கோவில் கோபுரம் மற்றும் தேர் சிற்பங்களில் விரசம் ஏன்?

367 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
Mar 9, 2014, 11:02:55 PM3/9/14
to Minthamil, வல்லமை, vallamai editor, நட்புடன், தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், Thamizhthendral, Anthiyuran PazamaiPesi, A K Rajagopalan, Mazalais

கோவில் கோபுரம் மற்றும் தேர் சிற்பங்களில் விரசம் ஏன்?

 

நம் நாட்டுக் கோவில்களில் பலவற்றிலும் மற்றும் கோவில் தேர் சிற்பங்களிலும் விரசமான சிற்பங்களையும் காண்கிறோம்.  இது ஏன்?  தூய்மையான மனத்தோடு இறை வழிபாடு செய்ய வேண்டிய இடத்திலே விரசம் வரலாமா?

 

இந்தக் கேள்வி என் மனதை வெகு நாட்களாக அரித்துக் கொண்டிருந்த ஒன்று.  யோசித்துப் பார்த்ததில் சில விடைகள் எனக்குக் கிடைத்தன.  அவற்றை அன்பர்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

 

முதலாகத் தோன்றியது, பாலியல் உறவோ அது சம்பந்தப் பட்டவையோ மனித வாழ்க்கையில் ஒரு பகுதி.  அதை கோவில்களிலும் தேர்களிலும் காட்டுவதில் என்ன தவறு?

 

கூடவே வந்தது ஒரு கேள்வி, “விரசமான காட்சிகள் பார்ப்பவரை தவறான வழிகளில் நடக்கச் செய்திடாதா?” என்று.  வந்தது பதிலும் அதற்கு.  மேலே படியுங்கள்.

 

ஊருக்கு வெளியிலிருந்தே கண்ணில் படுவது வானளாவிய கோபுரம்.  அட.  ரொம்ப அழகாயிருக்கும் போல இருக்கிறதே. அருகில் சென்று பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்ற கோயிலை நெருங்குகிறோம்.  கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறோம்.  அதில் அடுக்கடுக்காக பல பொம்மைகள்.  கீழ் வரிசையில் உள்ள உருவங்களில் சில விரசமானவையும் கூட.  நம் மனம் சிறிதளவாவது பக்குவம் அடைந்த நிலயில் இருந்தால் அந்த வரிசைக்கு மேல் உள்ள உருவங்களைப் பார்கிறோம்.  அவற்றில் விரசம் இல்லை.  இது ஆலயங்கள் நமக்குக் கற்றுத் தரும் முதல் பாடம்.  நீ உன் மனதைக் கட்டுப் படுத்தினால் உயர்வாய் என்பதை போதிக்கிறது.

 

நம் மனத்திலே சிறிதளவும் தெய்வ நம்பிக்கை இல்லை என வைத்துக் கொள்வோம்.  நம் மனதிலே தோன்றுவது என்ன?  ஓகோ இந்தக் கோவிலுக்குள் சென்று பார்த்தால் இன்னும் பல விரசமான காட்சிகளையும் காண முடியுமோ?’ என்னும் எண்ணம்.  உள்ளே செல்கிறோம்.  அங்கு காண்பது என்ன?  நூற்றுக்கால் ஆயிரங்கால் மண்டபம் என பெரிய பெரிய மண்டபங்கள்.  இவற்றில் மக்கள் கூடி வேத மந்திரங்களைக் கற்கவோ, ஆன்மீக சொற் பொழிவுகளைக் கேட்கவோ, இசை, நடனம், நாடகம் போன்றவற்றைக் கேட்டு, பார்த்து  ரசிக்கவோ வசதி.  சொல்லப் போனால் இலவச பாட சாலைகள்தானே கோயில்கள்?

 

வெளிப் பிராகாரம், நடுப் பிராகாரம், உள் பிராகாரம் என ஒவ்வொன்றையும் சுற்றி வருகிறோம்.  நல்ல வெளிச்சமாக இருந்த வெளிப் பிராகாரத்தில் இருந்து உள்ளே செல்லச் செல்ல வெளிச்சம் குறைந்து கொண்டே வந்து கடைசியில் இறைவன் சிலைகள் உள்ள கருவறையில் கும்பிருட்டு.  அங்கு எண்ணை விளக்கின் ஒளியில் இறைவனின் உருவம் மங்கலாகத் தெரிகிறது.  பூஜை செய்பவர் ஒரு தட்டில் கற்பூரத்தை ஏற்றி இறைவனின் சிலைக்கு முன்னே சுற்றிக் காட்டுகிறார்.  இப்போது இறைவனின் முகம் நன்றாகத் தெரிகிறது.  ஆனால்  நாம் என்ன செய்கிறோம்?  அடுத்த வினாடி கண்களை இறுக்க மூடிக் கொண்டு ஆண்டவனை நினைக்கிறோம்.  நம் மனக் கண்ணில் தெறிவது ஆண்டவனின் உருவம்.  உன்னுள்ளே உற்றுப் பார்.  என்னைக் காண்பாய்”, என்ற உன்னத தத்துவத்தை அல்லவா நமக்கு வெகு எளிதாக போதித்து விட்டது ஆலயம்.

என்ன அன்பர்களே கோவில் தேர்களிலும், கோபுரங்களிலும் விரசமான சிற்பங்களும் இன்ருப்பதால் தவறு இல்லைதானே?

 

நடராஜன் கல்பட்டு

 

 

 


--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 10, 2014, 12:45:39 AM3/10/14
to vallamai, Minthamil, vallamai editor, Thamizhthendral, A K Rajagopalan, Mazalais
2014-03-10 8:32 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:

கோவில் கோபுரம் மற்றும் தேர் சிற்பங்களில் விரசம் ஏன்?

 

நம் நாட்டுக் கோவில்களில் பலவற்றிலும் மற்றும் கோவில் தேர் சிற்பங்களிலும் விரசமான சிற்பங்களையும் காண்கிறோம்.  இது ஏன்?  தூய்மையான மனத்தோடு இறை வழிபாடு செய்ய வேண்டிய இடத்திலே விரசம் வரலாமா?

 

இந்தக் கேள்வி என் மனதை வெகு நாட்களாக அரித்துக் கொண்டிருந்த ஒன்று.  யோசித்துப் பார்த்ததில் சில விடைகள் எனக்குக் கிடைத்தன.  அவற்றை அன்பர்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

 

முதலாகத் தோன்றியது, பாலியல் உறவோ அது சம்பந்தப் பட்டவையோ மனித வாழ்க்கையில் ஒரு பகுதி.  அதை கோவில்களிலும் தேர்களிலும் காட்டுவதில் என்ன தவறு?

 

கூடவே வந்தது ஒரு கேள்வி, “விரசமான காட்சிகள் பார்ப்பவரை தவறான வழிகளில் நடக்கச் செய்திடாதா?” என்று.  வந்தது பதிலும் அதற்கு.  மேலே படியுங்கள்.

 

அடுத்த வினாடி கண்களை இறுக்க மூடிக் கொண்டு ஆண்டவனை நினைக்கிறோம்.  நம் மனக் கண்ணில் தெறிவது ஆண்டவனின் உருவம்.  உன்னுள்ளே உற்றுப் பார்.  என்னைக் காண்பாய்”, என்ற உன்னத தத்துவத்தை அல்லவா நமக்கு வெகு எளிதாக போதித்து விட்டது ஆலயம்.

என்ன அன்பர்களே கோவில் தேர்களிலும், கோபுரங்களிலும் விரசமான சிற்பங்களும் இன்ருப்பதால் தவறு இல்லைதானே?

 


நன்றி ஐயா. 
எனக்கும் இந்தக் கேள்வியுண்டு. நான் பலவற்றில் படித்தறிந்தது.
1.கண்ணேறு கழிப்பதற்காக முன்னோர் வைத்துள்ளார்கள்.(திருஷ்டி பரிகாரம்)
2.தாந்தீரீக, கோவில் சிற்பக்கலைச் சாத்திரங்கள்.
3.மனித வாழ்க்கையின் பகுதி புனிதம்தான் என உணர்த்துவதற்கு. 
வேறு காரணங்களை நண்பர்கள் தரக்கூடும்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 10, 2014, 6:12:26 AM3/10/14
to vall...@googlegroups.com, Minthamil
திரு.சொ.வி ஐயா, திரு.கல்பட்டார் இருவரது கருத்துக்களும் ஏற்புடையவையே!

/////வேறு காரணங்களை நண்பர்கள் தரக்கூடும்.////

அக்காலத்தில், மிகச் சிறிய வயதில் திருமணம் நடந்தது.. இக்காலம் போல ஊடகங்கள் ஏதும் இல்லை.. அக்காலத்து மாந்தர்களும் இவற்றையெல்லாம் வெளிப்படையாகப் பேசுவது குறைவு.. எனவே, இம்மாதிரி சிற்பங்கள், பலர் சொல்லத் தயங்கும் விஷயத்தை, சொல்வதற்காகப் பயன்படுத்தப்பட்டன.. 

பொதுவாக, பரிகாரத் தலங்கள் என்று சொல்லப்படுகின்ற கோயில் கோபுரங்களில் இம்மாதிரி சிற்பங்கள் அதிகம்.


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-03-10 10:15 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:

    

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 10, 2014, 6:49:30 AM3/10/14
to vallamai, mintamil
ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப வாழ்வில் புரிதலும், ஒப்புதலும், உடலுக்கு ஊறின்மைக்கான தக்க காப்பும், பரஸ்பர அக்கறையும், மகிழ்விக்கும் நோக்கமும் இருக்கும்வரை வக்கிரமென்று ஏதுமில்லை என்று உணர்த்துவதற்காகவும் இருக்கலாம். (குடும்பநெறி தவறிய காட்சிகளுக்கு என் விளக்கம் பொருந்தாது. அவற்றை Fantasy என்ற வகையில் சேர்க்கலாம்)  

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014-03-10 15:51 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:

இந்தக் காரணம் நிச்சயமாக இருக்க முடியாது.  ஏனென்றால் சாதாரண புணர்ச்சி சிற்பங்கள் மற்றும் இன்றி பல வக்ரப் புணர்ச்சி சிற்பங்களையும் காண முடிகிறதே.  இது சூதறியா மக்களை படுகுழியில் தள்ளிடாதா?

வேந்தன் அரசு

unread,
Mar 10, 2014, 8:05:18 AM3/10/14
to vallamai, Minthamil, vallamai editor, நட்புடன், தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், Thamizhthendral, Anthiyuran PazamaiPesi, A K Rajagopalan, Mazalais
அந்தக்காலத்தில் அது விரசமாக தோணலை. இன்று நாம் கெட்டுபோயிட்டோம்.


9 மார்ச், 2014 11:02 பிற்பகல் அன்று, Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Innamburan S.Soundararajan

unread,
Mar 10, 2014, 9:38:27 AM3/10/14
to vall...@googlegroups.com, Minthamil, தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், Anthiyuran PazamaiPesi, A K Rajagopalan
அந்தக்காலத்தில் அது விரசமாக தோணலை. இன்று நாம் கெட்டுபோயிட்டோம்.

~ பாயிண்ட் மேட். 

Suba.T.

unread,
Mar 10, 2014, 10:29:23 AM3/10/14
to Natrajan Kalpattu Narasimhan, மின்தமிழ், Subashini Tremmel
நல்ல கேல்வி. 
உங்கள் விளக்கமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கின்றது.

புதிதாகக் கட்டப்படும் ஆலயங்களில் சிற்பிகள் இவ்வகை சிற்பங்களை இணைக்கின்றார்களா ? ஏனெனில் நான் அறிந்த வரை மலேசிய சிங்கை ஆலயங்களின் கோபுரங்களிலோ சுவர்களிலோ தூண்களிலோ இவ்வகையான சிற்பங்கள் இடம்பெறுவதில்லை. மலேசிய சிங்கயில் கடந்த 150 ஆண்டுகளாகத் தான் புதிய கோயில்கள் பல எழுந்தன. சோழர் காலத்திலும் அதற்கு முன்னரும்  கட்டப்பட்டவை எல்லாம் அழிக்கப்பட்டு சில பகுதிகளும் சிற்பங்களுமே அருங்காட்சியகத்தில் உள்ளன. அண்டஹ் பழைக் கோயில்கள் நிச்சயமாக சிற்பிகள் தமிழக கோயில் போல இச்சிற்பங்களை இணைத்திருப்பார்கள் என்றே நினைக்கிரேன்.

ஆக மலேசிய சிங்கை போன்ற நாடுகளில் புதிய கோயிலை கட்டுபவர்கள் தெய்வ வடிவங்களையும் விலங்குகளின் சிலைகளையும், வாத்தியக் கருவிகளையும், நடன இசைக் கலஞர்களையும் என இப்படித்தான் சிலை அமைக்கின்றனர்.  தேர் அமைக்கும் கோயில் நிர்வாகத்தினர் வெள்ளி ரதம் அமைக்கும் போது இறை வடிவங்களையும் இலை பூ செடி என அலங்கார வடிவங்களையும் இணைக்கின்றனர்.

காம உணர்வை வெளிக்காட்டும் சிற்பங்களை புதிய கோயில்களில் நான் பார்த்ததில்லை. 

சுபா
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba.T.

unread,
Mar 10, 2014, 10:30:32 AM3/10/14
to மின்தமிழ், Subashini Tremmel


2014-03-10 11:12 GMT+01:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​..
பொதுவாக, பரிகாரத் தலங்கள் என்று சொல்லப்படுகின்ற கோயில் கோபுரங்களில் இம்மாதிரி சிற்பங்கள் அதிகம்.

தமிழகத்தில் உள்ள சில பரிகாரத்தலங்களின் பெயர்களையும் அவை இருக்கும் ஊர்​​களின் பெயர்களையும் தரமுடியுமா பார்வதி?

சுபா


Suba.T.

unread,
Mar 10, 2014, 10:32:12 AM3/10/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-03-10 13:05 GMT+01:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
அந்தக்காலத்தில் அது விரசமாக தோணலை. இன்று நாம் கெட்டுபோயிட்டோம்.

அந்தக் காலத்திலும் இவை ஏன் எனக் கேள்வி கேட்டவர்கள் இருக்கத்தான் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.​​

இன்று நாம் கெட்டுப் போய் விட்டோம் என ஏன் சொல்கின்றீர்கள் எனப் புரியவில்லை.

சுபா 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

சி. ஜெயபாரதன்

unread,
Mar 10, 2014, 11:20:57 AM3/10/14
to mintamil, vallamai
​​அறம், பொருள்,  இன்பம் என்பது இந்திய / தமிழ்க் கலாச்சாரம், நாகரீகம்.  திருவள்ளுவர்  ஒரு வகையில் காமத்துப் பாலை எழுதியுள்ளார். 

இந்தியாதான் 2500 ஆண்டுகட்கு முன்பே முதன்முதலில் காம சூத்ரா  நூலை ஆக்கியது.  அதை ஆபாசப் படைப்பாகக் கருதலாமா ? 

கோயில்களில் சிற்பிகள் தம் கலைத்துவக் கருவியில் காமத்தைக் காட்டுகிறார் சிலைகளில், அரசர் அனுமதியுடன்.   

அவற்றை அந்தக் காலத்துப் போர்னோவாக எடுத்துக் கொள்ளலாம்.  [அடல்ஸ் ஒன்லி சிற்பங்கள்]

சி. ஜெயபாரதன்..

Geetha Sambasivam

unread,
Mar 10, 2014, 8:33:34 PM3/10/14
to மின்தமிழ்
அநேகமாகப் பல பிரபலமான கோயில்களும் பரிகாரத் தலங்களே, சிதம்பரம் நடராஜர் கோயில் உட்பட.  எனினும் சில நவகிரஹ பரிகாரத் தலங்கள் எனத் தனியாக அமைந்துள்ளன.  சித்ரகுப்த வழிபாட்டுக்கு எனச் சில குறிப்பிட்ட கோயில்கள் உள்ளன.  சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமி அம்மை சந்நிதியில் அமைந்துள்ள சித்ரகுப்தரை எமகண்ட வேளையில் திங்கட்கிழமை அன்று வழிபடுபவர்களுக்குக் கேது தோஷம் நீங்கும் என்பார்கள்.  இது உடனடியாக நினைவுக்கு வந்த ஒன்று.  சூரியனார் கோயிலும் அப்படியே. திங்களூர் சந்திரனுக்கு உரியது.  வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய்க்கு உரியது. 

சங்கரன் கோயில்  கோமதி அம்மனை வழிபடுவதும், அங்குள்ள புற்று மண்ணும் நாகதோஷத்தை நீக்க வல்லது.  அப்படியே திருப்பாம்பரம், காளஹஸ்தி போன்ற கோயில்களும் கால சர்ப்ப தோஷப் பரிகாரத்துக்கு ஏற்றவை.  திருநாகேஸ்வரம் சந்நிதியில் ராகுவுக்குத் தனி சந்நிதியும் தினம் தினம் ராகு காலத்தில் பால் அபிஷேஹமும் உண்டு.  இது ராகு தோஷத்துக்குப் பரிகாரத் தலம்.

இன்னும் பரமக்குடி அருகிலுள்ள நயினார் கோயில், கும்பகோணம் அருகிலுள்ள திருப்பனந்தாள், நாகர் கோயிலில் உள்ள நாகநாதர் சந்நிதி ஆகியவையும் சர்ப்ப தோஷம், ராகு, கேது பரிகாரத் தலங்கள் ஆகும்.  திருநெல்வேலியிலும் கார்க்கோடகன் என்னும் பெயரில் பரிகாரத் தலம் இருப்பதாகத் தெரிய வருகிறது.  ஶ்ரீநிவாசப் பெருமாளே அங்கு  ராகு, கேது அம்சமாகத் திகழ்வதாகவும் அமிர்த கலசம் நிவேதனம் செய்வார்கள் எனவும் கேள்விப் பட்டிருக்கேன்.

இப்போதைக்கு நினைவில் வந்தவை  இவை.  மற்றவற்றைப் பார்வதி அழகாய்த் தொகுத்து அளிப்பார் என எண்ணுகிறேன்.


Geetha Sambasivam

unread,
Mar 10, 2014, 8:36:21 PM3/10/14
to தமிழ் சிறகுகள், மின்தமிழ்
தேவன் அவர்களே,

இந்த இழையை இப்போது தான் பார்த்தேன்.  பதிலளிக்க வருகையில்  உங்கள் பின்னூட்டம் கவனிக்க நேர்ந்தது.  நீங்கள்சொல்வது தான் சரியான காரணம். இதைப் பரமாசாரியார் அவர்கள் கூறியதாகப் படித்திருக்கிறேன்.  நானும்  விரிவாக பதிலளிக்க வந்து உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லாமல் விடுகிறேன்.  தங்கள் புரிதலுக்கு நன்றி.


2014-03-10 20:46 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
இந்தச் சிலைகளுக்கு ஓஷோ ஒரு இடத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

காமம் என்பது பிறவியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அது பிறவிப்
பெருங்கடலை கடக்கத் தடையாக உள்ளது.

எனவே ஆலயத்திற்குள் வரும் ஒருவர் பாலியல் ஈர்ப்பைக் கடந்தவராக இருக்க
வேண்டும். கோவிலின் கோபுரத்தில் அல்லது சுற்றுச் சுவரில் வைக்கப்பட்டுள்ள
ஆபாசச் சிலைகள் ஒருவரின் மனதில் சலனத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் அவர்
கோவிலுக்குள் செல்லக் கூடாது. வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும்.

காமத்தை கடந்தால்தான் பிரம்ம நிலையை அடைய முடியும். இல்லாவிட்டால் காமம்
மீண்டும் பிறவிக்குள் தள்ளும். இதுவே இந்தச் சிலைகளின் தத்துவம்.
நாத்திகர்களின் சிந்தனையற்ற பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு இந்து மதம்
பற்றிய தேடுதலை மறந்து விட்டோம். தற்போது நமக்கும் இந்தச் சிலைகள்
விரசமாகத் தோன்றுகின்றன.

உண்மையில் பாலியலை இந்து மதம் புரிந்துகொண்ட அளவு வேறு எந்த மதமும்
புரிந்துகொண்டதா என்பது தெரியவில்லை.


Geetha Sambasivam

unread,
Mar 10, 2014, 8:41:38 PM3/10/14
to தமிழ் சிறகுகள், மின்தமிழ்
திருமணஞ்சேரி  என்னும் தலம் திருமணத் தடைகள் நீங்க பரிகாரத் தலமாகும். :))))  சென்னையிலேயே நவகிரஹ பரிகாரத் தலங்கள் ஒன்பது உள்ளன. அம்பத்தூருக்கு அருகிலுள்ள  பாடியில்  திருவாலீசுவரர் கோயிலும் ஒரு பரிகாரத் தலமே.  இங்குள்ள மாப்பிள்ளைவிநாயகருக்கு மாலை வாங்கிப் போட்டு வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பார்கள்.



Nagarajan Vadivel

unread,
Mar 10, 2014, 9:51:25 PM3/10/14
to மின்தமிழ்
ரசம் விரசமாவது கலைஞர்களால் அன்று.  ரசிகர்களால் மட்டுமே

வெறும் ஒரு சில சிற்பங்களை மட்டும் பார்த்து முடிவெடுக்கும் பார்வை ஆங்கிலேயர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்தது.  அவர்களுக்குக் காமமும் பக்தியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.  பக்திக்கு முட்டுக்கட்டை காமமும் அதன் பிரதிநிதியாகக் கருதப்பட்ட பெண்ணுமே என்பது அவர்கள் கட்சி

இந்தியாவில் தமிழகத்தில் காமமும் பக்தியும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தது காமத்தில் பக்தியும் பக்தியில் காமமும் இரண்டறக் கலந்தது.  காமத்துக்கென்று ஒரு காமதேவனைப் படைத்து அவனது ஆட்சி பூலோகம் தேவலோகம் சுரர் அசுரர் மற்ற உயிரினங்கள் எல்லாரையும் உள்ளடக்கியது என்று உறுதி செய்தனர்

ஆகம வழிபாடுள்ள கோவில்களைக் கட்டும் சிற்பக்கலை ஒரு குறிப்பிட்ட ஆகம அமைப்பில் இயங்குவது.  அந்த்த அடிப்படையில் மோவிலைக் கட்டும் ஸ்தபதிகள் இந்த சிற்பாகமத்தின் அடிப்படையில் ம்கோவில் கட்டும்போது அதற்கேற கோபுரத்தில் வடிவமைக்கும் செற்பங்களுக்கு உள்ளுறைப் பொருள் உண்டு.  ஒருமுறை கணபதி ஸ்தபதி பயிற்சிவகுப்பில் தெளிவாக விளக்கினார்.  மாமல்லபுரத்தில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் அதை நன்கு அறிவர்

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோபுரத்தில் உள்ள சிற்பங்களைக் கொண்டு இதைக் கட்டி வணங்கும் பக்தர்கள் அற்பர்கள் என்று ஆங்கிலப் பார்வையில் ஒரு கட்டுரை எழுதப்பட்டது

மெளனம்


2014-03-11 6:11 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
திருமணஞ்சேரி  என்னும் தலம் திருமணத் தடைகள் நீங்க பரிகாரத் தலமாகும். :))))  சென்னையிலேயே நவகிரஹ பரிகாரத் தலங்கள் ஒன்பது உள்ளன. அம்பத்தூருக்கு அருகிலுள்ள  பாடியில்  திருவாலீசுவரர் கோயிலும் ஒரு பரிகாரத் தலமே.  இங்குள்ள மாப்பிள்ளைவிநாயகருக்கு மாலை வாங்கிப் போட்டு வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பார்கள்.



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 10, 2014, 11:33:49 PM3/10/14
to mintamil, vallamai
2014-03-11 6:06 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
 நீங்கள்சொல்வது தான் சரியான காரணம். இதைப் பரமாசாரியார் அவர்கள் கூறியதாகப் படித்திருக்கிறேன்.  நானும்  விரிவாக பதிலளிக்க வந்து உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லாமல் விடுகிறேன்.  தங்கள் புரிதலுக்கு நன்றி.
2014-03-10 20:46 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
இந்தச் சிலைகளுக்கு ஓஷோ ஒரு இடத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

காமம் என்பது பிறவியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அது பிறவிப்
பெருங்கடலை கடக்கத் தடையாக உள்ளது.

எனவே ஆலயத்திற்குள் வரும் ஒருவர் பாலியல் ஈர்ப்பைக் கடந்தவராக இருக்க
வேண்டும். கோவிலின் கோபுரத்தில் அல்லது சுற்றுச் சுவரில் வைக்கப்பட்டுள்ள
ஆபாசச் சிலைகள் ஒருவரின் மனதில் சலனத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் அவர்
கோவிலுக்குள் செல்லக் கூடாது. வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும்.

காமத்தை கடந்தால்தான் பிரம்ம நிலையை அடைய முடியும். இல்லாவிட்டால் காமம்
மீண்டும் பிறவிக்குள் தள்ளும். 

உண்மையில் பாலியலை இந்து மதம் புரிந்துகொண்ட அளவு வேறு எந்த மதமும்
புரிந்துகொண்டதா என்பது தெரியவில்லை.
 
இதெல்லாம் வலிந்து சொல்லும் காரணங்கள்.
கோயிலுக்கு வெளியே கோபுரத்தில் மட்டுமல்ல கோயிலுக்குள்ளே இருக்கிற தூண்களிலும் மைதுனச் சிற்பங்கள் உண்டு. மனதில் ஒரு கணத்தில் சலனமும் மறுகணத்தில் சலனமற்ற அமைதியும் வாய்க்கும். அதுவே மனத்தின் பெருமை.

காமத்தைக் கடப்பதென்பதெல்லாம் ஹிப்போகிரசி.  
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Geetha Sambasivam

unread,
Mar 10, 2014, 11:47:00 PM3/10/14
to மின்தமிழ், vallamai
//காமத்தைக் கடப்பதென்பதெல்லாம் ஹிப்போகிரசி.  //

எங்க வீட்டில் என்னோட பெரியப்பா (அப்பாவின் அண்ணா)  ஒருத்தரே இதற்கு உதாரணம் ஐயா.  அதோடு இப்போதும் இணைய உலக நண்பர்களில் சிலர் சுத்தமான யோகிகள்.  அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்ததே நான் செய்த பெரிய தவம் என்று எண்ணுகிறேன்.  மனிதரால் முடியாதது இல்லை.  மனம் வைக்க வேண்டும்.  உறுதியில் நிலைக்க வேண்டும். மற்றபடி உங்கள் கருத்து உங்கள் வரை சரியே. :))))))


2014-03-11 9:03 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:


 

காமத்தைக் கடப்பதென்பதெல்லாம் ஹிப்போகிரசி.  
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

--
 

Geetha Sambasivam

unread,
Mar 11, 2014, 12:09:35 AM3/11/14
to மின்தமிழ்
//சாஸ்த்ரார்த்தமாகவும் ஸரி, காவ்ய ரீதியிலுங்கூட ஸரி, எல்லா விஷயங்களையும் விஸ்தாரம் பண்ணாமல், பொதுவாக இருக்கப்பட்ட ஜனங்களுக்குச் சிலதைத் தொட்டும் தொடாமலும் சொல்லிவிட்டு மேலே போய் விடுவார்கள்.

இங்கே 'அன்டர்லைன்'பண்ணிச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் இத்தனை காலமாக நம் ஜனங்களின் 'பேஸிக் அப்ரோச்'சும் [அடிப்படையான அணுகுமுறையும்]ரொம்ப நல்லபடியாகவே இருந்து வந்திருக்கிறது. 'நாம் ஒரு ஸ்தோத்ரம் பாராயணம் பண்ணுகிறோமா?அல்லது புராணம் கேட்கிறோமா?அல்லது ஒரு கோவிலுக்குப் போகிறோமா?இதுகளை எதற்குப் பண்ணுகிறோமென்றால் நாம் சுத்தி ஆவதற்காகத் தான்;நம்முடைய காமாதி தோஷங்களைப் போக்கிக் கொண்டு பக்தியை வளர்த்துக்கொண்டு ஈச்வராநுக்ரஹத்தைப் பெறுவதற்காகத்தான்'என்று அவர்கள் தீர்மானமாக வைத்துக்கொண்டிருந்தார்கள் ஆகையினால், அவர்களுடைய ஸ்திதியில் அந்த லக்ஷ்யத்திற்கு வேறேயாகத் தோன்றும்படி ஒரு ஸ்தோத்திரத்தில் வர்ணனை வந்தாலோ, அல்லது புராணத்திலே கதை வந்தாலோ, அல்லது ஆலயத்திலே சில்பங்கள் இருந்தாலோகூட அவற்றில் ரொம்ப கவனத்தை விடாமல், 'எதற்காகவோ பெரியவர்கள் இதற்கெல்லாமும் இடம் கொடுத்திருக்கிறார்கள். நம்மை இதுகள் distract பண்ண [திசை திருப்ப]வேண்டாம். நம் லக்ஷ்யம் சுத்தியாவது, பக்தி பண்ணுவது, அநுக்ரஹத்துக்குப் பாத்திரமாவது என்று இவற்றிலேயே குறியாக இருந்து மற்றவற்றை லேசாக எடுத்துக்கொண்டு, அல்லது தள்ளிவிட்டு, தங்களுக்கு எது ஆத்மாபிவிருத்திக்கு ஸஹயாமாகத் தெரிந்ததோ அதிலேய கவனம் செலுத்தினார்கள். ஸமய ஸம்பந்தமான விஷயங்களில் ஒரு விநயம், எடுத்ததற்கெல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டும் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டும் போகாத எளிமை இருந்ததால், தங்களுக்கு ஸரியாக வராத விஷயங்களைக் கூட அஸலே ஸரியில்லை என்றே வைக்காமல், அதே ஸமயத்தில் அவைஸரியில்லாமலில்லை என்பதால் அவற்றைத் தாங்களும் deep -ஆக எடுத்துக் கொள்ளலாமென்றும் நினைக்காமல் தங்களுடைய வ்யவஸ்தையை அறிந்து நல்ல கட்டுப்பாட்டோடு 'அப்ரோச்'பண்ணி வந்தார்கள். வர்ணனைகள் அவர்களுந்தான் படித்தார்கள்;சில்பங்கள் அவர்களுந்தான் பார்த்தாகள். ஆனாலும் தங்கள் பரிசுத்திக்கு ஆனதை மட்டுமே குறிப்பாக எடுத்துக் கொண்டு, மற்றவற்றை மேம்போக்காகப் பார்த்துவிட்டு மேலே போனார்கள். தெய்வங்கள் காம க்ரோத வசப்பட்ட மாதிரி வருவதெல்லாங்கூட நம் நிலையில் பண்ணியதில்லை என்ற உறுதியான தீர்மானம் அவர்களுக்கு இருந்ததால், அதற்கு என்ன தத்வார்த்தம், இல்லாவிட்டால் காவ்ய ரீதியில் அதற்கு என்ன 'வால்யூ'என்றெல்லாம் ஆராய்ச்சியில் இறங்காமலே நல்லபடியாக எடுத்துக் கொண்டு தங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போனார்கள். வழிவழியாக இத்தனை ஆயிரம் வருஷங்களாகப் புராண ச்ரவணம், ஸ்தோத்ர பாராயணம், தேவாரம்-திவ்யப் பிரபந்தம் ஓதுவது, ஆலய தர்சனம் பண்ணுவது என்று நம்முடைய ஜனங்கள் பின்பற்றி வந்திருப்பதில் கிஞ்சித் [சிறிதளவு]கூட விகாரமான மனோபாவங்களுக்கோ, விகல்பான கல்பனைகளுக்கோ இடமே கொடுக்காமல்தான் இருந்து வந்திருக்கிறார்கள். தத்வார்த்தம் தெரிந்த உபாஸகர்களும், கலையறிவு பெற்ற ரஸிகர்களும் deep -ஆகப் பார்த்துப் புரிந்துகொண்ட விஷயங்களையும், அப்படி deep -ஆகப் பார்ப்பது தங்கள் வேலையில்லை என்று மற்றவர்கள் புரிந்து கொண்டு 'லைட்'டாக எடுத்துக்கொண்டு தங்கள் லக்ஷ்யத்தைப் பார்த்துக்கொண்டு போனதால் இத்தனாயிரம் காலமாக எல்லாம் நல்லபடி இருந்து வந்தது.

ஒரு டாக்டர் நோயாளியின் அவயவங்களையெல்லாம் பரிசோதனை பண்ணுகிறார். அப்போது அவர் பார்க்கிற கண்ணே வேறே. அவருடைய 'பர்பஸு'ம் உசந்தது. அதனால் அவர் அப்படிப் பண்ணுவது தப்பில்லை. 'லாபரடரி'யில் அவர் மலப் பரிசோதனை கூடப் பண்ணுகிறார்.

சுத்தமாக வெள்ளை வெளேரென்று ட்ரெஸ் போட்டுக்கொண்டு ஹைஜீன் விதிகள் எல்லாம் 'ஃபாலோ'பண்ணும் அவர் கண்ட காலராக்காரன் 'ஸமாசார'த்தைக்கூட 'டெஸ்ட்'பண்ணுகிறார். 'தொத்து வியாதி நோயாளி கிட்டேயே போகப் படாது!'என்று நம்மையெல்லாம் தடுக்கிறவர். அவரே அந்த வியாதிக் கிருமிகளை 'மைக்ராஸ்கோப்'பில் பார்த்து ரிப்போர்ட் எழுதுகிறார். அவர் பண்ணுவதையெல்லாம் நாமும் பண்ணுவோமே என்கலாமா?அல்லது அவர் அப்படிப் பண்ணப்படாது என்றோ, இந்த மாதிரி அஸிங்கமெல்லாம் வைத்ய சாஸ்திரத்திலேயே இருக்கக்கூடாது என்றோ சொல்லலாமா?//

தெய்வத்தின் குரல் ஆறாம்பாகம், செளந்தர்ய லஹரி விளக்கங்களில் இருந்து ஸ்தோத்திரத்தை அணுகும் முறை குறித்த அத்தியாயம். 

சாக்தர்கள் காமத்தைக் கடந்தவர்களே! இணைய உலகிலேயே எனக்குத் தெரிந்து இருவர் உள்ளனர். இருவருமே இளைஞர்கள்.  ஆனாலும் சாக்தத்தைப் பூரணமாக அறிந்தவர்கள்.  தினசரி சக்தி வழிபாடு செய்பவர்கள்.

Nirmala Raghavan

unread,
Mar 11, 2014, 12:39:29 AM3/11/14
to mint...@googlegroups.com
Tantric practices in Hinduism -- இதை google ல் தேடினால், union  என்பதை இந்த வழியில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவரும். 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Geetha Sambasivam

unread,
Mar 11, 2014, 12:40:46 AM3/11/14
to மின்தமிழ்
ஆமாம்,  ஆனால் அதை விரிவாகப் பேச முடியாது என்பதோடு புரிந்து கொள்பவர்களும் குறைவு. :)))))))

Gopalan Venkataraman

unread,
Mar 11, 2014, 1:48:39 AM3/11/14
to mint...@googlegroups.com
இன்றைய நடைமுறையில் சிலவற்றைக் காணவோ, பேசவோ தகுதியற்றது அவை ஆபாசம் என்று நமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். மிருகங்களைப் பாருங்கள்; அவை யாருக்காகவும், எந்த சூழ்நிலைகளுக்காகவும் தயங்குவதில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் மட்டும் பிறவி, பிறவியெடுத்ததன் நோக்கம், வம்ச விருத்தி, மனதினுள் உருவாகும் ஆசாபாசங்களை வெளிப்படுத்ததில் வெளிப்படைத் தன்மை இல்லாமை இவைகளெல்லாம் இவர்களே உருவாக்கிக் கொண்டதுதான். காமம் என்பது இயற்கையில் மனிதனுக்கு உருவாகும் உணர்வு. பசி, தாகம், உடலில் அரிப்பு, தூக்கம் இவைபோன்று காமமும் அவ்வப்போது உருவாகும் உணர்வு; அதன் வெளிப்பாடு முடிவு வம்சாபிவிருத்தி. இது இறைவன் மனிதனுக்குமட்ட்மலாமல் எல்லா உயிர்களுக்கும் கொடுத்த வரம். இதை ஆபாசம் என்று ஏன் மறைவாகச் செய்கிறோமென்றால், பிறர் பார்க்க செய்யக்கூடிய செயல்கள் அல்ல இவை என்பதுதான். அந்த காரணத்துக்காகவே அது தவறு, பாவம், பிறர் அறிந்தால் அவமானம் என்றெல்லாம் நினைப்பது கூடாது. ஆனால் இந்த உறவுக்கு மனிதன் வகுத்துக் கொண்ட கட்டுப்பாடு, யார், எவரோடு, எப்போது உறவு கொள்வது போன்றவையெல்லாம் நாகரிக சமூகம் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள். அதை மீறி மிருகங்களைப் போல நினைத்த போது, நினைத்த இடத்தில் நடந்து கொள்வது அநாகரிகம். வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குவதே தேர் சிற்பங்கள். தேர் என்பதே கோயிலில் குடிகொண்ட தெய்வம் ஆண்டுக்கு ஒருநாள் வெளியில் வந்து உலாவுவது ஜீவாத்மா உடலெடுத்து மனிதப் பிறவி எடுப்பது போல. அது  ஊரைச் சுற்றி வந்து பின் கோயிலின் உள் சென்றுவிடும். ஜீவாத்மாவும் பிறவி எடுத்து சிலகாலம் உலவி பின்னர் பரமாத்மாவிடம் அடங்கிவிடும். அப்படி பிறவி எடுத்த ஜீவாத்மாவுக்கு உணர்வுகள் உண்டு, ஆசை, பாசம், உறவு, காமம் அனைத்தும் உண்டு. அவை இந்த உடல் சார்ந்தவை, உயிர் சார்ந்தவை அல்ல. அதனால் பரமாத்மா ஜீவனாக வந்து தேர் எனும் உடலோடு ஊர்வலம் வருகையில் அந்த உடலுக்கு உள்ள அனுபவங்கள் தேர் சிற்பங்களில் காணப் படுகின்றன. ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார், கோயிலுக்குப் போனேன் என்று ஒருவன் சொன்னால், கோயிலின் வாயில் கோபுரத்தை மட்டும் கண்டு அதிலுள்ள சிற்பங்களை வழிபட்டுவிட்டுச் செல்வது அல்ல, உள்ளே சென்று பலிபீடத்தில் தனது ஆணவ மலத்தை நீக்கி, இறைவனின் சமூகம் எனும் கொடிமரத்தைத் தாண்டி, இதயஸ்தானமாம் மூலத்தானத்தில் பரம்பொருளைக் கண்டு வணங்குவதுதான் கோயில் வழிபாடு. அந்த வகையில் தேரின் நோக்கமும் முன்பு விளக்கியதைப் போல ஜீவாத்மாவின் பிறப்பின் பயணம். அதில் அனைத்தும் உண்டு காமம் உட்பட. இதை விளக்குவதே தெரின் சிற்பங்கள்.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
VGopalan

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 11, 2014, 2:09:49 PM3/11/14
to mintamil, தமிழ் சிறகுகள்
வணக்கம் ஐயா.


2014-03-10 20:46 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
இந்தச் சிலைகளுக்கு ஓஷோ ஒரு இடத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

காமம் என்பது பிறவியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அது பிறவிப்
பெருங்கடலை கடக்கத் தடையாக உள்ளது.

எனவே ஆலயத்திற்குள் வரும் ஒருவர் பாலியல் ஈர்ப்பைக் கடந்தவராக இருக்க
வேண்டும். கோவிலின் கோபுரத்தில் அல்லது சுற்றுச் சுவரில் வைக்கப்பட்டுள்ள
ஆபாசச் சிலைகள் ஒருவரின் மனதில் சலனத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் அவர்
கோவிலுக்குள் செல்லக் கூடாது. வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும்.
இத்தகைய சிற்பங்கள், கோயிலின் உள்ளே நுழையும் இடத்தில் இடம் பெறா.
வழிபாட்டினை முடித்து விட்டுக் கோயிலைவிட்டு வெளியே செல்லும் இடத்திலேயே இருக்கும்.

கோயிலுக்குள் வரும் பக்தர்கள் தங்களது வழிபாட்டினை முடித்த பின்னர், கோயில்பிரகாரத்தில் சிறிதுநேரம் உட்கார்ந்து செல்வார்கள்.  அவ்வாறு மக்கள் எல்லோரும் உட்காரும் இடத்தில் (ஈசானயத்தில்) உள்ள தூண்களில்தான் இதுபோன்ற சிற்பங்கள் இருக்கும்.

எனவே தங்களது மேற்கண்ட கருத்தானது, கோயிலின் அமைப்பிற்கு இயைபு உடையதாக இல்லை.

அன்பன்
கி.காளைராசன்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 12, 2014, 8:20:17 AM3/12/14
to மின்தமிழ்
//////அநேகமாகப் பல பிரபலமான கோயில்களும் பரிகாரத் தலங்களே, ////

ஆமாம்.

////அப்படியே திருப்பாம்பரம், காளஹஸ்தி போன்ற கோயில்களும் கால சர்ப்ப தோஷப் பரிகாரத்துக்கு ஏற்றவை.////

காலசர்ப்ப தோஷம் மற்றும், ராகு, கேது தோஷம் இரண்டுக்குமான பரிகாரத்தலமே திருப்பாம்புபுரம். திருநாகேஸ்வரம் ராகு தோஷத்திற்கும், கீழப்பெரும்பள்ளம் கேது தோஷத்திற்கும் பரிகாரத் தலமாகச் சொல்லப்படுகின்றது.

நாச்சியார் கோயில் கல்கருடனுக்கு பால் பாயச நிவேதனம் செய்வது, ராகு தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரம்.

///திருமணஞ்சேரி  என்னும் தலம் திருமணத் தடைகள் நீங்க பரிகாரத் தலமாகும். :))))  ///

திருமணஞ்சேரிக்குச் சென்று வந்த பின்னால், எந்தக் கோயிலுக்கும் பரிகாரத்திற்காகச் செல்ல வேண்டியதில்லை.. உத்வாஹநாதர் கருணையால் விரைவில் திருமணம் நடக்கும்!..

மதுரை, இம்மையில் நன்மை தருவார் திருக்கோயில் பைரவருக்கு, ஞாயிறு ராகு காலத்தில் அபிஷேகம் செய்து, சந்நிதியின் திருமுன் இருக்கும் சூலத்தில் மூன்று எலுமிச்சம்பழங்கள் குத்தி, வழிபாடு செய்ய, எதிரிகள் தொல்லை அகலும், கடன் தொல்லைகள் நீங்கும்.

பொதுவாக, நரசிம்ம ஸ்வாமியின் சந்நிதியில், செவ்வாய் கிழமை ராகு காலத்தில் பானகம் நிவேதனம் செய்து வழிபடுவது, கடன் தொல்லை மிக விரைவில் நீங்க வழிசெய்யும்.. இதை இல்லங்களிலும் செய்யலாம்.

திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை கோயில், திருப்புல்லாணி ஆதிஜகந்நாதர் ஆலயம்,கருவளர்சேரி அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில்,குட்டம் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் திருக்கோயில், ஆய்குடி பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோயில்,முதலான பல திருக்கோயில்கள் குழந்தை பாக்கியத்திற்கான பரிகார ஸ்தலமாகத் திகழ்கின்றன.

மிகக் கடும் உடல்நலக் குறைபாடு வந்து மீண்டவர்கள், வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் திருக்கோயிலில் நேர்த்திக்கடன் செய்து வழிபடுகின்றார்கள்.

நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன்,சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்கள், கண்நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலங்களாகத் திகழ்கின்றன..



அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-03-11 6:03 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
  

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 12, 2014, 8:33:56 AM3/12/14
to மின்தமிழ்
(தொடர்ச்சி..)

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில், அர்த்தநாரீஸ்வரருக்கு, திங்கள், பிரதோஷம், பௌர்ணமி தினங்களில் கொன்றை மலர் அர்ச்சனை, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய, பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர் என்பது ஐதீகம்.

வழுவூர் கஜசம்ஹார மூர்த்திக்கு அபிஷேகம் செய்து வழிபட சனிதோஷம் நீங்கும்.அருகம்புல் அர்ச்சனையும் பாயச நிவேதனமும் திங்கட்கிழமைகளில் செய்ய, எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்கும். எலுமிச்சைச் சாறால் அபிஷேகம் செய்ய மரணபயம் நீங்கும். பன்னிரண்டு அமாவாசைகள் விஸ்வரூப தரிசனம் செய்ய குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சீர்காழியில் இருக்கும் சுகாசனமூர்த்தியை வணங்கி வழிபட, நிர்வாகத் திறமை பிரகாசிக்கும், தொழில் வளர்ச்சி ஏற்படும்.. பௌர்ணமி, திங்கட்கிழமைகளில் நந்தியாவட்டை  மலர்களால் அர்ச்சனை செய்து, சித்திரான்னம் நிவேதனம் செய்து வழிபட, அடிக்கடி வேலை மாற்றம் காணுவோர் நிலையான உத்தியோகம் பெறலாம்.

சங்கரன் கோயிலில், திங்கட்கிழமைகளிலும், புதன்கிழமைகளிலும் வில்வார்ச்சனை, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட, பிறவிப்பிணி அகலும்.

சென்னைக்கருகில், புட்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம், திருமணத் தடை விலக, குழந்தை பாக்கியம் கிட்ட, பெண்களைப் பாதிக்கும் நோய்களிலிருந்து நிவாரணம் பெற உதவும் பரிகாரத் தலம்.. மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு அமாவாசை தினங்களில் சென்று வழிபாடு செய்ய, வேண்டுவன பெறலாம்..

(இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கு!.. இப்பத்திக்கு இது தரேன்!!)

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-03-12 17:50 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
 
////     

Suba.T.

unread,
Mar 12, 2014, 8:39:32 AM3/12/14
to மின்தமிழ், Subashini Tremmel
பார்வதி - இந்த வரிசையை அப்படியே தொடர்ந்து ஒரு சிறு கட்டுரையாக்கித் தாருங்கள்.
அதனை நம் பதிவு வலைப்பக்கத்தில் சேர்த்து வைப்போம்.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 12, 2014, 8:41:18 AM3/12/14
to மின்தமிழ்
விரைவில் அனுப்புகிறேன் சுபா.. மிக்க நன்றி!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



Geetha Sambasivam

unread,
Mar 12, 2014, 9:21:09 AM3/12/14
to மின்தமிழ்
1. சூரியனார் கோயில்

மூலவர் சிவ சூர்யன்

அம்பிகை உஷாதேவி

தல விருக்ஷம்  வெள்ளெருக்கு

தீர்த்தம் சூரிய தீர்த்தம்

ஆயிரம் வருடத்துக்கும் மேல் பழமையான கோயில்.  சூரியனார் கோவில் என்னும்பெயரிலேயே தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது.

நவகிரஹ தலங்களில் முதன்மையானது.  ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமச் சனி, ஜென்மச் சனியால் தொடரப் பட்டவர்கள், பிற நவகிரஹ தோஷக்காரர்களும் பனிரண்டு ஞாயிறன்று இங்கே  தலவாசம் செய்து வழிபடுவார்கள்.  இங்கேயே தங்கி இருந்து நவ தீர்த்தங்களிலும் நீராடி, உபவாசம் இருந்து இவரோடு திருமங்கலக்குடி பிராணநாதரையும், மங்கள நாயகியையும் முறைப்படி வழிபடுவார்கள்.  சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை,  போன்ற சூரிய தோஷங்கள் உள்ளவர்களும் இங்கே வந்து பரிகாரம் செய்வார்கள்.


2. திங்களூர் ---சந்திர பரிகாரத் தலம்

இதுவும் தஞ்சை மாவட்டத்திலேயே உள்ளது.  திருவையாறுக்கு மேற்கே அமைந்துள்ளது  இந்தக் கோயிலில் அன்னப் பிராசனம் என்னும் பிறந்த குழந்தைகளுக்கு முதன்முதல் சோறு ஊட்டும் நிகழ்ச்சியை வந்து நடத்துகின்றனர்.  இதுவும் ஆயிரம் வருடப் பழமை வாய்ந்த ஒன்றாகும்.

மூலவர் கைலாச நாதார் என அழைக்கப்படுகிறார்.

தல விருக்ஷம் வில்வ மரம்

தீர்த்தம் சந்திர புஷ்கரிணி

அப்பூதி அடிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் இங்கே தான் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அப்பூதி அடிகளின் மூத்த பிள்ளை மூத்த திருநாவுக்கரசுவைத் தான் பாம்பு தீண்டி, அப்பர் என்னும் திருநாவுக்கரசர் காப்பாற்றியதாக வரலாறு கூறும்.

இங்குள்ள கைலாசநாதரின் இடக்கண்ணாக சிவன் விளங்குவதாக ஐதீகம்.  புரட்டாசி, பங்குனி மாதங்களில் சந்திரன் நேரடியாகத் தன் கிரணங்களை கைலாசநாதர் மேல் செலுத்தி வழிபடுவதாக ஐதீகம்.  பெளர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

தொடர்புக்கு 0436--262499  கும்பகோணம் ரயில் நிலையம் அருகிலுள்ளது.  திருச்சி விமான நிலையம் 126 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

3. வைத்தீஸ்வரன் கோயில் --செவ்வாய் பரிகாரத் தலம்

தஞ்சையிலிருந்து பிரிந்த நாகை மாவட்டத்தில் உள்ளது இந்த ஊர்.  பலருக்கும் குடும்ப தெய்வமாகவும் குலதெய்வமாகவும் விளங்கும் வைத்தியநாத ஸ்வாமி மூலவர்.

அம்பிகை தையல் நாயகி

தல விருக்ஷம் வேம்பு

தீர்த்தம் சித்தாமிர்தம்

இதுவும் ஆயிரம் வருடங்களுக்கும் முந்தைய கோயில்.  சரித்திர காலத்தில் இதன் பெயர் புள்ளிருக்கும் வேளூர் ஆகும். 

திருஞான சம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர், குமரகுருபரர், படிக்காசுத் தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர்,  ராமலிங்க அடிகள், போன்றோர் இந்தக் கோயிலைக் குறித்துச் சிறப்பித்துப் பாடியுள்ளார்கள்.

செவ்வாய் பரிகாரத் தலமான இந்தக் கோயிலின் தொடர்பு எண்-- +91- 4364- 279 423.

தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் எனச் சொல்கின்றனர்.  இங்குள்ள தீர்த்தத்தில் உப்பு, மிளகு வாங்கிப் போட்டு வெல்லம் கரைத்துத் தங்கள் தோல் நோய்கள், உடம்பில் வரும் கட்டிகள், சிரங்குகள், வடுக்கள் ஆகியவை நீங்கப் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.  வைத்தியநாதர் சந்நிதியில் தரப்படும் திருச்சாந்து என்னும் மருந்துருண்டையை வாங்கி உண்டால் தீராத நோய்கள் தீரும் எனவும் ஐதீகம். 

இந்தக் கோயிலில் செவ்வாய்க்குத் தனி சந்நிதி உண்டு.  செவ்வாய் தோஷப் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.  நிலம் வாங்க, மூட்டு வலி நீங்க, கடன் தொல்லை நீங்க செவ்வாயை வணங்குவார்கள்.  இங்குள்ள முருகன் வைத்தியநாதருக்கும், தையல் நாயகிக்கும் செல்லப் பிள்ளை என்பதால் செல்வ முத்துக்குமரன் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார்.  இவரையும் பிரார்த்தனை செய்து கொண்டால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பார்கள்.  முருகன் திருவடியில் அர்த்தஜாம பூஜையின் போது சாத்தப்படு சந்தனத்திற்கு விசேஷச் சிறப்பு இருக்கிறதாய்க் கூறுவார்கள்.  குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும் கூறுகின்றனர்.  செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் செவ்வாய் எனப்படும் அங்காரகன் எழுந்தருளுவார். மருத்துவத் துறையின் முன்னுக்கு வரவும் இங்கே வந்து வழிபாடுகள் செய்கின்றனர்.


பார்வதி,

இது உங்களுக்கு ஒரு மாதிரியாக அனுப்பி இருக்கிறேன்.  இதே போல் மற்றக் கட்டுரைகளும் முக்கியத் தகவல்கள் அடங்கியதாகவும், தேவாரம் பாடியவர்கள் இருந்தால் அதைக் குறிப்பிட்டும், தொடர்பு எண்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்தும் எழுதுங்கள்.  இதான் உங்களுக்கு அடுத்த சில தினங்களுக்கான ஹோம் வொர்க்.

இதிலே ஞாயிறு, திங்கள், செவ்வாய் கொடுத்திருக்கேன்.  அடுத்துத் திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆகியவை எழுதணும்.  செரியா?

இதே போல் சென்னையின் நவகிரஹத் தலங்களும். பரிகாரத் தலங்களும்.:))))))


 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 12, 2014, 9:23:42 AM3/12/14
to மின்தமிழ்
சரி அம்மா!..:-))))!!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

--

தேமொழி

unread,
Mar 12, 2014, 4:20:49 PM3/12/14
to mint...@googlegroups.com

உங்கள் பார்வைக்கு....இந்த இழைக்குரிய பதிவு....  மற்றொரு குழுமத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் .....



On Monday, March 10, 2014 2:32:20 AM UTC-7, mariappan balraj wrote:

கி.வா.ஜ தன்னுடைய ஆசிரியப் பிரானான உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரத்தில் சொல்லாத விஷயங்களை "என் ஆசிரியப்பிரான்" என்ற புத்தகத்தில் சொல்லி இருக்கிறார். அதில் "போலீஸ் அதிகாரியின் செயல்" என்ற கீழ்க்காணும் முதல் கட்டுரை மிகவும் சுவாரசியமானது.

திருவேட்டீசுவரன் பேட்டையில் ஜெயசிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் கொஞ்சம் முரட்டுச் சுபாவம் உடையவர். யாரோ ஒருவர் அவரிடம் காவடிச் சிந்தையும், திருப்புகழையும் பாடியிருக்கிறார். அவற்றிலுள்ள பெண்களின் வருணனைகளைக் கேட்டு அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. “இப்படியெல்லாம் பாடல்களைப் பாடிக் குழந்தைகளின் மனசைக் கெடுத்துவிடுகிறார்கள். இனிமேல் இத்தகைய புத்தகங்களை வெளிவராமல் தடுத்துவிட வேண்டும்” என்று பேசிக் கொண்டிருந்தார்: அதற்கு வேண்டிய முயற்சிகளையும் செய்யத் தொடங்கினார். இந்தச் செய்தியைச் சில அன்பர்கள் ஆசிரியப் பெருமானிடம் வந்து சொன்னார்கள்.

ஆசிரியர் வாழ்ந்து கொண்டிருந்த திருவேட்டீசுவரன் பேட்டையில்தான் ஜெயசிங் குடியிருந்தார். ஒரு நாள் அந்தப் போலீஸ் அதிகாரியைப் போய்ப் பார்க்க ஆசிரியர் சென்றார்.

“எங்கே இவ்வளவு தூரம் வந்தீர்கள்؟ நானே தங்களைப் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். தங்களுக்குக் கோர்ட்டிலிருந்த ஸம்மன் வரும்” என்று அந்தப் போலீஸ் அதிகாரி சொன்னார்.

“எனக்கும் கோர்ட்டுக்கும் என்ன சம்பந்தம்؟”

“ஒரு முக்கியமான விஷயத்தில் தாங்கள் சாட்சி சொல்ல வேண்டும். தமிழ் நூல்கள் சிலவற்றில் பெண்களைப் பற்றி ஆபாசமான வர்ணனைகள் வருகின்றன. அத்தகைய நூல்களையெல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அது பற்றித் தங்களைச் சாட்சியாகப் போடப் போகிறேன். “

“அப்படியா! அதுபற்றித்தான் தங்களைக் கண்டு பேசலாம் என்று வந்தேன்.”

“என்ன அது؟”

“தாங்கள் மிகவும் நல்லவர்கள் என்று கேள்விப் பட்டேன். ஆபாசமான விஷயங்களை எல்லாம் நாம் அதிகமாகப் பரவவிடக் கூடாது என்று எண்ணம் தங்களுக்கு இருப்பது தெரிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய நாகரிகத்தைத் தெரிந்தவர்களுக்குத்தான் இந்த உண்மை நன்றாகத் தெரியும். ஆனால் இலக்கியங்களை நாம் பார்க்க வேண்டிய முறையே வேறு. சிருங்காரச் சுவையுடைய நூல்கள் தமிழில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் பல காலமாக இந்த நாட்டில் புலவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். செய்யுள் வடிவில் இருப்பதனால் அவற்றைப் படிப்பவர்களுக்கு இலக்கியச் சுவை தோன்றுமேயொழிய ஆபாசமான உணர்ச்சி தோன்றாது” என்று ஆசிரியப் பெருமான் பேச்சை ஆரம்பித்தார்.

“சில பைத்தியகாரப் புலவர்கள் கன்னா பின்னா என்று பாடிக் குழந்தைகளின் உள்ளத்தைக் கெடுத்து விடுகிறார்கள். அத்தகைய ஆபாசப் பாடல்களைத் தடுத்துவிட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இதுபற்றி எனக்கு ஒரு யோசனை சொன்னால் உபகாரமாக இருக்கும்” என்று அவர் சொன்னார்.

“இப்போது தங்களுக்கு அவகாசம் இருக்கும் அல்லவா؟ நிதானமாகப் பேச வேண்டும் என்று வந்திருக்கிறேன்” என்று சொன்னார் ஆசிரியர்.

“பெரியவர்களாகிய தாங்களே வந்திருக்கிற போது, தங்களோடு பேசிக் கொண்டிருப்பதைவிட வேறு வேலை எனக்கு என்ன இருக்கிறது؟ தாங்கள் சொல்லுங்கள்: நான் கவனிக்கறேன்.” என்றார் ஜெயசிங்.

“என்னிடம் சில புலவர்கள் வந்து, தங்களைத் தமிழுக்கு விரோதி என்று சொன்னார்கள். நான் அவர்களிடம், தாங்கள் அப்படி இருக்க மாட்டீர்கள் என்று சொன்னேன். பழைய இலக்கியங்களை எல்லாம் கொளுத்திவிட வேண்டும் என்று தாங்கள் சொல்வதாகச் சொன்னார்கள். தங்களைத் தவறாக அவர்கள் தெரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நான் தீர்மானமாக எண்ணினேன். அதனால்தான் தங்களை நேரில் பார்த்துப் போக வந்தேன்” என்றார் ஆசிரியர்.

“எல்லாப் புலவர்களுக்கும் என்மோல் கோபம் இருக்கலாம். ஆனால் எனக்கு ஆபாசம் கூடாதென்பதுதான் எண்ணம். அதனால்தான் காவடிச் சிந்து போன்ற புத்தகங்கள் பரவக்கூடாது என்று எண்ணுகிறேன்” என்றார் போலீஸ் அதிகாரி.

“காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகியவற்றில் பெண்களின் வருணனைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த வருணனைகளை எல்லாம் படித்து அவற்றோடு நிறுத்திவிடக் கூடாது. பாட்டு முழுவதையும் படித்தால் அந்த மாதிரி ஈடுபடுவது தவறு என்று சொல்லியிருப்பதைக் காணலாம். ஒன்பது ரசங்களில் சிருங்கார ரசம் என்பது ஒன்று. அதைப்பற்றி பல நூல்கள் தமிழில் இருக்கின்றன: வடமொழியிலும் இருக்கின்றன. பெண்களுடைய வருணனை கூடாது என்று சொன்னால் எத்தகைய இலக்கியத்தையும் படிக்க முடியாது. நான் மிகப் பழைய நூல்களாகிய சங்க நூல்களை வெளியிட்டிருக்கிறேன். அதனால்தான் தமிழ்நாடு எனக்குக் கொஞ்சம் மதிப்பு வைத்திருக்கிறது. அந்த நூல்களிலும் கூடப் பெண்களின் வருணனை இருக்கிறது. ஆனால் அவற்றைப் படிக்கிற போது ஆபாச உணர்ச்சி தோன்றாது: இலக்கியச் சுவைதான் தெரியும். தாங்கள் இவற்றை எல்லாம் பொசுக்க வேண்டும் என்று நினைப்பதாகச் சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் சங்க நூல்களை எல்லாம் கடலில் போட வேண்டியதுதான்: காவியங்களை எல்லாம் பொசுக்கிவிட வேண்டியதுதான். வடமொழியில் உள்ள நூல்களில் கூட அத்தகைய வருணனைகள் வருகின்றன. அவற்றை எல்லாம் யாரும் படிக்கக்கூடாது என்று சொல்ல வேண்டியிருக்கும். இப்படிப் பார்த்துக் கொண்டே போனால், பிறகு தமிழிலும், வடமொழியிலும் படிப்பதற்கு ஒன்றுமே அகப்படாது” என்றான் ஆசிரியர்.

“அப்படியா؟ தாங்கள் சொல்வதைப் பார்த்தால் எல்லாப் புத்தகங்களுமே ஆபாசம் என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது؟” என்றார் ஜெயசிங்.

“ஆபாசம் என்பது வேறு. ரச உணர்ச்சி என்பது வேறு. மனித வாழ்க்கையில் காதல் என்பது மிக முக்கியமான உணர்ச்சி: காவியங்களும், சாஸ்திரங்களும் இந்தக் காதல் உணர்ச்சியைப் பற்றிச் சொல்கின்றன. கடவுளைப் பாடுகிறவர்கள்கூட ஆண்டவனைக் காதலனாகவும் தங்களைக் காதலிகளாவும் வைத்துப் பாடியிருக்கிறார்கள். அங்கெல்லாம் சிருங்கார ரசம் இருக்கும்”.

“அப்படியா؟ தேவாரம், திருவாசகம் போன்று நூல்களிலும் சிருங்கார ரசம் இருக்கிறதா”” என்று கேட்டார் ஜெயசிங்.

“தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் ஆகிய எல்லாவற்றிலும் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஆண்டவனிடத்தில் உள்ள பக்தியைக் காதலாக மாற்றிப் பாடியிருக்கிறார்கள். ‘எல்லி செட்டி லக்க ஏக லக்கா’ என்றபடி பெண் வருணனை வருவதனால் ஆபாசம் என்று இவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டால் தமிழுக்கு தேவாரம் கிடைக்காது: திவ்யப்பிரபந்தம் கிடைக்காது.”

“அப்படியா؟ இதெல்லாம் எனக்குப் புதிதாக இருக்கிறதே!”

“தாங்கள் இவற்றையெல்லாம் நன்றாக ஆராய்ந்து இருக்கு மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். கிராமாந்தரங்களில் பெண்கள் கச்சு அணியாமல் வருகிறார்கள். காய்கறி விற்கிறவர்கள், பால் தயிர் விற்கிறவர்கள் அப்படித்தான் இன்னும் கூட நடமாடுகிறார்கள். அவர்களைக் கண்டு யாரும் தவறாக எண்ணுவது இல்லை. பார்க்கிறவர்களுடைய கண்ணில் உள்ள தவறுதான் அவர்களைத் தவறாகப் புரிந்து கொள்ளச் செய்கிறது.”

“தாங்கள் சொல்வது உண்மைதான்” என்று ஒருவாறு இறங்கி வந்தார் ஜெயசிங்.

“மற்றொரு விஷயம். தாங்கள் கோவிலுக்குப் போகிறீர்கள் அல்லவா”” என்று கேட்டார் ஆசிரியப் பெருமான்.

“ஏன் போகாமல்؟ நாள் தவறாமல் கோவிலுக்குப் போவேன்: அரச்சனையும் பண்ணுவேன்” என்றார் ஜெயசிங்.

“அங்கே உள்ள மூர்த்திகளை, கோபுரங்களிலுள்ள சிற்பங்களைப் பார்த்தது உண்டா؟”

“ஓ! பார்த்திருக்கிறேனே!”

“அங்கேயுள்ள சிற்பங்களில் பெண்மையைக் காட்டுகின்ற அங்கங்கள் பெரியனவாக இருந்தாலும் அவற்றைக் கண்டு பக்தர்கள் விகார உணர்ச்சி கொள்வதில்லை. படுத்திருக்கும் தாயின் மார்பில் குதித்து விளையாடுகிற குழந்தைக்குத் தவறான உணர்ச்சி உண்டாவதில்லை. இது இன்று நேற்று வந்தது அன்று. பல காலமாக இருக்கிற செய்தி. தாங்கள் சொல்கிறபடி திருப்புகழை, காவடிச் சிந்தை, அவற்றில் வருகிற பெண் வருணனைக்காக எரிக்கத் தொடங்கினால் தமிழ் இலக்கியகளையும். வடமொழி இலக்கியங்களையும் கடலில் கொண்டுபோய்ப் போடவேண்டும்: கோவில்களில் உள்ள விக்கரங்களை எல்லாம் உடைத்தெரிய வேண்டும்.”

“ஐயா, ஐயா! ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்؟ நான் அந்தக் காரியத்தைச் செய்ய உடந்தையாக இருப்பேனா” எனக்கு இந்த விஷயம் தெரியாமல் ஏமாந்து போனேன். நல்ல சமயத்தில் தாங்கள் எனக்கு இந்த உண்மையைச் சொன்னீர்கள். இந்த மாதிரியான விஷயங்களில் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்காமல் நான் எதையும் இனிச் செய்யத் துணியமாட்டேன். தங்களுக்கு மிகவும் நன்றி” என்றார் ஜெயசிங். ஆசிரியர் வீட்டிற்குத் திரும்பும்போது, தம் வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார், அந்தப் போலீஸ் அதிகாரி.

அன்புள்ள
பா.மாரியப்பன்

Innamburan S.Soundararajan

unread,
Mar 12, 2014, 5:09:10 PM3/12/14
to mintamil
ஆனால் அவற்றைப் படிக்கிற போது ஆபாச உணர்ச்சி தோன்றாது: இலக்கியச் சுவைதான் தெரியும்.


ஓ! அப்டீங்களா? அப்பாடா! 
இன்னம்பூரான்

--

Dev Raj

unread,
Mar 12, 2014, 6:18:10 PM3/12/14
to mint...@googlegroups.com, Minthamil
On Monday, 10 March 2014 03:12:26 UTC-7, tsparu2001 wrote:
பொதுவாக, பரிகாரத் தலங்கள் என்று சொல்லப்படுகின்ற கோயில் கோபுரங்களில் இம்மாதிரி சிற்பங்கள் அதிகம்.
 

ஒரு சில தலங்கள் மட்டும் பரிஹாரத்துக்கானவை
என்று பலர் கிளம்புவது அண்மைக்காலத்தில்தான்.
எல்லா ஆலயங்களும் பரிஹாரத்துக்கானவையே.

puritanism என்பது நம் சமயத்தில் இல்லை.
சிருங்காரம் வாழ்வின் ஒரு பகுதி; ஆனால் 
வரையறைக்குள் இருக்க வேண்டியது முக்கியம்.
நம் இலக்கியமும் அதற்கு இடமளித்து வந்துள்ளது.
சிற்ப, சித்திரங்களில் மகளிருக்கு மார்க்கச்சு 
இருக்காது. மேற்கத்தியப் பார்வை தவிர்க்கப்
பட வேண்டும்.


தேவ்

Innamburan S.Soundararajan

unread,
Mar 12, 2014, 7:57:47 PM3/12/14
to mintamil
சிருங்காரம் மட்டும் இல்லை; எதுவும் வரையறைக்குள் இருக்கவேண்டும். வரையறை அவரவர் வகுத்துக்கொள்வதும் ஆகும். காலப்போக்கிலும் மாறும், ஜெயகாந்தனின் 

கெளரிப்பாட்டியை போல. 'Puritanism may be defined primarily by the intensity of the religious experience that it fostered. Puritans believed that it was necessary to be in a covenant relationship with God in order to redeem one from one’s sinful condition…' Encyclopedia Brittanica.  Such movements are embedded in all religions.

மேற்கத்தியப் பார்வை; எத்தனை கவர்ச்சிகரமான உடை உடுத்தி வந்தாலும், அது பெண்களை சீண்டுவதில்லை, அன்றாட நடைமுறையில். ஆனால், 'உங்கள் இந்தியாவில்  , என்ன தான் கவர் ப்ண்ணிண்டு போனாலும் வெறியுடன் முறைத்துப்பார்க்கிறார்கள். அருவருப்பாக இருக்கிறது' என்கிறார்கள் எனக்குப் பரிச்சயமான வெள்ளைக்காரிகள். எதைத் தவிர்க்க வேண்டும்?
இன்னம்பூரான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---

Nagarajan Vadivel

unread,
Mar 12, 2014, 9:23:02 PM3/12/14
to மின்தமிழ்
2014-03-13 2:39 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
ஓ! அப்டீங்களா? அப்பாடா! 

தமிழ் நாட்டில் கோவில்களிலும் விழாக்களிலும் ஆடிய சதிர் இங்கே​​


இது ஆபாசம் என்று கருதப்பட்டது

அதே சதிரில் ஆபாசம் என்று கருதப்பட்ட சில ய்டல் அசைவுகளை மெளன மொழிகளைக் களைந்து வெறும் உடற்பயிற்சியாக அமைக்க்பட்ட பரத நாட்டிஉஅம் இங்கே

ரசமே இல்லேன்னா அப்புறம் விரசம் எப்படி வரும்

உணர்ச்சியைக் கிளப்புற கிளப்பு டான்சில் உடை அரைகுறையா இருந்தாலும் பரவாயில்லை ஆனால் தொப்புளுக்குத் திரைபோடவேண்டும் என்பது ஹாலிவுட்

தொப்புள் என்ற நாபிக்கொடி இறைவனுடன் இணைப்பது என்வே தமிழ்நாட்டுப் பெண்கள் தொப்புளை மறைக்காமல் சேலை கட்டினார்கள்

விரசம் ரசம் ஆபாசம் பாசம் எல்லாம் பார்ப்பவர் கண்ணில்

மெளனம்


Reply all
Reply to author
Forward
0 new messages