புகழ்பெற்ற மன்பகதூர் சிங் லஹக் விருது; எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு அறிவிப்பு

10 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 7, 2026, 1:15:42 PM (2 days ago) Jun 7
to மின்தமிழ்
https://tamil.news18.com/tamil-nadu/announcement-of-manbahadur-singh-lakhak-samman-award-for-perumal-murugan-nw-azt-ws-bl-2132016.html

புகழ்பெற்ற மன்பகதூர் சிங் லஹக் விருது; எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு அறிவிப்பு

ஜூன்  07, 2026
perumal murugan.jpg
இந்திய மொழி ஒற்றுமை மன்றத்தின் கூட்டு ஆதரவோடு, நடப்பு ஆண்டிற்கான புகழ்பெற்ற 'மன்பகதூர் சிங் லஹக் (சம்மான்) விருது தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வழங்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மன்பகதூர் சிங் லஹக் சம்மான் குழுவின் செயலாளர் நிர்பய் தேவ்யான்ஷ், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிராமப்புற தமிழ்நாட்டின் வாழ்வியலையும், சாதிய மற்றும் சமூக அழுத்தங்களையும் தனது ஆழமான எழுத்துகளால் உலக அரங்கில் பதிவு செய்ததற்காக பெருமாள் முருகனுக்கு இந்த கௌரவம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

1966இல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த பெருமாள் முருகன், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, பல்வேறு அரசு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கொங்கு நாட்டின் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கலாச்சாரம் குறித்துப் பரந்துபட்ட ஆய்வுகளைச் செய்துள்ளார். இவரது புகழ்பெற்ற படைப்புகளான 'மாதொருபாகன்' மற்றும் 'பூக்குழி' ஆகியவை சர்வதேச அளவில் புக்கர் பரிசு மற்றும் சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருதுகளைப் பெற்றுள்ளன.
Reply all
Reply to author
Forward
0 new messages