வெறும் கூடும் - செந்தழலின் சாறும்!

4 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Nov 28, 2009, 4:38:33 PM11/28/09
to Min Thamizh
தமி​ழில் உள்ள "கலம்​ப​கங்​களை",​
  • கட​வுள் மீது பாடப்​பட்​டவை
  • முனி​வர் மீது பாடப்​பட்​டவை
  • அர​சன் மீது பாடப்​பட்​டவை
என மூன்​றாக வகைப்​ப​டுத்​து​வர். ​

அந்த வகை​யில்,​ அர​சன் மீது பாடப்​பட்ட கலம்​ப​க​மாக நமக்​குக் கிடைத்த ஒரே கலம்​ப​கம் "நத்​திக்​க​லம்​ப​கம்" ​தான்.

கி.பி.825 - 850இல் தமி​ழில் தோன்​றிய முதல் கலம்​ப​க​மான இந்நூ​லின் பாட்​டு​டைத் தலை​வன்,​ தந்​தி​வர்​ம​னின் மக​னான மூன்​றாம் நந்​தி​வர்​மன். தமி​ழில் தோன்​றிய முதல் கலம்​பக நூலும் இதுவே என்​பது
குறிப்​பி​டத்​தக்​கது.

இந்​நூ​லைக் கற்​போர் ஒரு வீரி​ய​மிக்க இலக்​கி​யத்​தைப் படித்த உணர்​வைப் பெறு​வார்​கள்.

தொட்ட இடம் எல்​லாம் கவிச்​சுவை சொட்​டும் தேன்​த​மிழ் நூலிது.

இந்நூ​லில் ஓர் அரிய காட்சி.

தலை​வன் ஒரு​வன் இல்​ல​றக்​கி​ழமை பூண்டு தலை​வி​யு​டன் இடை​யறா இன்​பம் துய்த்​தான். இவ்​வில்​ல​றம் நல்​ல​ற​மா​கத் திக​ழப் பொருள் வேண்​டு​மல்​லவா?​

எனவே,​ பொருள் ஈட்​டக்​க​ருதி அய​லூர் சென்று பொரு​ளீட்​டி​னான். குறித்த காலத்​தில் வரு​கி​றேன் என்று தலை​வி​யி​டம் மொழிந்து சென்​றது நினை​வுக்கு வரவே,​ தேர் ஏறி விரை​கி​றான்.மே​கங்கள் கன்​னங்​க​ரேல் எனக் கறுத்து வான​மெங்​கும் பரந்து,​ விரைந்து ஓடிக்​கொண்​டி​ருந்​தன. தலை​வன் அவற்றை நோக்​கி​னான்;​ அவை கடு​வே​கத்​தில் செல்​வ​தைக் கண்​டான்;​ "ஆ!​ இம்மேகங்​கள் எவ்​வ​ளவு விரைந்து செல்​கின்​றன;​ குதி​ரை​கள் விரைந்து செல்​லா​மல்,​ தேர் ஊர்ந்து செல்​கி​றதே!​ எவ்​வ​ளவு விரைந்து செல்​லி​னும் இம்மேகங்​க​ளுக்கு முன் நம் தேர் செல்ல இய​லாதே எனக் கவ​லை​யுற்​றான். உடனே அவன் மன​தில்,​ நமக்கு முன்னே செல்​லும் இம்மேகங்​க​ளைத் தூதாக அனுப்​பி​னால்,​ நமக்​காக வழி​மேல் விழி​வைத்​துக் காத்​தி​ருக்​கும் தலை​விக்கு ஆறு​த​லாக இருக்​குமே என்ற எண்​ணம் தோன்​றவே,​ மேகங்​க​ளைப் பார்த்​துப்
பாடு​கி​றான்...

"ஓடு​கின்ற மேகங்​களே!​ ஓடாது நகர்ந்து மெல்ல, மெல்ல வரு​கின்ற தேரில் வெறும் கூடு வரு​கின்​ற​தென்று முன்​ன​தா​கச் சென்று என் காத​லி​யி​டம் அறி​வி​யுங்​கள்.

நீங்​கள் போகின்ற வேகத்​தில் அவளை எங்கே சந்​திக்​கப் போகி​றீர்​கள்?​

அழ​கிய நெற்​றியை உடைய அவ​ளைக் காண நேர்ந்​தால்,​ அவ​சி​யம் என் நிலை​யைக் கூறுங்​கள்" என வேண்​டிக் கேட்​டுக்​கொள்​கி​றான். தலை​வி​யைக் காண எண்​ணங்​கொண்டு வரு​கின்ற தலை​வ​னது உயிர்,​ தலை​வி​யி​டத்தே இருக்​கி​றது.

உயிர் நின்ற உடம்​பில்​தான் உணர்​வும், எண்​ண​மும் இருக்​கும். அவை​யில்​லாத உடல்,​ வெறும் கூடா​கத்​தான் இருக்​கும் என்​பதை எத்​தகு ஆழ​மாக இத்​த​லை​வன் உணர்த்​து​கி​றான்.

அக்​க​லம்​ப​கப் பாடல் இதோ,​​​

"ஓடு​கிற மேகங்​காள்!​ ஓடாத தேரில்​வெ​றும்

 கூடு வரு​கு​தென்று கூறுங்​கள் -​ நாடியே

 நந்​திச்சீ ராம​னுடை நல்​ந​க​ரில் நல்​நு​த​லைச்

 சந்​திச்​சீர் ஆமா​கில் தான்''.
​(பா - ​110)​

இது தலை​வன் படும் வருத்​தம்.

http://www.dinamani.com/Images/article/2009/11/29/28tm1.jpg

இனி,​ ஒரு தலைவி படும் துய​ரைக் காண்​போம்.

நந்தி மன்​னன் மேல் காதல் கொண்ட இந்​நங்​கைக்கு உணவு செல்​ல​வில்லை;​ உறக்​க​மும் கொள்​ள​வில்லை;​ காதல் மிக விஞ்​சி​யது;​ உடல் முழு​வ​தும் அவ​ளுக்கு நெருப்​புப்​போல் கொதிக்​கி​றது;​ கத​றி​னாள்;​
வாய்​விட்​டுப் புலம்​பி​னாள். அதைக் கண்ட தோழி​மார்,​ அவ​ளது வெப்​பம் தணி​வ​தற்​குச் சந்​த​னத்தை மணப்​பொ​ருள்​க​ளோடு கூட்​டிக் கலந்து,​ குழைத்து அவள் உட​லெங்​கும் தட​வி​னர். உடனே அவ​ளுக்​குச் சினம் பொங்​கு​கி​றது.

"யாரோ சில பைத்​தி​யக்​கா​ரி​கள்,​ நெருப்​பின் சாரத்தை எல்​லாம் ஒன்​றா​கச் சேர்த்​தெ​டுத்​துக் குழப்பி அதற்கு மிகக் குளிர்ச்​சி​யு​டைய சந்​த​ன​மென்று பெயர்​வைத்து என்​மீது தட​வி​விட்​டார்​களே!​

இதுவா சந்​த​னக்​கு​ழம்பு?​ சந்​த​ன​மா​னால் இப்​ப​டிச் சுடுமா?​ யாரை ஏமாற்​று​கி​றார்​கள்?​

என்று வருந்​து​கி​றாள்.

கா​த​லர்க்கு,​ குளிர்ந்த பொருள் எல்​லாம்,​ காதல் வெப்​பத்​தால் சுடு​வது இயற்கை. தழ​லுக்​குச் சாறில்லை ஆயி​னும் மிக்க வெப்​பம் என்​ப​தைக் காட்​டு​வ​தற்கு இவ்​வாறு பாடப்​பட்​டமை வியத்​தகு கற்​பனை.

இது இல்​பொ​ருள் உவமை அணி​யைச் சேர்ந்​தது.

இத்​த​லை​வி​யின் புலம்ப​லில் வெளி​யான ஓர் அரு​மை​யான பாடல் இதோ,​​

"செந்​தழ​லின் சாற்​றைப் பிழிந்து செழுஞ்​சீ​தச்
 சந்​த​ன​மென் றாரோ தட​வி​னார் - ​பைந்​த​மிழை
 ஆய்​கின்ற கோன்​நந்தி ஆகம் தழு​வா​மல்
 வேகின்ற பாவி​யேன் மேல்''.  ​(பா -​ 108)​​

தெள்ளாறு ந.பானு

நன்றி:- தினமணி

Innamburan Innamburan

unread,
Nov 28, 2009, 6:32:54 PM11/28/09
to mint...@googlegroups.com
நல் வரவு.


2009/11/29 Kannan Natarajan <thar...@gmail.com>



--
இன்னம்பூரான்

Venkatachalam Subramanian

unread,
Nov 30, 2009, 8:30:38 AM11/30/09
to mint...@googlegroups.com
ஓம்.
வடவ முகாக்னியை செந்தழல் குழம்பாக்கிய மற்றுமொரு படைப்பு.
வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து
மற்றுமொருகால் வடித்தெடுத்து
வாடைத் துருத்தி வைத்தூதி
மருகக் காய்ச்சிக் குழம்புசெய்து
புடவிக்கயவர் தமைப் பாடிப்
பரிசில் பெறாமல்திரும்பிவரும்
புலவர் மனம் போல் சுடு நெருப்பை
புழுகென்றிரைத்தாற் பொருப்பாரோ
அடவிக் கதலிப் பசுங்குருத்தை
 நச்சுக் குழல் என்று அஞ்சி அஞ்சி
அஞ்சொற்கிளிகள் பஞ்சரம் விட்டு
அகலா நிற்கும் அகளங்கா! திடமுக்கட
வாரணமுகைத்ததேவே! சோழ சிங்கமே!
திக்கு விஜயம் செலுத்தி ஒரு
செங்கோ நடாத்துமெம் கோவே!

2009/11/29 Innamburan Innamburan <innam...@googlemail.com>

N. Ganesan

unread,
Nov 30, 2009, 8:55:21 AM11/30/09
to மின்தமிழ்

On Nov 30, 7:30 am, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:


> ஓம்.
> வடவ முகாக்னியை செந்தழல் குழம்பாக்கிய மற்றுமொரு படைப்பு.
> வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து
> மற்றுமொருகால் வடித்தெடுத்து
> வாடைத் துருத்தி வைத்தூதி
> மருகக் காய்ச்சிக் குழம்புசெய்து
> புடவிக்கயவர் தமைப் பாடிப்
> பரிசில் பெறாமல்திரும்பிவரும்
> புலவர் மனம் போல் சுடு நெருப்பை
> புழுகென்றிரைத்தாற் பொருப்பாரோ
> அடவிக் கதலிப் பசுங்குருத்தை
>  நச்சுக் குழல் என்று அஞ்சி அஞ்சி
> அஞ்சொற்கிளிகள் பஞ்சரம் விட்டு
> அகலா நிற்கும் அகளங்கா! திடமுக்கட
> வாரணமுகைத்ததேவே! சோழ சிங்கமே!
> திக்கு விஜயம் செலுத்தி ஒரு

”திக்குவிசயம் செலுத்தியொரு” என்பது பாடல்.

ஐயா, இது பல்லவர் காலப்பாட்டன்று.
சோழன் அகளங்க தேவன் மேல் பாடினது.

கணேசன்

> செங்கோ நடாத்துமெம் கோவே!...
>
> read more »
>
> 2009/11/29 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
>
>
>
> > நல் வரவு.
> > இ
>
> > 2009/11/29 Kannan Natarajan <thara...@gmail.com>


>
> > தமி​ழில் உள்ள "கலம்​ப​கங்​களை",
>

> >>    - கட​வுள் மீது பாடப்​பட்​டவை
> >>    - முனி​வர் மீது பாடப்​பட்​டவை
> >>    - அர​சன் மீது பாடப்​பட்​டவை

> >> அக்​க​லம்​ப​கப் பாடல் இதோ,​​​*
>
> >> "ஓடு​கிற மேகங்​காள்!​ ஓடாத தேரில்​வெ​றும்**
> >>  கூடு வரு​கு​தென்று கூறுங்​கள் -​ நாடியே**
> >>  நந்​திச்சீ ராம​னுடை நல்​ந​க​ரில் நல்​நு​த​லைச்**
> >>  சந்​திச்​சீர் ஆமா​கில் தான்''. **​(பா - ​110)​*


>
> >> இது தலை​வன் படும் வருத்​தம்.
>
> >> [image:http://www.dinamani.com/Images/article/2009/11/29/28tm1.jpg]
>
> >> இனி,​ ஒரு தலைவி படும் துய​ரைக் காண்​போம்.
>
> >> நந்தி மன்​னன் மேல் காதல் கொண்ட இந்​நங்​கைக்கு உணவு செல்​ல​வில்லை;
> >> உறக்​க​மும் கொள்​ள​வில்லை;​ காதல் மிக விஞ்​சி​யது;​ உடல் முழு​வ​தும்
> >> அவ​ளுக்கு நெருப்​புப்​போல் கொதிக்​கி​றது;​ கத​றி​னாள்;
> >> வாய்​விட்​டுப் புலம்​பி​னாள். அதைக் கண்ட தோழி​மார்,​ அவ​ளது வெப்​பம்
> >> தணி​வ​தற்​குச் சந்​த​னத்தை மணப்​பொ​ருள்​க​ளோடு கூட்​டிக் கலந்து,​ குழைத்து
> >> அவள் உட​லெங்​கும் தட​வி​னர். உடனே அவ​ளுக்​குச் சினம் பொங்​கு​கி​றது.
>
> >> "யாரோ சில பைத்​தி​யக்​கா​ரி​கள்,​ நெருப்​பின் சாரத்தை எல்​லாம் ஒன்​றா​கச்

> >> சேர்த்​தெ​டுத்​துக் குழப்பி அதற்கு மிகக்- Hide quoted text -
>
> - Show quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages