<பெருஞ்சுனாமி மதுரையை மையமாகக் கொண்டு கடாரம், தென்னிந்தியா, இலங்கை, குமரிக்கோடு முதலானவற்றை அழித்து என்பன உண்மையா? அல்லது கற்பனையா? என அறிவியல் அடிப்படையில் அடிப்படையில் கூற முடியும். இதற்குச் சில ஆண்டுகாலம் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.>ஐயன்மீர் ,வணக்கம்.அமைதியாக இந்த இழையை அவ்வப்போது வாசித்து வருபவள்தான் நான்.என்றாலும் -குமரிக்கோடு பற்றிக் குறிப்பிடுவதால் அது பற்றிய என் கருத்தை மட்டும் பதிவு செய்ய விழைகிறேன்."பஹ்ருளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள "-காடுகாண் காதை -19-20(மன்னிக்கவும் .ஆய்த எழுத்தை தட்டச்சு செய்ய இயலவில்லை.அதனால் '-ஹ்-'......)இம்மேற்கோள் சுட்டும் குமரிக்கோடு என்பதற்கு குமரிமலை என்று அடியார்க்கு நல்லார் முதல் போ.வே.சோமசுந்தரனார் வரை (உ. வே.சா .உட்பட )அனைவரும் கூறுகின்றனர் .ஆனால் அப்படி ஒரு மலை இருந்தமைக்குச் சான்று ஏதும் இல்லை.தென் தமிழகத்தைப் பொறுத்த வரை '-கோடு 'என்னும் பின்னொட்டு இடம் பெறும் ஊர்களெல்லாம் நீர்க்கரைகளில் அமைந்துள்ளன.அதங்கோடுபுதாங்கோடுமூதாலங்கோடுதிருவிதாங்கோடுகழிக்கோடுவித்துவக்கோடுகோழிக்கோடுமுயிரிக்கோடுநெடுங்குளக்கோடுஅழிக்கோடுகாரிக்கோடுஇப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.இவை அனைத்தும் நீர்த்துறைகளை ஒட்டி உள்ளமையை அரும்பதஉரைகாரரின் கூற்றும் உறுதி செய்கிறது.பாலக்காட்டைச் சேர்ந்த புலவர்.செல்லன்.கோவிந்தனும் இக்கருத்தைக் கூறியுள்ளார்.(சிலப்பதிகாரம் 11ம்.நூ.டுக் காப்பியம் -66)குமரிக்கோடு என்ற நீர்த்துறைபஹ்ருளி ஆற்றின் கரையில் பன்மலையை அடுத்து இருந்தது.கடல்கோளால் அத்துறையும் ஊரும் அழிந்தன.'பம்மலா 'என்ற பெயரில் பன்மலையின் ஒரு பகுதி இன்றும் உள்ளது.பறளையாறு என்ற பெயரில் ஓடும் ஆறு அன்றைய பஹ்ருளி ஆற்றின் எச்சம் என்றும் கூறலாம்.கண்மணி
அடுத்தடுத்த?I know this from experience; I was a writer on an early example of a show to benefit from this cascade of affection.
எனது வினாக்கள்தமிழகம் போன்ற சூழலில் வரலாற்றுத் தகவல்கள் பாதுகாப்பு என்பவை சிறப்பாகச் செயல்படவில்லை. காலின் மெக்கன்சி காலத்தில் தான் அது பற்றிய பிரக்ஞை ஏற்படுகின்றது. இந்தச் சூழலில் அனைத்து பூளோக நில சம்பந்தப்பட்ட தகவல்களும், நமக்கு இப்போது கிடைக்கின்ற நூல்களில் இருந்தே ஆக வேண்டும் எனக் கொள்ள முடியாது அல்லவா..?இதே தொடர்ச்சியாக... குமரி என்ற பெயரில் தான் அது சுட்டப்பட்டிருக்க வேண்டும் என நினைத்து நாம் தேட அது வேறு பெயரில் சுட்டப்பட்ட ஒரு பொருளாகவும் அல்லது சேர நாடு, தென்னாடு, பாண்டிய நாடு என்ற வேறு பெயரால் சுட்டப்பட்ட காரணமும் இருந்திருக்க வாய்ப்புண்டா?சுபா
> குமரித்துறை இருந்தது என்பதற்கு வலுவான சான்றுகள் இத்தனை இருக்கும்போது எதற்காக அதை மலை என்று சொல்ல வேண்டும்?குமரித்துறை என்று சொல்லாமல், குமரிக்கோடு என்பதால் அந்த மலையளவு நீர் புகுந்தது என எழுதியுள்ளார்- கற்பனைக் காவியத்தில்.கோடு என்றால் நீர்க்கரை என்று கொடுத்திருந்தீர்கள். மலை என்ற பொருளிலும் குமரி மாவட்டத்தில்இடங்கள் உண்டு எனக் குறிப்பிட்டேன்.குமரிக்கோடு வெறும் கன்யாகுமரித் துறை என்றால் குமரிக்கண்டம் என்பதை அண்டார்டிக்கா, ஆஸ்திரேலியாவரை தமிழர்கள் வளர்த்து வருகிறார்களே!!அங்கேயே இருக்கிற பறுளி ஆறு, கொற்றிகோட்டைப் பார்க்கட்டும் என எழுதிய மடல்.நா. கணேசன்
2017-12-11 5:47 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
<கொற்றிகோட்டை குமரிக்கோடு என மாற்றி, அதன் உச்சிக்கு சுனாமி அலைகள் சென்றன என்கிறார் இளங்கோ அடிகள்>
என்ன ஆயிற்று ?ஏன் இப்படி?ஒருவேளை எனக்கு ஏதாவது தேர்வு நடத்துகிறீர்களா?இளங்கோவடிகள் சுனாமி பற்றிப் பேசவே இல்லை.அவர் ஒரு கடல்கோளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்.கடல்கோளுக்கும் சுனாமிக்கும் வேறுபாடு இல்லையா?எனக்குப் புவியியல் தெரியாது.(ஒரு கலைச்சொல்லை இன்னொன்றாகப் பயன்படுத்தினால்பொருளில் பெருந்தவறு ஏற்படும் என்னுமளவுக்கு அறிவியல் புரியும்.) ஒரு சுட்டியைக் கொடுத்துள்ளீர்கள் .அதன் உள்ளே சென்று பார்த்துவிட்டேன் .புவியியல் விஞ்ஞானியாகிய தாங்கள் இரண்டும் ஒன்று என்று கூறினால் மறு வார்த்தை பேசவும் மாட்டேன்.இப்போது குமரிக்கோட்டிற்கு வருவோம்எனது கருதுகோள் :இளங்கோவடிகள் சுட்டும் குமரிக்கோடு ஒரு நீர்த்துறை ஆகும்.முதன்மைத் தரவுகள் :1)பெரிப்ளூஸ் பலிதா என்னும் துறைமுகத்தை அடுத்து கொமார் என்ற முனையும் துறைமுகமும் உள்ளன.அங்கு ஒரு பெண் தெய்வத்திற்கு எல்லா மக்களும் வழிபாடு செய்கின்றனர் என்கிறது.(Foreign Notices Of South India-From Megasthanes To Ma-Huan-K.A.Neelakanda sasthri-p.58)2)டாலமி குமரி என்ற முனையும் அப்பெயர்கொண்ட ஊரும் அயாய்நாட்டில் இருந்தது என்கிறார்.(டி.தேவகுஞ்சரி-Madurai Through The Ages-ப.65)3)ஸ்டராபோ குமரியில் ஒரு கோட்டை உண்டு என்கிறார்.(V.Kanagasabai Pillai-The Tamils 1800 Years Ago-p.682ம்.நிலைத் தரவுகள் :1)அரும்பத உரைகாரர் குமரிக்கோடு என்பதற்கு குமரிக்கரை என்றே பொருள் கொள்கிறார்.2)குமரியில் சற்று தூரம் கடலுக்குள் சென்றால் ஒரு பாறையில் குடிநீர்க் கிணறு உள்ளது என்றும் கிரேக்கர் கூறும் கோட்டையும் துறையும் இருந்து அழிந்தமைக்கு இது ஒரு சான்று என்றும் கே.பி.பத்மநாபமேனன் கூறியுள்ளார்.(History Of Kerala -p.10)3)இன்றைய குமரிஅம்மன் கோயில் பண்டு கடலிலிருந்து 60 லி தூரம் உள்நாட்டில் தள்ளி இருந்தது என்று ஃ பரியாய் சௌயா என்னும் போர்ச்சுகல் வரலாற்றாசிரியர் சொல்வதை ஆய்வாளர் எடுத்துக் காட்டுகின்றனர் .(கே.பி.பத்மநாப மேனன்-ப.8)இன்று பறளையாறும்,பம்மலாவும் முறையே இளங்கோவடிகள் சுட்டிய பஃறுளி,பன்மலைஅடுக்கம்என்றுஇனம்காணப்படுகிறது.அதற்காக கடல்கோள் நிகழ்ந்தது கற்பனை என்று சொல்ல இயலாது.அந்தக் கடல்கோள் பஃறுளியாற்றின் கழிமுகப் பகுதியையும் அதன் கரையிலிருந்த குமரித்துறையையும் உட்கொண்டு இருக்க வேண்டும்.கணேசன் அவர்கள் கூறுவது போல கொற்றிக்கோட்டை இளங்கோவடிகள் குமரிக்கோடு என்று பெயர் மாற்றிக் காப்பியம் எழுத வேண்டிய தேவை எதுவும் அவருக்கு இல்லை.அதற்காக சிலப்பதிகாரக்கதை ஒரு வரலாறு என்று நான் சொல்லமாட்டேன்.கொற்றவை கோடு >>>கொற்றிக்கோடு என்ற மாற்றம் இயல்பானது.நம் நாட்டில் ....மட்டுமல்ல.கிழக்கே கொல்கத்தா முதல் மேற்கே காந்தாரம்(காந்தாரியை கொற்றவையாகக் கூறும் நாட்டார் பாடல்கள் உண்டு ) வரையிலும் ,வடக்கே ஜம்மு முதல் தெற்கே இலங்கை வரை .......அதற்கும் அப்பால் ஆப்பிரிக்காவில் கூட தாய்த்தெய்வ வழிபாடு இருந்துள்ளதே உங்களுக்கு என்னைக் காட்டிலும் நிறையத் தெரியும்..இவற்றில் பல கோயில்கள் மலைமேல் உள்ளன.எ .கா.வைஷ்ணோ தேவி கோயில்-சமணக் கோயில் .ஒரு ஆண்டுக்கு முன்னர் சென்று வந்தேன்.குமரித்துறை இருந்தது என்பதற்கு வலுவான சான்றுகள் இத்தனை இருக்கும்போது எதற்காக அதை மலை என்று சொல்ல வேண்டும்?கண்மணி
குமரிக்கோடு அழிந்த பின்னர் குமரியம்பெருந்துறை தோன்றியது.இப்போதிருக்கும் கன்னியாகுமரி காலவோட்டத்தில் மிகவும் மாறுபட்டது.குமரியம்பெருந்துறை புனிதநீராடுவதற்கு ஏற்ற இடமாக இருந்தது.ஆனால் இன்றைய குமரிமுனையில் புனித நீராடுவது என்பது அபாயகரமானதாகும் .புகார் என்பது காவிரியின் சங்கமத்துறைக்கு உரிய பெயராக வழங்கியது போல குமரித்துறை பஃறுளியாற்றின் சங்கமத்துறைக்குரிய பெயராக வழங்கியிருக்க வேண்டும்.புகார்த்துறையின் பெயர் ஒரு ஊருக்கு ஆகி வந்ததைப் போல குமரித்துறையின் பெயர் கரையிலிருந்த ஊருக்கு ஆகி குமரிக்கோடு என வழங்கியது.கடல்கோளால் குமரிக்கோடும் பஃறுளியாற்றின் கழிமுகப் பகுதியும் அழிந்து விட்டதால் புதிதாகத் தோன்றிய கடல்முனைக்கு பழைய குமரித்துறையின் நினைவாகவே குமரித்துறை என்றும் குமரிமுனை என்றும் பெயர் வழங்கியது.கண்மணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முசிறித்துறை இருக்கும் ஊர் முசிரிக்கோடுகாரித்துறை இருக்கும் ஊர் காரிக்கோடுகுமரித்துறை இருக்கும் ஊர் குமரிக்கோடுகண்மணி
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
(திருச்செங்கோடு, வேங்கோடு, ஏற்றக்கோடு, கொற்றிகோடு, ... போன்ற குமரி மாவட்ட மலைகள்).இவை எங்கே உள்ளன என்று சொல்லுங்கள் . அறிந்து கொள்வேன்.அரும்பத உரையாசிரியர், கோடு என்பதற்கு நீர்க்கரை என்று சரியாக பொருள் கொண்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா.
1)பன்மலையை மலை என்று சொன்னவர் குமரியை மட்டும் ஏன் 'கோடு 'என்று குறித்தார் ?
--
<ஆனால், ”பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடு” என் இளங்கோ அடிகள் குமரித்துறையினின்றும் வேறுபடுத்தியுள்ளார். அவரே குமரித்துறையில் நீராடுவது பற்றி இரண்டு இடங்களில் பாடியுள்ளமை கொடுத்துள்ளேன். எனவே தான் ‘பன்மலைஅடுக்கத்துக் குமரிக்கோடு’ = பல பக்க மலை களையுடைய குமரி மலையினையும் என உரைகள் குறிப்பிடுவது சரி.>பன்மலையை அடுத்திருந்த-/ஒட்டியிருந்த குமரிக்கோடு என்பது தான் பொருள்.1)பன்மலையை மலை என்று சொன்னவர் குமரியை மட்டும் ஏன் 'கோடு 'என்று குறித்தார் ?2)"பன்மலை அடுக்கத்துக் குமரிமலையும் கொடுங்கடல் கொள்ள " என்று ஏன் பாடவில்லை.?3)கொற்றவை >>>கொற்றி என மாற்றம் பெறுவது இயற்கை"பன்மலையடுக்கத்துக் கொற்றிமலையும் கொடுங்கடல் கொள்ள "என்று என் பாடவில்லை.?
இழையின் நோக்கம் கொற்றிக்கோட்டின் பொருள் என்ன என்பதல்ல.குமரிக்கோடு எது என்பதே.கொற்றிக்கோடு என்ற பெயரை குமரிக்கோடு என்று மாற்றி இளங்கோவடிகள் பயில்கிறார் என்ற உங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால்- அவ்வாறு அவர் மாற்றிப் பயிலும் பிற இருப்பிடங்கள் எவையேனும் இருந்தால் காட்டுங்கள்.ஒரு நகரம் =?ஒரு ஊர் =?ஒரு ஆறு =?கண்மணி
///இருபதாம் நூற்றாண்டு சிலப்பதிகார உரைகள், நாடுகாண் காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ///
அவர்களுக்கு உங்களைப் போன்ற கற்பனை வளம் குறைவு.
..... தேமொழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2017-12-17 9:40 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:///இருபதாம் நூற்றாண்டு சிலப்பதிகார உரைகள், நாடுகாண் காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ///
அவர்களுக்கு உங்களைப் போன்ற கற்பனை வளம் குறைவு.
கோடு என்பது மலையைத்தான் குறிக்கிறது. குமரி மாவட்டத்தில் விளவங்கோடு என்று ஊர்ப் பெயர் இருப்பதைக் காணலாம்.

வணக்கம்.மற்றபிற கோடுகளைவிட குமரிக்கோடு வயதில் இளையது. அதனால் குமரி என்ற பண்பாகுபெயர்.கடலில் குமரி யில்லை. எனவே குமரிக்கடல் என்ற பெயரில்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsub...@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUewsP_fc8Fy-kbmOXUwesV%3DPJz3%3De47GycbaYZhR0fr1A%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
<இளங்கோ அடிகள் இருபொருள்பட எழுதுவதில் வல்லாளர்.ஆலு = ஆலமரம் என்பது சேரநாட்டுவழக்கு(கோல்:கோலு, வேல்:வேலு, பால்:பாலு, கால்:காலு, ... என்கிறோமே,அதுபோல, ஆல்:ஆலு - இந்தியாவின் தேசியமரம்.)சிவன் இமையத்தில் ஆலின் அடிஅமர்ந்து இருடியர்க்கு மறைபுகல்பவன்.அதனால், சேரன் செங்குட்டுவன் இமையமலையில்சிவனை வணங்கினான் எனக் குறிக்க, ஒரு (கற்பனை) தலப்பெயரைஉருவாக்கிச் சொல்கிறார் அடிகள். ஆலுவம் = ஆலு + வ் + அம்.வ் = உடன்படுமெய் (glide), அம் - சாரியை.ஆலுவத்தில் (ஒரு ஆலந்துறையில்) சிவனை வணங்கிச் சேரராஜன்வடக்கத்தி மன்னரைப் 18 நாழிகையில் வென்றானாம்.>இரண்டு பொருள்கள் என்னென்ன?1)குயிலாலுவம் கற்பனைப் பெயர் என்கிறீர்கள் .2)...............................................................................?
<புனல்வாயில் என்றால் மதகு (Sluice to canals from lakes) என்பது பொருள். சேரநாட்டு இலக்கியமான பதிற்றுப்பத்தால் இது விளங்கும்.கணேசன் எழுதியது ->சேர நாட்டு இலக்கியமான பதிற்றுப்பத்தில் 'புனல் வாயில் 'எங்கே உள்ளது?பதட்டத்தோடு எழுதுவதாகத் தெரிகிறது.'புனல்வாயில் '-----சிறுபாணாற்றுப் படையில் இடம் பெறும் தொடர்.கண்மணி
Themozhi>> வரும் புனலுக்கும் இந்த வாயிலுக்கும் இருக்கும் தொடர்பை அறிய விரும்புகிறேன்.
வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்தஎழுவுறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன்வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே ..."(41-50)"வருபுனல் வாயில்" குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன் திரு. கணேசன்.
| 3. பூத்த நெய்தல் | |
| 13. | தொறுத்தவய1 லாரல்பிறழ்நவும் ஏறுபொருதசெறு வுழாதுவித்துநவும் கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இருங்க ணெருமையி னிரைதடுக் குநவும் |
| 5 | கலிகெழு துணங்கை யாடிய மருங்கின் வளைதலை மூதா வாம்ப லார்நவும் |
| ஒலிதெங்கி னிமிழ்மருதிற் புனல்வாயிற் பூம்பொய்கைப் பாடல் சான்ற பயங்கெழு வைப்பின் |
| 10 | நாடுகவி னழிய நாமந் தோற்றிக் கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத் திரிகாய் விடத்தரொடு காருடை போகிக் |
| 15 | கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க வூரிய2 நெருஞ்சி நீறாடு பறந்தலைத் தாதெரு மறுத்த கலியழி மன்றத்து உள்ள மழிய வூக்குநர் மிடறபுத்(து) உள்ளுநர் பனிக்கும் பாழா யினவே |
| 20 | காடே கடவுண் மேன புறவே ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன ஆறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக் கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்3 குடிபுறந் தருநர் பார மோம்பி |
| 25 | அழல் சென்ற மருங்கின் வெள்ளி யோடா(து) மழைவேண்டு புலத்து மாரி நிற்ப நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெருமநீ காத்த நாடே |
துறை : செந்துறைப் பாடாண்பாட்டு. | |
உங்கள் மின்மடலிலிருந்து இன்று எனக்குக் கிடைத்த புதுத் தகவல் -ஆலமரத்துக்கு வேர்ச்சொல் திராவிடத்திலிருந்து ......அழகான சுவையான தகவல்.
கண்டவியூகம் நான் படித்தது இல்லை.அதைப் பற்றி நீங்கள் அடிக்கடி பேசுகிறீர்கள்.-தெரிந்து கொள்கிறேன்.
பிற செய்திகள் எல்லாம் ......நீங்கள் இவ்வாறு தொகுத்துக் கொடுப்பதன் காரணமாக நான் என்ன கருதுகிறேன் தெரியுமா?என் பட்டறிவிற்கு எட்டியதைக் கூறுகிறேன்......அருள் கூர்ந்து சினம் கொள்ள வேண்டாம்.....நீங்கள் என்னை விடப் பெரியவர்.மிகமிக வேகமாக -ஆசிரியர்க்கு சவாலாக -ஆழமாகவும்,அகலமாகவும் கற்றுக் கொள்ளும் மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன்.இவர்களிடம் என்ன பிரச்னை இருக்கும்/ஏற்படும் தெரியுமா !தாம் தெரிந்து கொண்ட செய்திகளை அவர்களால் விடைத்தாளில் கொட்டாமல் இருக்கவே முடியாது.அந்தச் செய்திகளுக்கு இடையில் தொடர்பையும் இவர்களே கற்பித்து விடுவார்கள்.இவர்களைத் தேர்விலே ஒப்பேற வைப்பதற்கு ஆசிரியர் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கும்.கண்டவியூகம் பற்றி உங்களுக்கு மிகுதியாகத் தெரிந்திருப்பது தான் பிரச்சினையே.சிலப்பதிகாரம் அழகான நாடகக் காப்பியம்.அதன் அழகை ரசிப்பதை விட்டுவிட்டு வலுக்கட்டாயமாக அதில் கண்டவியூகத்தைத் திணிப்பானேன் !நாடுகாண் காதை -100%புகாரிலிருந்து உறையூர் வரை உள்ள சோழநாட்டு வளம்.அது சமணசமயம் சார்ந்தது என்பதை நான் மறுக்கவில்லை.அதற்காக புகாரிலிருந்து கிளம்பி மதுரை வரவேண்டியவர்கள் சீரங்கப்பட்டணத்தைச் சுற்றி வந்தனர் என்றால் .......தன் பாத்திரங்களை அவ்வளவு முட்டாள்களாக இளங்கோவடிகள் படைக்கவில்லை.
"வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் "ஆகிய தன் மனைவி ஊரை விட்டு வெளியேறிய சில நாழிகைக்குள் ,'மதுரை மூதூருக்கு இன்னும் எவ்வளவு தூரம்?' என்று கேட்க -"ஆறைங்காதம் நம் அகநாட்டும்பர் "என்று--- அவள் மலைத்து விடக்கூடாதெனச் சொன்னவன் கோவலன். மனைவி மேல் அன்பும்,ஒருவர் மேல் மற்றவர்க்கு அக்கறையும் தோன்றியதன் அடையாளமாக அமைந்த உரையாடல் இது. கணவன் மனைவி நெருக்கத்தைப் பொய்யாக்கி அதற்கு கண்டவியூகம் என்ற சாயத்தைப் பூசி இலக்கிய அழகைச் சிதைக்க வேண்டாமே .
குமரிக்கோடு என்ற பெயருக்கு பெரிப்ளூஸ் ,டாலமி ,ஸ்டராபோ,ஃ பரியாய் சௌயா காலத்திலிருந்து ஒரு வரலாறு இருக்கிறது.நான் கொடுத்துள்ள ஆறு தரவுகளும் அந்த வரலாற்றைப் பேசுகின்றன.கொற்றிக்கோடு என்ற பெயருக்கு என்ன வரலாறு இருக்கிறது? பொருள் ஒப்புமை இருப்பதை நான் மறுக்கவில்லை.எனவே குமரிக்கோடு என்பது பன்மலை அடுக்கத்தை ஒட்டி/அடுத்து குமரித்துறை இருந்த ஒரு ஊரின் பெயர் ஆகும்.வரலாற்றுக் காலத்தில் நிகழ்ந்த ஒரு கடல்கோள் பஃறுளி ஆற்றின் கழிமுகப் பகுதியையும் அதன் கரையிலிருந்த குமரிக்கோட்டையும் அழிக்க புதிதாக குமரியம்பெருந்துறை தோன்றியது.குணகடல் ,குடகடல், தொடியோள் பௌவம் அனைத்தும் காரணப்பெயர்களே .இவை அனைத்திற்கும் வரலாறு உள்ளன .கொற்றிக் கோடு என்ற பெயர்ச் சொல்லுக்கு ...........வரலாறு ..........???????
கண்மணி
2017-12-17 23:16 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
2017-12-17 9:40 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:///இருபதாம் நூற்றாண்டு சிலப்பதிகார உரைகள், நாடுகாண் காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ///
அவர்களுக்கு உங்களைப் போன்ற கற்பனை வளம் குறைவு.தொல்லியல், வரலாறு, இந்திய செம்மொழிகளின் இலக்கியங்கள் ஒப்பிட்டுப் பார்க்காமல் எழுதியுள்ளனர்.நா. கணேசன்
..... தேமொழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
'புனல் வாயில் ' என்ற தொடர் புனவாசலைக் குறிப்பது என்பதையே மீண்டும் சொல்கிறீர்களே; அன்றியும் வாசல் என்ற சொல்லுக்கு கோபுரம் என்ற பொருள் இருப்பதென வேறொரு சான்றை உங்களால் கூற இயலவில்லை.
வாயில் காடு | |
| 114. | எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற; முன்னம் மால். ஒல்லை. உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்தவால்- மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறுறா வழக்கினால் நல்ல ஆறு சொல்லும் வேதம் நான்கும் அன்ன- வாயிலே. |
வாயில் - அயோத்தி நகரத்துக் கோபுர வாயில்கள் (நான்கும்); | |
| 20 Dec (1 day ago) ![]() | < | ![]() ![]() | |
| ||||
--
<
N D Logasundaram <selvindls61@gmail.com>
to mintamil
<
N D Logasundaram <selvindls61@gmail.com>
to mintamil
.ஆனால்.........நாவலந்தீவு ,நாவலந்தண்பொழில் .....................என்ற இரண்டு தொடர்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.அதே நூலில் சுள்ளியம்பெரியாறு ,குமரியம்பெருந்துறை .....................என்ற தொடர்களும் உள்ளன.இப்போது இத்தொடர்களை ................ குமரி+அம் +துறை =குமரியம்பெருந்துறைசுள்ளி+அம் +பேரியாறு =சுள்ளியம்பேரியாறு .......என்று பிரித்துத் தான் பொருள் கொள்கிறோம்.எனவே நாவல்+அம் +தீவு =நாவலந்தீவுநாவல் +அம் +தண்பொழில் =நாவலந்தண்பொழில்............ என்று தான் பிரித்தாக வேண்டும்.என்ன பொருள் என்பது அடுத்த கட்ட ஆய்வு.
சம்பா என்று இன்றும் ஒரு மாவட்டத்தின் பெயர் --ஜம்முவில் வழங்குகிறது.பௌத்தம் தோன்றித் தழைத்த மாநிலம்.அங்கிருந்து சமயம் தமிழகம் வந்த போது சம்பா என்ற பெயரும் வந்தது.
2017-12-20 21:47 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:.ஆனால்.........நாவலந்தீவு ,நாவலந்தண்பொழில் .....................என்ற இரண்டு தொடர்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.அதே நூலில் சுள்ளியம்பெரியாறு ,குமரியம்பெருந்துறை .....................என்ற தொடர்களும் உள்ளன.இப்போது இத்தொடர்களை ................ குமரி+அம் +துறை =குமரியம்பெருந்துறைசுள்ளி+அம் +பேரியாறு =சுள்ளியம்பேரியாறு .......என்று பிரித்துத் தான் பொருள் கொள்கிறோம்.எனவே நாவல்+அம் +தீவு =நாவலந்தீவுநாவல் +அம் +தண்பொழில் =நாவலந்தண்பொழில்............ என்று தான் பிரித்தாக வேண்டும்.
<உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇவாயில் விடாது கோயில் புக்கெம்பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்’வாயில் கடந்து கோயில் புகுதல்.இதே பொருளைத்தான் நச்சினார்க்கினியர் சிறுபாணாற்றுப்படை வரிக்கும் தருகிறார்.”வாயில் வஞ்சி” பெரிய வாயிலையுடைய வஞ்சி.>இல்லை .இங்கே சொல்லப்படுவது மன்னனின் அரண்மனை.கோட்டை வாயில் இல்லை.
நச்சினார்க்கினியர் மதுரைவாசி என்று வாசித்ததாகத்தான் நினைவு.அவர் படுஅப்பாவித்தனமாக வாயில் என்பதற்கு கோபுரம் என்று பொருள் எழுதி விட்டார்.அவர் மனதில் மதுரைக்கோட்டையும் கோபுரத்துடன் கூடிய வாயிலும் ஆழமாகப் பதிந்து இருந்ததால் அப்படி எழுதி விட்டார்.இப்படி இந்தக் கொங்குவஞ்சி பட்டப்பகலில் மதுரையின் பெருமையைக் கொள்ளையடித்து விடும் என்று சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்.வடகடல் ,நாலு கடல் என்றெல்லாம் ........இந்தச் சிக்கலைத் தீர்த்த பிறகு தான் சேரரின் மூதூரை வெளிச்சத்திற்குக் கொண்டு வர இயலும்.ஒரு வழி இருக்கிறது.பரத்துவாசியாகிய உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியரே ;-----சாமீகண்மணி
2017-12-21 11:17 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
<
N D Logasundaram <selvi...@gmail.com>
to mintamil
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
<குயிலாலந்துறை சோழநாட்டுத்தலம். எங்கே என உவேசா எழுத்தில் பார்க்கவும். வைப்புத்தலம்.இருங்குயில் ஆலுவம் - சிலம்பு.(1) பெரிய குயில்கள் போன்ற பறவைகள் வதியும் ஆலுவம் (ஆலந்துறை) இமைய மலையிலே.(2) இருங்குயில்கள் பாடுகின்ற(ஆலுகிற) இமைய மலை இடம்.சிவபிரான்/ரிஷ்பநாதர் குறிப்பு : ஆலு (சேரனாட்டுவழக்கு) ரிஷபநாதர் ஆதிநாதரின் தீக்ஷாவிருக்ஷம்>குயிலாலுவம் இமயமலைப்பகுதியில் இருந்தது.அங்கு மக்கள் சிவனை வழிபட்டனர்.---இவை இளங்கோவடிகள் வெளிப்படையாகப் பேசும் தகவல்கள்.இங்கே இரண்டாவது பொருள் கொள்வதற்கு என்ன தேவை உள்ளது.?நம்மால் குயிலாலுவம் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால் உடனே இளங்கோவடிகள் இருபொருள் பட எழுதுவதாக ஒரு கருத்தைக் கற்பித்து நமக்குத் தெரிந்த ஊரை இயைத்துப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் ஆகும்?நீலகேசி -மொக்கலவாதச் சருக்கம் -190ம்.பாடல் குயிலாலபுரம் என்று ஒரு ஊரைச் சுட்டுகிறது.-உ.வே.சா.உரை -ப.561புத்தரின் பூர்வ அவதார ஸ்தலங்களில் ஒன்றான குயிலாலபுரம் -இளங்கோவடிகள் சுட்டுவது -மணிமேகலை உரைப்பதிப்புஎனவே கபிலவஸ்துவுக்கு அருகில் குயிலாலுவம் இருந்திருக்க வேண்டும்.T.G.Aravamuthan-Kaveri The Maukaris And The Sangam Age-p.40மு.இரா .வுக்கு உ.வே.சா.கருத்தில் உடன்பாடோ திருப்தியோ இல்லை(சேரன் செங்குட்டுவன் -ப.151)அதற்காக சோழ நாட்டில் இருக்கும் சிவத்தலத்தை உட்பொருளாகக் கொள்கிறார் இளங்கோ என்பது எந்த ஒரு ஆய்வு நெறிமுறைக்குள்ளும் அடங்குவதன்று.எந்த ஊரின் பெயரையும் இருபொருள் பட அவர் பாடவில்லை.
நீங்கள் காட்டும் புலிவலம் ,வலிவலம் ,வேட்டவலம் ,திருவலம் ஆகியவற்றின் வரிசையில் நாவலம் என்ற சொல்லை வைக்கும் போது ஒலியளவில் ஒப்புமை உள்ளது என்பதை மறுக்க இயலாது.ஆனால்.........நாவலந்தீவு ,நாவலந்தண்பொழில் .....................என்ற இரண்டு தொடர்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.அதே நூலில்
சுள்ளியம்பெரியாறு ,
| 21 Dec (1 day ago) ![]() | ![]() ![]() | ||
| ||||
--
<N D Logasundaram <selvindls61@gmail.com>
to mintamil
<N D Logasundaram <selvindls61@gmail.com>
to mintamil