தமிழ் பௌத்தம் - தமிழ் சமணம்

526 views
Skip to first unread message

Suba.T.

unread,
Aug 11, 2015, 4:05:02 AM8/11/15
to மின்தமிழ், Subashini Tremmel
பல நாட்களாக என் மனதில் எழும் கேள்விகள்..
தமிழக நிலப்பரப்பில் தெய்வ வழிபாடு, கல்வெட்டுக்கள், சமணம், இந்து மத கோவில் தெய்வ வழிபாடுகள் என்ற வகையில் பல நூற்களை வாசிக்கும் போது தகவல் தொடர்ச்சியில் ஏற்படும் சில இடைவெளிகள் ஆகியன ...

இது மட்டுமன்றி தமிழகத்துக்கு வந்து சேர்ந்த இந்த இரண்டு மதங்களும் தமிழக நிலப்பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள்..

படிப்படியாக மறைந்த கால நிலை...

இப்படி சரியான தகவலுடன் இந்த துறை தொடர்பான ஆய்வினை த.ம.அ தொடர்வது சாலத் தகும் என் நினைத்து சென்ற ஆண்டு ஜூன் மாதம் நான் தமிழகத்தில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் கூடி சிறு கலந்தாலோசனை செய்தோம்.  அதனை மேலும் ஆக்கப்பூர்வமாக தொடர நினைக்கின்றேன். 

இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம்  பற்றிய  தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன். 

சில நூல்களை நாம் வாசித்தும் கருத்து பகிர்வது தகும் என நினைக்கின்றேன். 
எந்தக் கருத்தை பதிந்தாலும் ஆதாரப் பூர்வமான நூலைச் சுட்டிக் காட்டி கருத்து பகிரக் கேட்டுக் கொள்கின்றேன்.  உசாத்துணைகள், குறிப்பு நூல்கள் இல்லாத பதிவை தவிர்க்கவும்!

ஆர்வமுள்ளோர் பங்கெடுக்க சில நூற்களை நாம் வலைப்பக்கத்திலிருந்தும் தரவிறக்கி வாசிக்க கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு டிஜிட்டல் நூலக கலெக்‌ஷன் போல தொகுத்து அதனை ரெஃபரன்ஸுக்கு  நாம்  பயன்படுத்துவது உதவும் என நினைக்கின்றேன். கருத்துக்களை வரவேற்கின்றேன்.

சுபா



--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

தேமொழி

unread,
Aug 11, 2015, 4:55:20 AM8/11/15
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com


On Tuesday, August 11, 2015 at 1:05:02 AM UTC-7, Suba.T. wrote:
பல நாட்களாக என் மனதில் எழும் கேள்விகள்..
தமிழக நிலப்பரப்பில் தெய்வ வழிபாடு, கல்வெட்டுக்கள், சமணம், இந்து மத கோவில் தெய்வ வழிபாடுகள் என்ற வகையில் பல நூற்களை வாசிக்கும் போது தகவல் தொடர்ச்சியில் ஏற்படும் சில இடைவெளிகள் ஆகியன ...

இது மட்டுமன்றி தமிழகத்துக்கு வந்து சேர்ந்த இந்த இரண்டு மதங்களும் தமிழக நிலப்பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள்..

படிப்படியாக மறைந்த கால நிலை...

இப்படி சரியான தகவலுடன் இந்த துறை தொடர்பான ஆய்வினை த.ம.அ தொடர்வது சாலத் தகும் என் நினைத்து சென்ற ஆண்டு ஜூன் மாதம் நான் தமிழகத்தில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் கூடி சிறு கலந்தாலோசனை செய்தோம்.  அதனை மேலும் ஆக்கப்பூர்வமாக தொடர நினைக்கின்றேன். 

இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம்  பற்றிய  தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன். 

1
பௌத்தமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி 

2
சமணமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி 

Suba.T.

unread,
Aug 11, 2015, 5:01:40 AM8/11/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-11 10:55 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Tuesday, August 11, 2015 at 1:05:02 AM UTC-7, Suba.T. wrote:
பல நாட்களாக என் மனதில் எழும் கேள்விகள்..
தமிழக நிலப்பரப்பில் தெய்வ வழிபாடு, கல்வெட்டுக்கள், சமணம், இந்து மத கோவில் தெய்வ வழிபாடுகள் என்ற வகையில் பல நூற்களை வாசிக்கும் போது தகவல் தொடர்ச்சியில் ஏற்படும் சில இடைவெளிகள் ஆகியன ...

இது மட்டுமன்றி தமிழகத்துக்கு வந்து சேர்ந்த இந்த இரண்டு மதங்களும் தமிழக நிலப்பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள்..

படிப்படியாக மறைந்த கால நிலை...

இப்படி சரியான தகவலுடன் இந்த துறை தொடர்பான ஆய்வினை த.ம.அ தொடர்வது சாலத் தகும் என் நினைத்து சென்ற ஆண்டு ஜூன் மாதம் நான் தமிழகத்தில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் கூடி சிறு கலந்தாலோசனை செய்தோம்.  அதனை மேலும் ஆக்கப்பூர்வமாக தொடர நினைக்கின்றேன். 

இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம்  பற்றிய  தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன். 

1
​​
பௌத்தமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி 

2
சமணமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி 
 


​Studies in Jainism (TamilNadu)
​நடுனாட்டு சமணத் தடயங்கள்
சமணத் தடயங்கள்
சமணமும் தமிழும்
திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு

ஆகிய நூல்கள் என்னிடம் உள்ளன. 

பௌத்தமும் தமிழும் - சுட்டியிலிருந்து வாசிக்க எனக்கு உதவும். நன்றி.

பௌத்தம் தொடர்பான அயோத்திதாசர் நூலை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். அதனைத் தேட வேண்டும்.

ஏனைய நூல்களையும் தேட வேண்டும்.

சுபா

அன்டார்டிகா தமிழன்

unread,
Aug 11, 2015, 12:09:15 PM8/11/15
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
இது ஒரு புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.  விக்கிரமாதித்தர்கள் குழுவில் கூட்டத்தில் கோவிந்தா போடாமல் நான் வேதாளத்துக்கு வக்கால்த்து வாங்குவது இழை இரு தரப்பு வாதங்களின் அடிப்படையில் தகவலை நிறுவ உதவக்கூடும்

இணையத்தில் கிடைக்கும் ஆவணங்கள் இந்த மடலாடல்குழுவில் பலமுறை ஆதாரமாக வைத்து முரண்பாடான வாதங்களில் அறிஞர்களின் காலத்தை விரயம் செய்ததை நீங்கள் நன்குனர்வீர்கள்.  இணையத்தில் கிடைக்கும் வளங்கள் பெரும்பாலும் பி.டி.எஃப் கோப்பாக இருப்பதால் தேடுபொறிமூலம் தேடுவது இய்லாத காரியம்.  சமணத்தின் தொடக்கம் தமிழ்நாட்டில் எப்போது என்பதும் தமிழ் தெய்வ வழிபாட்டுடன் எங்கனம் இனைந்து தமிழ்ச் சமணத்தை வளர்த்தது என்பதற்கான ஆவணங்கள் கிளப்பிரர் காலத்தின் முற்றும் மறைந்துவிட்டதாகக் குறிப்பிடப்படுவதால் ஆய்வுகள் இணையத்தில் கிடைக்கும் நூல்களோடு களப்பணி மூலமாகவும் அறிதல் அவசியம்

ஆங்கில அரசு தமிழ்நாட்டில் பல ஊர்களில் அழிந்த நிலையில் இருந்த கோவில்களைப்பற்றிய தகவலைத் தொகுத்து வெளியிட்டுள்ள நிலையில் அந்த இடங்களில் உள்ள மாணவர்கள் தன்னார்வலர்கள் துணைகொண்டு அந்த எச்சங்களின் இன்றைய நிலையைச் சக்திவாய்ந்த அலைபேசியில் படம்பிடித்து அனுப்பலாம். அவ்வறு கிடைக்கும் தொடக்கத் தகவல்களை மின்தமிழ் அறிஞர்குழு தரப்படுத்தி நம்பகத்தன்மைமிக்கத் தரவுக்ளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யலாம்

தமிழ்ப் பெளத்தம் பற்றிய செய்திகள் அச்சிலும் இணையத்திலும் அரிதாகவே கிடைக்கும் நிலையில் கிழக்காசிய நாடுகளில் இன்னும் இருக்கும் எச்சங்களைக்கொண்டு மீள்பதிவு செய்யலாம்.  மின்தமிழில் சிலருக்கு அயோத்திதாசர் என்றாலே ஒவ்வாமை வந்துவிடும் நிலையில் உங்களால் அயோத்திதாசரை எவ்வளவுதூரம் முன்னெடுக்கமுடியும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை

தமிழ் பெளத்தமும் தமிழ்ச் சமணமும் மக்கள் மரபுவழியில் மறைபொருளாக இருப்பதால் மக்கள் இயக்கம் ஆர்வர்லகளே ஆய்வாளர்களாக மாறி அவர்களிடம் உள்ள அனுமானங்களையும் தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு நம்பகத்தன்மை மிக்க தகவலையும் செய்திகளையும் அளிக்கலாம்.  அறிஞர்களின் ஆய்வு ஒருபுறம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள தமிழ்ப் பெளத்த எச்சங்களையும் தமிழ்ச் சமண் எச்சங்களையும் அடையாளம் காண்பதும் வாய்மொழி நாட்டார் வரலாறுமூலம் 2000 ஆண்டுகளூக்கி முற்பட்ட சரித்திர நிகழ்வுகளை நிறுவ உதவும் வகையில் திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்

அன்டார்ட்டிகா தமிழன்

Suba.T.

unread,
Aug 11, 2015, 4:34:14 PM8/11/15
to அன்டார்டிகா தமிழன், மின்தமிழ், Subashini Tremmel
அன்புள்ள அண்டார்டிகா தமிழன்,


2015-08-11 18:09 GMT+02:00 அன்டார்டிகா தமிழன் <radius.co...@gmail.com>:
இது ஒரு புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.  விக்கிரமாதித்தர்கள் குழுவில் கூட்டத்தில் கோவிந்தா போடாமல் நான் வேதாளத்துக்கு வக்கால்த்து வாங்குவது இழை இரு தரப்பு வாதங்களின் அடிப்படையில் தகவலை நிறுவ உதவக்கூடும்
​எப்படியாவது உதவினால் சரி :-)​
 

இணையத்தில் கிடைக்கும் ஆவணங்கள் இந்த மடலாடல்குழுவில் பலமுறை ஆதாரமாக வைத்து முரண்பாடான வாதங்களில் அறிஞர்களின் காலத்தை விரயம் செய்ததை நீங்கள் நன்குனர்வீர்கள்.  இணையத்தில் கிடைக்கும் வளங்கள் பெரும்பாலும் பி.டி.எஃப் கோப்பாக இருப்பதால் தேடுபொறிமூலம் தேடுவது இய்லாத காரியம்.

​உண்மை. இது ஒரு சிரமம். சில ஆங்கில நூல்கள் கிடைக்கலாம். ​
 
​Scribd   தொகுப்பில் தேடினால் ​கிடைக்கும். இபப்டி அவ்வப்போது செய்து தேடி நல்ல நூல்களை வாசித்த ஞாபகம் உண்டு.

 சமணத்தின் தொடக்கம் தமிழ்நாட்டில் எப்போது என்பதும் தமிழ் தெய்வ வழிபாட்டுடன் எங்கனம் இனைந்து தமிழ்ச் சமணத்தை வளர்த்தது என்பதற்கான ஆவணங்கள் கிளப்பிரர் காலத்தின் முற்றும் மறைந்துவிட்டதாகக் குறிப்பிடப்படுவதால் ஆய்வுகள் இணையத்தில் கிடைக்கும் நூல்களோடு களப்பணி மூலமாகவும் அறிதல் அவசியம்
​.
​ஏற்றுக் கொள்கிறேன்.
டாக்டர்.பத்மாவின் களப்பிரர் காலம் நூல் சில பயன்தரும் தகவல்களைத் தரும். ஆயினும் அது மட்டும் போதாது. மேலும் தேவை.


ஆங்கில அரசு தமிழ்நாட்டில் பல ஊர்களில் அழிந்த நிலையில் இருந்த கோவில்களைப்பற்றிய தகவலைத் தொகுத்து வெளியிட்டுள்ள நிலையில் அந்த இடங்களில் உள்ள மாணவர்கள் தன்னார்வலர்கள் துணைகொண்டு அந்த எச்சங்களின் இன்றைய நிலையைச் சக்திவாய்ந்த அலைபேசியில் படம்பிடித்து அனுப்பலாம். அவ்வறு கிடைக்கும் தொடக்கத் தகவல்களை மின்தமிழ் அறிஞர்குழு தரப்படுத்தி நம்பகத்தன்மைமிக்கத் தரவுக்ளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யலாம்
​.,
இதனை இவ்வாண்டு எனத் உதமிழக பயணத்தின் அனைத்து கல்லூரி சொற்பொழிவுகளிலும் இணைத்துக் கொல்ல நினைத்திருக்கின்றேன். மாணவர் ஆய்வுகள்  அவர்கள் ஆர்வமும் இணைந்தால் நல்ல பலனை தரும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் இது மட்டும் போதாது என்பது உண்மை.


தமிழ்ப் பெளத்தம் பற்றிய செய்திகள் அச்சிலும் இணையத்திலும் அரிதாகவே கிடைக்கும் நிலையில் கிழக்காசிய நாடுகளில் இன்னும் இருக்கும் எச்சங்களைக்கொண்டு மீள்பதிவு செய்யலாம்.  மின்தமிழில் சிலருக்கு அயோத்திதாசர் என்றாலே ஒவ்வாமை வந்துவிடும் நிலையில் உங்களால் அயோத்திதாசரை எவ்வளவுதூரம் முன்னெடுக்கமுடியும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை
​.
​யாருக்கு ஒவ்வாமை வந்தால் என்ன? ஆய்வு உலகில் ஆய்வுத்தரவுகள் தான் ஆராயப்படவேண்டுமே தவைர தனி நபர் விருப்பு வெருப்பு அல்ல. இந்தக் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு உண்டு என்று நான் அறிவேன்.​
 

தமிழ் பெளத்தமும் தமிழ்ச் சமணமும் மக்கள் மரபுவழியில் மறைபொருளாக இருப்பதால் மக்கள் இயக்கம் ஆர்வர்லகளே ஆய்வாளர்களாக மாறி அவர்களிடம் உள்ள அனுமானங்களையும் தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு நம்பகத்தன்மை மிக்க தகவலையும் செய்திகளையும் அளிக்கலாம்.  அறிஞர்களின் ஆய்வு ஒருபுறம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள தமிழ்ப் பெளத்த எச்சங்களையும் தமிழ்ச் சமண் எச்சங்களையும் அடையாளம் காண்பதும் வாய்மொழி நாட்டார் வரலாறுமூலம் 2000 ஆண்டுகளூக்கி முற்பட்ட சரித்திர நிகழ்வுகளை நிறுவ உதவும் வகையில் திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்
​.
​நன்றி.

​சுபா​

Prakash Sugumaran

unread,
Aug 11, 2015, 5:52:31 PM8/11/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel, அன்டார்டிகா தமிழன்

உலகத்தின் பல பகுதிகளில், பல மொழிகளை பேசும் சமண, பௌத்தா்களும் குறிப்பிட்ட சில உருவங்களையே வழிபடுகிறாா்கள். அதுபோலவே பிற மதத்தினரும்.

மதங்களின் ஆரம்ப கட்ட சமூக சூழ்நிலையையும், குறிப்பிட்ட அளவு சில மதங்கள் முத்திரை பதித்து நிறுவனங்களான பிறகு வேறு மதங்கள் உருவானதா, அதற்கான தேவைகள், பின்னணிகள், காரணங்கள்  பற்றி ஆராய முயல்வது பலன் தரலாம்.

எனவே மொழி அடிப்படையில் அல்லது ஒரு பகுதியை சாா்ந்த மதத்தேடல் காலத்தை வீணடிக்கும் செயலாக மாறலாம்.

மதங்களின் தொடக்கம் கல்விமுறை, கல்விமுறையின் தேவை அறிவுத்தேடல், அதற்கான தேவை சமூக வாழ்வியல்...

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

அன்டார்டிகா தமிழன்

unread,
Aug 11, 2015, 7:55:47 PM8/11/15
to மின்தமிழ், radius.co...@gmail.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
வேதாளத்துகிட்ட பயமே இல்லையா? என்ன எள்ளல் என்ன எள்ளல் இனி வரப்போகும் இம்சைகளைத் தெரிந்துதான் கலாய்க்கிறார்களா

அன்டார்ட்டிகா தமிழன்

Suba.T.

unread,
Aug 12, 2015, 3:49:54 AM8/12/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-11 23:52 GMT+02:00 Prakash Sugumaran <praka...@gmail.com>:

உலகத்தின் பல பகுதிகளில், பல மொழிகளை பேசும் சமண, பௌத்தா்களும் குறிப்பிட்ட சில உருவங்களையே வழிபடுகிறாா்கள். அதுபோலவே பிற மதத்தினரும்.

மதங்களின் ஆரம்ப கட்ட சமூக சூழ்நிலையையும், குறிப்பிட்ட அளவு சில மதங்கள் முத்திரை பதித்து நிறுவனங்களான பிறகு வேறு மதங்கள் உருவானதா, அதற்கான தேவைகள், பின்னணிகள், காரணங்கள்  பற்றி ஆராய முயல்வது பலன் தரலாம்.

எனவே மொழி அடிப்படையில் அல்லது ஒரு பகுதியை சாா்ந்த மதத்தேடல் காலத்தை வீணடிக்கும் செயலாக மாறலாம்.

மதங்களின் தொடக்கம் கல்விமுறை, கல்விமுறையின் தேவை அறிவுத்தேடல், அதற்கான தேவை சமூக வாழ்வியல்...


​ப்ரகாஷ்,

மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

மொழி அடிப்படையில் எனும் போது தமிழ் பௌத்த, சமண இலக்கியத் தே​டாலாக நான் இந்த முயற்சியை முன்னெடுக்க வில்லை. 

இன்றைய தமிழக நிலப்பரப்பில் 
பௌத்த, சமண
​ மதங்கள் உருவாக்கிய தாக்கங்கள், அதனால் எழுந்த மாற்றங்கள், அதன் படிப்படியான சீர் குலைவு என்பனவற்றை தேடுவதே இந்த முயற்சியின் நோக்கம்.

சுபா​

Suba.T.

unread,
Aug 12, 2015, 3:51:17 AM8/12/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-12 1:55 GMT+02:00 அன்டார்டிகா தமிழன் <radius.co...@gmail.com>:
வேதாளத்துகிட்ட பயமே இல்லையா? என்ன எள்ளல் என்ன எள்ளல் இனி வரப்போகும் இம்சைகளைத் தெரிந்துதான் கலாய்க்கிறார்களா

​வேதாளத்திடம் பயம் இல்லை.
வேதாளம் நம் நோக்கம் ஆராய்ச்சி தொடர்பானது என்று அறிந்து உதவும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.,

Prakash Sugumaran

unread,
Aug 12, 2015, 2:29:56 PM8/12/15
to mint...@googlegroups.com

For your knoledge..

O Yudhishthira, in the country of the Pandyas are the tirthas named Agastya and Varuna! And, O bull among men, there, amongst the Pandavas, is the tirtha called the Kumaris. Listen, O son of Kunti, I shall now describeTamraparni. In that asylum the gods had undergone penances impelled by the desire of obtaining salvation. In that region also is the lake of Gokarna which is celebrated over the three worlds, hath an abundance of cool waters, and is sacred, auspicious, and capable, O child, of producing great merit. That lake is extremely difficult of access to men of unpurified souls. Mahabharatha 3:88[28]

The Pandyas were in close liaison with the Pandavas of the Mahabharata. Pandyan Kings took part in the Mahabharata War .(Karna Parav 20.25) Arjuna and Krishna married Pandyan princesses and had children through them.

And similarly, Pandya, who dwelt on the coast-land near the sea, came accompanied by troops of various kinds to Yudhishthira, the king of kings. Mahabharatha 5:19

Steeds that were all of the hue of the Atrusa flower bore a hundred and forty thousand principle car-warriors that followed that Sarangadhwaja, the king of the Pandyas. Mahabharatha 7.23

In return, Malayadhwaja pierced the son of Drona with a barbed arrow. Then Drona's son, that best of preceptors, smiling the while, struck Pandya with some fierce arrows, capable of penetrating into the very vitals and resembling flames of fire. Mahabharatha 8:20

&

The exact origins of Jainism in Tamil Nadu is unclear. However, Jains flourished in Tamil Nadu at least as early as the Sangam period. Tamil Jain tradition places their origins are much earlier. The Ramayana mentions thatRama paid homage to Jaina monksliving in South India on his way to Sri Lanka.Jain, Ashish (29 July 2011)."History of Tamil Jains"jainsquare.com. Archived from the original on 22 October 2014. Some scholars believe that the author of the oldest extant work of literature in Tamil (3rd century BCE),Tolkāppiyam, was a Jain.[58]

A number of Tamil-Brahmi inscriptions have been found in Tamil Nadu that date from the 2nd century BCE. They are regarded to be associated with Jain monks and lay devotees.[59][60]

Tirukkural by Valluvar is considered to be the work by a Jain by scholars like V. Kalyanasundarnar, Vaiyapuri Pillai,[61]Swaminatha Iyer,[62] P.S. Sundaram.[63] It emphatically supports vegetarianism (Chapter 26) and states that giving up animal sacrifice is worth more than thousand offerings in fire( verse (259).

Silappatikaram, first epic in Tamil literature, was written by a Camaṇa,Ilango Adigal. This epic is a major work in Tamil literature, describing the historical events of its time and also of then-prevailing religions, Jainism, Buddhism and Shaivism. The main characters of this work, Kannagi andKovalan, who have a divine status among Tamils, were Jains.

According to George L. Hart, who holds the endowed Chair in Tamil Studies by University of California, Berkeley, has written that the legend of the Tamil Sangams or "literary assemblies: was based on the Jain sangham at Madurai:

There was a permanent Jaina assembly called a Sangha established about 604 AD in Maturai. It seems likely that this assembly was the model upon which tradition fabricated the cangkam legend."[64]


Jainism began to decline around the 8th century, with many Tamil kings embracing Hindu religions, especiallyShaivism. Still, the ChalukyaPallava andPandya dynasties embraced Jainism.

--

Banukumar Rajendran

unread,
Aug 18, 2015, 3:07:44 AM8/18/15
to மின்தமிழ்
2015-08-11 14:25 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Tuesday, August 11, 2015 at 1:05:02 AM UTC-7, Suba.T. wrote:
பல நாட்களாக என் மனதில் எழும் கேள்விகள்..
தமிழக நிலப்பரப்பில் தெய்வ வழிபாடு, கல்வெட்டுக்கள், சமணம், இந்து மத கோவில் தெய்வ வழிபாடுகள் என்ற வகையில் பல நூற்களை வாசிக்கும் போது தகவல் தொடர்ச்சியில் ஏற்படும் சில இடைவெளிகள் ஆகியன ...

இது மட்டுமன்றி தமிழகத்துக்கு வந்து சேர்ந்த இந்த இரண்டு மதங்களும் தமிழக நிலப்பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள்..

படிப்படியாக மறைந்த கால நிலை...

இப்படி சரியான தகவலுடன் இந்த துறை தொடர்பான ஆய்வினை த.ம.அ தொடர்வது சாலத் தகும் என் நினைத்து சென்ற ஆண்டு ஜூன் மாதம் நான் தமிழகத்தில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் கூடி சிறு கலந்தாலோசனை செய்தோம்.  அதனை மேலும் ஆக்கப்பூர்வமாக தொடர நினைக்கின்றேன். 

இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம்  பற்றிய  தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன். 

1
பௌத்தமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி 

2
சமணமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி 

சிறந்த நூல்கள். பெளத்தம்/சமணம் அறிய விரும்புவோருக்கு உதவும் பொத்தகங்கள்.

----------------------------------------------

ஜைனவியல் அறிஞர் ஒருவரின் கவுந்தியடிகள் பற்றிய நூல் ஒன்றை இங்கு இடுகிறேன்.


இரா.பா


 
 

சில நூல்களை நாம் வாசித்தும் கருத்து பகிர்வது தகும் என நினைக்கின்றேன். 
எந்தக் கருத்தை பதிந்தாலும் ஆதாரப் பூர்வமான நூலைச் சுட்டிக் காட்டி கருத்து பகிரக் கேட்டுக் கொள்கின்றேன்.  உசாத்துணைகள், குறிப்பு நூல்கள் இல்லாத பதிவை தவிர்க்கவும்!

ஆர்வமுள்ளோர் பங்கெடுக்க சில நூற்களை நாம் வலைப்பக்கத்திலிருந்தும் தரவிறக்கி வாசிக்க கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு டிஜிட்டல் நூலக கலெக்‌ஷன் போல தொகுத்து அதனை ரெஃபரன்ஸுக்கு  நாம்  பயன்படுத்துவது உதவும் என நினைக்கின்றேன். கருத்துக்களை வரவேற்கின்றேன்.

சுபா



--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
Zydenbos_The-Jaina-Nun-Kavunti.pdf

Balasubramanian Zen

unread,
Aug 18, 2015, 7:09:37 AM8/18/15
to mint...@googlegroups.com

இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம்  பற்றிய  தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன். 

முனைவர் சுபா அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

கருத்துக்கள் தொடரும் பொழுது, நூல்கள் பட்டியலுக்கு முதலிடம் தருவது நல்லது.
நன்றி.
வணக்கம்.

பாலு
மதுரை.

N. Kannan

unread,
Aug 18, 2015, 10:44:55 AM8/18/15
to மின்தமிழ்
பௌத்தம் இந்தியாவை விட்டு ஏறக்குறைய அழிந்தது எவ்வாறு என்பது பெரும் புதிர். இன்னும் கூடப் பல வெளிநாட்டினர் பௌத்தம் இந்தியாவில் பிறந்து சநாதன தர்மத்தின் ஒரு கிளையாய் வளர்ந்து இந்திய சமய நோக்கை நெறிப்படுத்திய சமயம் என்பதை அறியார். எனது ஜெர்மன் நண்பர்கள் பௌத்தம் கற்க தாய்லாந்து செல்கின்றனர்.

தென்னாசியத் தடயங்களைப் பார்த்தால் அது தமிழ் மண்ணிலிருந்து வீறுகொண்டு எழுந்து ஆசியாவையே முற்றும் முழுவதுமாக மாற்றியிருக்கிறது என்பது புரியும் (பௌத்தம் என்பது இங்கு நுழையாமலிருந்தால் என்றோ சீனா உலக வல்லரசாகியிருக்கும் என்பது ஒரு சீன அறிஞர் கருத்து! அகிம்சா!!!!சாந்தி!!).

கொரிய ஆய்விற்கு தமிழ்ப் பௌத்த நாட்டார் கதைகள் மிக, மிக அவசியம். போதிதருமர் பற்றிய தீவிர ஆய்வு இங்கு தேவை.

மறைந்த தமிழ்ப்பௌத்தம் எங்கே? வாழ்கிறது, மறையுருவில் என்கிறார் மாயாவி (அட! பல பேரில் உலாவரும் நம்ம ஐயா! தாங்க!). அயோத்திதாசர் பற்றி உளம் திறந்து பேச வேண்டும். அறிய வேண்டும்.

மடை மாற்றம் செய்யாமல் இவ்விழை வளர என் வாழ்த்துகள். தமிழ் வளர்ச்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு வஇவ்வாய்வு தேவை. கிழக்கு நோக்குக! எனும் பொருளாதார பிணைப்புகளுக்கு இவ்வாய்வு தேவை. நாளையத் தமிழனுக்குச் சோறு போட இவ்வாய்வு தேவை!

வாழ்க!

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Aug 18, 2015, 11:23:53 AM8/18/15
to மின்தமிழ்

2015-08-18 20:14 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
மறைந்த தமிழ்ப்பௌத்தம் எங்கே? வாழ்கிறது, மறையுருவில் என்கிறார் மாயாவி (அட! பல பேரில் உலாவரும் நம்ம ஐயா! தாங்க!). அயோத்திதாசர் பற்றி உளம் திறந்து பேச வேண்டும். அறிய வேண்டும்.

​​
​உண்மை முனைவர் சுபா அவர்களின் வேண்டுகோளின்படி அயோத்திதாசப் பண்டிதர் தொடர்பான ஆய்வுக்கருத்துகள் பற்றிய நூல் பட்டியலும்

பெள்த்தம் தொடர்பான​ பன்மொழித் தொகுப்பும் இணைப்பில் காண்க

​அ.த​

15_bibliography.pdf
indica-et-buddhica-tabulae-201504151026.pdf

Balasubramanian Zen

unread,
Aug 18, 2015, 11:56:09 AM8/18/15
to mint...@googlegroups.com

ஆசாரியதுரை க. அயோத்தி தாஸக் கவிராஜப் பண்டிதர் " இரஙகற்பாமாலை"

பாலு
மதுரை.

20150818_202544.jpg
20150818_203004.jpg

Balasubramanian Zen

unread,
Aug 18, 2015, 12:40:01 PM8/18/15
to mint...@googlegroups.com

வணக்கம்
காத்தவராயன் @ க. அயோத்தி தாசரின் மேலும் சில நூல்கள்.

பாலு
மதுரை.

20150818_215705.jpg
20150818_215614.jpg
20150818_215512.jpg

Nagarajan Vadivel

unread,
Aug 19, 2015, 12:28:46 AM8/19/15
to மின்தமிழ்
தமிழ் பெளத்தமும் தமிழ் நிலம் சார்ந்த தொழில் பிரிவுகளும்










​ஆதாரம்: அயோத்திதாசர்

அ.த

இராமகி

unread,
Aug 19, 2015, 4:55:39 AM8/19/15
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
அது என்னவோ தெரியவில்லை, தமிழைத் தமிழாக எழுதாமல் சங்கதவொலிப்பிலேயே எழுதவேண்டும் என்று பலரும் முயல்கிறார்.  

சிவநெறி எப்படித் தமிழிற் சைவமானது? விண்ணவ நெறி எப்படித் தமிழில் வைணவமானது? அதேவோட்டத்தில் புத்தநெறியும் எப்படி பௌத்தமாகிறது? (சிலர் பவுத்தமென்றும் எழுதுகிறார்.) மொத்தத்தில் தமிழில் எதுவும் விளங்கிவிடக்கூடாது என்று ஏதோவொரு சொலவ மிரட்டல் தொடர்ந்துநடந்துகொண்டுள்ளது.. இப்படி எத்தனைநாட்களுக்குத் தமிழைச் சங்கத அச்சடிப்பில் வழிப்படுத்திக்கொண்டேயிருப்போம்? இன்னொன்றையும் இங்கே சொல்லவேண்டும். சமணம் என்ற சொல்லாட்சி. அது சரியா? 

சமணம் என்ற சொல் அதன் தொடக்கத்தில் மகதம் எங்கணும் ஆசீவிகம், செயினம், புத்தம் என்ற மூன்றையும் (இன்னும் அழிந்துபோன, உலகாய்தஞ் சாராத,  எல்லா வேதமறுப்பு நெறிகளையும்) குறிக்கும் சொல்லாகும். புத்தரையும் மற்கலி கோசலரையும் சமண என்ற விளிப்பு நன்றாகவே குறித்திருக்கிறது.  ஆசீவிகர், செயினர், புத்தர் என்ற மூவரும் நிக்கந்தராய்த்தான் முதலில் அறியப்பட்டார். பார்சுவநாதரின் தாக்கம் இவர்கள் மூவருக்குமே இருந்தது. பின்னால் நிக்கத்தரிலிருந்து விதப்புக் கொண்டபோது ஆசீவிகம் என்ற சொல் எழுந்தது. அந்தசொல்லின் பொருளென்ன? அதன் சொற்பிறப்பு என்ன? - என்று  இங்கு நான் சொல்லவில்லை. வேறொரு இடத்திற் பார்ப்போம்.  செயினர் என்ற பெயரும் மகாவீரர் தன் விதப்பான கூற்றுக்களை பர்ர்சுவ நாதரின் கூற்றுக்களோடு சேர்த்துச் சிறப்பித்தபோது எழுந்த பெயராகும். புத்தர் என்ற சொல்லும் சித்தார்த்த கோதமருக்கு அப்புறம் எழுந்தது. 

ஆசீவிகர் அழிந்தபின்னால், புத்தர் தனிப்பெயர் பெற்றபின்னால் சமணர் என்ற சொல் தென்னாட்டில் செயினருக்கு மட்டுமாய் ஆகிவந்தது. வடபுலத்தில் இப்படியாகவில்லை. அந்தந்த நெறிகளின் வரலாற்றுப் பின்புலத்தைக் குழப்பாது சமணர் என்ற பெயரைப் பொதுவில் வைத்து செயினர் என்ற பெயரை விதப்பாக வைத்தால் புரிதலுக்கு நல்லது.

இல்லாவிட்டால் சமய அரசியலிற்றான் அது முடியும்.

அன்புடன்,
இராம.கி. 

Nagarajan Vadivel

unread,
Aug 19, 2015, 5:16:38 AM8/19/15
to மின்தமிழ்

2015-08-11 13:34 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
ஒரு டிஜிட்டல் நூலக கலெக்‌ஷன் போல தொகுத்து அதனை ரெஃபரன்ஸுக்கு  நாம்  பயன்படுத்துவது உதவும் என நினைக்கின்றேன். கருத்துக்களை வரவேற்கின்றேன்.


​அயோத்திதாசரின் நூல் மேகக்கணினியில்

தனிமடலில் தரவிறக்கம் செய்ய வேண்டுக

தேவைக்கேற்ப ஆய்வுக்கேள்விகளுக்கேற்ப வளங்களையும் ஆவணங்களையும் என் மேகக்கணியில் இணைத்துவைக்கிறேன்.  பயன்படுத்த விரும்புவோர் பயன்படுத்தலாம்.  ஏதேனும் ஆவணங்கள் தேவையென்றாலும் தனிமடலில் தொடர்புகொள்ளலாம்

அ.த

N. Kannan

unread,
Aug 19, 2015, 5:44:35 AM8/19/15
to மின்தமிழ்
2015-08-19 16:55 GMT+08:00 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:
அது என்னவோ தெரியவில்லை, தமிழைத் தமிழாக எழுதாமல் சங்கதவொலிப்பிலேயே எழுதவேண்டும் என்று பலரும் முயல்கிறார்.  

சிவநெறி எப்படித் தமிழிற் சைவமானது? விண்ணவ நெறி எப்படித் தமிழில் வைணவமானது? அதேவோட்டத்தில் புத்தநெறியும் எப்படி பௌத்தமாகிறது? (சிலர் பவுத்தமென்றும் எழுதுகிறார்.) மொத்தத்தில் தமிழில் எதுவும் விளங்கிவிடக்கூடாது என்று ஏதோவொரு சொலவ மிரட்டல் தொடர்ந்துநடந்துகொண்டுள்ளது.. இப்படி எத்தனைநாட்களுக்குத் தமிழைச் சங்கத அச்சடிப்பில் வழிப்படுத்திக்கொண்டேயிருப்போம்? 

​ஐயா!

​தெரிந்து செய்யவில்லை. புழக்கத்திலுள்ள சொல்லாட்சியதுவே.​

நா.கண்ணன்​
 

இராமகி

unread,
Aug 19, 2015, 6:44:03 AM8/19/15
to மின்தமிழ்
தெரிந்தபின் சரியாய்ச் செய்வோமே! இன்று யாராவது சர்வகலாசாலை என்று எழுதுகிறாரா? எல்லோரும் பல்கலைக்கழகம் என்றுதானே எழுதுகிறோம்  ”தமிழ்” என்பதை “டமில்” என்று தமிழில் எழுதினால் ஏற்றுக்கொள்வோமா? அதைப் பழக்கத் தோயம் என்றால் சரியென்போமா? (சிலர் தோயத்தைத் தோஷம் ஆக்குவார்.) 

4 தடவை எழுத முயன்றால் தானே சிவநெறி, விண்ணவநெறி, புத்தநெறி என்று வந்துவிடுமே? வரலாற்று ஆவணங்களில் சைவம், வைணவம், பௌத்தம் என்றிருந்தால் அதை அப்படியே கையாளலாம். நாம் எழுதும்போது சரியாகக் கையாளுவோம். மொத்தத்தில் தமிழைத் தமிழாகக் கையாளுவோம். அதைச் சிறிதுசிறிதாகச் சங்கதமாக்கவேண்டாம்.

அப்புறம் சமணம் -  செயினம் என்ற விதப்பு வேறுபாட்டையும் சரியாகக் கையாளுவோம்.
அன்புடன்,
இராம.கி.

Suba.T.

unread,
Aug 19, 2015, 4:57:32 PM8/19/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-18 9:07 GMT+02:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:


----------------------------------------------

ஜைனவியல் அறிஞர் ஒருவரின் கவுந்தியடிகள் பற்றிய நூல் ஒன்றை இங்கு இடுகிறேன்.

​தரவிறக்கி வைத்துள்ளேன். 
நன்றி.

சுபா
 

Suba.T.

unread,
Aug 19, 2015, 4:58:37 PM8/19/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-18 13:09 GMT+02:00 Balasubramanian Zen <zen...@gmail.com>:

இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம்  பற்றிய  தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன். 

முனைவர் சுபா அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

கருத்துக்கள் தொடரும் பொழுது, நூல்கள் பட்டியலுக்கு முதலிடம் தருவது நல்லது.
நன்றி.
வணக்கம்.


​தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் நன்றி.
தொடர்ந்து கருத்து பகிர்ந்து வாருங்கள்.

சுபா

Suba.T.

unread,
Aug 19, 2015, 5:09:33 PM8/19/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-18 16:44 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:
பௌத்தம் இந்தியாவை விட்டு ஏறக்குறைய அழிந்தது எவ்வாறு என்பது பெரும் புதிர். இன்னும் கூடப் பல வெளிநாட்டினர் பௌத்தம் இந்தியாவில் பிறந்து சநாதன தர்மத்தின் ஒரு கிளையாய் வளர்ந்து இந்திய சமய நோக்கை நெறிப்படுத்திய சமயம் என்பதை அறியார். எனது ஜெர்மன் நண்பர்கள் பௌத்தம் கற்க தாய்லாந்து செல்கின்றனர்.
​காரணம் மிகத் தெளிவு. தாய்லாந்தில் நாடு முழுமைக்கும் புத்த மடஹ்ப்பாடங்கள் நடைபெறும் பள்ளிகள் இருக்கின்றன.

முன்னர்  நான் எனது தொடர்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். புத்த மத்தில் ​
 
​ஒரு சில ஆண்டுகள் தீவிர துறவை அனுஷ்டித்து பின்னர் இல்லறம் செல்வது என்பதை மக்களும் சரி துறவிகளும் சரி தவறாகக் கொள்வதில்லை. குறை கூறுவதில்லை. ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிட்ட காலம் (3 ஆண்டுகள் என தாய்லாந்தில் நடைமுறையில் குறிப்பிடுகின்றனர்) ​ துறவை ஆணும் சரி பெண்ணும் சரி இருபாலருமே மேற்கொள்ளலாம். இதிலும் பாகுபாடு இல்லை. இது இன்றைய நிலையில் தாய்லாந்து புத்தம் காட்டும் சமய நடைமுறை. இதனை பல ஜெர்மானியர்கள் விரும்புகின்றனர். தாய்லாந்தின் சுற்றுப்பயனிகள் பட்டியலில்  ஜெர்மனியின் சுற்றுப் பயணிகள் எண்ணிக்கை மிக முக்கியமானது. 


தென்னாசியத் தடயங்களைப் பார்த்தால் அது தமிழ் மண்ணிலிருந்து வீறுகொண்டு எழுந்து ஆசியாவையே முற்றும் முழுவதுமாக மாற்றியிருக்கிறது என்பது புரியும் (பௌத்தம் என்பது இங்கு நுழையாமலிருந்தால் என்றோ சீனா உலக வல்லரசாகியிருக்கும் என்பது ஒரு சீன அறிஞர் கருத்து! அகிம்சா!!!!சாந்தி!!).

கொரிய ஆய்விற்கு தமிழ்ப் பௌத்த நாட்டார் கதைகள் மிக, மிக அவசியம். போதிதருமர் பற்றிய தீவிர ஆய்வு இங்கு தேவை.
​போதி தர்மர் இந்தியாவிலும் நேப்பால், தீபெத் ஆகிய தேசத்திலும் மிக ​
 
​முக்கிய வடிவமாகக் கொள்ளப்பட்டவர். இந்தியாவில் பௌத்தம் ஏனைய மதங்களின் வளர்ச்சியின் பலனாக அழிந்து குறைந்த தன் கரணத்தினால் இந்திய தேசத்தில் போதி தர்மரும் மறக்கப்பட்ட ஒருவராகவே ​இருக்கின்றார். 


மறைந்த தமிழ்ப்பௌத்தம் எங்கே? வாழ்கிறது, மறையுருவில் என்கிறார் மாயாவி (அட! பல பேரில் உலாவரும் நம்ம ஐயா! தாங்க!). அயோத்திதாசர் பற்றி உளம் திறந்து பேச வேண்டும். அறிய வேண்டும்.

மடை மாற்றம் செய்யாமல் இவ்விழை வளர என் வாழ்த்துகள். தமிழ் வளர்ச்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு வஇவ்வாய்வு தேவை. கிழக்கு நோக்குக! எனும் பொருளாதார பிணைப்புகளுக்கு இவ்வாய்வு தேவை. நாளையத் தமிழனுக்குச் சோறு போட இவ்வாய்வு தேவை!

​ஆம். மிக எளிமையாக அழகாகச் சொல்லி விட்டீர்கள் கண்ணன். இந்தத் துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபாடு கொண்டு ​
 
​செயல்படுத்த வேண்டும். ஆரய்ச்சி தான் பல தெளிவுகளை வெளிக்கொணரும்.

சுபா

வாழ்க!

நா.கண்ணன்

--

Suba.T.

unread,
Aug 19, 2015, 5:12:34 PM8/19/15
to மின்தமிழ், Subashini Tremmel
​இரண்டுமே மிக அருமை. ஆய்வுகளுக்கு இதனைப்பயன் படுத்தி சான்று நூல்களைத் தேட இவை மிகத் துணை புரியும். தரவிறக்கிக் கொண்டேன். நல்ல சேகரிப்பு வந்ததும் ஒரு  ​
 
​தனி காட்டலோக் அமைத்து அதில் எல்லாவற்றையும் தொகுக்கத் தொடங்கி விடுவோம்.

சுபா

​அ.த​

-- 

Suba.T.

unread,
Aug 19, 2015, 5:15:55 PM8/19/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-18 18:39 GMT+02:00 Balasubramanian Zen <zen...@gmail.com>:

வணக்கம்
காத்தவராயன் @ க. அயோத்தி தாசரின் மேலும் சில நூல்கள்.

பாலு
மதுரை.


​நூல்களின் பெயர்கள் பதிவிற்கு என் நன்றி திரு.பாலு.

கூடுதல் தகவல் - 
இங்கு நீங்கள் வழங்கியுள்ள ​
 
​நூலில் இந்திய இலக்கியச் சிற்பிகள் - கௌதம சன்னாவின் நூல் நம் ​சேகரத்தில் முழுமையாக உள்ளது. அவரும் மின் தமிழில் உள்ளார்.

சுபா

Suba.T.

unread,
Aug 19, 2015, 5:19:01 PM8/19/15
to மின்தமிழ், Subashini Tremmel
​ரிக்குவஸ்ட் கொடுத்திருக்கின்றேன். நூல் வரும் என நினைக்கின்றேன்.

சுபா
 
அ.த

Balasubramanian Zen

unread,
Aug 23, 2015, 1:33:22 PM8/23/15
to mint...@googlegroups.com, baalu

இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம்  பற்றிய  தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன். 

இந்தியாவில் 16ஆண்டுகள் பெளத்த த்தை தேடிய யுவான்சுவாங் மூலம், 7ஆம்நூற்றாண்டில் தமிழக நிலையை இ ணைத்துள்ள நாலில் அறியலாம்.

பாலு
மதுரை.

b1.jpg
227.jpg
228.jpg
229.jpg
230.jpg
231.jpg
232.jpg
7.jpg
8.jpg
221.jpg
222.jpg
223.jpg
224.jpg
225.jpg
226.jpg

N. Kannan

unread,
Aug 23, 2015, 7:27:28 PM8/23/15
to மின்தமிழ்
2015-08-24 1:33 GMT+08:00 Balasubramanian Zen <zen...@gmail.com>:

இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம்  பற்றிய  தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன். 

​>>>
சமணம் இன்னும் புழக்கத்திலிருக்கும் சமயம். அது அழியவில்லை. ஆனால் புத்தநெறி என்பது புழக்கத்தில் இல்லை. தமிழ்ப் புத்தநெறி இருந்த இடம் தெரியவில்லை. அதன் மூலத்தமிழ் நூல்கள் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றனவா? மூலமே தமிழா இல்லை மொழிபெயர்ப்பா? இது போன்ற தகவல்கள் முக்கியமாகப்படுகின்றன.​

​>>>​

இந்தியாவில் 16ஆண்டுகள் பெளத்த த்தை தேடிய யுவான்சுவாங் மூலம், 7ஆம்நூற்றாண்டில் தமிழக நிலையை இ ணைத்துள்ள நாலில் அறியலாம்.

​இதுவொரு நல்ல தொடக்கம். சமணக் காப்பியங்கள் கிடைக்கின்றன, சமண மூல நூல்கள் உள்ளன. ஆனால் புத்தநெறியின் கதை வேறாக இருக்கிறது. நான் தமிழில் வெளி வந்த "தாமரைச் சூத்திரத்தை"​ தேடிக்கொண்டிருக்கிறேன்.

நா.கண்ணன்

N. Ganesan

unread,
Aug 25, 2015, 10:26:35 PM8/25/15
to மின்தமிழ்
 இன்னும் ஸத்தர்மபுண்டரீகசூத்திரம் தமிழில் வந்ததாகத் தெரியவில்லை.

ஆங்கில மொழிபெயர்ப்பை (சம்ஸ்கிருதம், சீனம் நூல்கள்) படித்துள்ளேன்.
அதில் திசையாயிரத்து ஐன்னூற்ற்றுவர் பற்றிய செய்திகள் உள்ளன.
கடலாடும்போது, பொதலா (பொதியில்) அவலோகிதனை வழிபட்டு
பயணத்தில் ஏற்படும் இடர்களைக் களைய வணங்கியுள்ளனர்.

நா. கணேசன்




நா.கண்ணன்

N. Ganesan

unread,
Aug 25, 2015, 10:28:47 PM8/25/15
to மின்தமிழ்
பேராசிரியரே, 

இந்த நூல் பல ஆண்டுகளாக பல இடங்களில் இணையத்தில் உள்ளதே. இணையப் பல்கலை, த.ம.அ., ....
அதனை மேகக்கணினியில் ஏற்றி பாஸ்வொர்டு எல்லாம் எதற்கு?

நா. கணேசன்
 
அ.த

N. Ganesan

unread,
Aug 25, 2015, 10:31:17 PM8/25/15
to மின்தமிழ், ksuba...@gmail.com
தமிழ் மரபு அறக்கட்டளையில், இணையப் பல்கலைப் பிரதி இருக்கிறது.

 
சுபா
 
அ.த

Nagarajan Vadivel

unread,
Aug 25, 2015, 10:51:03 PM8/25/15
to மின்தமிழ்

2015-08-26 7:58 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இந்த நூல் பல ஆண்டுகளாக பல இடங்களில் இணையத்தில் உள்ளதே. இணையப் பல்கலை, த.ம.அ., ....
அதனை மேகக்கணினியில் ஏற்றி பாஸ்வொர்டு எல்லாம் எதற்கு?

​நல்ல கேள்வி
இது மேகக்கணினியில் ஒரு ஆய்வுத்தலைப்புக்கேற்ற மின்வளங்களை ஒரு நூலடுக்காகக் கொடுக்கும் முயற்சி
1990 களில் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்போட்டு ஆன்லைனில் பயோ இன்ஃபர்மேடிக்ஸ் பட்டயப்படிப்பை நடத்தினேன்
மாணவர்களுக்கான கையேடு ஒன்றை உருவாக்கித்தர ஓரெலி நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட்டு அவர்கள் கொடுத்த 250 மின்நூல்கள் உள்ள நூலடுக்கைப் பயன்படுத்தி இரண்டு வாரங்களில் ஒரு கையேட்டை உருவாக்கிக் கொடுத்தேன்
வேகமாக முன்னேறும் புலங்களில் இணையதளத்தைத் தேடி நேரத்தை வீணாக்குவது முறையல்ல.  கூகிள் தேடலில் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு தேடியதை விட்டுவிட்டு மற்ற வளங்களி நாட்டம் சென்று நேரம் வீனாகும்.  ஆனால் மேகக்கணினியில் நூலடுக்கில் தேவௌயான வளங்கள் மட்டுமே இருக்கும்.  எங்கிருந்தும் இணைய வழியாக ஆன்லைனில்  மின்நூல்களைப் படிக்க இயலும்
தமிழ் இணையக் கழகத்தில் அயோத்திதாசரின் நுல்கள் அனைத்தும் இல்லை. நாட்டுடமையாக்கப்பட்ட அவரின் வளங்கள் முழுமையாகத் தமிழக அரசுக்கு இன்னும் கிடைக்கவில்லை.  குறிப்பாக அவருடைய ஒரு பைசாத் தமிழன் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை
முடியுள்ள சீமாட்டி மட்டுமே விதம் விதமாகக் கொண்டைபோட முடியும்.  எல்லாரும் உங்களைப்போல் பத்தாயிரம் நூல்களுக்குச் சொந்தக்காரராக இருக்க முடியுமா.  இல்லாதவர்களுக்கு மேககணினிவழியாக நான் கொடுப்பதில் தவறில்லையே
தமிழ் இணையக்கழகம் என்னைப் பொருத்தவரை பொன்னம்பலம் நான் ஒரு நந்தனார் கைக்காசைச் செலவழித்துவிட்டு நொந்துபோய் நான் என்வழியில் அன்டார்ட்டிகாவில் தனியாக நின்று புலம்பிக் கொண்டிருக்கிறேன்.  நீங்கள் அவர்களைத் தொடர்புகொண்டால் அவர்களுக்கு உங்களைப் பிடித்திருந்தால் எல்லாம் கிடைக்கும்.  என்போன்றவர்கள் உள்ளதை மேகக் கணியில் சேகரம் செய்வது ஏழைக்கேத்த எள்ளுருண்டைபோல் 

அ.த

N. Ganesan

unread,
Aug 25, 2015, 11:01:45 PM8/25/15
to மின்தமிழ்
On Tuesday, August 18, 2015 at 8:56:09 AM UTC-7, BALASUBRAMANIAN ZEN wrote:

ஆசாரியதுரை க. அயோத்தி தாஸக் கவிராஜப் பண்டிதர் " இரஙகற்பாமாலை"

பாலு
மதுரை.


மதுரை திரு. பாலு,

இந்த நூலில் திரு. வி.க. அவர்களின் இரங்கற்பா உள்ளதா?
இருந்தால், தட்டெழுதி இவ்விழையில் இட வேண்டுகிறேன்.
வெகுகாலமாகத் தேடிக்கொண்டுள்ள பாடல் அது.
பெ. சு. மணி கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளார்.

பாரதியார் எழுத்துக்கள் பலரால் தேடப்பட்டு வெளிவந்ததுபோல்,
திரு.வி.க,, அயோத்திதாசர், ... போன்றோர் கட்டுரைகள் தேடப்படல்
வேண்டும். பலர் சேர்ந்து முயன்றால் கிட்டும்.


பெ. சு. மணி எழுதுகிறார்:
“தியோசாபிகல் சொசைட்டியின் நிறுவனர்களில் ஒருவரான ஹென்றி ஸ்டீவ் ஆல்காட்டின் துணை கொண்டு இலங்கை சென்று பௌத்த மத தீட்சை பெற்ற அயோத்திதாசர், 1898ல் சென்னை, ராயப்பேட்டையில் நிறுவிய தென்னிந்திய பௌத்த சாக்கிய சங்கம் அவருடைய இயக்க ஆற்றலுக்கு ஒரு சான்று. தோழர் சிங்காரவேலர் , பேராசிரியர் லட்சுமிநாதனுடன் இணைந்து தமிழகத்தில் பௌத்த சமயப் பிரச்சாரம் செய்ததையெல்லாம் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. தமது வாழ்க்கைக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். அயோத்தியதாசர் மீது. திரு.வி.க. இயற்றிய இரங்கற்பா ஒரு வரலாற்று ஆவணமாகும் இதை முதன் முதலில் கண்டெடுத்து வெளியிட்டுள்ளேன்.

[நன்றி: ஜனசக்தி நாளேடு 02.06.2011] “

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 25, 2015, 11:08:33 PM8/25/15
to மின்தமிழ், oba...@yahoo.co.in


On Sunday, August 23, 2015 at 10:33:22 AM UTC-7, BALASUBRAMANIAN ZEN wrote:

இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம்  பற்றிய  தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன். 

இந்தியாவில் 16ஆண்டுகள் பெளத்த த்தை தேடிய யுவான்சுவாங் மூலம், 7ஆம்நூற்றாண்டில் தமிழக நிலையை இ ணைத்துள்ள நாலில் அறியலாம்.

பாலு
மதுரை.


பேராசிரியர் வ. நாகராஜன் கொடுத்துள்ள பிப்லியோக்ராபி 2014 JNU (டில்லி) ஆய்வேடு.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற மாநிலங்கள் தங்கள் முனைவர் பட்ட ஆய்வேடுகளை
உலகம் படித்தாராய இணையமேறுகின்றன. தமிழ்நாட்டு ஆராய்ச்சிகள் உலகத்திற்கு தெரிய
தமிழ்நாட்டுப் பல்கலைகள் செய்யவேண்டிய பணி அது.

முழு ஆய்வேடும் படிக்கலாம்: 
Title: Dynamics of caste conflicts in some selected villages of Tamil Nadu: a sociological study
Researcher: Babu, N R Suresh
Guide(s): Ram, Nandu
Keywords: Social Sciences
Issue Date: 8-Mar-2014
University: Jawaharlal Nehru University
Award Date: n.d.
Abstract: NOne
Pagination: 199p.
URI: http://hdl.handle.net/10603/17249
Appears in Departments:School of Social Sciences

Files in This Item:

FileDescriptionSizeFormat
01_title.pdfAttached File24.81 kBAdobe PDFView/Open
02_declaration.pdf44.65 kBAdobe PDFView/Open
03_dedication.pdf20.09 kBAdobe PDFView/Open
04_acknowledgements.pdf153.99 kBAdobe PDFView/Open
05_contents.pdf24.91 kBAdobe PDFView/Open
06_tables.pdf80.26 kBAdobe PDFView/Open
07_abbreviations.pdf54.13 kBAdobe PDFView/Open
08_chapter 1.pdf1.63 MBAdobe PDFView/Open
09_chapter 2.pdf1.57 MBAdobe PDFView/Open
10_chapter 3.pdf1.79 MBAdobe PDFView/Open
11_chapter 4.pdf931.61 kBAdobe PDFView/Open
12_chapter 5.pdf606.94 kBAdobe PDFView/Open
13_chapter 6.pdf599.89 kBAdobe PDFView/Open
14_chapter 7.pdf940.85 kBAdobe PDFView/Open
15_bibliography.pdf810.3 kBAdobe PDFView/Open
16_appendices.pdf2.8 MBAdobe PDFView/Open

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 25, 2015, 11:26:42 PM8/25/15
to மின்தமிழ்


On Tuesday, August 25, 2015 at 7:51:03 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:

2015-08-26 7:58 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இந்த நூல் பல ஆண்டுகளாக பல இடங்களில் இணையத்தில் உள்ளதே. இணையப் பல்கலை, த.ம.அ., ....
அதனை மேகக்கணினியில் ஏற்றி பாஸ்வொர்டு எல்லாம் எதற்கு?

​நல்ல கேள்வி
இது மேகக்கணினியில் ஒரு ஆய்வுத்தலைப்புக்கேற்ற மின்வளங்களை ஒரு நூலடுக்காகக் கொடுக்கும் முயற்சி
1990 களில் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்போட்டு ஆன்லைனில் பயோ இன்ஃபர்மேடிக்ஸ் பட்டயப்படிப்பை நடத்தினேன்

இப்பொழுது நிறையத் தமிழ்க் குழந்தைகள், கொரியக் குழந்தைகள் படிக்கிறார்கள்.
கோவை, பழனி, ... குடும்பத்தார் பிள்ளைகளும் உண்டு. தமிழ்ப் பேராசிரியரும் இருக்கிறார்.

இந்தியா ஹிஸ்டரி படிக்கும் துறைகளை அணுகி கொரியா - தமிழ்நாடு முதல் நூற்றாண்டில்
தொடர்பு இருந்ததா? இளவரசி தமிழச்சியா? என ஒரு எம்.ஏ. செய்யவைக்கலாம்.
அப்படி இருந்தால், அந்த எம்.ஏ. தீஸீஸ் காட்டும்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Aug 25, 2015, 11:39:19 PM8/25/15
to மின்தமிழ்

2015-08-26 8:56 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
என ஒரு எம்.ஏ. செய்யவைக்கலாம்.
அப்படி இருந்தால், அந்த எம்.ஏ. தீஸீஸ் காட்டும்.

​போகிற போக்கில் வாய் புளித்ததா மாங்காய் புளித்ததா என்று சொல்லிவிட்டுப் போனால் எப்படி?  பல்கலைக்கழகத் தீசிஸ்கள் முடிய நாளாகும்.  அதற்கு வழிகாட்ட தமிழ்நாட்டில் ஆட்கள் இல்லை
இணையத்தில் மேகக்கணினி மூலம் இந்த ஆய்வை எளிதில் செய்ய முடியும்
அ.த

Balasubramanian Zen

unread,
Aug 26, 2015, 12:13:17 PM8/26/15
to mint...@googlegroups.com

​நூல்களின் பெயர்கள் பதிவிற்கு என் நன்றி திரு.பாலு.

கூடுதல் தகவல் - 

இங்கு நீங்கள் வழங்கியுள்ள


​நூலில் இந்திய இலக்கியச் சிற்பிகள் - கௌதம சன்னாவின் நூல் நம் ​சேகரத்தில் முழுமையாக உள்ளது. அவரும் மின் தமிழில் உள்ளார்.
சுபா

நன்றி. முனைவர் சுபா  அவர்களே.
ஆழ் கடல் நல் முத்துக்களை அள்ளித் தரும் மின் தமிழுக்கும் நன்றி.
வணக்கம்.

பாலு
மதுரை.

Balasubramanian Zen

unread,
Aug 26, 2015, 12:31:26 PM8/26/15
to mint...@googlegroups.com

மாணவர்களுக்கான கையேடு ஒன்றை உருவாக்கித்தர ஓரெலி நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட்டு அவர்கள் கொடுத்த 250 மின்நூல்கள் உள்ள நூலடுக்கைப் பயன்படுத்தி இரண்டு வாரங்களில் ஒரு கையேட்டை உருவாக்கிக் கொடுத்தேன்.


வேகமாக முன்னேறும் புலங்களில் இணையதளத்தைத் தேடி நேரத்தை வீணாக்குவது முறையல்ல.  கூகிள் தேடலில் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு தேடியதை விட்டுவிட்டு மற்ற வளங்களி நாட்டம் சென்று நேரம் வீனாகும்.  ஆனால் மேகக்கணினியில் நூலடுக்கில் தேவௌயான வளங்கள் மட்டுமே இருக்கும்.  எங்கிருந்தும் இணைய வழியாக ஆன்லைனில்  மின்நூல்களைப் படிக்க இயலும்

அறிஞர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
தங்களது மின் தமிழ் பணி போற்றுதற்குரியது.
நன்றி.

பாலு
மதுரை.

Balasubramanian Zen

unread,
Aug 26, 2015, 12:51:11 PM8/26/15
to mint...@googlegroups.com

மதுரை திரு. பாலு,

இந்த நூலில் திரு. வி.க. அவர்களின் இரங்கற்பா உள்ளதா?

இருந்தால், தட்டெழுதி இவ்விழையில் இட வேண்டுகிறேன்.

வெகுகாலமாகத் தேடிக்கொண்டுள்ள பாடல் அது.

பெ. சு. மணி கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளார்.

பாரதியார் எழுத்துக்கள் பலரால் தேடப்பட்டு வெளிவந்ததுபோல்,

திரு.வி.க,, அயோத்திதாசர், ... போன்றோர் கட்டுரைகள் தேடப்படல்

வேண்டும். பலர் சேர்ந்து முயன்றால் கிட்டும்

அறிஞர் கணேசன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
திரு. வி.க. அவர்களின் இரங்கற்பாவை இணைத்துள்ளேன.
தட்டெழுத்தில் வேண்டுமென்றால் கூற வேண்டுகிறேன்.

திரு.வி.க1.jpg
திரு.வி.க.2.jpg
20150826_201154.jpg

N. Ganesan

unread,
Aug 27, 2015, 10:23:44 AM8/27/15
to மின்தமிழ்
2015-08-27 4:21 GMT-07:00 obaluo <oba...@yahoo.co.in>:
அறிஞர் கணேசன் ஐயா அவர்களுக்கு வணக்கம் .
தாங்கள் கேட்டிருந்த திரு. வி.க.பாடிய அயோத்தி தாசர் இரங்கற்பாவினை மின் தமிழ் இழையில் இணைத்துள்ளேன்.
காண்க. 
Sent from my Samsung Galaxy smartphone.


அன்பின் திரு மதுரை பாலு,

வணக்கம். என் வேண்டுகோளுக்கு இணங்க திரு.வி.க.
அயோத்திதாஸ் பண்டிதர் மறைந்தபோது பாடின
இரங்கற்பா அளித்தமைக்கு நன்றி. தேதி போட்டோவில் 
வெட்டுப்பட்டுள்ளது. 1914 தெரிகிறது. எந்த மாதம்? எந்த தேதியில்
திரு.வி.க எழுதியுள்ளார்? ஆசிரியப்பா என்ற தலைப்பின் மேலே
சில வரிகள் விடுபட்டுள்ளனவா?

இப்பாடல் உள்ள நூலின் தலைப்பு, பிரசுரம், ஆண்டு,
தொகுப்பாளர் பெயர் என்ன?

நேரம் கிடைக்கும்போது இந்த அகவலை தட்டச்சி அனுப்புங்கள்
க.அ. பண்டிதர் பற்றி ஆராய்வார் இணையத்தில் துழாவும்போது
சிக்கும். நன்றி.

நூலை, நூல் தொகுப்பாளரிடம் அனுமதிபெற்று இணையத்தில்
(உ-ம்: archive.org இலவசமாக எத்தனை பெரிய நூல்களையும்,
ஆயிரக்கணக்கான நூல்களி ஏற்றலாம்.) தர ஏற்பாடு செய்யுங்கள்.
அயோத்திதாச பண்டிதர் மீதான பற்றுக்கொண்டவர்கள் இணைந்து
செயல்பட்டால் அவர் எழுதியதில் கிடைப்பன, அவர்மீது எழுந்த
கட்டுரைகள், நூல்கள் எல்லாமும் இணையத்தில் கிடைக்க
வகை செய்யவியலும்.

பல ஆண்டு முன் பாரி செழியன் இங்கே எழுதுவார். பல நூற்குறிப்புகள்,
ஆல்காட், ... கொடுத்திருக்கிறேன். அவர் எங்கே? 

அன்புடன்
நா. கணேசன்
 

Suba.T.

unread,
Aug 27, 2015, 3:57:19 PM8/27/15
to மின்தமிழ், Subashini Tremmel


2015-08-27 16:23 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
​..

நூலை, நூல் தொகுப்பாளரிடம் அனுமதிபெற்று இணையத்தில்
(உ-ம்: archive.org இலவசமாக எத்தனை பெரிய நூல்களையும்,
ஆயிரக்கணக்கான நூல்களி ஏற்றலாம்.)
​உங்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை என்ற ஒரு ​தன்னார்வ  தொண்டூழிய நிறுவனம் அரிய நூல்களை மின்னாக்கம் செய்து அதனை சேகரப்படுத்தி வருகின்றது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கின்றேன் டாக்டர்.கணேசன். அதனால் தான் வேறு இடங்களில் இவ்வகை சேவை உள்ளது எனச் சொல்கின்றீர்கள் என நினைக்கின்றேன். 

சுபா

N. Ganesan

unread,
Aug 27, 2015, 6:59:25 PM8/27/15
to மின்தமிழ், ksuba...@gmail.com
இல்லை திருமதி சுபா. நேற்றுங்கூட  தமிழ் மரபு அறக்கட்டளை நூலகத்திலும், இணையப் பல்கலையிலும் அயோத்திதாசர் நூல்கள்
இருப்பதைக் குறிப்பிட்டேனே. அயோத்திதாசர் நூல்கள் த.ம.அ., ஆர்க்கைவ்.ஆர்க், இணையப் பல்கலை எல்லாவற்றிலும் கிடைக்கவேண்டும்
என்பதே ஆவல். 

நா. கணேசன்

சுபா

Nagarajan Vadivel

unread,
Aug 27, 2015, 8:39:02 PM8/27/15
to மின்தமிழ்

2015-08-28 4:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அயோத்திதாசர் நூல்கள் த.ம.அ., ஆர்க்கைவ்.ஆர்க், இணையப் பல்கலை எல்லாவற்றிலும் கிடைக்கவேண்டும்

​நான் அயோத்திதாசர் நூல்களின் இணைப்பைத் த.ம.அ.கவுக்குக் கொடுத்து அவர்களும் வலையேற்றம் செய்துவிட்டார்களே.  சில ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு அயோத்திதாசர்பற்றிய கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டது மணேசருக்கும் தெரியும்.  ஏனோ அப்போது அவருக்கு அதில் பங்குகொள்ள ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.

இப்போது களத்தில் இறங்கியுள்ளார்.  அவர் முயற்சித்தால் ஒரு பைசாத் தமிழன் இதழ்களை ஒருங்குறியீட்டில் வலையேற்றமுடியும்

செய்வாரா
செய்வார்
அ.த

Balasubramanian Zen

unread,
Sep 9, 2015, 4:37:58 AM9/9/15
to mint...@googlegroups.com

அயோத்திதாச பண்டிதர் மீதான பற்றுக்கொண்டவர்கள் இணைந்து

செயல்பட்டால் அவர் எழுதியதில் கிடைப்பன, அவர்மீது எழுந்த

கட்டுரைகள், நூல்கள் எல்லாமும் இணையத்தில் கிடைக்க

வகை செய்யவியலும்.

பல ஆண்டு முன் பாரி செழியன் இங்கே எழுதுவார். பல நூற்குறிப்புகள்,

ஆல்காட், ... கொடுத்திருக்கிறேன். அவர் எங்கே? 

அன்புடன்

நா. கணேசன்

அறிஞர் ஐயா கணேசன்,
வணக்கம்.
பாரி செழியன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்களிடம்  அ. தாசரின் தமிழன் இதழ்கள் pdfல் உள்ளது. மின்னூலாக்க தர இசைந்துள்ளார்.
தங்களின் வழிகாட்டுதல் தேவை.

பாலு
மதுரை

Innamburan S.Soundararajan

unread,
Sep 9, 2015, 9:55:14 AM9/9/15
to mintamil
இன்று முழுதும் இணைய தொடர்பில்லை. முனைவர் சுபாஷிணியின் முயற்சி பலனளிக்கும். எனக்கு பல அலுவல்கள் நாட்தோறும் ஏற்பட்டு விட்டதால், தற்போது சில கருத்துக்கள் பதிவு செய்வதுடன், நிற்கிறேன்

1. இது தொகுப்பு நூலாக அமைவது நலம். கருத்து வேறுபாடுகள் இடம் பெறலாம், சகிப்புத்தன்மையுடன்.
2. ஆராய்ச்சி பட்டியல் தான் முதல் வேலை. 
3. வேலைப்பகிர்வு திட்டவட்டமாக இருக்கவேண்டும். [ஆர்வத்துடன் பலர் எழுதியிருந்தாலும், பெரும்பாலும் பின்னம், பின்னம் ஆக இருக்கின்றன. அப்படியே விட்டால், வேலைப்பளு கூடும்.
4. அவரவர் தொடக்கக்கட்டுரையை எழுதி வைத்துக்கொள்ளலாம். சீரமைத்தபின், பதிவு செய்யலாம்.
5.Peer Review, if feasible, will be great.
6. We should not relax academic rigor.
இன்னம்பூரான்

N. Ganesan

unread,
Sep 9, 2015, 10:16:26 AM9/9/15
to மின்தமிழ்


On Wednesday, September 9, 2015 at 1:37:58 AM UTC-7, BALASUBRAMANIAN ZEN wrote:

அயோத்திதாச பண்டிதர் மீதான பற்றுக்கொண்டவர்கள் இணைந்து

செயல்பட்டால் அவர் எழுதியதில் கிடைப்பன, அவர்மீது எழுந்த

கட்டுரைகள், நூல்கள் எல்லாமும் இணையத்தில் கிடைக்க

வகை செய்யவியலும்.

பல ஆண்டு முன் பாரி செழியன் இங்கே எழுதுவார். பல நூற்குறிப்புகள்,

ஆல்காட், ... கொடுத்திருக்கிறேன். அவர் எங்கே? 

அன்புடன்

நா. கணேசன்

அறிஞர் ஐயா கணேசன்,
வணக்கம்.
பாரி செழியன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்களிடம்  அ. தாசரின் தமிழன் இதழ்கள் pdfல் உள்ளது. மின்னூலாக்க தர இசைந்துள்ளார்.
தங்களின் வழிகாட்டுதல் தேவை.


பாரியை நலம் விசாரித்ததாகக் கூறவும். முதன்முதலில் பல ஆண்டுகளுக்கு
முன்பு அயோத்திதாசர் பற்றி இங்கே பேசினோம். அவர் கேட்ட சில
கேள்விகளுக்கு சில மறுமொழிகள் எழுதினேன்.

தமிழன் இதழ்கள் pdf தமிழ் மரபு அறக்கட்டளையிலே வைக்கலாம். 
அந்த pdf நூல்களை dropbox.com ஒரு கணக்கு தொடங்கி
தரவேற்றி இங்கும், முனைவர் சுபாவுக்கும் பாரிசெழியனை
அனுப்பிவைக்கச் சொல்லுங்கள். 

தமிழன் இதழ் என்ற தலைப்பில் ஓர் இழை தொடங்கி
ஒவ்வொரு பிடிஎப் ஆக இங்கே இடலாம். இப்பொழுதெல்லாம்
5 Mb கோப்பு கூட ஒரு மடலில் அனுப்பலாம்.
எனவே, சில இதழ்கள் சேர்ந்த பிடிஎப் ஒவ்வொன்றாக அனுப்பலாம்.

நன்றி,
நா. கணேசன்

Balasubramanian Zen

unread,
Sep 9, 2015, 12:09:53 PM9/9/15
to mint...@googlegroups.com

அறிஞர் கணேசன் அவர்களுக்கு வணக்கம்.
அவ்வாறே ஆகட்டும். திரு. பாரி அவர்களை தொடர்பு கொண்டு ஆவன செய்கிறேன்.
பாரி அவர்கள் தங்களையும் முனைவர் சுபா அவர்களையும் நினைவு கூர்ந்தார்.  நலம் விசாரித்தார்.
நன்றி.

பாலு
மதுரை.

Balasubramanian Zen

unread,
Sep 11, 2015, 7:27:27 AM9/11/15
to mint...@googlegroups.com

---------- Forwarded message ----------
From: Balasubramanian Zen <zen...@gmail.com>
Date: 2015-09-10 20:33 GMT+05:30
Subject: Re: Fwd: [MinTamil] தமிழ் பௌத்தம் - தமிழ் சமணம்
To: paari chezhian <a.aa.n...@gmail.com>


நன்றி.
நண்பர் பாரி செழியன் அவர்களுக்கு வணக்கம்.
மின்னூலாக அரிய ஆவணங்களை மின் தமிழ் இழையில் சேர்ததமைக்கு மிக்க நன்றி.

மின் தமிழ் தொகுப்பில், வழங்கிய -
" பாரி செழியன்,
அயோத்தி தாசர் ஆய்வு நடுவம்,
மதுரை. "
என குறிப்பிட்டு வெளியிட அன்புடன் வேண்டுகிறேன்.

பாலு
மதுரை.

On 10 Sep 2015 20:01, "paari chezhian" <a.aa.n...@gmail.com> wrote:

---------- Forwarded message ----------
From: paari chezhian <a.aa.n...@gmail.com>
Date: 2015-09-09 22:32 GMT+05:30
Subject: Re: [MinTamil] தமிழ் பௌத்தம் - தமிழ் சமணம்
To: mint...@googlegroups.com



​​
​நண்பர்  பாலு  வணக்கம்
உங்களிடம் பேசியபடி  இதோ  பண்டிதர் அயோத்திதாசரின்  தமிழன் இதழ் மக்களின் பார்வைக்காக
அய்யா  கணேசன்  நண்பர் சுபா ஆகியோருக்கு என் விசாரிப்புக்கள்

அன்புடன்
பாரி செழியன்

Suba.T.

unread,
Sep 11, 2015, 4:15:48 PM9/11/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-09-09 10:37 GMT+02:00 Balasubramanian Zen <zen...@gmail.com>:

அயோத்திதாச பண்டிதர் மீதான பற்றுக்கொண்டவர்கள் இணைந்து

செயல்பட்டால் அவர் எழுதியதில் கிடைப்பன, அவர்மீது எழுந்த

கட்டுரைகள், நூல்கள் எல்லாமும் இணையத்தில் கிடைக்க

வகை செய்யவியலும்.

பல ஆண்டு முன் பாரி செழியன் இங்கே எழுதுவார். பல நூற்குறிப்புகள்,

ஆல்காட், ... கொடுத்திருக்கிறேன். அவர் எங்கே? 

அன்புடன்

நா. கணேசன்

அறிஞர் ஐயா கணேசன்,
வணக்கம்.
பாரி செழியன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்களிடம்  அ. தாசரின் தமிழன் இதழ்கள் pdfல் உள்ளது. மின்னூலாக்க தர இசைந்துள்ளார்.
தங்களின் வழிகாட்டுதல் தேவை.


​மிக அருமையான தகவல் இது.
அவர் எந்த ஊரில் இருக்கின்றார்  என்ற தகவல் கிடைத்தால்  பக்கங்களை வருடி மின்னாக்கம் செய்யும் பணியை  நாம் மேற்கொள்ள திட்டத்தைத் தொடங்கலாம்.
​தகவல் தர முடியுமா?

நன்றி
சுபா​




--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba.T.

unread,
Sep 11, 2015, 4:18:25 PM9/11/15
to மின்தமிழ், Subashini Tremmel
​ஆம்.
தமிழ் மரபு அறக்க்ட்டளை சேகரத்தில் இணைத்து வைக்க வேண்டும். 
மின்னாக்கம்  தொடர்பாக  தங்களின் கேள்விகள்   ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். இப்பணியை உடன் தொடங்குவோம்.

சுபா
  

Suba.T.

unread,
Sep 11, 2015, 4:19:42 PM9/11/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-09-09 18:09 GMT+02:00 Balasubramanian Zen <zen...@gmail.com>:

அறிஞர் கணேசன் அவர்களுக்கு வணக்கம்.
அவ்வாறே ஆகட்டும். திரு. பாரி அவர்களை தொடர்பு கொண்டு ஆவன செய்கிறேன்.
பாரி அவர்கள் தங்களையும் முனைவர் சுபா அவர்களையும் நினைவு கூர்ந்தார்.  நலம் விசாரித்தார்.
நன்றி.


​மிக்க  மகிழ்ச்சி.   நன் அவர்களை நேரில் சந்தித்திருக்கின்றேனா என நினைவில்லை. ஆயினும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும் நண்பரே. 
சுபா​
 

Suba.T.

unread,
Sep 11, 2015, 4:31:03 PM9/11/15
to மின்தமிழ், Subashini Tremmel
இப்போது தான் கவனித்தேன். திரு.பாரி செழியன் அவர்களும் அனுப்பி இருந்தார்கள்.
மிக நல்ல  முயற்சி. முதல் நூலில்  450 பக்கங்கள். இதனை  மிந்தமிழ் நண்பர்கள் வாசித்தும் கருத்து பகிரலாம். நான் விரைவில்  நம் சேகரத்தில் இணைக்கின்றேன்.

மிக்க நன்றி  திரு.பாலு
சுபா

Suba.T.

unread,
Sep 11, 2015, 4:33:05 PM9/11/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-09-11 13:27 GMT+02:00 Balasubramanian Zen <zen...@gmail.com>:

---------- Forwarded message ----------
From: Balasubramanian Zen <zen...@gmail.com>
Date: 2015-09-10 20:33 GMT+05:30
Subject: Re: Fwd: [MinTamil] தமிழ் பௌத்தம் - தமிழ் சமணம்
To: paari chezhian <a.aa.n...@gmail.com>


நன்றி.
நண்பர் பாரி செழியன் அவர்களுக்கு வணக்கம்.
மின்னூலாக அரிய ஆவணங்களை மின் தமிழ் இழையில் சேர்ததமைக்கு மிக்க நன்றி.

மின் தமிழ் தொகுப்பில், வழங்கிய -
" பாரி செழியன்,
அயோத்தி தாசர் ஆய்வு நடுவம்,
மதுரை. "
என குறிப்பிட்டு வெளியிட அன்புடன் வேண்டுகிறேன்.


​இதனை வாசித்த போது தான்  மனதில் தோன்றியது.
இந்த  அயோத்தி தாசர் ஆய்வு நடுவகம் மதுரையில் இருக்கின்றதா?
நான் இவ்வருடம்  தமிழகம் வரும் போது மதுரையில்  4 நாட்கள் இருப்பேன். அப்போது ஒரு நாள் இங்கு வந்து இந்த நடுவகத்தின்   நண்பர்களைச் சந்திக்க  ​
 
​ஆர்வம் உள்ளது.
ஆவண செய்ய இயலுமா திரு.பாலு?

சுபா​



--

Balasubramanian Zen

unread,
Sep 11, 2015, 11:49:38 PM9/11/15
to mint...@googlegroups.com

மின் தமிழ் தொகுப்பில், வழங்கிய -
" பாரி செழியன், 
அயோத்தி தாசர் ஆய்வு நடுவம், 
மதுரை. "
என குறிப்பிட்டு வெளியிட அன்புடன் வேண்டுகிறேன்.

​இதனை வாசித்த போது தான்  மனதில் தோன்றியது.

இந்த  அயோத்தி தாசர் ஆய்வு நடுவகம் மதுரையில் இருக்கின்றதா?

நான் இவ்வருடம்  தமிழகம் வரும் போது மதுரையில்  4 நாட்கள் இருப்பேன். அப்போது ஒரு நாள் இங்கு வந்து இந்த நடுவகத்தின்   நண்பர்களைச் சந்திக்க  ​

 

​ஆர்வம் உள்ளது.

ஆவண செய்ய இயலுமா திரு.பாலு

சுபா​

வணக்கம். முனைவர் சுபா அவர்களே.
தங்களின் மதுரை வருகையின்போது, தங்களின் விருப்பபடி ஆவன செய்து தருகிறேன்.

நன்றி.
வணக்கம்.

பாலு
மதுரை.

தேமொழி

unread,
Sep 14, 2015, 2:07:22 AM9/14/15
to மின்தமிழ்

தாராசுரம்: தமிழ் பௌத்த வரலாற்றுக்கான திறவுகோல் 


சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு அண்மையில் நான் சென்றிருந்தேன்.  கம்பீரமாக எழுந்து நிற்கும் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விசாலமான பிரகாரத்தைத் தாண்டி அந்தக் கோயிலின் சிறப்பாகக் கருதப்படும் ராஜகம்பீர மண்டபம் இருக்கிறது.  குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் ரதத்தைப்போன்ற அமைப்புடன் அந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.  அந்த மண்டபத்தில் இருக்கும் தூண்களில் மிகவும் நுட்பமாக அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.  கோயில் கருவறையைச் சுற்றியுள்ள புறச்சுவரில் அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய வரலாறுகளை அறிவிக்கும் சிற்பங்கள் அழகிய முறையில் செதுக்கப்பட்டுள்ளன.  திருச்சுற்று மாளிகையின் வடபுறத்தில் சிவாச்சாரியர்கள் 108 பேர்களுடைய சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.  அவை மட்டுமின்றி நடன வகைகளையும், விளையாட்டுகளையும், போர்க்காட்சிகளையும் சித்தரிக்கின்ற அழகிய சிற்பங்களும் அங்கே காணப்படுகின்றன.  ராஜ கம்பீர மண்டபத்தின் கீழே செதுக்கப்பட்டிருக்கும் குதிரைக்கும் தேர்ச் சக்கரத்துக்கும் இடையில் அந்த மண்டபத்தின் பீடத்தில் ஒரு புத்தர் சிலை உள்ளது.  வெளியிலிருந்து பார்க்கும்போது அது தெரிவதில்லை.  தேர்ச் சக்கரத்திற்குக் கீழே குனிந்து பார்த்தால்தான் அது பார்வைக்குத் தென்படுகிறது.அதுமட்டுமின்றி கருவறையின் புறச் சுவரில் இடதுபுறமாக இன்னொரு புத்தர் சிலையும் இருக்கிறது.அந்தச் சிலையின் அருகில் கோயில் மொன்றும் செதுக்கப்பட்டிருக்கிறது.நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள் ஆகியோரது சிலைகள் நிறைந்து சைவ சமயத்தின் மேலாதிக்கம் மிளிரக் காட்சியளிக்கும் அந்தக் கோயிலில் புத்தர் சிலை ஏன் செதுக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்குப் புதிராக இருந்தது.  

2.

'தாராக வண்டந் தொடுத்தணிந்தார்
தமக்கிடம்  போதத் தமனியத்தாற்
சீராச ராசீச் சரஞ்சமைத்த
தெய்வப் பெருமாளை வாழ்த்தினவே'

என்று தக்கயாகப் பரணியில் போற்றப்படுகின்ற இரண்டாம் ராசராசனால் எடுப்பிக்கப்பட்ட கோயில்தான் தாராசுரத்தில் அமைந்திருக்கும் ஐராவதேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் சிவன்  கோயில் ஆகும்.  இந்தக் கோயில் குறித்து தி.வை. சதாசிவ பண்டாரத்தார் தனது பிற்காலச் சோழர் வரலாறு (அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1974) என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் : 'தான் வசித்து வந்த இராசராசபுரம் என்னும் பெருநகரின் வடகீழ்ப் பகுதியில் இராசராசேச்சுரம் என்ற சிவாலாயம் ஒன்று எடுப்பித்து அதில் இராசராசேச்சுரமுடையாரை எழுந்தருளுவித்து  வழிபாடு புரிந்தனன்.  ஆசிரியர் ஒட்டக்கூத்தர், தக்கன் யாகம் அழிக்கப்பட்டப் பிறகு உமா தேவியாருக்கு போர்க்களம் காட்டி அங்கு இறந்தவர்கள் எல்லோர்க்கும் அருள் புரியும் பொருட்டு இராசராசபுரி ஈசர் எழுந்தருளினார் என்று தம் தக்கயாகப் பரணியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.  கண்டோர் கண்களைப் பிணிக்கும் சிற்பத் திறம் வாய்ந்து முற்காலத்தில் பெருமையுடன் நிலவிய அம்மாடக் கோயில் இக்காலத்தில் தன் சிறப்பனைத்தும் இழந்து அழிவுற்ற நிலையில் உளது.'( பக்: 365 & 366)  1974ம் ஆண்டில் சாதாசிவ பண்டாரத்தார் எழுதியபோது அந்தக் கோயில் அவ்வாறு கவனிப்பாரற்ற நிலையில்தான் இருந்துள்ளது.  ஆனால், இப்போது அது தனது பழைய பொலிவோடு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. யுனெஸ்கோ அமைப்பால் ‘ உலக மரபுச் சின்னங்களில் ஒன்றாக ‘ அறிவிக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது .

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் திருநாகேஸ்வரம், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், சிவபுரம் ஆகிய சிறப்பு வாய்ந்த ஊர்கள் சூழ இருப்பதுதான் தாராசுரம்.  இந்த ஊரின் உண்மையான பெயர் தெரியவில்லை.  அங்கு இரண்டாம் ராசராசன் கோயிலைக் கட்டியதால் அவனது பெயரால் அவ்வூர் ராஜராஜ ஈஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.  அதை மூன்றாம் ராசராசனின் கல்வெட்டு ஒன்றின் மூலம் நாம் அறிய முடிகிறது.  பின்னர் பாண்டிய மன்னர்களின் ஆக்கிரமிப்பின்போது ராஜராஜ ஈஸ்வரம் என்ற பெயர் சுருக்கப்பட்டு ராராசுரம் என்று அழைக்கப்பட்டது.  அங்கிருக்கும் சிவபெருமான் ராராசுரமுடையார் என்று அறியப்பட்டார்.  அதன்பின்னர் அந்த ஊரின் பெயர் ராராபுரம் என மாற்றி அழைக்கப்பட்டதென்று வீரபாண்டியனின் கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிகிறோம்.  கி.பி 1408ல் மீண்டும் அந்த ஊருக்கு ராராசுரம் என்ற பெயர் சூட்டப்பட்டது.  ஆனால் அது தாராசுரம் என எப்போதிருந்து அழைக்கப்படுகிறது என்ற வரலாறு எவருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. 

இந்தக் கோயிலில் 30 கல்வெட்டுகள் உள்ளன என்று இது குறித்து ஆராய்ந்த பி.ஆர். ஸ்ரீனிவாசன் குறிப்பிடுகின்றார்( ஞிணீக்ஷீணீsuக்ஷீணீனீ, ணிதிணிளி,றிணீக்ஷீவீs, 1987). இந்தக் கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதென்று வரலாற்றாசிரியர்கள் நினைத்திருந்தனர்.  அவன் காலத்தில் வெட்டப்பட்ட திருபுவனம் கோயில் கல்வெட்டில் அவ்வாறு குறிப்பு உள்ளது.  ஆனால், கோயிலின் கிழக்கு பிரகாரச் சுவரில் இரண்டாம் ராசராசன் கல்வெட்டு உள்ளது.  இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் ராச கம்பீர மண்டபத்தில் காணப்படும் கல்வெட்டிலும் இரண்டாம் ராச ராசன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதென்ற குறிப்பே காணப்படுகிறது. 

இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி.1150 இறந்த பிறகு அவன் புதல்வனாகிய இரண்டாம் ராசராசன் சக்கரவர்த்தியாக மூடிசூட்டிக்கொண்டான். அவனது தந்தை ராஜகேசரி என்ற பட்டம் உடையவனாக இருந்தான்.  இவன் பரகேசரி என்ற பட்டப்பெயரோடு சோழ நாட்டை ஆட்சி செலுத்தினான்."இரண்டாம் ராசராசனின் கல்வெட்டுகள் கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர் ஜில்லாக்களிலும் காணப்படுவதால் வேங்கி நாடு, கொங்குநாடு, கங்க நாடு ஆகியவை இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன என்பது திண்ணம்.  ஆகவே இவன் தந்தை குலோத்துங்க சோழனது ஆளுகைக்-கு உட்பட்டிருந்த நாடுகளெல்லாம் சோழ ராஜ்ஜியத்திலிருந்து விலகாமல் இவன் ஆட்சியின் கீழும் அமைதியாக இருந்துவந்தன எனலாம்." என்கிறார் சதாசிவப் பண்டாரத்தார் (பக்.360). 

இவனுடைய ஆட்சிக்காலத்தில் மலையமலை பக்கத்தில் காவிரி ஆறு அடைப்புண்டு கிழக்கு நோக்கித் தண்ணீர் வராமல் தடைபட்டதாகவும் அதனை அறிந்த இரண்டாம் ராசராசன் அந்த மலையை நடுவில் வெட்டுவித்துக் காவிரி ஆற்றிற்கு வழி கண்டு சோழ நாட்டுக்குத் தொடர்ந்து தண்ணீர் வர ஏற்பாடு செய்தான் என்றும் தக்கயாகப் பரணியை அடிப்படையாகக் கொண்டு சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடுகின்றார்( பக்: 367).  இவனது ஆட்சிக் காலத்தின் முற்பகுதியில் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராய் இருந்தது.  அதன்பிறகு அவன் பழையாறை நகரைத் தலைநகராக ஆக்கிக்கொண்டான்.  அதன் பின்னர் அந்த ஊர் ராஜராஜபுரி என்று சிறப்போடு அழைக்கப்பட்டது.  

தாராசுரத்தில் இருக்கும் ஐராவதேஸ்வரர் கோயிலில் துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன.  அந்தச் சிலைகள் மேற்கு சாளுக்கிய நாட்டின் தலைநகராக இருந்த கல்யாணபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாக  கீழ் கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக ஆட்சி செய்த இரண்டாம் ராசராசன் அந்த சிலைகளைக் கொண்டுவந்திருக்க வாய்ப்பில்லை.  அவை முதலாம் ராஜாதிராஜனின் காலத்தில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
3.

சோழர்கால கோயில்களின் கட்டடக்கலை குறித்து ஆராய்ந்த சுரேஷ்பிள்ளை தனது நூலில் (ஷிtuபீஹ் ஷீயீ ஜிமீனீஜீறீமீ கிக்ஷீt, 1976) தாராசுரம் கோயில் குறித்து விரிவாக ஆராய்ந்திருக்கிறார். அக்கோயிலில் பௌத்த கட்டடக்கலையின் தடயங்கள்காணப்படுவதாக அவர் கூறுகிறார்.              ‘‘திருவலஞ்சுழி கோயிலும் தாராசுரம் கோயிலும் பௌத்தத்தின் இருவேறு பிரிவுகளை‘‘ பிரதிநிதித்துவப்படுத்துவதாக சுரேஷ்பிள்ளை குறிப்பிடுகின்றார்.  திருவலஞ்சுழி கோயில் மாகாயானப் பிரிவையும், தாராசுரம் கோயில் ஹீனயானப் பிரிவையும் சேர்ந்தவை என்று அவர் கூறுகிறார்.  பழையாறையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்கள் அந்தப் பகுதியில் இருந்த பௌத்த ஆலயங்களையெல்லாம் மாற்றி சிவாலயங்களாக உருவாக்கினார்கள் என்று கூறும் சுரேஷ்பிள்ளை அவ்வாறு மாற்றப்பட்ட கோயில்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். நாயன்மார்களால் பாடல் பெற்றிருந்தால் அது இந்துக் கோயில், இல்லாவிட்டால் அது பௌத்தத்தோடு அல்லது சமணத்தோடு தொடர்பு கொண்டதாயிருக்கும் என்று அவர் விவரிக்கிறார். 

பௌத்தத்தை ஆதரித்து வந்த மன்னர்களுக்குப் பிறகு சைவ வைணவத்தை நோக்கி சோழ மன்னர்களின் ஆதரவு திரும்பிவிட்டது.  ஆனால் முந்தைய ஆட்சிக்காலத்தில் அரச ஆதரவைப் பெற்றிருந்த பௌத்த கலைமரபால் பேணி வளர்க்கப்பட்ட கைவினைஞர்களிடம் இந்த மாற்றம் எந்த ஒரு பெரிய மாறுதலையும் ஏற்படுத்திவிடவில்லை.   சோழர்காலச் சிற்பிகள் பௌத்த கலை மரபின் கூறுகளைக் கைவிடாமலேயே தொடர்ந்தும் சிற்பங்களை செதுக்கி வந்தனர்.  கோயில்களை உருவாக்கினர். 

‘‘தாராசுரம் கோவிலில் கருவறைக்கு மேலிருக்கும் விமானத்தில் ஸ்தூபி போன்ற வடிவம் நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.  பௌத்த ஸ்தூபிகளின் சிறிய வடிவங்களைப்போல அவை அமைக்கப்பட்டிருக்கின்றன’’ என்று குறிப்பிடும் சுரேஷ்பிள்ளை தாராசுரம் கோயிலை நுணுகி ஆராய்ந்தால் அது உண்மையான தமிழ் பௌத்த வரலாற்றைப் புலப்படுத்துவதாக இருக்கும் என்கிறார்.  கருவறையின் புறச்சுவரில் இருக்கும் ஒரு மாடத்தில் சிவன் பார்வதி சிலைகள் உள்ளன.  அச்சிலைகளின் இருபுறமும் மன்னர்கள் அல்லது கந்தர்வர்கள் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.  அந்த மாடத்தின் மேல்பகுதியில் கபோதமும்,  கூடும், யாளி வரிசையும் பொருத்தமில்லாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன.  கூடு பகுதியில் தர்ம சக்கரம் வரிசையாக செதுக்கப்பட்டிருக்கிறது.  இத்தகைய சிற்ப அமைப்பு அந்த மாடத்தில் அதற்கு முன்பு புத்தரின் சிலை இருந்திருக்கவேண்டும் என்ற யூகத்துக்கு வழிவகுக்கிறது என்கிறார் சுரேஷ்பிள்ளை.

தாராசுரம் கோயிலின் கட்டட அமைப்பு குறித்தும் சிற்பங்கள் குறித்தும் ஆராய்ந்து அவற்றின் மூலம் வெளிப்படும் பௌத்த கலை மரபின் அடையாளங்களை எடுத்துக் கூறியிருக்கும் சுரேஷ்பிள்ளை ராஜகம்பீர மண்டபத்தின் பீடத்தில் செதுக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலை குறித்தோ அல்லது புறச் சுவரில் காணப்படும் புத்தர் சிலை குறித்தோ தமது நூலில் ஓரிடத்திலும் குறிப்பிடாதது வியப்பளிக்கிறது.  அந்தச் சிலைகள் அவரது பார்வைக்கு வராமல் போனது எப்படி என்று தெரியவில்லை.  ஆனால் அந்தச் சிலைகள் நீண்டகாலமாகவே அங்குதான் இருந்து வந்துள்ளன.  தாராசுரம் கோயிலைப்பற்றி பிரஞ்சு மொழியில் இரண்டு பாகங்களைக் கொண்ட நூல் ஒன்றை எழுதியிருக்கும் பிரான்சுவா எர்னோ (ஞிணீக்ஷீணீsuக்ஷீணீனீ - திக்ஷீணீஸீநீஷீவீsமீ லி பிமீக்ஷீஸீணீuறீt, ணிதிணிளி, றிணீக்ஷீவீs 1987 மிமி க்ஷிஷீறீ.) அம்மையார் ராஜகம்பீர மணடபத்தின் பீடத்தில் இருக்கும் புத்தர் சிலை குறித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.  அந்தச் சிலையின் புகைப்படத்தை வெளியிட்டு பத்மாசன முறையில் புத்தர் அமர்ந்திருப்பதாகவும் அவரது கரம் ஞானமுத்திரையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

4.

தாராசுரம் கோயிலில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை 1984ஆம் ஆண்டில் அகழ்வாய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது.  கோயிலின் நுழைவாயிலுக்கும் ராஜகம்பீர மண்டபத்திற்கும் இடையில் உள்ள பிரகாரத்தில் அந்த அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  தற்போது ஒளரங்காபாத்தில் பணிபுரியும் திரு. தயாளன் தலைமையில் தொல்லியல் துறையைச் சேர்ந்த குழுவினர் அந்த ஆய்வை மேற்கொண்டதாக அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த முனைவர் ராஜவேலு தெரிவித்தார்-.  தராசுரம் கோவிலில் காணப்படும் புத்தர் சிலைகளைப் பற்றியும் அந்தக் கோயில் பௌத்த கலைமரபின் கூறுகளைக் கொண்டிருப்பதாக சுரேஷ்பிள்ளை எழுதியிருப்பதைப் பற்றியும் நான் அவரிடம் தெரிவித்தபோது தாங்கள் மேற்கொண்ட அகழ்வாய்வு பற்றி அவர் சொன்னார்.  அந்த அகழ்வாய்வின்போது ஏற்கனவே அங்கு இருந்த கட்டிடம் ஒன்றின் அஸ்திவார அமைப்பைத் தாங்கள் கண்டதாகவும் அது பூம்புகார் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கட்டிட அமைப்பை ஒத்ததாக இருந்ததென்றும் சொன்னார். ஆனால் ஆய்வு முடிந்ததும் அந்தப் பகுதி மூடப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.  நான் திரு. தயாளன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தாராசுரம் அகழ்வாய்வைப் பற்றிக் கேட்டபோது அந்த அகழ்வாய்வில் நாயன்மார்களின் ஐம்பொன் சிலைகள் சில கிடைத்ததாகவும் உடைந்த நிலையில் சிற்பங்கள் சில கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.  ஆனால், அங்கிருக்கும் புத்தர் சிலைகள் குறித்து அவரால் விளக்கம் எதையும் தரமுடியவில்லை. 

தாராசுரம் கோயிலில் புத்தர் சிலைகள் இருப்பதாலேயே அதை ஒரு பௌத்தக் கோயில் என்று முடிவுகட்டிவிட முடியாது.  கலை வரலாற்றிஞரான சுரேஷ்பிள்ளை அந்தக் கோயிலின் கட்டடக்கலையில் தென்படும் பௌத்த கலை மரபு சார்ந்த கூறுகளை எடுத்துக்காட்டி புகைப்பட ஆதாரங்களோடு 1976ம் ஆண்டிலேயே ஆங்கிலத்தில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார்.( மிஸீtக்ஷீஷீபீuநீtவீஷீஸீ tஷீ tலீமீ stuபீஹ் ஷீயீ tமீனீஜீறீமீ ணீக்ஷீt, ணிஹீuணீtஷீக்ஷீ ணீஸீபீ விமீக்ஷீவீபீவீணீஸீ, 1976)   அதன் பிறகு பதினொரு ஆண்டுகள் கழித்து பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருக்கும் தாராசுரம் குறித்த நூலில் சுரேஷ்பிள்ளையின் நூலைப் பற்றியோ அவர் தெரிவித்த கருத்துகளைப் பற்றியோ எவ்வித குறிப்பும் காணப்படவில்லை.  அதுமட்டுமின்றி அந்தக் கோயில் குறித்து எழுதிய வேறு எவரும்கூட அதைப்பற்றி விவாதிக்கவில்லை.  இந்த மௌனம் தான் நமக்கு வியப்பளிப்பதாக இருக்கிறது.  சுரேஷ்பிள்ளை சொல்லியிருப்பதைப் போல தாராசுரம் கோயில் குறித்த கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை ஆய்வு தமிழ் பௌத்தத்தின் உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டுவரும் என்றே தோன்றுகிறது.அதைச் செய்யப்போகும் கலை வரலாற்றறிஞர் ஒருவருக்காகக் காத்திருக்கிறது அந்தக் கோயில்.


பயன்பட்ட நூல்கள்:

1.சதாசிவ பண்டாரத்தார் தி.வை 1974, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்,சிதம்பரம்

2.Pillai, Suresh B  ,1976 , Introduction to the study of temple art, Equator and Meridian, Thanjavur 

3.Francoise L Hernault, 1987, Darasuram, EFEO, Paris 

N. Ganesan

unread,
Sep 20, 2015, 3:22:07 PM9/20/15
to மின்தமிழ், vallamai
On Wednesday, September 9, 2015 at 9:09:53 AM UTC-7, BALASUBRAMANIAN ZEN wrote:

அறிஞர் கணேசன் அவர்களுக்கு வணக்கம்.
அவ்வாறே ஆகட்டும். திரு. பாரி அவர்களை தொடர்பு கொண்டு ஆவன செய்கிறேன்.
பாரி அவர்கள் தங்களையும் முனைவர் சுபா அவர்களையும் நினைவு கூர்ந்தார்.  நலம் விசாரித்தார்.
நன்றி.

பாலு
மதுரை.



நன்றி, திரு. பாலு. கோவை செம்மொழி மாநாட்டிலே சிந்துசமவெளியில் தமிழரின் விடங்கர்-கொற்றி வழிபாடு
கட்டுரை வாசித்து அயோத்திதாசர் அன்பர்கள் பொன்னாடை போர்த்தியது வாழ்வில் மறக்கமுடியாது.
அதன்பின்னர் ஆஸ்கோ பார்போலா ஏற்று பல கட்டுரைகள் எழுதிவிட்டார். இப்பொழுது நூலிலும்
சில குறிப்புகள் தந்துள்ளார். பலருக்கும் அதை ரிவியூ செய்யவும் சொல்லிக்கொண்டுள்ளேன்.
தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல் அது. கால்ட்வெல் ஒப்பிலக்கணம் போல, தமிழர்க்குப்
பயன்படும். இன்றைய மேலையுலக விஞ்ஞானம் தரும் இந்திய மொழிகள், வரலாறு உள்வாங்கப்பட
வேண்டும். தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சிநிலை தாங்களைப் போன்றோர்
நன்கறிவீர்கள். நானும் கேள்விப்படுகிறேன். இணையத்திலும் சில குழப்பங்கள்,
கிராம வாழ்க்கை அறிந்ததால் தான் சிந்து நாகரீகத்தின் வேளாண்கூறுகளும், அவர்கள்
வழிபட்ட இலிங்கம், குஞ்சு, குஞ்சி, விடங்கர் போன்ற பழந்தமிழ்ச்சொற்களின் பொருளும்,
ஹிண்டு சமயத்தின் ஆரம்பத் தொடக்கமாக தாந்திரீக சமயம் அடிப்படை என்பது ஆராய முடிந்தது.
விடங்கர் வழிபாடு பற்றி ஆஸ்கோ பார்ப்போலாவின் இப்போதைய புத்தகம்,
Roots of Hinduism  வாங்கி (35 $ தான் பேப்பர்பேக். அல்லது, உங்கள் நூலக ILL) பொறுமையாகப்
படித்து விளக்கமாக ஒர் 5-10 பக்கம் எழுதங்கள். நன்றி.

அதனை அடுத்து தமிழர் தொடர்பு பூர்த்தி செய்ய, சங்கப் பாட்டின் “மழுவாள் நெடியோன்”
த்யரி மிக உதவும்.


------------------------------------

அயோத்திதாசர், பெரியார் ஈவேரா, மறைமலை அடிகள், இன்றைய த்ராவிட கக்ஷிகள்
செய்யும் மாய்மாலங்கள், தமிழ்நாட்டின் ஜாதிக்கட்சிகள், தேர்தல் அரசியல் மறுபரிசீலனைக்கு
தமிழ் சமுதாயம் உட்படுத்தவேண்டும். உலக மயமாதல் பொருளாதாரத்தில் தமிழர் எவ்வாறு
முன்னேறுவது? - என்பதும் நாம் அனைவரும் பார்க்கவேண்டும்.

அயோத்திதாச பண்டிதரும், பெரியார் ஈவேரா நாயக்கரும் எங்கள் கோவை மாவட்டம் தமிழ்ச்
சமூகத்திற்கு அளித்த தலைவர்கள். அவர்கள் கருத்துக்களும், மறைமலையடிகள் நூல்களும்
தமிழர்களிடையே திராவிடக் கருத்தியலை உருவாக்கியது. கால்ட்வெல் பாதிரியார் பயன்படுத்தியவாறே
திராவிடர் என்ற கருத்தாக்கத்தை தமிழில் அயோத்திதாச பண்டிதர் பயன்படுத்தினார்.
அவர் பௌத்தம் பற்றி நிறைய எழுதினார். அதன் பின் வந்த கல்வெட்டுக்களும், நூல் ஆய்வுகளும்
தமிழர் மத்தியில் பௌத்தத்தின் நிலை என்ன? - என தெளிவுகளைத் தந்துள்ளது.

அயோத்திதாசர் - பாரி செழியன் காணொளி:

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாரியிடம் பண்டிதர் நூல்கள்
இணையம் வரவேண்டும் என வேண்டினேன். உங்களால் நிறைவேறுகிறது.
அரசாங்கம் மறைமலையடிகள், அயோத்திதாசபண்டிதர், திருவிக, பாரதி,
பாரதிதாசன், கோவை அய்யாமுத்து, பெரியார், பண்டாரத்தார், ....
என்று எல்லார் எழுத்துக்களையும் பிடிஎப் ஆகவாவது காக்கவேண்டியது
அவசியம். நானும் 20+ ஆண்டுகளாக இதனை இணையத்தில்
(முதலில் ஆங்கிலத்தில், 15 ஆண்டாய் தமிழிலும் சொல்லிவருகிறேன். செய்வார்களா?
அரசாங்கம் கொடுப்பதிலும் ஏகப்பட்ட பிழைகள்.
கல்வெட்டுகள் அழிந்துவருகின்றன, சூழல் பாழ்படுகிறது. பழைய நூல்களோ அழிபாடு :(

"என் பகுத்தறிவு பிரசாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கு முன்னோடியாக இருந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் அப்பத்துரையாரும்தான்"  

ஈவெ.ராமசாமி அவர்கள்  தனது 68 ஆவது பிறந்த நாள் விழாவில் பெங்களூரில் பேசியது.


http://www.ayothidhasar.com/pandithar/



கால்ட்வெல் தந்த திராவிடக் கருத்தியல் வளர்ச்ச்சியில் முக்கியப் பங்கு பண்டிதருக்குண்டு,

ரெவரண்ட் ஜான் ரத்தினத்துடன் சேர்ந்து 1885-லே ’திராவிட பாண்டியன்’ என்ற பத்திரிகை
தொடங்கினார். 1886 சென்சஸின் போது தலித் ஜாதியினர்கள் ஹிந்துக்கள் அல்லர் என்று
அறிவித்தார். 1881 சென்சஸின்போது எல்லா தமிழர்களையும் “ஜாதிகள் இல்லாத
திராவிடரகள்” (Casteless Dravidians) என்று பதியச் சொன்னார். 1891-ல் திராவிட மகாஜன சபை
தொடங்கினார். இவையெல்லாம், கால்ட்வெல் போன்றோர் தந்த வரலாற்றுமொழியியலின்
தொல்வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சென்ற முயற்சிகள். பழமையான செம்மொழிகளின்
இலக்கியங்கள் பதிவு செய்துள்ள ஜாதிகள் அழியத் தொடங்கின.

---------------------

தலித் அரசியல் - தமிழ்நாட்டில் என நான் இன்று படித்த ஓர் கட்டுரை:
தமிழகம் எப்போது ஒரு தலித் இயக்கத்தவரை முதல்வர் ஆக்கும்?
நிறைந்த பணமும், பதவியும், அதிகாரமும் இருப்பதால் சிஎம்
நாற்காலியில் அமரப் போடி கடுமையாக இருக்கும்.

Balasubramanian Zen

unread,
Sep 26, 2015, 12:10:09 AM9/26/15
to mint...@googlegroups.com

மதுரை  ஆண்டிப்பட்டியில் காணப்படும் புத்தர் சிலை.

நன்றி
வணக்கம்.

பாலு
மதுரை.

--
புத்தர் ஆண்டிபட்டி.jpg

Balasubramanian Zen

unread,
Sep 26, 2015, 12:29:06 AM9/26/15
to mint...@googlegroups.com

நன்றி திரு கணேசன் ஐயா அவர்களே.
Roots of Hinduism நூலை விரைவில்  படிக்கிறேன்.

பாலு
மதுரை.

Reply all
Reply to author
Forward
0 new messages