கதிர்காமக் கந்தன் துதிமாலை- சீ. ஆ. கதிரித்தம்பி

48 views
Skip to first unread message

LK

unread,
Jul 4, 2011, 2:00:27 AM7/4/11
to mintamil
நன்றி - தேனுஷா

காப்பு


சீராரும் ஈழத்து தென்கதிரை வேலவர்மேற்
பாராரும் நற்திப்பாய் பாடுதற்கு - நேராக
பாரதத்தை மேருவித் பண்டெழுதி வைத்தமத
வாரணமுக கடவுள் காப்பு
 
1. நாழுமுனை துதித்து கந்தா நானிலத்தோர் கொண்டாட
பாணன்கவி மழை போல் கந்தா பாடவர மேயருள்வாய்
 
2. தேவர்துயர் தீர்க்கவென்று கந்தா சிவனார் அறுமுகத்தின்
சோதி அனல் கடராய் தோன்றிவந்த சோதியனே
 
3. சரவணப் பொய்கை தன்னில் கந்தா தனித்தனியாய் மூவிரண்டு
பாலகராய் உற்பவித்த கழனிமலை யாண்டவனே
 
4. பாலர் அறுவரையும் கந்தா பார்வதித்தாய் சேர்த்தணைக்க
ஆறுமுகத் தோருருவாய் கந்தா அருள்புரிய வந்தவனே
 
5. காலிலிட்ட மென்சதங்கை கந்தா கணீரெனவே யோசையிட
பாலினிக்கு தொன்றுமையாள் கந்தா பக்கம் நின்றிடுவாய்
 
6. அன்னை தந்த வேலேந்தி கந்தா அசுரர்களை வேரறுத்த
சன்னல் கழனிகள் கந்தா கதிர்காம வேலனே
 
7. அயன் அரியும் தேவர்களும் கந்தா அன்றூபட்ட துன்பமெல்லாம்
சிவன் மகனே உன்னருளாம் கந்தா தீர்த்து ரட்சித்தவனே
 
8. தேவர் சிறை மீட்க கந்தா செருக்களத்தில் வேலேந்தி
மூவனாக்கும் தேவருக்கும் கந்தா முன்னின்ற சேவகனே
 
9. துட்டராம் சூரர்தமை கந்தா தொலைக்க வடிவெடுத்த
கட்டழகா தென்னிலங்கை கதிர்காம வேலோனே
 
10, அரனார் திருமகனே கந்தா அன்னை யுமை பாலகனே
பரனே கதிரைமலைக் கந்தா பன்னிருகை வேலோனே
 
11 வேலாயுத தோனே கந்தா விழங்கு தண்டைமின்னும் மெழிற்
காலோனே தென்னிலங்கைக் கந்தா கதிர்காம வேலோனே
12. அண்டர் சேனாபதியே கந்தா அரனார் திருமகனே
தொண்டர்க் கருள்புரியும் கந்தா சுடர்பழனிவே லோனே
 
13. சூரர்குலம் வேரறுத்து கந்தா சுரர்லோ கத்துன்பமற
தேவர் சிறை மீட்ட கந்தா செந்தில் வடிவேலோனே
 
14. அமரர் தொழும் ஆறுமுகா கந்தா ஆயோன் மருகோனே
குமரா திருப்பழனிக் கந்தா குன்றமர் வேலோனே
 
15. திருப்பரங் குன்றுறையும் கந்தா தேவேந்திரன் மருகா
பப்பதனின் நற்புதல்வி கந்தா பார்வதி மகனே
 
16. குன்றைக் குடியிலிலும் கந்தா குன்றுதொறு மேயிருந்து
என்றைக்குமே அடியார்க்கு கந்தா இரங்கி யருள் செய்பவனே
 
17. கந்த கோட்டத்துறையும் கந்தா கந்தனே கானவள்ளி
சிந்தைமகிழ் கொழுனா கந்தா தென்கதிரை ஆண்டவனே
 
18. தெய்வானை வள்ளியுடன் கந்தா சேயனெனைத் தேடிவந்து
ஐயாவே எத்தனுக்குக் கந்தா ஆதரவு தாருமையா
19. ஆதிசிவன் புத்திரனே கந்தா அன்னை யுமையாள் மகனே
சோதிவடி வானவனே கந்தா சூரர் சூலாந்தகனே
 
20. ஆவி நிலையானதென்று கந்தா அறிவிழந்தேன் இன்று வரை
தீவினையேன் ஈடேற கந்தா திரும்பியெனைப் பாருமையா
 
21. மனைவி மக்கள் சுற்றமுடன் கந்தா மலையேறித் தொண்டனிட்டேன்
வினைகள் தமைப் போக்கிக் கந்தா வேண்டும்வரம் தாருமையா
 
22. வினைகள் தமைப் போக்கிக் கந்தா வேண்டும் வரங்கள் தந்து
மனைவி மக்கள் சுற்றமுடன் மகிழ்ந்திருக்க நீயருள்வாய்.
 
23. தந்தையும் தாயும்நீ கந்தா தாரணியில் உன்னையன்றி
சிந்தத் துயர்தீர்க்க கந்தா தேடுவது யாரை ஐயா
 
24. உன்பாதம் தஞ்சமென கந்தா உறுதியாய் நம்புமெந்தன்
சிந்தைக் கலிதீர கந்தா செல்வமெல்லாம் தாருமையா
 
25. வறூமைப் பிணியாலே கந்தா வாடிமனம் நைந்துருகும்
சிறுமை தனைப்போக்கி கந்தா சேயனெனைக் காருமையா
26. மண்மதி லுள்ளவும் கந்தா வழ்ஞ்சிறந்த பாக்கியங்கள்
விண்மீதிருந் தாலும் கந்தா விரும்பி எனக்களிப்பாய்
 
27. வேலும் மயிலுடனே கந்தா கந்தா விரைந்து வந்து என்தலையில்
கால்வைத் தயனெழுத்தை கந்தா விருப்பி எனக்களிப்பாய்
 
28. அயன் எழுத்தை நீயழித்துக் கந்தா அடியேனும் ஈடேற
சிவன் மகனே நீயெனக்குக் கந்தா சித்தமிரங்குமையா
 
29. நாட்டில் நான்பட்டதுயர் கந்தா நான்முகனால் முன்குறித்த
ஏட்டிலிருப்பதனைக் கந்தா ஏறெடுத்து பாருமையா
 
30. உள்ளக்கவலை யெல்லாம் கந்தா ஒருநொடியிலே மற்றி
வெள்ளமெனவேண செல்வம் கந்தா விரைந்தெனக்குத் தாருமையா
 
31. பூவுலகிலுள்ளமட்டும் கந்தா புண்ணியங்களே புரிந்து
சேவற் கொடியோனே கந்தா உன் சேவை செய்யும் வாய்ப்பருள்வாய்
 
32. புன்மை இருள்நீக்கி கந்தா பூலகில் வேண தர்மம்
தன்னை நான்செய்து கந்தா தரணி தனில் வாழவைப்பாய்
33ஆனபொருள் யாயும் கந்தா அமைந்துலகில் வாழ்ந்திருந்து
கானமயில் வகனனே கந்தா உன்கழலடியில் சேரவைப்பாய்
 
34.என்னேரம் உன்நினைவில் கந்தா ஏழையான் வாழ்ந்திடவே
தன்னேரில்லாதவனே கந்தா உந்தாளில் சரணடைந்தேன்
 
35. இந்தப் பிறவிதனில் கந்தா ஏழைநான் பட்ட துயர்
எந்தப் பிறவியிலும் கந்தா எய்தாமற் காத்திடுவாய்
 
36. வந்தவினை தீர்க்கும் கந்தா வடிவேலா எந்தனுக்குப்
பந்தவினை வராமல் கந்தா பாலனெனைக் காருமையா
 
37. ஏழைநான் செய்தபிழை கந்தா எண்ணமுடியா விடினும்
கோழை மகன்செய்ததென்று சந்தா என்குறைகள் பொறுத்திடுவாய்
 
38.  பாவங்கள் செய்து கந்தா படுநரகில் வீழாமல்
நீயே வந்த்தென்னருகில் கந்தா நித்தமும் காருமையா
 
39. உன்றனருள் உண்டெனவே கந்தா உன்பாதம் நம்பிந்த
வன்னெஞ்சன் என்னையும் நீ கந்தா வந்துகார் அஞ்சலென்றே
40. இந்தா வென்றாடும் கந்தா சிவன்மகனே தேவர் தொழும்
கந்தா குமரா கந்தா கதிர்காமவேலோனே
 
41. வாக்கும் மனும் உந்தன் கந்தா வண்ணத்திருப் பதத்தை
நோக்கி தவமிருக்க கந்தா நுண்ணாறிவைத் தாருமையா
 
42. ஆர்க்கும் பெரியோனே கந்தா அமரர்சிறை மீட்டவனே
காக்கும் பெருமானே கந்தா கதிர்காம வேலோனே
 
43. வில்லால் அடித்த கந்தா விஜயனுக்கு பாசுபத
வல்லாயுதம் கொடுத்த கந்தா வல்லபிரான் தன்மகனே
 
44. மங்கை வள்ளி பங்காளா கந்தா மயிலேறும் சுப்ரமண்யா
கங்கைக்கரை வளம்சேர் கந்தா கதிர்காம வேலோனே
 
45. பாலும் வயிற்றாலே கந்தா பசிபொறூக்க மாட்டாமல்
சூழும் கெடுநினைவு கந்தா சூழாமற் காத்திடுவாய்
 
46. பொல்லாச் செயல்களினைக் கந்தா புரியாமல் நற்செயல்கள்
எல்லாமே செய்திருக்க கந்தா எனக்கு வரம் தாருமையா
47. செங்கரத்தில் வேலேந்திக் கந்தா என்சிந்தை தனிலேயிருந்து
பங்கமில்லா எந்தனது கந்தா பாவமெல்லாம் தீருமையா
 
48. குற்றம் நான் செய்தாலும் கந்தா குறைகளெல்லாம் நீ பொறுத்து
கற்றறியா மூடனெனைக் கந்தா காத்தருள வேண்டுமையா
 
49. ஐயா கதிரைமலைக் கந்தா அப்பனே என்கவலை
மெய்யாய்நீ பார்த்திருந்தும் கந்தா நீவிரைந்து வாராததென்ன
 
50. ஏழை படும் துயரம் கந்தா எல்லாமறிந்திருந்தும்
வாழாது நீயிருந்தால் கந்தா வசையுனக்கு வாராதோ
 
51. அன்பன் படும் துயரை கந்தா அல்ட்சியமாய் நீநினைத்தால்
முன்னே யுனைப்புகழ்ந்த கந்தா முதுமொழியும் செய்யாமே
 
52. அருணகிரியாரும் கந்தா அண்ணாமலைக் கவியும்
பெருமை பெற்றா ரென்றுலகில் கந்தா பேசுவதும் பொய்த்திடுமே
 
53. நோய் நொடிகளாலேநான் கந்தா நொந்து மனம் வாடாமல்
தாய் மகவைக் காப்பதுபோல் கந்தா தடியேனைக் காருமையா
54. தாயில்லாப் பிள்ளையைப் போல் கந்தா தரணியில் யாந்தத்தளிக்க
நீயும் பாராமுகமாய்க் கந்தா நினைந்திருக்க ஞாயமுண்டோ
 
55. ஆண்டவனும் நீயாகி கந்தா அன்னை தந்தை தானாகி
வேண்டும் வரங்கள் தந்து கந்தா என் வேதனையை தீருமையா
 
56. கந்தா குகனே கதிர்காமத்தின் அரசே
எந்தாயும் தந்தையும் நீ கந்தா எந்தனைக் காருமையா
 
57. காக்க கடனுனக்கு கந்தா கரியமால் தன்மருகா
பார்க்குமிடமெங்கிலும் கந்தா பரந்திருந்து காருமையா
 
58. பெற்றவர்கள் தாமறிவர் கந்தா பிள்ளைகளின் பெற்றிதனை
உற்றவனே நீயுமென்னை கந்தா உடனிருந்து காருமையா
 
59. ஆறெழுத்துக் குள்ளிருக்கும் கந்தா ஆறுமுகத் தையாவே
கூறும் வினைகளெனைக் கந்தா கூடாமற் காத்திடுவாய்
 
60. முப்புரமும் முன்னெரித்த கந்தா முக்கண்ணன் புத்திரனே
எப்புரமும் எத்திசையும் கந்தா இலங்கும் வடிவேலோனே
61. முன்னேயும் பின்னேயும் கந்தா மூவேழ் பிறவியிலும்
உன்னையல்லால் உற்றதெய்வம் கந்தா ஒருவரும் இல்லையையா
 
62.  மூவேழ் பிறவியிலும் கந்தா முன்னின்றூ என்றெனக்கு
வாழ்வளிக்க வல்லதெய்வம் கந்தா வையகத்தில் வேறுமுண்டோ
 
63. பொய்யும் புனைசுருட்டும் கந்தா புன்செயல் அத்தனையும்
செய்தெனது வாழ்நாளை கந்தா சீரழித்தேன் இன்றுவரை
 
64. ஐயாவே என்குறைகள் கந்தா ஆனதெல்லாம் உன்றனுக்கு
மெய்யாகவே யுரைத்தேன் கந்தா விரைந்துவந்து காருமையா
 
65. எந்தப் பிறவியிலும் கந்தா என்மந்திலுன் நினைவு
தந்தெனக்கு நன்வாழ்வு கந்தா தந்தருள வேண்டுமையா
 
66. கந்தா கதிர்வேலா கந்தா கானமயில் வாகனனே
சிந்தா குமதீர்ப்பாம் கந்தா தென்கதிரை ஆண்டவனே
 
67. கோட்டனை சிங்கம் கந்தா கொடியபுலி வந்தாலும்
காட்டாமலென்னருகே கந்தா காத்துவரும் வேலோனே
68. துட்டரை சங்கரித்து கந்தா நாயேனைக் காத்திடுவாய்
புல்லனென்று தள்ளாதே கந்தா புவனமெல்லாம் காப்பவனே
 
70. சஞ்சலங்கள் தீர்க்கும் கந்தா தயாநிதியே உன்னடியார்
துஞ்சலின்றி வாழ்வதற்கு துணைபுரிந்து காருமையா
 
71. தனிகாசலத்துறை கந்தா சண்முகனே என்றெனக்கு
பிணியேதும் வாராமல் கந்தா பேணியெனைக் காருமையா
 
72. சண்முகனே நின்பதத்தை கந்தா தஞ்சமென வந்தடைந்தே
என்முகத்தை நீபார்த்து கந்தா ஏழையெனைக் காருமையா
 
73. கலிகாலந் தன்னிலுன்னை கந்தா கண்கண்ட தெய்வமென்று
நலியாது நான்வாழ கந்தா நாடினேன் வாருமையா
 
74. பக்திசிறி தேனுமில்லா கந்தா பாவிநானென்றாலும்
சித்தி தந்து எந்தனைக்கார் கந்தா தென்கதிரை ஆண்டவனே
 
75. மலைகளெங்கும் கோயில் கொண்ட கந்தா வண்ணமயில் வாகனனே
நிலைகுலைந்த என்வாழ்வை கந்தா நேர்படுத்திக் காருமையா
76. சோலைமலை வேலவனே கந்தா சுரர்லோகம் காத்தவனே
வேலைவிடுத் தெங்களது கந்தா வினைகளெல்லாம் தீருமையா
 
77. அருளாளன் எங்களையன் கந்தா ஆலால முண்டசிவன்
குருவாக வந்தவனே கந்தா எங்கள் கொடியவினை தீர்த்திடுவாய்
 
78. சத்துருக்கள் யாவரையும் கந்தா தவிடுபொடி யாக்கிடுவாய்
கந்தனே தென்னிலங்கை கந்தா கதிர்காம வேலோனே
 
79. வந்தவினை தீர்க்கும் கந்தா வடிவேலா வள்ளிமகிழ்
கந்தனே வந்தெனக்கு கந்தா காட்சிதர வேண்டுமையா
 
80. வண்ண மயிலேறி கந்தா வாடுமெங்கள் துன்பமற
கண்ணன் மருகோனே கந்தா கடுகிவந்து காருமையா
 
81. என்றும் மகிழ்ந்திருக்க கந்தா ஏழையெனக் குன்னருளை
நன்றாக தந்து கந்தா நாளுமெனைக் காருமையா
 
82. பண்டிருந்து இன்றுவரை கந்தா பக்தியொடு தோத்தரித்து
தொண்டுசெயு முன்னடியார் கந்தா துயரமெல்லாம் தீர்த்திடுவாய்
83. தொண்டர் துயர் தீர்த்து கந்தா தொல்லையில்லாதேயிருக்கத்
தெண்டனிட்டோம் எங்களைக்கார் கந்தா செகம்புகழும் வேலோனே
 
84. பாராட்டும் தாய்போல கந்தா பரிந்தே யடியவரைச்
சீராட்டிக் காக்கும் கந்தா தென்கதிரை யாண்டவனே
 
85. எந்தநிலை வந்தாலும் கந்தா என்மனது மாறாமல்
வந்தனை செய் துன்னிருதாள் கந்தா வணங்க அருள் தாருமையா
 
86. ஆண்டவனே உன்னை நம்பும் கந்தா அடியவர்க்கு இன்னை செய்யும்
குண்டர்களை வேரறுத்து கந்தா கொடுமைகளை நீக்கிடுவாய்
 
87. கந்தனே யுன்பதியில் கந்தா கயவர்நட மாடாமல்
சந்ததமும் நீயிருந்து கந்தா தற்காக்க வேண்டுமையா
 
88. உன்பதியைத் தான்மறந்து கந்தா உனைத்துதியா மூடரெல்லாம்
உன்செயல்கள் செய்திருக்க கந்தா நீர்வாழா திருப்பதென்ன
 
89. உன்னைத் துதிப்பவரைக் கந்தா உதாசீனம் செய்பவர்க்கு
பின்னைப் பிறவியிலும் கந்தா நற்பேறுபெற்ம் வாய்ப்புண்டோ
90. மெய்யன்பர் வந்துனது கந்தா மென்பததை யேதுதிக்க
பொய்யன்பர் கூட்டம் கந்தா பொதுவில் நடமாடுதையா
 
91. ஆட்டங்கள் ஆடி கந்தா அன்பிலார் செய்யுமிந்த
சேட்டை நடனமெல்லாம் கந்தா சுரர் செய்கைபோல தோணுதையா
 
92. அசுரரைப் போல் உன்னிடத்தில் கந்தா அன்பு சிறிதேனுமில்லா
பக்தர்களை வேரறுத்த கந்தா பக்தர்களை காருமையா
 
93. மாமலர்கள் கானமெல்லாம் கந்தா மலர்ந்திருக்க காகிதத்தால்
பூமலர்கள் செய்து கந்தா பூசனைக்காய் விற்குதையா
 
94. அன்பிலார் செய்யுமிந்த கந்தா அபசாரம் கண்டடியார்
தன்நெஞ்சு நெக்குநெக்காய் கந்தா தணலா யுருகுதையா
 
95. உள்ளன் பிலாதவர்கள் கந்தா உலகத்தை யேமாற்றும்
கள்ளன்புக் காரர்களைக் கந்தா கதிர்வேல விடுத்தழிப்பாய்
 
96. கொஞ்சு தமிழ்தந்த கந்தா குமரனே தெய்வானை
வஞ்சிவள்ளி மாதிருவர் கந்தா மருவுமணி மார்பழகா
97. எந்நாளும் உன்கையில் கந்தா இலங்கும்படொ வேலிருக்க
வந்நெஞ்சர் செய்கையெல்லாம் கந்தா வலியிழந்து போகாதோ
 
98. வேலா கதிரைமலைக் கந்தா வேந்தனே தாய்கௌரி
பாலா எமைக்காக்கும் கந்தா பன்னிருகை வேலோனே
 
99. என்றென்றும் உன்னருளைக் கந்தா ஏழைகளின் மேல்பரப்பி
நன்றாக உன்புகழைக் கந்தா நானிலத்தில் நாட்டுமையா
 
100. தேன்மணக்கும் தென்கதிரை கந்தா சேவல்கொடியோனே
மான்மகளின் நாயகனே கந்தா மயிலேறி வந்தெனைக் காருமையா
 
101. தொலையாப் பெருந்துன்பம் கந்தா சூழ்ந்திட்ட வாழ்வினிலே
நிலையான இன்பமதை கந்தா நீயெனக்கு தாருமையா
 
102. காணக்கிடைக்காத கந்தா கட்டழகா செந்தமிழ்ப்பா
வாணர்க் களித்தவனே கந்தா வந்தெனக்கு வாழ்வருள்வாய்
 
103. வாயிலே வந்ததெல்லாம் கந்தா வந்தனையென்றேயுனது
சேயனேன் செய்ததமில் கந்தா செய்யுள் பிழை பொறுப்பாய்
104. செய்யுள் பிழைபொறுத்துக் கந்தா செகத்திலுள்ளோர் கொண்டாட
வையமிசை யுன்புகழை கந்தா வாழ்த்தவகை செய்யுமையா
 
105. அடைக்கலம் நீயென்றே கந்தா அண்டினே நுன்னிருதாள்
கடைக்கண் அருள்தந்து கந்தா காத்தருள வேண்டுமையா
 
106. அணிசேர் கதிரைநகர் கந்தா ஆண்டவனே ஆண்டவனே யுன்னருளால்
பிணிசேர் பிறப்பால் கந்தா பெருவாழ்வு தாருமையா
 
107. சேந்தனே தென்கதிரை கந்தா செங்கோட்டு வெற்புறையும்
வேந்தனே வந்தெமக்கு கந்தா விரைவிலருள் தாருமையா
 
108. வள்ளிதெய்வ யானையுடன் கந்தா மயில்சேவல் வேலுடன்
துள்ளிவந்து காட்சிதரக் கந்த தோத்தரித்தேன் வாருமையா
 
அரோ ஹரா! அரோஹரா!! அரோஹரா!!!


--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com



 

Geetha Sambasivam

unread,
Jul 8, 2011, 7:37:42 AM7/8/11
to mint...@googlegroups.com
இதை மரபு விக்கியிலே சேர்க்கிறேன் எல்கே/ நாளைக்கு/

2011/7/4 LK <karthik.lv@gmail.com>


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

LK

unread,
Jul 8, 2011, 8:46:03 AM7/8/11
to mint...@googlegroups.com
ok

2011/7/8 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jul 15, 2011, 5:32:20 AM7/15/11
to mint...@googlegroups.com
done

LK

unread,
Jul 15, 2011, 6:09:48 AM7/15/11
to mint...@googlegroups.com
link kodunga

2011/7/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jul 15, 2011, 7:46:17 AM7/15/11
to mint...@googlegroups.com
மின் தமிழ் நண்பர்களுக்கு,

சி.ஆ. கதிரைத் தம்பி அவர்களுடைய கதிர்காமக் கந்தன் துதி மாலை மரபு விக்கியில் இணைக்கப் பட்டுள்ளது.  பகிர்ந்து கொண்டவர் செல்வி தேனுஷா ஈஸ்வரம்.  மின்  தமிழில் பகிர்ந்து கொண்டவர் எல்கே.

http://tinyurl.com/67kkumw
    [Open in new window]  கதிர்காமக் கந்தன் துதி.
Reply all
Reply to author
Forward
0 new messages