சிவகாசி வட்டார விடுகதைகள்

1,163 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Sep 30, 2018, 11:00:44 AM9/30/18
to mintamil
1) நட்டு முத்து நாதஸ்வரம் கொட்டலங்காரம்; அதைச் சுற்றி தோப்பலங்காரம்; தோப்புக்குள்ளே குடியிருக்கும் சிமிக்கிப் பண்டாரம்.---அது என்ன ?
2)இரண்டு வீட்டுக்கு ஒரு மோடு .---அது என்ன?
3)கருப்பாய் சுருண்டு இருக்கும்- கயிறும் அல்ல; பழுத்தால் உதிர்ந்து விடும் -இலையும் அல்ல ---அது என்ன?
4)வளைவான; சுருளுவான்; ஒடிய மட்டும் மாட்டான் ---அது என்ன?
5)அடுக்கி வைத்த அழகுச் சிற்பங்கள்; அடி விழுந்தால் அழகு போகும் ---அது என்ன?
6)ஐந்து பேரில் இளையவன்; கலியாணத்துக்கு மூத்தவன் ---அது என்ன?
7)அஞ்சு வீட்டுக்கு ஒரு முற்றம் ---அது என்ன?
8)அஞ்சு குஞ்சு மரம்; அழகான தென்னை மரம்; நிற்க நிழலுமில்லை; தைக்க இலையுமில்லை ---அது என்ன?
9)தண்ணீர் இல்லாத தடாகத்தில் தாவிப் பாயுது ஒரு கப்பல் ---அது என்ன?
10)ஆட்டு மாட்டுக்கு அடங்காத தண்ணி; தொண்டைமான் குதிரைக்குத் தொடையளவு தண்ணி ---அது என்ன?
11)முதுகிலே மூட்டை தூக்கி மூனு மணிக்கி முழந்தூரம் போவான் ---அவன் யார்?
12)சங்கீத வித்துவான்; சமயத்தில் ஊசி போடுவான் ---அவன் யார்?
13)வளைவான; நெளிவான்; வயிறு கலங்க வைப்பான் ---அவன் யார்?
14)பறக்கப்பட்ட பச்சியில் பெய்யாத மழை பெருமழை; பெய்தாலும் அந்தப் பச்சிக்கு சிறகு வளையாமல் இருக்கும்---அது என்ன?
15)வாயிலிருந்து நூல் எடுப்பான்; மந்திரவாதி அல்ல; எதிரெதிரே தாவுவான்; குரங்கும் அல்ல; வலை விரித்துக் காத்திருப்பான்; வேடனும் அல்ல ---
                                                                                                                                                                                                                                                             அவன் யார்? 
16)உத்தியோகம் இல்லாமல் ஊர் சுற்றி அலைபவன் ---அவன் யார்?
17)அரிவாள் இல்லாமல் புல்லறுத்து, கொடியில்லாமல் கட்டுக் கட்டி, ஏணி இல்லாமல் வீடு மேய்ந்தவர் ---அவர் யார்?
18)ஆயிரம் பேர் சேர்ந்து கட்டிய மண்டபம்; ஒருவன் கண் பட்டு உடைந்தது ---அது என்ன?
19)மரக்கிளையைத் தலையில் தூக்கியபடி துள்ளி ஓடுவார் ---அவர் யார்?
20)நாலு மரம் பிடித்து வர; துடுப்பு துளாவி வர; துரை மகன் ஏறிவர...---அது என்ன?
21)ஏழு மலைக்கும் அந்தாண்ட எருமைக்கடா கத்துது ---அது என்ன?
22)கையில் படுவான்; காலில் படுவான்; கண்ணில் மட்டும் படமாட்டான் ---அது என்ன?
23)நான் சென்ற ஊர் நான்கெழுத்து ஊர்;
                                     முதல் எழுத்து நீரில் உண்டு; சீரில் இல்லை; 
                                     இரண்டாம் எழுத்து கலத்தில் உண்டு களத்தில் இல்லை;             
                                     மூன்றாம் எழுத்து கிளியில் உண்டு; புளியில் இல்லை;
                                      நான்காம் எழுத்து பொரியில் உண்டு; பொறியில் இல்லை;
                                                                                                                                                 நான் சென்ற ஊர் எந்த ஊர்?
24)ஒரு கரண்டி மாவுல ஊரெல்லாம் தோசை ---அது என்ன ?
25)குப்பை தின்பான்; கூளம் தின்பான்; தண்ணியக் கண்டா செத்தும் கிடப்பான்--- அது என்ன?
26)மதுரை சமுக்காளம்; மடிக்கவே முடியல ---அது என்ன?
27)எட்டிப் பார்த்தால் எட்டும் தூரம்; நடந்து பார்த்தால் போகப் போகத் தூரம்--- அது என்ன?
28)வியப்பான போர்க்களத்தில் வீரர் எவரும் இல்லை; பல வண்ணக் கோலத்தில் படுத்துக் கிடக்கிறது; எடுத்துப் போர் புரிய எவரும் இல்லை--- அது                                                                                                                                                                                                                                                                            என்ன?
29)ஆண்டுக்கு ஒருமுறை பிறப்பேன்; நாளுக்கு ஒருமுறை இறப்பேன்--- அது என்ன?
30)மண்டையைத் திருகினால் கண்ணீர் விடுவான்--- அவன் யார்?
31)இருட்டு வீட்டில் குருட்டு ராஜா --- அது என்ன?
32)காடு வெள்ளைக்காடு; கானம் கருங்கானம்; கையில் விதைத்து வாயில் பொறுக்குவது ---அது என்ன?
33)அம்மா வயிற்றில் ஆடும் பிள்ளை ---அது என்ன?
34)வெளியில் விரியும்; வீட்டில் சுருங்கும்--- அது என்ன?
35)குட்டை மாமியார்; குச்சி மருமகள்; தீராத சண்டை; தினமும் மோதல் ---அது என்ன?
36)ஒல்லியான உடம்புக்காரன்; ஊசி மூஞ்சிக்காரன்;
                            ஒத்தக் கண்ணுக்காரன்; அவன் அழும் கண்ணீரை 
                                               இந்த ஊர் அறியும்; பார் அறியும்--- அது என்ன? 
37) காட்டில் பிறப்பான்; வீட்டில் சாவான்--- அது என்ன?
38)தட்டையான பலகை மீது குட்டையான வீரன் --- அது என்ன?
39)ஆயிரம் கண் உண்டு; அசந்து தூங்க இடம் உண்டு ---அது என்ன?
40)பல்லிருந்தும் கடிக்கத் தெரியாதாவன்---அவன் யார்?           
   (விடைகள் அடுத்த மடலில் )
                                                            தொடரும்
கண்மணி  

kanmani tamil

unread,
Oct 2, 2018, 2:22:29 AM10/2/18
to mintamil
41)வாயில்லை; புத்திமதிகள் சொல்வான்; 
      காலில்லை; கடல் கடந்தும் செல்வான்; 
      கையில்லை; உளங்காட்டிக் கொள்வான்; 
      உயிரில்லை; ஒருநாளும் சாக மாட்டான். ---அவன் யார்?
42)நாலு மூலைச் சமுக்கம்; நந்தவனப் பெட்டி;
       ஓடும் குதிரைக்குட்டி; வீசும் புளியாக்கை --- அது என்ன?  
43)கை உண்டு;கால் இல்லை;
       கழுத்து உண்டு; தலை இல்லை ---அது என்ன? 
44)வெளியே நார்ப்பூட்டு; உள்ளே வெள்ளிப்பூட்டு ---அது என்ன?
45)பச்சை மலை; பஞ்சு மலை; உருண்டை மலை; வெள்ளை மலை;
     வெள்ளை மலைக்குள் தெப்பக்குளம் ---அது என்ன ?  
46)ஊசி நுழையாத கிணற்றில் ஒருபடி தண்ணீர்--- அது என்ன ?
47)தாடிக்காரன்; மீசைக்காரன்; கோவிலுக்குப் போனால் வெள்ளைக்காரன்--- அது என்ன ?
48)காய் உண்டு; கனி இல்லை--- அது என்ன ?
49)மண்ணுக்குள் இருக்கிற மாயாண்டி; உரிக்க உரிக்கத் தோலாண்டி --- அது என்ன?
50)தோலை உரித்தாலும் அழாத இவன் உரித்தவரைக் கண்ணீர் விட வைப்பான் ---அவன் யார்?
51)வெள்ளைஆடும் கறுப்புஆடும் தண்ணி குடிக்கப்போக; கறுப்புஆடு தண்ணியில போச்சு; வெள்ளைஆடு திரும்பி வந்துருச்சி---அது                என்ன?   
52)பிணம் வேகும்; துணி வேகாது--- அது என்ன?
53)கண்டு பூப்பூக்கும் காணாமல் காய் காய்க்கும் ---அது என்ன?
54)அரை சாண் ராணி; அவகிட்ட ஆயிரம் முத்துக்கள் ---அது என்ன?
55)காளை கட்டிக் கெடக்கு; கயிறு ஓடிக் கெடக்கு ---அது என்ன?
56)மாமா கழனியில் எம்மாம் சைசில் மஞ்சள்முட்டைகள்! ஆனை போட்டதோ? குதிரை போட்டதோ?---அது என்ன?
57)அடுக்கடுக்கா பான; அதுக்கு மேல பச்சை ---அது என்ன?
58)கோணல் பல இருந்தாலும் குணம் மாறாதது.---அது என்ன?
59)வாய்க்கால் வெட்டி, வரப்பு வெட்டி, வைகாசி மாதம் தோப்பு நட்டி;
     ஈக்கி பெருத்து, எடை சிறுத்து இருக்குதாம்;  பாண்டியராசன் கடையிலே ---அது என்ன?          
60)ஆசைக்கு அவளைக் கட்டி; அழகுக்கு மகளைக் கட்டி; 
    கூடி வாழக் கொழுந்தியாளைக் கட்டி; சேர்ந்து வாழச் சின்னாத்தாளக் கட்டி; 
    நாலும்கட்டி நாறிப் போச்சு;'தூ'னு துப்பிட்டேன் ---அது என்ன? 
61)குத்துக்கல்லு சந்தைக்குப் போகுது---அது என்ன?
62)பச்சை பச்சை டாக்டர்; பால் போல் டாக்டர்;
     குண்டு முத்து டாக்டர்; குதிரை வால் டாக்டர் ---அது என்ன?
 63)காரை போட்ட வீட்டுக்கு கடவு இல்லை ---அது என்ன?
64)வெள்ளை மலைக்குள் இரண்டு பேர் வாழ்கின்றனர் ---அது என்ன?
65)என் வீட்டுத் தோட்டத்தில் ஒரு  அழகான மஞ்சக் குருவி ஊஞ்சலாடுகிறது---அது என்ன?          
66)தாய் இனிப்பாள்; மகள் புளிப்பாள்; பேத்தி மணப்பாள் ---அவர்கள் யார்?
67)விசாரிச்சு விசாரிச்சு பச்சக்கிளி வாங்கினேன்; விசாரணை இல்லாமல் வீதியில கெடக்கு.---அது என்ன?
68)இரு எண்கள் நேரத்தினையும் ஒரு பழத்தினையும் குறிக்கும்---அது என்ன?
69)கழுத்தை அறுத்தால் கண்ணு தெரியும்--- அது என்ன?
70)பரட்டைத்தலை மாமியார்; பவளம் போல் மருமகள்---அது என்ன?
தொடரும் 
(விடைகள் இறுதியில் )
கண்மணி 

kanmani tamil

unread,
Oct 2, 2018, 3:53:17 AM10/2/18
to mintamil
71)மெல்லிதமான ஒரு பெண்; அவள் மேலெல்லாம் பல தழும்பு---அது என்ன?
72)தாளமில்லாத ஆட்டம்; தாய்மார் விரும்பாத ஆட்டம்--- அது என்ன?
73)ரெக்கை இல்லாதவன் ஊர் ஊராய்ப் பறப்பான்--- அது என்ன?
74)குட்டை அக்கா குனிய வச்சா--- அது என்ன?
75)என் வீட்டுக் கிணற்றில் எப்போதும் உப்புத் தண்ணீர் --- அது என்ன?
76)தாயின் வாயிலே பிறப்பது; தரணியெல்லாம் சிறப்பது---அது என்ன?
77)கருமை நிறம் உடையது;காகம் அல்ல;
     இனிய குரல் உடையது; குயிலும் அல்ல;
     நம் எதிரில் சுற்றி வரும்; நாயும் அல்ல;
     பெட்டியிலே அடங்கி விடும்;பாம்பும் அல்ல.---அது என்ன?
78)முதுகைத் தொட்டால் மூச்சு விடுவான்; பல்லைத் தொட்டால் பாட்டுப்  பாடுவான்---அது என்ன?
79)வாய் உண்டு; நாக்கில்லை---அது என்ன?
80)காற்றுக்குப் பறக்கும்; சிறு ஊசிக்கு இறக்கும்--- அது என்ன?
81)சென்னைப் பட்டினம் சிகப்பு; சீரங்கப் பட்டினம் கருப்பு;
      வறுத்து உடைத்தால் பருப்பு; வாயில் போட்டால் கசப்பு--- அது என்ன? 
82)காம்பு இல்லாத பழம்--- அது என்ன?
83)டாங்கு டூங்கு மரம்; டண்டாங்கு போட்ட மரம்;
     இரும்பு தொளச்ச மரம்; எல்லோரும் ஏறும் மரம்---அது என்ன?
84)ஓடுற குதிரைக்கி விலா எல்லாம் ஓட்டை --- அது என்ன?
85)ஒன்றேமுக்கால் அடியே; உள்ள இருக்கும் பொடியே ---அது என்ன?
86)தன்னை நம்பாத ஒருவன் கூடவே வந்து கொண்டு இருக்கிறான்.---அது என்ன?
87)மண்ணுக்குள்ளே பொன்னம்பாள் .---அது என்ன?
88)எண்ணெய் அகல் இல்லாத திரி; எல்லோர்க்கும் நலம் புரியும் திரி;
     ஏறுமாறாய் நடந்துக்கிட்டா எமலோகம் அனுப்பும் திரி.---அது என்ன?
89)பல் இல்லாத வெள்ளையன்; காட்டிலும் மேட்டிலும் வாய்விட்டுச் சிரிக்கிறான் ---அது என்ன?
90)உச்சிக் குடுமிக்காரன்; கொள்ளி  வச்சால் கோபம் வரும்--- அது என்ன?
91)நிலத்தில் போட்டால் எடுக்கவோ அள்ளவோ இயலாது---அது என்ன?
92)இருந்த இடத்தில் இருந்தபடியே நகர்ந்து கொண்டிருப்பான் --- அது என்ன?
93)ஏறாத மரம் என்ன மரம்?
94)புறப்பட்ட இடம் தெரியும்; போய்ச் சேரும் இடம் தெரியாது ---அது என்ன?
95)தண்டை சலங்கைக்காரி; தாவர வீட்டுக்காரி; அவளைத் தொடுவானேன்? கவலைப் படுவானேன்? ---அது என்ன?
96)கண்ணில் படமாட்டான்; கை பட்டால் விடமாட்டான்--- அது என்ன? 
97)அசையும்- கொடியல்ல; தாகம் தீர்க்கும்- தடாகம் அல்ல--- அது என்ன?
98)வட்ட முகக்காரி; சுற்றிப் பூவிருந்தும் ஆட முடியில்லாத மொட்டைத் தலைக்காரி--- அது என்ன?
99)கிட்டக்கிட்டக் கிடைக்கும்; எட்டஎட்டப் போகும்; ஒட்டாது; ஓட்டினால் ஆபத்து--- அது என்ன?
100)அமாவாசைத் திருடன்; இந்தச் சுடர் வெளிச்சத்திலும் அகப்படவே மாட்டான்---அது என்ன?
101)ஆழக்  குழிதோண்டி; அதிலே ஓர் முட்டை இட்டு; அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை ---அது என்ன?
102)ஊருக்கெல்லாம் ஒரே துப்பட்டி --- அது என்ன?
103) ஒரு புட்டியில் இரண்டு தைலம் ---அது என்ன?
104)போவான்; வருவான் திம்மப்பன்--  ஒற்றைக் காலால் நிற்பான் திம்மப்பன்--- அது என்ன?
(முற்றும்)
கண்மணி          

kanmani tamil

unread,
Oct 2, 2018, 2:13:34 PM10/2/18
to mintamil
விடைகள் 
1)கண்மணி                                            41)புத்தகம்                                                                                            81)குன்றி முத்து 
2)மூக்கு                                                   42)கமலை,மாடு,சாட்டை,கிணற்றில் நீர் இறைத்தல்               82)அப்பளம் 
3)தலைமுடி                                           43)சட்டை                                                                                             83)ரயில் 
4)தலைமுடி                                           44)தேங்காய்                                                                                         84)ரயில் 
5)பற்கள்                                                  45)தேங்காய்                                                                                         85)திருக்குறள் 
6)சுண்டுவிரல்                                       46)தேங்காய்                                                                                         86)நிழல் 
7)உள்ளங்கை                                         47)தேங்காய்                                                                                        87)மஞ்சள் 
8)கைவிரல்கள்                                       48)தேங்காய்                                                                                       88)ஆஸ்பத்திரி 
9)ஒட்டகம்                                               49)வெங்காயம்                                                                                   89)பருத்தி 
10)தவளை                                               50)வெங்காயம்                                                                                  90)பட்டாசு 
11)நத்தை                                                 51)உளுந்து                                                                                          91)கோலம் 
12)கொசு                                                   52)இட்லி                                                                                              92)கடிகார முட்கள் 
13)பாம்பு                                                   53)வேர்க்கடலை                                                                                93)வாழை மரம் 
14)தட்டாம் பூச்சி                                    54)வெண்டைக்காய்                                                                           94)புகை 
15)சிலந்திப்பூச்சி                                    55)பூசணிக்காய்                                                                                   95)தேள் 
16)நாய்                                                     56)பூசணிக்காய்                                                                                   96)மின்சாரம் 
17)சிட்டுக்குருவிக்கூடு                        57)கரும்பு                                                                                              97)தென்னை 
18)தேன்கூடு                                           58)கரும்பு                                                                                              98)நிலா 
19)கலைமான்                                         59)பாக்கு                                                                                               99)தண்டவாளம் 
20)யானை                                                60)சுண்ணாம்பு,புகையிலை,வெற்றிலை,பாக்கு                        100)நிலா 
21)இடி                                                       61)வெல்லக்கட்டி                                                                               101)தென்னைமரம் 
22)காற்று                                                  62)சுண்ணாம்பு,புகையிலை,வெற்றிலை,பாக்கு                        102)வானம் 
23)நீலகிரி                                                 63)முட்டை                                                                                           103)முட்டை 
24)நிலா                                                     64)முட்டை                                                                                           104)கதவு 
25)தீ                                                            65)எலுமிச்சம்பழம் 
26)வானம்                                                 66)பால்,தயிர்,நெய் 
27)தொடுவானம்                                     67)வாழையிலை 
28)வானவில்                                            68)ஆரஞ்சு 
29)காலண்டர்                                            69)நுங்கு 
30)திருகு குழாய்                                      70)இலந்தைப் பழம் 
31)குலுக்கை                                             71)தபால் முத்திரை 
32)தாள்,பேனா                                          72)சீட்டாட்டம் 
33)ஆட்டுரல்                                              73)தபால் 
34)குடை                                                     74)நெருஞ்சி முள் 
35)உரல்,உலக்கை                                    75)கண்ணீர் 
36)பேனா                                                     76)தாலாட்டு 
37)விறகு                                                     77)இசைத்தட்டு 
38)அம்மி ,குழவி                                       78)ஹார்மோனியம் 
39)நார்க்கட்டில்                                         79)செவ்வாய் 
40)சீப்பு                                                         80)பலூன் 
கண்மணி 

Suba

unread,
Oct 5, 2018, 10:24:55 AM10/5/18
to மின்தமிழ்
மிக அருமை. 
இதனை நமது தொகுப்பில் இணைப்போம்.

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

kanmani tamil

unread,
Oct 5, 2018, 10:56:54 AM10/5/18
to mintamil
நன்றி சுபா 
கண்மணி 

kanmani tamil

unread,
Oct 5, 2018, 2:40:53 PM10/5/18
to mintamil
பிழை திருத்தம் 
100)அமாவாசைத் திருடன்; இந்தச் சுடர் வெளிச்சத்திலும் அகப்படவே மாட்டான்---அது என்ன--- எந்தச் 
99)கிட்டக்கிட்டக் கிடைக்கும்; எட்டஎட்டப் போகும்; ஒட்டாது; ஓட்டினால் ஆபத்து--- அது என்ன? ---ஒட்டினால்  
+105)செம்பு நிறைய கெம்பு ---அது என்ன?
                                                                            விடை --- மாதுளம் பழம்
கண்மணி  
Reply all
Reply to author
Forward
0 new messages