தமிழில் தவறுகள்

111 views
Skip to first unread message

வேந்தன் சரவணன்

unread,
Feb 11, 2009, 10:34:34 AM2/11/09
to மின்தமிழ்
' தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு.'

- கல்வியின் சிறப்பினைக் கூறும் அற்புதமான குறள் இது.

ஆனால் இதன் பொருளைக் கூறுமிடத்து சற்று அவசரப்பட்டு இருக்கிறார்கள். இதன்
பொருளாகக் கூறப்படுவதாவது:

' தோண்டிய அளவே மணல்கேணியில் நீர் ஊறும். அதுபோல கற்கும் அளவே
மாந்தர்க்கு அறிவு ஊறும்.' என்பது ஆகும்.

குறளை மேலோட்டமாகப் பார்த்தால் மேற்கூறிய பொருளே கொள்ளத் தோன்றும்.
ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே அது தவறு என்று புலப்படும்.

சரியான பொருள் என்ன என்று காணும் முன்னர் இப்பொருளில் உள்ள தவறு என்ன்
என்று பார்ப்போம்.

வள்ளுவர் இக்குறளில் 'நீர்' என்ற சொல்லை பயன்படுத்தவே இல்லை. அதை நாமாகக்
கூட்டிப் பொருள் கொண்டுள்ளோம். வள்ளுவர் கூறவந்த பொருள் இதுதான் என்றால்
அவர் 'மணற்கேணி' என்ற சொல்லுக்குப் பதிலாக 'நீர்க்கேணி' என்ற சொல்லைப்
பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர் அதை பயன்படுத்த வில்லை.
அதுமட்டுமல்ல, மணற்கேணியைத் தோண்டினால் நீர் வரும் என்பது எழுதப்படாத
விதியா என்ன?. எல்லா மணற்கேணிகளிலும் தோண்டினால் நீர் வருவதும் இல்லை.
எனவே வள்ளுவர் நீர் என்ற பொருளை நேரடியாகக் கூறாமல் உய்த்துணர
வைத்திருப்பார் என்று சொல்லவும் முடியாது. ஆக இப்பாடலுக்கும் நீருக்கும்
தொடர்பே இல்லை என்பது தெளிவாகிறது.

நீருக்குத் தொடர்பில்லை என்றால் 'அறிவு' என்னும் பொருளை வள்ளுவர் எதனுடன்
இங்கே ஒப்பிடுகிறர்ர்?. நிச்சயம் மணற்கேணியுடன் தான். ஏனென்றால் அதைத்
தவிர இப்பாடலில் வேறொரு பொருள் கூறப்பட வில்லை. அதுமட்டுமின்றி,
இப்பாடலில் 'தூறும்' என்ற சொல் மணற்கேணிக்கும் அறிவுக்கும் ஒப்பீட்டுச்
சொல்லாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது மிக முக்கியமானது.

'நீர்' என்ற பொருளை வலிந்து கொள்வதற்காக 'தொட்டனைத் தூறும்' என்ற தொடரை
'தொட்டனைத்து ஊறும்' என்று பிரித்துத் தவறாகப் புரிந்து
கொண்டிருக்கிறார்கள். 'தூறும்' என்பது ஒரே சொல் தான். இதன் பொருள்
'ஆழமாகுதல்' என்பதாகும். கிணறு முதலானவற்றை ஆழப்படுத்தும் செயலான
'தூர்வாருதல்' என்னும் சொல்லாடல் இன்றும் நம்மிடையே உள்ளது அல்லவா?.
தூறிய பகுதியே 'துறை' ஆகும். இது ஆற்றுத் துறை, படித்துறை முதலான அனைத்து
நீர்த்துறைகளையும் குறிக்கும். ஆழமாகுதல் என்ற பொருளில் கொண்டால்
இப்பாடலின் பொருள் இவ்வாறு வரும்.

' தோண்டிய அளவே மணற்கேணி ஆழமாகும். அதைப் போல கற்ற அளவே மாந்தர்க்கு
அறிவு ஆழமாகும்'.

நிலத்தில் தோண்டப்படும் கிணறுக்கும் ஆற்று மணலில் தோண்டப்படும்
கிணறுக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உள்ளது. மணல்கிணறு மிக விரைவாக
மூடிக்கொண்டு விடும். அதை அடிக்கடி தோண்டிக்கொண்டே இருந்தால் தான்
ஆழமாகவே இருக்கும். அத்துடன் நிலக்கேணியைப் போலன்றி மணற்கேணியைத்
தோண்டுவதும் எளிதே ஆகும். அதனால் தான் வள்ளுவர் நிலக்கேணியைக் கூறாமல்
மணற்கேணியை அறிவுக்கு ஒப்பாகக் கூறுகிறார். இந்த மணற்கேணியைப் போலத்தான்
நமது அறிவும். கல்வி கற்பது என்பது எளிதான செயலே ஆகும். ஆனால் காலத்தின்
தேவைக்கேற்ப நல்ல நூல்களைக் கற்றுக் கொண்டிருந்தால் தான் நமது அறிவு
மூடிக்கொள்ளாது இல்லையேல் மணற்கேணி போல அறிவு மூடிக்கொள்ள நாம் 'மூடனாகி'
விடுவோம். அத்துடன் நாம் கற்கின்ற அளவே நமது அறிவின் ஆழமும் இருக்கும்.
இக்காலத்துச் சொல்லாடலான ' உனக்கு மண்டையில் என்ன களிமண்ணா இருக்கிறது?'
என்பது எதைக் குறிக்கிறது? நிச்சயம் மூடிப்போன அறிவினைத் தான்.

இதில் இருந்து சரியான திருக்குறள் என்ன என்று நீங்களே ஊகித்து
இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆம் அது இதுதான்.

' தொட்டனைத்(து) தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்(து) தூறும் அறிவு. '


இதுபோன்ற பல தவறுகளைக் கீழ்க்காணும் வலைப்பூவில் காணலாம்.

http://thiruththam.blogspot.com


அன்புடன்,

பொன்.சரவணன்
பெங்களூர்.
http://thiruththam.blogspot.com

annamalai sugumaran

unread,
Feb 11, 2009, 9:45:37 PM2/11/09
to minT...@googlegroups.com
 திரு   சரவணன் ,
 நன்றி மிக சரியான விளக்கம் .
இது மாத்ரி மெய்பொருள் காண்பது தான் அறிவு என வள்ளுவரே
கூறியுருக்கிறார் .
தகவல் தந்ததற்கு நன்றி
அன்புடன் ,
ஏ சுகுமாரன்

2009/2/11 வேந்தன் சரவணன் <vaen...@gmail.com>

Hari Krishnan

unread,
Feb 11, 2009, 10:52:43 PM2/11/09
to minT...@googlegroups.com


2009/2/12 annamalai sugumaran <amirth...@gmail.com>

 திரு   சரவணன் ,
 நன்றி மிக சரியான விளக்கம் .
இது மாத்ரி மெய்பொருள் காண்பது தான் அறிவு என வள்ளுவரே
கூறியுருக்கிறார் .
தகவல் தந்ததற்கு நன்றி
அன்புடன் ,
ஏ சுகுமாரன்

இந்த மாதிரி 'புதிதினும் புதிதுகேள்' என்பதான முயற்சிகளை ஆதரிக்கிறேன்.  நானே இப்படிப்பட்ட நிறைய விளக்கங்களையும் மாற்றுக் கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்; சொல்லி வருகிறேன்.  என்னுடைய தென்றல் பத்திரிகை தொடரைப் படித்து வருபவர்களுக்கு இது தெரியும்.  இணையத்தில் 'கல்லாமா', போன்ற என்னுடைய கட்டுரைகளைப் படித்தவர்கள் இதை நன்றாகவே அறிவார்கள்.

ஆனால், வள்ளுவரிடத்தில் ஒரு பழக்கம் உண்டு.  சில குறட்பாக்களில் எழுவாயைச் சொல்ல மாட்டார்.  (எழுவாய் என்றால் என்ன என்று கேட்பதற்கு முன்னால் சொல்லிவிடுகிறேன்.  ஆங்கிலத்தில் subject, predicate. object  என்று சொல்கிறார்கள் அல்லவா, அவற்றில் subject என்பதே எழுவாய்.) 

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி அன்னோர் உடைத்து.

என்ற குறளுக்கு எழுவாய் எது?  அவர் சொல்லவில்லை.  'உலகு' என்று நாம் வருவித்துக் கொள்ளவேண்டும்.  உருண்டோடும் பெரிய தேருக்கு அச்சாணியைப் போன்றவர்களை இந்த உலகம் உடையதாக இருக்கிறது என்று நாம் வருவித்துப் பொருள் கொள்ள வேண்டும்.

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்று சொல்லும்போதும் ஒரு விஷயத்தை ஒளித்து வைத்திருக்கிறார்.  தோண்டத் தோண்ட மணலில் அமைக்கும் கேணியில் ஊறும் என்றால், என்ன ஊறும்?  ஆழம் எப்படி ஊறும்?  நீர்தான் ஊறும்.  ஆழம் ஊறாது.  ஊறும் என்ற சொல்தான் இங்கே cue. 

அப்பா, கற்பது என்னவோ யாராலும் முடியாத, மிகக் கடினமான வேலை இல்லை.  கற்கேணி தோண்டுவதுபோல் வேட்டுவைத்துப் பிளந்து, பத்துப் பதினைந்துபேர் ஒன்றாகச் சேர்ந்து தோண்டுகிற வேலை இல்லை அது.  மணலைத் தோண்டிக்கொண்டே போகப் போக, ஊற்றும் பெருகிக்கொண்டே போகும் என்றுதான் சொல்கிறார்.  'தொட்டு அனைத்து ஊறும்' என்பதில் உள்ள 'ஊறும்' எதைக் குறிக்கிறது?  நீர் ஊறுமா, அல்லது ஆழம் ஊறுமா? ஊற்றுதான் ஊறும்.  ஆழம் ஊறாது. 

//எல்லா மணற்கேணிகளிலும் தோண்டினால் நீர் வருவதும் இல்லை.

எனவே வள்ளுவர் நீர் என்ற பொருளை நேரடியாகக் கூறாமல் உய்த்துணர
வைத்திருப்பார் என்று சொல்லவும் முடியாது. ஆக இப்பாடலுக்கும் நீருக்கும்
தொடர்பே இல்லை என்பது தெளிவாகிறது.//

என்ற வரிகளை எடுத்துக் கொள்வோம்.  எல்லாக் கேணிகளிலும் (மணல், கல், பாறை எதில் தோண்டினாலும்) நீர் வருவதில்லை; சிலவற்றில் நீர் கிடைப்பதில்லை என்பதெல்லாம் உண்மைதான்.  ஆனால், ஒருவன் கேணியைத் தோண்டுகிறான் என்றால் எதற்காகத் தோண்டுகிறான்?  வெறுமனே பூமியைத் தோண்டி, குடைந்து ஆழப்படுத்திக் கொண்டே போவதனால் என்ன பயன்? சுரங்கமா தோண்டுகிறான்?  சுரங்கமே தோண்டினாலும், அந்தக் குறிப்பிட்ட நோக்கத்தின்போது தேவையற்றதாகக் கருதப்படும் நீரை வெளியேற்றிதானே ஆகவேண்டும்?  'ஊறும்' என்றொரு சொல்லைப் பெய்திருக்கிறாரே, எது ஊறும், ஆழமா அல்லது நீரா?  நீர் ஊறும் என்று சொல்வது வழக்கமா அல்லது ஆழம் ஊறும் என்று சொல்வது வழக்கமா?

கேணியைத் தோண்டுவதன் நோக்கம் என்ன?  ஆழப்படுத்துவதா அல்லது நீரைப் பெறுவதா?  நோக்கத்தை அடியாக வைத்தல்லவா வள்ளுவ உவமையை அல்லது உருவகத்தை இனங்காண வேண்டும்?  யாராவது ஆழத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கேணியைத் தோண்டுவார்களோ?  நீரைப் பெறவேண்டும் என்ற நோக்கத்துக்காக அல்லவோ கிணறு தோண்டப்படுகிறது?

ஆகவே, இந்தக் குறளில் உள்ள மறைபொருள் நீர்தான்; நீர் மட்டுமேதான்.  ஆழம் இல்லை. இதை அப்படியே அறிவுக்குப் பொருத்திக் காட்ட முடியும்.  சென்னைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதை விரித்துக்கொண்டிருந்தால் ரயில் போய்விடும்.  இந்த விளக்கத்தைப் பார்த்தவுடன் என்னை நிறுத்திக் கொள்ள முடியாமல் எழுத அமர்ந்துவிட்டேன்.

மாத இறுதியில் திரும்ப வந்த பிறகு மற்றவற்றைப் பேசுகிறேன்.  'சொல்லாடச் சோர்வுபடும்' விளக்கமா இல்லை தட்டிப் பார்த்தால் நிற்கும் விளக்கமா என்பதையெல்லாம் நான் திரும்ப வந்தபிறகு வைத்துக் கொள்ளலாம்.

(என் பேச்சில் எங்கேனும் கடுமை தென்பட்டால் அருள்கூர்ந்து பொருத்தருள்க.  விவாதத்தில் சூடு பறக்கலாம்.  தீப்பற்றிக் கொள்ள அனுமதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன் நான்.  கருத்தைத்தான் விவாதிக்கிறேனே ஒழிய கருத்தாளரை இல்லை.  அவசரத்தில் எழுதிய காரணத்தால் கூறியது கூறல் நேர்ந்திருக்க வாய்ப்புண்டு.  அதற்கும் சேர்த்து மன்னிக்கவும்.)



--
அன்புடன்,
ஹரிகி.

devoo

unread,
Feb 11, 2009, 10:54:05 PM2/11/09
to மின்தமிழ்
முற்றிலும் புதிய கோணம்!
இதுவே சரியான பொருள்.
பாராட்டுக்கள்.

தேவ்

வேந்தன் அரசு

unread,
Feb 11, 2009, 10:59:59 PM2/11/09
to minT...@googlegroups.com
2009/2/11 வேந்தன் சரவணன் <vaen...@gmail.com>
' தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

கற்றனைத் தூறும் அறிவு.'


'நீர்' என்ற பொருளை வலிந்து கொள்வதற்காக 'தொட்டனைத் தூறும்' என்ற தொடரை
'தொட்டனைத்து ஊறும்' என்று பிரித்துத் தவறாகப் புரிந்து
கொண்டிருக்கிறார்கள். 'தூறும்' என்பது ஒரே சொல் தான். இதன் பொருள்
'ஆழமாகுதல்' என்பதாகும். கிணறு முதலானவற்றை ஆழப்படுத்தும் செயலான
'தூர்வாருதல்' என்னும் சொல்லாடல் இன்றும் நம்மிடையே உள்ளது அல்லவா?.
தூறிய பகுதியே 'துறை' ஆகும். இது ஆற்றுத் துறை, படித்துறை முதலான அனைத்து
நீர்த்துறைகளையும் குறிக்கும். ஆழமாகுதல் என்ற பொருளில் கொண்டால்
இப்பாடலின் பொருள் இவ்வாறு வரும்.

மன்னிக்கணும்

நீங்க சொல்லும் பொருள் படி பார்த்தால் குறள் இப்படி இருக்கணும்:

' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து தூறும் அறிவு.'



வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.

Hari Krishnan

unread,
Feb 11, 2009, 11:01:24 PM2/11/09
to minT...@googlegroups.com
2009/2/11 வேந்தன் சரவணன் <vaen...@gmail.com>
'நீர்' என்ற பொருளை வலிந்து கொள்வதற்காக 'தொட்டனைத் தூறும்' என்ற தொடரை
'தொட்டனைத்து ஊறும்' என்று பிரித்துத் தவறாகப் புரிந்து
கொண்டிருக்கிறார்கள். 'தூறும்' என்பது ஒரே சொல் தான். இதன் பொருள்
'ஆழமாகுதல்' என்பதாகும்.

இல்லை.  அப்படி ஒரு பொருள் இல்லை.  துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும் என்பதில் தொடங்கி, எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் என்பது வரையில் 'தூறு' என்ற சொல்லுக்கு அப்படி ஒரு பொருள் இல்லை.  தூர்வாருதல் என்பதில் உள்ளதோ தூர் என்ற இடையின ரகரம்.  தூறு என்பதில் உள்ளது வல்லின றகரம்.  இரண்டும் வேறுவேறு சொற்கள்.  தூர்வாருதல் என்றால் என்ன பொருள் என்று சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் (OTL) எடுத்துப் பார்க்க வேண்டுகிறேன்.

மீண்டும். அவசரம்.  மன்னிக்கவும்.

Hari Krishnan

unread,
Feb 11, 2009, 11:09:01 PM2/11/09
to minT...@googlegroups.com


2009/2/12 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>




மன்னிக்கணும்

நீங்க சொல்லும் பொருள் படி பார்த்தால் குறள் இப்படி இருக்கணும்:


' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து தூறும் அறிவு.'


அப்டிபோடுங்கன்னான்.  அதே. அதே.  பிரித்துப் பார்த்தல்லவா பொருள் கொள்ள முடியும்! 

அதுசரி.  இங்கே ஏகப்பட்ட வேந்தர்கள் இருக்கிறார்களோ! எழுதியிருப்பதே நீங்கதான் என்றல்லவா நினைத்தேன்!  மறுக்க அல்லவா வருகிறீர்கள்! எந்த வேந்தராயிருந்தாலும் வாழ்க. சிந்திக்க நிறைய விஷயம் கிடைத்தது.

Kumaran Malli

unread,
Feb 11, 2009, 11:21:05 PM2/11/09
to minT...@googlegroups.com

வேந்தன் சரவணன் சொன்ன இந்த விளக்கத்தை மறுத்த ஹரியண்ணா, வேந்தன் அரசு ஐயா இருவரின் விளக்கங்களை ஏற்றுக் கொள்கிறேன். புதிய கோணங்களும் விளக்கங்களும் காணப்படவேண்டும். ஆனால் இந்தக் குறளில் ஊறும் என்பதை 'தூறும்' என்று எடுத்துக் கொண்டு தவறாகப் பொருள் சொல்வதாகத் தான் தோன்றுகிறது.

annamalai sugumaran

unread,
Feb 11, 2009, 11:35:11 PM2/11/09
to minT...@googlegroups.com
தங்கள் பதிலுக்கு நன்றி திரு ஹரிகி ,
உண்மைதான் ,வள்ளுவர் படிப்பபவர்களுக்கு ,சிறிது சுதந்திரம் தருவார் .
எழுவாய் அவர் நமக்கு , நமது மனப் பக்குவம் ,அறிவுக்கு தகுந்த படி விட்டுவிடுவார் .
சீக்கிரம் ஊருக்கு வாங்க !

அன்புடன் ,
ஏ சுகுமாரன்

2009/2/12 Hari Krishnan <hari.har...@gmail.com>

நினா.கண்ணன்

unread,
Feb 12, 2009, 12:20:07 AM2/12/09
to minT...@googlegroups.com
' தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு.'

- கல்வியின் சிறப்பினைக் கூறும் அற்புதமான குறள் இது.

'தொட்டனைத் தூறும் மணற்கேணி'
 
தோண்டத் தோண்ட ஊறும் மணல் கிணத்தை போல---------
 
   'மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு.'
மனிதர்கள் கற்க கற்க அறிவு ஊறும்.
 
இதுதானே!
 
இதையேன் பலவகையாகப் பிரித்து பொருள் கொள்கிறீர்கள். இடமறிந்து பொருள் கொண்டால் இங்கு நீர் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகிறது




Vaendhan Saravanan

unread,
Feb 12, 2009, 12:25:28 AM2/12/09
to minT...@googlegroups.com
குறளுக்குக் கொடுத்த விளக்கத்தை முழுவதுமாக நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். வள்ளுவர் எழுதியது 'தொட்டனைத்து தூறும்' என்று தான். அதை எடுத்து எழுதியவர்கள் 'தொட்டனைத் தூறும்' என்று எழுதியதால் வந்த குழப்பம் இது.
 
'தொட்டனைத் தூறும்' என்று தவறாக எழுதியதால் தான் நம் மக்கள் ' தொட்டு அனைத்து ஊறும்' என்று மூன்றாகப் பிரித்து 'ஊறும்' என்ற சொல் வருவதால் வள்ளுவர் 'நீரை' த்தான் அதில் குறிப்பிடுகிறர்ர் என்று தவறாகப் பொருள் கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது.
 
எதற்கெடுத்தாலும் அகராதிகளைத் தேடாதீர்கள். அகராதிகள் வேதவாக்கல்ல. அவற்றிலும் தவறுகள் இருக்கலாம். 'தூறு' தல் என்பதற்கு 'குழியாதல்' 'ஆழமாதல்' என்ற பொருட்களில் அல்லாது வேறு பொருளில் இருந்தால் சரியான ஆதாரங்களை முன்வையுங்கள்.
 
தமிழில் ரகர றகரச் சிக்கல்களும் குழப்பங்களும் புதியதா என்ன?. அதை நீங்கள் ஒரு காரணமாகக் கூற முடியாது.
 
சரியான தரவுகளுடன் நீங்கள் மறுத்துப் பார்க்கலாம்.
 
அவற்றை எப்போதுமே வரவேற்கிறேன்.
 
அன்புடன்,
 
சரவணன்
பெங்களூர்.

 

Raja sankar

unread,
Feb 12, 2009, 1:08:25 AM2/12/09
to minT...@googlegroups.com
எனக்கு சொல்லித்தந்த தமிழாசிரியர் இப்படித்தான் விளக்கமளிதார்

ஆற்றுமணலில் குழி தோண்டினால் நீர் வரும். அது போல் கற்க ஆரம்பித்தால் கல்வி வரும். ஊத்து என்பது அவசரத்துக்கு தோண்டுவது. ஆற்று மணலில் எங்கு தோண்டினாலும் ஊத்து காண முடியும். அதுதான் தொட்ட என்பது குறிக்கிறது.

கல்வியில் பெரிய சேதி இருக்கிறது

கல்வி கற்றவர்களாலேயே மேலும் கல்ல முடியும். கற்காதவர்களால் அல்ல.

இங்கு கல்வி என்பது மனனம் அல்ல. யோசிப்பது, சிந்திப்பது என்ற பொருளிலில்.
அது முடிபவர்களால் எதையும் கற்க முடியும் அல்லவா அதுதான் கற்றனை

கல்வி அழியாத செல்வம். வித்யாகர்வம் என்று வடமொழியில் சொல்லப்படும் கல்வித்திமிர் அடக்க அழிக்க விட முடியாதது.

ராஜசங்கர்



2009/2/12 Vaendhan Saravanan <vaen...@gmail.com>

Hari Krishnan

unread,
Feb 12, 2009, 1:17:14 AM2/12/09
to minT...@googlegroups.com


2009/2/12 Vaendhan Saravanan <vaen...@gmail.com>

குறளுக்குக் கொடுத்த விளக்கத்தை முழுவதுமாக நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். வள்ளுவர் எழுதியது 'தொட்டனைத்து தூறும்' என்று தான். அதை எடுத்து எழுதியவர்கள் 'தொட்டனைத் தூறும்' என்று எழுதியதால் வந்த குழப்பம் இது.

தொட்டனைத்து தூறும் என்ற பாடம் எந்தப் பதிப்பில் உள்ளது?  அல்லது, இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், மணக்குடவர், பரிமேலழகர் முதலான பழைய உரையாசிரியர்களிலோ, அல்லது வஉசி, முவ தொடங்கி இன்னமும் பொருள் உரைத்துக் கொண்டிருக்கும் உரையாசிரியர்களில் யாராவது ஒருவரோ இந்தப் பாடத்தை மேற்கொண்டிருக்கிறார் என்பதற்கான சான்று இருக்கிறதா?
 

 
எதற்கெடுத்தாலும் அகராதிகளைத் தேடாதீர்கள். அகராதிகள் வேதவாக்கல்ல. அவற்றிலும் தவறுகள் இருக்கலாம். 'தூறு' தல் என்பதற்கு 'குழியாதல்' 'ஆழமாதல்' என்ற பொருட்களில் அல்லாது வேறு பொருளில் இருந்தால் சரியான ஆதாரங்களை முன்வையுங்கள்.

அகராதிகளையும் நிகண்டுகளையும் விட்டுவிட்டால் மனம்போன போக்கில் பொருள் சொல்லலாம்.  அகராதிகள்--அதிலும் குறிப்பாக சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி--உவேசா, சு வையாபுரி பிள்ளை போன்ற நூற்றுக்கணக்கான தமிழறிஞர்களால் தொகுக்கப்பட்டது. இதில் தவறு ஏற்பட வாய்ப்பில்லை.  தவறு இருக்கிறது என்றால், ஆட்சியில் ஆவணத்தில் மற்றயலார் தங்கள் காட்சியில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாக முன்னால் வைக்கவேண்டியது உங்களுடைய பணி.  என்வேலை இல்லை.  வழக்கைத் தொடுத்தவர்தான் ஆதாரத்தைக் காட்டவேண்டும்.

தூறு என்ற சொல்லின் இலக்கணம் என்ன, அது வினையா, பெயரா, வினையடையா...என்ற விளக்கங்களோடு தங்களுடைய வாதத்தை முன்வைத்தால், அது பொருத்தமாகவும் இருந்தால் ஏற்பதில் எந்தத் தடையும் இல்லை.

'எதெற்கெடுத்தாலும் அகராதிகளைத் தேடாதீர்கள்' என்று சொல்லும் நீங்களே அகராதியின் துணையில்லாமல் எந்த இலக்கியத்தையும்--அது எந்த மொழியில் ஆனதாயினும்--பயில முடியாது. 
 
 
தமிழில் ரகர றகரச் சிக்கல்களும் குழப்பங்களும் புதியதா என்ன?. அதை நீங்கள் ஒரு காரணமாகக் கூற முடியாது.

இதை நானும் அறிவேன்.  இதுபற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.  எல்லாம் மாத இறுதியில் பேசுகிறேன்.  இந்த விஷயத்தில்  துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற பாரதியையும், எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் என்ற வள்ளுவரையும் முன்னால் நான் ஏற்கெனவே வைத்திருக்கிறேன்.  தூறு என்ற சொல்லுக்கு ஏராளமான பொருள் உண்டு.  இப்போது எனக்குப் பொழுதில்லை.  பிறகு சொல்கிறேன்.

தொட்டனைத்து தூறும் என்ற பாடத்துக்கு ஆதாரமில்லை; அதன் பொருளிலும் பொருத்தமில்லை என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.  (வன்றொடர் குற்றியலுகரமான 'தொட்டனைத்து' என்பதன்பின் வலி மிகுமா, மிகாதா?  அப்படியென்றால் 'தொட்டனைத்துத் தூறும்' என்றல்லவா இருந்திருக்க வேண்டும்?  எடுத்து எழுதியவர்கள் இரண்டு எழுத்துகளை விட்டுவிட்டார்களா?)

 
சரியான தரவுகளுடன் நீங்கள் மறுத்துப் பார்க்கலாம்.

நான் கொடுத்திருப்பவை எல்லாமே சரியான தரவுகள்தாம் என்பதனை இந்த மன்றத்தில் உள்ள அறிஞர்கள் அறிவார்கள்.

Vaendhan Saravanan

unread,
Feb 12, 2009, 1:38:00 AM2/12/09
to minT...@googlegroups.com
ஹரிகி அவர்களே!
 
அகராதிகளை எதிர்ப்பவன் அல்ல நான். அதே சமயம் அதில் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுபவன். முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவசியமா?. தவறுகள் எங்கிருந்தாலும் அதைத் துணிவுடன் முன் வையுங்கள்.
 
'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறிய நக்கீரர் பிறந்ததும் நம் தமிழகத்தில் தானே.
 
பல தமிழ் அறிஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து இயற்றிய அகராதியாக இருந்தால் அதில் பிழைகள் இருக்க முடியாதா இல்லை இருக்கத்தான் கூடாதா?.
 
'தூறு' என்னும் சொல் உணர்த்தும் பொருள் 'ஆழமாகு' என்பது ஆகும். இது வினைச்சொல் ஆகும். இதற்கு சான்று தான் 'துறை' என்னும் பெயர்ச்சொல். துறை என்பது நீர்நிலைகளைக் குறிக்கும். 'தூறிய பகுதியே' துறை ஆனது. அதாவது ஆழமான பகுதி ஆகும். இந்த விளக்கங்கள் எந்த அகராதியிலும் சொல்லப்படாவிட்டால் அதை நாம் புதியதாக சேர்த்துக் கொள்ளவேண்டுமே ஒழிய 'இது அகராதியில் இல்லை அதனால் ஒப்புக்கொள்ள முடியாது' என்றால் அகராதிகள் வளராது. நின்றுவிடும்.
 
அகராதி என்பது ஒருமுறை எழுதிவைத்துவிட்டு 'அப்பாடா வேலை முடிந்துவிட்டது' என்று ஓய்வு எடுத்துக் கொள்ளும் பொருள் அல்ல. வளரவேண்டும். காலத்தின் தேவைக்கேற்ப புதிய சொற்களை புதிய பார்வைகளில் கண்டறிந்து அவற்றை நாம் சேர்த்துக்கொண்டும் திருத்திக் கொண்டும் சென்றால் தான் தமிழ் அகராதிகளும் நிலைத்து நிற்கும்.
 
நான் தரவுகளை முன்வைத்துவிட்டேன்.
 
இனி நீங்கள்.....?
 
 
அன்புடன்,
 
பொன்.சரவணன்
பெங்களூர்.

 
2009-02-12 அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதினார்:

Hari Krishnan

unread,
Feb 12, 2009, 2:06:36 AM2/12/09
to minT...@googlegroups.com


2009/2/12 Vaendhan Saravanan <vaen...@gmail.com>

ஹரிகி அவர்களே!
 
அகராதிகளை எதிர்ப்பவன் அல்ல நான். அதே சமயம் அதில் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுபவன். முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவசியமா?. தவறுகள் எங்கிருந்தாலும் அதைத் துணிவுடன் முன் வையுங்கள்.
 
'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறிய நக்கீரர் பிறந்ததும் நம் தமிழகத்தில் தானே.
 
பல தமிழ் அறிஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து இயற்றிய அகராதியாக இருந்தால் அதில் பிழைகள் இருக்க முடியாதா இல்லை இருக்கத்தான் கூடாதா?.

பிழைகள் இருந்தால், பிழை இருக்கிறது என்று சொல்பவரின் ஆழம் உலகத்தால் அறியப்பட்டிருக்க வேண்டும்.  அவ்வாறு அறியப்படாத வரையில்

...............ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார்.

அவ்வளவுதான்.

மன்னிக்கவும் இந்தக் குறளின் எழுவாயாகச் சுட்டப்படுவது குறிப்பிட்ட எந்தத் தனிநபரையும் அன்று. 
 
 
'தூறு' என்னும் சொல் உணர்த்தும் பொருள் 'ஆழமாகு' என்பது ஆகும். இது வினைச்சொல் ஆகும். இதற்கு சான்று தான் 'துறை' என்னும் பெயர்ச்சொல். துறை என்பது நீர்நிலைகளைக் குறிக்கும். 'தூறிய பகுதியே' துறை ஆனது. அதாவது ஆழமான பகுதி ஆகும். இந்த விளக்கங்கள் எந்த அகராதியிலும் சொல்லப்படாவிட்டால் அதை நாம் புதியதாக சேர்த்துக் கொள்ளவேண்டுமே ஒழிய 'இது அகராதியில் இல்லை அதனால் ஒப்புக்கொள்ள முடியாது' என்றால் அகராதிகள் வளராது. நின்றுவிடும்.

பொருள் சொல்லும்போது, அந்தப் பொருளுக்கு அடிப்படை இருக்கவேண்டும்.  வேறு யாராவது இந்தப் பொருளில் பயன்படுத்தியிருக்க வேண்டும்.  அல்லது மக்களிடத்திலாவது இந்தப் பொருள் வழங்கி வருதல் வேண்டும்.  இப்படி இல்லாத பட்சத்தில் பொருள்விளக்கங்கள் பொருந்தா.
 
 

 
நான் தரவுகளை முன்வைத்துவிட்டேன்.
 
இனி நீங்கள்.....?

நான் முன்னரேயே சொன்னதுபோல் அவசரத்தில் இருக்கிறேன்.  இருந்தபோதிலும் இந்த 'தூறு' பற்றி நான் மரத்தடி குழுமத்தில் எழுதியது இந்தத் திறக்கில் இருக்கிறது:

http://www.maraththadi.com/article.asp?id=2010

பதில் சொல்லத் தெரியாத காரணத்தால் இல்லை, நேரமில்லாத காரணத்தால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.  இனி நீங்கள் தொடர்ந்துகொள்ளளலாம்.  என்னால் தொடர முடியாது.  மன்னிக்கவும்.  (நானும் பெங்களூரான்தான்.)

Hari Krishnan

unread,
Feb 12, 2009, 2:08:57 AM2/12/09
to minT...@googlegroups.com


2009/2/12 Hari Krishnan <hari.har...@gmail.com>



நான் முன்னரேயே சொன்னதுபோல் அவசரத்தில் இருக்கிறேன்.  இருந்தபோதிலும் இந்த 'தூறு' பற்றி நான் மரத்தடி குழுமத்தில் எழுதியது இந்தத் திறக்கில் இருக்கிறது:

http://www.maraththadi.com/article.asp?id=2010


மேற்படிப் பக்கத்தில் உள்ளது தூறு/தூர் என்பதன் முழுமையான விளக்கமன்று. இப்போதைக்கு இது.  பின்னால் சொல்கிறேன்.

வேந்தன் சரவணன்

unread,
Feb 12, 2009, 2:39:07 AM2/12/09
to minT...@googlegroups.com
ஹரிகி அவர்களே!
 
நீங்கள் சுட்டிய மரத்தடியில் 'தூறு' பற்றிய கட்டுரையினைப் படித்தேன். அதன் இறுதியில் நீங்களே தூறு என்னும் சொல்லுக்கு அடி மண்டி, அடியில் தேங்கிய கசடு, கிணற்றில் உள்ள மண் என்றெல்லாம் கூறி இருக்கிறிர்களே.
 
அதைத்தானே நானும் சொல்கிறேன். தூறு என்னும் வினைச் சொல்லுக்கு மண்ணை அகற்றுதல் அல்லது குழி செய்தல் என்பது பொருள். அதுவே பெயர்ச்சொல்லாக வரும்போது அகற்றப்பட்ட மண் அல்லது அகற்றவேண்டிய மண் அதாவது கசடு என்று பொருள் கொள்ளும்.
 
நீங்கள் சொல்லும் 'வைத்தூறு' என்பதற்கு வைத்தூர் என்பதே சரி. ஏனென்றால் தூர் என்றால் தான் குவியல் என்று பொருள். இது ரகர றகரக் குழப்பம்.
 
பாரதியார் பாட்டில் ( துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்) வரும் தூறு என்பது எதைக் குறிக்கிறது? நிச்சயம் கசடு என்பதைத் தான். மண்ணை வெட்டிக் குழி தோண்டும்போது வெட்டிய மண்ணைத் துச்சமாகக் கருதி வீசி எறிவார்கள். இந்த மண்ணைத் தான் பாரதியார் 'தூறு' என்கிறார். 'துச்சமாகக் கருதி நம்மை வெட்டி வீசும் போதிலும்' என்று கூறுகிறார். 
 
நீங்கள் ஊருக்குச் சென்று விட்டீர்களா?.
 
பெங்களூருக்குத் திரும்பி வரும்போது சொல்லுங்கள்.
 
அன்புடன்,
 
பொன்.சரவணன்
பெங்களூர்.

 
2009-02-12 அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதினார்:

இராமதாசன்

unread,
Feb 12, 2009, 4:25:28 AM2/12/09
to minT...@googlegroups.com
On வி, 2009-02-12 at 12:36 +0530, Hari Krishnan wrote:
>
> பொருள் சொல்லும்போது, அந்தப் பொருளுக்கு அடிப்படை இருக்கவேண்டும். வேறு
> யாராவது இந்தப் பொருளில் பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது
> மக்களிடத்திலாவது இந்தப் பொருள் வழங்கி வருதல் வேண்டும். இப்படி இல்லாத
> பட்சத்தில் பொருள்விளக்கங்கள் பொருந்தா.
>

சொல்பவர் அதிகாரத்திலோ அல்லது அதிகாரத்தில் உள்ளோர் சொல்பவர் சொல்
கேட்பவராகவோ இருந்தாலும் இது சாத்தியப்படும். அப்போ உண்மை பொருளெல்லாம்
புண்ணாக்கு ;-)

எண்பது சதவிகித குறளுக்கு வளைத்து பொருள் எழுதி ஆயிரக்கணக்கனக்கில் சேல்ஸ்
ஆனது போல. ;-)


--

ஆமாச்சு

வேந்தன் அரசு

unread,
Feb 12, 2009, 8:34:31 AM2/12/09
to minT...@googlegroups.com


2009/2/11 Hari Krishnan <hari.har...@gmail.com>


அதுசரி.  இங்கே ஏகப்பட்ட வேந்தர்கள் இருக்கிறார்களோ! எழுதியிருப்பதே நீங்கதான் என்றல்லவா நினைத்தேன்!  மறுக்க அல்லவா வருகிறீர்கள்! எந்த வேந்தராயிருந்தாலும் வாழ்க. சிந்திக்க நிறைய விஷயம் கிடைத்தது.

ஹரியண்ணா,

 உங்க கண்ணோட்டத்தில் இப்படி இருக்கணும்

தொட்டனைத்துத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்துத் தூறும் அறிவு.'

Tthamizth Tthenee

unread,
Feb 12, 2009, 9:03:14 AM2/12/09
to minT...@googlegroups.com
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
 
இந்தக் குறளில்
 
வைத்தூறு
 
 என்பது என்ன பொருளில் வருகிறது
தயவு செய்து சொல்லுங்களேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2009/2/12 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 12, 2009, 1:58:26 PM2/12/09
to minT...@googlegroups.com


2009/2/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
 
இந்தக் குறளில்
 
வைத்தூறு
 
 என்பது என்ன பொருளில் வருகிறது
தயவு செய்து சொல்லுங்களேன்
 
 
வைக்கோல் போர்
 

--

Tthamizth Tthenee

unread,
Feb 13, 2009, 4:45:19 AM2/13/09
to minT...@googlegroups.com
அப்படியானால் இங்கு மட்டும் ஏன் வைத்தூறு என்று பொருள் கொள்ளவேண்டும்

வைத்த ஊறு என்று பொருள் கொள்ளலாமே

எரி முன்னர் வைத்த ஊறு, ஊறுகின்ற அல்லது நீர் ஊறுகின்ற சுனை என்று பொருள் கொள்ளலாமே



2009/2/13 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

வேந்தன் சரவணன்

unread,
Feb 13, 2009, 6:12:31 AM2/13/09
to minT...@googlegroups.com
ஐயா அது வைத்தூறு அல்ல வைத்தூர். அதாவது வைக்கோல் குவியல். வை = வைக்கோல், தூர் = குவியல்.
 
தூறு வேறு தூர் வேறு. குழப்பிக் கொள்ளாதீர்கள்.
 
அன்புடன்,
 
பொன்.சரவணன்
பெங்களூர்.

 
2009-02-13 அன்று, Tthamizth Tthenee <rkc...@gmail.com> எழுதினார்:

Tthamizth Tthenee

unread,
Feb 13, 2009, 7:29:23 AM2/13/09
to minT...@googlegroups.com
ஐய்யா நான் குழப்பிக் கொள்ளவில்லை
வைத்தூறு போலக் கெடும் என்றுதான் எழுதியிருக்கிறார்
வைத்தூர் என்று எழுதவில்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/2/13 வேந்தன் சரவணன் <vaen...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 13, 2009, 2:24:59 PM2/13/09
to minT...@googlegroups.com


2009/2/13 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

அப்படியானால் இங்கு மட்டும் ஏன் வைத்தூறு என்று பொருள் கொள்ளவேண்டும்
 
அது பழம்தமிழ்ங்க ஐயா.
கோல் என்பதனினும் தூறு பொருத்தமான் சொல்.
 பிரி ஆக்குவதன் முன் அது தூறு. அதனால் எளிதில் தீ பற்றும்
Reply all
Reply to author
Forward
0 new messages