ஆன்மாவும் உடம்பின் கண்ணதாகிய சாதியும்.

176 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
May 25, 2015, 3:34:19 AM5/25/15
to mintamil
நண்பர் திரு மோகனரங்கன் “தினம் ஒரு திவ்விய நாமம்” இழையில் எழுதியிருந்த
ஒரு சொற்றொடரையும் அதற்கு என்னுடைய பதிலையும் பிரித்து இங்கு
இட்டுள்ளேன். (அந்த இழை அதன் போக்கில் திசைமாறாது தொடரட்டும்)

நண்பர்கள் 1.ஆன்மா 2.உடல் 3.அவற்றிற்கான தொடர்பு 4.ஆன்மாவையும் உடலையும்
வேறுபடுத்திப் பிணமாகப்போகும் உடல் சார்ந்தது சாதி என்று கூறுவது போன்ற
கருத்துக்கள் குறித்து தங்கள் எண்ணங்களை இங்கு பதிவிடவேண்டுகிறேன்.


On 5/22/15, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
*சிவஞான போத மாபாடியத்தில் ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள் உறுதிபடக்
> கூறும் கருத்து என்னவெனில் -- *

1.சிவதீக்கை ஆன்மாவுக்கேஅன்றி, வைதிகச் சடங்கு போல உடம்பு முதலியவற்றிற்கு அன்று

2.*அத்தீக்கையால் ஆன்மாவின் கண்ணதாகிய பசுத்துவம் நீங்கியதன்றி உடம்பின்
கண்ணதாகிய சாதி நீங்காமையானும்,*


:))
சாதிக்கோட்பாடு மனிதசமுதாயத்தை எவ்வளவு தூரம் ஆட்கொண்டிருந்தது என்பது
புலனாகிறது. பிறப்பால் வேறுபாடு கருதக்கூடாது என்று மாத்தியோசிக்க
ஆரம்பித்தவர்களையும் தங்களுக்குத்தாங்களே மனதைச் சமாதானம்செய்யக்
காரணங்களைத் தேடிக்கண்டுகொள்ளவும் வைத்திருக்கிறது.

ஆன்மாவுக்குச் சாதியில்லை. ஆனால் உடலுக்கு சாதியுண்டு என்று கூறும்போது
“ஆன்மா”வைக் கண்டுபிடித்து அறிந்துசொன்னவனை ஐயப்பட்டுக் கடிவது சரியானது
எனத்தோன்றுகிறது

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Seshadri Sridharan

unread,
May 25, 2015, 4:04:06 AM5/25/15
to mintamil
2015-05-25 13:04 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
நண்பர்கள் 1.ஆன்மா 2.உடல் 3.அவற்றிற்கான தொடர்பு 4.ஆன்மாவையும் உடலையும்
வேறுபடுத்திப் பிணமாகப்போகும் உடல் சார்ந்தது சாதி என்று கூறுவது போன்ற
கருத்துக்கள் குறித்து தங்கள் எண்ணங்களை இங்கு பதிவிடவேண்டுகிறேன்.
 
சாதி உடம்பியல் சார்ந்த குழு மனப்பான்மையின் விளைவு. உடம்பு மறையுங்கால் சாதியையும் உடலோடு மறையும். ஏனெனில் தன்னை ஒரு குழுவோடு ஒன்றுபடுத்தி அடையாளப்படுத்தும் நிலைப்பாடு அங்கு இல்லாமையே. ஆதன் எனும் ஆன்மா ஒருமை அது உடம்பியல் உளத்தியல் சாராதது தனித்தது (unique). உடல் ஆதனோடு நேரடித் தொடர்பு கொண்டிருக்கவில்லை. உள்ளத்தின் ஆழ்நிலை தான் ஆதனோடு தொடர்பு உடையது.

கைத்தொழுவான் 

Mohanarangan V Srirangam

unread,
May 25, 2015, 4:05:42 AM5/25/15
to min tamil
ஐயா! நீங்கள் எடுத்துக் காட்டும் விதத்திலும், மேற்கோள்களை வெட்டி ஒட்டி என் பெயரையும் வாளா இணைத்துப் பொட்டிருப்பதையும் பார்த்தேன். அந்தக் கருத்துகள் சிவஞான போத மாபாடியத்தில் ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள் எழுதியிருப்பதை அவ்வன்னமே தந்துள்ளேன். பின் எப்படி அது நான் கூறிய கருத்தாகும் என்று எனக்குப் புரியவில்லை. எவ்வளவு தெளிவுபட எழுதினாலும், மிகுந்த சிரமம் எடுத்து மேற்கோள் பகுதி இன்னது என்று தெளிவுபடக் காட்டினாலும், அதை மீண்டும் மீண்டும் மயங்குறச் செய்யும் விதத்தில் வெட்டி ஒட்டி இட்டு மலைவுறச் செய்தல் எற்றுக்கு எனப் புரியவில்லை. தாங்கள் உள் நோக்கம் கொண்டு செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை தங்கள்பால் உண்டு. ஆனாலும் இது கொஞ்சம் அலுப்புறச் செய்கிறது. மன்னிக்கவும்.

***




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
May 25, 2015, 4:18:57 AM5/25/15
to மின்தமிழ்
ஐயா இங்கே வெட்டுவதில் இருபாலர் ஒருசிலர் கொலை வெறியோடு கையில் கிடைத்ததையெல்லாம் வெட்டுவார்கள்.  இந்த ஐயா சைவர்போல் வெட்டத்தெரியாமல் வெட்டியிருப்பார் பொருத்தருளுக
பல்களை

சொ. வினைதீர்த்தான்

unread,
May 25, 2015, 6:07:34 AM5/25/15
to mint...@googlegroups.com
--

சொ. வினைதீர்த்தான்

unread,
May 25, 2015, 6:20:44 AM5/25/15
to mint...@googlegroups.com
ரெபரன்ஸிற்க்காக தங்கள் பெயர் குறிப்பிட்டிருந்தேன்.

*சிவஞான போத மாபாடியத்தில் ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள் உறுதிபடக்கூறும்
கருத்து என்னவெனில் -- * என்ற தங்களுடைய சொற்களை இட்டு இக்கருத்து
சிவஞனயோகிகளின் கருத்து என்று காட்டியுள்ளேன். தங்கள் கருத்து என்று
எழுதவில்லை.
இருந்தும் மயக்குறும் விதத்தில் எழுதியுள்ளதாக தங்களை எண்ணவைத்தமைக்கும்
அலுப்புறச்செய்தமைக்கும் பொருத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆன்மா. உடல், அவை சாரும் சாதி குறித்துத் தங்கள் கருத்து யாதென்று எழுத
விருப்பமென்றால் அறியத் தாருங்கள்.
நன்றி.
சொ.வினைதீர்த்தான்.

Suba.T.

unread,
May 25, 2015, 7:25:19 AM5/25/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-25 10:05 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஐயா! நீங்கள் எடுத்துக் காட்டும் விதத்திலும், மேற்கோள்களை வெட்டி ஒட்டி என் பெயரையும் வாளா இணைத்துப் பொட்டிருப்பதையும் பார்த்தேன். அந்தக் கருத்துகள் சிவஞான போத மாபாடியத்தில் ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள் எழுதியிருப்பதை அவ்வன்னமே தந்துள்ளேன். பின் எப்படி அது நான் கூறிய கருத்தாகும் என்று எனக்குப் புரியவில்லை. எவ்வளவு தெளிவுபட எழுதினாலும், மிகுந்த சிரமம் எடுத்து மேற்கோள் பகுதி இன்னது என்று தெளிவுபடக் காட்டினாலும், அதை மீண்டும் மீண்டும் மயங்குறச் செய்யும் விதத்தில் வெட்டி ஒட்டி இட்டு மலைவுறச் செய்தல் எற்றுக்கு எனப் புரியவில்லை. தாங்கள் உள் நோக்கம் கொண்டு செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை தங்கள்பால் உண்டு. ஆனாலும் இது கொஞ்சம் அலுப்புறச் செய்கிறது. மன்னிக்கவும்.

​திரு.வினைதீர்த்தான் அவர்களின் பதிவை வாசிப்பவர்களுக்கு அது மாதவ சிவஞான யோகிகள் கருத்தையே மேற்கோள் காட்டுகின்றார் என  நன்கு புரிகின்றது.
தாங்கள் அலுத்துக் கொள்வது தேவையற்றது என்பது என் கருத்து.

சுபா





--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba.T.

unread,
May 25, 2015, 7:35:18 AM5/25/15
to மின்தமிழ், Subashini Tremmel
​திரு.சொ.வினைதீர்த்தான் ​ அவர்களே,

இந்த இழையை வரவேற்கிறேன். 

*அத்தீக்கையால் ஆன்மாவின் கண்ணதாகிய பசுத்துவம் நீங்கியதன்றி உடம்பின்
கண்ணதாகிய சாதி நீங்காமையானும்,*​

​என மாதவ சிவஞான யோகிகளே கூறியிருந்தாலும் நமக்கு யோசிக்கும் போது ​
 
​இது ஏற்புடைய ஒரு கருத்தன்று என மிக நன்கு புலப்படுகின்றது.
சாதி வேறுபாடு எனும் கருத்து அக்காலகட்டத்தில் தெய்வீக சிந்தனியுடையோரையும் தத்துவங்களை அலசி ஆராய்ந்தோரையும் கூட விட்டு வைக்கவில்லை என்பதை இவ்வகை உதாரணங்களின் வழி காணமுடிகின்றது.

ஒரு இக்கட்டில் மாட்டிக் கொள்ளும் போதோ, இரத்தம் தேவைப்படும் போதோ, போர்க் காலங்களிலோ எப்போதெல்லாம் உயிருக்கு ஆபத்து வருகின்ரது என நின்னைக்கும் போதெல்லாம் சாதி உணர்வு என்பது இல்லாமல் போய் மனித குலம் எல்லாமே ஒன்று என நினைக்கும் 'தமிழ்மனம்' எல்லா சௌகரியங்களும் அமைந்து ஒரு நிலைத்தன்மையோடு வாழும் போது பிறரை கீழ் தள்ளி தன்னை முன்னிலைப்படுத்த உயர்வு தாழ்வினை பார்ப்பதைக் கடைபிடிக்க விரும்புகின்றது.

பல வேளைகளில் மிக முரண்பாடான சிந்தனைகளை சமயவாதிகள் வைப்பதை  நான் காண்கின்றேன். அந்த  ரீதியில் பார்க்கும் போது
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

என்ற ஒரு வழக்கத்தைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் செய்து வரவேண்டும் என்பது மட்டும் மிகத்தெளிவு. ஒருவர் சொல்லிவிட்டமைக்காக ஒரு கருத்து சரியானதாகி விடாது. தேவையானவற்றை எடுத்துக் கொண்டும் தேவையற்ற, மாசு படிந்த கருத்துக்களை ஒதுக்கி விட்டும் செல்வதே தத்துவ சிந்தனை வளர்ச்சி தொடர உதவும்.

சுபா



அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
May 25, 2015, 7:44:23 AM5/25/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-25 9:34 GMT+02:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:


2.*அத்தீக்கையால் ஆன்மாவின் கண்ணதாகிய பசுத்துவம் நீங்கியதன்றி உடம்பின்
கண்ணதாகிய சாதி நீங்காமையானும்,*

​நான் பதிய நினைத்து மறந்த ஒரு விஷயம்..
உடம்பின் கண்ணதாகிய சாதி..  
சாதி அமைப்பு என்பதை எவ்வளவு உயர்வாக இங்கே சுட்டிக் காட்டுகின்றார் என்பதை உணர முடிகின்றது. 

அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் தோன்றிய திதியே ஒடுங்கி,மலத்து உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்!
என்னும் சிவஞானபோத முதல் சூத்திரத்திலிருந்து வழுவிச் செல்லும் விளக்கமாகத் தான் இந்த உதாரணத்தைக் காண்கின்றேன். சாதி அமைப்பு அவ்வளவு இருக்கமான ஒரு கட்டமைப்பு உருவாக்கி இருந்த காரணத்தினால் எழுந்த ஒரு விளக்கம் இது என்பதே என் கருத்து.

சுபா



 

:))
சாதிக்கோட்பாடு மனிதசமுதாயத்தை எவ்வளவு தூரம் ஆட்கொண்டிருந்தது என்பது
புலனாகிறது. பிறப்பால் வேறுபாடு கருதக்கூடாது என்று மாத்தியோசிக்க
ஆரம்பித்தவர்களையும் தங்களுக்குத்தாங்களே மனதைச் சமாதானம்செய்யக்
காரணங்களைத் தேடிக்கண்டுகொள்ளவும் வைத்திருக்கிறது.

ஆன்மாவுக்குச் சாதியில்லை. ஆனால் உடலுக்கு சாதியுண்டு என்று கூறும்போது
“ஆன்மா”வைக் கண்டுபிடித்து அறிந்துசொன்னவனை ஐயப்பட்டுக் கடிவது சரியானது
எனத்தோன்றுகிறது

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Mohanarangan V Srirangam

unread,
May 25, 2015, 8:31:32 AM5/25/15
to min tamil
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ஐயா. என் வார்த்தைகள் தங்களை நோகச் செய்திருந்தால் மன்னித்தருளுங்கள்.


***

Mohanarangan V Srirangam

unread,
May 25, 2015, 8:32:24 AM5/25/15
to min tamil, Subashini Tremmel
கூடுதல் தெளிவாக்கத்திற்கு நன்றி சுபாஷிணி.

சொ. வினைதீர்த்தான்

unread,
May 25, 2015, 10:44:28 AM5/25/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel
On 5/25/15, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
> கூடுதல் தெளிவாக்கத்திற்கு நன்றி சுபாஷிணி.

புரிதலுக்கு மிக்க நன்றி திருமிகு சுபா, திரு மோகனரங்கன்.

சொ. வினைதீர்த்தான்

unread,
May 25, 2015, 11:22:46 AM5/25/15
to mint...@googlegroups.com
On 5/25/15, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
> 2015-05-25 13:04 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
நண்பர்கள் 1.ஆன்மா 2.உடல் 3.அவற்றிற்கான தொடர்பு 4.ஆன்மாவையும் உடலையும்
வேறுபடுத்திப் பிணமாகப்போகும் உடல் சார்ந்தது சாதி என்று கூறுவது போன்ற
கருத்துக்கள் குறித்து தங்கள் எண்ணங்களை இங்கு பதிவிடவேண்டுகிறேன்.


//சாதி உடம்பியல் சார்ந்த குழு மனப்பான்மையின் விளைவு. உடம்பு
மறையுங்கால் சாதியையும் உடலோடு மறையும். ஏனெனில் தன்னை ஒரு குழுவோடு
ஒன்றுபடுத்தி அடையாளப்படுத்தும் நிலைப்பாடு அங்கு இல்லாமையே. ஆதன் எனும்
ஆன்மா ஒருமை. அது உடம்பியல் உளத்தியல் சாராதது தனித்தது (unique). உடல்
ஆதனோடு நேரடித் தொடர்பு கொண்டிருக்கவில்லை. உள்ளத்தின் ஆழ்நிலை தான்
ஆதனோடு தொடர்பு
உடையது.//

கருத்திட்டமைக்கு நன்றி திரு சேசாத்ரி. உடம்பு மறையும்போது உயிர்
மறைகிறது. இரண்டும் இல்லாவிடில் உள்ளம் என்று ஒன்று இல்லை. அது உணர்ந்த
ஆழ்நிலையும் இல்லைதானே.
பிரிக்க முடியாத உடல்,உள்ளம்,உணர்வு ஆகிய மூன்றில் ஒன்றை மட்டும்
பிரித்து அது சாதி சார்ந்தது என்று கூறமுடியுமா? ஒன்று மூன்றும் சாதி
சார்ந்ததாக இருக்கவேண்டும் அல்லது மூன்றுமே சாதி சாராததாக
இருக்கமுடியும்.

ஒருவரை பிறப்பால் தாழ்த்துவது முறையன்று என்ற எண்ணம் தோன்றியபோது உடல்
வேறு,ஆன்மா வேறு என்ற கோட்பாடு முகிழ்த்திருக்கவேண்டும். ஆன்மாவுக்கு
அழிவில்லை; சாதியில்லை; வினைக்கேற்ப இழிந்த குழுவின் உடலில்
புகுந்துகொள்கிறது என்றெல்லாம் பொருந்தாத சமரசங்கள்
செய்துகொண்டுள்ளார்கள்.

திருமிகு சுபா அவர்கள் “எல்லா சௌகரியங்களும் அமைந்து ஒரு நிலைத்தன்மையோடு
வாழும் போது பிறரை கீழ் தள்ளி தன்னை முன்னிலைப்படுத்த உயர்வு தாழ்வினை
பார்ப்பதைக் கடைபிடிக்க விரும்புகின்றது மனிதமனம்” என்று அருமையாக
எழுதியுள்ளபடி தங்கள் நிலையினைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிகள்
காலங்காலமாகத் தொடர்ந்துள்ளது என்ற எண்ணம் எழுகிறது.

தாங்கள் ஆழச் சிந்திப்பவர்கள். இது குறித்து தங்கள் எண்ணங்களைப்
பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Seshadri Sridharan

unread,
May 25, 2015, 10:04:36 PM5/25/15
to mintamil
//உடம்பு மறையும்போது உயிர் மறைகிறது. இரண்டும் இல்லாவிடில் உள்ளம் என்று ஒன்று இல்லை. அது உணர்ந்தஆழ்நிலையும் இல்லைதானே.பிரிக்க முடியாத உடல்,உள்ளம்,உணர்வு ஆகிய மூன்றில் ஒன்றை மட்டும் பிரித்து அது சாதி சார்ந்தது என்று கூறமுடியுமா? ஒன்று மூன்றும் சாதிசார்ந்ததாக  இருக்கவேண்டும் அல்லது மூன்றுமே சாதி சாராததாக இருக்கமுடியும்//

உடம்பு தான் அழிகிறதே தவிர உள்ளம் அழிவதில்லை அது   தனக்கு உகந்த சூழலில் இன்னொரு உடம்பு கிடைக்கும் வரை பரவெளியில் உழல்கிறது. உள்ளம் உருவமற்றது எனவே அது சாதி என்ற உடலியல் பாகுபாட்டுள் வருவதில்லை ஆழ்நிலை ஆதனும் உருவமற்றது. உள்ளம் சத்துவ ராஜா தம பண்புகளின்  கூட்டுப்பெயர். ஆதன் எனும்  ஆன்மா இம்மூன்று குணங்களும் அற்றது. ஆதலால் உடம்பு தவிர மற்றவற்றை சாதி சாதிசார்ந்ததாக கொள்ளமுடியாது.

தேமொழி

unread,
May 25, 2015, 10:20:52 PM5/25/15
to mint...@googlegroups.com, ssesh...@gmail.com


On Monday, May 25, 2015 at 7:04:36 PM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:
//உடம்பு மறையும்போது உயிர் மறைகிறது. இரண்டும் இல்லாவிடில் உள்ளம் என்று ஒன்று இல்லை. அது உணர்ந்தஆழ்நிலையும் இல்லைதானே.பிரிக்க முடியாத உடல்,உள்ளம்,உணர்வு ஆகிய மூன்றில் ஒன்றை மட்டும் பிரித்து அது சாதி சார்ந்தது என்று கூறமுடியுமா? ஒன்று மூன்றும் சாதிசார்ந்ததாக  இருக்கவேண்டும் அல்லது மூன்றுமே சாதி சாராததாக இருக்கமுடியும்//

உடம்பு தான் அழிகிறதே தவிர உள்ளம் அழிவதில்லை அது   தனக்கு உகந்த சூழலில் இன்னொரு உடம்பு கிடைக்கும் வரை பரவெளியில் உழல்கிறது.

இதையெல்லாம் யார் பார்த்தது?  

இதற்கெல்லாம் என்ன சான்று?

இன்னொரு உடல் தேடினால் அதை தனக்குச் சாதகமான அரசபரம்பரை, செல்வந்தர் வீடு, ஊனமற்ற பிறவி போன்ற தகுதி வாய்ந்த உடலைத் தேர்ந்தெடுக்காத அறியாமையை என்ன சொல்வது?

இதென்ன பி. டி. சாமியின் பேய்க்கதை போல கதைக்கும் தொழில்?

இதையெல்லாம் நம்பி ஏமாறுபவர்களைச் சொல்ல வேண்டும்..

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
May 25, 2015, 10:24:09 PM5/25/15
to மின்தமிழ்

2015-05-26 7:34 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
உடம்பு தான் அழிகிறதே தவிர உள்ளம் அழிவதில்லை

​இருந்தாத்தானே
உயிர் பிரிந்தால் உடல் அழுகி அழிகிறது.  அவ்வாறு சீர்கெட்டுப்போவதற்குமுன் உடலை துப்புரவு செய்யச் சமயங்கள் சில முறைகளை வகை செய்துள்ளனர்.  தமிழ்நாட்டில் தமிழன் இறந்தால் ஆறுவிதங்களில் துப்புரவு செய்வதாகக் குறிப்புள்ளது.  புதைப்பதும் எரிப்பதும் அவற்றுள் அடக்கம்.  புதைப்பவர்கள் கீழ்ச்சாதியினர் என்றும் எரிப்பவர்கள் மேல் சாதியினர் என்றும் மரபு ஏற்படுத்தப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது
பல்களை​

N. Kannan

unread,
May 26, 2015, 4:15:46 AM5/26/15
to மின்தமிழ்
2015-05-26 10:20 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இதையெல்லாம் யார் பார்த்தது?  

இதற்கெல்லாம் என்ன சான்று?

இன்னொரு உடல் தேடினால் அதை தனக்குச் சாதகமான அரசபரம்பரை, செல்வந்தர் வீடு, ஊனமற்ற பிறவி போன்ற தகுதி வாய்ந்த உடலைத் தேர்ந்தெடுக்காத அறியாமையை என்ன சொல்வது?

இதென்ன பி. டி. சாமியின் பேய்க்கதை போல கதைக்கும் தொழில்?

இதையெல்லாம் நம்பி ஏமாறுபவர்களைச் சொல்ல வேண்டும்..

..... 

:-))))

இவையெல்லாமே “இந்தியப் பார்வை” என்பது தெளிவில்லையா? அமெரிக்காவில் பிறக்கும் ஆன்மாவின் சாதி என்ன? இல்லை பின்லாந்து? ஸ்வீடன்? இல்லை அரேபியா?

நா.கண்ணன் 

Suba.T.

unread,
May 26, 2015, 6:23:26 AM5/26/15
to மின்தமிழ், Subashini Tremmel


2015-05-26 4:04 GMT+02:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
​..
 ஆதலால் உடம்பு தவிர மற்றவற்றை சாதி சாதிசார்ந்ததாக கொள்ளமுடியாது.

​ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து.

இந்த கலந்துரையாடலை தமிழகத்து வட்டத்துக்குள் மட்டுமே வைத்துக் கொண்டாலும் கூட..தமிழகத்து தாய் தந்தையர் அற்ற அனாதைக் குழந்தைகளின் உடலுக்கு என்ன சாதி?
இஸ்லாமிய கிருஸ்துவ குழந்தைகளுக்கு என்ன சாதி?

சரி ஒரு குழந்தைபேறு மருத்துவமனை போய் பாருங்க்கள். பிறந்த குழந்தைகள் எல்லாம் சாதி அடையாளம் இல்லாமல் குழந்தை குழந்தைழாகத்தான் தொட்டிலில் கிடக்கும். எப்போது பெற்றோரின் கையில் குழந்தை வருகின்ரதோ அப்போது தொடங்குகின்றது இந்த சாதி அடையாளம்.
இதனைக் கூட புரிந்து கொள்ள முடியாது சாதியை வெறித்தனமாகப் பிடித்துக் கொண்டு .. எனக்கு ஒரு அடையாளம் என்று காட்ட முயற்சி செய்து கொள்வதை என்னவென்று சொல்வது?

சுபா ​
கைத்தொழுவான்  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Banukumar Rajendran

unread,
May 26, 2015, 6:39:45 AM5/26/15
to மின்தமிழ்
2015-05-26 7:50 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, May 25, 2015 at 7:04:36 PM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:
//உடம்பு மறையும்போது உயிர் மறைகிறது. இரண்டும் இல்லாவிடில் உள்ளம் என்று ஒன்று இல்லை. அது உணர்ந்தஆழ்நிலையும் இல்லைதானே.பிரிக்க முடியாத உடல்,உள்ளம்,உணர்வு ஆகிய மூன்றில் ஒன்றை மட்டும் பிரித்து அது சாதி சார்ந்தது என்று கூறமுடியுமா? ஒன்று மூன்றும் சாதிசார்ந்ததாக  இருக்கவேண்டும் அல்லது மூன்றுமே சாதி சாராததாக இருக்கமுடியும்//

உடம்பு தான் அழிகிறதே தவிர உள்ளம் அழிவதில்லை அது   தனக்கு உகந்த சூழலில் இன்னொரு உடம்பு கிடைக்கும் வரை பரவெளியில் உழல்கிறது.

இதையெல்லாம் யார் பார்த்தது?  

இதற்கெல்லாம் என்ன சான்று?

சரியான கேள்விகள்!

ஆன்மா என்பது யாது என்பதை அறிந்துக் கொள்ளாமல் மேற்கொண்டு உரையாடிச் செல்வதில் பயனில்லை.


1. ஆன்மா என்பது என்ன?
2. அது எப்படியிருக்கும்?
3. அதை எவ்வாறு உணர்வது?
4. உணர்ந்தப்பின் அதுதான் ஆன்மா என்று எவ்வாறு உறுதிச் செய்துக் கொள்வது?

தயை செய்து இந்த பொத்தகத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது, அந்த நூலில் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது என்று எழுதவேண்டாம். யான் சார்ந்த சமயத்திலேயே வண்டி, வண்டியாகக் கூறப்பட்டிருக்கிறது. அதில் எதுவும் எனக்கு உடன்படவில்லை.


மிக எளிதாக, விஞ்ஞான ரீதியாக (புரியாத சொற்றொடர்களைப் போட்டுக் குழப்பாமல்) யாராவது விளக்கினால் நல்லது!


இரா.பானுகுமார்





 

இன்னொரு உடல் தேடினால் அதை தனக்குச் சாதகமான அரசபரம்பரை, செல்வந்தர் வீடு, ஊனமற்ற பிறவி போன்ற தகுதி வாய்ந்த உடலைத் தேர்ந்தெடுக்காத அறியாமையை என்ன சொல்வது?

இதென்ன பி. டி. சாமியின் பேய்க்கதை போல கதைக்கும் தொழில்?

இதையெல்லாம் நம்பி ஏமாறுபவர்களைச் சொல்ல வேண்டும்..

..... தேமொழி





 
உள்ளம் உருவமற்றது எனவே அது சாதி என்ற உடலியல் பாகுபாட்டுள் வருவதில்லை ஆழ்நிலை ஆதனும் உருவமற்றது. உள்ளம் சத்துவ ராஜா தம பண்புகளின்  கூட்டுப்பெயர். ஆதன் எனும்  ஆன்மா இம்மூன்று குணங்களும் அற்றது. ஆதலால் உடம்பு தவிர மற்றவற்றை சாதி சாதிசார்ந்ததாக கொள்ளமுடியாது.

கைத்தொழுவான்  

--

Seshadri Sridharan

unread,
May 26, 2015, 6:48:21 AM5/26/15
to mintamil
2015-05-26 15:53 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>
இதனைக் கூட புரிந்து கொள்ள முடியாது சாதியை வெறித்தனமாகப் பிடித்துக் கொண்டு .. எனக்கு ஒரு அடையாளம் என்று காட்ட முயற்சி செய்து கொள்வதை என்னவென்று சொல்வது? - 
சுபா ​

 உடல் சார்ந்து  மனிதர்கள் சாதிச் சாயம் பூசுவது போல் மனதிற்கு சாதி சாயம் பூசமுடியாது என்பது தான் என் கருத்து . மனதில் ஆண் மனம் பெண் மனம் என்ற பகுபாடே கிடையாது ஏனெனில் அது  நுண்ணுனியது. சுபா நீங்கள் என் கருத்துகளை தவறாகப் புரிந்து கொண்டுளீர்கள் என எண்ணுகிறேன்.

Seshadri Sridharan

unread,
May 26, 2015, 7:09:08 AM5/26/15
to mintamil
2015-05-26 7:50 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
உடம்பு தான் அழிகிறதே தவிர உள்ளம் அழிவதில்லை அது   தனக்கு உகந்த சூழலில் இன்னொரு உடம்பு கிடைக்கும் வரை பரவெளியில் உழல்கிறது.
//இன்னொரு உடல் தேடினால் அதை தனக்குச் சாதகமான அரசபரம்பரை, செல்வந்தர் வீடு, ஊனமற்ற பிறவி போன்ற தகுதி வாய்ந்த உடலைத் தேர்ந்தெடுக்காத அறியாமையை என்ன சொல்வது?//

The human mind has three stages: crude, subtle and causal. There are also three states in human existence: wakeful, dream and sleep. The crude mind remains active during the wakeful state and the causal mind remains active during sleep. The causal mind is the repository of infinite knowledge. Whatever saḿskáras we recreate in the wakeful and dream states remain stored in the causal mind. When the causal mind sleeps we call it “death”. Kárańamanasi diirghanidrá marańam [“Long sleep in the causal mind is death”].

After death the disembodied mind floats in the vast space with its unexpressed saḿskáras. Later on, with the cooperation of the mutative principle, the disembodied mind finds a suitable physical base. The memory of its past life remains awake for approximately the first five years of its new life. Although the child remains in a new physical environment, mentally it continues to live the joys and sorrows of its previous life. That is why children sometimes laugh and cry in their sleep, and their mothers often think they are talking with God. In colloquial Bengali this is called deola kát́á. In actual fact this laughter and crying is nothing but the reappearance of past memories. To re-experience past events one does not need the cooperation of the old brain. The newly-born mind has not yet had time to build a close relationship with the new brain. The revival of experiences of past lives is what we call “extra-cerebral memory”, and is principally the task of the causal mind. The child's mind being unacquainted with the outside world and the new-born brain being inexperienced, his or her crude mind does not function much.

The experiences of the crude mind are not reflected in the child's subtle mind. In the case of a child, since the crude experiences are relatively few, the subtle mind remains tranquil. Thus the waves of the causal mind easily surface in the child's subtle mind. As a result, the accumulated experiences of the child's previous life can easily be recollected. As the child's crude mind is not yet mature enough to work externally, the dream experiences are not expressed in the wakeful state.

This extra-cerebral memory begins to fade after five years. The more one advances in age, the more the new environment leaves its impressions in the child's mind. The more a child sees new things before its eyes, the more restless it becomes to know each and every object of this world. Hence the child asks a multitude of questions – it seems there is no end to its inquisitiveness. The more it receives the answers to its questions, the more its mind gets acquainted with the mundane world. The experiences of the crude mind then begin, and get reflected in the dream state. As a result, the vibrations of the causal mind cannot come to the surface any more. Hence, the more the child advances in age, the more it forgets its past life.

Sometimes children can remember their past life even after the age of five. In this case the mind of the new body remains free from environmental influences. That is, the waves of the external world are unable to influence the mind. Such people are called játismara or one who remembers one's past lives. Normally, the extra-cerebral memory of such people remains active up to the age of twelve. If one still remembers one�s past life after that it becomes difficult to survive, because two minds will try to function in one body – the mind of this life and that of the previous one. A single body cannot tolerate the clashes of two minds, hence psycho-physical parallelism is lost leading to eventual death.


Forgetfulness is a providential decree. Usually human beings forget their past lives. Is this forgetfulness a blessing or a curse? It is a blessing because human beings feel burdened by the weight of one life. It would be impossible for them to carry the burden of many lives together.

The human mind is sentimental – full of love, affection, camaraderie, etc. People have a deep attraction to this world; they remain preoccupied throughout their lives with fears and anxieties for the safety of their families. So many problems have to be confronted. The problems of one life alone are enough to make people restless. If they had to face the problems of several lives, they would be unable to lead a natural life. The problems of the past lives, compounded by the strife of the present life, would drive them to the brink of insanity. Secondly, it is difficult for people to be detached from love and attachment for one life. So much effort is required to overcome the bondages of attachment and march towards Parama Puruśa. If the memory of the past lives is revived, the bondage of attachment will tighten its grip, putting a halt to spiritual advancement. One will be caught in the grip of worldly attachment. Thus the decree of merciful providence is, “Let human beings be oblivious of their past lives.”

It is also true that nothing in this universe is lost or destroyed, so the history of a person's hopes and frustrations [of this life] remains stored in their subconscious mind [subtle mind]. Due to restlessness of the crude and subtle minds, the causal mind cannot give expression to its omniscience. But all knowledge, one's entire past history and flashes of one's previous lives, remain stored in sequential order in the causal mind, just like a colourful panorama, one layer representing one life, followed by a gap, followed by another layer representing another life, and so on. That is why the great poet Rabindranath Tagore said, Bhule tháká se to nay bholá [“To remain in oblivion is not to forget completely”]

Suba.T.

unread,
May 26, 2015, 7:12:24 AM5/26/15
to மின்தமிழ், Subashini Tremmel
​'ஆதலால் உடம்பு தவிர மற்றவற்றை சாதி சாதிசார்ந்ததாக கொள்ளமுடியாது.' 
​என நீங்கள் எழுதியதை வாசிக்கையில் உடலுக்கு சாதி உண்டு என்று சொல்வதாகத்தன புரிகின்றது.
அதற்கு மாறானது உங்கள் கருத்தென்றால் எனக்கு அதில் மகிழ்ச்சியே..

சுபா



கைத்தொழுவான் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
May 26, 2015, 7:13:06 AM5/26/15
to மின்தமிழ், Subashini Tremmel
இதனை உங்கள் கருத்தாக ஒரு சம்மரியாகத்  தாருங்கள்.
நீண்ட பதிவுகளை வாசிப்பது அலுப்பு தருகின்றது.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
May 26, 2015, 11:30:08 AM5/26/15
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
On 5/26/15, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
> 2015-05-26 7:34 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
>
>> உடம்பு தான் அழிகிறதே தவிர உள்ளம் அழிவதில்லை
>
>
> ​இருந்தாத்தானே.

:))

சொ. வினைதீர்த்தான்

unread,
May 26, 2015, 11:38:21 AM5/26/15
to mint...@googlegroups.com, தேமொழி
On 5/26/15, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

/இன்னொரு உடல் தேடினால் அதை தனக்குச் சாதகமான அரசபரம்பரை, செல்வந்தர்
வீடு, ஊனமற்ற பிறவி போன்ற தகுதி வாய்ந்த உடலைத் தேர்ந்தெடுக்காத
அறியாமையை என்ன சொல்வது?/

:)) பரந்த வெளியில் மிதந்து அலைந்துகொண்டிருக்கும் ஆன்மாவிற்கு தகுதி
வாய்ந்த உடலைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை போலும்!

சொ. வினைதீர்த்தான்

unread,
May 26, 2015, 11:47:19 AM5/26/15
to mint...@googlegroups.com, தேமொழி, Subashini Tremmel, seshadri sridharan, Banukumar Rajendran
On 5/26/15, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:

//ஆன்மா என்பது யாது என்பதை அறிந்துக் கொள்ளாமல் மேற்கொண்டு உரையாடிச்
செல்வதில் பயனில்லை.

> 1. ஆன்மா என்பது என்ன?
> 2. அது எப்படியிருக்கும்?
> 3. அதை எவ்வாறு உணர்வது?
> 4. உணர்ந்தப்பின் அதுதான் ஆன்மா என்று எவ்வாறு உறுதிச் செய்துக் கொள்வது?
>
> தயை செய்து இந்த பொத்தகத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது, அந்த நூலில் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது என்று எழுதவேண்டாம். யான் சார்ந்த சமயத்திலேயே வண்டி, வண்டியாகக் கூறப்பட்டிருக்கிறது. அதில் எதுவும் எனக்கு உடன்படவில்லை.
>
> மிக எளிதாக, விஞ்ஞான ரீதியாக (புரியாத சொற்றொடர்களைப் போட்டுக் குழப்பாமல்) யாராவது விளக்கினால் நல்லது!////

நன்றி அன்பிற்கினிய திரு பானுகுமார். இதுவரை விளக்கம் இங்கு
எடுத்துரைப்பதற்கு ஒரு நண்பரும் முன்வரவில்லை. தங்கள் நோக்கில் இவை
குறித்த விளக்கம் தரும்படி கேட்டுக்கொல்கிறேன்.

சொ. வினைதீர்த்தான்

unread,
May 26, 2015, 11:49:56 AM5/26/15
to mint...@googlegroups.com
விளக்கம் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். (கவனியாது தட்டச்சுப்பிழையோடு
மடல் அனுப்பியதற்கு நண்பர்கள் பொருத்துக்கொள்ளவும்.)
--

Oru Arizonan

unread,
May 26, 2015, 5:30:48 PM5/26/15
to mintamil
மதிப்பிற்குரிய வினைதீர்த்தான், பானுகுமார் அவர்களே,

"ஒன்றை ஒப்புக்கொள்ளமாட்டேன்!" என்று அழுத்தமாக அறிவித்தபின்னர் எதைச்சொல்லி விளக்கம் தருவது?  அது நேரத்தை வீணாக்குவதற்கு ஒப்பாகும்.

நான் சில கேள்விகள்  கேட்கிறேன், அதற்கு நீங்கள் அறிவியல் [விஞ்ஞான ரீதியாக] விளக்கினால் இவ்விழையைப் படிக்கும் அனைவரின் புரிதலுக்கும் உதவி செய்யும்.  உங்கள் பதிலிலிருந்து ஆன்மா என்பதை விளக்க அறிவிலியான நானும் முயற்சி செய்ய வசதியாக இருக்கும்.

கேள்விகளுக்கு வருகிறேன்.

  • பானுகுமார், வினைதீர்த்தான், ஒரு அரிசோனன்  என்று சொல்லிக்கொல்கிரோமே, இவர்கள் யாவர்?
  • அது அவர்களின் மூளையா, இதயமா, உயிர்மூச்சா, உடலா?
  • மனம், மனம் என்கிறோமே, நான் என்று நினைக்கிறோமே, அந்த மனமும், நானும் ஒன்றா, வேறு வேறா?
  • அறிவு என்கிறோமே, அந்த அறிவு மனமா, நானா, அல்லது வேறு ஏதாவதா?
  • அது வெறும் இரத்த ஓட்டமா, உணர்வு நரம்புகளா?
  • ஒருவர் உயிருடன் இருக்கும்வரைதானே, பழைய நினைவுகளைத் திரும்பக் கொணர இயல்கிறது, இறந்தபின் கணினியின் தட்டைப் போல அந்த நினைவை ஏன் திரும்பக் கொணர முடியவில்லை?  
  • அந்த நினைவுகள் யாவை?  அது மனமா, அறிவா, நானா? வேறு ஏதேனும் ஒன்றா?
  • பகுத்தறிவு என்கிறோமே, அதற்கும் மற்ற அறிவுகளுக்கும் வேறுபாடு இருக்கிறதா?
  • அப்படி என்றால், அந்த அறிவுகள் யாவை?
  • மனச்சாட்சி என்கிறோமே, அது நானா, அறிவா, உள்ளமா? 
  • உள்ளமும், அறிவு[களு]ம், மனமும், நானும், ஒன்றா?  இல்லை என்றால் இத்தனையும் நமக்குள் இருந்து என்ன செய்கின்றன?  நாம் இறந்தபின் அவற்றிற்கு என்ன ஆகிறது?
  • ஒருவர் உயிருடன் இருக்கும்வரைதான் அவரை ஒரு பெயர்சொல்லி [பானுகுமார், வினைதீர்த்தான், ஒரு அரிசோனன்] என்று அழைக்கிறேம்.
  • உயிர் போனால் நமது உடல் [பானுகுமாரின் உடல், வினைதீர்த்தானின் உடல், ஒரு அரிசோனனின் உடல்]என்றுதான் குறிப்பிடப்படுகிறது.  நம்மைச் சுட்ட அது கையாளப்படுகிறது.  நாம் இறந்தபின், நமது உடல் உறுப்புகலை யாரும் நாமாகச் சுட்டவில்லை.
  • அப்படியானால் அந்த உயிர் என்பது எது?  நாம் இறந்தபின் அதற்கு என்ன ஆகிறது?  அது எப்படி நமது உடலுக்குள் [நமது தாயின் வயிற்றுக்குள் நாம் இருந்தபோது] புகுந்தது?  அது ஏன்  நமது உடலை விட்டு வெளியேறுகிறது?  
  • உயிரை ஏன் விஞ்ஞான முறையில் உருவாக்க முடிவதில்லை?

இதற்கு விஞ்ஞான முறையில் எளிய விளக்கம் கொடுங்கள்.  பிறகு நாம் ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா என்பதுபற்றி விவாதிப்போம்.  அதுவரை, வெறும் "நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்!" என்பதால் எந்தப் பயனும் இல்லை.  ஏனென்றால் அது "ஆன்மா இருக்கிறது!" என்று என்னைப்போல சிலர் சொல்வது போன்று நீங்கள் சொல்லும் கூற்று மட்டுமே! 

யாராலும் பதில் கூற இயலாது.

சாதி பற்றி ஒரு சிறிய விளக்கம்:
  • பிறப்பே "சாதி" [ஜாதி என்ற வடமொழிச் சொல்] என்று கூறப்படுகிறது.  
  • ஆணாகப் பிறந்தால் ஆண் சாதி, பெண்ணாகப் பிறந்தால் பெண் சாதி.  
  • இதை நாம் மறுப்பதில்லை.  
  • இந்த ஆண், பெண் என்பது, இந்தப் பிறப்பை வேறுபடுத்துவது எது ?  
  • நமது உடற்கூறுதானே!   
  • அதனாலேயே உடலுக்குத்தான் சாதி ,ஆன்மாவுக்கு அல்ல என்று ஓதப்படுகிறது.
ஒரு அரிசோனன் 

Seshadri Sridharan

unread,
May 26, 2015, 10:13:51 PM5/26/15
to mintamil
015-05-26 15:53 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>
இதனைக் கூட புரிந்து கொள்ள முடியாது சாதியை வெறித்தனமாகப் பிடித்துக் கொண்டு .. எனக்கு ஒரு அடையாளம் என்று காட்ட முயற்சி செய்து கொள்வதை என்னவென்று சொல்வது? - 
சுபா ​

​'ஆதலால் உடம்பு தவிர மற்றவற்றை சாதி சாதிசார்ந்ததாக கொள்ளமுடியாது.' ​என நீங்கள் எழுதியதை வாசிக்கையில் உடலுக்கு சாதி உண்டு என்று சொல்வதாகத்தன புரிகின்றது. அதற்கு மாறானது உங்கள் கருத்தென்றால் எனக்கு அதில் மகிழ்ச்சியே..- சுபா

மூலக் கருத்தே உடலுக்கு சாதியை சாற்றுவது போல உள்ளத்திற்கு சாதியை சாற்றமுடியாது என்பது தான் சொ வி இட்ட சைவ சித்தாந்த பாடல் கூறுவது.. அதைத்தான் சொ  வி உடலுக்கு சாதி  உண்டென்றால் மனதிற்கும் உண்டு ஆதனுக்கும்  உண்டு என்றார். நான் அதை மறுத்து  என் பதிவை இட்டிருந்தேன். 

Seshadri Sridharan

unread,
May 26, 2015, 10:44:46 PM5/26/15
to mintamil
2015-05-26 21:08 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
On 5/26/15, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/இன்னொரு உடல் தேடினால் அதை தனக்குச் சாதகமான அரசபரம்பரை, செல்வந்தர் வீடு,  ஊனமற்ற பிறவி போன்ற தகுதி வாய்ந்த உடலைத் தேர்ந்தெடுக்காத அறியாமையை என்ன சொல்வது?/
:)) பரந்த வெளியில் மிதந்து அலைந்துகொண்டிருக்கும் ஆன்மாவிற்கு தகுதி வாய்ந்த உடலைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை போலும்! - சொ.வி

ஆதன் ஒரு கரிப்பொருள் (சாட்சி) மட்டுமே, இதாவது மனதோடு என்றும் நீங்காமல் ஒட்டியிருப்பது. ஒரு உள்ளம் தகுதி வாய்ந்த உடலை தன் விருப்பில் தேர்ந்தெடுக்கவியலாது. அந்த வேலையை ;பிரகிருதி என்ற மாயோள் செய்கிறாள் ஆதன் செய்வதில்லை. இதை மாயோள் அந்த உள்ளத்தின்முன்வினைக்கு தக்கவாறு உடலை ஏற்பாடுசெய்கிறாள். ஆக மாயோளும் தன் விருப்பில் அதைச் செய்வதில்லை. 

Seshadri Sridharan

unread,
May 26, 2015, 11:07:59 PM5/26/15
to mintamil
2015-05-27 3:00 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
கேள்விகளுக்கு வருகிறேன்.
 
பானுகுமார், வினைதீர்த்தான், ஒரு அரிசோனன்  என்று சொல்லிக்கொல்கிரோமே, இவர்கள் யாவர்?
மனம் தான் பழக்கப்பட்ட அடையாளத்தின்படி தன்னை அடையாளம் காண்பதுவே இப்பெயர்கள். மனம் ஆதன் போல் ஒன்றல்ல பல. நீர் எப்படி தான் அடைந்த கலனின் வடிவையே கொள்கிறதோ அது போல் மனமும் தான் பழகிய சூழல்படி தன்னை அடையாளப்படுத்துகிறது. 
  • அது அவர்களின் மூளையா, இதயமா, உயிர்மூச்சா, உடலா?
இவையாவும் உடல் \சார்ந்தவை 

//மனம், மனம் என்கிறோமே, நான் என்று நினைக்கிறோமே, அந்த மனமும், நானும் ஒன்றா, வேறு வேறா?//

நான் உணர்வு மனதிற்கு ஊற்றாக (source) இருப்பது. நான் உணர்வு இல்லையேல் மனம் இயங்கமுடியாது. நான் உணர்வு இறை (cosmic) சத்துவத்தில் இருந்து உண்டானது.

//அறிவு என்கிறோமே, அந்த அறிவு மனமா, நானா, அல்லது வேறு ஏதாவதா?//

அறிவு நினைவுப் பதிவுகளின் அடர்வு. மனம் இயங்க அறிவு தேவை எனும்போது அறிவே மனம் என்பது போல் தோன்றினாலும் அறிவு மனம் அல்ல. மூளை அழிந்தால் நாம் பெற்ற அறிவும் அழிகின்றது ஆனால் மனம் அழிவதில்லை.
  • ஒருவர் உயிருடன் இருக்கும்வரைதானே, பழைய நினைவுகளைத் திரும்பக் கொணர இயல்கிறது, இறந்தபின் கணினியின் தட்டைப் போல அந்த நினைவை ஏன் திரும்பக் கொணர முடியவில்லை?  
நினைவு மூளையில் பதிந்திருப்பது. மூளை அழியும் போது நினைவு அழிகின்றது. அறிவு  ஆழ் மனதில் பதிந்து விடுகிறது. இந்த நினைவுகளைப் பெற ஓகப்பயிற்சி தேவை   

கைத்தொழுவான் 
  • அந்த நினைவுகள் யாவை?  அது மனமா, அறிவா, நானா? வேறு ஏதேனும் ஒன்றா?
  • பிறப்பே "சாதி" [ஜாதி என்ற வடமொழிச் சொல்] என்று கூறப்படுகிறது.  
  • ஆணாகப் பிறந்தால் ஆண் சாதி, பெண்ணாகப் பிறந்தால் பெண் சாதி.  
  • இதை நாம் மறுப்பதில்லை.  
  • இந்த ஆண், பெண் என்பது, இந்தப் பிறப்பை வேறுபடுத்துவது எது ?  
  • நமது உடற்கூறுதானே!   
  • அதனாலேயே உடலுக்குத்தான் சாதி ,ஆன்மாவுக்கு அல்ல என்று ஓதப்படுகிறது.
    ஒரு அரிசோனன் 

    Oru Arizonan

    unread,
    May 26, 2015, 11:44:40 PM5/26/15
    to mintamil
    உயர்திரு சேஷாத்திரி அவர்களே,

    நான் எழுப்பிய கேள்விகள் உயர்திருவாளர்கள் பானுகுமார், வினைதீர்த்தான் இருவருக்கு மட்டுமே!

    அவர்கள்தான் ஆன்மாவுக்கு அறிவியல் விளக்கம் கேட்டார்கள்.  எனவே நான் அவர்களுக்கு மட்டுமே கேள்விகளை வைத்தேன்.  அவர்களே எனது கேள்விகளுக்கு அறிவியல் விளக்கங்களை அளிக்கட்டும்.  மேலே தொடரலாம்.

    தாங்கள் எவ்வளவுதான் தத்துவ விளக்கம் கொடுத்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.   எனவே, ஏற்றுக்கொள்ளாத ஒன்றை அவர்கள் முன் வைப்பானேன்?  

    நானா கேட்டிருக்கும் கேள்விகலுக்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் முதலில் அவர்கள் ஒரு தரவு உருப்படிக்கு [datum] வர உதவும்.  பிறகு [after an agreed datum line has been established and mutually agreed upon] அவர்களின் பதில் அறிவியல் [விஞ்ஞான பூர்வமாக] மூலம் நமக்கு விளங்கியபின் நமது கருத்தை வைப்போம்.

    அதுவரை, அவர்களின் பதிலை எதிர்நோக்குவோம்.   

    ஒரு அரிசோனன் 

    Oru Arizonan

    unread,
    May 26, 2015, 11:46:06 PM5/26/15
    to mintamil
    நானா கேட்டிருக்கும் கேள்விகலுக்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் -- நான்  கேட்டிருக்கும் கேள்விகளுக்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் 
       என்று திருத்தி வாசித்துக் கொள்ளவும்.  தட்டச்சுப்பிழைக்கு வருந்துகிறேன்.

    சொ. வினைதீர்த்தான்

    unread,
    May 27, 2015, 2:28:54 AM5/27/15
    to mint...@googlegroups.com, seshadri sridharan, Banukumar Rajendran
    On 5/27/15, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
    தாங்கள் பதிவுகளைப்பார்த்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி திரு
    சேசாத்ரி. எண்ணிப்பார்த்து என் கருத்தைப் பதிவிடுகிறேன். நண்பர்களும்
    அவர்கள் எண்ணத்தை எழுதக்கேட்டுக்கொள்கிறேன்.

    Pasupathi Selvam

    unread,
    May 27, 2015, 2:34:30 AM5/27/15
    to mint...@googlegroups.com
    "உடம்பு தான் அழிகிறதே தவிர உள்ளம் அழிவதில்லை அது தனக்கு உகந்த சூழலில் இன்னொரு உடம்பு கிடைக்கும் வரை பரவெளியில் உழல்கிறது. "

    இது. ஏதோ ஒரு chance or accident principleஐ தழுவுகிற்தோ?
    சில மதங்கள் முற்பிறப்பு வினைகளே ஆன்மா எங்கே ஒட்டுகிறதென நிச்சயிக்கின்றன என சொல்கின்றன.

    N. Kannan

    unread,
    May 27, 2015, 3:22:37 AM5/27/15
    to மின்தமிழ்
    அன்பின் வினைதீர்த்தான்:

    இந்த ஜாதி என்பதைப் பல விதங்களில் புரிந்து கொள்ள முடியும். அதுவே நான் போட்ட முடிச்சிற்கும் திறவுகோல். உயர்வு தாழ்வின்றிப் பார்த்தால் மனிதர்கள் எங்கிருந்தாலும் முழுமங்களாகப் பிரிகின்றனர். அது ஒருவகையான தற்காப்பு. ஜாதி என்பது அத்தகையதே. எனவே உடல் இருக்கும்வரை உயிர்ப்பாதுகாப்பிற்கு மனிதன் ஏதாவதொரு குழு சார்ந்து இருக்கிறான். அதைத்தான் சிவஞான போதம் சொல்கிறது எனக் கொள்ளலாம். நாம் தற்போது காணும் ஜாதியம் அல்ல என்றும் சொல்லலாம்.

    இதனால்தான் இந்தியாவில் (இந்தியாவில் மட்டும்) எந்தக் குழுவிலும் சேராத சாதுக்கள் எனும் ‘தனியர்கள், காட்டில் வாழ்கின்றனர். 

    சங்கம் தொட்டு நம்மிடம் வழக்கிலுள்ள இல்லறமா? துறவறமா? எனும் பட்டிமண்டபத்தை இங்கு நினைவு கூர்ந்தால் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும்.

    நா.கண்ணன்



    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    For more options, visit https://groups.google.com/d/optout.



    --
    வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
    கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
    கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
     
    Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

    சொ. வினைதீர்த்தான்

    unread,
    May 27, 2015, 3:39:18 AM5/27/15
    to mint...@googlegroups.com
    On 5/27/15, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
    > உயர்திரு சேஷாத்திரி அவர்களே,
    > நான் எழுப்பிய கேள்விகள் உயர்திருவாளர்கள் பானுகுமார், வினைதீர்த்தான் இருவருக்கு மட்டுமே!

    :))
    கேள்வி குறிப்பிட்டவரிடம் கேட்கப்படுகிறதென்றால் போதுவில் அக்கேள்வியை
    இடவேண்டிய அவசியமில்லை ஐயா. தனிமடலில் கேட்டுக்கொள்ளலாம்.
    ஒரு கேள்வி குறிப்பிட்டவரிடம் கேட்கப்படுகிறதென்றாலும் அக்கேள்வி
    பொதுவில் வைக்கப்படுகிறபோது அக்குழுமத்திலுள்ள அத்துறையில் ஆர்வமும்
    புரிதலும் உள்ள உறுப்பினர்கள் பதிலளிக்க இயலும் என்பதே மடலாடுதலின்
    தனிச்சிறப்பு. பொதுஅறிதலில் தெளிவு என்பதே மடலாடுதலின் பலம்!

    நன்றி.

    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்

    சொ. வினைதீர்த்தான்

    unread,
    May 27, 2015, 4:07:39 AM5/27/15
    to mint...@googlegroups.com, Banukumar Rajendran, Subashini Tremmel, தேமொழி, Oru Arizonan, N. Kannan, seshadri sridharan
    ஒரு இயந்திரத்தையும் அதன் இயக்கத்தையும் உடலுக்கும் உயிர்க்கும் இணையாக
    ஒப்பிடலாம்.(உள்ளம்,மனம், அறிவு,அவை உணரும் ஆன்மா போன்ற அனைத்தும் ஒன்றே.
    அதனை உயிர் என்று குறித்துள்ளேன்)

    பலவேறு பாகங்களை ஒழுங்குமுறையுடன் ஒன்றினைக்கும்போது ஒரு இயந்திரம்
    உருவாகிறது. ஒரு காரின் எஞ்சின் என்று எடுத்துக்கொள்வோம்.
    அதனைச்சக்திகொடுத்து இயக்கும்போது அது இயங்க ஆரம்பிக்கிறது. பலப்பல
    வேலைகளையும் செய்கிறது. எப்பொழுது இயங்கும்சக்தி வெவ்வேறு காரணங்களால்
    நின்றுவிடுகிறதோ அன்று அவ்வியந்திரத்தைக் காயலான்கடையில்
    போட்டுவிடுகிறோம்.
    இயந்திரம் இயங்கியதே. அவ்வியக்கம் எங்கு சென்றது என்று கேட்டால் என்ன
    பதிலளிக்க இயலும். அவ்வியக்கம் வெளியில் மிதந்துகொண்டிருக்கிறது.
    வினைப்படி இன்னொரு இயந்திரத்துக்குள் புகுந்துகொள்ளூம். மறுபடி வேறு
    இயந்திரத்தில் இயங்கும். உடையும்போது மீண்டும் அவ்வியக்கம்
    பரவெளிக்குப்போகிறது என்றெல்லாம் சொல்லமுடியுமா?

    இயந்திரத்தை மனிதன் உருவாக்குகிறான். இயற்கை பஞ்சபூதங்களால் பலகோடி
    ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியில் உடலெனும் இயந்திரத்தையும் உயிர் எனும்
    இயங்குசக்தியையும் உருவாக்கியுள்ளது.

    நன்றி
    சொ.வினைதீர்த்தான்.

    Dhivakar

    unread,
    May 27, 2015, 4:44:48 AM5/27/15
    to மின்தமிழ்
    என்னுடைய பங்கு நான் கேள்விப்பட்ட பழைய கதையைப் போட்டு விட்டு ஒதுங்கி விடுகிறேன்.

    ஒரு குருவானவர் தன்னுடைய இறுதிக்காலம் நெருங்குவதையும் அடுத்து இன்னொரு பிறவியில் தான் பிறந்தே ஆகவேண்டுமென்பதையும், அப்படி எடுத்த அடுத்த பிறவி முடிந்ததும் தனக்கு முக்தி அதாவது பிறவாமை பெற்று விடுவோம் என்பதை தவ வலிமையால் உணர்ந்தாராம். தன்னுடைய பிரதான சிஷ்யனை அழைத்து அவனிடம் விவரம் கூறினார். தான் இப்பிறவியை விடுத்தவுடன் அடுத்த பிறவியில் எப்படி அவன் இவரை அறியமுடியும் என்பதற்காக ஒரு வரத்தையும் அருளினாராம்.  அவன் மட்டும் தன்னை யாரென்று தெரிந்து கொள்ள ஏதுவாக தான் அடுத்த பிறவியில் ஒரு மூன்றாம் கண் ஒன்று சிருஷ்டித்துக் கொள்வதாகவும், அந்த மூன்றாம் கண் சிஷ்யன் ஒருவன் மட்டுமே அறிய முடியும் என்பதால் தன்னை, தான் யார் என அறிந்தவுடன் உடனடியாக தன்னைக் கொல்லவேண்டுமென்றும் சிஷ்யனிடம் வேண்டுகோளும் கட்டளையும் வரமும் அளித்து விட்டு உடலை நீத்துவிட்டார்.

    சிஷ்யன் பாவம் ஊரெல்லாம் மறுபடி தேடுகிறான், எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் மூன்றாம் கண் தெரிகின்றதா என்பதாக உற்றுப் பார்த்து ஏமாறுவான்.. இப்படியே காலம் போய்க்கொண்டிருந்தது. மிகவும் அயர்ச்சியுடன் ஒரு கானகம் வழியே போய்க்கொண்டிருக்கையில் ஒரு பன்றிக்கூட்டம் அவனைக் கடந்து சென்றது. அந்தப் பன்றிகளின் தலைமைப் பன்றி போல உயரமாகக் காணப்பட்ட ஒரு பன்றி இவனைப் பார்த்ததும் குழைந்து அருகில் வந்தது. எதேச்சையாகப் பார்க்கையில்தான் அதன் நெற்றியைக் கவனித்தான். மூன்றாம் கண் புலப்பட்டது. அடடா.. நம் குருவானவர் பன்றியின் பிறவியில் வந்திருக்கிறாரே.. சரி, உடனே அவர் கட்டளையிட்டவாறு கொன்றுவிடுவோம் என்று நினைத்துக் கொண்டே கையில் வைத்திருந்த கத்தியை வீசுகையில் திடீரென குரு அலறுகிறார்.

    ‘ஐயய்யோ, கொன்றுவிடாதே சிஷ்யா.. இதோ பார், இந்தப் பிறவியில் இந்த வாழ்க்கை மிகவும் ஆனந்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது. போகும் வரை போகட்டுமே.. ஏன் இதைக் கெடுக்கவேண்டும்”

    Malarvizhi Mangay

    unread,
    May 27, 2015, 8:06:58 AM5/27/15
    to mint...@googlegroups.com

    அருமையான கதைப்பதிவு.மூன்றாம்கண் என்பதை நான் ஞானத்தின் இருப்பு /திறப்பு
    என்பதாகவே பார்க்கிறேன்.மனித வாழ்க்கையே ஞானசூன்யம் முதல் ஞானத்தெளிவு வரை உள்ள பயணமே.அப்பயணத்தை அவனே /அவளே தீர்மானித்தலா? மற்றவர் துணைதேவைப்படுமா
    என்பதும் சிந்தனைக்குரியதே.
    தெளிவைத்தேடிய பயணம் மீளவும் சூனியத்தைத்தேடுவதும் நிகழ்ந்து விடுகிறது.
    இக்கரைக்கு அக்கரைப்பச்சை.!கீழதுமேலாகும்
    மேலதுகீழாகும் என்ற வாசகங்கள் பொருள் பொதிந்தனவாகத் தெரிகின்றன.

    Tthamizth Tthenee

    unread,
    May 27, 2015, 12:04:30 PM5/27/15
    to mint...@googlegroups.com
    இப்பிறப்பின்  ஊழ்வினையும் 

    ஏழ்பிறப்பின்  தீவினையும்

      என்று   என் தாயார்  ஒரு கவிதை எழுதினார்கள்


    ஒவ்வொரு பிறப்பின்  ஊழ்வினையும் தீவினையும்  இந்த  உடம்பால  மனதால்  செய்தவைகளினால்

    அடுத்த பிறப்புக்கும்   அது தொடருமென்றால்

    ஆன்மாவுக்குத்தானே  எல்ல வினைகளும்  பாதிக்கின்றன  அதன் அடுத்த பிறவியின்  உடம்பிலும்?


    அன்புடன்
    தமிழ்த்தேனீ



    அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
    அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

    மனிதமும்,உலகமும் காப்போம், 
    மௌனம் உணர்த்தாத பொருளை
    சொற்கள்  உணர்த்தாது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ
    http://thamizthenee.blogspot.com
    rkc...@gmail.com
    http://www.peopleofindia.net



    Nagarajan Vadivel

    unread,
    May 27, 2015, 12:23:48 PM5/27/15
    to மின்தமிழ்
    ஏழு பிறப்பென்பது தனியனுக்கு முன்னோர்களான மூன்று தலைமுறையயும் தனியனுக்குப்பின் வரும் மூன்று தலைமுறைகளையும் குறிப்பதாகும். இப்பிறப்பே அவன் முன்னோர்கள் செய வினைப்பயன் என்று கருதப்படும் நிலையில் அவன் பின்சந்ததியரின் வாழ்க்கையயும் அவனின் இப்ப்றவி தீர்மானிப்பதாகவும் பொருள் கொள்ளலாமே
    காணமுடியாத ஆன்மாவைத் தேடி அலுத்துப்போவதற்குப்பதிலாக தனியன் தான் முன்னோரையும் பின்சந்ததியினரையும் இணக்கும் பாலமாக மரபுவழிச் செல்வங்களை வாய்க்கால் வழியோடச் செய்பவனாகக் கருதிச்  செயல்படுவதே நல்லது
    பல்களைக்கலகன்

    Oru Arizonan

    unread,
    May 27, 2015, 2:21:11 PM5/27/15
    to mintamil


    2015-05-27 0:39 GMT-07:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:

    //கேள்வி குறிப்பிட்டவரிடம் கேட்கப்படுகிறதென்றால் போதுவில் அக்கேள்வியை

    இடவேண்டிய அவசியமில்லை ஐயா. தனிமடலில் கேட்டுக்கொள்ளலாம்.
    ஒரு கேள்வி குறிப்பிட்டவரிடம் கேட்கப்படுகிறதென்றாலும் அக்கேள்வி
    பொதுவில் வைக்கப்படுகிறபோது அக்குழுமத்திலுள்ள அத்துறையில் ஆர்வமும்
    புரிதலும் உள்ள உறுப்பினர்கள் பதிலளிக்க இயலும் என்பதே மடலாடுதலின்
    தனிச்சிறப்பு.//
    அன்பிற்கினிய நண்பர் வினைதீர்த்தான் அவர்களே,

    இவண்  நான் வேண்டியது அறிவியல் விளக்கம்.  உயர்திரு சேசாத்திரி அவர்கள் வைத்ததோ ஆன்மீக அலசல்.  ஆன்மா இல்லை என்று பலமாக மறுப்பது தாங்களும், பானுகுமார் அவர்களுமே!  எனவேதான் எனது கேள்விகள் தாங்கள் இருவருக்கும் வைக்கப்பட்டன.

    தங்களது புரிதலை நான் அறிந்தால்தான், என்னால் இயன்ற அளவு பதிலளிக்கவோ, அல்லாது எனக்கு அந்த அறிவு இல்லை என்று ஒதுங்கவோ இயலும்.

    மேலும் தாங்கள் தங்கள் கேள்விக்கு யாரும் விளக்கம் அளிக்கவில்லை என்று குரிப்பிடதாலே நான் தங்கள் இருவரின் மனப்போக்கையும், புரிதலையும் அறியப் புகுந்தேன்.  மற்றவர்கள் பதில் அளிக்கக்கூடாது என்ற எண்ணமில்லை;  அவர்களின் பதில்கள் தங்கள் இருவருக்கும் ஒப்புதல் இல்லை என்பதை அறிந்ததால் வைக்கப்பட்டதே அது.  

    தவறென்றால் பொருத்தருள்வீராக!

    ஒரு அரிசோனன்'

    சொ. வினைதீர்த்தான்

    unread,
    May 27, 2015, 2:35:49 PM5/27/15
    to mint...@googlegroups.com
    நன்றி திரு அரிசோனன்.

    தங்கள் கேள்விகளுக்கான பொதுவான பதில்களை உள்ளடகி எனக்குத்தோன்றிய பதிலை
    நண்பர்கள் பார்வைக்குக் கீழ்க்கண்டவாறு மதியம் இட்டிருக்கிறேன்.
    பார்க்கும்படிகேட்டுக்கொள்கிறேன்.
    ............................................................

    ஒரு இயந்திரத்தையும் அதன் இயக்கத்தையும் உடலுக்கும் உயிர்க்கும் இணையாக
    ஒப்பிடலாம்.(உள்ளம்,மனம், அறிவு,அவை உணரும் ஆன்மா போன்ற அனைத்தும்
    ஒன்றே.அதனை உயிர் என்று குறித்துள்ளேன்)

    பலவேறு பாகங்களை ஒழுங்குமுறையுடன் ஒன்றினைக்கும்போது ஒரு இயந்திரம்
    உருவாகிறது. ஒரு காரின் எஞ்சின் என்று எடுத்துக்கொள்வோம்.
    அதனைச்சக்திகொடுத்து இயக்கும்போது அது இயங்க ஆரம்பிக்கிறது. பலப்பல
    வேலைகளையும் செய்கிறது. எப்பொழுது இயங்கும்சக்தி வெவ்வேறு காரணங்களால்
    நின்றுவிடுகிறதோ அன்று அவ்வியந்திரத்தைக் காயலான்கடையில்
    போட்டுவிடுகிறோம்.

    இயந்திரம் இயங்கியதே. அவ்வியக்கம் எங்கு சென்றது என்று கேட்டால் என்ன
    பதிலளிக்க இயலும். அவ்வியக்கம் வெளியில் மிதந்துகொண்டிருக்கிறது.
    வினைப்படி இன்னொரு இயந்திரத்துக்குள் புகுந்துகொள்ளூம். மறுபடி வேறு
    இயந்திரத்தில் இயங்கும். உடையும்போது மீண்டும் அவ்வியக்கம்
    பரவெளிக்குப்போகிறது என்றெல்லாம் சொல்லமுடியுமா?

    இயந்திரத்தை மனிதன் உருவாக்குகிறான். இயற்கை பஞ்சபூதங்களால் பலகோடி
    ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியில் உடலெனும் இயந்திரத்தையும் உயிர் எனும்
    இயங்குசக்தியையும் உருவாக்கியுள்ளது.

    நன்றி


    --
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்

    N. Kannan

    unread,
    May 27, 2015, 11:19:27 PM5/27/15
    to மின்தமிழ்
    2015-05-28 2:35 GMT+08:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
    ஒரு இயந்திரத்தையும் அதன் இயக்கத்தையும் உடலுக்கும் உயிர்க்கும் இணையாக
    ஒப்பிடலாம்.(உள்ளம்,மனம், அறிவு,அவை உணரும் ஆன்மா போன்ற அனைத்தும்
    ஒன்றே.அதனை உயிர் என்று குறித்துள்ளேன்)

    இக்கோட்பாட்டின் சிறு பிழை:

    நூறு இயந்திரங்கள் உருவாக்கினால் அவை ஒரே மாதிரி வேலை செய்யும். ஆனால் மனித இயந்திரம் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக வேலை செய்கிறது? ஏன்? ஒவ்வொரு மனிதனின் (ஆன்மீகத்) தேடலும் வித்தியாசப்படுகிறது. ஏன்? உண்டு, உடுத்தி, செத்தொழிதல் பொது என்றாலும் அதற்குள் காணும் வித்தியாசங்கள் பிரம்மிக்க வைக்கின்றன. சிலருக்கு பூர்வஜென்மத்தொடர்பும் வந்து சேர்கிறது. நல்ல உதாரணம் சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தி. அவளை முதன்முறை கேட்டவுடன் தோன்றியது, இவ்விசை இச்சிறுமியிடமிருந்து வரவில்லையென்று. இதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதல் பலரும் ஆமோத்தித்துவிட்டனர். இப்பெரிய வித்தியாசம் எப்படி ஒரு இயந்திரத்தில் தோன்றுகிறது? அதுவும் மிகச்சிறு பருவத்தில் (முன் அனுபவமற்ற பருவத்தில்).

    ஒரு இயந்திரம் இருப்பின் தோற்றுவித்தவன் இருப்பான். அது யார்? (இது ஆன்மாவோடு தொடர்புடையது)

    சுவாரசியமாகத்தான் இருக்கிறது? :-))

    நா.கண்ணன்

    Nagarajan Vadivel

    unread,
    May 27, 2015, 11:47:59 PM5/27/15
    to மின்தமிழ்
    சாதி (கிரந்தத்தில் ஜாதி) என்ற கருத்துருவை பகுத்தறியும்போது அந்தச் சொல் முதன் முதலில் எப்போது தமிழில் வழங்கப்பட்டது என்பதை முதலில் சுட்டிக்காட்ட வேண்டும்.  சாதி என்பது ஆதியில் வந்ததா அல்லது பாதியில் வந்ததா என்ற கேள்விக்குத் தெளிவான செய்தியை வழங்கவேண்டும்.  
    ஜாதி என்பது வடபுலத்தார் வர்ணம் என்றும் போர்த்துக்கீசியர் கேஸ்ட் என்றும் கூறிய பிரிவுகள் தமிழகத்தில் வழக்கில் வந்தது என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் கிட்டினாலும் பழந்தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் கொல்லாமை அடிப்படையில் தெரவரிசைப்படுத்தப்படதா என்பதை விளக்க வேண்டும்
    தென்கொரியாவில் மூன்று பிரிவுகளில் மக்கள் இனம் பிரிக்கப்படுகிறார்கள் சப்பானில் நான்கு பிரிவுகளில் மக்கள் இனம்பிரிக்கப்படுகிறார்கள்.  சாதிப்பிரிவு உலகம் முழுதும் பரவி இருந்தாலும் தமிழகம்போல் ஒருவனின் சாதி அவன் பிறப்பிலேயே உறுதி செய்யப்பட்டு இறப்புவரை மாறாமல் ஒட்டிக்கொண்டு இடத்துக்கேற்ற தகுதி ஒன்றை நிரந்தரம் செய்துவிடுகிறது. அவ்வகை மக்கள் தங்களை உணர்ந்து தங்களின் இழி நிலைக்குக் காரணம் என்ன என்பதை அறியவொன்னாமல் இருந்து சமயத்தின் பேரால் மேன்மக்கள் தங்களுக்குச் சாதகமாக ஏற்படுத்திக்கொண்ட அமைப்பில் இறக்கும்வரை வாழ்ந்து அது தன் தலையெழுத்து எனக் கருதி சாதி என்பது இறவன் படைத்தது என்று மதிமயங்கி நிற்கின்றனர்
    பல்களைக்கலகன்

    Geetha Sambasivam

    unread,
    May 28, 2015, 12:12:10 AM5/28/15
    to மின்தமிழ், தேமொழி
    உடலைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஆன்மாவுக்கு இல்லை தான். நீங்கள் ஓர் முன் முடிவோடு இருப்பதால் இதில் தலையிட வேண்டாம் என ஒதுங்கி இருந்து எட்டிப் பார்க்கிறேன். வழக்கம் போல் கடைசி பெஞ்சில் அமர்ந்த வண்ணம். :)

    Oru Arizonan

    unread,
    May 28, 2015, 12:23:05 AM5/28/15
    to mintamil
    2015-05-28 2:35 GMT+08:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
    //ஒரு இயந்திரத்தையும் அதன் இயக்கத்தையும் உடலுக்கும் உயிர்க்கும் இணையாக

    ஒப்பிடலாம்.(உள்ளம்,மனம், அறிவு,அவை உணரும் ஆன்மா போன்ற அனைத்தும்
    ஒன்றே.அதனை உயிர் என்று குறித்துள்ளேன்)//

    ஆக, அண்டத்தில் உள்ள உயிரினகள் அனைத்தும்  இயந்திரம் என்பதே உங்கள் கூற்று.  இயந்திரத்தை மனிதன் படைப்பதுபோல, இயற்கை இயந்திரத்தை உருவாகுகிறது --  இதில் ஆத்மா என்று ஒன்று எங்கே, ஒரு இயந்திரத்திலிருந்து அதன் இயக்கம் இன்னொரு இயந்திரத்திற்குச் செல்லுமா என்று கேள்வி வைத்திருக்கிறீர்கள்.

    இங்குதான் உங்கள் புரிதல் மற்றவர்கள் புரிதலுடன் வேறுபடுகிறது.  

    உங்கள் இயந்திர உவமையையே எடுத்துக்கொண்டு தர்க்கம் [debate[ செய்வோம்.

    இயந்திரத்தை ஒருவர் வடிவமைக்கிறார்.  அந்த இயந்திரம் மிகவும் complexஆக இருந்தால் பலர் சேர்ந்து வடிவமைக்கிறார்கள்.

    இங்கு இயந்திரம் -  உடல்.
    அதன் இயக்கம் - உயிர்
    ஆனால் உள்ளம், மனம், அறிவு, அவை உணரும் ஆத்மா போன்ற அனைத்து ஒன்றே, அவை இயந்திரத்தின் இயக்கம் என்கிறீர்கள்.

    இங்கு உங்கள் உவமை தரைதட்டுகிறது. உயிர்,  மனம், அறிவு, [+உள்ளம்] இவை வேவ்வேறானவை.    இவை அனைத்தையும் ஒன்றாக்கி ஒரு அவியலாக்கி இந்த அவியல் ஆன்மாவை உணருகிறது என்கிறீர்கள்.

    அல்ல.  இப்படிப்பட்ட உவமைகள் மாறாக இருக்கும்போது நாம் எப்படி இயந்திரத்தோடு ஆன்மாவையோ, உயிரையோ, மற்ற ஐம்புலன்களையோ. உவமித்து விவாதிக்க இயலும்?

    இருப்பினும், உங்கள் உவமைப்படி சிறிது தூரம் செல்வோம்.

    இயந்திரத்தை ஒருவரோ/சிலரோ வடிவமைக்கிறார்கள்.  இன்னொரு உயிர்+உடலை அப்படி ஆண்/பெண் வடிவமைக்கின்றனரா?

    தாயின் வயிற்றில் கரு தானாக வளர்கிறது;  மண்ணில் விழும் விதை தண்ணீர்/சூரிய ஒளியின் சக்தியால் சேயாக/மரமாகப் பரிணமிக்கிறது.  இயந்திரம் தானாக வளர்கிறதா?

    இயந்திரத்தை இயக்க சக்தி ஒன்று தேவைப்படுகிறது.  அச்சக்தியே உயிர் என்கிறீர்கள்.  இயந்திரத்தை நிறுத்தி, மீண்டும் இயக்கலாம்.  மனித உயிரை அவ்வாறு செய்ய இயலுமா?

    நீங்கள் இயற்கை என்கிறீர்கள், அந்த இயற்கை என்பது என்ன?  கடவுள் என்று சொல்லலாமா?  இயற்கையே கடவுள் என்றால், உங்கள் உவமைப்படி இயந்திரத்தை வடிவமைத்த மனிதன் கடவுளாகிறான்.

    ஒவ்வொரு இயந்திரத்தையும் இயக்கம் மென்பொருளை, மரபணு/ஆத்மா எனலாம்.  அந்த மரபணுவுள் எழுதப்படுவதையே நாம் தலையெழுத்து என்கிறோம்.  ஒரு இயந்திரத்தை இயக்கும் மென்பொருளை நாம் வேறொரு இயந்திரத்திற்குச் சற்று மாற்றி உபயோகப்படுத்தும்போது அந்த ஆத்மா வேறொரு உடலை அடைகிறது எனலாம்.

    இந்த மென்பொருள் எல்லாவற்றிற்கும் ஒரு தாய் மென்பொருள் [mother code]இருக்கிறதே அதைப் பரம்பொருள் [பரமாத்மா] எனலாம்.

    வேறொரு உவமை சொன்னால் --  இயந்திரத்தை இயக்க உதவும் எரிபொருள், [பெட்ரோல், மின்சாராம்] இவற்றை ஜீவாத்மா எனலாம்.  ஒவ்வொரு இயந்திரத்திற்கும் [காருக்கும்] தனியாக பெட்ரோலை ஒரு பெரிய தொட்டியிலிருந்து ஊற்றுவதுபோல ஒரு பரமாத்வாவின் பகுதியே ஒவ்வொரு உயிருக்கும் ஜீவாத்மாவாக வந்து இயங்குகிறது.

    பாட்டரியில் இருந்து வந்தாலும், மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வந்தாலும் மின்சாரம் மின்சாரமே.  பாட்டரியில் இருக்கும் மின்சாரம் ஜீவாத்மாவாக இயந்திரங்களை இயக்குகிறது.  மின்னுற்பத்தி நிலைத்தில் இருந்துவரும் மின்சாரம் பரமாத்வாக இருந்து நம் அனைவரையும் இயக்குகிறது.  இந்த மின்சாரமே, பெட்ரோலே ஆன்மா.

    இதுதான் அறிவியல் விளக்கம்.

    மின்சாரமோ, பாட்டரியோ, பெட்ரோலோ, எந்த இயந்திரத்தை இயக்குவோம் என்று தேர்ந்தெடுப்பதில்லை.  எவரது தேவைக்கேற்ப அவை உபயோகப்படுத்தபடுகின்றனவோ அந்த இயந்திரத்தை அவை இயக்குகின்றன.  அதுபோல ஆத்மா தனது வினைக்கேற்ப [பாட்டரி, பெட்ரோல் டாங்க், மின்சார கம்பியின் இணைப்பு] உடலுக்குள் புகுகிறது.

    இதுவே நீங்கள் கொடுத்த இயந்திர உவமைக்கான எனது எளிய விளக்கம்.  

    இங்கு நான் எந்த ஆன்மீக, தத்துவ விளக்கமும் கொடுக்கவில்லை.  உங்கள் இயந்திர உவமையுடன் ஒப்பிட்டே, அறிவியல்படி [விஞ்ஞான ரீதியாக] எனது வாதத்தை வைத்திருக்கிறேன்.

    ஒரு அரிசோனன்

    Madhurabharati

    unread,
    May 28, 2015, 12:28:45 AM5/28/15
    to MinTamil

    2015-05-28 9:53 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:

    இங்கு இயந்திரம் -  உடல்.
    அதன் இயக்கம் - உயிர்

    ​உடலின் இயக்கம் உயிரா, அல்லது அதன் இயக்குசக்தி உயிரா?

    இயக்குசக்தி இல்லாமல் இயக்கம் கிடையாதே!

    அன்புடன்
    மதுரபாரதி​
     


    சொ. வினைதீர்த்தான்

    unread,
    May 28, 2015, 12:58:48 AM5/28/15
    to mint...@googlegroups.com
    On 5/28/15, Madhurabharati <madhura...@gmail.com> wrote:
    > 2015-05-28 9:53 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
    இங்கு இயந்திரம் - உடல்.
    அதன் இயக்கம் - உயிர்
    >>
    //உடலின் இயக்கம் உயிரா, அல்லது அதன் இயக்குசக்தி உயிரா?
    இயக்குசக்தி இல்லாமல் இயக்கம் கிடையாதே!//

    நன்றி திரு மதுரபாரதி ஐயா, திரு அரிசோனன்.

    இயந்திரத்தின் பாகங்கள் ஒன்றிணைக்கப்படும்போது ஒவ்வொரு பாகத்திலும்
    இயங்குசக்தி பொதிந்துள்ளது. அனைத்தும் முறையாக இணைக்கப்படும் வேளையில்
    (பெட்ரோல் போன்ற எரிசக்தியும் இயங்குசக்தி பொதிந்துள்ள இயந்திரத்தின் ஒரு
    பாகமே) இயந்திரம் இயங்க ஆரம்பிக்கிறது.(இயங்க முடிக்கிவிடுகிற மனிதனும்
    இங்கு இயந்திரத்தின் ஒரு பகுதியே)

    இயந்திரம் இயங்குகிறது. பலசெயல்கள் புரிகிறது.பல்வேறு காரணங்களால்
    செயல்படமுடியாதபோது இயக்கம் நின்றுவிடுகிறது.

    இயந்திரம்,அது இயங்கும் சூழல் உடலென்றால் அந்த இயந்திரம் செய்யும்
    செயல்கள் உயிர்,உள்ளம்,அறிவு,மனம்,உணரும் ஆன்மா.

    உடம்பார் அழியின் உயிரார் அழிவர். இரண்டும் பிரிக்க முடியாதவை. ஒன்றுக்கு
    சாதியுண்டு.மற்றதற்கு சாதியில்லை என்பது பொருந்தவில்லை.

    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    Oru Arizonan

    unread,
    May 28, 2015, 1:47:28 AM5/28/15
    to mintamil
    வினைதீர்த்தான் அவர்களே,

    2015-05-27 21:58 GMT-07:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
    //ஒன்றுக்கு சாதியுண்டு.மற்றதற்கு சாதியில்லை என்பது பொருந்தவில்லை.//

    சாதி என்பது பிறப்பால் வருவது என்று எழுதினேன்.  அதற்கு என்ன பொருள் என்றும் எழுதினேன்.  நடைமுறையில் சொல்லப்படும் சாதியுடன் அதைக் குழப்பிக்கொள்ளவேண்டாமே!

    //உடம்பார் அழியின் உயிரார் அழிவர்.//

    இல்லையில்லை.  உடலுக்குத்தான் அழிவு.  உயிருக்கல்ல.  "உயிர் பிரிந்தது!" என்றுதான் யாவரும் குறிப்பிடுகிறார்கள்.  அது எதைக் குறிக்கிறது?  உடலைவிட்டு உயிர் பிரிந்து எங்கோ செல்கிறது என்பதால்தானே!  

    ஆங்கிலத்திலும், "one passed away" என்றுதான் சொல்கிறார்கள்.  அப்பொழுது கடந்து செல்வது யார்?  உயிரா, உடலா?  உடல் இங்குதானே இருக்கிறது?  உயிர்தானே இருந்த உடலை, அணிந்துகொண்டிருக்கும் சட்டையைக் கழட்டி எறிந்துவிட்டுச் செல்கிறது?

    சொ. வினைதீர்த்தான்

    unread,
    May 28, 2015, 10:00:54 AM5/28/15
    to mint...@googlegroups.com
    On 5/28/15, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:

    > 2015-05-27 21:58 GMT-07:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
    > //ஒன்றுக்கு சாதியுண்டு.மற்றதற்கு சாதியில்லை என்பது பொருந்தவில்லை.//
    >
    >// சாதி என்பது பிறப்பால் வருவது என்று எழுதினேன். அதற்கு என்ன பொருள் என்றும் எழுதினேன். நடைமுறையில் சொல்லப்படும் சாதியுடன் அதைக்குழப்பிக்கொள்ளவேண்டாமே!//

    தாங்கள் பிறப்பெடுத்த உடலால் தானே ஆண்சாதி என்பதும் பெண்சாதி என்பதும்
    தெரிகிறது. ஆதாலால் சாதி உடல் குறித்தது என்று எழுதியுள்ளீர்கள். பால்
    குறித்து சாதி என்றால் பேச்சே இல்லை.
    மாதவசிஞான யோகிகள் யாருக்கு யார் ஆச்சாரியனாக இருக்கமுடியும் என்பதில்
    நால்வகை வருணத்தாரைக்குறிப்பிட்டு இவருக்கு இவர் குரவராக இருக்க இயலும்
    என்றும் சாதி உடலால் வருகிறதென்றும் ஆன்மாவுக்குச் சாதியில்லையென்றும்
    குறிப்பிட்டுள்ளதைவைத்தே இழை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
    >
    > //உடம்பார் அழியின் உயிரார் அழிவர்.//
    >
    //இல்லையில்லை. உடலுக்குத்தான் அழிவு. உயிருக்கல்ல. "உயிர் பிரிந்தது!"
    > என்றுதான் யாவரும் குறிப்பிடுகிறார்கள். அது எதைக் குறிக்கிறது? உடலைவிட்டு உயிர் பிரிந்து எங்கோ செல்கிறது என்பதால்தானே!//

    உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பது திருமூலர் வாக்கு என்பது தாங்கள்
    நன்கறிந்ததே. உடம்பும் உயிரும் ஒன்றையொன்று சார்ந்தவை.

    நன்றி.
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்

    N. Kannan

    unread,
    May 29, 2015, 1:20:05 AM5/29/15
    to மின்தமிழ்
    2015-05-28 12:58 GMT+08:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
    இயந்திரத்தின் பாகங்கள் ஒன்றிணைக்கப்படும்போது ஒவ்வொரு பாகத்திலும் இயங்குசக்தி பொதிந்துள்ளது. அனைத்தும் முறையாக இணைக்கப்படும் வேளையில்
    (பெட்ரோல் போன்ற எரிசக்தியும் இயங்குசக்தி பொதிந்துள்ள இயந்திரத்தின் ஒரு பாகமே) இயந்திரம் இயங்க ஆரம்பிக்கிறது.(இயங்க முடிக்கிவிடுகிற மனிதனும் இங்கு இயந்திரத்தின் ஒரு பகுதியே)

    அதன் அடிக்கோள் ‘பொருள் முதல் வாதம்”. காணும் பொருளை உண்மை என்று நம்பி அதன் மீது அடுக்கடுக்காய் வாதங்களைச் சேர்ப்பது. ‘கடவுளை’ இணைத்துக்கொள்ளாத அறிவியல் இவ்வகையிலேயே நினைக்கிறது. உயிரியக்கத்தின் மென்மையான விளைவே ‘நான்’ இருக்கின்றேன் எனும் உணர்வு (consciousness is an epiphenomenon of matter) என்று சொல்கிறது அறிவியல். 
     
    உண்மையான ஆன்மீகமும் ‘நான்’ எனும் உணர்வைப் பொய் என்றே சொல்கிறது. 

    ஆனால் ஆன்மப் பிரக்ஞை என்பது பருப்பொருளின் நீட்சியா அல்லது ‘கருத்து முதல்வாதம்’ செப்புவது போல் பிரம்ம ஞானத்தின் வெளிப்பாடாக இவ்வுலகம் தென்படுகிறதா? என்பதே கேள்வி.

    ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் இத்தேடலுக்கு உதவுவது போல் பல ஆழமான புரிதல்தரும் வீடியோ தொடுப்புகளைத் தந்தார். அவை நிச்சயம் உதவும்.

    நூற்றாண்டுகளாக பாரத மண்ணில் நிகழும் விசாரமிது. நாம் இங்கு காண்பது வெறும் தூறல். உயிரைப் பணயம் வைத்து வாதம் செய்தோர் உண்டு.

    பிரபஞ்சமே ஒரு இயந்திரம் என்று சொன்ன நியூட்டனின் வாதங்கள் ஐன்ஸ்டைன், ஓபன் ஹைமர் வந்த பிறகு மாறிவிட்டது. புதிய, புதிய உயிரியல் ஆய்வுகள் பல புதிய சாளரங்களைத் திறந்த வண்ணம் உள்ளன.

    உடலை விட்டுப் பிரிந்த பின் நமக்கு ஏதாவது புரியலாம் ;-)

    பானுகுமார் சொல்வது போல் ஆன்மா உண்டோ இல்லையோ சகமனிதனைக் காண்கிறோம். அவன் துயரைக் கண்ணுருகிறோம். துடைக்க முடிந்தால் சிறப்பு. இதைச் சொல்வதும் ஆன்மீகமே ;-)

    விசாரணை தொடரட்டும்!

    நா.கண்ணன்

    Pasupathi Selvam

    unread,
    May 29, 2015, 4:46:34 AM5/29/15
    to mint...@googlegroups.com

    "காரின் எஞ்சின் என்று எடுத்துக்கொள்வோம்"
    Car is an entity comprising many systems within it-
    Engine management system, Fuel injection system, exhaust system, breaking system, emission control system, ignition system, battery management system etc.,
    All of them work together to become a transport vehicle. Just placing a can of fuel near or feeding it with fuel, the car does not run!
    All of the systems within the car have to function for the car to move and yet no two functions are the same or can be removed/replaced.
    .
    Similarly.

    . உள்ளம்,மனம், அறிவு போன்றனைஎல்லாம் a system of systems என்றே கொள்ளவேண்டும். தனியாக அவைகளுக்கு ஒரு செயல்பாடு இல்லை. ஜீவாத்மாவுடைய பரிமாணங்களாகவே அவைகள் இருக்கின்றன.


    PS. My 2cents worth...........

    சொ. வினைதீர்த்தான்

    unread,
    May 30, 2015, 2:47:45 AM5/30/15
    to mint...@googlegroups.com, Subashini Tremmel, N. Ganesan, Geetha Sambasivam, N. Kannan, Nagarajan Vadivel, Narayanan Kannan, Oru Arizonan, Dhivakar V, seshadri sridharan, Mohanarangan V Srirangam, தேமொழி, Madhurabharathi, malarmangay64, Banukumar Rajendran
    கருத்திட்ட நண்பர்களுக்கு வணக்கம். நன்றி.

    1.ஆன்மா தத்துவத்தை, கொள்கைகளை Visualise செய்துபார்த்து புரிந்துகொள்ள
    என்னுடைய போதாமையால் இயலவில்லை.

    2.எதவும் பொதுவாக Visual லாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. ஆன்மா குறித்து
    படித்த விவரங்கள் மற்றும் நண்பர்கள் கூறுபவை Visualise செய்து பார்க்க
    கடினமாகவுள்ளது.

    3.மனம்,மூளை,அறிவு,உள்ளம்,உயிர் என்பவைகளுக்கு வேறுபாடு காண்பது கடினமாகவுள்ளது.

    4.சாதி,வர்ணமேதமென்பது உடலின் கண்ணே உள்ளது. ஆன்மா சாதி சாராதது. மனித
    உடல் சாதி,வர்ணபேதம் சார்ந்து உயர்நிலையும் தாழ்நிலையும்கொண்டு சில
    குழுவினர் தீண்டத்தகாதவர்களாகிறார்கள்; சில உரிமைகள் அவருக்கில்லை
    என்கிறபோது அது பொருத்தமில்லை என்பது யாருக்கும் தோன்றக்கூடியது.
    எனவே ஆன்மா குறித்த கொள்கை கேள்விக்குரியதாகிறது.

    நண்பர்கள் கருத்தறிய என் புரிதலை தொகுத்துக்கொடுத்துள்ளேன்.(இவ்விழையில்
    இதுவரை பங்குகொண்டுள்ள நண்பர்களுக்கு Cc இட்டுள்ளேன்.)
    நன்றி.

    அன்புடன்

    Seshadri Sridharan

    unread,
    May 30, 2015, 3:39:59 AM5/30/15
    to mintamil
    2015-05-30 12:17 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
    1.ஆன்மா தத்துவத்தை, கொள்கைகளை Visualise செய்துபார்த்து புரிந்துகொள்ள
    என்னுடைய போதாமையால் இயலவில்லை.

    உடல் தனித்து இயங்காதது. மூளை உடலின் கட்டுப்பாட்டாளன்.மனமே மூளைவழி உடலை இயக்குகிறது. இந்த மனதிற்கு மூலஊற்றாக செயற்படுவது தான் ஆதன் எனும் ஆன்மா.
     

    2.எதவும் பொதுவாக Visual லாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. ஆன்மா குறித்து
    படித்த விவரங்கள் மற்றும் நண்பர்கள் கூறுபவை Visualise செய்து பார்க்க
    கடினமாகவுள்ளது.

    ஆம், ஆதன் நுண்ணுனியது ஆதலால் புலன்களுக்கு உணரமுடியாதாய் உள்ளது. ஆழ் நிலையில் சென்றால் ஆதனையும் உணரலாம், மாயோளையும் உணரலாம். நான் உணந்துள்ளேன் மிக்க வருத்தமுற்று ஏமாந்த நிலையில்கலங்கிய நிலையில். அதுவும் மனதின் வழியாகவே நடைபெறும். 

    3.மனம்,மூளை,அறிவு,உள்ளம்,உயிர் என்பவைகளுக்கு வேறுபாடு காண்பது கடினமாகவுள்ளது.

    மனம் உளம் இரண்டும் ஒன்றே. மூளை பருப்பொருள் அறிவு நினைவுப் பதிவு ஓப்பீடு, உயிர் காற்று, மனம் ஆதன் ஆகிய பொருளில் ஆளப்படுகிறது என்றாலும் காற்றே மக்கள் வழக்கில்  உயிர் எனப்படுகிறது.
      
    4.சாதி,வர்ணமேதமென்பது உடலின் கண்ணே உள்ளது. ஆன்மா சாதி சாராதது. எனவே ஆன்மா குறித்த கொள்கை கேள்விக்குரியதாகிறது. - சொ.வினைதீர்த்தான்

    சாதி என்பதை classification என்ற பொருளில் புரிந்து கொண்டால் பருநிலையில் (crude) உள்ள எல்லா அலகுகளும் (units) இந்த வகைப்பாட்டில் வந்துவிடுகிறது என்பதால் சாதியை உடலுக்கு மட்டுமே என்று சார்த்தினர். மனமும் ஆதனும் நுண்ணியன ஆதலால் அவற்றுக்கு வகைப்பாடு கிடையாது.

    எண்டிமீனன் 
    bright star 

    Suba.T.

    unread,
    May 30, 2015, 3:42:43 AM5/30/15
    to மின்தமிழ், Subashini Tremmel


    2015-05-30 9:39 GMT+02:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
    ​..

    எண்டிமீனன் 
    bright star 
    ​இது உங்கள் புதிய புனைப்;பெயரா?
    சுபா​

     

    தேமொழி

    unread,
    May 30, 2015, 4:06:26 AM5/30/15
    to mint...@googlegroups.com, ssesh...@gmail.com


    On Saturday, May 30, 2015 at 12:39:59 AM UTC-7, எண்டி மீனன் wrote:
    2015-05-30 12:17 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karuannam@gmail.com>:
    1.ஆன்மா தத்துவத்தை, கொள்கைகளை Visualise செய்துபார்த்து புரிந்துகொள்ள
    என்னுடைய போதாமையால் இயலவில்லை.

    உடல் தனித்து இயங்காதது. மூளை உடலின் கட்டுப்பாட்டாளன்.மனமே மூளைவழி உடலை இயக்குகிறது. இந்த மனதிற்கு மூலஊற்றாக செயற்படுவது தான் ஆதன் எனும் ஆன்மா.

    உடல் தனித்து இயங்காதது. மூளை உடலின் கட்டுப்பாட்டாளன். = இது அறிவியல் ...இது சரியே 

    மனமே மூளைவழி உடலை இயக்குகிறது. = அப்படியானால் கோமா ஸ்டேஜில் இருப்பவர்களை காட்டாக எடுத்துக் கொண்டு மனமே மூளைவழி எப்படி உடலை இயக்குகிறது என விளக்கவும் சேசாத்திரி. 

    இந்த மனதிற்கு மூலஊற்றாக செயற்படுவது தான் ஆதன் எனும் ஆன்மா = மனம் என்பதை புரிந்து கொள்ள வழியில்லாது போனதால் ஆன்மாவை பற்றிய கேள்வி என்னிடம் இல்லை. 
     
     

    2.எதவும் பொதுவாக Visual லாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. ஆன்மா குறித்து
    படித்த விவரங்கள் மற்றும் நண்பர்கள் கூறுபவை Visualise செய்து பார்க்க
    கடினமாகவுள்ளது.

    ஆம், ஆதன் நுண்ணுனியது ஆதலால் புலன்களுக்கு உணரமுடியாதாய் உள்ளது. ஆழ் நிலையில் சென்றால் ஆதனையும் உணரலாம், மாயோளையும் உணரலாம். நான் உணந்துள்ளேன் மிக்க வருத்தமுற்று ஏமாந்த நிலையில்கலங்கிய நிலையில். அதுவும் மனதின் வழியாகவே நடைபெறும். 

    3.மனம்,மூளை,அறிவு,உள்ளம்,உயிர் என்பவைகளுக்கு வேறுபாடு காண்பது கடினமாகவுள்ளது.

    மனம் உளம் இரண்டும் ஒன்றே. மூளை பருப்பொருள் அறிவு நினைவுப் பதிவு ஓப்பீடு, உயிர் காற்று, மனம் ஆதன் ஆகிய பொருளில் ஆளப்படுகிறது என்றாலும் காற்றே மக்கள் வழக்கில்  உயிர் எனப்படுகிறது.

     உடல் = ஹார்ட்வேர் 
    மூளை = சாஃப்ட்வேர் 
    மூளை கொடுக்கும் கட்டளைப்படி உடல் இயக்கம் அமைகிறது 

    அறிவு நினைவுப் பதிவு = எண்ணங்களின், கற்ற அறிவின் கோர்வை, அனுபவங்களின் தொகுப்பு ஆகியவற்றை மனம்/உள்ளம்/ ஆன்மா  எனக் கொண்டால் ..கோமா ஸ்டேஜில் அகப்பட்ட மனிதரின் ஆன்மா என்ன ஆனது?

    சிலர் கோமா நிலையில் இருந்து திரும்புவார்கள்...பழையவை நினைவில்லாமல் போய்விடும், தனது குழந்தையே யாரோ என என்னும் நிலையில் தொடர்படுத்த முடியாத நிலையிலும் மீண்டு வருவார்கள்...அப்பொழுது மனம் ...ஆன்மா போன்றவை என்னவாயிற்று?


      
    4.சாதி,வர்ணமேதமென்பது உடலின் கண்ணே உள்ளது. ஆன்மா சாதி சாராதது. எனவே ஆன்மா குறித்த கொள்கை கேள்விக்குரியதாகிறது. - சொ.வினைதீர்த்தான்

    சாதி என்பதை classification என்ற பொருளில் புரிந்து கொண்டால் பருநிலையில் (crude) உள்ள எல்லா அலகுகளும் (units) இந்த வகைப்பாட்டில் வந்துவிடுகிறது என்பதால் சாதியை உடலுக்கு மட்டுமே என்று சார்த்தினர். மனமும் ஆதனும் நுண்ணியன ஆதலால் அவற்றுக்கு வகைப்பாடு கிடையாது.

    இது எப்படி ஒலிக்கிறது தெரியுமா மின்சாரம்  = ஆன்மா கண்ணுக்குத் தெரியவில்லை...எனவே அதில் பேதமில்லை

    ஆனால் மின்சாரத்தை உருவாக்க பயன்படுத்தப்படும் சூரியன், அனல், புனல், காற்று, எரிவாயு, பெட்ரோல்  ஆகியவை ஆகியவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடிவதால் அவற்றைப் பிரித்துக் கூறுவோம் என்பது போல இருக்கிறது. 

    Seshadri Sridharan

    unread,
    May 30, 2015, 5:49:11 AM5/30/15
    to mintamil
    2015-05-30 13:36 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
    //மனமே மூளைவழி உடலை இயக்குகிறது. = அப்படியானால் கோமா ஸ்டேஜில் இருப்பவர்களை காட்டாக எடுத்துக் கொண்டு மனமே மூளைவழி எப்படி உடலை இயக்குகிறது என விளக்கவும் சேசாத்திரி//
     
    தமிழில் கோமாவிற்கு ஆட்பட்டோரை நினைவு இழந்தோர் என்கிறோம். மூளைநினைவுப்புரையங்களின் (cells)  பதிவிற்கும் அடிமன (subconscious) நினைவு பதிவிற்கும் தெளிவான தொடர்பு ஏற்படாநிலை இது. இதனால் ஒருவர் தன் சுற்றுச் சூழல் பற்றிய உணர்வு இன்றிக் கிடக்கிறார். இந்நிலையில் காற்று, ரத்த ஓட்டத்தால் உயிர் போகாமல் நிலைகின்றது.

    //இந்த மனதிற்கு மூலஊற்றாக செயற்படுவது தான் ஆதன் எனும் ஆன்மா = மனம் என்பதை புரிந்து கொள்ள வழியில்லாது போனதால் ஆன்மாவை பற்றிய கேள்வி என்னிடம் இல்லை.// 

    மனதை conscious, subconscious, unconscious என பிரித்த உளத்தியல் அறிஞர்கள் முட்டாள்களா?   

    அறிவு நினைவுப் பதிவு = எண்ணங்களின், கற்ற அறிவின் கோர்வை, அனுபவங்களின் தொகுப்பு ஆகியவற்றை மனம்/உள்ளம்/ ஆன்மா  எனக் கொண்டால் ..கோமா ஸ்டேஜில் அகப்பட்ட மனிதரின் ஆன்மா என்ன ஆனது? சிலர் கோமா நிலையில் இருந்து திரும்புவார்கள்...பழையவை நினைவில்லாமல் போய்விடும், தனது குழந்தையே யாரோ என என்னும் நிலையில் தொடர்படுத்த முடியாத நிலையிலும் மீண்டு வருவார்கள்...அப்பொழுது மனம் ...ஆன்மா போன்றவை என்னவாயிற்று?
     
    கோமாவில் இருந்தாலும் ஒவருக்கு மனம் இருக்கத்தான் செய்கிறது. அது எங்கோ வெளியே போய் விடுவதில்லை. ஆதன் மனதிற்கு சான்றாகவே உடன் இருகின்றது.   

    ஆனால் மின்சாரத்தை உருவாக்க பயன்படுத்தப்படும் சூரியன், அனல், புனல், காற்று, எரிவாயு, பெட்ரோல்  ஆகியவை ஆகியவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடிவதால் அவற்றைப் பிரித்துக் கூறுவோம் என்பது போல இருக்கிறது. 

    இவை மூலம் (source).  மூலம் வெப்பமோ, புனலோ மின்சாரம் மட்டும் வேறுபட்டிருக்கவில்லையே. எல்லா மின்சாரமும்  ஒன்று தானே.

    How does one activate the memory? There are two ways: internal and external. The internal way is to revive the undistorted image of perceived incidents in the nerve cells. Perception in the primary stage is registered in the unit mind through the nerve cells, and the vibrations of those perceptions remain imbedded in the nerve cells. The nerve cells in the brain differ according to the different vibrations they carry. Some carry vibrations of knowledge, others the vibrations of action. Microcosms with brains do not have much difficulty in creating ideas at the psychic level carried through inferences because the vibrations in the nerve cells remain undistorted for quite some time. For instance, if someone happens to see a white cow, he or she can easily say after five minutes what the colour of the cow was because the image of the cow imprinted in the nerve cells is still clear and distinct. That is why it is not difficult for the brain to recollect a memory by recreating ideational waves. But if we ask the same person to describe the cow after a few days, he or she will have more difficulty recollecting its colour because by then the impression of the cow in the nerve cells will have become indistinct. At that stage the perceived image is stored in the citta or ectoplasmic mind-stuff and not the brain. Hence the mind will have to labour hard to reformulate the image of the cow from the accumulated saḿskáras or the mental reactive momenta of past actions. The ability to do this depends on one,s psychic power.

    If the external factors necessary for the revival of memory remain undisturbed for some time, one can more easily recreate events already perceived. For instance, if one happens to go to the spot where the cow was seen, one suddenly remembers that a white cow was tethered there. But, after a lapse of much time, when the external factors necessary for the re-creation of that image change drastically, it becomes difficult for the brain to remember the details of the event. At this stage, to recollect the image, one has to penetrate the citta of the unit mind. Of course, once an incident is recollected, its impression remains understood for some time before it finally disappears.

    Thus the brain is nothing more than a worldly machine for mental recollection. Its various parts assist the mind in various ways. But the permanent abode of memory is the citta. So even though an impression has faded from the nerve cells, the mind can recreate the impression by its own power. When the brain assists in the recollection of any event or fact it is called “cerebral memory”.

    30 December 1970, Ranchi, Published in: Ananda Marga Philosophy in a Nutshell Part 4, Yoga Psychology, chapter: Cerebral and ExtraCerebral Memory

    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Q. 54. Are diseases of the mind and brain one and the same?

    Ans.: – No. The crude brain is simply the vehicle of the subtle mind, it gives concrete shape to the mind's inner thoughts and feelings. The different parts and cells of the brain are composed of the five fundamental factors. Due to some physical cause a cell may fully or partially, temporarily or permanently become defective. That defective cell cannot express mental thought vibrations as effectively as it would in a normal state. This is a disease of the brain. A cell may sometimes become abnormal if it is unable to withstand intense mental vibrations. In such a case it is also an abnormality of the brain and not of the mind.

    However, if the brain does not get inspirational input due to defects in the ectoplasmic structure of the mind, it cannot carry out its normal functions of thought process and memory. This is a disease of the mind. Other examples of such diseases of mind are: Getting angry on seeing a particular person, entertaining feelings of dislike for someone, getting unnecessarily heated up about something, or suffering from absent-mindedness. The base of memory is the mind, not the brain. Thus, a lack of memory is an abnormality of the mind, and not of the brain. However, due to a weakness in the brain, many persons of normal mind cannot remember things properly. This is then an abnormality of the brain, and not of the mind.

    Q. 55 What is the base of memory?

    Ans.: – Memory is the re-creation of things already perceived. Once the citta has perceived an object, a certain vibration corresponding to that perceived object is imprinted in the nerve fibres. That experience remains in the citta in the form of seed. By recreating a congenial vibration in the nerve cells, and thus by invoking the same feeling in the citta, one experiences the process of memory.

    Thus the base of memory is not in the brain but in the citta. Vibrations of a perceived object remain imprinted in the nerve fibres for a few days and then gradually fade. Some people believe that memory is stored in the nerve cells in the form of “line”. If that were the case, however, the human brain would not be able to accommodate it. The cranium of those whose thoughts are multifarious would have to become larger and more complex to fulfill the needs of creating proper vibrations.

    during 1958, Published in:, Tattva Kaomudii Part 1, chapter : Questions and Answers on Ananda Marga Philosophy

    தேமொழி

    unread,
    May 30, 2015, 6:06:48 AM5/30/15
    to mint...@googlegroups.com, ssesh...@gmail.com
    How Are Memories Stored in the Brain?
    August 31, 2010
     



    Because memories underlie so much of our rich life as humans our ability to learn, to tell stories, even to recognize each other it's unsettling to think that it all hinges on the mass of flesh and goo between our ears.

    Researchers have been able to trace memory down to the structural and even the molecular level in recent years, showing that memories are stored throughout many brain structures in the connections between neurons, and can even depend on a single molecule for their long-term stability.


    How it works

    The brain stores memories in two ways. Short-term memories like a possible chess move, or a hotel room number are processed in the front of the brain in a highly developed area called the pre-frontal lobe, according to McGill University and the Canadian Institute of Neurosciences, Mental Health and Addiction.

    Short-term recollection is translated into long-term memory in the hippocampus, an area in the deeper brain. According to McGills , the hippocampus takes simultaneous memories from different sensory regions of the brain and connects them into a single "episode" of memory, for example, you may have one memory of a dinner party rather than multiple separate memories of how the party looked, sounded , and smelled.

    According to McGill, as memories are played through the hippocampus, the connections between neurons associated with a memory eventually become a fixed combination, so that if you hear a piece of music for example, you are likely to be flooded with other memories you associate with a certain episode where you heard that same music.

    Images of the brain

    In a brain scan, scientists see these different regions of the brain light up when someone is recalling an episode of memory, demonstrating how memories represent an index of these different recorded sensations and thoughts.

    The hippocampus helps to solidify the pattern of connections that form a memory, but the memory itself depends on the solidity of the connections between individual brain cells, according to research from McGill and from New York University.

    In turn, the cells of the brain depend on proteins and other chemicals to maintain their connections to each other and to communicate with one another. Scientists at NYU, the Medical College of Georgia and elsewhere have shown with experiments in animals that removing or changing just a single chemical or molecule can prevent the formation of memories, or even destroy memories that already exist.



    N. Kannan

    unread,
    May 30, 2015, 11:59:55 AM5/30/15
    to mint...@googlegroups.com


    On May 30, 2015 5:49 PM, "Seshadri Sridharan" <ssesh...@gmail.com> wrote:
    > கோமாவில் இருந்தாலும் ஒவருக்கு மனம் இருக்கத்தான் செய்கிறது. அது எங்கோ வெளியே போய் விடுவதில்லை. ஆதன் மனதிற்கு சான்றாகவே உடன் இருகின்றது.   
    >>
    >>

    http://www.spiritscienceandmetaphysics.com/harvard-neurosurgeon-confirms-the-afterlife-exist

    “We believe that there is this external world out there, the material realm. That’s the realm that materialist science will try to tell you is the thing that exists, but it’s really right at the heart of the deep enigma of quantum mechanics, that our modern society has wrestled with for more than a century now trying to understand. Basically what the results of those experiments have been screaming, is that consciousness is primary and fundamental in this universe, and that is a very important thing to understand.” 

    Source: Eben Alexander (Author of "Proof of heaven")

    Seshadri Sridharan

    unread,
    May 30, 2015, 12:44:47 PM5/30/15
    to mintamil
    On Sat, May 30, 2015 at 9:29 PM, N. Kannan <navan...@gmail.com> wrote:
    On May 30, 2015 5:49 PM, "Seshadri Sridharan" <ssesh...@gmail.com> wrote:

    > கோமாவில் இருந்தாலும் ஒவருக்கு மனம் இருக்கத்தான் செய்கிறது. அது எங்கோ வெளியே போய் விடுவதில்லை. ஆதன் மனதிற்கு சான்றாகவே உடன் இருகின்றது.   

    நாம் உறங்குகின்றோம் அப்போது நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது கூட தெரிவதில்லை. இதுவும் நினைவு அழிந்த (coma) நிலையோடு ஒப்பத்தக்கதே. எனினும் காலையில் இயல்பாக நினைவோடு எழுகிறோம். அப்படியானால் உறக்கத்தில் கனவுஇல்லா நிலையில் மனம் எங்கு இருந்தது என்று சொல்லமுடியுமா? சரி அறிவியல் இது பற்றி என்ன சொல்லுகிறது?

    எண்டிமீனன் 
    brigjt star

    தேமொழி

    unread,
    May 30, 2015, 4:08:39 PM5/30/15
    to mint...@googlegroups.com, jsthe...@gmail.com
    How the Brain Creates Out-of-Body Experiences

    November 12, 2013 


    The human mind effortlessly constructs the feeling of inhabiting a body, and now scientists are figuring out how the brain produces that experience.

    The findings, presented here Sunday (Nov. 10) at the annual meeting of the Society for Neuroscience, highlight which brain regions are active when a person has an out-of-body experience.

    Recent studies have shown that the brain incorporates information from multiple senses and the first-person visual perspective to create a sense of body ownership. But it's still unclear how the brain perceives the body's location in space. 

    In the study, which has not yet been published in a scientific journal, participants lay inside an MRI scanner while wearing a head-mounted display that showed a first-person camera view of another person's body lying in a corner of the scanner room, with their head either parallel to a wall or perpendicular to it. Researchers from the Karolinska Institutet in Sweden repeatedly touched each participant with an object while simultaneously touching the body shown in the camera view. This gave participants the illusion that the body in the camera view belonged to them.

    To heighten the illusion, the researchers used a knife to threaten the body in the camera, and measured the participants' skin conductance, or ability to conduct electricity (humans sweat more when they're scared). Indeed, the conductance went up for participants as they viewed their virtual body being threatened.

    While the participants were experiencing the body illusion, their brains' parietal and premotor cortices lit up. These areas are involved in integrating sensory information and planning body movements. In addition, the level of brain activity corresponded with the strength of the illusion, suggesting these brain regions are important for producing a sense of body ownership.

    The researchers also examined which brain areas represented a person's location and the direction their head was facing. Using algorithms that looked at patterns across the entire brain, they found that in addition to the parietal cortex, the hippocampus — a brain region critical for memory — was also active in producing a sense of location.

    The findings suggest the brain relies on a complex interplay of information from different senses to produce the experience of being inside of a body — even when it's someone else's. 

    Banukumar Rajendran

    unread,
    Jun 30, 2015, 5:18:08 AM6/30/15
    to mint...@googlegroups.com


    2015-05-27 3:00 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
    மதிப்பிற்குரிய வினைதீர்த்தான், பானுகுமார் அவர்களே,


    அன்பு அரிசோனாருக்கு,

    காலத்தாமதத்திற்கு மன்னிக்க!

    என் பதில்களை இடையிடையேக் கொடுக்கிறேன்!

     

    "ஒன்றை ஒப்புக்கொள்ளமாட்டேன்!" என்று அழுத்தமாக அறிவித்தபின்னர் எதைச்சொல்லி விளக்கம் தருவது?  அது நேரத்தை வீணாக்குவதற்கு ஒப்பாகும்.


    :-)

     

    நான் சில கேள்விகள்  கேட்கிறேன், அதற்கு நீங்கள் அறிவியல் [விஞ்ஞான ரீதியாக] விளக்கினால் இவ்விழையைப் படிக்கும் அனைவரின் புரிதலுக்கும் உதவி செய்யும்.  உங்கள் பதிலிலிருந்து ஆன்மா என்பதை விளக்க அறிவிலியான நானும் முயற்சி செய்ய வசதியாக இருக்கும்.

    கேள்விகளுக்கு வருகிறேன்.

    • பானுகுமார், வினைதீர்த்தான், ஒரு அரிசோனன்  என்று சொல்லிக்கொல்கிரோமே, இவர்கள் யாவர்?

    மனிதர்கள்! :-)

     
    • அது அவர்களின் மூளையா, இதயமா, உயிர்மூச்சா, உடலா?


    அனைத்தும்! (உயிர்மூச்சா அல்ல மூச்சா) :-)


     
    • மனம், மனம் என்கிறோமே, நான் என்று நினைக்கிறோமே, அந்த மனமும், நானும் ஒன்றா, வேறு வேறா?

    மனம் என்ற ஒரு உருப்பு இல்லை. மூளையின் தூண்டுதலால் ஏற்படும் எண்ணங்களின் தொகுப்பே மனம். எண்ணங்கள் சூழ்நிலையால் மாறும். அம்மாற்றத்திற்கும் நம் மூளையேக் காரணம். மூளை முற்றாக இறக்கும்போது மனம் என்ற எண்ணக்கூட்டமும் இல்லாமல் போய்விடுகிறது.

     
    • அறிவு என்கிறோமே, அந்த அறிவு மனமா, நானா, அல்லது வேறு ஏதாவதா?

    அறிவு என்பது ஐம்புலன்களால் ஏற்படும் அனுபவத்தால் விளைவது. அந்த அனுபவத்தை மூளையைக் கொண்டு தூண்டவோ அல்லது மறுதலிக்கவோ செய்கிறோம்.

     
    • அது வெறும் இரத்த ஓட்டமா, உணர்வு நரம்புகளா?

    இரண்டும்.

     
    • ஒருவர் உயிருடன் இருக்கும்வரைதானே, பழைய நினைவுகளைத் திரும்பக் கொணர இயல்கிறது, இறந்தபின் கணினியின் தட்டைப் போல அந்த நினைவை ஏன் திரும்பக் கொணர முடியவில்லை?  

    உங்கள் கூற்றுப்படியே, உயிர் இருக்கும்போதே, நினைவுகளும் தப்புகிறேதே? நாளாக, நாளாக மறதியும் வந்துவிடுகிறேதே? ஏன்??

     
    • அந்த நினைவுகள் யாவை?  அது மனமா, அறிவா, நானா? வேறு ஏதேனும் ஒன்றா?

    அவைகள் மூளையில் பதியப்படும் எண்ண நினைவுகள். உடல் அழியும்போது, அவைகளும் அழிந்துவிடுகின்றன.
     
    • பகுத்தறிவு என்கிறோமே, அதற்கும் மற்ற அறிவுகளுக்கும் வேறுபாடு இருக்கிறதா?
    இல்லை. சிந்திக்கும் திறன்தான் அடிப்படைக் காரணம். சிந்திப்பவைகள் நன்றாக இருக்கும்போது நல்ல சிந்தனை என்கிறோம். தவறாகயிருக்கும்போது தவறான சிந்தனை என்கிறோம். வித்தியாசமாக சிந்திக்கும்போது புரட்சி, பகுத்தறிவு என்கிறோம். அவைகள் தங்களுக்கென்று பெயர்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் சிந்தனைகள், அவ்வளவே.

     
    • அப்படி என்றால், அந்த அறிவுகள் யாவை?

    முன்னர் சொன்னாற்போல், அறிவுகள் பலவகைப்படும். ஐம்புலன்களால் ஏற்படுவது.

     
    • மனச்சாட்சி என்கிறோமே, அது நானா, அறிவா, உள்ளமா? 

    இதுவும் மூளையில் ஏற்படும் எண்ண பிரளல்கள்தான்.
     
    • உள்ளமும், அறிவு[களு]ம், மனமும், நானும், ஒன்றா?  இல்லை என்றால் இத்தனையும் நமக்குள் இருந்து என்ன செய்கின்றன?  நாம் இறந்தபின் அவற்றிற்கு என்ன ஆகிறது?

    உடல் அழியும்போது யாவும் இல்லாமல் போகிறது!


     
    • ஒருவர் உயிருடன் இருக்கும்வரைதான் அவரை ஒரு பெயர்சொல்லி [பானுகுமார், வினைதீர்த்தான், ஒரு அரிசோனன்] என்று அழைக்கிறேம்.

    வேறுப்படுத்திக் காட்ட நாம் போட்டுக்கொள்ளும் நாமக்கரணம்.


     
    • உயிர் போனால் நமது உடல் [பானுகுமாரின் உடல், வினைதீர்த்தானின் உடல், ஒரு அரிசோனனின் உடல்]என்றுதான் குறிப்பிடப்படுகிறது.  நம்மைச் சுட்ட அது கையாளப்படுகிறது.  நாம் இறந்தபின், நமது உடல் உறுப்புகலை யாரும் நாமாகச் சுட்டவில்லை.

    உடல் அழிந்துப்போனப் பின், இவைகளெல்லாம் தேவையில்லாதவைகள்! :-)


     
    • அப்படியானால் அந்த உயிர் என்பது எது?  நாம் இறந்தபின் அதற்கு என்ன ஆகிறது?  அது எப்படி நமது உடலுக்குள் [நமது தாயின் வயிற்றுக்குள் நாம் இருந்தபோது] புகுந்தது?  அது ஏன்  நமது உடலை விட்டு வெளியேறுகிறது?  


    இதுதானே பிரச்சனையே. இதுகாறும், யாரும் விடைக்காண முடியாத கேள்வியிது. இதற்கு சிலர் ஆன்மா என்கிறார்கள். சிலர் அது அவ்வாறில்லை என்கிறார்கள்.

     
    • உயிரை ஏன் விஞ்ஞான முறையில் உருவாக்க முடிவதில்லை?

    இன்னும் விஞ்ஞானம் வளரவில்லை. வருங்காலத்தில் இதற்கு அறிவியல் பதில் காணலாம்!


    எதோ கிடைத்த நேரத்தில் பதில் எழுதியிருக்கிறேன். இதற்கு பதில் எழுதவேண்டும் என்று யான் கட்டாயப்படுத்த
    போவதில்லை.

    இரா.பா



     

    இதற்கு விஞ்ஞான முறையில் எளிய விளக்கம் கொடுங்கள்.  பிறகு நாம் ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா என்பதுபற்றி விவாதிப்போம்.  அதுவரை, வெறும் "நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்!" என்பதால் எந்தப் பயனும் இல்லை.  ஏனென்றால் அது "ஆன்மா இருக்கிறது!" என்று என்னைப்போல சிலர் சொல்வது போன்று நீங்கள் சொல்லும் கூற்று மட்டுமே! 

    யாராலும் பதில் கூற இயலாது.

    சாதி பற்றி ஒரு சிறிய விளக்கம்:
    • பிறப்பே "சாதி" [ஜாதி என்ற வடமொழிச் சொல்] என்று கூறப்படுகிறது.  
    • ஆணாகப் பிறந்தால் ஆண் சாதி, பெண்ணாகப் பிறந்தால் பெண் சாதி.  
    • இதை நாம் மறுப்பதில்லை.  
    • இந்த ஆண், பெண் என்பது, இந்தப் பிறப்பை வேறுபடுத்துவது எது ?  
    • நமது உடற்கூறுதானே!   
    • அதனாலேயே உடலுக்குத்தான் சாதி ,ஆன்மாவுக்கு அல்ல என்று ஓதப்படுகிறது.
    ஒரு அரிசோனன் 

    --

    சொ. வினைதீர்த்தான்

    unread,
    Jul 1, 2015, 3:10:14 AM7/1/15
    to mintamil
    தெளிவான பதில்கள் திரு பானுகுமார். அருமையாக பதில் கூறியுள்ளீர்கள்.

    உயிர் குறித்து பிறர் அபிப்ராயங்கள் பலவாறாக இருப்பதாகக்குறிப்பிட்டுள்ளீர்கள்.
    தங்கள் எண்ணம் அறிய விருப்பம்!
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்

    2015-06-30 14:48 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
    என் பதில்களை இடையிடையேக் கொடுக்கிறேன்!

    Banukumar Rajendran

    unread,
    Jul 3, 2015, 3:02:28 AM7/3/15
    to mint...@googlegroups.com
    2015-07-01 12:40 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
    தெளிவான பதில்கள் திரு பானுகுமார். அருமையாக பதில் கூறியுள்ளீர்கள்.

    உயிர் குறித்து பிறர் அபிப்ராயங்கள் பலவாறாக இருப்பதாகக்குறிப்பிட்டுள்ளீர்கள்.
    தங்கள் எண்ணம் அறிய விருப்பம்!

    நன்றி ஐயா.



    இந்தியாவில் தோன்றிய பல தத்துவங்களும், இந்த உயிரை தங்கள், தங்கள் பார்வையில் அணுகியிருக்கின்றன.

    ஒன்றொன்று முரண்படுகின்றன. மனிதனின் வாழ்க்கையில் விடையில்லா நிகழ்வுகளுக்கு, சமாதானம் கூறச்
    சொல்லப்பட்டவைகள் என்றே எனக்குப் படுகிறது. சொல்லப் போனால், கடவுள் என்ற கருதுகோளுக்கு மாற்றாகவே
    உயிர் கான்செப்ட் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. நிகழும் செயல்களுக்கு, காரண காரியம் கூறும் பொருட்டு, ஆன்மா கான்செப்ட்த் தோன்றியிருக்கலாம் என்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது. இந்தியத் தொல் தத்துவங்களில், கடவுள் என்ற கான்செப்ட்க் கிடையாது. இந்திய சிந்தனைகள் நாத்திகத் தத்துவங்களிலிருந்தேத் தொடங்குகிறது. பின்னாளில், கடவுள் என்ற கான்செப்ட்டை வலுக்கட்டாயமாக உள்நுழைக்கப்படுகிறது. பிறகு வந்த/அல்லது எழுந்தத் தத்துவங்களில்,  ஆன்மாவும், கடவுள் சேர்ந்தே நிகழ்வுகளுக்கு சமாதானம் கூறவும் தலைப்படுகின்றன.


    தேவிபிரசாத் சடோபாத்யாயா அவர்களின் நூல்கள் மேலும் விளங்கிக் கொள்ள உதவும். தமிழில் நீலகேசி உதவும்.


    நன்றியுடன்,

    இரா.பா




     

    N. Kannan

    unread,
    Jul 3, 2015, 4:22:44 AM7/3/15
    to மின்தமிழ்
    2015-07-03 15:02 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
     இந்தியத் தொல் தத்துவங்களில், கடவுள் என்ற கான்செப்ட்க் கிடையாது. இந்திய சிந்தனைகள் நாத்திகத் தத்துவங்களிலிருந்தேத் தொடங்குகிறது. பின்னாளில், கடவுள் என்ற கான்செப்ட்டை வலுக்கட்டாயமாக உள்நுழைக்கப்படுகிறது. பிறகு வந்த/அல்லது எழுந்தத் தத்துவங்களில்,  ஆன்மாவும், கடவுள் சேர்ந்தே நிகழ்வுகளுக்கு சமாதானம் கூறவும் தலைப்படுகின்றன.

    தேவிபிரசாத் சடோபாத்யாயா அவர்களின் நூல்கள் மேலும் விளங்கிக் கொள்ள உதவும். தமிழில் நீலகேசி உதவும்.

    ​பானுகுமார்:

    இதுவொரு நல்ல சிந்தனை. நாம் இங்கு ஆத்திகம் பேசுகின்ற அளவு உண்மையான, தத்துவ ரீதியான, இந்திய மரபு சார்ந்த நாத்திகம் பேசுவதில்லை. இந்தியாவில் கடவுள் கான்செப்ட் பின்னால் உருவானது என்பது சுவாரசியமான சிந்தனை. ஆன்மா இல்லையெனினும் கடவுள் இருப்பதை மறுப்பது கடினமாக உள்ளது எனக்கு! எனவே அவை தொடர்புடையவை என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆன்மா என்பதை வேறு பல நோக்கிலும் காணமுடியுமென்று தோன்றுகிறது.

    இந்திய நாத்திக மரபிற்கென்று ஓர் இழை தொடங்குங்களேன். நம் விநாயகம் சாரும் கலந்து கொள்வார் போல் தோன்றுகிறது. நான், மதுரபாரதி போன்றோர் ஒரு நிலையில் எல்லாவற்றையும் விட்டு விலகி நின்றவர்கள். எனவே இதை ஒரு தாக்குதலாகக் கருத மாட்டோம் \.

    நா.கண்ணன்​
     

    Nagarajan Vadivel

    unread,
    Jul 3, 2015, 4:34:02 AM7/3/15
    to மின்தமிழ்

    2015-07-03 13:52 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
    உண்மையான, தத்துவ ரீதியான, இந்திய மரபு சார்ந்த நாத்திகம் பேசுவதில்லை

    ​இந்தியமரபு என்று கொண்டால அதுவிரியும்.  வேதக்கடவுளர் மறுப்பு இந்துக்கடவுளர் மறுப்பு உருவ வழிபாடு எதிர்ப்பு என்று வளர்ந்தததை இந்தியமரபு சார்ந்த நாத்திகம் என்று எவ்வாறு கருத முடியும்?

    தமிழர்களின் இயற்கை வழிபாடும் சமண பெளத்த உருவ வழிபாட்டு எதிர்ப்பும் முதலில் இணக்கத்துடன் இருந்து பின்னர் பழங்குடி வழிபடு வடபுல வேதக்கடவுளர் வழிபாட்டுடன் கிராமப்பெண் தெய்வங்களைச் சக்தியாக இணைத்ததும் சமண பெளத்தக் கருத்துக்களுக்கு மாற்றாக தமிழர் சமயநம்பிக்கை அமைந்துவிட்டது.  பிற்காலத்தில் உருவான இந்துசமய மறுமலர்ச்சியில் ஆதிசங்கரர் ஸ்ரீராமானுஜர் கருத்துக்களுக்கு மாறாக மத்வாச்சாரியாரின் கருத்து முழுக்க இந்துக் கடவுளர் உருவ வழிபாட்டை மறுத்தாலும் அதை நாத்திகமென்று கருதுவைல்லையே ஏன்?
    ​இணையமுனி​

    N. Kannan

    unread,
    Jul 3, 2015, 8:47:30 AM7/3/15
    to மின்தமிழ்
    2015-07-03 16:33 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
    ​2015-07-03 13:52 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
    உண்மையான, தத்துவ ரீதியான, இந்திய மரபு சார்ந்த நாத்திகம் பேசுவதில்லை

    ​இந்தியமரபு என்று கொண்டால அதுவிரியும்.  வேதக்கடவுளர் மறுப்பு இந்துக்கடவுளர் மறுப்பு உருவ வழிபாடு எதிர்ப்பு என்று வளர்ந்தததை இந்தியமரபு சார்ந்த நாத்திகம் என்று எவ்வாறு கருத முடியும்?
    >>>> 

    ​ஐரோப்பிய வருகைக்கு முன் என்று கொள்க!​

    >>>>
     தமிழர்களின் இயற்கை வழிபாடும் சமண பெளத்த உருவ வழிபாட்டு எதிர்ப்பும் முதலில் இணக்கத்துடன் இருந்து பின்னர் பழங்குடி வழிபடு வடபுல வேதக்கடவுளர் வழிபாட்டுடன் கிராமப்பெண் தெய்வங்களைச் சக்தியாக இணைத்ததும் சமண பெளத்தக் கருத்துக்களுக்கு மாற்றாக தமிழர் சமயநம்பிக்கை அமைந்துவிட்டது.  
    >>>

    இது நீங்கள் அடிக்கடி சொல்லும் கருத்து. தமிழ் வரலாறு சங்க காலத்திலிருந்துதான் தொடங்கிறது. தொல்காப்பியம் இருப்பதில் பழையது. அதில் மாயோன் வழிபாடு பேசப்படுகிறது. எனவே உங்களுக்கு, 'பழமை' என்பது, 'எவ்வளவு பழமை என்று முன்னமே சொல்லிவிடுதல் நலம். இல்லையெனில் குழப்பமே மீளும்.

    >>>>>

    பிற்காலத்தில் உருவான இந்துசமய மறுமலர்ச்சியில் ஆதிசங்கரர் ஸ்ரீராமானுஜர் கருத்துக்களுக்கு மாறாக மத்வாச்சாரியாரின் கருத்து முழுக்க இந்துக் கடவுளர் உருவ வழிபாட்டை மறுத்தாலும் அதை நாத்திகமென்று கருதுவைல்லையே ஏன்?
    ​>>

    மாத்வர் பற்றி புதிய கருத்தை முன் வைக்கிறீர்கள். இங்கு அத்வைதமும், விஷிட்டாத்வைதமும் அலசப்படும் அளவிற்கு மாத்வரின் கொள்கைகள் விளக்கபடுவதில்லை. இங்கு மாத்வர்கள் யாருமில்லையா? ஒரேயொரு படம். ரஜனி நடித்தது. ராகவேந்திரர் பற்றியது. அதிலும் அவ்வளவாக விவரிக்கப்படவில்லை என்று தோன்றுகிறது. அது பற்றியும் பேசலாம். அறிய ஆவல்.

    நா.கண்ணன்


    Banukumar Rajendran

    unread,
    Jul 4, 2015, 2:46:26 AM7/4/15
    to mint...@googlegroups.com
    2015-07-03 13:52 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
    2015-07-03 15:02 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
     இந்தியத் தொல் தத்துவங்களில், கடவுள் என்ற கான்செப்ட்க் கிடையாது. இந்திய சிந்தனைகள் நாத்திகத் தத்துவங்களிலிருந்தேத் தொடங்குகிறது. பின்னாளில், கடவுள் என்ற கான்செப்ட்டை வலுக்கட்டாயமாக உள்நுழைக்கப்படுகிறது. பிறகு வந்த/அல்லது எழுந்தத் தத்துவங்களில்,  ஆன்மாவும், கடவுள் சேர்ந்தே நிகழ்வுகளுக்கு சமாதானம் கூறவும் தலைப்படுகின்றன.

    தேவிபிரசாத் சடோபாத்யாயா அவர்களின் நூல்கள் மேலும் விளங்கிக் கொள்ள உதவும். தமிழில் நீலகேசி உதவும்.

    ​பானுகுமார்:

    இதுவொரு நல்ல சிந்தனை. நாம் இங்கு ஆத்திகம் பேசுகின்ற அளவு உண்மையான, தத்துவ ரீதியான, இந்திய மரபு சார்ந்த நாத்திகம் பேசுவதில்லை. இந்தியாவில் கடவுள் கான்செப்ட் பின்னால் உருவானது என்பது சுவாரசியமான சிந்தனை. ஆன்மா இல்லையெனினும் கடவுள் இருப்பதை மறுப்பது கடினமாக உள்ளது எனக்கு! எனவே அவை தொடர்புடையவை என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆன்மா என்பதை வேறு பல நோக்கிலும் காணமுடியுமென்று தோன்றுகிறது.

    இந்திய நாத்திக மரபிற்கென்று ஓர் இழை தொடங்குங்களேன்.

    அன்பின் கண்ணன் ஐயா,

    கண்ணனின் குறும்புகள் ஆரம்பித்துவிட்டது போலயிருக்கிறது. :-)
    ---------

    இப்போ, சீரியஸ்!

    ஐயா, அதற்கு யான் சற்றும் தகுதி உடையவன் இல்லை. கற்றுக் கொள்ள வேண்டியவைகள் இன்னும் ஏராளம் உள்ளன. தேவி பிரசாத் (இந்திய நாத்திகம், உலகாயுதம்) போன்றோர் பொத்தகங்கள் படித்ததனால் எழுதுவது. இன்னும் ஆழமாகப் படிக்கவேண்டும். இப்போதெல்லாம், எழுதவே பிடிப்பதில்லை. மணிக்கணக்காக, பொத்தகங்கள் படிப்பதே மனம் விரும்புகிறது.

    ஆழமாகப் படிப்போர் (திரு.அரங்கனார்) எழுதினால், நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன். யான் சொன்னால் எழுதமாட்டார். தாங்கள் சொன்னால் கேட்பார். அவரை எழுத சொல்லலாம்.

    நன்றி!

    இரா.பா





     
    நம் விநாயகம் சாரும் கலந்து கொள்வார் போல் தோன்றுகிறது. நான், மதுரபாரதி போன்றோர் ஒரு நிலையில் எல்லாவற்றையும் விட்டு விலகி நின்றவர்கள். எனவே இதை ஒரு தாக்குதலாகக் கருத மாட்டோம் \.

    நா.கண்ணன்​
     

    --

    N. Kannan

    unread,
    Jul 4, 2015, 11:00:23 AM7/4/15
    to மின்தமிழ்
    2015-07-04 14:46 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

    கண்ணனின் குறும்புகள் ஆரம்பித்துவிட்டது போலயிருக்கிறது. :-)
    ---------

    ​குறும்பு இல்லை ஸ்வாமி! உண்மையாகத்தான். நான் கல்லூரி நாட்களில் பாதி நாத்திகன். காரணம் எனது பேராசிரியர். அவரின் பிரிய மாணவன் நான். அவரோ பழுத்த நாத்திகர். அதன் பின் நுழைந்த ஜே.கிருஷ்ணமூர்த்தி உலகமோ அதைவிடக் கறார். அந்த அனுபவத்தில் நான் எழுதத்துவங்கினால் என்னை வைணவன் என்று நீங்கள் போடும் அடையாளம் சுக்கு நூறாகிவிடும். அப்போதும் என்னைப் பிடிக்காது. ஏனெனில் எல்லோரையும் நிர்வாணமாக்கிவிடுவேன். உமக்குப்பழகிய ஒன்று என்பதால் நீர் தாக்குப்பிடிக்கலாம் :-))

    வைணவத்தின் பால் உள்ள அன்பு, என் வேர்களைத்தேடும் முயற்சி. தமிழ் மரபு அறக்கட்டளையின் முக்கிய பணிகளுள் ஒன்று அவரவர் வேர்களைத்தேடுதல். "வேர் கொண்டால்தான் விண்ணிற்கு எழ முடியும்". எப்போதும் எல்லோரையும் அடையாளப்படுத்தியே பழகிவிட்ட தமிழ்ச் சமுதாயத்திற்கு யாரையும் அடையாளப்படுத்தாவிடில் தூக்கம் வராது. என்னை வைணவன் என்று சொல்வது கனசுந்தரத்திற்கு பாரதி போட்ட புணூல் போல்தான் ;-)
     

    ஆழமாகப் படிப்போர் (திரு.அரங்கனார்) எழுதினால், நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன். யான் சொன்னால் எழுதமாட்டார். தாங்கள் சொன்னால் கேட்பார். அவரை எழுத சொல்லலாம்.


    ​அங்குதான் பிழை விடுகிறீர். அதுவொரு காட்டாறு. எங்கு எப்படிப்பாயுமென்று தெரியாது. எல்லோரும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் அவர் வைணவம் பேசுவதால் நான் அவருக்கு ஜால்ரா அடிக்கிறேன் என்று. உண்மை என்னவெனில். அவர் உண்மை பேசுகிறார். சான்றுகளோடு பேசுகிறார். மூலப்பனுவல் வாசிப்பு நம் எல்லோருக்குமே குறைவு. அவர் வாசிக்கிறார். அதற்கும் மேல் அவரது ஶ்ரீரங்க வாசம் அவருக்கு discourse எப்படிச் செய்ய வேண்டுமென சொல்லித்தந்திருக்கிறது. ஒரு பிரதியை எப்படி அணுக வேண்டும், எப்படிப் பொருள் கொள்ள வேண்டுமென்று தெரிந்திருக்கிறது. எனது தேடலும் உண்மை நோக்கியதே. எனவே அவர் எழுத்து பிடிக்கிறது. அவரிடம் பாசாங்குத்தனம் குறைவு. பட்டவர்த்தனம் அதிகம். அடியேனும் அப்படியே. அதனாலும் ஒத்துப்போகிறது. நாளை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு ஏதாவது பேசுவார்னப்போதும் எனக்கு இழந்ததான உணர்வு இல்லை என்பதால், அதுவும் பிடிக்கும். பலருக்கு என்னைத்தெரியாது. என்னைப்பற்றி அவர்களாக உருவாக்கிவைத்திருக்கும் ஒரு பொம்மையுடன் ஊடாடிக்கொண்டு இருக்கிறார்கள். ரங்கனை எனக்குத்தெரியுமென்று நான் சொல்ல மாட்டேன். எனவே நீரே உங்கள் விஞ்ஞாபனத்தை முன் வையும் :-))

    ​நா.கண்ணன்​

    சொ. வினைதீர்த்தான்

    unread,
    Jul 6, 2015, 1:22:25 PM7/6/15
    to mintamil, vallamai
    கணேசனார் ஒரு இழையில் கீழ்வரும் குறளையும் அதற்கான பரிமேலழகர் உரையையும் பகிர்ந்திருந்தார்.
    //
    மேல்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் 
    கற்றா ரனைத்திலர் பாடு.


    பரிமேலழகர் உரை
    கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர். (உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.) //

    பரிமேலழகர் உரையில் உடலோடு சாதி ஒழியும் என்று குறித்துள்ளதை காண்கிறோம். இவ்விழையின் முதல் பதிவில் பதிவுசெய்துள்ள சிவஞான போத மாபாடியத்தில் ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள் குறித்துள்ளதும் இக்கருத்தே.
    என்வே அன்றைய புரிதல் சாதி உடல் சார்ந்தது என்பது புலப்படுகிறது.
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.


    சொ. வினைதீர்த்தான்

    unread,
    Jul 6, 2015, 1:30:11 PM7/6/15
    to mintamil, Banukumar Rajendran
    2015-07-03 12:32 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

    இந்தியாவில் தோன்றிய பல தத்துவங்களும், இந்த உயிரை தங்கள், தங்கள் பார்வையில் அணுகியிருக்கின்றன.

    ஒன்றொன்று முரண்படுகின்றன. மனிதனின் வாழ்க்கையில் விடையில்லா நிகழ்வுகளுக்கு, சமாதானம் கூறச்
    சொல்லப்பட்டவைகள் என்றே எனக்குப் படுகிறது. சொல்லப் போனால், கடவுள் என்ற கருதுகோளுக்கு மாற்றாகவே உயிர் கான்செப்ட் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. நிகழும் செயல்களுக்கு, காரண காரியம் கூறும் பொருட்டு, ஆன்மா கான்செப்ட்த் தோன்றியிருக்கலாம் என்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது. இந்தியத் தொல் தத்துவங்களில், கடவுள் என்ற கான்செப்ட் கிடையாது. இந்திய சிந்தனைகள் நாத்திகத் தத்துவங்களிலிருந்தேத் தொடங்குகிறது. பின்னாளில், கடவுள் என்ற கான்செப்ட்டை வலுக்கட்டாயமாக உள்நுழைக்கப்படுகிறது. பிறகு வந்த/அல்லது எழுந்தத் தத்துவங்களில்,  ஆன்மாவும், கடவுள் சேர்ந்தே நிகழ்வுகளுக்கு சமாதானம் கூறவும் தலைப்படுகின்றன.

    எண்ணிப்பார்க்கத்தக்க கருத்து திரு பானுகுமார். மிக்க நன்றி. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கத்திற்கும் செவ்வியான் கேட்டிற்கும் காரணம் ஆராய்த்தக்கது என்று திருவள்ளுவர் ஒதுங்கிவிட்டார். காரண காரியம் கூற ஆன்மா கான்செப்ட் உருவாகியிருக்கும் என்பது சரியானதே.

    Mohanarangan V Srirangam

    unread,
    Jul 7, 2015, 4:48:33 AM7/7/15
    to min tamil
    2015-07-04 20:30 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
    2015-07-04 14:46 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

    கண்ணனின் குறும்புகள் ஆரம்பித்துவிட்டது போலயிருக்கிறது. :-)
    ---------


    வைணவத்தின் பால் உள்ள அன்பு, என் வேர்களைத்தேடும் முயற்சி. தமிழ் மரபு அறக்கட்டளையின் முக்கிய பணிகளுள் ஒன்று அவரவர் வேர்களைத்தேடுதல்.
     

    ஆழமாகப் படிப்போர் (திரு.அரங்கனார்) எழுதினால், நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன். யான் சொன்னால் எழுதமாட்டார். தாங்கள் சொன்னால் கேட்பார். அவரை எழுத சொல்லலாம்.

    ​அங்குதான் பிழை விடுகிறீர். அதுவொரு காட்டாறு. எங்கு எப்படிப்பாயுமென்று தெரியாது.


    ஓ! மன்னிக்கவும். இந்த இழையை நான் பார்க்கவில்லை. எனவே தாமதமாகப் பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும். ப்ரொஃபஸர் கண்ணன் அவர்கள் நினைத்துக் கூறவில்லையாயினும் இதில் ஒரு  கருத்து தொனிக்கிறது - அதாவது ஒரு திசை என்று நோக்கம் என்று இல்லாமல் தோன்றியபடியெல்லாம் எழுதுகிறேன் என்பது போல் தொனிக்கக் கூடும். அதனால் என் தரப்பிலான பதில் இதற்கு எழுதுகிறேன். அப்படி திக்கு திசையில்லாமல் நான் எழுதவில்லை. வழமைக்கு மாறாக, ஆன்மிகம் என்றால் நம்பிக்கையின் உலகம் என்பது இல்லாமல், ஆன்மிகம் என்பது அறிவின் தேட்டமும் நிறைவும் என்ற நோக்கில் எழுதப்படுபவை என் எழுத்துகள். எனவே பழக்கப்பட்ட அணுகுமுறைகளுக்குப் பல சமயம் மாறுபடலாம். ஆனால் என் நோக்கு, உண்மையான ஆன்மிக வாழ்வு என்பதை நோக்கித்தான் இருக்கும். உண்மையான, திடமான நன்மை மிக்க ஆன்மிக நலம் ஓங்க வேண்டுமானால் அறிவின் இயக்கம் முழுமை எய்த வேண்டும்; விஞ்ஞானம் தரும் தெளிவுகளை நாம் உள்வாங்க வேண்டும்; ஏன் நாத்திகச் சிந்தனையும் தெருட்டல் என்னும் நோக்கில் உதவிகரமானதுதான் என்பது என் எண்ணம். அதேநேரம் கவிதை இயல் என்பதின் பூரண மலர்ச்சியையும் நம்முள் செழிக்க வேண்டும். இந்த அணுகுமுறையையும் நான் விவேகாநந்தரிடம்தான் பெற்றுக் கொண்டேன்.


    @திரு பானுகுமார்,

    திரு பானுகுமார் இவ்வாறு தயக்கச் சொற்கள் எழுதுவதற்கு ஒரு விதத்தில் நானே தான் காரணம். அவருடைய நிலைப்பாட்டின் முரண்பாட்டை அவருக்கு உணர்த்துவதற்காக நான் சொன்னது அவரிடம் எனக்குப் பகை போன்ற வேண்டாத ஒரு சாயை தோன்றக் காரணமானது. யாரிடமும் பகைமை எனக்குக் கிடையாது. பொருந்தாதார் பக்கலினின்றும் இயல்பாகவே நான் விலகிக் கொள்பவன். அவ்வளவே. திரு பானுகுமார் விஷயத்தில் எப்பொழுதும் மதிப்பு கொண்டவனே அன்றி பகை உணர்ச்சி எப்பொழுதும் கிடையாது. பார்க்கப் போனால் பல அருமையான கோப்புகளும் கட்டுரைச் சுட்டிகளும் மன்றத்தில் தந்து ஆய்வாளர்களுக்கு உதவி புரிபவர் அவர். அவரிடம் நன்றி பாராட்டுபவர்களில் ஒருவன் நான்.

    தன்னிலை விளக்கம் தர ஒரு வாய்ப்பாக இது அமைந்தமைக்கு நன்றி.

    ***

    Banukumar Rajendran

    unread,
    Jul 8, 2015, 2:53:47 AM7/8/15
    to mint...@googlegroups.com
    நன்றி அரங்கனாரே!

    என்னடா இப்படி எழுதிவிட்டாரே என்று நினைத்தேன். நாம் ஏதாவது தவறாக எழுதிவிட்டோமா என்று எழுதியதை
    மீண்டும் படித்துப்பார்த்தேன். அலட்சியமாக எழுதியிருந்ததுபோலதான் இருந்தது. சரி, இனி இப்படி எழுதக்கூடாது, நிறுத்தி, நிதானமாக சரியான சொற்களைக் கொண்டு எழுதவேண்டும் என்றும் முடிவெடுத்துகிறேன்.

    தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும் ஐயா.

    நன்றி.


    இரா.பா





     

    ***

    Mohanarangan V Srirangam

    unread,
    Jul 8, 2015, 3:21:00 AM7/8/15
    to min tamil
    புரிந்து கொண்டமைக்கு நன்றி திரு பானுகுமார்.

    சமயத்தில் என் சொற்கள் கருத்துகளுக்காகவன்றித் தனிப்படப் பிறரை வருத்துவது கண்டு நாணம் கொள்கிறேன்.

    ***

    N. Kannan

    unread,
    Jul 8, 2015, 6:00:44 AM7/8/15
    to மின்தமிழ்
    2015-07-07 16:48 GMT+08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
    ஓ! மன்னிக்கவும். இந்த இழையை நான் பார்க்கவில்லை. எனவே தாமதமாகப் பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும். ப்ரொஃபஸர் கண்ணன் அவர்கள் நினைத்துக் கூறவில்லையாயினும் இதில் ஒரு  கருத்து தொனிக்கிறது - அதாவது ஒரு திசை என்று நோக்கம் என்று இல்லாமல் தோன்றியபடியெல்லாம் எழுதுகிறேன் என்பது போல் தொனிக்கக் கூடும். 

    ​இம்மாதிரி சமயத்தில்தான் நான் ‘புரபசோர்’ என்று தெரியுமாக்கும் ;-)

    தமிழண்டா :-))

    க.>​
     

    Mohanarangan V Srirangam

    unread,
    Jul 8, 2015, 9:12:04 AM7/8/15
    to min tamil

    2015-07-08 15:30 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:


    ​இம்மாதிரி சமயத்தில்தான் நான் ‘புரபசோர்’ என்று தெரியுமாக்கும் ;-)
     

    தவறு என்று உணர்ந்து கொண்டேன். திருத்திக் கொள்கிறேன்.

    ***
    Reply all
    Reply to author
    Forward
    0 new messages