பேரழிவு..1
பங்கு சந்தை வீழ்ச்சி..
யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதலைப் போல மோடியால் நிகழ்த்தப்பட்ட இந்த ரூபாய் மாற்றம் எனும் பொருளாதாரத் தாக்குதலின் சிதைவுகளை, விளைவுகளை பார்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சீர்திருத்தம் என்ற இந்த மாயையின் பின்னால் திரளும் தேச பக்தர்களின் அறிவுக்கு எட்டாத பகுதிகளுக்கு போவது நமது கடமை..
அன்டிலியா.. மும்பையின் நடுவில் வானைத் துருத்திக் கொண்டு நிற்கும் 11000ம் கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின்ற அதிக விலையுள்ள 26 அடுக்கு மாடி வீடு. அதில் நான்கு பேர் மட்டும் வசிக்கிறார்கள். அவர்களுக்கு 600 பேர் வீட்டு வேலை செய்கிறார்கள். 400 கார்கள் நிற்கின்றன. ஹெலிகாப்டர் நிற்கிறது. அந்த வீட்டின் குடும்பத் தலைவர் தான் முகேஷ் அம்பானி. அவரை பார்க்க அவரது கம்பெனி அதிகாரிகள் வந்து போகிறார்கள். அந்த அதிகாரிகளில் ஒருவராக வந்துப் போய்க்கொண்டிருந்தவர்தான் இன்றைய இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல். இவரது தலைமையிலான ரிசர்வ் வங்கி இன்று கரண்சி மாற்றத்தை அறிவித்துள்ளது. அதுவும் மோடியின் வாயால்.
இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த போது அது பொருளாதார இனிப்பு செய்தியாக இல்லை. ஏனெனில் விளைச்சல் குறைந்து உணவுப் பணவீக்கம் அதிகரிக்குமானால் அது சாமான்யர்களின் தலையில் பொருள்களின் விலையேற்றமாக வந்து இறங்கும். அப்படித்தான் அது இறங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நேரத்தில் அமெரிக்க அதிபரின் தேர்தல். டிரம்ப் வென்றால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அளிக்கப்படும் IT அவுட் சோர்சிங் வியாபாரம் நிறுத்துவதாக வாக்குறுதி அளித்து அங்குள்ள இளைஞர்களின் வாக்குகளை அவர் அள்ளி தமது வெற்றியின் உறுதிப்படுத்தியபோது இந்திய பங்கு சந்தை ஆட்டம் காணத் தொடங்கியது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டார்கள் வெளியேறத் தொடங்கி பங்கு சந்தை சரியத் தொடங்கியது. இதனால் இந்திய நிறுவனங்களின் பங்குகளும், முதல் திரட்டும் பணிகளும் ஆட்டம் கண்டு அது சந்தைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியடைய வைத்தது.
இந்த இரண்டு கொடுமைகள் நிகழ்ந்த நேரத்தில் காலப் பொருத்தம் இன்றி, 2016 டிசம்பர் 7ம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய மோடி 500, 1000ம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அடுத்த நாள் இது பங்கு சந்தையில் எதிரொலித்து கால் மணி நேரத்தில் சந்தை திவாலாக்கிவிட்டது. 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு சந்தை தேங்கிவிட்டது. தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்ட பங்கு சந்தை நாள் முடிவில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோடி இழப்பில் முடிந்தது.
இதற்கு முன்பு 2008ம் ஆண்டு 3 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்ட போது அதன் தாக்கத்தை உணர்ந்த அப்போதைய நிதியமைச்சர் ப சிதம்பரம் வெளிநாட்டு பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பினார். வந்தவுடன் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனை உடனே வழங்கும்படி உத்தரவிட்டு, சந்தையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
அதேப் போல மோடி பதவி ஏற்ற பிறகு24.07.2015 அன்று பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தது. அப்போது ஏற்பட்ட இழப்பு 7 லட்சம் கோடி. அந்த வீழ்ச்சி இந்திய பொருளாதார தேக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என்று பொருளாதார அறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் நிதியமைச்சர் ஜெட்லி இந்த வீழ்ச்சி தற்காலிகமானது என்றும், சீன கரண்சி மற்றும் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டிவீத மாற்றம் என்று சாக்கு சொல்லி தப்பித்தார். ஆனால் நாட்டை விட்டு வெளியேறிய 7 லட்சம் கோடிக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில் இந்த பாதிப்பிலிருந்து இந்திய சந்தையை நிலைப்படுத்த உதவியது புதிதாக பொறுப்பேற்றிருந்த ரகுராம் ராஜனின் நடவடிக்கைகள்.
2008, 2015க்குப் பிறகு தற்போது இந்திய பங்கு சந்தை வீழ்ச்சியடைந்து 6 லட்சத்து 36 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. இந்த வீழ்ச்சி தற்காலிகமானது தான்
என்று எடுத்துக் கொள்ள முடியுமா.. இந்த கரண்சி புரட்சியில் கள்ள நோட்டுகளும் கருப்பு பணமும் ஒழிக்கப்படும் என்று காட்டப்படும் பகட்டிற்கு முன்னால் இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்..
முதலில் பார்க்க வேண்டியது. பங்கு சந்தையில் வெளியேறிய முதலீடுகளின் பெரும் பகுதி அந்நிய முதலீடு. இந்த முதலீடுகள்தான் இந்திய உற்பத்தித் துறைக்கு உதவக்கூடியதாக இருக்கிறது. இந்த முதலீடுகளை ஈர்க்கத்தான் மோடி நாடு நாடாக சுற்றி வருகிறார். அப்படி அவர் சுற்றி சுற்றி தொழில் துறை முதலீடாக ஒரு லட்சம் கோடியைக்கூடி புரட்ட முடியவில்லை. ஆனால் இவர் பதவி ஏற்றப் பிறகு 15 லட்சம் கோடிக்கு மேல் அந்நிய பங்கு முதலீடு வெளியேறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதிதான் இவரின் கரண்சி புரட்சியின் மூலம் வெளியேறியுள்ளது. இது நேரடியான இழப்பு என்றால் மறைமுக இழப்பு எவ்வாறு இருக்கும்.
பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ள சிறு முதலீட்டாளர்கள் அதிகம் கொண்டது இந்திய பங்கு சந்தை. அவர்கள் பங்குகளை விற்பது, வாங்குவது அல்லது டிவிடென்ட் பெறுவது என சிறு லாபத்தைப் பார்த்து அதன் மூலம் பொதுச் சந்தையை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பங்கு சந்தையில் அவர்களுக்கு ஏற்படும் இழப்பைப் பற்றி அரசு எப்போதும் கவலைப்படுவது இல்லை. ஆனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அவர்கள் தமது பொதுச் சந்தை நடவடிக்கைகளில் சுணக்கமோ அல்லது லாபக்கூட்டல் நடிவடிக்கைகளிலோ அல்லது தொழிலைவிட்டு திவாலாகி வெளியேறும் நடவடிக்கைகளிலோ இறங்கும்போது அது சாமான்யரின் தலையில் சுமையாக இறங்குகிறது. இந்த சிறு முதலீட்டார்களின் இழப்பு என்பது எப்போதும் அந்நிய முதலீட்டார்களின் திரும்பப் பெற்றுக் கொண்ட முதலீட்டிற்கு இரு மடங்கு இருக்கும் எனபது சந்தை கணிப்பு. அப்படி இருக்குமானால் இழப்பு 13 லட்சம் கோடியைத் தாண்டும்.
இந்த இருவகை இழப்புகள் மூலதனத் திரட்டல் நடவடிக்கைகளில் பெரும் தேக்கத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. பின்வரும் பிரிவுகளில் தாக்கத்தை உருவாக்கும்..
-அந்நியா செலாவணி கையிறுப்பில் மாற்றங்கள்.
-வங்கிகளின் அந்நிய செலாவணியில் வீழ்ச்சி.
-முதலீடுகளை ஈர்ப்பதில் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படும் வீழ்ச்சி.
-பட்டியலிடப்பட்ட சிறுநிறுவனங்கள் தொடர்ந்து முடங்கும் அபாயம்.
-சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு.
-இதன் விளைவாய் இறக்குமதி செலவு அதிகரிப்பு.
-ஏற்றுமதிக்கான அச்சம்.
இவை தவிர இன்னும் பல காரணிகள் இருந்தாலும், இந்த இரண்டு நாளில் உருவாகியுள்ள பேரிழப்பின் தாக்கத்தை சீர் செய்வற்கு அடுத்தப் பத்தாண்டுகளை அரசு செலவிட வேண்டியிருக்கும். ஆனால் அதற்கான தண்டனைகளை இந்தியக் குடிமக்கள்தான் அனுபவிக்க வேண்டும்.
பங்கு சந்தை என்பது சூதாட்டம் என்பது உண்மைதான். அந்த உண்மையின் பெரும்பகுதி சாதாரண மக்களின் மீது சுமத்தப்பட்டு ஆடப்படும் ஆட்டம். இந்த ஆட்டத்தில் வேடிக்கைப் பார்ப்பவர்கள் பலிகாடாவாக ஆக்கப்படுவார்கள். அதனால்தான் மோடி துணிந்து செய்தார்.
முறையான திட்டமிடல், எச்சரிக்கை இன்றி மோடி செய்த சீரழிவு மற்ற துறைகளை எப்படி பாதிக்கும் என்பதை அடுத்துப் பார்ப்போம்..
- கௌதம சன்னா
10.1102016
யாவரும் கேளீர்
மோடி அறிவித்தது நவம்பர் 7, 2016 என திருத்தி படிக்கவும்
சன்னா
யாவரும் கேளீர்
வாழ்த்துக்கள் எதோ நீங்கள் ஒரு குமுகப் போராளி என்று தான் நினைத்தேன் நல்ல பொருளியல் அறிஞராகவும் இருக்கின்றீர் சன்னன்ஆரோதன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நல்ல விறுவிறுப்பான நடை. வாழ்த்துக்கள். வேறு ஒன்றும் இல்லை. பரவாயில்லை.இன்னம்பூரான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆரோதன், இனரனம்பூரன் ஆகியோரின் விமர்சனத்திற்கு நன்றி
சன்னா
யாவரும் கேளீர்
டாக்டர் சந்திர போஸ், கிருஷ்ணன் ஆகியோரின் கருத்துக்களுக்கு மகிச்சி.. நன்றி.
சன்னா
யாவரும் கேளீர்
மோடி நிகழ்த்திய பொருளாதார பேரழிவு - 2
ஜப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.
மோடி எதற்காக புதிய கரன்சிகளை அச்சிட்டு வெளியிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.. மக்களின் தேவைகளை பார்த்து அவற்றை தீர்ப்பதற்கு பதில் ,அவர்களின் தேவைகளை பேராசையாக மாற்றி தமது வெற்றியை பறித்துக் கொண்டதில் மோடிக்கு நிகர் மோடியே. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தைக் கொண்டு வந்து இந்தியர்கள் அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் பிரித்துக் கொடுக்கப்படும் என்று மோடி மக்களிடம் பேராசையைத் தூண்டினார். மோடியால் ஏன் அப்படி சிந்திக்க முடிந்தது என்று இப்போது தேச பக்தர்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை.
கருப்புப் பணத்தை மீட்பேன் என்று சொன்னவர் திடீரென கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று மாற்றிப் பேசுவதில் உள்ள மோடியின் கையாலாகாதத் தனத்தையும், பேராசையையும் தேசபக்தர்கள் கணக்கில் சேர்ப்பதே இல்லை. பொருளாதாரப் புரிதல் சிறிதும் இல்லாத ஒரு பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் வெட்கப்படவுமில்லை.
கருப்புப் பணம் என்பது சிவாஜி படத்தில் காட்டப்படுவதைப் போல எங்கேயாவது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்ற அப்பாவியான புரிதலில் இருந்த மோடி மக்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டினார். பணம் என்றால் என்ன என்பதைப் பற்றின அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் அவர் இந்த புரிதலுக்கு வந்தார் என்பது ஒரு புறமிருந்தாலும், சுவிஸ் வங்கியில் அப்படித்தான் அடுக்கிக் வைக்கப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்துக் கொண்டாரே அதுதான் நமது சாபக்கேடு.
சுவிஸ் வங்கி என்பது இந்தியப் பணங்களை கட்டுக்கட்டாக சேர்த்து வைக்கும் கிடங்கு அல்ல. அது வைக்கப்படும் பணத்தை வைத்து பரிமாற்றம் செய்துக் கொள்ளும் ஒரு நிறுவனம். வங்கியின் செயலே அதுதானே. கிடங்காக வைத்திருந்தால் வாடகை மட்டும்தான் கிடைக்கும். வங்கி என்பது வட்டித்தருவதும், வட்டி வாங்குவதும், முதலீடு செய்வதும் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்கிறது. இந்தியர்கள் சேர்த்து வைத்தப் பணத்தை அந்த வங்கி அப்படித்தான் பயன்படுத்திக் கொண்டது. எந்த வங்கியும் தனது வாடிக்கையாளரின் கணக்கு விவரங்களை வெளியில் சொல்லாதது போலவே சுவிஸ் வங்கியும் நடந்துக் கொண்டது. எனவே சுவிஸ் வங்கியில் இந்திய கரன்சிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது அளவு கடந்த கற்பனை, நப்பாசை. இதை நம்பித்தான் மோடி இந்தியர்களுக்கு 15லட்சம் தருவதாக வாக்களித்தார். ஆனால் மோடி வாக்களிக்கும் முன்னே சுவிஸ் வங்கியில் இருந்த இந்திய பணம் என்னவானது என்பதைப் பற்றின புள்ளி விவரங்கள் வந்திருக்கின்றன..
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சேர்த்து வைத்துள்ள கருப்புப்பணம் 2006ம் ஆண்டு கணக்குப்படி 1,456 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இருக்கிறது என்று அன்றைக்கு சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் 2012ல் அது 92.95 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அது குறைந்துப் போனது. அதாவது 6% அளவிற்கு அது குறைந்துவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அரசு சார் அழுத்தங்கள் இதற்கு முக்கிய காரணம். அதே நேரத்தில் இந்தியர்களின் கருப்புப் பணம் சுவிஸ் நாட்டில் மட்டும் இல்லாமல் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறி இருந்தது. ஆனால் ஊடகங்கள் சுவிஸ் நாட்டை மட்டும் பிரதானப்படுத்தி எழுதிய காரணத்தினாலும் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய பணத்தின் பெரும் பகுதி வேறு நாடுகளுக்குப் போய்விட்டது. எனவே சுவிஸ் வங்கியில் இருந்த கருப்புப் பணத்தை காங்கிரசால் மீட்க முடியவில்லை என்கிற பிம்பத்தைப் பயன்படுத்தி மோடி தான் மீட்கப்போவதாக தனது வீரதீரத்தைக் காட்டினார்.
ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு மிச்சமிருந்த கொஞ்சப்பணமும் சுவிஸ் வங்கியிலிருந்து திரும்பப்பெறப்பட்டு அது இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் முதலீடாக போய் சேர்ந்துவிட்டது. இந்த தாக்குதலை மோடி எதிர்பார்க்கவில்லை, அதனால் மக்களின் முன் முற்றிலும் தனது அறியாமையை வெளிக்காட்டி அம்பலப்பட்டுப் போனார். எனவே மாற்று வழிகளை அவர் தேடிக்கொண்டிருந்தார். வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க வழியில்லை. உள்நாட்டிலாவது ஏதாவது தேறும் என்று எதிர்பார்த்தார், ஆனால் மசிந்தவர்கள் கொஞ்சம் பேர்தான். ஏனென்றால் இந்திய மக்கள் தொகையில் 1 சதவிதம் பேர்தான் வருமான வரி செலுத்தும் பழக்கம் உள்ளவர்கள், இதில் 2 சதவீகிதம் பேர் அரசு ஊழியர்கள். மீதமுள்ள 99 சதவீகிதம் பேரை வருமான வரிகட்ட வைக்க மோடியிடம் எந்த திட்டமும் இல்லை. இவரிடம் மட்டுமல்ல முந்திய காங்கிரஸ் அரசிடமும்தான்.
மக்களை வருமான வரி கட்ட வைக்க என்ன செய்ய வேண்டும். அதற்கு எளிய வழி வருமான வரி கட்டும் அளவிற்கு அவர்களுடைய வருமானத்தை அரசு பெருக்க வேண்டும். இதை மோடியின் செய்ய முடியுமா..? அதற்கு பதில் மக்களிடம் கருப்புப்பணம் இருக்கிறது என்கிற பூச்சாண்டியை காட்டி அவர்களையே குற்றம் சாட்ட முடியும். அதைத்தான் மோடி செய்தார். அப்படியானால் இந்தியாவில் உள்ள கருப்பு பணம் கிடங்குகளில் பதுக்கி மட்டுமே வைக்கப்பட்டிருக்குமா..
கிடங்குகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணம், தீவிரவாதிகளால் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் பணம் என்பவை காரணமாக ரிசர்வ் வங்கியால் காரணம் சொல்லப்பட்டது. 500 ரூபாய் நோட்டுகள் 76 %மும், 1000 ரூபாய் நோட்டுகள் 109%மும் புழக்கத்தில் அதிகரித்திருக்கிறது என்கிறது ரிசர்வ் வங்கி. இது சுழற்சி முறையில் ரிசர்வ் வங்கி திரும்பப்பெறும் பழைய பணத்திற்கு ஈடாக புதிய பணத்தை அச்சிட்டு வெளியிடும் கணக்கீடுகளின் அடிப்படையில் அமைந்த புள்ளி விவரங்கள் அல்ல. சந்தையில் சுற்றோட்டத்தில் இருக்கும் பணத்தின் அளவை சுற்றோட்ட கணக்கீடு (Random) புள்ளிவிவரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது. எனவே இதை முழுவதும் நம்ப வேண்டுமா வேண்டாமா என்பது நமது விருப்பத்தின் பாற்பட்டது.
ஏனென்றால் கருப்பு பணம் இருக்கும் சதவிகிதம் துல்லியமாக அரசிற்கு தெரியவில்லை. இன்றைய நாளிதழ்களில் அந்த தெளிவின்மையை அரசே வெளிச்சமிட்டிருக்கிறது. கருப்பு பணத்தின் அளவு ஒரு சதவிகிதம் என்றால் 14850 கோடி, 2 சதவிகிதம் என்றால் 29700 கோடி, 3 சதவிகிதம் என்றால் 44500 கோடி, 5 சதவிகிதம் என்றால் 70000ம் கோடி, 10 சதவிகிதம் என்றால் 1லட்சத்து 40ஆயிரம் கோடி. இதில் எது இலக்கு என்று இன்னும் அரசு துல்லியப்படுத்தவில்லை.
சரி, இப்போது இந்த கருப்புப்பணத்தை அழிக்க வைத்துவிட்டு புதிய பணத்திற்கு மோடி என்ன செய்தார். சுற்றில் இருக்கும் 500, 1000 ரூபாய் மொத்த பணம் அரசின் கணக்கின்படி 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகள். இதற்கு மாற்றாக புதிய நோட்டுகளை அச்சடிக்க 12ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. அதாவது அச்சிட்ட பணத்தில் 0.8 சதவிகிதம்.
இந்த செலவை ஈடுகட்டுவது எதில் என்பது ஒருபுறமிருக்கட்டும். மோடி அழிக்க நினைக்கும் கருப்புப்பணம் 1லட்சத்து 40ம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு 12ஆயிரம் கோடிகளை முதல் தவனையாக செலவழித்துள்ளார் என்பதும் ஒரு புறம் இருக்கட்டும். சந்தையில் புழங்கும் 1000, 500 நோட்டுகளுக்கான மொத்ததொகையான 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகளுக்கு இணையாக இந்தியாவின் முன்னணி கார்ப்பேர்ட் நிறுவனங்கள் வாராக்கடனாக வைத்திருக்கும் 14லட்சம் கோடி ருபாய்கள் கருப்புப்பணம் இல்லையா. இந்த பணத்தை மீட்க துப்பில்லை என்று வங்கி ஊழியர்களின் சம்மேளனம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்களே அதெல்லாம் தேச பக்தர்களுக்கு தெரியவில்லையா…
ஆனால் கருப்புப்பணம் மீட்கப்படும் என்று பொய் சொன்ன மோடி தொடர்ந்து கருப்புப்பணம் அழிக்கப்படும் என்று துணிந்து பொய் சொல்ல முடிகிறதென்றால் தேசபக்தர்கள் என்பவர் முட்டாள்களாய் மட்டுமே இருக்க முடியும் என்பதை அவர் நம்புவதால்தான்.
எனவே மோடி கருப்பு பணத்தை அழிக்க முதலில் 12ஆயிரம் கோடிகளை மட்டும் செலவிட்டு இழப்பை உருவாக்கவில்லை. ஒட்டுமொத்த தேசத்தையையே நிலைகுலைய வைத்து பொருளாதாராத்தை ஆட்டம் காண வைத்துள்ளார். அது எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து பார்போம்.
- கௌதம சன்னா
11.11.2016
3.25 pm: Lauding the move to abolish high-currency notes, former Supreme Court Judge N Santosh Hegde said the government should now take steps to bring back black money stashed in foreign banks, and ban cash donations to political parties. “I fully agree with Government of India decision. Every decision will cause some sort of a hardship to the people (in the short—term) but that cannot be a ground to say that we should allow to keep the black money in circulation,” he said. “At the time, I wish they (the government) should do something more in bringing the money in the foreign banks which was their (BJP’s) election manifesto actually,” said Mr. Hegde, who was a key figure in the Anna Hazare-led India Against Corruption movement a few years ago.
The Madras High Court Bench here on Thursday welcomed the announcement made by Prime Minister Narendra Modi on Tuesday demonetising Rs. 500 and Rs. 1,000 notes and hoped that the decision would spur the nation’s economic growth by curbing corruption, storage of unaccounted wealth and circulation of fake currency notes for financing subversive activities such as drug trafficking and terrorism.
Dismissing a public interest litigation petition filed by M. Seeni Ahamed, State general secretary of the Indian National League, challenging the Centre’s decision, Justices S. Nagamuthu and M.V. Muralidaran said: “It (demonetisation) is a welcome measure and any panic among the general public is unnecessary. The temporary hardship faced by people could not be a reason for this court to interfere in economic policy decisions of the State.”
Beginning the judgement with a reference to the Prime Minister’s address to the nation on Tuesday, the Division Bench pointed out that the petitioner’s counsel had questioned demonetisation of the two high value currency notes on the ground that the sudden decision had caused great hardship to the common man of the country, and hence, it was in violation of the fundamental right to life guaranteed under Article 21 of the Constitution.
Stating that it was not persuaded by such a “hollow” argument, the Bench recalled that the Centre had taken a similar demonetisation measure about 40 years ago by enacting the High Denomination Bank Notes (Demonetisation) Act, 1978. Then, the Constitutional validity of the Act was challenged before the Supreme Court on the ground that it was in violation of the fundamental right to property under Article 19(1)(f) of the Constitution.
A Constitution Bench of the Supreme Court rejected the argument and dismissed all the petitions on August 9, 1996. “Subsequently, Article 19(1)(f) was repealed, and as of now, right to property is no more a fundamental right. When the Supreme Court had held that demonetisation does not violate the right to property even at a time when it was a fundamental right, it is difficult for us to hold now that the recent demonetisation measure violates any other fundamental right,” the judges said.
‘Notice not possible’
On the argument advanced by the petitioner that the Centre ought to have issued prior notice and given sufficient time for the people to make alternative arrangements before demonetising the two currency notes, the judges said: “The law does not contemplate prior notice before implementing such decisions. Further, in our considered view, the object behind demonetisation itself would have been defeated if any prior notice had been issued by the Centre.”
They went on to state: “Of course, there has occurred some inconvenience to the common man, but at the same time, it cannot be forgotten that people affected by stashing away of black money is the poor and middle class. Any fall in economy will have an adverse effect only on the common man. Hence, the common man has to yield to such measures for curbing anti-social activities such as corruption, storage of unaccounted wealth and use of counterfeit currency for terrorist activities.”
Stating that the Centre was aware of such possible hardships and had taken various measures to ameliorate them at the earliest, the judges concurred with Assistant Solicitor General (ASG) G.R. Swaminathan that the power of judicial review could not be exercised to test the correctness of an economic policy decision taken by the government and give a finding as to whether demonetisation of the currency notes would lead to expected growth of the economy or not.
They also recorded the submission of the ASG that though the denomination of a Rs. 2,000 currency note, let into circulation by the Reserve Bank of India from Thursday, had not been specified in the RBI Act, 1934, the Union Finance Ministry had notified the new denomination on Tuesday by exercising its powers under Section 24(2) of the Act.
செல்லாத நோட்டு செய்தியை கேட்ட உடனேயே, என் மனதில்;
1. பஞ்சாப், உ.பி., தேர்தலுக்கு பா.ஜ.,வை தயார் பண்ணிட்டாங்க
2. சொந்த வீடு கனவு நனவாவதற்கு இன்னும் ரொம்ப காலம் காத்திருக்க வேண்டியது இல்லை என்பவை தான், உடனடியாக தோன்றிய விஷயங்கள்.

தேர்தல் அரசியல்
தீவிரவாதத்தையும், கறுப்பு பணத்தையும் மையப்படுத்தி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக, பிரதமர் அறிவித்திருந்தாலும்; அதில் உ.பி., பஞ்சாப் தேர்தல்களும் உடனடி காரணிகள் என்பதில் ஐயம் இல்லை.
பஞ்சாப் தேர்தல் வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ளது. உ.பி., தேர்தல் மார்ச் மாதம் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கறுப்பு பணம் இல்லாமல் கட்சிகளுக்கு தேர்தலை சந்திப்பது சிரமம் என்பது தெரிந்த விஷயம் தான். பா.ஜ.,வும் கட்சி தானே அதற்கு என்ன ஆதாயம்?
மத்தியில், 10 ஆண்டுகள் ஆட்சி செய்து, 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், போன்ற பல பத்திரிகை பரபரப்புகளை அரங்கேற்றிய காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளிடம் நல்ல பண பலம் உள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் கூட, கல்லா கட்டும் பாதையில் பயணிப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
இவை இரண்டும் தான், பஞ்சாபில், பா.ஜ., - அகாலி தளம் ஆட்சிக்கு சவால். கடந்த மாதம் வெளியிடப்பட்ட பஞ்சாப் கருத்து கணிப்புகள், காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சி தான் வெற்றி பெறும் என, தெரிவிக்கின்றன. இனி நிலை மாறுமா என்பதை பார்க்க வேண்டும்.
பஞ்சாபில் நிலை அப்படி இருக்க, உ.பி.,யில், 2014 லோக்சபா தேர்தலின் போது, மொத்தமுள்ள, 80 இடங்களில், பா.ஜ., 71 இடங்களை பிடித்து அசத்தியது. அது, மோடி அலை உச்சத்தில் இருந்த காலகட்டம். அதையும் தவிர, சட்டசபை தேர்தலில், ஆளும் சமாஜ்வாதி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் பண பலத்தையும், அடியாள் பலத்தையும் சந்திக்க வேண்டுமானால் பெரும் பொருட்செலவாகும் நிலை தான் உள்ளது.
அதற்கு பதில், அவர்களின் பண பலத்தை குறைத்துவிட்டால், பா.ஜ.,வுக்கு, தேர்தலை சந்திப்பது சற்று எளிமையாகும் என்பது நிதர்சனம். வெறும் அரசியல் தானா?அப்போது இதெல்லாம் வெறும் அரசியல்தானா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இது செயல்படுத்தப்
பட்ட நேரம் அரசியலுக்கு சாதகமான நேரமே ஒழிய,இதற்கான திட்டங்களும்,தயாரிப்புகளும், மோடி ஆட்சிக்கு வந்த அன்றில் இருந்தே நடந்து வருகின்றன.
* கடந்த, 2014ல், ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில், கறுப்பு பணத்திற்கான
சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை மோடி உருவாக்கினார்
* அதே ஆண்டில், 'ஜன் தன் யோஜனா'வை துவங்கி, வங்கிகள் மூலம் பண பரிவர்த்த னையை அதிகரிக்க முயற்சி எடுத்தார். அதனால், இன்று, 22கோடி புதிய வங்கி கணக்கு கள் துவங்கப்பட்டு உள்ளன. நாட்டில் உள்ள,31 கோடி வங்கி கணக்குகளில், இந்த திட்டத்தில் துவங்கப்பட்டவை தான் பெரும்பான்மை
* மொரீஷியஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடு களோடு, வரி ஏய்ப்பை தடுக்க வங்கி பரிவர்த்த னைகள் குறித்து தகவல் பரிமாற்றத்திற்கான ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது
* கடந்த, 2015ல், வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை பற்றி தன்னார்வமாக, தண்டனை
பயமின்றி தெரிவித்து, தகுந்த வரி கட்டி, அதை சட்டப்பூர்வமான பணமாக மாற்றிக்கொள்ள
ஒரு சட்டம் இயற்றப்பட்டது
* அதே போன்று, இந்த ஆண்டு, உள்நாட்டில் உள்ள கறுப்பு பணத்திற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த தன்னார்வ முயற்சிகளால், வெறும்,33 ஆயிரம் கோடி ரூபாய் வரை தான், வரி வசூலிக்க முடிந்தது. அதிலும், தன்னார்வமாக முன்வந்தவர்கள், தங்களின் முழு கறுப்பு பண விபரத்தையும் கொடுக்கவில்லை என்று, தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகள் உறுதிப்படுத்தின
* பினாமி சொத்துக்களுக்கும், பரிவர்த்தனைகளுக்கும் கிடுக்கிப்பிடி போடுவதற்கு ஒரு கடுமையான சட்டம், இந்த ஆண்டு, கொண்டுவரப்பட்டது
* சமீபத்தில் நிறைவேறிய, ஜி.எஸ்.டி., மசோதாவிலும் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த பல அம்சங்கள் உள்ளன
* வங்கி கணக்கோடு, ஆதார் எண் இணைப்பு, நேரடி மானியம் உள்ளிட்டவையும் இதற்கான திட்டங்களே. ஆகையால், மோடி அரசின் ஒவ்வொரு நகர்வும், கறுப்பு பணத்தை ஒழிப்பதை நோக்கித்தான் உள்ளது.
இதனால் கறுப்பு பணம் ஒழிந்துவிடுமா?
'புதிய நோட்டுகள் தான் வருகின்றனவே, ஒரு முறை இந்த நடவடிக்கையை எடுப்பதால் கறுப்பு பணம் ஒழிந்துவிடுமா, இருக்கவோ இருக்கு தங்கம்' என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதுவரை வாளியில், நீர் பிடித்து, சோப்பு போட்டு ஆகிவிட்டது; இது முதல் சலவை
தான். முதல் சலவையில் அழுக்கு போகவில்லை என்றால், இரண்டாவது சலவையும் நடக்கும். நேற்று காலை வரை, டுவிட்டரில் 'பிளாக் மணி' என்ற தலைப்பில் இந்த விஷயம் பேசப்பட்டது; ஆனால், மாலைக்குள் அதுவே, 'டீமானிடைசேஷன்' என்ற தலைப்புக்கு மாறிவிட்டது.
இங்கு, 'டீமானிடைசேஷன்' என்றால், ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை நடக்கும் சூழல். அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலம் நடக்க வேண்டும், மின்னணு வடிவில் பணம் மாற வேண்டும்; அது தான் மோடி அரசினுடைய குறிக்கோள். அப்படி நடக்கும் போது, இயல்பாகவே கறுப்பு பணத்திற்கு இடமில்லாமல் போகும்.
கறுப்பு பணத்திற்கு முக்கிய காரணிகளான ஊழலும், லஞ்சமும் குறையும். அந்த கோணத்தில் இருந்து பார்க்கும் போது,
* புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வரும் என்று கூறி உள்ளனர்; எவ்வளவு வரும் என்று கூறவில்லை. நேற்று முன்தினம் வரை, இந்தியாவில் உள்ள மொத்த ரொக்கத்தில், 84 சதவீதம், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. 500 மற்றும் 2,000ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவில் அச்சடிக் கப்படலாம். இன்று நீங்கள் வங்கிக்கு சென்று ரொக்கம் கேட்கும் போது, அனைத்தும்,50 அல்லது100 ரூபாய் நோட்டுகளாக உங்களுக்கு கொடுக்கப்படலாம்
* நேற்று முன்தினம் இரவு வரை தங்கம் வாங்க முடிந்திருக்கும். அதுவும் கடையில் இருப்பு உள்ளவரை மட்டும் தான். இனி என்ன செய்வது? ஒரு சில வியாபாரிகள், 'பின் தேதியிட்டு பில் போட்டுக் கொள்கிறோம்' என்று துணிச்சலாக முன்வரலாம். அவ்வளவே.
ரொக்கத்திற்கு கட்டுப்பாடு விதித்ததற்கு அடுத்தபடியாக அசல் தங்கத்திற்கும் கட்டுப்பாடு வரும் போல் தெரிகிறது. அதற்கு முன்னேற்பாடாக தான், தங்க கடன் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. '100சவரனுக்கு மேல் வைத்திருப்பவர்கள், அதற்கான சொத்து ஆதாரங்களை காட்ட வேண்டும்' என்று சட்டம் வரும் காலம், வெகு துாரத்தில் இல்லை
* தங்கத்தை விட்டால் மிஞ்சி இருப்பது நிலமும், வெளிநாடும் தான். நிலத்தை வாங்க, கண்டிப்பாக கறுப்பு பணம் தேவை என்ற சூழல் உள்ளது. ரொக்கம் கட்டுப்படும் போது, நிலத்தை வாங்குவது அசாத்தியமான காரியமாக மாறும்.
* நிலத்தை தங்கள் பேரில் வாங்கினால், வருமான வரி கேள்விகளும் வரும். பினாமி பேரில் வாங்கினால், இனி அதை மீட்க முடியாது, நஷ்டஈடு இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் என்று, புதிய பினாமி சட்டம் சொல்கிறது
* வெளிநாட்டுக்கு பெரும் பணக்காரர்களை தவிர, மீதமுள்ளோரால் பணத்தை கடத்த முடியாது; அதுவும், ரொக்கம் குறையும் போது, ஹவாலா பரிவர்த்தனைகள் மிக மிக கடினமாகிவிடும். அதனால், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த, இது சரியான நடவடிக்கை தான் என்றே தோன்றுகிறது.
தொழில் பாதிக்கப்படுமா?
நம் நாட்டில், 80 சதவீத பண பரிவர்த்தனைகள் ரொக்கம் மூலம் தான் நடக்கின்றன. சிறு வியாபாரி கள், சிறு தொழில் முனைவோர், விவசாயிகள் என, பலர் ரொக்கத்தை நம்பி தான் இருக்கின்றனர்; இவர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்படுவர் என்ற, வாதம் முன்வைக்கப்படுகிறது.
கண்டிப்பாக குறுகிய கால பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், இப்போது, ஏறத்தாழ அனைத்து குடும்பங்களிடமும் வங்கி கணக்கு உள்ளது. மின்னணு முறையில் பண பரிவர்த்தனை செய்ய, ஆயிரம் வழிகள் வந்துவிட்டன.
அதனால், வேண்டாவெறுப்பாக மாறினாலும், வங்கி மூலம் பண பரிவர்த்தனைக்கு அனைவரும் மாறி தான் ஆக வேண்டும். இப்போது நடக்காவிட்டால் எப்போது நடக்கும்? சந்தையில் பரிவர்த்தனை களும், நுகர்வும் குறையும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், உயர்ந்த விலையுள்ள பொருட்களின் நுகர்வு தான் குறையும்.
சாதாரண பொருட்களின் விலை குறையும்; எப்படி?
உதாரணத்திற்கு, இதுவரை வரியை பற்றி சிந்திக்காத ஒரு பெரிய வெங்காய வியாபாரியை எடுத்துக்கொள்வோம். அவரிடம், சரக்கை, மூன்று மாதம் இருப்பு வைப்பதற்கு இப்போது கறுப்பு பணம் உள்ளது என்றால், இதற்கு பின் அது இருக்காது. வாங்கிய பொருளை உடனடியாகவோ, மூன்று மாதங்களுக்கு முன்போ விற்றாக வேண்டும். விலை விண்ணை தொடும் வரை காத்திருக்க இயலாமல் போகும். அதனால், காய்கறி விலை குறையும்.
இப்படி, விலை குறையும் போது, பண வீக்கமும் குறையும், நுகர்வும் அதிகரிக்கும். அதன் மூலம் தொழில் மீண்டும் வளம் பெறும். அது மட்டும் அல்லாமல், மக்கள் வங்கியில் கொண்டு ரொக்கத்தை செலுத்தும் போது, அவர்களுக்கு கிடைக்கப் போவது, குறைந்த அளவு ரொக்கம் தான். மீதமுள்ள பணம், அவர்கள் கணக்கில் செலுத்தப் படும். அதை எளிதில் ரொக்கமாக எடுக்க முடியாத படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. வங்கி யில் பணம் இருப்பு அதிகரித்தால், வட்டி விகிதம் இயல்பாகவேகுறைந்துவிடும்.
இதன் மூலம், நுகர்வு கடன் அதிகரித்து, நுகர் வும் அதிகரிக்கும். அதுவும் தொழில் களுக்கு சாதகமாக இருக்கும்.ஆனால்,கல்வி தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் பாதிக்கப்படும்.
ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் தொழில், அரசியல்வாதிகளின் கறுப்பு பணத்தில் தான் பெரும்பாலும் இயங்கு கிறது என்பது நாடறிந்தது. கறுப்பு பண முதலீடு என்பதால், கிட்டத்தட்ட இலவசமாக வந்த பணம் போல தான்; வங்கிக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை. அதனால் தான் லட்சக் கணக்கான வீடுகள் விற்காமல் இருப்பினும், விலை, பெரும் வீழ்ச்சி காணாமல் இருக்கிறது.
கறுப்பு பணத்தில் மோடி கைவைத்து உள்ளதால், இந்த நிலை கண்டிப்பாக மாறும்.
இழப்புகளை குறைக்க வீட்டு விலைகளும் குறையும்; வாடகையும் குறையும். ஆக்கிர மித்தல், வளைத்துப் போடுதல் ஆகிய கவுன்சி லர் தொழில்கள் அவ்வளவு பிரகாசமாக தெரியாது. இதனால்,காஞ்சிபுரம் மாவட்டம் போன்ற தொழில் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கும் சீரானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சொந்த வீடு, எட்டா கனியாக இருந்த அனைவருக்கும், இது மோடி கொடுத்துள்ள வரப்பிரசாதம்.மாற்றங்கள் என்ன?
* அடுத்த சலவைக்கு காத்திருக்காமல் இப்போதே சுதாரிப்பவர்கள், வரி கட்ட துவங்குவர். இதனால், கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்; இது போதுமான அளவிற்கு அதிகரித்தால், நாட்டில் வரி கட்டும், 2-3 சதவீதம் பேரின் மீதான சுமை குறைந்து, வரி விகிதங்கள் குறையும்
* அனைவரும் மின்னணு பண பரிமாற்றத்திற்கு மாறிவிட்டால், வருமான வரியே இல்லாத நாடாக கூட, நம் நாடு மாறலாம். பரிவர்த்தனைகள் மீது மட்டும் வரி விதிக்கும் திட்டத்தை முன்வைத்து, ஒரு குழுவினர், அரசிடம் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்
* வரி கட்டுவோரின் எண்ணிக்கையும், வரி வருமானமும் அதிகரிக்கும் போது, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசால் கூடுதல் நிதி ஒதுக்க முடியும். இதன் மூலம் தனிநபர் வருமானம்
அதிகரிக்கும்
* படிப்படியாக, 'டீமானிடைசேஷன்' திட்டம் அமலுக்கு வரும் போது, லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சிரமமான செயல்களாக மாறும். யோசித்துப் பாருங்கள், போலீஸ்காரன் கிரெடிட் கார்டில் லஞ்சம் வாங்க முடியுமா?
* லஞ்ச பணத்தை வைத்திருப்போருக்கு இது ஏற்கனவே பெரிய சாட்டை அடி. ஏனெனில், மற்றவர்களை போல் அபராதம் கட்டிவிட்டு, தங்கள் பணத்தை சட்டப்பூர்வமான பணமாக அரசு ஊழியர்களால் மாற்றிகொள்ள முடியாது.
அவர்கள், சாதாரண மக்களை கசக்கி பிழிந்து சம்பாதித்த பணம் .அத்தனையும் இப்போது, ஆட்டுத்தீவனம் அல்லது ஆண்டவன் சொத்து
* தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது, 'தன்னார்வ தொண்டர்கள்' கூட்டங்களை சேர்ப்பது எல்லாம் சிரமமாகிவிடும்
* சாதாரண ஊழல்கள், லஞ்சம் மூலம் அரசியலில் சம்பாதிப்பது சிரமம் என்று தெரிந் தால், கிராம அளவிலும், நகராட்சி அளவிலும் செயல்படும் பல தொழில் முறை அரசியல் வாதிகளுக்கு, அரசியல் தொழில் கசந்துவிடும். இதனால், சற்று மக்கள் தொண்டு மனப் பான்மை கொண்டவர்கள் உள்ளே வர வாய்ப்பு ஏற்படும்
* பணம் வாங்காமல் ஓட்டு போடுவோருக்கும், வரி கட்டுவோருக்கும் நாட்டு பிரச்னைகள் சற்று அதிகமாக உறைக்கத்தான் செய்யும். அதனால், ஜனநாயகம் வலுப் பெறுமா என்பதை, வரும் உள்ளாட்சி தேர்தலில் பார்ப்போம்.
அசாத்திய சாதனை
மொத்தத்தில், மோடியின் இந்த செயல் பொருளாதாரத்திலும், சமூகத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்த வித்திட்டு உள்ளது. இது உண்மையிலேயே, வரலாற்று சிறப்புமிக்க செயல் தான். அதுவும் மிக மிக துணிச்சலான செயல். ஏனெனில், எப்பேற்பட்ட நேர்மையானவராக, மோடி இருந்தாலும், அவரும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் தான்.
அந்த கட்சி எப்பேற்பட்ட தேசபக்தி நிறைந்த கட்சி என்று யார் சொன்னாலும், அதில் உறுப்பினர்
களாக உள்ள, 11 கோடி பேரும் நேர்மையானவர்கள்; லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அப்பாற்
பட்டவர்கள் என்று யாராலும் உத்தரவாதம் தர முடியாது.சக கட்சியினரை மீறி, கறுப்பு பணத்தை ஒழிக்க துணிந்துள்ளார். அதே போல், அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். கறுப்பு
பணத்திற்கும் பெயர் போன மாநிலம் அது. இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், அந்த மாநிலத்தைச் சேர்ந்த பண பலமிக்கவர்கள் தான்.
இதனால், அங்கே, சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும் அடி கூட விழலாம். இருப்பினும், மோடி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்றால், அது அவரது நேர்பட்ட சிந்தனைக்கு அத்தாட்சி.உண்மையிலேயே அவருடைய துணிச்சலை பார்த்து தலை வணங்கத்தான் தோன்றுகிறது. அவரது இந்த முயற்சி வெற்றி அடைய, நம்மால் ஆனதை செய்வோம்.
அடுத்தது தங்கம்
அடுத்தபடியாக அசல் தங்கத்திற்கும் கட்டுப்பாடு வரும் போல் தெரிகிறது. அதற்கு முன்னேற்பாடாக தான், தங்க கடன் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. '100 சவரனுக்கு மேல் வைத்திருப்பவர்கள், அதற்கான சொத்து ஆதாரங்களை காட்ட வேண்டும்' என, சட்டம் வரலாம்.
- கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு -
துணை ஆசிரியர், தினமலர்
வாசகர் கருத்து (143)
நாட்டின் வளர்ச்சியை குறிவைத்து முறையாக திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை . குறுகிய காலத்தில் paytm , ola , uber , pay u money , freecharge , மற்றும் நிறைய நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாக வளர்ச்சி பெற்று உள்ளன. வீட்டின் அன்றாட செலவினங்கள் இதன் மூலம் உட்கார்ந்த இடத்தில அமர்ந்து கம்ப்யூட்டர் , மொபைல் மூலம் பண பரிவர்த்தனை முடிந்து விடுகிறது . வீடு , நிலம் வாங்குவது எல்லாம் கருப்பு பணம் தான் . கருப்பு பண நடமாட்டம் இனிமேல் வெகுவாக குறையும். இனிமேல் விலை குறைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் . திட்டம் முறையாக செயல்பட வேண்டும். அரசு அதிகாரிகள் தான் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்.
ஒரு வாட்சப் மெசேஜ் வாக்காள பெருமக்கள் எல்லோரும் கருப்பு பணத்தை மீட்கனும்னு சொன்னாங்க.... கேட்கவே ரொம்ப நல்லா இருந்தது.... அதாவது அரசியல்வாதிகளிடமும் பணக்காரர்களிடமும் லஞ்ச அதிகாரிகளிடமும் நடிகர்களிடமும் தான் அந்த கருப்பு பணம் குவிந்து கிடப்பதாக அப்பாவி வாக்காளன் நினைத்து இருந்தான்.... இப்போ மோடி பாய் 500, 1000 செல்லாதுன்னு சொல்லி உங்கள் கைவசம் இருக்கும் 500,1000 ங்களை ஒப்படைத்து விடுங்கள் என கூறி விட்டார். இப்போ அதிர்ச்சியில் உறைஞ்சி போய் நிக்கிறது அதே வாக்காளன் தான்.... லைக்காவின் கருப்பு பணத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கும் ரசினியும், தனுசும் இந்த திட்டத்தை அமோகமாக வரவேற்கிறார்கள்.... காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது... ஏன் இதுவரை ஊழல் அரசியல் வாதிகள், அதிகாரிகள் என சொல்லப்பட்டவர்கள் எல்லாம் வரவேற்கிறார்கள்.... அப்படி என்றால் கருப்பு பணம் யாரிடம் இருக்கிறது? கருப்பு பணத்தை வைத்து செலவு செய்வதாக நம்பப்படும் அரசியல் வாதிகள் நாளை முதல் நடுத்தெருவுக்கு வந்து விடுவார்களா? அவர்கள் எல்லாம் யாராவது சோறு போடுங்களேன் என கெஞ்சுவார்களா? அப்படி நடந்தால் இந்த திட்டம் சிறப்பானது தான் இனி சினிமா டிக்கட்டுகள் பிளாக்கில் விற்கப்படாது என்றால் இது சிறப்பானது தான், இனி அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்க மாட்டார் எனில் இது சூப்பர் தான், அரசு வேலைக்கு இனி பணம் பெற்றுக்கொள்ள முடியாது எனில் இது சூப்பர் தான்... ரசினியும் அஜித்தும் தங்கள் சம்பளம் இவ்வளவு தான் என அறிவித்து விட்டால் இது சூப்பர் தான்... அரசின் திட்டபணிகள் 40 சத கமிசன் இல்லாமல் நடக்கும் எனில் இது சூப்பர் தான்... டாக்டர் படிப்புக்கு இனி கோடிகளில் லஞ்சம் கொடுக்க தேவையில்லை என்றால் இது சூப்பர் தான்... சாலை ஓரம் வண்டியை நிறுத்தி காவலர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் எனில் சூப்பர் தான்... பில் இல்லாத எல்லாமும் கருப்பு பணம் தானே... ஆனால் நிஜத்தில் என்ன நடக்க போகிறது.. ஆடு வளர்த்து துட்டு சேர்த்து வைத்தவன் பணத்தை கொண்டு ஒப்படைப்பான் தங்கையின் திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணத்தை அண்ணன் ஒப்படைப்பான்... மகனின் படிப்பு செலவுக்கு என சேர்த்து வைத்த பணத்தை அப்பா ஒப்படைப்பார்.... சிறுக சிறுக சேர்த்து சீட்டு போட்டு சேமித்த பணத்தை அன்றாடம் கூலிக்காரர்கள் ஒப்படைப்பார்கள்.... காய்கறிகள் விற்று விவசாயியும், ரோட்டு கிழவியும் சேர்த்த பணம் ஒப்படைக்கப்படும் பெட்டிகடை நடத்தும் அண்ணாச்சி பணத்தை ஒப்படைப்பார்.... அதனால் என்ன? இங்குதான் மோடியின் திருவிளையாடல் இருக்கிறது. நம்மிடம் இருக்கும் பணத்துக்கு கணக்கு கேட்பார்கள்...(கணக்கிற்கு நாம் எங்கே போவது?) இல்லை என்றுதான் வாக்காளனால் சொல்ல முடியும்... இல்லை என்றால் இந்த வருமானத்துக்கு வரி கட்டு என்பார்கள்... அதாவது இத்தனை ஆண்டு காலம் சிறிது சிறிதாக ரத்தம் சிந்தி சேர்த்த பணத்துக்கு வரியை கொடு என்பார்கள்... மோடி கேட்பதை கொடுப்பது தானே தேசபக்தி... ஆனால் வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்படும் கருப்பு பணம் எங்கே என கேட்க கூடாது... அரசியல் வாதிகளின் வீடுகளில் உள்ள பாதாள அறைகளில் கருப்பு பணம் இல்லையா என கேட்க கூடாது.... வோடபோனுக்கு 4500 கோடி வரியை கட்ட வேண்டாம் என சொன்னது ஏன் என கேட்க கூடாது நோகியா நிறுவனம் வரிகட்டாமல் ஒடிய போது தடுக்காதது ஏன் என கேட்க கூடாது... மல்லையா ஏன் கைதாகவில்லை என கேட்க கூடாது? அய்யோ அவன் மக்கள் வரிப்பணத்தை வாங்கி பெண்களுடன் கும்மாளமிட்டானே என கொந்தளிக்க கூடாது... அவர்கள் சொல்கிறார்கள் கருப்பு பணம் உழைக்கும் மக்களிடம் இருக்கிறது என்று.... பிறகென்ன ஒப்படைத்து விடுங்கள் மக்களே..
மிக அருமையான கருத்து. இதுதான் உண்மை நிலை. ஆனால் இந்த தரம்கெட்ட பிஜேபி சொம்புகளும், ஜாதி, மத வெறிக்கு துணை போகும் பத்திரிகைகளும் இதை மிக பெரிய சாதனை என்று ஒரு பொய் தோற்றத்தை கொடுக்கிறது.மோடி அரசாங்கத்தின் துக்ளக் கோட்பாட்டின்படி பொது மக்களிடம் உள்ள 500,1000 தான் கறுப்பு பணம். ஏன் என்றால் இந்த துப்பு கெட்ட அரசால் கறுப்பு பண முதலைகளை வளர்க்கத்தான் முடியும்.முட்டாள் ஆட்சி இந்த பிஜேபி இந்த ஆட்சி , தகுதி அற்றவர்களுக்கு பொறுப்பு கொடுப்பதும் அவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவதும் நாட்டிற்கு நல்லது அல்ல. இது பிஜேபி இந்த அழிவு காலம்...
500,1000 ரூபாய் செல்லாது அறிவித்ததை சிறிது கஷ்டம் இருந்தாலும் சுகமான சுமையாக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் வரவேற்பு. எதிர்ப்பவர்கள் மோடி மீது காழ்புணர்ச்சி உள்ளவர்கள் தான். ஊழல் பண்ணாத ஆட்சி முட்டாள் தனமான ஆட்சியா ? பாகிஸ்தானை அலற விட்டால் முட்டாள் தனமான ஆட்சியா ? ட்ரம்ப் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும்போது மோடி மாதிரி சிறப்பாக ஆட்சி செய்வேன் சொல்லி வெற்றி பெற்றுள்ளார். அறிவாளி சங்கு அமெரிக்கக்காரன் எல்லாம் முட்டாளா ? பொய் , பொரட்டு பேசும் கும்பல் தான் எதிர்க்கிறது. up ல் கத்தை கத்தையாக 500,1000 பணம் எரிக்க பட்டுள்ளது தெரியுமா. பாகிஸ்தானுக்கு 5௦௦ கோடிக்கு மேல் நஷ்டம் தெரியுமா ? இப்போ சொல்லுங்க நீங்க யாரு பக்கம் ? நீங்கள் சொல்வதிலிருந்து உங்கள் உண்மையான முகம் தெரியும் சுவிஸ் போன்ற வெளிநாட்டு பணம் அவ்வளவு ஈசியாக இந்திய பணமாக மாற்ற முடியாது. இந்தியா ஏழை நாடு இல்லை என்று தெளிவாகிறது மற்றும் மோடியின் சிறப்பான ஆட்சியில் ஏழை மக்களிடம் 500,1000 ஏழை எளிய மக்களிடம் உள்ளது தெரியவருகிறது. காங்கிரசு ஆட்சியில் இலவசமாக பெற அலைந்த மக்களிடம் நிறைய பணம் அனைவரும் வைத்து இருக்கும்போது அமெரிக்க அதிபர் சொல்வது போல் மோடி ஆட்சி சிறப்பான ஆட்சி....
ஏழை , நடுத்தர , ஒழுங்காக வரி கட்டும் பணக்காரர்கள் 500,1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை வரவேற்றுள்ளனர். இதை எதிர்ப்பவர்கள் எல்லாம் மோடி மீது காழ்புணர்ச்சி உடையவர்கள் , வெளி நாட்டு ஆதரவாளர்கள் , ஏழைகள் போல் வேஷம் போட்டு சலுகைகளை பெற்ற குறிபிட்ட பிரிவினர் , கருப்பு பணம் ஆதரவாளர்கள் , பாகிஸ்தான் ஆதரவாளர்கள் ஆவர்....
மக்கள் சிரமபடுகிறார்கள் , அவதி என்று சொல்லும் ஒரு சில ஊடகங்களே. அரசியல் கட்சிகள் நடத்திய பந்த் , ரயில் மறியல் போராட்டத்தால் மக்கள் அவதி பட்டது எழுதியது உண்டா ? நீங்கள் மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் நோயாளிகள் ஆஸ்பத்திரி செல்ல விடாமல் எதிர் கட்சிகள் பந்த் எதிர்த்து கருத்து சொன்னது உண்டா ? மக்கள் படும் இன்னல்களை எழுதியது உண்டா ? டிவி கள் பேட்டி எடுத்தது உண்டா ? நாட்டு நலனாக எடுக்கப்பட்ட 500,1000 செல்லாது அறிவித்த அறிவிப்பால் மக்கள் ஒரு சில அவதிகளை ஒளிபரப்பியது நியாயமா ? ஊடகங்கள் தூண்டி விட்டாலும் பெருமான்மை மக்கள் சுகமான சுமையாக நினைத்து வரவேற்றுள்ளனர்....
அய்யோ எனக்கு நாளைக்கு சோத்துக்கு வழியில்லையேங்கிறான் ஒருத்தன், அய்யோ நாளைக்கு எம் புள்ளைக்கு பாலுக்கு வழியில்லையேங்கிறான் இன்னொருத்தன், வண்டிக்கு பெட்ரோல் போடனும் புள்ளைங்க ஸ்கூலுக்குப் போவனும் நா ஆபிசுக்கும் போவனும்ன்னு புலம்புறான் வேறொருத்தன்.( நாளைக்கு மதுக்கடை இருக்காதுன்னு சொன்னா குடிகாரனுக்கு இன்னைக்கே கை கால் நடுங்குற மாதிரி நடுங்குறாய்ங்க சில பேர்). இந்த மக்களுக்காக தான் பெரும் செல்வந்தரான உ.வ.சி இரட்டை ஆயுள் தண்டைனை பெற்று, செக்கிழுத்து வறுமையில் வாடி செத்துப் போனார்... சுப்பிரமணிய சிவா சுமார் 8 ஆண்டுகள் சிறையிலடைபட்டு ஆட்டுத் தோலை கொதிக்கும் சுண்ணாம்பில் நனைத்து சுத்தம் செய்யும் தண்டனை பெற்று தொழுநோய் வந்தே செத்துப் போனார்... தன்னோட அழகான மனைவியையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு 12 ஆண்டுகள் சிறையில் இருந்தார் நேரு... தன் வாழ்நாளில் 9 ஆண்டுகளை சிறையில் கழித்தார் காமராசர். (40 வயசு வரை சிறையிலயே இருந்துட்டேன் இதுக்குமேல கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க விரும்பலன்னு பாவம் அந்த மனுசன் கடைசிவரை கல்யாணமே பண்ணிக்கல...) சுடர்விட வேண்டிய நேரத்தில் அணைந்து போன தீபத்தைப் போல 24 வயதிற்குள் வாழ்க்கை தொடங்கும் நேரத்தில் நாட்டுக்காக தூக்கில் தொங்கி தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்... இவர்களைப் போன்ற எத்தனையோ கோடி பேர் நாட்டுக்காக தன் தாய், தந்தை, மனைவி, மக்கள், சொத்து, சுகம் எல்லாவற்றையும் தியாகம் செஞ்சு தான் வெள்ளைக்காரனை விரட்டி சுதந்திரம் வாங்குனாங்க. ( பூராம் பொழைக்கத் தெரியாத பயலுவ). இன்னைக்கு நாம இருக்கிற மாதிரி அவங்களும் சுயநலத்தோட இருந்திருந்தா வெள்ளக்காரன் இன்னும் எத்தன வருசம் வேணும்ன்னாலும் நம்மள ஆண்டு இருக்கலாம். ( உடனே இவய்ங்களுக்கு வெள்ளக்காரய்ங்களே தேவலன்னு சொல்லாதீங்க பஞ்சாப்ல நீங்க குடியிருக்கிற தெருவை முட்டிப் போட்டுத் தான் கடந்து போகனும்னு ஒரு வெள்ளக்காரன் போட்ட உத்தரவு தான் 1500 பேருக்கு மேல குண்டடி பட்டு இறந்துபோன ஜாலியன் வலாபாக் நிகழ்ச்சிக்கான விதை). நல்லதோ கெட்டதோ இதுவரை இல்லாத ஒரு புது முயற்சியை எடுக்குது அரசாங்கம். ரெண்டு நாள் தானே பொறுத்துக்குவமே... இதனால கள்ள நோட்டு ஒழியுமா, கறுப்புப் பணம் ஒழியுமான்னு இப்பவே ஆராய்ச்சியோ பட்டிமன்றமோ தேவையில்லாத ஒன்று. இப்போதைக்கு வரவேற்போம். தீமைன்னு உறுதியா தெரிஞ்சா விமர்சிப்போம், எதிர்ப்போம். அதவிட்டுட்டு இதைச் செய்வது மோடிங்கிற ஒரே காரணத்துக்காக குருட்டுப் பூனை விட்டத்துல பாஞ்ச மாதிரி கண்ண மூடிக்கிட்டு எல்லா திட்டங்களையும் எதிர்க்க வேண்டிய அவசியமில்ல...
வெங்கய்ய நாய்டு திரு மோடி குரூப் ஆப் அமைச்சர் சொன்னார் - இந்தியாவில் சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்கு வீடு அளிக்கப்படும் - அதன் நிலவரம் என்ன என்று சொல்ல முடியுமா ?? எங்கள் கையில் இருக்கும் கரன்சிக்கு செல்லாது என்று சொல்வது மிக எளிது அதே போலெ ஸ்விஸ் மற்றும் வெளிநாட்டில் போட்டு வைத்துள்ள இந்திய பணம் இனி இந்தியாவில் வரக்கூடாது, செல்லாது என்ற சொல்ல திரு மோடிக்கு முடியுமா ?? அதே போலெ திரு வெங்கய்ய நாயுடு சொன்ன வீடு விஷயம் என்ன ஆயிற்று திரு மோடியும் சொன்னார் ஸ்விஸ் மற்றும் வெளி நாடு வங்கி கருப்பு பணம் இந்தியாவில் மக்களுக்கு வங்கி கணக்கில் போடப்படும் என்று எங்கள் கணக்கை தான் உங்களால் செல்லாது பொல்லாது என்று சொல்ல முடியும் சுவிஸ் வங்கி, மற்றும் அயல் நாட்டு வங்கியில் உள்ள இந்திய பெரும் பணத்தை யார் செல்லாது என்று சொல்லவது திரு மோடி சார் உங்களால் முடிந்தால் அதை செய்யுங்கள் போபர்ஸ் என்ற உழாலே நடக்கவில்லை என்று தானே ஒரு கணக்கு மூடப்பட்டது 2 ஜீ 3 ஜீ, என்றும் ஸ்விஸ் வங்கி கணக்கும் என்றும் உள்ள பணம் யார் கணக்கில் வரும் இந்திய வங்கி கணக்கில் தானே உள்ளே தள்ளப்படும் திரு மோடி இதற்க்கு என்ன பதில்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
...
[Message clipped]
Thiru. Innampooran.
Its not legal issue at present, but pls focus ur mind on this issue is the political economy as well. I hope that u can.
Sanna
யாவரும் கேளீர்
6.37 pm: A youth was arrested by Odisha police when he was trying to deposit fake currency notes at a bank at Khurda town amid the rush of customers depositing money following the demonetisation of high value currency notes. Sumit Kumar Tudu, a resident of Kendrapara district, was trying to deposit Rs 2.5 lakh at the SBI branch at Khurda town, around 25 km from here. “We found fake currency notes of Rs 47,000 face value in the bundle,” SBI in-charge, Khurda, Deba Prasad Kanhar said,adding that the bank authorities have informed the police about the incident.
~ India is home for traitors also, not merely bribe-givers.
Hawala operators, bullion traders face I-T heat
The I-T searches followed "specific and definitive information" against at least a dozen hawala operators and jewellers.
The Income Tax Department on Thursday conducted searches in Mumbai and Delhi on hawala operators and bullion traders found accepting demonetised currency.
The I-T searches followed “specific and definitive information” against at least a dozen hawala operators and jewellers suspected to be dealing in demonetised currency in return for gold, sources said.
“The raids began on Wednesday night itself,” an I-T official told The Hindu, confirming that there were definite raids in Noida. “They were not random raids, but planned ones against those suspected of indulging in these illegal activities.”
“The monitoring in the cooperative banks is loose, and chances of manipulation and back-dated entries is high,” another official said. “But mainly, the searches were restricted to hawala operators in Mumbai region acting on definite information of large-scale malpractices.”
The gems and jewellers associations, however, denied any raids or pressure from the Income Tax department. The jewellers have been taking necessary steps to support the “bold move” initiated by Prime Minister Narendra Modi, they said.
Jewellers deny I-T raids, term Modi move ‘bold’
The gems and jewellers associations on Thursday denied any searches or pressure from the I-T department, over alleged underhand deals following the demonetisation move. The jewellers have been taking necessary steps to support the “bold move” initiated by Prime Minister Narendra Modi, they said.
“As of today, not a single member of our association has been raided for any violations,” said Kumar Jain, vice-president of the Mumbai Jewellers Association.
Ashok Minawala, director of the All India Gems and Jewellery Trade Federation said there were no major searches in the market, and the last raids conducted were in September during the final phases of the Income Disclosure Scheme (IDS). “Today there were no raids,” he said.
Allowed for utility bills
Meanwhile, the Centre announced on Thursday that electricity, water and telephone bills can continued to be paid with old Rs. 500 and Rs. 1,000 notes till November 11.
The old notes will be accepted for payment of fees, charges, taxes and penalties to the Central and State governments, including municipalities and local bodies, Economic Affairs Secretary Shaktikanta Das said.
Keywords: Rs. 500 note, Rs. 1000 note, Indian currency, exchange of old notes, I-T raids
Every relaxation of the surgically planned strikes on anti-social and anti-national elements , just please the ‘hollow arguments’ elements in our Argumentative Nation, is a retrograde step.
Innamburan
--
நல்ல கட்டுரை சன்னா அவர்களேஇது ஏன் தவறான முடிவு எனில்1) அம்பானி, அதானி மாதிரி கோடிசுவரகள் எல்லாம் பணமாககள்லபணத்தை வைத்திருக்க மாட்டார்கள். ஸ்விஸ் வங்கிகணக்கு, தங்கம்,ரியல் எஸ்டேட் ஆக தான் பணத்தை வைத்திருப்பார்கள். இதன் முழு பாதிப்பும்மஞ்சள் மண்டி, பாக்டரி மாதிரி சிறுதொழில்களை நடத்தி கேஷ் ஆக புழங்கும் சிறுவனிகர்களுக்கே அதிகம்
2) ஒரு அரசு தானே அச்சடித்த நோட்டை செல்லாது என்பது அறம்சார்ந்த அளவில்தவறு. மக்களுக்கு இதனால் ஏற்படும் இன்னல்களுக்கு அரசே பொறுப்பாக வேன்டும்
3) கள்ளபணத்தை ஒழிக்கவேண்டுமெனில் அதிகபடியான வரிவிகிதத்தை அரசு குறைத்துஎளிமையாக்கினால் கள்ளபணம் தானே ஒழிந்துவிடும்
--
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
“The latest gimmick of the finance ministry to demonetise the notes, printed before 2005, is an attempt to obfuscate the issue of black money stashed outside the country… This measure is strongly anti-poor,” Lekhi said at the time.
“The present government is not in a position to measure the correct quantum of black money because those who have the black money will actually convert into new currency notes. Now the sufferers are the aam aurats(women) and aadmis(men). Those who are illiterates, who have no access to the banking facilities. And they will be ones, who will affected by such diversionary measures. People who have no bank accounts, their life savings will be targeted.”
They will fall victim to middlemen who will scare them
that the notes are worthless and charge them hefty fees to convert them.
They will also be ripped off by shopkeepers.”
“This policy of finance minister is only meant for the blue blood and not for the sweating, red-blooded, toiling millions. It is not going to affect those who have numbered accounts in Swiss accounts, but will hit those who do not have any bank account even in India,” she had said.
============
you may wonder why i am repeating what opposition says;
well this opposition was bjp in jan 2014 when PC and RaghuRam rajan proposed withdrawing Rs 500 printed before 2005
see the video
http://www.siasat.com/news/must-watch-old-video-meenakshi-lekhi-black-money-goes-viral-1063555/
how the colours of these politicos change!
regards
rnkantan
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
மோடி நிகழ்த்திய பொருளாதார பேரழிவு - 2
ஜப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.
மோடி எதற்காக புதிய கரன்சிகளை அச்சிட்டு வெளியிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.. மக்களின் தேவைகளை பார்த்து அவற்றை தீர்ப்பதற்கு பதில் ,அவர்களின் தேவைகளை பேராசையாக மாற்றி தமது வெற்றியை பறித்துக் கொண்டதில் மோடிக்கு நிகர் மோடியே. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தைக் கொண்டு வந்து இந்தியர்கள் அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் பிரித்துக் கொடுக்கப்படும் என்று மோடி மக்களிடம் பேராசையைத் தூண்டினார். மோடியால் ஏன் அப்படி சிந்திக்க முடிந்தது என்று இப்போது தேச பக்தர்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை.
கருப்புப் பணத்தை மீட்பேன் என்று சொன்னவர் திடீரென கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று மாற்றிப் பேசுவதில் உள்ள மோடியின் கையாலாகாதத் தனத்தையும், பேராசையையும் தேசபக்தர்கள் கணக்கில் சேர்ப்பதே இல்லை. பொருளாதாரப் புரிதல் சிறிதும் இல்லாத ஒரு பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் வெட்கப்படவுமில்லை.
கருப்புப் பணம் என்பது சிவாஜி படத்தில் காட்டப்படுவதைப் போல எங்கேயாவது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்ற அப்பாவியான புரிதலில் இருந்த மோடி மக்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டினார். பணம் என்றால் என்ன என்பதைப் பற்றின அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் அவர் இந்த புரிதலுக்கு வந்தார் என்பது ஒரு புறமிருந்தாலும், சுவிஸ் வங்கியில் அப்படித்தான் அடுக்கிக் வைக்கப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்துக் கொண்டாரே அதுதான் நமது சாபக்கேடு.
சுவிஸ் வங்கி என்பது இந்தியப் பணங்களை கட்டுக்கட்டாக சேர்த்து வைக்கும் கிடங்கு அல்ல. அது வைக்கப்படும் பணத்தை வைத்து பரிமாற்றம் செய்துக் கொள்ளும் ஒரு நிறுவனம். வங்கியின் செயலே அதுதானே. கிடங்காக வைத்திருந்தால் வாடகை மட்டும்தான் கிடைக்கும். வங்கி என்பது வட்டித்தருவதும், வட்டி வாங்குவதும், முதலீடு செய்வதும் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்கிறது. இந்தியர்கள் சேர்த்து வைத்தப் பணத்தை அந்த வங்கி அப்படித்தான் பயன்படுத்திக் கொண்டது. எந்த வங்கியும் தனது வாடிக்கையாளரின் கணக்கு விவரங்களை வெளியில் சொல்லாதது போலவே சுவிஸ் வங்கியும் நடந்துக் கொண்டது. எனவே சுவிஸ் வங்கியில் இந்திய கரன்சிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது அளவு கடந்த கற்பனை, நப்பாசை. இதை நம்பித்தான் மோடி இந்தியர்களுக்கு 15லட்சம் தருவதாக வாக்களித்தார். ஆனால் மோடி வாக்களிக்கும் முன்னே சுவிஸ் வங்கியில் இருந்த இந்திய பணம் என்னவானது என்பதைப் பற்றின புள்ளி விவரங்கள் வந்திருக்கின்றன..
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சேர்த்து வைத்துள்ள கருப்புப்பணம் 2006ம் ஆண்டு கணக்குப்படி 1,456 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இருக்கிறது என்று அன்றைக்கு சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் 2012ல் அது 92.95 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அது குறைந்துப் போனது. அதாவது 6% அளவிற்கு அது குறைந்துவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அரசு சார் அழுத்தங்கள் இதற்கு முக்கிய காரணம். அதே நேரத்தில் இந்தியர்களின் கருப்புப் பணம் சுவிஸ் நாட்டில் மட்டும் இல்லாமல் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறி இருந்தது. ஆனால் ஊடகங்கள் சுவிஸ் நாட்டை மட்டும் பிரதானப்படுத்தி எழுதிய காரணத்தினாலும் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய பணத்தின் பெரும் பகுதி வேறு நாடுகளுக்குப் போய்விட்டது. எனவே சுவிஸ் வங்கியில் இருந்த கருப்புப் பணத்தை காங்கிரசால் மீட்க முடியவில்லை என்கிற பிம்பத்தைப் பயன்படுத்தி மோடி தான் மீட்கப்போவதாக தனது வீரதீரத்தைக் காட்டினார்.
ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு மிச்சமிருந்த கொஞ்சப்பணமும் சுவிஸ் வங்கியிலிருந்து திரும்பப்பெறப்பட்டு அது இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் முதலீடாக போய் சேர்ந்துவிட்டது. இந்த தாக்குதலை மோடி எதிர்பார்க்கவில்லை, அதனால் மக்களின் முன் முற்றிலும் தனது அறியாமையை வெளிக்காட்டி அம்பலப்பட்டுப் போனார். எனவே மாற்று வழிகளை அவர் தேடிக்கொண்டிருந்தார். வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க வழியில்லை. உள்நாட்டிலாவது ஏதாவது தேறும் என்று எதிர்பார்த்தார், ஆனால் மசிந்தவர்கள் கொஞ்சம் பேர்தான். ஏனென்றால் இந்திய மக்கள் தொகையில் 1 சதவிதம் பேர்தான் வருமான வரி செலுத்தும் பழக்கம் உள்ளவர்கள், இதில் 2 சதவீகிதம் பேர் அரசு ஊழியர்கள். மீதமுள்ள 99 சதவீகிதம் பேரை வருமான வரிகட்ட வைக்க மோடியிடம் எந்த திட்டமும் இல்லை. இவரிடம் மட்டுமல்ல முந்திய காங்கிரஸ் அரசிடமும்தான்.
மக்களை வருமான வரி கட்ட வைக்க என்ன செய்ய வேண்டும். அதற்கு எளிய வழி வருமான வரி கட்டும் அளவிற்கு அவர்களுடைய வருமானத்தை அரசு பெருக்க வேண்டும். இதை மோடியின் செய்ய முடியுமா..? அதற்கு பதில் மக்களிடம் கருப்புப்பணம் இருக்கிறது என்கிற பூச்சாண்டியை காட்டி அவர்களையே குற்றம் சாட்ட முடியும். அதைத்தான் மோடி செய்தார். அப்படியானால் இந்தியாவில் உள்ள கருப்பு பணம் கிடங்குகளில் பதுக்கி மட்டுமே வைக்கப்பட்டிருக்குமா..
கிடங்குகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணம், தீவிரவாதிகளால் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் பணம் என்பவை காரணமாக ரிசர்வ் வங்கியால் காரணம் சொல்லப்பட்டது. 500 ரூபாய் நோட்டுகள் 76 %மும், 1000 ரூபாய் நோட்டுகள் 109%மும் புழக்கத்தில் அதிகரித்திருக்கிறது என்கிறது ரிசர்வ் வங்கி. இது சுழற்சி முறையில் ரிசர்வ் வங்கி திரும்பப்பெறும் பழைய பணத்திற்கு ஈடாக புதிய பணத்தை அச்சிட்டு வெளியிடும் கணக்கீடுகளின் அடிப்படையில் அமைந்த புள்ளி விவரங்கள் அல்ல. சந்தையில் சுற்றோட்டத்தில் இருக்கும் பணத்தின் அளவை சுற்றோட்ட கணக்கீடு (Random) புள்ளிவிவரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது. எனவே இதை முழுவதும் நம்ப வேண்டுமா வேண்டாமா என்பது நமது விருப்பத்தின் பாற்பட்டது.
ஏனென்றால் கருப்பு பணம் இருக்கும் சதவிகிதம் துல்லியமாக அரசிற்கு தெரியவில்லை. இன்றைய நாளிதழ்களில் அந்த தெளிவின்மையை அரசே வெளிச்சமிட்டிருக்கிறது. கருப்பு பணத்தின் அளவு ஒரு சதவிகிதம் என்றால் 14850 கோடி, 2 சதவிகிதம் என்றால் 29700 கோடி, 3 சதவிகிதம் என்றால் 44500 கோடி, 5 சதவிகிதம் என்றால் 70000ம் கோடி, 10 சதவிகிதம் என்றால் 1லட்சத்து 40ஆயிரம் கோடி. இதில் எது இலக்கு என்று இன்னும் அரசு துல்லியப்படுத்தவில்லை.
சரி, இப்போது இந்த கருப்புப்பணத்தை அழிக்க வைத்துவிட்டு புதிய பணத்திற்கு மோடி என்ன செய்தார். சுற்றில் இருக்கும் 500, 1000 ரூபாய் மொத்த பணம் அரசின் கணக்கின்படி 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகள். இதற்கு மாற்றாக புதிய நோட்டுகளை அச்சடிக்க 12ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. அதாவது அச்சிட்ட பணத்தில் 0.8 சதவிகிதம்.
இந்த செலவை ஈடுகட்டுவது எதில் என்பது ஒருபுறமிருக்கட்டும். மோடி அழிக்க நினைக்கும் கருப்புப்பணம் 1லட்சத்து 40ம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு 12ஆயிரம் கோடிகளை முதல் தவனையாக செலவழித்துள்ளார் என்பதும் ஒரு புறம் இருக்கட்டும். சந்தையில் புழங்கும் 1000, 500 நோட்டுகளுக்கான மொத்ததொகையான 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகளுக்கு இணையாக இந்தியாவின் முன்னணி கார்ப்பேர்ட் நிறுவனங்கள் வாராக்கடனாக வைத்திருக்கும் 14லட்சம் கோடி ருபாய்கள் கருப்புப்பணம் இல்லையா. இந்த பணத்தை மீட்க துப்பில்லை என்று வங்கி ஊழியர்களின் சம்மேளனம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்களே அதெல்லாம் தேச பக்தர்களுக்கு தெரியவில்லையா…
ஆனால் கருப்புப்பணம் மீட்கப்படும் என்று பொய் சொன்ன மோடி தொடர்ந்து கருப்புப்பணம் அழிக்கப்படும் என்று துணிந்து பொய் சொல்ல முடிகிறதென்றால் தேசபக்தர்கள் என்பவர் முட்டாள்களாய் மட்டுமே இருக்க முடியும் என்பதை அவர் நம்புவதால்தான்.
எனவே மோடி கருப்பு பணத்தை அழிக்க முதலில் 12ஆயிரம் கோடிகளை மட்டும் செலவிட்டு இழப்பை உருவாக்கவில்லை. ஒட்டுமொத்த தேசத்தையையே நிலைகுலைய வைத்து பொருளாதாராத்தை ஆட்டம் காண வைத்துள்ளார். அது எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து பார்போம்.
- கௌதம சன்னா
11.11.2016
--
மோடி_நிகழ்த்திய_பொருளாதாரப்_பேரழிவு–3கீழ்மட்டச் சந்தை திவால்…ஜப்பானிலிருந்து நாடு திரும்பிவிட்டார் மோடி. அவர் செய்துவிட்டுப் போன பேரழிவில் மக்களின் கூக்குரல் தம் காதுகளுக்கு எட்டும் தூரத்தில் அவர் இல்லை. அதனால் மக்கள் ஜப்பானில் அவர் என்ன செய்தார் என்பதை கண்டுக் கொள்ளவே இல்லை. அதுதான் அவருக்குத் தேவை. ஏனெனில் உலகம் முழுதும் அணு ஆற்றலுக்கு எதிரான போர்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது மோடி போன்ற கார்ப்ரேட் அனுதாபிகள் அணு ஆற்றல் முகவர்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு மோடி மேற்கொண்டிருக்கும் அணு ஆற்றல் ஒப்பந்தங்கள் 50லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. நீண்டகால அடிப்படையில் நிகழும் இந்தப் பணிக்களுக்கான பணம் இந்தியர்களின் தலையில் சுமத்தப்படும். மேலும் அதன் மூலம் இந்திய அதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும் கமிஷன் தொகையினை முடிந்தால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். இதுதான் ஊழலை ஒழிப்பவரின் லட்சணம். இவற்றில் வரும் தொகைகள் எங்கே போய் முடங்கும் என்பது பொருளாதாரப் புலிகளுக்கு வெளிச்சம்.சரி, மோடி நாட்டிலிருந்து 500, 1000ம் ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு புரட்சித் தலைவராக தோற்றம் எடுத்துவிட்டார். அதனால் என்ன விளைந்தது. சின்ன சின்ன சிரமங்களை தேச நலனுக்காக பொருத்துக் கொள்ள வேண்டும் என்று தேசபக்தர்கள் அறிவுரைக் கூறிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் இரண்டு நாளில் மக்கள் கையில் பணம் இருக்கும் என்று மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சொன்னதை நம்பி தேச பக்தர்கள் அப்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது 3 வாரங்களுக்கு மேல் ஆகும் என்று பொருளாதாரச் சிறுவர் அருண் ஜெட்லி சொல்லிவிட்டார். மோடியும் அகங்காரத்தினால் செய்யவில்லை. நாட்டின் நலனுக்காக செய்தேன் என்று கலங்குகிறாராம். எதிர்கால பொருளாதாரப் பேரழிவுகளை கணக்கிடும் வல்லமை இல்லாத நபர்களை நமது நாட்டில் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பெற்றிருக்கிறோம் என்பது நமது சாபக்கேடு.இந்த கட்டுரையில் இரண்டு செய்திகளை மட்டும் விளங்கிக் கொள்ளலாம்.முதலாவது. பணப்பற்றாக்குறை எப்படி உருவாக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.• இந்தியாவில் காகிதப்பணம் 17லட்சம் கோடிக்கு அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ளது. இதில் 86 சதவிகிதம் நோட்டுகள் 500 மற்றும் 1000 மதிப்பில் உள்ளன. மீதமுள்ள 14 சதவிகிதம் நோட்டுகள் முறையே ரூபாய்கள் 1,2,5,10,20,50,100 ஆகிய மதிப்பில் உள்ளன என்று ரிசர்வ் வங்கி அறிக்கையிட்டுள்ளது. எனவே மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் 500, 1000ம் என்பது தெளிவு. பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவதால் இவை சாதாரண மதிப்புள்ள நோட்டுகள்தான். உயர் மதிப்பு நோட்டுகள் என்பது உருவாக்கப்பட்டுள்ள மாயை.• செல்லா நோட்டு அறிவிப்பை மோடி வெளியிட்டபோது நாட்டில் புழக்கத்தில் எஞ்சிய குறைந்த மதிப்புள்ள நோட்டுகளின் அளவு வெறும் 14%ம் மட்டுமே. கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் இந்தியாவில் 80 சதவிகித மக்கள் சில்லறை வணிகத்தோடு பிணைக்கப்பட்டவர்கள், இவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு வெறும் 14 சதவிகித நோட்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு பரிவர்த்தனையை நடத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னது உலகத்தில் இதுதான் முதன்முறை. அந்த முட்டாள்தனமான சாதனையை செய்தது உலகத்தில் மோடி மட்டுமே என்று சொன்னால் அது மிகையில்லை.• எனவே அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் 100க்கும் 50க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பெரிய அளவில் 100 வைத்திருந்தவர்கள் அவற்றைப் பதுக்கினார்கள். அது மறுநாள் கள்ள சந்தையில் கடும் விலைக்குப் போய் ஊக வாணிகத்தைப் போல பணத்தைக் கொடுத்தது. 1000க்கு 100 கமிஷன் வீதம் கள்ளச் சந்தையில் பணம் இறங்கியது. எந்த கருப்பு பணத்தை ஒழிக்க மோடி நினைத்ததாரோ அதுவே கருப்புப் பணத்தை உருவாக்கியது.• ஆனால் சாமான்யர்கள் நிலை வேறு. அவர்கள் அத்யாவசியத் தேவைக்காக 100 50 நோட்டுகளை நிறுத்திக் கொண்டார்கள். என்ன நிகழும் என்று அவர்களுக்கு தெரியாது. நிச்சயமற்றத் தன்மை.• இந்த நிச்சயமற்றத் தன்மையை சிறு வணிகர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டு வியாபாரத்தில் லாபத்தை அள்ள 500, 1000ம் ரூபாய் தாள்களை வாங்கிக் கொண்டு உணவுப் பொருள்களை விற்றுவிட்டு தங்களிடமிருந்த சில்லறையை மக்களுக்கு கொடுத்தார்கள். ஆனால் மறுநாள் அவர்களால் சரக்கை மறு கொள்முதல் செய்ய முடியாமல் போய்விட்டது.• எனவே 14 சதவிகிதப் பணம் இந்தியாவின் சிறு வணிகத்திற்கு பல ஆயிரம் கோடிகள் ரூபாய்வரையிலான இழப்பை அடுத்த நாளே உருவாக்கிவிட்டது. 2000ம் ரூபாய் கொஞ்சம் சந்தையில் வந்தாலும் அதனால் எந்த பயனும் விளையாமல், சில்லறைத் தட்டுப்பாட்டினால் நாட்டின் வர்த்தகம் முற்றிலும் முடங்கிப்போனது. அதனுடைய விளைவுகளை நாடு இனி எதிர்கொள்ளும்சந்தை எப்படி சீர்குலைந்து சாமான்ய மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உடனடியாக பாதிக்கப்படக்கூடிய அழுகும் பொருள்களான காய்கறிகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.காய்கறி வியாபாரச் சங்கிலி பின்வருமாறு இருக்கிறது.விவசாயி – தரகு கொள்முதல் வியாபாரி – மொத்த வியாபாரி – சில்லறை வியாபாரி – நுகர்வோர்.. இந்த தொடரில் காய்கறி ஒரு நுகர்வோரை சேர்கிறது.இந்த சங்கிலித் தொடரில் இணை வணிக சங்கிலித் தொடர் உள்ளது அது பின்வருமாறு இருக்கும்.விவசாயக் கூலித் தொழிலாளி – தரகுக் கொள்முதல் வியாபாரியிடம் உள்ள தொழிலாளி – சரக்கு கொண்டுபோகும் வண்டி உரிமையாளர் மற்றும் தொழிலாளி – மொத்த வியாபாரியிடம் பணியாற்றும் சுமைத் தூக்கும் தொழிலாளி – கடையில் வேலை செய்யும் சிப்பந்தி – சில்லறை வியாபாரிக்கு சுமையேற்றிச் செல்லும் சிறு வண்டி தொழிலாளி – சில்லறைக் கடைத் தொழிலாளி என இவர்களுக்கு வழங்கப்படும் கூலி மற்றும் வண்டி வாடகை, கடை வாடகை உள்ளிட்டத் தொகைகள்.இதைத்தவிர மறைமுக வணிகச் சங்கிலித் தொடர் இதனுள் உள்ளது. அது பின்வருமாறு இருக்கும்.விவசாய இடுபொருள் வணிகம் – வண்டிகளின் வாடகை, பாராமரிப்பு மற்றும் எரிபொருள் வணிகம் – இவர்களுக்கு சிறு கடன் வழங்கும் வட்டி வியாபாரிகள் மற்றும் அவர்களது தொழிலாளர்கள் – வங்கி நடவடிக்கைகள் – என நீண்ட தொடர் வரிசை உள்ளது.இந்த மறைமுக தொடரின் பின்னே பல சங்கிலித் தொடர்கள் உள்ளன. அது வாசகர்களுக்கு் சலிப்பை தரும் என்பதால் தவிர்க்கிறேன். இதைப் படிக்கும் வாசகர் அந்த சங்கிலித் தொடரில் ஒருவராக இருக்கலாம்.எனவே, நீங்கள் ஒரு கிலோ உருளைக் கிழங்கு வாங்கினால் அது இந்தத் தொடரின் மூலம்தான் உங்களை வந்தடைகிறது. இதில் பிரதான இரண்டு முனைகள் விவசாயியும் நுகர்வோரும்தான். நுகர்வோர் தான் வாங்குவதை நிறுத்தினால் இந்த சங்கிலித்தொடர் முற்றிலும் ஸ்தம்பித்து குலைந்துவிடும், அதன் விளைவாய் இந்தத் தொடரில் பிணைக்கப்பட்டுள்ள அத்தனை பேரும் தமது வருமான ஆதாரத்தை இழந்து விடுவார்கள். ஏனென்றால் இந்த தொடர்கள் அத்தனையும் நேரடியாக பணத்தைக் கையாளும் முறையான பணத்தை வாங்கி பொருளை கொடுக்கும் எளிய சந்தை விதியில் செயல்படுவது. காரணம் வங்கியில் போய் தமது நடவடிக்கைகளை கையாளும் வகையில் எந்த ஏற்பாடும், சமூக அமைப்பும் இதற்கு இல்லை. அதனால் ஒருவாரம் நுகர்வோர் தமது வாங்கும் நடவடிக்கையை நிறுத்தினால் இந்த அமைப்பு முற்றாக சிதைந்து முழுமையும் நட்டத்தில் முடங்கிவிடும். அதுதான் தற்போது நடந்துக் கொண்டுள்ளது.ஓர் உதாரணத்திற்கு இந்த துறையை எடுத்தாண்டேன். இந்த அணுகல் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். அதனால்தான் மோடி மேற்கொண்டது பேரழிவு என்கிறேன். மோடிக்கோ அவரது ஆதரவாளர்களுக்கு இந்த பின்னடைவு புரியும் என்று நம்புவதற்கு இல்லை. பொருளாதார அறிவு துளியும் அற்ற ஒரு பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம் என்கிற வெட்கம் நம்மைத் தின்கிறது. இந்த சிறு வர்த்தகச் சங்கிலி தொடர் நாட்டை எப்படி நிலைகுலைய வைக்கும் என்பதை அடுத்து பார்ப்போம்..#கௌதம_சன்னா13.11.2016
சில்லறை வணிகம் எப்படி அடித்தட்டு மக்களை பாதித்து சீரழிக்கும்
சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்பார்களே அதை தான் மோதி இந்தியாவிற்கு செய்திருக்கிறார். இந்தியாவில் ஒரு பெரும் புரட்சி நிகழ இருக்கிறது. அது இந்த பணத் தடையால் தான் நேர போகிறது என்பதை உணர முடிகிறது. இதனால் இந்தியக் கட்டமைப்பே குலைய போகிறது. புதிய கட்டமைப்புகள் உருவாகப் போகின்றன. இதை nation of nations என்கிறார் P R. sarkar.ஆரோதன்
2016-11-14 14:30 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
| |||
The International Monetary Fund said Monday that India's economy has fallen back behind its northern neighbor China. India is estimated to have grown at 6.6% in 2016 compared with China's 6.7%, according to the IMF's World Economic Outlook.
The IMF has lowered its forecasts for India in the current fiscal year by 1 percentage point, mostly because of "temporary negative consumption shock" from the country's decision to ban its two largest rupee notes about two months ago.
Related: 50 days of pain after India trashed its cash
That decision, announced by Prime Minister Narendra Modi on Nov. 8, was touted as a way to combat corruption and tax evasion. But it also removed 86% of the cash in a largely cash-dependent economy, bringing many parts of it to a grinding halt.
According to government figures, India grew at 7.3% in the quarter that ended in September, before the cash ban. It has now lowered its growth forecasts for the ongoing fiscal year.
Related: India's boom continues but for how much longer?
Analysts predict the slowdown will be even greater, an assessment the IMF evidently agrees with. But it also anticipates an eventual Indian recovery, forecasting that the economy will return to 7.2% growth in 2017 and 7.7% in 2018.
India no longer the world's fastest-growing economy: IMF
India's run as the world's fastest-growing major economy has ended thanks to its self-imposed cash crisis
The International Monetary Fund said Monday that India's economy has fallen back behind its northern neighbor China. India is estimated to have grown at 6.6% in 2016 compared with China's 6.7%, according to the IMF's World Economic Outlook.The IMF has lowered its forecasts for India in the current fiscal year by 1 percentage point, mostly because of "temporary negative consumption shock" from the country's decision to ban its two largest rupee notes about two months ago.
Related: 50 days of pain after India trashed its cash
That decision, announced by Prime Minister Narendra Modi on Nov. 8, was touted as a way to combat corruption and tax evasion. But it also removed 86% of the cash in a largely cash-dependent economy, bringing many parts of it to a grinding halt.
According to government figures, India grew at 7.3% in the quarter that ended in September, before the cash ban. It has now lowered its growth forecasts for the ongoing fiscal year.
Related: India's boom continues but for how much longer?
Analysts predict the slowdown will be even greater, an assessment the IMF evidently agrees with. But it also anticipates an eventual Indian recovery, forecasting that the economy will return to 7.2% growth in 2017 and 7.7% in 2018.
#திவாலாகும்_நிலையில்_எஸ்பிஐ…?#250000_கோடி_ரூபாய்_திரட்டும்_மோசடி.. #பொருளாதார_கெட்ட_சேதி_.4
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ள குறைந்தப்பட்ச இருப்புத்தொகை ரூ.5000ம் கட்டாயம் என்றும் தவறினால் அபராதம் என்றும் அறிவித்துள்ளது. இது திட்டமிடப்பட்ட சட்டவிரோதமான ஒரு பொருளாதார மோசடி என்பதை தெரிந்துக் கொள்ளவே இந்தக் குறிப்பு.
இந்திய அரசமைப்பின்படி உருவாக்கப்பட்டுள்ள இந்தியப் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கான சேவையை அதிக லாப நோக்கின்றி வழங்க வேண்டும். அதே நேரத்தில் இந்தியப் பொருளாதாரத்தை நிலைப்படுத்த அவை சேவையாற்ற வேண்டும் என்பது அடிப்படையானக் கொள்கை. ஆனால் இந்த சேவைக் கொள்கையை எஸ்பிஐ காற்றில் பறக்கவிட்டுள்ளது.
மோடியின் பண நீக்க நடவடிக்கையினால் வங்கிகளின் நிதிக் கட்டமைப்பு வலுவாவதற்குப் பதில் அபரிதமான பணமாகக் குவிந்து செல்லாப் பணமாக வங்கியைவிட்டு வெளியேறிவிட்டது. ஏனென்றால் அதற்கான மாற்றுப் புதிய பணம் ரிசர்வ் வங்கியிடமிருந்த கிடைப்பதில் உருவானத் தாமதம். இதனால் கடந்த நான்கு மாதங்களாக வங்கியில் இருந்த பெருந்தொகையானது மூலதனமாக மாறாமல் அது சுற்றுக்கு வரமுடியவில்லை. மேலும், வங்கி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருந்தால் மட்டும்தான் அது மூலதனமாக மாறியிருக்கும், வங்கிகள் பணம் வழங்கும் நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்டதால் இந்த நிலைமை. இதன் விளைவாய் மக்களின் அவநம்பிக்கைக்கு வங்கிகள் ஆளாகி அவர்களின் பணம் எடுக்கும் வேகம் கற்பனைக்கு எட்டாத வகையில் அதிகரித்துள்ளது. இதனால் வங்கிகளின் நிதிக் கட்டமைப்பு ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. எனவேதான் மக்கள் பணம் எடுப்பதற்கு தொடர்ந்து கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துக் கொண்டுள்ளது.
பண நீக்க நடவடிக்கைகள் குறித்து நான் எழுதிய முந்தையக் கட்டுரைகளில் பண நீக்க நடவடிக்கையினால் விரைவில் வங்கிகள் திவாலாகும் என்று எச்சரித்திருந்தேன். அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டது என்பதுதான் எஸ்பிஐயின் அறிவிப்புக் காட்டுகிறது. ஏனெனில் அதனிடம் இப்போது மூலதனம் இல்லை, அதை திரட்டாவிட்டால் அது திவாலாகிவிடும்.
• உலகின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தற்போது பல வங்கிகளை ஒருக்கிணைத்து மேலும் தனிபெரும் வங்கியாக மாறுகிறது.
• இப்படி வங்கிகளை ஒருங்கிணைப்பதின் மூலம் அந்த வங்கிகளின் வாராக்கடனையும் ஒருங்கிணைத்துக் கொள்கிறது. ஏற்கெனவே கார்ப்ரேட் முதலாளிகள் வங்கிய கடன்களை திரும்பப் பெற முடியாமல் திணறும் எஸ்பிஐ ஒருங்கிணைக்கப்பட்ட வாராக்கடனையும் சுமக்க வேண்டும். இருந்தும் கடனை கார்ப்ரேட் முதலாளிகளிடம் கடனை வசூலிக்க எந்த உறுதியான நடவடிக்கையும் அதனிடம் இல்லை. எனவே மூலதனத் திரட்டல்தான் ஒரே வழி.
• அந்த மூலதனத் திரட்டலுக்கு எஸ்பிஐ பங்குச் சந்தியில் பட்டியலிட்டு தனது மூலதனத்தைத் திரட்ட வேண்டும், ஆனால் அதற்கு தற்போது வழியில்லை. ஏனென்றால் பண நீக்க நடவடிக்கையினால் பங்குச் சந்தை ஏறக்குறைய நசிந்துவிட்டது. எஸ்பிஐக்கு தேவைப்படும் அளவிற்கு பங்குச் சந்தையில் மூலதனத்தை திரட்ட அதனால் உதவ முடியாது.
• பண நீக்கத்தினால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டதுடன், கடந்து நான்கு மாதங்களாக நீடித்து வரும் பணப் பற்றாக் குறையினால் மக்களின் பணத் தேவை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பொது மக்களை வங்கியின் பங்குகளை வாங்கும்படி யாராலும் ஊக்குவிக்க முடியாது. வங்கி அவர்களைக் கேட்டால் அவர்கள் எதைக் கொண்டு அடிப்பார்கள் என்று சொல்ல முடியாது.
• எனவே திருட்டுத் தனமாக மக்களைக் கட்டாயப்படுத்தி தனக்கான மூலதனத்தை திரட்ட முனைந்துள்ளது எஸ்பிஐ வங்கி. எப்படி..?
1. எஸ்பிஐ வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைப்பட்டதால் அதனிடம் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 50 கோடியாக உயரும்..
2. இந்த 50 கோடிப் பேர் தமது கணக்கில் ரூ.5000ம் கட்டாய இருப்பு வைப்பதின் மூலம் வங்கிக்குக் கிடைக்கும் உடனடித் தொகை 2,50,000ம் கோடி ரூபாய். (இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ருபாய்)
3. இந்த 2,50,000கோடி ரூபாய் ஆண்டு முழுவதும் வங்கியில் தங்கும் போது அதன் சுற்று மதிப்பு 2,50,000கோடி ரூபாய் X 365 நாள்கள் என்று கணக்கிடும்போது அதன் சுற்று மதிப்பை நீங்கள் முடிந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
4. இந்த 2,50,000கோடி ரூபாய் பணத்தை பங்கு சந்தையின் மூலம் திரட்டினால் செபி விதிகளின்படி பங்குதாரர்களுக்கு வங்கி டிவிடென்ட் தொகையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறைத் தரவேண்டும். அதை வங்கி தற்போது தவிர்த்து விட்டது.
5. இந்த 2,50,000கோடி ரூபாய் வங்கி கடனாகப் பெற்றிருந்தால் அது ஆண்டுக்கு 14 சதவிகிதம் வரை வட்டிக் கட்ட வேண்டும். அது பெருந்தொகையாக இருப்பதுடன், இவ்வளவுப் பெரிய தொகையை கடனாகத் தருவதற்கு யார் இருக்கிறார்கள். இளிச்சவாய மக்களைத் தவிர.
6. அதே நேரத்தில் வங்கியில் குறைவாக இருப்பு வைப்பவர்களிடம் வாங்கும் தண்டனைத் தொகை வங்கிக்கு வட்டியில்லா இலவச மூலதனமாக கிடைக்கும். ஆனால் இருப்பு வைப்பவருக்கு குறைந்தப்பட்ச வட்டி மட்டுமே கிடைக்கும்
7. இப்படியான திருட்டுத் தனமாக மூலதனத் திரட்டல் தொகை வேண்டுமானால் ரூ.5000 லிருந்து குறையலாம் ஆனால் நிச்சயம் தவிர்க்க முடியாது.
காரணம் என்னவெனில், மோடியின் பண நீக்க நடவடிக்கையினால் வங்கிகளின் நிதிக் கட்டுமானம் தள்ளாடத் தொடங்கிவிட்டது. ஒருவேளை இந்த கட்டாய இருப்புத் தொகை உறுதி செய்யப்பட்டு அதனால் திரளும் தொகை சுற்றில் விடப்படும்போது அது எந்த கார்ப்ரேட் கைகளுக்கு கடனாகப் போய் சேரப் போகிறதோ யார் கண்டார்…
ஆயினும் பொருளாதார நிதியின் கெடு நாள்கள் தொடர்கிறது, அது இனி தீவிரமடையும் என்பதே தற்போதைய நிதர்சனமாக உண்மை
கௌதம சன்னா
#SBI_குறைந்தபட்ச_இருப்புத்தொகையில்_மாற்றம்..
#பொருளாதார_கெட்ட_சேதி_5.
2012ஆம் ஆண்டு குறைந்தப்பட்ச இருப்புத் தொகை கொள்கையை கைவிட்ட SBI தற்போது மீண்டும் பல மாற்றங்களோடு தனது குறைந்தபட்ச இருப்புத் தொகை கொள்கையை அறிவித்துள்ளது. நேற்று வெளிவந்த வங்கியின் குறிப்புப்படி மாநகரத்திற்கு ரூ.5000, நகரங்களுக்கு ரூ.3000ம், புறநகரங்களுக்கு ரூ.2000ம், கிராமங்களுக்கு ரூ.1000ம் என இருக்க வேண்டும். ஜன்தன் வங்கிக்கணக்குகளுக்கு இது பொருந்தாது.
எனவே தன்னிடம் இருக்கும் 50 கோடி வாடிக்கையாளர்களில் 11கோடி ஜன்தன் வாடிக்கையாளர்களை கழித்தால் சுமார் 39கோடி பேருக்கு இந்த விதி பொருந்தும் என்றும், அது ஏப்ரல் 1 2017 அன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் தப்பிக்க வழியில்லை.
எனினும் ஐந்து ஆண்டுகள் கழித்து தனது கொள்கையை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏன் SBI க்கு வந்தது என்பதைப் பற்றி அது அறிவிக்கவில்லை. வங்கியின் சாதாரண நடைமுறை என்கிறது SBI. பண நீக்க நடவடிக்கையினால் குப்புற கவிழ்ந்துள்ள SBI உண்மையை ஒத்துக் கொள்ளாது என்பது ஒருபுறமிருக்க..
SBI தனது மூலதனத் திரட்டலின் இலக்கை குறைத்திருக்கிறது. அதாவது சராசரியாக ரூ.5000ம் என இல்லாமல் படி நிலை வேறுபாட்டோடு இருப்பதால் 1லட்சம் கோடியிலிருந்து 1.5 லட்சம் கோடிவரை அது மூலதனத்தை திரட்டிவிடும்.
மற்றத் தனியார் வங்கிகள் இதையேத்தான் கடைபிடிக்கின்றன என்று விவாதிக்கலாம். ஆனால் அவையும் ஏன் அப்படி திருட்டுத்தனமாக மூலதனத்தை திரட்டிக்கொள்கின்றன என்பதைப் பற்றித்தான் கேள்வி எழுப்ப வேண்டும்.
என்னுடைய ஆதங்கம் மக்களின் வங்கிகளான அரசு வங்கிகள் பண நீக்க நடவடிக்கையினால் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன என்பதுதான். ஏப்ரல் 1 SBI க்கு நல்லகாலம் பிறக்கலாம் ஆனால் வாடிக்கையாளர்களுக்கு...?
சன்னா
பணமதிப்பழிப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதார
வளர்ச்சியை பாதித்துள்ளது; இனி வரும் காலங்களிலும் அதன் பாதிப்பு தொடரும்;
இது வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கி
தெரிவித்துள்ளது. செல்லாக் காசு அறிவிப்புக்குப் பின் நடப்புக் கணக்கு
மற்றும் சேமிப்புக் கணக்கில் (CASA) செலுத்தப்படும் பணத்தின் அளவு 4.10
சதவீதத்தில் இருந்து 39.30 சதவீதமாக அதிகரித்ததாகவும், இது மொத்த வைப்புத்
தொகை சமன்பாட்டை குறைத்ததால் நீண்ட கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை
குறைத்துள்ளதாகவும் அவ்வங்கி தெரிவித்துள்ளது.பேரழிவு..1
பங்கு சந்தை வீழ்ச்சி..யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதலைப் போல மோடியால் நிகழ்த்தப்பட்ட இந்த ரூபாய் மாற்றம் எனும் பொருளாதாரத் தாக்குதலின் சிதைவுகளை, விளைவுகளை பார்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சீர்திருத்தம் என்ற இந்த மாயையின் பின்னால் திரளும் தேச பக்தர்களின் அறிவுக்கு எட்டாத பகுதிகளுக்கு போவது நமது கடமை..
அன்டிலியா.. மும்பையின் நடுவில் வானைத் துருத்திக் கொண்டு நிற்கும் 11000ம் கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின்ற அதிக விலையுள்ள 26 அடுக்கு மாடி வீடு. அதில் நான்கு பேர் மட்டும் வசிக்கிறார்கள். அவர்களுக்கு 600 பேர் வீட்டு வேலை செய்கிறார்கள். 400 கார்கள் நிற்கின்றன. ஹெலிகாப்டர் நிற்கிறது. அந்த வீட்டின் குடும்பத் தலைவர் தான் முகேஷ் அம்பானி. அவரை பார்க்க அவரது கம்பெனி அதிகாரிகள் வந்து போகிறார்கள். அந்த அதிகாரிகளில் ஒருவராக வந்துப் போய்க்கொண்டிருந்தவர்தான் இன்றைய இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல். இவரது தலைமையிலான ரிசர்வ் வங்கி இன்று கரண்சி மாற்றத்தை அறிவித்துள்ளது. அதுவும் மோடியின் வாயால்.
இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த போது அது பொருளாதார இனிப்பு செய்தியாக இல்லை. ஏனெனில் விளைச்சல் குறைந்து உணவுப் பணவீக்கம் அதிகரிக்குமானால் அது சாமான்யர்களின் தலையில் பொருள்களின் விலையேற்றமாக வந்து இறங்கும். அப்படித்தான் அது இறங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நேரத்தில் அமெரிக்க அதிபரின் தேர்தல். டிரம்ப் வென்றால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அளிக்கப்படும் IT அவுட் சோர்சிங் வியாபாரம் நிறுத்துவதாக வாக்குறுதி அளித்து அங்குள்ள இளைஞர்களின் வாக்குகளை அவர் அள்ளி தமது வெற்றியின் உறுதிப்படுத்தியபோது இந்திய பங்கு சந்தை ஆட்டம் காணத் தொடங்கியது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டார்கள் வெளியேறத் தொடங்கி பங்கு சந்தை சரியத் தொடங்கியது. இதனால் இந்திய நிறுவனங்களின் பங்குகளும், முதல் திரட்டும் பணிகளும் ஆட்டம் கண்டு அது சந்தைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியடைய வைத்தது.
இந்த இரண்டு கொடுமைகள் நிகழ்ந்த நேரத்தில் காலப் பொருத்தம் இன்றி, 2016 டிசம்பர் 7ம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய மோடி 500, 1000ம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அடுத்த நாள் இது பங்கு சந்தையில் எதிரொலித்து கால் மணி நேரத்தில் சந்தை திவாலாக்கிவிட்டது. 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு சந்தை தேங்கிவிட்டது. தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்ட பங்கு சந்தை நாள் முடிவில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோடி இழப்பில் முடிந்தது.
இதற்கு முன்பு 2008ம் ஆண்டு 3 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்ட போது அதன் தாக்கத்தை உணர்ந்த அப்போதைய நிதியமைச்சர் ப சிதம்பரம் வெளிநாட்டு பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பினார். வந்தவுடன் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனை உடனே வழங்கும்படி உத்தரவிட்டு, சந்தையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
அதேப் போல மோடி பதவி ஏற்ற பிறகு24.07.2015 அன்று பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தது. அப்போது ஏற்பட்ட இழப்பு 7 லட்சம் கோடி. அந்த வீழ்ச்சி இந்திய பொருளாதார தேக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என்று பொருளாதார அறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் நிதியமைச்சர் ஜெட்லி இந்த வீழ்ச்சி தற்காலிகமானது என்றும், சீன கரண்சி மற்றும் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டிவீத மாற்றம் என்று சாக்கு சொல்லி தப்பித்தார். ஆனால் நாட்டை விட்டு வெளியேறிய 7 லட்சம் கோடிக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில் இந்த பாதிப்பிலிருந்து இந்திய சந்தையை நிலைப்படுத்த உதவியது புதிதாக பொறுப்பேற்றிருந்த ரகுராம் ராஜனின் நடவடிக்கைகள்.
2008, 2015க்குப் பிறகு தற்போது இந்திய பங்கு சந்தை வீழ்ச்சியடைந்து 6 லட்சத்து 36 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. இந்த வீழ்ச்சி தற்காலிகமானது தான்
என்று எடுத்துக் கொள்ள முடியுமா.. இந்த கரண்சி புரட்சியில் கள்ள நோட்டுகளும் கருப்பு பணமும் ஒழிக்கப்படும் என்று காட்டப்படும் பகட்டிற்கு முன்னால் இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்..முதலில் பார்க்க வேண்டியது. பங்கு சந்தையில் வெளியேறிய முதலீடுகளின் பெரும் பகுதி அந்நிய முதலீடு. இந்த முதலீடுகள்தான் இந்திய உற்பத்தித் துறைக்கு உதவக்கூடியதாக இருக்கிறது. இந்த முதலீடுகளை ஈர்க்கத்தான் மோடி நாடு நாடாக சுற்றி வருகிறார். அப்படி அவர் சுற்றி சுற்றி தொழில் துறை முதலீடாக ஒரு லட்சம் கோடியைக்கூடி புரட்ட முடியவில்லை. ஆனால் இவர் பதவி ஏற்றப் பிறகு 15 லட்சம் கோடிக்கு மேல் அந்நிய பங்கு முதலீடு வெளியேறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதிதான் இவரின் கரண்சி புரட்சியின் மூலம் வெளியேறியுள்ளது. இது நேரடியான இழப்பு என்றால் மறைமுக இழப்பு எவ்வாறு இருக்கும்.
பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ள சிறு முதலீட்டாளர்கள் அதிகம் கொண்டது இந்திய பங்கு சந்தை. அவர்கள் பங்குகளை விற்பது, வாங்குவது அல்லது டிவிடென்ட் பெறுவது என சிறு லாபத்தைப் பார்த்து அதன் மூலம் பொதுச் சந்தையை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பங்கு சந்தையில் அவர்களுக்கு ஏற்படும் இழப்பைப் பற்றி அரசு எப்போதும் கவலைப்படுவது இல்லை. ஆனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அவர்கள் தமது பொதுச் சந்தை நடவடிக்கைகளில் சுணக்கமோ அல்லது லாபக்கூட்டல் நடிவடிக்கைகளிலோ அல்லது தொழிலைவிட்டு திவாலாகி வெளியேறும் நடவடிக்கைகளிலோ இறங்கும்போது அது சாமான்யரின் தலையில் சுமையாக இறங்குகிறது. இந்த சிறு முதலீட்டார்களின் இழப்பு என்பது எப்போதும் அந்நிய முதலீட்டார்களின் திரும்பப் பெற்றுக் கொண்ட முதலீட்டிற்கு இரு மடங்கு இருக்கும் எனபது சந்தை கணிப்பு. அப்படி இருக்குமானால் இழப்பு 13 லட்சம் கோடியைத் தாண்டும்.
இந்த இருவகை இழப்புகள் மூலதனத் திரட்டல் நடவடிக்கைகளில் பெரும் தேக்கத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. பின்வரும் பிரிவுகளில் தாக்கத்தை உருவாக்கும்..
-அந்நியா செலாவணி கையிறுப்பில் மாற்றங்கள்.
-வங்கிகளின் அந்நிய செலாவணியில் வீழ்ச்சி.
-முதலீடுகளை ஈர்ப்பதில் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படும் வீழ்ச்சி.
-பட்டியலிடப்பட்ட சிறுநிறுவனங்கள் தொடர்ந்து முடங்கும் அபாயம்.
-சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு.
-இதன் விளைவாய் இறக்குமதி செலவு அதிகரிப்பு.
-ஏற்றுமதிக்கான அச்சம்.இவை தவிர இன்னும் பல காரணிகள் இருந்தாலும், இந்த இரண்டு நாளில் உருவாகியுள்ள பேரிழப்பின் தாக்கத்தை சீர் செய்வற்கு அடுத்தப் பத்தாண்டுகளை அரசு செலவிட வேண்டியிருக்கும். ஆனால் அதற்கான தண்டனைகளை இந்தியக் குடிமக்கள்தான் அனுபவிக்க வேண்டும்.
பங்கு சந்தை என்பது சூதாட்டம் என்பது உண்மைதான். அந்த உண்மையின் பெரும்பகுதி சாதாரண மக்களின் மீது சுமத்தப்பட்டு ஆடப்படும் ஆட்டம். இந்த ஆட்டத்தில் வேடிக்கைப் பார்ப்பவர்கள் பலிகாடாவாக ஆக்கப்படுவார்கள். அதனால்தான் மோடி துணிந்து செய்தார்.
முறையான திட்டமிடல், எச்சரிக்கை இன்றி மோடி செய்த சீரழிவு மற்ற துறைகளை எப்படி பாதிக்கும் என்பதை அடுத்துப் பார்ப்போம்..
- கௌதம சன்னா
10.1102016

--
ஒரு பொருளாதாரச் சிக்கலை நோக்கி இந்தியா இப்போது வெகு வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதற்கு ஜி.எஸ்.டியின் பல பல தவறான விதிமுறைகள் காரணம் என்பதைப் பலரும் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.
சமீபத்தில் அதில் ஒரு காரணியை பற்றி மிக விரிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதை உங்களுக்கும் சொல்லலைன்னா எனக்கு தலையே வெடிச்சிரும் என்பதால்….
கடந்த ஜூலை மாத ஜி.எஸ்.டி ரிடர்ன் படி கிட்டத்தட்ட 94000 கோடி ரூபாய் வரியாக வசூலித்திருப்பதாக மார்தட்டிக்கொண்ட நிதி அமைச்சகத்துக்கு அடுத்த சில நாட்களிலேயே அதில் கிட்டத்தட்ட 65000 கோடி ரூபாய் ரீஃபண்ட் ஆக திரும்பக் கொடுக்க வேண்டிய தொகை எனவும் அதை எப்போ தருவீர்கள் என வணிகர்கள் எதிர்நோக்கிக் காத்திருந்ததும் அதிர்ச்சி அளித்திருக்கிறது.
அதனால் அந்த 65000 கோடி ரூபாய்க்கான கணக்குகளை விரிவாகத் தணிக்கை செய்யச் சொல்லி துறை ரீதியான உத்தரவுகள் பறந்து அதன் அடிப்படையில் எல்லா வணிகர்களிடமும் ஆவண பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், வரி வருவாயை அதிகரிக்கும் எனச் சொல்லப்பட்ட ஜி.எஸ்.டி மூலம், அரசுக்கான வரி வருவாய் வெறும் 29000 கோடி தான் வந்திருக்கிறது என்பது (94000 – 65000). இது முந்தைய வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு தான். இதிலேயே ஜி.எஸ்.டியின் நோக்கம் அடிபட்டு போய்விட்டது.
அடுத்த அடி, நிதி அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இருக்கிறது. அதாவது ஜி.எஸ்.டியில் முறையாகப் பதிவு செய்த 68 லட்சம் வணிகர்களில் ஆகஸ்டு மாதம் ரிடர்ன் தாக்கல் செய்திருப்பவர்கள் வெறும் 33 லட்சம் பேர் தான் எனச் சொல்லி இருப்பது கவனிக்கத்தக்கது.
இதன்படி பார்த்தால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஜி.எஸ்.டிக்கு முன்பாக எக்ஸைஸ், செர்வீஸ் டாக்ஸ், வாட் ஆகிய அனைத்தும் உட்பட 1.20 கோடி வணிகர்கள் இருந்த நிலையில் இப்போது வெறும் 68 லட்சம் வணிகர்கள் தான் இருக்கிறார்கள் என அரசே சொல்கிறது. அந்த 68 லட்சத்திலும் 33 லட்சம் பேர் தான் வரி செலுத்தி இருப்பதாகவும் அரசு சொல்கிறது.
வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்றும், வரி ஏய்ப்புக்களை முற்றிலுமாக ஒழிக்கும் என்றும் அரசு சொல்லி வந்த நிலையில் நிதி அமைச்சகத்தின் அறிவிப்புக்கள் அதற்கு எதிரான காட்சிகளைத் தான் நமக்கு ஆதாரமாகத் தருகிறது.
ஆக, ஜி.எஸ்.டி அதன் நோக்கத்தை சரியாகச் சென்றடையவில்லை என்பது தெளிவு.
சரி, அதென்ன அது 65000 கோடி ரீஃபண்ட்? ஏன் அரசு அதைத் தரணும்? இதுக்கு முன்னாடி எப்படி இருந்தது? இப்படி எல்லாம் உங்களுக்குள் கேள்வி வருதுல்ல? வாங்க அதை கொஞ்சம் ஜாலியா விவாதிக்கலாம்.
எக்ஸ்போர்ட் செய்வது என்பது வெறும் கம்பெனிகள் மட்டுமே செய்வது அல்ல. தனி நபர்களும் சிறு வணிகர்களும் தான் அதிகமாக எக்ஸ்போர்ட் செய்கிறார்கள். கணக்குப்படி மொத்த எக்ஸ்போர்ட்டில் 43% தான் கம்பெனிகள் செய்கின்றன. பாக்கி எல்லாம் தனி நபர்கள் அல்லது சிறு வணிகர்கள்.
அவர்கள் அப்படி என்னதான் எக்ஸ்போர்ட் செய்கிறார்கள்? கம்பெனிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை எக்ஸ்போர்ட் செய்வார்கள். ஆனால் தனிநபர்கள் மற்றவர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி அதை எக்ஸ்போர்ட் செய்வார்கள். உதாரணமாக காய்கறிகள், பழங்கள், தேங்காய், பூக்கள், துணிகள், ஸ்நாக்ஸ் போன்ற ஐட்டம்கள். வெளிநாடுகளில் இவற்றுக்கு நிறைய கிராக்கி இருப்பதால் தினம் தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி ஆகின்றன. ஐரோப்பாவில் பூக்களுக்கும், அரபு நாடுகளின் நம் உணவுப் பொருட்களுக்கும் நிறைய கிராக்கி.
இப்படி எக்ஸ்போர்ட் செய்யும் தனி நபர்கள் / சிறு வணிகர்கள் மெர்செண்ட் எக்ஸ்போர்ட்டர் (Merchant Exporter) என்கிற கேட்டகரியில் வருவார்கள். அதாவது அவர்கள் வெறும் வாங்கி விற்கும் வணிகர்கள் அவ்வளவே. இதற்கு முதலீடு குறைவு ஆனால் பெரிய லாபம்.
உதாரணமாக நான் இந்தத் தொழில் செய்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். நான் இங்கே பக்கத்தில் உள்ள திருவள்ளூரிலோ ஊத்துக்கோட்டையிலோ எனக்குத் தெரிந்த தோட்டங்களில் இருந்து விவசாயிகளிடம் இருந்து சுமார் 1,00,000 ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளை 25 நாள் கடனுக்கு வாங்கி அதை ஏற்றுமதி செய்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பொருட்களை அங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு கொண்டு வரும் வண்டி வாடகை, டாகுமெண்ட் செலவு, ஏர்போர்டில் கஸ்டம்ஸ் ஏஜெண்ட் செலவு என சுமார் 30,000 ரூபாய் முடக்கினால் போதும். எனது கஸ்ட்மருக்கு நான் நிர்ணயிக்கும் விலை 1,50,000 எனில், அந்தப் பொருட்கள் கிடைத்த 15 நாளுக்குள் கஸ்டமர் எனக்குப் பணம் அனுப்புகிறார் என வைத்துக்கொண்டால் அந்தப் பணத்தை வைத்து காய்கறிகள் வாங்கியோருக்கு 1,00,000 கொடுத்துவிட்டால் போக்குவரத்து செலவு 30,000 போக எனக்கு நிகர லாபம் 20,000.
இது ஒரு தொடர் நிகழ்வு என்பதால் மாதத்துக்கு 4 அல்லது 5 முறை இத்தகைய வர்த்தகம் நடைபெறும்.. சுமார் 1,00,000 வரை கையில் லாபம் நிற்கும். யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.
காய்கறிகள் மட்டும் அல்லாமல், பல வகையான பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றது. அவற்றில் சிலவற்றுக்கு வரி இருந்தாலும் Merchant Export என்பதால் வரி விலக்கு இருந்தது. எனவே எந்த இழப்பும் இல்லாமல் இந்த ஏற்றுமதி ஜோராக நடந்து கொண்டிருந்தது.
இப்போது புதிய ஜி.எஸ்.டி விதிகள் படி, Merchant Export முறை இல்லை. நாம் வாங்கும் பொருட்களுக்கு வரி செலுத்தவேண்டும். அதை ஏற்றுமதி செய்துவிட்டு, அப்படி ஏற்றுமதி செய்ததற்கான ஆதாரங்களை அரசிடம் காண்பித்து, நாம் செலுத்திய வரியை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். எப்படியும் அரசுக்கு நயாபைசா வருமானம் இல்லை. நாம் வாங்கும் போது செலுத்திய வரியை பின்னர் அரசிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். (முன்பு வரி செலுத்தவும் தேவையில்லை, திரும்பப் பெறும் நடைமுறையும் இல்லை).
இது ஈஸி தானே என பலரும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அரசு இந்த நிமிஷம் வரை ரீஃபண்ட் ஆப்சனை செயல்படுத்தவே இல்லை. இதன் விளைவு?
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வாங்கிய பொருட்களுக்கான வரியை ஏற்கனவே கட்டியாச்சு. ஆனா அதை ரீஃபண்ட் வாங்கும் வசதி இன்னும் தொடங்கவே இல்லை. அதனால் அந்தத் தொகை எல்லாம் அங்கே முடங்கிக் கிடக்கு. எனக்குக் கிடைக்கும் லாபம் எல்லாம் இப்போ அரசிடம். அது எப்போ வரும்னு எந்த அறிகுறியும் இல்லை. ஆனா கண்டிப்பா ஒரு நாள் வரும். அதில் சந்தேகம் இல்லை.
வெறும் 30,000 முதலீடு வெச்சு ரோட்டெஷன் செஞ்சு சம்பாதிச்சது மாறி இப்போ வரியே மாசம் 4 x 28,000 கட்டி கட்டி மொத்தமா 2,24,000 அரசுகிட்டே முடங்கிக் கிடந்தா எப்படி தொடர்ந்து தொழில் செய்ய முடியும்?
இப்படி எல்லோரும் பைசா வந்தபின்னால் பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சு எக்ஸ்போர்ட் பிசினசை நிறுத்தினால் அன்னியசெலாவணி பிரச்சனை புதுசா முளைக்கும். அதாவது நமது ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிச்சா அதனால் ஏற்படும் Current Account Deficit (CAD). அது ஒரு தனிப் பெரும் கதை. இது டாலர் மதிப்பை உயர்த்தி ரூபாய் மதிப்பைக் குறைத்து மொத்தமா நம்மை நசுக்கிடும். மேலும் சில காலம் இங்கிருந்து எக்ஸ்போர்ட் இல்லைன்னா நம்ம கஸ்டமர் நமக்காகக் காத்திருக்காம மற்ற நாடுகளில் இருந்து வாங்க ஆரம்பிச்சிருவான்.
இது ஒரு புறம்.
அரசு முன்பே சொன்னது மாதிரி ஜி.எஸ்.டி மூலம் வரி வருவாயாக 94000 கோடி வந்திருக்குன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ளே அதுல இப்படி திரும்பக் கொடுக்கவேண்டிய ரீஃபண்ட் தொகை 65000 கோடின்ற கணக்கு வந்ததும் ரெண்டு அதிர்ச்சி.
ஒண்ணு, 65000 கோடி திரும்பக் கொடுக்கற அளவுக்கு இப்போ பணம் இல்லையாம்.
ரெண்டு. 94000 கோடியில் 65000 கோடி ரீபண்டுன்னா மொத்தமா வந்த வரியே வெறும் 30000 கோடி தான். இது முந்தைய வரி வசூலை விட ரொம்பக் குறைவு. ஆக மொத்தம் ஜி.எஸ்.டி எல்லா எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கைகளையும் தவிடு பொடி ஆக்கிருச்சு.
இப்போ அரசு நிதிப் பற்றாக்குறையை நோக்கிப் போயிட்டிருக்கு. அது பொருளாதார மந்த நிலையா மாறி பொருளாதார சீர்கேடா மாறுவதற்கு அதிகக் காலம் ஆகாது. ஏன்னா ஏற்கனவே எல்லாத் தொழில்களும் மெல்ல மெல்ல முடங்கிட்டு இருக்கு. எக்ஸ்போர்ட் துறையும் தேங்கிருச்சுன்னா வேலை வாய்ப்பு குறையும், அந்நிய செலாவணி பிரச்சனை, ரீபண்டுக்கான தொகை இல்லாமை, வரி வருவாய் குறைவு, வரி ஏய்ப்பு மூலம் எதிர்பாராத நஷ்டம். எல்லாமா சேர்ந்து அரசின் கஜானாவுக்கு தான் பிரச்சனை.
அதனால் தான் கடந்த சில நாட்களாக டெல்லியில் பல முக்கிய அவசர கூட்டங்கள் நடந்திட்டு இருக்கு.
காத்திருப்போம்.. அரசு ஒரு நல்ல முடிவு எடுத்து இதற்கெல்லாம் விரைவில் ஒரு தீர்வு காணும் என்று!
****
References:
1. Rs 65,000 crore GST credit: CBEC scans high-value claims
2. GSTN tweaked features, handled robust August return filing: CEO Prakash Kumar
3. Fast-track GST refund, else Rs 65K cr may be stuck: Exporters
4. Govt exceeds 2016-17 tax collection target, revenue jumps 18%
5. GST recoil: Exporters say higher costs hit orders, exports drop 15% till October
– சதீஷ், மனவுரையிலிருந்து

டெல்லி: ரூபாய் நோட்டு வாபஸ் அரசின் பண மோசடி என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் அதள பாதளத்துக்கு சென்று விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. உள்நாட்டு உற்பத்தியும் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால் வங்கிகளுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, மோடியும், அருண் ஜேட்லியும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். பாஜக மூத்த தலைவரே மோடி அரசு மீது குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சின்ஹாவின் வெளிப்படையாக பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பாஜக முன்னாள் மத்திய அமைச்சரான அருண் ஷோரி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு வாபசே பொருளாதார சரிவிற்கு காரணம் என குற்றம்சாட்டினார். அது முழுக்க முழுக்க அரசால் நடத்தப்பட்ட மிகப் பெரிய பண மோசடி என்றும் அவர் விமர்சித்தார்.

இது ஒரு முட்டாள் தனமான யோசனை என்றும் அவர் சாடினார். இதனால் கருப்பு பணம் வைத்திருந்த ஒவ்வொருவரும் அதை வெள்ளையாக மாற்றி விட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பழைய ரூபாய் நோட்டுக்கள் 99 சதவீதம் வங்கிகளிடம் திரும்ப வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. அப்படியானால் கருப்பு பணமும், கணக்கில் வராத பணமும் இந்த திட்டத்தால் ஒழிக்கப்படவில்லைதானே என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜிஎஸ்டி குறித்தும் அருண் ஷோரி விமர்சித்தார். அரசின் ஜிஎஸ்டி தவறான வழிகாட்டுதல் என்றார். கடந்த 3 மாதங்களில் 7 முறை இதன் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த மோசமான திட்டத்தை செயல்படுத்த நள்ளிரவில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பாஜகவின் பொருளாதார கொள்கை குறித்து பலருக்கும் இதேபோன்ற கருத்துதான் உள்ளது என்ற அருண் ஷோரி அச்சத்தின் காரணமாக யாரும் வாய்திறப்பதில்லை என்றார்.
ரூபாய் நோட்டு வாபஸ் ஒரு பண மோசடி.. மோடிக்கு எதிராக பாஜகவில் மேலும் ஒரு போர்க்குரல்
டெல்லி: ரூபாய் நோட்டு வாபஸ் அரசின் பண மோசடி என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் அதள பாதளத்துக்கு சென்று விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. உள்நாட்டு உற்பத்தியும் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால் வங்கிகளுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, மோடியும், அருண் ஜேட்லியும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். பாஜக மூத்த தலைவரே மோடி அரசு மீது குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சின்ஹாவின் வெளிப்படையாக பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பாஜக முன்னாள் மத்திய அமைச்சரான அருண் ஷோரி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு வாபசே பொருளாதார சரிவிற்கு காரணம் என குற்றம்சாட்டினார். அது முழுக்க முழுக்க அரசால் நடத்தப்பட்ட மிகப் பெரிய பண மோசடி என்றும் அவர் விமர்சித்தார்.
--
பணமதிப்பு குறைப்புக்கு பாராட்டு தெரிவித்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன் : கமலஹாசன்