அறிவுடைமையாகாமையின் இன்னாதென்றுணர்தல்பேரறிவுடைமையாயிற்று. "இளமை மகிழ்ந்தாரே ......இன்னாங் கெழுந்திருப்பார்"1 என்றார்முன்னும். அம்மா:அசை. நல்லினம் என்பது சிறப்பாகஞானியரினம் என்பது இச்செய்யுட் கருத்து.

(3)


1. நாலடி. 2 : 1

174 இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
பிறப்பினை யாரும் முனியார்; - பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டேஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.

(பொ-ள்.) பிறப்பினுள் - தாம்பிறந்த பிறப்பில், பண்பு ஆற்றும்நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் நண்பு ஆற்றிநட்கப்பெறின் - பிறர்க்கு உதவிசெய்யும்நெஞ்சமுடையவர்களான பெரியார்களோடு எப்போதும்நேயஞ்செய்து அணுகியிருக்கப் பெற்றால், இறப்பநினையுங்கால் இன்னாது எனினும் பிறப்பினை யாரும்முனியார் - மிக ஆராயுமிடத்துத்துன்பந்தருவதென்றாலும் அப்பிறப்பினை யாரும்வெறுக்கமாட்டார்கள்.

(க-து.) பிறவி துன்பந் தருவதாயினும்நல்லாரினத்தோடு நேயங் கொண்டிருக்கப் பெறின்அதனை யாரும் வெறார்.

(வி-ம்.) பிறவி நன்முறையிற்செல்லுதலின் வெறுக்கப்படாதாயிற்று. பிறப்பினுள்நட்கப்பெறின் அப்பிறப்பினை, இன்னாதெனினும்யாரும் முனியாரென்று கொள்க. பண்பென்பதுபாடறிந்தொழுக1லாதலின், ஈண்டு உதவியெனப்பட்டது. அது, நல்லார் இலக்கணம்இன்னதென்பதுணர்த்தும் பொருட்டு நின்றது.

(4)


1. கலித். 133 : 8

175ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓருங்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

(பொ-ள்.) ஊர் அங்கண் நீர்உரவுநீர் சேர்ந்தக்கால் - ஊரின் சாக்கடை நீர்கடலைச் சேர்ந்தால், பேரும் பிறிதாகித்தீர்த்தம் ஆம் - பேரும் கடல் நீர் என்று வேறாகிஅருள் நீராகும், ஒரும் குலமாட்சி இல்லாரும் -மதிக்கத்தக்க நற்குலப் பெருமையில்லாதகீழோரும், குன்றுபோல்
நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து -குணப்பெருமை வாய்ந்த நல்லாரைச் சார்ந்து அவர்நற்றன்மையில் மலைபோல் அசைதலின்றி நிலைத்துவிளங்குவர்.

(க-து.) கீழோரும் மேலோரைச்சேர்ந்தால், மேலோரேயாவர்.

(வி-ம்.) உரவுநீர், வலிமையுடையநீரென்னுங் கருத்திற் கடல் நீருக்கு வந்தது.தீவினைகளைத் தீர்க்கும் அருளியல்பு வாய்ந்தநீர் தீர்த்தம் என்பபடுவதாயிற்று. குலம் -நல்லோர் சூழல், நலம், ஈண்டுப் பண்பு, குன்று போல்நிற்பரென்றார். பின் அந்நிலையினின்றும்வழாரென்றற்கு.

176 ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழுப்படூஉம்;
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,
குன்றன்னார் கேண்மை கொளின்.

(பொ-ள்.) ஒள் கதிர் வாள்மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின்முயலும் தொழப்படும் - இனிய கதிர்களையுடைய ஒள்ளியதிங்களைச் சேர்தலால் அழகிய இடமகன்றவானத்தின்கண் முயலும் மாந்தரால் வணங்கப்படும்;குன்றிய சீர்மையராயினும் சீர்பெறுவர்குன்றன்னார் கேண்மை கொளின் - ஆதலால், குறைந்தநிலைமையுடையராயினும் மக்கள் மலைபோன்றபெருமையுடைய நல்லாரது நேயத்தை யடைந்தால்நிறைந்த சிறப்பினைப் பெறுவர்.

(க-து.) மக்கள், நல்லார்நேயத்தராயிருப்பின் சிறப்புறுவர்.

(வி-ம்.) வான்மதியம் என அடுத்துவருதலின் கதிர்க்கு ஒண்மையாவது இனிமையென்றுகொள்க. ஒண்மைக்கு இந் நன்மைப் பொருளுண்மைபிங்கலந்ததையிற்1 காணப்படும். முயல்,திங்களின்கட் காணப்படும் மறு. பிறை தொழுதல்வழக்கமாதலின்,2 அதன்கண் உள்ள மறுவும்தொழப்படுவதாயிற்று. சீர்மை, பொதுவாக ஈண்டுநிலைமை என்னும் பொருட்டு. நிலை வழுவாதவராகலின்,நல்லோர் குன்றன்னா ரெனப்பட்டனர். அவரோடுகேண்மை கொள்ளுதலாவது அவர் அன்புக்குரியவராய்அவர் இனத்தவராய் இருத்தலென்க.

(6)


1. பிங். 10 : 210

2. குறுந். 307.

177 பாலோ டளாயநீர் பாலாகு மல்லது
நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; -தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.

(பொ-ள்.) பாலோடு, அளாய நீர்பாலாகுமல்லது நீராய் நிறம் தெரிந்துதோன்றாது-பாலோடு கலந்த நீர் பாலாகித்தோன்றுமல்லது நீராய்த் தன் நிறம் விளங்கித்தோன்றாது; தேரின்-ஆராய்ந்தால், சிறியார்சிறுமையும் தோன்றாது நல்ல பெரியார் பெருமையைச்சார்ந்து - உயர்ந்த பெரியாருடையபெருந்தன்மையைச் சார்தலால் சிறியார்குறைபாடுந் தோன்றாமற் பெருமையேயாகும்.

(க-து.) மக்கள் பெரியாரோடுசேர்ந்திருந்து தம் குறை நீங்கிப் பெருமையடைதல்வேண்டும்.

(வி-ம்.) உவமையில் நீராய்த்தெரியாமையும் பாலாய் நிறமாதலுங்கூறப்பட்டமையின், பொருளிலும் சிறுமைதோன்றாமையோடு பெருமை உருவாதலும்உரைத்துக்கொள்க. நீர் தன் நிறந்தெரிந்துதோன்றா தென்றமையின் பால் நிறந்தெரிந்துதோன்றுமென்பது பெறப்பட்டமையால் அவ்வாறேசிறியோர்க்குங் கொள்க. "உவமப் பொருளின்உற்ற துணருந் தெளிமருங் குளவே திறத்தியலான"1என்பதனான் இங்ஙனங் கொள்ளப்படும். ஆம்இரண்டனுள் முன்னது அசை. நல்ல என்னும் அடைமொழிஇயல்புணர்த்தியபடி.

(7)


1. தொல். உவம. 20.

178 கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு; 
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற்
செல்லாவாம் செற்றார் சினம்.

(பொ-ள்.) கொல்லை இரு புனத்துக்குற்றியடைந்த புல் - கொல்லையாகிய பெரியநிலத்திலுள்ள மரக்கட்டையைச் சேர்ந்து வளர்ந்தபுல். ஒல்கா ஆகும் உழவர் உழுபடைக்கு - உழவரதுஉழுகின்ற படையாகிய கலப்பைக்குக் கெடாதனவாகும்;மெல்லியரேயாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்செல்லா செற்றார் சினம்-வலிமையில்லாதவரேயாயினும் நல்லினத்தாரென்னும் வலிய சார்பினைச்சார்ந்தவர்மேல் பகைவரது சினம்பயன்படாமற்போம்.

(க-து.) நல்லாரினத்திற்சேர்ந்திருப்பார்மேற் பகைவர் சினம் செல்லாது.

(வி-ம்.) குற்றி - சிறுகட்டை;ஈண்டுக், கொல்லையில் வளர்ந்து தரையளவாகவெட்டப்பட்டுவிட்ட வேர்க்கட்டை. ஒல்காமைக்குஇங்குக்கெடாமைப்பொருளுரைக்க. "ஒல்கியஎழில்"1 என்றவிடத்துக் "கெட்டஅழகு" என்று நச்சினார்க்கினியர் உரை கூறினமைகாண்க. மெல்லியரென்றது அறிவு, ஆற்றல், பொருள்,நிலை முதலியவற்றிற் சிறியர் என்னும் பொருட்டு.நற்சார்வு, இந்நிலைகளிற் பெரியாராயினாரது துணை.சினம், பகையின்மேற்று, செல்லாது என்பதுகடைகுறைந்து நின்றது. "தக்காரினத் தனாய்த்தானொழுக வல்லானைச், செற்றார் செயக்கிடந்ததில்"2 என்றார் நாயனார்.

(8)


1. கலித். 8 : 4

2. குறள் 45 : 6.

179 நிலநலத்தால் நந்திய நெல்லேயோல் தத்தங்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினஞ் சேரக் கெடும்.

(பொ-ள்.) நிலநலத்தால் நந்தியநெல்லேபோல் தத்தங் குலநலத்தால் ஆகுவர்சான்றோர் - நிலத்தின் வளத்தினாற் செழித்துவளர்ந்த நெற்பயிரைப்போல் தத்தம் இனநலத்தால் நல்லோர் மேன்மேலும் சான்றாண்மையுடையோராவர்; கலநலத்தைத் தீவளி சென்றுசிதைத்தாங்கு - மரக்கலத்தின் வலிமையைக்கொடியபுயற்காற்றுச் சென்று கெடுத்தாற்போல,சான்றாண்மை தீ இனம் சேரக் கெடும் - தீயஇனத்தவரைச் சேர அதனால் அச் சான்றாண்மைஅழியும்.

(க-து.) இயல்பாகவேநல்லோராயிருப்பவர்க்கும் நல்லினச் சேர்க்கைநன்மையையும் தீயினச் சேர்க்கை தீமையையும்உண்டாக்கும்.

(வி-ம்.) நிலத்துக்கு நலமாவதுவளம். குலம்-கலந்து பழகுவோர் இனம். இச்செய்யுள்சான்றோரைக் கருத்திற்றாதலின் அவர் மேலுமேலுஞ்சான்றோராகுவரென்று முதற்பகுதிக்குஉரைக்கப்பட்டது. கலத்துக்கு நலமாவதுஅலைகளாற்றாக்குறாது செல்லும் உறுதி.உவமைக்கேற்றபடி பொருளின் எழுவாய் தீயினம்ஆகவேண்டுமாயினும், அதனாற் கருத்துக்குஇழுக்கின்றென்க. இது, "உவமப்பொருளையுணருங்காலை, மரீஇய மரபின் - வழக்கொடு படுமே"1என்பதனாற் றெளியப்படும்.

(9)


1. தொல். உவம. 21,

180மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர்; - புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே,
எறிபுனந் தீப்பட்டக் கால்.

(பொ-ள்.) புனத்துவெறி கமழ்சந்தனமும் வேங்கையும் வேம் எறிபுனம் தீப்பட்டக்கால் - காட்டினுள்ள மணங் கமழ்கின்றசந்தனமரமும் வேங்கைமரமும் பெருங்காற்றுவீசுகின்ற அக்காடு தீப்பிடித்தால் வெந்து அழிந்துவிடும்; மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்தஇனத்தால் இகழப்படுவர்-ஆதலால், சான்றோர் தம்மனநலத்தால் மாசிலராயினும் தாம் சேர்ந்த தீயஇனத்தினால் பெருமை குன்றிப் பழிக்கப்படுவர்.

(க-து.) சான்றோர் மனநலம் நன்குடையராயினும்தீயினச் சேர்க்கையால் பெருமை குறைந்து கெடுவர்.

(வி-ம்.) இகழப்படுவர்சான்றோரென்று கொள்க. இகழப்படுவரென்னுங்குறிப்பால் இனம் தீயினத்துக்காயிற்று.மணங்கமழ்தல் வேங்கைக்குங்கொள்க. "வேங்கைகமழுமெஞ் சிறுகுடி"1 என்றார் பிறரும்.வேமே என்னும் ஏகாரம் இரக்கம் புலப்படுத்திற்று.எறிதலென்னும் ஆற்றலாற் பெருங்காற்றெனப்பட்டது.காடுகளிற் காற்றினால் மரங்கள் உராய்ந்துதீப்பற்றுதல் இயல்பாகலின் எறிதல் என்பதுஇப்பொருட்டாயிற்று. புனத்துச் சந்தனமும்வேங்கையும் அப்புனம் எறிபுனமாய்த்தீப்பட்டக்கால் வேமென்னும் பொருட்டுப் புனம்மறித்துங் கூறப்பட்டது. உம்மைகள் எண்ணொடு உயர்வுசிறப்பும் ஆம்.

(10)


1. குறுந். 355.



2011/6/16 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/6/15 Venkatram Shrinivas <see...@gmail.com>

2011/6/14 Venkatram Shrinivas <see...@gmail.com>
<p style="font-family:GIST-TMOTChanakya;font-size:9pt;font-weight:normal;line-height:20pt;text-decoration:none;color:



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 18, 2011, 2:36:22 AM6/18/11
to மின்தமிழ்
பெருமை 
 
பொருட்பால்
19. பெருமை
[நல்லினத்தாரது பெருந்தன்மை உணர்த்துவது]
181ஈத லிசையா திளமைசே ணீங்குதலால்
காத லவருங் கருத்தல்லர்; - காதலித்து
ஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்.

(பொ-ள்.) ஈதல் இசையாது - உலகவாழ்க்கையானது வறியவர்க்கு ஒன்று விரும்பியபடிகொடுத்தல் இயலாததாயிருக்கின்றது; இளமை சேண்நீங்குதலால் காதலவரும் கருத்தல்லர் - இளமைநிலையும் நெடுந்தொலைவில் நீங்கிப் போதலால்காதலன்புடைய மனைவியரும் வரவர விருப்புடையரல்லர்;காதலித்து ஆதும் நாம் என்னும் அவாவினைக்கைவிட்டு போவதே போலும். பொருள்-ஆதலின்உலகவாழ்க்கையிற் பற்றுக்கொண்டு நாம் ஆக்கமுறுவோம் என்னும் அவாவினைக் கைவிட்டுத்துறவுநெறியில் ஒழுகுவதே பயன்றருவதாகும்.

(க-து.) பற்றில்லாமலிருந்தலேபெருந்தன்மையாகும்.

(வி-ம்.) சேண் நீங்குதல் மீண்டும்பெறற்கருமை தேற்றி நின்றது. காதலவர்: ஒரு சொல்;‘இளமை நீங்குதலால்' என்னும் குறிப்பால்,சிறப்பாக அது மனைவியர் மேல் நின்றது. உம்மை,இறந்தது தழீஇயது. கருத்தென்றது ஈண்டு விருப்பம்.போலும் என்பது ஒப்பில் போலி.1

(1)


1. தொல். இடை. 30.


182இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
பொச்சாந் தொழுகுவர் பேதையார்; - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர்.

(பொ-ள்.) இல் சார்வின்ஏமாந்தேம் - மனை வாழ்க்கைச் சார்பினால்களித்திருக்கின்றேம்; ஈங்கு அமைந்தேம் -உலகத்தில் அதற்கு வேண்டிய பொன் முதலிய எல்லாநலங்களிலும் நிறைத்திருக்கின்றேம்; என்று எண்ணிபொச்சாந்து ஒழுகுவர் பேதையர் - என்று கருதிஅறிவிலா மாந்தர் அவற்றின் பொய்ம்மையை மறந்துஒழுகுவர்; அச் சார்பு நின்றனபோன்று நிலையா எனஉணர்ந்தார் என்றும் பரிவது இலர் - ஆனால்,அச்சார்புகள் நிலைத்திருப்பனபோற்காணப்பட்டுப் பின் நிலையாமற்போம் என்றுஉணர்ந்த மேலோர் எக்காலத்திலும் அவற்றைவிரும்புதலின்று யொழுகுவர்.

(க-து.) எல்லா உலக நலங்களும்ஒருங்கமைந்த காலத்தும் அவற்றிற் பற்றின்றிநிற்றலே பெருந்தன்மை யாகும்.

(வி-ம்.) ஏமாத்தல் - மிகஇன்புறுதல்; அமைதல் - குறைவின்றியிருத்தல்.இரண்டும் தெளிவின் பொருட்டு இறந்த காலத்தில்வந்தன. "இயற்கையுந் தெளிவுங்கிளக்குங்காலை"1 என்பதனால் இதுமுடிக்கப்படும். பேதையாரென்றதனானும் உணர்ந்தார்என்றதனானும் அவ்வவற்றின் உயர்வு தாழ்வுகள்விளங்கின. என்றும் என்றார், தம் இளமைப்பருவத்தும் அனைத்து நலங்களும் வாய்ந்த காலத்தும்பரிவதில ரென்றற்கு.

(2)


1. தொல். வினை. 48.

183மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைக்குப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாங் காரணம்
இன்றிப் பலவு முள.

(பொ-ள்.) மறுமைக்கு வித்துமயலின்றிச் செய்து சிறுமை படாதே நீர் வாழ்மின்அறிஞராய்-மறுமைக்கு வித்தாகிய அறச்செயலைவாழ்க்கையில் மயங்குதலில்லாமற் செய்துஎஞ்ஞான்றுந் துன்புறாமல் நீவிர் அறிஞராய்வாழுங்கள்; ஏனென்றால், நின்றுழி நின்றே நிறம்வேறாம் - நின்ற நிலையில் நின்றே உடம்பினஇளமையொளி வேறாய் மாறும்; காரணமின்றிப் பலவும்உள - அன்றியுங் காரணமில்லாமலே பல இடையூறுகளும்வாழ்க்கையில் உள்ளன.

(க-து.) மறுமை நினைவோடு ஒழுகுதலேபெருந்தன்மையாகும்.

(வி-ம்.) வித்தென்றது,வித்துப்போன்றதை; அறிஞராய் வாழ்மின் என்க.நம்மையறியாமலே நிறம் வேறாம் என்றற்கு‘நின்றுழி நின்றே' யென்றும் இம்மைச்செய்காரணம் இன்றாயினும் என்றற்குக்‘காரணமின்றி, யென்றுங் கூறினார். மற்று, உளவாதல்உம்மைச் செய் காரணத்தாலென்று கொள்க பலவும்என்றது. "அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும்கேடும்."1

(3)


1. நாலடி. 18 : 3

184உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது.

(பொ-ள்.) உறைப்பு அரு காலத்தும்ஊற்றுநீர்க் கேணி இறைத்து உணினும் ஊர் ஆற்றும்என்பர்-மழை துளித்தலில்லாத காலத்திலும் ஊற்றுநீரையுடைய சிறிய நீர்நிலை இறைத்துஉண்ணுவதாயினும் ஊரிலுள்ளாரனை வர்க்கும் உதவும்என்று பெரியோர் கூறுவர், கொடைக் கடனும் - அதுபோலவறியோர்க்கு ஒன்று கொடுத்தலாகிய கடமையும்,சாயக்கண்ணும் பெரியார்போல் மற்றையார்ஆயக்கண்ணும் அரிது - தமது நிலைமை குறைவானகாலத்தும் பெரியோர் மேற்கொள்ளுதல்போலப்பெரியரல்லாதார் தமது நிலைமை நிறைவடைந்தகாலத்தும் மேற்கொள்ளுதல் அரிதாகும்.

(க-து.) நிலைமை குறைந்த காலத்தும்பிறர்க்கு இயன்றது உதவ முற்படுதலேபெருந்தன்மையாகும்.

(வி-ம்.) அருமை இரண்டிடத்தும்இன்மைமேற்று, கேணி என்பது மணற்பரப்பில்இயல்பாக அமையும் ஊற்றுடைய சிறிய நீர்நிலை.தொல்காப்பிய வுரையிற் "சிறுகுளம்"1எனப்பட்டது.கொடைக்கடனும் அரிது என்க. பெரியாரியல்பைஉவமையுடன் உரைக்குங்கால் மற்றையாரியல்பும்உடனுரைக்கப்பட்டது.

(4)


1. தொல் : எச். 4. நச்.

185உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
1செய்வர் செயற்பா லவை.

(பொ-ள்.) உறுபுனல் தந்து உலகுஊட்டி-நீருள்ள காலத்தில் மிக்க நீர் தந்துஉலகுயிர்களை உண்பித்து, அறுமிடத்தும் கல் ஊற்றுழிஊறும் ஆறேபோல் - நீர் வறளுங் காலத்தும்தோன்றுகின்ற ஊற்றினிடத்தில் ஊறியுதவும்ஆறேபோல், செல்வம் பலர்க்கு ஆற்றி-உள்ளகாலத்திற் பொருளைப் பலர்க்கும் உதவிசெய்து,கெட்டு உலந்தக் கண்ணும் சிலர்க்கும் ஆற்றிச்செய்வர் செயற்பாலவை - அப் பொருள் கெட்டுநிலையழிந்த காலத்தும் மேன்மக்கள்,சிலர்க்கேனும் உதவிகள் செய்து தாம்செய்தற்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருப்பர்.

(க-து.) எந் நிலையிலுந் தங்கடமைகளைச் செய்தலே பெரியோர் தன்மையாகும்.

(வி-ம்.) கல்லும ஊற்றெனவினைத்தொகையாகக் கொள்க. பலர்க்குமெனவும்,சிலர்க்கேனுமெனவுந் தந்துரைக்க. யாண்டுஞ்செயற்பாலவை செய்தலே பெரியோரியல்பாதலின்,பலர்க்காற்றி, சிலர்க்காற்றி என்ற பின்னும்‘செய்வர் செயற்பாலவை' என ஆசிரியர்முடித்துக்காட்டினார். இதனால், உதவுதலென்பது எந்நிலையிலுஞ் செயற்பாலதாங் கடமையாதலும்பெறப்பட்டது.

(5)


1. நாலடி. 15 : 7, 16 : 3.

186பெருவரை நாட! பெரியோர்கட் டீமை
கருநரைமேற் சூடேபோற் றோன்றும்; - கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.

(பொ-ள்.) பெரு வரை நாட - பெரியமலைகளையுடைய நாடனே!. பெரியோர்கண் தீமைகருநரைமேல் சூடேபோல் தோன்றும் -மேன்மக்களிடத்தில் உண்டான குற்றம் சிறந்தவெள்ளையெருதின்மேல் இட்ட சூடுபோல் விளங்கித்தெரியும்; கருநரையைக் கொன்றன்ன இன்னா செயினும்- அச் சிறந்த வெள்ளை எருதினைச் சூடிடுதலே யன்றிக்கொன்றாற்போன்ற துன்பங்களைச் செய்தாலும்,சிறியார்மேல் ஒன்றானும் தோன்றாக் கெடும் -கீழ்மக்களிடத்தில் ஒரு குற்றமாவது அவ்வாறுவிளங்கித் தெரியாமல் மறைந்துவிடும்.

(க-து.) மேன்மக்களிடம் சிறுகுற்றமும் உண்டாகாமலிருத்தல் நல்லது.

(வி-ம்.) சூட்டின் வடு நன்குதெரிதல்வேண்டி நரையெருது கூறப்பட்டது. நரை :ஆகுபெயர் : கருவென்னும் அடைமொழி முதன்மைப்பொருட்டாய்ச் சிறந்த வென்னுங் கருத்தில்நின்றது. சிறியோர் மிக்க கொடுமைசெய்தாராயினுமென்றற்குக் ‘கருநரையைக்கொன்றன்ன' வென்றது, ‘கருநரைமேற் சூடு' என்றுமுற்கூறியதையே தந்தெடுத்துக் கொண்டபடி யென்க.பெரியோரை அனைவரும் விளக்கமாகத்தெரிந்திருப்பாராதலின், அவர்பாற் றோன்றுஞ்சிறு குற்றமும் விளக்கமாகத் தோன்றுவதாயிற்று.‘உயர்ந்தார்ப் படுங்குற்றமும் குன்றின்மேல்இட்ட விளக்கு"1 என்றார் பிறரும்.

(6)


1. பழமொழி. 80.

187இசைந்த சிறுமை யியல்பிலா தார்கட்
பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்.

(பொ-ள்.) இசைந்த சிறுமைஇயல்பிலாதார்கண் பசைந்த துணையும் பரிவாம் -தமக்குப் பொருந்திய சிறுமைச் செயல்களையுடையபண்பிலாதாரிடத்தில் நேயங்கொண்ட அளவுந்துன்பமேயாம்; அசைந்த நகையேயும் வேண்டாதநல்லறிவினார்கண் - மாறிய செயல்களைவிளையாட்டாகவும் விரும்பாத சிறந்தஅறிஞர்களிடத்தில், பகையேயும் பாடு பெறும் - பகைகொள்ளுதலுங்கூட மாட்சிமைப்படும்.

(க-து.) பெரியோரிடத்துப் பகைசெய்தலினுஞ் சிறியோரிடத்து நட்புச் செய்தல்பெருந்தீங்கு பயக்கும்.

(வி.-ம்.) இயல்பென்றார்,உலகியல்புக்கேற்ப வொழுகும் பெருந்தன்மையாகியபண்பை.1 பசைதல், உள்ளம் நெகிழ்ந்து சென்றுபற்றுதல். அசைந்த : வினையாலணையும் பெயர்.நகையேயும் பகையேயும் என்னும் உம்மைகள் இழிவுசிறப்பு.

(7)


188 மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்(து)
ஒன்னாருட் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம்
சலவருட் சாலச் சலமே; நலவருள்
நன்மை வரம்பாய் விடல்.

(பொ-ள்.) மெல்லிய நல்லாருள்மென்மை - மென்றன்மையுடைய மகளிரிடம்மென்றன்மையாகவும், அது இறந்து ஒன்னாருள் கூற்றுஉட்கும் உட்கு உடைமை - பகைவரிடத்தில் அம்மென்றன்மை நீங்கிக் கூற்றுவனும் அஞ்சும்மிடுக்குடைமையாகவும், எல்லாம் சலவருள் சாலச்சலமே- முழுதும் பொய்ராயனாரிடத்து மிக்கபொய்ம்மையாகவும், நலவருள் நன்மை -மெய்யியல்புடைய மேலோரிடம் மெய்ம்மையாகவும்,வரம்பாய் விடல் - அவ்வவற்றின் எல்லையாய்நடந்துகொள்க.

(க-து.) மாந்தரின் பல்வேறுநிலைக்கு ஏற்பப் பல்வேறு வகையாக உலகத்தில்நடந்துகொள்ள வேண்டும்.

(வி-ம்.) முன்னிரு வரிகள்மென்மைக்கும் ஆண்மைக்கும் பின்னிரு வரிகள்பொய்ம்மைக்கும் மெய்ம்மைக்கும் வந்தன.‘நல்லார்' என்றது, ஈண்டுச் சிறப்பாய் மகளிரையுணர்த்திற்று. "மகளிர் சாயல் மைந்தர்க்குமைந்து"1 எனப் பிறரும் இக் கருத்தியைபுகூறுமிடத்தான் அறிக. உட்கு, ஈண்டு மிடுக்கு;எல்லாம், முழுமையென்னும் பொருட்டு, நன்மை, சலம்என்பதன் மறையாக வந்த மையின் மெய்ம்மையென்றுரைக்கப்பட்டது. ‘வரம்பாய் விடல்' என்றார்,அவ்வக்குணங்களின் மேனிலையுடை யீராய் நடந்துகொள்க என்றற்கு, பொய்யற்குப் பொய்யராயொழுகுதல், அவர் திருந்தும் பொருட்டும் அவரால்தாம் ஏதமுறாமைக்கும் என்க.

(8)


1. புறம். 221 : 5.


189கடுக்கி யொருவன் கடுங்குறளை பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தார்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.

(பொ-ள்.) கடுக்கி ஒருவன்கடுங்குறளை பேசி மயக்கி விடினும் - ஒருவன் முகஞ்சுளித்துப் பிறரைப்பற்றிக் கொடிய கோளுரை கூறித்தம்மை மயக்கினாலும், மனப் பிரிப்பு ஒன்றுஇன்றித் துளக்கம் இலாதவர் - அப் பிறர்பால்மனவேறுபாடு சிறிதுமின்றி முற்கொண்டகருத்துறுதியினின்று அசைதலில்லாதவரே, தூயமனத்தார் விளக்கினுள் ஒண் சுடர் போன்றுவிளக்கினில் எரியும் ஒள்ளியதீப்பிழம்புபோன்று அழுக்கற்ற நெஞ்சுடையவராவர்.

(க-து.) பிறர் சொல்லுங்கோளுரைகட்குச் செவிகொடாமை பெருந்தன்மையாகும்.

(வி-ம்.) முகத்தின் கடுமைபுலப்படுத்துவதற்குக் ‘கடுக்கி' என்றார்;"மடித்த செவ்வாய்க்கடுத்த நோக்கின்"1என்றார் மணிமேகலையினும், மயங்கிவிடினும்என்றமையாற் சான்றோர் மயக்கினமை பெறப்படாது;ஒருவன்தான் மயங்குஞ் செயலைத் தீரநிகழ்த்தினமையே பெறப்படும். அச்செயல்முற்றினமை தெரித்தற்கு ‘விடு' என்னுந்துணிவுப்பொருள் விகுதி நின்றது. துளக்கமின்மைதூய்மையைக் காட்டுமாகலின், தூயமனத்தாரென்று மேன்மக்களின் பெருமை கூறப்பட்டது; சுடர், தூய்மைக்குஉவமம். சுடரின் ஒண்மை மனத்தின் தூய்மைக்குக்கொள்க.

(9)


1. மணிமே. 6 : 45.

190முற்றுற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர்; -அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்.

(பொ-ள்.) முன் துற்றும் துற்றினைநாளும் அறம் செய்து பின் துற்றுத் துற்றுவர்சான்றவர் - முதலில் உண்ண எடுக்குங் கவளத்தைநாடோறும் பிறர்க்கு உதவி செய்து அடுத்தகளவத்தைப் பெரியோர் உண்ணுவர்; அத்துற்று-பிறர்க்கு உதவிசெய்த அந்தக் கவளம், முக்குற்றம் நீக்கி முடியுமளவெல்லாம் துக்கத்துள்நீக்கிவிடும் - அப் பெரியோருடைய காம வெகுளிமயக்கமென்னும் மூன்று குற்றங்களையுங் கெடுத்துப்பிறவி தீருங் கால முழுமையும் அவரைத்துன்பத்தினின்று நீக்கிவிடும்.

(க-து.) முதலில் பிறரை உண்பித்துப்பின்பு தாம் உண்டு துயர் தீர்தலேபெருந்தன்மையாகும்.

(வி-ம்.) துற்றுதல்-உண்ணுதல்;ஆதலின் துற்று, ஒரு வாய் அளவு உணவுக்காயிற்று;"இகலன்வாய்த் துற்றிய தோற்றம்"1என்றார் பிறரும். முக்குற்றம் நீக்கி அதனால்துக்கத்துள் நீக்கிவிடும் என்க. முக்குற்றம்நீக்கியவளவே பிறவி தீர்தலின்றி எடுத்த வினைதீருமளவும் அஃதிருக்குமாகலின், அவ்வாறிருக்குங்கால முழுமையும் துக்கத்துள் நீக்கிவிடுமென்றார்."உதவிவரைத் தன்றுதவி"2 யாகலின்,உதவியது ஒரு கவளமாயினும் அது பெரும் பயன் றந்தது.


1. களவழி நாற். 28.

2. குறள். 11 : 5.


2011/6/17 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/6/16 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/6/15 Venkatram Shrinivas <see...@gmail.com>
<p style="font-family:G



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 18, 2011, 3:47:21 PM6/18/11
to மின்தமிழ்
தாளாண்மை 
 
பொருட்பால்
20. தாளாண்மை

[முயற்சியுடைமை உணர்த்துவது.]
191கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந்
தாளாளர்க் குண்டோ தவறு.

(பொ-ள்.) கோள் ஆற்றக்கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல் -நீர்கொள்ளுதலை நிரம்பக் கொள்ளாத ஏரியின்கீழுள்ள பயிரைப்போல், கேள் ஈவது உண்டு கிளைகளோதுஞ்சுப - தமக்கு உறவினர் கொடுப்பதை உண்டுசுற்றங்கள் சோம்பிக் கிடந்து பின் அவர்வறுமைப்பட்டபோது தாமும் வருந்தியிறப்பர்; வாள்ஆடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாளாளர்க்குஉண்டோ தவறு - வாட்கூத்து ஆடுகின்ற கூத்துப்பெண்டிருடைய கண்களைப்போல் உழலும்முயற்சியுடையார்க்கு இப் பிழைபட்ட வாழ்வுஉண்டோ?

(க-து.) ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையில்முயற்சியுடையரா யிருக்க வேண்டும்.

(வி-ம்.) உவமங்களின்கருத்துக்கள் பொருள்களின் விளக்கங்களில்வந்திருக்கின்றன. நீரை மிகுதியாகக் கொள்ளாதகுளம் முயற்சியுடைய கேளிர்க்கு உவமமாக வந்தது,அக்கேளிரின் சுற்றங்கள் சோம்பிக்கிடத்தலால் அவருக்க வருவாய் மிகுதியாகஅமையாமையின் என்க. துஞ்சுப : தொழிலின்றியிருந்துபின் இறப்பரென்னும் பொருட்டு. "உலகுதொழிலுவந்து நாஞ்சில் துஞ்சி"1"நிலமிசைத் துஞ்சினார்"2என்பனகாண்க. வாளாடு கூத்தியர் - வாட்களை இரு கைகளிலும்பிடித்து விரையச் சுழற்றித் தாமுஞ் சுழன்றுகூத்தாடும் இள மகளிர்; ஆடுமகளிருள் இவர் ஒருவகையார்; இவர் கண்கள் அஞ்ஞான்றும் மிகமுயற்சியுடையவனாய் வாள் முனைகள்மேல் விரையத்திரிந்து திரிந்து பிறழ்ந்துழலும். அவ்வாறு கருமமேகண்ணாயிருக்கும், பேரூக்கமாகிய முயற்சியுடைமைக்குஅவர் கண்கள் உவமமாகக் கூறப்பட்டன. தடுமாறுதல் -ஈண்டு, உழன்று முயலுதல்.

(1)


1. அகம். 141.

2. நாலடி. 21.

192ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்;
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.

(பொ-ள்.) ஆடு கோடு ஆகி அதரிடைநின்றதும் காழ் கொண்ட கண்ணே களிறு அணைக்கும்கந்து ஆகும். துவள்கின்ற இளங்கொம்பாகிவழியிடையே நின்ற சிறு மரமும் உள்வயிரங் கொண்டுமுற்றிய காலத்தில் ஆண் யானைகளைக் கட்டுதற்குரியகட்டுத்தறியாக உதவும்; வாழ்தலும் அன்ன தகைத்தேஒருவன் தாழ்வின்றித் தன்னைச் செயின் - ஒருவன்முயற்சியால் தன்னை ஆற்றலிற் குறைவில்லாமற்செய்து கொள்ளுவானாயின் அவன் தனது வாழ்க்கையிற்பெருமை கொள்ளுதலும் அது போன்ற தன்மையதேயாம்.

(க-து.) எளிய நிலையிலுள்ளோரும்முயற்சியால் தம்மை ஆற்றலுடையவராகச்செய்துகொள்ளல்வேண்டும்.

(வி-ம்.) வழியில் வரும் யானையைப்பாகர் அங்கே வலியதாய் நிற்பதொரு மரத்திற்கட்டுவராதலின், ‘அதரிடை' யென்றார். ‘அதரிடை ஆடுகோடாகி நின்றதும்' என்று கொள்க. இழிவுசிறப்பும்மை : கோடாகி நின்றதற்கு வந்தது.கண்ணென்றது ஈண்டுக் காலப் பொருட்டு. அணைக்கும்என்றார், அதனாற் கந்து பெருமைப்படுதலின்.தாழ்வின்றித் தன்னைச் செய்து கொள்ளலாவது,"தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை"1 யென மேற்கூறப்படுபவற்றில் தன்னைக் குறைவிலனாகச்செய்துகொள்ளலென்க.

(2)


1. நாலடி. 20 : 5.

193உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியுந் தின்னும்; - அறிவினால்
காற்றொழில் என்று கருதற்க கையினால்
மேற்றொழிலும் ஆங்கே மிகும்.

(பொ-ள்.) உறுபுலி ஊன்இரைஇன்றிஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும் - வலிமைமிக்க புலி தனக்கேற்ற இறைச்சியுணவில்லாமல்ஒரோவொருகால் சிறிய தவளையைப் பிடித்துந்தின்னும்; அறிவினால் கால் தொழில் என்று கருதற்க- ஆதலால், தமக்குரிய அறிவு மேம்பாட்டினால்,எதனையும் காலால் செய்தற்குரிய சிறுதொழிலென்றுயாரும் கருதாதிருப்பராக; கையினால்மேல் தொழிலும் ஆங்கே மிகும் - அச்சிறுதொழிலையும் பொருள் செய்தொழுகும்முயற்சியினால் உயர்ந்த தொழிலும் அதிலிருந்தேபெருகிவரும்.

(க-து.) சிறு தொழிலையும்முயற்சியோடு திருத்தமாகச் செய்ய வேண்டும்.

(வி-ம்.) உவமத்திற் புலிக்குஉடம்பு வலிமை கூறப்பட்டமையின், பொருளிலும் அறிவுவலிமை காட்டுதற்கு ‘அறிவினால்' என்றார்.ஊனிரையின்றி யென்றமையின், தேரையின் ஊன்சிறுமை பெறப்பட்டது. தேரை தின்று பசியாறிய ஒருசிறு தணிவிலிருந்து பேரிரை பற்றும் வன்மைபுலிக்குண்டாதலின், சிறு தொழிலையும் பொருள்செய்தொழுகும் முயற்சியிலிருந்தே மக்கட்குஉயர்தொழிலும் பெருகிவருமென்பது கருத்து. கையினால்முயற்சி யொழுக்கத்தாலென்க.

194இசையா தெனினும் இயற்றியோ ராற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
கண்டல் திரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப!
பெண்டிரும் வாழாரோ மற்று.

(பொ-ள்.) கண்டல் திரை அலைக்கும்கானல் தண்சேர்ப்ப - தாழையை அலைகள்சிதைக்கின்ற கடற்கரைச் சோலையையுடையகுளிர்ந்த துறைவனே!, இசையாது எனினும் - மேற்கொண்டகாரியம் ஊழ்வினையினால் எளிதிற் கூடிவராதாயினும், இயற்றி ஓர் ஆற்றால் - அவ்வூழ்இப்பிறவியில் வழி செய்துவிட்ட ஒரு வகையினால்,அசையாது நிற்பதாம் ஆண்மை - தளராமல் நின்றுமுயல்வதே ஆடவர்க்குரிய ஆண்மைப் பண்பாகும்;இசையுங்கால் பெண்டிரும் வாழாரோ மற்று - மற்று, ஊழ்கூட்டுதலால் ஒன்று எளிதிற் கூடி வருமாயின்பெண்மக்களும் அதனை முடித்துப் பெருமையடையாரோ!

(க-து.) ஊழ் கூட்டாதவிடத்தும்,அரிய காரியங்களைச்செய்தலில்தளர்வின்றியிருந்து முயலும் ஆண்மையேதாளாண்மையாகும்.

(வி-ம்.) இயற்றிய வென்னும் அகரம்தொக்கது; ஊழ் இயற்றித் தந்த என்பது பொருள்;இயன்ற ஒரு வகையினால் என்பதன் கருத்தும் இது.நிற்பது - நின்று முயல்வது; இசையுங்கால் :வினையெச்சம். வாழாரோ என்பது ஈண்டு முயன்றுபெருமையடையாரோ வென்னுங் கருத்தினின்றது; இஃதுஅறி பொருள் வினா. 1 ஊழ்கூட்டுங்காற் சிறிதுமுயன்று ஒன்று நிறைவேறப்பெறுதல் பெண்டிர்க்கும்இயலுமென்றமையின், அஃதன்று தாளாண்மை யென்னும்ஆடவர் பண்பு என்பது இவ்வாற்றாற் பெறப்படும்,மற்று : வினைமாற்றென்க.

(4)


1. தொல். கிளவி. 13.

195நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லள வல்லாற் பொருளில்லை; - தொல்சிறப்பின்
ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்.

(பொ-ள்.) நல்ல குலமென்றும் தீயகுலமென்றும் சொல் அளவு அல்லால் பொருள் இல்லை -நல்ல குலமென்றும் கெட்ட குலமென்றும் உலகத்திற்பிறப்பின் மேலேற்றிச் சொல்வது வெறுஞ்சொல்லளவே யல்லால் அதற்குப் பொருளில்லை.தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை என்று இவற்றான் ஆகும் குலம் - குலம்என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையினையுடையசெல்வத்தால் மட்டுமன்று, தவம், கல்வி, முயற்சி எனஇவை தம்மாலெல்லாம் உண்டாவதாகும்.

(க-து.) தவம் கல்வி ஆள்வினைமுதலியவற்றில் முயற்சியுடையாரே பிறரால்நேயங்கொள்ளுதற்குரிய உயர்குலத்தோராவர்.

(வி-ம்.) சொல்வது என ஒரு சொல்வருவிக்க. தொல் சிறப்பின் என்பதைத் தவம்முதலியவற்றிற்குங் கொள்க. பிறப்புப்பற்றியகுடியினும், தவவுணர்வு கல்வியறிவு ஆள்வினையியல்புபொருளாக்கம் என்பன நெடுங்காலமாக விளங்கி உரைபயின்றுவரும் பழம் பெருஞ் சிறப்பினவாகலின்,தொல் சிறப்பின் என்னும் அடையடுத்து வந்தன.பொருளுக்கு ஒண்மை, நல்வழியான் ஈட்டப் பட்டமை.உயர்குலத்துக்கு முதன்மையான காரணங்கள் தவமுங்கல்வியும் ஆள்வினையுமாகலின், ‘இவற்றான் ஆகுங்குலம்' என்று உம்மை கொடாது முடித்ததுமன்றிப்பொருளை ஒன்றோவென்னும் இடைச்சொற் கொடுத்தும்வேறு பிரித்தார். "தத்தங் குறப்பிற்பொருள்செய்குநவும்"என்பதனால்ஈதுணரப்படும். குலம் என்றது. குழு ; உள்ளமேம்பாடுடையோர் குழுவென்க.

(5)


1. தொல். இடை. 2.

196ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்
குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.

(பொ-ள்.) ஆற்றுந் துணையும்அறிவினை உள் அடக்கி ஊக்கம் உரையார்உணர்வுடையார் - நுண்ணுணர் வுடையோர் ஓர்அருஞ்செயலைச் செய்து முடிக்குமளவும் தமதுஅறிவின்றிறத்தை மனத்தில் அடக்கித் தம்முயற்சிகளைப் பிறர்க்குச் சொல்லார்; ஊக்கம்உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார் - மேலும்அவர், தமது ஆற்றலைத் தம்கண் முதலியஉறுப்புக்களாற் பிறர் ஆராய்ந்து தெரிந்துகொள்ளுதற்கேற்ற அறிவு விளக்க முடையவர்;குறிப்பின் கீழ்ப்பட்டது உலகு - உலகம் அத்தகையதிறமையான தாளாண்மை யுடையாரின் குறிப்பின்வழிப்பட்டது.

(க-து.) முயற்சிகள்உள்ளுணர்வோடும் அறிவு விளக்கத்தோடும்நடைபெறுதல் வேண்டும்.

(வி-ம்.) அறிவென்றது திறமைப்பொருட்டு, "வழிபடுவோரை வல்லறி தீயே"1என்றதும் அது, ஊக்கம் இரண்டனுள், முன்னதுமுயற்சியையும் பின்னது அம்முயற்சியின்வீற்றினையும் உணர்த்தும். எடுத்த காரியத்தில்வேறின்றி நிற்பவரென்றற்கு ‘உணர்வுடையா'ரென்றார். ‘ஊக்கம் உறுப்பினால் ஆராயும்ஒண்மையுடையார்' என்றற்குப் பிறர் முயற்சிகளைமட்டும் அவர்தம் செய்கைக் கூறுகளாலும் முகத்தின்உறுப்புக்களாலும் ஆராய்ந்து தெரிந்து கொள்ளும்அறிவு மாட்சிமை யுடையாரெனவும் பொருளுரைத்து அதனைஇரட்டுற மொழிதலாகக் கொள்க. உலகம்அத்தகையோர் கருத்தின்வழி இயங்கிக் காரியம்எளிதில் நிறைவேறப்பெறுதலின்,அவ்வொண்மையுடையார் குறிப்பின் கீழ்ப்பட்டதுஉலகு என்றார்.

(6)


1. புறம். 10

197சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.

(பொ-ள்.) சிதலை தினப்பட்டஆலமரத்தை - கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை,மதலையாய் அதன் வீழ் ஊன்றியாங்கு - அதன் விழுதுஅதனைத் தாங்கும் வன்மையுடையதாய் ஊன்றிநின்றாற்போல, குதலைமை தந்தை கண் தோன்றில் -தன் தந்தையினிடத்தில் தளர்ச்சி தோன்றினால்,தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும் - அவன்பெற்றெடுத்த புதல்வன் பாதுகாக்க அது நீங்கும்.

(க-து.) தந்தையின் தளர்ச்சியைக்காத்தற்கு மைந்தன் முயற்சியுடையனா யிருத்தல்வேண்டும்.

(வி-ம்.) சிதலை யென்பதற்கு உருபுவிரித்துக் கொள்க. மதலை - வன்மையுடையதென்னும்பொருளது. மற்று : அசை. மறைப்ப என்றார்,முயற்சியாலுண்டாகும் நன்மக்கள். ‘தந்தையின்தளர்ச்சியை அவர்க்குத் தோன்றாதபடி செய்துமகிழ்வித்தலின் "தூங்குசிறை வாவலுறைதொன்மரங்க ளென்ன, ஓங்கு குலம் நையஅத னுட்பிறந்தவீரர், தாங்கல்கட னாகும்"1 என்றார்பிறரும்.

(7)


1. சிந். காந்தரு. 6.




2011/6/18 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 18, 2011, 3:59:56 PM6/18/11
to மின்தமிழ்
198ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானந் தலைவருவ செய்பவோ? - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை யவர்.

(பொ-ள்.) யானை வரிமுகம்பண்படுக்கும் வள் உகிர் நோன் தாள் அரிமாமதுகையவர் - யானையினறு புள்ளிகளையுடைய முகத்தைப்புண்படுத்தவல்ல கூரிய நகங்கள் பொருந்திய வலியகால்களையுடைய சிங்கத்தைப் போன்ற முயற்சிவலிமை யுடையோர், ஈனமாய் இல் இருந்து இன்றிவிளியினும் - நிலை குறைவாகி வீட்டில் அலுவலில்லாதுதங்கி வருவாயின்றி இறக்க நேரினும், மானம்தலைவருவ செய்பவோ - குற்றம் உண்டாகக்கூடியசெயல்களைச் செய்வார்களோ?

(க-து.) முயற்சியுடையார்க்குஎந்நிலையிலும் பழிப்புக்குரிய தீச்செயல்கள்செய்யும்படி நேராது.

(வி-ம்.) தலைவருவ : பெயர், மதுகை,ஈண்டு-முயற்சி வலிமை. ‘வள்ளுகிர் நோன்றாள்'என்னும் உவமைக்கேற்பப் பொருளிற் கூரறிவும் தக்கசெயல்வாய்ப்புமுடைய மதுகையவர் எனவும், பொருளில்‘இல்லிருந்து இன்றி விளியினும்' என்றதற்கேற்பஉவமையிற் குகையில் தங்கி உணவின்றி இறக்கினும்எனவும் உரைத்துக்கொள்க. "தோல்வற்றிச்சாயினும் சான்றாண்மை குன்றாமை"1பெறப்பட்டது.

(8)


1. திரிகடு. 27.

199தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும்
உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.

(பொ-ள்.) தீம் கரும்பு ஈன்றதிரள் கால்உளை அலரி தேன் கமழ் நாற்றம்இழந்தாங்கு - இனிப்பாகிய கருப்பங் கழி தோற்றியதிரண்ட தாளையுடைய பிடரிமயிர் போன்ற மலர்தேனோடுகூடி மணக்கும் நறுமணத்தை இழந்தாற்போல்,பெயர் பொறிக்கும் பேராண்மை இல்லாக்கடை - தன்புகழைச் சான்றோர் எழுதி நிலைநிறுத்துதற்குரியஅரிய முயற்சித்திறம் இல்லாவிட்டால், ஓங்கும்உயர்குடியுட் பிறப்பின் என் ஆம் - மிக்கஉயர்குடியுட் பிறத்தலால். மட்டும் யாது பயனுண்டு?

(க-து.) அரிய முயற்சித்திறம்இல்லாதபோது உயர் குடிப் பிறப்பும் இனியதோற்றமும் இருத்தலால் மட்டும் பயனில்லை.

(வி-ம்.) உளையென்றது ஈண்டுக்குதிரை சிங்கம் முதலியவற்றின்பிடரிமயிர்போல் மென்மையும் செறிவுமுடையகுஞ்சம் என்றற்கு. இதனாற் சாயலுடைய தோற்றம்பெறப்பட்டது. அலரி "முல்லை அரும்பவிழ்அலரி"1 என்புழிப்போலப் பொதுவாகமலரென்னும் பொருட்டு, ‘தேங்கமழ் நாற்றம்'என்பதில் தேன் பெயர்க்கும் நாற்றம்ஆண்மைக்கும் ஒக்கும். ‘கரும்பு ஈன்ற' என்றார்,உயர்குடியுட் பிறந்தும் என்றற்கு. ‘நாற்றம்இழந்தாங்கு ஆண்மையிலாக்கடை' யென்க.பொறித்தல், நூலிலுங் கல்லிலுமாம்.

(9)


1. முல்லைப். 9-10.

200பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.

(பொ-ள்.) பெருமுத்தரையர் பெரிதுஉவந்து ஈயும் கருனைச் சோறு ஆர்வர் கயவர் -முயற்சியில்லாத கீழ் மக்கள், பெருமுத்தரையர்என்பார் மிக மகிழ்ந்து அளிக்குங் கறிகளோடு கூடியஉணவை உண்டு வாழ்நாட் கழிப்பர்; கருனையைப் பேரும்அறியார் நனிவிரும்பும் - கறிகளைப் பேர்தானும்அறியாத முயற்சியாளர்கள் மிகவும் விரும்புகின்ற,தாளாண்மை நீரும் - தம் முயற்சியுடைமையாற்கிடைத்த நீருணவும், அமிழ்தாய் விடும் -அவர்க்கத் தேவருணவாக மாறி மெய்யின்பந் தருதல்உறுதி.

(க-து.) தன்முயற்சியால் உண்டானதுநீருணவேயாயினும், அஃது அமிழ்த ஆற்றல் உடையதாய்நலம் பயக்கும்.

(வி-ம்.) பெருமுத்தரைய ரென்போர்,இச் சிறப்புப் பெயருடன் இச்செய்யுளியற்றியஆசிரியர் காலத்தில் ஈகையும் செல்வமும் வாய்ந்துபுகழுற்று விளங்கிய ஒருசார் உயர்குடும்பத்தினராவர். "நல்கூர்ந்தக் கண்ணும்பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவாதார்"என்று இந்நூலில் மேலும்1 இவரது மாட்சிகூறப்படுகின்றது. பிறர் தரும் சோறு ஆர்வார் கயவர்என்றபடி. இடைவிடாத முயற்சியினால் நல்ல உணவும்உண்பதற்கு நேரம் வாயாதவ ரென்றும் கருமமேகண்ணாயினார் உயர் உணவிற் கருத்திருத்தாரென்றும் உணர்த்துதற்குக் ‘கருனையைப் பேரும்அறியார்' என்று முயற்சியாளரைக் குறித்தார். அவர்நனி விரும்பும் தாளாண்மை நீரும் என்க. உம்மை :இழிவு சிறப்பு. நீரென்றது புல்லரிசிச் சோற்றில்ஊறிய நீர். விடும் : துணிவுப் பெருளுணர்த்திற்று.

(10)


1. நாலடி. 30 : 6


2011/6/19 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/6/18 Venkatram Shrinivas <see...@gmail.com>

2011/6/17 Venkatram Shrinivas <see...@gmail.com>

(வி-ம்.) இகழப்படுவர்சான்றோரென்று கொள்க. இகழப்படுவரென்னுங்குறிப்பால் இனம் தீயினத்துக்காயிற்று.மணங்கமழ்தல் வேங்கைக்குங்கொள்க. "வேங்கைகமழுமெஞ் சிறுகுடி&




--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 19, 2011, 2:57:29 PM6/19/11
to மின்தமிழ்
சுற்றந் தழால் 
 
பொருட்பால்
21. சுற்றந்தழால்
[உறவினர் நீங்கிவிடாதபடி அவரைத் தழுவியொழுகுதல்.]
201 வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.

(பொ-ள்.) வயாவும் வருத்தமும்ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகன் கண்டு தாய்மறந்தாங்கு - கருவுற்றபோது தோன்றிய வேட்கைத்துன்பமும், இடையிற் கரு சுமந்து வந்த வருத்தமும்,கருவுயிர்த்த அக்காலத்தில் உண்டான இன்னலும்தாய் தன் தொடையில் மகனைக் கண்டுமறந்துவிட்டாற்போல, அசா தான் உற்ற வருத்தம் -முயற்சிகளினிடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்ததுன்பம், உசா தன் கேளிரைக் காணக் கெடும் -ஆய்ந்து சூழ்தற்குரிய தன் சுற்றத்தாரைக்கண்டவளவில் நீங்கும்.

(க-து.) முயற்சிகளினிடையேதோன்றுந் தளர்ச்சியை நீக்குதற்குஅவ்வப்போதும் ஆராய்ந்து சூழ்தற்குரியசுற்றத்தார் இன்றியமையாது வேண்டியிருத்தலின்,அவரை எஞ்ஞான்றும் தழுவி யொழுகுதல் வேண்டும்.

(வி-ம்.) ‘வயா' வென்பதைத்தொல்காப்பிய வுரையில்1"கருப்பந்தாங்கி வருத்தமுற்று, நுகரப்படும்பொருண் மேற்செல்லும் வேட்கை" என்பர்நச்சினார்க்கினியர். ஈன்றக்கால் என்பதைஈண்டு, ஈன்ற அக்கால் என்று பிரிக்க. மகனென வழக்குநோக்கி ஆண்பாலாகக் கூறினாரேனும் ஏனைப்பாலுக்கும் ஒக்கும். தான் அசாவினாலுற்றவருத்தமெனவும், தன் உசாக்கேளிரெனவும் கொள்க.

(1)


1. தொல். உரி. 73.

202அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போல்
பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.

(பொ-ள்.) அழல் மண்டு போழ்தின்அடைந்தவர் கட்கெல்லாம் நிழல்மரம் போல் -வெயிலின் அழல் மிகுந்த காலத்தில் தன்னைஅடைந்தவர்கட் கெல்லாம் ஒப்ப உதவும் நிழல்மரத்தைப்போல், நேர் ஒப்பத் தாங்கி -வறுமையின் அழல் மிகுந்த காலத்தில் தன்னைஅடைந்தவர் கட்கெல்லாம் சமம் பொருந்தக்காத்து, பழுமரம்போல் பல்லார் பயன் துயப்ப -பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள்உதவுதல்போல்1 பலரும் பயன் நுகரப் பொருள்உதவி, தான் வருந்தி வாழ்வதே நல் ஆண்மகற்குக்கடன் - தான் மேன்மேலும் பொருளீட்டும்முயற்சியால் உழைப்புடையனாய் வாழ்வதே உயர்ந்ததாளாண்மை மிக்க மகனுக்குக் கடமையாகும்.

(க-து.) மிக்க உழைபெடுத்துச்சுற்றந் தழுவி வாழ்தலே சிறந்த ஆண்மகனதுகடமையாகும்.

(வி-ம்.) உவமைக்கும் பொருளுக்கும்ஏற்பன வருவித்துக் கொள்க. நேரொப்ப என்றார்,பயனும் வேறுபாடுங் கருதாது இடரொன்றே கருதித்தாங்கி யென்றற்கு. துய்ப்ப எனப் பிறர் வினையாற்கூறினார், அவர் அத்துணை உரிமையாய் நுகருமாறுபிறர்க்குரியனாய் வாழ்தல் வேண்டுமென்பது கருதி,"என்பும் உரியர் பிறர்க்கு"2என்றார் பெருநாவலரும், வருந்தி வாழ்தலாவதுமுயற்சியின் உழைப்போடு வாழ்தல்.

(2)


1. குறள். 22 : 6.

2. குறள். 8 : 2.

203அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை
எடுக்கல மென்னார் பெரியோர்;- அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே,
தன்காய் பொறுக்கலாக் கொம்பு.

(பொ-ள்.) அடுக்கல் மலை நாட -ஒன்றன் மேலொன்றடுக்கிய மலைகளையுடைய நாடனே,தன் சேர்ந்தவரை எடுக்கலம் என்னார் பெரியோர் -தம்மைச் சேர்ந்த சுற்றத்தவரை ஆதரியோம் என்றுகூறார் பெரியோர், அடுத்தடுத்து வன்காய் பல பலகாய்ப்பினும் இல்லையே தன் காய்பொறுக்கலாக்கொம்பு - மேலுமேலும் வலிமைமிக்ககாய்கள் பலப்பல காய்த்தாலும் தன்காய்களைத்தாங்கிக் கொள்ளாத கிளைகள் உலகத்தில்இல்லையே.

(க-து.) தம்மைச் சேர்ந்தவரைஆதரித்து நிற்றலே பெருமையும் இயல்புமாகும்.

(வி-ம்.) அடுக்கலாகிய மலையென்க.‘பெரியோர் தற்சேர்ந்தவரை' என்பது ஒருமை பன்மைமயக்கம். எடுக்கலம் என்பதற்கு நிலையுயர்த்தோம்என்பது பொருள். என்னாரென்பது என்று கைவிடார்என்னுங் கருத்துடையது. வலிய காய் என்றமையாற்பெரிய காய் என்பதும் பெறப்படும். உவமையிற்காய்க்கு வலிமை கூறியது, பொருளில்தற்சேர்ந்தவரின் இன்னல் மிகுதியுணர்த்தும். பலபல என்னும் அடுக்கு மிகுதிமேற்று, எடுத்துக்காட்டுவமை.

204உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை;- நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு.

(பொ-ள்.) உலகு அறியத் தீரக்கலப்பினும் - யாவரும். அறியும்படி முழுதும் இணங்கிநேசங் கொண்டாலும், நில்லா சில பகல் ஆம்சிற்றினத்தார் கேண்மை - கீழோர் தொடர்புகள்நிலைபெறுதலில்லாதனவாய்ச் சில நாட்களேநிற்கும் : ஒற்கம் இலாளர் தொடர்பு - பிறரைத்தாங்குதலில் தளர்ச்சியில்லாதவரது தொடர்பு,நிலைதிரியா நிற்கும் பெரியோர்நெறியடையநின்றனைத்து - இயல்பாகவே தமதுபெருந்தன்மையான நிலையில் திரியாமல் நிற்கும்பெரியோர் தமக்கொரு வீடுபேற்றுநெறி வந்துபொருந்த அதன்கண் அழுந்தநின்றொழுகினாற்போன்ற தன்மையுடையது.

(க-து.) சுற்றத்தாரைத்தாங்குவோர் தொடர்பே உலகுக்கு இனிதாவது.

(வி-ம்.) நில்லா : முற்றெச்சம்.சிற்றினத்தா ரென்றது ஈண்டு, அண்டினாரைஆதரிக்கும் பெருந்தன்மையில்லாத கீழோரென்க.உலகில் அவரே பலராதலின் அவரது கேண்மையும்நில்லா வெனப் பன்மையாற் கூறப்பட்டது. பிறரைஆதரிக்கும் வாய்ப்பு நேர்தலைப் பெரியோர் ஒருநற்பேறாகக் கருதி மகிழ்வராதலின் நெறியடையநின்றனைத்து என உவமிக்கப்பட்டது; இது‘சிறப்பின் தீராக் குறிப்பின்'1 வந்தது,ஆல் : அசை.

(4)


1. தொல். உவம. 10.

205இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்க ளாகற்பா லார்.

(பொ-ள்.) இன்னர் - இவர்இத்தகையவர், இனையர் - இவர் இவ்வளவினர்; எமர் -இவர் எம்மைச் சேர்ந்தவர், பிறர் - இவர்பிறரைச் சேர்ந்தவர், என்னுஞ் சொல் என்னும்இலராம் இயல்பினால் - என்னுஞ் சொல் சிறிதும்இலராகிய தன்மையினால், துன்னித் தொலைமக்கள்துன்பம் தீர்ப்பாரே - நிலையிழந்த மக்களின்இன்னலைத் தாமே அவரையடைந்து தீர்த்து வைப்பவரே,யார்மாட்டும் தலை மக்களாகற்பாலார் -அனைவரிடத்தும் மேன்மக்களாகக் கருதப்படும்இயல்புடையவராவர்.

(க-து.) அனைவர்க்கும் ஒப்பஇடுக்கண் தீர்த்து ஆதரிப்பவரே அனைவர்க்குந்தலைவராதற்குரியர்.

(வி-ம்.) அடைந்தாரது இடதுதீர்த்தலொன்றே கருதுவாரென்பது முதலிரண்டுஅடிகளின் கருத்து. ‘என்னும்' என்பது சிறிதும்என்னும் பொருட்டாதல், "என்னும் பனியாய்"1என்பதனாலுங் காண்க தொலை மக்கள் - நிலைதொலைந்த மக்கள் ; என்றது ஆதரவில்லாதவரென்றற்கு. ‘தீர்ப்பாரே' யென்னும் ஏகாரம்பிரிநிலை தலைமக்கள் - தலைமையுடைய மக்கள்;அயலாரும் அவரைத் தமக்குத் தலைவராகக்கொள்வரென்றற்கு ‘யார்மாட்டு' மென்றார்.

(5)


1. பரிபா. 6 : 81.

206பொற்காலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போற் கிளைஞர்மாட்டு
எக்கலத் தானு மினிது.

(பொ-ள்.)பொற்காலத்துப் பெய்தபுலிஉகிர் வான் புழுக்கல் - பொன்னாலானஉண்கலத்தில் இட்டுவைத்த புலியின்நகத்தைப்போன்ற சிறந்த சோற்றை, அக்காரம்பாலொடு - சர்க்கரையோடும் பாலோடும், அமரார்கைத்து - மனம் பொருந்தாதவரிடத்திலிருந்து,உண்டலின் - உண்ணுதலைவிட, உப்பு இலிப்புற்கை -உப்பும் இல்லாததான புல்லரிசிக்கஞ்சியை,உயிர்போல் கிளைஞர்மாட்டு - உயிர்போன்றசுற்றத்தாரிடமிருந்து, எக் கலத்தானும் இனிது -எந்தக் கலத்தினாலும் உண்ணுதல் நன்று.

(க-து.) உள்ளன்புடைய சுற்றத்தார்எளியவராயினும் அவரே இன்பந் தருபவராவர்.

(வி-ம்.) புழுக்கல்,அவித்தெடுக்கப்பட்ட சோறு, அமராரென்பதுஉள்ளன்பில்லாதவரை, உப்பும் என இழிவுசிறப்பும்மை கொள்க. உயிர் போற்கிளைஞரென்றார். உள்ளன்புடையவரென்னும் பொருட்டு,உண்ணுதல் என்னுஞ் சொல் இசையெச்சத்தால் தொக்குநின்றது. உதவும் பொருளே நன்மை தருவதன்று,உதவுவோர் சால்பே நன்மை தருவதாமாகலின் இங்ஙனங்கூறினார். "உதவிவரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து"1 என்றார்நாயனாரும், மேல்வருஞ் செய்யுளும் இக்கருத்துடையது.

(6)


1. குறள். 11 : 5

207நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதா ரில்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்;- கேளாய்,
அபராணப் போழ்கின் அடகிடுவ ரேனுந்
தமராயார் மாட்டே இனிது.

(பொ-ள்.) நாள்வாய்ப் பெறினும்தம் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெம் கருனைவேம்பாகும் - காலத்தில் பெற்றாலும் தம்உறவாகாதவர் வீட்டின் ஒப்புரவோடு கூடிய சூடானகறியுணவு வேப்பங்காயை ஒத்தது; கேளாய் - நீ கேள்;அபராணப் போழ்தின் அடகு இடுவரேனும் தமராயார்மாட்டே இனிது - பிற்பகற்போழ்தில் கீரையுணவுஇடுவராயினும் உறவினரானோரிடமேஇனிமையாயிருக்கும்.

(க-து.) சுற்றத்தா ருதவியே இன்பந்தரும்.

(வி-ம்.) நாள் என்றது, நாளின்முதற்காலம்; முற்பகல்.1 நள்ளாதார் -நண்ணாதவர்; அன்பினால் அணுக்க மில்லாதவரென்க.உதவும் எண்ணத்தோடு கூடியதாயினுமென்றற்கு‘வேளாண்மை' என்னுஞ் சொற்கொடுத்துக்கூறப்பட்டது. ‘நாள்வாய்' என வந்தமையின்வெங்கருனை யென்னுமிடத்து ‘வெம்' என்பது வெப்பமுணர்த்திற்று. கருனை - கறிகளோடு கூடிய உணவு. ‘கருனை'யென்பதும் ‘அடகு' என்பதும் முறையே உணவின் உயர்வுதாழ்வு குறித்தற்கு வந்தன. பெறினும் இடுவரேனும்என்னும் உம்மைகள் எதிர்மறைப் பொருளன.

(7)


1. நாலடி. 17 : 6.

208முட்டிகை போல முனியாது வைகலுங்
கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;
சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டா ரெனப்படு வார்.

(பொ-ள்.) முட்டிகை போல முனியாதுவைகலும் கொட்டியுண்பாரும் குறடுபோல் கைவிடுவர் -கம்மாளரின் சம்மட்டிபோல் நாடோறும்வெறுத்தலில்லாமல் தம்மை இடித்திடித்து வயிறுபிழைப்பாரும் நேரத்திற் குறடு போற் கைவிட்டுவிடுவர்; சுட்டுக்கோல்போல எரியும் புகுவர் நட்டாரெனப்படுவார் - ஆனால் உறவானவரெனப் படுவோர்அங்ஙனம் நேரத்திற் கைவிடாமல் உலையாணிக்கோல்போல் தம்முடன் எரியும் புகுந்து உடன்துன்புறுவர்.

(க-து.) உறவினர் உற்ற நேரத்திற்கைவிடாதவராதலின் அவரைத் தாமும் என்றுந் தழுவிநிற்றல் வேண்டும்.

(வி-ம்.) முட்டிகைபோல வென்றார்,பிறரை இச்சகத்தால் வருத்தி இடித்துண்ணுதலின்.கொட்டி என முட்டிகையின் வினையினாலேயேகூறப்பட்டது. "கொட்டு வினைக்கொட்டிலும்"1என்றது காண்க ஈண்டு உண்ணுதலென்பது, வயிறுபிழைக்கைக்கு வந்தது. உலைக்கூடத்தில் இரும்புமுதலிய பொருள்களைத் தீயில் இடும்போது குறடு அதனைவிட்டுவிடும்; உலையாணியென்னுஞ் சுட்டுக்கோல்உடன்புகும். ஆதலின், கைவிடுவோர்க்கும்கைவிடாதோர்க்கும் முறையே அவை இரண்டும் உவமமாகவந்தன. கம்மாளர் கருவிகளே செய்யுளில் ஒரு சேரஉவமமாக வந்தமை நயமுடைத்து.

(8)


1. பெருங். மகத. 4, 16

209நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ! - இறுமளவும்
இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால்.

(பொ-ள்.) நறுமலர்த் தண் கோதாய்- சிறந்த மலர்களாற் றொடுக்கப்பட்ட குளிர்ந்தமாலையை யணிந்த மாதே, நட்டார்க்கு நட்டார்மறுமையும் செய்வதொன்று உண்டோ - உறவினர்க்குஉறவினர் மறுமையிலும் செய்வதொரு நன்மை உண்டோ?;இறுமளவும் இன்புறுவது இன்புற் றெழீஇ அவரோடு துன்புறுவதுன்புறாக்கால் - இறக்கும் வரையிலும் அவ்வுறவினர்இன்புறுவன தாமும் இன்புற்று எழுச்சியோடிருந்துஅவரோடு துன்புறுவன துன்புறாவிடின்.

(க-து.) சுற்றந் தழுவுதலால் துன்பம்வரினும் அதுவே செய்யத்தக்கது.

(வி-ம்.) அவரோடு துன்புறாக்கால்மறுமையுஞ் செய்வதொன்றுண்டோ வென்க. எழீஇயென்றார். கிளர்ச்சியோடு தொடர்ந் தென்னும்பொருட்டு, "ஒள்வாள் தானை உருத்தெழுந்தன்று,"1என்புழிப்போல.

(9)


1. புறப். வெ. 37.

210விருப்பிலா ரில்லத்து வேறிருந் துண்ணும்
வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம்; - விருப்புடைத்
தன்போல்வா ரில்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போ டியைந்த அமிழ்து.

(பொ-ள்.) விருப்பு இலார் இல்லத்துவேறு இருந்து உண்ணும் வெருகு கண் வெம் கருனை வேம்புஆகும் - அன்பில்லாதவர் வீட்டில் தனியே இருந்துஉண்ணுகின்ற, பூனைக் கண்போன்ற ஒளிமிக்க சூடானபொறிக்கறியுணவும் வேப்பங் காய்போல வெறுப்புத்தரும்; விருப்புடைத் தன் போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை என்போடு இயைந்த அமிழ்து -அன்புடைய தன்னொத்தார் வீட்டில் உண்ணுகின்ற விளங்கும் நீரையுடைய குளிர்ந்த புல்லரிசிக்கஞ்சியும் உடம்போடு பொருந்திய அமிழ்தமாகும்.

(க-து.) சுற்றத்தாரிற் சிலர் எளியநிலையினரேனும் அவர் அன்புடையவராகலின் அவர்தழுவுதற்குரியர்.

(வி-ம்.) ‘வெருகு' உயிர்த்தொடர்மொழியாதலின் வல்லெழுத்து இரட்டிற்று.1உடனிருத்தி உணவிடாமையின் "வேறிருந்து" எனப்பட்டது.தன் போல்வாரென்றார், தன்னை மதிப்பாரென்னும்பொருட்டு. நீர்க்குத் ‘தயங்கும் என்னும் அடை,புல்லரிசிதானும் போதிய தின்றி வெறும் நீருணவாய்விளங்குதலையும், புற்கைக்குத் ‘தண்' என்னும் அடை,அக் கஞ்சி தானுஞ் சூடின்றி ஆறியிருத்தலையுங்குறிப்பானுணர்த்தும். புற்கையும் என இழிவுசிறப்பும்மை கொள்க. என்பு : ஆகுபெயராய்உடம்புக்காயிற்று. "என்பும் உரியர்பிறர்க்கு"2 என்புழிப் போல. எளியஉணவாயினும் அன்பென்னும் அமிழ்தோடு கூடியதாகலின்அதுவே உடம்புக்கு ஊட்டந் தருமென்றற்கு ‘என்போடியைந்த அமிழ்' தென்றார். இச்செய்யுட்கருத்துக்கள் முன்னும் வந்தன.3

(10)


1. தொல். குற்றிய. 6

2. குறள். 8 : 2.

3. நாலடி. 21 : 6, 7.



2011/6/19 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 21, 2011, 12:32:51 AM6/21/11
to மின்தமிழ்
நட்பாராய்தல் 
 
பொருட்பால்
22. நட்பாராய்தல்
நட்புச் செய்தற்குரியாரை அவர் கல்வியறிவு ஒழுக்க முதலியவற்றால் ஆராய்ந்து கொள்ளுதல்.
211கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்
குருத்திற் கரும்புதின் றற்றே;- குருத்திற்
கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுர மிலாளர் தொடர்பு.

(பொ-ள்.) கருத்துணர்ந்துகற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும் குருத்தின்கரும்பு தின்றற்று - கல்வியின் பயன் தெரிந்துஉரிய நூல்களைக் கற்றுத் தெளிந்த மேலோருடையநட்பு எஞ்ஞான்றும் குருத்திலிருந்து கரும்புதின்றாற் போன்றது; குருத்திற்கு எதிர்செலத்தின்றன்ன தகைத்து என்றும் மதுரம் இலாளர்தொடர்பு - கல்வியின் இனிமையில்லாத கீழோருடையதொடர்பு என்றும் கரும்பை அதன் குருத்திற்கு நேரேசெல்லும்படி அடியிலிருந்து தின்று சென்றாற்போன்றதன்மையுடையது.1

(க-து.) கற்றார் நட்பு மேன்மேலும்இன்பம் தந்து செல்லும்.

(வி-ம்.) குருத்தின் என்னும்ஐந்தனுருபு எல்லைப் பொருளது. குருத்திலிருந்து கரும்புதின்னுதல் மேன்மேலும் இன்பந் தந்துசெல்லுதற்கும், அடியிலிருந்து கரும்பு தின்னுதல்வரவர இன்பங் குறைந்து செல்லுதற்கும் உவமம்.‘எஞ்ஞான்றும்' ‘என்றும்' என்பன இடருற்றநிலையிலும் என்பதைக் குறிப்பா லுணர்த்திநின்றன. ஏகாரமும் அரோ வென்பதும் அசை.கரும்புவமைக் கேற்பக் கல்வியறிவை ஆசிரியர்இறுதியில் மதுரமெனக் கூறி மகிழ்ந்தார்.

(1)


1. நாலடி. 14 : 8.

212இற்பிறப் பெண்ணி இடைதிரியா ரென்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது, - பொற்கேழ்
புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட!
மனமறியப் பட்டதொன் றன்று.

(பொ-ள்.) பொன்கேழ் புனல் ஒழுகப்புள் இரியும் பூ குன்ற நாட - பொன்னின் நிறம்அருவியிற் பொருந்தி வருதலால் பறவைகள் அஞ்சிநீங்குகின்ற பொலிவினையுடைய மலைநாடனே,இல்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்நல்புடை கொண்டமையல்லது மனம் அறியப்பட்டதொன்றன்று - குடிப்பிறப்புக் கருதி இவர் இடையில்வேறு படார் என்பதொரு சிறந்த வகையை உட்கொண்டுநட்புச் செய்ததல்லது மனம் அறிந்த உண்மைவேறொன்றனால் அன்று.

(க-து.) நட்பாராய்தற்குக்குடிப்ப்றிப்பொன்றும் சிறந்த காரணமாகும்.

(வி-ம்.) உயர்குடியிற்பிறந்தார்க்கு இயல்பாகவே பெருந்தன்மைஉண்டாகலின், ‘இற்பிறப்பெண்ணி' யென்றார்;எண்ணியென்றது, ஈண்டு நம்பியென்னுங்குறிப்புடையது.நற்புடை - நற்காரணம் என்னும் பொருட்டு. "உறுகுறைமருங்கின்"என்புழிப்போல, நட்புச்செய்தமைக்கு இற்பிறப்பென்பதல்லது வேறுமனமறிந்த காரணம் ஒன்றின்று என்பது கருத்து;இவ்வாற்றால் இற்பிறப் பொன்றும் நட்புக்குஇலக்கணமாம் என்று அதன் மேன்மைஉணர்த்தியவாறாம். கேழ் ஒழுகவென்க. ஒழுகுதல்,ஈண்டுத் தொடர்புற்று வருதல், பொற்றுகளுஞ்செந்தேனும் ஏற்று வருதலால் அருவி பொன்னின்விளக்கம் பெற்றமையின், அவ்விளக்கங் கண்டுபறவைகள் அஞ்சி நீங்கினவென்பது.

(2)


1. முருகாற். 173.

213யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;- யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.

(பொ-ள்.) யானையனைவர் நண்பு ஒரீஇ- யானையை ஒத்த இயல்புடையாரது நேயத்தை நீக்கி,நாய் அனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் -நாயை ஒத்த இயல்புடையாரது நேயத்தைத் தழுவிக்கொள்ளுதல் வேண்டும்; ஏனென்றால், யானைஅறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் - யானைபலநாள் பழகியிருந்தும் தன்னை வளர்த்த பாகனையேகுற்றங்கண்டு கொல்லும்; எறிந்த வேல் மெய்யதாவால் குழைக்கும் நாய் - ஆனால் நாயோ தன்னைவளர்த்தவன் சினத்தால் தன்மேல் வீசிய வேல்தன் உடம்பில் உருவி நிற்க அன்பினால் அவன்பால்வால் குழைத்து நிற்கும்.

(க-து.) பிழை பாராட்டாதஇயல்புடையாரை அறிந்து நட்புச் செய்தல் வேண்டும்.

(வி-ம்.) அறிந்தறிந்தும் -நன்றாய் அறிந்திருந்தும்; பலகால் தனக்குஉதவிகள் செய்திருப்பதை நன்றாய்த்தெரிந்திருந்தும் என்க. மெய்யதா - உடம்பினதாக,வால் குழைத்தல் - வாலை வளைத்து ஆட்டுதல், ஈது அன்புபாராட்டுதற்கு அறிகுறி. நாய் உவமை அதன் உயர்ந்தபண்பினால் ஈண்டு உயர்வடையதாயிற்று."பெருமையும் சிறுமையும்"1 என்னும்நூற்பா உரையிற் கழியச் சிறியதாகஉவமித்ததற்குப் பேராசிரியர் இதனை எடுத்துக்காட்டினார்.

(3)


1. தொல். உவம. 19.

214பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோ டொட்டார்; பலநாளும்
நீத்தா ரெனக்கை விடலுண்டோ, தந்நெஞ்சத்
தியாத்தாரோ டியாத்த தொடர்பு.

(பொ-ள்.) பலநாளும்பக்கத்தாராயினும் நெஞ்சில் சிலநாளும்ஒட்டாரோடு ஒட்டார் - பலநாளும் அருகிலிருந்துபழகினாராயினும் மனத்திற் சில நாளாயினும்நட்புப் பொருந்தாதவரோடு தெரிந்தோர்சேரமாட்டார்; பல நாளும் நீத்தார் எனக் கைவிடல்உண்டோ தம் நெஞ்சத்து யாத்தரோடு யாத்ததொடர்பு - தமது நெஞ்சத்தில் நட்புப்பொருந்தியவரோடு பிணிப்புண்ட தொடர்பு அவர்பலநாட்கள் அருகில்லாமல் நீங்கினாரென்றுகைவிடப் படுதலுண்டோ?

(க-து.) நெஞ்சுப் பிணிப்புஉடையாரோடு நட்புச் செய்தல் வேண்டும்.

(வி-ம்.) பலநாளும் சிலநாளும்என்னும் உம்மைகள் முறையே உயர்வு சிறப்பும் இழிவுசிறப்புமாம். பலநாளும் நீத்தாரென்னுமிடத்து அஃதுஅசை. சிறந்த நட்பு, அருகில் பழகுதலாலேயே ஆவதன்று;நெஞ்சம் பொருந்துதல் முதன்மை என்றபடி."புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங்கிழமை தரும்"என்பது நாயனார்அருளுரை. கோப்பெருஞ் சோழன் - பிசிராந்தையார்,அப்பூதியடிகள் - திருநாவுக்கரசர் இவர்களின்நட்பினை ஈண்டுணர்க.

(4)


1. குறள். 79 : 5.

215கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி;- தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரும் நட்பாரும் இல்.

(பொ-ள்.) கோட்டுப்பூப் போலமலர்ந்து பின் கூம்பாது வேட்டதே வேட்டதாம்நட்பாட்சி - மரங்களிற் பூக்கும் பூக்கள் முதலில்மலர்ந்து பின் தாம் உதிரும் வரையிற்குவியாமைபோலத் தலைநாளில் உள்ளம்மலர்ந்துபின் தமது முடிவு வரையிற் சுருங்காமல் விரும்பியதுவிரும்பியதாயிருப்பதே நட்புடைமையாம்;தோட்டகயப் பூப்போல் முன் மலர்ந்து பின்கூம்புவாரை - அவ்வாறின்றி அகழ்ந்தெடுத்தநீர்நிலைகளிற் பூக்கும் இதழ்மிக்க பூக்கள்போல் தலைநாளில் மகிழ்பூத்து நாளடைவில்மனஞ்சுருங்கும் இயல்பினரை, நயப்பாரும் நட்பாரும்இல் - விரும்புவாரும் நேசிப்பாரும் உலகில் இல்லை.

(க-து.) கூடிப் பின் பிரியாஇயல்பினரே நேசித்தற்குரியர்.

(வி-ம்.) வேட்டது வேட்டதேநட்பாட்சியாம் என்று மாறுக. வேட்டதென்றது ஈண்டுவிரும்பி நேசித்ததென்னும் பொருட்டு. "உயர்ந்தவேட்டத்து உயர்ந்திசினோர்"1 என்பதுபுறம். இதழ்மிக்க நீர்ப்பூ என்னும் குறிப்பு.முதலில் தோற்றத்தால் நேயம் பெருகித்தோன்றுதல் உணர்த்தும். மலர்தலுங்குவிதலுமென்றற்கு, நேயத்தால் உள்ளம் மலர்தலுங்குவிதலும் என்று கொள்க. நயத்தல், விரும்பிமதித்தல்; நட்டல் - அணுகி நேசித்தல் என்க.

(5)


216 கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனை

1. புறநா. 214 : 6.

இடையாயார் தெங்கி னனையர்;- தலையாயார்

எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,

தொன்மை யுடையார் தொடர்பு.

(பொ-ள்.) நட்பில் -நேயமுறைமையில், கடையாயார் கமுகு அனையர் -கீழோர் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்;இடையாயார் தெங்கு அனையர் - இடைத்தரமானவர்தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்; ஏனைத்தலையாயார் தொன்மையுடையார் தொடர்பு - ஏனைஉயர்ந்தோரெனப்படும் பழைமை கருதுவாரது நட்பு, எண்அரு பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே - மதிப்புமிக்க பனை மரத்தின் இயல்புபோன்று நேயம்ஊன்றிய போது ஊன்றியதேயாம்.


(க-து.) மேன்மேல் உதவிகளில்லாதபோதும் நட்புக் குறையாதவரிடமே நேயங்கொள்ளுதல்வேண்டும்.


(வி-ம்.) நெடுகக் கவனித்தலால்பாக்குமரமும், இடையிடையே கவனித்தலால் தென்னைமரமும் முதலில் விதையிட்ட அளவோடு பனைமரமும்வளர்ந்து பயன்றருவனவாதலால், அவ்வாறுகவனித்தலுடைமையால் நேயம் நிலைபெறுவார்க்குமுறையே அவை உவமமாயின. Ôநட்பில்' என்பதைஏனையோர்க்குங் கொள்க. ஏனைத் தலையாயார் எனத்தொடர்க. அருமை , ஈண்டு மிகுதிப் பொருளதே, பனைக்குவிதை ஊன்றியதன்றி இறுதிகாறும் பிறிதேதுஞ்செய்யாமையின், Ôஇட்டஞான்றிட்டதே' எனப்பட்டது.நட்புக்குப் பழைமை கருதுதல் சிறந்தஇலக்கணமாதலின், தலையாயாரைத்தொன்மையுடையாரென்று மேலும் ஆசிரியர் விதந்துகூறினார். நட்பென்னும் உறுப்பினுள் பழைமைபாராட்டுதலை நாயனார் விதிமுகக் கூற்றுள்முதன்மைபெற வைத்து விளக்குதலும்,"நட்பிற்குறுப்புக் கெழுதகைமை; மற்றதற்,குப்பாதல் சான்றோர் கடன்"1 என்றதும்இக் கருத்தினான் என்க.


1. குறள். 81 : 2.


217கழுநீருட் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் ; - விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்.

(பொ-ள்.) கழுநீருள் கார் அடகேனும்ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் -கழுநீருட் பெய்து சமைத்த கறுத்த இலைக்கறியேனும்ஒருவன் அன்புடையதாகப் பெற்றால் அஃது அமிழ்தமாய்நன்மை தரும் ; விழுமிய குய்த் துவை ஆர்வெண்சோறேயாயினும் மேவாதார் கைத்து உண்டல்காஞ்சிரங்காய் - சிறந்த தாளிப்புப் பொருந்தியதுவைத்த கறிகளோடு கூடிய வெண்ணிறமான நெல்லரிசியுணவேயாயினும் அன்பு பொருந்தாதவர்கையிலுள்ளதாய் உண்ணுதல் எட்டிக் காய்போல்வெறுப்புத் தருவதாகும்.

(க-து.) உள்ளன்போடு உதவுவோரிடமே நட்புச் செய்தல்வேண்டும்.

(வி-ம்.) ‘கழுநீர்' என்பது அரிசிகழுவிய நீர். இலைக்கறியில் தாழ்ந்ததொன்றைக்குறித்தற்குக் ‘காரடகு ' என்றார். குறிப்பால்,முன்னைக்கீரை முதலியன ஈண்டுக் கருதப்படும். துவை,துவையலுமாம்.

218நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கா லனையார் தொடர்பு.

(பொ-ள்.) நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கு அணியராயினும் ஈக்கால்துணையும் உதவாதார் நட்பு என்னாம் நாய்க்காலின்சிறிய விரல்கள் நெருக்கமாயிருப்பதுபோல் மிகநெருக்கமுடையாராயினும் ஓர் ஈக்காலினளவும் உதவிசெய்யாதவரது நட்பு என்ன பயனுடையதாகும்?;சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும்செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு -கழனி, முழுமையும் விளைக்கும் நீர்க்காலை ஒத்தஇயல்பினரது தொடர்பு தொலைவிலுள்ளதாயினும்அதனைத் தேடிச் சென்று அடைதல் வேண்டும்.

(க-து.) உதவும் இயல்பினரேநட்புச்செய்தற்குரியர்.

(வி-ம்.) நாய்க்காற் சிறுவிரல்இழிவுக்காக வந்த உவமம். ஈக்கால், ஈ என்னும்மிகச் சிறிய பறவையினது கால் ; இது சிறுமைக்குஎடுத்துக்காட்டுவதோர் அளவு. வேண்டும் என்பது ஏவல்கண்ணிய வியங்கோள் ; உம் ஈற்றான் வந்தது.1வாய்க்காலின் இயல்பு. கழனியினிடமிருந்துஎஞ்ஞான்றுந் தான் ஓர் உதவி பெறுதலின்றாயினும்உற்ற நேரங்களில் தொலைவிலிருந்து தானேமுற்போந்து ஓடி வளம் உதவி அவ் வயல்முழுமையும்விளையச் செய்தல். நண்பரது இருப்பின்சேய்மை அவர் தொடர்பின்மேல் ஏற்றப்பட்டது.

(8)


1. சிந். 1 : 172, நச்.

219தெளிவிலார் நட்பின் பகைநன்று ; சாதல்
விளியா அருநோயின் நன்றால் - அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல
புகழ்லின் வைதலே நன்று.

(பொ-ள்.) தெளிவிலார் நட்பின்பகை நன்று - நம்பத் தகாதவரது நட்பினும் அவரது பகைநலந்தரும் ; சாதல் விளியா அருநோயின் நன்று -தீராத கொடிய நோயினும் இறத்தல் நலமாகும் ; அளியஇகழ்தலின்கோறல் இனிது - பிறரை நெஞ்சுபுண்ணாகும்படி இகழ்தலினும் அவரைக் கொல்லுதல்நல்லது ; இல்ல புகழ்தலின் வைதலே நன்று - ஒருவரிடம்இல்லாதன கூறிப் புகழ்தலினும் அவரைப் பழித்தலேநன்மையாம்.

(க-து.) நம்பிக்கையில்லாதவரிடம் நட்புச் செய்தல் ஆகாது.

(வி-ம்.) தெளிவென்பது ஈண்டுநம்பிக்கையென்னும் பொருட்டு :"தெளிந்தார்இல் தீமை புரிந்தொழுகுவார்"1என்புழிப்போல தெளிவிலார் பகையினும் நட்பில்இன்னல் மிகுதியாதலின் பகை நன்றென்றார். அவர்நட்பினால் உண்டாகும் மிக்க இன்னலை விளக்கும்பொருட்டுப் பகை நன்றென்றதல்லால்வேறில்லையாகலின், மற்று அத்தகையாரிடம்பகையுமில்லாதிருத்தலே நன்றென்க.ஏனையவற்றிற்கும் இங்ஙனங் கொள்க. அதிகாரம்நட்பாராய்தலாகலின் ஏனை மூன்றையும்முன்னதற்குஉவமமாக உதை்தலுமொன்று. ஆல், ஏ, மற்று : அசை. வைதலேஎன்பதன் தேற்றேகாரத்தைப் பகை, சாதல், கோறல்என்பவற்றிற்குங் கூட்டுதல் பொருந்தும்."பொருளே உவமம்" 2என்பதனால்இதனைக்கொள்க.

(9)


1. குறள். 15 : 3.

2. தொல். உவம. 10.

220மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇஇப் பின்னைப் பிரிவு.

(பொ-ள்.) மரீஇப் பலரோடு பலநாள்முயங்கிப் பொரீஇப் பொருள் தக்கார்க் கோடலேவேண்டும் - பல நாள் பலரோடும் சேர்ந்து ஒத்துக்கலந்து பழகிப் பொருளாகத் தக்காரையே நட்புக்கொள்ளல் வேண்டும் ; ஏனென்றால், பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇப் பின்னைப்பிரிவு - கடித்து உயிரை அழிக்கும் பாம்போடாயினும்கூடிப் பின்பு பிரிதல் இன்னாமையாகும்.

(க-து.) பலகால் நன்காராய்ந்தபின்னரே தக்காரோடு நட்புச் செய்தல் வேண்டும்.

(வி-ம்.) "ஆயந்தாய்ந்துகொள்ளாதான் கேண்மை கடைமுறை, தான்சாந் துயரந்தரும்"என்றார் நாயனார். மருவி பொருவி,பரிந்து என்பன ஈண்டு விகாரப் பட்டு அளபெடுத்தன.பொருவுதல், ஒத்தல் ; பரிதல். அறுத்தல் :பிறவினைக்கண் வந்தது ; "எருமை கயிறுபரிந்தசைஇ"2 என்புழிப்போல, ஈண்டுக்கடித்தலென்னும் பொருட்டு. பொருட்டக்காரென்றது,உண்மைத் தகுதியுடையாரை யென்க. ஏகாரத்தைப்பிரித்துக் கூட்டுக. இன்னாமை யென்பது ஈறுதொகுத்தலாய் நின்றது.

(10)


1. குறள், 80 : 2.

2. ஐங் : 10 : 5.




2011/6/20 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 22, 2011, 1:45:01 PM6/22/11
to மின்தமிழ்
நட்பிற் பிழைபொறுத்தல் 
 
பொருட்பால்
23. நட்பிற் பிழைபொறுத்தல்
நட்பினரிடத்துக் குற்றம்உண்டாயின், அஃது அறியாமையானதல் அல்லதுஊழினானதால் உண்டாதலன்றி வேறின்றாகலின்பழைமை கருதி அதனைப் பொறுத்து, அவர் நட்பினையேபாராட்டி யொழுகுதல்.
221நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

(பொ-ள்.) நல்லார் எனத் தாம்நனி விரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும்அடக்கிக் கொளல் வேண்டும் - நல்லவர் என்று தாம்பலகால் ஆராய்ந்து மிகவும் நேசித்துக்கொண்டவரைப் பின்பு ஒருகால் அவர்நல்லவரல்லாராய் பிழைபட்டாரெனினும் அதனைப்பொறுத்து அவரைத் தம்மிடமே இணக்கிக்கொள்ளல்வேண்டும் ; நெல்லுக்கு உமி உண்டு நீர்க்கு நுரை உண்டுபுல் இதழ் பூவிற்கும் உண்டு - ஏனென்றால்,பயன்படுதலுடைய, நென்மணிக்கு அதிலிருந்துநீக்குதற்குரிய உமியுண்டு, அவ்வாறே நீர்க்குநுரையுண்டு, பூவிற்கும் புறவிதழ் உண்டு.

(க-து.) உலகத்திற் குற்றமிருத்தல்இயற்கையாகலின், நண்பரிடத்து அதனைப்பாராட்டுதலாகாது.

(வி ம்.) நல்லார், உயர்ந்தஇயல்பினர்; நனிவிரும்பிக் கொள்ளல் - அணுக்கமாகநேசித்துக் கொள்ளுதல்; அல்லாரென்றது, ஈண்டுப்பிழைபட்டாரென்னும் பொருட்டு. நெல் நீர் பூவெனவந்த உவமம், மக்கள் முதன்மையாகக் கருதி உண்ணுவனபருகுவன அணிவனவான பொருள்களிலும் குறைகள்உண்டெனப் புலப்படுத்தி நின்றது. புல்லிதழ்,புன்மையுடைய இதழ் : புன்மையாவது, மணமும்நிறமுமில்லாச் சிறுமை, பூவிற்கும் என்னும் உம்மைஉயர்வொடு எச்சம்; "செஞ்சொல்லாயிற்பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்"1என்றமையின், உம்மையேற்ற சொல் இறுதியில்நின்றது.

(1)


1. தொல். இடை. 39.

222செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார்.
மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.

(பொ-ள்.) செறுத்தோறுஉடைப்பினும் செம்புனலோடு ஊடார் மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர் - நீரின் நன்மையைவிரும்பி வாழ்வோர் வயலில் அதனைக்கட்டுந்தோறும் அஃது உடைத்துடைத்துச் செல்லும்இயல்பினதாயினும் அப் புதுப்புனலோடு சினத்தல்செய்யாராய் மீண்டுமீண்டும் அதனை மடைகட்டிப்பயன்படுவர்; வெறுப்ப வெறுப்பச் செயினும்பொறுப்பரே தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு -உயர்ந்தவரென்று தாம் முன்னர் விரும்பிநட்புச்செய்து கொண்டவரது தொடர்பினைப் பின்புஅவர் வெறுத்தற்குரிய பிழைகளை வெறுப்புண்டாகும்படிசெய்தாலும் அவற்றைப் பொறுத்து மேற்கொள்வர்.

(க-து.) சிறந்த நண்பர்கள்தம்மிடம் பலகாற் குற்றஞ் செய்ய நேர்ந்தாலும்,அவர் தம் உயர்வு கருதி அவர்கள் தொடர்பினைமேற்கோடல் வேண்டும்.

(வி-ம்.) செறுத்தோரென்னும்பயில்வுப் பொருளால் மறுத்து மென்பதற்கு அடுக்குப்பொருளுரைக்கப்பட்டது. செறுத்தல், ஈண்டு மடைகட்டுதல். ஊடாமைக்கு நீரினா லுண்டாங்கிளர்ச்சியும் ஓர் ஏதுவாகவின், புதுப்புனல்நுவலப்பட்டது. செம்மை, புதுமைமேற்று; "புதுநாற்றம்செய்கின்றே செம்பூம் புனல்"1 என்புழிப்போல. வெறுப்ப வெறுப்ப என்பவற்றில் முன்னதுபெயர். "தாம் வேண்டிக் கொண்டார்"என்றார், அவர் தம் உயர்வால் தமது உள்ளம்பிணிப் புண்டமை தோன்ற. தொடர்பு என்னும் முடிபாற்'பொறுப்ப' ரென்பதற்குப் பொறுத்துமேற்கொள்வரென்று பொருளுரைத்துக் கொள்க.

(2)


1 . பரிபா. 7 : 21 - 2.

223இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ ; - நிறக்கோங்கு
உருவவண் டார்க்கு முயர்வரை நாட !
ஒருவர் பொறையிருவர் நட்பு.

(பொ-ள்.) இறப்பவே தீய செயினும்தம் நட்டார் பொறுத்தல் தகுவ தொன்றன்றோ -தம்மோடு நட்புக் கொண்டவர் மிகவுந் தீங்குகள்செய்தாலும் அவற்றைப் பொறுத்தொழுகுதல் தகுதியானதொன்றன்றோ!, நிறக்கோங்கு உருவ வண்டு ஆர்க்கும்உயர்வரை நாட - நிறமான கோங்கமலரில் அழகியவண்டுகள் சென்று ஒலிக்கின்ற உயர்ந்தமலைகளையுடைய நாடன!, ஒருவர் பொறை இருவர் நட்பு -ஒருவரது பொறை இருவர் நட்புக்கு இடம்.

(க-து.) பொறுத்தலால் நட்புவளர்தலாலும், அஃதொரு பெருந்தன்மையாதலாலும்நட்பிற் பிழை பொறுத்தல் வேண்டும்.

(வி-ம்.) நிறம், பொன்னிறம்.உருவென்பது, உருவமென ஈறுதிரிந்து வந்தது. ஒருவர்பொறுத்தலால் இருவர்க்கு நலமுண்டாதலின்ஆக்கமானதை மேற்கொள்க வென்றற்கு, "ஒருவர்பொறை இருவர் நட்" 1 பென்றார்.

(3)


1. பழமொழி. 13.

224மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தங்
கடுவிசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப !
விடுதற் கரியா ரியல்பிலரேல் நெஞ்சஞ்
சுடுதற்கு மூட்டிய தீ.

(பொ-ள்.) மடி திரை தந்திட்டவான்கதிர் முத்தம் கடுவிசை நாவாய் கரைஅலைக்கும் சேர்ப்ப - மிக்க விசையோடு வருகின்றமரக்கலங்கள் மடிந்துவிழுகின்ற அலைகள் கொழித்தவெள்ளிய கதிர்களையுடைய முத்துக்களைக் கரையிற்சிதறச்செய்யுந் துறையை யுடையாய்!, விடுதற்குஅரியார் இயல்பு இலரேல் நெஞ்சம் சுடுதற்கு மூட்டியதீ - நட்புவிடுதற்குக் கூடாதவர் இடையேநல்லியல்பில்லாதவராயின் அத்தகையோர்தமதுள்ளம் புண்படுதற்கு மூட்டியதீயாவர்.

(க-து.) கூடிப் பின்பிரியலாகாமையின், ஒருவரால் ஒருவர் உள்ளம்புண்படுமாறு நடந்து கொள்ளலாகாது.

(வி-ம்.) தந்திட்ட - தந்த ; விடுதற்கரியாரென்றார், பின் பிரியலாகாமையின்."நட்டபின் வீடில்லை;"1 என்றார்திருவள்ளுவரும். ‘நெஞ்சஞ் சுடுதற்கு மூட்டிய தீ'என்றமையின், நட்புச் செய்யப்படுவாரும்பிழைபடாமற் கருத்தாய் ஒழுகவேண்டுமென்பதுபெறப்படும்.

(4)


1. குறள். 80 : 1.

225இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் ; பொன்னொடு
நல்லிற் சிதைத்ததீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.

(பொ-ள்.) இன்னாசெயினும்விடற்பால ரல்லாரைப் பொன்னாகப் போற்றிக்கொளல் வேண்டும் - இடையே தீயன செய்தாலும்நட்புவிடுந் தன்மையரல்லாரைப் பொன்னைப்போல்மதித்துக் காத்துக்கொள்ளுதல் வேண்டும்;பொன்னொடு நல் இல் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குதலால் - ஏனென்றால்,பொன்முதலிய பொருள்களோடு சிறந்த வீட்டையும்எரித்தழிக்கும் இயல்பு வாய்ந்த தீயை நாடோறும்விரும்பித் தமது இல்லத்தில் வளர்த்தலால் என்க.

(க-து.) நண்பர் குறைகளைத் தமதுபெருங்குணத்தால் தணிவாக வைத்துக் கொண்டு அவரைப்போற்றி யொழுகல் வேண்டும்.

(வி-ம்.) பொன்னாக வென்றமையின்,மதிப்புப் பெறப்பட்டது. சிதைக்கும் இயல்புமுன்னரே உண்மையின், தெளிவு பற்றிச் ‘சிதைத்த'வென இறந்த காலத்தான் நின்றது.

226இன்னா செயினும் விடுதற் கரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப ! களைபவோ
கண்குத்திற் றென்றுதங் கை.

(பொ-ள்.) துன் அரு சீர் விண் குத்துநீள் வரை வெற்ப - அணுகுதற்கரிய சிறப்பினையுடைய,வானத்தைக் குத்தும் நீண்ட மூங்கில்களையுடையமலைநாடனே!, கண் குத்திற்றென்று தம் கை களைபவோ -தவறுதலால் தம் கண்ணைக் குத்திற்றென்று தமது கையைமக்கள் தறித்து நீக்கி விடுவார்களோ?, இன்னாசெயினும் விடுதற்கு அரியாரைத் துன்னாத் துறத்தல்தகுவதோ - ஆதலால், அறியாமையால் தீமைகள்செய்தாலும் நீக்குதற்குக் கூடாத நட்பினரைநெருங்காமற் கைவிட்டுவிடுதல் தகுந்ததாகுமோ!ஆகாதென்க.

(க-து.) தம்மைச் சேர்ந்தோர்ஒருகால் தீமைகள் செய்யினும் அவரை உடனேகைவிட்டுவிடாமல் அணைத்துக் கொள்ளல்வேண்டும்.

(வி-ம்.) ‘துன்னாமல்' என்பதுஈறுதொக்கு நின்றது. ‘துன்னருஞ்சீர்' என்பதைமலைநாடனுக்குக் கொள்க. விண் குத்தும் வெற்பென்க.கை நட்புக்கு உவமமாதல் "உடுக்கை யிழந்தவன்கைபோல்"1 என்னுஞ் சான்றோர்மொழிகளிற் காண்க.

(6)


1. குறள். 79 - 8.

227இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர் ; கலந்தபின்
தீமை எடுத்துரைக்குந் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரிற் கடை.

(பொ-ள்.) இலங்கு நீர்த்தண்சேர்ப்ப - விளங்குகின்ற நீரினையுடைய கடலின்குளிர்ந்த துறைவனே! . இன்னா செயினும் கலந்துபழிகாணர் சான்றோர் - நட்புச் செய்தபின்நண்பர் கொடுமைகள் செய்தாலும் சான்றோர்அவர்பாற் குற்றங் காணார் ; கலந்தபின் தீமைஎடுத்துரைக்கும் திண் அறிவு இல்லாதார் தாமும்அவரின் கடை - நட்புச் செய்தபின் நண்பருடையகுற்றங்களை எடுத்துப் பேசுகின்ற, உறுதிவாய்ந்தஅறிவில்லாதவர் தாமும் அந்நண்பரைப்போற்கடைப்பட்டவரேயாவர்.

(க-து.) நண்பர்பாற்குறைகாண்போர் தாமுங் குறையுடையவரேயாவர்.

(வி-ம்.) ‘திண்ணறிவில்லாதார்'என்றார். பொறுமையிழத்தலின். குற்றஞ் செய்யும்நண்பரைவிடத் தாம் குற்றமில்லாதவ ரென்பதற்குஅடையாளங் காணாமையின் ‘தாமும் அவரிற் கடை'என்றா

228ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்
நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால்! - காதல்
கழுமியார் செய்த கறங்கவி நாட!
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.

(பொ-ள்.) ஏதிலார் செய்ததுஇறப்பவே தீது எனினும் நோதக்கது என் உண்டாம்நோக்குங்கால் - நண்பரல்லாத அயலார் செய்ததுமிகவுந் தீங்குடைய தென்றாலும் அதன் காரணத்தைஆராயுமிடத்து ஒன்று அறியாமையான் அல்லதுஉரிமையான் அல்லது ஊழினான் என்று பெறப்படுதலின்அதன்கண் மனம் வருந்தத்தக்கது யாதுண்டு?, கறங்குஅருவி நாட - ஆதலால், ஒலிக்கின்றமலையருவிகளையுடைய நாடனே, காதல் கழுமியார் செய்தவிழுமிதாம் நெஞ்சத்துள் நின்று - அன்புமிகப்பொருந்திய நண்பர் செய்துவிட்ட தீங்குஎவ்வாற்றானும் மனம் வருந்தத்தக்கதாகாமல்நெஞ்சத்தில் ஆராய்ந்து நோக்க அன்பின்சிறப்புடையதேயாகும் என்க.

(க-து.) அயலார் செய்தபெருந்தீங்கிற்கே மனம் வருந்துதற்கிடமில்லையென்றால், நண்பர்செய்தது இனியதாகுமன்றிஇன்னாததாகல் யாங்ஙனம் என்பது.

(வி-ம்.) ‘கழுமுதல்' மிகப்பொருந்துத லென்னும் பொருட்டு: "கழுமிற்றுக்காதல்"என்பதன் நச். உரை காண்க.செய்தது என்னும் ஈறு தொக்கு நின்றது. நெஞ்சத்துள்நின்று என்றார், நெஞ்சத்துள் நினைய என்னும்பொருட்டு. நிற்க வென்னும் எச்சம் நின்று எனத்திரிந்து வந்தது. நண்பர் செய்தது தீங்கேயாயினும்அவர் முன் செய்த நன்மைகளை நினைய நினையத்தீங்கும் இனியதாய் மாறித் தோன்றுமாகலின்,‘நெஞ்சத்துள் நின்று விழுமிதாம்' எனப்பட்டது.இதனால், நட்பிற் பிழை பொறுக்கும் முறைஇன்னதென்பது பெறப்படும்.

(8)


1. சிந். 7 : 314

229தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தா ராயின், அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல்.

(பொ-ள்.) தமர் என்று தாம்கொள்ளப்பட்டவர் தம்மைத் தமரன்மை தாம்அறிந்தாராயின் - நண்பர் என்று தாம் நட்புக்கொண்டவரிடத்து இடையே நண்பராகாத் தன்மையைத்தாம் அறிந்தால், அவரைத் தமரினும் நன்குமதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக்கொளல் -அவரை நண்பரினும் மிகுதியாகப் போற்றி அவரதுநண்பரல்லாத நிலையைப் புறத்தே தூற்றாமல்தமக்குள் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.

(க-து.) நட்பிற் பிழைபடுவாரைத்தமது போற்றுதலால் நல்லராமாறு காத்துக்கொள்ளுதல் வேண்டும்.

(வி-ம்.) ‘கொள்ளப்பட்டவர்தம்மை' என்பதற்கு ஏழாவதன் பொருள் கொள்க.தமரினும் நன்கு மதித்தல், அவர் நன்னினைவு பெறும்பொருட்டு. தம்முள் அடக்கிக் கொளல், அவர்பிழைநினைவு மிகாமைப் பொருட்டு தமர், தம்மவர் ;ஈண்டுத் தம்மவ ரென்னும் உரிமைக்குரியநண்பரென்பது.

230 குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்
மறைமகாவா விட்டவன் செல்வுழிச் செல்க,
அறைகடல்சூழ் வையம் நக.

(பொ-ள்.) குற்றமும் ஏனைக் குணமும்ஒருவனை நட்டபின் நாடித் திரிவேனல் - குற்றமும்மற்றைக் குணமும் ஒருவனை நட்புச் செய்தபின்அவனிடம் தேடிக் கொண்டு திரிவேனாயின், நட்டான்மறை காவாவிட்டவன் செல்வுழிச் செல்க - நட்புக்கொண்டவனுடைய மறைகளைத் தன்னுட்பொதிந்துவையாமல் வெளியிட்டுவிட்ட தீயோன்செல்லும் தீக்கதிக்கு நான் செல்வேனாக ; அறைகடல்சூழ் வையம் நக - அன்றியும் ஒலிக்குங் கடல் சூழ்ந்தஉலகம் என்னை இகழ்வதாக.

(க-து.) நண்பரிடங் குற்றங்காண்டல் பெரும் பிழையாகும்.

(வி-ம்.) குணத்தோடு ஒப்பிட்டுக்குற்றங் காண்டலின், குணமுங் கூறப்பட்டது. நட்பின்அருமை யறிந்தோன் வஞ்சினங் கூறு முறையில் இச்செய்யுள் இயற்றப்பட்டிருக்கின்றது."அருமறைகாவாத நட்பைப்"1பிறரும்இகழ்ந்தனர். காவாமல் என்பது ஈறுதொகுத்தலாய்நின்றது. நட்பிற் பிழைகாணுங் கொடுமையின் மிகுதி,ஏனைப் பெருங்குற்றங்களோடு ஒப்புமை கூறிவிளக்கப்பட்டது.

(10)


1. திரிகடு. 55.




(7)





2011/6/21 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 23, 2011, 9:55:42 AM6/23/11
to மின்தமிழ்
கூடா நட்பு 
 
பொருட்பால்
24. கூடாநட்பு

(பொருந்தாத நட்பினியல்பை விளக்குவது.)
231செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றம் கிடப்பார், - கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட!
தங்கரும முற்றுந் துணை.

(பொ-ள்.) கறைக் குன்றம் பொங்குஅருவி தாழும் புனல்வரை நல் நாட - கரிய மலைகள்பொங்கும் அருவிநீர் ஒழுகப்பெறுகின்றநீரெல்லையையுடைய சிறந்த நாடனே! செறிப்பு இல்பழங்கூரை சேறு அணையாக இறைத்து நீர் ஏற்றும்கிடப்பர் தம் கருமம் முற்றுந்துணை - கட்டுக்கோப்புப் பிரிந்த பழங்கூரையைடைய வீட்டிற்சேற்றையே அணையாகக் கொண்டு, ஒழுகும் நீரைஇறைத்தும் தம்மேல் ஏற்றும் தமது காரியம்முடியுமளவும் மக்கள் வருந்திக் கிடப்பர், (அதுபோற்பொறுக்க முடியாத குற்றங்களையுடைய பொருந்தாநண்பரிடம் தம் காரியம் நிறைவேறுமளவு மட்டும்நல்லோர் மிக்க இடர்களோடு தொடர்புகொண்டிருப்பர்.)

(க-து.) கூடாநட்பினரை அகங்கலந்தநேயத்துக்கு உரியராக்காது விலக்குதல் வேண்டும்.

(வி-ம்.) கூரை, கூரை வீடு.கிடப்பரென்னும் குறிப்பு,இடர்ப்பாட்டோடிருத்தல் உணர்த்தும். ‘கறை'நிறம் உணர்த்துதல், "கறைமிட றணியிலும்"1என்பதனுரையிற் காண்க. உவமம் பிறிது பொருள்புலப்படுத்தி நின்றமையின் இது, ‘பிறிது மொழித'லென்னும் அணி.

(1)


1. புறம். 1

232 சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறந்தக்காற் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்காற் சீரிலார் நட்பு.

(பொ-ள்.) வால் அருவி நாட -வெண்ணிறமான மலையருவிகளையுடைய நாடனே!, சீரியார்கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் மாரிபோல்மாண்ட பயத்ததாம் - தக்கோர் நட்பு மிக்கமேம்பாடுடையதாய் மழைபெய்தாற் போற் சிறந்தபயன் உடையதாயிருக்கும் ; மாரி வறந்தக்காற்போலும் சிறந்தக்கால் சீரிலார் நட்பு.தகுதியில்லாதார் நட்பு மிகுந்தால் மழைபொய்யாதொழிந்தாற்போல் வாழ்க்கைவெறித்திருக்கும்.

(க-து.) கூடா நட்பினாற் பயன்சிறிதுமிராது.

(வி-ம்.) மழைபெய்யாவிடின் வளம்இல்லாமையோடு வெயிலும் உறுத்து நிற்றல்போல்,கூடாநட்பினாற் பயனில்லாமையோடு இன்னலும்மிகுதியா யிருக்குமெனக்கொள்க. தக்கார் உதவிக்குமாரியை உவமை கூறினார். அது கைம்மாறறியாக்கடப்பாடுடையதாகலின். "மாரியன்ன வண்மையிற்சொரிந்து"1 என்றார் பிறரும். கூடாநட்பினரது நேயம் பலரது நேயமாய்ப்பெருகினாலென்றற்குச் ‘சிறந்தக்கால்'எனப்பட்டது.

(2)


1. புறம். 396 : 16.

233 நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றல் - நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்து ளொன்று.

(பொ-ள்.) நுண்ணுணர்வினாரொடு கூடிநுகர்வுடைமை விண்ணுலகே ஒக்கும் விழைவிற்று - நுட்பஉணர்வுடையாரோடு கலந்து பழகி யின்புறுதல்விண்ணுலகத்தின் இன்பமே போலும் விரும்பப்படும்மேன்மையினையுடையது ; நுண் நூல் உணர்விலராகியஊதியமில்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று -நுண்ணிய நூலுணர்வு மில்லாதவராகிய பயனிலாரொடுநேயங்கொள்ளுதல் நரகத்திற் சேர்தலை ஒக்கும்.

(க-து.) கல்வியும் அறிவுமில்லாதகூடாநட்பினரோடு சேர்தலாகாது.

(வி-ம்.) நுண்ணுணர்வென்றுஒன்றிலும் நுண்ணூலுணர்வென்று மற்றொன்றிலும்விதந்தமையால், ஈரிடத்தும் இரண்டுங் கொள்க.என்னை? இரண்டும் இயைந்தன்றி மாட்சியுறாமையின்என்க. நூலுணர்வுமிலராகிய வென இழிவு சிறப்பும்மைதொக்கு நின்றது, கல்வியும் அறிவுமுடையாரை விண்ணுலகின்பம் உடையராகவே கருதுமியல்பு, இந்நூலுள்முன்னும்"1 வந்தது. "தேவ ரனையர்புலவர்"2என்றார் பிறரும். ஆல் : அசை. (3)


1. நாலடி. 14 : 7.

2. நான்மணி. 76.

234பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும் - அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட !
பந்தமி லாளர் தொடர்பு .

(பொ-ள்.) அருகெல்லாம் சந்தனநீள்சோலைச சாரல் மலைநாட -பக்கங்களிலெல்லாம் நீண்ட சந்தனச்சோலைகளின் சாரலையுடைய மலைநாடனே!, பந்தம்இலாளர் தொடர்பு பெருகுவது போலத் தோன்றிவைத்தீப்போல ஒரு பொழுதும் செல்லாதே நந்தும் -பிணிப்பான நட்பில்லாதவரது தொடர்புவைக்கோலிற் பற்றிய தீப்போல் முதலிற்பெறுகுவதுபோலத் தோன்றிப் பின்பு சிறிது நேரமும்நிலைத்திராமற் கெடும்.

(க-து.) கூடா நட்பினரது நேயம்உள்ளப் பிணிப் பற்றதாகலின் விரைவில்நிலையாமற் கெடும்.

(வி-ம்.) போலியாகலின்பெருகுவதுபோலத் தோன்றிற்று. ஒரு பொழுது மென்றது,ஈண்டுச் சிறிது நேரமும் என்னும் பொருட்டு. சாரல்தண்ணிய நீர்த்துளிகளோடு கூடிய இனிய தென்றல்.

235 செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக் கொண் டோட்டலும் - மெய்யாக
இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும்.

(பொ-ள்.) செய்யாத செய்தும் நாம்என்றலும் - பிறர் செய்யாத செயல்களை யாம் செய்துமுடிப்பேம் என்று வீறு கூறுதலும், செய்தவனைச்செய்யாது தாழ்த்துக்கொண் டோட்டலும் - தன்னாற்செய்தற்குரியதை உடனே செய்து முடிக்காமற் காலந்தாழ்த்துக்கொண்டு நாளை ஓட்டுதலும், மெய்யாகஇன்புறும் பெற்றி இகழ்ந்தார்க்கு - உண்மையில்இன்பம் உறுதற்குரிய இயல்புகளைப் பொருள்செய்யாதிருத்தலும் உடையார்க்கு, அந்நிலையேதுன்புறும் பெற்றி தரும் - அம் மனப்பாங்கே அவர்துன்புறுதற்குரிய நிலைமைகளை வருவிக்கும்.

(க-து.) வீம்பு பேசுதல், சோம்பல்கொள்ளுதல், பொருள் செய்யாதிருத்தல் என்பனதுன்பந்தருதலின், அப் பண்புகளைத் தமக்கியல்பாகஉடைய கூடா நட்பினரோடு கூடாதிருத்தல் வேண்டும்.

(வி-ம்.) செய்யாத, பிறராற்செய்ய முடியாதன : பெயர். செயல் தாழ்ந்து நாள்ஓடுதலின், ஓட்டலுமெனப் பட்டது. பொருளல் லவற்றைப்பொருளென் றுணரும் மருளை மறுத்தற்கு‘மெய்யாக' என்றார். அந்நிலையே என்றார், துனபம்உறுவித்தற்குப் பிற வேண்டா என்றற்கு.

(5)


1. குறள். 36 : 1

236 ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார்
கருமங்கள் வேறு படும்.

(பொ-ள்.) ஒரு நீர்ப் பிறந்துஒருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையைஆம்பல் ஒக்கல்லா - ஒரு குளத்து நீரில் தோன்றிஒன்றாய் வளர்ந்தாலும் மணம்வீசும் இயல்புடையகுவளைமலர்களை ஆம்பல் மலர்கள் ஒவ்வா ;பெருநீரார் கேண்மை கொளினும் நீர் அல்லார்கருமங்கள் வேறுபடும் அதுபோலப் பெருந்தன்மையுடையாரது நட்பைப் பெறினும் அத்தன்மையில்லாதாருடைய செயல்கள் வேறாகவே நிகழும்.

(க-து.) கூடா நட்பினர் எவ்வளவுபழகினாலுந் தஞ் சிறுமைகளை விடாராகலின்அத்தகையவரோடு நேயங்கொள்ளலாகாது.

(வி-ம்.) குவளையென்றது, ஈண்டுநறுமணங்கமழுஞ் செங்கமழுநிர் மலர்."கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ்குவளை" 1யென்றார் பிறரும். வேறுபடும்என்றது, தாழ்வாகவே நிகழுமென்னும் பொருட்டு.

(6)


1. சிந். 1 : 227

237 முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.

(பொ-ள்.) சிறுமந்தி முற்பட்டதந்தையை நெற்றுக் கண்டன்ன விரலால் குற்றிஞெமிர்த்திட்டு முற்றல் பறிக்கும் மலைநாட -இளங்குரங்கு, பயற்றங்காயின் நெற்றைக்கண்டாற்போன்ற தன் விரல்களால் தன் எதிர்வந்ததந்தையின் கையைக் குத்தி விரியச்செய்து அதுவைத்திருந்த கனியைப் பறித்துக் கொள்கின்றமலைகளையுடைய நாடனே!, ஒற்றுமை கொள்ளாதார் நட்புஇன்னாது - அகங்கலந்த நேயங்கொள்ளாதாரது நட்புதுன்பமுடையதாகும்.

(க-து.) உள்ளம் ஒன்றுபடாதகூடாநட்பினரோடு நேயங்கொள்ளலாகாது.

(வி-ம்.) முற்றல் - செங்காய் -சிறுமந்தியென்றது ஈண்டுக் குரங்கின் குட்டியை ;மந்தி, பெட்டையை உணர்த்தாமற் பொதுவினின்றது.தந்தை : பொதுப்பெயர். ஞெமிர்தல் புறத்தில்மட்டுங் கலந்து அகங்கலவாத வேறு பாட்டியல்பைப்புலப்படுத்தும் பொருட்டு ‘ஒற்றுமை கொள்ளாதா'ரென்றார். பரத்தலாதலின் ஈண்டு விரித்தலெனப்பட்டது.1 "வான் ஞெமிர்ந்து"என்பது மதுரைக் காஞ்சி.

(7)


1. மதுரைக். 243.

238 முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை
நட்டா னொருவன்கை நீட்டேனேல் - நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க
நெடுமொழி வையம் நக.

(பொ-ள்.) முட்டுற்ற போழ்தில்முடுகி என் ஆர் உயிரை நட்டான் ஒருவன் கைநீட்டேனேல் - நண்பனுக்கு இடுக்கண் உண்டானகாலத்தில் விரைந்து எனது பெறற்கரிய உயிரைநட்புச் செய்த அவ்வொருவன் கையில் நான்ஒப்படைக்கேனானால், நட்டான் கடிமனை கட்டுஅழித்தான் செல்வுழிச் செல்க - தன் நண்பனின்காவலிலுள்ள மனைவியின் கற்புறுதியை நிலைகுலைத்ததீயோன் செல்லுந் தீக்கதிக்கு யான் செல்வேனாக ;நெடுமொழி வையம் நக - அன்றியும் நிலைத்தபுகழினையுடைய உலகம் என்னை இகழ்வதாக.

(க-து.) பொருந்திய நண்பெனின்,உற்ற நேரத்தில் தன் நண்பர்க்கு உயிரையும்வழங்கல் வேண்டும்.

(வி-ம்.) முடுகி யென்றது முற்போந்தென்னுங் கருத்தினின்றது. இழந்தால் மீண்டும்பெறற்கருமை நோக்கி ஆருயிரெனப்பட்டது.நீட்டேனேல் என்றது, அவற்குரியதாக இதுகாறுந்தன்பால் வைத்திருந்ததை அவரிடம் உடனேஒப்படைக்கேனாயின் என்னுங் குறிப்பில் நின்றது.கற்பு, ஈண்டு ‘கட்டு' எனப்பட்டது; நாயனாருங்"கற்பென்னுந் திண்மை" என்றதுகாண்க.

(8)


1. குறள். 6 : 4

239 ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ ;- தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு.

(பொ-ள்.) தேன் படு நல்வரை நாட -தேன் உண்டாகின்ற உயர்ந்த மலைகளையுடைய நாடனே!நயம் உணர்வார் நண்பு ஒரீஇப் புல் அறிவினாரோடுநட்பு - இனியதறியும் பேரறிஞரது நண்பினின்றும்நீங்கிச் சிற்றறிவினாரோடு செய்யும் நட்பு, ஆன்படு நெய் பெய்கலனுள் அது களைந்து வேம்பு அடு நெய்பெய் தனைத்து - ஆனிடத்தில் உண்டாகும் நெய்யைப்பெய்திருந்த கலத்தில் அந்நெய்யை நீக்கிவேம்பின் விதையைக் காய்ச்சியெடுத்தவேப்பெண்ணெயைப் பெய்து வைத்தாற்போன்றதன்மையதாகும்.

(க-து.) இனிதறியாதபுல்லறிவினாரான கூடா நட்பினருடன் நேயஞ்செய்தலாகாது.

(வி-ம்.) ‘தேம்படு' என்னும்புணர்ச்சி முடிபு, "தேனென் கிளவி""மெல்லெழுத்து மிகினும்"1என்பவற்றான்முடிந்தது. அரோ : அசை. நயமுணர்வாரென்றார், இனியராயொழுகும் இயல்பறிவாரென்றற்குசிற்றறிவினார்க்கு அத்திறம் வாயாமையின்புல்லறிவினா ரென்று விதந்தார். ‘நட்பொரீஇ'யென்று வலித்தல் பெறாமையின், தன்வினைப்பொருள் உரைக்கப்பட்டது.

(9)


1. தொல். புள்ளி. 45 - 6.

240உருவிற் சுமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற் கமைந்தபால் நீரளா யற்றே
தெரிவுடையார் தீயினத்தா ராகுதல் நாகம்
விரிபெடையோ டாடிவிட் டற்று.

(பொ-ள்.) உருவிற்கு அமைந்தான் கண் ஊராண்மை இன்மை பருகற்கு அமைந்த பால் நீர் அளாய் அற்று - காட்சிக்கு இனியனாய் உருவமைந்த ஒருவனிடம் ஒப்புரவில்லாமை, பருகுதற்கு அமைந்த பாலில் நீர் கலந்திருந்தாற்போன்ற தன்மையதாகும். தெரிவு உடையார் தீ இனத்தா ராகுதல் நாகம் விரிபெடையோடு ஆடிவிட்டற்று - ஞானமுடையோர் தீய சார்புடையரோடு நட்புச் செய்தொழுகுதல் நாகப்பாம்பு பெட்டை விரியனோடு தவறாக இழைத்துவிட்டாற் போன்ற தன்மையுடையதாகும்.

(க-து.) ஒப்புரவும் மெய்யுணர்வுமில்லாத கூடா நட்பினருடன் கூடுதலாகாது.

(வி-ம்.) ஊரவற்கு உதவியா யொழுகுமியல்பு ஊராண்மை யெனப்பட்டது. தெரிவு, இடருற்ற நேரங்களில் ஆழ்ந்து மெய்ம்மை தெரிந்தொழுகும் அறிவு. விரியனோடு கூடிய நாகம் தன்னியல்பு மாறித் தீயதாய்க் கெடுதலின், அஃதுவமையாயிற்று. விரியனோடு நாகங் கூடினால் இறக்கும் என்ப.


2011/6/22 Venkatram Shrinivas <see...@gmail.com>

2011/6/21 Venkatram Shrinivas <see...@gmail.com>



2011/6/20 Venkatram Shrinivas <see...@gmail.com>
<div align="



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 24, 2011, 1:31:35 PM6/24/11
to மின்தமிழ்
அறிவுடைமை 
 
பொருட்பால்
25. அறிவுடைமை

(இயற்கை யறிவினை யுடையனாதல்)
241பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராது
அணங்கருந் துப்பின் அரா.

(பொ-ள்.) இளம் பிறை ஆயக்கால்திங்களைச் சேராது அணங்கு அரு துப்பின் அரா -பிறிதொன்றினால் வருத்துதலில்லாதவலிமையினையுடைய இராகுவென்னும் பாம்பு, மதியத்தைஅஃது இளைய பிறை நிலாவாய் மாறின் சேராது, பகைவர்பணிவிடம் நோக்கித் தகவுடையார் தாமேயும்நாணித் தலைச்செல்லார் காணாய் - அது போலப்,பகைவரின் தளர்வுநிலை கருதித் தகுதியானஅறிவுடையோர் தாமாகவே உள்ளமொடுங்கி அவர்மேற்செல்லுதலில்லாதவராவர்.

(க-து.) பகைவரேயாயினும் அவர் நிலைதளரின் அவர்க்கு இரக்கங்காட்டுதல் தகுதியானஅறிவுடைமையாகும்.

(வி-ம்.) பணிவு இங்ஙனந்தாழ்ச்சிப் பொருட்டாதல் "பணிவில்ஆண்மை"1 என்பதனானுங் காண்க. தகவு, ஈண்டுமேதக்க அறிவுடைமை. உம்மை : அசை.மேற்செல்லலென்பது, போர்மேற் சேறல்.பிறையென்றதோடமையாது இளம்பிறை யென மேலும்விதந்தார், சிறுமையோடு மெலிவுந் தோன்ற வென்க.காணாய் : முன்னிலை அசை, எடுத்துக்காட்டுவமை.

(1)


1. மலைபடு. 423.

242 நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்
கணிகல மாவ தடக்கம் - பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரங் கூறப் படும்.

(பொ-ள்.) நளிகடல் தண் சேர்ப்ப -பெரிய கடலின் குளிர்ந்த துறைவனே, நல்கூர்ந்தமக்கட்கு அணிகலமாவது அடக்கம் -வறுமையுற்றமாந்தர்க்கு அணிகலம் போற் சிறப்பதுஅடக்கமுடைமையாகும் ; பணிவில் சீர்மாத்திரையின்றி நடக்குமேல் வாழும் ஊர்கோத்திரம் கூறப்படும் - பணிதலில்லாதுஉயர்ந்தொழுகுதலில் ஒரு வரம்பில்லாமல்நடப்பாரானால் தாம் வாழும் ஊரவரால் தமது குடிப்பிறப்புப் பற்றி பழிக்கப்படுவர்.

(க-து.) பணிவோடிருத்தல்அறிவுடைமையாகும்,

(வி-ம்.) பின்னும் இன்றியமையாமைபற்றி ‘நல்கூர்ந்த மக்கட்' கென்றார். அறிவாகியஅழகை மேலும் விளங்கச் செய்தலின், அடக்கம்அணிகலம் எனப்பட்டது. சீர், ஈண்டு, உயர்வு ;‘சுருக்கத்து வேண்டும் உயர்வு'என்பவாகலின்.அஃதும் அளவு கடத்தலாகாதென்றற்கு,‘மாத்திரையின்றி நடக்குமேல்' எனப்பட்டது.கூறப்படும் ஐயுற்றுப் பேசப்படும் ; நடக்கும்கூறப்படும் என்பன, "தெய்வத்துள்வைக்கப்படும்" 2 என்புழிப்போல உயர்திணைக்கண் நின்றன.

(2)


1. குறள். 97 : 3.

2. குறள். 5 : 10.

243 எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகாது
எந்நாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால் ;
தன்னாற்றா னாகும் மறுமை ; வடதிசையுங்
கொன்னாளர் சாலப் பலர்

(பொ-ள்.) எந்நிலத்து வித்துஇடினும் காஞ்சிரங்காழ் தெங்கு ஆகாது - எந்தநிலத்தில் விதையை இட்டாலும் எட்டி விதை தென்னைமரமாக வளராது ; எந்நாட்டவரும் சுவர்க்கம்புகுதலால் தன் ஆற்றான் ஆகும் மறுமை - ஆதலால், எந்தநாட்டின்கண் வாழ்வோரும் தமது நல்வினையினால்தேவருலகம் செல்லுதலால், ஒருவற்குத் தன் முயற்சிவகையினாலேயே மறுமைப் பேறு உண்டாதல் கூடுமன்றிஇடத்தின் சார்பினாலன்று: வடதிசையும்கொன்னாளர் சாலப் பலர் - போக உலகிருக்கும்வடநாட்டின் கண்ணும் வறிது வாழ்நாட் கழித்து நரகுபுகுவோர் மிகப் பலராவர்,

(க-து.) இடம் முதலிய சார்பினையேபெரிதாகக் கருதாமல் தமது புண்ணியப் பேற்றில்முயற்சியுடையராய் ஒழுகுதலே அறிவுடைமையாகும்.

(வி-ம்.) உம்மை, உயர்வு.கொன்னாளர், பயனிவாளர்; "நம்மருளாக்கொன்னாளர்"1 என்றார் பிறரும். அவரவர்அறிவின் முயற்சியே அவரவர்க்கு உய்திகூட்டுமென்பது பொருள்.

(3)


1. கலித். 42 : 18.

244 வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.

(பொ-ள்.) வேம்பின் இலையுட்கனியினும் வாழை தன் தீஞ்சுவை யாதும் திரியாது -வேம்பின் இலையுள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம்தனது இன்சுவையிற் சிறிதும் வேறுபடாது; ஆங்கே இனம்தீது எனினும் இயல்புடையார் கேண்மை மனம் தீது ஆம்பக்கம் அரிது அதுபோலவே, தமக்கு நேர்ந்த சார்புதீயதெனினும் இயற்கையறிவுடையாரது நட்புமனந்தீயதாய்மாறும் வகை அரிதாயிருக்கும்.

(க-து.) தம் இயல்பில் அறிவுடைமைதீய சார்பினின்று காக்கும்.

(வி-ம்.) சார்பினால் இயல்புதிரியாமை கூறினமையின், இயற்கை யறிவுடைமைபெறப்பட்டது. ஆம் : அசை. பெரும்பான்மையுந்தீதாதல் இன்மையின், ‘அரிது' என்றார்; "இன்மையரிதே வெளிறு" 1 என்பதிற் போல.

(4)


1. குறள். 51 : 3.

245கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
உப்பீண் டுவரி பிறத்தலால்; தத்தம்
இனத்தனைய ரல்லர் எறிகடற்றண் சேர்ப்ப
மனத்தனையர் மக்களென் பார்.

(பொ-ள்.) எறிகடல் தண் சேர்ப்ப -அலைகள் வீசுகின்ற கடலின் குளிர்ந்தகரையையுடையவனே!, கடல் சார்ந்தும் இன் நீர்பிறக்கும் மலைசார்ந்தும் உப்பு ஈண்டு உவரிபிறத்தலால் - கடலை யடுத்தும் இன்சுவை மிக்கஊற்றுநீர் தோன்றுதலுண்டு, மலையை யடுத்தும்உவர்ப்பு மிக்க உப்புநீர் உண்டாதலால்; மக்கள்என்பார் இனத்தனையர் அல்லர் மனத்தனையர் -பகுத்தறிவுடைய மக்களென்று சிறப்பிக்கப்படுவோர்தமது சார்போடொத்த இயல்பினரல்லர்; தத்தம்இயற்கையறிவோடொத்த நிலையினராவர்.

(க-து.) மக்கள் தத்தம்இயற்கையறிவிற்கேற்பவே ஒழுகுவராதலின்,அவ்வறிவினை அவர் தகுதியாகப் பெற்றிருத்தல்நன்று.

(வி-ம்.) உப்பு, உவர்ப்புச்சுவைஉணர்த்திற்று. உவரி, உவர்ப்புடைய நீர்."வல்லூற் றுவரி தோண்டி"1என்றார்பிறரும். பிறக்கும். பிறக்கும் ஆதலால் என்றுபிரித திசைத்துக் கொள்க. மனமென்றது, ஈண்டுஇயற்கையறிவோடொத்த மனப்பான்மையென்க.

(5)


1. பெரும்பாண் : 98.

246பராஅரைப் புன்னை படுகடற் றண்சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? நல்ல
மரூஉச்செய் தியார்மாட்டுந் தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று.

(பொ-ள்.) பரு அரைப் புன்னை படுகடல்தண் சேர்ப்ப - பருமனான அடிமரத்தையுடைய புன்னைமரங்கள் உண்டாகின்ற கடலின் குளிர்ந்தகரையையுடையவனே! ஒராலும் ஒட்டலும் செய்பவோ -நண்பரை ஒருகாற் பிரிதலும் மற்றொருகாற் கூடுதலும்உலகத்திற் செய்யத் தக்கனவோ?, நல்ல மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார் விராய்ச்செய்யாமை நன்று - சிறந்த நட்புச் செய்துஎத்தகையோரிடத்தும் நிலைத்தொழுகும்மனப்பான்மை யுடையோர் முதலிலேயே யாவரோடும்மனங்கலந்து நட்புச் செய்துகொள்ளாமை அதனினும்நன்றாகும்.

(க-து.) கூடுதலும் பிரிதலுமின்றியொழுகுதல் அறிவுடைமையாகும்.

(வி-ம்.) செய்ப : ஈண்டு அஃறிணைப்பன்மை. மரூஉ, பெயர் இரண்டும் ஒரே பொருளன. யார்மாட்டுமென்றார், நேரல்லாரையும் அடக்கி.ஒருவரோடு கூடுதலும் பிரிதலும் செய்துகொண்டிருத்தலினுங் கூடாமையே நன்றென்றபடி, நல்லமரூஉச் செய்து யார்மாட்டுந் தங்கு மனத்தாரென்றது,தக்கோரெனற் பொருட்டு, அம் மனத்தார் பின்பிரிதலாற் பெருந் துன்பமுறுவாதலின், அவ்வாறுவிதந்தார்.

247உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் - புணரின்;
தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.

(பொ-ள்.) புணரின் - நட்புச்செய்தால், உணர உணரும் உணர்வுடையாரைப் புணரின்இன்பம் புணரும் - நாம் ஒன்றை உள்ளத்தால் உணரஅதனைக் குறிப்பால் உணர்ந்தொழுகுங்கூருணர்வுடையாரை நட்புச் செய்யின் இன்பம்பொருந்தும்; தெரியத் தெரியும் தெரிவு இலா தாரைப்பிரியப் பிரியும் நோய் - நம் கருத்துக்கள்வெளிப்படையாகத் தெரிய அந்நிலையிலும் அவற்றைஅறிந்தொழுகும் அறிவிலாதாரை நட்புச் செய்யாமற்பிரிந்திருக்கத் துன்பங்களும் நம்மைச் சேராமற்பிரிந்திருக்கும்.

(க-து.) குறிப்பறிந்தொழுகும்கூரறிவாற்றலால் இன்பம் விளையும்.

(வி-ம்.) ‘குறிப்பிற் குறிப்புணர்வாரை உறுப்பினுள், யாது கொடுத்துங் கொள்' 1லென்பவாகலின்,இங்ஙனங் கூறினார். ஆம் இரண்டும் அசைநிலை.‘ஒருகால் தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைத்தவறாகப் புணரின் அவரைப் பிரிய நோய் பிரியும்'என்றும் உரைக்கலாமேனும், எந்நிலைக்கண்ணும்பிரிதலென்பது கூடாமைமேல் நிறுத்தப்பட்டமையின்அது பொருந்தாது. ‘பிரியப் பிரியுமாம் நோய்'என்றது. முற்கருத்தை எதிர்மறையானும்விளக்கியபடியாம்.

(7)


1. குறள். 71 : 3.

248 நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.

(பொ-ள்.) நல் நிலைக்கண் தன்னைநிறுப்பானும் - சிறந்த நிலையில் தன்னைநிலைநிறுத்திக் கொள்வோனும், தன்னைநிலைகலக்கி கீழ் இடுவானும் -தனது முன் நிலையையுங்குலையச் செய்து தன்னைக் கீழ்நிலைக்கண்தாழ்த்திக்கொள்வோனும், மேன்மேல் உயர்த்துநிறுப்பானும் - தான் முன் நிறுத்திக்கொண்டசிறந்த நிலையினும் மேன்மேல் உயர்ந்த நிலையில்தன்னை மேம்படுத்தி நிலை செய்து கொள்வோனும்,தன்னைத் தலையாகச் செய்வானும் - தன்னைஅனைவரினுந் தலைமையுடையோனாகச் செய்துகொள்வோனும், தான் - தானேயாவன்.

(க-து.) ஒருவனுக்குத் தன் அறிவுமுயற்சியே எல்லாவற்றிற்குந் துணை.

(வி-ம்.) "தத்தம் கருமமேகட்டளைக் கல்"லாதலின் இங்ஙனங்கூறினார். நிலையினும் என்னும் உம்மை உயர்வு,உயர்த்து வானுமென்னாது உயர்த்துநிறுப்பானுமென்றார். உயர்நிலையை வருவித்துக்கொள்ளுதலோடு அவ்வுயர் நிலைக்கண் தன்னைவல்லமையாய் நிலைநிறுத்திக்கொள்வோனுமென்றற்கு; தன்னை என்பதை இதன்கண்ணும் ஒட்டிக்கொள்க.

(8)


1. குறள். 51 : 5.

249 கரும வரிசையாற் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாருஞ் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடற் றண்சேர்ப்ப!
பேதைமை யன்ற தறிவு.

(பொ-ள்.) அரு மரபின் ஓதம்அரற்றும் ஒலிகடல் தண் சேர்ப்ப - அரியதன்மையையுடைய அலைகள் முழங்கும் முழக்கமிக்ககடலின் குளிர்ந்த துறைவனே!, கரும வரிசையால் -தொழில் முறைமையினால், கல்லாதார் பின்னும்பெருமையுடையாரும் சேறல் பேதைமையன்று அது அறிவு -கல்வியறிவில்லாத மூடரை யடுத்தும் கல்விப்பெருமையுடைய அறிஞரும் ஒழுகுதல், அறியாமை யன்று; அதுகாலம் இடம் முதலியவற்றிற்கேற்ப ஒழுகும்அறிவுடைமையாகும்,

(க-து.) கல்லர்தவரிடமும்காரியநிமித்தம் அளவாக ஒழுகிக் கொள்ளுதல்அறிவுடைமையாகும்.

(வி-ம்.) கரும வரிசையால் என்றது,காரணங் கூறியபடி. உம்மைகள் இரண்டனுள் முன்னது,இழிபிலும் பின்னது உயர்விலும் வந்தன. ‘அருமரபின்கடல்' என்க, ஆழமும் அகலமும் வாய்ந்து உப்பு முத்துமுதலிய அரும்பொருள்களுடைமையானும் உலகவொழுக்கத்துக்கு மழை முதலிய கொடைகளால்ஏதுவாயிருத்தலானும் கடலின் அருமரபு பெறப்படும்:"மகர வாரிவளம்" 1என்றார் பிறரும்.

(9)


1. சிலப். 6 : 128.

250 கருமமு முட்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே
முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.

(பொ-ள்.) கருமமும் உட்படாபோகமும் துவ்வா தருமமும் தக்கார்க்கே செய்யா -பொருள் வரவுக் கேதுவான தொழின் முயற்சியினும்ஈடுபட்டு அதனால் இம்மைப் பயனாகத் தான் போகமுந்துய்த்து மறுமைப் பயனாகத் தகுதியுடையார்க்கேஅறமுஞ் செய்து, ஒரு நிலையே முட்டின்றி மூன்றும்முடியுமேல் - இம்மூன்றும் ஒரு தன்மையாகவே பிறவியிற்கடைசிவரையிற் றடையின்றி நிறைவேறுமாயின், அஃதுபட்டினம் பெற்ற கலம் என்ப - அப் பேறு, தன்பட்டினத்தை மீண்டு வந்தடைந்த வாணிகக் கப்பலைஒக்கும் என்று அறிஞர் கூறுவர்.

(க-து.) முயற்சியும் போகமும்அறமுமுடையனாய் வாழ்தலே அறிவுடைமையாகும்.

(வி-ம்.) உட்படாமுதலிய வினைகள்உடன்பாட்டின் கண் வந்தன. தக்கார் , கல்வியறிவுஒழுக்கங்களாகிய தகுதியுடையோர், மூன்றும்ஒன்றுபோல் நடைபெற வேண்டுமென்றற்கு ‘ஒருநிலையே'யென்றும், இடையில் ஊறுபடாமல் நடைபெறவேண்டுமென்றற்கு ‘முட்டின்றி' யென்றுங் கூறினார்.‘இடையிருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல்உடைகலப் பட்டாங் கொழிந்தோர்'1 பலராகலின், உவமை, அருமை புலப்படுத்தி நின்றது.

(10)


1. மணிமே. 16 : 19 - 20.




2011/6/23 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/6/22 Venkatram Shrinivas <see...@gmail.com>

2011/6/21 Venkatram Shrinivas <see...@gmail.com>
<table width=



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 24, 2011, 4:38:02 PM6/24/11
to மின்தமிழ்
அறிவின்மை 
 
பொருட்பால்
26. அறிவின்மை

(இயற்கையறிவினை இல்லாமை என்பது பொருள்.)
251நுண்ணுணர் வின்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ,
கண்ணவாத் தக்க கலம்.

(பொ-ள்.) எண்ணுங்கால் -ஆராயுமிடத்து; நுண் உணர்வு இன்மை வறுமை - ஒருவனுக்குநுட்ப அறிவில்லாமையே வறுமையாவது; அஃது உடைமைபண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் -அந் நுட்பஅறிவினை உடையவனாயிருத்தலே அவனுக்குமிகப்பெருகிய பெருஞ் செல்வமாகும்; பெண் அவாய்ஆண் இழந்த பேடி அணியாளோ கண் அவாத் தக்க கலம் -மற்றுப் பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு நீங்கியபேடியும் கண்கள் விரும்பத்தக்க அழகியஅணிகலன்களை அணிந்து கொள்ளுதலுண்டன்றோ!அதனையொத்ததே அறிவிலார் ஏனைச்செல்வமுடையராயிருந்து மகிழ்தலென்க.

(க-து.) நுண்ணுணர்வில்லாமை ஏனையெவையிரப்பினும் இல்லாமையையே தரும்.

(வி-ம்.) ‘சின்னஞ் சிறிய'‘பன்னம் பெரிய' என்றாற்போற், ‘பண்ணப்பணைத்த' வென்பதுங் கொள்க. ஆண் தன்னியல்புகுறைந்து பெண்தன்மை மிக்கபோது பேடி யெனப்படும்;பெண் அணிதற்குரிய அணிகலன்களைப் பேடியும் அணிந்துவீண் மகிழ்வு கொள்ளுதலை யொத்ததேநுண்ணுணர்வினர் அடைந்து பயன்பெறுதற்குரியசெல்வத்தை அஃதில்லாதார் பெற்றுவீணாக்குதலென்க. ‘பேடி அணியாளோ' என்னும் முடிவு,"உயர்திணை மருங்கிற்பால்பிரிந்திசைக்கும்"1என்பதனாற்கொள்ளப்படும்.

(1)


1. தொல். கிளவி. 4

252 பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்ல லுழப்ப தறிதிரேல் - தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே,
பூவின் கிழத்தி புலந்து.

(பொ-ள்.) பல் ஆன்ற கேள்விப்பயன் உணர்வார் பாடு அழிந்து அல்லல் உழப்பதுஅறிதிரேல் - பல நிறைந்த கேள்விகாளல் உண்டாகும்பயனைத் தமது பழக்கத்தில் நுகர்ந்து இன்புற்றுவரும்அறிஞர்கள் ஒரோவொருகால் உலகில் தம் பெருமைஅழிந்து வருந்துவதற்குக் காரணம் நீவிர் தகுதியாகஅறிவீராயின்; தொல்சிறப்பின் நாவின் கிழத்திஉரைதலால் சேராளே பூவின் கிழத்தி புலந்து - அது,பழைமையாகத் தொடர்புற்றுவருஞ் சிறப்பினையுடையநாமகள் வாழ்ந்து வருவதால் பூமகள் ஊடல் கொண்டுஅவர்களிடம் சேரமாட்டாள் என்பதேயாம்.

(க-து.) கல்வி கேள்விகளிற்பழகிவரும் உள்ளம் பொருள் நினைவுகள் படிதற்குஇடம்பெறாமையின், ஒரோவொருகால்அவ்வுள்ளமுடையோர் வறியராயிருப்பது இயல்பு.

(வி-ம்.) ‘கேள்விப் பயன்'என்றார். செல்வத்தில் அத்தகையபயனில்லாமையின், அறிவு உயிரைப் பற்றித்தொடர்ந்து வருதலின், நாமகட்குத் தொன்மைகூறப்பட்டது. கல்வி கேள்விகளில் விரைந்தோடும்நினைவு செல்வத்திற் செல்லாமையின், ‘சேராளேபூவின் கிழத்தியென்றார். இமயமலையில் மரகதப்பாறையில் பதுமை என்னுங் கயத்திற்பொற்றாமரையில் திருமகள் சிறப்பின் உறைவள்என்பது, ‘அருமணி மரகதத் தங்கண் நாறிய எரிநிறப்பொன்னிதழ் ஏந்து தாமரைத் திருமகள்'1என்னுஞ் சிந்தாமணியினாலும் அதனுரையினாலும்அறியப்படுதலின் திரு. பூவின் கிழத்தியாதல்பெறப்படும்.

(2)


1. சிந். 1 : 154.

253 கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் - மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.

(பொ-ள்.) கல் என்று தந்தை கழறஅதனை ஓர் சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன் -இளமையில் தன் தந்தை ‘படி' என்று இடித்துக் கூற அதனைஒரு நற் சொல் என்று ஏற்காமற் பொருள்செய்யாதுவிட்டவன், மெல்ல எழுத்தோலைபல்லார்முன் நீட்ட விளியா வழுக்கு ஓலைக்கொண்டுவிடும் - பின்பொருகால், எழுத்தெழுதியகடிதமொன்றைப் பலர் முன்னிலையில் ஒருவர் இதனைப்படியுமென்று மெல்லத் தன் கையிற் கொடுக்கத்தனக்கு அது மாட்டாமையால் நாணத்தாற் சினந்து கூவிமானத்தால் ஓவென்று அழுதுவிடுவான்.

(க-து.) அறிவின்மை பலர்முன்னிலையில் மானக்குறைவைத் தரும்.

(வி-ம்.) ‘மெல்ல நீட்ட'வென்றார். அஃதவன் சினத்தை யெழுப்புதலின். வளியா: உடன்பாட்டுவினை. வழுக்கு ஓல்- குறைவினால்உண்டாகும் அழுகை யொலி; அவ்வொலியைக்கொண்டுவிடும் என்க. ஓல் ஒலியென்னும்பொருட்டாதல் "அருவி மருங்கு ஓலுறத்த"1என்பதிற் காண்க.

(3)


1. இறைய. 2, உரை

254 கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.

(பொ-ள்.) கல்லாது நீண்ட ஒருவன் -கல்வியறிவு பெறாமல் வளர்ந்து விட்ட ஒருவன்,உலகத்து நல்லறிவான ரிடைப் புக்கு மெல்லஇருப்பினும் நாய் இருந்தற்று - உலகத்தில் உயர்ந்தஅறிவாளிகளின் அவையில் நுழைந்து இருக்குமிடம்தெரியாமல் இருந்தாலும் அந்நிலை ஒரு நாய்இருந்தாற் போன்ற தன்மையையுடையதாகும்; இராதுஉரைப்பினும் நாய் குரைத்தற்று - அவ்வாறு அடக்கமாகஇராமல் ஏதானும் ஒன்று வாய் திறந்து கூறினும் அதுநாய் குரைத்தாற் போன்ற தன்மையுடையதாகும்.

(க-து.) கல்வியறிவு பெறாதோர்நாயின் நிலையில் வைத்துக் கருதப்பட்டார்.

(வி-ம்.) நீண்ட என்றார்,ஓரறிவுயிர்போற் கருதி அதன் இழிவு தோன்ற.அறிவாளரின் அறிவொளிமுன் தன் வலியடங்கிஅடக்கமுடையான் போல் திகைத்திருத்தலின்,‘மெல்ல இருப்பினும்' என்றார். நாய் என்றது, இழிவுகருதி ; "நவையின் அகல"1 என்னுமிடத்துநச்சினார்க்கினியர்" நாயுடம்பி னீங்க"என உரைத்த உரையினால் இதனை யறிக.

(4)


1. சிந். 4 : 13.

255 புல்லாப்புன் கோட்டிப் புலவ ரிடைப்புக்குக்
கல்லாத சொல்லுங் கடையெல்லாம் - கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து.

(பொ-ள்.) புல்லாப் புன்கோட்டிப்புலவரிடைப் புக்குக் கல்லாத சொல்லும்கடையெல்லாம் - அறிவு நிரம்பாதகீழ்மக்களெல்லாரும் அவ்வாறே மெய்யறிவோடுபொருந்தாத புல்லறிவுக் கூட்டத்தவரான தாழ்ந்தபுலவர் நடுவிற் புகுந்து தாம் தெளிவாகக் கல்லாதகருத்துக்களையெல்லாம் ஆரவாரமாகவிரித்துரைப்பர்; கற்ற கடாயினும் சான்றவர்சொல்லார் பொருள்மேல் படா விடுபாக்கு அறிந்து -ஆனால் அறிவு நிரம்பிய பெருமக்களோ, தாம் கற்றகருத்துக்களைப் பிறர் வினவினாலும் அந்நுண்பொருள்கள் மேல் அவரறிவு கூரிதாகச்செல்லமாட்டாமல் விட்டுப் போதல் தெரிந்துஅவற்றைக் கூறாமல் அடக்கமாயிருப்பர்.

(க-து.) அறிவின்மையுடையார்அறிவுடையாரைப் போல் அடக்கமாயிரார்.

(வி-ம்.) புலவரில் தாழ்தரமானவர்,ஈண்டுப் ‘புல்லாப் புன்கோட்டிப் புலவ'ரெனப்பட்டார். கடையெல்லாம் - கீழ்மக்களெல்லாரும்; சொல்லும் : முற்று. விடு பாக்கு :தொழிற் பெயர்ப் பொருளில் வந்தது. "அஞ்சுதும்வேபாக்கறிந்து"1 என்புழிப் போல. 'படாவிடுபா' கென்றமையான், பொருள் நுண்பொரு ளெனப்பெறப்பட்டுச் சான்றவர்தம் நுண்ணறிவைப்புலப்படுத்தா நின்றது.

(5)


1. குறள் 113 : 8.

256 கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும் , எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை யொலி.

(பொ-ள்.) கற்றறிந்த நாவினார்சொல்லார் தம் சோர்வு அஞ்சி - கற்றுத்தெளிந்தநாவன்மையினையுடைய மேலோர் தம் தவறுதலுக் கஞ்சிமிகுதியாகப் பேசார்; மற்றையராவார் பகர்வர் -ஆனால், கற்றறிவில்லா ஏனைய ராவோர்அவ்வச்சமின்றி யாதானும் பேசிக்கொண்டிருப்பர்;பனையின்மேல் வற்றிய ஓலை கலகலக்கும்எஞ்ஞான்றும் பச்சோலைக்கில்லை ஒலி -பனைமரத்தில் நீர்வற்றிய உலர்ந்த ஒலைகலகலவென்று ஓசையிட்டபடி யிருக்கும், ஆனால்நீர்ப்பசைபோடு கூடிய பச்சை ஓலைக்கு எப்போதும்ஒலி இல்லையாதல் காண்க.

(க-து.) அறிவில்லாதார்எப்போதும் ஆரவாரித்துக் கொண்டிருப்பார்.

(வி-ம்.) சொல்வன்மையுடையாரேசொல்வார் என்றற்கு நாவினாரென்று விதந்தார்.பனையின்மேல் என்றது. பனையில் என்றற்கு: இஃதுஎடுத்துக்காட்டுவமை. கலகலக்கும் என்றது இரட்டைக்கிளவி.1

(6)


1. தொல். கிளவி. 48.

257பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு.

(பொ-ள்.) பன்றிக் கூழ்ப்பத்தரில் தேமா வடித்தற்று நன்றி அறியாமாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால் -நன்மையறியாத கீழ்மக்கட்கு அறமுறைமைஅறிவுறுக்குமிடத்து அது, பன்றிக்குக் கூழ்வார்க்குந்தொட்டியில் தேமாம்பழத்தைச் சாறுபிழிந்தாற்போல் தகுதியற்றதாகும்;குன்றின்மேல் கொட்டுந் தறிபோல் தலை தகர்ந்துசென்று இசையாவாகும் செவிக்கு - அன்றியும், ஒருமலைப்பாறையின்மேல் அறையப்படும் மரத்தாற்செய்யப்பட்ட முளைக்குச்சி நுனி சிதைந்து அதனுள்இறங்கிப் பொருந்தாமைபோல அவ்வறவுரையும் அவர்செவிக்கு நுழைந்து பொருந்தாதனவாகும்.

(க-து.) அறிவில்லாதார்அறிவுரைகள் ஏற்று ஒழுகும் வாய்ப்பில்லாதவராவர்.

(வி-ம்.) தேமா, இன்சுவை மிக்கமாங்கனியின் வகை; முதலில் தகுதியில்லாமை கூறிப்பின் பயன்படாமையுங் கூறினார். குன்றின்மேலென்றது, கல்லிலென்னும் பொருட்டு, தறி, துண்டாகநறுக்கியெடுக்கப்பட்ட முளைக்குச்சி, அறச்சுவைஅறியாது, மறச்சுவை பயின்றிருக்கும்மனத்தியல்பும், அறிவுரைகள் ஏலாது பாறைப்பட்டுக்கிடக்கும் செவிகளின் வன்மையும் ஈண்டு நன்குவிளக்கப்பட்டன. குழிந்த இடம்பத்தரெனப்படுமாகலின்; ஈண்டுத்தொட்டிக்காயிற்று; "நீர்வாய்ப் பத்தல்"1என்பதுங் கருதுக.

258பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று!
கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா
நோலா உடம்பிற் கறிவு.

(பொ-ள்.) பாலால் கழீஇப் பலநாள்உணக்கினும் வாலிதாம் பக்கம் இருந்தைக்குஇருந்தன்று - பலநாள் பாலினாற் கழுவிஉலர்த்தினாலும் வெண்ணிறம் உடையதாம் நிலைமைகரிக்கு இல்லை; கோலால் கடாய்க் குறினும் புகல்ஒல்லா நோலா உடம்பிற்கு அறிவு - அவ்வாறே,கோலால் அதட்டிக் குத்திக் கூறினும் புண்ணியஞ்செய்யாத உடம்பில் அறிவு ஏறாது.

(க-து.) அறிவில்லார் -புண்ணியமில்லாதவராதலின் அவர் திருந்துதல்அருமையாயிருக்கும்.

(வி-ம்.) உவமையால் நன்முறையாற்றிருத்துதலும் பொருளால் அச்சுறுத்தித் திருத்தலும்பெறப்பட்டன - இருந்தை என்பது கரி : இருமைகருமையாகலின் அப்பெயர் பெற்றது. இருந்தன்று :எதிர்மறைப்பொருட்டு. குறினும்; குற்றினும்;குத்தினும் என்க. புகலொல்லா : ஒரு சொல் .கீழ்மக்களின் இழிவு கருதி அவரை ‘நோலா உடம்'பென்று விதந்தார்.

259 பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.

(பொ-ள்.) பொழிந்து இனிதுநாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தமை காமுறும்ஈப்போல் -தேன் சொரிந்து இனிது மணந்தாலும் மலரைஉண்ணுதற்குச் செல்லாமல் இழிந்த பொருள்களையேவிருப்பும் ஈயைப்போல், இழிந்தவை தாம் கலந்தநெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச் சொல் தேர்வு - இழிந்த குணங்களேபொருந்திய மனமுடையார்க்குத் தகுதியுடையார்வாயினின்று வரும் இனிமை பொருந்திய தெளிந்தஅறிவுரைகளின் தெரிவுநிலை என்ன பயனைத் தரும்?

(க-து.) அறிவில்லார் இழிந்தஇயல்புகளையே நாடுவர்.

(வி-ம்.) பூமிசைதலென்பதுதேன்மிசைதல், "பூவுண் வண்டு"1என்பழிப்போல. தாம்; சாரியை. நெஞ்சினார்க்கு,புல்லறிவினார்க்கு; தெரிந்தெடுக்கப்பட்ட தகுதிநிலை ஈண்டுத் தேர்வெனப்பட்டது. சொற்களுள் இவைஉயர்வென்று சிறந்தோரால் தெரிந்தெடுக்கப்பட்டஅவற்றின் தகுதிநிலை, இழிந்தவை கலந்தநெஞ்சினார்க்கு யாது பயன்றரும் என்பது பொருள்.

(9)


1. சிந். 13: 535

260 கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ் சுதைத்தலால், - மற்றுமோர்
தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.

(பொ-ள்.) கற்றார் உரைக்கும் கசடுஅறு நுண் கேள்வி பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால் -கல்வியறிவு பெற்றோர் தெரிந்து சொல்கின்றகுற்றமில்லாத நுண்ணிய கேள்விப்பொருளைக்கடைப்பிடியாமல் தனது மனம் இகழ்ந்துதள்ளிவிடுதலால், மற்று தன்போல் ஒருவன் முகம்நோக்கித் தானும் ஓர் புன்கோட்டி கொள்ளும்கீழ் - மற்றுக் கீழ்மகன், தன்போற்கீழ்மகனொருவன் முகத்தைப் பார்த்துத் தானும்உரையாடுதற்கு ஒரு புல்லிய அவையைஅமைத்துக்கொள்வன்.

(க-து.) அறிவில்லாதவர்அறிவில்லாதவரோடு கூடியே வாழ்நாளை வறிதாக்குவர்.

(வி-ம்.) மற்று : வினைமாற்று. ஓர் :அசை - பேரறிஞர் தம் அறவுரைகளை அறிவுறுத்துதற்குஅவை கூட்டிக் கோடல் போல் இவனும் ஒரு புன்கோட்டிகொள்ளும் என்றார்; பலர் சேராமையின் அதன் இழிவுதோன்ற, ‘ஒருவன் முகநோக்கி' எனப்பட்டது."வெள்ளைக்கோட்டியும் விரகினில் ஒழிமின்"1என்றார் பிறரும்.

(10)


1. சிலப். 30 : 198.



2011/6/24 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 26, 2011, 9:51:23 AM6/26/11
to மின்தமிழ்
நன்னெறியில் செல்வம் 
 
பொருட்பால்
27. நன்றியில் செல்வம்

[யார்க்கும் நன்மை பயவாத செல்வம் என்பது பொருள்]
261அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று.

(பொ-ள்.) அருகலதாகிப் பலபழுத்தக் கண்ணும் பொரிதாள் விளவினை வாவல்குறுகா - குறையாததாகிப் பல பழங்கள் பழுத்தாலும்பொரிந்த அடிமரத்தையுடைய விளாமரத்தைவௌவால்கள் அணுகமாட்டா; பெரிது அணியராயினும்பீடுஇலார் செல்வம் கருதும் கடப்பாட்ட தன்று -அதுபோல. மிக அருகிலுள்ளவராயினும் பெருந்தன்மையில்லாதவரது செல்வம், தக்கோரால், பயன்படுஞ்செல்வமாகக் கருதப்படும் முறைமையுடையதன்று.

(க-து.) பெருந்தன்மை யில்லாதவரதுசெல்வம் நலம் பயவாது.

(வி-ம்.) அவ்வப்போதும்குறையாததாகி என்றற்கு ‘அருகலதாகி' என்றார்.அருகாமை குறையாமைப் பொருட்டாதல், "பருகு வன்னஅருகா நோக்கமொடு" என்பதனாற் காண்க. மேலே,ஓடும் முள்ளுமிருத்தலின், வௌவாற்குப்பயன்படாவாயின, பெரிதணிமை உவமைக்கும்.அருகாமையும் பன்மையும் பொருளுக்கும்உரைத்துக்கொள்க. ஒப்புரவினாலேயேபீடுண்டாதலின்,1 ‘பீடிலார் செல்வம்'என்றார்.

(1)


1. பொருந. 77

262அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.

(பொ-ள்.) அள்ளிக்கொள்வு அன்னகுறுமுகிழவாயினும் கள்ளிமேல் கைநீட்டார் சூடும்பூஅன்மையால் - அள்ளிக் கொள்ளுதல் போல, நிறையச்சிறிய அரும்புகளுடையன வாயினும் அவை சூடும்மலர்களல்லாமையால் கள்ளிச் செடியின்மேல்யாரும் கை நீட்டமாட்டார்; செல்வம் பெரிதுடையராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடையார் - அதுபோலச் செல்வம் மிக உடையவர்களானாலும் அதுநன்மை பயவாமையின் கீழ்மக்களை அறிவுடையார்அணுகமாட்டார்.

(க-து.) கீழ்மக்களின் செல்வம்அறிஞர்களால் மதிக்கப்படாத, நலம் பயவாச்செல்வமாகின்றது.

(வி-ம்.) கவர்ச்சியாகவும்மிகுதியாகவும் அரும்பெடுத்திருத்தலின், ‘அள்ளிக்கொள்வன்ன' என்றார்; "அள்ளிக் கொள்வற்றேபசப்பு" என்றார் நாயனாரும் : கீழ்கள்,அரிதிற் கிடைத்த செல்வத்தைத் தகுதியாகப்பயன்படுத்திக் கொள்ளும் பீடு இலாதார்.எடுத்துக்காட்டுவமை.

263மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்,
வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்;
செல்வம் பெரிதுடைய ராயினும், சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை.

(பொ-ள்.) மல்கு திரையகடற்கோட்டு இருப்பினும் வல்ஊற்று உவர்இல்கிணற்றின்கட் சென்று உண்பர் - பலவாக நிறைந்தஅலைகளையுடைய கடற்கரையில் தாம்தங்கியிருந்தாலும் வலிதின் நீருறுதலுடையஉவர்ப்பில்லாத கிணற்றிற் சென்று மக்கள் நீர்பருகுவர்; செல்வம் பெரிதுடையராயினும் சேண்சென்றும் நல்குவார்கட்டே நசை - கீழ்மக்கள்அருகாமமையே செல்வம் மிக உடையவராயினும்தக்கோரின் பொருள் விருப்பம் மிகத் தொலைவுசென்றும் உதவுவார் கண்ணதேயாகும்.

(க-து.) செல்வமுடையோர்கீழோராயின், தக்கோர்க்கு அது பயன்படுதலில்லை.

(வி-ம்.) கடலில் இயல்பாக மிக்கநீரிருத்தல் போலின்றிக் கிணற்றிற் சிறுகச்சிறுக முயற்சியோடு நீர் வந்து கூடுதலின்.‘வல்லூற்றுக்கிணறு' எனப்பட்டது. இயல்பாகப் பெருஞ்செல்வம் பெற்றிருத்தலின்றித் தாமே தம்முயற்சியாற் சிறுகச் சிறுகப் பொருளீட்டும்நிலையினராயினும், அவர் நல்குவோராயின் அவரிடமேதக்கோர் உள்ளஞ் செல்லுமென்பது கருத்து.நல்குவாரென்றார், நல்கும் பேரினிமைக்குணமுடையாரென்றற்கு. உண்பரென்றது பொதுவினை,ஏகாரம் : தேற்றம். (3)


264 புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,
பட்டும் துகிலும் உடுத்து.

(பொ-ள்.) புணர் கடல் சூழ்வையத்துப் புண்ணியமோ வேறு - கடல் நாற்புறமுஞ்சூழ்ந்து பொருந்தியிருக்கும் உலகத்தில் நல்வினைஎன்பது தனி நிலைமையுடையது; உணர்வதுடையார் இருப்பஉணர்விலா வட்டும் வழுதுணையும் போல்வாரும் பட்டும்துகிலும் உடுத்து வாழ்வார் - ஏனென்றால், நல்லனஉணர்ந்தொழுகுதலுடையார் வளமின்றியிருக்க, அவ்வுணர்வொழுக்கமில்லாரான கறிமுள்ளியுங்கத்தரியும் போன்ற கீழோர் பட்டும் உயர்ந்தஆடைகளும் உடுத்துக்கொண்டுவாழ்வுடையராயிருக்கின்றனர்.

(க-து.) தக்க உணர்வில்லாதவர்நல்வினைவயத்தாற் செல்வமுடையவராயினும்,அச்செல்வம் தக்கோராற் கண்ணியமாகக்கருதப்படாத நிலையினை யுடையது.

(வி-ம்.) ‘கிழவர் இன்னோர்என்னாது பொருள் தான் பழவினை மருங்கின் பெயர்புபெயர்பு உறையு' மகாலின்,1அப்புண்ணியத்துக்கும் அறிவொழுக்கங்கட்குந்தொடர்பில்லையென்பார், இவ் ‘வையத்துப்புண்ணியமோ வேறு' என்றார். வளக்குறைவால்ஆரவாரமின்றி யிருக்க வென்னும் பொருட்டு, ‘இருப்ப'என்றார். வட்டும் வழுதுணையுஞ் சிறுமை தோன்றநின்றன. போல்வாருமென்னும் உம்மை, அசை, முன்நல்வினையினாற் செல்வமுடையவராயினும்இப்பிறவியில் மதிக்கத்தக்க நற்சால்புஏதுமின்மையின், அச் செல்வம் நன்மைபயவாச்செல்வமாயிற்றென்பது கருத்து. வருஞ்செய்யுளும்இப்பொருட்டு. (4)


1. கலித். 21 : 10-4.

265நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம், - தொல்லை
வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில்.

(பொ-ள்.) நல்லார் நயவர் இருப்பநயமிலாக் கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம் -உயர்ந்த அறிவு செயல்களுடையாரும் இனியருமானமேலோர் உலகத்திதல் வளமின்றியிருக்க,அவ்வினிமையுங் கல்வியறிவுமில்லாக் கீழோர்க்குஒரு செல்வநிலை உண்டான காரணம், தொல்லைவினைப்பயன் அல்லது வேல்நெடு கண்ணாய் நினைப்பவருவதொன்று இல் - வேற்படை போன்ற நீண்டகண்களையுடைய மாதே! பழைய நல்வினையின் பயனேயல்லது வேறு ஆய்ந்து துணிதற்குரிய காரணம் இல்லை.

(க-து.) நற்குணநற்செயல்களில்லார் செல்வராயிருப்பினும்,சான்றோர் அதனை முன்வினைப் பயனென்று கருதிமதியாது செல்வர்.

(வி-ம்.) தம் இயல்பில்நல்லராதலோடு பழகுதற்கும் இனியரென்றற்கு,நயவரென்றுங் கூறினார். ஒன்றென்று சுட்டாதுசென்றார், அது மதிக்கப்படாமையின். ஆராய்ந்துகாணத்தக்க அத்தனை பெரிய காரணம்யாதுமில்லையென்றற்கு, ‘நினைப்ப வருவதொன்றில்'என்று மேலும் விதந்துரைக்கப்பட்டது. தொல்லைவினைப்பயனென்றது. காரணந் தெரிவித்தபடி,"தீதில் வினையினால் நந்துவர் மக்களும்"1என்றார் பிறரும்.

(5)


1. நான்மணிக் :49.

266 நாறாத் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்!
நீராய் நிலத்து விளியரோ - வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து.

(பொ-ள்.) நன் மலர்மேல் பொன்பாவாய் - சிறந்த தாமரை மலரின்மேல்வீற்றிருக்கும் பொன்னாலான பாவையை ஒத்ததிருமகளே!, நீறாய் நிலத்து விளியர் - நீசாம்பராய் வெந்து இவ்வுலகத்தில் அழிந்து போகக்கடவாய்; ஏனென்றால், நீ பொன்போலும் நன்மக்கள்பக்கம் துறந்து நாறாத் தகடேபோல் வேறாய்புன்மக்கள் பக்கம் புகுவாய் - போன் போல்மதிக்கப்படுதற்குரிய மேன்மக்களின் பக்கம்நீங்கி அவர்க்கு முற்றிலும் இயல்பில் வேறானகீழ்மக்களின் பக்கம் மணத்தலில்லாதபுறவிதழைப் போற் சேர்ந்து நீ சூழ்ந்துநிற்பாயாதலின்.

(க-து.) கீழ்மக்களிடம்திரண்டிருக்குஞ் செல்வம் - இருப்பதும் இல்லாததும்ஒன்றே.

(வி-ம்.) நாறாத் தகடேபோற்புகுவாய் என்க. நல்லோர் வருந்துதலின் மிகுதியைஇச் செய்யுள் பழித்துரை கூறுமுகமாக நன்குவிளக்கிற்று. விளியியர் என்னும் வியங்கோள்விளியர் என நின்றது. உணர்வில்லாரிடம் செல்வம்சேருங்கால் அது நன்றியில் செல்வமாய் மணமற்றுப்போதலால், புறவிதழ் மலரைச் சூழ்ந்து அதனைக்காத்து நிற்றல் போற் செல்வம்அவ்வுணர்விலாரைச் சூழ்ந்து திரண்டு காத்துநிற்றலானும் ‘நாறாத்தகடேபோற் புகுவாய்'என்றார். முன்னும்1 இச் செய்யுட் கருத்துவந்தது.

(6)


1. நாலடி. 27 : 4.

267 நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
பயவார்கட் செல்வம் பரம்பப் பயின்கொல்;
வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே.
நயவாது நிற்கு நிலை.

(பொ-ள்.) நயவார்கண் நல்குரவுநாணின்றுகொல் - தாழ்ந்தொழுகி இரவாதநன்மக்கள்பால் உள்ள வறுமைக்குவெட்கமில்லைபோலும்; பயவார்கண் செல்வம்பரம்பப் பயின்கொல் - பிறர்க்குப்பயன்படுதலில்லாத புன்மக்களிடம் செல்வம்பரவுவதற்கு அது பிசின்போலும்; வியவாய் காண்வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே நயவாதுநிற்கும் நிலை - வேற்படையை ஒத்த கண்களையுடையபெண்ணே! வறுமையும் செல்வமுமென்னும் இவ்விரண்டும்அவ்விடங்களில் இனிமைப்படாது நிற்கும்இயல்புக்கு நீ வியப்படைவாய்.

(க-து.) கீழ்மக்களின் செல்வம்இனிமைப்படாது.

(வி-ம்.) நயவார் : எதிர்மறை,பயின் பிசினாதல், ‘‘பல் கிழியும் பயினும்'1என்பதனாலுங் காண்க. இனிமைப் படாமையோடுநிலையாகவும் உள்ள தன்மை வியப்பிற்குரியதாகலின்' ‘வியவாய்காண்' என்றார்.வியவாய், ஈண்டு உடன்பாடு. காண் : முன்னிலையசை.

(7)


1. சிந். 1. 206.

268 வலவைக ளல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர்; - வலவைகள்
காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
மேலாறு பாய விருந்து.

(பொ-ள்.) வலவைகள் அல்லாதார்கால் ஆறு சென்று கலவைகள் உண்டு கழிப்பர் -நாணிலிகளல்லாத நல்லோர் தம் வறுமையால் ஊர்விட்டு ஊர் கால்வழி நடந்துபோய் அங்கங்குக்கிடைக்கும் இழிந்த கலவையுணவுகள் உண்டு காலங்கழிப்பர்; வலவைகள் கால் ஆறுஞ் செல்லார்கருனையால் துய்ப்ப மேல் ஆறு பாயவிருந்து - ஆனால்நாணிலிகளான புல்லியோர் கால் வழியும் நடந்துசெல்லாராய்த் தம்மேல் நெய் பால் தயிரென்னும்ஆறுகள் பாய்ந்தொழுகக் கறிகளோடு விருந்துண்டுஇன்புறுவார். என்னே இவ்வுலகியற்கை!

(க-து.) கீழ்மக்களின் செல்வம்வீண் களியாட்டங்கட்கே செலவாகும்.

(வி-ம்.) பலரிடமிருந்து சிறுகச்சிறுகக் கிடைக்கும் பல்வேறு உணவு கறிகளை ஒருங்குசேர்க்க அஃது ஒரு வேளை யுணவுக்குப் போதியதாதலின்,கலவையுண வெனப்பட்டது; காலாறுஞ் செல்லாரெனவேஊர்திகளில் இறுமாந்து செல்வரென்பது பெறப்படும்.கருனையாலென்னும் ஆலுருபு "பெண்டகையால்பேரமர்க்கட்டு"1 என்புழிப்போலஉடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது.

(8)


1. குறள். 109 : 3.

269 பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்;
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.

(பொ-ள்.) பொன் நிறச் செந்நெல்பொதியொடு பீள் வாட மின் ஒளிர் வானம்கடலுள்ளும் கான்று உகுக்கும் - பொன்னின்நிறத்தையுடைய உயர்ந்த செந்நெல் என்னும் பயிர்மேல் மூடிய தாளுடன் உள்ளிருக்குங் கருவும் வாட,மின்னல் மிளிரும் மேகம் கடலுள்ளும் நீர்சொரிந்து பெய்யும்; வெண்மையுடையார் விழுச்செல்வம் எய்தியக் கால் வண்மைவும் அன்ன தகைத்து- அறியாமையுடைய புன்மக்கள் சிறந்த செல்வத்தைஅடைந்தால் அவர் கொடைத்திறமும் அதுபோன்றஇயல்பினதேயாகும்.

(க-து.) புன்மக்கள் செல்வம்தேவையற்றோர்க் கெல்லாங் கொடுக்கும்படிநேர்ந்து வீணாகச் செலவழியும்.

(வி-ம்.) கடலுள்ளு மென்றார்களருள்ளுமென்றற்கு. மேகம் பயிரின்மேற்செல்லும்போது நீரை வெளிப்படுத்தாமற் கடலுலிங்களரிலுஞ் செல்லுங்கால் வீணாய்வெளிப்படுத்துதலின், உகுக்கும் என்னாதுகான்றுகுக்கும் என்றார்; கான்றல்,வெளிப்படுத்துதல். "இன்மை யரிதே வெளிறு"1என்புழிப் போல. வெண்மை அறியாமையுணர்த்திற்று.பெய்தற்குரிய தகுதியான இடத்தில் பெய்யாமற்காற்றால் ஈர்ந்து அலைப்புண்ட விடத்தே மேகம்நீரைக் கக்கிவிடுதலின், அவ்வாறே உதவுதற்குரியதகுதியாளர் இன்னா ரென்றறியாமல் தம்மைவன்கண்மை செய்யுந் தறுகணாளர்க்கும் வீணர்க்குமேகயவர் தமது செல்வத்தை உகுத்து விடுவாரென்றார்,‘வண்மையும் அன்ன தகைத்து' என்றார். "ஈர்ங்கைவிதிரார் கயவர் கொடிறுடைக்குங் கூன்கையரல்லாதவர்க்கு"2 என்றார் நாயனாரும்.

(9)


1. குறள். 51 : 3.

2. குறள். 108 : 7.

270ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார்;- தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.

(பொ-ள்.) ஓதியும் ஓதார்உணர்விலார் ஓதாதும் ஓதி யனையார் உணர்வுடையார் -இயற்கையறிவில்லாதவர் நூல்களை ஓதினாராயினும்ஓதாதவரேயாவர், இயற்கை யறிவுடையார் நூல்களைஓதாதிருந்தும் ஓதினாரோ டொப்ப விளங்குவர்.தூய்தாக நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார்செல்வரும் நல்கூர்ந்தார் ஈயாரெனின் -வறுமையுற்றும், மனத்தூய்மையோடிருநது பிறரை ஒன்றுஇரவாதவர் செல்வரேயாவர், செல்வரும் பிறர்க்குஒன்று உதவாரென்றால் வறுமையாளரேயாவர்.

(க-து.) அறிவும் உதவுங் குணமும்இல்லாமற் செல்வம் மாண்புறாது.

(வி-ம்.) உணர்வென்றது, ஈண்டு உலகநடையறிந்தொழுகும் இயற்கை யுணர்வு. கல்வியுடைமைசெல்முடைமை யென்னும் இரண்டும் முறையேஉலகநடையறிந்தொழுகல், உதவுதல் என்னும்ஒப்புரவியல்புகளாலேயே மாட்சிமைப்படும் என்பதுபொருள்; கல்வியும் ஒரு செல்வமாகலின்1உடன் உரைக்கப்பட்டது. இவ்விருவகைச்செல்வங்களும் நன்றியுள் செல்வமாம் வாயில்உணர்த்திற்று இச்செய்யுளென்க.

(10)


1. குறள். 40 : 10. சிந். 7 : 39.






2011/6/25 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

coral shree

unread,
Jun 26, 2011, 10:00:01 AM6/26/11
to mint...@googlegroups.com
அன்பின் ஐயா,

அருமையான பாடல்கள் மற்றும் விளக்கங்களுக்கு நன்றிகள் பல. வணக்கம்.

2011/6/26 Venkatram Shrinivas <see...@gmail.com>



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Venkatram Shrinivas

unread,
Jun 26, 2011, 3:22:04 PM6/26/11
to மின்தமிழ்
ஈயாமை 
 
பொருட்பால்
28. ஈயாமை

(பிறர்க்கு ஒன்று ஈயாமையின் இயல்புணர்த்துவது:)
271நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்;- அட்டது
அடைத்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.

(பொ-ள்.) நட்டார்க்கும்நள்ளாதவர்க்கும் உளவரையால் அட்டது பாத்துஉண்டல் அட்டு உண்டல் - சமைத்துண்ணுதலென்பது,தமக்குள்ள பொருளளவினால் தம்மிடம் உறவுகொண்டோர்க்கும் கொள்ளாத விருந்தினர்க்கும்தாம் சமைத்ததைப் பகுத்துதவிப் பின் தாம்உண்ணுதலாகும்; அட்டது அடைத்திருந்து உண்டொழுகும்ஆவது இல் மாக்கட்கு அடைக்குமாம் ஆண்டைக் கதவு -அவ்வாறன்றித் தாம் சமைத்ததைத் தமது வீட்டின்கதவையடைத்துக் கொண்டு தனியாயிருந்து தாமே உண்டுஉயிர் வாழ்கின்ற மறுமைப் பயனற்ற கீழ்மக்கட்குமேலுலகக் கதவு மூடப்படும்.

(க-து.) இம்மையிற்பிறர்க்கொன்று ஈயாதவர்க்கு மறுமையில்துறக்கவுலகின்பம் இல்லை.

(வி-ம்.) "கொடையொடுபட்டகுணனுடை மாந்தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு"1என்றார் முன்னும் . ஈயப்படும் பொருள்களில்உணவு முதன்மை யானதாகலின், அதனை ஈண்டுக் கூறினார்.அட்டுண்டல் என்பது, இல்லறம் நடத்துதலென்னும்பொருட்டு : இல்லிருந்து அட்டுண்டு ஒருவன்இல்வாழ்க்கை நடத்துதலாவது, பாத்துண்டலேயாம்என்பது பொருள், "தொல்லோர் சிறப்பின்விருந்தெதிர் கோடலும்"2 என்றார்பிறரும். ஆவது, மேன்மேற் பிறவியாக்கம் ; மக்கட்பிறவியின் பயனெய்தாமையின் ‘மாக்கள்'என்றார்.

(1)


1. நாலடி. 10 : 1.

2. சிலப். 16 -72-3.

272 எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர்;- மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள்.

(பொ-ள்.) எத்துணையானும் இயைந்தஅளவினால் சிற்றறம் செய்தார் தலைப்படுவர் -எவ்வளவு குறைந்த தாயினும் தமக்கிசைந்த அளவினால்சிறிய ஈதலறத்தைச் செய்தார் பிறவிப்பயனில்முற்படுவர்; மற்றைப் பெருஞ் செல்வம்எய்தியக்கால் பின் அறிதும் என்பார் அழிந்தார்பழிகடலத்துள் - மற்றுப். பெருஞ்செல்வம்எய்தினால் அறம் என்பதைப் பின்பு கருதுவோம்என்றிருப்போர் பிறர் பழிக்கின்ற துன்பக்கடலில் வீழ்ந்து அழிந்தவராவர்.

(க-து.) அறஞ் செய்யாதவர் இன்னற்கடலில் அழுந்தியவராவர்.

(வி-ம்.) ‘எத்துணையானு' மெனவும்,‘இயைந்த அளவினா' லெனவும், ‘சிற்றறம்' எனவும்சிறுமைப் பொருள் தோன்றப் பலவுங் கூறியது, மிகச்சிறிதாயினும் என்றற்பொருட்டு. மற்று :வினைமாற்று. ‘கடலத்துள்' என்றார், நிறைந்த துன்பவாழ்க்கையில் என்றற்கு. லகர ஈற்றுப் பெயர்அத்துச்சாரியை ஏற்று முடிந்தமை புறனடையாற்1கொள்ளப்படும், மீண்டும் தலையெடாமையின்‘அழிந்தா' ரெனப்பட்டது.

(2)


1. தொல். உருபி. 30.

273 துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்றீ கலான்
வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்.

(பொ-ள்.) துய்த்துக் கழியான்துறவோர்க்கு ஒன்று ஈகலான் வைத்துக் கழியும்மடவோனை - தான் துய்த்துச் செலவழிக்காமலும்துறவடைந்த உள்ளத்தார்க்கு ஒன்று கொடாமலும்செல்வத்தை வாளாதொகுத்து வைத்து உயிர் நீங்கியொழியும் அறிவிலாதானை, வைத்த பொருளும் அவனைநகும் உலகத்து அருளும் அவனை நகும் - அவன் அவ்வாறுதொகுத்து வைத்த பொருளும் அவன் அறியாமை கண்டுஉலகத்தில் அவனை நகையாடும், அவன் அப் பிறவியில்தொகுக்காத அருளும் அவனை நகையாடும்.

(க-து.) ஈயாத குணமுடையோர்க்குப்பொருட் பயனுமில்லை; அருட்பயனுமில்லை.

(வி-ம்.) கழியான் என்பதற்குக்காலங் கழியான் எனலும் ஆம். உறவோர்முதலியோர்க்கீதல் முன் வந்த மையின், ஈண்டுத்துறவோர்க்கீதல் நுவலப்பட்டது. "நன்றாய்ந்தடங்கினோர்க்கு ஈத்துண்டல்"1என்றார்பிறரும். "துறவோர்க்கு எதிர்தலும்."2 எனஇளங்கோவடிகளும் அருளுதல் காண்க. ஒரு பயனுமின்றிஅவன் பொருண் முயற்சி வீணானமையின், ‘மடவோன்'என்றார். இம்மைப் பயனாகிய பொருட்பயனையும்மறுமைப்பயனாகிய அருட் பயனையும்ஒருங்கிழந்தமையின் இரண்டும் அவனை நகும்என்றார். அவனது ஏழைமை புலப்படுத்தும் பொருட்டுநகுமெனப் பட்டது. அவனை என வேண்டாது விதந்தார்,அப்பழிக்கு அவனே உரியனாதலி னென்க.

(3)


1. அறநெறிச். 63.

2. சிலப். 16 : 72.

274 கொடுத்துலுந் துய்த்தலுந் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும்.

(பொ-ள்.) கொடுத்தலும்துய்த்தலும் தேற்றா இடுக்கு உடை உள்ளத்தான்பெற்ற பெருஞ்செல்வம் - தக்கார்க்கு ஈதலையும்தான் துய்த்தலையுந் தெளியாத இடுக்குப் பிடித்தஉள்ளமுடையோன் அடைந்த பெருஞ்செல்வமானது,இல்லத்து உரு உடைக்கன்னியரைப்போலப்பருவத்தால் ஏதிலான் துய்க்கப்படும் - தன் குடியிற்பிறந்து வளர்ந்த அழகுடைய கன்னிப் பெண்களைப்பருவகாலத்திற் பிறர் அடைந்து நுகர்தல் போலஉரிய காலத்தில் அயலவரால் துய்க்கப்படும்.

(க-து.) ஈயாதார் செல்வம்கடைசியில் ஏதிலரால் நுகரப்படும்.

(வி-ம்.) தேற்றா : தன்வினைக்கண்வந்தது; "வாயினால் பேசல் தேற்றேன்"1என்புழிப்போல. இடுக்குடையுள்ளம், சுருங்குதலுடையஉள்ளம்; என்றது, இவறன்மையுடைய உள்ளம்; உருவுடையென்றார். செல்வமும் நன்கு திரண்டு வருங்காலத்தில் என்பது தோன்ற. பருவத்தால் என்னும்ஆலுருபு, "காலத்தினாற் செய்த நன்றி"2யென்புழிப்போல ஏழாவதன் பொருளில்மயங்கிவந்தது. இவனுக்குத் துய்க்கும்இயைபின்மையின் அவ்வியைபுடைய பிறர் துய்ப்பரென்றபடி.

(4)


1. சிந். 1 : 221.

2. குறள். 11 : 2.

275 எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற் றூறல்பார்த் துண்பர்
மறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

(பொ-ள்.) எறிநீர்ப் பெருங்கடல்எய்தியிருந்தும் அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர் - அலை வீசுகின்றநீர்ப்பெருக்கினையுடைய பெரிய கடலைஅடுத்திருந்தும், அதன் நீர் பயன்படாமையால்அடிக்கடி நீர் வற்றுகின்ற சிறிய கிணற்றின்ஊற்றையே மக்கள் தேடிக்கண்டு உண்பர்; மறுமைஅறியாதார் ஆக்கத்தின் சான்றோர் கழி நல்குரவேதலை - ஆதலால் மறுமைப் பயனறியாதொழுகும்புல்லியோர் செல்வத்தினும் குணநிறைந்தபெரியோரது மிக்க வறுமையே மேலானதாகும்.

(க-து.) ஈயாதார் பெருஞ்செல்வராயிருப்பினும் அவரால் நன்மையில்லை.

(வி-ம்.) சான்றோரது சிறியஉதவியும் சற்றும் தீங்கற்றதாய் இருமை நலங்களும்பயப்பிக்குமாகலின், தலையென்றார். கீழ் 27ஆம்அதிகாரத்திலும்1 இச்செய்யுளின் உவமைவந்திருத்தலின், அதன் உரையையும் ஈண்டுநினைவுகூர்க.

(5)


1. நாலடி. 27 : 3.

276 எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானும்;- தனதாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்;
யானும் அதனை அது.

(பொ-ள்.) எனது எனது என்று இருக்கும்ஏழை பொருளை எனது எனது என்று இருப்பன் யானும் -என்னுடையது என்னுடையது என்றுஎண்ணிக்கொண்டிருக்கும் அறிவிலானது செல்வத்தைநானும் என்னுடையது என்னுடையது என்றுஎண்ணிக்கொண்டிருப்பேன்! ஏனென்றால், தனதாயின்தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான் யானும் அதனைஅது - அச்செல்வம் அவனுடையதாயின் அதற்கறிகுறியாகஅவன் அதனைப் பிறர்க்குதவாமலும் அதன் பயனைத்துய்க்காமலும் இருக்கின்றனன்; யானும்அச்செல்வத்தை அது செய்யாமலிருக்கின்றேன்.[இருவர்க்கும் அதனிடத்தில் வேறுபாடு யாதும்இல்லையாகலின் என்க.]

(க-து.) பிறர்க்கீயாத பொருள்,அதனை உடையானுக்கும் உரிமையுடையதன்று.

(வி-ம்.) இச்செய்யுள்பிறனொருவன் கூற்றாகக் கூறப்பட்டது.ஏழையென்றார், செல்வத்தைப் பயன்படுத்திஇன்புறலறியாமையின். ‘அது ' வென்றது வழங்குதலுந்துய்த்தலுஞ் செய்யாமையை ஈண்டுப்பெயர்ப்பயனிலையாய் நின்றது ; "பெயர் கொளவருதல்"1 என்பதனாற் கொள்க. இச்செய்யுள் நகைச்சுவையுடையதாய் நின்றது.

(6)


1. தொல். வேற்றுமையி.5.

277 வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் ;
இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல.

(பொ-ள்.) வழங்காத செல்வரின்நல்கூர்ந்தார் உய்ந்தார் - பிறர்க்கொன்றுஉதவாத செல்வர்களைவிட அச்செல்வமில்லாதவறுமையாளர்களே பிழைத்துக்கொண்டவர்கள்;ஏனென்றால், இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் -பொருளை வீணே தொகுத்து வைத்துப் பின் ஒருங்கேஇழந்து போனார் என்று உலகவராற் பழிக்கப்படுதலினின்று அவர்கள் பிழைத்துக் கொண்டனர்;உழந்ததனைக் காப்பு உய்ந்தார் - வருந்தித் தேடியபொருளைப் பின் காத்தலினின்றுந் தப்பினர்;கல்லுதலும் உய்ந்தார் - அதனைப் புதைத்து வைக்கும்பொருட்டுக் குழி தோண்டுதலுந் தப்பினர்; தம் கைநோவ யாப்பு உய்ந்தார் - தம்முடைய கைகள்நோவும்படி அதனைக் கட்டிச் சேமித்தலுந்தப்பினர்; உய்ந்த பல - இன்னும் இவ்வாறு அவர்கள்தப்பிக்கொண்ட வகைகள் பலவாகுமாதலின் என்க.

(க-து.) ஈயாத செல்வர்க்கு இன்னல்பல உண்டு.

(வி-ம்.) ஈயாமையாற்பயனில்லாமையோடு இன்னலும் பல வுண்மையால்,செல்வத்தின் இன்னலை யெய்தாவறியவர் அவ்வீயாதவரினும் உய்ந்தவராவரென்றார்.உய்ந்தாரென்று பலமுறை வந்தது வற்புறுத்தல்நோக்கியென்க. உய்ந்த : வினைப்பெயர்க் கிளவி.1

(7)


1.தொல். பெயரி. 14.

278தனதாகத் தான்கொடான் ; தாயத் தவருந்
தமதாய போழ்தே கொடாஅர் ; - தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார், தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும் போழ்து.

(பொ-ள்.) தனதாகத் தான் கொடான்- பொருள் தன்னுடையதாக அந்நிலையிலும் தான்பிறர்க்கு வழங்கான்; தாயத்தவரும் தமதாய போழ்துகொடார் - அவனுக்குப்பின் அவன் தாயத்தவரும்அப்பொருள் தம்முடையதான காலத்திலும் வழங்கார்;தனதாக முன்னே கொடுப்பின் அவர் கடியார் -அப்பொருள் முன்னே தன்னுடையதாயிருக்கஅந்நிலையில் அவன் பிறர்க்கு ஒன்று வழங்கின்அத்தாயத்தவர் அதனை நீக்கார்; தான் கடியான்பின்னை அவர் கொடுக்கும் போழ்து -தன்னுரிமைக்குப் பின் அத்தாயத்தவர் பிறர்க்குயாதேனும் வழங்குங்காலத்தில் தானும் அதனைநீக்கான்; அவ்வாறிருக்கும் போது,உரிமையுள்ளபோதே பிறர்க்குதவியாய் வாழ்ந்துபயன் பெறாமைக்குத்தான் காரணம் யாதோ?

(க-து.) தனக்குரிமையுள்ளபோதேஈந்து பயன் பெறுதல் நன்று.

(வி-ம்.) ஈயாது தன் தாயத்தவர்க்குவைத்தலால் அவரும் பயன் பெறுதலில்லாமையின்,பின்னுள்ளோர்க்கு வேண்டுமென்று இவறன்மை செய்துவைத்தலிலும் பயனில்லையென்றும்,தனக்குரிமையுமிருந்து பிறரால் தடையுமில்லாதகாலத்திற் பொருட்பயனை யடைதலே இனிதென்றும்விளக்கியபடியாகும். தலைமுறை தலைமுறையாகப் பொருட்பயனிழக்குங் கீழ்மக்களின் இயல்பு கூறி, இந்நிலைஎத்துணை இரங்கத்தக்கதென ஈயாமையின் இழிவுஇதனாற் புலப்படுத்தப்பட்டது.

279 இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை;- விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்.

(பொ-ள்.) இரவலர் கன்றாக ஈவார்ஆவாக விரகின் சுரப்பதாம் வண்மை - இரப்போர்கன்றுகளை ஒப்பக்கொடுப்போர் ஆன்களைஒப்பப்பூரிப்புடன் குறையாதளிப்பதேகொடையெனப்படும், விரகு இன்றி, வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய் வைத்துக் கொல்லச் சுரப்பதாங்கீழ் - அவ்வுயிர்க் கிளர்ச்சியின்றி, கறக்கவல்லவர் தம் விரல்களை அழுத்தி நோவுண்டாக்க அதுபொறாது பாலை ஒழுகச்செய்யும் ஆன்களைப்போற்சூழ்ச்சியுடையார் பல வாயில் கள் வைத்து வருத்தக்கீழ்மக்கள் அதனால் தம்பொருளைச்சொட்டுவோராவர்.

(க-து.) மனமகிழ்ச்சியில்லாமற்கொடுப்பதும் ஈயாமையை ஒக்கும்.

(வி-ம்.) விரகென்றது, கிளர்ச்சி;"வெண்குடை விரகுளிகவிப்ப"1என்புழிப்போல. ‘சுரப்பதென்றார், ஈவோர்செல்வம் அறாது பெருகி வருதலின், பின் உவமையில்வடித்தல் கூறினமையானும் கீழ்மக்கள் இயல்பு கூறுதலானும், சுரப்பதாங் கீழ்' என்னுமிடத்துச் சுரப்பதென்பதற்குச் சொட்டுவரென்றுரைத்துக் கொள்க. கீழ் என்றதற்கேற்பச் சுரப்பதென்பதும் அஃறிணை முடிபில் நின்றது. வாய்வைத்தல், சூழ்ச்சிகள் செய்தலென்னும் பொருட்டு.

(9)


1. பெருங். இலாவாண. 2 : 62.

280 ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.

(பொ-ள்.) ஈட்டலும் துன்பம் -பொருள் திரட்டு தலுந் துன்பம்; ஈட்டியஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் -திரட்டிய சிறந்த பொருளைப் பாதுகாத்தலும்அவ்வாறே மிக்க துன்பமாகும்; காத்தல் குறைபடின்துன்பம் - அங்ஙனம் பாதுகாத்த முறையில் பொருள்தன் அளவிற் குறைந்துபோகுமாயின் துன்பமே, கெடின்துன்பம் - இயற்கை நிகழ்ச்சிகளால் முற்றும்அழிந்துபோகுமானால் பின்னும் துன்பம்; துன்பக்குஉறைபதி பொருள் - ஆதலால், பொருள்துன்பங்களெல்லாவற்றிற்குந் தங்குமிடமென்க.

(க-து.) துன்பங்களுக்குஉறைவிடமாயுள்ள பொருளைப் பயன்படுத்துமுறை யறிந்துவழங்குதலே அறிவுடைமையாகும்.

(வி-ம்.) முறையறிந்துபயன்படுத்தினால் அப்போது அஃது இன்பமும் அறமும்பயந்து தன்னையுடையானை விளக்கமுறச் செய்தலின்,‘ஒண்பொருள்' என்றார், மற்ற இரண்டனுள் முன்னதுவினைமாற்று; பின்னது அசை, காத்தல் குறைபடின்என்னுமிடத்துக் காத்தலிற் குறைபடின் என உருபுவிரித்துக் கொள்க. துன்பக்கு என்பதில் அத்துச்சாரியை தொக்கு நின்றது. துன்பம் என்பதைமனத்தளர்ச்சி1 என்றுரைத்தார்சிலப்பதிகார அரும்பத உரைகாரர். பிறர்க்குவழங்கி ஈதலறம் புரிதலால் இத்துன்பங்களெல்லாந்தோன்றாதொழிந்து இன்பமும் உண்டாகுமாயின், அதுவன்றோ செயற்பாலதென்பது கருத்து.

(10)


1. சிலப். 16 : 79 - உரை.


2011/6/26 Venkatram Shrinivas <see...@gmail.com>
நன்னெறியில் செல்வம் 



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 27, 2011, 3:10:53 PM6/27/11
to மின்தமிழ்
திரையை மூடுக
இன்மை 
 
பொருட்பால்
29. இன்மை
(பொருளில்லாமையின் இழிவை உணர்த்துவது.)
281அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்
செத்த பிணத்திற் கடை.

(பொ-ள்.) அத்து இட்ட கூறைஅரைச்சுற்றி வாழினும் பத்து எட்டு உடைமைபலருள்ளும் பாடு எய்தும் - துவர் ஊட்டிய ஆடையைஇடுப்பில் உடுத்திக்கொண்டு ஞானவாழ்வில்வாழ்ந்தாலும் பத்தானும் எட்டானும் பொருளுடைமைபலரிடத்திலும் பெருமையடையும்; ஒத்தகுடிப்பிறந்தக்கண்ணும் ஒன்று இல்லாதார் செத்தபிணத்தின் கடை - ஏற்ற உயர்குடிக்கண் பிறந்தாலும்ஒரு பொருளில்லாதார் செத்த பிணத்தினுங்கடைப்பட்டவராவர்.

(க-து.) துறவு நிலையும் உயர்குடிப்பிறப்பும் உடையவராயினும் வறுமையில்லாமையேபெருமை தரும்.

(வி-ம்.) "அத்துண் ஆடையர்"என்றார் பிறரும்1 அரைச் சுற்றிவாழினுமென்றார், பற்றற்றிருக்கும் எளிமைதோன்ற. பத்தெட்டென்றது, ஒரு சிற்றளவான குத்துமதிப்பு. பெரும்பான்மையோரானும்மதிக்கப்படுமென்றற்குப் பலருள்ளும் எனப்பட்டது.பலர்க்கும் உடன் பாடான வென்றற்கு ‘ஒத்த'வென்றார். உயர்குடி நலனுந்துறவு மாண்பு மிருந்தும்பொருளில்லாதார் இத்துணை இழிக்கப்படுவரெனின்,ஏனையோரது வறுமையின் இழிவு கூறவேண்டாதாயிற்று.

(1)


1. சிந். 7 : 292.

282 நீரினும் நுண்ணிது நெய்யென்பார், நெய்பினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்;- தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைந்து.

(பொ-ள்.) நீரினும் நுண்ணிது நெய்என்பர் - நெய் நீரைப் பார்க்கினும்நுட்பமானதென்று அறிந்தோர் கூறுவர்; நெய்யினும்புகை நுட்பம் யாரும் அறிவர் - இனி, நெய்யைப்பார்க்கினும் புகை நுட்பமென்பதை அனைவரும்அறிவர், தேரின் - ஆராய்ந்தால்நிரப்பிடும்பையாளன் புகையும் புகற்கு அரிய பூழைநுழைந்து புகும் - வறுமையாகிய துன்பமுடையோன் அப்புகையும் புகுதற்கு அரிய மிக நுண்ணிய புழையிலும்நுழைந்து புகுவான்.

(க-து.) வறுமைத் துன்பமுடையோன் மிகமெல்லியனாவான்.

(வி-ம்.) நெய் நீரினும்நுண்ணிதாதலைப் பலரும் அறியாராதலின், புகைநுட்பமென்றதற்கு யாருமறிவரென்று கூறினாற்போற்கூறாது, பொதுவாக ‘என்பர்' என்றார். அதிகாரம்இன்மை குறித்ததாகலின், ‘தேரின் இரப்பிடும்பையாளன்' எனப் பிரித்துரைத்தல் சிறவாது. "நிச்சநிரப்பிடும்பை"1என்றார் பிறரும்,‘நிரம்பிடும்பை யென்பது, பெரும்பாலும் பசிமிகுதியால் வயிற்றை நிரப்பும் இன்னலுணர்த்திமிக்க வறுமையை விளக்குமாதலின், அவன் மிகமெல்லியன் எனற்குப் புகையும் புகற்கரிய பூழைநுழைந்து புகுமென்றார். புகுதலென்றது, இரத்தல்.

(2)


1. இறைய. 1. உரை.

283கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்; -கொல்லைக்
கலாஅற் கிளிகடியுங் கானக நாட!
இலாஅஅர்க் கல்லை தமர்.

(பொ-ள்.) கல் ஓங்கு உயர் வரைமேல்காந்தள் மலராக்கால் செல்லா செம்பொறிவண்டினம் - கற்கள் வளர்ந்துள்ள உயர்ந்தமலையின்மேல் காந்தள் முதலிய மலர்கள்மலராவிட்டால் சிவந்த புள்ளிகளையுடைய வண்டின்திரள் அங்கே செல்லமாட்டா: கொல்லைக்கலால்கிளி கடியும் கானக நாட! இலார்க்கு இல்லைதமர் -ஆதலால், தினை முதலிய புனங்களில் கிளி முதலியபறவைகளைச் சிறுசிறு கற்களால் ஒட்டுகின்றகாட்டையுடைய நாடனே, பொருளில்லாதவறியோரிடத்தில் உறவினர் வருவதில்லை.

(க-து.) வறியோரை எவரும் அணுகார்.

(வி-ம்.) கற்கள் ஓங்குதலென்றது,உயர்ந்து தெரிதல்; மலர்கள் மலர்தலில்லாதமலையென்றற்குக் கல்லோங்கு வரை எனப்பட்டது. ஆம்: அசை, கானகமென்றது, மலையையடுத்த கானகமென்க.நுகர்தற்குரிய பொருள்களில்லாமையின் தமர்வருதலில்லை என்றாராயிற்று.

284 உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே; -வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்.

(பொ-ள்.) உடைந்துழிக்காகம்போல் உண்டாய போழ்தின் தொண்டு ஆயிரவர்தொகுப - ஒருவன் இறந்து விட்டபோது அவனுடம்பைக்காகங்கள் சூழ்ந்து மொய்த்துக்கொள்வதுபோல்ஒருவற்குச் செல்வமுண்டான காலத்தில் அவனுக்குஒன்பதனாயிரம் பேர் ஏவல் புரிவோராய் வந்துகூடுவர்; வண்டாய்த்திரிதருங் காலத்துத்தீதிலிரோ என்பார் ஒருவரும் இவ்வுலகத்து இல் -ஆனால் வறுமையினால் உணவுக்காக ஒருவர் வண்டுபோற்பலவிடங்களிலும் அலையுங்காலத்தில் அவரைத்தீங்கில்லாம லிருக்கிறீர்களா என்று நலம்உசாவுவார் இவ்வுலகத்தில் ஒருவரும் இல்லை.

(க-து.) பொருளில்லாதவர்களைஉலகம் பொருள் செய்யாது.

(வி-ம்.) உடம்பு கட்டுத் தளர்ந்துஉயிர் நீங்குதலின் இறத்தல் உடைதலெனப்பட்டது.தொண்டு, ஈண்டு இரட்டுற மொழிதல்; தொண்டென்னுஞ்சொல் ஒன்பதென்னும் பொருட்டுமாதல்"தொண்டுபடு திவவின்"1என்னும்மலைபடுகடாத்துட் காண்க. ஒன்பதினாயிரம் என ஓர்அளவு கூறினார், மிகுதி தேற்றுதற்கு. உணவுநாடிச்சேறற்கும், சிறிது சிறிதாகப் பெறுதற்கும்,அலைதற்கும் வண்டுவமம் வந்தது.

(4)


1. மலைபடு. 21.

285பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு.

(பொ-ள்.) கறங்கு அருவி கல்மேல்கழூஉம் கணமலை நல் நாட - பாய்ந்து ஒலிக்கின்றஅருவிநீர் கற்களின் மேற்புறத்தைக் கழுவுகின்றகூட்டமான மலைகளையுடைய சிறந்த நாடனே!. இன்மைதழுவப்பட்டார்க்குப் பிறந்த குலம் மாயும்பேராண்மை மாயும் சிறந்த தம் கல்வியும் மாயும் -உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர் பிறந்தகுலத்தின் பெருமை கெடும்; அவருடைய பேராற்றல்கெடும்; எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம் கல்விநிலையுங் கெடும்.

(க-து.) வறுமை பொருந்தியவர்க்குஇருமை நலங்களுங் கெடும்

(வி-ம்.) குலமென்றது ஈண்டுக் குடி;ஆண்மையென்றது திறமை. கல்வி எழுமையும்ஏமாப்புடைத்தாகலின்1 ‘சிறந்த கல்வி'யெனப்பட்டது. இன்மையால் என உருபு விரித்துக்கொள்க.

(5)


1. குறள். 40 : 80

286 உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூ ரிருந்துமொன் றாற்றாதான்; உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தின னாதலே நன்று.

(பொ-ள்.) உள் கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு உள்ளூர் இருந்தும் ஒன்றுஆற்றாதான் - உடம்பில் மிகுகின்ற பசித்துன்பத்தால் தான் இருக்குமிடத்தை நாடிவந்தவர்கட்குத் தான் உள்ளூரிலிருந்தும் நன்று உதவஇயலாதவன், உள்ளூர் இருந்து உயிர்கொன்னே கழியாதுதான் போய் விருத்தினனாதலே ஒன்று-அவ்வாறுஉள்ளூரில் இருந்து தனது உயிர் வாழ்க்கையை வீணேகழிக்காமல் தான் வெளியூர்கட்குப் போய்ப்பிறர் இல்லத்தில் விருந்தினனாயிருந்து உண்ணுதலேநலமாகும்.

(க-து.) பிறர்க்கொன்று உதவ இயலாதவறியோனது உயிர்வாழ்க்கை வீண் என்க.

(வி-ம்.) நேரத்தில் உணவுகிட்டாமை தோன்ற ‘மிகுகின்ற பசி' யென்றார்:நாடி வருவோர்க்கு இல்லை யென்றால் பெருந்தீதாகலின், ‘நசைஇச் சென்றார் கட்கு' என்றுவிதந்தார்; "இரப்போர்க்கு ஈயா இன்மை"1என்றார் பிறரும். வறுமை மிகுதி தேற்றுதற்கு‘உள்ளூர் இருந்தும்' எனப்பட்டது. உயிர் என்றது,ஈண்டுயிர் வாழ்க்கை. ‘இரத்தலே நன்' றென்றற்கு,‘விருந்தினனாதலே நன்' றென்றது, இகழ்ச்சி.உள்ளூரில் ஒருவர்க்கொருவர் விருந்தினராதல்செல்லாமையின், ‘போய் விருந்தினனாதல் நன்'றென்று கூறினார். பிறர்க்கு விருந்தினராகுமுகமாகவேனும் அவர்க்குப் புண்ணியம் விளைய ஏதுவாகித்தனதுயிர் வாழ்க்கையைப் பயனுடையதாக்குகவெனஇகழ்ந்து கூறுவார். ‘கொன்னே கழியாது'என்றாரென்க. கொன் ஈண்டுப் பயனின்மைப்பொருட்டு.2

(6)


1. புறம், 72.

2. தொல். இடை. 6.

287 நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; -கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார்.

(பொ-ள்.) கூர்மையின் முல்லைஅலைக்கும் எயிற்றாய் - தமது கூர்மையால்முல்லையரும்புகளை வெல்லும் பற்களையுடைய பெண்ணே!,நிரப்பு என்னும் அல்லல் அடையப்பட்டார்நீர்மையே, யன்றி நிரம்ப எழுந்து தம் கூர்மையும்எல்லாம் ஒருங்கு இழப்பார் - வறுமை என்னும்இன்னலால் தாக்குண்டவர் தமது இயற்கையறிவையேயன்றி நிரம்ப வளர்த்த தமது கூரியசெயற்கையறிவையும் என எல்லாம் ஒருங்கேஇழந்துவிடுவர்.

(க-து.) பொருளில்லாதவர்க்குத்தம் இயற்கை செயற்கை யறிவுகளும் மழுங்கிவிடும்.

(வி-ம்.) நீர்மையென்றதுஇயற்கையியல்பு ; "நெறியிற்றிரியா நீர்மை"1என்புழிப்போல. நிரம்ப எழுந்த கூர்மையென்று மேல்வருதலின் ; இஃது இயற்கை யறிவினை உணர்த்திநின்றது; எனவே, கூர்மையென்பது செயற்கையறிவெனக்கொள்ளப்படும்; இனி, இயற்கைநல்லியல்புகளேயன்றி நன்கு மலர்ந்த தம் கூரியஅறிவினையும் என எல்லாம் ஒருங்கிழப்பர்என்றுரைத்தலும் ஒன்று. ஒருங்கிழப்பரென்றார்,எல்லாவற்றின் மலர்ச்சிக்கும் உலகத்திற்பொருளே ஏதுவாயிருத்தலின் என்க; "பொருள்துன்னுங்காலைத் துன்னாதன இல்லையே"2என்றார் பிறரும். (7)


1. பெருங். இலாவா. 17 : 174

2. சிந். 8 : 35.

288 இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டுங்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று.

(பொ-ள்.) இட்டு ஆற்றுப்பட்டு ஒன்றுஇரந்தவர்க்கு ஆற்றாதுமுட்டு ஆற்றுப்பட்டு முயன்றுஉள்ளூர் வாழ்தலின் - சிறுமையாகிய வறுமை வழியில்அகப்பட்டுத் தம்மிடம் ஒன்று இரந்தவர்கட்கு உதவமாட்டாமல் முட்டுப்பாடான முறைமையில்இருந்துகொண்டு முயற்சியோடு உள்ளூரில் உயிர்வாழ்தலைவிட, நெடு ஆற்றுச் சென்று நிரை மனையில்கை நீட்டும் கெடு ஆறு வாழ்க்கையே நன்று - தொலைவழிநடந்துபோய் அங்கங்கும் வரிசையாக உள்ளவீடுகளிற் கை நீட்டி இரந்துண்ணுங் கெடுவழிவாழ்க்கையே நன்றாகும்.

(க-து.) பிறர்க்கொன்றுஉதவமாட்டாத வறுமை வாழ்வினும் நாடு கடந்துபோய்இரந்துண்ணும் இழிவு வாழ்வே நன்று.

(வி-ம்.) இட்டாறு-சிறுமை வழி;"இட்டிய குயின்ற துறை" என்புழிப்போல; என்றது,ஈண்டு வறுமை. வாழ்க்கை எளிதாக நடவாமையின்,‘முயன்று' என்றார். இரந்துண்ணும் வாழ்வில்உயிர்ப்பண்பு கிளர்ந்தெழாமையாலும், தமக்கும்பிறர்க்கும் இன்னாமை தருவதானாலும் அது1"கெட்டாற்றுவாழ்க்கை" யென்று விதந்து கூறப்பட்டமைபெரிதுங் கருத்திருத்தற்பாலது "இன்னாமைவேண்டின் இரவெழுக"2 என்றார் பிறரும்.நன்று என்றார் வினையொழியும் வரையில் உயிரேனும்உடம்பில் நிலைத்திருக்க உதவுதலின் என்க.

(8)


1. ஐங். 22: 5

2. நான்மணிக். 17.

289கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக்-குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
துப்புரவு சென்றுலந்தக் கால்.

(பொ-ள்.) துப்புரவு சென்றுஉலந்தக்கால் - நுகரப்படும் பொருள்கள் நீங்கிவறுமையுற்றவிடத்து, கடகம் செறிந்த தம் கைகளால் -முன்பு செல்வராயிருந்தபோது கடகம் செறிந்திருந்ததம் கைகளினால், வாங்கி அடகு பறித்து - தூறுகளைவளைத்து அதிலுள்ள கீரைகளைப் பறித்து, கொண்டுஅட்டு - அதனையே முதன்மையாகக் கருதி உப்பில்லாமல்அவித்து, குடை கலனா உப்பு இலிவெந்தை தின்று உள்அற்று வாழ்ப - பனையோலையின் முடக்கே உண்கலானகஅவ் வுப்பில்லாததான அவியலைமென்று வாயாறிஅமைதியற்று உயிர் வாழ்வார்கள்.

(க-து.) வறுமை நிலையினும்அமைதியிழந்த இழிந்த நிலை வேறில்லை.

(வி-ம்.) குடைவாகக்கட்டப்படுதலின் ஓலைப்பட்டை ‘குடை' யெனப்பட்டது;"வேள்நீர் உண்ட குடை"1 என்றார்கலியினும்; இழிவு தோன்ற ‘வெந்தை' என்றும்,பசியாறாது வாளா மெல்லுதல் தோன்றத் ‘தின்று'என்றும் விதந்தார். வெந்தை, அவியலெனப்படும்;"பராரை வேலை"2 யென்றார் பிறரும்,உலத்தல் ஈண்டு நிலைகெடுதல்.

(9)


1. கலித். 23.

2. பொருந. 104.

290 ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம்; -நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் நண்குன்ற நன்னாட!
வாழாதார்க் கில்லை தமர்.

(பொ-ள்.) ஆர்த்த பொறியஅணிகிளர் வண்டினம் பூத்து ஒழி கொம்பின்மேல்செல்லா - நிறைந்த புள்ளிகளையுடைய அழகுமிக்கவண்டுக்கூட்டங்கள், பூத்தல் மாறியபூக்கொம்புகளிடத்திற் செல்லமாட்ட, நீர்த்துஅருவி தாழாது உயர் சிறப்பின் தண் குன்ற நல் நாட -இனிய நீரருவி அறாது ஒழுகுகின்ற மிக்கசிறப்பினையுடைய குளிர்ச்சியான மலைகளையுடையஉயர்ந்த நாடனே!. வாழாதார்க்கு இல்லை தமர் -ஆதலாற் பொருள் மலர்ச்சியில்லாத வறியோர்க்குஉறவாவோர் இல்லை.

(க-து.) நுகர்பொருள்கள் மாறியவறியோரை எவரும் நாடார்.

(வி-ம்.) பூத்து: தொழிற்பெயர்ப்பொருளினின்றது. சிலகாலம் வரையிற் பூத்துப், பின்பூவெடுத்தலே மாறிப் போன பூங்கொம்புகள் இங்குக்குறிக்கப்பட்டன. ஆம்: அசை. உவமையின் கருத்தாற்,பொருள் மலர்ச்சியும் பிறர்க் குதவுதலுமுடையராய்உயிர் வாழ்தலே வாழ்தலாகும்மென்பது பெறப்படும்.இச்செய்யுட் பொருள், முன்னும் வந்தது.1

(10)


1. நாலடி. 29 : 3.





2011/6/27 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 28, 2011, 3:11:32 PM6/28/11
to மின்தமிழ்
மானம் 
 
பொருட்பால்
30. மானம்

[என்றது, தாழ்வு தாளாத உள்ளவியல்பு]
291திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதங் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமே,
மன முடையார் மனம்.

(பொ-ள்.) திரு மதுகையாகத் திறன்இலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் -செல்வம் வலிமையாகக் கயவர் செய்யும்வரம்புகடந்த செயல்களைப்பார்த்தவிடத்தும், எரிமண்டிக் கானம் தலைப்பட்ட தீப்போல் கனலும்மானமுடையார் மனம் - மானமுடைய நன்மக்களின் மனம்எரிதல் மிகுந்து காட்டில் உண்டான காட்டுத்தீப்போல் அனல் கொள்ளும்.

(க-து.) தகாத செயல்களைக் கண்டால்மானமுடையார் மனம் அழல்கொள்ளும்.

(வி-ம்.) மதுகை யென்றது, வலிமை;"அனைமதுகையர் கொல்"1என்புழிப்போல. திறனிலார் என்றது கயவரை:பெருமிதம் என்றது, பெருமிதம் போன்ற பொருந்தாச்செயல்களை இங்குணர்த்திற்று. கண்டக் கடைத்தும்என்னும் உம்மை, பிற பொருந்தாச் செயல்களைஅறிந்தவிடத்துங் கனலல்போல் என்பது விளக்கிஇறந்தது தழீஇயது.

(1)


1. குறுந். 290.

292 என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பா டுரைப்பரோ தம்முடையார்; -தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.

(பொ-ள்.) என்பாய் உகினும்இயல்பிலார் பின் சென்று தம் பாடு உரைப்பரோ தம்உடையார் - தன்மானமுடையோர், தாம் எலும்பாகித்தசை சிதையினும், குணமில்லாதவர் பின் சென்றுதம்முடைய இடுக்கண்களைச்சொல்லிக்கொள்ளமாட்டார்; தம் பாடு உரையாமைமுன்னுணரும் ஒண்மையுடையார்க்குத் தாம் உற்ற நோய்உடையரோ - தம்முடைய துன்பங்களைத் தாம்எடுத்துரையாமைக்கு முன்பே அவற்றை உணர்ந்து உதவும்அறிவு விளக்கமுடைய குணசாலிகட்கும் தாம் அடைந்தஇன்னல்களை அவர் உரையார்போலும்!(மானமுடையாரியற்கை அத்தகைத்து!)

(க-து.) மானமுடையார் தம்துன்பங்களைப் பிறர்க்குப் புலப்படுத்தார்.

(வி-ம்.) உகுதல், தசை வீழ்தல்;இயல்வு, இயற்கையான நற்குணம். "ஏதிலாரென்பார்இயல்பில்லார்"1என்புழிப் போல.ஓகாரங்களுள் முன்னது எதிர்மறை: பின்னது ஐயங் கருதிவினா. தம் என்றது, தம் உயிரியல் பாகிய மானத்தைஉணர்த்தா நின்றது. உடையார்க்கு மென்று உயர்வுசிறப்பும்மை விரித்துக்கொள்க.

(2)


1. நான்மணிக். 44

293யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல்-நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுசு செல்வர் தொடர்பு.

(பொ-ள்.) யாமாயின் எம் இல்லம்காட்டுதும் - வறியேமாகிய யாமாயின் செல்வர்கட்குஉண்ணவும் இளைப்பாறவும் எம் இல்லத்தை இடமாகஉதவுகின்றோம். தாமாயின் காணவே கற்பு அழியும்என்பார்போல் நாணிசோறும் புறங்கடைவைத்துஈவர்-ஆனால் அச்செல்வர்களாயின் யாம்காணுமளவிலும் தம் மனைவியரின் கற்புக்கெடும் என்றுகருதுவார்போல் மனங் கூசிச், சோறும் வாயிலின்வெளியில் வைத்துப் போடுவர்; அதனால் மறந்திடுகசெல்வர் தொடர்பு - ஆதலால் பிறரைப்பொருள்செய்யாத செல்வர்களின் தொடர்பை மக்கள்மறந்துவிடுவார்களாக!

(க-து.) தாம் வறியராயினும் தம்மைமதியாத செல்வர்களின் தொடர்பை மானமுடையோர்மறந்து விடுதல் வேண்டும்.

(வி-ம்.) நாணி என்றார்,அச்சோறிடுதலுந் தகாததொன்று செய்தலாக அவர்கருதுதலின். சோறும் என்னும் உம்மை, உள்ளே இருந்துஉண்ணுதற்குரிய உணவும் என்னும் பொருள் தந்து உயர்வுசிறப்பாய், இனிச் சற்று இளைப்பாறும் பொருட்டுப்படுத்தலும் புறக்கடைக் கண்ணதே என்னும் பொருள்பெறுவித்து எதிரது தழீஇயதாய் நின்றது.

294இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடா
தும்மையும் நல்ல பயத்தலால், -செம்மையின்
நானம் கமழுங் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.

(பொ-ள்.) செம்மையின் -நடுநிலையாக நோக்குமிடத்து, நானம் கமழும்கதுப்பினாய் - கத்தூரி மணக்குங் கூந்தலுடையபெண்ணே!: மானமுடையார், மதிப்பு - மானமுடையார்நடக்கை, இம்மையும் நன்றாம் -புகழும் இன்பமுந்தருதலால் இம்மையிலும் நன்றாகும்; இயல்நெறியும்கைவிடாது உம்மையும் நல்ல பயத்தலால் நன்றேஉண்மை நெறியும் வழுவுதலின்றி மேலுலகிலும்இன்பமாவன உண்டாக்குதலால் மறுமைக்கும்நல்லதேயாம்.

(க-து.) மானமுடையார் ஒழுக்கம்இருமைக்கும் இன்பந் தரும்.

(வி-ம்.) இயல்நெறி வீடுபயப்பதாகலின், இயல்நெறியுமென்று உம்மைதந்தார்; நாயனாரும் "பேராவியற்கை"1என வீட்டினை விதந்தமை காண்க. உம்மையென்றது,மேலுலகம். மதிதொழுகும் ஒழுக்கம்,மதிப்பெனப்பட்டது.

(4)


1. குறள், 37 : 10.

295 பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; -சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.

(பொ-ள்.) பாவமும் ஏனைப் பழியும்பட வருவசாயினும் சான்றவர் செய்கலார் -மறுமைக்குத் தீவினையும் இம்மைக்கு மற்றைப்பழியும் உண்டாகும்படி நேர்வனதாம் இறப்பதாயினும்சான்றோர் செய்யமாட்டார்: சாதல் ஒருநாள்ஒருபொழுதைத் துன்பம் அவைபோல் அருநவை ஆற்றுதல்இன்று - ஏனென்றால், இறத்தல் என்பது ஒரு நாளில் ஒருநேரத்துத் துன்பம்; ஆனால் அப் பாவமும்பழியும்போல் என்றுந் துன்பத்துக் கேதுவானபெருங்குற்றம் பயப்பிப்பது வேறொன்றும் இல்லை.

(க-து.) மானமுடையோர்,பழிபாவஞ்கட்கு அஞ்சியொழுகுவர்.

(வி-ம்.) ஏனையென்றார்மற்றொன்றாகிய வென்றற்கு. வருவ:பெயர். சாதலின்இன்னாத தில்லை யாகலின்1 அவ்வின்னலின்உயர்வு தோன்றச் சாயினும் என்றார். அருநவை,தீர்தற்கரிய குற்றம்.

(5)


1. குறள். 23 - 10

296 மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்
செல்வ ரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார்.

(பொ-ள்.) மல்லல் மா ஞாலத்துவாழ்பவருள் எல்லாம் - வளப்பமிக்க இப் பெரியஉலகில் உயிர்வாழ்பவரெல்லாருள்ளும், செவ்வர்எனினும் கொடாதவர் நல் கூர்ந்தார் -பொருளுடையராயினும் பிறர்க்கொன்று உதவாதஇயல்புடையார் வறியரேயாவர்; நல்கூர்ந்தக்கண்ணும் பெருமுத்தரையரே செல்வரைச் சென்றுஇரவாதார் - வறுமையுற்ற விடத்தும்பொருளுடையாரிடம் சென்று ஒன்று இரவாதவர்பெருமுத்தரையரையொத்த பெருஞ் செல்வரேயாவர்

(க-து.) உலகத்தில் ஒன்று உதவும்நிலையும் இரவா நிலையுமே செல்வ நிலையாகும்.

(வி-ம்.) பெருமுத்தரைய1ரென்பார், இவ் வாசிரியர் காலத்தில் விளங்கியபெருஞ் செல்வராவார்; பெருமுத்தரையரே என்னும்ஏகாரத்தை நல்கூர்ந்தா ரென்பதற்கும் ஒட்டுக.கொடாதவர் செல்வத்தாற் பயன் பெறாமையின்,‘நல்கூர்ந்தா' ரெனவும், நல்கூர்ந்தக் கண்ணும்மானத்தோடு மனவமைதியாய் வாழ்தலின் பிறரைஇரவாதவர் பெருமுத்தரையரே யெனவுங் கூறப்பட்டனர்.

(6)


1. நாலடி. 20 : 10.

297 கடையெலாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெல்லாம் இன்னாமை அஞ்சும் - புடைபரந்த
விற்புருவ வேனெடுங் கண்ணாய்! தலையெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்.

(பொ-ள்.) புடை பரந்த வில் புருவவேல் நெடு கண்ணாய் - பக்கங்களில் தசை பருத்தவில்போலும் புருவங்களையுடைய வேல்போலும் நீண்டகண்களமைந்த பெண்ணே!; கடை எலாம் காய் பசிஅஞ்சும், இடை எலாம் இன்னாமை அஞ்சும், மற்று ஏனைத்தலை எல்லாம் சொல்பழி அஞ்சிவிடும் - மக்களிற்கடையானவரெல்லாரும் தம்மை வருத்தும்வயிற்றுப்பசிக்கு அஞ்சி மானங் கைவிடுவர்;இடைப்பட்டவ ரெல்லாரும் தம் வாழ்க்கையில் வரும்உயிரிறுதி முதலிய துன்பங்களுக்கு அஞ்சி மானத்தைவிட்டொழுகுவார்; ஆனால் மற்றத்தலையானவரெல்லாம் பழிச் சொற்களுக்கு அஞ்சிமானம் விடாது நடந்து கொள்வர்.

(க-து.) பழிச்சொல்லுக்கு அஞ்சுகின்ற மானத்தோடுஉயிர் வாழ்தலே தலைமக்களின் செயலாகும்.

(வி-ம்.) 1"காய்பசிக்கடும்பேய்" என்றார் பிறரும், கடைஇடை தலையென்பன மக்களைக் குறித்தன; மற்று: வினைமாற்று.பசி நீக்கமே நோக்கமாக உயிர்வாழ்வோர்கடையானவரெனவும், ஏனை வாழ்க்கையின்பமேநோக்கமாக உயிர் வாழ்வோர் இடையானவரெனவும்,மானங்காத்தலே நோக்கமாக உயிர்வாழ்வோர்தலையானவரெனவும் இச்செய்யுள் கூறிற்று; மானமாவதுபழிச்சொல் அஞ்சியொழுகுதலென்க. "சான்றோர்பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்"2என்றார் அகத்தினும். விடும் என்னும் விகுதிஅந்நிலையில் அவர் உறுதியுடன் நடந்துகொள்வரென்னுந் துணிவுப் பொருள் உணர்த்திற்று.சாதலின் இன்னாத தில்லையாகலின், இன்னாமைஉயிரிறுதியாகிய துன்பத்தையும் உணர்த்துதல் கண்டுகொள்ளப்படும்; புருவங்களையுடைய கண் என்க.

(7)


1. மணி. 6 : 82.

2. அகநா. 112.

298நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்-கொல்லன்
உலையூதுந் தீயேபோல் உள்கனலுங் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.

(பொ-ள்.) நல்லர், பெரிது அளியர்,நல்கூர்ந்தார் என்று எள்ளிச் செல்வர்சிறுநோக்கு நோக்குங்கால இவர் நல்லவர், மிகவுங்கனிவுடையர், ஆயினும் வலியராயிருக்கின்றார் என்றுஇகழ்ச்சியால் நல்லியல்புகளை இகழ்ந்து கூறிச்செல்வர்கள் சிறுமைப் பார்வை பார்க்குங்கால்,தலையாய சான்றோர் மனம் கொல்லன் உலையூதும்தீயேபோல் உள் கனலும் - தலைமக்களானசான்றோர்களின் உள்ளம் கொல்லனதுஉலைக்களத்தில் ஊதியெழுந்தீச் சுடர்போல்உள்ளே அழல் கொள்ளும்.

(க-து.) மெய்யறிவின்றிநல்லியல்புகளைப் பழித்தொதுக்கும் செல்வர்உரைகட்குச் சான்றோர் உள்ளம் மிகவும் அழலும்.

(வி-ம்.) சிறு நோக்கு, பொருள்செயா நோக்கு;"சிறு நகை"1 என்புழிப்போல. கொல்லும் ஓவும்அசை, நல்லியல்புகள்பால் மதிப்பின்மையேமானிகள் உள்ளம் அத்தனை அழல் கொள்ளுதற்குஏதுவாயிற்று. தலையாய என்றார் அச் செல்வர் முதல்அனைவரினும் மேலாயவரென்றற்கு. சினம் ஆறுதல்அவரியல்பாகலின், உள்கனலும் எனப்பட்டது.

(8)


1. மணிமே. 18 : 86 .

299 நச்சியார்க் கீயாமை நாணன்று, நாணாளும்
அச்சத்தால் நாணுதல் நாணன்றாம்; எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லா திருப்பது நாண்.

(பொ-ள்.) நச்சியார்க்கு ஈயாமைநாண் அன்று- தம்மை விரும்பி வந்தடைந்தவர்க்குஒன்று உதவமாட்டாமை நாண் அன்று; நாள் நாளும்அச்சத்தால் நாணுதல் நாண் அன்று - நாடோறும்தீயவை அஞ்சும் அச்சத்தால் அவை செய்ய நாணுதலும்ஒரு நாண் அன்று; எச்சத்தில் மெல்லியராகித் தம்மேலாயார் செய்தது சொல்லாதிருப்பது; நாண்-தமதுமரபில் தாம் வீரம் முதலியவற்றில் எளியராகித்தம் முன்னோர் ஆற்றிய அரியசெயல்களைத்தமக்கொரு பெருமையாகச் சொல்லிக்கொள்ளாதிருத்தலே மானிகட்கு மேலானநாணமாவதாகும்.

(க-து.) தம் செயல்களால் தாம்பெருமை கொள்ளுதலே மானிகட்கு அழகு.

(வி-ம்.) நாணம்; ஈண்டுநல்லியல்பாகக் கருதப்பட்டது. நச்சியார்க்குஈயமாட்டாமை காரணமாக நாணுதலும் அச்சத்தால்நாணுதலும் உயர்ந்த நாணங்களாயினும் அவற்றினும்உயர்ந்ததொரு நாணத்தின் மேன்மைதேற்றும்பொருட்டு. அதனை நோக்க அவை நாண் அல்லஎன்றார். ஆம் : அசை. எச்சம் என்றது, ஈண்டு வழிவழிமரபு ; "வன்மையும் மாண்பும் வளனும் எச்சமும்தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்கு"1என்றதிற் காண்க. தாம் முயன்று தமது எளிமையைநீக்கிக்கொள்ளாமை மானமுடைய ஒருவற்கு மிகநாணத்தகுவதாகலின், இவ்வாறு கூறினார்.

(9)


1. பதிற். 8 : 4.

300 கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்; -இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் மழுங்க வரின்.

(பொ-ள்.) கடம் மா தொலைச்சியகான் உறை வேங்கை இடம் வீழ்ந்தது உண்ணாதுஇறக்கும் - மதம் பொருந்திய யானையை அதன் வலிதொலைத்து வீழ்த்திய காட்டிலுறையும் புலி, தனக்குஇடப்பக்கம் வீழ்ந்த அவ்வியானையை, தான் பசிமிகுதியால் உயிர்துறக்குந் தறுவாயிலிருப்பினும்,உண்ணாமல் உயிர்விடும்; இடம் உடைய வானகம்கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம்மழுங்கவரின் - ஆதலால் செல்வப்பெருக்குடையதுறக்கவுலகம் தானே தம் கையகப்படினும் அது தமதுமானம் கெட வருவதாயின் அதனைப் பெரியோர்விரும்பார்.

(க-து.) மானத்தால் உண்டாகும்இன்பமே இன்பமாகும்.

(வி-ம்.) "கிடந்துயிர்மறிகுவதாயினும், இடம்படின் வீழ்களிறு மிசையாப்புலி"1 என்றார் பிறரும். ‘இடமுடையவானகம்' என்றவிடத்து இடம் என்றது வளம்உணர்த்தும்; "இடமில்லாக் காலும்"2என்புழிப்போல. ஈண்டுப் போகம் உணர்த்திற்று.‘கையுறின்' என்றது. கிடைப்பினும் என்னும்பொருட்டு. ‘மழுங்க' வென்னுங் குறிப்பாற்,பெரியார்களுக்குள்ள மேன்மையெல்லாம்அவர்கள்பால் இம் மானம் என்னும் உயர் குணம் ஒன்றுஎன்றும் பொன்றாது சுடர்விட்டுக்கொண்டிருப்பதுதான் என்பது பெறப்படும்.

(10)


1. அகம். 29.

2. குறள். 107 : 4







2011/6/28 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/6/27 Venkatram Shrinivas <see...@gmail.com>

2011/6/26 Venkatram Shrinivas <see...@gmail.com>
<p style="font-family:GIST-TMOTChanakya;font-size:9pt;font-weight:normal;line-height:20pt;text-decorati



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jun 28, 2011, 3:13:38 PM6/28/11
to மின்தமிழ்
மானம் 
 
பொருட்பால்
30. மானம்

[என்றது, தாழ்வு தாளாத உள்ளவியல்பு]
291திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதங் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமே,
மன முடையார் மனம்.

(பொ-ள்.) திரு மதுகையாகத் திறன்இலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் -செல்வம் வலிமையாகக் கயவர் செய்யும்வரம்புகடந்த செயல்களைப்பார்த்தவிடத்தும், எரிமண்டிக் கானம் தலைப்பட்ட தீப்போல் கனலும்மானமுடையார் மனம் - மானமுடைய நன்மக்களின் மனம்எரிதல் மிகுந்து காட்டில் உண்டான காட்டுத்தீப்போல் அனல் கொள்ளும்.

(க-து.) தகாத செயல்களைக் கண்டால்மானமுடையார் மனம் அழல்கொள்ளும்.

(வி-ம்.) மதுகை யென்றது, வலிமை;"அனைமதுகையர் கொல்"1என்புழிப்போல. திறனிலார் என்றது கயவரை:பெருமிதம் என்றது, பெருமிதம் போன்ற பொருந்தாச்செயல்களை இங்குணர்த்திற்று. கண்டக் கடைத்தும்என்னும் உம்மை, பிற பொருந்தாச் செயல்களைஅறிந்தவிடத்துங் கனலல்போல் என்பது விளக்கிஇறந்தது தழீஇயது.

(1)


1. குறுந். 290.

292 என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பா டுரைப்பரோ தம்முடையார்; -தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.

(பொ-ள்.) என்பாய் உகினும்இயல்பிலார் பின் சென்று தம் பாடு உரைப்பரோ தம்உடையார் - தன்மானமுடையோர், தாம் எலும்பாகித்தசை சிதையினும், குணமில்லாதவர் பின் சென்றுதம்முடைய இடுக்கண்களைச்சொல்லிக்கொள்ளமாட்டார்; தம் பாடு உரையாமைமுன்னுணரும் ஒண்மையுடையார்க்குத் தாம் உற்ற நோய்உடையரோ - தம்முடைய துன்பங்களைத் தாம்எடுத்துரையாமைக்கு முன்பே அவற்றை உணர்ந்து உதவும்அறிவு விளக்கமுடைய குணசாலிகட்கும் தாம் அடைந்தஇன்னல்களை அவர் உரையார்போலும்!(மானமுடையாரியற்கை அத்தகைத்து!)

(க-து.) மானமுடையார் தம்துன்பங்களைப் பிறர்க்குப் புலப்படுத்தார்.

(வி-ம்.) உகுதல், தசை வீழ்தல்;இயல்வு, இயற்கையான நற்குணம். "ஏதிலாரென்பார்இயல்பில்லார்"1என்புழிப் போல.ஓகாரங்களுள் முன்னது எதிர்மறை: பின்னது ஐயங் கருதிவினா. தம் என்றது, தம் உயிரியல் பாகிய மானத்தைஉணர்த்தா நின்றது. உடையார்க்கு மென்று உயர்வுசிறப்பும்மை விரித்துக்கொள்க.

(2)


1. நான்மணிக். 44

293யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல்-நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுசு செல்வர் தொடர்பு.

(பொ-ள்.) யாமாயின் எம் இல்லம்காட்டுதும் - வறியேமாகிய யாமாயின் செல்வர்கட்குஉண்ணவும் இளைப்பாறவும் எம் இல்லத்தை இடமாகஉதவுகின்றோம். தாமாயின் காணவே கற்பு அழியும்என்பார்போல் நாணிசோறும் புறங்கடைவைத்துஈவர்-ஆனால் அச்செல்வர்களாயின் யாம்காணுமளவிலும் தம் மனைவியரின் கற்புக்கெடும் என்றுகருதுவார்போல் மனங் கூசிச், சோறும் வாயிலின்வெளியில் வைத்துப் போடுவர்; அதனால் மறந்திடுகசெல்வர் தொடர்பு - ஆதலால் பிறரைப்பொருள்செய்யாத செல்வர்களின் தொடர்பை மக்கள்மறந்துவிடுவார்களாக!

(க-து.) தாம் வறியராயினும் தம்மைமதியாத செல்வர்களின் தொடர்பை மானமுடையோர்மறந்து விடுதல் வேண்டும்.

(வி-ம்.) நாணி என்றார்,அச்சோறிடுதலுந் தகாததொன்று செய்தலாக அவர்கருதுதலின். சோறும் என்னும் உம்மை, உள்ளே இருந்துஉண்ணுதற்குரிய உணவும் என்னும் பொருள் தந்து உயர்வுசிறப்பாய், இனிச் சற்று இளைப்பாறும் பொருட்டுப்படுத்தலும் புறக்கடைக் கண்ணதே என்னும் பொருள்பெறுவித்து எதிரது தழீஇயதாய் நின்றது.

294இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடா
தும்மையும் நல்ல பயத்தலால், -செம்மையின்
நானம் கமழுங் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.

(பொ-ள்.) செம்மையின் -நடுநிலையாக நோக்குமிடத்து, நானம் கமழும்கதுப்பினாய் - கத்தூரி மணக்குங் கூந்தலுடையபெண்ணே!: மானமுடையார், மதிப்பு - மானமுடையார்நடக்கை, இம்மையும் நன்றாம் -புகழும் இன்பமுந்தருதலால் இம்மையிலும் நன்றாகும்; இயல்நெறியும்கைவிடாது உம்மையும் நல்ல பயத்தலால் நன்றேஉண்மை நெறியும் வழுவுதலின்றி மேலுலகிலும்இன்பமாவன உண்டாக்குதலால் மறுமைக்கும்நல்லதேயாம்.

(க-து.) மானமுடையார் ஒழுக்கம்இருமைக்கும் இன்பந் தரும்.

(வி-ம்.) இயல்நெறி வீடுபயப்பதாகலின், இயல்நெறியுமென்று உம்மைதந்தார்; நாயனாரும் "பேராவியற்கை"1என வீட்டினை விதந்தமை காண்க. உம்மையென்றது,மேலுலகம். மதிதொழுகும் ஒழுக்கம்,மதிப்பெனப்பட்டது.

(4)


1. குறள், 37 : 10.

295 பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; -சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.

(பொ-ள்.) பாவமும் ஏனைப் பழியும்பட வருவசாயினும் சான்றவர் செய்கலார் -மறுமைக்குத் தீவினையும் இம்மைக்கு மற்றைப்பழியும் உண்டாகும்படி நேர்வனதாம் இறப்பதாயினும்சான்றோர் செய்யமாட்டார்: சாதல் ஒருநாள்ஒருபொழுதைத் துன்பம் அவைபோல் அருநவை ஆற்றுதல்இன்று - ஏனென்றால், இறத்தல் என்பது ஒரு நாளில் ஒருநேரத்துத் துன்பம்; ஆனால் அப் பாவமும்பழியும்போல் என்றுந் துன்பத்துக் கேதுவானபெருங்குற்றம் பயப்பிப்பது வேறொன்றும் இல்லை.

(க-து.) மானமுடையோர்,பழிபாவஞ்கட்கு அஞ்சியொழுகுவர்.

(வி-ம்.) ஏனையென்றார்மற்றொன்றாகிய வென்றற்கு. வருவ:பெயர். சாதலின்இன்னாத தில்லை யாகலின்1 அவ்வின்னலின்உயர்வு தோன்றச் சாயினும் என்றார். அருநவை,தீர்தற்கரிய குற்றம்.

(5)


1. குறள். 23 - 10

296 மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்
செல்வ ரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார்.

(பொ-ள்.) மல்லல் மா ஞாலத்துவாழ்பவருள் எல்லாம் - வளப்பமிக்க இப் பெரியஉலகில் உயிர்வாழ்பவரெல்லாருள்ளும், செவ்வர்எனினும் கொடாதவர் நல் கூர்ந்தார் -பொருளுடையராயினும் பிறர்க்கொன்று உதவாதஇயல்புடையார் வறியரேயாவர்; நல்கூர்ந்தக்கண்ணும் பெருமுத்தரையரே செல்வரைச் சென்றுஇரவாதார் - வறுமையுற்ற விடத்தும்பொருளுடையாரிடம் சென்று ஒன்று இரவாதவர்பெருமுத்தரையரையொத்த பெருஞ் செல்வரேயாவர்

(க-து.) உலகத்தில் ஒன்று உதவும்நிலையும் இரவா நிலையுமே செல்வ நிலையாகும்.

(வி-ம்.) பெருமுத்தரைய1ரென்பார், இவ் வாசிரியர் காலத்தில் விளங்கியபெருஞ் செல்வராவார்; பெருமுத்தரையரே என்னும்ஏகாரத்தை நல்கூர்ந்தா ரென்பதற்கும் ஒட்டுக.கொடாதவர் செல்வத்தாற் பயன் பெறாமையின்,‘நல்கூர்ந்தா' ரெனவும், நல்கூர்ந்தக் கண்ணும்மானத்தோடு மனவமைதியாய் வாழ்தலின் பிறரைஇரவாதவர் பெருமுத்தரையரே யெனவுங் கூறப்பட்டனர்.

(6)


1. நாலடி. 20 : 10.

297 கடையெலாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெல்லாம் இன்னாமை அஞ்சும் - புடைபரந்த
விற்புருவ வேனெடுங் கண்ணாய்! தலையெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்.

(பொ-ள்.) புடை பரந்த வில் புருவவேல் நெடு கண்ணாய் - பக்கங்களில் தசை பருத்தவில்போலும் புருவங்களையுடைய வேல்போலும் நீண்டகண்களமைந்த பெண்ணே!; கடை எலாம் காய் பசிஅஞ்சும், இடை எலாம் இன்னாமை அஞ்சும், மற்று ஏனைத்தலை எல்லாம் சொல்பழி அஞ்சிவிடும் - மக்களிற்கடையானவரெல்லாரும் தம்மை வருத்தும்வயிற்றுப்பசிக்கு அஞ்சி மானங் கைவிடுவர்;இடைப்பட்டவ ரெல்லாரும் தம் வாழ்க்கையில் வரும்உயிரிறுதி முதலிய துன்பங்களுக்கு அஞ்சி மானத்தைவிட்டொழுகுவார்; ஆனால் மற்றத்தலையானவரெல்லாம் பழிச் சொற்களுக்கு அஞ்சிமானம் விடாது நடந்து கொள்வர்.

(க-து.) பழிச்சொல்லுக்கு அஞ்சுகின்ற மானத்தோடுஉயிர் வாழ்தலே தலைமக்களின் செயலாகும்.

(வி-ம்.) 1"காய்பசிக்கடும்பேய்" என்றார் பிறரும், கடைஇடை தலையென்பன மக்களைக் குறித்தன; மற்று: வினைமாற்று.பசி நீக்கமே நோக்கமாக உயிர்வாழ்வோர்கடையானவரெனவும், ஏனை வாழ்க்கையின்பமேநோக்கமாக உயிர் வாழ்வோர் இடையானவரெனவும்,மானங்காத்தலே நோக்கமாக உயிர்வாழ்வோர்தலையானவரெனவும் இச்செய்யுள் கூறிற்று; மானமாவதுபழிச்சொல் அஞ்சியொழுகுதலென்க. "சான்றோர்பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்"2என்றார் அகத்தினும். விடும் என்னும் விகுதிஅந்நிலையில் அவர் உறுதியுடன் நடந்துகொள்வரென்னுந் துணிவுப் பொருள் உணர்த்திற்று.சாதலின் இன்னாத தில்லையாகலின், இன்னாமைஉயிரிறுதியாகிய துன்பத்தையும் உணர்த்துதல் கண்டுகொள்ளப்படும்; புருவங்களையுடைய கண் என்க.

(7)


1. மணி. 6 : 82.

2. அகநா. 112.

298நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்-கொல்லன்
உலையூதுந் தீயேபோல் உள்கனலுங் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.

(பொ-ள்.) நல்லர், பெரிது அளியர்,நல்கூர்ந்தார் என்று எள்ளிச் செல்வர்சிறுநோக்கு நோக்குங்கால இவர் நல்லவர், மிகவுங்கனிவுடையர், ஆயினும் வலியராயிருக்கின்றார் என்றுஇகழ்ச்சியால் நல்லியல்புகளை இகழ்ந்து கூறிச்செல்வர்கள் சிறுமைப் பார்வை பார்க்குங்கால்,தலையாய சான்றோர் மனம் கொல்லன் உலையூதும்தீயேபோல் உள் கனலும் - தலைமக்களானசான்றோர்களின் உள்ளம் கொல்லனதுஉலைக்களத்தில் ஊதியெழுந்தீச் சுடர்போல்உள்ளே அழல் கொள்ளும்.

(க-து.) மெய்யறிவின்றிநல்லியல்புகளைப் பழித்தொதுக்கும் செல்வர்உரைகட்குச் சான்றோர் உள்ளம் மிகவும் அழலும்.

(வி-ம்.) சிறு நோக்கு, பொருள்செயா நோக்கு;"சிறு நகை"1 என்புழிப்போல. கொல்லும் ஓவும்அசை, நல்லியல்புகள்பால் மதிப்பின்மையேமானிகள் உள்ளம் அத்தனை அழல் கொள்ளுதற்குஏதுவாயிற்று. தலையாய என்றார் அச் செல்வர் முதல்அனைவரினும் மேலாயவரென்றற்கு. சினம் ஆறுதல்அவரியல்பாகலின், உள்கனலும் எனப்பட்டது.

(8)


1. மணிமே. 18 : 86 .

2011/6/28 Venkatram Shrinivas <see...@gmail.com>
திரையை மூடுக
2011/6/27 Venkatram Shrinivas <see...@gmail.com>

2011/6/26 Venkatram Shrinivas <see...@gmail.com>
<p style="font-family:GIST-TMOTChanakya;font-size:9pt;font-weight:normal;line-height:20pt;text-decorati



--
V.Shrinivas (Seenu)

selva kumaran

unread,
Jun 28, 2011, 3:17:47 PM6/28/11
to mint...@googlegroups.com
சென்ற வாரம் இணையத்தில், நீங்கள் கரிச்சான் குஞ்சு அவர்கள் மூலம்  அறிந்த ப்ராணாயமத்தைக் கட்டுரையாய்  எழுதியிருந்ததைப் படித்தேன்.  அருமை!

2011/6/29 Venkatram Shrinivas <see...@gmail.com>

coral shree

unread,
Jun 28, 2011, 9:22:10 PM6/28/11
to mint...@googlegroups.com
அழகான விளக்கங்களுக்கு நன்றிகள் பல.

2011/6/28 Venkatram Shrinivas <see...@gmail.com>

Venkatram Shrinivas

unread,
Jun 29, 2011, 3:50:38 PM6/29/11
to மின்தமிழ்
இரவச்சம் 
 
பொருட்பால்
31. இரவச்சம்

[மானக்குறைவுக்கேதுவான இரத்தலுக்கு அஞ்சியொழுகுதல்]
301நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர்.

(பொ-ள்.) நம்மாலே ஆவர் இநல்கூர்ந்தார் - இவ் வறுமையாளர் நம்உதவியினாலேயே வாழ்வு பெறுதற்குரியர்;எஞ்ஞான்றும் தம்மால் ஆம் ஆக்கம் இலர் - எந்தநாளிலும் தம் வல்லமையால் உண்டாகப்பெறும் வாழ்வுஇல்லாதவர், என்று தம்மை மருண்ட மனத்தார் பின்என்று செருக்கித் தம்மை உயர்ந்தோராக மயங்கிப்பெருமிதங்கொள்ளும் மனப்பான்மையுடையார்பின்னே, தெருண்ட அறிவினர்தாமும் செல்பவோ -தெளிந்த மெய்யறிவினையுடைய மேலோரும் இரந்துசெல்வரோ? செல்லார்.

(க-து.) பிறரை எளியராகவுந்தம்மைப் பெரியராகவுங் கருதும்உள்ளமுடையோர்பால் இரத்தற்கு அஞ்சுதல் வேண்டும்.

(வி-ம்.) ஆதல், ஈண்டு வாழ்வுபெறுதல்; ஆக்கம் என்றதும் அது. தம்மால் என்றார்,தமது முயற்சி வல்லமையால் என்றற்கு. தக்கோர்க்குஉதவி செய்தே தாம் பெரியராதல்வேண்டுமென்றறியாமையின்1‘மருண்ட' என்றும்,வாழ்க்கையின் பயனாகிய தெளிவு பொருளினாலேயேவருவதன்று என்றறிந்தொழுகுதலின் ‘தெருண்ட' என்றுங்கூறினார். ‘மருண்ட மன' மென்றும் ‘தெருண்ட அறி'வென்றுங் கூறிய வேறுபாடும் அறிதற்குரியது.

(1)


1. புறம், 72 : 13-8.

302 இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு.

(பொ-ள்.) இழித்தக்க செய்துஒருவன் ஆர உணலின் பழித்தக்க செய்யான்பசித்தல் தவறோ - இழிக்கத்தக்க மானக்குறைவானசெயல்களைச் செய்து ஒருவன் வயிறார உண்ணுதலைவிடஉலகம் பழிக்கத்தக்க அச்செயல்களைச்செய்யானாய் வறுமையாற் பசியோடிருத்தல்தவறாகுமோ?, ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்புவிழித்து இமைக்கும் மாத்திரையன்றோ-ஏனென்றால்,அழிக்கப்பட்டு ஒருவன் பிறக்கும் பிறப்புஇமைத்துப் பின்கண் திறக்கும்நொடிப்பொழுதாமன்றோ?

(க-து.) நொடிப்பொழுதில்மாய்தற்குரிய இப்பிறவியின் பொருட்டுமானக்குறைவான இரத்தல் செயலைச் செய்து உயிர்பிழைத்தல் ஆகாது.

(வி-ம்.) இழி பழி என்பன ஈறுகுறைந்து நின்றன. இழித்தக்க, பழித்தக்க என்பவை,பெயர்கள். இழிவுடைய செயல்கள்பழிப்புடையனவாகலின், ‘இழிக்கத்தக்க'‘பழிக்கத்தக்க' எனக் காரண காரியமாகவேறுபடுத்திக் கூறப்பட்டன. அழித்துப் பிறக்கும்என்றதற்கேற்ப, இமைத்து விழிக்கும் என்றுமாற்றிக்கொள்க. ‘பிறந்தவர் சாதலும் இறந்தவர்பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றதுண்மையின்’1 இங்ஙனம் கூறினார். உயிரின்பெருங்குண விளக்கமே பிறவியெடுத்தலால் ஒருவன்அடைய வேண்டும் பயனாகலின், அப்பெருங் குணம்அழியப் பிறவியை ஓம்புதல் வீண் என்றபடி.பிறாண்டும் ஏற்றவற்றிற் கிங்ஙனம்உரைத்துக்கொள்க.

(2)


1. மணிமே. 16 : 86.7

303 இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா
அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான்
முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?

(பொ-ள்.) இல்லாமை கந்தா இரவுதுணிந்து ஒருவர் செல்லாரும் அல்லர் சிறுநெறி -வறுமை காரணமாக இரத்தலுக்குத் துணிந்து அச்சிறுவழியில் ஒருவர் செல்லுங் கட்டாயமுடையராதலுங்கூடும்; ஆனால், புல்லா அகம் புகுமின் உண்ணுமின்என்பவர் மாட்டு அல்லால் முகம் புகுதல் ஆற்றுமோமேல் - தாம் செல்லுமுன்பே தம்மை முன்போந்து தழுவி,வீட்டுக்கு வாருங்கள், உண்ணுங்கள் என்றுவரவேற்பாரிடத்தன்றி மேன்மக்கள் ஏனையோரிடம்தலைகாட்டுதல் செய்வரோ? தலைகாட்டாரென்க.

(க-து.) தம்மை வரவேற்காதவரிடம்வறுமை காரணமாகவும் இரத்தற்கு மேலோர் அஞ்சுவர்.

(வி-ம்.) கந்தென்றது, ஈண்டுக்காரணமென்னும் பொருட்டு.1 "பழைமைகந்ததாக," "காதன்மை கந்தா"2என்புழிப்போல. இரத்தல், ‘சிறு நெறி'எனப்பட்டமை கருத்திற் பதிக்கற்பாலது. புல்லா:உடன்பாடு. பிறர்குறிப்பிற்கேற்றவாறு தமது முகத்தைநொடித்துக் கொண்டு நுழையும் இரவின் இழிவுதோன்றத் தலைகாட்டுதல் ஈண்டு ‘முகம்புகுத'லெனப்பட்டது. இவ்விழிவு மேற் செய்யுளிலும் வருதல்காண்க.

(3)


1. நாலடி. 31 : 10.

2. குறள். 51 : 7.

304 திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோடு டுயர்வுள்ளி னல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்
றெருத்திறைஞ்சி நில்லாதா மேல்.

(பொ-ள்.) திரு தன்னை நீப்பினும்தெய்வம் செறினும் உருத்த மனத்தோடு உயர்வுஉள்ளினல்லால் - திருமகள் தன்னைத் துறந்தாலும்ஊழ் உருத்தெழுந்தாலும் தாம் மேலும் ‘ஊக்கமுற்றஉள்ளத்தோடு உயர்ந்த செய்கைகளைக் கருதியொழுகுதலல்லால், அருத்தம் செறிக்கும் அறிவிலார்பின் சென்று எருத்து இறைஞ்சி நில்லாதாம் மேல் -செல்வத்தை இறுக்கிப் பிடிக்கும்மெய்யறிவில்லாக் கீழ்மக்கள் பின்னேபோய்மேலோர் தலைவளைந்து இரந்து நில்லார்

(க-து.) திரு நீங்கினும் ஊழ்கறுவினுங்கூட மேலோர் இரத்தற்கு அஞ்சுவர்.

(வி-ம்.) திருபொருளன்று பொருள்பெறுதற்குரிய பேறு. "திருவினும் நிலையிலாப்பொருள்"1என்பதன்கண் இவ்வேறுபாடுபுலப்படும். தெய்வமென்றது, அறக்கடவுள்; ஆவது, ஊழ்;"தெய்வப் புணர்ச்சி"2என்பதிற்போல, உருத்த - உருக்கொண்ட ; முனைந்தவென்க. எருத்து - கழுத்து; எருத்திறைஞ்சி நிற்றல்இரத்தலின் இழிவு காட்டிற்று. மேல், மேலோர்க்குஆகு பெயர்; நில்லா தென்னும் அஃறிணை முடிபு மேல்என்னுஞ் சொல் கருதிற்று. இவ்வாறு முற்செய்யுளினும்வந்ததை நினைவு கூர்க.

(4)


1. கலித். 8.

2. இறைய. 2-உரை

305 கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை; -இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.

(பொ-ள்.) கரவாத திண் அன்பின்கண் அன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம்வாழ்க்கை - தமக்கொன்று ஒளியாத உறுதியானமெய்யன்பின்னையுடைய கண்போன்றஅன்பர்களிடத்தும் யாதும் இரத்தல் செய்யாதுவாழ்வது வாழ்க்கையாகும்; இரவினை உள்ளுங்கால்உள்ளம் உருகும் - இரத்தலாகிய செயலைநினைக்கும்பொழுதே உள்ளம் கரைந்து அழிகின்றது;கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு என் கொலோ -அவ்வாறானால், பிறரிடம் ஒன்று ஏற்குங்காலத்தில்அங்ஙனம் ஏற்பவரது கருத்துத்தான் எவ்வாறு நையாநிற்கும்!

(க-து.) அன்பர்களிடத்தும்இரக்குந்தொழில் உயிராற்றலை ஒடுக்கும்.

(வி-ம்.) அன்பின் அன்னாரென்க.ஆலுங்கொல்லும் அசை. குறிப்பு என்றார், அவர்கருத்து அந்நேரத்தில், இடுவார் கருத்தின்வழியெல்லாம் இயங்கி ஒன்று பெறுதலில் முனைந்துநிற்றலின், அன்பரிடத்தும் இரத்தல்அஞ்சுகவென்பது இச் செய்யுளிற் பெறப்பட்டது."கரவாது உவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும்,இரவாமை கோடி யுறும்." "இரவுள்ளம் உள்ளம்உருகும்" என்னும் நாயனார் திருமொழிகள்இங்குஒப்பு நோக்கற்பாலன.

(5)


1. குறள் 107 : 1, 9.

306இன்னா இயைக இனிய ஒழிகென்று
தன்னையே தானிரப்பத் தீர்வதற் - கென்னைகொல்
காதல் கவற்றும் வனத்தினாற் கண்பாழ்பட்
டேதி லவரை இரவு.

(பொ-ள்.) இன்னா இயைக இனிய ஒழிகஎன்று தன்னையே தான் இரப்பத் தீர்வதற்கு - தூயமெய்யுணர்வு உண்டாதற்கு உலகத் துன்பங்களேஏதுவாயிருத்தலின். அத்துன்பங்கள் வந்துபொருந்துக,இன்பந் தருவன நீங்குக என்று தன் உள்ளத்தையே தான்வேண்டித் தெளிவு செய்துகொள்ள அதனால்தம்மைவிட்டு நீங்கிவிடுதற்குரிய பொருள்முடைக்காக; காதல் கவற்றும் மனத்தினால் கண்பாழ்பட்டு ஏதிலவரை இரவு என்னைக்கொல்-அதற்குமாறாய், அப் பொருளின்மேற் கொள்ளும் அவாவருத்துகின்ற மனத்தினால் அறிவு பாழாகிய அயலாரைஒன்று இரத்தல் ஏன்?

(க-து.) பொருளால் வருந் துன்பத்தைநோக்கி அதனைத் துறக்குந்தெளிவுடையோர்,அப்பொருளுக்காகப் பிறரை இரக்க அஞ்சுவர்.

(வி-ம்.) தீர்வது, பெயர்:நான்கனுருபு பொருட்டுப் பொருளது. கண் என்றது அறிவு."பெரியோர்ப் பிழைப்பதோர்கண்ணிலியாகும்"1 என்பதனானுங் காண்க.அவாவால் அறிவு மறைக்கப்படுதலின், ‘காதல் கவற்றுமனத்தினாற் கண் பாழ்பட்'டென்றார். இரவாழிதற்கு இச்செய்யுளிற் கருவி கூறப்பட்டது.

(6)


1. பெருங். உஞ்சைக் : 162-3

307என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
தென்று மவனே பிறக்கலான் - குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட!
இரப்பாரை எள்ளா மகன்.

(பொ-ள்.) குன்றின் பரப்பெலாம்பொன் ஒழுகும் பாய் அருவி நாட - மலையின் பரந்தஇடமெல்லாம் பொன் பரவுதற்கு ஏதுவான பாயும்மலையருவிகளையுடைய நாடனே!. என்றும் இவ்வுலகத்துப்புதியார் பிறப்பினும் - இந்த உலகத்தில் என்றும்புதிக மக்கள் பிறந்தாலும், என்றும் அவனேபிறக்கலான் - என்றும் அவனொருவனே உண்மையிற்பிறத்தலுடையான்; அவன் யாரெனில்: இரப்பாரைஎள்ளா மகன் - இரந்துண்ணும் எளியோரை இகழாதொழுகும் மகனெனத் தக்கான் என்க; (ஏனையோர்பிறந்தும் பிறவாதவராவர்.)

(க-து.) இரப்பாரை இகழாதவனேமகனெனப் பாராட்டப்பட்டுப் பிறப்பின்பயனெய்துவோனாவன்.

(வி-ம்.) புதியாரென்றது, புதியவடிவினையுடைய மக்கள்; அவனே என்று முதலிற்சுட்டினால் உணர்த்திப்பின் விளக்கினார், இதுசெய்யுளாகலானும் உலகத்தில் அவனொருவனே பலரானும்மனிதனாக மதிக்கப்பட்டு பிறவியின் பயனுடையனாய்,பாரிவள்ளல் போன்று, ஏனையோரினும் மேம்பட்டுவிளங்குதல் வெளிப்படையாகலானுமென்க. அவன் என்றதுஇனவொருமை. பிறக்கலான் என்பதில் அல்தொழிற்பெய ரீறு.

308 புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்.

(பொ-ள்.) புறத்துத் தன் இன்மைநலிய - புறத்தே உடம்பைத் தனது வறுமை வருத்தஅதனால், அகத்துத் தன் நல்ஞானம் நீக்கிநிறீஇ-உள்ளத்தில் தனது நல்லறிவை ஒதுக்கிமனந்துணிந்து, ஒருவனை ஈயாய் எனக்கு என்றுஇரப்பானேல் - பொருளாளனொருவனை எனக்கு யாதானும்இடு என்று மானமுடையோன் இரந்து நிற்பானாயின்,மாற்றிவிடின் அந்நிலையே மாயானோ - அவன் இல்லைஎன்று மறுத்துவிட்டால் அந் நொடியே அம்மானிஉயிரழிவானன்றோ? (ஆதலால், இரத்தல்எந்நிலையிலும் அஞ்சுதற்குரிய தென்க.)

(க-து.) மானிகள் இரந்துகருத்தழிதலினும் இரவாது நலிதலே நன்று.

(வி-ம்.) புறத்து என்றார்,உடம்பையும் உலகத்தையும் நினைந்து; நன்ஞானம்என்பதன் குறிப்பானும், ‘நிறீஇ' என்னுங்குறிப்பானும் இரப்பான் என்றது, ஈண்டுமானமுடையோனை யென்க. உள்ளத்தை ஒருவழிநிறுத்தியென்றற்கு நிறீஇ யென்றார்.உயர்ந்தோர், தாழ்ந்தோர்க்கு இடுகின்றதொழில் ஈதலெனப்படுமாகலின்,1 இவ்விழிவுதோன்ற ‘ஈயாய்' எனப்பட்டது. மாய்தலென்றது,சாதலொத்த துன்பமடைதல்; "இரப்பவர்சொல்லாடைப் போஒம் உயிர்"2 என்றார்திருவள்ளுவரும்.

(8)


1. தொல். எச்ச. 41.

2. குறள், 107 : 10.

309ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுத லல்லால், - பரிசழிந்து
செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே
பையத்தான் செல்லும் நெறி?

(பொ-ள்.) ஒருவர் ஒருவரைச்சார்ந்தொழுகல் ஆற்றி வழிபடுதல் வல்லுதலல்லால்- வறுமையாளரொருவர் செல்வரொருவரைச் சார்ந்துஇருந்துகொள்ளுதல் செய்து அவரைப் பின்பற்றியொழுகுதல் கூடுவதன்றி; பரிசு அழிந்து என்னானும்செய்யீரோ என்னுஞ்சொற்குப்பையைத்தான்செல்லுநெறிஇன்னாதே - தமது இயல்பாகிய மானம்அழிந்து ஏதானும் ஈயீரோ என்றிரக்கும்இரப்புரைக்கு, அடக்கமாகத் தான் ஒழுகிக்கொள்ளும்அம்முறைமை தீதாமோ? (அது, இதனினும் மேல் என்க.)

(க-து.) தொழுதுணடு வாழ்தலினும்இரந்துண்டு வாழ்தல் அஞ்சுக.

(வி-ம்.) ஆற்றி என்றார்,அஃதருமையாதலின். மானமே உயிரினியல்பாய்விளங்குதலின், அதனை வாளாபரிசெனவே விதந்தார்.பொறுமையோடு அடங்கி நடத்தல், ‘பையச் செல்லும்'எனப்பட்டது. தொழுதுண்டு வாழ்தல் வறுமையினுஞ் சற்றுவலிவுடைத்தாதல் பற்றி, ‘வல்லுதல், என்னுஞ் சொல்பெய்துரைக்கப்பட்டதென்க. ஏகராம்: வினா.

310பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதனுஞ் செய்க: கிழமை
பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
தறாஅச் சுடுவதோர் நீ.

(பொ-ள்.) பழமை கந்தாகப் பசைந்தவழியே கிழமைதான் யாதானும் செய்க - பழமையாகியநட்பே பற்றுக்கோடாக நண்பர்பால் ஒன்று பெறுதற்குஉள்ளம் விரும்பியவிடத்து உரிமையால் அவ்வாறுஏதேனுஞ் செய்து கொள்க; கிழமை பொறார்அவரென்னின் பொத்தித் தம் நெஞ்சத்து அறாச்சுடுவதோர் தீ - ஆனால், அங்ஙனம் செய்யும் உரிமைச்செயலை அந் நண்பர் பொறாரென்றால், தமதுநெஞ்சத்தில் மூட்டப்பட்டு அம் மானக் குறைவால்உண்டான வேதனை யென்னும் ஒரு தீ என்றும் நீங்காதுசுடுவதாகும். (ஆதலால், உரிமை கருதியும் இரத்தல்அஞ்சப்படுமென்பது. )

(க-து.) பழமை கருதியவிடத்தும்இரத்தலுக்கு அஞ்சுக.

(வி-ம்.) தடுக்கும் அறிவைப்பிற்படுத்தி உள்ளம் இரத்தற்கு மீதூர்ந்துவிழைந்தவழி யென்றற்குப், பசைந்தவழியேயெனப்பட்டது. "பசைஇப் பசந்தன்றுநுதல்"1 என்றார் பிறரும். இரத்தல்செய்க என்றற்கு உள்ளங்கூசுதலின், ‘யாதானுஞ்செய்க' என்று வேண்டா வகையாய்க் கூறினார்.அங்ஙனம் மனம் பொறுத்து அது செய்தும் அதனை அந்நண்பர் கருதாது கைவிடுவரென்றால், பின்பு, நினையநினையக் கனைந்தெழும் வேதனைத் தீ உள்ளத்தேஅறாது மூண்டுவிடுமாகலின், அந்நிலையினும் இரத்தல்பெரிதஞ்சப்படும் என்பது பின் வரிகளால்உணர்த்தப்பட்டது.

(10)


1. குறுந். 87.





2011/6/29 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

கி.காளைராசன்

unread,
Jun 30, 2011, 5:08:46 AM6/30/11
to mint...@googlegroups.com
படித்து வருகி​றேன்
நன்றி
அன்பன்
கி.கா​ளைராசன்

seethaalakshmi subramanian

unread,
Jun 30, 2011, 5:21:38 AM6/30/11
to mint...@googlegroups.com
அருமையான விளக்கங்கள்.
வெகு நாட்கள் கழித்துப் பார்ப்பதால் புதிய நிறைவு
தொடர்ந்து எழுதுங்கள்.
சீதாம்மா

2011/6/30 கி.காளைராசன் <kalair...@gmail.com>


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Venkatram Shrinivas

unread,
Jun 30, 2011, 3:01:16 PM6/30/11
to மின்தமிழ்
அவையறித்தல் 
 
பொருட்பால்
32. அவையறிதல்

[அவையிலுள்ளாரின் தகுதி தெரிந்து ஒழுகுதல்]
311மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்
அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்
கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்
சொன்ஞானஞ் சோர விடல்.

(பொ-ள்.) மெய்ஞ்ஞானக் கோட்டிஉறழ்வழி விட்டு - உண்மையறிவினையுடையகூட்டத்திற் கலந்து அவர் வழி நின்றொழுகுதலைவிடுத்து; ஆங்கு ஓர் அஞ்ஞானம் தந்திட்டு அதுஅறத்துழாய் - அதற்கு மேலும் அம் மெய்ஞ்ஞானமுடையாரிடையே தமது ஓர் அறியாமைக் கருத்தையும்உரைத்து, அதனையே மிகவும் பன்னிப்பன்னிப் பேசி,கைஞ்ஞானம் கொண்டு ஒழுகும் கார் அறிவாளர்முன் -இவ்வாறு தமது சிற்றறிவே பற்றியொழுகுகின்றமயக்கவறிவினரெதிரில், சொல் ஞானம் சோரவிடல்- புகழ்தற்குரிய தமது ஞானப் பெருமையினைக்காட்டிக்கொள்ளாமல் தளர்த்துக் கொள்க.

(க-து.) தமது சிற்றறிவையேபேரறிவாகக் கொண்டு அடங்காதொழுகுவாரிடம்சான்றோர் தமது ஞானப்பெருமையை வெளிப்படுத்திக்கொள்ளார்.

(வி-ம்.) ‘அதுவாங்கு'என்னுமிடத்தில் ‘ஆங்கு' அசை. ‘கை' சிறுமைப்1பொருட்டாதல் ‘கையேடு' ‘கைவாள்' என்பவற்றானுங்காண்க. அறியாமை மிகுதியாக உடைய அறிவென்றற்குக்‘காரறிவு' எனப்பட்டது. விடல் என்னும் வியங்கொள்ஈண்டு உடன்பாடு. பயனில்லாமையின் விடுக என்றார்.

(1)


1. குறுந். 87.

312நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்
தீப்புலவற் சேரார் செறிவுடையார்; -தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்.

(பொ-ள்.) நாப் பாடம் சொல்லிநயம் உணர்வார் போல் செறிக்கும் தீப்புலவன்சேரார் செறிவுடையார் - தாம் இதற்குமுன் நெட்டுருச்செய்த பாடங்களை அப்படியே சொல்லிக்காட்டி ஏதோபொருள்நயம் உணர்வார்போல் நடித்துத் தம்அறியாமைக் கருத்துக்களை அவற்றிற் செறித்துககூறும் போலிப் புலவனை அவ்வாரவாரமில்லாமெய்ப்புலவோர் அணுகார்; (ஏனென்றால்,) தீப்புலவன் கோட்டியுள் குன்ற - மெய்ப்புலவோராகிய தமதுவருகையால் அப் போலிப் புலவன் அவையிற் பெருமைகெடுதலால்; குடிப்பழிக்கும் - அவன் தமதுகுடிப்பிறப்பைப் பற்றிப்பழித்துப் பேசுவான்;அல்லாக் கால்தோட்புடைக் கொள்ளா எழும் -அல்லாவிட்டால் தன் தோளைத் தட்டிக்கொண்டுவலுச்சண்டைக்கு எழுவான் என்க.

(க-து.) போலிப் புலவரோடுமெய்ப்புலவர் சேர்ந்து பெருமை குன்றுதலாகாது.

(வி-ம்.) பொருள் தெரிந்து,கல்லாமையின், ‘நாப்பாட' மெனவும்,போலிப்புலவரால் உலகுக்குத் தீமை விளைதலின்‘தீப்புலவன்' எனவுங் கூறினார். செறிவு,போலியாரவராமில்லா அடக்கமுடைமை. கல்வி, அறிவு,ஒழுக்க முதலியவற்றால் இவரைக் குறைகூறுலாகாமையின்இவர் குடிப்பிறப்பைப் பற்றிப் பேசும் எனவும்,அதனை எவரும் பொருள் செய்யாமையின் தோள்தட்டிஎழும் எனவும் உரைத்தார். "வெல்வது வேண்டிவெகுண்டுரைக்கும் நோன்பிலி"1 என்றார்பிறரும். ‘குன்ற' என்னும் எச்சம் காரணப்பொருட்டு

(2)


1. திரிகடு. 28.

313 சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார், -கற்ற
செலவுரைக்கும் ஆறறியார், தோற்ப தறியார்,
பலவுரைக்கும் மாந்தர் பலர்.

(பொ-ள்.) சொல் தாறு கொண்டுசுனைத்தெழுதல் காமுறுவர் - சொல்லாகிய முட்கோல்கொண்டு நாத்தின வெடுத்துப் பேச முற்படுதலை மிகவிரும்பும் இயல்பினர், கற்று ஆற்றல் வன்மையும்தாம் தேறார் - நூல்நுட்பங்களைக் கற்றறிந்துஒழுகும் வல்லமையுந் தாம் தெளியார், கற்ற செலஉரைக்கும் ஆறு அறியார் - தாம் கற்ற சிலவற்றைக்கேட்பவர் உள்ளத்திற் பதியும்படி எடுத்துரைக்கும்முறையையும் அறியார்; தோற்பது அறியார் -தம்சொற்கள் பயன்படுதலின்றி வீணாகியொழிதலையுங்கருதார்; பல உரைக்கும் மாந்தர்பலர்-ஒன்றைப் புலப்படுத்தும்பொருட்டு இவ்வாறு பலசொற்கள் சொல்லி அவம்படும் மாந்தர் உலகிற்பலராவர்.

(க-து.) நாத் தின வெடுத்துப் பலசொல்லலாகாது.

(வி-ம்.) ‘காமுறும் இயல்பினர்தேறார், அறியார், அறியார், இவ்வாறு பல உரைக்கும்மாந்தர் உலகிற் பல' ரென்க, பொருள்வளமில்லாமையின், நயனிலாச் சொற்கள் ‘தாறு'எனப்பட்டன. எதுகை நோக்கி இடையொற்று மிக்கது.சில சொல்லல் தேறாது பல சொல்லக் காமுறுதலின்,1‘சுனைத்தெழுதல்' என்றார். ஆற்றல் ஈண்டுஒழுகுதலென்னும் பொருட்டு. ‘ஆற்றுவாராற்றல்' 2என்பதுங் கருதுக. உம்மை பிறவற்றிற்குங் கொள்க.

(3)


1. குறள். 65 : 9.

2. குறள் 23 : 5

314 கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம்-மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு காட்டி விடும்.

(பொ-ள்.) கற்றதும் இன்றிக்கணக்காயர் பாடத்தால் பெற்றது ஆம் ஓர்சூத்திரமதனை - தாம் ஆழ்ந்து பயின்றதுமின்றித்தக்க கேள்வியுமின்றிப் பள்ளி ஆசிரியர்நெட்டுருச் செய்வித்த மனப்பாடத்தால் தெரிந்துகொண்டதாகிய ஒரு நூற்பாவினை, நல்லாரிடைப் புக்குநாணாது சொல்லிப் பேதை தன் புல்லறிவுகாட்டிவிடும் - நற்புலவர் அவையிற் சென்றுநாணுதலின்றி விரித்துரைத்து அறிவிலான் தனதுசிற்றறிவினைக் காட்டிக்கொள்வான்.

(க-து.) நூல் நுட்பங்களைநன்குணர்ந்து விளங்கும் நற்புலவரிடையில்ஏனையோர் நாவடக்கமுடையராதல் வேண்டும்.

(வி-ம்.) கற்றதூஉமின்றி என்னும்உம்மை கேட்டதூஉமின்றி என்பது விளக்கி நின்றது.கணக்காயர், கல்வி கற்பிக்கும்பள்ளியாசிரியர்; "கணக்காயர் இல்லாதஊரும்"1 என்றார் கடுகத்தினும். ஓர்சூத்திரமென்றார், வேறு தெரியாமையானும் அஃதும்அரிதிற் கிடைத்தமையானும். மற்று:அசை. பிழையைப்பிழையென்று கருதும் உள்ளவொடுக்கமில்லாமையின்,‘நாணாது சொல்லி' எனப்பட்டது.

(4)


1. திரிகடு. 10

315 வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ-டொன்றி
உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலுந்தம் பல்.

(பொ-ள்.) வென்றிப் பொருட்டால்விலங்கு ஒத்து மெய்கொள்ளார் கன்றிக்கறுத்தெழுந்து காய்வாரோடு - போலி வெற்றியின்பொருட்டுப் பகுத்தறிவின்றிவிலங்கோடொத்தவராய் உண்மையை அறியாமற்காழ்த்து மிகக் கொதித்து எரிந்து விழுவரோடு,ஒன்றி சுரை வித்தகம் எழுவார் சுரை வித்துப்போலுந் தம் பல் கையுள் காண்பநெருங்கித் தமதுஉரைவல்லமையைப் புலப்படுத்த முற்படும் நற்புலவர்சுரையின் விதையை ஒத்த தம் பற்களைக்கன்னத்தில் அறைந்து அவர் உதிர்த்தலால் உடனேதம் கையிற் காண்பவராவர்.

(க-து.) சினத்தால் தம்மை வெல்லமுற்படும் போலிப் புலவருடன் நற்புலவர் தமது உரைவித்தகத்தைப் புலப்படுத்திக் குறைவடைதலாகாது.

(வி-ம்.) கறுத்தென்றதோ டமையாதுஎழுந்தென்றமையின், மிக்க கருத்தெனப்பட்டது.உரைவித்தகத்துக்கு முற்படுவார்என்றுரைத்துக்கொள்க. சுரை வித்தென்னும் உவமைஉதிர்ந்த பல்லின் இயல்புரைத்தபடி; ‘சுரைவித்தேய்ப்பப் பிறழ்ந்துவேறாயின'1 எனஇவ்வுவமை பல்லுக்குப் பிறாண்டும் வந்திருத்தல்அறிக.

(5)


1. மணிமே. 20 : 50

316 பாடாமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால்-கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட் கிறப்பப் பரிந்து.

(பொ-ள்.) பாடமே ஓதிப்பயன்தெரிதல் தேற்றாத மூடர் மனிதக்க சொல்லுங்கால் -செய்யுள்களை நெட்டுருச் செய்து சொல்லிக்கொண்டுஅதன் பொருள் நுட்பங்கண்டு இன்புறுதல் அறியாத,மூடர்கள் அருவருக்கத்தக்க உரைகளைச்சொல்லும்போது, கேடு அருசீர்ச் சான்றோர் அவரைஈன்றாட்கு இறப்பப் பரிந்து சமழ்த்தனர் நிற்ப -என்றும் அழிதலில்லாத சிறப்பினையுடையமெய்ப்புலமை சான்ற பெரியோர் அம் மூடர்களைப்பெற்றெடுத்த தாய்க்காக அவள் வருந்துவளே என்றுமிக இரங்கி யாதுங் கூறாதுபொறுமையுடையராயிருப்பர்.

(க-து.) சான்றோர் அவையில்மூடர்கள் யாதும் பேசித் தம்மை ஈன்றார்பெயர்க்கு இழுக்குத் தேடுதலாகாது.

(வி-ம்.) பாடமே என்னும் ஏகாரம்பொருள் தெரியாதவரெனப் பிரிந்து நிற்றலின்பிரிநிலை. தெரிதல், தெரிந்து இன்புறுதல்.சான்றோன் எனக் கேட்ட தாய் ஈன்ற ஞான்றினும்பெரிதுதுவத்தலின்1 மூடனெனக் கேட்டதாய்அவ்வீன்ற ஞான்றினும் பெரிது வருந்துதல் ஒருதலையாகலின், ‘ஈன்றாட்கு இறப்பப் பரிந்து'என்றார்; தாய் வருந்துதல் அம்மகப்பேற்றால்யார்க்கும் யாதும் பயனின்மையினென்க. பொதுவிற்பெற்றோர்க்கென்னாது ஈன்றாட் கென்றார், அவள்வருத்தம் பெரிதாதலினென்பது.

(6)


1. குறள். 7 : 9 புறம். 278.

317 பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; மற்றம்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.

(பொ-ள்.) பெறுவது கொள்பவர்தோள்போல் நெறிப்பட்டுக் கற்பவர்க்கெல்லாம்நூல் எளிய-கொடுப்பவரை மனத்துட் கொள்ளாமல்தாம் பெறுகின்ற விலைப் பொருளையே கருத்தாகக்கொள்ளும் பொது மகளிரின் தோள்கள் பலர்க்கும்எளியவாதல் போல ஒரு தொடர் புற்றுக்கற்பவரெல்லார்க்கும் நூல்களின்பொதுக்கருத்துக்கள் எளியனவாய் விளங்கும்;மற்று-ஆனால்; அம்முறிபுரை மேனியர் உள்ளம்போன்றுயார்க்கும் அறிதற்கு அரிய பொருள்-மாந்தளிர்போன்ற மேனியையுடைய அவ்விலை மகளிரின் மனம்யார்க்கும் அறிதல் அருமையாதல் போல, நூலின்உட்பொருள்கள் எல்லார்க்கும் அறிதற்கரியனவாகும்.

(க-து.) நூல்களின் நுண்பொருள்அறியும் நற்புலவோர் உலகில் மிகச் சிலராவர்.

(வி-ம்.) நெறிப்பட்டுக்கற்பவர்க் கென்றார், ஓரளவு செயற்கைமுயற்சிகளால் நூல்களின் மேற்போக்கானகல்வியறிவை யாரும் அறியலாம் என்றற்கு.மாற்று:வினை மாற்று. நூல்களின் ஆழ்ந்தஉட்கருத்துக்களே உண்மையிற் ‘பொருள்'என்பதற்குரியனவாகலின், வாளா ‘பொருள்' என்றேகூறினார். அவற்றை யறிவரே ‘நூல்வழி நுனித்த நுழைநுண்ணுணர்வின'1 ரென்க.

(7)


1. பெருங். இலாவா. 5 : 10.

318 புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்
உய்த்தக மெல்லா நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.

(பொ-ள்.) புத்தகமே சாலத்தொகுத்தும் பொருள் தெரியார் - புத்தகங்களைமிகுதியாகத் தொகுத்து வைத்தும் பலர் அவற்றின்பொருள் தெரியாதவராவர்: உய்த்து அகமெல்லாம்நிறைப்பினும் அவற்றைப் போற்றும் புலவரும் வேறுபொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறுபிறர்முயன்று நூல்களை வீடு முழுமையும் நிறைத்து வைத்தாலும்அவற்றை அன்புடன் பாதுகாக்கும் அறிஞர்களும் வேறு,அவற்றின் கருத்தறிந்து தம்மையும் பிறரையும்தெளிவித்துக் கொள்ளும் பேரறிஞர்களும் அவரின்வேறாவர்.

(க-து.) நூலகளின் கருத்தறிந்துநலம்பெறல் வேண்டும்.

(வி-ம்.) நூல்களிற் றெளிவு பெறுதல்பிறர் முயற்சி யாலன்றென்பது ‘உய்த்துஅகமெல்லாம் நிறைப்பினும்' என்றதனாற்பெறப்படும். மாற்று : வினைமாற்று. பொதுவாகவேனும்நூல்களின் அருமையறிந்தன்றிப்போற்றுதலாகாமையானும் அப்போற்றுதலொன்றும்அவரை அவ்வறிவுத்துறையிற் செலுத்தும்வாயிலாதலானும் அவரும் ஈண்டுப் புலவரெனப்பட்டனரென்க. ‘பொருள் தெரிந்து' என்றார்; பயன்கொண்டுஎன்னும் பொருட்டு; "நூல் விளைந்தனைய நுண்சொற்புலவர்"1 என்றார் பிறரும்.

(8)


1. சிற் 13 : 308.

319பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின்
கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு?

(பொ-ள்.) பொழிப்பு அகலம்நுட்பம் எச்சம் இந்நான்கின் நூல் கொழித்துஅகலம் காட்டாதார் சொற்கள்-பொழிப்புரைஅகலவுரை நுட்பவுரை எச்சவுரை யென்னும் இந்நால்வகையுரைகளாலும் நூலை ஆராய்ந்து தெரிந்து அதன்விரிந்த பொருட்பெருக்கை விளக்கிக்காட்டாதவருடைய சொற்கள், பழிப்பு இல் நிரை ஆமாசேர்க்கும் நெடு குன்ற நாட-பழித்தலில்லாதகாட்டாக்களின் இனத்தைத் தமது செழுமையால்தம்மாட்டு வருவிக்கும் உயர்ந்த மலைகளையுடையநாடனே!; நூலிற்கு நான்கு உரையாமோ-நூலிற்குச்சிறந்த உரையாகுமோ? ஆகாவென்க.

(க-து.) ஏதொன்றையும் நால்வகையுரைகளாலும் விளக்கிப் பேசவேண்டும்.

(வி-ம்.) பொதுவின் உரைத்தல்பொழிப்பெனவும், வினாவியுரைத்தல் அகலமெனவும்,ஏதுவினிறுத்தல் நுட்பமெனவும், இவற்றாற் றுணிதல்எச்சமெனவும் உரைக்கப்படும். இவற்றினியல்பைநச். பாயிரவுரை மேற்கோள்களிற்1 காண்க.வளமான ஆக்களென்றற்குப் ‘பழிப்பில் ஆமா'என்றார்.

(9)


1. தொல். சிறப்புப்பாயிர வுரை.நச், மேற்.

320இற்பிறப் பில்லா ரெனைத்துநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்குங் கருவியரோ? -இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.

(பொ-ள்.) இற்பிறப்பு இல்லார்எனைத்து நூல் கற்பினும் சொல் பிறரைக் காக்கும்கருவியரோ-உயர்ந்த குடிப்பிறப் பில்லாதவர்எவ்வளவு நூல்கள் பயின்றாலும் ஏனைக் கல்லாதவரின்வழுச்சொற்களை இகழாது அடக்கும் பொறுமையாகியகருவியை யுடையவராவரோ? ஆகார்; இற்பிறந்தநல்லறிவாளர் - ஆனால் உயர்குடியுட் பிறந்த சிறந்தஅறிவுடையவர், நவின்ற நூல் தேற்றாதார்புல்லறிவுதாம் அறிவது இல்-புலனெறியுலகில்அடிப்பட்டுப் பழகிவரும் நூல்களின் நுண்பொருள்தெளியப்பெறாத கல்லாமையுடையவரது சிற்றறிவைத்தாம் ஆராய்ந்து காண்பதில்லை.

(க-து.) நூலறிவின் சிறப்போடுகுடிப்பிறப்பு மாண்பு மிருப்பின், புலவர்கட்குப்பொறுமையும் பெருந்தன்மையும் மிகும்.

(வி-ம்.) பிறர் சொல்லையெனமாறுக: ஓகாரம்: வினா. கருவியரோ வென்றார்,அக்கருவி கல்வி முதலியவற்றால் கிடைப்பதன்றாய்க் குடிப்பிறப்பினாற் சிறப்பிற்கிடைக்கு மென்றற்கு; "குலத்தொடு புணர்ந்தநலத்தகு நண்பின் அழுக்கா றகன்றஒழுக்கறோம்பி"1 என்றார் பிறரும். நவின்றநூலென்றது, அறியும் எளிமைபற்றி; அவ்வெளிமையிலும்அதனைத் தெளியாதவரது புல்லறிவு, தானேவெளிப்படையாய் மிகுந்த தெரியினும். பெரியோர்நோக்கம் அது காண்பதல்லாமையாற், புல்லறிவுஅறிவது இல்' எனப்பட்டது.






2011/6/30 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jul 1, 2011, 3:05:11 PM7/1/11
to மின்தமிழ்
புல்லறிவாண்மை 
 
பொருட்பால்
33. புல்லறிவாண்மை

[தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.]
321அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு.

(பொ-ள்.) அருளின் அறம் உரைக்கும்அன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர்புலவர்-அருள் காரணமாக அறம் அறிவுறுத்தும் அன்புடையபெரியயோரது வாய்மொழியை அறிவுடையோர்பெரும்பயனுடையதாக மதித்தேற்றுக்கொள்வர்; பாற்கூழை மூழை சுவையுணராதாங்கு பொருளல்லா ஏழை அதனைஇகழ்ந்துரைக்கும் - ஆனால் அகப்பை பாலடிசிற்சுவையுணராமைபோல ஒரு பொருளாகக் கருதற்கில்லாதஅறிவிலான் அவ்வாய் மொழியை மதியாதுஇகழ்ந்துரைப்பான்.

(க-து.) புல்லறிவாளர் நல்லோர்பொருளுரையை மதியாதொழுகுவர்.

(வி-ம்.) அன்பிருந்தன்றி அருள்பிறவாதாகலின், அருளோடு, அன்பும் உரைக்கப்பட்டது.பொதுவாக அறிஞரென்றற்கு ஈண்டுப் ‘புலவ'ரெனப்பட்டது மூழை சுவையுணராமை போல அறிவிலான்அன்புடையார் வாய்ச்சொல்லின் பெருமையுணரானென்க. "பொருளுணர்வாரில்வழிப்பாட்டுரைத்தல் இன்னா"1 என்றதூஉங்காண்க. உவமை: ஏழைக்கு உணரும் இயல்பில்லாமைஉணர்த்திற்று; காரணம் புல்லறிவின் இயல்புஅத்தகைத்தென்றபடி.

(1)


1. இன்னா நாற். 11

322அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்விய கொளல்தேற்றா தாங்கு.

(பொ-ள்.) கவ்வித் தோல்தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின்செவ்விகொளல் தேற்றாதாங்கு - தொரைக் கவ்வித்தின்னும் புலையருடைய நாய்கள் பாலடிசிலின்நன்மையைத் தெரிந்து கொள்ளாமைபோல,அவ்வியமில்லார் அறத்தாறு உரைக்குங்கால்செவ்வியரல்லார் செவி கொடுத்தும் கேட்கலார் -அழுக்காறு முதலிய மனமாசுகளில்லாதவர் அறநெறிஅறிவுறுத்தும் போது நல்லறிவில்லாப்புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்துங்கேட்கமாட்டார்.

(க-து.) புல்லறிவுடைய கீழ்மக்கள்சான்றோர் அறிவுரைகளை ஏலார்.

(வி-ம்.) உரைக்குங்கால் என்றுநிகழ்கால வினையாற் கூறினார், அஃதவர்க்கு"முந்நிலைக் காலமுந்தோன்றும் இயற்கை"யாதலின், அஃது அவர்பால் அல்லாதார்க்குள்ளஅழுக்காற்றையுங் குறிப்பானுணர்த்திற்று. செவிகொடுத்தும் என்றார், அற விலக்குதல்பற்றி,குணுங்கர், புலையராதல் திவாகரத்திற் காண்க.‘செவ்வி' என்றது, அதன் நன்மையை.

323 இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் -தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கா லென்?

(பொ-ள்.) இமைக்குமளவில் தம்இன்னுயிர் போம் மார்க்கம் எனைத்தானும் தாம்கண்டிருந்தும் -கண்ணிமைக்கும் அத்துணைச் சிறுபொழுதில் தமது இனிய உயிரானது பிரிந்துபோம்இயல்பை எவ்வகையாலுந் தாம் தெரிந்திருந்தும்,தினைத் துணையும் நன்றி புரிகல்லா நாண் இல்மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்கால்என்-உலகில் உயிரோடிருப்பதற்குள்தினையளவாயினும் நற்செயல்கள் செய்து பிறவியைப்பயனுடையதாக்கிக் கொள்ளாத வெட்கமில்லாஅறியாமை மாந்தர் இறந்தாலென்ன, இறவாதுஇருந்தாலென்ன? இரண்டும் ஒன்றே.

(க-து.) புல்லறிவுடையோர் தமதுவாழ்க்கையைப் பயனுடையதாக்கி இன்புறல் அறியார்.

(வி-ம்.) தாம் இனிதாகக் கருதிவளர்க்கும் உயிர் என்றற்கு, இன்னுயிர் என்றார்.மார்க்கமறிதல், பிறருயிர் பிரியும் வழிகளைக்காண்டலென்க. எனைத்தானுமென்றது, எல்லாப்படியாலுமென்றற்கு; "எனைப் பொருளுண்மை" என்புழிப்போல.தாம் வறிதே உயிர்காத்து நிற்கும் பொருந்தாச்செயலில் உள்ள வொடுக்கமின்மையின், ‘நாணில்'எனவும், அதனைத் தடியும் அறிவாற்றலில்லாமையின்‘மடமாக்க' ளெனவுங் கூறினார்.

(3)


1. மணிமே. 27 : 62.

324 உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,
பலர்மன்னுந் தூற்றும் பழியால், -பலருள்ளும்
கண்டரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
தண்டித் தனிப்பகை கோள்.

(பொ-ள்.) உள நாள் சில, உயிர்க்குஏமம் இன்று, பலர் தூற்றும் பழி -இவ்வுலகில் உயிர்வாழ்ந்திருக்கும் நாட்கள் சில, அச் சிலநாட்களிலும் உயிர்க்குப் பாதுகாப்பில்லை, பலர்தூற்றும் பழி வேறு; பலருள்ளும் கண்டாரோடெல்லாம்நகாஅது எவன் ஒருவன் தண்டித் தனிப்பகை கோள்-ஆதலால், பலரோடும் மகிழ்ந்தொழுகாது விலகிஎதிர்ப்பட்டவரோ டெல்லாம் ஒருவன் கடும்பகைகொள்ளுதல் ஏன்?

(க-து.) பலரோடும் அளவளாவி மகிழாதுவிலகிப் பகைகொள்ளுதல் புல்லறிவாகும்.

(வி-ம்.) ஆலும் மன்னும் உம்மையும்ஆசை. பலருள்ளும்; மூன்றாவதனோடு உறழ்ந்தது1நகுதல். அளவளாவி: மகிழ்ந் தொழுகுதல், தண்டுதல்,நீங்குதல் "கற்றல் வேண்டுவோன் வழிபாடுதண்டான்"2என்பது. முதுமொழிக்காஞ்சி,தனிப்பகை, மிக்க பகையென்னும் பொருட்டு.

(4)


1. தொல். வேற்றுமை மயங் 23. 3.குறள் 90 : 6.

3. முதுமொழிக். 10 : 3.

325 எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; -வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின்.

(பொ-ள்.) எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்று எள்ளி ஒருவன் ஒருவனைவைதான்-ஒருவன் சென்று கலந்திருந்த தக்கோர்அவையின் முன் ஒருவன் போய் அவனை இகழ்ந்துதிட்டினானாக, வைய வயப்பட்டான்வாளா இருப்பானேல்வைதான் வியத்தக்கான் வாழும் எனின்-அவ்வாறுதிட்ட அதற்கு உட்பட்டவன் பொறுமையோடு சும்மாஇருந்துவிடுவானாயின் அந்நிலையில் வைதவன்நன்னிலைமையில் உயிர்வாழ்வா னென்றால் அவன்வியக்கத்தக்கவனே யாவான். (உயிர்வாழ்தல்அரிதென்றபடி.)

(க-து.) பலர் நடுவில் பிறரை வைதல்புல்லறிவின் இயல்பாகும்.

(வி-ம்.) வைதனனாகவெனவருவித்துரைக்க. வயப்பட்டான் : பெயர். வாளாவிருத்தல். தன் ஊழும் அவன் அறியாமையும் நினைந்துவாளாவிருந்தமையின் பிழைவை தான்றனக்கேஉரித்தாய் அவன் வாழ்வு கெடுதற்கேது வாயிற்று."உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகுவார்"1என்றது தமிழ்மறை.

(5)


1. குறள். 90 : 6.

326 மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் - நூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்
தொழுத்தையாற் கூறப் படும்.

(பொ-ள்.) மூப்பு மேல் வாராமைமுன்னே அறவினையை ஊக்கி அதன்கண் முயலாதான் -கிழத்தனம் மேல் எழுந்து தோன்றாததற்கு முன்உலகில் அறச்செயலைத் தொடங்கி அதன்கண்முயன்றுவராதவன், நூக்கிப் புறத்திரு போக என்னும்இன்னாச்சொல் இல்லுள் தொழுத்தையால் கூறப்படும்- பின்பு வீட்டில் ஏவற்காரியாலும் நெட்டித்தள்ளப்பட்டு ‘வெளிப்புறத்தில் இரு' ‘ஒழிந்துபோ'என்னுங் கொடுஞ் சொற்களுஞ் சொல்லப்படுவான்.

(க-து.) புல்லறிவாளர் நல்லது செய்யஅறியாராய்ப் பிறரால் இகழவும் படுவர்.

(வி-ம்.) மூப்பு மேல் வருதலாவது, அதுமேலெழுதலென்க. நூக்குதல்-மோதித் தள்ளுதல்;"கரை நூக்கிப்புனல் தந்த"1 என்றார்பரிபாடலினும். போவென்னும் அகரவீறு தொக்கது.தொழுத்தையாலுமென இழிவு சிறப்பும்மைவிரித்துக்கொள்க. இல்லுட் பிறரும்அவ்வாறிகழ்தலின் தொழுத்தையும் இகழ்வளென்பது.அறவினை செய்யாதான் மூப்புப் புண்ணியப் பயன்இல்லாமையின் மிக நெளிந்து பேரின்னலுடையதாய்ப்பிறர்க்குப் பெருந்துன்பந்தந்து அவரங்ஙனம்எள்ளுதற் கேதுவாயிற்று.

(6)


1. பரிபா. 9 : 27.

327 தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமாஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார்-தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.

(பொ-ள்.) புல்லறிவினார்தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்றாற்றார்ஏமம் சார் நல்நெறியும் சேர்கலார்தாழ்ந்தஅறிவினையுடையோர் தாமாகிலும் இன்புறல் அறியார்,தகுதியுடைய பிறர்க்கும் நன்மை செய்ய அறியார்,தம்முயிர்க்கு அரணாக அமைந்தஅறவொழுக்கங்களையும் சேர்ந்தொழுகார்; தாம்மயங்கி ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ் நாளைப்போக்குவார் - தாம் மதிமயங்கி முன்னைநல்வினையாற் கிடைத்த செல்வச் செழுமையில்அழந்தி வீணே தம் வாழ் நாளைக் கழித்தொழிவர்.

(க-து.) புல்லறிவாளர் தம்வாழ்நாளைத் தமக்கும் பிறர்க்கும் பயன்படவொட்டாமல் வீணாக்கிக்ளொள்வர்.

(வி-ம்.) ‘ஏமஞ்சார்நன்னெறியென்றது' வீடுபேற்று நெறி. அவத்தம், ஒருசொல்; "அவத்தமே பிறந்து"1என்றார்தேவாரத்தினும்,

(7)


1. தேவா. 120 : 6

328 சிறுகாலை யேதமக்குச்செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்.

(பொ-ள்.) சிறுகாலையே தமக்குச்செல்வுழி வல்சி இறுக இறுகத் தோட் கோப்புக்கொள்ளார் - இளம் பருவத்திலேயே தமதுசெல்லுமிடமாகிய மறுமைக்கு, அறமாகிய உணவு அழுந்தஅழுந்தக் கட்டுணவு தேடிக்கொள்ளாதவராய்; இறுகிஇறுகிப் பின் அறிவாம் என்று இருக்கும்பேதையார்-பொருளில் இறுக்கம் மிகக் கொண்டுஅறவினையைப் பிற்காலத்திற் காண்போம் என்றுசெம்மாந்திருக்கும் புல்லறிவினார்; கைகாட்டும்பொன்னும் புளிவிளங்காயாம்-இறுதிக்காலத்திற்சாக்காட்டுத் துன்பத்தினால் அறநினைவு வந்துஅந்நிலையிற் பேச நாவெழாமையால்அயலிலுள்ளார்க்கு அறஞ்செய்ம்மினெனக் கைக்குறியாகக் காட்டும் பொன்னும் அவராற்புளிச்சுவையுள்ள விளங்காய் கேட்டலாகக் கருதிமறுக்கப்படும்.

(க-து.) புல்லறிவு எதனையுங்காலத்திற் செய்து கொள்ளாது ஏமாந்து பின் கவலும்.

(வி-ம்.) ‘தமக்குச் செல்வுழி'யென்பதைத் ‘தம்செல்வுழிக்கு' என மாறுக. வல்சிஇறுகுதலாவது, கட்டுணாப் பொருட்டு நன்கு பிசைந்துசெறித்தலால் அவை ஒன்றோடொன்று அழுந்திப்பொருந்துதல்; கட்டுணவு கவளம் கவளமாக வைத்துச்செறித்துச் செறித்துக் கட்டப்படுவது போல்மறுமைக் குணவாகிய அறத்தையும் மேலுமேலுந் தேடிச்செறித்துக்கொள்ள வேண்டுமென்றற்கு, ‘இறுக இறுக'வென மிகுதிப் பொருளில் அடுக்குக் கூறினார். வழிநடையின்போது கட்டமுது தோளிற் கோக்கப்படுவதாகவின், ‘தோட்கோப்' பெனப்பட்டது.சாக்காட்டு நிலையிலிருப்பாருக்குப்புளிவிளங்காய் ஏலாததொன்றாகலின்,மறுக்கப்படும். "ஐயா விளம்பழமே யென்கின்றீராங்கதற்குப் பருவமன்றென்செய்கோ" என்றார்பிறரும். 1 "மரப் பெயர்க்கிளவி2என்பதனான் விளங்காய் இன மெல்லெழுத்துமிக்கது.

(8)


1. சிந். 6 ; 142.

2. தொல். உயிர்மயங். 15.

329 வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனத்தாரே யாகி, - மறுமையை
ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.

(பொ-ள்.) வெறுமையிடத்தும் விழுப்பிணிப் போழ்தும் மறுமை மனத்தாரேயாகி - கையிற்பொருளில்லாத வறுமைக் காலத்தும் மிக்கநோயுண்டான நேரத்தும் மறுமைக்குரியஅறநினைவினராயிருந்து, ஆற்றிய காலத்து - செல்வம்முதலியவற்றால் ஆற்றல் வாய்ந்த காலத்தில்,மறுமையை ஐந்தை யனைத்தானுஞ் சிந்தியார்சிற்றறிவினார் - அம்மறுமைக்குரிய அறத்தைச் சிறுகடுகி னளவாயினும் புல்லறிவினார் கருதார்.

(க-து.) புல்லறிவு,துன்பக்காலத்தில் மட்டுமே நன்மையை நினையும்இயல்புடையது.

(வி-ம்.) மறுமைக்குரிய அறம்ஈரிடங்களிலும் ‘மறுமை' யெனப்பட்டது. ஐந்தை :ஐயென்னுஞ் சிறுமையடியாகப் பிறந்த சொல். ஆற்றுந்தகுதி, பொருந்திய காலம் இங்கு ஆற்றிய காலம்எனப்பட்டது. "பின்னை வழி நினைந்து, நோய்காண்பொழுதின் அறஞ் செய்வார்க் காணாமை நாய்காணிற்கற் காணாவாறு"1 ஆதலின் அவரைச்சிற்றறிவினார் என்றார்.

9)


1. பழமொ. 261. நா-18

330 என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை, - அன்னோ
அளவிறந்த காதற்றம் ஆருயி ரன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமுங் கண்டு.

(பொ-ள்.) அன்னோ அளவிறந்தகாதல் தம் ஆருயிரன்னார்க் கொள இழைக்கும்கூற்றமும் கண்டு - ஐயோ, தம்பால் அளவு கடந்தஅன்பினையுடைய தம் ஆருயிரன்ன உறவினரை உயிர்பிரித்துக்கொள்ள முயலுங் கூற்றுவனையும் உலகிற்பார்த்துக்கொண்டு, என்னே இவ் வுடம்பு பெற்றும்அறம் நினையார் கொன்னே தம் வாழ்நாளைக்கழிப்பர் - ஆ! பெறற்கரிய இம் மக்களுடம்பைப்பெற்றும் அறத்தை நினையாதவராய்ப்புல்லறிவினார் தம் வாழ்நாளை வீணேகழிக்கின்றனர்!

(க-து.) புல்லறிவானது, செய்திகளைநேரிற் கண்டும் தெளிவுபெறாதஇயல்புடையதாயிருக்கின்றது.

(வி-ம்.) என்னே அன்னோ என்னும்இரங்கல் புல்லறிவினாரின் ஏழைமை கருதிற்று.பெற்றும் என்னும் உம்மை, பெறற் கருமையுணர்த்திற்று. மேல் ஆருயிரன்னாரென்பதனால்தமதன்பு பெறப்படுதலின், அளவிறந்த காதல் என்பதுதம்பால் அவர் செலுத்தும் அன்பெனக்கொள்ளப்படும். எத்துணை அருமையாளரையுங் கூற்றுவன்பிரித்தெடுத்துக்கொள்ள முயலுதலால் மற்று யார்பொருட்டு அறத்தையுங் கருதாது பொருட் பற்றுதலோடுஇவ்வாறு சிக்கென்றிருந்து வாழ்நாளை வீணாக்கிக்கொள்ளுதலென்று அறிவுறுத்துமுகத்தால் இச் செய்யுள்புல்லறிவின் இழிந்த இயல்பை விளக்குவதாயிற்று.எனவே, "செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்துசெவ்வியராய்ப. பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு -நல்லவாம் , தானம் மறவாத தன்மையராய்"1விளங்கல் வேண்டும் என்பதறிந்து கொள்ளப்படும்.புல்லறிவினார் கழிப்பரென்று எழுவாய்வருவித்துக்கொள்க. மற்று : வினைமாற்று. ‘உடம்புபெற்றும் மற்றுக் கொன்னே கழிப்ப' ரென்க.

(10)


1. அறநெறி. 179.


2011/7/1 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/6/30 Venkatram Shrinivas <see...@gmail.com>



2011/6/29 Venkatram Shrinivas <see...@gmail.com>
<p style="font-family:GIST-TMOTChanakya;font-size:9pt;font-w



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jul 2, 2011, 5:08:05 PM7/2/11
to மின்தமிழ்
திரையை மூடுக
பேதைமை 
 
பொருட்பால்
34. பேதைமை

[யாதும் அறியாமை என்பதுணர்த்தும்]
331கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.

(பொ-ள்.) கொலை வல் பெரு கூற்றம்கோள் பார்ப்ப ஈண்டை வலையகத்துச்செம்மாப்பார் மாண்பு - கொல்லுந் தொழிலில்வல்லமையுடையோனாகிய ஆற்றலிற் பெரிய கூற்றுவன்தம் உயிர்கொள்ளுதலை எதிர்நோக்கிக்கொண்டிருக்க இவ் வுலகப் பற்றாகியவலையிற்கிடந்து அதன்கட் களித்திருப்பாரதுஏழைமையியல்பு, கொலைஞர் உலை ஏற்றித் தீ மடுப்பஆமை நிலையறியாது. அந்நீர் படிந்தாடி யற்று -தன்னைக் கொல்லுங் கொலைஞர் தன்னை உலையில்இட்டு அடுப்பிலேற்றித் தீக்கொளுவ ஆமைநிலையறியாது அவ்வுலை நீரில் மூழ்கி விளையாடிமகிழ்ந்தாற்போன்றது.

(க-து.) பேதைமை தனக்கு வரும்இடுக்கணையறியாது களித்திருக்கும் இயல்புடையது.

(வி-ம்.) தீமடுப்ப, தீச்செறிப்பவென்க. பெருங்கூற்றமென்றது, எதிர்ப்பாரையற்றபேராற்றல் வாய்நத கூற்றம்; மாற்றருங் கூற்றம்1கோள் பெயர்; இவ்வுலக வலையென்றற்கு, ‘ஈண்டை வலை'யெனப்பட்டது; பற்றின் கட்டுக்கருதிவலையெனப்பட்டது. கிடந்தென ஒருசொல் வருவிக்க.மாண்பென்னும் நன்மொழியாற் கூறியது, மிக்கஇழிவை யுணர்த்திற்று. மேற் செய்யுளில் வருதற்கும்இங்ஙனங் கொள்க. இடுக்கண் அறியாமை ஈண்டுப்பேதைமையாயிற்று.

(1)


1. தொல். புறத். 24.

332 பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.

(பொ-ள்.) இல்செய் குறைவினைநீக்கி அறவினை மற்றறிவாம் என்றிருப்பார்மாண்பு- குடும்பத்துக்குச் செய்யவேண்டிய குறைகளைச்செய்து தீர்த்து அறச்செயல்களைப் பின்புகருதுவோம் என்று காலத்தை எதிர்நோக்கியிருப்பாரது இழிதகைமை, பெருங்கடல் ஆடியசென்றார் ஒருங்கு உடன் ஓசை அவிந்தபின் ஆடுதும்என்றற்று - பெரிய கடலில் நீராடுதற்குச்சென்றவர், முழுதும் ஒருசேர அலையொலி அடங்கியபின்நீராடுவோம் என்று கருதினாற் போன்றது.

(க-து.) நடவாத தொன்றை நினைவதுபேதைமையின் இயல்பு.

(வி-ம்.) ஆடிய : செய்யிய வென்னும்எச்சம். ஒருங்கு - எல்லா அலைகளும்; உடன்,சேரவென்க. ஓசையென்றது, இலக்கணையால் அலையின்மோதுதலையுணர்த்தும். ஆல் : அசை. குறைவினை,யென்பதில், இன்சாரியை; குறைவினை, அறவினை என்றது,செய்யுளோசையின் இன்பங் கருதிற்று, குறைவாகியசெயலென்றுரைப்பின் அவ்வின்பத்திற்காகஆசிரியர் செய்த விரகு புலப்படாது போமாதலின், அதுசிறவாது மற்று என்றது, இங்குப் பின் என்னும்பொருட்டு : 1"மற்றறிவாம் நல்வினையாம்இளையம்" என்புழிப்போல.

(2)


1. நாலடி. 2 : 9.

333 குலந்தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.

(பொ-ள்.) குலம் தவம் கல்வி குடிமைமூப்பு ஐந்தும் விலங்காமல் எய்தியக்கண்ணும் -நல்லிணக்கம் தவவொழுக்கம் கல்வியறிவு குடிவளம்ஆண்டில் மூத்தோராதல் என்னும் ஐந்தும்தடையின்றிப் பெற்றவிடத்தும்; நலம் சான்ற மைஅறுதொல்சீர் உலகம் அறியாமை நெய் இலாப்பால்சோற்றின் நேர்-இன்பம் நிரம்பிய தீதற்றதொன்மையாகிய இயல்பினையுடைய வீட்டுலகவொழுக்கம் அறியானாயிருத்தல் நெய் இல்லாதபாலடிசிலுக்கு ஒப்பாகும்.

(க-து.) உறுதிப்பொரு ளறியாமைபேதைமையின் இயல்பு.

(வி-ம்.) குடிமையென்பதிற்குடிப்பிறப்பும் அடங்குதலின் குலம் என்றதுசார்பென்னும் பொருளையும், மூப்பு என்பதில்உலகியலறிவும் அடங்குதலின் உலகமென்பதுவீட்டுலகமென்னும் பொருளையும் உணர்த்தும்.விலங்குதல் குறுக்கிடுதலாகலின்விலங்காமலென்றதற்குத் தடையின்றியென்றுரைக்கப்பட்டது. நலஞ்சான்ற மையறுதொல்சீர்' என்னும் அடைமொழிகளின் பெருமைகருத்திருத்தற்பாலது; இதனால் இன்பம் நிரம்பியமாசில்லாத இயற்கை யொழுங்கோடு கூடிய ஒழுக்கமேஅந்நிலையினை உய்க்கும் என்றறிந்து கொள்ளல்வேண்டும். முன்னும் இஃது ‘இயல்நெறி'1என்றுணர்த்தப்பட்டமை காண்க. பாற்சோறாயினும்நெய்யின்றி மாட்சிமைப்படாமைபோல எத்துணைச்சிறந்த வாழ்க்கை நலங்களும் இயற்கைஅருளொழுக்கமின்றி நலப்படாவென்பது இதனாற்பெறப்பட்டது.

(3)


1. நாலடி. 30 : 4.

334 கன்னனி நல்ல கடையாய மாக்களின்;
சொன்னனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்
றுற்றவர்க்குத் தாமுதவ லான்.

(பொ-ள்.) கல் நனி நல்ல கடையாயமாக்களின் - மக்களிற் கடைப்பட்டவரானபேதையரைவிடக் கற்பாறைகள் மிக நல்லனவாம்;(ஏனெனில்) தாம் சொல் நனி உணராவாயினும்உற்றவர்க்கு இன்னினியே நிற்றல் இருத்தல்கிடத்தல் இயங்குதல் என்று உதவலான் - அவை இக்கடைப்பட்டவர்களைப்போற் சான்றோர்உறுதிமொழிகளை முற்றும் உணரமாட்டாவாயினும்தம்மை அடைந்தவர்க்கு உடனே நின்று கொள்ளல்இருந்து கொள்ளல் சாய்ந்து கொள்ளல் நடந்துகொள்ளல் என்று பலவற்றிற்கும் இடம் உதவுதலான்என்க.

(க-து.) சொல்வதுணராமையும்தாமேயுஞ் செய்யாமையும் பேதையோர் இயல்பாகும்.

(வி-ம்.) இன்னினியே, உடனேஎன்னும் பொருட்டு,1 உணராததொன்று.அந்நிலைமைக்கு வேறான உதவுதலைச் செய்தலாகத்தானெடுத்து மொழிதலால் ‘தாம் உணராவாயினும்'‘தாம் உதவலான்' என இருமுறை ‘தாம்' என்னும்பெயர்ச்சுட்டுக் கொடுத்து விதந்தார்.பலவற்றிற்குமென ஒரு சொல் வருவிக்க.கற்பாறைக்கும் பேதைக்கும் உணராமை பொதுவாயினும்கற்பாறையால் உதவியுண்டென்று ஒரு வேறுபாடு காட்டிஏதுவின் நிறுத்துக் கல் நனி நல்ல வென்றாரென்பது.நனி நல்லவென்றார், நினைத்த வண்ணமெல்லாம்உதவுதலாலும், அவ்வுதவுதல் சிறந்த அறமாதலானுமென்க.

(4)


1. ஐங். 23 : 2

335 பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல சுனைத்து.

(பொ-ள்.) பெறுவதொன்று இன்றியும்பெற்றானே போலக் கறுவுகொண்டு - தனது சினத்துக்குஏதுவாகப் பெறுங் காரணம் ஒன்று இல்லாதிருந்தும்அக் காரணம் பெற்றவனேபோலக் கோபித்தலைமேற்கொண்டு, ஏலாதார் மாட்டும் கறுவினால்கோத்து இன்னா கூறி உரையாக்கால் - தனது சினம்சென்று தாக்குதலில்லாத உயர்ந்தோரிடத்தும்கோபத்தால் இன்னாச் சொற்களைத்தொடுத்துரைத்துப் பேசாவிட்டால், பேதைக்கு நல்லசுனைத்து நாத்தின்னும் - பேதைகளுக்கு மிக்க தினவுநாவை அரித்துவிடுவது போலிருக்கும்.

(க-து.) பேதை மாக்கள்காரணமில்லாமலே பிறரைப் பகைத்தும் பழித்தும்நாத் தினவாற் சும்மா பேசியபடியேயிருப்பர்.

(வி-ம்.) கறுவென்றது மனத்தின்நிகழுஞ் செற்றம். கோத்து என்றார், காரணத்தோடுஅறிஞர் தொடுப்பது போற் போலியாக முறைப்படுத்தியென்றற்கு. கூறியென்றதன் மேலும்உரையாக்காலென்றார், விளக்கங்கூறுவது போல வாளாபன்னிப்பன்னிப் பேசுதலினென்க. அதற்குக் காரணம்தினவேயல்லது வேறில்லாமையின், அதன் மிகுதிதோன்ற ‘நாத்தின்னும் நல்ல சுனைத்து' என்றார்;இஃது, ‘உண்டற்குரிய வல்லாப் பொருளை உண்டனபோலக் கூறும்'1 ஒரு மரபு.

(5)


1. தொல். பொருளி. 19.

336 தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை
எங்கண் வணக்குதும் என்பவர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.

(பொ-ள்.) நல் தளிர்ப் புன்னைமலரும் கடல் சேர்ப்ப - அழகிய தளிர்களையுடையபுன்னைமரங்கள் மலர்களைப் பூக்கின்றகடற்கரையாய்!, தங்கண் மரபு இல்லார் பின் சென்றுதாம் அவரை எங்கண் வணக்குதும் என்பவர்புன்கேண்மை - தம்மிடத்தில் மதிப்பில்லாதவர்வழிச்சென்று ‘அவரை எம்மிடம் அடங்கும்படிசெய்வோம்' என்று சொல்லுவோர் கருதும் அச்சிறியோர் தொடர்பு. கல் கிள்ளிக் கை இழந்தற்று- கருங்கல்லைக் கிள்ள முயன்று ஒருவன் கைவிரலைஇழந்ததனோடு ஒக்கும்.

(க-து.) திருந்தா இயல்புடையதுபேதைமையாகும்.

(வி-ம்.) மரபென்பது ஈண்டுநன்மதிப்பு. புன் கேண்மையென்றார், அப்பேதையர்தொடர்பை. கல்லையுங் கிள்ளமுடியாது தாமுங்கைவிரலிழந்தாற்போல அப் பேதையோரையுந்திருத்த முடியாமல் தாமும் அவரால் தீங்குறப்பெறுவரென்பது; "கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்"1என்றார் பிறரும். "நிலத்தறைந்தான்கைபிழையாதற்று"2 என்றதூஉங் காண்க.

(6)


1. பழமொழி. 48

2. குறள். 31 : 7.

337ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதுங்
கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.

(பொ-ள்.) ஆகாது எனினும் அகத்து நெய் உண்டாகில் போகாது எறும்பு புறம் சுற்றும் - தமக்கு உண்ண வாய்க்காதெனினும் குடத்தினுள் நெய் இருக்குமாகில் எறும்புகள் போகாமல் அக் குடத்தைச் சூழச் சுற்றிக் கொண்டிருக்கும்; யாதும் கொடாரெனினும் உடையாரைப் பற்றி விடார் உலகத்தவர் - அதுபோல, ஒன்றும் உதவமாட்டா ரென்றாலும் பொருளுடையோரைச் சூழ்ந்து கொண்டு பேதைமாக்கள் விடமாட்டார்கள்.

(க-து.) பேதைமை யென்பது, அறியாமையும் வீண்முயற்சியுமுடையது.

(வி-ம்.) இஃது எடுத்துக்காட் டுவமை. உடையார் என்றது பொருளுடையாரை; "உடைப் பெருஞ் செல்வர்"என்றார் புறத்தினும். உலகத்தவரென்றது, ஈண்டுப் பேதையரைக் கருதிற்று. முடிவறியாது வீண்முயற்சி செய்யும் பேதைமையின் பெற்றி இதன்கண் நுவலப்பட்டது.

(7)


1. புறம். 188.

338 நல்லவை நாடொறும் எய்தார், அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார், - எல்லாம்
இனியார்தோள் சேரார், இசைபட வாழார்,
முனியார்கொல் தாம்வாழும் நாள்.

(பொ-ள்.) நல்அவை நாடோறும் எய்தார், அறம் செய்யார், இல்லாதார்க்கு யாதொன்றும் ஈகலார், எல்லாம் இனியார் தோள்சேரார் இசைபட வாழார் - உயர்ந்தோர் அவைக்களத்தை நாடொறுஞ் சென்றடைந்து கேள்விப் பயன் பெறாமலும், நற்செயல்கள் செய்யாமலும், இல்லாத வறியோர்க்கு யாதொன்றும் உதவாமலும், எல்லா வகையாலும் இனியரா யிருக்கும் தம் மனைவியர் தோளை மருவாமலும், கல்வி முதலியவற்றால் உலகிற் புகழுண்டாக வாழாமலுமிருக்கும் பேதைமாந்தர், முனியார்கொல் தாம் வாழும் நாள் - உயிர்வாழும் தம் வெற்று வாழ்நாட்களை வெறாரோ!

(க-து.) பேதையர் வாழ்நாள் வறிதே கழித்தொழியும்.

(வி-ம்.) நாடொறுமென்னும் குறிப்பால் நல் அவை எனப் பிரித்துரைக்க. இனியராயிருந்தும் தம் துணைவியர் தோள் சேராரெனவே பேதையர் பிற மாதர் நினைவினரென்பது பெறப்படும். 'பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை'1 என்றார் பொய்யில் புலவரும், ஒரு பயனுமில்லாது கழியுந் தம் வாழ்நாளில் வெறுப்புத்தோன்றாதோ வென்றற்கு, ‘முனியார் கொல்' எனப்பட்டது.

(8)

1. குறள். 15:1.

339 விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை, - தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு.

(பொ-ள்.) விழைந்து ஒருவர் தம்மைவியப்ப ஒருவர் விழைந்திலேமென்றிருக்கும் ஆய்நலமில்லாதார் மாட்டுக்கேண்மை - ஒருவர் தம்மைவிரும்பி மதித்து அளவளாவ ஒருவர். அவரைவிரும்பிலேம் என்று புறக்கணித்திருக்கும்இத்தகைய நுண்ணுணர்வில்லாப்பேதையரிடத்துண்டாகுந் தொடர்பு, தழங்கு குரல்பாய் திரைசூழ் வையம் பயப்பபினும் இன்னாது -ஒலிக்குங் குரலோடு பாய்ந்திழியும் அலைகளையுடையகடல் சூழ்ந்த உலகத்தைப் பயப்பதாயினும் இனியதொன்றன்று.

(க-து.) பொருள் செய்ய வேண்டுவதைப்புறக்கணித்துக் கிடப்பது பேதைமையின் இயல்பு.

(வி-ம்.) வியப்ப வென்றது,வியந்தளவளாவ வென்க. ‘தம்முள் ஒருவர் விழையஒருவர் விழைந்திலேமென்றிருக்கும் ஆய்நலமில்லாதார்மாட்டுக்கேண்மை இன்னாது' என்பது.விழைவோரையும் ஆய்நலமில்லாதாரென்றது, அறியாதுவிழைதலின். ஆய்நலமாவது, ஈண்டு நுண்ணுணர்வு :"ஆய்தல் ............. உள்ளதன் நுணுக்கம்"1என்பது தொல்காப்பியம். பிறவி தொறும் இன்பம்பெருக்கும் அறவொளியைக் கெடுத்தலின் அவர்கேண்மை வையம் பயப்பினும் இன்னாதாயிற்று.

(9)


1. தொல். உரி. 32.

340கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.

(பொ-ள்.) கற்றனவும் கண் அகன்றசாயலும் இல் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப்பாடு எய்தும் - தான் கற்ற கல்விகளும், காட்சிபரந்த தன் சாயலும், தனது உயர் குடிப் பிறப்பும்அயலவர் பாராட்டப் பெருமையடையும்; தான்உரைப்பின் - அவ்வாறன்றித் தான் புகழ்ந்தால்,மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தன்என்று எள்ளப்படும் - தனக்கு முகமன் மொழிந்துவிளையாடுவோர் மிகப் பெருகி அதனால்,மருந்தினால் தெளியாத பித்தன் இவன் என்றுஉலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன்அடைவான்.

(க-து.) பேதைமை, பிறர்கருத்தறியாது அவர் முகமனுக்கு மகிழும் பித்துத்தன்மையுடையது.

(வி-ம்.) கற்றனவும் என்றமையால்அறிவும், சாயலும் என்றமையால் அழகும்,இற்பிறப்பும் என்றமையால் இவ்விரண்டிற்கும்ஏதுவான இயற்கைச்சார்புங் கொள்க. தான்உரைத்தலால், பிறர், தன் மகிழ்ச்சிக்குரியதுஇச்சை பேசுதலென்றறிந்து அதுவே பேசுவாராய்ப்பல்க, அதனால் தன் அறிவு நிலை திரிந்துபித்துடையதாகு மென்பது பின் வரிகளின் கருத்து.மைத்துனரென்னுங் குறிப்பால், அவ்விச்சை பேசுதலும்பகடி செய்யுங் கருத்தானென்பது பெறப்படும்."மைந்தனை மகிழ்வ கூறி மைத்துனத் தோழன்என்றான்"1 என்பதும் அதன்உரையுங்காண்க.

(10)


1. சிந். 5 : 99.







2011/7/2 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jul 3, 2011, 3:16:59 PM7/3/11
to மின்தமிழ்
கீழ்மை 
 
பொருட்பால்
35. கீழ்மை
[கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று.]
341கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்.

(பொ-ள்.) கப்பி கடவதா காலை தன்வாய்ப்பெயினும் குப்பை கிளைப்பு ஓவாக்கோழிபோல் - கடமையாக நாடோறும்நொய்யரிசியைத் தன் வாயிற் பெய்தாலும் குப்பைகிளைத்தலைவிடாத கோழியைப்போல், மிக்கனம்பொதிந்த நூல் விரித்துக் காட்டினும் கீழ் தன்மனம் புரிந்தவாறே மிகும் - மிக்க பெருமை நிறைந்தமெய்ந் நூலுண்மைகளைப் பொருள் விளக்கிஅறிவுறுத்தாலும் கீழ்மகன் தன் மனம் விரும்பியவழியே முனைந்தொழுகுவான்.

(க-து.) கீழ்மை யென்பது பிறர்கூறும் அறிவுரையை ஏலாது.

(வி-ம்.) கடவது, கடமை, "கடவதுதிரியாக்கடவுளர்க் கண்டு"1என்புழிப்போல. மிகும் என்றார், தன்னியல்பேகாட்டிச் சேறலின்.

(1)


1. பெருங். 4. 5: 87.

342 காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் எனஉரைப்பின் - கீழ்தான்
உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன் றுரைத்து.

(பொ-ள்.) காழ் ஆய கொண்டு கசடுஅற்றார் தம் சாரல் தாழாது போவாம் எனஉரைப்பின் - உறுதியாகிய மெய்ந்நூலுணர்வு கொண்டுவினை நீங்கிய மேலோர் பக்கல் நாம் காலம்தாழாது சென்று பயனுறுவோம் என்று அறிந்தோர்எடுத்துக்காட்டினால், கீழ்தான் உறங்குவம் என்றுஎழுந்துபோம் அஃதன்றி மறங்கும் மற்றொன்றுஉரைத்து - கீழ்மகன் தூங்குவோம் வம்மின் என்றுஎழுந்து போவான், அஃதன்றி வேறு வம்பு பேசிமாறுபடுவான்.

(க-து.) இருந்தால் வாளா கிடத்தலும்யாதேனுஞ் செய்தால் பழுது செய்தலுங் கீழோர்இயல்பாகும்.

(வி-ம்.) காழ் என்றது ஈண்டுமெய்யுணர்வு; "காழ் இலா மம்மர்கொள்மாந்தர்"1 என்றார் முன்னும்.கலங்குதலில்லாததென்பது பொருள். தம், தான்:சாரியை. உறங்குவம் என்னும் உளப்பாட்டுப் பன்மை,உரைத்தோரையும் உட்கொண்டு நின்றது. ஆம்இரண்டும் அசை. மற்றொன்றென்றதுகுறிப்பாற்றீமைமேற்று.

(2)


1. நாலடி. 2 : 4.

343 பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா
தொருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ்.

(பொ-ள்.) பெரு நடை தாம் பெறினும்பெற்றிபிழையாது ஒரு நடையராகுவர் சான்றோர் -உலகிற் பெருமித நிலையைத் தாம் பெற்றாலும் தம்பெருந்தன்மையாகிய இயல்பு வழுவாது என்றும் ஒருதன்மையாராய் விளங்குவர் மேலோர்; பெருநடைபெற்றக்கடைத்தும் பிறங்கு அருவி நல் நாடவற்றாம் ஒரு நடை கீழ்-பெருமித நிலையைப்பெற்றவிடத்தும், விளங்குகின்ற அருவிகளையுடையசிறந்த மலைநாடனே, கீழ் மகனும் என்றுந் தனதுகீழ்மையியல்பு தோன்ற ஒரு நடையாய்ஒழுகவல்லவனாவன்.

(க-து.) செல்வநிலையிலும் கீழோர்கீழோராகவேயிருப்பர்.

(வி-ம்.) நடையென்றது,செல்வப்போக்கு; பெறினுமென்னும் உம்மைபெறாதிருந்த காலத்துமென் இறந்தது தழீஇயது.பெற்றக்கடைத்து மென்னும் உம்மையும் அற்று.கீழுமென எச்சவும்மை கொள்க. வல்லதென்னுங்குறிப்பானும் ஒரு நடையென்னுங் குறிப்பானும் கீழுஞ்சான்றோரொப்ப ஒரு நடைய ராகுவரென்றுரைக்கப்பட்டது. நாயனாருந் ‘தேவரனையர்கயவர்"1 என்றிங்ஙனம் இகழ்ந்துரைமுறைமை மேற்கொண்டமை காண்க. செல்வாக்குக்கேற்றபெரும்போக்கைப் பெறாமல் தமது கீழ்மையியல்பையே கீழோர் மேற்கொண்டிருப்பரென்பது.

(3)


1. குறள். 108 : 3.

344 தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் ;- பனையனைத்
தென்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட.
நன்றில நன்றறியார் மாட்டு.

(பொ-ள்.) தினையனைத்தேயாயினும்செய்த நன்று உண்டால் பனையனைத்தா உள்ளுவர்சான்றோர் - தினையளவினதேயாயினும் செய்த உதவிமுன் இருக்குமானால் அதனைப் பனையளவினதாகக்கருதிக் கனிந்திருப்பர் மேலோர்; பனையனைத்துஎன்றும் செயினும் இலங்கு அருவி நல் நாட நன்றுஇலநன்று அறியார்மாட்டு - நாளும் பனையளவுஉதவிசெயினும், விளங்குகின்ற அருவிகளையுடையஉயர்ந்த மலைநாடனே, நன்மையறியாக்கீழோரிடத்தில் அவை சிறிதளவும் நன்றிபாராட்டுத லில்லாதனவாகும்.

(க-து.) கீழ்மை, நன்றி மறக்கும்இயல்புடையது.

(வி-ம்.) உள்ளுதல், உள்ளிக்கனிதல்; "கன்றுள்ளிய புனிற்றா"என்பதுகாண்க. ‘நன்றில' என்னுமிடத்து ‘நன்று'நன்றியையும் ‘நன்றறியார்' என்னுமிடத்துஅதுமேன்மையையும் உணர்த்தும். "தினைத்துணைநன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெரி வார்" என்னும் தமிழ்மறையை ஈண்டுநினைவுறுக.

(4)


1. பெருங். இலாவா. 28 : 10.

345 பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்; - அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யுங்
கருமங்கள் வேறு படும்.

(பொ-ள்.) பொன் கலத்து ஊட்டிப்புறந்தரினும் நாய் பிறர் எச்சிற்கு இமையாதுபார்த்திருக்கும் - பொன்னாற் செய்தஉண்கலத்தினால் உண்பித்துப் பாதுகாத்தாலும்நாயானது பிறர் எறியும் எச்சிற் சோற்றுக்குக்கண்ணிமையாமல் விழித்துக்கொண்டு காத்துக்கிடக்கும், அச்சீர்-அத்தன்மையாக,பெருமையுடையதாக் கொளினும் கீழ் செய்யும்கருமங்கள் வேறுபடும் - பெருமைக்குரியவனாகப்பெருமைப்படுத்தினாலும் கீழ்மகன் செய்யுஞ்செயல்கள் அந்நிலைமைக்கு வேறாகும்.

(க-து.) கீழ்மையியல்பு,திருத்தினாலுந் திருந்தாது.

(வி-ம்.) பறந்தருதல், காத்தல்,பார்த்திருக்குமென்றது. காத்திருக்கு மென்றற்கு.அச் சீரென்றது, உவமப்பொருட்டு. ‘அன்ன பிறவே'என்பதனாலும், ‘பல் குறிப்பினவே'1என்பதனாலும் இது கொள்ளப்படும். வேறுபடும் என்பது,கீழ்மைத் தொழில்களாகவே நிகழும் என்னுங்குறிப்பிற்று.

(5)


1. தொல். உவம. 11.

346 சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும்.

(பொ-ள்.) சக்கரச் செல்வம்பெறினும் விழுமியோர் எக்காலும் சொல்லார்மிகுதிச் சொல் - ஆட்சிச் செல்வம் பெற்றாலும்மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்தசொற்களைச் சொல்லமாட்டார்கள்; முந்திரிமேற்காணிமிகுவதேல் கீழ் தன்னை எக்காலும் இந்திரனாஎண்ணிவிடும் - ஆனால் முந்திரியளவுக்குமேற்காணியளவாகச் செல்வம் மிகுவதானால் கீழ்மகன்தன்னை என்றுந் தேவர் கோனாக எண்ணி இறுமாந்துஉரையாடுவன்.

(க-து.) சிறிது நிலையுண்டானால்கீழ்மக்கள் மிகவுஞ் செருக்குவர்.

(வி-ம்.) அரசாட்சிச் செல்வம்‘ஈண்டுச் சக்கரச் செல்வ' மெனப்பட்டது. "தாங்குமாவண்கைச் சக்கரமிக்குயர் பிறரும்"1என்றார் சிந்தாமணியினும், பெறினுமென்னும் உம்மைஎச்சம், மிகுதிச்சொல், தன்முனைப்புச் சொல்;மண்ணுலக வேந்தனாகவுமன்றி விண்ணவர் கோனாகவேஎண்ணி விடுவனென்றற்கு, ‘இந்திரனா' வென்றார்.சிறு இன்பத்தையும் பெரிது பாராட்டிக்களிக்குங்கீழ்மையியல்பினை இச் செய்யுள் விளக்கிற்று.

(6)


1. சிந். 13 : 163.

347 மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.

(பொ-ள்.) மை தீர்பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்செய்ததெனினும் செருப்புத் தன் காற்கேயாம் -குற்றந் தீர்ந்த கிளிச்சிறை என்னும் பசியபொற்றகட்டின்மேல் மாட்சிமை வாய்ந்தமணிக்கற்களைப் பதித்துச் செய்யப்பட்டதாயினும்செருப்பு ஒருவனது காலுக்கே அணிந்துகொள்ள உதவும்;எய்திய செல்வத்தராயினும் கீழ்களைச்செய்தொழிலாற் காணப்படும் - அதுபோலச்சிறக்கப் பொருந்திய செல்வமுடையரானாலும்கீழ்மக்களை அவர் செய்கின்ற தொழில்களால்இன்னாரென்று கண்டுகொள்ளுதல் கூடும்.

(க-து.) கீழோர் இயல்பு,நிலைமைகளால் வேறுபடுதலில்லை.

(வி-ம்.) மைதீர் பசும்பொன்என்றது ‘கிளிச்சிறை' யென்னும் பொன்னாதல்,"வீறுயர் பசும்பொன்"என் புழிக்காண்க. மாண்டமணியாவது, குணச்சிறப்புடையமணிகளென்க. பிற வுறுப்புக்கட்கன்றென்றுபிரித்தலின், காற்கேயென்னும் ஏகாரம்பிரிநிலை. காண என்பது காணல் என்னுந் தொழிற்பெயரின் றிரிபு. முன்வந்த "பொற்கலத்தூட்டி"யென்னுஞ் செய்யுள்2 ஈண்டு நினைவுகூர்தற்குரியது.

(7)


1. சிலப். 165.

2. நாலடி. 3. 5. 5.

348கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட் டுவக்கும், - அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.

(பொ-ள்.) விறல் மலை நல் நாட -ஆற்றல் வாய்ந்த மலைகளையுடைய சிறந்த நாடனே!,கீழ் - கீழ்மகன், கடுக்கெனச் சொல் வற்று -கடுமையாகப் பேசுதல் வல்லான்: கண்ணோட்டம் இன்று- கண்ணோட்ட மில்லான்; இடுக்கண் பிறர்மாட்டுஉவக்கும் - பிறரிடத்து நேரும் இன்னலுக்குமகிழ்வான்; அடுத்தடுத்து வேகம் உடைத்து - அடிக்கடிசீற்றமுடையான் ; ஏகும் - கண்ட விடங்கட்குச்செல்வான் ; எள்ளும்-பிறரை இகழ்வான்.

(க-து.) பிறர்க்குத் தொல்லைகள்விளைப்பது கீழ்மக்களின் இயல்பு.

(வி-ம்.) வல்லது என்றது,இகழ்ச்சிக்குறிப்பு. ஆம் அனைத்தும் அசை. பிறர்மாட்டு என்பதைப் பிறவிடங்கட்குங் கொள்வதுபொருந்தும். வேகம், சினத்தின் வேகம். மலைக்குவிறலாவது, எஞ்ஞான்றும் வளமுடைமை; "உழவர் உழாதனநான்கு பயன் உடைத்தே"1 என்பவைமுதலாயின. கீழ் என்னும் அஃறிணைச் சொல்லால்எல்லாம் அஃறிணை முடிபு கொண்டன. கீழ்மக்களின்இயல்புகள் சிலவற்றை இச்செய்யுள்தொகுத்துணர்த்திற்று.

(8)


1. புறம். 101.

349 பழைய ரிவரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினிய ராகுவர் சான்றோர்; - விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப;
எள்ளுவர் கீழா யவர்.

(பொ-ள்.) கள் உயிர்க்கும்நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப - தேன்சொரியும்நெய்தல் மலர்களையுடைய ஒலிக்கின்ற கடலின்குளிர்ந்த கரையை யுடையவனே!, பின் நிற்பின் பல்நாள் பழைய ரிவரென்று உழை இனிய ராகுவர்சான்றோர் - தமக்குப் பின்னால் வந்து ஒருவர்பணிவுடையராய் நின்றால் இவர் பலநாள்பழகியவரென்று விரும்பி அவரிடம் சான்றோர்அன்புடையவராவர்; கீழாயவர் விழையாது எள்ளுவர் -ஆனாற் கீழ்மக்கள் அவரைத் தமக்குஅடங்கினவரெனக் கொண்டு அன்புடன் விரும்பாமல்அதிகாரத்தால் மதியாது ஒதுக்குவர்.

(க-து.) தம்மை விரும்புவோரைத்தாம் மதியாதொதுக்குவது கீழ்மக்களின் இயல்பு.

(வி-ம்.) பின் நிற்றல் ஈண்டுப்பணிவுடையராயிருத்தல் உணர்த்திற்று : ‘பின்நின்றபின் இவர் பன்னாட் பழையரென்று சான்றோர்உழை இனியராகுவ' ரென்று கொள்க. உழை, அவருழையென்க.விழையாதே என்னும் குறிப்பானும், பின் நிற்பின்என்னும் குறிப்பானும், எள்ளுதல்அதிகாரத்தானென்பது பெறப்படும். கீழாயவர்என்பதில் ஆய்வரென்பது ஆக்க மன்று; நூலானதுஎன்புழிப்போல வினை முதற் குறிப்பிடைச் சொல்;அதனை எழுவாய்ச் சொல்லுருபு என்ப; "வேற்றுமைப்பொருள்வயின்"1என்பதற்குச்சேனாவரையர் உரைத்த உரை காண்க.

(9)


1. தொல். இடை. 2

350 கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றுந் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.

(பொ-ள்.) கொய் புல்கொடுத்துக் குறைத்து என்றும் தீற்றினும் வையம்பூண்கல்லா சிறு குண்டை - கொய்தற்குரிய பசும்புல்லைஅறுத்துக்கொடுத்து நாடோறும் உண்பித்து வந்தாலும்சிற்றெருதுகள் வண்டிகள் பூண்டிழுக்க உதவா; ஐய கேள் -ஐய கேட்பாயாக; எய்திய செல்வத்தராயினும்கீழ்களைச் செய்தொழிலாற் காணப்படும் -சிறக்கப் பொருந்திய செல்வமுடையரானாலும் கீழ்மக்களை அவர் செய்கின்ற தொழில்களால்இன்னரென்று கண்டுகொள்ளுதல் கூடும்.

(க-து.) எவ்வளவு நலமுறச் செய்யினும்கீழ்மக்கள் பிறர்க்குப் பயன்படார்.

(வி-ம்.) கொய் புல் என்பதுபுல்லின் இளம்பதமான தகுதி யுணர்த்திற்று.குறைத்துக் கொடுத்தென்று மாறுக, பூண்கல்லா: ஒருசொல். ‘சிறு குண்டை' யென்றது, வளர்ச்சியில்லாதுகுறுகி மூத்த எருதுகள். "குண்டை குறட்பூதம்" 1என்றார் தேவாரத்தினும். ‘காணப்படு'மென்பதற்குக், கீழ் ‘மைதீர் பசும்பொன்'2என்னுஞ் செய்யுளில் உரைத்தாங்குரைக்க.

(10)


1. தேவா. 944 : 1.

2. நாலடி. 35 : 7.




2011/7/3 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jul 4, 2011, 3:16:46 PM7/4/11
to மின்தமிழ்
கயமை 
 
பொருட்பால்
36. கயமை
[மெலிந்த உணர்வினாரது இயல்புணர்த்திற்று.]
351ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்
காத்தோம்பித் தம்மை அடங்குப; - மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்.

(பொ-ள்.) ஆர்த்த அறிவினர் ஆண்டுஇளையராயினும் காத்து ஓம்பித் தம்மை அடக்குப -உறுதிமக்க மெய்யறிவினையுடையார் ஆண்டில்இளையராயினும் தம்மைத் தீய நெறியினின்றுந்தடுத்து நன்னெறியில் நிறுத்திஅடக்கிக்கொள்வர்; மூத்தொறும் தீத்தொழிலேகன்றித் திரிதந்து எருவைபோல் போத்து அறார்புல்லறிவினார் - ஆனால் மெலிந்தஅறிவினையுடையார் கழுபோல முதிர முதிரத் தீயசெய்கைகளே தடிப்பேறி அலைந்து மாசு நீங்கார்.

(க-து.) ஆண்டு முதிர்ந்து உலகப்பழக்கம் ஏறுதலால் கயவர் பெறும் பயன் யாதுமில்லை.

(வி-ம்.) ஆர்த்தவென்பது காழ்ந்தவென்னும் பொருட்டு. ‘காத்து ஓம்பி அடக்குப'என்பதற்குப் புலன் நெறியிற் காத்து ஞானநெறியில் ஓம்பி அருளில் தம்மை அடக்கியொழுகுவர்என்க. மூத்தொறும் என்றார், மூத்தலிற்பயனில்லாமையின். எருவை, மேலுமேலும் பிணத்தையேஉகத்தலைதப்போல் தீயனவே விரும்பியலைவர்என்பது. போத்தென்றது புரை: ஆவது, குற்றம். கயமைஈண்டு மென்மையாகலின்1 மெலிந்தஅறிவினார் புல்லறிவினாரெனப்பட்டனர்.

(1)


1. தொல். உரி. 24.

352செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாந் தேரை: - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது.

(பொ-ள்.) செழும் பெரும்பொய்கையுள் வாழினும் என்றும் வழும்புஅறுக்ககில்லாவாம் தேரை-நீர் நிறைந்த பெரியகுளத்தின்கண் உயிர் வாழ்ந்தாலும் தவளை தன்மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கைநீக்கிக்கொள்ளும் ஆற்றலில்லாதனவாகும்; வழும்புஇல் சீர் நூல் கற்றக் கண்ணும் நுணுக்கம் ஒன்றுஇல்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது - அது போல,பிழையற்ற சிறப்பினையுடைய மெய்ந்நூல்களைப்பயின்றாலும் நுட்பஞ் சிறிது மில்லாதவர் தம்மைஅதனால் மேம்படுத்திக்கொள்ளும் மாட்சி இல்லை.

(க-து.) அறிவு உரமில்லாதவர், தக்கவாய்ப்புக்களிருந்தாலும் தம்மைமேம்படுத்திக்கொள்ள அறியார்.

(வி-ம்.) பொய்கைக்குச் செழுமைநீரின் நிறைவு. உரமுள்ள அறிவு நுணுக்கம் பெறும்ஆற்றலுடையதாகலின், நுட்பமில்லா அறிவென்பதுமெலிந்த அறிவினையுணர்த்தும்; ஆதலின் ஈண்டுநுணுக்கமில்லாதரென்றது, கயவரை யென்க. தேர்தல்,தகுதி பெறுதல்; மாட்சிமைப்படுத்திக் கொள்ளலென்பது. அருமை இன்மைமேற்று; "மதிநுட்பம் நூலோடுடையார்"1 எனத்தெய்வப் புலவர்மதிநுட்பத்துக்கு முதன்மை தேற்றியதூஉங் காண்க.

353 கணமலை நன்னாட! கண்ணின் றொருவர்
குணனேயுங் கூறற் கரிதால், குணனழுங்கக்
குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்
கெற்றா லியன்றதோ நா.

(பொ-ள்.) கண மலைநல் நாட -கூட்டமான மலைகளையுடைய உயர்ந்த நாடனே!. கண் இன்றுஒருவர் குணனேயும் கூறற்கு அரிது - புறத்தில் ஒருவரதுநல்லியல்பினையும் பேசுதற்குஅருமையாயிருக்குமென்ப; குணன் அழுங்கக் குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு எற்றால் இயன்றதோநா - ஆனால் அவரது நல்லியல்பு கெடும்படி, செய்யாதகுற்றங்களை அவரெதிரிலிருந்து செய்ததாகக் கூறும்மெலிந்த அறிவினார்க்கு நாக்கு எதனால்உருவானதோ, அறிகிலேம்.

(க-து.) கயவர், அஞ்சாது,பொய்யுரைக்கும் இயல்பினர்.

(வி-ம்.) புறத்திற் குறை கூறாதுகுணங்கூறுதல் பொருந்துமேனும் அதனையுங்காரணமின்றிக் கூறச் சான்றோர் கூசுவர்;அற்றாயின், காரணமின்றியே அதுவும் குற்றத்தை,இல்லாத குற்றத்தை, எதிரிலேயே புனைந்துரைத்துப்பழிப்பதாயின் அதனை என்னென்பது என்றபடி.எதிரிற் குற்றங் கூறித் திருத்த முயல்வதுநன்றாகலின், இங்குக் குற்றம் என்றது, இல்லாதகுற்றத்தை யென்க. அறிகிலேம் என்பதுசொல்லெச்சம். தசையினாலியன்ற தன்றென்பதுகுறிப்பு.அறிவொடுபடாத நாவினியல்புஇனைத்தென்பது இதனாற் பெறப்பட்டது.

(3)


1. தொல். எச். 44.

354 கோடேந் தகலல்குற் பெண்டிர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப் பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.

(பொ-ள்.) கோடு ஏந்து அகல்அல்குற் பெண்டிர்தம் பெண் நீர்மை சேடியர்போலச்செயல் தேற்றார்-பக்கம் உயர்ந்து அகன்றஅல்குலையுடைய நல்லிலக்கணம் அமைந்த நற்பெண்டிர்,வேலைக்காரிகளைப்போல் தமது பெண்மையில்பைப்புறத்தில் ஒப்பனை செய்து காட்டுதல் அறியார்;மற்றையவர் கூடிப் புதுப் பெருக்கம்போலத் தம்பெண் நீர்மை காட்டி மதித்து இறப்பர் - ஆனால்ஏனைத் தீய பெண்டிரோ தம்முட் கூடிப் புதுவெள்ளம்போலப் புனைதல் செய்து தமது பெண்மையியல்பைப்புறத்திற் புலப்படுத்தித் தாமே மதித்துவரம்புகடந்து நடப்பர். (அதுபோற் கயவர்இடம்பத்தால் அவம்படுவரென்பது.)

(க-து.) கயமைஉள்ளீடில்லாததாகலின் இடம்பத்தையே விரும்பும்.

(வி-ம்.) கோடேந்து அகலல்குலென்னும் அடைமொழி ஈண்டு நல்லிலக்கணந்தேற்றிப் பெண்டிர் நற்பெண்டிரென்பதுணர்த்திற்று. ஒப்பனை செய்துகொள்ளாமைக்குச் சேடியர் உவமமாயினார். புதுப்புனலுவமம் ஈண்டு ஒப்பனை ஆரவாரம் முதலியவற்றிற்குவந்தது. மதித்திறப்பரென்பதற்கு, பிறர், பொருள்தந்தபோது அவரை மதித்துத், தராதபோது மீறிஒழுகுவரென மொழிந்துகொள்க. உவமமும் இதற்கொக்குமென்பது, ‘புதுப்புனலும் மாரியறவே அறுமே அவரன்பும்வாரியறவே அறும்'1 என மேலும் இவ்வியல்புதேற்றி வருதலால் அறியப்படும். உவமமட்டுங் கூறிஇச்செய்யுள் அறிஞர் கயவர்களியல்புஉணர்த்தலின், இது பிறிது மொழிதலென்னும் அணி.அறிஞர் அடக்கமாகவும் கயவர் ஆடம்பரமாகவும்ஒழுகுவரென்பதும் இதனாற் பெறப்பட்டது

(4)


1. நாலடி. 37 : 10

355தளிர்மேலே நிற்பினுந் தட்டமாற் செல்லா
உளிநீரார் மாதோ கயவர்; - அளிநீராக்
கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.

(பொ-ள்.) தளிர்மேலே நிற்பினும்தட்டாமற் செல்லா உளிநீரார் கயவர் -இளந்தளிரின்மேல் நின்றாலும் பிறர்தட்டினாலன்றி அதனுள் இறங்காத உளியின்இயல்பினையுடையவர் கயவர்; அளிநீரார்க்குஎன்னானும் செய்யார் இன்னாங்கு செய்வார்ப்பெறின் எனைத்தானும் செய்ப - ஏனென்றால்,பிறர்க்கு இரங்கும் இயல்புடைய சான்றோர்க்குச்சிறிதும் பயன்படாமல், தமக்குக்கொடுமைசெய்வாரைப் பெற்றால் அவர் எவ்வளவும் பயன்பட்டுவேலை செய்வர்.

(க-து.) கயவர், வருத்தியே வேலைவாங்குதற்குரியர்.

(வி-ம்.) அளிநீரரான சான்றோர்பக்கலிருப்பது இனிதாக வேலைபார்ப்பதற்கிடமாயினும் அங்கு அவர் பயன்படாமல்,தம்மை வருத்துவார் பக்கலே பயன்படுதல் பற்றித்தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லாத உளிஉவமமாயிற்று. "கரும்பு போற் கொல்லப்பயன்படுங்கீழ்"1 என்றார்திருவள்ளுவரும். மாது, ஓ:அசை. செய்தல் ஈண்டுப்பயன்படுதலின்மேற்று. இக் கருத்து இவ்வுவமமேகொண்டு, "விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்,முட்டாதவரை வியங்கொளல் வேண்டுமால்,தொட்டக்கால் மாழ்குந் தளிர்மேலே நிற்பினுந்,தட்டாமற் செல்லாது உளி"2 என பிறாண்டும்வருதல் அறிக. உளிக்கு இறங்குதலென்றது, கயவர் தம்தொழில் செய்தற்குக் கொள்ளப்படும்.

(5)


1. குறள். 108 : 8

2. பழமொழி. 169.

356மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்தநன் றுள்ளுவர் சான்றோர் : கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.

(பொ-ள்.) மலைநலம் உள்ளும் குறவன்- குறவன் தனக்கு வளந்தந்த மலையினது நன்மையைநினைந்து பாராட்டிக்கொண்டிருப்பான்; பயந்தவிளைநிலம் உள்ளும் உழவன் - உழவன் தனக்குவிளையுள் பயந்த விளைநிலங்களின் நன்மையைநினைந்து பாராட்டிக்கொண்டிருப்பான்; சிறந்தஒருவர் செய்த நன்று உள்ளுவர் சான்றோர் - அவைபோல, ஒருவர் அருட்குணம் மிகுந்து தமக்குச் செய்தநன்றியை நினைந்து பாராட்டிக்கொண்டிருப்பர்சான்றோர்; கயம் தன்னை வைததை உள்ளிவிடும் -ஆனால் தாழ்ந்த அறிவினன், தன்னைப் பிறர்பழித்ததை நினைத்துப் பகைமை கொண்டுவிடுவன்:(நலம் பாராட்டான் என்பது.)

(க-து.) மெலிந்த அறிவினர், பிறர்தீமைகள் உள்ளுதலை விலக்கி நலந்தேடி உள்ளும்ஆற்றலில்லா தவராவர்.

(வி-ம்.) குறவர்க்கும்உழவர்க்கும் வாழ்வு மலையினாலும்விளைநிலுத்தினாலும் உண்டாதல்போல,

சான்றோரது வாழ்வு பிறர் செய்தநன்றியுள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டுநடைபெறுதலும், கீழோரது வாழ்வு பிறரைப் பகைத்துக்கொள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டுநடைபெறுதலும், பெறப்படும். உள்ளுதல், ஈண்டுநினைந்து பாராட்டுதல். புன்மை கருதிக் கயம் எனஅஃறிணையான் முடிக்கப்பட்டது."இரும்பிற்பிணிப்பர் கயத்தை"என்றார்பிறரும். விடும் என்னுந் துணிவுப்பொருள் விகுதி,தவறித் தீயதில நுழைந்துவிட்ட புன்மையின்முரட்டுத் துணிவினை உணர்த்தும்.

(6)


1. நான்மணிக். 12.

357 ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்: - கயவர்க்
கெழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின்
எழுநூறுந் தீதாய் விடும்.

(பொ-ள்.) ஒரு நன்றி செய்தவர்க்குஒன்றி எழுந்த பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் -தமக்கு ஒரு நன்மை செய்தவர்க்குச் சான்றோர்அவரால் பின்பு தொடர்ந்து உண்டான நூறுகுற்றங்களும் பொறுத்து நிற்பர்; கயவர்க்கு எழுநூறுநன்றி செய்து ஒன்று தீதாயின் எழுநூறுந் தீதாய்விடும் - ஆனால், அறிவில் தாழ்ந்தோர்க்கு ஒருவர்எழுநூறு நன்மைகள் செய்து பின்பு தவறுதலால் ஒன்றுதீமையாக நேர்ந்துவிட்டால் அவ்வெழுநூறுநன்மைகளும் தீமைகளாய்க் கருதப்பட்டு விடும்.

(க-து.) கயவர் அறிவு, நன்மைகளில்அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்தெண்ணிநிற்கும்.

(வி-ம்.) ஒன்றியெழுதல், சேரத்தோன்றுதல், பொறுத்தலாவது, பொறுத்துத்தீங்கியற்றாது நிற்றலென்றும் ‘தீதாய்விடுதலாவது, தீமைகளாய்க் கருதப்பட்டுப் பலதுன்பங்கள் விளைதற்கு ஏதுவாய் விடுதல் என்றுங்கொள்க; "நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்"1என்பவாகலின், சான்றோர் பிழை நூறும்பொறுப்பராயினர். "நன்றி செய்குநர்ப்பிழைத்தோர்க் குய்வில வென்னுங்குன்றாவாய்மை"2 என்றதூஉம் அறிக.

(7)


1. புறம். 34.

2. கல்லா. 4.

358 ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய்; பன்றி
செயிர்வேழ மாகுத லின்று.

(பொ-ள்.) ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் - பொருளில்லாமை முதலியவற்றால் தளர்வுண்டான காலத்திலும் உயர்குடியிற் பிறந்த சான்றோர் செய்யும் நற்செயல்களைச் செல்வமுள்ள காலத்திலும் கயவர்கள் செய்யார் : கோட்டை வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி செயிர்வேழம் ஆகுதல் இன்று - ஒளிமிக்க கண்களையுடைய பெண்ணே! பன்றியின் கொம்பை வயிரம் பொருத்திப் பூண்கட்டினும் அது போர்ச்சினமுடைய யானையாதலில்லை.

(க-து.) நல்லன செய்தல் கயவரியல்பன்று.

(வி-ம்.) உவமையாற் கயவர்க்கு இயல்பன்மை பெறப்படும். ஏட்டை: தளர்வு: "ஏட்டைப்பசி"1 என்புழிப் போல, இற்பிறந்தாரென்னுங் குறிப்பால் அறஞ்செய்தல் பிறவி யியல்பென்பது பெறப்படும். மோடென்றது, ஈண்டுச் செல்வவுயர்வு. இழிவு கருதியும், உருவம் ஏனை அறிஞரையொப்ப முழுதொத்திருப்பது கருதியும், அறிவு முதலிய உயிர் வளர்ச்சியின்றிப் பிறந்தவடிவாக விளங்குதல் கருதியும் மூடர் ‘முழுமக்க' ளெனப் பட்டனர். செறிப்பினும் செறித்துக் கட்டினு மென்க.

359இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந் - தொன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.

(பொ-ள்.) இன்று ஆதும் இந்நிலையேஆதும் இனிச்சிறிது நின்று ஆதும் என்றுநினைத்திருந்து ஒன்றி உரையின் மகிழ்ந்து - இன்றுசெல்வராவோம், இப்பொழுதே செல்வராவோம்,இனிச் சற்றுப் பொறுத்துச் செல்வராவோம் என்றுஎண்ணமிட்டுக்கொண்டிருந்து அதிற்படிந்துவாய்ப்பேச்சினாற் களித்து, தம் உள்ளம் வேறாகி-ஆனால் அதற்குரிய முயற்சியிலராய்த் தம் இயல்புவேறுபட்டு, மரை இலையின் மாய்ந்தார் பலர் -தாமரையிலையைப் போல், இருந்த நிலையிலேயேமாய்ந்தொழிந்த கயவர் பலராவர்.

(க-து.) அறிவின் மெலிந்தோர்வீண் எண்ணமும் வாய்ப்பேச்சும் உடையவராய் உரியசெயலில்லாதவராவர்.

(வி-ம்.) இந்நிலையே என்பதற்கு,இப்போதுள்ள தொழில் முதலிய நிலைமைகளின்ஏதுவாகவே யென்று உரைத்தலும் ஒன்று. மரை: தாமரையென்பதன் முதற்குறை; தாமரையிலை கடைசியில் தான்இருந்த இடத்திலேயே இருந்து உலர்ந்து மறைந்துவிடுதலால் உவமையாயிற்று; இலையைக் கூறினார் மேலேவிளங்கித் தெரிதலாலும் கயவர்க்கு உவமையாதலாலுமென்க. "மரையிலை போல மாய்ந்திசினோர்பலரே"1 என்றார் பிறரும்

(9)


1. புறம். 27.

360 நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப்பெருங்க லன்னா ருடைத்து.

(பொ-ள்.) நீருள் பிறந்து நிறம்பசியதாயினும் ஈரம் கிடையகத்து இல்லாகும் -நீரினுள் தோன்றி மேலே நிறம்பசுமையுடையதாயிருந்தாலும் நெட்டியின் உள்ளே ஈரம்இல்லையாம் ; நிறைப்பெருஞ் செல்வத்துநின்றக்கடைத்தும் அறைப்பெருங்கல் அன்னார்உடைத்து - அதுபோல, நிறைந்த பெரிய செல்வநிலையில் நின்றாலும், பாறையாகிய பெரியகல்லைப்போல் வன்மையான உள்ளம் படைத்த கயவரைஉடைத்து இவ்வுலகம்.

(க-து.) கயவர்க்கு ஈர உள்ளம்இல்லை.

(வி-ம்.) நீர் செல்வத்துக்கும்,பசுமை கவர்ச்சியாகிய தோற்றப் பொலிவுக்கும்,ஈரம் இரக்கத்துக்குங் கொள்ளப்படும்; ஓரும்: அசை.எதுகை நோக்கி நிறைப்பெருமென ஒற்றுமிக்கது.பாறைபட்ட உள்ள முடையா ரென்றற்கு,‘அறைப்பெருங்கல் அன்னா' ரென்றார். படிமம்வகுத்தற்கும், இருத்தல் கிடத்தல்முதலியவற்றிற்குங் கூடப் பயன்படுதலில்லாதஅறுப்புக்களை யுடைய பெருங்கல்அறையெனப்படுமாகலின், யாதும் பயன்படாமை கருதிற்றுஇவ்வுவமம். "கல் நனி நல்ல கடையாயமாக்களின்"1 எனக் கீழ் வந்தது;இதனினும் சிறந்த கல்லென்பது இதனாற்பெறப்பட்டது.

(10)


1. நாலடி. 34 : 4.



(





2011/7/4 Venkatram Shrinivas <see...@gmail.com>

Venkatram Shrinivas

unread,
Jul 5, 2011, 4:07:23 PM7/5/11
to மின்தமிழ்
பன்னெறி 
 
பொருட்பால்
37. பன்னெறி

[பலவகைப்பட்ட ஒழுகலாறுகளை உணர்த்துவது]
361மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றமைப்பின் என்னாம்? -விழைதக்க
மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு.

(பொ-ள்.) மழை திளைக்கும்மாடமாய் மாண்பு அமைந்த காப்பாய் இழை விளங்குநின்று இமைப்பின் என்னாம் - மேகங்கள் தவழும்உயர்ந்த மாளிகையாய்ச் சிறப்பமைந்தபாதுகாப்புடையதாய்மணிகளால் இழைக்கப்பட்டவிளக்குகள் அங்கங்கும் இருந்து ஒளிவிடினும் என்னபயனாகும்?, விழைதக்க மாண்ட மனையாளையில்லாதான்இல்லகம் காண்டற்கு அரியதோர் காடு - மாட்சிமைவாய்ந்த விரும்பத்தக்க இல்லக்கிழத்தியையில்லாதவனது வீடு கண்கொண்டுபார்த்தற்கியலாததொரு கொடிய காடாகும்.

(க-து.) மனையாள் இல்லாத வீடுவீடன்று.

(வி-ம்.) திளைத்தல், இடைவிடாதுபயிலுதல்; பெருமையும் காப்பும்ஒளியுமுடையதாயிருத்தாலும் வீட்டுக்கு உணர்வுவிளக்காகிய மனையாள் இன்றியமையாதவ ளென்பதுகருத்து; "மனைக்கு விளக்காகிய வாணுதல்"1என்றார் பிறரும்; மாண்ட விழைதக்க மனையாளென்க.மனைமாட்சி மனைக்கு மங்கலமாகலின்2இல்லாள் இல்லாத இல்லம், அறவோர் துறவோர்அந்தணர் விருந்து உறவோர் நண்பர் குழந்தைகள்பெரியோர் உலவுதலற்றுக் காண்டற்கரியதொருகாடாயிருக்கும் எனப்பட்டது.

(1)


1. புறம். 314.

2. குறள். 6 : 10.

362 வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின், இழுக்கெனைத்துஞ்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.

(பொ-ள்.) வழுக்கு எனைத்தும்இல்லாத வாள்வாய்க்கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறுவராயின் - சோர்வு சிறிதுமில்லாத வாளின்காவலில் இருந்தும் மகளிர் ஒழுக்கந்தவறுதலைத்தாம் உறுவராயின், இழுக்கு எனைத்தும் செய்குறாப்பாணி சிறிதே அச் சின்மொழியார் கையுறாப் பாணிபெரிது - குளிர்ந்த மொழிகளைப் பேசும் அம்மகளிர் தமது வாழ்நாளிற் குற்றம் சிறிதுஞ்செய்யாத காலம் சிறிதே; மற்றுத் தம் கணவர்க்குவயப்பட்டொழுகாக் காலம் பெரிதென்க.

(க-து.) மகளிர்க்கு நிறை காக்குங்காப்பே தலை.1

(வி-ம்.) வாள் என்றது, வாள்வீரரின் காவல்; ஆகுபெயர். கிடத்தல்,கட்டுப்பட்டிருத்தல். காவலினும் இழுக்குப்பெறுவராயின் நிறை சிறிதுமில்லாதவர் அம்மகளிரென்பது பெறப்படுதலின், அவர் தம் வாழ்நாளில்இழுக்கெனைத்துஞ் செய்குறாப் பாணி சிறிதே யெனப்பட்டது. பாணி என்றது காலம். ‘எம் சொல்லற் பாணிநின்றன னாக"2 என்புழிப்போல. எனைத்துஞ்செய்குறாப்

பாணி யென்றார் ஏதானும்வழுக்குடையராகவே யிருப்ப ரென்றற்கு. கையுறாமை,இங்கு வயமாயிராமை.

(2)


1. குறள். 6 : 7

2. குறிஞ்சிப். 151 : 2.

363எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை
உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய்; - இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.

(பொ-ள்.) எறி என்றுஎதிர்நிற்பாள் கூற்றம் - தன் கணவற்குச் சினத்தைமூட்டி ‘அடி' என்று எதிரில் அடங்காது நிற்கும்மனைவி அவனுக்குக் கூற்றுவனாவாள்; சிறு காலை அட்டில்புகாதாள் அரும்பிணி - காலை நேரத்தில்அடுக்களையிற் சென்று உணவு சமைக்காதவள் தன்கணவனுக்குக் கொடிய நோயாவாள், அட்டதனை உண்டிஉதவாதாள் இல்வாழ் பேய் - சமைத்ததை அவனுக்குரியஉணவாக இடமால் உண்பவள் இல்லத்தில் வாழும்பேயாவாள், இ மூவர் கொண்டானைக் கொல்லும் படை -இம் மூவகையியல்புடைய மாதரும் தம்மை மணந்துகொண்டகணவன்மாரை உயிரோடு வருத்தும் கருவிகளாவர்.

(க-து.) இல்வாழ் பெண்டிர்அடக்கமும் சுறுசுறுப்பும் அன்புமுடையவராய்விளங்கவேண்டும்.

(வி-ம்.) சினத்தை மேலுமேலும்மூளச்செய்து கணவற்கு இறுதியுண்டாக்குதலின் ‘கூற்ற'மெனவும், காலத்தில் உணவு கிட்டாமற் செய்தலால்நோயுண்டாதலின் ‘பிணி' எனவும், பெரும்பசி கொண்டுமுன் உண்ணுதலின் பேய்' எனவுங் கூறினார்.சிறுகாலையென்றது காலை நேரத்தின் முற்பகுதியிலுந்தொடக்க நேரத்தைக் குறித்தது. பிணிக்குஅருமையாவது, என்றும் இவ்வாறே நடந்து தீராநேயாதல்.அட்டதனை உதவாதாள் என்றதன் மேலும் உண்டியென்றது,அட்டது தன் கணவற்குரிய உண்டியொன்று கருதாதவளாய்என்னும் பொருட்டு. பேய்க்குப் பெரும்பசிஇயல்பாதல் "பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் "என்பதனானும் பெறப்படும்.

(3)


1. திரிகடுகம். 60.

364 கடியெனக் கேட்டுங் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான், - பேர்த்துமோர்
இற்கொண் டினிதிரூஉம் ஏமுறுதல் என்பவே,
கற்கொண் டெறியுந் தவறு.

(பொ-ள்.) கடி எனக் கேட்டும்கடியான் - இனி மணவாழ்க்கையை முனிந்துவிடு என்றுதக்கோ ரறிவுரைகள் கேட்டும் முனியானாய், வெடிபடஆர்ப்பது கேட்டும் அது தெளியான் - தலைவெடிக்கும்படி உலகிற் சாப்பறைகள் முழங்குவதுகேட்டும் அத் துறவியல்பைத் தெளியானாய்;பேர்த்தும் ஓர் இல்கொண்டு இனிது இரூஉம் ஏமுறுதல்கல்கொண்டு எறியும் தவறு என்ப - மீண்டும் இரண்டாமுறையாக ஓர் இல்லக்கிழத்தியைமணம்புரிந்துகொண்டு இன்புற்றிருக்கும்மயக்கத்தையடைதல் தன்னையே தான்கற்கொண்டெறிந்துகொள்ளும் தவறென்று சான்றோர்கூறுவர்.

(க-து.) இரண்டாம் முறையாகவும்மனைவாழ்க்கையிற் புகாமல் மக்கள் துறவுடையராய்உலகப் பெரும்பணிகள் செய்து விளங்குதல் வேண்டும்.

(வி-ம்.) கடியான் முதலியனமுற்றெச்சம். இனி தென்றது, உடல் நலங் கருத்திற்று.ஏமுறுதல், ஈண்டு மயக்கமுறுதல் ; "தலைப்பட்டார்தீரத் துறந்தார் மயங்கி, வலைப்பட்டார்மற்றையவர்"1 என்னும் நாயனார்திருமொழியை இங்கு நினைவு கூர்க.

(4)


1. குறள். 35 : 8.

365 தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்
கிடையே இனியார்கட் டங்கல், - கடையே
புணராதென் றெண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை.

(பொ-ள்.) தலையே தவம் முயன்றுவாழ்தல் ஒருவர்க்கு - மக்கட்பிறவியில் வந்தஒருவர்க்கு, தம் வாழ்க்கையில்தவமுயற்சியுடையராய் வாழ்தல் தலையானதாகும்;இடையே இனியார்கண் தங்கல் - தமக்குஇனியராயிருக்கும் மனைவி மக்கள் முதலியஉறவினரிடத்து மனந்தங்கி அவாவோடொழுகுதல்இடைத்தரமான வாழ்வாகும்; கடையே புணராது என்றுஎண்ணிப் பொருள் நசையால் தம்மை உணரார்பின்சென்று நிலை - மேற் கூறிய இருவகை வாழ்வின்முயற்சியும் தமக்குக் கைகூடாதென்று நினைந்து வெறும்பொருள் விருப்பத்தால் தம் குடிப்பிறப்பு கல்விமுதலிய தகுதிகளையுங் கருதிப்பாராது நடத்துஞ்செல்வர்களின் பின் சென்று நிற்கும் அடிமைநிலைகடைப்பட்ட வாழ்வாகும்.

(க-து.) வாழ்க்கையிற் பற்றின்றியொழுகும் அறப் பணியாளர் தலையானமுயற்சியுடையோராவர்.

(வி-ம்.) ஒருவர்க்கு என்பதைப்பிறவற்றிற்குங் கூட்டுக. தலை, இடை, கடையென ஈண்டுக்கூறிய வாழ்வுமுறையே அருள் வாழ்வும், அன்பு வாழ்வும்,அடிமை வாழ்வுமாகும். பிறர்பால் அடிமைத் தொழில்பூண்டிருப்போர் முறையாக மனையறம் நடத்துதல்இயலாதாகலின் அதனை வேறுபிரித்துக்கடையாக்கினார். பொருண் முயற்சி இம்மூன்றற்கும்பொதுவெனக்கொள்க. பொருள் ஈட்டிப் பலர்க்கும்உதவியாய் வாழ்தலும், தமக்கினியார்க்கு மட்டுமேஉதவியாய் வாழ்தலும், தமக்கு இனிமையின்றி உயிர்வாழ்தலும் கருதினமையின், முறையே இவை தலைஇடைகடையாயின. பொருணசை யாலென்றார், கண்டதுபயனன்று நசையே யென்றற்கு. பின் நிற்றலாவதுஈண்டுத் தொழுதுண்டு வாழ்தல் பின்நின்றேவல்செய்கின்றேன்"1 என்ப திருவாசகத்தினும்.

(5)


1. திருவாச, கோயின் மூத்த. 2.(பாடம்)

366 கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம்2 என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.

(பொ-ள்.) கல்லாக் கழிப்பர்தலையாயார் - மக்களில் உயர்ந்தோர்,நற்கருத்துக்களை ஆழ்ந்து அறிந்து தெளிவு பெறுதலைமேற்கொண்டு அம்முறையில் தம் வாழ்நாட்களைக்கழிப்பர்; நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள் -இடைத்தர மக்கள், இனிய பண்டங்களைஐம்புலன்களானும் நுகர்ந்தின்புறுதலை மேற்கொண்டுஅம் முறைமையில் வாழ்நாள் கழிப்பர்; கடைகள்இனிது உண்ணேம் ஆரப்பெறேம் யாம் என்னும்முனிவினால் கண்பாடு இலர் - கடைத்தர மக்கள்,‘யாம் பண்டங்களை இன்பமாய் நுகரப் பெற்றிலேம்,நிறையப் பெற்றிலேம்' என்னும் வெறுப்பினால்இரவிலும் உறக்கமில்லாதவராவர்.

(க-து.) உலகப் பொருள்களின்வாயிலாகத் தம்மைத் தெளிவுடையராக்கிக்கொள்ளும் மக்களே உயர்ந்தோராவர்.

(வி-ம்.) கற்றல், ஆழ்ந்துணர்ந்துதெளிவுபெறுதல். ஒரு பொருளைக் காணநேர்ந்தால்அதுகொண்டு தலையானவர் தமதறிவைத் தெளிவு செய்யமுயல்வரெனவும், இடைப்பட்டவர் புலன்களால்நுகர்ந்தின்புற முயல்வரெனவும், கடைப்பட்டவர்ஏதும் பெறாராய் ஆற்றாமை மட்டுங்கொண்டுஅமைதியின்றி மெலிவர் எனவும் உணர்த்திற்று இச்செய்யுள்; நாயனார் கடைப்பட்டவர் நிலையைஒதுக்கிப் பேறுடையாரிருவரியற்கையைமட்டு மெடுத்து,"இருவேறுலகத்தியற்கை திருவேறு, தெள்ளியராதலும்வேறு”2 என்றருளிச் செய்தார். கண்படுதல்,உறக்கங்கொள்ளுதல்.

(6)


1. பெறேம்யாம்.

2. குறள். 38 : 4.

367செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வயனிறையக் காய்க்கும் வளவய லூர!
மகனறிவு தந்தை யறிவு.

(பொ-ள்.) செந்நெல்லாலாயசெழுமுளை மற்றும் அச் செந்நெல்லேயாகி விளைதலால்- சாலி என்னும் உயர்ந்த செந்நெல்லின்விதையினால் உண்டான செழுவியமுளை பின்னும் அச்செந்நெற் பயிராகவே தோன்றி விளைதலால்,அந்நெல் வயல் நிறையக் காய்க்கும் வளவயல் ஊரமகனறிவு தந்தை யறிவு - அச் செந்நெல் வயல் நிறையவிளைந்து கிடக்கும் வளமான கழனிகளையுடைய ஊரனே!புதல்வன் அறிவு அவன் தந்தையின் அறிவு வகையைஒத்ததாகும்.

(க-து.) புதல்வனுடைய அறிவுஒழுக்கங்களை விரும்புந் தந்தை, தான் நல்லறிவுநல்லொழுக்கமுடையவனாய் விளங்குதல் வேண்டும்.

(வி-ம்.) செந்நெல், நெல்லின்உயர்ந்த இனத்தைச் சேர்ந்தது. காய்க்கும் என்றது,ஒரு வழுவமைதி. ஊரன், மருத நிலத்துத் தலைவன். இச்செய்யுள், ஒருவன் அறிவு செயல் முதலியவை அவன்மரபினரையுஞ் சாருமென் றறிவுறுத்துமுகத்தால், அவனைநன்னிலையில் நிறுத்த விரும்பிற்று.


368உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போற்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.

(பொ-ள்.) உடைப்பெருஞ் செல்வரும்சான்றோரும் கெட்டுப் புடைப்பெண்டிர் மக்களும்கீழும் பெருகி தமது பொருளைப் பலர்க்கும் வழங்கும்அன்புரிமையுடைய பெரிய செல்வ வளம் வாய்ந்தஇல்லறத்தாரும் ஏனைத் துறவாசிரியரும் வறியராய்நிலைசுருக்கிச் சார்ப்பெண்டிராகிய வேசையரின்மக்களும் ஏனைக் கயவர்களும் செல்வமுடையவர்களாய்நிலைபெருகி, கடைக்கால் தலைக் கண்ணதாகிக்குடைக்கால்போல் கீழ்மேலாய் நிற்கும் உலகு -அவ்வாற்றால், குடையினது தண்டு கீழ்மேலாகநிற்பதுபோல் இவ்வுலகம் தலைகீழாய் நிற்கும்இயல்புடையதாயிருக்கின்றது.

(க-து.) உலகநிலை கொண்டு மக்களைமதித்தலாகாது.

(வி-ம்.) செல்வம், பிறர்க்குவழங்குவார்க்கே பயன்றந்து உடைமையாதலின்,அவ்வன்புரிமையுடையாரது செல்வம் ‘உடைப்பெருஞ்செல்வ' மெனப்பட்டது அவ்வாற்றால், அறவோர்முதலியோரைப் புறந்தருவாராதல்பற்றி அவர்இல்லறத்தாரெனப்பட்டனர். "படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ்செல்வர்"1 எனப் புறத்தில் வருதலும்அறிக. புடைப்பெண்டிர், பொருள் தருவார் பக்கல்சாரும் பெண்டிர்; இக் குறிப்பினாலும் முன்னர்க்கூறிய செல்வர் இல்லறத் தோன்றல்கள் என்பதுபெறப்படும். இஃது உலகியற்கை கூறுமுகத்தான்மெய்ப்பொருளொன்று அறிவுறீ இயது.

(8)


1. புறம். 188.

369 இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய் 
தணியாத உள்ளம் உடையார், - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று.

(பொ-ள்.) மணி வரன்றி வீழும்அருவி விறல் மலை நல் நாட - மணிகளை வாரிக்கொண்டுவீழ்கின்ற அருவிகளையுடைய வென்றிமிக்கமலைகளமைந்த சிறந்த நாடனே!. இனியார் தம்நெஞ்சத்து நோய் உரைப்ப அந்நோய் தணியாதஉள்ளம் உடையார் - தமக்கு இனியராயிருப்போர் தமதுஉள்ளத்திலுள்ள கவலையைத் தாமே ஆற்றிக்கொள்ளவியலாது எடுத்துச் சொல்ல அக் கவலைக்கு ஏதுவானகுறையைத் தீர்த்து அதனைத் தணிவிக்காதஇரக்கமற்ற வன்னெஞ்சுடையார், வாழ்வின் வரைபாய்தல் நன்று - இவ்வுலகில் உயிர் வாழ்தலினும்ஒரு மலையின்மேல் ஏறி வீழ்ந்து உயிர் மாய்த்துக்கொள்ளுதல் நலமாகும்.

(க-து.) பிறர்க்குஉதவியாயிராதவர் இருப்பதும் இறப்பதும் ஒன்றே.

(வி-ம்.) இனியாரென்றது, உறவினர்நண்பர் முதலியோர், நோய் தணித்தலாவது,நோய்க்கு ஏதுவானதைத் தணித்தலென்க.ஒப்புரவறியாதவர் உலக நடையறியாதவராகலின்உலகில் அவர் இருத்தலும் இல்லாமையும்ஒன்றேயாயின. "ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்மற்றையான், செத்தாருள் வைக்கப் படும்"1என்றார் நாயனாரும். வரை பாய்தலால் அவ்விழிவுபெறப்படாமை நோக்கி நன்றென்றார். "மிக்கமிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார் ஒற்கம்கடைப்பிடியா தார்"2 என்றார்.

(9)


1. குறள். 22 : 4

2. ஐந், ஐம். 48.

370 புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்பற நாடின்வே றல்ல; - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி அறவே அறும்.

(பொ-ள்.) புதுப் புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் விதுப்பு அற நாடின் வேறுஅல்ல - புதுநீர்ப் பெருக்கும் அழகிய தோடணிந்தவேசையரின் றொடர்பும் விரை தலின்றிஆராய்ந்தால் அவை தம் தன்மையில் வேறு வேறு அல்ல;புதுப் புனலும் மாரி அறவே அறும் அவர் அன்பும் வாரிஅறவே அறும்-புது வெள்ளமும் மழை நிற்க நின்றுவிடும்;அவ் விலைமகளிர் அன்பும் பொருள் வருவாய் நீங்கநீங்கிவிடும்.

(க-து.) பொருட் பெண்டிர்,பொருளைமட்டுங் கொண்டு பொருள் கொடுப்பாரைக்கொள்ளாதவராகலின், அவர் தொடர்புகொள்ளத்தக்கதன்று.

(வி-ம்.) விதுப்பென்றது, உள்ளத்துடிப்பு ; ஈண்டு விரைவுக்காயிற்று; "விதுப்புறுவிருப்பொடு"1என்புழிப் போல. முன்உம்மைகள் இரண்டும் எண் : பின் உம்மைகள்இரண்டும் ஒன்றையொன்று தழுவிய எச்சங்கள்.பொருள் நிலையற்றதாகலின் அப்பொருணோக்கமாகஇனியராயொழுகுவாரது அன்பும் நிலையற்றதாய்இன்னாமை பயக்குமென்று ஏதுவின் நிறீஇயினார்.

(10)


1. புறம். 213.



367 செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வயனிறையக் காய்க்கும் வளவய லூர!
மகனறிவு தந்தை யறிவு.

(பொ-ள்.) செந்நெல்லாலாயசெழுமுளை மற்றும் அச் செந்நெல்லேயாகி விளைதலால்- சாலி என்னும் உயர்ந்த செந்நெல்லின்விதையினால் உண்டான செழுவியமுளை பின்னும் அச்செந்நெற் பயிராகவே தோன்றி விளைதலால்,அந்நெல் வயல் நிறையக் காய்க்கும் வளவயல் ஊரமகனறிவு தந்தை யறிவு - அச் செந்நெல் வயல் நிறையவிளைந்து கிடக்கும் வளமான கழனிகளையுடைய ஊரனே!புதல்வன் அறிவு அவன் தந்தையின் அறிவு வகையைஒத்ததாகும்.

(க-து.) புதல்வனுடைய அறிவுஒழுக்கங்களை விரும்புந் தந்தை, தான் நல்லறிவுநல்லொழுக்கமுடையவனாய் விளங்குதல் வேண்டும்.

(வி-ம்.) செந்நெல், நெல்லின்உயர்ந்த இனத்தைச் சேர்ந்தது. காய்க்கும் என்றது,ஒரு வழுவமைதி. ஊரன், மருத நிலத்துத் தலைவன். இச்செய்யுள், ஒருவன் அறிவு செயல் முதலியவை அவன்மரபினரையுஞ் சாருமென் றறிவுறுத்துமுகத்தால், அவனைநன்னிலையில் நிறுத்த விரும்பிற்று.

(7)






2011/7/5 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/7/4 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/7/3 Venkatram Shrinivas <see...@gmail.com>
<p style="font-



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jul 6, 2011, 3:07:31 PM7/6/11
to மின்தமிழ்
பொதுமகளிர் 
 
பொருட்பால்
38. பொதுமகளிர்
[பொருள் கொடுப்பார் பலர்க்கும் உரிய பொதுப் பொருளாயிருக்கும் வரைவில் மகளிரின் இயல்பு.]
371விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.

(பொ-ள்.) விளக்கொளியும்வேசையர் நட்பும் இரண்டும் துளக்குஅற நாடின் வேறுஅல்ல - விளக்கின் ஒளியும் விலைமகளிர் உறவுமாகியஇரண்டும் கலக்கமின்றி ஆராய்ந்தால் அவை தம்தன்மையில் வேறு அல்ல; விளக்கொளியும் நெய்அற்றகண்ணே அறும் அவர் அன்பும் கை அற்றகண்ணேஅறும் - விளக்கின் ஒளியும் நெய்வற்றியபோதேஅவியும், அம் மகளிரின் அன்பும் பொருள்வற்றியபோது இல்லையாய்விடும்.

(க-து.) பொதுமகளிர் அன்புவிலைக்கே அல்லது விலை கொடுப்பார்க்கன்று.

(வி-ம்.) ஒளிக்குக் காரணம்நெய்யாதல்போல அவரன்புக்குக் காரணம்பொருளல்லது வேறல்ல என்றார். துளக்கற நாடுதல்,ஐயந் திரிபின்றி ஆராய்தல், கண்ணே யென்னும்ஏகாரம் இரண்டிடத்தும் தேற்றம்; ஏனையது அசை.கையென்னும் இடப்பெயர் இடத்திலுள்ளபொருட்காயிற்று: ஆகுபெயர் "பிறந்தவழிக்கூறலும்"1 என்றதனாற் கொள்க.

(1)


1. தொல். வேற்றுமை மயங். 31.

372அங்கோட் டகலல்குல் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின
மேற்காணம் இன்மையான் மேவா தொழிதாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.

(பொ-ள்.) அம் கோடு அகல் அல்குல்ஆய் இழையாள் நம்மோடு செங்கோடுபாய்துமேஎன்றாள் மன் - அழகிய பக்கங்கள் உயர்ந்த அகன்றஅல்குலையுடைய ஆராய்ந்தெடுத்த இழைகளையணிந்தவிலைமகள் நாம் பொருளுடையமாயிருந்த காலத்துநம்மோடு செங்குத்தான மலையுச்சியில் ஏறிக்கீழ்விழுந்து ஒன்றாய் உயிர் துறப்போம் என்றுஅன்புரை கூறினாள்; காணம் இன்மையான்செங்கோட்டின்மேல் மேவா தொழிந்தாளே கால்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து - இப்போது நமதுகையிற் பொருளில்லாமையால் தனது காலில்வாதநோயென்று காட்டிப் போலியாக அழுது அம்மலையுச்சியின்மேல் வராமற் போனாளே!

(க-து.) பொதுமகளிரின் அன்புரைபோலியென்றொழிக.

(வி-ம்.) ‘அங்கோட் டகலல்குல்'இயற்கை யழகினையும்' ‘ஆயிழை' செயற்கை யழகினையும்உணர்த்தி அவை கருவியாகக் காமுகரைப் பிணிக்கும்பொதுமகளிரின் இயல்பு புலப்படுத்தப்பட்டது.‘பாய்தும்' என்றது முன்னிலையை உளப்படுத்தியபன்மை.1 ஏதானும் இடர்வந்தாற் ‘பாய்தும்'என்றபடி. ஏகாரம்; உறுதி புலப்படுத்தித் தேற்றமாய்நின்றது. மேல்: மேவா தொழிந்தாளெனக்கூறப்படுதலின் மன் ஒழியிசை யன்று : கழிவுப்பொருளது. ஒழிந்தாளே என்னும் ஏகாரம் ஈண்டுஇரங்கலின் மேற்று. இறந்த காலத்தாற்கூறினமையின் இப்போது இவன் வறிஞனாய் வாழவழியற்று உயிர் துறக்கச் செங்கோட்டின்மேல்ஏறினானாயிற்று. கால் காற்றாகலின், கால் நோய்வாயுநோய். பொருள் இப்போது இல்லையாயினது அவள்பறித்துக் கொண்டமையின் என்க.

(2)


1. தொல். வினை : 5.

373 அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்
செங்கண்மா லாயினும் ஆகமன், - தங்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்
விடுப்பர்தங் கையாற் றொழுது.

(பொ-ள்.) அங்கண் விசும்பின்அமரர் தொழப்படும் செங்கண்மால் ஆயினும் ஆக -அழகிய இடமகன்ற விண்ணுலகத்தின் தேவர்களால்வணங்கப்படுகின்ற சிவந்த தாமரைக் கண்களையுடையதிருமாலை ஒப்பவனாயினுமாக; தம் கைக்கொடுப்பதுஒன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னார் விடுப்பர்தம் கையால் தொழுது - கொடுக்கத்தக்க பொருள் தமதுகையில் ஒன்றுமில்லாத ஆடவரை கொய்தற்குரியஇளந்தளிர் போன்ற மேனியையுடைய பொதுமகளிர் தம்கைகளால் வணங்கி விடைகொடுத்தனுப்பிவிடுவர்.

(க-து.) பொதுமகளிர்பொருளொன்றல்லது வேறு தகுதி கருதார்.

(வி-ம்.) ‘மால்' என்றது பெருமையும்,‘செங்கண்' என்றதும் உருவும், ‘அமரர் தொழப்படு'மென்றது செல்வாக்கும் உணர்த்தின. உரு, திருமுதலியவற்றிற் சிறந்த ஆடவர்க்குநல்லிலக்கணமாகத் திருமாலைக் கூறுதல்நூற்றுணிபாகலின் ஈண்டுங் கூறினார்.திருமாலாயினும் பொருளிலனேல் விடத்தக்கானென்னும் பொருட்டாகலின் மன் கழிவின்கண்வந்தது. ‘கொய் தளி' ரென்னும் அடைதளிரின் தகுதிகருதிற்று. பொருளீட்டுதற்குரிய சிறந்தஆடவனாகலானும் பொருளுண்டான காலத்து வருகவெனவிரும்புதலானும் பகைப்பதின்றி இனிதாகவிடுத்தலின் ‘தொழுது விடுப்ப' ரென்றார்.

(3)


1. தொல். புறத். 5 : 9-10, புறம். 58 :14-6, சிந். 13 : 383.

374 ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர்; - காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னார் அவர்க்கு.

(பொ-ள்.) ஆணம்இல் நெஞ்சத்துஅணிநீலக் கண்ணார்க்குக் காணம் இலாதார் கடுஅனையர் - அன்பில்லாத உள்ளமும் அழகிய நீலமலர்போன்ற கண்களுமுடைய பொதுமகளிர்க்குப்பொருளில்லாதார் எத்துணை உயர்ந்தவராயினும்நஞ்சையொப்பத் தோன்றுவர்; காணவே செக்கூர்ந்துகொண்டாரும் செய்த பொருளுடையார் அக்காரம்அன்னார் அவர்க்கு - பலருங் காணச்செக்காட்டிப்பிழைப்பாரும் ஈட்டிய செல்வமுடையார்அவர்க்குச் சர்க்கரைபோல் விரும்பத்தக்கவராவர்.

(க-து.) எந்நிலையினும் பொருளுடையாரையேவிலைமகளிர் விரும்புவர்.

(வி-ம்.) அகமும் புறமும்தம்மியல்பில் மாறுபட்டு நிற்குங் கள்ளம்உணர்த்துவார், ‘ஆணமில் நெஞ்சத்து அணிநீலக்கண்ணார்' என்றார், "மாயப்பொய் கூட்டிமயக்கும் விலைக் கணிகை" 1என்றார்பிறரும். ‘கடுவனைய ' ரென்றமையாற் பொருளின்மையேஅவர்க்கு எடுப்பாய்த் தோன்றுதல் பெறப்பட்டது.கொள்ளவென்றது, ஈண்டு உயிர்வாழலின் மேற்று;உம்மை இழிவு சிறப்பு, இதனால் காணமில்லாதார்எத்துணை உயர்ந்தவராயினும் எனமேல்உரைக்கப்பட்டது. இவை நான்கு பாட்டானும் பொதுமகளிர் அன்பு, பொருட்கே யன்றி அதுகொடுப்பார்கன்றென்பது பெறப்பட்டது.

(4)


1. பரிபா. 20 : 49.

375 பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.

(பொ-ள்.) பாம்பிற்கு ஒரு தலைகாட்டி ஒரு தலைதேம் படு தெள் கயத்து மீன் காட்டும்மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வார் -இன்சுவை மிக்க தெளிந்த நீர்ப்பொய்கையில்பாம்புக்குத் தனதுடலின் ஒரு புறமாகிய தலையைக்காட்டி மற்றொரு புறமாகிய வாலை மீனுக்குக் காட்டிஅவ்வவற்றிற்கினமாயிருந்து உயிர் பிழைத்து வரும்விலாங்கு மீனைப் போன்ற கள்ளச் செயலுடையவிலைமகளிரின் தோள்களைக் கூடுங் காமுகர்,விலங்கு அன்ன வெள் அறிவினார் - விலங்கைப்போற்பகுத்தறிவில்லாத அறியாமையுடையவராவர்.

(க-து.) விலைமகளிர்கள்ளவுருவினராகலின் அவரைக் கூடற்க வென்பது.

(வி-ம்.) விலாங்கு மீனின்தலைப்புறம் பாம்பு போலவும் வாற்புறம் மீன்போலவும் இருக்குமாகலின், பாம்பு மீனென்று கருதிஇரைபிடிக்க வருமாயின் அதற்குத் தலைப்புறங்காட்டிஇனம்போல உலவி உயிர் தப்பியும், தனக்கு உணவாகியசிறு மீன்கள் பாம்பென்று கருதி அஞ்சிவிலகுமாயின் அவற்றிற்கு வாற்புறங்காட்டிஇரையுண்டு உயிர் பிழைத்தும் அது வஞ்சித்துவாழ்தலின், பொருளற்றாரையும் பொருளுற்றாரையும்பகையாதும் நேசித்தும் அவரவர்க்கேற்பஒழுகிப்பரிந்தும பொருள் பறித்தும் வஞ்சித்துஉயிர் வாழும் விலை மகளிர்க்கு அஃது உவமமாயிற்று.கரந்து பொருள் பறித்து வாழும் இம் மகளிரியல்பு,"காரிகை கடுநுனைத் தூண்டிலாக, உட்கும் நாணும்ஊராண் ஒழுக்கும், கட்கின் கோலமுங் கட்டிரையாக,இருங்கண் ஞாலத் திளையோர் ஈட்டிய, அருங்கலவெறுக்கை யவைமீனாக, வாங்குபு கொள்ளும்வழக்கியல் வழாஅப் பூங்குழை மகளிர்"1எனப்பிறாண்டும் நுவலப்பட்டமை காண்க. ஒரு தலை, ஒருபுறம். ஆங்கு: அசை. கள்ளத்தைப் பகுத்தறிதலாகியஉள்ளீடில்லாமையின், ‘வெள்ளறிவினா' ரென்றார்.

(5)


1. பெருங். இலாவா. 7 : 73 - 9.

376பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடியும் போர்த்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.

(பொ-ள்.) பொத்த நூல் கல்லும்புணர் பிரியா அன்றிலும்போல் நித்தலும் நம்மைப்பிரியலம் என்று உரைத்த பொன் தொடியும் போர்த்தகர்க் கோடு ஆயினாள் - நாம் பொருளுடையமாயிருந்தகாலத்தில், கோத்த நூலோடு பொருந்திய மணியும்சேர்க்கை பிரியாத அன்றிற் பறவைகளும்போலஎந்நாளும் நம்மைப் பிரியோம் என்று உறுதி கூறியபொன்னாற் செய்த வளையலையணிந்த பொது மகள்,இப்போது, போர்த்தொழில் செய்கின்ற ஆட்டுக்கடாவின் கொம்புபோல் மனம் முறுக்குண்டுவன்மையாய்ப் பின்வாங்கி விட்டாள்; நல்நெஞ்சே நிற்றியோ போதியோ நீ - கவடற்றநெஞ்சமே! இனி நீ அவளிடமே நயந்து நிற்பாயோஅன்றி நன்னெறியில் திரும்பி வருவாயோ?

(க-து.) விலைமாதர்நம்பத்தக்கவரல்லர்.

(வி-ம்.) பொத்த வென்பது ஈண்டுக்கோத்த வென்னும் பொருட்டு. கல், முத்து முதலியமணிகள்; "கற்குளி மாக்கள்"1என்புழிப்போல. நூலும் மணியும் போலவும் பிரியாஅன்றில் போலவும் என்றது, என்றும் உடனுறைவுக்குவந்த உவமம். ‘பிரியலம்' என்பது ஆயத்தையும்உள்ளடக்கிப் படர்க்கையை உளப்படுத்தியதன்மைப் பன்மையாம். தகர்க்கோடு வல்லென்றுதிரிந்து பின் வாங்கி நிற்றற்கு உவமையாயிற்று.

(6)


1. கல்லா. 4 : 22.

377ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
சேமாபோல் குப்புறூஉஞ் சில்லைக்கண் அன்பினை
ஏமாந் தெமதென் றிருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை.

(பொ-ள்.) ஆமாபோல் நக்கி அவர்கைப்பொருள் கொண்டு சேமாபோல் குப்புறூஉம்சில்லைக்கண் அன்பினை ஏமாந்து எமதுஎன்றிருந்தார் - முதலிற் காட்டாவைப் போல்மெத்தென ஊற்றின்பந்தந்து காமுகரின் கையிலுள்ளபொருளைப் பறித்துக்கொண்டு பின்பு காட்டெருதைப்போற் பிறவிடத்துப் பாய்ந்தோடிவிடும்தீயொழுக்கமுடைய பொதுமக ளுள்ளத்துப் போலியன்பினை மதிமயங்கி எமக் குரியதென்றுநம்யிருந்தவர், பெறுப பலரால் நகை - உலகிற்பலரால் நகைத்தலைப் பெறுவர்.

(க-து.) பொருட்பெண்டி ருறவைநம்பியிருந்தவர் பின்பு வறிய நிலையில் அவராற்கைவிடப்பட்டுப் பலரால் நகைத்தலுக் கிடமாவர்.

(வி-ம்.) ஆமா பிறவுயிர்களைநாவினால் மெத்தெனத் தடவுமென்றும், அதுவே அவ்வுயிர்கட்குக் கடுவாகிய இறுதியைவிளைவிக்குமென்றுங் கூறுப. ஆமா காட்டான்ஆனமைபோலச் சேமாவுங் காட்டெருதாயிற்று.குப்புறுதல் பாய்ந்து கடத்தல். பிறவிடத்தென்றதுபொருளுடையார் பிறரிடத்தென்க. தன்விருப்பம்போல் திரிந்து வளம் உண்டு கொழுத்திருத்தலின்அவ்வியல்புடைய பொதுமகளிர்க்குக்காட்டுவிலங்குகள் எடுத்துக் காட்டப்பட்டன.சில்லை,. தூர்த்தை; இழிவென்னும் பொருளான் வந்தது.தாம். ஆம் : அசைகள், நம்பிப் பொருளிழந்துகைவிடப்பட்ட நிலைகள், பிறர் நகைத்தற்குக்காரணமாயின.

378ஏமாந்த போழ்தின் இனியார்போன் றின்னாராய்த்
தாமார்ந்த போதே தகர்க்கோடாம் - மானோக்கின்
தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
செந்நெறிச் சேர்துமென் பார்.

(பொ-ள்.) ஏமாந்த போழ்தின்இனியார்போன்று இன்னராய்த் தாம் ஆழ்ந்தபோதேதகர்க்கோடு ஆம் - காமுகர் தம்பால்மயங்கியிருந்த காலத்தில் புறத்தே அவர்க்குஇனியாரைப்போலிருந்து அகத்தே வஞ்சம்மிக்கவராய்த் தாம் அவர் பொருளையெல்லாம்உண்டுவிட்டவுடனே ஆட்டுக் கடாவின் கொம்புபோல்திருக்குண்டு செல்கின்ற, மான் நோக்கின் தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேரார் செந்நெறிச்சேர்தும் என்பார் - மான் போன்ற மருண்டபார்வையினையுடைய தம் மனம் போன வழியே யொழுகும்பொருட் பெண்டிரது அகன்ற மார்பினைஅருணெறியிலொழுகுவே மென்றிருப்பார் கூடார்.

(க-து.) விலைமாதரது சேர்க்கையால்அருணெறியொழுக்கங் கெடும்.

(வி-ம்.) தகர்க்கோடாம்பெண்டிரென்க. அருணெறியொழுக்கத்தும் பொருணெறிப்போக்குங் கரவு முடையாரது தொடர்புமாறுபட்டதாகலின் சேராரென்றார்."பொருட்பொருளார் புன்னலந் தோயார்அருட்பொருள். ஆயும் அறிவி னவர்" என்றார்நாயனாரும், தந்நெறிப் பெண்டிரென்றது,ஒருவர்க்குரிமையாய் அடங்காமை யுணர்த்திற்று.

(8)


1. குறள். 92 : 4.

379ஊறுசெய் நெஞ்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
எமரென்று கொள்வாருங் கொள்பவே யார்க்குந்
தமரல்லர் தம்உடம்பி னார்.

(பொ-ள்.) ஊறு செய் நெஞ்சம் தம்உள்ளடக்கி ஒள் நுதலார் தேற மொழிந்த மொழிகேட்டு - பிறர்பாற் பொருள் பறித்துக்கொள்ளுதலாகிய தீமையைச் செய்யுந் தமது நினைவைப்புறத்தே புலப்படாதபடி தம் உள்ளத்தில்அடக்கிக்கொண்டு ஒளிமிக்க நெற்றியையுடையபொருட் பெண்டிர் புறத்தே மனந் தெளியும்படிமொழிந்த பசப்பு மொழிகளைக் கேட்டு, தேறி எமர்என்று கொள்வாரும் கொள்ப-அவற்றை நம்பி அப்பெண்டிர் எமக்குரியரென்று உரிமை கொள்வாருங்கொள்வர்; யார்க்கும் தமர் அல்லர் தம்உடம்பினார் - அம் மாதரார் எவர்க்கும்உறவினராகார் அவர் தமக்கே உரியஉடம்பினையுடையர்.

(க-து.) வேசையர் தமதுடம்பைத்தமதாக்கத்துக்குப் பயன்படுத்துவரான்றிப்பிறரெவர்க்கும் உரிமையாக்கார்.

(வி-ம்.) ‘தூண்டி லிரையின்துடக்குள் ளுறுத்துத் தேன் தோய்த் தன்னதீஞ்சொல் அளைஇ"1உரையாடும்இயல்பினராதலின், ‘ஊறுசெய் நெஞ்சம் தம்உள்ளடக்கித் தேற மொழிந்த மொழி' என்றார்.‘கொள்வாருங்கொள்ப' வென்றார்,தமக்குடம்பாடின்மையின். அன்புடையராயின்பிறர்க்கென்பும் உரியராவராகலின் அன்பிலாரானஇவர் தம் முடம்பு தமக்கே உரியவராயினார். இவைஐந்து பாட்டானும் விலைமாதரது கரவுடைமைபெறப்பட்டது.

(9)


1. பெருங். உஞ்சைக். 35 : 108-9.

380 உள்ளம் ஒருவன் உழையாத ஒண்ணுதலார்
கள்ளத்தாற் செய்யுங் கருத்தெல்லாந் - தெள்ளி
அறிந்த விடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்.

(பொ-ள்.) உள்ளம் ஒருவன்உழையதா-தமது நெஞ்சம் வேறொருவனிடத்ததாக, ஒள்நுதலார் கள்ளத்தால் செய்யுங் கருத்தெல்லாம் -ஒளிபொருந்திய நெற்றியையுடைய பொருட்பெண்டிர்வஞ்சனையால் தம்மிடஞ் செய்யும் நினைவெல்லாம்,தெள்ளி அறிந்தவிடத்தும் அறியாராம் பாவம்செறிந்த உடம்பினவர் - ஆராய்ந்து நன்றாகத்தெரிந்த நிலையினும் தீவினைமிக்கபிறப்பினையுடையவர் அத்தெரிவினைத்தமதொழுக்கத்திற் கொண்டுவரும்அறிவாற்றலில்லாதவராவர்.

(க-து.) தீவினை மிக்கார்விலைமாதரின் வஞ்சங்களை நன்கு தெரிந்திருந்தும்அவரின் நீங்கியொழுகும் ஆற்றலில்லாதவராவர்.

(வி-ம்.) உள்ளம் ஒருவனுழையதாவென்றமையான் உடம்பு பிறனொருவனுழையாதாக்கள்ளஞ்செய்வரென்பது பெறப்பட்டது.அறிதற்கிருந்த அறிவாற்றல், தீவினைச்செறிவால்அறிந்தவாறொழுகுதற்கில்லாமையின்,‘அறிந்தவிடத்தும் அறியாராம்' என்றார். ஆம்,ஆவரென்னும்பொருட்டு. ‘அறிவதறிந்தும் பழியோடுபட்டவை செய்தல்செய்த வினையான் வருமாகலின்1‘பாவஞ் செறிந்த உடம்பினவர்' என்றார். இதனான்வஞ்சமிக்க விலைமாதரினின்று காமுகர்நீங்காமைக்கு ஏதுக் கூறுமுகத்தால் அவ்விருதிறத்தாரது இழிவும் உரைக்கப்பட்டது.

(10)


1. நாலடி. 11 : 8.





2011/7/6 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/7/5 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/7/4 Venkatram Shrinivas <see...@gmail.com>
கீழ்மை 
 
<td width="95%" style="font-family:GIST-TMOTChanakya;font-size:9pt;text-decoration:none;color:rgb(0, 0, 0);line-he



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jul 7, 2011, 3:22:03 PM7/7/11
to மின்தமிழ்
கற்புடைமகளிர் 
 
பொருட்பால்
39. கற்புடை மகளிர்
[கணவன்பால் ஆழ்ந்த அன்புணர்வுடைய இல்லற நிகழ்த்தும் மகளிரது இயல்பு.]
381அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் - விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.

(பொ-ள்.) அரும்பெறல் கற்பின்அயிராணி அன்ன பெரும் பெயர்ப் பெண்டிர்எனினும்-பெறற்கரிய கற்பொழுக்கமுடைய அயிராணிஎன்னுந் தேவர்கோன் மனைவிபோல் வாழ்க்கையிற்பெரிய புகழ்வாய்ந்த மகளிராயினும், விரும்பிப்பெறு நசையால் பின் நிற்பார் இன்மையே பேணும்நறுநுதலாள் நன்மைத்துணை - அவருள், உணவு முதலியபொருள்களை விரும்பி அவற்றை அடையும் வேட்கையால்தன் பின்னே இரந்து நிற்கும் இரவலர்இல்லாமையையே தனது இல்லற வொழுக்கத்தாற்காத்தொழுகும் இயற்கை மணங் கமழு நெற்றியையுடையபெண்ணே அவ் வில்லறத்தின் பயன்களாகியமேன்மேல் நன்மைகட்குத் துணையாவாள்.

(க-து.) கற்புடை மகளிர்க்கு விருந்துபுறத்தரும் இயல்பு இன்றியமையாதது.

(வி-ம்.) கற்பாவது, கணவன்பால்ஆழ்ந்த அன்புணர்வுடைமை. அயிராணியின் கற்புக்கூறவே இவரது கற்பும் பெறப்பட்டது. படவே,பின்னிற்பாரென்றது இரவலர்க்காயிற்று. அயிராணிகூறப்பட்டமையின், கற்பொழுக்கத்தோடு திரு உருமுதலிய ஏனைப் படைப்புக்களும் பெறப்பட்டன.இல்லறவொழுக்கமாவது, அறவோர்க்களித்தல்முதலியன; அவற்றுள்ளும் விருந்து புறந்தருதல் மிகஇன்றியமையாததாதலின், ‘பின்னிற்பாரின்மையேபேணும் நறுநுதலாள் துணை' யெனப்பட்டது,"இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மைசெய்தற் பொருட்"1 டென்றார் நாயனாரும்.வீடுபயக்கும் அருணெறிக்கு ஏதுவாய்ப் பொருள்களிற்பற்றின்றி நின்று உலகில் அறம் வளர்க்கும்பயிற்சியே இல்லறத்தின்கண்நடைபெறுதற்குரியதாகலின், ஒரு பயனுங் கருதாதுஆருயிர்களை ஓம்புதலாகிய விருந்து புறந்தருதலின்இன்றியமையாமை இவ்வாறுணர்த்தப்பட்டது. இல்லம்போதுவார் குறிப்பறிந்து, அவரை இரவலராக்காதுஉடனே விருந்தாக ஏற்றொழுகுக வென்பார்,பின்னிற்பா ரின்மையே பேணும்' என்றார்.ஏகாராம்; தேற்றம். நன்மையென்றது, தவம் முதலியதுறவற நிலைகளை.

(1)


1. குறள். 9 : 1.

382 குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங்
கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.

(பொ-ள்.) குடம் நீர் அட்டுஉண்ணும் இடுக்கண் பொழுதும் கடல் நீர் அற உண்ணும்கேளிர் வரினும் - குடத்திலுள்ள நீரையேகாய்ச்சிப் பருகிப் பசியாறும் இன்னாக்காலத்தும் கடல் நீர் முழுமையும் உண்டுபசியாறுதற்குரிய அத்தனை உறவினர் ஒருங்குவிருந்தாக வந்தாலும், கடன் நீர்மை கை ஆறாக்கொள்ளும் மடமொழி மாதர் - அந்நேரத்தில், தன்கடமையாகிய விரும்தோம்புமியல்பைச்செயன்முறையாக மேற்கொள்கின்ற மென்மையானசொற்களையுடைய பெண்ணே, மனை மாட்சியாள் - இல்லறவாழ்க்கைக்குரிய மாட்சிமையுடையவளாவாள்.

(க-து.) எந்நிலையிலும்விருந்தோம்பும் இயல்பே மனை மாட்சியாகும்.

(வி-ம்.) நீரையேனும் நிரம்ப உண்டுபசியாறுதல் கருதிக் ‘குடம்நீ' ரென்னப்பட்டது."விருந்துகண்டொளிக்குந் திருந்தாவாழ்க்கைப், பொறிப்புணர்உடம்பிற்றோன்றிஎன், அறிவுகெட நின்றநல்கூர்மை"1 என்றதூஉங் காண்க.உறவினர்க்கு விருந்தோம்பல் இயலாத நிலையேஇல்லறத்தார்க்கு இடுக்க ணென்பதாகலின் வறுமைப்பொழுதை ‘இடுக்கட்பொழு' தென்று விதந்தார்.‘கடனீரறவுண்ணு' மென்றது கேளிரின் பன்மையுணர்த்திநின்றது. வரினும் என்னும் உம்மை எதிர்மறையாய்வருதலின் அருமையுணர்த்திற்று. கடன் கீழ்ச்செய்யுளிற் கூறப்பட்டது. மனைமாட்சியாள் என்னும்ஒருமையால் மாதர், குற்றுகரப் போலியென்று கொள்க.

(2)


1. புறம். 296.

383 நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.

(பொ-ள்.) நால் ஆறும் ஆறாய், நனிசிறிதாய், எப்புறனும் மேல் ஆறு மேல்உறை சோரினும்- வீடு நாலாபக்கமும் இடிந்து வழியுடையதாய்; மிகவுஞ்சிறியதாய், எந்தப் பக்கமும் கூரை கலனாகிமேல்வழியாய்த் தன்மேல் மழை ஒழுகுவதாய் அத்துணைவறிய நிலையிலிருப்பினும், மேலாயவல்லாளாய்வாழும் ஊர் தன் புகழும் மாண்கற்பின் இல்லாள்அமர்ந்ததே இல் - உயர்ந்தஇல்லறவொழுக்கங்களில் திறமையுடையவளாய் அதனால்தான் வாழும் ஊரவர் தன்னைப் புகழ்ந்தேத்துகின்றமாட்சிமையான கற்பு நிலையுடைய மனைவிஅமர்ந்திருக்கும் வீடே வீடெனப்படும்.

(க-து.) செல்வம் முதலியவற்றைவிடஇல்லக்கிழத்தியின் நற்குணமே இல்வாழ்க்கைக்குமுதன்மையானது.

(வி-ம்.) மேலாய: பெயர். வறியநிலையிலும் இன்சொல் முதலிய நலங்களுடன் மனம்அமைய விருந்தோம்புதல் செய்தலின், ‘வல்லாளாய்'என்றார். தற்புகழும் இல்லாள் என்க.இல்லறவொழுக்கமுடையது இல்லம் எனப்படுமல்லதுஏனைச் செல்வச் சிறப்புடையன அஃதாகாவென்பதுகருத்து. இவை மூன்றுபாட்டானுங் கற்புடை மகளிர்க்குமுதன்மையாவன விருந்து புறந்தரல் முதலிய இல்லறக்கடமைகளென்பது விளக்கப்பட்டது."உள்ளதுதவச்சிறிதாயினும் மிகப்பல ரென்னாள் நீள்நெடும் பந்தர் ஊன்முறை யூட்டும் இற்பொலிமகடூஉ"1 என்றதூஉங் காண்க.

(3)


1. புறம். 331.

384 கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், - உட்கி
இடனறிந் தூடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.

(பொ-ள்.) கட்கு இனியாள் காதலன்காதல் வகை புனைவாள் - பார்வைக்கு இனியஇயற்கையழகுடைய வளாய்த் தன் காதலன் விருப்பப்படிசெயற்கைக் கோலங்கள் செய்து கொள்வாளும், உட்குஉடையாள் ஊர்நாண் இயல்பினாள் - தனதுகற்பொழுக்கச் சீரினாற் கண்டாரெவரும் அஞ்சும்மதிப்புடையவளாய்த் தான் வாழும் ஊரிலுள்ளமகளிரெல்லாரும் தன்னுடைய இல்லறச் செய்கைகளின்திறமைக்கு வியந்து நாண்கொள்ளற்குரியமாட்சிமையுடையாளும், உட்கு இடன் அறிந்து ஊடிஇனிதின் உணரும் மடமொழி மாதராள் - தன்கணவன்பால் உள்மதிப்புக்கொண்டு செவ்வியறிந்துஊடியும் அஃது இனிதாம்படி அவ்வூடல் நீங்கியும்இன்பம் விளைக்கும் மென்மையான மொழிகளையுடையபெண்ணே, பெண் - இல்வாழ்க்கைக்குரிய வாழ்க்கைத்துணையாவள்.

(க-து.) தோற்றமும் ஒழுக்கமும்காதலுமுடைய மாது சிறந்த வாழ்க்கைத் துணையாவாள்.

(வி-ம்.) இல்லக் கிழத்தியின்அறுவகை நலங்களை மூவிரு முகமாக இச் செய்யுள்வகுத்தோதிற்று. இனியாள் புனைவாள் ஓரிரு ஓவகையும்,உடையாள் இயல்பினாள் மற்றோரிருவகையும், ஊடுவாள்ஊடலுணர்வாள் பிறிதோரிரு வகையுமாயின. இறுதிப்பகுதி ஊடி உணருமென்று வந்தமையான், ஏனைப்பகுதிகளும்அவ்வாறே எச்சமும் முடிவுமாய் உரைக்கப்பட்டன.தனக்கென்றொரு புனைவின்மையின் ‘காதலன் காதல்வகை புனைவா' ளென்றார். கணவன் பிரிவிற் கண்ணகிவாடிய மேனி வருத்தத்தோடு 1 இருந்தமை ஈண்டுநினைவுகூரப்படும். உணர்தல். தெளிதல் : ஊடல் சிறிதுநீட்டிப்பினும் இன்பங்கெடுமாகலின் அளவறிந்துணர்தல் தோன்ற, ‘இனிதினுணரு' மென்றார்;கணவன்மாட்டு உட்கின்றி இஃதியலாமையின் ‘உட்கிஊடி உணரும்' எனப்பட்டது. இதனாற் கற்புடைமகளிரின்நலங்கள் தொகுத்துரைக்கப்பட்டன.

(4)


1. சிலப். 9 : 68.

385 எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையாற்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.

(பொ-ள்.) எஞ்ஞான்றும் எம் கணவர்எம் தோள் மேல் சேர்ந்தெழினும் அஞ்ஞான்றுகண்டேம்போல் நாணுதும் - எம் கணவர் எந்நாளும்எம் தோள்மேல் முயங்கியெழுந்தாலும் தலைநாளிற்கண்டேம்போல் அவர் பால் யாம்நாணமுடையமாயிருக்கின்றேம்; எஞ்ஞான்றும் பொருள்நசையாற் பன் மார்பு சேர்ந்தொழுகுவார் என்னைகெழீஇயினர் கொல்லோ - அவ்வாறிருக்க, பொருள்வேட்கையால் எந்நாளும் ஆடவர்பலர் மார்புகளைச்சற்றும் நாணின்றிக் கூடியொழுகும் பரத்தையர்தமதுள்ளத்தில் என்னதான்உடையராயிருக்கின்றனரோ;

(க-து.) கற்புடை மகளிர்க்கு நாணமுதலிய பெண்மை யியல்புகள் அணிகளாகும்.

(வி-ம்.) எம் என்னும் பன்மைஉயர்வு கருதிற்று.தோள் இன்பந்துய்த்தற்கு இலக்கணை. ஆலுங் கொல்லும் அசை.பொருள் நசையால் என்றது இயல்பு உணர்த்தியபடி.பொருணசையாற் சேர்ந்தொழுகலின் காதலுமின்றிப்பன்மார்பு சேர்ந்தொழுகலின் கற்பும் நாணுமின்றிஅவம்படுதலின், அவரெல்லாந் தமதுயிரில்என்னைகெழீஇயினரோ என்று குலமகள் ஒருத்திதனக்குள் வியந்து கூறுவாளாயினள். உயிரினுஞ்சிறந்ததாய் நாணும் நாணினுஞ் சிறந்ததாய்க்கற்புமிருத்தலின்,2 அவை யிரண்டு மில்லாதஉயிர் யாதுமில்லாத தாயிற்று. ஆதலின்கெழீஇயினரோவென்னும் வினா ஈண்டு எதிர்மறைப்பொருளது. முதன்மைபற்றி நாண் கூறினமையின், அச்சம்மடம் பயிர்ப்பென்னும்3ஏனைப்பெண்மையியல்புகளுங் கொள்ளப்படும்.

(5)


1. தொல். கிளவி. 27.

2. தொல். கள. 22.

3. தொல். கள. 8.

386 உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; -தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.

(பொ-ள்.) உள்ளத்து உணர்வுடையான்ஓதிய நூல் அற்று - உள்ளத்தில் இயற்கைநுண்ணுணர்வுடையதா னொருவன் கற்ற கல்வியறிவையொத்த தாயும், வள்ளன்மை பூண்டான்கண்ஒண்பொருள் அற்று - இயற்கையிற் கொடைக்குணம்உடையானொருவனிடத்து மாட்சிமைப்படுகின்ற ஒள்ளியசெல்வத்தை ஒத்ததாயும், தெள்ளிய ஆண் மகன்கையில் அயில்வாள் அனைத்து - வாட்பயிற்சியில்தெளிவடைந்த வீரமிக்க ஆடவனொருவன் கையில்விளங்கும் கூரிய வாட்படையை ஒத்ததாயும்இருக்கின்றது, நாண் உடையாள் பெற்ற நலம் - நாணம்முதலிய பெண்ணீர்மைகளுடைய கற்புடைப்பெண்ணொருத்தி பெற்ற அழகு முதலிய நலங்களென்க.

(க-து.) மகளிர்க்கு நாண முதலியபெண்மைப் பண்புகளிருப்பின், அவர்க்கு ஏனைநலங்களுஞ் சிறக்கும்.

(வி-ம்.) அற்றென்பதைஒண்பொருட்குங் கொள்க. உவமைகளால் அறிவும்கொடையும் வீரமுமாகிய ஆடவரியல்புகள்1பெறப்பட்டன; அனைத்தே மகளிர்க்கு நாண் என்பது கருத்து. குறித்த ஆணியல்புகளின்றேற் கல்வியும் பொருளும் கருவியும் மாட்சிமைப் படாமைபோல, நாண் முதலிய பெண்ணீர்மைகளின்றேல் எவ்வகை நலனும் பயனில்லன வென்பதாம். நலமென்றது, அழகு முதலிய பலவகை நன்மைகளை, இவை யிரண்டு பாட்டானும் கற்புடை மகளிர்க்குரிய நாணினது நன்மை கூறப்பட்டது.

(6)


1. தொல். கள. 7

387 கருஞ்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன்; -ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையுந் தோய வரும்.

(பொ-ள்.) கருங்கொள்ளும்செங்கொள்ளும் தூணிப்பதக்கு என்று ஒருங்கு ஒப்பக்கொண்டானாம் ஊரன் - மருதநிலத்து ஊரில்இருந்துகொண்டே அவ்வூரானொருவன் தாழ்ந்தகருங்கொள்ளையும் உயர்ந்த செங்கொள்ளையும் ஒரேவிலைக்குத் தூணிப்பதக்கு என்று ஒரே அளவாகஒன்றாய் வாங்கினானாம்; ஒருங்கு ஒவ்வாநல்நுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாதுஎன்னையும் தோயவரும் - அதுபோலப்பெண்மையியல்பில் என்னோடு ஒருங்கு ஒவ்வாத நல்லநெற்றியையுடைய பரத்தையரை மருவிய மலைபோலும்பெரிய மார்பினையுடைய என் கணவன் நீராடுதலுஞ்செய்யாது என்னையும் மருவ வருகின்றனன். (ஈதென்னமுறை)

(க-து.) கற்புடை மகளிர் தூயர்.

(வி-ம்.) தூணி யென்பது நான்குமரக்காலும் பதக்கென்பது இரண்டு மரக்காலுமாய்த்தூணிப் பதக்கென்பது ஆறு மரக்காலளவையுணர்த்திற்று. ஆம் என்பது இகழ்வின் மேற்று.உருவில் மட்டும் ஒத்து அழகியராய் உள்ளத்தால்ஒவ்வாரான பரத்தையரென்றற்கு ‘நன்னுதலா'ரென்றும்.
‘ஒருங்கொவ்வா' வென்றுங் கூறினார். மேன்மாசினும்மனமாசு தீயதாய் மேற்புறத்தைப் பின்னுந்தீதாக்கி ஊறுவிளைத்தலின், தலைவிபெரிதஞ்சினாள். 1"மனத்துக்கண்மாசிலனாதல் அனைத்தறம்" என்றதூஉம்இக்கருத்தின் மேற்று. ‘நீராடா' தென்னுங்குறிப்பால் இவ்வச்சமும், பரத்தையர்இழிவுடையராய்த் தன்னோடொவ்வாமையும் ஆனால்தலைமகன் ஒப்புக் கருதினமையும், கணவர் எத்துணைத்தவறுடையராயினும் கற்புடை மகளிர் அவரது திருத்தம்விரும்புவரல்லது வெறுத்து வேறாவரல்ல ரென்பதும்,பிறவும் பெறப்படும். இது, பரத்தையர் மாட்டுப்பிரிந்து வந்த தலைமகனோடு ஊடிய தலைமகள் தன்னுட்கூறியது.

(7)


1. குறள். 4 : 4.

388 கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால்
வலக்கண் அனையார்க் குரை.

(பொ-ள்.) கொடியவை கூறாதி பாண -பாண! கேட்க இன்னாதனவான தலைவனைப் பற்றியநயவுரைகளை எம் மிடங் கூறாதே; நீ கூறின் - நீகூறுவதானால், துடியின் இடக்கண் அனையம் யாம் ஊரற்குஅதனால் - ஊரனான எம் தலைவனுக்கு யாம் உடுக்கையின்இடப்பக்கத்தை ஒத்துப் பயன்படாமலிருக்கின்றேமாதலால், அடி பைய இட்டு ஒதுங்கிச் சென்று வலக்கண்அனையார்க்கு உரை - மெல்ல அடியிட்டு நீங்கிப்போய் அவ்வுடுக்கையின் வலப்பக்கம்போற்பயன்படுதலுடைய பரத்தையர்க்குக் கூறு.

(க-து.) கற்புடை மகளிர் தமதூடுதலாற்கணவரது திருத்தத்தை நாடுதற்குரியர்.

(வி-ம்.) பரத்தையிற்பிரிந்துவந்த தலைமகனைப் பற்றி நயவுரைகள்கூறிக்கொண்டு பாணன் வாயில்வேண்டத் தலைவிமறுத்தமை கூறியது. இது புலவியாற்சினக்குறிப்போடிருந்தமையால் நயவுரைகள் கொடியவையாயின. பாணன் தலைவனுக்குத் தூதாக வந்தவன்;அஞ்சிப் பதுங்கி யொதுங்கிச் செல்லும்அவனதிழிந்த நடையியல்பு கூறி இகழ்வாள், ‘அடி பையஇட்டொதுங்கிச் சென்று' என்றாள். துடிக்குக்கண்ணென்றது அதன்கண் ஒலியெழுப்பும் இடம். உவமைபயன்படாமையும் பயன்படுத்தலுங் காட்ட எழுந்தது.யாம் என்னும் பன்மை உயர்வினின்றது. ஊரன்,மருதநிலத்துத் தலைவன்; ஊடல் மருதத்தின்உரிப்பொருளாகலின்1 இவ்வாறு கூறுதல் மரபு.இச் செய்யுட் கருத்து இவ் வதிகாரத்தின் இறுதிச்செய்யுளினும் வரும்.

(8)


1. தொல். அகத். 14.

389சாய்ப்பறிக்க நீர்திகழுந் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன், - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்
நோக்கி யிருந்தேனும் யான்.

(பொ-ள்.) சாய் பறிக்க நீர்திகழும் தண்வயல் ஊரன்மீது ஈப் பறக்கநொந்தேனும் யானேமன் - கோரைகளைப்பறித்துவிடுதலால் நீர் நன்கு விளங்கித்தெரிகின்ற குளிர்ந்த வயல்களையுடைய ஊரனாகிய என்தலைவன் மேல் முன்னெல்லாம் ஓர் ஈ வந்து உட்காரஅதுபொறாமல் வருந்தியவளும் யானே; தீப்பறக்கத்தாக்கி முலை பொருத தண் சாந்து அணி அகலம்நோக்கி இருந்தேனும் யான் - தீப்பொறி பறக்கப்பரத்தையர் தம் கொங்கைகளால் ஞெமுக்கிக்கலவிசெய்த, குளிர்ந்த சந்தனமணிந்த அவனது அகன்றமார்பினை இப்போது பார்த்துப்பொறுத்திருந்தவளும் யானே காண்.

(க-து.) கற்புடைய மகளிர்க்குத் தங்கணவர் மாட்டு அன்பு எந்நிலையிலும் குன்றாது.

(வி-ம்.) களைகளாகிய கோரைகளைப்பறித்துவிட நீர் நன்கு விளங்கித் தெரிதல்போல,பரத்தையிற் பிரிவென்னுந்தலைவனதுகுறையொன்றனைக் கருதாதுவிட அவன் நலங்கள் நன்குவிளங்கிக் பெரிதும் இன்பஞ் செய்கின்றனவாதலின், அந்நலங்களால் யான் கவரப்பட்டுப்பொறுப்பேனாயினே னென்பது தலைவியின் விடை..புலவாது நின்றனை யென்ற தோழிக்குத் தலைவி கூறியதுஇது. "ஊடியிருப்பினும் ஊரன் நறுமேனி கூடலினிதாம்எனக்கு" ஐந்திணையைம்பதினும் இது வரும்.முன்னே பொறாதிருந்தே னென்றமையின், மன் கழிவுப்பொருளினின்றது. ‘தண்சாந் தணியகல' மென்னுங்குறிப்பால் தலைவன் நலங்கள் பைய வெளிப்படும்.பின் வந்த யான் என்பதற்கும் ஏகாரங் கொள்க.

(9)


1. ஐந். ஐம். 30.

390 அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
இடைக்கண் அனையார்க் குரை.

(பொ-ள்.) அரும்பு அவிழ் தாரினான்எம் அருளும் என்று பெரும்பொய் உரையாதி பாண -அரும்புகள் போதாகி மலரும் மாலையை யணிந்த எம்தலைவன் எமக்குத் தலையளி செய்ய வருகின்றனன்என்று பெரியதொரு பொய்ம்மொழியை, பாண!எம்மிடம் மொழியாதே கரும்பின் கடைக்கண்அனையம் நாம் ஊரற்கு அதனால் இடைக்கண்அனையார்க்கு உரை - ஊரனாகிய எம் தலைவர்க்கு யாம்கரும்பின் நுனிக் கணுக்கள் போலச் சுவையிலேமாயிருக்கின்றனமாதலின் அதன் நடுக் கணுக்களையொப்ப அவற்குச் சுவை மிக உடையரானபரத்தையரிடம் அதனைச் சொல்.

(க-து.) கற்புடை மகளிர், கணவன்வருகையில் அன்புடையராயிருப்பர்.

(வி-ம்.) தலைவன் வருகை தனக்குப்பொய்யெனவே பாரத்தையர்க்கு மெய்யாதல்பெறப்படுதலின், ‘இடைக்கண்ணனையார்க்குரை'யென்றாள். ‘பொய்யுரையாதி' யென்னுங் குறிப்பால்,அவன் அருளுதல் மெய்யாதல் வேண்டுமென்னும்தலைவியின் வேட்கை பெறப்படும். கண்ணென்றது கணு.கரும்பின் நுனி இடைப்பகுதிகளின் சுவையியல்புமுன்னும் வந்தது.1 இவை நான்கு பாட்டானும்கணவன் தவறுடையானாயினும் தாம் பொறுமையுடையராய்அன்பின் நீங்காது தமது புலத்தலால்அவனைத்திருத்தி ஏற்றுக்கோடலாகிய கற்புடைமகளிரது மற்றொரு கடமையும் நுவலப்பட்டது.

(10)


1. நாலடி. 2 : 1.




2011/7/7 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/7/6 Venkatram Shrinivas <see...@gmail.com>
2011/7/5 Venkatram Shrinivas <see...@gmail.com>
கயமை 
 
351<td style="font-family:GIST-TMOTChanakya;font-size:9pt;text-decoration:non



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Jul 8, 2011, 3:41:26 PM7/8/11
to மின்தமிழ்
காமநுதலியல் 
 
காமத்துப்பால்

இது காமவின்பத்தின் இயல்பை யுணர்த்தும் பகுதி. அறம்பொருள் இன்பமென்னும் வழக்கால், காமம் இன்பமென்றே கூறப்படுதல் விளங்கும். விளங்கவே, வீடென்பது இன்பத்தின் வேறென்றுணரப்படும். அஃது, இன்ப துன்ப மற்ற அமைதி நிலையென்று கொள்க. அந்நிலையையெய்துங்கால் அஃது இவ்வின்பத்தினுஞ் சிறப்புடையதாய் விளங்கலின், அறம் பொருளின்ப மென்னும் இம் மூவகை உறுதிப்பொருளினும் உயர்வுடையதாய் இவற்றின் விடுதலையேயாம். ஆதலின், துய்த்தற் குரியவாக நூல்களால் உணர்த்தப்படும் பொருள்கள் அறமுதலிய மூன்றுமே யாகலின் காமத்துப்பால் மூன்றாம் பகுதியாக இறுதியில் நின்றதென்க.

40. காமநுதலியல்

‘இன்பத்தின் இயல்பு நுவலும் அதிகாரம்' என்பது பொருள்; இன்பமாவது, பொருள்களின் வாயிலாகப் புலன்களால் நுகர்வதோர் உணர்வு. அதன்கண், ஒருகாலத் தொருபொருளால் ஐம்புலனும் ஒருங்கு நுகருங்காமவின்பம் சிறத்தலின், அதுவே ‘இன்ப' மென் றெடுத்துக்கொள்ளப்பட்டது. அஃது, ஒத்த தலைவனுந் தலைவியும் இயற்கையன்பினால் ஒருவரையொருவர் இன்றியமையாராய்த் தம்முட் கூடுங்கால், அவருள்ளத்துணர்வாய்த் தோன்றுவதோ ருணர்வுநிலை. அந்நிலை மாட்சிமைப்பட்டன்றி அதனினுஞ் சிறந்ததொன்று கைவாராமையின், அது மாட்சிமைப்படும் வாயில்கள் இவ் வதிகாரத்தா னுவலப்படும்.

391 முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.

(பொ-ள்.) முயங்காக்கால் பாயும் பசலை - தலைவியை மருவாவிடின் அவளுடம்பிற் பசலைநிறம். பரவும்; மற்று ஊடி உயங்காக்கால் உப்பு இன்றாம் காமம் - ஆனால் அவள் இடையிடையே ஊடல்கொண்டு உள்ளம் மெலியாவிடின் காமவுணர்வு சுவையில்லாததாகும்; வயங்கு ஓதம் நில்லாதத் திரை அலைக்கும் நீள் கழித் தண்சேர்ப்ப புல்லாப் புலப்பதோர் ஆறு - ஆதலால் விளங்குகின்ற கடலானது ஒரு படியிலும் நில்லாத தன் அலைகளால் அலைத்தெதிர்கின்ற நீண்ட கழியினையுடைய குளிர்ந்த துறைவனே! காமத்திற்கு ஊடிப் புணர்வது ஓர் இனிய நெறியாகும்.

(க-து.) ஊடலுங் கூடலும் காமம் மாட்சிமைப்படுதற்கு ஏது.

(வி-ம்.) பசலையென்றது ஈண்டு ஒளிமழுக்கம். உப்பு. சுவையென்னும் பொருட்டு ஆகுபெயர்; சற்றே குறையினுங் கூடினுஞ் சுவை கெட்டு மற்றளவி னிற்கச் சுவை பயப்பதொரு பொருளாகலின், அவ் வியல்பினரான ஊடற் சுவைக்கு ஈதுரைக்கப்படும். "உப்பமைந் தற்றாற் புலவி"1 என்றார் நாயனாரும்; பிறரும் "உப்பமை காமம்"2 என்பர். அலை எதிர்தலாற் கழிநீர் நிறைந்து உப்புமிக்கு மாட்சிமைப்படுதலின், தலைவன்பாற் குறைகண்டு அதனால் ஒருநிலையினு நில்லாது கடலலைபோற் கொந்தளிக்கும் உள்ளமுடையளான தலைவி, தன்கண் வந்து கூடுகின்ற தலைவனைத் தனதூடலால் எதிர்த்து அவனுணர்வை நீர்மையுஞ் சுவையு மிகுவித்து மாட்சிமைப்படுத்துவ ளென்பது ‘நில்லாத் திரையலைக்கும் நீள்கழி' என்னும் அடைமொழியின் கருத்தாம். ‘ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம், கூடி முயங்கப் பெறின்'3 என்னும் உண்மை இச் செய்யுளான் உணர்த்தப்பட்டது. ‘புலவாப்புல்லுவதோராறு' என்று மாற்றி எதிர் நிரனிறையாகக் கொள்க. தலை மகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகற்கு, முன்னம் வாயில் நேர்ந்த தோழி உவகை மிக்குக் கூறியது. இதனாற் காமம் மாட்சிமைப் படுவதோ ராறு நுவலப்பட்டது.

(1)


1. குறள். 131 : 2.

2. சிந். 1 : 78.

3. குறள். 133 : 10

392 தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந் துணையில்லார்க் - கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

(பொ-ள்.) தம் அமர் காதலர் தார் சூழ் அணி அகலம் விம்ம முயங்கும் துணை இல்லார்க்கு - தம்மால் அன்பு செய்யப்படுங் காதலரது மலர்மாலை யணிந்த அழகிய அகன்ற ஆகத்தைக் கொங்கைகள் பூரிக்க மருவியின்புறுமோர் ஆதரவில்லாத எம்போலும் பிரிந்த மகளிர்க்கு, இம் எனப் பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம் நெய்தல் அறைந்தன்ன நீர்த்து - இம்மென்று மழை பொழிய மேகம் இடித்தொலிக்குந் திசையெல்லாம் சாப்பறை அறைந்தாற் போன்ற தன்மையுடையது.

(க-து.) பிரிவின்கண் அன்புசெய்து இரங்குவார்க்குக் காமம் மாட்சிமைப்படும்.

(வி-ம்.) ‘காதலர்' என்றமையால் தலைவர் தம் மாட்டு அன்பு செய்தலும் பெறப்பட்டது. ‘துணை' யென்றாள், தலைவன் றொடர் பொன்றே தம் வாழ்க்கைக்குத் துணையல்லது பிறிதன்றென்றற்கு. இம்மென வென்பது ஒலிக்குறிப்பு; அதனை ஈண்டுக் கிளர்ந்தோதினார், பருவங்கருதினமையின். அஃதொன்றன்றி வேறியாதும் அவள் செவியகம் புகாமையின். "முடங்கிறைச் சொரிதரு மாத்திரள் அருவி, இன்பல் இமிழ்இசை ஓர்ப்பனள் கிடந்தோள், அஞ்செவி"1 யென்றார் பிறரும். எல்லாமென்பது தொறுப்பொருளதாகலின் ஒருமையின் முடிந்தது. சாதலன்ன பிரிவென்பவாகலின்2 ‘நெய்த லறைந்தன்ன' வென்றார். இது, பருவங்கண்டு ஆற்றாளாய்த் தலைவி தன்னுட்கலுழ்ந்து கூறியது.

(2)


1. முல்லைப். 87 : 9

2. அகநா. 339.

393கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

(பொ-ள்.) கம்மம் செய் மாக்கள் கருவி ஒடுக்கிய மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள். - கம்மத்தொழில் செய்கின்ற மக்கள் தொழிலை நிறுத்தித்தம் கருவிகளை ஏறக்கட்டிச் சென்ற மயங்கஞ் செய்யும் இம் மாலைப்போதில் மலர்களை ஆராய்ந்து மாலை தொடுப்பவள், கைம்மாலை இட்டுக்கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு இம் மாலை என்செய்வதென்று - நின் பிரிவு கேட்டுத் தனது கையிலிருந்த மாலையை நழுவவிட்டுத் தலைவராகிய துணையைப் பிரிந்த மகளிர்க்கு இந்த மலர்மாலை என்ன பயன் தருவதென்று சொல்லி அழுவாளாயினள்.

(க-து.) பிரிவினாற் காதலருள்ளம் மென்மையடையும்.

(வி-ம்.) கம்மமென்பது தொழில். வேலை நிறுத்தினாரென்றற்குக் கருவி யொடுக்கினா றென்றார். கம்மியருந் தந்தொழில் விடுத்துத் தம் இல்லஞ் செல்லும் மாலையென்றமையால், தலைவனுந் தான் வினைமேற் சேறலை விடுத்து இல்லந் தங்குதல் வேண்டுமென்னுங் குறிப்புப் பெறப்பட்டது. காதலர்க்கு மயக்கஞ் செய்யும் மாலையாகலின்1, ‘மம்மர்கொள் மாலை' யெனப்பட்டது. என்று சொல்லியது தானே கூறிக்கொண்டது. இது, தலைமகள் செலவு உடன்படாமையைத் தலைமகற்குத் தோழி கூறியது. (3)


1. திருக். 345.

394செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.

(பொ-ள்.) செல் சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்ட நீர் மெல் விரல் ஊழ் தெறியா விம்மி - கதிரவன் மறையும் மாலைப்போது நோக்கிச் சிதறிய செவ்வரி பரந்த கண்கள் ஆற்றாமையால் நிறைத்த நீரைத் தனது மெல்லிய விரலால் முறையே எடுத்தெறிந்துகொண்டு அழுது, மெல்விரலின் நாள் வைத்து நம் குற்றம் எண்ணுங்கொல் அந்தோ தன் தோள் வைத்து அணைமேல் கிடந்து - தன்கையே தலையணையாகப் படுக்கையின்மேல் ஒருக்கணித்துக் கிடந்து மெலிந்துபோன தன் விரல்களினால் பிரிந்த நாளைக் கணக்கிட்டுக் காலத்தில் இல்லஞ் சேராத நமது குற்றத்தை நினைத்து, ஆ, இந்நேரம் நம் துணைவி வருந்துமோ?

(க-து.) பிரிவு அருளிரக்கத்தை உண்டாக்கும்.

(வி-ம்.) செல்சுடர் அன்மொழித் தொகையாய் மாலைப் போதாயிற்று, கண்ணிறைநீர், இடையிட்டுத் துளி கொள்ளலால், ‘ஊழ் தெறியா' என்றார். ‘சுடர் நோக்கிக் கிடந்து தெரியா விம்மி நாள்வைத்து எண்ணுங்கொல்' என்று கொள்க. இது வினை முற்றி மீளுந் தலைமகன் இரங்கித் தன்னுள் கூறியது. "நாள் எண் நீர்மையின் நிலனுங் குழியும், விரலிட்டறவே"1 என்றதனால், பிரிந்த மகளிர் நாளெண்ணி வருந்துதல் பெறப்படும். (4)


1. குறுந். 46.

395கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; -பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோட்டிய வில்வாக் கறிந்து.

(பொ-ள்.) கண்கயல் என்னும் கருத்தினால் காதலி பின்சென்றது அம்ம சிறுசிரல் - கண்களைக் கயல்மீன் என்று கருதிய கருத்தினால் அதனைக் குத்தித் தின்னும் பொருட்டு ஆ! நம் காதலியின் பின்னே சென்றது சிச்சிலி என்னுஞ் சிறிய மீன்குத்திப் பறவை; பின்சென்று ஊக்கியெழுந்தும் எறிகல்லா ஒண் புருவம் கோட்டிய வில்வாக்கு அறிந்து - ஆனால், அவ்வாறு பின்சென்றும் குத்துதற்கு முனைந்தும் குத்தாதாயிற்று அவளது ஒள்ளிய புருவம் வளைந்த வில்லின் வளை வென்றறிந் தென்க.

(க-து.) நலம் பாராட்டும் அன்பினால் காமம் மாடசிமைப்படும்.

(வி-ம்.) தலைவியின் விழியால் அழிவுற்று மயங்கினனாதலின் இங்ஙனம் விழி நினைந்து நலம் பாராட்டினான். அம்ம : வியப்பு, ஊக்கியெழுதல்: ஒரு சொல். எறிகலா வென்பது செய்யுளின்ப நோக்கி ஒற்று மிக்கது. இது, தலைமகன் தன் தலைவியின் நலத்தைப் பாங்கற்கு வியந்து கூறியது.

396 அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ, -அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப்பின் வாங்கும் அடி.

(பொ-ள்.) அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம்மருங்கிற்கு - செந்நிறம் பொருந்திய ஆம்பல் மலரைப்போல நறுமணத்தோடு விளங்கும் வாயையும் அழகிய இடையையுமுடைய நம் புதல்விக்கு, அன்னோ - ஆ, அரக்கு ஆர்ந்த பஞ்சிகொண்டு ஊட்டினும் பையென பையென என்று அஞ்சிப் பின்வாங்கும் அடி பரல் கானம் ஆற்றின கொல்லோ - அழகுக்காகச் செந்நிற மிக்க செம்பஞ்சிக் குழம்பைத் தடவினாலும் ‘மெதுவாக, மெதுவாக' வென்று அஞ்சிக் கூறிப் பின் இழுத்துக்கொள்ளும் அத்துணை மெல்லிய பாதங்கள் தலைவனோடு உடன்போக்கிற் பிரிந்த இப்போது பரற்கற்களையுடைய கானத்திற் செல்லப் பொறுத்தனவோ?

(க-து.) எத்துணை இன்னலையுந் தலைவனுடன் தாங்குதலாற் காதல் பின்னும் மாட்சிமைப்படும்.

(வி-ம்.) அரக்காம்பல், செவ்வாம்பல்; நாறு மென்றதனால் மணமுங் கொள்க. "ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத் , தாமரைச் செவ்வாய்"1 யென்றார் பிறரும். மருங்கு; ஆகுபெயர். 2‘மருங்கிற்கு அடி கானம் ஆற்றினவோ' என்க. செல்லவென ஒரு சொல் வருவிக்க. இது, செவிலித்தாய் தன் மகள் உடன்போக்கிற் பிரிந்து சென்ற சுரத்தருமை நினைந்து இரங்கியது.

(6)


1. திருக்கோ. 25.

2. சிலப், 4, 73, 4,

397 ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேற்
கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து.

(பொ-ள்.) ஓலைக் கணக்கர் ஒலி அடங்குபுன் செக்கர் மாலைப்பொழுதில் மணந்தார் பிரிவு உள்ளி - ஏடுகளிற் கணக்கெழுதுங் கணக்கரது அலுவல் தொடர்பான ஆரவாரம் அடங்குகின்ற புல்லிய சிவந்த அந்திப்பொழுதில், தலைவி தன்னை மணந்த கணவரது பிரிவை நினைந்து, மாலைபரிந்திட்டு அழுதாள் வன முலைமேல் கோலம்செய் சாந்தம் திமிர்ந்து - தான் சூடியிருந்த மலர் மாலையை அறுத்தெறிந்து தன் அழகிய கொங்கையின்மேல் தொய்யிலெழுதி அழகு செய்திருந்த சந்தனத்தையும் கலைத்துதிர்த்து அழுவாளாயினள்.

(க-து.) பிரிவுள்ளி இரங்கும் அன்பினால் உடலும் உயிருங் குழைந்து பயனுறுதலையுடைய செவ்வியைப்பெறும்.

(வி-ம்.) ஒலி, கணக்குத் தீர்த்தலும் அதுபற்றிப் பேசுதலுமான ஆரவாரம். ஒலியடங்குதல், வேலையோய்தல், இக்கருத்து முன்னும் வந்தது.1 செக்கரென்றது, அந்திவானத்தின் செவ்வொளியை நினைந்து, கோலஞ் செய்து
மாலை சூடியிருந்தமையால் பிரிவு மேல் நிகழ விருப்பதெனக் கொள்க. திமிர்தல், ஈண்டுத் தேய்த்துதிர்த்தல், பிரிவாற்றாத தலைமகளின் நிலைமையைத் தோழி, தலைமகன் கேட்பத் தன்னுள் இரங்கிக் கூறியது.

(7)


1. நாலடி. 40 : 3.

398 கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி ; - சுடர்த்தொடீஇ!
பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.

(பொ-ள்.) கடக்க அரு கானத்துக் காளை பின் நாளை நடக்கவும் வல்லையோ என்றி - வன்மையுடையாருங் கடந்து செல்லுதற் கருமையான காட்டின்கண் காளையாகிய தலைவன் பின்னே நாளை நீ உடன்போக்கில் நடந்து போகவும் வல்லமையுடையையோ என்று கூறுகின்றனை; சுடர்த் தொடீஇ - ஒளி மிக்க வளைய லணிந்த தோழி!, பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே கற்றான் அஃது ஊரும் ஆறு - பெருமையிற் சிறந்த குதிரையொன்றினைப் பெற்றா னொருவன் அப்பொழுதே அதனை ஏறி ஊரு நெறியைக் கற்றவனாவன்.

(க-து.) ஒருமைப்பட்ட காதலன்பினால் உள்ளம் ஆழ்ந்து ஆற்றலுடைய தாகின்றது.

(வி-ம்.) வல்லையோ என்றது, தலைவியின் மென்மை கருதி. உவமையால், கருத்துடையானொருவன் ஒரு நிலையை எய்தினால் அதற்கான ஆற்றல்கள் அவன்கண் உடனே சென்றடையும் என்பது பெறப்படும். தலைவி தனது மெய்யன்பினை இவ்வாறு புலப்படுத்தினாள். தெளிவுபற்றிக் கற்றான் என இறந்த காலத்தான் நின்றது; இதனை "இயற்கையுந் தெளிவுங் கிளக்குங்காலை"1 யென்பதனாற் கொள்க. இஃது, உடன்போக்கிற் கிசைந்த தலைவி தோழிக்குக் கூறியது.

(8)


1. தொல். வினை. 48.

399 முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
தீம்பாவை செய்த குறி.

(பொ-ள்.) முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும் இலக்கணம் யாதும் அறியேன் - நேற்று என்மகள் தன்னுடைய முலைக்காம்பும் முத்துவடமும் அழுந்தும்படி என் உடம்பு முழுமையும் அணைத்துக்கொண்ட உண்மையை யான் சிறிதும் அறியாமற் போனேன்; கலைக்கணம் வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும் என் தீம்பாவை செய்த குறி - மான்கூட்டங்கள் வேங்கைக்கு அஞசிச்சிதறுங்காட்டு நெறியில் இன்று பிரிந்து செல்லுதற்குப் போலும் அழகிய பாவை போல்வாளான என்மகள் அவ்வாறு செய்த அடையாளம்!

(க-து.) தாயினன்பினையும் மறக்கும் ஆழ்ந்த காதலன்பினால் காமம் இன்பப்பேறுடைய தாகின்றது.

(வி-ம்.) முத்து: ஆகுபெயர், இலக்கணம், ஈண்டு இயல்பினையென்னும் பொருட்டு. தன்மாட்டு வைத்த அன்பினால் மகள் இவ்வாறு குறிசெய்த இயல்பினையென்க. இவ்வாறு இயல்பினை நுவலலின் அறிந்திலேன் எனற்பாலது, அறியேன் என நிகழ்வினின்றது. "இயற்கையுந் தெளிவு" மென்புழி ‘இயற்கை' யென்பதனால்1 இது கொள்ளப்படும். கலை, மானென்னும் பொதுமையின் வந்தது. செலிய : எச்சம் . இது, மகட்போக்கிய தாய் வருந்திக் கூறியது.

(9)


1. தொல். வினை 48.

400கண்மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி.

(பொ-ள்.) கண் மூன்று உடையானும் காக்கையும் பைஅரவும் என் ஈன்ற யாயும் பிழைத்தது என் - கண்கள் மூன்றுடைய சிவபிரானும் காக்கையும் படத்தையுடைய இராகுவென்னும் பாம்பும் என்னை ஈன்று வளர்த்த தாயும் என்மாட்டுப் பிழைசெய்தது யாதிருக்கின்றது; பொன் ஈன்றகோங்கு அரும்பு அன்ன முலையாய் - பொன் போலும் சுணங்கினை மேலெழச் செய்த கோங்கின் அரும்பு போன்ற கொங்கைகளையுடைய தோழீ!, பொருள் வயின் பாங்கனார் சென்ற நெறி - என் கவற்சிக்கு ஏது, பொருள் காரணமாக நந் தலைவர் பிரிந்து சென்ற கொடிய காட்டு நெறியினது கடுமையேயாகும்.

(க-து.) ஆழ்ந்த காதலுணர்வு பிறர்நலம் உள்ளுதற்கிடஞ்செய்யும்.

(வி-ம்.) பிரிவாற்றது தலைவி வருந்துவதறிந்து தோழி, தலைமகன் கூட்டம் விரும்பி வருந்துவதாக உட்கொண்டு வேறு கூற, தலைவி அதனை மறுத்துச் சுரத்தின்கண் அவன் எய்தும் இடர் நினைந்துவருந்துதல் தெரித்தாள். தன்னலங் கருதாது தலைவன் நலங்கருதுதல் புலப்படுத்திற்று இச் செய்யுள். "மரையா மரல் கவர"1 வென்னுங்கலியினும் இது வரும். தோழி, காம வேட்கையை மிகுவிங்குங் காமனையும் குயிலையும் நிலவையும் பெண் பிறவியையும் வெறுத்துக் காமனை மீண்டும் உயிர்ப்பித்த சிவபிரானயும், குயில் முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரித்து வளர்த்து விட்ட காக்கையையும், விழுங்கிய நிலவை மீண்டும் உமிழ்ந்த அரவையும், ஈன்று வளர்த்த தாயையும் பழித்துக் கூறினமையின் தலைவி, ‘பிழைத்ததென்?' என்றாள். ‘என்' னென்றது ‘கற்றதனா லாய பயனென்கொல்' என்புழிப் போல யாதுமின்மை யுணர்த்திற்று. இது, தலைவன் சென்ற சுரத் தருமை நினைந்து தலைவி வருந்தியது. இவை ஒன்பது பாட்டானும், காமம் பிரிந்துள்ளும் முறைகளால் மாட்சிமைப்படும் இயல்பு விளங்கிற்று.

(10)


1. கலித். 6.


இத்துடன் பதெனெண் கீழ்க்கணக்கில் ஒன்றான, சீன முனிவர்
இயற்றிய நாலடியார், திரு தி. சு. பாலசுந்தரம் பிள்ளையவர்கள் 
(இளவழகனார்) வழங்கிய உரையுடன் முடிவுற்றது



2011/7/8 Venkatram Shrinivas <see...@gmail.com>
<td colspan="2" style="font-family:GIST-TMOTChanaky

Venkatram Shrinivas

unread,
Jul 8, 2011, 3:49:44 PM7/8/11
to மின்தமிழ்
காமநுதலியல் 
 
காமத்துப்பால்

இது காமவின்பத்தின் இயல்பை யுணர்த்தும் பகுதி. அறம்பொருள் இன்பமென்னும் வழக்கால், காமம் இன்பமென்றே கூறப்படுதல் விளங்கும். விளங்கவே, வீடென்பது இன்பத்தின் வேறென்றுணரப்படும். அஃது, இன்ப துன்ப மற்ற அமைதி நிலையென்று கொள்க. அந்நிலையையெய்துங்கால் அஃது இவ்வின்பத்தினுஞ் சிறப்புடையதாய் விளங்கலின், அறம் பொருளின்ப மென்னும் இம் மூவகை உறுதிப்பொருளினும் உயர்வுடையதாய் இவற்றின் விடுதலையேயாம். ஆதலின், துய்த்தற் குரியவாக நூல்களால் உணர்த்தப்படும் பொருள்கள் அறமுதலிய மூன்றுமே யாகலின் காமத்துப்பால் மூன்றாம் பகுதியாக இறுதியில் நின்றதென்க.

40. காமநுதலியல்

‘இன்பத்தின் இயல்பு நுவலும் அதிகாரம்' என்பது பொருள்; இன்பமாவது, பொருள்களின் வாயிலாகப் புலன்களால் நுகர்வதோர் உணர்வு. அதன்கண், ஒருகாலத் தொருபொருளால் ஐம்புலனும் ஒருங்கு நுகருங்காமவின்பம் சிறத்தலின், அதுவே ‘இன்ப' மென் றெடுத்துக்கொள்ளப்பட்டது. அஃது, ஒத்த தலைவனுந் தலைவியும் இயற்கையன்பினால் ஒருவரையொருவர் இன்றியமையாராய்த் தம்முட் கூடுங்கால், அவருள்ளத்துணர்வாய்த் தோன்றுவதோ ருணர்வுநிலை. அந்நிலை மாட்சிமைப்பட்டன்றி அதனினுஞ் சிறந்ததொன்று கைவாராமையின், அது மாட்சிமைப்படும் வாயில்கள் இவ் வதிகாரத்தா னுவலப்படும்.

391 முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.

(பொ-ள்.) முயங்காக்கால் பாயும் பசலை - தலைவியை மருவாவிடின் அவளுடம்பிற் பசலைநிறம். பரவும்; மற்று ஊடி உயங்காக்கால் உப்பு இன்றாம் காமம் - ஆனால் அவள் இடையிடையே ஊடல்கொண்டு உள்ளம் மெலியாவிடின் காமவுணர்வு சுவையில்லாததாகும்; வயங்கு ஓதம் நில்லாதத் திரை அலைக்கும் நீள் கழித் தண்சேர்ப்ப புல்லாப் புலப்பதோர் ஆறு - ஆதலால் விளங்குகின்ற கடலானது ஒரு படியிலும் நில்லாத தன் அலைகளால் அலைத்தெதிர்கின்ற நீண்ட கழியினையுடைய குளிர்ந்த துறைவனே! காமத்திற்கு ஊடிப் புணர்வது ஓர் இனிய நெறியாகும்.

(க-து.) ஊடலுங் கூடலும் காமம் மாட்சிமைப்படுதற்கு ஏது.

(வி-ம்.) பசலையென்றது ஈண்டு ஒளிமழுக்கம். உப்பு. சுவையென்னும் பொருட்டு ஆகுபெயர்; சற்றே குறையினுங் கூடினுஞ் சுவை கெட்டு மற்றளவி னிற்கச் சுவை பயப்பதொரு பொருளாகலின், அவ் வியல்பினரான ஊடற் சுவைக்கு ஈதுரைக்கப்படும். "உப்பமைந் தற்றாற் புலவி"1 என்றார் நாயனாரும்; பிறரும் "உப்பமை காமம்"2 என்பர். அலை எதிர்தலாற் கழிநீர் நிறைந்து உப்புமிக்கு மாட்சிமைப்படுதலின், தலைவன்பாற் குறைகண்டு அதனால் ஒருநிலையினு நில்லாது கடலலைபோற் கொந்தளிக்கும் உள்ளமுடையளான தலைவி, தன்கண் வந்து கூடுகின்ற தலைவனைத் தனதூடலால் எதிர்த்து அவனுணர்வை நீர்மையுஞ் சுவையு மிகுவித்து மாட்சிமைப்படுத்துவ ளென்பது ‘நில்லாத் திரையலைக்கும் நீள்கழி' என்னும் அடைமொழியின் கருத்தாம். ‘ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம், கூடி முயங்கப் பெறின்'3 என்னும் உண்மை இச் செய்யுளான் உணர்த்தப்பட்டது. ‘புலவாப்புல்லுவதோராறு' என்று மாற்றி எதிர் நிரனிறையாகக் கொள்க. தலை மகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகற்கு, முன்னம் வாயில் நேர்ந்த தோழி உவகை மிக்குக் கூறியது. இதனாற் காமம் மாட்சிமைப் படுவதோ ராறு நுவலப்பட்டது.

(1)


1. குறள். 131 : 2.

2. சிந். 1 : 78.

3. குறள். 133 : 10

392 தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந் துணையில்லார்க் - கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

(பொ-ள்.) தம் அமர் காதலர் தார் சூழ் அணி அகலம் விம்ம முயங்கும் துணை இல்லார்க்கு - தம்மால் அன்பு செய்யப்படுங் காதலரது மலர்மாலை யணிந்த அழகிய அகன்ற ஆகத்தைக் கொங்கைகள் பூரிக்க மருவியின்புறுமோர் ஆதரவில்லாத எம்போலும் பிரிந்த மகளிர்க்கு, இம் எனப் பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம் நெய்தல் அறைந்தன்ன நீர்த்து - இம்மென்று மழை பொழிய மேகம் இடித்தொலிக்குந் திசையெல்லாம் சாப்பறை அறைந்தாற் போன்ற தன்மையுடையது.

(க-து.) பிரிவின்கண் அன்புசெய்து இரங்குவார்க்குக் காமம் மாட்சிமைப்படும்.

(வி-ம்.) ‘காதலர்' என்றமையால் தலைவர் தம் மாட்டு அன்பு செய்தலும் பெறப்பட்டது. ‘துணை' யென்றாள், தலைவன் றொடர் பொன்றே தம் வாழ்க்கைக்குத் துணையல்லது பிறிதன்றென்றற்கு. இம்மென வென்பது ஒலிக்குறிப்பு; அதனை ஈண்டுக் கிளர்ந்தோதினார், பருவங்கருதினமையின். அஃதொன்றன்றி வேறியாதும் அவள் செவியகம் புகாமையின். "முடங்கிறைச் சொரிதரு மாத்திரள் அருவி, இன்பல் இமிழ்இசை ஓர்ப்பனள் கிடந்தோள், அஞ்செவி"1 யென்றார் பிறரும். எல்லாமென்பது தொறுப்பொருளதாகலின் ஒருமையின் முடிந்தது. சாதலன்ன பிரிவென்பவாகலின்2 ‘நெய்த லறைந்தன்ன' வென்றார். இது, பருவங்கண்டு ஆற்றாளாய்த் தலைவி தன்னுட்கலுழ்ந்து கூறியது.

(2)


1. முல்லைப். 87 : 9

2. அகநா. 339.

393கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

(பொ-ள்.) கம்மம் செய் மாக்கள் கருவி ஒடுக்கிய மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள். - கம்மத்தொழில் செய்கின்ற மக்கள் தொழிலை நிறுத்தித்தம் கருவிகளை ஏறக்கட்டிச் சென்ற மயங்கஞ் செய்யும் இம் மாலைப்போதில் மலர்களை ஆராய்ந்து மாலை தொடுப்பவள், கைம்மாலை இட்டுக்கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு இம் மாலை என்செய்வதென்று - நின் பிரிவு கேட்டுத் தனது கையிலிருந்த மாலையை நழுவவிட்டுத் தலைவராகிய துணையைப் பிரிந்த மகளிர்க்கு இந்த மலர்மாலை என்ன பயன் தருவதென்று சொல்லி அழுவாளாயினள்.

(க-து.) பிரிவினாற் காதலருள்ளம் மென்மையடையும்.

(வி-ம்.) கம்மமென்பது தொழில். வேலை நிறுத்தினாரென்றற்குக் கருவி யொடுக்கினா றென்றார். கம்மியருந் தந்தொழில் விடுத்துத் தம் இல்லஞ் செல்லும் மாலையென்றமையால், தலைவனுந் தான் வினைமேற் சேறலை விடுத்து இல்லந் தங்குதல் வேண்டுமென்னுங் குறிப்புப் பெறப்பட்டது. காதலர்க்கு மயக்கஞ் செய்யும் மாலையாகலின்1, ‘மம்மர்கொள் மாலை' யெனப்பட்டது. என்று சொல்லியது தானே கூறிக்கொண்டது. இது, தலைமகள் செலவு உடன்படாமையைத் தலைமகற்குத் தோழி கூறியது. (3)


1. திருக். 345.

394செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.

(பொ-ள்.) செல் சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்ட நீர் மெல் விரல் ஊழ் தெறியா விம்மி - கதிரவன் மறையும் மாலைப்போது நோக்கிச் சிதறிய செவ்வரி பரந்த கண்கள் ஆற்றாமையால் நிறைத்த நீரைத் தனது மெல்லிய விரலால் முறையே எடுத்தெறிந்துகொண்டு அழுது, மெல்விரலின் நாள் வைத்து நம் குற்றம் எண்ணுங்கொல் அந்தோ தன் தோள் வைத்து அணைமேல் கிடந்து - தன்கையே தலையணையாகப் படுக்கையின்மேல் ஒருக்கணித்துக் கிடந்து மெலிந்துபோன தன் விரல்களினால் பிரிந்த நாளைக் கணக்கிட்டுக் காலத்தில் இல்லஞ் சேராத நமது குற்றத்தை நினைத்து, ஆ, இந்நேரம் நம் துணைவி வருந்துமோ?

(க-து.) பிரிவு அருளிரக்கத்தை உண்டாக்கும்.

(வி-ம்.) செல்சுடர் அன்மொழித் தொகையாய் மாலைப் போதாயிற்று, கண்ணிறைநீர், இடையிட்டுத் துளி கொள்ளலால், ‘ஊழ் தெறியா' என்றார். ‘சுடர் நோக்கிக் கிடந்து தெரியா விம்மி நாள்வைத்து எண்ணுங்கொல்' என்று கொள்க. இது வினை முற்றி மீளுந் தலைமகன் இரங்கித் தன்னுள் கூறியது. "நாள் எண் நீர்மையின் நிலனுங் குழியும், விரலிட்டறவே"1 என்றதனால், பிரிந்த மகளிர் நாளெண்ணி வருந்துதல் பெறப்படும். (4)


1. குறுந். 46.

395கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; -பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோட்டிய வில்வாக் கறிந்து.

(பொ-ள்.) கண்கயல் என்னும் கருத்தினால் காதலி பின்சென்றது அம்ம சிறுசிரல் - கண்களைக் கயல்மீன் என்று கருதிய கருத்தினால் அதனைக் குத்தித் தின்னும் பொருட்டு ஆ! நம் காதலியின் பின்னே சென்றது சிச்சிலி என்னுஞ் சிறிய மீன்குத்திப் பறவை; பின்சென்று ஊக்கியெழுந்தும் எறிகல்லா ஒண் புருவம் கோட்டிய வில்வாக்கு அறிந்து - ஆனால், அவ்வாறு பின்சென்றும் குத்துதற்கு முனைந்தும் குத்தாதாயிற்று அவளது ஒள்ளிய புருவம் வளைந்த வில்லின் வளை வென்றறிந் தென்க.

(க-து.) நலம் பாராட்டும் அன்பினால் காமம் மாடசிமைப்படும்.

(வி-ம்.) தலைவியின் விழியால் அழிவுற்று மயங்கினனாதலின் இங்ஙனம் விழி நினைந்து நலம் பாராட்டினான். அம்ம : வியப்பு, ஊக்கியெழுதல்: ஒரு சொல். எறிகலா வென்பது செய்யுளின்ப நோக்கி ஒற்று மிக்கது. இது, தலைமகன் தன் தலைவியின் நலத்தைப் பாங்கற்கு வியந்து கூறியது.

396 அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ, -அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப்பின் வாங்கும் அடி.

(பொ-ள்.) அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம்மருங்கிற்கு - செந்நிறம் பொருந்திய ஆம்பல் மலரைப்போல நறுமணத்தோடு விளங்கும் வாயையும் அழகிய இடையையுமுடைய நம் புதல்விக்கு, அன்னோ - ஆ, அரக்கு ஆர்ந்த பஞ்சிகொண்டு ஊட்டினும் பையென பையென என்று அஞ்சிப் பின்வாங்கும் அடி பரல் கானம் ஆற்றின கொல்லோ - அழகுக்காகச் செந்நிற மிக்க செம்பஞ்சிக் குழம்பைத் தடவினாலும் ‘மெதுவாக, மெதுவாக' வென்று அஞ்சிக் கூறிப் பின் இழுத்துக்கொள்ளும் அத்துணை மெல்லிய பாதங்கள் தலைவனோடு உடன்போக்கிற் பிரிந்த இப்போது பரற்கற்களையுடைய கானத்திற் செல்லப் பொறுத்தனவோ?

(க-து.) எத்துணை இன்னலையுந் தலைவனுடன் தாங்குதலாற் காதல் பின்னும் மாட்சிமைப்படும்.

(வி-ம்.) அரக்காம்பல், செவ்வாம்பல்; நாறு மென்றதனால் மணமுங் கொள்க. "ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத் , தாமரைச் செவ்வாய்"1 யென்றார் பிறரும். மருங்கு; ஆகுபெயர். 2‘மருங்கிற்கு அடி கானம் ஆற்றினவோ' என்க. செல்லவென ஒரு சொல் வருவிக்க. இது, செவிலித்தாய் தன் மகள் உடன்போக்கிற் பிரிந்து சென்ற சுரத்தருமை நினைந்து இரங்கியது.

(6)


1. திருக்கோ. 25.

2. சிலப், 4, 73, 4,

397 ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேற்
கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து.

(பொ-ள்.) ஓலைக் கணக்கர் ஒலி அடங்குபுன் செக்கர் மாலைப்பொழுதில் மணந்தார் பிரிவு உள்ளி - ஏடுகளிற் கணக்கெழுதுங் கணக்கரது அலுவல் தொடர்பான ஆரவாரம் அடங்குகின்ற புல்லிய சிவந்த அந்திப்பொழுதில், தலைவி தன்னை மணந்த கணவரது பிரிவை நினைந்து, மாலைபரிந்திட்டு அழுதாள் வன முலைமேல் கோலம்செய் சாந்தம் திமிர்ந்து - தான் சூடியிருந்த மலர் மாலையை அறுத்தெறிந்து தன் அழகிய கொங்கையின்மேல் தொய்யிலெழுதி அழகு செய்திருந்த சந்தனத்தையும் கலைத்துதிர்த்து அழுவாளாயினள்.

(க-து.) பிரிவுள்ளி இரங்கும் அன்பினால் உடலும் உயிருங் குழைந்து பயனுறுதலையுடைய செவ்வியைப்பெறும்.

(வி-ம்.) ஒலி, கணக்குத் தீர்த்தலும் அதுபற்றிப் பேசுதலுமான ஆரவாரம். ஒலியடங்குதல், வேலையோய்தல், இக்கருத்து முன்னும் வந்தது.1 செக்கரென்றது, அந்திவானத்தின் செவ்வொளியை நினைந்து, கோலஞ் செய்து

மாலை சூடியிருந்தமையால் பிரிவு மேல் நிகழ விருப்பதெனக் கொள்க. திமிர்தல், ஈண்டுத் தேய்த்துதிர்த்தல், பிரிவாற்றாத தலைமகளின் நிலைமையைத் தோழி, தலைமகன் கேட்பத் தன்னுள் இரங்கிக் கூறியது.

(7)


1. நாலடி. 40 : 3.

398 கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி ; - சுடர்த்தொடீஇ!
பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.

(பொ-ள்.) கடக்க அரு கானத்துக் காளை பின் நாளை நடக்கவும் வல்லையோ என்றி - வன்மையுடையாருங் கடந்து செல்லுதற் கருமையான காட்டின்கண் காளையாகிய தலைவன் பின்னே நாளை நீ உடன்போக்கில் நடந்து போகவும் வல்லமையுடையையோ என்று கூறுகின்றனை; சுடர்த் தொடீஇ - ஒளி மிக்க வளைய லணிந்த தோழி!, பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே கற்றான் அஃது ஊரும் ஆறு - பெருமையிற் சிறந்த குதிரையொன்றினைப் பெற்றா னொருவன் அப்பொழுதே அதனை ஏறி ஊரு நெறியைக் கற்றவனாவன்.

(க-து.) ஒருமைப்பட்ட காதலன்பினால் உள்ளம் ஆழ்ந்து ஆற்றலுடைய தாகின்றது.

(வி-ம்.) வல்லையோ என்றது, தலைவியின் மென்மை கருதி. உவமையால், கருத்துடையானொருவன் ஒரு நிலையை எய்தினால் அதற்கான ஆற்றல்கள் அவன்கண் உடனே சென்றடையும் என்பது பெறப்படும். தலைவி தனது மெய்யன்பினை இவ்வாறு புலப்படுத்தினாள். தெளிவுபற்றிக் கற்றான் என இறந்த காலத்தான் நின்றது; இதனை "இயற்கையுந் தெளிவுங் கிளக்குங்காலை"1 யென்பதனாற் கொள்க. இஃது, உடன்போக்கிற் கிசைந்த தலைவி தோழிக்குக் கூறியது.

(8)


1. தொல். வினை. 48.

399 முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
தீம்பாவை செய்த குறி.

(பொ-ள்.) முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும் இலக்கணம் யாதும் அறியேன் - நேற்று என்மகள் தன்னுடைய முலைக்காம்பும் முத்துவடமும் அழுந்தும்படி என் உடம்பு முழுமையும் அணைத்துக்கொண்ட உண்மையை யான் சிறிதும் அறியாமற் போனேன்; கலைக்கணம் வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும் என் தீம்பாவை செய்த குறி - மான்கூட்டங்கள் வேங்கைக்கு அஞசிச்சிதறுங்காட்டு நெறியில் இன்று பிரிந்து செல்லுதற்குப் போலும் அழகிய பாவை போல்வாளான என்மகள் அவ்வாறு செய்த அடையாளம்!

(க-து.) தாயினன்பினையும் மறக்கும் ஆழ்ந்த காதலன்பினால் காமம் இன்பப்பேறுடைய தாகின்றது.

(வி-ம்.) முத்து: ஆகுபெயர், இலக்கணம், ஈண்டு இயல்பினையென்னும் பொருட்டு. தன்மாட்டு வைத்த அன்பினால் மகள் இவ்வாறு குறிசெய்த இயல்பினையென்க. இவ்வாறு இயல்பினை நுவலலின் அறிந்திலேன் எனற்பாலது, அறியேன் என நிகழ்வினின்றது. "இயற்கையுந் தெளிவு" மென்புழி ‘இயற்கை' யென்பதனால்1 இது கொள்ளப்படும். கலை, மானென்னும் பொதுமையின் வந்தது. செலிய : எச்சம் . இது, மகட்போக்கிய தாய் வருந்திக் கூறியது.

(9)


1. தொல். வினை 48.

400கண்மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி.

(பொ-ள்.) கண் மூன்று உடையானும் காக்கையும் பைஅரவும் என் ஈன்ற யாயும் பிழைத்தது என் - கண்கள் மூன்றுடைய சிவபிரானும் காக்கையும் படத்தையுடைய இராகுவென்னும் பாம்பும் என்னை ஈன்று வளர்த்த தாயும் என்மாட்டுப் பிழைசெய்தது யாதிருக்கின்றது; பொன் ஈன்றகோங்கு அரும்பு அன்ன முலையாய் - பொன் போலும் சுணங்கினை மேலெழச் செய்த கோங்கின் அரும்பு போன்ற கொங்கைகளையுடைய தோழீ!, பொருள் வயின் பாங்கனார் சென்ற நெறி - என் கவற்சிக்கு ஏது, பொருள் காரணமாக நந் தலைவர் பிரிந்து சென்ற கொடிய காட்டு நெறியினது கடுமையேயாகும்.

(க-து.) ஆழ்ந்த காதலுணர்வு பிறர்நலம் உள்ளுதற்கிடஞ்செய்யும்.

(வி-ம்.) பிரிவாற்றது தலைவி வருந்துவதறிந்து தோழி, தலைமகன் கூட்டம் விரும்பி வருந்துவதாக உட்கொண்டு வேறு கூற, தலைவி அதனை மறுத்துச் சுரத்தின்கண் அவன் எய்தும் இடர் நினைந்துவருந்துதல் தெரித்தாள். தன்னலங் கருதாது தலைவன் நலங்கருதுதல் புலப்படுத்திற்று இச் செய்யுள். "மரையா மரல் கவர"1 வென்னுங்கலியினும் இது வரும். தோழி, காம வேட்கையை மிகுவிங்குங் காமனையும் குயிலையும் நிலவையும் பெண் பிறவியையும் வெறுத்துக் காமனை மீண்டும் உயிர்ப்பித்த சிவபிரானயும், குயில் முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரித்து வளர்த்து விட்ட காக்கையையும், விழுங்கிய நிலவை மீண்டும் உமிழ்ந்த அரவையும், ஈன்று வளர்த்த தாயையும் பழித்துக் கூறினமையின் தலைவி, ‘பிழைத்ததென்?' என்றாள். ‘என்' னென்றது ‘கற்றதனா லாய பயனென்கொல்' என்புழிப் போல யாதுமின்மை யுணர்த்திற்று. இது, தலைவன் சென்ற சுரத் தருமை நினைந்து தலைவி வருந்தியது. இவை ஒன்பது பாட்டானும், காமம் பிரிந்துள்ளும் முறைகளால் மாட்சிமைப்படும் இயல்பு விளங்கிற்று.

(10)


1. கலித். 6.


இத்துடன் பதெனெண் கீழ்க்கணக்கில் ஒன்றான, சீன முனிவர்
இயற்றிய நாலடியார், திரு தி. சு. பாலசுந்தரம் பிள்ளையவர்கள் 
(இளவழகனார்) வழங்கிய உரையுடன் முடிவுற்றது



2011/7/8 Venkatram Shrinivas <see...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages