தமிழர்களே தமிழன் தமிழுக்குத் தமிழ் என்று ஏன் பெயர் வைத்தான்? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

125 views
Skip to first unread message

இணையப் பரிமேலழகன்

unread,
Oct 29, 2014, 5:39:42 AM10/29/14
to mint...@googlegroups.com
திராவிடம் என்பது தமிழ் மொழிச் சொல் அல்ல என்றும் திராவிட என்ற சொல் சத்திரியர்களில் கீழ்மைப்பட்டவர்களான தாசர்கள் என்று கூறப்படுவதால் அதை விலக்கிவிட்டுத் தமிழ் என்ற சொல்லைப் பார்க்கலாம்.  

தமிழ் என்று தனியாக ஒரு சொல் தமிழ் இலக்கியத்தில் இல்லை என்றும் தேன் தமிழ் தீந்தமிழ் தண்டமிழ் என்று வழங்கப்பட்டிருப்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டு தமிழ் என்ற சொல்லை வேற்சொல்லாய்வுக்கு உட்படுத்தி தமி + ழ் என்று கூறி தனித்தன்மை வாய்ந்த இனைமையான மொழி என்பதாகக் கூறியுள்ளனர்

உலகத்தில் உள்ள அனைவரும் குறிப்பாக மதுரைப்பக்கம் உள்ள என்போன்றோரும் அஞ்சி அடங்கும் ஒரு எழுத்து ழ என்பது அனைவருக்கும் தெரியும்.  இந்திய மொழிகளில் தமிழுக்குள்ள சிறப்பே இந்த ழ தான்.  மொழியின் பெயரில் இந்த ழவைச் சேர்த்து இது தனித்தன்மை வாய்ந்த மொழி என்று நிறுவப்பட்டதா என்ற உண்மை எனக்குத் தெரிஞ்சாகனுஞ் சாமி

தமிழ் என்ற மூன்றெழுத்தில் வல்லின இடையின மெல்லின உயிர்மெய் மெய் எழுத்துக்களைக் காட்டியிருப்பது ஒரு தனிச் சிறப்பு என்று கருதலாமா?

இனா பனா அனா

Jana Iyengar

unread,
Oct 29, 2014, 5:47:58 AM10/29/14
to mintamil
'ழ' மலையாளத்தில் எப்படி/எப்போது வந்தது?
அ ஜ ரா தாசன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Jana

Dev Raj

unread,
Oct 29, 2014, 5:56:08 AM10/29/14
to mint...@googlegroups.com
On Wednesday, 29 October 2014 02:39:42 UTC-7, இணையப் பரிமேலழகன் wrote:
...........  மொழியின் பெயரில் இந்த ழவைச் சேர்த்து இது தனித்தன்மை வாய்ந்த மொழி என்று நிறுவப்பட்டதா என்ற உண்மை எனக்குத் தெரிஞ்சாகனுஞ் சாமி


மறைகளின் ப்ராதிசாக்யம் ‘ழ’ உச்சரிப்பை வலியுறுத்தினாலும்,ழகரத்திற்கெனத் தனி வரிவடிவம் சந்தஸில் இருப்பதாகத் தெரியவில்லை; அது மரபாக வற்புறுத்தப்படும் ஓர் உச்சரிப்பு முறை; மறைகளுக்கெனவே தனியான உச்சரிப்பு முறைகள் வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படுவன; மறை எழுதாக் கிளவியாக இருப்பதற்குக் காரணமும் அதுவே.

Jean-Luc Chevillard  -   ழான் லூக் என்னும் உச்சரிப்பைப் பெறுகிறது.

Coramandal  -  Ra ழகர உச்சரிப்பைத் தருவது என்று அரங்கனார் கூறினார்;
அமெரிக்கரின் ஆங்கில உச்சரிப்பு ழகரத்தை மட்டுமே மையமாகக் கொண்டதோ
என்னும் மயக்கத்தைத் தோற்றுவிக்கும்.

முகமதியரின் வலைப்பூக்கள் அரபு மொழியிலும் ‘ழ’ உச்சரிப்பு உள்ளதை உறுதி
செய்வன -
/// அல்லாஹுத்தஆலா உவந்தளித்த ரமழான் அபரிமிதமான நற்செயல்கள், ரமழான்
பிறை,  ரமழான் தொழுகை 20 ரகஅத்துகள் என்ற ஹதீஸ்களின் நிலை? ரமழானில்
அல்லாஹ்வுக்காக,  தாரிக் ரமழான் அல்-இஃவானுல் முஸ்லிமூன் அமைப்பின்
ஸ்தாபகர் ஹஸனுல் பன்னாவின் பேரனாவார், ரமழான்  முஃமின்களுக்கு புகட்டி
நிற்கும் பாடங்கள் ///

இத்தனை இருந்தாலும் ழகரம் தமிழில் மட்டுமே வரிவடிவத்தோடு நெடுங்கணக்கில் இடம் பெறுவதோடு, மொழிப் பயன்பாட்டிலும் இயல்பாக இடம் பெறுகிறது; பிற மொழி எதிலாவது ழகர வரிவடிவம்தனியாக உள்ளதா என்பதையும் நாம் உறுதிபடத்  தெரிந்து கொள்ள வேண்டும்

https://groups.google.com/forum/?fromgroups#!search/%E0%AE%B4$20$20$20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D%7Csort:relevance/mintamil/DWzZq9NbvBc/f-EU5r1YetIJ


தேவ்

N. Ganesan

unread,
Oct 29, 2014, 8:13:33 AM10/29/14
to mint...@googlegroups.com


On Wednesday, October 29, 2014 2:47:58 AM UTC-7, iyenga...@gmail.com wrote:
'ழ' மலையாளத்தில் எப்படி/எப்போது வந்தது?
அ ஜ ரா தாசன் 

மலையாளம் தமிழில் இருந்து பிறந்தபோது.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 29, 2014, 10:40:13 AM10/29/14
to mintamil, vallamai
தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா;
அமிழ்தில் இனியடடை பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

தமிழ் என்னும் சொல் மூலத்தை அரிவது கடினம்.  முத்தமிழ் வேந்தர், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை என்று கேள்விப் பட்டிருக்கிறோம். 

ஆனால் தமிழ்த் திருநாடு என்று முதன்முதலில் பெயரிட்டவர் பாரதியாராகத்தான் இருக்க முடியும்.  அவருக்குமுந்தி யாராவது தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளாரா ?


சி. ஜெயபாரதன்

N. Ganesan

unread,
Oct 29, 2014, 11:01:43 AM10/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, October 29, 2014 7:40:13 AM UTC-7, jayabarathans wrote:
தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா;
அமிழ்தில் இனியடடை பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

தமிழ் என்னும் சொல் மூலத்தை அரிவது கடினம்.  முத்தமிழ் வேந்தர், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை என்று கேள்விப் பட்டிருக்கிறோம். 

ஆனால் தமிழ்த் திருநாடு என்று முதன்முதலில் பெயரிட்டவர் பாரதியாராகத்தான் இருக்க முடியும்.  அவருக்குமுந்தி யாராவது தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளாரா ?

கேரளம், தமிழ்நாடு மாநிலங்கள் சேர்ந்ததைத் தமிழகம் என்ப்ர் சங்கச் சான்றோர்.
தமிழகம் tamiḻ-akam 

n. < id. +. The Tamil country; தமிழ்நாடு.

வையக வரைப்பிற் றமிழகங் கேட்ப (புறநா. 168, 18).


நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 29, 2014, 11:07:20 AM10/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, October 29, 2014 8:01:43 AM UTC-7, N. Ganesan wrote:


On Wednesday, October 29, 2014 7:40:13 AM UTC-7, jayabarathans wrote:
தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா;
அமிழ்தில் இனியடடை பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

தமிழ் என்னும் சொல் மூலத்தை அரிவது கடினம்.  முத்தமிழ் வேந்தர், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை என்று கேள்விப் பட்டிருக்கிறோம். 

ஆனால் தமிழ்த் திருநாடு என்று முதன்முதலில் பெயரிட்டவர் பாரதியாராகத்தான் இருக்க முடியும்.  அவருக்குமுந்தி யாராவது தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளாரா ?

கேரளம், தமிழ்நாடு மாநிலங்கள் சேர்ந்ததைத் தமிழகம் என்ப்ர் சங்கச் சான்றோர்.
தமிழகம் tamiḻ-akam 

n. < id. +. The Tamil country; தமிழ்நாடு.

வையக வரைப்பிற் றமிழகங் கேட்ப (புறநா. 168, 18).


பரிபாடல் திரட்டில். பின் பல புலவர்கள் தமிழ்நாடு என்று பாடியுள்ளனர் - பாரதிக்கு முன்னரே,

தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது,
குன்றுதல் உண்டோ மதுரை-கொடித் தேரான்
குன்றம் உண்டாகும் அளவு?

seshadri sridharan

unread,
Oct 29, 2014, 11:28:22 AM10/29/14
to mintamil
முதல் மொழியாம் தமிழைப் பேசியவர்கள் புறத்தே சில மக்கள் கூட்டம் அதைத் திரித்து பேசுவதை வேறுபடுத்திக் காட்ட தம் வீட்டு மொழியைத்  தம்மொழி என்றனர் அதுவே தமிழ் என்றானதாக ப. அருளி விளக்கம் அளிக்கிறார்.

சேசாத்திரி   

2014-10-29 15:09 GMT+05:30 இணையப் பரிமேலழகன் <radius.co...@gmail.com>:

--

சி. ஜெயபாரதன்

unread,
Oct 29, 2014, 11:33:28 AM10/29/14
to vallamai, mintamil
அப்படியானல் தமிழ்நாடுதான் திராவிட நாடு என்று நாம் எடுத்துக் கொள்ள முடியுமா?

முத்தமிழ் வேந்தர்கள் ஆண்டதுதான் தமிழ்நாடு என்று நாம் எடுத்துக் கொண்டால், திராவிட நாடு என்பது எது ? அதன் எல்லைகள் யாவை ? தமிழ் நாட்டில் வாழ்ந்தவர் தமிழர்கள்.  அப்படியானால் திராவிடர் என்பவர் யார் ?

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Oct 29, 2014, 2:59:44 PM10/29/14
to mint...@googlegroups.com
திருஞானசம்பந்தர் தமிழ் என்று அடிக்கடி தந்து பதிகங்களில் குறிப்பிட்டிருக்கிறார். தன்னைத் தமிழ்ஞான ஞான முனிவன் என்றும் பகன்றிருக்கிறார்.

திருமூலரும், "என்னை நன்றாய் இறைவன் செய்தான் தன்னை நான்றாய் தமிழ் செய்வதற்கே!" என்றும் உருகிப் பாடி இருக்கிறார்.

ஒரு அரிசோனன் 
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Oct 29, 2014, 4:59:29 PM10/29/14
to mint...@googlegroups.com
பேராசிரியரே  !!!!!

இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் பதிவுகளை படிக்காமல் ஒமிட்டில் தட்டிவிடுகிறீர்களா?

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ .....அவர் பதிவுகளில் இருந்து சிறு குறிப்பு பகுதியும்...மேலும் சுதஈகளும் கீழே.....








காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி

நம் மொழிக்கு நம் முன்னோர் சூட்டிய பெயர் ‘தமிழ்’ என்பதுதான். ஆனால், சிலர் பிற்பட்ட வழக்கான ‘திராவிடம்’ என்பதிலிருந்து ‘தமிழ்’ வந்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூலான -  உலகின் முதல் நூலான – தமிழர்க்குத் தமிழில் கிடைத்துள்ள முதல் நூலான – தொல்காப்பியத்திலேயே ‘தமிழ்’  இடம் பெற்றுள்ளது. இதன் தொன்மையை மறைக்கும் வகையிலேயே ‘தமிழ்’ என்னும் சொல்லைப் பிற்கால வழக்காகக் குறிப்பிடுகின்றனர். சிலர் ‘தமிழ்’ என்னும் சொல் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதா என அறியாமையில் கேட்கின்றனர். அதன் மூலம் ‘தமிழ்’ என்னும் சொல் தோற்றத்தைப் பின்னுக்குத் தள்ளலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆயிரக்கணக்கில் உள்ள எடுத்துக்காட்டுகளை அள்ளிவீசினால் வாயடைத்துப் போய் அமைதி காக்கின்றனர்; அப்பொழுதும்கூட உண்மையை ஏற்கும் பண்பு அவர்களிடம் இல்லை. ‘தமிழ்’, தமிழ் இலக்கியங்களில் எத்தனை இடங்களில் இடம் பெற்றிருக்கின்றது என்பதை முனைவர் .கிருட்டிணன் தம்முடைய ‘தமிழ்நூல்களில் தமிழ்மொழி தமிழ் இனம் தமிழ்நாடு’ என்னும் நூலில் பின்வருமாறு(பக்கம் 222) குறித்துள்ளார்.

வ.எண்

காலம்            நூல்

எண்ணிக்கை

1.கி.மு.3500தொல்காப்பியம்

5

2.கி.மு.2500சங்க இலக்கியம்

21

3.கி.பி.200-500சிலப்பதிகாரம்

24

4. மணிமேகலை

5

5. திருவள்ளுவமாலை

6

6. திருமந்திரம்

10

7.கி.பி.500-900அப்பர் தேவாரம்

7

8. சம்பந்தர் தேவாரம்

260

9. சுந்தரர் தேவாரம்

48

10. நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்

93

11. நந்திக்கலம்பகம்

4

12. பாண்டிக்கோவை

30

13. பெருங்கதை

2

14. முத்தொள்ளாயிரம்

5

15. திருவாசகம்

1

16. திருக்கோவையார்

1

17.. கி.பி.1000-1200கல்லாடம்

22

18. பதினோராந் திருமுறை

43

19. 

சீவகசிந்தாமணி

6

20. கம்பராமாயணம்

18

21. பெரிய புராணம்

313

22. அம்பிகாபதி கோவை

3

23.கி.பி.1200-1900திருவாரூர்க் கோவை

8

24. மதுரைக்கோவை

32

25. தஞ்சைவாணன் கோவை

9

26. குலோத்துங்கன் கோவை

7

27. வில்லி பாரதம்

18

28. திருவிளையாடற் புராணம்

65

29. குமரகுருபரர் பாடல்கள்

105

30. குற்றாலக் குறவஞ்சி

10

31. தமிழ் விடு தூது

15

32. திருவருட்பா

24

33. திருவிலஞ்சி முருகன் பிள்ளைத் தமிழ்

35

34. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்

8

35. கோமதியம்பிகை பிள்ளைத் தமிழ்

5

  மொத்தம்

1268

மேலும் பல நூல்களிலும் தமிழ் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு, தமிழகம் என்ற பெயர்களின் மூலமும் தமிழ் இடம் பெறுகின்றது. அமிழ்து, அமிழ்து, என்பதைச் சேர்த்துச் சொன்னால் அமிழ்தமிழ் எனத் தமிழ் வரும் என்பர். அதற்கேற்ப

“கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப்

புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்

தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்”

என்னும் வரிகள் (சிறுபாணாற்றுப்படை 225-227) உள்ளன. இங்கே ‘தேம்பெ ய்து அமிழ்து பொதிந்து’ என்று வரும் இடத்தில் தமிழ் எனத் தோன்றுவதைப் பார்க்கலாம்.

இத் தொடரில் நாம் தமிழ் இடம் பெறும் பாடல் வரிகளைப் பார்க்கலாம். (தமிழ் இடம் பெற்ற வரிகளை மட்டும் குறிப்பிடாமல் பொருள் புரிவதற்கு அல்லது மேற்கோள் தேவை கருதி அவ்வரி இடம்பெற்ற பகுதியாகத் தரப்படுகின்றன.)







































































































































































<<< தமிழ் என்ற சொல் அமைந்த பட்டியலை கீழ் காணும் சுட்டிகளில் சென்று படிக்கலாம் >>>










.... தேமொழி

Oru Arizonan

unread,
Oct 29, 2014, 9:37:04 PM10/29/14
to mint...@googlegroups.com
அருமையான குறிப்புகள்.  மிகவும் பயனுள்ளவை.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Oct 29, 2014, 11:06:03 PM10/29/14
to மின்தமிழ்

2014-10-30 2:29 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் பதிவுகளை படிக்காமல் ஒமிட்டில் தட்டிவிடுகிறீர்களா?

​​இது சரியா முறையா தர்மமா நீதியா நியாயமா?  அப்புடியே அவர் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளும்படியாகக் கோர்த்துவிடுகிறீர்களே

நான் இன்னும் 17 -19 ஆம் நூற்றாண்டைத் தாண்டி இன்னும் வரவில்லையே

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்






​கணினி வந்தபின் தமிழ் வளங்களைத் தேடுபொறிவைத்து எலி பிடிக்கும் கலைபோல் ஒரு பட்டியல் நிரலி தொகுப்பைப் போடுவதே ஆய்வு என்றாகிவிட்டது.  ஒரு சொல் பல்வேறு காலகட்டத்திலும் எவ்வாறு விளக்கம்பெற்றது அதில் காணப்படும் நிறைகுறைகளைப் பற்றிய தனிக்கருத்துக்களைப் பதிவது என்பதெல்லாம் அருகிவிட்டது.  இவ்வளவி பெரிய பற்றியலை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்.  இது உண்மை முனைவர்கள் படிக்க நீங்கள் அறிவுறுத்த வேண்டும். நூற்றுக்கணக்கான தமிழ் ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வில் தேடுதலில் காலத்தை விணாக்காமல் நேரடியாக இந்தக்குறிப்புகளை ஆய்வுக்கெடுத்துக்கொள்ள மட்டுமே உதவும்.

திராவிடம் என்ற சொல்லே முதன்மை பெறுவதையும் திராவிடம் என்ற சொல் வட சொல் என்பதும் தமிழ் என்ற சொல்லின் தொடக்கமோ அதன் தெளிவான விளக்கமோ இதுவரை கிட்டவில்லை என்று இந்த ஆய்வாளர் கூறும் குறையைப் பிற்கால ஆய்வுகள் தீத்துவைத்ததா என்பதை நீங்கள் கூறினால் நல்லது

இனா பனா அனா



தேமொழி

unread,
Oct 29, 2014, 11:36:54 PM10/29/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com


"திராவிட" என்பதை யார் முதலில் குறித்தார்கள்? அதன் தோற்றம் என்ன?  

போன்ற ஆய்வுகளைத் தவிர்த்து, பொதுவாக திராவிட என்றால் தற்காலத்தில் என்ன வழக்கில் இருக்கிறது என்பதை   மட்டும் கொள்வோமானால்   ....

தமிழும் தமிழில் இருந்து தோன்றிய மொழிகள் கொண்ட நிலப்பகுதி = திராவிட நாடு.

இது தேசிய கீதம் குறிக்கும் திராவிடமும் இப்பகுதியைக் குறிப்பதே.

திராவிட மொழிகள் எனக் குறிக்கப்படும் மொழிகள் பேசும் நிலப்பகுதியை கொண்ட வரைபடம் எளிதில் காட்டும் எது திராவிடம், அதன் எல்லை என்ன என்று. 

அக்கால சென்னை மாகாணமும் இப்பகுதிகளில் பெரும்பகுதிகளைக் கொண்டதால் திராவிட கழகம் எனத் தோன்றியது.  பிற்காலத்தில் மொழி அடிப்படையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பிரிந்து சென்றுவிட்ட பிறகு பெரியாரும் திராவிட பிரிவினைக் கோருவதை கைவிட்டு தமிழகம் என மாற்றிக் கொண்டார் என்றும்...

ஆனால் கழகத்தில் இருந்து பிரிந்த அண்ணா தொடர்ந்து திராவிடம் என்றே குறத்துவர  பெரியார் கோபமுற்றார் என்றும் படித்திருக்கிறேன் ...


இந்தியாவில்  திராவிட மொழிகள் பேசும் நிலப்பகுதியின் வரைபடம்....






..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Oct 29, 2014, 11:40:34 PM10/29/14
to vallamai, மின்தமிழ்
கன்னடம், தெலுகு மொழிகளை வடமொழியில் என்ன சொன்னார்கள்?


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Oct 30, 2014, 1:33:27 AM10/30/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


மேற்கத்தியர் இந்தியாவிற்கு வருமுன்னரே நிலைமை ஏறத்தாழ அதுவே.

தமிழும்/தமிழ் தொடர்பான மொழிகளின் நிலபரப்பும் பல காலங்கள் மாற்றமடையவில்லை என்பதையே வரைபடங்கள் காண்பிக்கின்றன.




படங்கள் விக்கியிலிருந்து 


..... தேமொழி











On Wednesday, October 29, 2014 10:10:42 PM UTC-7, மின்னம்பலத்தான் wrote:

2014-10-30 9:06 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இந்தியாவில்  திராவிட மொழிகள் பேசும் நிலப்பகுதியின் வரைபடம்....


​20- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிட மொழிகள் பேசிய நிலப்பரப்பைக் காட்டும் வரைபடம் 


​கிரேக்க, ஆங்லில டச்சு போர்ச்சுக்கியர்கள் நில வரைபடங்களும் இணையத்தில் உள்ளன

இனா பனா அனா​

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 30, 2014, 6:33:29 AM10/30/14
to mint...@googlegroups.com
\\\ தமிழ் என்னும் சொல் மூலத்தை அரிவது கடினம். \\\

அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன்,

தமிழ் என்னும் சொல் மூலத்தை *அறிவது* கடினம்.

தட்டச்சுப் பிழையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

திருநெல்வேலிக்கே அல்வாவா என்று கேழ்க்க வேண்டா :-)

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 30, 2014, 6:39:40 AM10/30/14
to mint...@googlegroups.com
*ழகர* உச்சரிப்பு உர்தூ மொழியிலும் செழுமையாக உள்ளது.

agar, magar (= ஆனால்) இந்த சொற்களை அக3ர் மக3ர் என்று உர்தூவில் சொல்வதில்லை.

அக3ழ், மக3ழ் என்றே சொல்லுகிறார்கள்.

உத்தர பாரதத்தில் கருணாநிதி அவர்களின் மக்கட்செல்வங்களை அஜகிரி கனிமொஜி என்று சொல்பவர்களை இந்த அகழ், மகழ் உச்சரிப்பு சொல்லி திருத்தியிருக்கிறேன்.  

Oru Arizonan

unread,
Oct 30, 2014, 1:30:55 PM10/30/14
to mint...@googlegroups.com
அன்பின் தேமொழி,

தங்கள் மேற்காட்டும் வரைப் படங்கள் மிகவும் பயனுள்ளவை.  மிக்க நன்றி.
ஒரு அரிசோனன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 31, 2014, 7:33:08 AM10/31/14
to mint...@googlegroups.com
நான் ஏற்கனவே பலதடவை குறிப்பிட்டிருக்கிறேன்.த்ர என்ற சொல் கட்டுப்படுத்து ஆள் (ஆட்சி செய்)என்று வடமொழியாக சொல்லப் பட்டிருந்த போதிலும் அந்த வடதமிழ் நம் தமிழ் தான்.திரை என்றால் கடல் அலைகள் ஆகும்.கடல் சார்ந்த சிந்துவெளித்தமிழர்கள் திரையர்கள் ஆகி திராவிடர்கள் ஆனார்கள்.த்ரவ என்ற பாய்மம் எனும் வட(தமிழ்)ச்சொல்லும் அந்த அலைகளையே குறிக்கிறது.திரைகடல் ஓடி ஈட்டிய பொருளே திரைவியம் ஆகும்.தமிழர்கள் திரைவியர்களாக மேலோங்கி ஆட்சி செய்த போது தான் சிறு மன்னர்கள் வரியாக அவர்களுக்கு செலுத்தும் கப்பம் "திரை" ஆனது.திரை என்ற சொல் ஆட்சியின் அடையாளம் ஆனது.கப்பம் என்பதும் கப்பல் மூலம் திறமை வளர்த்தவர்களின் ஆட்சியே அது.

"வட வேங்கடம் முதல் தென் குமரி வரை "தமிழ் கூறும் நல் உலகம்"
என்று தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரம் பகர்கிறது.இடம் நாடு இவற்றையெல்லாம் தாண்டி "உலகம்" என்று குறிப்பிடப்பட இந்த திரை கடலோடி ஆட்சி செய்த "திரையர்ளே" (திரைவிடர்கள் அதாவது கடற்கரை நகர மக்கள்)ஆனார்கள்.தமிழ் தமிழ்நாட்டிலேயே பல் வேறாக ஒலிக்கும்போது உலகமொழிகளின் கலவையாகிப்போன தமிழ் எவ்வாறாக ஒலிக்கும்?எகிப்து கிரேக்கம் பார்சீகம் மற்றும் சுமேரிய‌
பாபிலோனிய பண்பாடுகளும் ஒலிப்புகளும் சேர்ந்த வட தமிழே சமஸ்கிருதம் என்பதில் ஐயம் இல்லை.சிந்துவெளி தமிழின் ஐந்திற
அல்லது ஐந்திணை நடைமுறைகளில் தேர்ந்தவர்களே ஐந்திறர்கள் எனும் இந்திரர்கள்.இந்திரன் என்பவன் வேதங்களின் கதாநாயகன் மட்டும் அல்ல பிற்காலத்திய மூவேந்தர்களைப்போல ஐவேந்தர்கள் அவர்கள்.பலப்பல பெயர்களில் இருந்த போதும் தொல் தமிழர்களே
பரதர்கள் (நெய்தல் தமிழர்கள்) எனும் பாரத்வாஜர்கள் அதாவது பரதவ கொடியேந்தியவர்கள்.எனவே வியாழன் எனும் நுண்மாண் நுழைபுலம்
மிக்க பரதவனே வியாஸன் ஆனான்.யாழன் என்றால் யாழ் இசைப்பவன்.நம் யாணர்கள் பாணர்கள் எல்லாம் வியாழர்களே.(ழ வட ஒலிப்பில் ஸ ஆனது நாம் அறிவோம்)

பிற்காலத்து பல்லவர்கள் என்பவர்களும் வடதமிழ்ச்சொல்லான "பல்லவம்" எனும் கடற்பாசியைக்குறிக்கும் இனத்தவர்கள்.இவர்களும்
தமிழ்த்திரையர்களே.இளந்திரையன் எனும் தமிழ் அரசனே அந்த தொண்டைக்கொடி அல்லது ஒரு வித கடற்பாசிக்கொடியை குறிக்கும் இனத்து தமிழன்.பகைவர்களால் கடற்கொடிகளுடன் (பாசிகளுடன்)வீசப்பட்டு அப்புறம் பிழைத்து வந்து அரசாள வந்திருக்கலாம்.நம் தமிழின் புல் தான் பல் அல்லது பல்லவ ஆகியிருக்கும்.வேய் எனும் புல் தான் தர்ப்பை ஆகி அதனோடு ஒலிப்புகள் மற்றும் "தீ ஓம்புதலும்" சேர்ந்து வேய்தம் ஆனது.

தமிழ்ச்சொல் ஆராய்ச்சிகள் மூலம் இன்னும் நாம் கண்டுபிடித்துக்கொண்டே செல்லலாம்.

==========================================================ருத்ரா
- show quoted text -
me (ருத்ரா (இ.பரமசிவன்) change
3:05 AM (1 hour ago)
Other recipients: mint...@googlegroups.com
ஒரு பிற்சேர்க்கை

வேங்கடம் என்பது "வெறுங்கடம் அல்லது நெடிய பாழ் அல்லது பனி போன்ற கடம் அதாவது கடந்து செல்லும் மலையைக் குறிக்கும். வடவேங்கடம் என்பது இமயமலையே ஆகும்."மலை படுகடாம் "என்பது மலைகள் நிறைந்து கடந்து போகும் வழி என்பது போல் பாலை மலையே இமய மலை (மவுண்டன் டெஸ்ர்ட்)

========================================ருத்ரா

On Wednesday, October 29, 2014 7:40:10 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
- show quoted text -

N. Ganesan

unread,
Nov 1, 2014, 5:45:56 AM11/1/14
to mint...@googlegroups.com, vallamai
On Friday, October 31, 2014 4:33:08 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
நான் ஏற்கனவே பலதடவை குறிப்பிட்டிருக்கிறேன்.த்ர என்ற சொல் கட்டுப்படுத்து ஆள் (ஆட்சி செய்)என்று வடமொழியாக சொல்லப் பட்டிருந்த போதிலும் அந்த வடதமிழ் நம் தமிழ் தான்.திரை என்றால் கடல் அலைகள் ஆகும்.கடல் சார்ந்த சிந்துவெளித்தமிழர்கள் திரையர்கள் ஆகி திராவிடர்கள் ஆனார்கள்.த்ரவ என்ற பாய்மம் எனும் வட(தமிழ்)ச்சொல்லும் அந்த அலைகளையே குறிக்கிறது.திரைகடல் ஓடி ஈட்டிய பொருளே திரைவியம் ஆகும்.தமிழர்கள் திரைவியர்களாக மேலோங்கி ஆட்சி செய்த போது தான் சிறு மன்னர்கள் வரியாக அவர்களுக்கு செலுத்தும் கப்பம் "திரை" ஆனது.திரை என்ற சொல் ஆட்சியின் அடையாளம் ஆனது.கப்பம் என்பதும் கப்பல் மூலம் திறமை வளர்த்தவர்களின் ஆட்சியே அது.


தமிழ் என்ற சொல்லில் இருந்து அதனைச் சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்களால், த்ரமிள, த்ரமிட, த்ரவிட/த்ராவிட என்று திரிந்துள்ளது.
பவளம் என்னும் தமிழ்ச் சொல் ப்ரவால/ப்ரவாள என்றும், கமுகு என்னும் தமிழ்ச்சொல் க்ரமுக என்றும், கரிஞ்சம் க்ரௌஞ்சம் என்றும் ஆதலைப் போல.

மிழற்று, அதில் இருந்து மொழிதல். தம் பேச்சு என்பதனைஅ த(ம்) + மிழி என்று தமிழி/தமிழ் என்று தங்கள் மொழியை அழைக்கலாயினர்.
மெலுஹம் என்று சிந்துசமவெளியும், இன்றும் மிழகு/மிளகு என்று தமிழகத்தின் புகழ்மிக்க விளைபொருள் அழைக்கப்படுதலும் பார்க்கலாம்.


(த)மிழகம், மிழகம்/மிளகு/மிழகு (Cf. பவழம்/பவளம்) என்பவற்றைப் பார்க்கிறபோது மெலுஹ- என சுமேரியர் அழைத்த
சிந்துநாட்டின் பெயர் மிழகம் என்பதாகலாம். இதுபற்றி, செந்தமிழ் (பாரிஸ்) குழுவிலே எழுதினேன். தங்கள் ஆய்வுக்
கருத்தறிய அவா.

நா. கணேசன்

On 22/04/2014 11:45, Lakshmi Srinivas wrote:
>
> What's however not been clear to me for sometime is how:
>
> KVZ etymology of (loosely paraphrasing)
>
> தம் + *மிழி > தம் +மொழி >  தமிழ்
>
> would be reconciled with the Meluhha (*mEl akam) etymology, which seems to
> mean something else.
>

(ta) + miḻi, if I recall KVZ's article, talks about verbs like miḻaRRu- . மிழி, மிழற்று, (த)மிழகம் - the spice pa excellence, black pepper may be related to this name also with the variation in L as பவழம்/பவளம் ‘coral' sanskritized as pravAla & tamiḻ as dramila .

As the classical Tamil literature shows in the Historical period, they were interested in naming their country after their (own) language. While the last part of Meluḫḫa may be -akam from Dravidian, I have doubts whether the first part is *mEl (மேல்) in the local language of the Harappan civilization's elites. If it is *mElakam, then it would mean "high/hill country", But the core region is Indus river delta & not Afghani mountains.
But Mohenjadaro or harappa are not in the Hill country, and Balochistan is not the central region  of the Indus Valley civ., and no cities there either in that period. Hence, I think  miḻakam, "(our) language country" may be the name given, and -i-/-e- alternation is common in Dravidian, and Mesopotamians recorded it as Meluḫḫa.

Here is a lecture by J. M. Kenoyer on the relationship between Meluḫḫa (IVC) and Mesopotamia,

> Also, how an Indus Valley location for Tamil/ Dravidian language speakers
> could be reconciled with the archaeologists' view that the South Indian
> Neolithic has been conservatively evolving since the second millennium BC and
> that there has been no major population displacements in the prehistoric
> period in south India, indicating language change. (loosely paraphrasing F R
> Allchin)
>

With the presence of linguistic signs involving crocodile, fish etc., for their astronomy based religion, it is fairly clear which linguistic group wrote the symbols in their seals. The words in India about crocs are not from Munda. Only with the input from SInd-Gujarat region (vELir of Dwaraka), the civilization in the South starts post-1000 BC. We see the evidence of large sculptures in stone in the form of Anthropomorphic Axe (AA) when it disappears from the North (where it is found in metal). These huge monuments linking North to South circulation in the Megalithic period are found in Mottur, Udaiyanaththam, ...  I am now reading prof. WItzel's thick book on comparative mythology (OUP). See MW talking about his book:https://www.youtube.com/watch?v=ZLDltC3vEdM . It looks to me the Dravidians' mythology mentioned in two paragraphs was alive in the astronomical religion of the IVC even in 45 centuries ago.

N. Ganesan

> Srini

N. Ganesan

unread,
Nov 1, 2014, 6:48:19 AM11/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கொங்கினில் பயின்ற குலசைக் கவிஞர் எழுதினார்:
>ஒரு பிற்சேர்க்கை

>வேங்கடம் என்பது "வெறுங்கடம் அல்லது நெடிய பாழ் அல்லது பனி போன்ற கடம் அதாவது கடந்து செல்லும் 
>மலையைக் குறிக்கும். வடவேங்கடம் என்பது இமயமலையே ஆகும்."மலை படுகடாம் "என்பது மலைகள் நிறைந்து 
>கடந்து போகும் வழி என்பது போல் பாலை மலையே இமய மலை (மவுண்டன் டெஸ்ர்ட்)


வேங்கடம் என்னும் பகுபதத்தின் முதற் பகுதிக்கு ”வெறும்” என்ற பொருள் இல்லை.

வே(ம்)+கடம் = வேகும்/வெம்மைமிகு கடம் எனப் பொருள். கடன் (வினைகள்) வேகும் இடம்
என்று தியாலஜி உரைப்பர்.

ஆனால், அதைவிட வேய்ங்கடம் > வேங்கடம் பொருத்தம். வேய் = மூங்கில்.
சங்கச் சான்று வே(ய்)ங்கடம் என்று பொருள் சொல்ல உதவுகிறது.


நா. கணேசன்

209. பாலை

[பிரிவிடை வேறுபட்டதலைமகளைத் தோழி வற்புறீஇயது.]

தோளுந் தொல்கவின் தொலைந்தன நாளும்
அன்னையும் அருந்துயர் உற்றனள் அலரே
பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்
எழுவுறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்
5.நேரா எழுவர் அடிப்படக் கடந்த
ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிதென
ஆழல் வாழி தோழி அவரே
மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்
10.அறையிரந் தகன்றனர் ஆயினும் நிறையிறந்து
உள்ளா ராதலோ அரிதே செவ்வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று 
2சேரலர்க் கீத்த
15.செவ்வேர்ப் பலவின் பயங்கெப கொல்லி
நிலைபெறு கடவு ளாக்கிய
பலர்புகழ் பாவை யன்னநின் னலனே.

-கல்லாடனார்.


7-10. அவர் - நம்தலைவர், மால் யானை மறப் போர்ப் புல்லி - பெரியயானையையும் வீரத்துடன் புரியும் போரினையுமுடையபுல்லி என்பானது, காம்பு உடை நெகு வரை வேங்கடத்துஉம்பர் - மூங்கில்களையுடைய நீண்ட சாரல்பொருந்திய வேங்கடமலையின் அப்பாலுள்ள, அறைஇறந்து அகன்றனர் ஆயினும் - குன்றுகளைக் கடந்துசென்றுளாராயினும்;

kangeyar

unread,
Nov 1, 2014, 7:33:15 AM11/1/14
to mint...@googlegroups.com
கேரள மலையாள தேசங்க ள்...
மொழிபெயர் தேயங்களான. கொல்லமும் கூடமும் ஆம் ...கொடுந்தமிழ் மண்டிலம் குட்டம் குடம் அவற்றுள் என்பதும் சந்தேகம்

kangeyar

unread,
Nov 1, 2014, 7:38:33 AM11/1/14
to mint...@googlegroups.com
த்ரவிட. சமஸ்
தமிட/ழ பிராகிருதம்/இயல்

தமிழ் இசை லக்கண தமிழ்

Reply all
Reply to author
Forward
0 new messages