பள்ளியிலக்கணத்தில் புணர்ச்சியை எளிதாய்க்கற்போம்!
இலக்கணத்தில், எழுத்து சொல் பொருள் யாப்பு அணி எனப்படும் ஐந்துவகையுண்டு. இவை ஐந்தும் பெரும்பிரிவுகள்.
இவற்றுள் முதற்பிரிவாகிய எழுத்ததிகாரத்தில் எழுத்துகளின் எண்ணிக்கை, வகை, அவற்றின் தோற்றம்பற்றியெல்லாஞ்சொல்லப்படுவதுடன், புணர்ச்சியுஞ்சொல்லப்படுகிறது.
இலக்கணத்தை முழுவதுமாய்ப்பார்க்கும்போது, இந்த புணர்ச்சிபற்றிய நூற்பாக்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் குறைவானவையே.
ஆனால் இந்த புணர்ச்சியை அறிந்துகொள்வதற்கு, சொல்லிலக்கணம் தேவையாயிருக்கிறது.
ஏனென்றால், பெயர்ச்சொல் வினைச்சொல் பெயரெச்சம் வினையெச்சம் வினைமுற்று ஆகியவை எவ்வெவையென்பதை அறியாமல் புணர்ச்சியை அறிதுகொள்வது இயலாது. அதேநேரத்தில் இதெல்லாம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்தேயிருக்கும்.
உரைநடையெழுதுமளவிற்கெனச்சொன்னால், புணர்ச்சியை அறிந்துகொள்வதென்பது மிகவும் எளிதானவொன்றே! இன்னுஞ்சொல்லப்போனால், எட்டாம்வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்புக்குள்ளாக பள்ளிநூல்களில் புணர்ச்சிபற்றி என்னசொல்லப்படுகிறதோ, அதுவேபோதுமானது!
இவ்வளவிற்குக்கூட புணர்ச்சியை அறியாமலேதான் தமிழறிஞர்கள் அதை பயன்படுத்துவதில் இத்துணைச்சிக்கலையுண்டாக்கியுள்ளார்களென்பது உண்மையில் பெருவியப்புக்குரியது!
ஆனாலும், இலக்கணநூல்களில் புணர்ச்சிக்கும் பொருளுக்குமுள்ள தொடர்பானது விளக்கப்படவில்லையென்பதும் எண்ணிப்பார்க்கத்தக்கது. உரைநடையென்பது தொடங்கியகாலத்திலிருந்து இப்போது நான்கண்டுசொல்லும்வரையில் இந்த கருத்து எவராலும் உணர்ந்துகொள்ளப்பட்டதில்லை.
இலக்கணநூலெழுதிய நம் முன்னோர், பொருளுக்கும் புணர்ச்சிக்குமான தொடர்பென்பது சொல்லித்தெரியவேண்டியதன்றென்றெண்ணியே அதை சொல்லாமல்விட்டனர்போலும்! ஆனால் நாமோ அதைவிட்டு வெகுதூரத்துக்குவிலகிவந்துவிட்டோம்.
விட்டவிடத்தை எட்டிப்பிடிக்கும்வரை தமிழின் நிலை இப்போதுள்ளபடியேதானிருக்கும்.
ஆதலால், தமிழ்கற்றோர்மட்டுமல்லாமல் அனைவருமே இந்த புணர்ச்சியைப்பற்றிய அடிப்படையை அறிந்துகொண்டுவிட்டால் எவர்செய்யும்பிழையும் எல்லோருக்கும் தெரிந்துவிடும், தமிழும் சீர்பெறும்!
ஒவ்வொருவீட்டிலும் திருக்குறளிருக்கவேண்டுமென்பதுபோல், இனி எல்லாவீட்டிலும் பள்ளியிலக்கணநூல்களுமிருக்கட்டும்!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
பொன்முடி ஐயா அவர்களுக்கு,புணர்ச்சியிலக்கணத்தை ஒரே மூச்சாகப் படித்துவருகிறேன்.பயன்பெறுகிறேன்.ஓர் ஐயம் (ஓரையம் என எழுதக்கூடாது எனக் கருதுகிறேன்) எழுந்தது. நூற்கள் என்னும் சொல்லைப் புழங்குகிறார்கள். நூல்+கள்(விகுதி)-> நூல்கள் என்றுதானே புணரும். கால்களைக் காற்கள் என நாம் சொல்லுவதில்லையே.அன்புடன்,சுந்தரம்.
hypercorrection என்பது இது ஐயா. பிழைதான். காற்கள் வேற்கள் என்றெல்லாம் எழுதுவதில்லையே.கம்பன் போன்ற இலக்கியங்களில் நாட்கள் இல்லை. நாண்மலர் என்றால் புதிய மலர். அதுபோல், நாட்கள் என்றால் புதிய கள். இப்போது நாட்கள் ஏற்கப்பட்டுவிட்டது. ஆட்களும் தான்.
2015-04-27 19:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:hypercorrection என்பது இது ஐயா. பிழைதான். காற்கள் வேற்கள் என்றெல்லாம் எழுதுவதில்லையே.கம்பன் போன்ற இலக்கியங்களில் நாட்கள் இல்லை. நாண்மலர் என்றால் புதிய மலர். அதுபோல், நாட்கள் என்றால் புதிய கள். இப்போது நாட்கள் ஏற்கப்பட்டுவிட்டது. ஆட்களும் தான்.
இந்த மாதிரி கும்மாங்குத்து குத்தறீங்கன்னுதான் முற்றோதல் சமயத்தில் பாடல்களைக் குறித்து வைத்திருக்கிறேன்.நாட்களில், நளிர் கடல் நாரம் நா உறவேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே.கம்பராமாயணம், கிட்கிந்தா காண்டம், கார்காலப் படலம், பாடல் 5எதுகைக்காக அமைத்தது என்று சொல்ல முடியாது. பாடலின் முதல் அடியே நாட்கள் என்று தொடங்குவதால் இப்படி மாற்றவேண்டிய தேவையில்லை.நாட்களில் என்பதற்கு, உரிய நாளில் என்று வைமுகோ பொருளெழுதுகிறார்.
வித்துவான் மு. சண்முகம்பிள்ளை கம்பன்கழகப் பதிப்பாசிரியர்களில் ஒருவர். அவர் பழைய பொருளில் இப்பாடலுக்கு உரை சொல்லியுளார். அது பொருந்துமா? - எனப் பார்க்கணும்.
இந்தத் திருப்புகழுக்குமா?குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளைகுயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள்
2015-04-27 20:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:வித்துவான் மு. சண்முகம்பிள்ளை கம்பன்கழகப் பதிப்பாசிரியர்களில் ஒருவர். அவர் பழைய பொருளில் இப்பாடலுக்கு உரை சொல்லியுளார். அது பொருந்துமா? - எனப் பார்க்கணும்.
இந்தத் திருப்புகழுக்குமா?
இங்கே இடநாள்கள், அடிநாள்கள் என்று வரவே முடியாது. இது வண்ணவிருத்தம். வர்ட்டிகலாக வல்லின, இடையின மெல்லின ஒற்றுகள்கூட ஒத்து வந்தே ஆகவேண்டும்.நான் சொன்ன கம்பராமாயணப் பாடலில் நாட்கள் என்ற பயன்பாட்டுக்கு நாள்கள் (புதுக்கள்னா சிரிப்பாங்கோ.. கள் பழைய கள்ளா இருந்தாதான் வேலைக்கு ஆவும்) என்ற பொருள் வருகிறதா என்று பொருத்திக் காட்டுங்கள். வைமுகோவைவிட நீங்கள் பெரிய பண்டிதர், டாக்டர் என்பது நிறுவப்பட்டுவிடும்.
--
On Saturday, April 25, 2015 at 10:31:09 PM UTC-7, dorai sundaram wrote:பொன்முடி ஐயா அவர்களுக்கு,புணர்ச்சியிலக்கணத்தை ஒரே மூச்சாகப் படித்துவருகிறேன்.பயன்பெறுகிறேன்.ஓர் ஐயம் (ஓரையம் என எழுதக்கூடாது எனக் கருதுகிறேன்) எழுந்தது. நூற்கள் என்னும் சொல்லைப் புழங்குகிறார்கள். நூல்+கள்(விகுதி)-> நூல்கள் என்றுதானே புணரும். கால்களைக் காற்கள் என நாம் சொல்லுவதில்லையே.அன்புடன்,சுந்தரம்.hypercorrection என்பது இது ஐயா. பிழைதான். காற்கள் வேற்கள் என்றெல்லாம் எழுதுவதில்லையே.கம்பன் போன்ற இலக்கியங்களில் நாட்கள் இல்லை. நாண்மலர் என்றால் புதிய மலர். அதுபோல், நாட்கள் என்றால் புதிய கள். இப்போது நாட்கள் ஏற்கப்பட்டுவிட்டது. ஆட்களும் தான்.குறிலில் புணரலாம். கற்கள், சொற்கள், ...நா. கணேசன்
| 4152. | நாட் களின், நளிர் கடல் நாரம் நா உற |
வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ, வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப் |
| பூட்கைகள் நிறுத்த புண் திறப்ப போன்றவே. |
நாட் களின் - நாட்படு கள்ளைப் பருகுவது போல; நளிர் கடல்
நாரம்- குளிர்ந்த கடலின் நீரை; நா உற - நாவினால் மிகுதியாக;
வேட்கையின்பருகிய மேகம் - விருப்பத்தோடு குடித்த மேகங்கள்;
மின்னுவ - மின்னுபவை; வாட் கைகள் மயங்கிய செருவின் - (வீரர்களின்)
வாள்படைகளை ஏந்திய கைகள் ஒன்றோடொன்று கலந்து செய்யும் போரில்;
வார்மதப் பூட்கைகள் - ஒழுகுகின்ற மத நீரையு டைய யானைகளன்
உடம்பில்; நிறத்த - (அவ்வாட்படைகளால் வெட்டப்பட்டுக்)
குருதியால் சிவந்த நிறத்தையுடைய; புண் திறப்ப போன்றவே -
புண்கள் வாய் திறப்பனவற்றைப் போன்றன.
கரிய மேகங்களிடையே தோன்றும் மின்னல்கள், கரிய யானையின்
உடம்பில் தோன்றும் வாளால் பட்ட புண்கள் போலக் காணப்பட்டன
என்பதாம். உவமை அணி. நாட் கள் - நாள் பட்ட கள்; 'தேள் கடுப்பன்ன
நாட்படு தேறல்' (புறம் - 392) என நாட்பட்ட கள்ளின் கடுப்புக் கூறப்படுகிறது.
மேகம் கடல் நீரைப் பருகுவதாகக் கூறுவது கவி மரபு. ''நீறணிந்த கடவுள்
நிறத்த வான், ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து' (13) என்று முன்பே
கூறினமை காண்க. உயிரினங்கள் நீரில் நாவைத் தோய்த்து விரும்பிப் பருகும்
இயல்பை மேகத்தின் மீதேற்றி 'நாவுற' வேட்கையின் பருகிய' என்றார்.
பூட்கை - புழைக்கை என்பது பூழ்க்கையாய்ப் பின் பூட்கை என மருவியது;
துளை பொருந்திய துதிக்கையையுடைய யானை என்பது பொருள். மேகம்
மின்னுவ - மின்னுவனவாகிய மேகங்கள் என்ப. 5
நாட்கள் புதுக்கள் என்று பாடிய புறநானூற்றுப் புலவர்களைப் பார்த்து டாக்டர்கள் சிரிக்கிறார்களா?
திருப்புகழ் மு. சண்முகம்பிள்ளையவர்கள் சொன்னாரா-னு பார்க்கணும்.
2015-04-27 20:42 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:திருப்புகழ் மு. சண்முகம்பிள்ளையவர்கள் சொன்னாரா-னு பார்க்கணும்.
பாக்கணுங்காதீங்க. பாத்து சொல்லுங்க. பாக்கணும், கேக்கணும், செய்ணும், பண்ணணும்... எல்லாத்தயும் பாத்தாச்சு.
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
நாட்கள் ளுண்டு நாண்மாகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீதல்லே" (புறநா. 123:1-2)
2015-04-27 20:42 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:திருப்புகழ் மு. சண்முகம்பிள்ளையவர்கள் சொன்னாரா-னு பார்க்கணும்.
பாக்கணுங்காதீங்க. பாத்து சொல்லுங்க. பாக்கணும், கேக்கணும், செய்ணும், பண்ணணும்... எல்லாத்தயும் பாத்தாச்சு.
தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாவற்றையும் பார்த்தே எழுதியுள்ளனர். கம்பனின் நாட்கள் ஓர் உதாரணம்.
தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாவற்றையும் பார்த்தே எழுதியுள்ளனர்.
அப்படீன்னா கதை முடிந்து சுபம் மங்களம் பாடியாச்சுன்னு பொருள்கல்யாணப்பரிசில் டனால் தங்கவேல் சொல்ற மாதிரி இங்க ஒரு உண்மையைச் சொல்ல விடமாட்டேங்குறாங்களே வலைப்பித்தன்
நீங்க சொல்லவேண்டிய உண்மைய சொல்லிக்கலாம். நான் குறுக்க வரமாட்டேன்.
2015-04-27 21:03 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாவற்றையும் பார்த்தே எழுதியுள்ளனர். கம்பனின் நாட்கள் ஓர் உதாரணம்.
இந்த நாட்களுக்கு என்ன பதில்?
தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாவற்றையும் பார்த்தே எழுதியுள்ளனர். கம்பனின் நாட்கள் ஓர் உதாரணம்.
2015-04-27 19:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:hypercorrection என்பது இது ஐயா. பிழைதான். காற்கள் வேற்கள் என்றெல்லாம் எழுதுவதில்லையே.கம்பன் போன்ற இலக்கியங்களில் நாட்கள் இல்லை. நாண்மலர் என்றால் புதிய மலர். அதுபோல், நாட்கள் என்றால் புதிய கள். இப்போது நாட்கள் ஏற்கப்பட்டுவிட்டது. ஆட்களும் தான்.
இந்த மாதிரி கும்மாங்குத்து குத்தறீங்கன்னுதான் முற்றோதல் சமயத்தில் பாடல்களைக் குறித்து வைத்திருக்கிறேன்.
ஐயா N. Ganesan அவர்களுக்கு.
ஐயா, இதில் குறிலென்பதோ நெடிலென்பதோ கணக்கில்லை. 'பாற்கடல்' காற்படி' 'நூற்பா' என்பவற்றில் லகரம்
| நாட் களின், நளிர் கடல் நாரம் நா உற |
வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ, வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப் |
| பூட்கைகள் நிறுத்த புண் திறப்ப போன்றவே. - கம்பர் |
நாட் களின் - நாட்படு கள்ளைப் பருகுவது போல; நளிர் கடல்
நாரம்- குளிர்ந்த கடலின் நீரை; நா உற - நாவினால் மிகுதியாக;
வேட்கையின்பருகிய மேகம் - விருப்பத்தோடு குடித்த மேகங்கள்;
மின்னுவ - மின்னுபவை; வாட் கைகள் மயங்கிய செருவின் - (வீரர்களின்)
வாள்படைகளை ஏந்திய கைகள் ஒன்றோடொன்று கலந்து செய்யும் போரில்;
வார்மதப் பூட்கைகள் - ஒழுகுகின்ற மத நீரையு டைய யானைகளன்
உடம்பில்; நிறத்த - (அவ்வாட்படைகளால் வெட்டப்பட்டுக்)
குருதியால் சிவந்த நிறத்தையுடைய; புண் திறப்ப போன்றவே -
புண்கள் வாய் திறப்பனவற்றைப் போன்றன.
கரிய மேகங்களிடையே தோன்றும் மின்னல்கள், கரிய யானையின்
உடம்பில் தோன்றும் வாளால் பட்ட புண்கள் போலக் காணப்பட்டன
என்பதாம். உவமை அணி. நாட் கள் - நாள் பட்ட கள்; 'தேள் கடுப்பன்ன
நாட்படு தேறல்' (புறம் - 392) என நாட்பட்ட கள்ளின் கடுப்புக் கூறப்படுகிறது.
மேகம் கடல் நீரைப் பருகுவதாகக் கூறுவது கவி மரபு. ''நீறணிந்த கடவுள்
நிறத்த வான், ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து' (13) என்று முன்பே
கூறினமை காண்க. உயிரினங்கள் நீரில் நாவைத் தோய்த்து விரும்பிப் பருகும்
இயல்பை மேகத்தின் மீதேற்றி 'நாவுற' வேட்கையின் பருகிய' என்றார்.
பூட்கை - புழைக்கை என்பது பூழ்க்கையாய்ப் பின் பூட்கை என மருவியது;
துளை பொருந்திய துதிக்கையையுடைய யானை என்பது பொருள். மேகம்
மின்னுவ - மின்னுவனவாகிய மேகங்கள் என்ப. 5
நாட் களின், நளிர் கடல் நாரம் நா உற வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,பூட்கைகள் நிறுத்த புண் திறப்ப போன்றவே. - கம்பர்
வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்
| நாட் களின், நளிர் கடல் நாரம் நா உற வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ, வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப் பூட்கைகள் நிறுத்த புண் திறப்ப போன்றவே. |
நாட் களின் - நாட்படு கள்ளைப் பருகுவது போல; நளிர் கடல்
நாரம்- குளிர்ந்த கடலின் நீரை; நா உற - நாவினால் மிகுதியாக;
வேட்கையின்பருகிய மேகம் - விருப்பத்தோடு குடித்த மேகங்கள்;
மின்னுவ - மின்னுபவை; வாட் கைகள் மயங்கிய செருவின் - (வீரர்களின்)
வாள்படைகளை ஏந்திய கைகள் ஒன்றோடொன்று கலந்து செய்யும் போரில்;
வார்மதப் பூட்கைகள் - ஒழுகுகின்ற மத நீரையு டைய யானைகளன்
உடம்பில்; நிறத்த - (அவ்வாட்படைகளால் வெட்டப்பட்டுக்)
குருதியால் சிவந்த நிறத்தையுடைய; புண் திறப்ப போன்றவே -
புண்கள் வாய் திறப்பனவற்றைப் போன்றன.
கரிய மேகங்களிடையே தோன்றும் மின்னல்கள், கரிய யானையின்
உடம்பில் தோன்றும் வாளால் பட்ட புண்கள் போலக் காணப்பட்டன
என்பதாம். உவமை அணி. நாட் கள் - நாள் பட்ட கள்; 'தேள் கடுப்பன்ன
நாட்படு தேறல்' (புறம் - 392) என நாட்பட்ட கள்ளின் கடுப்புக் கூறப்படுகிறது.
மேகம் கடல் நீரைப் பருகுவதாகக் கூறுவது கவி மரபு. ''நீறணிந்த கடவுள்
நிறத்த வான், ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து' (13) என்று முன்பே
கூறினமை காண்க. உயிரினங்கள் நீரில் நாவைத் தோய்த்து விரும்பிப் பருகும்
நாட் களின் என்றாலோ, நாட் களில் என்று பாடங்கொண்டாலோ பொருள் மாறுவதில்லை.கள் = மது என்பது இப்பாடலுக்கு வெகுபொருத்தம். அதைத்தான் கொடுத்துள்ளனர்.5 ஆண்டுகட்கு முன்னர் பேசினோம்:> > *மொழிப் பயிற்சி - 15: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!*
பள்ளியிலக்கணத்தில் புணர்ச்சியை எளிதாய்க்கற்போம்!
இலக்கணத்தில், எழுத்து சொல் பொருள் யாப்பு அணி எனப்படும் ஐந்துவகையுண்டு. இவை ஐந்தும் பெரும்பிரிவுகள்.
இவற்றுள் முதற்பிரிவாகிய எழுத்ததிகாரத்தில் எழுத்துகளின் எண்ணிக்கை, வகை, அவற்றின் தோற்றம்பற்றியெல்லாஞ்சொல்லப்படுவதுடன், புணர்ச்சியுஞ்சொல்லப்படுகிறது.
இலக்கணத்தை முழுவதுமாய்ப்பார்க்கும்போது, இந்த புணர்ச்சிபற்றிய நூற்பாக்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் குறைவானவையே.
ஆனால் இந்த புணர்ச்சியை அறிந்துகொள்வதற்கு, சொல்லிலக்கணம் தேவையாயிருக்கிறது.
ஏனென்றால், பெயர்ச்சொல் வினைச்சொல் பெயரெச்சம் வினையெச்சம் வினைமுற்று ஆகியவை எவ்வெவையென்பதை அறியாமல் புணர்ச்சியை அறிதுகொள்வது இயலாது. அதேநேரத்தில் இதெல்லாம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்தேயிருக்கும்.
உரைநடையெழுதுமளவிற்கெனச்சொன்னால், புணர்ச்சியை அறிந்துகொள்வதென்பது மிகவும் எளிதானவொன்றே! இன்னுஞ்சொல்லப்போனால், எட்டாம்வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்புக்குள்ளாக பள்ளிநூல்களில் புணர்ச்சிபற்றி என்னசொல்லப்படுகிறதோ, அதுவேபோதுமானது!
இவ்வளவிற்குக்கூட புணர்ச்சியை அறியாமலேதான் தமிழறிஞர்கள் அதை பயன்படுத்துவதில் இத்துணைச்சிக்கலையுண்டாக்கியுள்ளார்களென்பது உண்மையில் பெருவியப்புக்குரியது!
ஆனாலும், இலக்கணநூல்களில் புணர்ச்சிக்கும் பொருளுக்குமுள்ள தொடர்பானது விளக்கப்படவில்லையென்பதும் எண்ணிப்பார்க்கத்தக்கது. உரைநடையென்பது தொடங்கியகாலத்திலிருந்து இப்போது நான்கண்டுசொல்லும்வரையில் இந்த கருத்து எவராலும் உணர்ந்துகொள்ளப்பட்டதில்லை.
இலக்கணநூலெழுதிய நம் முன்னோர், பொருளுக்கும் புணர்ச்சிக்குமான தொடர்பென்பது சொல்லித்தெரியவேண்டியதன்றென்றெண்ணியே அதை சொல்லாமல்விட்டனர்போலும்! ஆனால் நாமோ அதைவிட்டு வெகுதூரத்துக்குவிலகிவந்துவிட்டோம்.
விட்டவிடத்தை எட்டிப்பிடிக்கும்வரை தமிழின் நிலை இப்போதுள்ளபடியேதானிருக்கும்.
ஆதலால், தமிழ்கற்றோர்மட்டுமல்லாமல் அனைவருமே இந்த புணர்ச்சியைப்பற்றிய அடிப்படையை அறிந்துகொண்டுவிட்டால் எவர்செய்யும்பிழையும் எல்லோருக்கும் தெரிந்துவிடும், தமிழும் சீர்பெறும்!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Tuesday, April 28, 2015 at 8:54:30 PM UTC-7, தேமொழி wrote:நாட் களின் என்றாலோ, நாட் களில் என்று பாடங்கொண்டாலோ பொருள் மாறுவதில்லை.கள் = மது என்பது இப்பாடலுக்கு வெகுபொருத்தம். அதைத்தான் கொடுத்துள்ளனர்.
ஐயா, N. Ganesan அவர்களுக்கு.
--
புணர்ச்சி இலக்கணம்பற்றிய பேராசிரியர் இ. அண்ணாமலை அவர்களின் சில கருத்துகள் ( எனக்கு எழுதிய தனிமடல்களில் அடங்கியுள்ள கருத்துகள் அவருடைய அனுமதியுடன் இங்கு முன்வைக்கப்படுகிறது )
ஒரு சமூகத்தின் தேவையும் ஈடுபாடுமே ஒரு மொழியின் தன்மையையும் திறனையும் முடிவுசெய்யும் என்பது சரியான கருத்து.
புணர்ச்சி இலக்கணமே தமிழ் இலக்கணத்தின் சாரம் என்பது போலவும், ஒற்றுப் பிழையே இலக்கணப் பிழை என்பது போலவும், இலக்கண அறிவைச் சோதிக்க புணர்ச்சி விதிகளின் அறிவை சோதிப்பதே என்றும் ஒரு தவறான எண்ணம் தமிழ் உலகில் பரவியிருக்கிறது. இந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்பப் புணர்ச்சி விதிகள் மாறியிருக்கின்றன; வாக்கியத்தில் சொற்களுக்கு இடையே புணர்ச்சி தேவை இல்லை என்ற அளவுக்குத் தமிழின் தேவை மாறியிருக்கிறது.
இக்கால உரைநடையை உருவாக்கியவராகக் கருதப்படும் பெஸ்கி அவருடைய லுத்தேரினத்தியல்பு என்ற நூலில் பயன்படுத்தியுள்ள புணர்ச்சி விதிகள் இன்றைய உரைநடை விட்டுவிட்டவை. இப்படி எழுத வேண்டும் இன்று தமிழ்ப் புலவர் யாரும் சொல்ல மாட்டார்கள். இந்த நூலிலிருந்து ஒரு பக்கத்தை இணைத்திருக்கிறேன்.
புணர்ச்சி
விதிகள் ஒரு தலைமுறைக்கு முன்னால் வழங்கிய விதிகளிலிருந்து எவ்வளவு மாற வேண்டும்
என்பதை நாம் பார்க்க வேண்டும். இக்காலத் தமிழின் புணர்ச்சி விதிகள் பற்றி நீங்கள்
குறிப்பிட்டுள்ள நூல்களோடு (நூற்களோடு அல்ல!) மொழி வெளியீடான தமிழ் நடைக் கையேடு
என்ற நூலையும் சேர்க்கலாம்,
எல்லார்
வீடுகளிலும் செய்திப் பத்திரிக்கைகள் (செய்தி பத்திரிகைகள் அல்ல!) இருக்கின்றன.
இலக்கண நூல் இருந்தாலும், எதன்
செல்வாக்கு தமிழ் (செல்வாக்கு தமிழ் அல்ல!) எழுதுபவர்களிடம் இருக்கும் என்பதை யோசிக்க
வேண்டும்.
………………………………………………………………………………………………………………
சந்தி பொருள் மயக்கத்தைச் சில இடங்களில் நீக்கும்; சந்தி இருந்தாலும் பொருள்மயக்கம் இருக்கலாம். சந்தி பொருள் தெளிவிற்காக ஏற்பட்டது அல்ல.
இக்காலத்தில் சொற்களைத் தனித்தும் பிற சொற்களோடு சேர்த்தும் வாக்கியத்திலும் ஒரே மாதிரி அடையாளம் காண்பது படிப்பதைப் புரிவதற்கு உதவும் என்பது சந்திக் குறைப்பின் காரணங்களில் ஒன்று. படிப்பதை எளிமையாக்குவது இன்றைய எழுத்தாளர்களின் ஒரு நோக்கம். மற்றொன்று, உச்சரிப்பைப் பிரதிபலிக்கும் குறிகள் வந்தது (punctuation marks). முற்றுப்புள்ளி வரும் இடத்தில் சந்தி வருவது எப்போதோ போய்விட்டது. இப்போது காற்புள்ளி, முக்காற்புள்ளி வருமிடங்களில், அடைப்புக்குறிகள் வருமிடங்களில் சந்தி போய்க்கொண்டிருக்கிறது.
மொழியியலாளர்கள் அறியாமையால் புதிய சந்தி விதிகள் கூறுவதில்லை.
இ. அண்ணாமலை
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புணர்ச்சி இலக்கணம் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு ;
1. தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம் ( டாக்டர் பொற்கோ)
2. தவறின்றித் தமிழ் எழுத ( மருதூர் அரங்கராசன்)
3. தமிழ் நடைக்கையேடு ( மொழி அறக்கட்டளை)
4. புதிய புணர்ச்சிவிதிகள் ( செ. சீனிநைனாமுகமது, மலேசியா)
5. இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் ( சிங்கப்பூர் சித்தார்த்தன்)
மேற்கூறிய நூல்களில் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். அது வேறு.
சில முடிவாகச் சொல்லமுடியாத புணர்ச்சிகளும் இருக்கலாம்.
ஆனால் நல்லமுறையில் புணர்ச்சி இலக்கணத்தை விளக்க முற்படும் நூல்களாகும்.
மேற்கூறிய நூல்களின் அடிப்படையில் - குறிப்பாக, டாக்டர் பொற்கோ அவர்களின் நூலின் அடிப்படையில் - எங்களது ( NDS Lingsoft Solutions) குழுவின் 'மென்தமிழ் - சந்தித்துணைவன் ' மென்பொருள் விரைவில் வெளிவரவுள்ளது. மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ந. தெய்வ சுந்தரம்
Ellaveetilum enpathai EllaveedukaLium EnRu ezuthavendumallava?
Ellaveedukalilum (sorry for English)
நன்றி திருமிகு மேகலா. (செல்லினம் உள்ளீடு மாறியிருந்தது. தற்போது கண்டுகொண்டு திருத்தினேன்!)
ஐயா ந.
தெய்வசுந்தரமவர்களுக்கு.
'இவ்வளவிற்குக்கூட புணர்ச்சியை அறியாமலேதான்' என்பது தங்களை மிகவும்
துன்புறுத்தியிருந்தால் என்னை பொறுத்தருளவேண்டுகிறேன். 'தமிழ்மொழி' என்பதை 'தமிழ் மொழி' என்றும், 'தமிழன்னை' என்பதை 'தமிழ் அன்னை' என்றும், 'தமிழிலக்கணம்' என்பதை
'தமிழ் இலக்கணம்'
என்றும் பாடநூல்களில் எழுதப்பட்டிருப்பதை
பார்க்கும்போது இவ்வாறு ஒருவருக்கு தோன்றுவதில் வியப்பேது?
'சங்க இலக்கியம்' என்பதை சரியெனக்கொள்ளமுடியுமா? ஆனால் கல்லூரிநூல்களிலேயே இப்படி
இருக்கிறதென்பதை தாங்களும் அறிவீர்கள். 'கலைக் கல்லூரி'
என கல்லூரிகளில் எழுதப்பட்டிருப்பதை தாங்கள்
பார்த்ததில்லையா?
இளங்கலைத்தமிழ்ப்பாடநூலில் சில தொடர்மொழிகள் எவ்வாறெழுதப்பட்டுள்ளனவென்பதை இங்கே பாருங்கள்:
//இன்ப துன்ப உணர்ச்சி, உலக இலக்கிய நூல்கள், உணர்ச்சி பெற வைக்கும், மூன்று கால வாழ்க்கை, பெற்று வருகிறது, பண்டைக் காலம், கடந்த காலம், அன்பு வாழ்க்கை, கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்கை, பதிவு செய்கிறது, இலக்கிய வடிவம், சமூகச் சிந்தனை, சங்க இலக்கியம், பழங்கால வரலாறு, சமூகச் சிந்தனை, இலக்கியக் கலை, வீறு கொள்ளவைத்து//
தமிழ் இப்படித்தானிருக்குமாவென்பதை எண்ணிப்பாருங்கள்.
இதையெல்லாம் பார்க்கும்போது புணர்ச்சியிலக்கணம் இன்று கைவிடப்பட்டுவிட்டதென்பதை
எப்படி மறுக்கமுடியும்?
தமிழறிஞர்கள் இவற்றையெல்லாம்
சரியெனச்சொல்வார்களா?
சொல்லமாட்டார்களென்றால், நூல்களில் இவ்வாறெல்லாம்
எழுதப்பட்டிருப்பதைப்பற்றி அவர்கள் ஏன் எதுவும் சொல்வதில்லை?
தமிழின்மீதுள்ள பற்றினாலும் அது அழிந்துபோவதை
கண்டு மனம் கலக்கமுறுவதாலுந்தான் நான் அவ்வாறு எழுதநேர்ந்ததென்பதை உங்கள்முன்
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழை குற்றமில்லாமலும் இலக்கணத்தை
மீறாமலுமெழுதவேண்டுமென்பதில் அக்கறைகொள்வதாலும் தமிழறிஞர்கள் புணர்ச்சியை
கைவிடலாகாதென்பதை வலியுறுத்தவேண்டுமென்பதாலுந்தான் அப்படியெல்லாம் எழுதநேர்ந்தது.
சொல்லும் பொருளை சரியாகவும் குழப்பமின்றியும்வெளிப்படுத்துவதற்கு மிகவும் அடிப்படையானதாகிய புணர்ச்சியின் பயன்பாட்டை மீட்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டென்றேகருதுகிறேன்.
அன்புடன் பொன்முடி
நன்றி திருமிகு மேகலா. (செல்லினம் உள்ளீடு மாறியிருந்தது. தற்போது கண்டுகொண்டு திருத்தினேன்!)
On Apr 30, 2015 10:30 PM, "Megala Ramamourty" <megala.r...@gmail.com> wrote:I would like to translate Vinaitheerthan Ayya's query in Tamil:’எல்லாவீட்டிலும்’ என்று எழுதுவது சரியா? இல்லை ’எல்லாவீடுகளிலும்’ என்று எழுதவேண்டுமா? என்று வினவுகிறார் வினைதீர்த்தான் ஐயா. (வினா இழையின் தலைப்பு குறித்தது).
On Thursday, April 30, 2015 at 10:30:48 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:நன்றி திருமிகு மேகலா. (செல்லினம் உள்ளீடு மாறியிருந்தது. தற்போது கண்டுகொண்டு திருத்தினேன்!)
On Apr 30, 2015 10:30 PM, "Megala Ramamourty" <megala.r...@gmail.com> wrote:I would like to translate Vinaitheerthan Ayya's query in Tamil:’எல்லாவீட்டிலும்’ என்று எழுதுவது சரியா? இல்லை ’எல்லாவீடுகளிலும்’ என்று எழுதவேண்டுமா? என்று வினவுகிறார் வினைதீர்த்தான் ஐயா. (வினா இழையின் தலைப்பு குறித்தது).இரண்டு விதமாகவும் எழுதலாம். இப்பொழுதெல்லாம் ஆங்கில பன்மை விகுதி -s என்பதன் தாக்கத்தால் எல்லா இடத்திலும்-கள் சேர்த்துகிறோம். தேவையில்லை. பழைய தமிழில் அஃறிணை ஒற்றையில் சொன்னாலே பன்மை தான்.நூற்றுக்கணக்கான கலித்துறை பாடல்கள் இருக்கும்போது தலைப்பு கலித்துறை என்றுதான் இருக்கும். கலித்துறைகள் தேவையில்லை.மாடு மேய்க்கப் போனான் என்றாலே, மாடுகள் மேய்க்கப்போனான் என்றுதானே பொருள்?------------அதே போலத்தான், ஒரு ஓர் வேற்றுமையும். பழைய பாட்டுகளைப் பாருங்கள். ஓர் = unique என்ற பொருளுக்குமெய்யில் தொடங்கும் சொற்களுக்கும் இடலாம். ஓர் தவலை நாலு என்ற பாரதிதாசன் பாட்டு.
தமிழ் இப்படித்தானிருக்குமாவென்பதை எண்ணிப்பாருங்கள். இதையெல்லாம் பார்க்கும்போது புணர்ச்சியிலக்கணம் இன்று கைவிடப்பட்டுவிட்டதென்பதை எப்படி மறுக்கமுடியும்? தமிழறிஞர்கள் இவற்றையெல்லாம் சரியெனச்சொல்வார்களா? சொல்லமாட்டார்களென்றால், நூல்களில் இவ்வாறெல்லாம் எழுதப்பட்டிருப்பதைப்பற்றி அவர்கள் ஏன் எதுவும் சொல்வதில்லை?
ஐயா,
புணர்ச்சியிலக்கணமென்பது தொல்காப்பியர்காலத்துக்கும் முற்பட்டதென்பதை அறிவீர்கள்.
அதன்வழி இன்றும் அந்த தொல்காப்பியமும் நன்னூலும் கற்பிக்கப்பட்டுவருகின்றனவென்பதும்
தாங்கள் அறிந்ததே.
எழுத்தைப்பொருத்தவரை பாடல்களில்மட்டுமேயிருந்துவந்தகாலத்தில் அவ்வப்போதெழுதப்பட்ட உரைநடையென்பது எல்லாச்சொற்களையும் இடைவெளியின்றி ஒன்றன்பின்னொன்றாக அடுக்கியெழுதப்பட்டுவந்ததாக சொல்லக்கேட்டிருக்கிறேன். அவ்வாறு எல்லாச்சொற்களையும் புணர்த்தியெழுதியதும் குற்றமேயென்பதை சொல்லத்தேவையில்லை.
நம் மொழியானது இன்றையவுரைநடைக்குவந்தது அண்மைக்காலத்திலேதான். இந்தவுரைநடை தொடங்கியகாலத்திலிருந்தே இந்த புணர்ச்சியானது சரியாயிருந்திருக்கவில்லையென்பது நாம் இதுவரை அறிந்திராதவொன்று! எல்லாவிடங்களிலும்புணர்த்தியதை மாற்றி, புள்ளிகள்வைத்ததும் பிரித்தெழுதியதும் அப்போதுதான்வந்தது.
அவ்வாறு பிரிக்கத்தொடங்கியபின்னும் பற்பலசொற்கள் புணர்த்தியேயெழுதப்பட்டன. அவ்வாறானநடையிலிருந்து எல்லாச்சொற்களையும் தனித்தனியாயெழுதும்நிலைக்கு இன்று வந்துள்ளோம். இந்தநிலையில், எல்லாச்சொற்களையும் தனித்தனியாயெழுதுவதென்றால், நாம் கற்றுவரும் புணர்ச்சியிலக்கணம் என்னசொல்கிறதோ அதை நாம் கைவிட்டுவிட்டோமென்பதுதான் பொருள்.
ஐயா பொற்கோவவர்களை இதுதொடர்பாக நான் சந்தித்து என் கருத்துகளை எடுத்துரைத்தேன். எல்லாவற்றையும் கேட்டபின், ஒரு கலந்துரையாடலை ஏற்பாடுசெய்யுமாறும் அதற்கு அவர்சொல்லிய அறிஞர்களை அழைக்குமாறும் எனக்கு அறிவுறுத்தினார். நானும் அவ்வாறு செய்தேன்.
அந்த கலந்துரையாடலில் என் சிலகருத்துகள் ஏற்கப்பட்டன, சில விவாதிக்கப்பட்டன. முடிவாக, என் நூலை வெளியிடுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது. இதெல்லாம் நடந்தது 2011இல். இன்றுவரை என் நூல் வெளியிடப்படவில்லை. இன்னும் ஓரிருமாதங்களில் வெளிவரக்கூடியதாக இப்போது அமைந்திருக்கிறது.
தமிழறிஞர்களுடைய ஆதரவில்லாமல் என் நூலை வெளியிடுவதென்பது வீணானசெயலென்பதை நான் அறிவேன். ஆதலால், நூலை வெளியிடுமுன் தமிழறிஞர்களுக்கிடையே என் கருத்துகளை வெளியிடவேண்டுமென்னும் அவாவினாலேயே முகநூலில் “தமிழில் ‘புணர்ச்சி’ என்னும் இலக்கணம்” என்னும் ஒரு குழுவை தொடங்கி, அதில் பல தமிழறிஞர்களை உறுப்பினர்களாக்கி என் கருத்துகளை அதில் எழுதிவந்தேன்.
ஆனால் என்னநடந்ததென்றால், அந்த அறிஞர்களுள் ஒருவர்கூட, என் கருத்துகளைப்பற்றி கருத்திடவில்லை! சிலரை தனிப்பட்டவகையில் (inbox) தொடர்புகொண்டு, அவர்களதெழுத்தையே எடுத்துக்காட்டி, அதில் காணப்பட்ட புணர்ச்சிக்குற்றங்களை சுட்டிக்காட்டியபோது அவர்கள் என் கருத்துகளை ஏற்பது நடைமுறைக்கு ஒத்துவராதென்பதைமட்டுஞ்சொல்லி ஒதுங்கிக்கொண்டனர். நான் காட்டிய இலக்கணத்தைப்பற்றி அவர்கள் எதுவுமேசொல்லவில்லை. எனினும், ஒருசிலர் என் கருத்தை ஏற்றுக்கொண்டார்களென்பதையும் இங்கே சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.
பொற்கோவவர்களை எனக்கு காட்டி அவரிடம் என்னை போகச்செய்தவர், என் நூலுக்கு மதிப்புரைநல்கியவரும் மயிலாடுதுறை ஏவிசிகல்லூரியின் தற்போதைய தமிழ்த்துறைத்தலைவராயிருப்பவருமான ஐயா துரை குணசேகரனவர்கள்.
ஐயா துரை குணசேகரனவர்கள் என் நூலை ஒன்பதுமாதங்களாக கருத்தூன்றிப்படித்து அதில் அவருக்கு தோன்றிய ஐயங்களை என்னிடம் அவ்வப்போது கேட்டு முழுமையாக தெளிவுற்றபிறகே தனது மதிப்புரையை நல்கினார்கள். என் கருத்துகளைப்பற்றி இப்போது பலரும்வினவும் எல்லாவினாக்களையும் ஐயா என்னிடம் வினவிவிட்டார்களென்றேசொல்லவேண்டும்.
அவருடைய மதிப்புரையில்,
//புணர்ச்சிபற்றிய அக்கறையின்மையே இதற்கெல்லாம் காரணம். இந்த நூல் வெளிவந்தபிறகாவது அவர்களுடைய எழுத்தில் மாற்றமேற்படுமென்று நம்புவோம்.
வல்லின்மெய்யீற்றில் சொற்களை நிறுத்துவதும், மகரத்தை கெடுத்தபின்னர் அதனை தனியேநிறுத்துவதும், அதுமட்டுமன்றி, அதனுடன் புணர்ந்திருக்கவேண்டிய உடம்படுமெய்யை தவிர்த்துவிட்டு, வருமொழியாயிருக்கும் உயிர்முதன்மொழியினை எந்தமாற்றமுமின்றி உயிர்முதல்வருமொழியாகநிறுத்துவதும், பிரிக்கவேண்டியவிடத்தில் சேர்ப்பதும், சேர்க்கவேண்டியவிடத்தில் பிரித்தெழுதுவதும் இதுபோன்ற இன்னபிறகுறைபாடுகளும் எல்லாநூல்களிலும் காணப்படுகிறதேயென்பதுபற்றி சிலரிடம் வினவினால், அவர்கள் வேடிக்கையாக, ‘பழக்கதோசம்’ என்கிறார்கள்!
தவறானபழக்கமென்பது, மொழிக்கானாலும் நமக்கானாலும் ஆகாததோசமாகத்தானிருக்கும். அது மாற்றப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த நூலை படித்தபிறகாவது என்னைப்போன்றவர்களும் மற்றவர்களும் தம்முடைய எழுத்தில் இதுபோன்ற பிழைகள் நேராவண்ணம் திருத்திக்கொள்ளுதல் தேவையானதே. ஏனெனில், நம்முடைய அறியாமை வெளிப்படுமுன் உண்மையை நாமேயறிந்து, அதற்கேற்ப பிழையின்றி முறையாயெழுதிவிடுவது நலமன்றோ?//
எனக்குறிப்பிட்டுள்ளார்.
புணர்ச்சியைப்பற்றி இப்போது நான் சொல்லிவரும் கருத்துகள் இதற்குமுன் எவராலும் சொல்லப்பட்டதல்லவென்பதே அறிஞர்பலரும் அவற்றை ஏற்காமைக்கு முதற்காரணமாயுள்ளதென்றால் அது தவறன்று. அவர்கள் காலங்காலமாக கற்றுவந்த நூல்களும் அவர்களே எழுதிவந்த எழுத்தும் எப்படியிருந்தனவோ அப்படியிருந்ததில் குற்றமிருப்பதாக அவர்கள் எண்ணியதேயில்லை. அப்படியிருக்க, அவையெல்லாம் குற்றமுடையவையென திடீரென்று ஒருவர் சொல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் உண்மையென்னவென்றால் புணர்ச்சியைப்பொருத்தவரை எல்லாநூல்களும் குற்றமுடையனவாகவேயுள்ளனவென்பதுதான்.
இன்றிருக்கும் மேனிலைத்தமிழ்ப்பாடநூலில் ஆறாம்பாடத்துக்கான தலைப்பு, ‘நீதி நூல்களில் இலக்கிய நயம்’ என்பதாகும். இது, ‘நீதிநூல்களில் இலக்கியநயம்’ என்றிருக்கவேண்டுமென்பதை தாங்கள் அறிவீர்கள். தொகைநிலைத்தொடர்களை பிரித்தெழுதலாகாதென்பதை ஐயா பொற்கோவவர்களேசொல்லியிருப்பதாக தாங்கள் எழுதியுள்ளீர்கள்.
இந்த பாடத்திலுள்ள இரண்டாவதுபத்தியில், பதினெட்டுவரிகளுள்ளன. அந்த பதினெட்டுவரிகளுக்குள்ளிருக்கும் புணர்ச்சிப்பிழைகளோ அறுபது!
ஆனால் அவையெல்லாம் குற்றமென்பதை எவரும் கண்டதுமில்லை, சொன்னதுமில்லை. ஏனென்றால், அவையெல்லாம் குற்றமென்பதை இதுவரை எவரும் எண்ணிப்பார்த்ததுமில்லையென்பதை சொல்லத்தேவையில்லை.
நான் சொல்லும் புதியகருத்துகளைவிடுங்கள், நன்னூலிலும் தொல்காப்பியத்திலும் புணர்ச்சிபற்றி சொல்லப்பட்டிருக்கின்றவற்றை அறிஞர்கள் கடைபிடிக்கிறார்களாவெனப்பார்த்தாலே இல்லையென்றுதான்சொல்லமுடியும்.. இரண்டாம்வேற்றுமைக்கு வருமொழியாயிருந்து புணரக்கூடியது ஒரு வினையாய்மட்டுமேயிருக்கமுடியுமென்பதை நன்னூல் சொல்லியுள்ளது.
எல்லை யின்னும் அதுவும் பெயர்கொளும்
ஏனை வினைகொளும் நாலேழ் இருமையும்
புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர்.
நன்னூல் 319)
ஆனால் பெயரையும்புணர்த்துவதை அறிஞர்கள் இன்று வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள். அதுபோல், வினையெச்சமும் வினையுடன்மட்டுமேபுணரும். ஆனால் இன்று பெயரையும்புணர்த்துகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் ஏன் ஒருவரும் இன்றுவரை ஒன்றுமேசொல்லவில்லையென்பதை எண்ணிப்பாருங்கள்.
//இதுபோன்று தமிழறிஞர்களைப்பற்றி எழுதுவது சரியா என்பதைத் தாங்களே சிந்தித்து முடிவு செய்துகொள்ளுங்கள்.//
இது தாங்களெழுதியது. இதில், ‘என்பதைத்தாங்கள்’ என்னுமிடத்தில் ஐயுருபின்முன்வந்த பெயரை தாங்களேபுணர்த்தியுள்ளீர்கள். ‘முடிவுசெய்துகொள்ளுங்கள்’ என்னும் இரண்டாம்வேற்றுமைத்தொகையை பிரித்தெழுதியுள்ளீர்கள்.
// எவை பயன்படுமோ அவற்றைத் தமிழ்ச்சமுதாயமும் தமிழ்மொழியும் ஏற்றுக்கொண்டு//
இதுவும் தாங்களெழுதியதே. இதில் ‘அவற்றைத்தமிழ்’ என்பது ஐமுன்வந்த பெயரை புணர்த்தியது. அன்றோ?
இதோ, தாங்கள் வினையெச்சத்தையும் பெயரையுபுணர்த்தியது:
// புணர்ச்சிபற்றிக் கொஞ்சமாவது தெரிந்துகொண்டேன். //
இதில் ‘பற்றி’ என்பது வினையெச்சம். ‘கொஞ்சம்’ என்பது பெயர். அன்றோ? .
எனவே, தமிழறிஞர்களைப்பற்றி அவர்கள் புணர்ச்சியிலக்கணத்தை அறிந்திருக்கவில்லையெனச்சொன்னதை தாங்கள் குற்றமாய்க்கருதாமல், தமிழ் இப்போது எவ்வாறிருக்கிறதென்பதையும் அவ்வாறு அது சிதைந்திருந்தும் அறிஞர்கள் அதைப்பற்றி அறியாமலேயிருக்கிறார்களென்பதையும் எண்ணிப்பார்த்தால் என்மீது குற்றஞ்சொல்வதற்கு தங்களுக்கு எதுவுமேயிருக்காது.
தங்களுக்கும் என் மேதினவாழ்த்துகள் உரித்தாகட்டும்.
நூல்கள் என்பதே சரி என்பதற்கு நான், இந்த ஐயத்தைத் தொடங்கும்போதே“கள்” என்பது விகுதி; எனவே நூற்கள் என வராது என்னும் எண்ணம் கொண்டேஎழுதினேன். அதுபோலவேதான் ”நாள்கள்”. “கள்”ளை விகுதியாகக் கருதினால் மாற்றமில்லை. சொல்லாகக் கருதினால் மாற்றம் உண்டு எனபதை நா.கணேசனும்நிறுவினார். தெரிந்துகொள்ளவும், திருத்திக்கொள்ளவும் அனைவர்க்குமே நல்லவாய்ப்பு. நன்றி.சுந்தரம்.
176. | ஒருநாள் வாரல னிருநாள் வாரலன் |
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென் |
நூல்களா? நூற்களா?
இனி உன் மடலில் நூற்கள் எனக் குறிப்பிட்டிருந்தாய். நூல்+கள் = நூல்கள் என வரவேண்டுமே தவிர நூற்கள் என வருதல் தவறாகும். வேல்கள், கால்கள், எனக் குறிப்பிடுவரே தவிர, வேற்கள், காற்கள் என எவரும் குறிப்பிடுவதில்லை.
நாள்களா? நாட்களா?
நாட்கள் என்று குறிப்பிடுவது தவறு. நாள்கள் என்றே குறிப் பிடுதல் வேண்டும். தோள்கள் என்பதை தோட்கள் என்றோ, வாள்கள் என்பதை வாட்கள் என்றோ நாம் குறிப்பிடுவதில்லை. நாள்கள் என்றால் பல நாள் என்று பொருள். நாட்கள் என்றால் புதிய கள் என்று பொருள்படும்; நாண்மலர் என்பது போல. ஆகவே நாளின் பன்மை குறிப்பதானால் நாள்கள் என்றே வருதல் வேண்டும். தனிக்குறிலை அடுத்து வரும் லகர, ளகரங்கள் தாம் றகர, டகரங் களாகத் திரியும்; கற்கள், முட்கள் புட்கள் என்பன போல.
நூல், நாள் என்பன பால் பகா அஃறிணைப் பெயர்கள் எனப்படும். அஃதாவது ஒன்றன்பாலா பலவின் பாலா என்று பகுக்க இயலாது. அவை ஒன்றையும் குறிக்கும்; பலவற்றையும் குறிக்கும். ஒரு நூல் பல நூல் என்றும் ஒருநாள் பல நாள் என்றும் கூறுவர். "ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும்" என்ற அவ்வையார் பாடலில் ஒருநாள் என்றும் பலநாள் என்றும் ஒருமையிலும் பன்மை யிலும் வந்துளது. சிலப்பதிகாரம் என்னும் நூல் முத்தமிழ்க் காப்பியம் எனப்படும் என்றவிடத்து, நூல் என்னுஞ்சொல் ஒருமையில் வந்தது. நூல் நிலையம் திறக்கப்பட்டன என்ற விடத்து நூல் என்பது பன்மை பொருளில் வந்தது. பன்மையைக் குறிக்கப் பிற்காலத்தே 'கள்' என்பதைச் சேர்த்தனர். கள் புகுந்தபின்புதான் இந்தக் குழப்பம்.
மாடுகள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன என்பது தவறு.
மாடுகள் புல்லை மேய்ந்து கொண்டிருந்தன என்க.
பல ஆறுகளின் நீர்களைக் குடித்தேன் என்பது தவறு.
பல ஆறுகளின் நீரைக் குடித்தேன் என்க.
பலருடைய தாகங்களைத் தண்ணீர் கொடுத்து நீக்கினான்
என்பது தவறு. தாகத்தை என்க.
நாட்டு மக்களுடைய வறுமைகளை ஒழிக்க என்பது தவறு.
வறுமையை என்க.
புல், நீர், தாகம், வறுமை ஆகியவற்றிற்குப் பன்மை கிடையாது.
கால்கள் என்பதைக் காற்கள் என்று எழுதுகிறோமா? இல்லையே.
ஆகையால், நூற்கள் என்றும் தொழிற்கள் என்றும் எழுதாமல் நூல்கள்
என்றும் தொழில்கள் என்றும் எழுதுக. தோள்கள் என்பதைத் தோட்கள்
என்று சொல்வதில்லையே; தோள்கள் என்றே சொல்கிறோம். அது
போலவே நாள்கள் என்பதை நாட்கள் என்று எழுதாமல் நாள்கள்
என்றே எழுதுக. நாட்கள் என்பது புதிய கள் என்றே பொருள் தரும்.
2015-04-29 18:57 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஐயா, 'எல்லாவீடுகளிலும்' என்பதுதான் சரியென்றாலும், 'எல்லாவீட்டிலும்' என்பதிலும் குற்றமில்லையென்றேகருதுகிறேன். பன்மையை ஒருமையிற்சொல்லும்வழக்கம் நம்மிடம் உள்ளதுதான்!
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்குஎன திருவள்ளுவரேயெழுதியிருக்கிறாரன்றோ?
--
//பேரா. பொற்கோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தங்களது கருத்துரைகளின்மீது அவர் வழங்கிய அறிவுரைகளைத் தயவுசெய்து இந்த மடலாடல் குழுவில் முன்வைத்தால், மேலும் நாம் கலந்துரையாட நன்றாகயிருக்கும்.
சொற்சந்தி, தொகைச்சந்தி, தொடர்ச்சந்தி ஆகியவற்றிற்கான அவர் முன்வைக்கிற விதிகளிலிருந்து , தாங்கள் எங்கே வேறுபடுகிறீர்கள் என்பதைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் தொகுத்தும் அளித்தால் மிக நல்லது.
என்னுடைய கருத்துகள் இரண்டுதான்.
1. எழுத்துத்தமிழைப் பயிலுகின்ற மாணவர்கள் எளிதாகவும் தெளிவாகவும் தமிழில் எழுதுவதற்கு உதவும்வகையில் இன்றைய எழுத்துத்தமிழ் அமையவேண்டும்.
2. தமிழுக்குத் தேவையான மென்பொருள்களை - சொற்பிழைதிருத்தியிலிருந்து இயந்திரமொழிபெயர்ப்புவரை - உருவாக்குவதற்கு ஏற்றவகையில் இன்றைய எழுத்துத்தமிழ் அமைப்பு அமையவேண்டும்.
மேற்குறிப்பிட்ட இரண்டுக்குமே தற்போதைய தங்களுடைய தமிழ்நடை சிரமமே அளிக்கும். மாணவன் மூளைக்கும் கணினியின் மூளைக்கும் ஏற்ற, சிக்கலற்ற தமிழ்நடையே இன்று தமிழுக்குத் தேவை என்பதே எனது கருத்து. சில காலமாக நானும் எனது குழுவினரும் கணினியுடன் தமிழுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். //
ந. தெய்வசுந்தரமவர்களுக்கு.
ஐயா,
தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம்’ என்னும் ஐயாவின் நூலை அவர் அப்போதே என்னிடம் தந்தார். (2011இல்) அதை நான் அப்போதே படித்துப்பார்த்தேன். அது நன்னூலை நேரடியாக கற்று உணரவியலாதவர்களுக்காக ஓர் எளியவழியைக்காட்டும் நூல். அதிலும் எங்கே வலி மிகுமென்பதைப்பற்றியேசொல்லப்பட்டிருக்கிறது.
வலிமிகுவதைப்பற்றியகருத்துகளில் நான் மாறுபடவில்லை. ஆனால் எந்தவோரிடத்திலும் நிலைமொழியும் வருமொழியும் புணர்ந்துவரவேண்டுமா அல்லது புணராதுவரவேண்டுமாவென்பதிலேயே நான் சொல்லவரும் கருத்து அமைந்திருக்கிறது.
இரண்டாம்வேற்றுமையின்முன்னும் நான்காம்வேற்றுமையின்முன்னும் வல்லினம்வந்தால் வலிமிகுமென்பதை பொதுவிதியாய்க்கொண்டு, அவ்வாறான அனைத்திடங்களிலும் வலியை மிகுத்துவிடுகிறார்கள். ஆனால் அனைத்திடங்களிலும் புணர்ந்துதன்வரவேண்டுமென்பதில்லை. புணராமலும்வருவதுண்டு. இந்த அடிப்படையைத்தான் நான் வலியுறுத்துகிறேன். அதுபற்றியே எழுதியும்வருகிறேன்.
தொகைநிலைத்தொடர்மொழிகளை பிரிக்க்க்கூடாதென்பதை ஐயா சொல்லியிருக்கிறார்கள். நானும் அதையேதான்சொல்கிறேன். ஆனால் பெரும்பாலும் தொகைநிலைத்தொடர்மொழிகள் பிரித்தெழுதப்படுகின்றன. தாங்களேகூட,
// மேற்குறிப்பிட்ட இரண்டுக்குமே தற்போதைய தங்களுடைய தமிழ்நடை சிரமமே அளிக்கும்.//
என்பதைப்பாருங்கள். இதில், ‘சிரமமே அளிக்கும்’ என்பதை ‘சிரமத்தையேயளிக்கும்’ என்றெழுதினால் அதில் ஐயுருபானது வெளிப்படும். அதை மறைத்தால், (தொகைநிலைப்படுத்தினால்) அதில் ஏகாரம் இடையில்வரமுடியாது. ‘சிரமமளிக்குமே?’ என வினாப்பொருளில்மட்டுமே ஏகாரத்தை வைக்கமுடியும்.
இரண்டாம்வேற்றுமைத்தொகையில் சொற்களை பிரித்தால், பெயரானது எழுவாயாகும், வினையானது அந்த எழுவாய்க்கு பயனிலையாகும். ‘சிரமமே அளிக்கும்’ என்பதில் அவ்வாறிருப்பதை பாருங்கள். மேலும், “தங்களுடைய தமிழ்நடை சிரமமே” என்பதைப்பார்த்தீர்களானால், இது ஒரு முற்றுப்பெற்ற வாக்கியமாயிருப்பதை அறிந்துகொள்ளலாம் ‘தமிழ்நடை சிரமமே’ என்பதில் இரண்டுபெயர்ச்சொற்களுள்ளன. இவ்வாறு இரண்டுபெயர்ச்சொற்கள் அடுத்தடுத்துநின்றால், முதற்பெயருக்கு அடுத்தபெயர் பயனிலையாகிவிடும். இதையெல்லாம் அறிந்திருந்தால் இவ்வாறு எழுதுவதை தவிர்க்கமுடியும். அன்றோ?
//எழுத்துத்தமிழைப் பயிலுகின்ற மாணவர்கள் எளிதாகவும் தெளிவாகவும் தமிழில் எழுதுவதற்கு உதவும்வகையில் இன்றைய எழுத்துத்தமிழ் அமையவேண்டும். //
என்கிறீர்கள். உண்மைதான். ஆனால் சொல்லும் பொருளும் குற்றமில்லாமலிருக்கவேண்டும். ஆதலால் நாம் அதையுந்தானே அவர்களுக்கு கற்பித்தாகவேண்டும்?
// தமிழுக்குத் தேவையான மென்பொருள்களை - சொற்பிழைதிருத்தியிலிருந்து இயந்திரமொழிபெயர்ப்புவரை - உருவாக்குவதற்கு ஏற்றவகையில் இன்றைய எழுத்துத்தமிழ் அமைப்பு அமையவேண்டும். //
எனச்சொல்கிறீர்கள். தமிழுக்கு தேவையான மென்பொருள்களை - சொற்பிழைதிருத்தியிலிருந்து இயந்திரமொழிபெயர்ப்புவரை - உருவாக்குவதற்கு திரு. வேல்முருகன் சுப்பிரமணியனென்பார் நான்சொல்லிவரும் புணர்ச்சிபற்றிய அனைத்துக்கோட்பாடுகளுடனும் முயன்றுவருகிறார். புணர்ச்சி பிழையானால் பொருளும்பிழையாகுமென்னும் கருத்தை அவர் முழுமையாயேற்கிறார்.
அவர் 'தமிழ் மன்றம்' என்னும் நம் குழுவில் சில மடல்களை எழுதியுள்ளார். முடிந்தால் தாங்கள் அவற்றை பாருங்கள்.
https://groups.google.com/forum/#!topic/tamilmanram/Uv-wJK3ZEMs
https://groups.google.com/forum/#!topic/tamilmanram/lD_2oN4w_1U
https://groups.google.com/forum/#!topic/tamilmanram/8nTymgaAVSQ
https://groups.google.com/forum/#!topic/tamilmanram/soytlZ6R5Ik
ஐயா பொற்கோவவர்கள் என்னுடைய கருத்துகளைப்பற்றி என்னசொன்னார்களென்பதை கேட்டுள்ளீர்கள். அதை விரைவில் தெரிவிக்கிறேன்.
அன்புடன் பொன்முடி.
...
அன்புள்ள மருத்துவர் ஐயா,மிக்க நன்றி. இத்துடன் இதுபற்றிய எனது மடலாடலை நிறுத்திக்கொள்கிறேன்.வணக்கம்.
...
ஒரு திருத்தம்:ஐயா மு. இளங்கோவனவர்கள் கீழ்க்கண்டவாறெழுதியுள்ளார்://தமிழ் இலக்கணத்தில் இரண்டாம் வேற்றுமை மிகும் இடம் நான்காம் வேற்றுமை மிகும் இடம் இவற்றில் ஒற்று மிகுக்க வேண்டியதில்லை என்று தம் மாறுபட்ட கருத்தை முன்வைத்தார்//இதன்று நான் சொன்னதென்பதை இங்கே தெரிவித்துக்கொள்ளவிரும்புகிறேன். நான்சொன்னதென்னவென்றால், புணர்ச்சி வேண்டப்படுமிடங்களில் சொற்கள் புணரும், அங்கே வலி மிகும். ஆனால், இரண்டாம்வேற்றுமையின்முன்னும் நான்காம்வேற்றுமையின்முன்னும் வல்லினமட்டுந்தான்புணருமா? பிறமுதன்மொழிச்சொற்களை ஏன் புணர்த்துவதில்லை?வல்லினமா அல்லவாவென்பதல்லாமல் எல்லாச்சொற்களும் புணர்ச்சி தேவையாயிருந்தால் (அதாவது அங்கே சொல்லவரும் பொருளுக்கு புணர்த்திச்சொல்வதுதான் சரியாயிருக்குமென்றால்) சொற்களை புணர்த்தியும், தேவையில்லையென்றால் புணர்த்தாமலுமெழுதவேண்டுமென்பதுதான் நான் முன்வைத்த கருத்து.இதன்படி, புணர்த்தவேண்டிய தேவை இல்லாதவிடங்களில் புணர்த்தாதபோது வல்லினமுதன்மொழிவந்தால் வலி மிகாதென்பதை சொல்லவும்வேண்டுமோ? ஆனால் இதை புரிந்துகொள்ளாமல் அடிப்படைக்கருத்தையே மாற்றியெழுதிவிட்டாராகையால் இந்த விளக்கத்தை அளிக்கநேர்ந்தது.
ஐயா பொற்கோவவர்களது 'தமிழில் நாமும் தவறின்றி எழுதலாம்' என்னும் நூலில், 'ஆறுவரிகளுக்குள் ஆறிடங்களில் தொகைநிலைத்தொடர்மொழிகள் பிரித்தெழுதப்பட்டுள்ளமையை என்னென்பது?' என நான் வினவியவுடன், 'இத்துடன் இதுபற்றிய எனது மடலாடலை நிறுத்திக்கொள்கிறேன்.' எனச்சொல்லி, ஐயா ந. தெய்வசுந்தரமவர்கள் விலகிவிட்டார். உண்மையை சொல்வதில் குற்றமென்னவென்பது எனக்கு தெரியவில்லை.ஒருவர் சுமத்தும் குற்றத்தை ஒப்புக்கொண்டுதானாகவேண்டுமென்பதில்லை. குற்றமில்லையென்றால் அது எவ்வாறென்பதை நிறுவலாம், குற்றந்தானென்றால் ஏற்றுக்கொள்ளலாம். இரண்டும் செய்யக்கூடியதே.
...
...
வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும்
அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள
- 220
இதன்படி, அல்வழிப்புணர்ச்சியில் உயிர்வரின் இயல்பாவதும் உண்டென்பது அறியத்தக்கது. உருபுபுணர்ச்சியென்பது இடைச்சொற்புணர்ச்சி. இடைச்சொற்புணர்ச்சியென்பது அல்வழிப்புணர்ச்சியேயென்பதை சொல்லத்தேவையில்லை.
இது இவ்வாறிருக்க, தொகைநிலைத்தொடரை பிரித்தெழுதுவதற்கும் ஒரு காரணமுண்டோவென்றால் இல்லையென்பதே உண்மை. ஏனென்றல், தொகைச்சொல்லை பிரித்தால் பொருளே மாறிவிடும். ஆகவே தொகைச்சொல்லை பிரித்தெழுதுவது குற்றமேயென்பதை சொல்லத்தேவையில்லை.
'தமிழ்மொழி' என்பதும் 'தமிழ் மொழி' என்பதும் ஒரேபொருளுடையவாகா. ஆனால் இன்றைய தமிழ்ப்பாடநூல்களில்
'தமிழ் மொழி' என பிரித்தெழுதப்பட்டிருப்பதை காணலாம். இதை குற்றமெனச்சொல்லாமல் எப்படிச்சொல்வது?
'தமிழ்மொழியைக்கற்றான்' என்பதும் 'தமிழ் மொழியைக்கற்றான்' என்பதும் ஒரேபொருளையாதரும்?
அதுபோல், 'தமிழ் இலக்கணம்' என்றுமிருப்பதைக்காண்கிறோம். இதுவும் குற்றந்தானே?
'தமிழிலக்கணங்கற்றான்' என்பதும் 'தமிழ் இலக்கணங்கற்றான்' என்பதும் ஒரேபொருளைத்தருமா?
எனவே, தொகைநிலைத்த்தொடரை பிரித்தெழுதுவதென்பது குற்றமே!
...
ஐயா, தங்கள் ஆதரவுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இவ்வாறெல்லாம் எழுதிக்கொண்டேயிருப்பதென்பது ஏதோநான் ஒன்றை கண்டுபிடித்துவிட்டேனென்பதற்காகவும் அதை வெளிக்காட்டுவதால் என் மேன்மை உணரப்படுமென்பதற்காகவுமல்ல. உண்மையில் தமிழ் எழுத்தில் பொருட்குற்றமில்லாமலிருக்கவேண்டுமென்னும் ஒரேநோக்கந்தான் எனக்கு இருக்கிறது. அதற்காகவே என் நேரத்தை செலவிடுகிறேன்.எல்லாநூல்களையும் குற்றமெனச்சொல்வதில் எனக்கு பெருமையொன்றுமில்லை. என் மொழியில் நூல்கள் குற்றமுடையவையாயிருப்பதை காணும்போது உண்மையில் மனம் நோகிறது. இந்த நிலை மாறவேண்டும். குறிப்பாக பாடநூல்களும் இலக்கணநூல்களும் குற்றமற்றவையாயிருக்கவேண்டும். இதுதான் என் அவா. அதுபோல் புணர்ச்சிபற்றிய உண்மைநிலை எல்லாரும் அறியத்தக்கதாயிருக்கவேண்டுமென்பதும் பேராசிரியர்கள் அதில் தெளிவுற்று மாணவர்களுக்கு அதை எடுத்துரைத்து அவர்களை வழிநடத்தவேண்டுமென்பதும் இனி படிப்படியாய் நடக்கவேண்டும்.
ஐயா சொ. வினைதீர்த்தானவர்களுக்கு வணக்கம்.
ஐயா தாங்கள் இப்படி வினவியது எனக்கு மகிழ்ச்சியையுண்டாக்குகிறது! தங்கள் வினாக்களுக்கு விடைசொல்கிறேன். அதற்குமுன் இவ்வாறான வினாக்களை வினவியமைக்கு தங்களுக்கு நன்றிகூறிக்கொள்கிறேன்.
உண்மையில் தங்கள் வினாவானது புணர்ச்சிபற்றி விளக்குவதற்கு தாங்கள் எனக்கு தந்த ஒரு வாய்ப்பாகவேகருதுகிறேன். புணர்ச்சியென்பது எல்லாச்சொற்களையும் புணர்த்திவிடுவதன்று. ஒவ்வொருபுணர்ச்சியும் புணர்ச்சியிலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ள தொடர்மொழியாயிருக்கவேண்டும். தொடர்மொழிகள் இருபத்தாறுவகையானவை. இவற்றுக்குள் அடங்காமல் தொடர்மொழியேதும் அமையாது. அமையாதவை தொடர்மொழியாகா. இதை ஏன்சொல்கிறேனென்றால், வினையெச்சத்தையும் அதன்முன்வரும் பெயரையும் புணர்த்துவதற்கு அடையாளமாய் அங்கே வலிமிகுத்துவிடுவதை இன்று பார்க்கமுடிகிறது. அதுபோல், இரண்டாம்வேற்றுமையின்முன்னும் பெயர்வரும்போது வலிமிகுத்துவிடுவதை காண்கிறோம். புணர்ச்சியிலக்கணத்தில் இவற்றுடன் பெயர்புணர்ந்ததாக தொடர்மொழிகள் சொல்லப்படவில்லையென்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன். நிற்க.
1 உண்மையில் தமிழ் எழுத்தில் பொருட்குற்றமில்லாமலிருக்கவேண்டுமென்னும் ஒரேநோக்கந்தான் எனக்கு இருக்கிறது.
இதில் ‘தமிழ் எழுத்தில்’ என்றில்லாமல், ‘தமிழெழுத்தில்’ என்றிருந்தால், அது தமிழெழுத்தைப்பற்றிச்சொன்னதாயாகும். ஆனால் இங்கே நான் தமிழைப்பற்றியேசொல்லவருகிறேன். அதாவது, தமிழானது எழுத்தில் குற்றமில்லாமலிருக்கவேண்டுமென்பதே இதன் பொருள். இதையே, ‘எழுத்தில் தமிழ் குற்றமில்லாமலிருக்கவேண்டும்’ என்றெழுதினாலும் பொருள் அதாகவேயிருக்கும்.
‘தமிழ் எழுத்தில்’ என நான் தனிச்சொற்களாயெழுதியிருப்பதை தாங்கள் படிக்கும்போது ‘தமிழெழுத்தில்’ என புணர்த்திப்படித்துக்கொண்டதனாலேயே தங்களுக்கு இந்த ஐயம் உண்டாகியிருக்கவேண்டுமென்னும் எண்ணம் எனக்கு உண்டாயிற்று. அது உண்மையாகவுமிருக்கலாம். உண்மையில், நாம் படிக்கும்போது பலவிடங்களில் தனிச்சொற்களை அங்கே வரும் பொருளுக்கேற்றவாறு சேர்த்துப்படித்துக்கொள்கிறோம். அவ்வாறு சேர்த்துப்படிக்குமிடங்களை கவனித்தால் அவை யாவுமே புணர்ச்சிக்குரியவிடங்களாயிருப்பதை அறிந்துகொள்ளமுடியும்.
தொடர்மொழிகளைமட்டுமே தொடர்ந்துபடிக்கவேண்டும், தனிமொழிகளை தனித்தனியாகத்தான்படிக்கவேண்டும். புணர்த்தவேண்டியவிடங்களில் புணர்த்தியெழுதியிருந்தால் நாமாகப்புணர்த்திக்கொள்ளவேண்டிய தேவை வந்திருக்காது. ஆனால் இக்காலத்தில் எல்லாச்சொற்களையும் தனித்தனியாகவேயெழுதுவதால் அப்படி நாமாகச்சேர்த்துக்கொள்வது அனைவருக்குமே வழக்கமாகிவிட்டது. இதிலிருந்து நாம் விடுபடவேண்டுமானால், தொடர்மொழிகளை தொடர்மொழிகளாகவேயெழுதுவதைத்தவிர வேறு வழியேதும் இல்லை. வலிமிகுமிடங்களிலாவது சொற்கள் பிரித்தெழுதப்பட்டிருந்தாலும் அவை புணர்ந்துள்ளனவென்பதை அறிந்துகொள்ளமுடியும். ஆனால் இயல்பாய்ப்புணருஞ்சொற்கள் புணர்ந்துள்ளனவாவென்பதை எப்படியறியமுடியும்?
2 அதற்காகவே என் நேரத்தை செலவிடுகிறேன்
இதில் ‘நேரத்தை’ என்பது இரண்டாம்வேற்றுமை. ‘செலவு’ என்பது பெயர். இவை புணரா.
3 என் மொழியில் நூல்கள் குற்றமுடையவையாயிருப்பதை காணும்போது
‘என் மொழியில்’ என்பது ‘மொழியில்’ என்பதைப்பற்றியது. ‘என்மொழியில்’ என்பது என்மொழியென்பதைப்பற்றியது. அதாவது, ‘என்மொழியில் நூல்கள் குற்றமுடையவையாயிருப்பதைப்பார்க்கும்போது, பிறர்மொழியில் நூல்கள் குற்ற்மில்லாதிருப்பதைப்பற்றிய எண்ணம் எனக்கு வராமலில்லை’ எனச்சொல்வதானால், அங்கே ‘என்மொழியில்’ எனச்சொல்வது பொருந்தும். ‘என்மொழி’ என்பது ‘என்னுடையமொழி’ என்னும்பொருளையுடையது. இது ஆறாம்வேற்றுமைத்தொடர். இதில் உருபு வெளிப்படவில்லையானாலும் இது தொகைநிலைத்தொடரன்று. ஏனெனில், ‘நான்’ என்னும் தன்மைப்பெயரானது ஆறாம்வேற்றுமையுருபை ஏற்றதனால் ‘என்’ என திரிந்தது. ‘உருபேற்கும்போது திரியும் பெயர்கள்’ என்னும் தலைப்பில் பள்ளிநூல்களில் இது விளக்கப்பட்டுள்ளது.
வேற்றுமையுருபைப்பற்றி ஏன் இவ்வளவுவிளக்கினேனென்றால், ஒரு வேற்றுமைத்தொடரைப்பொருத்தவரை அதை தொடராய்ச்சொல்வதற்கும் தொடராயல்லாமல் தனிச்சொற்களாயெழுதுவதற்கும் பொருள்வேறுபாடுண்டு. தொடராயெழுதினால் நிலைமொழியைச்சிறப்பித்துச்சொன்னதாயாகும், தனிச்சொற்களாயெழுதினாலோ வருமொழியைச்சிறப்பித்ததாயாகும். எடுத்துக்காட்டாக,
‘கண்ணனுடையதோட்டத்தைவாங்கவேண்டாம், கந்தனுடையதோட்டத்தைவாங்கலாம்’ என்பதற்கும்,
‘கண்ணனுடைய தோட்டத்தைவாங்கவேண்டாம், அவனுடைய வீட்டைவாங்கலாம்’
என்பதற்குமான பொருள்வேறுபாட்டை எண்ணிப்பாருங்கள். வேற்றுமைவந்தவிடத்தில் புணர்த்திச்சொன்னது நிலைமொழியைச்சிறப்பித்ததென்பதையும் புணர்த்தாமற்சொன்னது வருமொழியைச்சிறப்பித்ததென்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறதன்றோ?
அதுபோல், ‘என்மொழி’ என்பதையும் ‘என் மொழி’ என்பதையும் எண்ணிப்பார்த்தால், நான் எழுதியிருப்பது சரியானபொருளைத்தான் அங்கே தருகிறதென்பதை ஏற்றுக்கொள்வீர்களென்றெண்ணுகிறேன்.
4 காணும்போது உண்மையில் மனம் நோகிறது.
‘மனம்நோகிறது’ என்பது எழுவாய்த்தொடர். எழுவாய்த்தொடரென்பது அந்த எழுவாயை சிறப்பித்துச்சொல்வதாகும். ‘கண்ணன்வந்தான்’ என்பது வந்தவன் யாரென்பதைச்சொல்வது. ‘கண்ணன் வந்தான்’ என்பதோ கண்ணனென்பவன் என்னசெய்தானென்பதைச்சொல்வது. இவற்றுள் எந்தப்பொருளைச்சொல்லவேண்டுமோ அந்தப்பொருளுக்கேற்றவாறேயெழுதவேண்டும். இதன்படி, எதுநோகிறதென்பதைக்குறிப்பிட்டுச்சொல்வதைக்காட்டிலும் நோகிறதென்பதையே இங்கு குறிப்பிட்டுச்சொல்லவேண்டியிருப்பதால் இங்கே புணர்த்தாமலெழுதியுள்ளேனென்பதை இப்போது தாங்கள் அறிந்துகொள்ளமுடியும்.
‘மனம்நோகிறது’ என்பது நோவது எதுவென்பதைப்பற்றிச்சொல்வதாயிருக்கிறது, ‘மனம் நோகிறது’ என்பதோ மனமானது என்னசெய்கிறதென்பதென்பதைச்சொல்வதாயிருக்கிறது. அன்றோ?
5 குறிப்பாக பாடநூல்களும் இலக்கணநூல்களும் குற்றமற்றவையாயிருக்கவேண்டும்.
‘குறிப்பாக’ என்பது வினையெச்சம், ‘பாடம்’ என்பது பெயர். இவை புணராவென்பதை சொல்லத்தேவையில்லை.
ஐயா, தங்கள் வினாக்களுக்கான விடைகளை என்னால் இயன்றவரை சொல்லியிருக்கிறேன். இதற்குமேலும் தங்களுக்கு ஐயமிருந்தால் இன்னும் கேளுங்கள் விளக்கமுயல்கிறேன்.
நன்றி!
அன்புடன் பொன்முடி