ஊடகமே செய்தியானால் அது என்ன சொல்லும்

31 views
Skip to first unread message

பூனைக் கவிராயர்

unread,
Sep 17, 2013, 2:03:20 PM9/17/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
தமிழகத்தில் உயர்குடிப் பெண்டி நடனமாடுவது அதிலும் சதிராடுவது வரவேற்பில்லாமல் புறக்கணிக்கப்பட்ட காலம்.  ஒரு கிறித்துவ மேநாட்டுப் பாதிரியாரக் கைப்பிடித்த இளம்பெண் ருக்மணிதேவியின் ஆர்வம் அன்னா பாவ்லோவிடம் பாலே நடனம் கற்ருக்கொள்வது.  அனால் அன்ன பாவ்லோவ் முதலில் உங்களூர் நடனக்கலையில் நாட்டம் செலுத்துங்கள் என்று சொன்னதால் அவர் சதிரைக் கையில் எடுத்தார்.  அதைச் செப்பனிட்டு அதில் உள்ள சிருங்கார ரசத்தையும் மாம உணர்வைத் தூண்டுக் உடல் அசைவுகளையும் வடிகட்டிவிட்டு விரசம் என்று ஒன்றுமில்லாத ஒரு புதிய ஆடல்கலையை அறிமுகப் படுத்தினார்.  முதலில் எதிர்ப்புத் தொன்றினாலும் ஆழ்ந்து பார்த்தால் அதில் உள்ளுரைப் பொருளை உணர்ந்தவர்கள் ஏற்றுக்கொண்டதோடு பரத நாட்டியம் கற்றுக்கொள்வது வாழ்க்கையின் அடிப்படை என்ற நிலைக்கு வளர்ந்தது


தகவலியல் மற்றும் கருத்துப்பரிமாற்றம் பற்றிய அறிஞர் மார்ஷல் மக்லுகன் என்பவர் MEDIA IS THE MESSAGE என்ற கருத்தை முன்வைத்தார். அதன்படி பரத நாட்டியம் கற்றுக்கொள்ளும் பெண் அந்த ஊடகம் சொல்லும் செய்தியை உள்வங்கிகொள்ளுவார் அதையே பெரிதும் நம்பி வாழ்வார் என்ற கருத்தை முன்மொழிந்தார்

நாயகனைக் கவரும் விதத்தில் ஆடை அலங்காரம்

நாயகன் பிரிவால் வாடவேண்டும்

நாயகனுக்கு அடிபணிந்தே அவனைக் கவரவேண்டும்

நாயகனுடன் ஊடல் கொள்ளுதல், சினம் காட்டுதல் பிரிவினால் ஏமாற்றம் பசலை நோய் என்ற மனப்பிறழ்வை அடைதல் கூடாது

என்று நடனக்கலை ஒரு பெண்ணை ஆணின் ஆதிக்க வலைக்குள் வீழ்த்த உதவுகிறது

ஆனென்றால் காலைத் தலிக்குமேல் தூக்கி காலைத் தூக்கி நின்றாடலாம் ஆனல்ல் பெண் அவ்வாறு செய்ய முடிந்தாலும் செய்யக்கூடாது


சதிரில் இருந்த தோன்றிய பரத நாட்டியம் சாரத்தை இழந்து பெண் அவளை அறியாமலேயே ஆணாதிக்கத்துக்குள் அழைத்துச் செல்லும் கலையாக சிருங்காரம் இல்லாத நடனமாக் இருப்பதாக பாலசரஸ்வயி ருக்மணிதேவிக்கு ர்திராக வாதம் புரிந்தவர்

நாட்டியம் என்ற ஊடகம் சொல்லும் செய்தி இது

ஆராய்ச்சிக் குஞ்சு

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Sep 17, 2013, 11:40:38 PM9/17/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
வாவ்...
பாராட்டுகள்!
வவ அவர்களே!

பிகினிகளில்
ரப்பர் உடம்பாக்கி
எலும்புகளையெல்லாம்
எங்கோ காணாமல் செய்துவிட்டு
ஜிம்னாசியம் எனும்
மாய அசைவுகளில்
நம்மை மெய்சிலிர்க்கவைத்த
ஒலிம்பிக் போட்டிகளை
நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால்
எட்டு முழுப்புடவையிலும்
எட்டாத சிகரங்களையும்
எட்டாய் மடக்கி விடுவார்கள்
போலிருக்கிறதே இங்கு.
அந்த‌
பச்சைமயில் தோகைகளின்
விசிறி மடிப்புகள்
கத்தி கத்திகளாய்
கூர்மையையே எழிலாக்கி 
நம்
விழிகளை வியப்பில்
விரிய வைக்கின்றனவே!

அந்த "ஏக பாத மூர்த்தினி"யிடம்
சிவனே தோற்றான்.
பரதத்தில்
இப்படியும்
"செங்குத்தாய்"
ஒரு குத்தாட்டமா?
விழிகள் நிலைகுத்தி விட்டன.

அதோ அங்கு
மெல்லிய 
செந்தாமரைப்பூச்செண்டு ஒன்று
கையூன்றி
நிற்கிறது. 
சுருட்டி மடக்கி
வளைத்து நெளித்து
பிசைந்து குழைத்து
அப்படி வைத்திருப்பது
அவரை அல்ல.
நம்மைத்தான்.
நம் கை நம் கால் தான்.
பின்னிக்கிடக்கிறது.
அவர் சரியாய் எடுத்து விட வேண்டும்.
மின்னலைக்குழம்பாக்கி
ரசமாக்கி
நம்மை அவர்
வசமாக்கி விட்டாரே?
அரை சதுர அடிக்குள்
முத்திரைகளை எல்லாம்
சர்க்கஸ் கூடாரமாக்கி அல்லவா
நிறுத்தியிருக்கிறார்.

புகைப்படங்கள் அற்புதம்.
பரதக்கலையின்
அந்த பெண்குல ரத்தினங்கள்
ஒவ்வொன்றும்
நம் "பாரத ரத்னா"க்கள் அல்லவா!
அவர்களுக்கு
நம் பாராட்டுகள்.

அன்புடன் ருத்ரா

N. Kannan

unread,
Sep 18, 2013, 1:51:12 AM9/18/13
to மின்தமிழ்
2013/9/18 பூனைக் கவிராயர் <radius.co...@gmail.com>

நாயகனைக் கவரும் விதத்தில் ஆடை அலங்காரம்

நாயகன் பிரிவால் வாடவேண்டும்

நாயகனுக்கு அடிபணிந்தே அவனைக் கவரவேண்டும்
 
சதிரில் இருந்த தோன்றிய பரத நாட்டியம் சாரத்தை இழந்து பெண் அவளை அறியாமலேயே ஆணாதிக்கத்துக்குள் அழைத்துச் செல்லும் கலையாக சிருங்காரம் இல்லாத நடனமாக் இருப்பதாக பாலசரஸ்வயி ருக்மணிதேவிக்கு ர்திராக வாதம் புரிந்தவர்.


சதிர் என்பதே ஆண்களைக் கவர்ந்து, கவர்ச்சி காட்டி இன்பமூட்டும் கலைதானே? அதற்காக பாலசரஸ்வதி ஏன் வாதட வேண்டும்? பரதத்தை ஆணாதிக்கப்பிடியிலிருந்து விடுவித்தவர் ருக்மணி அருண்டேல் என்று கூறலாம். ஏனெனில் இவ்வழித்தடத்தில் வந்த பின்னோர் இக்கலையை பல்வேறு எல்லைகளுக்கு இட்டுச் சென்ற வண்ணமுள்ளனர். நல்ல உதாரணம் நடனதாரகை சந்திரலேகா. இவர் யோகம், களரிப்பற்று இன்னபிற வடிவங்களை தன் நடனத்தில் அமைக்கிறார். இவையெல்லாம் ஆண்களுக்கென்று இருந்தது ஒரு காலம்.

மலேசிய, சிங்கப்பூர் கலைஞர்கள் தமது நடன முயற்சிகளில் சீன, மலேசியப்பாணியை பரத அடவுகளில் கொண்டு வந்து புதிய தடம் பதிக்கின்றனர்.

கொரியாவில் பெண்களுக்காக ஆண்கள் ஆடை களைந்து ஆடும் நடனங்களுண்டு. இதுவும் சதிர்தான் :-))

நா.கண்ணன்
 
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Nagarajan Vadivel

unread,
Sep 18, 2013, 2:03:23 AM9/18/13
to மின்தமிழ்

2013/9/18 N. Kannan <navan...@gmail.com>

அதற்காக பாலசரஸ்வதி ஏன் வாதட வேண்டும்?

​அதைப் பற்றிக் குஞ்சு கொஞ்சம் நுணுகி ஆய்ந்துகொண்டடுள்ளேன்

சதிராடியவர்கள் உடலுறவு பற்றிய அனுபவம் இல்லாத கன்னியர்.  அவர்கள் சிருங்காரத்தை வெளிப்படுத்தும் உடலசைவுகளைக் கொண்டே பக்தியை யும் காமத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்

பாலசரஸ்வதி ருக்மணிதேவியின் பரதநாட்டியம் சிருங்கார ரசம் இல்லாத சாரம் இல்லாத நடனம் என்று கூறுகிறார்

ஒப்புமைக்காக இங்கே

சதிர்


பரதநாட்டியம்


கலாஷேத்ரா ஆரம்பித்தபின்னரே ஆண்கள் மேடையில் நடனமாடத் தொடங்கினார்கள்.  அதற்குமுன் அவர்கள் வெறும் பயிற்சியாளர்களே

வவ

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Sep 18, 2013, 4:38:05 AM9/18/13
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய திரு நா.கண்ணன் அவர்களே!
பரத நாட்டியம் பற்றிய உங்கள் விளக்க வெளிச்சம் அற்புதமான சிந்தனைகளின் ஊற்றாக இருக்கிறது.

பரதம் சதிர் என்று புழங்கப்படுவடுவதில் ஒரு நீண்ட சமூக பொருளாதார நீரோட்டம் அடிஒற்றி ஓடுகிறது.ஆனால் பரதம் தோன்றுவதற்கு கருத்து மூலமான‌ சிவன் இந்தியால் ஒரு சின்னம்.(சிம்பாலிஸம்).விண்வெளி இயலின் ஒரு தொல்லிய வார்ப்பு.(ஏனிசின்ட் வெர்ஷன்) அவன் வடிவம். சுருள் ஒளி மீன் கூட்டங்கள் (ஸ்பைரல் கேலக்ஸி)விண்ணோக்கியில் சிவனின் விரிசடைக்கூந்தல் தானே.நம் தமிழர்கள் இந்த தென்னாடுடைய சிவனை(கல் ஆல தட்சிணாமூர்த்தி)
அவனது கூத்துவடிவத்தில் கண்டனர்.அவன் கூறும் கூற்று என்ன என்பதே அந்த கூத்து விவரிப்பதாகும்.அது ஒரு விண்ணியல் கூற்று (காஸ்மிக் டான்ஸ்).வாய் மொழியில் மட்டும் கூற்று இல்லை.உடல் அசைவுகளும் (முத்திரைகள் உடல் மொழி (பாடி லேங்குவேஜ்)ஆகும்.அது முகத்திலும் தோன்றும்.இப்படி இந்த திருவெண்காட்டு தோற்றமே ஒரு அர்த்தம் பொதிந்த "ப்ளானட்டோரியம்"நமக்கு.

வெள் என்றால் ஒன்றுமே இல்லை என்பது தான் பொருள்.ஆனாலும் இருக்கிறது என்பதும் பொருள்.வெள்ளொளியில் (மோனோகுரோமோடிக்)ஒளி ஆற்றலின் அதிர்வு எண்கள் ஏழு வண்ணங்களாய் ஒடுங்கிக்கிடப்பது போல் தான் அது.
நாம் கோவில்களில் மறைவாக புதைத்த இந்த சிற்றம்பலக்கூத்துகளும் (இவை நம் இதய துடிப்புகளான "லப் டப்"கள்)நமக்கு நாமே கட்டிவைத்திருக்கும் பல்கலைக்கழகங்கள் தான்.இந்த உயர்வெளி நடனம் (ஹைபர் ஸ்பேஸ் டான்ஸ்)கொஞ்சம் கொஞ்சமாக நம் உப்புபெறாத உணர்ச்சிகளுக்கும் முத்திரை காட்டத்துவங்கியதும் அது "சதிர்" என்று பரிணாமம் பெற்றிருக்கலாம்.அப்போது அது சலங்கைகள் கட்டிக்கொண்டு "அதிர்"ஒலிகளுடன் அம்பலம்(கோவில் மன்றம்)ஏறியது.
நம் நெய்தல் திணை செய்யுட்கள் மீன் கொம்பை நட்டி வைத்து கடல் வாழ்னர்களான "பரதவர்"கள் நடனம் ஆடிக்களித்ததாக  கூறுகின்றன.எனவே பரதம் நம் தமிழின் கடலும் கடல் சார்ந்த நிலமுமாக இருக்கும் இடத்திலிருந்து
தோன்றியிருக்கலாம்.

அன்புடன் ருத்ரா

N. Kannan

unread,
Sep 18, 2013, 5:33:23 AM9/18/13
to மின்தமிழ்
அன்பின் ருத்ரா:

இன்னும் கொஞ்சம் யோசிப்போம் :-)

2013/9/18 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>
மதிப்பிற்குரிய திரு நா.கண்ணன் அவர்களே!
பரத நாட்டியம் பற்றிய உங்கள் விளக்க வெளிச்சம் அற்புதமான சிந்தனைகளின் ஊற்றாக இருக்கிறது.

பரதம் சதிர் என்று புழங்கப்படுவடுவதில் ஒரு நீண்ட சமூக பொருளாதார நீரோட்டம் அடிஒற்றி ஓடுகிறது.ஆனால் பரதம் தோன்றுவதற்கு கருத்து மூலமான‌ சிவன் இந்தியால் ஒரு சின்னம்.(சிம்பாலிஸம்).விண்வெளி இயலின் ஒரு தொல்லிய வார்ப்பு.(ஏனிசின்ட் வெர்ஷன்) அவன் வடிவம். சுருள் ஒளி மீன் கூட்டங்கள் (ஸ்பைரல் கேலக்ஸி)விண்ணோக்கியில் சிவனின் விரிசடைக்கூந்தல் தானே.நம் தமிழர்கள் இந்த தென்னாடுடைய சிவனை(கல் ஆல தட்சிணாமூர்த்தி)
அவனது கூத்துவடிவத்தில் கண்டனர்.அவன் கூறும் கூற்று என்ன என்பதே அந்த கூத்து விவரிப்பதாகும்.அது ஒரு விண்ணியல் கூற்று (காஸ்மிக் டான்ஸ்).வாய் மொழியில் மட்டும் கூற்று இல்லை.உடல் அசைவுகளும் (முத்திரைகள் உடல் மொழி (பாடி லேங்குவேஜ்)ஆகும்.அது முகத்திலும் தோன்றும்.இப்படி இந்த திருவெண்காட்டு தோற்றமே ஒரு அர்த்தம் பொதிந்த "ப்ளானட்டோரியம்"நமக்கு.
>>>

Fritjof Capra  அவர்களுக்கு சிவதாண்டவம் இத்தகைய விண்துகள் நடனமாகத்தான் பட்டிருக்கிறது (The Tao of Physics). தத்துவ நடத்திலிருந்து சதிராக மாறியதா? இல்லை சதிர் புனிதமாக்கப்பட்டு தத்துவமாக மாறியதா? என யோசிக்கலாம். கூத்திலிருந்து பரதம் தோன்றியது என்று கொலோன் பல்கலைக்கழகப் பேராசிரியர் உல்ரிக நிக்கலோஸ் சில யாழ்ப்பாணர்களிடம் சொல்லப்போய் பெரிய விவாதமே வந்துவிட்டது. நாம் எவ்வளவு புனிதத்தை ஆராதிக்கிறோம் என்பதைப் பொருத்து நம் எதிர்வினை அமையுமென்று தோன்றுகிறது :-)

>>>
நம் நெய்தல் திணை செய்யுட்கள் மீன் கொம்பை நட்டி வைத்து கடல் வாழ்னர்களான "பரதவர்"கள் நடனம் ஆடிக்களித்ததாக  கூறுகின்றன.எனவே பரதம் நம் தமிழின் கடலும் கடல் சார்ந்த நிலமுமாக இருக்கும் இடத்திலிருந்து
தோன்றியிருக்கலாம்.
>>>

இது புதிய சிந்தனை. முல்லை நிலத்தில் குரவைக்கூத்து பற்றி சிலம்பு பேசுகிறது. கலகாரி பாலைவனத்து பழங்குடிகள் விலங்கின் நடையுடை பாவனை (தன்மை) பற்றி இளைஞர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது நர்த்தனம் போலவே உள்ளது. அதாவது imitation என்பது ‘பாவத்தின்’ கூறு.

சுவாரசியமாகத்தான் உள்ளது!

நா.கண்ணன்

N. Kannan

unread,
Sep 18, 2013, 5:38:20 AM9/18/13
to மின்தமிழ்
2013/9/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

சதிராடியவர்கள் உடலுறவு பற்றிய அனுபவம் இல்லாத கன்னியர்.  அவர்கள் சிருங்காரத்தை வெளிப்படுத்தும் உடலசைவுகளைக் கொண்டே பக்தியை யும் காமத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்

அப்படியா? ;-) இங்கு ராஜம் அவர்கள் இட்ட இடுகைகள் இதற்கு எதிர்மறையாகப் பேசுகின்றன. தேவரடியார்களை தமிழினம் எதற்குப் பயன்படுத்தியது என்பது வெள்ளிடை மலை!


பாலசரஸ்வதி ருக்மணிதேவியின் பரதநாட்டியம் சிருங்கார ரசம் இல்லாத சாரம் இல்லாத நடனம் என்று கூறுகிறார்

ஏற்றுக்கொள்ளக்கூடியது. தமிழ்ப் பெண்களுக்கு முக அசைவில் மட்டும் ஆயிரம் கதைகள் சொல்லத்தெரியும். அதனால்தான் அன்றைய நாடகக்கம்பெனிகளில் ’ஸ்ரீ பார்ட்’ நடிகர்கள் பெரிதும் போற்றப்பட்டனர். சிவாஜி இப்படித்தான் தன் கலையுலகப் பயணத்தைத்தொடங்குகிறார். இதில் சிருங்கார ரசம் என்பது கூடுதல் கவனம் பெறுவது. 

நா.கண்ணன் 

Nagarajan Vadivel

unread,
Sep 18, 2013, 5:43:43 AM9/18/13
to மின்தமிழ்

2013/9/18 N. Kannan <navan...@gmail.com>

தேவரடியார்களை தமிழினம் எதற்குப் பயன்படுத்தியது என்பது வெள்ளிடை மலை!

​அது பிற்காலத்தில்

பாலசரஸ்வதி அவர்கள் கூறுவது அவர்கள் இளம் வயதிலேயே இறைவனுக்குரியவர்களாக இறைவனை ம்ணந்தவர்களாக மாறிப்போய்விடுகிறார்கள்​.  அவர் அந்தக் குலத்தில் பிறந்ததே பெருமை என்று நம்பிக் கொண்டிருப்பவர்

வவ

N. Kannan

unread,
Sep 18, 2013, 5:55:25 AM9/18/13
to மின்தமிழ்
2013/9/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
ஐயா! ஆண்டாள் சொல்வதும், பின்னால் மீரா சொன்னதும், ‘ஜீவன்கள் அனைவருமே எப்போதும் இறைவனுக்கு மணம் புணர்ந்தவர்கள்’ என்பதும், ஆண் என்று மார்தட்ட ஏதுமில்லை என்பதும்தான் (பிருந்தாவனத்தில் தானொரு ஆண் பிள்ளை என்று சொன்ன குருநாதருக்குச் சொன்ன பாடமிது).

எனவே தனியாகப் பெண்களை இறைவனுக்கு ‘பொட்டு’ கட்டுவது என்பதே புரட்டல். வேறொரு நோக்கத்திற்கு (பொது மகள் எனும் பட்டம் சூட்ட) என்பது தெளிவு. ஆயினும் எக்குலத்திலும் கற்புடையோர் இருந்திருக்கின்றனர், சிலம்பின் மாதவி போல்!

நா.கண்ணன் 

K R A Narasiah

unread,
Sep 18, 2013, 7:18:35 AM9/18/13
to mintamil
Devadasis have been misunderstood, misused and misrepresented. This is clear even from the above postings. A detailed study would show a different picture. One may like to read Lakshmi Knight's book on Balasaraswathi. Lakshmi was born of Balasaraswathi and Shanmukham Chettiar. 
Alternately read deZote's The Other Mind.
Narasiah


2013/9/18 N. Kannan <navan...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Reply all
Reply to author
Forward
0 new messages