வழிபாட்டினை முடித்துக் கொண்டு திரும்பி வரும்போது, தன்னை ஒப்படைப்பதாக உறுதி கூறினார் நம்பாடுவான். பிரம்மராட்சஸனும் அவரை விடுவித்தான். விரதம் முடிந்து, வாக்கு தவறாமல், பிரம்மராட்ஸனை வந்தடைந்தார் நம்பாடுவான். ராட்சஸனின் மனம் இளகியது.
கைசிகி நடனம் என்று ஒரு இசைநாட்டிய வகை திருக்குறுங்குடி பெருமாள் சன்னதியில் ஒரு சடங்காக நிகழ்த்தப்படுகிறது.
என்னுடைய நாடக குருநாதர் முனைவர் சே.ராமானுஜம் அவர்கள் கைசிகி நடனம் பற்றிய ஆய்வு செய்து வருகிறார். இந்த நடனவகை தேவதாசிகள் ஆலயங்களில் நிகழ்த்திக் கொண்டு இருந்தார்கள்.
சில வயதில் மூத்த தேவதாசிகளை ராமானுஜம் சார் சந்தித்து ஆவணப்படுத்தி இருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பே இந்த முயற்சியை அவர் தொடங்கினார்.
அந்த நடனவகையில் பாடப்பெறும் பாடல்கள் மிகவும் அற்புதமானவை. மிகவும் வயதான மூதாட்டியார் அதில் ராட்சசன் வேடத்தில் பாடிக்கொ்ண்டே நடனமாடியது மனதைத் தொட்டது.
பென்னேஸ்வரன்
http://namperumal.files.wordpress.com/2008/11/kaisiga-mahatmyam.pdf
தேவ்
ஷைலஜா,அரங்கனை நினைத்தாலும் போதும். அடியார்கள் கூடுவர்; நம் பெருமாள், ஷைலஜா நினைத்த மாத்திரத்திலே, நம்மை கூட்டுவித்தார்.>>>>
பெரியாழ்வார்?.
ஷைலஜா!இந்த நம்பாடுவான் ஆந்திராவில் ரொம்பவே ஃபேமஸ். கைங்கரியம் ஸ்ரீகிருஷ்ணதேவராயர். ஆமுக்த மால்யதாவில் ஒரு பகுதியையே இந்த திருக்குறுங்குடிநம்பிக்காக ஒதுக்கி மிகப் பெரிய ஹீரோவாக காட்டியிருப்பார். இங்கே இவருக்கு மாலதாசன் அல்லது மாலதாசுடு என்று பெயர். >>
ஆண்டவன் முன்பு எந்தக் குலமும் ஒரே குலம்தான் என்பதை அன்று ஆண்ட அரசன் சொன்னது. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி!>>>>>>
கைசிகி நடனம் என்று ஒரு இசைநாட்டிய வகை திருக்குறுங்குடி பெருமாள் சன்னதியில் ஒரு சடங்காக நிகழ்த்தப்படுகிறது.
என்னுடைய நாடக குருநாதர் முனைவர் சே.ராமானுஜம் அவர்கள் கைசிகி நடனம் பற்றிய ஆய்வு செய்து வருகிறார். இந்த நடனவகை தேவதாசிகள் ஆலயங்களில் நிகழ்த்திக் கொண்டு இருந்தார்கள்.
சில வயதில் மூத்த தேவதாசிகளை ராமானுஜம் சார் சந்தித்து ஆவணப்படுத்தி இருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பே இந்த முயற்சியை அவர் தொடங்கினார்.
அந்த நடனவகையில் பாடப்பெறும் பாடல்கள் மிகவும் அற்புதமானவை. மிகவும் வயதான மூதாட்டியார் அதில் ராட்சசன் வேடத்தில் பாடிக்கொ்ண்டே நடனமாடியது மனதைத் தொட்டது.
பென்னேஸ்வரன்<>>>>
நாகரிகர் பெரிதும் இளையர்
செம்பவளம் இவர் வாயின் வண்ணம்
தேவரிவரது உருவம் சொல்லில்
அம்பவளத்திரளேயும் ஒப்பர்
அச்சோ ஒருவரழகியவா!///
பெரியாழ்வார்?.
// நல்ல நடுநிசி. ஊரெல்லாம் உறங்கிய பின்பு மொட்டை மாடிக்குப் போங்கள். கண்ணைத் திறந்துகொண்டு ஒரு பத்து நிமிஷம் தியானத்தில் அமைதியாக இருங்கள். வானும், புவியும் பேசிக்கொள்ளும் ரகசியங்கள் காதில் விழும். திசைகள் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்கும். நாம் உற்றுப் பார்த்தால் முறைக்கும். நக்ஷத்திரங்கள் ‘எங்க காதுல விழுந்துடுத்தே!’ என்று கண் சிமிட்டும். காற்றுக்குக் கொஞ்சம் வாயடக்கம் பத்தாது. உடனே தொப தொப என்று ஊரெல்லாம் சொல்லிவிட்டு வருகிறேன் என்று கிளம்பிவிடும். //
On 11/22/09, shylaja <shyl...@gmail.com> wrote:
2009/11/22 Innamburan Innamburan <innam...@googlemail.com>
ஷைலஜா,
அரங்கனை நினைத்தாலும் போதும். அடியார்கள் கூடுவர்; நம் பெருமாள், ஷைலஜா நினைத்த மாத்திரத்திலே, நம்மை கூட்டுவித்தார்.>>>>கூடி இருந்து குளிர்ந்து பேசவே இதை இட்டேன் இங்க! இன்னும் இந்த நம்பாடுவான் பற்றி அரங்கனார் வந்து ஏதும் சொல்வாரென்றுபார்த்தால் மௌனம் சாதிக்கிறாரே இன்னம்பூரான் ஸார்!
அன்புடன்இன்னம்பூரான்
வந்துவிட்டேன் அம்மணி வந்துவிட்டேன். முக்கியமான இழை விடுவேனா? >>>>
ஏதோ தெரிந்ததை எழுதுகிறேன். ரொம்ப எழுதினால் மிந்தமிழே ஸ்ரீவைஷ்ணவ சபை என்று முத்திரை குத்திவிட்டு ஒதுங்கி விடுவார்களோ என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் விவேகம் மிக்க ரசிகர்கள் நிறையவே இருப்பதால் துணிந்து எழுதலாம். >>>>
கைசிக ஏகாதசியில் கைசிக புராணம் பட்டர் வியாக்யானத்துடன் வாசித்தல் கோவிலில் வழக்கம். கைசிக ஏகாதசியில் கைசிக புராணம் என்ன தாத்பர்யம்?கைசிக புராணம் என்பது வராஹ புராணத்தில் வருவது. ஸ்ரீவராஹ மூர்த்தியே பூமிபிராட்டிக்கு நம்பாடுவான் என்ற பாடகன் ஒருவனின் மகிமையைப் பற்றிச் சொன்னதாக வரும். ஒரு பெரும் கருத்தைச் சொல்லவந்த நாடகம் என்று யோசித்துப் பாருங்கள்.பூமியை அமிழ்ந்து போன கடலில் இருந்து முங்கி எடுத்துத் தன் கோட்டிடைக் கொண்ட கோல வராகமாய் ஸ்ரீமந்நாராயணன்.தன் மக்கள் அமிழ்ந்து கெடுகிறார்களே என்று கண்ணீரும் கம்பலையுமாய் பகவானை வேண்டிய நமது அன்னையான பூமி. The Earth !!காப்பாற்றுகிற பணி முடிந்ததும் பரம்பொருளும், உலகமும் ஒன்றோடொன்று சம்பாஷித்துக் கொண்டிருக்கின்றன என்பது என்ன கற்பனை!! உலகம் தன்னில் வாழ் உயிர்களுக்காகக் கண்ணீர் சிந்துகிறது, பிரார்த்திக்கிறது, தன் மடியில் தவழும் மழலைச் செல்வங்கள் உய்ய வேண்டி மாதவன்பால் மன்றாடுகிறது. The Big Earth on which we live cares for us !!! Pleads for the sake of the living beings to the Ultimate. அனைத்திற்கும் உயர்ந்த பரம்பொருள், The God Almighty is chitchatting with Mother Earth!! என்ன இல்லை என்கிறீர்களா? >>>
நல்ல நடுநிசி. ஊரெல்லாம் உறங்கிய பின்பு மொட்டை மாடிக்குப் போங்கள். கண்ணைத் திறந்துகொண்டு ஒரு பத்து நிமிஷம் தியானத்தில் அமைதியாக இருங்கள். வானும், புவியும் பேசிக்கொள்ளும் ரகசியங்கள் காதில் விழும். >>>>>>
திசைகள் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்கும். நாம் உற்றுப் பார்த்தால் முறைக்கும்.>>
நக்ஷத்திரங்கள் ‘எங்க காதுல விழுந்துடுத்தே!’ என்று கண் சிமிட்டும். காற்றுக்குக் கொஞ்சம் வாயடக்கம் பத்தாது. உடனே தொப தொப என்று ஊரெல்லாம் சொல்லிவிட்டு வருகிறேன் என்று கிளம்பிவிடும். >>>
வேதம் இந்த ஆதிதம்பதியை த்யாவாப்ருத்வி என்கிறது. இந்த த்யாவாப்ருத்விதான் காற்றுவாக்கில் காலவாக்கில் த்யொஸ்பிதர் என்றும் Zeus - Pitar என்றும் மாறிப் போன கதை. இந்தக் காலக் கிழவனும் காலக்கிழவியும் பேசியதைத்தான் ‘அரங்கனின் துயரம்’ என்ற கவிதையில் குறிப்பிட்டேன். >>>
அது இருக்கட்டும்.அந்த மகா அரட்டையின் போது சொல்கிறான் ஸ்ரீபூவராகன், ‘அம்மணி! பெரிய யாகம் செய்ய வேண்டாம். தவம் செய்ய வேண்டாம். ஜப ஹோம யோகங்கள் செய்ய வேண்டாம். மனம் உருகி ஒருவன் ஆதி தம்பதிகளாகிய நம்மைக் குறித்துப் பாடுவானேயானால் அவன் அடையும் மேன்மையைச் சட்டென்று உடனேயே சொல்லிவிட முடியாது. சொன்னால் கேட்பவருக்கு மயக்கம் வந்துவிடும். படிப்படியாக, ஒன்றன் மேல் ஒன்றாய் உயர்த்திக் கொண்டே போய்தான் புரிய வைக்க முடியும். உபநிஷதங்கள் ஆநந்தப் பெருக்கத்தைச் சொல்லும் முறையிலே. அந்தப் புண்ணியவானை, வாய்விட்டு மனம் பொருந்தி நம்மைப் பாடும் அந்த பாக்கியசாலியை என்னவென்று சொல்ல? அவன் பாடும் ஒவ்வொரு கார்வையும் ஒவ்வொரு உலகம் பெறும். அவன் நமக்கு அந்தரங்கனாய் ஆவான் காணும்’உலகத்திற்கோ ஆச்சர்யம்! வெறுமனே கண்ணீரும் கம்பலையுமாய் மனம் கசிந்து ஒருவன் பரம்பொருளைத் துதித்தால் இந்தப் பேறா? எத்தனையோ முனிவரர், யோகிகள், தவசிகள், தேவர்கள் இன்னும் இன்னும் பல்லூழிப் பெருந்தவமாய் முயலாநிற்க, பகவானை நோக்கி உள்ளம் உருகிப் பாடும் பாட்டிற்கு இந்த மகிமையா? ஐயோ! வழி இவ்வளவு சுலபமாய் இருக்கும் போது என் குழந்தைகள் கொஞ்சம் மனம் இரங்கக் கூடாதா? நான் இவர்களின் தாய் இந்த உலகம் கொஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். குழந்தைகளே இவ்வளவு எளிதாய் இருக்கிறதே உய்யும் வழி! நாளும் நாளும் நீங்கள் படும் அவஸ்தை என்னால் பொறுக்க ஒண்ணாததாய் இருக்கிறதே. யாரேனும் இவ்வாறு என் குழந்தைகளில் இந்த வழியில் பெரும் பேறு பெற்றவர்கள் உண்டோ? என்று அறிந்துகொள்ள கோலவராக மூர்த்தியிடமே கேட்கிறாள் குவலய மாதா.(எப்படி? ஏதாவது ரசிக்கிறதா? தொடரலாமா? இல்லை அந்தரத்தில் பந்தல் போடுகிறதா?) <<>>..
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
பண்டும் இப்பிள்ளை பரிசறிவன்
இன்னமுகப்பன் நானென்று சொல்லி
எல்லாம் விழுங்கிட்டுப்போந்து நின்றான்
உன் மகன் தன்னை அசோதை நங்காய்!
கூவிக்கொள்ளாய் இவையும் சிலவே!//
On 11/22/09, shylaja <shyl...@gmail.com> wrote:
2009/11/22 Innamburan Innamburan <innam...@googlemail.com>
ஷைலஜா,
அரங்கனை நினைத்தாலும் போதும். அடியார்கள் கூடுவர்; நம் பெருமாள், ஷைலஜா நினைத்த மாத்திரத்திலே, நம்மை கூட்டுவித்தார்.>>>>கூடி இருந்து குளிர்ந்து பேசவே இதை இட்டேன் இங்க! இன்னும் இந்த நம்பாடுவான் பற்றி அரங்கனார் வந்து ஏதும் சொல்வாரென்றுபார்த்தால் மௌனம் சாதிக்கிறாரே இன்னம்பூரான் ஸார்!
அன்புடன்இன்னம்பூரான்
வந்துவிட்டேன் அம்மணி வந்துவிட்டேன். முக்கியமான இழை விடுவேனா?
ஏதோ தெரிந்ததை எழுதுகிறேன். ரொம்ப எழுதினால் மிந்தமிழே ஸ்ரீவைஷ்ணவ சபை என்று முத்திரை குத்திவிட்டு ஒதுங்கி விடுவார்களோ என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் விவேகம் மிக்க ரசிகர்கள் நிறையவே இருப்பதால் துணிந்து எழுதலாம்.
கைசிக ஏகாதசியில் கைசிக புராணம் பட்டர் வியாக்யானத்துடன் வாசித்தல் கோவிலில் வழக்கம். கைசிக ஏகாதசியில் கைசிக புராணம் என்ன தாத்பர்யம்?கைசிக புராணம் என்பது வராஹ புராணத்தில் வருவது. ஸ்ரீவராஹ மூர்த்தியே பூமிபிராட்டிக்கு நம்பாடுவான் என்ற பாடகன் ஒருவனின் மகிமையைப் பற்றிச் சொன்னதாக வரும். ஒரு பெரும் கருத்தைச் சொல்லவந்த நாடகம் என்று யோசித்துப் பாருங்கள்.பூமியை அமிழ்ந்து போன கடலில் இருந்து முங்கி எடுத்துத் தன் கோட்டிடைக் கொண்ட கோல வராகமாய் ஸ்ரீமந்நாராயணன்.தன் மக்கள் அமிழ்ந்து கெடுகிறார்களே என்று கண்ணீரும் கம்பலையுமாய் பகவானை வேண்டிய நமது அன்னையான பூமி. The Earth !!
காப்பாற்றுகிற பணி முடிந்ததும் பரம்பொருளும், உலகமும் ஒன்றோடொன்று சம்பாஷித்துக் கொண்டிருக்கின்றன என்பது என்ன கற்பனை!! உலகம் தன்னில் வாழ் உயிர்களுக்காகக் கண்ணீர் சிந்துகிறது, பிரார்த்திக்கிறது, தன் மடியில் தவழும் மழலைச் செல்வங்கள் உய்ய வேண்டி மாதவன்பால் மன்றாடுகிறது. The Big Earth on which we live cares for us !!! Pleads for the sake of the living beings to the Ultimate. அனைத்திற்கும் உயர்ந்த பரம்பொருள், The God Almighty is chitchatting with Mother Earth!! என்ன இல்லை என்கிறீர்களா? நல்ல நடுநிசி. ஊரெல்லாம் உறங்கிய பின்பு மொட்டை மாடிக்குப் போங்கள். கண்ணைத் திறந்துகொண்டு ஒரு பத்து நிமிஷம் தியானத்தில் அமைதியாக இருங்கள். வானும், புவியும் பேசிக்கொள்ளும் ரகசியங்கள் காதில் விழும். திசைகள் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்கும். நாம் உற்றுப் பார்த்தால் முறைக்கும். நக்ஷத்திரங்கள் ‘எங்க காதுல விழுந்துடுத்தே!’ என்று கண் சிமிட்டும். காற்றுக்குக் கொஞ்சம் வாயடக்கம் பத்தாது. உடனே தொப தொப என்று ஊரெல்லாம் சொல்லிவிட்டு வருகிறேன் என்று கிளம்பிவிடும். வேதம் இந்த ஆதிதம்பதியை த்யாவாப்ருத்வி என்கிறது. இந்த த்யாவாப்ருத்விதான் காற்றுவாக்கில் காலவாக்கில் த்யொஸ்பிதர் என்றும் Zeus - Pitar என்றும் மாறிப் போன கதை. இந்தக் காலக் கிழவனும் காலக்கிழவியும் பேசியதைத்தான் ‘அரங்கனின் துயரம்’ என்ற கவிதையில் குறிப்பிட்டேன். அது இருக்கட்டும்.
அந்த மகா அரட்டையின் போது சொல்கிறான் ஸ்ரீபூவராகன், ‘அம்மணி! பெரிய யாகம் செய்ய வேண்டாம். தவம் செய்ய வேண்டாம். ஜப ஹோம யோகங்கள் செய்ய வேண்டாம். மனம் உருகி ஒருவன் ஆதி தம்பதிகளாகிய நம்மைக் குறித்துப் பாடுவானேயானால் அவன் அடையும் மேன்மையைச் சட்டென்று உடனேயே சொல்லிவிட முடியாது. சொன்னால் கேட்பவருக்கு மயக்கம் வந்துவிடும். படிப்படியாக, ஒன்றன் மேல் ஒன்றாய் உயர்த்திக் கொண்டே போய்தான் புரிய வைக்க முடியும். உபநிஷதங்கள் ஆநந்தப் பெருக்கத்தைச் சொல்லும் முறையிலே. அந்தப் புண்ணியவானை, வாய்விட்டு மனம் பொருந்தி நம்மைப் பாடும் அந்த பாக்கியசாலியை என்னவென்று சொல்ல? அவன் பாடும் ஒவ்வொரு கார்வையும் ஒவ்வொரு உலகம் பெறும். அவன் நமக்கு அந்தரங்கனாய் ஆவான் காணும்’உலகத்திற்கோ ஆச்சர்யம்! வெறுமனே கண்ணீரும் கம்பலையுமாய் மனம் கசிந்து ஒருவன் பரம்பொருளைத் துதித்தால் இந்தப் பேறா? எத்தனையோ முனிவரர், யோகிகள், தவசிகள், தேவர்கள் இன்னும் இன்னும் பல்லூழிப் பெருந்தவமாய் முயலாநிற்க, பகவானை நோக்கி உள்ளம் உருகிப் பாடும் பாட்டிற்கு இந்த மகிமையா? ஐயோ! வழி இவ்வளவு சுலபமாய் இருக்கும் போது என் குழந்தைகள் கொஞ்சம் மனம் இரங்கக் கூடாதா? நான் இவர்களின் தாய் இந்த உலகம் கொஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். குழந்தைகளே இவ்வளவு எளிதாய் இருக்கிறதே உய்யும் வழி! நாளும் நாளும் நீங்கள் படும் அவஸ்தை என்னால் பொறுக்க ஒண்ணாததாய் இருக்கிறதே. யாரேனும் இவ்வாறு என் குழந்தைகளில் இந்த வழியில் பெரும் பேறு பெற்றவர்கள் உண்டோ? என்று அறிந்துகொள்ள கோலவராக மூர்த்தியிடமே கேட்கிறாள் குவலய மாதா.(எப்படி? ஏதாவது ரசிக்கிறதா? தொடரலாமா? இல்லை அந்தரத்தில் பந்தல் போடுகிறதா?)
On 11/22/09, shylaja <shyl...@gmail.com> wrote:
2009/11/22 Innamburan Innamburan <innam...@googlemail.com>
ஷைலஜா,
அரங்கனை நினைத்தாலும் போதும். அடியார்கள் கூடுவர்; நம் பெருமாள், ஷைலஜா நினைத்த மாத்திரத்திலே, நம்மை கூட்டுவித்தார்.>>>>கூடி இருந்து குளிர்ந்து பேசவே இதை இட்டேன் இங்க! இன்னும் இந்த நம்பாடுவான் பற்றி அரங்கனார் வந்து ஏதும் சொல்வாரென்றுபார்த்தால் மௌனம் சாதிக்கிறாரே இன்னம்பூரான் ஸார்!
அன்புடன்இன்னம்பூரான்
வந்துவிட்டேன் அம்மணி வந்துவிட்டேன். முக்கியமான இழை விடுவேனா?ஏதோ தெரிந்ததை எழுதுகிறேன். ரொம்ப எழுதினால் மிந்தமிழே ஸ்ரீவைஷ்ணவ சபை என்று முத்திரை குத்திவிட்டு ஒதுங்கி விடுவார்களோ என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் விவேகம் மிக்க ரசிகர்கள் நிறையவே இருப்பதால் துணிந்து எழுதலாம்.கைசிக ஏகாதசியில் கைசிக புராணம் பட்டர் வியாக்யானத்துடன் வாசித்தல் கோவிலில் வழக்கம். கைசிக ஏகாதசியில் கைசிக புராணம் என்ன தாத்பர்யம்?கைசிக புராணம் என்பது வராஹ புராணத்தில் வருவது. ஸ்ரீவராஹ மூர்த்தியே பூமிபிராட்டிக்கு நம்பாடுவான் என்ற பாடகன் ஒருவனின் மகிமையைப் பற்றிச் சொன்னதாக வரும். ஒரு பெரும் கருத்தைச் சொல்லவந்த நாடகம் என்று யோசித்துப் பாருங்கள்.பூமியை அமிழ்ந்து போன கடலில் இருந்து முங்கி எடுத்துத் தன் கோட்டிடைக் கொண்ட கோல வராகமாய் ஸ்ரீமந்நாராயணன்.தன் மக்கள் அமிழ்ந்து கெடுகிறார்களே என்று கண்ணீரும் கம்பலையுமாய் பகவானை வேண்டிய நமது அன்னையான பூமி. The Earth !!காப்பாற்றுகிற பணி முடிந்ததும் பரம்பொருளும், உலகமும் ஒன்றோடொன்று சம்பாஷித்துக் கொண்டிருக்கின்றன என்பது என்ன கற்பனை!! உலகம் தன்னில் வாழ் உயிர்களுக்காகக் கண்ணீர் சிந்துகிறது, பிரார்த்திக்கிறது, தன் மடியில் தவழும் மழலைச் செல்வங்கள் உய்ய வேண்டி மாதவன்பால் மன்றாடுகிறது. The Big Earth on which we live cares for us !!! Pleads for the sake of the living beings to the Ultimate. அனைத்திற்கும் உயர்ந்த பரம்பொருள், The God Almighty is chitchatting with Mother Earth!! என்ன இல்லை என்கிறீர்களா? நல்ல நடுநிசி. ஊரெல்லாம் உறங்கிய பின்பு மொட்டை மாடிக்குப் போங்கள். கண்ணைத் திறந்துகொண்டு ஒரு பத்து நிமிஷம் தியானத்தில் அமைதியாக இருங்கள். வானும், புவியும் பேசிக்கொள்ளும் ரகசியங்கள் காதில் விழும். திசைகள் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்கும். நாம் உற்றுப் பார்த்தால் முறைக்கும். நக்ஷத்திரங்கள் ‘எங்க காதுல விழுந்துடுத்தே!’ என்று கண் சிமிட்டும். காற்றுக்குக் கொஞ்சம் வாயடக்கம் பத்தாது. உடனே தொப தொப என்று ஊரெல்லாம் சொல்லிவிட்டு வருகிறேன் என்று கிளம்பிவிடும். வேதம் இந்த ஆதிதம்பதியை த்யாவாப்ருத்வி என்கிறது. இந்த த்யாவாப்ருத்விதான் காற்றுவாக்கில் காலவாக்கில் த்யொஸ்பிதர் என்றும் Zeus - Pitar என்றும் மாறிப் போன கதை. இந்தக் காலக் கிழவனும் காலக்கிழவியும் பேசியதைத்தான் ‘அரங்கனின் துயரம்’ என்ற கவிதையில் குறிப்பிட்டேன். அது இருக்கட்டும்.அந்த மகா அரட்டையின் போது சொல்கிறான் ஸ்ரீபூவராகன், ‘அம்மணி! பெரிய யாகம் செய்ய வேண்டாம். தவம் செய்ய வேண்டாம். ஜப ஹோம யோகங்கள் செய்ய வேண்டாம். மனம் உருகி ஒருவன் ஆதி தம்பதிகளாகிய நம்மைக் குறித்துப் பாடுவானேயானால் அவன் அடையும் மேன்மையைச் சட்டென்று உடனேயே சொல்லிவிட முடியாது. சொன்னால் கேட்பவருக்கு மயக்கம் வந்துவிடும். படிப்படியாக, ஒன்றன் மேல் ஒன்றாய் உயர்த்திக் கொண்டே போய்தான் புரிய வைக்க முடியும். உபநிஷதங்கள் ஆநந்தப் பெருக்கத்தைச் சொல்லும் முறையிலே. அந்தப் புண்ணியவானை, வாய்விட்டு மனம் பொருந்தி நம்மைப் பாடும் அந்த பாக்கியசாலியை என்னவென்று சொல்ல? அவன் பாடும் ஒவ்வொரு கார்வையும் ஒவ்வொரு உலகம் பெறும். அவன் நமக்கு அந்தரங்கனாய் ஆவான் காணும்’உலகத்திற்கோ ஆச்சர்யம்! வெறுமனே கண்ணீரும் கம்பலையுமாய் மனம் கசிந்து ஒருவன் பரம்பொருளைத் துதித்தால் இந்தப் பேறா? எத்தனையோ முனிவரர், யோகிகள், தவசிகள், தேவர்கள் இன்னும் இன்னும் பல்லூழிப் பெருந்தவமாய் முயலாநிற்க, பகவானை நோக்கி உள்ளம் உருகிப் பாடும் பாட்டிற்கு இந்த மகிமையா? ஐயோ! வழி இவ்வளவு சுலபமாய் இருக்கும் போது என் குழந்தைகள் கொஞ்சம் மனம் இரங்கக் கூடாதா? நான் இவர்களின் தாய் இந்த உலகம் கொஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். குழந்தைகளே இவ்வளவு எளிதாய் இருக்கிறதே உய்யும் வழி! நாளும் நாளும் நீங்கள் படும் அவஸ்தை என்னால் பொறுக்க ஒண்ணாததாய் இருக்கிறதே. யாரேனும் இவ்வாறு என் குழந்தைகளில் இந்த வழியில் பெரும் பேறு பெற்றவர்கள் உண்டோ? என்று அறிந்துகொள்ள கோலவராக மூர்த்தியிடமே கேட்கிறாள் குவலய மாதா.(எப்படி? ஏதாவது ரசிக்கிறதா? தொடரலாமா? இல்லை அந்தரத்தில் பந்தல் போடுகிறதா?)ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
’தேவரே! இப்படிப் பாடி உய்வு பெற்றவன் ஒருவன் உண்டு என்றால் அவன் மகாமேதாவியாய் இருப்பான். சங்கீத வித்வத் சிரோமணியாய் இருப்பான். பல வித்யைகள் தெரிந்திருக்கும். நாகரிகனாய், நல்லாடைகள், நல்ல உணவுகள் முதலியன காலம் இடம் பார்த்து தேர்ந்து உண்டு உடுத்தி நிபுணர்கள் மத்தியில் வலம் வரும் ஸ்ரீமானாய் இருப்பான் என்றால் என் அந்தரங்கக் குழந்தைகளான கோடானுகோடி பொதுஜனங்களுக்கு என்ன ஆயிற்று ஸ்வாமி? வெள்ளிக் கிண்ணத்தில் தங்கக் கிரண்டியில் உணவு உண்ணும் ஸ்ரீமான்களும் என் குழந்தைகளே! ஆயினும் என்றென்றும் என் கையை எதிர்பார்த்தபடியே, என்னை மன்றாடியபடியே தம் வியர்வையால் என்னை முழுக்காட்டியபடியே வாழ்க்கையோடு போராடும் கணக்கற்ற என் குழந்தைகளுக்கு என்ன உய்வு ஸ்வாமி? நீர் கூறுவதுபோல் பெற்றவன் என் குழந்தைகளில் பெரும் ஸ்ரீமானாய்த்தான் இருக்க வேண்டும். இல்லையேல் தேவரீர் எவ்வளவு உயர்வற உயர்நலம் மிக்கவர்! அவன் பெறாது போனால்தானே ஆச்சரியப்படவேண்டும். கூலிவேலை செய்வோர், தச்சர், தினக்கூலிக்காக மண்வெட்டி மராமத்து வேலை செய்வோர், ஒரு வேளை உணவிற்காக ஒரு நாள் முழுதும் உடல் முறிய உழைப்போர் இவர்கள் எல்லாம் உய்வு பெற என்ன வழி?பூமியின் மனத்திலோடும் பொருமல்களைக் கண்டு புன்னகைத்தான் பெருமான். ‘அம்மணி! என்ன அவ்வளவு அவசரம்? நற்கதி பெற்றது ஸ்ரீமான் அல்ல அம்மா! பசி குடலைப் பிடுங்க உயிர் தங்க வேண்டி இறந்த நாயின் மாமிசத்தை உண்டு இறவாமல் தன்னைக் காத்துக்கொள்ளும் துர்க்கதியில் அன்றாடம் அவதியுறும் பிறவி ஒருவன் தானம்மா அந்த நற்கதி அடைந்தது.’பூமிக்கு உடல் எல்லாம் புல்லரித்தது. புளகம் மகிழ்வின் வேகக் காற்றாகி வலம் வந்து தென்றலாகி மண்மடந்தையின் மகிழ்வில் பூத்த குமிணகையைப் பூக்கும் ஒவ்வொரு மலரிலும் பூட்டிச் சென்றது. வான் அப்பொழுதுதான் நிர்மலமாகிக் காட்சியளித்தது. சந்திரனும் வளர்பிறையானான். பூமிப்பிராட்டி தன் உடலெல்லாம் செவி பூத்துச் சந்நத்தமானாள். உயிர்கள் தம் மர்மஸ்பர்சத்தில் புலரியெழக்கண்டு உவகை பூத்தன. எப்பக்கமும் கிழக்காகி, கிழக்கே ஏக திசையாகி, உதயகாலமே நித்யமாய் ஆகிவிடுமோ என்று அஞ்சினான் காலதேவன். பூமிக்கு அந்தப் பூவராகனை நேர்கொடு நேர் கண்கொண்டு நோக்க நாணம் பிடுங்கித் தின்றது. தலையைக் கவிழ்த்துத் தான் எங்கே போய்த் தரையைக் கீறுவது? எனவே அந்தர்தியானமாய் நிஷ்டையானாள் வசுந்தரா. அவனைத் தப்பிக் கண் எங்கே ஒளியும்? அந்தர்யாமியாய் அவன் சிரிக்கும் போது, சொல்லின் பொருளும், சிரிப்பின் சுநாதமும் கொஞ்சிக்குலவி அவள் உயிர்ச்செவியில் நம்பாடுவான் கதையைக் கூறின. ’பாடினான் பெற்றான் பரமபதம்’ என்று பிரபஞ்சம் அனைத்தும் தாளமிசைத்தன.(நாமும் தொடர்ந்து இசைப்போம்)
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
அன்புள்ள
தமிழ்த்தேனீ
ஆஹா, "த்யௌஸ்தே ப்ருஷ்டம் ப்ருதிவீ " என்று வாஜஸநேயி ஸம்ஹிதை கூறுவது
என்ன அழகாகப் பொருந்துகிறது ! இது நாள்வரை இந்த ஒப்பீடு மனத்தில்
தோன்றவில்லையே.
ஆதி தம்பதிகளை மறை மறைத்துச் சொல்லியது போலும் !
ஒரு புராணப் பகுதி உபப்ரம்ஹணமாவதும் தெளிவாகிறது.
தேவ்
’தேவரே! இப்படிப் பாடி உய்வு பெற்றவன் ஒருவன் உண்டு என்றால் அவன் மகாமேதாவியாய் இருப்பான். சங்கீத வித்வத் சிரோமணியாய் இருப்பான். பல வித்யைகள் தெரிந்திருக்கும். நாகரிகனாய், நல்லாடைகள், நல்ல உணவுகள் முதலியன காலம் இடம் பார்த்து தேர்ந்து உண்டு உடுத்தி நிபுணர்கள் மத்தியில் வலம் வரும் ஸ்ரீமானாய் இருப்பான் என்றால் என் அந்தரங்கக் குழந்தைகளான கோடானுகோடி பொதுஜனங்களுக்கு என்ன ஆயிற்று ஸ்வாமி? வெள்ளிக் கிண்ணத்தில் தங்கக் கிரண்டியில் உணவு உண்ணும் ஸ்ரீமான்களும் என் குழந்தைகளே! ஆயினும் என்றென்றும் என் கையை எதிர்பார்த்தபடியே, என்னை மன்றாடியபடியே தம் வியர்வையால் என்னை முழுக்காட்டியபடியே வாழ்க்கையோடு போராடும் கணக்கற்ற என் குழந்தைகளுக்கு என்ன உய்வு ஸ்வாமி? நீர் கூறுவதுபோல் பெற்றவன் என் குழந்தைகளில் பெரும் ஸ்ரீமானாய்த்தான் இருக்க வேண்டும். இல்லையேல் தேவரீர் எவ்வளவு உயர்வற உயர்நலம் மிக்கவர்! அவன் பெறாது போனால்தானே ஆச்சரியப்படவேண்டும். கூலிவேலை செய்வோர், தச்சர், தினக்கூலிக்காக மண்வெட்டி மராமத்து வேலை செய்வோர், ஒரு வேளை உணவிற்காக ஒரு நாள் முழுதும் உடல் முறிய உழைப்போர் இவர்கள் எல்லாம் உய்வு பெற என்ன வழி?பூமியின் மனத்திலோடும் பொருமல்களைக் கண்டு புன்னகைத்தான் பெருமான். ‘அம்மணி! என்ன அவ்வளவு அவசரம்? நற்கதி பெற்றது ஸ்ரீமான் அல்ல அம்மா! பசி குடலைப் பிடுங்க உயிர் தங்க வேண்டி இறந்த நாயின் மாமிசத்தை உண்டு இறவாமல் தன்னைக் காத்துக்கொள்ளும் துர்க்கதியில் அன்றாடம் அவதியுறும் பிறவி ஒருவன் தானம்மா அந்த நற்கதி அடைந்தது.’பூமிக்கு உடல் எல்லாம் புல்லரித்தது. புளகம் மகிழ்வின் வேகக் காற்றாகி வலம் வந்து தென்றலாகி மண்மடந்தையின் மகிழ்வில் பூத்த குமிணகையைப் பூக்கும் ஒவ்வொரு மலரிலும் பூட்டிச் சென்றது. வான் அப்பொழுதுதான் நிர்மலமாகிக் காட்சியளித்தது. சந்திரனும் வளர்பிறையானான். பூமிப்பிராட்டி தன் உடலெல்லாம் செவி பூத்துச் சந்நத்தமானாள். உயிர்கள் தம் மர்மஸ்பர்சத்தில் புலரியெழக்கண்டு உவகை பூத்தன. எப்பக்கமும் கிழக்காகி, கிழக்கே ஏக திசையாகி, உதயகாலமே நித்யமாய் ஆகிவிடுமோ என்று அஞ்சினான் காலதேவன். பூமிக்கு அந்தப் பூவராகனை நேர்கொடு நேர் கண்கொண்டு நோக்க நாணம் பிடுங்கித் தின்றது. தலையைக் கவிழ்த்துத் தான் எங்கே போய்த் தரையைக் கீறுவது? எனவே அந்தர்தியானமாய் நிஷ்டையானாள் வசுந்தரா. அவனைத் தப்பிக் கண் எங்கே ஒளியும்? அந்தர்யாமியாய் அவன் சிரிக்கும் போது, சொல்லின் பொருளும், சிரிப்பின் சுநாதமும் கொஞ்சிக்குலவி அவள் உயிர்ச்செவியில் நம்பாடுவான் கதையைக் கூறின. ’பாடினான் பெற்றான் பரமபதம்’ என்று பிரபஞ்சம் அனைத்தும் தாளமிசைத்தன.(நாமும் தொடர்ந்து இசைப்போம்)ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
On 11/22/09, Tirumurti Vasudevan <agni...@gmail.com> wrote:
தெலுங்கில் "மந"...
:-)
பிரம்ம ராட்சஸன் - என்பதன் பொருள் என்ன ?
பிரம்ம - பிராமண - பெருமான் (?!) - ஒரு பெரிய மனிதர்
ராட்சஸ - ராக்சஷ - இராக்கதர் - அரக்கர் (?!) - அரக்கு நிற மனிதர் ஒருவர்
இந்த சொற்களின் பொருள் இப்படி இருக்க, "பிரம்ம ராட்சஸன்" என்ற சொல்
மட்டும் எப்படி "மனிதர்களை உண்ணும் ஒருவர்" என்று பொருள்தர முடியும் ?!
:-)
அவ்ளோதானா.. நான் எல்லா "ப்ரம்ம ராட்ஷசன்"களும் அப்டித்தானோன்னு
நினைத்தேன்.
:-)
குளித்து மூன்றனலை ஓம்பும் சதுப்பேதிமார் வேட்டலே மறுமையை ஈட்டல் என்று விரதியராய்ப் போந்த காலம். வேதமய விரிசிறகின் விந்தைப்புள் கடவும் திருமால் நெறியின் கடல் புரைய விளைந்த காதல் மறை சிகர தாத்பர்யம் உணர்ந்தவர்க்கே உவப்பாய் இருந்த காலம். பிறவி சார்ந்த அறநெறிகள் கோலோச்ச, பிறழாத யாகங்கள் பெருநெறியாய் இருந்த காலம். பக்தியும், கடவுள்பால் மண்டியெழும் காதலும், காதல் புறம்பொசிந்த தெய்வத்தீம் பாட்டும் மனிதர் கருத்தில் உறைக்காத காலம். தெய்வ நாடகம் ஒன்று அரங்கேறும் கட்டியங் காலம்.வேள்விக் கூடம். ஸோமசர்மா உட்கார்ந்திருக்கிறார். நியமம் தவறாத நெறி. ஸங்கல்பம் செய்து பூண்ட பவித்ரம். மந்த்ர லோபம், கிரியா லோபம், திரவிய லோபம் எதுவும் தலைக்காட்டக் கூடாது என்று மிகவும் கருத்தாக இருக்கிறார் ஸோம சர்மா. இருந்தாலும் விக்ருதிகளின் நடுவில் சற்றே விராமம் கிடைக்கும் போதெல்லாம் அவருக்குச் சிரிப்புத்தான் வந்தது. கடும் மந்த்ர, யாக ஹோமங்கள் அனுஷ்டானங்கள் எங்கே? தவம் எங்கே? கனம், ஜடை, கிரமம், என்று விடாமல் அத்யயனம் பண்ணும் ஆர்ஜவம் எங்கே? இதில் கிடைக்கும் நற்பேற்றை விட ஸ்ரீமந் நாராயணனின் நாம ஜபத்தால் கிடைத்துவிடுமாம்! அதுவும் பாடினால் பரமபதம். அப்படியென்றால் இங்கே யக்ஞ வாடிகையில் சுற்றிப் பந்தலில் அமர்ந்து விராமப் பொழுதுகளில் எத்துணையோ பேர் பாடுகிறார்களே அவர்கள் எல்லாம் உடனே பரமபதமா? இந்திரனே எத்தனை யாகம் செய்து பின் இந்த்ரப் பதவி அடைகிறான்! பாடினால் பரமபதம்! ஹஹஹஹஹாஇருந்தாலும் தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார் ஸோம சர்மா.இவர்கள் பரம்பொருள் ஸ்ரீமஹாவிஷ்ணுவை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஏதோ காய் கனி கிழங்கு போலவா? ஹஹ பாடினால் பரமபதம். ஹஹஹயக்ஞோ வை விஷ்ணு: என்று சக ரித்விக்குகள் பாடியது இப்பொழுது பார்த்துக் கூர்மையாக அவர் காதில் தைத்தது. ம் அதான். இதெல்லாம் அவர்களுக்கு எங்கே புரியப் போகின்றது? யக்ஞமே அன்றோ விஷ்ணுவின் சரீரம். கர்ம ஸ்மாப்தியில் அன்றோ அவபிருத ஸ்நாநம். அப்பொழுதுதானே யாகத்தின் யஜமானன் விஷ்ணுவைப் பூரணமாக தர்சிப்பதாக ஐதிஹ்யம். அதை விட்டுவிட்டு கோவில், அதில் விக்ரகம், பூஜை, சங்கீதம், மாந்தர் தமக்கு இஷ்டமான விதங்களில் தமக்குத் தெரிந்த மொழியில் எல்லாம் தமக்குத் தோன்றிய விதத்தில் எல்லாம் பாட்டு பாடுவது. அழுவது. அரற்றுவது. சாமி வந்தால் போல் ஆடுவது. கேட்டால் அந்த ஆகமம், இந்த ஆகமம் என்று எதையேனும் எழுதிவைத்துக்கொண்டு காட்டுவது. அதாவது வேலை செய்ய சோம்பேறிகள்! எதையாவது சாமி பூஜை என்று கதைவிட்டு பிழைப்பு நடத்துவது. வாழ்க்கை முழுதும் எப்படி கர்மங்கள் கர்ம பலன்கள் அந்தப் பலன்கள் சூக்ஷ்ம ரூபத்தில் சேர்ந்துள்ள அபூர்வம். அதன் காரணமாக அதிருஷ்டம். அதனால் புண்ய பாபம். அதற்கேற்ப நல் பிறவி சொர்க்கம், என்று எவ்வளவு கச்சிதமாக லோக கிரமம் அமைக்கப் பட்டிருக்கிறது. இதில் எங்கே வந்தது பக்தி? கர்மம் கர்மம் கர்மம் அதுதானே பிரபஞ்சத்தையே இயக்கும் விதி ரூபம். மனிதன் அழுதால் அவன் கர்மம் நின்றுவிடுகிறதா? இல்லை ஐயோ பாவம் என்று கண்ணைத் துடைத்துவிடுகிறதா? உவகை, அழுகை இதெல்லாம் ஓர் உத்தரணிக்குப் பத்தாது. காலம் சர்வத்தையும் நாசம் செய்து விடுகிறது. மனிதனின் கர்ம பலன் மட்டும் சூக்ஷ்ம ரூபமாய் அவனுக்குரிய பேற்றை நிர்ணயிக்கிறது.யக்ஞ் ரூபனான ஸ்ரீமஹாவிஷ்ணு இளநகை பூண்டார். ஸ்ரீதேவியோ இந்தக் காட்சியைப் பார்த்துப் பரந்தாமனையும் பார்த்தாள். ‘ஸோம சர்மாவிற்கு பக்தி ஏற்படுமா?’ ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பார்வை கேட்ட கேள்விக்கு, ’முடிவு பண்ணி விட்டீர்கள். அப்புறம் என்னை என்ன கேள்வி?’ ‘பாவம் ஸோம சர்மா!’ ‘ஏன் கடுமையான வழியில்தான் உங்கள் அருள் பாயுமா?’ ‘ஹஹஹஹாஅ என் அருள் எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கிறதே! அவரவர் எப்பொழுது எந்த விதத்தில் தங்களை அந்த அருளுக்கு ஆட்படுத்திக் கொள்கின்றனர் என்பதுதான் விதயாசம். ஆனால் ஸோம சர்மா தேர்ந்தெடுக்கப் போகும் வழியை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.’காலம் ஸ்ரீமாஹாவிஷ்ணுவின் முன் பணிந்து ஸோம சர்மாவின் காலம் முடிந்துவிட்டது என்று கூறிச் சென்றது. இளநகை மாறாத எம்பெருமான் ஏதுமே என்றுமே நடக்காதது போல் இருந்தான்.நடுக்காடு. நரி ஊளை. இலைக்கூட்டத்தோடு போட்டி போட்டு நிலவொளி தோற்றது. உளளே பதுங்கிய காரிருட்டு புதிரான ஒலிகள் எழுப்பி ஒளியைப் பழித்தது. காட்டு விலங்குகளும் கண்டு அஞ்சி ஓடும் கடிய தோற்றமும், கொடிய நடையும் கொண்டு, உயிர் செகுத்துண்ணும் உலுத்தனாய் ஸோம சர்மா திரிகின்றான். கிடைத்ததில் புசித்து மிஞ்சிய நிணம் வாயின் புறக்கடையில் வழிகிறது. மாறி மாறி அழுகையும், துக்கமான முகத் தொய்வும் திடீரென சிரிப்பும் அவனைப் புலிகளுக்கும் பேதுறலாக்கி காட்டிலும் கடுந்தனிமையாக்கியது. கைவிரல்கள் மட்டும் ஏதோ சந்தை சொல்லும் போது ஸ்வரித தீர்க்க ஸ்வரித ப்லுத நிறுத்தங்களை அபிநயிப்பதுபோல் ஏறி இறங்கி வருகின்றன. பாறை ஒன்றில் அமர்ந்தான். ‘என்ன ஆயிற்று? யாக வேதியில் இருந்தது நிழலாய் நினைவில் படர்ந்து மறைந்து பின் இருண்டது. ஏதோ லோபம் கிரியா லோபம், ஹதம் ஹதம் தஹ தஹ அதற்கு இத்தனை கொடிய விளைவா? ச இருக்காது. ஏன் இப்படி. என்ன விதியின் விளையாட்டு. விதியா ஏன் அமைதியற்ற இந்தக் கொடூர வாழ்க்கை? இந்த நடுநிசி கடந்த பொழுதில் யாரங்கே வருவது? இன்று நல்ல வேட்டைதான். அது என்ன பாட்டும் வீணையும் கையுமாய்? ஓஹோ பக்திக் காரரா? சரிதான் பாடினால் பரமபதம். ஹஹஹாஹஹ பாவம் என்னைப் பார்த்தாலே குரல் கட்டிக் கொண்டு விடும். பிறகு எங்கே பாட்டு பக்தி? ஹாய்ய்ய்ய் நில் வசமாக மாட்டிக்கொண்டாயா? எங்கே போகிறாய்?ஆஹா நீங்களும் வருகிறீர்களா? நல்ல துணையாயிற்று. கோவிலுக்குத்தான். பரந்தாமனைப் பாடினால்....ஹாஹ்ஹாஹா தெரியும் பரமபதம்... அப்படித்தானேஅது நிச்சயம் ஆனால் நான் சொல்ல வந்தது தீராத வினையெல்லாம் தீர்ந்துவிடும். உங்களுடைய சகல துக்கங்களும் தொலைந்து போகும்.ஏய் உபதேசம் பண்ணாதே உன்னைக் கொன்று தின்னப் போகிறேன். உனக்குள் நிறைய பக்தி இருக்கிறது அல்லவா? அது போய் உள்ளே என் வினையைத் தின்னட்டும். பகவானாய்ப் பார்த்துத்தான் உன்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்.நிச்சயம் பிரபோ அவன் சங்கல்பம் இன்றி உலகில் ஒன்றும் நடை பெறுவதில்லை. அவன் தான் உம்மை ஆட்கொள்ள வேண்டி இன்று என் வழியில் வரச் செய்திருக்கிறான். (தொடரும்)
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
//வாழ்க்கை முழுதும் எப்படி கர்மங்கள் கர்ம பலன்கள் அந்தப்
பலன்கள்
சூக்ஷ்ம ரூபத்தில் சேர்ந்துள்ள அபூர்வம்.அதன் காரணமாக
அதிருஷ்டம்.அதனால் புண்ய பாபம். அதற்கேற்ப நல் பிறவி,
சொர்க்கம்,என்று எவ்வளவு கச்சிதமாக லோக கிரமம் அமைக்கப்
பட்டிருக்கிறது.இதில் எங்கே வந்தது பக்தி?கர்மம் கர்மம் கர்மம்
அதுதானே பிரபஞ்சத்தையே இயக்கும் விதி ரூபம்.மனிதனின் கர்ம
பலன் மட்டும் சூக்ஷ்ம ரூபமாய்
அவனுக்குரிய பேற்றை நிர்ணயிக்கிறது//
வேட்டலே மறுமையை ஈட்டல் என்ன்னும் விரதியரான கர்மடர்களின்
நிலைப்பாட்டைக் கிளை இழையாய்ச் சற்று விவரிக்கலாம்;கர்மங்களின் விளைவான
அபூர்வம் ,அத்ருஷ்ட பரிணாமம் இவற்றையும் தெளிவு படுத்தலாம்;அபூர்வம்
பலனைத் தருகிறது என்பதற்கு மறையில் சான்றுள்ளதா ? தென்னகத்தில் கர்ம
மீமாம்ஸை தொடர்பான நூல்கள் எழுதப்பட்டனவா?
தேவ்
க.>
2009/11/24 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> குளித்து மூன்றனலை ஓம்பும் சதுப்பேதிமார் வேட்டலே மறுமையை ஈட்டல்
பண்டும் இப்பிள்ளை பரிசறிவன்
இன்னமுகப்பன் நானென்று சொல்லி
எல்லாம் விழுங்கிட்டுப்போந்து நின்றான்
உன் மகன் தன்னை அசோதை நங்காய்!
கூவிக்கொள்ளாய் இவையும் சிலவே!//
>> பண்டும் இப்பிள்ளை பரிசறிவன்
>> இன்னமுகப்பன் நானென்று சொல்லி
>> எல்லாம் விழுங்கிட்டுப்போந்து நின்றான்
>> உன் மகன் தன்னை அசோதை நங்காய்!
>> கூவிக்கொள்ளாய் இவையும் சிலவே!//
>>
>> பெரியாழ்வார்
நாளொரு ஆழ்வார் (பாடல்) காட்டும் நயம் அழகு ;-)
க.>
"பன்னிரண்டு திருவோணம் அட்டேன்" என்றால் என்ன பொருள் ?!
பன்னிரண்டு முறை கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன் ?!





//என்ன நடை ஸ்வாமி!சபாஷ்!//
துள்ளி ஓடும் காவிரி போல்!
//எல்லாம் காவிரியைக்கொள்ளும் இடமாய் கொண்டதால் இருக்குமோ?!அருமை அருமை! //>>>>
கண்ணன்
2009/11/24 வி. சு. <vijayakuma...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
திருவோணம் நாரணன் நட்சத்திரம்.
திருவோணத்தன்று மாவிளக்கு இடுவது பண்டைய தமிழ் மரபு.
இங்கு பெரியாழ்வார் 12 திருவோணங்களுக்கு அக்காரடிசில் (பொங்கல்)
இடுவதாகச் சொல்கிறார் (வேண்டுதல்?)
சரியா? ரங்கன்?>>>>
கண்ணன்
2009/11/24 வி. சு. <vijayakuma...@gmail.com>:
> On Nov 24, 11:45 am, shylaja <shylaj...@gmail.com> wrote:வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> ...
>> //செந்நெல் அரிசி சிறுபருப்புச்
>> செய்த அக்காரம் நறுநெய்பாலால்
>> பன்னிரண்டு திருவோணம் அட்டேன்
> ...
>
> "பன்னிரண்டு திருவோணம் அட்டேன்" என்றால் என்ன பொருள் ?!
>
> பன்னிரண்டு முறை கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன் ?!
> >
>
--
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
பண்டும் இப்பிள்ளை பரிசறிவன்
இன்னமுகப்பன் நானென்று சொல்லி
எல்லாம் விழுங்கிட்டுப்போந்து நின்றான்
உன் மகன் தன்னை அசோதை நங்காய்!
கூவிக்கொள்ளாய் இவையும் சிலவே!//


நன்றி கீதம்மா!நான் வைகை மண்! அப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும்.ரங்கன் காவிரி மண்.அதனால் போனால் போகிறது என்று ;-)>>>>>>>
க.>2009/11/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்
என்ன பெருமை காவிரிக்காரங்களுக்கு!<>..
'வையை என்னும் பொய்யாக் குலக்கொடி' என்று சிலம்பிற்கு முன்பிருந்து
சங்கம் பாடும் ஆறு வையை.
சங்கத்தின் வளர்ச்சியே வைகைக்கரையில்தான்.
காவிரியெல்லாம் பின்னால வந்தது.
ஏதோ தெரியாம விபீஷணன் காவிரி ஆத்துக்கு நடுவிலே ரங்கனை வைத்துவிட்டதால்
வந்த பெருமை காவிருக்கு.
அவ்ளோதான்!
க.>
2009/11/24 shylaja <shyl...@gmail.com>
>
>
> 2009/11/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>
>> என்ன பெருமை காவிரிக்காரங்களுக்கு! <>..
>
>
> கங்கையிற்புனிதமாய
>
> காவிரி நடுவுபாட்டுப்
> பொங்குநீர் பரந்துபாயும்
> பூம்பொழில் அரங்கம் தன்னுள்,,,......
>
>
> இந்தப்பெருமைதான்!
>>
>> 2009/11/24 shylaja <shyl...@gmail.com>
>>>
>>>
>>> 2009/11/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>>>
>>>> //என்ன நடை ஸ்வாமி!
>>>> துள்ளி ஓடும் காவிரி போல்!
>>>> சபாஷ்!//
>>>>
>>>> //எல்லாம் காவிரியைக்கொள்ளும் இடமாய் கொண்டதால் இருக்குமோ?!அருமை அருமை! //>>>>
>>>
>>>
>>> எழுதினவர் ஊருல காவிரி ஓடறது கொள்ளிடமும் அடங்குகிறது அதனால அப்படிச்சொன்னேன்!! அக்கிரமமாமே இது?:):)
>>>>
>>>> க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அக்கிரமமாயில்லை???பொதிகை பெற்று, வைகை வளர்த்த தமிழ்!!!!!
>>>>
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
ஹிஹிஹிஹி, ஷைலஜா! இப்போ என்ன பன்ணுவீங்க???? இது ரொம்பவே நல்லா இருக்கு. காவிரி எல்லாம் கடல்லே கலக்கும், எங்க வைகையோ கடலை எட்டிக் கூடப் பார்க்காதாக்கும்!
ஓஹோ முதல்ல அது பூமியை எட்டிப்பாக்கட்டும்!>>>2009/11/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>ஹிஹிஹிஹி, ஷைலஜா! இப்போ என்ன பன்ணுவீங்க???? இது ரொம்பவே நல்லா இருக்கு. காவிரி எல்லாம் கடல்லே கலக்கும், எங்க வைகையோ கடலை எட்டிக் கூடப் பார்க்காதாக்கும்!
.திவாஜி சாருக்கு ஒருகிலோ மைசூர்பாக்கு அனுப்பப்படும்(என் கையால செஞ்சது ) (கண்ணன் சாருக்குக் கண்லகூட காட்டமாட்டேன்!):)
:P
திவாஜி
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!




இந்த பாருங்க! இந்த வைகைக்காரங்களோட வம்பிற்கு வராதீங்க!
'வையை என்னும் பொய்யாக் குலக்கொடி' என்று சிலம்பிற்கு முன்பிருந்து
சங்கம் பாடும் ஆறு வையை.
சங்கத்தின் வளர்ச்சியே வைகைக்கரையில்தான்.
காவிரியெல்லாம் பின்னால வந்தது.
ஏதோ தெரியாம விபீஷணன் காவிரி ஆத்துக்கு நடுவிலே ரங்கனை வைத்துவிட்டதால்
வந்த பெருமை காவிருக்கு.
அவ்ளோதான்!>>>>>>>
" செந்நெல் அரிசி, சிறுபருப்புச் செய்த அக்காரம், நறு நெய் "
நான் பருப்புச் சாதம் என்று நினைத்தேன்.
அன்று பரனூர்ப் பெரியவர் உபன்யாசம். நாச்சியார் திருமொழி. ஆண்டாள்
கள்ளழகருக்குப் பொங்கலிடுகிறாள். அவள் பொங்கல் செய்யும் அழகைச் சொல்ல
வரும் போது, அப்பா முன்னமே அக்காரடிசில் எப்படிச் செய்வது என்று
ஆண்டாளுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டார் என்று நீங்கள் குறிப்பிட்டப்
பாடலை மேற்கோள் காட்டுவார். அது உண்மையில் பெரியாழ்வார் தரும் சமையல்
குறிப்பு ;-)
க.>


குழாயடிச் சண்டை மாதிரி ஆத்தடி (ஆற்றடி - அப்படி ஒன்னு இருக்கா?) சண்டை நல்லாவே இருக்கு
>.ச்செச்சே சண்டை இல்லை சதீஷ் ச்சும்மா எல்லாரும் நமக்குத்தெரிஞ்சவங்கதான அதனால உரிமையா டிஷும் டிஷும் தான்:)
24 நவம்பர், 2009 12:16 pm அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதியது:
2009/11/24 N. Kannan <navan...@gmail.com>
இந்த பாருங்க! இந்த வைகைக்காரங்களோட வம்பிற்கு வராதீங்க!
'வையை என்னும் பொய்யாக் குலக்கொடி' என்று சிலம்பிற்கு முன்பிருந்து
சங்கம் பாடும் ஆறு வையை.
சங்கத்தின் வளர்ச்சியே வைகைக்கரையில்தான்.
காவிரியெல்லாம் பின்னால வந்தது.
ஏதோ தெரியாம விபீஷணன் காவிரி ஆத்துக்கு நடுவிலே ரங்கனை வைத்துவிட்டதால்
வந்த பெருமை காவிருக்கு.
அவ்ளோதான்!>>>>>>>
அப்படியா சேதி? பொன்னியின் செல்வி, இப்போ குடகுத்தலைக்காவிரியா அமைதியா போகிறாள்...மாலை வரும் அகண்டகாவிரிபிரவாகம் அரங்கனார் என்ற பேர்ல அப்போ இருக்கு வையை நிலமை ஐயே!:):)
க.>
செட்டு சேக்கறதைப் பாருங்கடோய்>>>>> சும்மா இல்லாமல் துள்ளி ஓடும் காவிரிநடைன்னு யார் சொன்னதாம் முதல்ல?:) ஏன் வைகைநடைன்னு அப்போ தோணலயோ?:):)
க.>
2009/11/24 N. Kannan <navan...@gmail.com>2009/11/24 shylaja <shyl...@gmail.com>:>> அப்படியா சேதி? பொன்னியின் செல்வி, இப்போ குடகுத்தலைக்காவிரியா அமைதியா> போகிறாள்...மாலை வரும் அகண்டகாவிரிபிரவாகம் அரங்கனார் என்ற பேர்ல அப்போ> இருக்கு வையை நிலமை ஐயே!:):)>>செட்டு சேக்கறதைப் பாருங்கடோய்>>>>> சும்மா இல்லாமல் துள்ளி ஓடும் காவிரிநடைன்னு யார் சொன்னதாம் முதல்ல?:) ஏன் வைகைநடைன்னு அப்போ தோணலயோ?:):)

--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
சபையில் காவிரி வைகை என்று களை கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
இங்கே டெல்லியில் ஒருவன் காதுகளில் புகை மண்டலத்துடன் உட்கார்ந்து இருக்கிறான்.
எங்கள் ஊர் தென்பெண்ணை நதியில் எப்போதும் தண்ணீர் இருக்காது. எங்க ஊரில் ஹொகேனக்கல்லில் காவேரி மேல் இருந்து பொழிகிறாள். நம் முதல்வர் சும்மா இருக்காது மிகப்பெரிய விளம்பரத்துடன் ஒகேனக்கல் திட்டம் என்று துவங்கி பங்காரப்பா ஓடத்தில் வந்து கூச்சல் போட்டு ரகளை செய்து எல்லாவற்றையும் நிறுத்தி வைத்து இப்போது எங்கள் ஊருக்கு ஒகேனக்கல் பகுதியில் இருந்து காவிரித்தண்ணீர் இ்ல்லை என்று ஏறக்குறைய ஆகிவிட்டது.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிளில் தண்ணீரில் ஃப்ளூரைடு கலந்து இருக்கிறது. அதனால் அந்த மண்ணின் மைந்தர்களாகிய எங்களுக்கு பற்கள் எப்போதும் சற்று மஞ்சள் கலந்து இருக்கும். பற்களில் உறுதி குறைந்து இருக்கும். எங்கள் எலும்புகளில் வலு ்கிடையாது. அறுபது வயதுக்கு மேல் எலும்புகள் தானாக இற்றுப்போகத் துவங்கிவிடும். என்னுடைய அம்மா பட்ட கஷ்டத்தைப் பார்த்து இருக்கிறேன். எங்கள் ஊர்ப்பெரியவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து இருக்கிறேன்.
என்னுடைய மூத்த சகோதரி கால் வலியால் படும் துயரம் பார்த்து என்னுடைய மனைவியிடம் சிரித்துக் கொண்டே சொல்வேன் - நான் ஐம்பத்து ஐந்து வருஷத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று.
நான் டெல்லிக்கு வந்த பிறகு எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் எங்கள் ஊரின் ஃப்ளூரைடு பிரச்னை பற்றி பேசச்சொல்லி இருக்கிறேன். அவர்கள் வேறு ஏதேதோ செய்துவிட்டுப்போனார்கள். இன்னும் கூட யாருக்கும் அக்கறை கிடையாது.
ஒகேனக்கல் பகுதியில் இருந்து எங்கள் ஊர்க்குழந்தைகள் குடிக்கும் என்று நாங்கள் கனவு கண்ட காவிரித்தண்ணீர் இப்போது எங்களுக்கு அநேகமாக இல்லை.
இதை இங்கே சொல்லி நண்பர்களுக்குத் தெரியவைக்கலாம் என்றுதான் எழுதுகிறேன்.
மற்றபடி இந்த இழை அதி சுவாரசியம்.
ஒரே வைணவ கலாட்டாவாக இருக்கிறது.
அன்புடன்
பென்னேஸ்வரன்
ஒகேனக்கல் பகுதியில் இருந்து எங்கள் ஊர்க்குழந்தைகள் குடிக்கும் என்று நாங்கள் கனவு கண்ட காவிரித்தண்ணீர் இப்போது எங்களுக்கு அநேகமாக இல்லை.
க.>
2009/11/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> கோட்டிடை உலகம் கொண்ட மூர்த்தி கூறுவானாயினன்: ‘ பூமா தேவி!
> உன் பெயர் க்ஷமா என்பதை நிரூபித்த படியே இருக்கிறது உன்
> உயர்ந்த வார்த்தைகள். எவரையும் நான் உயர்த்துவதும் கிடையாது.
> இழிவு படுத்துவதும் இல்லை. எங்கும் எவ்வுயிரிலும் நான்
> அந்தர்யாமியாய் சரீரியாய் இருக்கும் போது என்னை நான் எப்படி
> புதிதாக உயர்த்துவேன்? அன்றி இழிவு படுத்துவேன்?
அது சரி, அத்திம்பேர் ஏன் `ஆலவாய் அண்ணலாய்` ஆத்தாங்கரையில்
(வைகைக்கரையில் என்று வாசிக்கவும்) உட்கார்ந்திருக்கிறார் என்று
விஜாரிக்கவும். அவர் சுடுகாட்டுப்பக்கம் போறபோது கூடப்போம். அப்ப, எங்க
அத்தை வரமாட்டா!
க.>
2009/11/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> அவரை ஒரு தரம் கேட்டேன். காவிரி, வையை இதைப்பத்தி என்ன
> நினைக்கிறேள் அத்திம்பேர்னு? ‘டேய் குசும்பா! உங்க அத்தைட்ட திட்டு
> வாங்கறதுக்கா மறுபடியும்? நதிகளைப் பத்தியே இந்தாத்துல இருக்கற
> வரைக்கும் பேசாதேன்னார்.
> நதியைப் பார்த்தாலே இவளுக்கு கோபம் வரது. அதுனாலதான் ஊரிலேயே நதியே
> இல்லாம பண்ணிட்டேன் என்றார்.
>
> எனவே சாக்ஷாத் தாயார்தான் அங்க காவிரியா சூழ்ந்து பாத ஸேவை
> பண்ணிண்ட்ருக்கா. அடிவருடப் பள்ளி கொள்ளும் என்றால் புரிந்திருக்க
> வேணாமோ பாத ஸேவை பண்றது அம்மான்னு. காவிரி என்ன வெறும் ஒரு
> நதின்னா நினைச்சிண்ட்ருக்கே? மஹாலக்ஷ்மியேன்னா காவிரி ரூபமா அங்க
> மாலையிட்டு வளைத்து அடித்தொண்டு பண்ணுவது.
>
ஐயய்யோ! இக்கட்டான வழக்கா இருக்கே! நான் வேற ஆஜர் ஆகியே தீரணும்னு எங்களூர் கோதை குலக்கொடியின் கட்டளை வேறு. <<>>>>>
ஆஜர் ஆனா அங்க மதுரையில எங்க அத்தை இருக்கா. ‘ஏண்டா பட்டுக்கடப்பா! அதுகள்தான் ஏதோ அசடு பிசடுன்னு பேசறதுகள்னா நீயும் போய் அதுல கலந்துப்பாளோ? உண்மையா இருக்கறதை எல்லாம் சொல்லணும்னு அர்த்தம் இல்லை. பாவம் மனசு நொந்து போவாளேன்னு பதம்மா போகத் தெரிய வேணாமோ?’ என்று என்னை பிலுபிலுன்னு போட்டு பிடுங்கி எடுத்துடுவா. அவ்ளுக்குன்னு ஒரு செல்லக் கிளி. இவ விட்டாலும் அது விடாது. ‘பட்டுக்கடப்பா’ ’பட்டுக்கடப்பா’ கி கி ’பட்டுக்கடப்பா’ ந்னு போறச்ச வரச்ச பினாத்திண்டே இருக்கும். >>>
அத்திம்பேருக்கு எதுலயும் ஒரே சிரிப்புதான். எல்லாத்தையும் கவனிச்சுண்டே இருப்பார். ஒரு கண்ணுக்கு மூணு கண்ணா அவர் பார்வையில் எதுவும் தப்பாது. எதைக் கேட்டாலும் பதில் வராது. ரொம்ப பிடுங்கினா ‘ராம்’ ‘ராம்’ நு சொல்லிட்டுப் போயிடுவார். பிரதோஷம் ஆனா ‘டேய் பயலே!’ என்று பிரதோஷ பால் கொண்டுவந்து கொடுத்துடுவார். மீறி எனக்குப் பரிஞ்சி ஏதாவது சொல்லிட்டார்னா போதும். அத்தைக்கு வருமே கோபம். ‘போதும் போதும் தலையில தூக்கிவைச்சுக் கொஞ்சறேளே அவ சொல்லிக் கொடுத்தாளா?’ என்று இக்கட்டான விஷயத்தை ஒரு இடி இடிச்சு காமிச்சா அப்புறம் அத்திம்பேர் யோக சமாதிதான். போயிட்டு வரேன்னாலும் ஒரு குமிணகை அவ்வளவுதான்.அவரை ஒரு தரம் கேட்டேன். காவிரி, வையை இதைப்பத்தி என்ன நினைக்கிறேள் அத்திம்பேர்னு? ‘டேய் குசும்பா! உங்க அத்தைட்ட திட்டு வாங்கறதுக்கா மறுபடியும்? நதிகளைப் பத்தியே இந்தாத்துல இருக்கற வரைக்கும் பேசாதேன்னார்.
நதியைப் பார்த்தாலே இவளுக்கு கோபம் வரது. அதுனாலதான் ஊரிலேயே நதியே இல்லாம பண்ணிட்டேன் என்றார்.
அப்பறமா ஒரு நாளைக்கு பிரதோஷம் போது காலாற நடந்துவரலாம் வான்னார். யாரோ இருவினை ஒப்புன்னு வந்து கேட்டார். ஐயோ பாவம்னு அத்தை அவருக்கு வேண்டியதைப் போட்டுட்டு வரப் போனாள். அப்பொழுது கிடைச்ச சமயத்துல என்கிட்ட சொன்னார், ‘நீ அன்னிக்கு கேட்டியே? ஸ்ரீரங்கத்துல பெரியபெருமாள் கால்மாட்டுல தாயார் இருக்காளோ?’ என்றார். எனக்குப் புரியவில்லை. எதற்கு அடி போடுகிறார் இந்த மதுரைக் காரர்? என்று நினைத்தேன். ‘இருக்கிறதா ஐதிஹ்யம்’ என்றேன். ’ஐதிஹ்யமா ? சாக்ஷாத்தா இருக்கா தாயார். எப்படி சொல்லு பார்ப்போம் ?’ என்றார். நானோ முழித்தேன். அவரே சாமகானமா பாடினார்.இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றிஇனத்துத்தி அணிபணம் ஆயிரங்கள் ஆர்ந்தஅரவரசப் பெருஞ்சோதி அநந்தன் என்னும்அணிவிளங்கும் உயர் வெள்ளை அணையை மேவிதிருவரங்கப் பெருநகருள்......................என்று நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். என்ன புரியறதா? இலேசாக சுவடு தெரிந்தது. இருந்தாலும் அத்திம்பேர் வாயால கேட்கறதுன்னா ஒரே குஷிதான். அதுவும் நல்ல ஆலமரமா மாட்டித்துன்னா அவரைக் கட்டிப் பிடிக்க முடியாது. அப்ப அவர் தர விளக்கம் அடேயப்பா காலமே மறைஞ்சு போயிடும்.என்ன முழிக்கற?....தெண்ணீர்ப் பொன்னிதிரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும்கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாளே? <<>>
எனவே சாக்ஷாத் தாயார்தான் அங்க காவிரியா சூழ்ந்து பாத ஸேவை பண்ணிண்ட்ருக்கா. அடிவருடப் பள்ளி கொள்ளும் என்றால் புரிந்திருக்க வேணாமோ பாத ஸேவை பண்றது அம்மான்னு. காவிரி என்ன வெறும் ஒரு நதின்னா நினைச்சிண்ட்ருக்கே? மஹாலக்ஷ்மியேன்னா காவிரி ரூபமா அங்க மாலையிட்டு வளைத்து அடித்தொண்டு பண்ணுவது.என்று அத்திம்பேர் ஒரு போடு போட்டார். <<<>>
--
ஷைலஜா
//
பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய்/////
ஐயய்யோ! இக்கட்டான வழக்கா இருக்கே! நான் வேற ஆஜர் ஆகியே தீரணும்னு எங்களூர் கோதை குலக்கொடியின் கட்டளை வேறு. ஆஜர் ஆனா அங்க மதுரையில எங்க அத்தை இருக்கா. ‘ஏண்டா பட்டுக்கடப்பா! அதுகள்தான் ஏதோ அசடு பிசடுன்னு பேசறதுகள்னா நீயும் போய் அதுல கலந்துப்பாளோ? உண்மையா இருக்கறதை எல்லாம் சொல்லணும்னு அர்த்தம் இல்லை. பாவம் மனசு நொந்து போவாளேன்னு பதம்மா போகத் தெரிய வேணாமோ?’ என்று என்னை பிலுபிலுன்னு போட்டு பிடுங்கி எடுத்துடுவா. அவ்ளுக்குன்னு ஒரு செல்லக் கிளி. இவ விட்டாலும் அது விடாது. ‘பட்டுக்கடப்பா’ ’பட்டுக்கடப்பா’ கி கி ’பட்டுக்கடப்பா’ ந்னு போறச்ச வரச்ச பினாத்திண்டே இருக்கும்.
அத்திம்பேருக்கு எதுலயும் ஒரே சிரிப்புதான். எல்லாத்தையும் கவனிச்சுண்டே இருப்பார். ஒரு கண்ணுக்கு மூணு கண்ணா அவர் பார்வையில் எதுவும் தப்பாது. எதைக் கேட்டாலும் பதில் வராது. ரொம்ப பிடுங்கினா ‘ராம்’ ‘ராம்’ நு சொல்லிட்டுப் போயிடுவார். பிரதோஷம் ஆனா ‘டேய் பயலே!’ என்று பிரதோஷ பால் கொண்டுவந்து கொடுத்துடுவார். மீறி எனக்குப் பரிஞ்சி ஏதாவது சொல்லிட்டார்னா போதும். அத்தைக்கு வருமே கோபம். ‘போதும் போதும் தலையில தூக்கிவைச்சுக் கொஞ்சறேளே அவ சொல்லிக் கொடுத்தாளா?’ என்று இக்கட்டான விஷயத்தை ஒரு இடி இடிச்சு காமிச்சா அப்புறம் அத்திம்பேர் யோக சமாதிதான். போயிட்டு வரேன்னாலும் ஒரு குமிணகை அவ்வளவுதான்.அவரை ஒரு தரம் கேட்டேன். காவிரி, வையை இதைப்பத்தி என்ன நினைக்கிறேள் அத்திம்பேர்னு? ‘டேய் குசும்பா! உங்க அத்தைட்ட திட்டு வாங்கறதுக்கா மறுபடியும்? நதிகளைப் பத்தியே இந்தாத்துல இருக்கற வரைக்கும் பேசாதேன்னார்.நதியைப் பார்த்தாலே இவளுக்கு கோபம் வரது. அதுனாலதான் ஊரிலேயே நதியே இல்லாம பண்ணிட்டேன் என்றார்.அப்பறமா ஒரு நாளைக்கு பிரதோஷம் போது காலாற நடந்துவரலாம் வான்னார். யாரோ இருவினை ஒப்புன்னு வந்து கேட்டார். ஐயோ பாவம்னு அத்தை அவருக்கு வேண்டியதைப் போட்டுட்டு வரப் போனாள். அப்பொழுது கிடைச்ச சமயத்துல என்கிட்ட சொன்னார், ‘நீ அன்னிக்கு கேட்டியே? ஸ்ரீரங்கத்துல பெரியபெருமாள் கால்மாட்டுல தாயார் இருக்காளோ?’ என்றார். எனக்குப் புரியவில்லை. எதற்கு அடி போடுகிறார் இந்த மதுரைக் காரர்? என்று நினைத்தேன். ‘இருக்கிறதா ஐதிஹ்யம்’ என்றேன். ’ஐதிஹ்யமா ? சாக்ஷாத்தா இருக்கா தாயார். எப்படி சொல்லு பார்ப்போம் ?’ என்றார். நானோ முழித்தேன். அவரே சாமகானமா பாடினார்.இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றிஇனத்துத்தி அணிபணம் ஆயிரங்கள் ஆர்ந்தஅரவரசப் பெருஞ்சோதி அநந்தன் என்னும்அணிவிளங்கும் உயர் வெள்ளை அணையை மேவிதிருவரங்கப் பெருநகருள்......................என்று நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். என்ன புரியறதா? இலேசாக சுவடு தெரிந்தது. இருந்தாலும் அத்திம்பேர் வாயால கேட்கறதுன்னா ஒரே குஷிதான். அதுவும் நல்ல ஆலமரமா மாட்டித்துன்னா அவரைக் கட்டிப் பிடிக்க முடியாது. அப்ப அவர் தர விளக்கம் அடேயப்பா காலமே மறைஞ்சு போயிடும்.என்ன முழிக்கற?....தெண்ணீர்ப் பொன்னிதிரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும்கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாளே?
எனவே சாக்ஷாத் தாயார்தான் அங்க காவிரியா சூழ்ந்து பாத ஸேவை பண்ணிண்ட்ருக்கா. அடிவருடப் பள்ளி கொள்ளும் என்றால் புரிந்திருக்க வேணாமோ பாத ஸேவை பண்றது அம்மான்னு. காவிரி என்ன வெறும் ஒரு நதின்னா நினைச்சிண்ட்ருக்கே? மஹாலக்ஷ்மியேன்னா காவிரி ரூபமா அங்க மாலையிட்டு வளைத்து அடித்தொண்டு பண்ணுவது.
என்று அத்திம்பேர் ஒரு போடு போட்டார்.’அப்படிச்சொல்லுங்கோ! அசமிஞ்சம் புத்தில நன்னா உறைக்கட்டும்’ என்றாள் அத்தை.விஷமக் கிளி ‘பட்டுக்கடப்பன்’ ’பட்டுக்கடப்பன்’ என்று கத்தியது.இப்ப சொல்லுங்க இந்த வழக்கில் நான் ஆஜர் ஆவதா வேண்டாமா என்று?ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
//என்று அத்திம்பேர் ஒரு போடு போட்டார்.’அப்படிச்சொல்லுங்கோ! அசமிஞ்சம் புத்தில நன்னா உறைக்கட்டும்’ என்றாள் அத்தை. //
என்ன இருந்தாலும் வந்தாரை வாழ வைக்கும் மாமதுரையாச்சே, மதுரைக்காரங்க விட்டுக் கொடுப்பாங்களா?? நல்லாவே இருந்தது!<<<>>>>>>>>
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய்/////













’பட்டுக் கிடப்பவன்’- ஒரு திட்டு
பேச்சு வழக்கில் பட்டுக் கடப்பா என்றாகிறது.
தேவ்
Nov 25, 6:04 am, shylaja
அதென்ன பட்டுக்கடப்பா?’பட்டுக் கிடப்பவன்’- ஒரு திட்டு
பேச்சு வழக்கில் பட்டுக் கடப்பா என்றாகிறது.<<>>..
தேவ்
அன்புள்ள
தமிழ்த்தேனீ
கோதை குலக்கொடி! இருபத்தி மூன்றாம் புலிகேசி ஸ்டைல்ல கீதாம்மாவும், கண்ணனும், வடிவேலும் மந்திரியும் கணக்கா வாய் என்னதான் வீரம் பேசினாலும் லோட்டாங் கையால வெள்ளைக் கொடி ஆட்டிண்டு, ‘உட்டுடுங்கப்பா ப்ளீஸ்’ என்று சைகை காட்டிண்டு வராளே ! உங்க கண்ணுக்குத் தெரியல்லையா? போகட்டும். பாவம், விடுங்கோ.
//எங்கும் எவ்வுயிரிலும் நான் அந்தர்யாமியாய் சரீரியாய்
இருக்கும் போது என்னை நான் எப்படி புதிதாக உயர்த்துவேன்? அன்றி
இழிவு படுத்துவேன்? ஆனால் ஜீவன் என்று
வரும்போது எனக்கு இந்தக் கேள்வி பலரிடமிருந்தும் எழுகிறது.//
ஸமோஹம் ஸர்வபூதேஷு..(கீதை)
//வேத பாரங்கதர்களும் தம் சைதன்யத்தைக் கார்யப் படுத்தினால் ருசா
ஸ்வரூபமும்,யக்ஞ ஆகாரமும்,உத்கீதமும்,மந்த்ர யந்த்ராதிகளும் நம்
ஸ்வரூபமே என்று வேதம் அனவரதம்
முழங்காநிற்பதைக் காணுதல் ஸுலபம்//
ருசா ஸ்வரூபம் - ருக் வேதம்
யஜ்ஞ ஆகரம் - யஜுர் வேதம்
உத்கீதம் - ஸாம வேதம்
மந்த்ர யந்த்ரம் - அதர்வ வேதம்
//அதீந்திரிய விஷயங்களுக்கான கண் என்று சாஸ்த்ரத்தைச்
சொல்லுகிறார்கள் ஸுதீக்கள். வேள்வி என்பதோ பிரக்ருதி விக்ருதி
யாகங்களின் ஸமூகமான ஸம்பத்த த்யோதக
வசத்தாலே கர்ம ஸமாராத்யனான என்னைக் காட்டாநின்றது.//
ஆஹா, இணையத்திலும் மறைகளை ஆதரிக்கும் இத்தனை ப்ராமாணிகமான வசனங்களா !
பூர்வ மீமாம்ஸை ஸர்வ கர்ம ஸமாராத்யனான பகவானையும், உத்தர மீமாம்ஸை அவனது
ஸர்வ சப்த வாச்யத்வத்தையும் கூறுபவை.
நாலாயிரம் போதும் , மறைகளின் தேவையில்லை என்னும் விபரீதமான சிந்தனைகளைச்
சிலர் முன் வைக்கின்றனர்; ’நலங்களாய நற்கலைகள்’என்று ஆழ்வார் போற்றுவது
மறைகளையே என்று திருக்குடந்தை ஆண்டவன் ஒரு முறை கூறினார்.
//மனத்தைப் போன்ற விசித்ரமானது எதுவும்இல்லை. மனம் சரீரத்தைச்
சார்ந்து இருக்கப்பெறின் விபரீதமான சங்கல்பங்களை
ஏற்படுத்துகிறது.மனம் ஆத்மாவைச் சார்ந்து
இருந்ததென்றால் தன் லய ஸ்தானத்தே மறைந்து தூய ஆன்ம ஒளியே
சரீர பர்யந்தம் சுடரும் படியாகச் சுத்த ஸ்படிகம் போல்
ஆகிறது.
மனத்தை ஆத்மாவிடம் சேர்க்கத் தெரியாதவன் வேதத்தையும்,வேள்வியையும்
விபரீதமாகப் பார்க்கிறான்.அவனுடைய விபரீதமான பார்வைக்கேற்றாற்போல்
மனமும் அவனை விகாரமான வழிகளில் அழைத்துச் செல்கிறது.மனம் சைதன்யம்
உடையது அன்று. ஜீவனின் சைதன்யமே மனத்தை அதிஷ்டித்து மறைமுகமாக
அனைத்து சங்கல்பங்களையும் செய்து கொள்கிறது.//
மனம் ஒரு ஜடப்பொருள், இரும்புத்துண்டு நெருப்புடன் இணையும்போது
ஒளிர்வதுபோல் ஆத்ம சைதன்யத்தால் மனம் ஸத்தை பெறுகிறது . நாம் செய்யும்
ஸத்ஸங்கம் ’ஸத்’ ஆன ஆத்மாவுடன் ஸங்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியே.
நுட்பமான கருத்து மிக எளிமையாகச் சொல்லப்படுகிறது.
தேவ்
கோதை குலக்கொடி! இருபத்தி மூன்றாம் புலிகேசி ஸ்டைல்ல கீதாம்மாவும், கண்ணனும், வடிவேலும் மந்திரியும் கணக்கா வாய் என்னதான் வீரம் பேசினாலும் லோட்டாங் கையால வெள்ளைக் கொடி ஆட்டிண்டு, ‘உட்டுடுங்கப்பா ப்ளீஸ்’ என்று சைகை காட்டிண்டு வராளே ! உங்க கண்ணுக்குத் தெரியல்லையா? போகட்டும். பாவம், விடுங்கோ.
ஏதோ கொடுத்தா வைச்சுக்கத் தெரியாம தொலைச்சுட்டா பாவம் களப்பிரம், காளப்புறம் நு. இப்ப வருத்தப் பட்ரா என்ன பண்றதூ?அதெ சங்கத் தமிழை உலகமெல்லாம் சங்கமிக்கும் தமிழா, ஹிந்துமத அச்சாரமா உருவாக்கித் தந்த நமக்கு எல்லாரையும் அரவணைச்சுப் போற பக்குவம்தான் நிறைய உண்டாச்சே! அரவணைத் துயுலுமா கண்டு இல்லியோ? பாவம் தோத்த கட்சி இப்படித்தான் காசு(மி) கொடுத்து துதிபாடகாள நாம கிளம்பிட்டோமா என்று பார்த்து தங்கள் இல்லாத பொல்லாத பெருமைய பாடி மகிழ்ந்துப்பா! இதல்லாம் சகஜமப்பான்னு போகவேண்டியதுதான். என்ன நான் சொல்றது? <<>>>>
2009/11/25 shylaja <shyl...@gmail.com>
பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
அதென்ன பட்டுக்கடப்பா?
நம்ம மின் தமிழ்லே இருக்கற பெரியவாள்ளாம் (பிடிச்சு)
அதிலேயே ஆழ்ந்து பட்டுக்க்டப்பா
அதை அனுபவிச்சுட்டு
அதிலேருந்து ஞானவசப் பட்டுக் கடப்பா
ஆமாம் அங்கேயே நின்னுடமாட்டா
பட்டு கடப்பா
அடுத்த ஞானதை நோக்கி நடப்பா
அதுதான் பட்டுக்கடப்பா ன்னு நெனைக்கிறேன் >>>>
என்ன சொல்ல இபடியெல்லாம் அருமையா பதில் சொல்றதுக்கு நூறுதடா சக்கரைப்பொங்கல் முடியாது அரைகிலோ மைசூர்பாக் அனுப்பிடறேன் அரங்கதுரையே! அங்க பாருங்க கண்ணன் , இப்போ குமரனைக்கூவி அழைக்கிறார்!!!!:):)
2009/11/25 shylaja <shyl...@gmail.com>என்ன சொல்ல இபடியெல்லாம் அருமையா பதில் சொல்றதுக்கு நூறுதடா சக்கரைப்பொங்கல் முடியாது அரைகிலோ மைசூர்பாக் அனுப்பிடறேன் அரங்கதுரையே! அங்க பாருங்க கண்ணன் , இப்போ குமரனைக்கூவி அழைக்கிறார்!!!!:):)
என்ன லஞ்சம்! அநியாயமா இருக்கு!!>>>>>>
க.>
ரங்கன்:
ரொம்ப சுவாரசியமான ஒன்றைத்தொடுகிறீர்கள்!
ஏன் இறையனார் தந்த களவியல் சைவக்குரவர்களால் மேலே எடுத்துச்
செல்லப்படவில்லை? ஒரு வாய்ப்பை இழந்து விட்டனரோ?
எப்படி அரங்கத்துப் பாசறைக்கு அதன் உள்ளார்த்தங்கள் புரிந்தது?
பாசுரங்களை இவர்கள் கொண்டு சென்ற எல்லைக்கு திருக்கோவையாரை யாரும் கொண்டு
செல்லவில்லையே? ஏன்?
சங்கத்தமிழை மதுரை விட்டுவிட திருவரங்கம் பிடித்துக்கொண்டது எவ்வாறு?
கண்ணன்
கைசிக ஏகாதசிக்காக ஒரு மஹானுபாவர் நம்பாடுவானைப் பற்றி சொல்லுவதைக் கேட்க
வெட்கம் வெட்கம் அக்கா கூப்புட்டிருந்தாங்க; அதனால மானசீகமா
திருவரங்கத்திற்கு போயிருந்தேன். 'கால் வருடும் பொன்னி'யைப் பற்றியும்
அவர் சொல்ல உடனே வாய்
ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ணரஜதஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ
னும்
மாதா ச கமலா தேவி
பிதா தேவோ ஜனார்த்தன
பாந்தவா விஷ்ணு பக்தா ச
ஸ்வதேஸோ புவன த்ரயம்
னும் பாடத் தொடங்கிருச்சு. அதனால தான் கொஞ்சம் தாமதம்.
வைகைக்கு எத்தனையோ பெருமை இருந்தாலும் எதிர் தரப்பில் திருவரங்கத்து
அமுதனார் இருக்கும் போது அடியேன் என்ன சொல்லி வாயெடுக்க? தேவரீர்
திருவாக்கினால் என்ன சொன்னாலும் தகும் என்று கைகட்டி வாய் பொத்தி அன்றோ
நிற்கத் தோன்றுகிறது!
அடியேன்,
குமரன்.
ஸ்ரீபூமிபிராட்டி நிஷ்டை கலைத்துக் கேட்டாள் கோல வான் மூர்த்தியாய நீல வராகப் பெருமானை: ‘பெருமானே! பள்ளமடையாய் உமது அருள் ஜாதி, வித்தை, செல்வம் என்பன இல்லாதார் இடையே பாய்கிறது என்று உணர்ந்தேன். ஆனாலும் நற்கல்வி, செல்வம், நியமம், அனுட்டானம், வேள்வியொழுக்கம் இவையுடைய ஸோம சர்மா என்ன பாவம் செய்தான்? அவனுக்கு ஏன் தாங்கள் அத்தகைய இழிநிலை தந்து வாட்ட வேண்டும். தாழ்ந்தவரை உயர்த்த வேண்டுமே அன்றி உயர்ந்தவரை தாழ்த்துவது என்ன நியாயம்? அவன் எண்ணத்தில் சொல்லில் செயலில் தவறுகள் இருக்கலாம். ஆனால் நம் அருள் எங்கே போயிற்று? அவனை இழிவு படுத்தாமல் திருத்தினால் ஆகாதா?’கோட்டிடை உலகம் கொண்ட மூர்த்தி கூறுவானாயினன்: ‘ பூமா தேவி! உன் பெயர் க்ஷமா என்பதை நிரூபித்த படியே இருக்கிறது உன் உயர்ந்த வார்த்தைகள். எவரையும் நான் உயர்த்துவதும் கிடையாது. இழிவு படுத்துவதும் இல்லை. எங்கும் எவ்வுயிரிலும் நான் அந்தர்யாமியாய் சரீரியாய் இருக்கும் போது என்னை நான் எப்படி புதிதாக உயர்த்துவேன்? அன்றி இழிவு படுத்துவேன்? ஆனால் ஜீவன் என்று வரும்போது எனக்கு இந்தக் கேள்வி பலரிடமிருந்தும் எழுகிறது. சேதனம் என்ற கோஷ்டியில் நாமும், ஜீவனும் உள்ளோம். எனவே என்ன செய்தாலும் அது ஜீவனின் சேதனத்தைக் குறித்தே எழுகிறது. //
/சேதனின் சைதன்யத்தை புறந்தள்ளி எந்த நன்மையும் விளையாது தேவி. புக்தி, முக்தி, சக்தி, அனைத்தும் சேதனனின் அறிவைக் குறித்துத்தான். பெரும் யாகம் செய்தோரும், வேத பாரங்கதர்களும் தம் சைதன்யத்தைக் கார்யப் படுத்தினால் ருசா ஸ்வரூபமும், யக்ஞ ஆகாரமும், உத்கீதமும், மந்த்ர யந்த்ராதிகளும் நம் ஸ்வரூபமே என்று வேதம் அனவரதம் முழங்காநிற்பதைக் காணுதல் ஸுலபம். அதீந்திரிய விஷயங்களுக்கான கண் என்று சாஸ்த்ரத்தைச் சொல்லுகிறார்கள் ஸுதீக்கள். வேள்வி என்பதோ பிரக்ருதி விக்ருதி யாகங்களின் ஸமூகமான ஸம்பத்த த்யோதக வசத்தாலே கர்ம ஸமாராத்யனான என்னைக் காட்டாநின்றது. அதாவது கர்ம இலக்கணத்தாலே யாத்து என்னைப் புலப்படுத்த வந்த செயல் ரூபமான மொழி யக்ஞம். மனிதனோ சரீரம், மனம், ஆத்மா என்ற மூன்றும் பிணைந்த இயக்காய் இருக்கிறான். அவனது மனத்தைப் போன்ற விசித்ரமானது எதுவும் இல்லை. மனம் சரீரத்தைச் சார்ந்து இருக்கப்பெறின் விபரீதமான சங்கல்பங்களை ஏற்படுத்துகிறது. மனம் ஆத்மாவைச் சார்ந்து இருந்ததென்றால் தன் லய ஸ்தானத்தே மறைந்து தூய ஆன்ம ஒளியே சரீர பர்யந்தம் சுடரும் படியாகச் சுத்த ஸ்படிகம் போல் ஆகிறது. மனத்தை ஆத்மாவிடம் சேர்க்கத் தெரியாதவன் வேதத்தையும், வேள்வியையும் விபரீதமாகப் பார்க்கிறான். அவனுடைய விபரீதமான பார்வைக்கேற்றாற்போல் மனமும் அவனை விகாரமான வழிகளில் அழைத்துச் செல்கிறது. மனம் சைதன்யம் உடையது அன்று. ஜீவனின் சைதன்யமே மனத்தை அதிஷ்டித்து மறைமுகமாக அனைத்து சங்கலபங்களையும் செய்து கொள்கிறது. //
/// இந்தக் குழப்பத்தில் முதலில் அது விரோதிப்பது என் அருளின் பிரஸன்னத்தை. ஏனெனில் என் அருளில் சங்கல்பங்கள் இயங்க மாட்டா. சங்கல்பங்களில் ஜிமூதனாகிவிட்ட ஜீவன் அனுபவத்தால் அறக்கழித்து ஓயும் வரை என் அருளுக்கு ஒப்புவதில்லை. அவன் செயலோய்ந்து என்பக்கம் திரும்பும்வரை நான் கூடவே அவனறியாமலேயே அவனுக்குள் இருந்து காக்க வேண்டியிருக்கிறது. //
ஸோம சர்மாவின் உள்ளே ஒரு நுணுக்கமாய்க் கட்டப்பட்ட சங்கல்பாயத்தக் கிரமம் ஒன்று இருக்கிறது. அது என்று அறுபடுமோ, என்று அவனுடைய சேதன முகம் என்னை நாடித் திரும்புமோ அன்று அவன் பிறந்து விடுவான். தற்சமயம் நடமாடும் இறப்பாய்க் கழிகின்றன அவனுடைய நாட்கள். /
(தொடரும்)
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
பட்டுக் கிடப்பான் மருவுகிறது;
ஒரு செல்லத் திட்டு.
தேவ்
On 11/25/09, shylaja <shyl...@gmail.com> wrote:
2009/11/24 srirangammohanarangan v <ranga...@gmail.com>
ஸ்ரீபூமிபிராட்டி நிஷ்டை கலைத்துக் கேட்டாள் கோல வான் மூர்த்தியாய நீல வராகப் பெருமானை: ‘பெருமானே! பள்ளமடையாய் உமது அருள் ஜாதி, வித்தை, செல்வம் என்பன இல்லாதார் இடையே பாய்கிறது என்று உணர்ந்தேன். ஆனாலும் நற்கல்வி, செல்வம், நியமம், அனுட்டானம், வேள்வியொழுக்கம் இவையுடைய ஸோம சர்மா என்ன பாவம் செய்தான்? அவனுக்கு ஏன் தாங்கள் அத்தகைய இழிநிலை தந்து வாட்ட வேண்டும். தாழ்ந்தவரை உயர்த்த வேண்டுமே அன்றி உயர்ந்தவரை தாழ்த்துவது என்ன நியாயம்? அவன் எண்ணத்தில் சொல்லில் செயலில் தவறுகள் இருக்கலாம். ஆனால் நம் அருள் எங்கே போயிற்று? அவனை இழிவு படுத்தாமல் திருத்தினால் ஆகாதா?’கோட்டிடை உலகம் கொண்ட மூர்த்தி கூறுவானாயினன்: ‘ பூமா தேவி! உன் பெயர் க்ஷமா என்பதை நிரூபித்த படியே இருக்கிறது உன் உயர்ந்த வார்த்தைகள். எவரையும் நான் உயர்த்துவதும் கிடையாது. இழிவு படுத்துவதும் இல்லை. எங்கும் எவ்வுயிரிலும் நான் அந்தர்யாமியாய் சரீரியாய் இருக்கும் போது என்னை நான் எப்படி புதிதாக உயர்த்துவேன்? அன்றி இழிவு படுத்துவேன்? ஆனால் ஜீவன் என்று வரும்போது எனக்கு இந்தக் கேள்வி பலரிடமிருந்தும் எழுகிறது. சேதனம் என்ற கோஷ்டியில் நாமும், ஜீவனும் உள்ளோம். எனவே என்ன செய்தாலும் அது ஜீவனின் சேதனத்தைக் குறித்தே எழுகிறது. ///சேதனின் சைதன்யத்தை புறந்தள்ளி எந்த நன்மையும் விளையாது தேவி. புக்தி, முக்தி, சக்தி, அனைத்தும் சேதனனின் அறிவைக் குறித்துத்தான். பெரும் யாகம் செய்தோரும், வேத பாரங்கதர்களும் தம் சைதன்யத்தைக் கார்யப் படுத்தினால் ருசா ஸ்வரூபமும், யக்ஞ ஆகாரமும், உத்கீதமும், மந்த்ர யந்த்ராதிகளும் நம் ஸ்வரூபமே என்று வேதம் அனவரதம் முழங்காநிற்பதைக் காணுதல் ஸுலபம். அதீந்திரிய விஷயங்களுக்கான கண் என்று சாஸ்த்ரத்தைச் சொல்லுகிறார்கள் ஸுதீக்கள். வேள்வி என்பதோ பிரக்ருதி விக்ருதி யாகங்களின் ஸமூகமான ஸம்பத்த த்யோதக வசத்தாலே கர்ம ஸமாராத்யனான என்னைக் காட்டாநின்றது. அதாவது கர்ம இலக்கணத்தாலே யாத்து என்னைப் புலப்படுத்த வந்த செயல் ரூபமான மொழி யக்ஞம். மனிதனோ சரீரம், மனம், ஆத்மா என்ற மூன்றும் பிணைந்த இயக்காய் இருக்கிறான். அவனது மனத்தைப் போன்ற விசித்ரமானது எதுவும் இல்லை. மனம் சரீரத்தைச் சார்ந்து இருக்கப்பெறின் விபரீதமான சங்கல்பங்களை ஏற்படுத்துகிறது. மனம் ஆத்மாவைச் சார்ந்து இருந்ததென்றால் தன் லய ஸ்தானத்தே மறைந்து தூய ஆன்ம ஒளியே சரீர பர்யந்தம் சுடரும் படியாகச் சுத்த ஸ்படிகம் போல் ஆகிறது. மனத்தை ஆத்மாவிடம் சேர்க்கத் தெரியாதவன் வேதத்தையும், வேள்வியையும் விபரீதமாகப் பார்க்கிறான். அவனுடைய விபரீதமான பார்வைக்கேற்றாற்போல் மனமும் அவனை விகாரமான வழிகளில் அழைத்துச் செல்கிறது. மனம் சைதன்யம் உடையது அன்று. ஜீவனின் சைதன்யமே மனத்தை அதிஷ்டித்து மறைமுகமாக அனைத்து சங்கலபங்களையும் செய்து கொள்கிறது. //அரங்கனாரே! சுத்தம் ஒண்ணும் புரியல. என்ன இது ரிஷிகள் காட்டில் பேசிக்கிறமாதிரி இருக்கு கொஞ்சம் எங்க தமிழ்ல எழுதக்கூடாதா?!
இப்பத்தானே நங்காய் கோதை குலக்கொடின்னு பட்டம் கொடுத்தேன். அதுக்குள்ள கவுத்திட்டீயேம்ம்மாஅ! <<<<<<>>>>>>
கவலையே படாதீங்கோ! எல்லாம் விளக்கி எளிமையா சொல்றேன். நீங்க பாட்டுக்கு ஓட்டத்துல படிச்சிண்டு போங்கோ. <<>>>
இன்னொரு விஷய்ம். யாராவது இது அப்படியே வராஹ புராணத்துல இருக்கு நான் எழுதறதெல்லாம் என்று நினைத்துக்கொண்டு டிஜிடைசேஷன் பண்ணப் போய்டாதீங்கோ! (குமரன் மல்லியாருக்குக் குறிப்பாக ;-)) ) வராஹ புராணத்து கைசிக புராணப் பகுதியை ஏகதெசம் தொட்டுண்டு நானா பண்ணுகின்ற கல்பனா ஸம்பாஷணம். தாத்பர்யங்கள் எல்லாம் கைசிக புராணத்துல போய் நிக்கும். ஆனா ரூட் என் மனோதர்மம் :--)))) >>>>>>
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
/// இந்தக் குழப்பத்தில் முதலில் அது விரோதிப்பது என் அருளின் பிரஸன்னத்தை. ஏனெனில் என் அருளில் சங்கல்பங்கள் இயங்க மாட்டா. சங்கல்பங்களில் ஜிமூதனாகிவிட்ட ஜீவன் அனுபவத்தால் அறக்கழித்து ஓயும் வரை என் அருளுக்கு ஒப்புவதில்லை. அவன் செயலோய்ந்து என்பக்கம் திரும்பும்வரை நான் கூடவே அவனறியாமலேயே அவனுக்குள் இருந்து காக்க வேண்டியிருக்கிறது. //ஜீமுதன்=?ஜீமூதன் -- (மும்முரம், முனைப்பு, மனம் மொழி செய்கையோடு ஒன்றில் தீவிரமாக ஈடுபடுதல் )/ அவ்வாறு ஈடுபடுவோன் >>
ஸோம சர்மாவின் உள்ளே ஒரு நுணுக்கமாய்க் கட்டப்பட்ட சங்கல்பாயத்தக் கிரமம் ஒன்று இருக்கிறது. அது என்று அறுபடுமோ, என்று அவனுடைய சேதன முகம் என்னை நாடித் திரும்புமோ அன்று அவன் பிறந்து விடுவான். தற்சமயம் நடமாடும் இறப்பாய்க் கழிகின்றன அவனுடைய நாட்கள். /இது புரியறது...... சுவாரஸ்யமா இருக்கு தொடர்ந்து கைசிக நாளுக்குள் முடிங்க பாக்கலாம்!
செய்யறன் தாயி! அதுக்குள்ளாற இப்படி போட்டு விரட்டினா நியாயமா?>>>>>>>
(என்ன இவன் பெரிய வம்பனாக இருப்பான் போலிருக்கிறதே) என்ன பிரதிக்ஞைகள்? (தொடரும்)
க.>
பிகு: ஸ்வாமி தேவலோகத்து பாஷையிலிருந்து பூலோகத்து பாஷைக்கு வந்துட்டார் :-))
2009/11/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> பிரபு! தாங்கள் ஏதோ மனக்கஷ்டத்தில் இருப்பதாகப் படுகிறது.
> மற்றபடி தங்கள் தோற்றம் ஸ்ரீவைகுண்டத்தில் சதா சர்வ காலமும்
> என்னப்பனுக்கு மங்களம் பாடும் வேதியர் கோலமாகத் தெரிகிறது.
>
ஹாஹாஹாஹா என்று காட்டின் குலை நடுங்கும்படி சிரித்துவிட்டான் ஸோம சர்மா. ‘நீ...’ ‘என்னைக் காப்பாற்றப் போகிறாயாஆஆ’இல்லை பிரபோ! ஜீவர்களில் யார் ஒருவரும் மற்றவருக்கு ரக்ஷகம் அன்று. ஏன் எந்த ஜீவனுமே தானே தனக்கே ரக்ஷமானவனும் அன்று. என்றும் எப்பொழுதும் எல்லாவிதத்தும் எந்த ஜீவனுக்கும் ஏக ரக்ஷகன் ஸ்ரீமந்நாராயணந்தான் ஸ்வாமி.ஹே பாகவதா! எப்படா வாய்ப்பு என்று உபதேசம் பண்ண ஆரம்பித்துவிட்டாயோ? ஆமாம் உன்னை உண்மையிலேயே கேட்கிறேன்....... என்னைக் கண்டால் உனக்கு பயமாக இல்லை. உன் தொடைகள் அஞ்சி நடுங்கவில்லை? நா வறளவில்லை? ஹ்ருதயம் குட்டி மின்னல்களாய்ச் சிதறி அடிக்கவில்லை. சொல் சொல் சொல். செந்நாயும் கூட என்னைக் கண்டால் காத தூரம் ஒடுவதைக் கண்டிருக்கிறேனடா. புலிகள் நான் இருக்கும் பகுதியில் நடமாடுவதில்லை. ஏதேதோ பேசி மனத்தை மயக்கி உயிர்ப்பிச்சை கேட்டுத் தப்பிக்கலாம் என்ற எண்ணமா?பிரபு! நான் ஏன் தங்களைக் கண்டு அஞ்ச வேண்டும்? நீரோ சதுர் வேதங்களையும் அறிந்த சிரேஷ்டர். சிறந்த வேத வித்துக்களின் தரிசனம் பகவத் கிருபையாலன்றோ ஒருவருக்கு ஏற்படுகிறது? வேத மயனான த்விஜத்தை வாஹனமாய்க் கொண்டல்லவோ பரந்தாமன் எங்கும் எழுந்தருளுகிறார். அப்படிப்பட்ட த்விஜ ச்ரேஷ்டரைப் பார்ப்பது என்பது ஸ்ரீமந் நாராயண மூர்த்தியையே தர்சிப்பது போலன்றோ?(ஸோம சர்மா தனக்குள்:-- என்ன இந்த பாகவதன் பைத்தியமா? அல்லது கல்லுளி மங்கனா? இல்லையேல் பெரும் புரட்டுக்காரனா? ஆனால் இவன் பேசப் பேச எனக்குள் அடக்க முடியாமல் சுய அனுதாபம் பீறிட்டு எழுகிறதே! மேலும் இவனோடு வார்த்தை வளர்த்தினால் அபாயம்)ஏய் பாகவதா! பயப்படாதே உண்மையைச் சொல். என்னைப் பார்த்தால் கோரமாய், உயிரோடு ஆளை அடித்து விழுங்கும் பிசாசாய், அருவருப்பாய் உனக்குத் தெரியவில்லை? விட்டால் போதும் தலை தெரிக்க ஓடி மறைய வேண்டும் என்று நீ நினைக்கவில்லை? சொல். பொய் பேசாதே. எப்படியும் உன்னை இன்று கொல்லாமல் விடுவதில்லை. எனவே மரணம் உறுதி என்று அறிந்த மனிதன் எவந்தான் பொய் பேச விரும்புவான்.? சொல் என்னைப் பார்த்தால் எப்படி உனக்குத் தெரிகிறது?
பிரபு! தாங்கள் ஏதோ மனக்கஷ்டத்தில் இருப்பதாகப் படுகிறது. மற்றபடி தங்கள் தோற்றம் ஸ்ரீவைகுண்டத்தில் சதா சர்வ காலமும் என்னப்பனுக்கு மங்களம் பாடும் வேதியர் கோலமாகத் தெரிகிறது.
இங்கு பார்! கண்கள் பேய் போல் பிதுங்கிக் கொண்டு, அழுகிய நாற்றம் உடலெல்லாம் வீசியபடி, பாதி தின்று இறந்து அழுகி புழுத்த ஓநாயின் தோலைப் போர்த்தியபடி.....ஸ்வாமி! தங்கள் மனத்தைப் பாதிக்கும்படி ஏதோ கொடிய செயல் நடந்திருக்கிறது. தங்களுடைய தோற்றம் வணங்கத் தக்கதாகவே உள்ளது. அதற்குத்தான் சொல்கிறேன். வாருங்கள் கோவிலுக்குப் போய் அந்த கருணாமூர்த்தியிடம் மன்றாடினால் அனைத்தும் சுபமாய் ஆகும்.ஹாஹா ஹஹா இப்பொழுது உன் திட்டம் புரிந்ததடா பாகவதா! உன் கோஷ்டிக்கு ஆள் சேர்க்கிறாயா? ஏதோ தமிழில் நாலு பாட்டு பாடிக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாய் நீங்கள் அழுது புரண்டால் அது வேதத்தைக் காட்டிலும் சிறந்தது ஆய்விடுமோ? வேதம் சொன்ன வாயடா இது. உன் அப்பளாம் தட்டுகிற பஜனைக்கு ஆள் வேண்டுமோ? அதனால் எப்படியோ நைச்சியம் பேசி என்னை இழுக்கிறாய். சிலரைப் பேச விட்டால் மிகவும் ஆபத்து. வா வா வா நேரம் கடத்தாதே. ஓடிவிடலாம் என்று மனப்பால் குடிக்காதே.ஸ்வாமி! நான் மனம் அறிந்த சத்யத்தைத்தான் பேசினேன். தாங்கள் நம்பாமல் போனது என் துர்பாக்கியமே. மற்றபடி இறந்தபின் நாயும் நரியும் உண்ணும் இந்த உடல் ஒரு நல்லவருக்குப் பயன்பட்டால் அதைவிட என்ன பேறு இருக்கிறது. நான் இறப்பதற்குக் கவலைப் படவில்லை. ஆனால் என் விரதம் ஒன்று இருக்கிறது. அது முடிக்காமல் போனால் அந்தப் பாபம் என்னை வாட்டினாலும் பரவாயில்லை. தங்களையும் சேர்த்து வாட்டத் தொடங்கி விடுமோ என்று பயப்படுகிறேன். யாகங்களை நடுவில் நிறுத்தியவரும், விரததை அகாரணமாகப் பங்கப் படுத்தியவரும் பெரும் கேட்டை அடைகின்றனர் என்று பெரியோர்கள் சொல்லக் கேள்வி.(ஆஹா! இவனுக்கு நம் கதை தெரியுமோ? தெரிந்தே ஆழம் பார்க்கிறானா? இவனை ஒரே அடி அடித்துச் சாய்க்க நேரம் ஆகாது. ஆனால் உண்மையில் அவன் சொல்வதுபோல் விரதியாய் இருந்தால் அந்த விரத பங்கம்..என்னை ..ஐயோ கொடுமை ...இன்னும் எவ்வளவு நாட்கள் துயருற வேண்டுமோ? முதலில் இவனை அனுப்பிவிடுவது நல்லது)ஏய் என்ன கதைக்கிறாய்? என்ன விரதம்?ஸ்வாமி! நான் பாலாற்றின் தீரத்தில் மஹ்ந்திர பர்வத பார்ச்வத்தில் வசிக்கின்றவன். திருக்குறுங்குடி க்ஷேத்ரத்திற்குப் போய் கடந்த பத்து ஆண்டுகளாக திருப்பள்ளி எழுச்சி உணர்த்தும் ஜாகர விரதத்தைச் செய்து வருகிறேன். இன்றும் கருக்கலுக்கு முன்னமே எழுந்து அங்குதான் போய்க்கொண்டிருக்கிறேன். உத்யோகித்துக் கிளம்பிவிட்ட லக்ஷ்யத்தை ஒருவன் எய்தாமல் போனால் அது மிகவும் பரிதாபமானது. லக்ஷ்யத்தை நிறைவேற்றியவனின் மனமும் உடலும் பூரண பூரிப்பு உடையதாக ஆகிறது. அந்த திருப்பள்ளி எழுச்சி உணர்த்துதல் ஆகிய ஜாகர விரதத்தை முடித்து இங்கேயே வந்துவிடுகிறேன். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும்.ஏய் என்ன பசப்பு? என்ன பொய்? எவனாவது பிரம்ம ரக்ஷஸ் கையிலே அகப்பட்டுப் பின்பு விடுபட்டபின் திரும்பி வருவானா?பொய் இல்லை ஸ்வாமி! நிச்சயம் வருவேன். சத்யத்தில்தான் உலகம் பிறக்கிறது. சத்யத்திலே நிலை பெறுகிறது. எனவே சத்யம் தவறேன் நான். அவ்வாறு சத்யத்திலே நான் தவறும் பக்ஷத்தில் என்ன துர்க்கதியை அடைவேன் என்பதை கோரமான பிரதிக்ஞைகள் மூலம் தெரியப் படுத்துகிறேன். அப்பொழுதேனும் தாங்கள் என்னை நம்புவீர்கள் அன்றோ?
(என்ன இவன் பெரிய வம்பனாக இருப்பான் போலிருக்கிறதே) என்ன பிரதிக்ஞைகள்? (தொடரும்)
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் >>>>>
ஜில்..ஜில் என்று தில்லானா மோகனாம்பாள் சதங்கை ஒலி போல் நடை போடுகிறது
(அப்பா..இந்த ஸ்ரீரங்கத்து ....... தப்பி விட்டேன் ;-)>>>>>>
க.>
பிகு: ஸ்வாமி தேவலோகத்து பாஷையிலிருந்து பூலோகத்து பாஷைக்கு வந்துட்டார் :-))
2009/11/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> பிரபு! தாங்கள் ஏதோ மனக்கஷ்டத்தில் இருப்பதாகப் படுகிறது.
> மற்றபடி தங்கள் தோற்றம் ஸ்ரீவைகுண்டத்தில் சதா சர்வ காலமும்
> என்னப்பனுக்கு மங்களம் பாடும் வேதியர் கோலமாகத் தெரிகிறது.
>
அதெல்லாம் இருக்கட்டும் இந்த 'மனோ' யாருன்னு கண்டு பிடிச்சீங்களா?
(பிரம்ம ராட்சசன் சகவாசம் :-))
க.>
க.>
ஹாஹாஹாஹா என்று காட்டின் குலை நடுங்கும்படி சிரித்துவிட்டான் ஸோம சர்மா. ‘நீ...’ ‘என்னைக் காப்பாற்றப் போகிறாயாஆஆ’இல்லை பிரபோ! ஜீவர்களில் யார் ஒருவரும் மற்றவருக்கு ரக்ஷகம் அன்று. ஏன் எந்த ஜீவனுமே தானே தனக்கே ரக்ஷமானவனும் அன்று. என்றும் எப்பொழுதும் எல்லாவிதத்தும் எந்த ஜீவனுக்கும் ஏக ரக்ஷகன் ஸ்ரீமந்நாராயணந்தான் ஸ்வாமி.ஹே பாகவதா! எப்படா வாய்ப்பு என்று உபதேசம் பண்ண ஆரம்பித்துவிட்டாயோ? ஆமாம் உன்னை உண்மையிலேயே கேட்கிறேன்....... என்னைக் கண்டால் உனக்கு பயமாக இல்லை. உன் தொடைகள் அஞ்சி நடுங்கவில்லை? நா வறளவில்லை? ஹ்ருதயம் குட்டி மின்னல்களாய்ச் சிதறி அடிக்கவில்லை. சொல் சொல் சொல். செந்நாயும் கூட என்னைக் கண்டால் காத தூரம் ஒடுவதைக் கண்டிருக்கிறேனடா. புலிகள் நான் இருக்கும் பகுதியில் நடமாடுவதில்லை. ஏதேதோ பேசி மனத்தை மயக்கி உயிர்ப்பிச்சை கேட்டுத் தப்பிக்கலாம் என்ற எண்ணமா?பிரபு! நான் ஏன் தங்களைக் கண்டு அஞ்ச வேண்டும்? நீரோ சதுர் வேதங்களையும் அறிந்த சிரேஷ்டர். சிறந்த வேத வித்துக்களின் தரிசனம் பகவத் கிருபையாலன்றோ ஒருவருக்கு ஏற்படுகிறது? வேத மயனான த்விஜத்தை வாஹனமாய்க் கொண்டல்லவோ பரந்தாமன் எங்கும் எழுந்தருளுகிறார். அப்படிப்பட்ட த்விஜ ச்ரேஷ்டரைப் பார்ப்பது என்பது ஸ்ரீமந் நாராயண மூர்த்தியையே தர்சிப்பது போலன்றோ?(ஸோம சர்மா தனக்குள்:-- என்ன இந்த பாகவதன் பைத்தியமா? அல்லது கல்லுளி மங்கனா? இல்லையேல் பெரும் புரட்டுக்காரனா? ஆனால் இவன் பேசப் பேச எனக்குள் அடக்க முடியாமல் சுய அனுதாபம் பீறிட்டு எழுகிறதே! மேலும் இவனோடு வார்த்தை வளர்த்தினால் அபாயம்)ஏய் பாகவதா! பயப்படாதே உண்மையைச் சொல். என்னைப் பார்த்தால் கோரமாய், உயிரோடு ஆளை அடித்து விழுங்கும் பிசாசாய், அருவருப்பாய் உனக்குத் தெரியவில்லை? விட்டால் போதும் தலை தெரிக்க ஓடி மறைய வேண்டும் என்று நீ நினைக்கவில்லை? சொல். பொய் பேசாதே. எப்படியும் உன்னை இன்று கொல்லாமல் விடுவதில்லை. எனவே மரணம் உறுதி என்று அறிந்த மனிதன் எவந்தான் பொய் பேச விரும்புவான்.? சொல் என்னைப் பார்த்தால் எப்படி உனக்குத் தெரிகிறது?
பிரபு! தாங்கள் ஏதோ மனக்கஷ்டத்தில் இருப்பதாகப் படுகிறது. மற்றபடி தங்கள் தோற்றம் ஸ்ரீவைகுண்டத்தில் சதா சர்வ காலமும் என்னப்பனுக்கு மங்களம் பாடும் வேதியர் கோலமாகத் தெரிகிறது.
இங்கு பார்! கண்கள் பேய் போல் பிதுங்கிக் கொண்டு, அழுகிய நாற்றம் உடலெல்லாம் வீசியபடி, பாதி தின்று இறந்து அழுகி புழுத்த ஓநாயின் தோலைப் போர்த்தியபடி.....ஸ்வாமி! தங்கள் மனத்தைப் பாதிக்கும்படி ஏதோ கொடிய செயல் நடந்திருக்கிறது. தங்களுடைய தோற்றம் வணங்கத் தக்கதாகவே உள்ளது. அதற்குத்தான் சொல்கிறேன். வாருங்கள் கோவிலுக்குப் போய் அந்த கருணாமூர்த்தியிடம் மன்றாடினால் அனைத்தும் சுபமாய் ஆகும்.ஹாஹா ஹஹா இப்பொழுது உன் திட்டம் புரிந்ததடா பாகவதா! உன் கோஷ்டிக்கு ஆள் சேர்க்கிறாயா? ஏதோ தமிழில் நாலு பாட்டு பாடிக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாய் நீங்கள் அழுது புரண்டால் அது வேதத்தைக் காட்டிலும் சிறந்தது ஆய்விடுமோ? வேதம் சொன்ன வாயடா இது. உன் அப்பளாம் தட்டுகிற பஜனைக்கு ஆள் வேண்டுமோ? அதனால் எப்படியோ நைச்சியம் பேசி என்னை இழுக்கிறாய். சிலரைப் பேச விட்டால் மிகவும் ஆபத்து. வா வா வா நேரம் கடத்தாதே. ஓடிவிடலாம் என்று மனப்பால் குடிக்காதே.ஸ்வாமி! நான் மனம் அறிந்த சத்யத்தைத்தான் பேசினேன். தாங்கள் நம்பாமல் போனது என் துர்பாக்கியமே. மற்றபடி இறந்தபின் நாயும் நரியும் உண்ணும் இந்த உடல் ஒரு நல்லவருக்குப் பயன்பட்டால் அதைவிட என்ன பேறு இருக்கிறது. நான் இறப்பதற்குக் கவலைப் படவில்லை. ஆனால் என் விரதம் ஒன்று இருக்கிறது. அது முடிக்காமல் போனால் அந்தப் பாபம் என்னை வாட்டினாலும் பரவாயில்லை. தங்களையும் சேர்த்து வாட்டத் தொடங்கி விடுமோ என்று பயப்படுகிறேன். யாகங்களை நடுவில் நிறுத்தியவரும், விரததை அகாரணமாகப் பங்கப் படுத்தியவரும் பெரும் கேட்டை அடைகின்றனர் என்று பெரியோர்கள் சொல்லக் கேள்வி.(ஆஹா! இவனுக்கு நம் கதை தெரியுமோ? தெரிந்தே ஆழம் பார்க்கிறானா? இவனை ஒரே அடி அடித்துச் சாய்க்க நேரம் ஆகாது. ஆனால் உண்மையில் அவன் சொல்வதுபோல் விரதியாய் இருந்தால் அந்த விரத பங்கம்..என்னை ..ஐயோ கொடுமை ...இன்னும் எவ்வளவு நாட்கள் துயருற வேண்டுமோ? முதலில் இவனை அனுப்பிவிடுவது நல்லது)ஏய் என்ன கதைக்கிறாய்? என்ன விரதம்?ஸ்வாமி! நான் பாலாற்றின் தீரத்தில் மஹ்ந்திர பர்வத பார்ச்வத்தில் வசிக்கின்றவன். திருக்குறுங்குடி க்ஷேத்ரத்திற்குப் போய் கடந்த பத்து ஆண்டுகளாக திருப்பள்ளி எழுச்சி உணர்த்தும் ஜாகர விரதத்தைச் செய்து வருகிறேன். இன்றும் கருக்கலுக்கு முன்னமே எழுந்து அங்குதான் போய்க்கொண்டிருக்கிறேன். உத்யோகித்துக் கிளம்பிவிட்ட லக்ஷ்யத்தை ஒருவன் எய்தாமல் போனால் அது மிகவும் பரிதாபமானது. லக்ஷ்யத்தை நிறைவேற்றியவனின் மனமும் உடலும் பூரண பூரிப்பு உடையதாக ஆகிறது. அந்த திருப்பள்ளி எழுச்சி உணர்த்துதல் ஆகிய ஜாகர விரதத்தை முடித்து இங்கேயே வந்துவிடுகிறேன். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும்.ஏய் என்ன பசப்பு? என்ன பொய்? எவனாவது பிரம்ம ரக்ஷஸ் கையிலே அகப்பட்டுப் பின்பு விடுபட்டபின் திரும்பி வருவானா?பொய் இல்லை ஸ்வாமி! நிச்சயம் வருவேன். சத்யத்தில்தான் உலகம் பிறக்கிறது. சத்யத்திலே நிலை பெறுகிறது. எனவே சத்யம் தவறேன் நான். அவ்வாறு சத்யத்திலே நான் தவறும் பக்ஷத்தில் என்ன துர்க்கதியை அடைவேன் என்பதை கோரமான பிரதிக்ஞைகள் மூலம் தெரியப் படுத்துகிறேன். அப்பொழுதேனும் தாங்கள் என்னை நம்புவீர்கள் அன்றோ?(என்ன இவன் பெரிய வம்பனாக இருப்பான் போலிருக்கிறதே) என்ன பிரதிக்ஞைகள்? (தொடரும்)ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
On 11/26/09, shylaja <shyl...@gmail.com> wrote:சனிக்கிழமை காலைவரைதான் கெடு அதுக்குள்ள கதையை முழுக்க சொல்லிடவும் ஆமா!
கவலையே படாதே பெண்ணே! நாளை கதை நிறைவு. சனிக்கிழமை என் விளக்கம், விமரிசனம், சக விமரிசனத்திற்கான அழைப்பு இதெல்லாம் ஷெட்யூல். தயாராக இருக்கவும். சிறந்த விமரிசனக் கணை அல்லது கண்ணி இடுவோர்க்கு ........????? :--)))>>>
விமரிசனக் கணை - Plain Criticism
விமரிசனக் கண்ணி - Constructive Criticism:-)
புரிந்தது குமரன் நன்றி
On 11/25/09, shylaja <shyl...@gmail.com> wrote:.**********************************************விளக்கம் :---1) க்ஷமா --பொறுமை2)ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் சேதனம் அசேதனம் என்று இரு பிரிவுகளைச் சொல்லுகிறது. சைதன்யத்தை உடையது சேதனம், இதில் ஜீவனாகிய சேதனனும், பரம சேதனன் என்று சொல்லப்படும் பகவானும் அடங்குவர்.3)சைதன்யம் இருந்தால்தான் நல்லது தீயது என்ற விவேகம் ஏற்பட வாய்ப்பு. நல்லதும் தீயதும் விவேகிக்கும் அறிவிற்குத்தான் இதைச் செய் அதைச் செய்யாதே என்ற விதி நிஷேதங்கள். விதி -- விதிப்பது; நிஷேதம் -- தடுப்பது. இன்னது வேண்டும் இது வேண்டாதது. இதனால் மகிழ்வேன் இதனால் துன்புறுவேன் என்று யோசித்தே மனிதன் போகம் துய்க்கிறான். எனவே புக்தியும் மனிதனின் சைதன்யத்தை அடிப்படையாக உள்ளது. இருவினைகளையும் ஒதுக்கி பற்றற்று நிற்கும் வைராக்கியம், அதன்முன்னர் ஏற்படும் விவேகம், இவையிற்றுக்கெல்லாம் அடிப்படையான முக்திக்கான தீவிர இச்சை இவையும் அறிவு என்பதை எதிர்பார்த்தே இருக்கின்றன.இந்த சைதன்யத்தைக் கார்யப் படுத்துவது எனபதுதான் புரிந்துகொள்வது ஆகும். எனவே வேதம் வல்லோரும், யாக நிபுணர்களும் தாங்கள் சொல்லும் வேதமும், செய்யும் யாகமும் என்ன என்று சைதன்யம் கொண்டு உய்த்தறிவார்களேயானால் அனைத்து மந்த்ரங்களின் தாத்பர்யமும், யாகங்களின் அமைப்புகளும், கான மயமான ஸாமத்தின் ரஸமும் பகவானையே குறிப்பன என்று புரிந்துகொள்ளலாம்*********************************(வேறு ஏதாவது புரியவில்லையென்றால் கேட்கலாம்) >>>>>>>>>
சுமாராப்புரியறது இப்போ//// அறிவைக்கொண்டு செயலாற்றச் சொல்கிறது என இன்னமும் இதை எளிமையா சொன்னால் அது சரியாக இருக்குமோ?
/// இந்தக் குழப்பத்தில் முதலில் அது விரோதிப்பது என் அருளின் பிரஸன்னத்தை. ஏனெனில் என் அருளில் சங்கல்பங்கள் இயங்க மாட்டா. சங்கல்பங்களில் ஜிமூதனாகிவிட்ட ஜீவன் அனுபவத்தால் அறக்கழித்து ஓயும் வரை என் அருளுக்கு ஒப்புவதில்லை. அவன் செயலோய்ந்து என்பக்கம் திரும்பும்வரை நான் கூடவே அவனறியாமலேயே அவனுக்குள் இருந்து காக்க வேண்டியிருக்கிறது. //ஜீமுதன்=?ஸோம சர்மாவின் உள்ளே ஒரு நுணுக்கமாய்க் கட்டப்பட்ட சங்கல்பாயத்தக் கிரமம் ஒன்று இருக்கிறது. அது என்று அறுபடுமோ, என்று அவனுடைய சேதன முகம் என்னை நாடித் திரும்புமோ அன்று அவன் பிறந்து விடுவான். தற்சமயம் நடமாடும் இறப்பாய்க் கழிகின்றன அவனுடைய நாட்கள். />>>>>>>>
இது நன்றாகப்புரிகிறது , பலநேரங்களில் நமது நிலையும் இதுவே!நன்றி தொடர்க!
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய்/////
பெரியாழ்வார்
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
ஹே! Shy? யாம்!
யாரு நம்புவா? ;-)
க.>
பிகு: 'மை' ன்னு போடலாமே?