சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?

530 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 20, 2017, 2:04:00 AM2/20/17
to மின்தமிழ்
எழுதாளர் நோக்கம் இளையதலைமுறையினரின் 
கவனத்தைக் கவரும் வகையில் எழுதும் முயற்சி எனத் தெரிகிறது.

சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?

நன்றி: http://www.velveechu.com/சங்கத்-தமிழில்-கடவுள்/

கண்ணபிரான் ரவிசங்கர் 


சங்கத் தமிழில், “இறை” என்பது “இயற்கை” வழிபாடே!
புராண-புருடாணங்கள் ஒன்றுமில்லை!
= 10 Avtars/ 12 Hands
= இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை.. முதல் & இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை!

என்ன ஆதாரம்? என்ன தரவு??

கடவுளும் இலவே” என்ற சங்கப் பாடல் – மாங்குடிக் கிழார் பாடியது!
அதைத் தான் இன்னிக்கி பார்க்கப் போறோம்; ஆனா.. கொஞ்சம் நீளமா.. விலாவரியா..

“விநாயகர், சங்கத் தமிழில் இல்லை”-ன்னு, முன்பு வெறுமனே பதிவு தான் இட்டேன். அதுக்கே, Twitterஇல் சில பெரியவா, தய்யா-தக்கா -ன்னு குதிச்சாங்களாம்:)
Okies; I am Very Sorry! But.. என்ன தான் குதிச்சாலும்.. விநாயகரைச் சங்கத் தமிழில் கண்டுபுடிக்க முடிஞ்சுதா? இல்லை தானே? அதான் உண்மை:)

Matter is Very Simple!
*இன்றைய நிலை வேறு; தொன்மம் வேறு!
*இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!
இந்தப் புரிதலே போதும்!

உங்களுக்கு இன்னிக்கி புடிச்சிருக்கு என்பதற்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாது!
*உங்க தனிப்பட்ட விநாயக வழிபாட்டை “இழிவு” செஞ்சா, அது தப்பு.
*ஆனா, “சங்கத் தமிழில் விநாயகர் இல்லை” -ன்னு எழுதினா? தப்பு அல்ல; அது தொன்மவியல்!

தமிழ் நிலத்தின் இறைத் தொன்மம் = “நடுகல்”!

1a 1b

தமிழ் முன்னோர் தலைவர்கள், தங்கள் ஆதிகுடிகளைக் காத்த நினைவாக = கல் சமைத்துப் போற்றுவது= நடுகல்! நீத்தார் பெருமை! அதுவே இறைமை!

“கந்து” என்பதும் உண்டு= கல் தூண்!
கந்து/ நடுகல்லில்= குடி காத்தவர்களின் பெயர்/படம் எழுதி வைப்பதும் உண்டு!

முல்லையின் மாயோன் (திருமால்), குறிஞ்சியின் சேயோன் (முருகன்)
= இப்படித் தோன்றியவர்கள் தான்!
= ஆதி குடிகளின் இனத் தலைமை!

கந்தன் =  இவன் “ஸ்கந்தன்” அல்ல!
திருமால் =  இவன் “விஷ்ணு” அல்ல!

இவர்கள் ஆதி குடி நாட்டார் தெய்வங்கள். (பின்னாளில் சம்ஸ்கிருதம் கலந்து, புராணக் கதைகள் ஏற்றப்பட்டு, “பெரும்”தெய்வங்களாய் மாறிப் போனது அப்புறம் தான்.
சைவம்/ வைணவம் என்ற பேரே சங்கத் தமிழில் கிடையாது; “மத அமைப்பு” இல்லவேயில்லை)

2a

முல்லை = காட்டின் அடர் “கருமை” = மாயோன்

குறிஞ்சி = மலை உச்சியின் “சிவப்பு” = சேயோன்

மால் = தங்கள் கண்ணுக்குப், பச்சைப் பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, “மால்” என்று ஆதித் தமிழர்கள் வழுத்தினர்“ – திரு.வி.க ஆய்வுரை!
மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றாகும்; மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்” – ஈழத்து அறிஞர் கா. சிவத்தம்பி!

முருகு = பெண்கள் மேல் இறங்கும் ஒரு “ஆவி”த் தெய்வம் என்பதே சங்க மரபு!
“வேலன் வெறியாடல்” என்கிற நாட்டார் பூசை;
வெறியாடிகளின் மேல் ‘முருகு’ இறங்கல்; ஆட்டுப் பலி, “சூர் மடிதல்” -ன்னு பழங்குடி வழக்கம்.

கந்து = யானையைக் கட்டி வைக்கும் குறுந் தூண்; அதையும் அந்த யானையே தான் சுமந்து செல்லும்!
தன்னைக் கட்டும் ஒன்றையும் தானே சுமந்து செல்லுதல் போல்..
கட்டுப்படாக் கடவுளும், அன்பால் தானே கட்டுப்படல்;  அதுவே, கந்து + அன் = கந்தன்!

3a

வள்ளி = கந்து  (எ) கல்தூணில் படரும் வள்ளிக் கொடி!

இது முன்னோர்களின் காதல் வாழ்வுக்கு அடையாளம்;
(மறைந்து விட்ட) தலைவன் – தலைவி = நடுகல்லும், அதில் படரும் கொடியுமாய்!
= கொடிநிலை கந்தழி வள்ளி  (தொல்காப்பியம்)
நினைவு போற்றுதல்! அன்பே தெய்வம்! இயற்கை வாழ்வு! புராணங்கள் இல்லை.

4a

நடுகல்லு வச்ச இடத்தில், ஒரு காதல் காட்சி பார்க்கலாமா? வாங்க..

அவளுக்கு அவன் மேல் “மிக்க” அன்பு! ஆனா, அவனோ அவளைக் “கண்டும் காணாதது” போல் இருக்கான்.
தன் காதலை வாழ்விக்க முடியாம, அவ என்ன பண்ணுறா? = தற்கொலை? இல்லையில்லை!

சூர் நசைத் தலையாய் “நடுகல்” கண்டே
பரிந்தனென் அல்லனோ, இறை இறையானே
முன்னோர்களே,  நீங்க தூக்கி வளர்த்த இவனுக்கு..
நீங்களே என் அன்பையும் புரிய வைக்கக் கூடாதா?”
-என்று, நடுகல்லையே அவ வணங்குறா!

தன் முன்னோர் மரபின்  மேல், அவ கொண்ட மதிப்பு!
அந்த மதிப்பால், அவன் மதிப்பில் அவ உசந்துட்டா;
அவன் அவளைப் புரிஞ்சிக்கிட்டான்; இதழ் இழுத்து உறிஞ்சிக்கிட்டான்; இதுவே மாமூலனாரின் குறுந்தொகைப் பாடல்!

இந்த நடுகல், பார்ப்பதற்கு… இன்றைய “லிங்கம்” போல் இருந்தமையால், சில ஆய்வாளர்கள், லிங்கம் என்று பிழையாக எண்ணி விட்டார்கள்:)
ஆனால், அன்றைய தமிழில் “ல” -ன்னே எழுத்து தொடங்காது; லக்ஷ்மி= இலக்குமி; லிங்கம்= இலிங்கம்!
லிங்கம் = வடமொழி; தமிழில் எழுதும் போது = இலிங்கம்!
அப்புறம் எப்படி நடுகல் = “லிங்கம்” ஆகும்?
தொன்மவியல் ஆய்விலும், ஆய்வாளரின் சைவப் பற்று; “மதம் ஆன பேய்” வந்து ஊடாடினால்? = இதான் கதி:(

தொல்காப்பியர் காட்டும் நடுகல் = “சீர்த்தகு மரபு”
காட்சி, கால்கோள், நீர்ப்படை, “நடுகல்”
சீர்த்தகு “மரபில்“ பெரும்படை வாழ்த்தல் (தொல். புறத்திணை)

இந்த “மரபு” தான் -> தமிழ் மரபு என்று ஓங்கி வளர்ந்தது!
* முன்னை “மரபின்” முதுமொழி முதல்வ = திருமால்
* அரும்பெறல் “மரபின்” பெரும்பெயர் முருக = முருகன்

கலப்பின் காலம்:

வணிகம்-தொடர்பு காரணமாய், வடமொழி (எ) வடநெறி, தமிழ் நிலத்தின் ஓரமா வந்து குந்திக்கிட்டு இருக்கு! இது தொல்காப்பியருக்கும் தெரியும்! அதான் “வட எழுத்து ஒரீஇ” (ஒதுக்கு) -ன்னு எழுதினாரு!

பண்பாடுகள் சற்று கலக்கத் தான் செய்யும்!
யாரும் தனித்து வாழவியலாது; ஆனால்.. ஆனால்…

5a

அப்படிக் கலக்கும் போது,
* ஒரு சமூகம், தன் “வேர்”களை இழந்து விடக் கூடாது!
* மரியாதையுடன் கூடிய கொடுக்கல்-வாங்கல்; அதுவே நல்லது!
தமிழில், 5% பிற மொழிச் சொல் Okay;
ஆனால் 35% சம்ஸ்கிருதச் சொல் புகுத்தினால்?

Parasite போல்… ஒட்டி ஒட்டியே, உறிஞ்சி இழுத்து விடும்!

“சொல்/பொருள்” என்ற சொற்களே நாளடைவில் மறைஞ்சிப் போய்..
“வார்த்தை/அர்த்தம்”-ன்னே புழக்கம் ஆயீரும்!

ஆங்கிலமாச்சும் பரவாயில்லை, “பிகர்”-ன்னு எழுதினா, உங்க பாட்டி கூட Figure என்பது இங்கிலீஷ்-ன்னு சொல்லீருவாங்க:)
ஆனா சம்ஸ்கிருதச் சொற்கள்: “வார்த்தை/அர்த்தம்”?
அதுவும் தமிழ் தானோ? எ. நம்மையே நம்ப வைத்துவிடும் தலைமுறைத் தீமை, இந்த Parasite தீமை!

நம்மிடம் இல்லாத சொற்களை, பிற மொழிகளில் இருந்து பெற்றுக் கொளல் தவறில்லை.
ஆனால் இருக்கும் சொல்லை/சொத்தை அழித்து, கடன் வாங்குதல் அறிவீனம் அல்லவா?

தொல்காப்பியர், வடசொற்களும் தமிழில் புழங்க flexibility (எ) நெகிழ்வு குடுத்தாரு.
எடுத்துக்காட்டு:
*கமலம்= தற்சமம் (அப்படியே எழுதுவது)
*பங்கயம்= தற்பவம் (பங்கஜம்: தமிழ் விதிகளுக்கு உட்பட்டு, பங்கயம் என்று மாற்றி எழுதுவது)
இந்த Flexibility பெயர்ச் சொற்களுக்குச் சரிவரும்! ஆனா இதையே எல்லாத்துக்குமே நுழைக்கப் பார்த்தால்?

அரசர்கள்-அதிகாரம் மூலமா ‘நுழைந்து’ கொண்டது வடநெறி! “மதம்” என்கிற சக்தி வாய்ந்த போர்வை போர்த்தி வந்திருக்கே? Emotional Attack!

“உன் பித்ரு-முன்னோர்கள், மேல் லோகத்தில்.. வைரவதி என்னும் நெருப்பு ஆற்றிலே, பசி பசி என்று அலறுவார்கள்; ஆகவே தர்ப்பணம் கொடு”

இப்படில்லாம் சொன்னா, எதுக்கு வம்பு.. உண்மையோ/பொய்யோ.. கொடுத்துத் தொலைச்சிருவோம் என்று செய்வீர்கள் தானே?:)

  • பண்டைத் தமிழ் மன்னர்களின் மற உணர்ச்சி = பாவம்
  • பாவத்தை ஈடு கட்டணுமா? = புண்யம்
    ஸ்வர்க்கம், நரகம், ஹோமம், யாகம் = இந்த வித்து (மாயை) தூவப்பட்டு விட்டது!

* முது குடிப் பெருவழுதி -> பல் “யாகசாலை” முதுகுடுமிப் பெருவழுதி ஆனான்!
* பெருநற் கிள்ளி = இராஜசூய யாகம் வேட்ட பெரு நற் கிள்ளி -ன்னு மாறிட்டான்!

6a
அரச/ அதிகாரப் பரவலே முதலில்;
பின்பே இலக்கிய/ சமூகப் பரவல்!

ஆம்!… அது கடைச்சங்க காலம்!
கடைச்சங்க காலம் = மதமில்லாத் தமிழ்ச் சமூகத்துக்கு, “மதம்” பிடித்தது, ஜாதியும் பிடித்தது:(

முல்லை-குறிஞ்சி என்ற ஆதிகுடி காட்டு வாழ்க்கை!
புலம் பெயர்ந்து..
மருதம் என்ற வயல்வெளி/ ஆற்றோர நாகரிகம் கண்ட மக்கள்.
நாகரிகம் செழிக்கச் செழிக்க, “அந்நிய நெறிகள்” நுழைந்து, தமிழ் நிலத்தை மாற்றிப் போட்டது!

பண்பாட்டுக் கலப்புக்குப் பின்…

7a 9a
அரசனைக் ‘கொண்டது’ போல், ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படிக் ‘கொள்வது’?
= வாழ்க்கையின் துன்பமெல்லாம் விலகி ஓடணுமா?
பூஜா-புனஸ்கார-ஜோதிட-பரிகாரம்
ஜோதிட மயக்கம், நம் அப்பாவி மக்களுக்குப் பெரும் மயக்கம் அல்லவா?

(கண்ணகி கிட்டவும் பரிகாரம் செய்யச் சொல்றாங்க, இழந்த புருசனை அடைய; ஆனா அவள் செய்ய மறுக்குறா)
“Hello தமிழ் மக்களே..

உங்க முருகனும், திருமாலும், இங்கேயும் இருக்கா பாருங்கோ! எங்க சம்ஸ்கிருதத்திலும் இருக்கா பாருங்கோ!
வெறுமனே  நடுகல்லா இல்லாம… Magic; ‘ஜாலி’ யான புராணக் கதைகள்”?:)

தங்கள் வேதக் கடவுள்களான.. சோமன், அக்னி, இந்திரன், அஸ்வின், மித்ரன்..
இவர்களையெல்லாம் சற்றே தள்ளிவைத்து, தமிழ்க் கடவுள்களையே -> புதிய புராணக் கடவுள்களாக உருவாக்கம்!
Local பாணியில் பேசிப் பேசியே, Local மக்களைக் கவரும் அன்றைய “பிராமண சுவிசேஷம்”:)

* கந்தன் -> ஸ்கந்தன் ஆனான்!
* திருமால் -> விஷ்ணு ஆனான்!

தமிழ்த் தொன்மங்களின் மேலேயே, பலதும் ஏற்றப்பட்டன.
நம் தொன்மங்களை, நாமே இழக்க வைக்கும் “உத்தி” = புராணம் ஏற்றுதல்!

இது எப்படிச் சாத்தியம் ஆயிற்று?
பிரபலம் ஆகாத வரை= அவள் எளியோரின் சமயபுரத்தாள்!
ஆனால் கொழிக்கத் துவங்கியவுடன்= அர்ச்சகாள் வந்துட்டா!
“ஆத்தாள்” -> “அம்பாள்” ஆகி, தல “புராணமும்” இப்போ வந்துருச்சு அல்லவா? அதே உத்தி!
நமக்கும்.. ஆத்தாளை விட, அம்பாள் என்று சொல்வதே, Promotion அடைந்த திருப்தி:(

சிறு தெய்வம்= நம் தாழ்வு மனப்பான்மை!
அதையே மந்திரம் சொல்லிக் கொண்டாடினால்? பெருந் தெய்வம்= உயர்வு மனப்பான்மை!

உங்க நடுகல் முருகனும்/திருமாலும், Sanskritலயும் இருக்கா பாருங்கோ!
*முருகன் aka சுப்ரமண்யன்= கம்மி
*திருமால் aka விஷ்ணு= சற்று அதிகம்

“விஷ்ணு”வை அங்கே அதிகம் பரவிட்டாங்க; மும்மூர்த்தியுள் ஒரு மூர்த்தி.
மோகினி + கிளுகிளு கதைகள்!
“ஸ்கந்தனை”, ஏனோ அங்கு அதிகம் பரவலை; மும்மூர்த்தி ஆக்கலை;
ஆனாலும், சுப்ரமண்ய ஸ்வாமி, தேவ ஸேனாபதி என்ற பட்டம்!

*அங்கு அதிகம் பரவாதவன் மட்டுமே = “தமிழ்க் கடவுள்” முருகன் -என்று இன்றைய கண்ணுக்குத் தெரிகிறான்;
*ஆனால், முருகனும் திருமாலும்= இருவருமே தமிழ்த் தொன்மங்கள் -என்று சங்கத் தமிழ்க் கண்ணுக்கு நல்லாவே தெரியும்!

முருகன்= தமிழ்க் கடவுள் என்று சைவப் பெருமைக்கு, இன்று சொல்லிக் கொண்டாலும்..
அந்தத் தமிழ்க் கடவுள் கதை பூராவும்= சம்ஸ்கிருத/புராணக் கதையாய் இருப்பது ஏன்?

(நெத்திக் கண்ணுல தோன்றினாரு, 6 ஒடம்பு ஒன்னாச்சு, கைலாஸ மலையில் பழம் நீ அப்பா, பிரணவ மந்திர உபதேசம்;
வீரபாஹூ Friend ஆனாரு; பாஹூ= சம்ஸ்கிருதம்; தோள் எ. பொருள்! அப்பறம் எப்படித் தமிழ்க் கடவுள்?:)
அசுரர் குடியையே கெடுத்தாரு, அசுரர் “குடிகெடுத்த” ஐயா வருக;  தூங்கும் குழந்தைகள் உட்பட அசுர பட்டணத்தையே தண்ணிக்குள் மூழ்கடிச்சாரு, தேவஸேனா கல்யாணம்)

“தமிழ்க் கடவுள்” முருகன் மேல், ஏன் பூராவும் சம்ஸ்கிருதக் கதைகள்?
இந்த எளிய உண்மை= நம் மக்களுக்கு உறைப்பதே இல்லை!:)  அதான் மதம் என்கிற மாயை!

மேலும் பேசுவோம்!

11a

தங்கள் நடுகல்லும்/தொன்மமும் = “பெருந்தெய்வமாய்” மாறிப் போச்சு;

அப்போ ஆதி குடிகளின் கதி?

= கொல்லிப் பாவை, இசக்கி, சுடலை, சாத்தன்-சாத்தி…
இப்படி, முன்னோர்களை, வேறு வேறு பெயரில், வழிபட்டுக் குறுகிப் போயினர்!
(சாத்தன்-சாத்தி என்கிற தமிழ்ப் பெயர்கள்: சீத்தலைச் சாத்தனார், ஒக்கூர் மா-சாத்தியார்)

மக்களும் “மாற”த் துவங்கியாச்சி..
அட, நம்ம முருகன் தானே, அங்கேயும் சுப்ரமண்ய ஸ்வாமியா இருக்கான்?
கூடவே கிளுகிளு கதைகள்!
கல்யாண + வியாபார பரிகாரங்கள் -ல்லாம் சொல்றாங்களே, வாழ்வில் வெற்றி பெறுவதற்கு?

  1.  மன்னன் முதற் கட்ட மாற்றம்! மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி..
  2. அரசியல் அதிகாரம் பெருக்கி, மக்கள் இரண்டாம் கட்ட மாற்றம்!
    அரசியலும், தன்னலமும்.. எதையும் செய்யும்!

முருக-“இயற்கை” வழிபாடு குறுகி -> முருக-“புராண” வழிபாடு பெருகியது!
பொய்யான “கதைகளே” மலிந்து போய்,
இன்று, ஆலயம் தோறும்.. முருகத் தமிழ்க் கடவுள் & திருமால் தமிழ்க் கடவுள் -> சம்ஸ்கிருதக் கடவுள் ஆகி நிற்கும் கோலம்!:(


சமணம் & பெளத்தம்:

13a
இவை கூட வடக்கில் இருந்து வந்த நெறிகள் தான்!
ஆனா அவர்கள் தமிழ்த் தொன்மத்தைச் சிதைக்கலை; “புது நெறி”-என்றே அறிமுகம் செய்தார்கள். கந்தனை -> “ஸ்கந்த தீர்த்தங்கரர்” ஆக்கலை!

சம்ஸ்கிருத நெறி மட்டுமே தமிழ் மரபியல் சிதைப்பு செய்தது.

தொன்மத்தின் மேலேயே புராணம் ஏற்றினால்?
= எது இருந்தது? எது வந்தது?
= கண்டுபுடிக்கவே முடியாது! Thatz the Trick! Ir-reversible:(

இயற்கையான முருகனுக்கு = 6 தலை, 12 கை, 18 கண்:)
நாமளும், ஆறு-தலை/தரும் ஆறுதலை -ன்னு “வார்த்தை விளையாட்டு” விளையாடி, மகிழ்வு கொண்டு விடுகிறோம்; வெட்கக்கேடு:(

சென்னைக்கு அருகே திருப்போரூர்;
இது போன்ற பழமையான முருகன் கோட்டங்களில், இன்னிக்கும் நடுகல்லைப் பார்க்கலாம்!
உருவமோ/முகமோ இருக்காது;
ஆனா முகம் போல் எழுதி, அலங்காரத்தில் மறைச்சிருக்கும்!

யாரேனும், “ஹிந்து”  மத அபிமானிகள் வாசிக்க நேர்ந்தால் மன்னித்து விடுங்கள்.
உங்களுக்குப் “பிடிக்கலை” -ன்னு தெரியும். அதுக்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாதே?
வசையாடி/இழிவு செய்தால் கோச்சிக்குங்க; ஆனால் சங்க கால உண்மைக்கெல்லாம் கோச்சிக்காதீக, Please!

மனசாட்சி இருப்பின், நீங்களே யோசிங்களேன்.
* சமண-பெளத்தம் = பாளி மொழி -> அதன் கலப்பு தமிழில் இருக்கா?
* வேத/ பிராமணீய மதம் = சமஸ்கிருதம் -> ஏன் இது மட்டும் அதீதக் கலப்பு?
அவரவர் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்:)

சங்கத் தமிழ் வாசிப்புக்கு = “காலம் அறிதல்” இன்றியமையாதது!

14b
கொஞ்சூண்டு புற400 பாட்டில்… பஞ்ச பாண்டவர், இராமன் + இதர தெய்வங்களின்  குறிப்பு கூட வரும் (மிகச் சொற்பமாக)
ஒடனே, “பாத்தீங்களா பாத்தீங்களா? சங்கத் தமிழ்லயே ராமர் இருக்கார் பாருங்கோ; பேஷ் பேஷ்!
தமிழாள் ஸ்ரீ-ராமரையே கும்புட்டாங்க! Bolo, Jai Sri Ram!” -ன்னு எறங்கீறக் கூடாது:)

அப்படீ-ன்னா, “Sati” = தமிழாள் பண்பாடா என்ன?:) மாண்ட கணவனோடு, பெண்ணை நெருப்பிலே தள்ளல்! அதுவும் புற400-இல், ஒரு மூலையில் லேசா வரும்:(

இதுக்குத் தான் காலம் அறிதல் முக்கியம் -ன்னு சொன்னேன்!

* முதல்/இடைச் சங்கத் தமிழில்= இது போன்ற “புராணக் குறிப்பு” வராது!
கடைச் சங்க காலம் = கலப்புக்குப் பின்னரே, புராணம் லேசு மாசாய் வரும்!

இவை = “தொகை” நூல்கள்; தொகுக்கப் பட்டவை! ஒரே காலத்தி்ல் எழுதப் பட்டவை அல்ல!
*முதல்-இடைச் சங்கப் பாட்டும் வரும்
*கடைச் சங்கப் பாட்டும் விரவி வரும்
ஆனா, எதுஎது, எந்தக் காலம்? -ன்னு அகச் சான்று உண்டு!

என் iPod Playlist -இல், பாபநாசம் சிவன், KV Mahadevan, மெல்லிசை மன்னர் MSV, இளையராஜா, Rahman -ன்னு “தொகுத்து” இருக்கு! எல்லோரும் ஒரே காலமா என்ன?:)

MSV போட்ட “Melody”-க்கு, இன்னிக்கி  Remix என்கிற “Tragedy” வேற:(
இதே போல், குறுந்தொகைக்கெல்லாம் “கடவுள் வாழ்த்து” -ன்னு Remix சொருகினார்கள்:(
நினைவில் வையுங்கள்:
எட்டுத் தொகையில்= 8 “கடவுள் வாழ்த்துச்” செய்யுள்களும், சைவ சமயப் பிற் சேர்க்கையே! Remix செய்யப்பட்டதே!

மக்கள் வாழ்வியல்:

15a
*குறிஞ்சி: வெறியாடும் முருகன் கூத்து!
*முல்லை: காதலர்கள், மாயோன் (திருமால்) மேல் சத்தியம் செஞ்சி, காதலை நிரூபிப்பது!
-இப்படி.. “வாழ்வியல்” (Social Life);

ஆனால், (இல்லாத) நெற்றிக் கண்ணால் எரிப்பது? பரியை நரி ஆக்குவது?
இது மக்கள் வாழ்வியல் அல்ல; புராணம்!
“வடவரின் புதுக் கதையில் வருவது போல்” -ன்னே சங்கப் பாட்டும் இருக்கு; It’s just a “Myth”

காலம் செல்லச் செல்ல..
மதம் (எ) சக்தி வாய்ந்த ஆயுதம், “நிறுவனப்படுத்தல்” ஆகி விட்டது.
ஆனா அப்போதும், தமிழ்ச் சமூகம் = தன்னை “முழுசா” ஒப்புக் குடுத்துடலை, சம்ஸ்கிருத நெறிக்கு!
Kannagi is the Proof!

கலப்புக்குப் பின்னால் எழுந்ததே சிலப்பதிகாரம்!
கோவலன் திருமணமே = “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்”  தான் நடக்குது;
அது காதல் திருமணம் அல்ல!
அரசனுக்கு இயைந்த, வணிகச் சமூகப் பெற்றோர் நடத்தும் திருமணம்!
பெற்றோர் சொற்படி, பார்ப்பனன் நடத்தி வைத்த திருமணமே ஆயினும், அதே கண்ணகி.. சடங்கு செய்ய மறுக்கிறாள்!

பிரிஞ்ச தம்பதிகள் பரிகாரம்:
பிரிந்து விட்டவனை மீண்டும் அடைய, சோம குண்டம்/ சூர்ய குண்டம் = பரிகாரம் பண்ணலாம் வாடீ-ன்னு… அவள் பக்கத்து வீட்டுப் பார்ப்பனத் தோழி தேவந்தி கூப்பிட..
கண்ணகி சொல்லும் தமிழ்நெறிச் சொல் = அது எங்களுக்குப் பீடு (பெருமை) அன்று”!

பண்பாட்டின் பரவல் | Expansion of Civilization:
முல்லையின் மாயோன், குறிஞ்சியின் சேயோன்
= முதலில் வைக்கிறார் தொல்காப்பியர்;
= காடு-மலை; முதலில் தோன்றிய நாகரிகம் அல்லவா?

காடு-மலை கடந்து, மக்கள் புலம் பெயர்ந்த போது.. தங்கள் தொன்மங்களையும் உடன் எடுத்தே சென்றார்கள்! மருதம்= வேளாண்மை; நெய்தல்= கடலாண்மை கண்டனர்.

  • மருத நிலம் = வேந்தன் (அரசன்); மாறிக் கொண்டே இருப்பவன்
  • நெய்தல் நிலம் = வருணன்/ வருள்நன் (கடல்காற்று); மாறிக் கொண்டே இருப்பது

முருகன்/திருமால் போல்.. வேந்தனோ/காற்றோ = ஒரு நிலைத்த அடையாளம் அல்ல!
அதனால் மக்கள் வாழ்வியலில், வேந்தன்/வருணன் அதிகம் பேசப்படலை.
துறை/கூத்து -ன்னு வேந்தன்/வருணனுக்கு.. “வாழ்வியலாய்” ஒன்னுமேயில்ல; வெறும் நில அடையாளம் மட்டுமே!

கொற்றவை (எ) பழையோள் = இவளும் தமிழ்க் கடவுளே!
= நடுகல்லாய் உதித்து, உருப் பெற்றவள்!
= பாலை நில எயினர்கள்/ வழிப்பறிக் கள்வர்களின் தெய்வம்!

“நாகரிகம் குறைந்த” கள்வர் என்பதால்.. இவள் பேரிலே மிகுந்த இலக்கியப் பாடல்கள் இல்லீன்னாலும்..
திணை அளவில் இல்லாது, துறை அளவிலாச்சும் (கொற்றவை நிலை) குறித்து வைக்கிறார் தொல்காப்பியத்தில்! தொல்காப்பியர் பேதம் இல்லாதவர்; எவரையும் ஒதுக்காமல், “உள்ளது உள்ளபடி”.. தமிழாய்க் குறித்து வைக்கின்றார்!

மாயோன் மேய மன் பெரும் சிறப்பின்,
தாவா விழுப் புகழ் = “பூவை” நிலையும்
-ன்னு தொல்காப்பியர் சொல்லும் அந்தப் பூ-வை என்பதே => பூ-சை ஆனது;

இப்படி, இயற்கை வழிபாடாய் இருந்த ஒன்று..

17a
* நாள் செல்லச் செல்ல, “புதிய புராணம்”= இலக்கியத்திலும் பரவத் துவங்கியாச்சு
* வேந்தன்= இந்திர பகவான், வருள்நன்= வருண பகவான் -ன்னு ஆக்கியாச்சு!

நினைவில் வைங்க; வேந்தன் = இந்திரன் அல்ல!
வேந்தன்= மருத நில மன்னவர்கள்; (மாறிக் கொண்டே இருப்பவர்கள்)
அதே போல் வருணன் = (வருள்நன்)
வருள்= சூழ்தல்; நிலத்தை வருளும் (சூழும்) கடல்!

முது “வருண்”, முந்து கிளவாச் செறிவு  -ன்னு திருக்குறளே இருக்கு!
வருள்/வருண்= சூழ்தல்!
தமிழ் “வருணம்” வேற; சம்ஸ்கிருத “வர்ணம்” வேற;
வருள்வதால்= வருணன்; வருளும் கடற்காற்று= நெய்தல் நிலத் தெய்வம்!

ஆனால், வேந்தன் = இந்திரன் -ன்னு உரைகளில் மாற்றி எழுதினார்கள்:(
இந்திர விழா என்று மன்னனும் தோற்றுவித்தான்!
வேதக் கடவுள்கள் சோமன் /இந்திரனை, Local மதப் பரப்பலுக்காக “சற்றே ஒதுக்கி வைத்து”, ஹோமம்/ யக்ஞங்களில் மட்டும் இந்திரனை விட்டுவிடாது பிடித்துக் கொண்டனர்! ஓம் இந்திராயா ஸ்வாஹா.. யாகத்தில், இந்திரனுக்கு அவிர்ப்பாகம்!

உலகெங்கும், ஆஸ்திகம்= கடவுள் உண்டு; நாஸ்திகம்= கடவுள் இல்லை!
ஆனால் சம்ஸ்கிருத/ பிராமணீயக் கொள்கையில் மட்டுமே, ஆஸ்திகம்= வேதம் உண்டு; நாஸ்திகம்= வேதம் இல்லை!(கர்ம மீமாம்சை= இறை மறுத்து, ஆனால் வேதம் மறுக்காதவர்கள்)

வேதம் மறுத்த புத்தரும், மகாவீரரும்.. இவர்களைப் பொருத்த மட்டில்= நாத்திகர்கள்:)
நீ, இறைவனை மறுத்தாலும் பரவாயில்லை; எங்கள் வேதத்துக்கு உடன்பட்டால்= நீயும் ஆத்திகனே!
என்னே இறை அன்பு! கடவுளை விடவும், தங்கள் கட்டமைப்புக்கு உருவாக்கிக் கொண்ட வேதமே பெரிது!:)
அன்பை விடப் பெருங் கடவுளும் இலமே! -என்று பாடும் சங்கத் தமிழ் மாண்பு எங்கே? இச் சுயநலம் எங்கே?

Grammar = The Breeding Ground

18a

தமிழ் இலக்கணமே= இவர்கள் முதலில் கை வைப்பது; Cut at the root!
(உங்க இலக்கணத்தைத் திரித்து, உங்களுக்கே வழங்கும் பண்டிதாள்)

* ஒரு புடை உருவகம் = “ஏக தேச” உருவகம் -ன்னு.. இன்னிக்கி  பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்திலெல்லாம் நிலைச்சிருச்சே!
Why should Tamizh Grammar have “ek” & “ekam” inside it?
Does Sanskrit Grammar has, Tamizh words “Or & Eer (ஓர் & ஈர்)” in it? உங்க மனச்சாட்சியைக் கேளுங்கள்!

இது வடமொழி (எ) ஒரு தனிப்பட்ட மொழியின் குற்றமல்ல; அது நல்ல மொழி தான்.
அந்த மொழியில் ஊறிய, ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின் குற்றமே இது!
Does Sanskrit have Tamizh sounds ழ & ற?
But Tamizh “MUST” have sanskrit sounds ஸ்ரீ & ஷ!
இது தானே “நியாயம்“?:) புகுத்து, தமிழில் கிரந்த எழுத்தை!

தமிழின் சிறப்பான  ழ-க்குப் பதிலா, ட -போட்டுக்கலாம் ன்னு, தமிழ் இலக்கணத்தையே மாத்தி எழுதப் பார்த்தாங்க;
தமிழ்க் கடவுள் முருகனே வந்து  “ழ”-க்குப் பதில் “ட” போடச் சொன்னான்-னு சைவக் கதையும் புனையப்பட்டது:) கச்சியப்ப சிவாச்சாரியின் கந்த புராணம்!

ஆனால், எத்துணை “சம்ஸ்கிருத/மதம்” மிகுந்தாலும், இன்று வரை… தமிழ் மொழி இயல் = தொல்காப்பிய அடிப்படையே! அதை எவரும் அசைக்க முடியலை!
காலங் காலமாய்ப் பின்னிப் பிணைந்து… இன்று வரை..
தொல்காப்பியமே காத்துக் குடுக்கும்= நம் தமிழ்த் தொன்மம்!

Further Read/Ref:
1) ஞா.தேவநேயப் பாவாணர் – தமிழர் சமயம்
2) தொ. பரமசிவன் – பண்பாட்டு அசைவுகள்
3) மா. இராசமாணிக்கனார் – கால ஆராய்ச்சி (ebook)

சரி, பெரீய்ய்ய முன்னுரை போதும்:) வாங்க, இன்றைய பாட்டுக்குச் சுருக்கமாய்ச் செல்வோம்:)
தமிழர்களுக்கு, நைவேத்யம் செய்யும் கடவுள்கள் இல்லை!  என்ற தெளிவான எதிர்ப்புக் குரல்; சங்கத் தமிழிலேயே!
இது போல் பலப்பல அகச் சான்றுகள்!

நூல்: புறநானூறு (335)

கவிஞர்: மாங்குடிக் கிழார்
திணை: வாகை
துறை: மூதின் முல்லை

அடல் அரும் துப்பின்…..
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;

கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;

துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!

 

காபி உறிஞ்சல்:


அடல் அருந் துப்பின்…..
குரவே, தளவே, குருந்தே, முல்லை என்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;

வெல்ல முடியாத வலிமை (துப்பு) கொண்ட இனம்;
* குரவம், தளவம் (பிச்சிப்பூ), குருந்து, முல்லை
= இந்த நான்குமே இவங்க குடிப் பூக்கள்;

கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;

வரகு, தினை, கொள்ளு, அவரை = இந்த நான்குமே இவங்க குடி உணவு;

துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை;

துடியன், பாணன், கடம்பன், பறையன் = இந்த நான்குமே இவங்க குடி முறைகள்;

அரசின் உயர் அலுவலர் = பறையன்; But today itz an offensive word;
எள்ளல் பேர்வழிகள் கும்மி அடித்து அடித்து, “பறையன்” என்னும் செந்தமிழ்ச் சொல், தீச் சொல்லாய் மாறி விட்டது:(

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி,
ஒளிறு ஏந்து மருப்பின், களிறு எறிந்து வீழ்ந்தெனக்

பகைவர்களின் முன்னே அஞ்சாது நிற்பர்;
ஒளி வீசும் தந்தம் உள்ள யானை = அதையே சாய்க்க வல்லவர்;
அப்படிச் சாய்க்கும் போது, தாமும் சாய்ந்து இறந்தார்கள்  = குடி காத்த முன்னோர்;

19a
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!

அவங்க நினைவாக இட்ட = நடுகல்!
அந்த நடுகல்லைத் தான் போற்றுவோமே அன்றி…
நெல்-அரிசியைக் கொட்டி (உகுத்து),
“நைவேத்யம்” செய்யும் கடவுள், எங்களுக்கு இல்லை! =நெல் உகுத்துப் பரவும் “கடவுளும் இலவே”!

(Strong Views recorded by maangudi kizhaar, during the “culture change” of his times)

இது போன்ற அகச் சான்று= பல சங்கத் தமிழ்ப் பாடல்கள்!
மன்னன் மாறினாலும்.. தான் மாறாது,
தமிழ்க் கொள்கைக்கு எதிரான.. சம்ஸ்கிருத/ வேத/ பிராமணீயம்; அவற்றைத் தமிழ்ச் சமூகம் எதிர்த்தமைக்குச் “சாட்சி”யாய்.. ஆங்காங்கு நிற்கும் சங்கத் தமிழ் வாழ்க!

Banukumar Rajendran

unread,
Feb 20, 2017, 4:47:42 AM2/20/17
to மின்தமிழ்
தேமொழி, கேஆர்எஸ் இங்கேயும் (மிந்தமிழில்) இருப்பவர்தான். தாங்கள்
முற்செலுத்தியதை அவரும் படித்துக்கொண்டிருக்கலாம். :-)


நிற்க!

கட்டுரையில் சில இடங்களில் என் கருத்துகள் மாறுபட்டிருந்தாலும், கட்டுரையின்
சாராம்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. 




2017-02-20 12:34 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
எழுதாளர் நோக்கம் இளையதலைமுறையினரின் 
கவனத்தைக் கவரும் வகையில் எழுதும் முயற்சி எனத் தெரிகிறது.

சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?

நன்றி: http://www.velveechu.com/சங்கத்-தமிழில்-கடவுள்/

கண்ணபிரான் ரவிசங்கர் 


சங்கத் தமிழில், “இறை” என்பது “இயற்கை” வழிபாடே!
புராண-புருடாணங்கள் ஒன்றுமில்லை!
= 10 Avtars/ 12 Hands
= இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை.. முதல் & இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை!

என்ன ஆதாரம்? என்ன தரவு??

கடவுளும் இலவே” என்ற சங்கப் பாடல் – மாங்குடிக் கிழார் பாடியது!
அதைத் தான் இன்னிக்கி பார்க்கப் போறோம்; ஆனா.. கொஞ்சம் நீளமா.. விலாவரியா..

“விநாயகர், சங்கத் தமிழில் இல்லை”-ன்னு, முன்பு வெறுமனே பதிவு தான் இட்டேன். அதுக்கே, Twitterஇல் சில பெரியவா, தய்யா-தக்கா -ன்னு குதிச்சாங்களாம்:)
Okies; I am Very Sorry! But.. என்ன தான் குதிச்சாலும்.. விநாயகரைச் சங்கத் தமிழில் கண்டுபுடிக்க முடிஞ்சுதா? இல்லை தானே? அதான் உண்மை:)

Matter is Very Simple!
*இன்றைய நிலை வேறு; தொன்மம் வேறு!
*இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!
இந்தப் புரிதலே போதும்!

உங்களுக்கு இன்னிக்கி புடிச்சிருக்கு என்பதற்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாது!
*உங்க தனிப்பட்ட விநாயக வழிபாட்டை “இழிவு” செஞ்சா, அது தப்பு.
*ஆனா, “சங்கத் தமிழில் விநாயகர் இல்லை” -ன்னு எழுதினா? தப்பு அல்ல; அது தொன்மவியல்!


ஆம். இந்த வகையான புரிதல் நம்மில் பெருபாலோரிடம் இல்லை. சூப்பர் கேஆரெஸ்.






 

தமிழ் நிலத்தின் இறைத் தொன்மம் = “நடுகல்”!

1a 1b

தமிழ் முன்னோர் தலைவர்கள், தங்கள் ஆதிகுடிகளைக் காத்த நினைவாக = கல் சமைத்துப் போற்றுவது= நடுகல்! நீத்தார் பெருமை! அதுவே இறைமை!

“கந்து” என்பதும் உண்டு= கல் தூண்!
கந்து/ நடுகல்லில்= குடி காத்தவர்களின் பெயர்/படம் எழுதி வைப்பதும் உண்டு!

முல்லையின் மாயோன் (திருமால்), குறிஞ்சியின் சேயோன் (முருகன்)
= இப்படித் தோன்றியவர்கள் தான்!
= ஆதி குடிகளின் இனத் தலைமை!

கந்தன் =  இவன் “ஸ்கந்தன்” அல்ல!
திருமால் =  இவன் “விஷ்ணு” அல்ல!

இவர்கள் ஆதி குடி நாட்டார் தெய்வங்கள். (பின்னாளில் சம்ஸ்கிருதம் கலந்து, புராணக் கதைகள் ஏற்றப்பட்டு, “பெரும்”தெய்வங்களாய் மாறிப் போனது அப்புறம் தான்.
சைவம்/ வைணவம் என்ற பேரே சங்கத் தமிழில் கிடையாது; “மத அமைப்பு” இல்லவேயில்லை)

2a

முல்லை = காட்டின் அடர் “கருமை” = மாயோன்

குறிஞ்சி = மலை உச்சியின் “சிவப்பு” = சேயோன்

மால் = தங்கள் கண்ணுக்குப், பச்சைப் பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, “மால்” என்று ஆதித் தமிழர்கள் வழுத்தினர்“ – திரு.வி.க ஆய்வுரை!
மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றாகும்; மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்” – ஈழத்து அறிஞர் கா. சிவத்தம்பி!

முருகு = பெண்கள் மேல் இறங்கும் ஒரு “ஆவி”த் தெய்வம் என்பதே சங்க மரபு!
“வேலன் வெறியாடல்” என்கிற நாட்டார் பூசை;
வெறியாடிகளின் மேல் ‘முருகு’ இறங்கல்; ஆட்டுப் பலி, “சூர் மடிதல்” -ன்னு பழங்குடி வழக்கம்.

கந்து = யானையைக் கட்டி வைக்கும் குறுந் தூண்; அதையும் அந்த யானையே தான் சுமந்து செல்லும்!
தன்னைக் கட்டும் ஒன்றையும் தானே சுமந்து செல்லுதல் போல்..
கட்டுப்படாக் கடவுளும், அன்பால் தானே கட்டுப்படல்;  அதுவே, கந்து + அன் = கந்தன்!

எனக்கு உடன்பாடில்லை!
அருமை!



 

“சொல்/பொருள்” என்ற சொற்களே நாளடைவில் மறைஞ்சிப் போய்..
“வார்த்தை/அர்த்தம்”-ன்னே புழக்கம் ஆயீரும்!

ஆங்கிலமாச்சும் பரவாயில்லை, “பிகர்”-ன்னு எழுதினா, உங்க பாட்டி கூட Figure என்பது இங்கிலீஷ்-ன்னு சொல்லீருவாங்க:)
ஆனா சம்ஸ்கிருதச் சொற்கள்: “வார்த்தை/அர்த்தம்”?
அதுவும் தமிழ் தானோ? எ. நம்மையே நம்ப வைத்துவிடும் தலைமுறைத் தீமை, இந்த Parasite தீமை!

நம்மிடம் இல்லாத சொற்களை, பிற மொழிகளில் இருந்து பெற்றுக் கொளல் தவறில்லை.
ஆனால் இருக்கும் சொல்லை/சொத்தை அழித்து, கடன் வாங்குதல் அறிவீனம் அல்லவா?

தொல்காப்பியர், வடசொற்களும் தமிழில் புழங்க flexibility (எ) நெகிழ்வு குடுத்தாரு.
எடுத்துக்காட்டு:
*கமலம்= தற்சமம் (அப்படியே எழுதுவது)
*பங்கயம்= தற்பவம் (பங்கஜம்: தமிழ் விதிகளுக்கு உட்பட்டு, பங்கயம் என்று மாற்றி எழுதுவது)
இந்த Flexibility பெயர்ச் சொற்களுக்குச் சரிவரும்! ஆனா இதையே எல்லாத்துக்குமே நுழைக்கப் பார்த்தால்?

அரசர்கள்-அதிகாரம் மூலமா ‘நுழைந்து’ கொண்டது வடநெறி! “மதம்” என்கிற சக்தி வாய்ந்த போர்வை போர்த்தி வந்திருக்கே? Emotional Attack!

“உன் பித்ரு-முன்னோர்கள், மேல் லோகத்தில்.. வைரவதி என்னும் நெருப்பு ஆற்றிலே, பசி பசி என்று அலறுவார்கள்; ஆகவே தர்ப்பணம் கொடு”

இப்படில்லாம் சொன்னா, எதுக்கு வம்பு.. உண்மையோ/பொய்யோ.. கொடுத்துத் தொலைச்சிருவோம் என்று செய்வீர்கள் தானே?:)

  • பண்டைத் தமிழ் மன்னர்களின் மற உணர்ச்சி = பாவம்
  • பாவத்தை ஈடு கட்டணுமா? = புண்யம்
    ஸ்வர்க்கம், நரகம், ஹோமம், யாகம் = இந்த வித்து (மாயை) தூவப்பட்டு விட்டது!

* முது குடிப் பெருவழுதி -> பல் “யாகசாலை” முதுகுடுமிப் பெருவழுதி ஆனான்!
* பெருநற் கிள்ளி = இராஜசூய யாகம் வேட்ட பெரு நற் கிள்ளி -ன்னு மாறிட்டான்!


இது ஒரு முக்கியமான கருத்து. ”பல்யாகசாலை, இராசசூய யாகம் வேட்ட” என்ற
முன்னொட்டு ஒலைச்சுவடிகளில் இல்லை. சங்க கால ஆசிரியர் பெயர் பலவும்
ஒலைச்சுவடிகளில் இல்லாதது. பின் ஏன் இந்த முன்னொட்டு அங்குதான் உரையாசிரியரிகளின்
”உரைவன்மை” தெரிகிறது.
அட்டகாசம்!
உடன்பாடான கருத்து. 



 

சம்ஸ்கிருத நெறி மட்டுமே தமிழ் மரபியல் சிதைப்பு செய்தது.


 
இதுவும் ஒரு முக்கியக் கருத்து. 




 

தொன்மத்தின் மேலேயே புராணம் ஏற்றினால்?
= எது இருந்தது? எது வந்தது?
= கண்டுபுடிக்கவே முடியாது! Thatz the Trick! Ir-reversible:(

இயற்கையான முருகனுக்கு = 6 தலை, 12 கை, 18 கண்:)
நாமளும், ஆறு-தலை/தரும் ஆறுதலை -ன்னு “வார்த்தை விளையாட்டு” விளையாடி, மகிழ்வு கொண்டு விடுகிறோம்; வெட்கக்கேடு:(

சென்னைக்கு அருகே திருப்போரூர்;
இது போன்ற பழமையான முருகன் கோட்டங்களில், இன்னிக்கும் நடுகல்லைப் பார்க்கலாம்!
உருவமோ/முகமோ இருக்காது;
ஆனா முகம் போல் எழுதி, அலங்காரத்தில் மறைச்சிருக்கும்!

யாரேனும், “ஹிந்து”  மத அபிமானிகள் வாசிக்க நேர்ந்தால் மன்னித்து விடுங்கள்.
உங்களுக்குப் “பிடிக்கலை” -ன்னு தெரியும். அதுக்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாதே?
வசையாடி/இழிவு செய்தால் கோச்சிக்குங்க; ஆனால் சங்க கால உண்மைக்கெல்லாம் கோச்சிக்காதீக, Please!

மனசாட்சி இருப்பின், நீங்களே யோசிங்களேன்.
* சமண-பெளத்தம் = பாளி மொழி -> அதன் கலப்பு தமிழில் இருக்கா?
* வேத/ பிராமணீய மதம் = சமஸ்கிருதம் -> ஏன் இது மட்டும் அதீதக் கலப்பு?
அவரவர் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்:)

சங்கத் தமிழ் வாசிப்புக்கு = “காலம் அறிதல்” இன்றியமையாதது!

ஆகா, எவ்வளவு முக்கிய கருத்தை, மிக எளிமையாம சொல்கிறீர்கள் கேஆரெஸ்!



 

14b
கொஞ்சூண்டு புற400 பாட்டில்… பஞ்ச பாண்டவர், இராமன் + இதர தெய்வங்களின்  குறிப்பு கூட வரும் (மிகச் சொற்பமாக)
ஒடனே, “பாத்தீங்களா பாத்தீங்களா? சங்கத் தமிழ்லயே ராமர் இருக்கார் பாருங்கோ; பேஷ் பேஷ்!
தமிழாள் ஸ்ரீ-ராமரையே கும்புட்டாங்க! Bolo, Jai Sri Ram!” -ன்னு எறங்கீறக் கூடாது:)

அப்படீ-ன்னா, “Sati” = தமிழாள் பண்பாடா என்ன?:) மாண்ட கணவனோடு, பெண்ணை நெருப்பிலே தள்ளல்! அதுவும் புற400-இல், ஒரு மூலையில் லேசா வரும்:(

இதுக்குத் தான் காலம் அறிதல் முக்கியம் -ன்னு சொன்னேன்!

* முதல்/இடைச் சங்கத் தமிழில்= இது போன்ற “புராணக் குறிப்பு” வராது!
கடைச் சங்க காலம் = கலப்புக்குப் பின்னரே, புராணம் லேசு மாசாய் வரும்!

இவை = “தொகை” நூல்கள்; தொகுக்கப் பட்டவை! ஒரே காலத்தி்ல் எழுதப் பட்டவை அல்ல!
*முதல்-இடைச் சங்கப் பாட்டும் வரும்
*கடைச் சங்கப் பாட்டும் விரவி வரும்
ஆனா, எதுஎது, எந்தக் காலம்? -ன்னு அகச் சான்று உண்டு!


சங்க இலக்கியம் தொகைநூற்கள். சில பாடல்களில் சில சொற்கள் புகுத்தப்பட்டிருக்கலாம்.
உதாரணமாக, ஆலமர் செல்வன் என்று உரையாசிரியர்கள் சிவனாரைக் குறிக்கிறார்கள். சங்க
காலத்தில் சிவனார் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த மாதிரியான சிலை இதுவரை கிடைத்திருக்கிறதா
என்று பார்க்கும்போது இம்மாதிரியான சில சொற்கள் வலிந்துப் புகுத்திய சொற்கள் என்பதாகவோ
அல்லது அச்சொற் பிறிதோர் ஒரு கடவுளை குறித்ததாகவோதான் சொள்ளவேண்டியிருக்கிறது.

(இத்துடன், சங்க காலத்தில் சிவனைக் குறிக்கும் சான்றுவேண்டும் என்ற நோக்கில் புனையப்பட்டத் தரவொன்றை இங்கு நினைவில் கொள்ளவேண்டியதையும் கருதில் கொள்ளவேண்டும்)



 

என் iPod Playlist -இல், பாபநாசம் சிவன், KV Mahadevan, மெல்லிசை மன்னர் MSV, இளையராஜா, Rahman -ன்னு “தொகுத்து” இருக்கு! எல்லோரும் ஒரே காலமா என்ன?:)

MSV போட்ட “Melody”-க்கு, இன்னிக்கி  Remix என்கிற “Tragedy” வேற:(
இதே போல், குறுந்தொகைக்கெல்லாம் “கடவுள் வாழ்த்து” -ன்னு Remix சொருகினார்கள்:(
நினைவில் வையுங்கள்:
எட்டுத் தொகையில்= 8 “கடவுள் வாழ்த்துச்” செய்யுள்களும், சைவ சமயப் பிற் சேர்க்கையே! Remix செய்யப்பட்டதே!

ஆம். சங்க இலக்கியங்கள், மறுத்தொகுப்பு செய்த காலத்தில் (அஃதாவது, கி.பி.ஏழாம் அல்லது
எட்டாம் நூற்றாண்டுகளில்) இடைச்செறுகள்களாக எழுதி சேர்க்கப்பட்டது. அம்மட்டோ, பதினெண்க்கீழ்க்கணக்கு நூல்களிலும் இதுபோன்றே பிற்சேர்க்கைகள்தான்.
ஆம் சரியான கருத்து!



 


வேந்தன்= மருத நில மன்னவர்கள்; (மாறிக் கொண்டே இருப்பவர்கள்)
அதே போல் வருணன் = (வருள்நன்)
வருள்= சூழ்தல்; நிலத்தை வருளும் (சூழும்) கடல்!

முது “வருண்”, முந்து கிளவாச் செறிவு  -ன்னு திருக்குறளே இருக்கு!
வருள்/வருண்= சூழ்தல்!
தமிழ் “வருணம்” வேற; சம்ஸ்கிருத “வர்ணம்” வேற;
வருள்வதால்= வருணன்; வருளும் கடற்காற்று= நெய்தல் நிலத் தெய்வம்!

ஆனால், வேந்தன் = இந்திரன் -ன்னு உரைகளில் மாற்றி எழுதினார்கள்:(
இந்திர விழா என்று மன்னனும் தோற்றுவித்தான்!
வேதக் கடவுள்கள் சோமன் /இந்திரனை, Local மதப் பரப்பலுக்காக “சற்றே ஒதுக்கி வைத்து”, ஹோமம்/ யக்ஞங்களில் மட்டும் இந்திரனை விட்டுவிடாது பிடித்துக் கொண்டனர்! ஓம் இந்திராயா ஸ்வாஹா.. யாகத்தில், இந்திரனுக்கு அவிர்ப்பாகம்!

உலகெங்கும், ஆஸ்திகம்= கடவுள் உண்டு; நாஸ்திகம்= கடவுள் இல்லை!
ஆனால் சம்ஸ்கிருத/ பிராமணீயக் கொள்கையில் மட்டுமே, ஆஸ்திகம்= வேதம் உண்டு; நாஸ்திகம்= வேதம் இல்லை!(கர்ம மீமாம்சை= இறை மறுத்து, ஆனால் வேதம் மறுக்காதவர்கள்)

இதுவும் முக்கியமான கருத்து.  அருமை. 



 

வேதம் மறுத்த புத்தரும், மகாவீரரும்.. இவர்களைப் பொருத்த மட்டில்= நாத்திகர்கள்:)
நீ, இறைவனை மறுத்தாலும் பரவாயில்லை; எங்கள் வேதத்துக்கு உடன்பட்டால்= நீயும் ஆத்திகனே!


:-)))



இரா.பா




 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Feb 20, 2017, 5:08:41 AM2/20/17
to மின்தமிழ்
ஆகா!!! இப்பொழுதுதான் தேடிப்பார்த்தேன். 

நான்  2012 இறுதியில் மின்தமிழ் குழுமம் வந்தேன். 2011 க்குப் பிறகு  கேஆர்எஸ் அவர்கள்  பதிவுகள் இங்கு  படிக்கக் கிடைக்கவில்லை. 

Okies, iPod Playlist,  Remix  போன்ற சொற்களைப் பார்த்ததும் இளவயது (இக்கால facebook பிரிவு) என நினைத்தேன்.

அப்படித்தான் தெரிகிறார்.

நன்றி. 

..... தேமொழி

Singanenjam Sambandam

unread,
Feb 20, 2017, 5:22:15 AM2/20/17
to mint...@googlegroups.com
அழகான படைப்பு. இருமுறைபடித்து இறும்பூதெய்தினேன்.

Pandiyaraja

unread,
Feb 20, 2017, 7:47:15 AM2/20/17
to மின்தமிழ்
சொல்லுக்குச் சொல் - நூற்றுக்கு நூறு - எனக்கு உடன்பாடு. நான் தனிப்பட்ட முறையில் என் நண்பர்களிடம் பேசிக் கொள்வது. நான் வேறு மதத்தினன். எனவே உரத்துப் பேச முடியாது.
ப.பாண்டியராஜா

nkantan r

unread,
Feb 20, 2017, 9:34:34 AM2/20/17
to மின்தமிழ்
WOW!
quite a forceful writing and certainly riveting; 
as it is mentioned that he had made similiar contributions earlier, i am going to google out some of them;

being a non-practicing atheist, i am happy to hear early tamils didnot have the imaginary gods;
however as an admirer of some of the tamil poems (whichever i can understand!) i am sure that divine imagery has contributed hugely in these poemsl
also i am a very vocal enthusiast about adding "letters" for some of the common sounds which we use and which do not have necessarily discriminating glyphs. though i accept the fact mentioned:
==
Does Sanskrit have Tamizh sounds ழ & ற?
But Tamizh “MUST” have sanskrit sounds ஸ்ரீ & ஷ!
இது தானே “நியாயம்“?:) புகுத்து, தமிழில் கிரந்த எழுத்தை!
======
i dont agree with the phrase இது தானே “நியாயம்“?:  that is the reason why tamil as a language survives and still we are talking, creating new literature, and why tamil is able to look ahead for the future; WE NEED SOME MORE GLYPHS!

( though i write in english in this group, i feel cringing and disgusted when i find unnecessary use of english, hindi and sanskrit in cinema, TV and modern tamil writing"; dichotomy? no! when i write and speak in tamil i write in tamil and dont use english words for simple and common tamil words and when i write in english i try to stick to english!)

regards
rnkantan



On Monday, February 20, 2017 at 12:34:00 PM UTC+5:30, தேமொழி wrote:

Pandiyaraja

unread,
Feb 20, 2017, 11:26:03 AM2/20/17
to மின்தமிழ்
>>
 when i write and speak in tamil i write in tamil and dont use english words for simple and common tamil words
>>
I salute you Sir.
P.Pandiyaraja

N. Ganesan

unread,
Feb 21, 2017, 9:29:12 AM2/21/17
to மின்தமிழ்


On Monday, February 20, 2017 at 2:22:15 AM UTC-8, singanenjan wrote:
அழகான படைப்பு. இருமுறைபடித்து இறும்பூதெய்தினேன்.


கே ஆர் எஸ் எழுதியிருந்தாலும், இந்தியா முழுமைக்கும் இருந்த மொழியை, கடவுளரை எழுதியுள்ளனர்.
இதனை பிராமி அறிமுகப்படுத்திய காலகட்டத்திலேயே காணலாம். பல வடமொழி எழுத்துக்கள், வார்த்தைகள்
உள்ளன,

வருள்வது வருணன் என்றால், வருள்வது என்றால் என்ன பொருள்?

நா. கணேசன்
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Feb 21, 2017, 9:35:18 AM2/21/17
to மின்தமிழ்


On Monday, February 20, 2017 at 6:34:34 AM UTC-8, nkantan r wrote:
WOW!
quite a forceful writing and certainly riveting; 
as it is mentioned that he had made similiar contributions earlier, i am going to google out some of them;

being a non-practicing atheist, i am happy to hear early tamils didnot have the imaginary gods;
however as an admirer of some of the tamil poems (whichever i can understand!) i am sure that divine imagery has contributed hugely in these poemsl
also i am a very vocal enthusiast about adding "letters" for some of the common sounds which we use and which do not have necessarily discriminating glyphs. though i accept the fact mentioned:
==
Does Sanskrit have Tamizh sounds ழ & ற?
But Tamizh “MUST” have sanskrit sounds ஸ்ரீ & ஷ!
இது தானே “நியாயம்“?:) புகுத்து, தமிழில் கிரந்த எழுத்தை!
======

i dont agree with the phrase இது தானே “நியாயம்“?:  that is the reason why tamil as a language survives and still we are talking, creating new literature, and why tamil is able to look ahead for the future; WE NEED SOME MORE GLYPHS!

( though i write in english in this group, i feel cringing and disgusted when i find unnecessary use of english, hindi and sanskrit in cinema, TV and modern tamil writing"; dichotomy? no! when i write and speak in tamil i write in tamil and dont use english words for simple and common tamil words and when i write in english i try to stick to english!)


சம்ஸ்கிருதம் பிராமணர்களிடையேயும், பிராகிருதம் சமண சமயத்தவர்களிடையேயும் சங்க காலத்தில் இருந்துள்ளது. பிற்காலத்திலும் 2000 ஆண்டுகளாய் இருக்கிறது.
மிக முக்கியமான எழுத்துக்களை பிராமியை தமிழ் பிராமி ஆக்கியபோது பயன்படுத்துகின்றனர் - அன்றும், இன்றும். 5 கிரந்த எழுத்துக்கள் இன்றும் தமிழர்
பரவலாக பயன்படுத்துவதுதானே. தமிழ்ப் பத்திரிகைகளில், இணையத்தில், பார்க்கலாம்.

தனித்தமிழில் எழுதுவது மரபுச் செய்யுள்கள், சிலர் கட்டுரைகள். ஆனால் பொதுவாக திசைச்சொற்களை எழுத கிரந்த எழுத்துக்கள் உண்டு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 21, 2017, 10:29:09 AM2/21/17
to மின்தமிழ், Kannabiran Ravi Shankar (KRS), vallamai, housto...@googlegroups.com


On Monday, February 20, 2017 at 1:47:42 AM UTC-8, இரா.பா wrote:
தேமொழி, கேஆர்எஸ் இங்கேயும் (மிந்தமிழில்) இருப்பவர்தான். தாங்கள்
முற்செலுத்தியதை அவரும் படித்துக்கொண்டிருக்கலாம். :-)



ஆமாம்.  ஆனால், வேந்தன் = இந்திரன், வருணன் = வேதத்தில் என்பதெல்லாம் அரதப் பழசான கடவுளர்கள். தொல்காப்பியர் வளமான மருத திணைக் கடவுளாக இந்திரனைத் தேர்ந்தெடுக்கக் காரணம் உண்டு. வேத காலத்து இந்திரன் பெருங்கடவுளாக இல்லாமல் ஆயிரம் “கண்கள்” (euphemism for yoni) கொண்டவனாக மாற்றுவது சமண சமயங்களே. பிராகிருதத்தில் இந்திரன் அகலிகை கதை சொல்லும்போது பூனை என்றாக்கினர். விரிவாக எழுதியுள்ளேன். மருதத் திணைப் பாடல்கள், பாடல்களில் சொல்லப்படும் தலைவன், அவன் பாணர் விறலியரைப் பயன்கொள்ளுதல், ... பார்ர்த்தால் ஏன் சமணர்கள் இந்திரனை மருதத் திணைக் கடவுள் ஆக்கினர் என விளங்கும். சங்க காலம் முடிந்தபின்னர் இளங்கோ அடிகள் கோவலன் என்று கண்ணனைக் கொள்வதும் நெடிய சமணர் மரபு. அந்த 5-ஆம் நூற்றாண்டு நாவலில் கோவலன் கொல்லப்படுகிறான். மாதவி = குருக்கத்தி, கண்ணகி - (கர்ணகீ) = லக்ஷ்மி, கனகவிஜயர் - விஷ்ணு-அர்ஜுனர், ... என்று ஒவ்வொரு கேரக்டருக்கும் பொருத்தமான பெயரை இளங்கோ அடிகள் கொடுத்துள்ளார்.

மாங்குடி மருதனார் மாறிவரும் சங்க கால சமயங்களைப் பற்றிச் சொல்லியுள்ளார். அதில் வரும் “மழுவாள் நெடியோன்” வருணன் (Anthropomorphic Axe) என ஆய்வுக் கட்டுரை
History of Religion, Historical Linguists பெருவாரியாகக் கூடிய கருத்தரங்கில் படித்தேன். பின்னர் தேர்ந்தெடுத்து Proceedings of 16th WSC- டெல்லி (2016) அச்சாகியுள்ளது. அதன் முன்னர்
விடங்கர்:இடங்கர் பற்றிய வரலாற்று மொழியியல் கட்டுரை நூற்றுக்கணக்கான திராவிட பாஷைகளின் மொழியியல் அறிஞர்கள் அண்ணாமலை பல்கலையில்
நடந்த கருத்தரங்கில் ஏற்கப்பட்டு, தமிழ் மற்றும் திராவிடப் பல்கலை நிறுவுநர்-துணைவேந்தர் வ. ஐ. சுப்பிரமணியனார் அஞ்சலி ஆய்வுமலரில் International School of Dravidian Linguistics ஆய்வு நிறுவனம்
அச்சாக்கியுள்ளனர்.

கேஆர் எஸ், மற்றும் தமிழன்பர்கள் வாசிக்கலாம்:

To download PDF of this published research article,

would love to know comments from Kannapiran Ravi Sankar on this paper.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 21, 2017, 10:45:18 AM2/21/17
to மின்தமிழ், Kannabiran Ravi Shankar (KRS), vallamai, housto...@googlegroups.com


On Monday, February 20, 2017 at 2:08:41 AM UTC-8, தேமொழி wrote:
ஆகா!!! இப்பொழுதுதான் தேடிப்பார்த்தேன். 

நான்  2012 இறுதியில் மின்தமிழ் குழுமம் வந்தேன். 2011 க்குப் பிறகு  கேஆர்எஸ் அவர்கள்  பதிவுகள் இங்கு  படிக்கக் கிடைக்கவில்லை. 

Okies, iPod Playlist,  Remix  போன்ற சொற்களைப் பார்த்ததும் இளவயது (இக்கால facebook பிரிவு) என நினைத்தேன்.

அப்படித்தான் தெரிகிறார்.

நன்றி. 

..... தேமொழி


Ravi lives in New York, and a good writer. Now that many interested in topics that Ravishankar wrote about, we can all welcome him back.
In those years, when I was mentioning linguists and scholars of Tamil concluding that Valluvar was a Jaina, there was strong opposition.
You can check the archives. May be that is one reason why KRS left writing in googlegroups. As a thinker, he can add value to discussions
here.

Now Pandiaraja, Themozhi, Nkandan, Arizonan, Innamburan, Singanenjan,  Dev, Banukumar, .... are interested in discussions,
and KRS can write his thought provoking ideas. 

BTW, I quickly went thru' KRS essay, but most of them can be contested in light of available evidence. For example, Skanda > Kandan in Tamil
& not the other way around.

I, for one, would like to discuss with Ravi. Like years ago.

Comparing Dravidian langages yields fresh insights into Sangam Tamil society, community hierarchy, & Religion's developments.
For example, Dravidian genesis of systemic Retroflexion, a source for retroflexion in Sanskrit, can be seen in veL-/veT-/veNT- set:

N. Ganesan

Dev Raj

unread,
Feb 21, 2017, 12:35:16 PM2/21/17
to மின்தமிழ்
யாரோ எழுதிப் போன மாசம் புறநானூற்றில் இடைச்செருகல் 
செய்த வரிகள் -

நெய் மலி ஆவுதி பொங்க பல் மாண் 
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி 
யூபம் நட்ட வியன் களம் பல கொல் ......


தேவ்
 

Dev Raj

unread,
Feb 21, 2017, 1:12:23 PM2/21/17
to மின்தமிழ்
வண் புனல் தொழுநை வார் மணல் அகல் துறை
அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர்
மரஞ்செல மிதித்த மாஅல் போலப்
புன்றலை மடப்பிடி உணீஇயர் அங்குழை...

தமிழகத்தில் தொழுநை எங்குள்ளது ?

’மரஞ்செல மிதித்த மாஅல்’ யார் ?


தேவ்

தேமொழி

unread,
Feb 21, 2017, 3:57:44 PM2/21/17
to மின்தமிழ்

அரசர்கள்-அதிகாரம் மூலமா ‘நுழைந்து’ கொண்டது வடநெறி! “மதம்” என்கிற சக்தி வாய்ந்த போர்வை போர்த்தி வந்திருக்கே? Emotional Attack!

“உன் பித்ரு-முன்னோர்கள், மேல் லோகத்தில்.. வைரவதி என்னும் நெருப்பு ஆற்றிலே, பசி பசி என்று அலறுவார்கள்; ஆகவே தர்ப்பணம் கொடு”

இப்படில்லாம் சொன்னா, எதுக்கு வம்பு.. உண்மையோ/பொய்யோ.. கொடுத்துத் தொலைச்சிருவோம் என்று செய்வீர்கள் தானே?:)

  • பண்டைத் தமிழ் மன்னர்களின் மற உணர்ச்சி = பாவம்
  • பாவத்தை ஈடு கட்டணுமா? = புண்யம்
    ஸ்வர்க்கம், நரகம், ஹோமம், யாகம் = இந்த வித்து (மாயை) தூவப்பட்டு விட்டது!

* முது குடிப் பெருவழுதி -> பல் “யாகசாலை” முதுகுடுமிப் பெருவழுதி ஆனான்!
* பெருநற் கிள்ளி = இராஜசூய யாகம் வேட்ட பெரு நற் கிள்ளி -ன்னு மாறிட்டான்!

என்று கட்டுரையாளர்  குறிப்பிடும்  முது குடிப் பெருவழுதி  என்பவன்  பல் “யாகசாலை” முதுகுடுமிப் பெருவழுதி என ஆனதற்கு சான்று காட்டும்  முயற்சி 

எனக்கு புரிதல் பிழை என்றால் விளக்கவும் 


..... தேமொழி



தேமொழி

unread,
Feb 21, 2017, 4:04:25 PM2/21/17
to மின்தமிழ்

கொஞ்சூண்டு புற400 பாட்டில்… பஞ்ச பாண்டவர், இராமன் + இதர தெய்வங்களின்  குறிப்பு கூட வரும் (மிகச் சொற்பமாக)
ஒடனே, “பாத்தீங்களா பாத்தீங்களா? சங்கத் தமிழ்லயே ராமர் இருக்கார் பாருங்கோ; பேஷ் பேஷ்!
தமிழாள் ஸ்ரீ-ராமரையே கும்புட்டாங்க! Bolo, Jai Sri Ram!” -ன்னு எறங்கீறக் கூடாது:)
என்று கட்டுரையாளர்  குறிப்பிடும்  வரிகளுக்கு சான்று காட்டும்  முயற்சி என புரிந்து கொள்கிறேன். 

மீண்டும்... எனக்குப் புரிதலில் பிழை என்றால்... விளக்கவும்.

..... தேமொழி

சி. ஜெயபாரதன்

unread,
Feb 21, 2017, 5:10:38 PM2/21/17
to mintamil
பரிபாடலில் மதுரை மாநகரைப் பற்றி வந்துள்ள பாடலில் கடவுள் பற்றி வந்துள்ளதே.

சி. ஜெயபாரதன்

                         
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்;
5
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை,
10
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.

--

தேமொழி

unread,
Feb 21, 2017, 5:43:47 PM2/21/17
to மின்தமிழ்

இதோ வேறு கோணங்கள் கொண்ட இரண்டு புறப் பாடல்கள் ஐயா.



புறம் 335. கடவுள் இலவே! 

ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்                      10
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.


புறம் 378. எஞ்சா மரபின் வஞ்சி!

அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்                  20

சுருக்கமாக ...
சங்க காலத்தின் இறைவழிபாட்டு முறை,   அது பண்பாட்டுக் கலப்பினால் பெற்ற மாற்றம் குறித்துதான் கட்டுரை சொல்கிறது. 

பாடல்கள்  தொகுக்காப்பட்ட காலத்தில் நிகழ்ந்த  இடைச்செருகல்கள், உரையாசிரியர்களின் தன்குறிப்பேற்று  விளக்கங்கள்  ஆகியவற்றுடன் 

சங்கத் தமிழ் வாசிப்புக்கு  “காலம் அறிதல்” இன்றியமையாதது" என்பது எழுத்தாளர் முன் வைக்கும் கருத்து.

சங்ககாலம் என்பதன் வரையறை என்ன?  

ஏன் ஒருவர்  கடவுள் இலவே!  என்ற பொருள் தரும் பாடல் எழுதுகிறார்? ஏன்  கண்ணகி வாயிலாக பரிகாரம் செய்வது பீடு அன்று என்று இளங்கோ கூறுகிறார்?

ஏன் மன்னன் ஒருவன் வேள்விகள் பல செய்த குறிப்பு வருகிறது? செய்தது எந்தக் கடவுளுக்கு?

எது முன் எது பின்?

..... தேமொழி 





..... தேமொழி

N. Ganesan

unread,
Feb 22, 2017, 9:40:03 AM2/22/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Tuesday, February 21, 2017 at 12:57:44 PM UTC-8, தேமொழி wrote:

அரசர்கள்-அதிகாரம் மூலமா ‘நுழைந்து’ கொண்டது வடநெறி! “மதம்” என்கிற சக்தி வாய்ந்த போர்வை போர்த்தி வந்திருக்கே? Emotional Attack!

“உன் பித்ரு-முன்னோர்கள், மேல் லோகத்தில்.. வைரவதி என்னும் நெருப்பு ஆற்றிலே, பசி பசி என்று அலறுவார்கள்; ஆகவே தர்ப்பணம் கொடு”

இப்படில்லாம் சொன்னா, எதுக்கு வம்பு.. உண்மையோ/பொய்யோ.. கொடுத்துத் தொலைச்சிருவோம் என்று செய்வீர்கள் தானே?:)

  • பண்டைத் தமிழ் மன்னர்களின் மற உணர்ச்சி = பாவம்
  • பாவத்தை ஈடு கட்டணுமா? = புண்யம்
    ஸ்வர்க்கம், நரகம், ஹோமம், யாகம் = இந்த வித்து (மாயை) தூவப்பட்டு விட்டது!

* முது குடிப் பெருவழுதி -> பல் “யாகசாலை” முதுகுடுமிப் பெருவழுதி ஆனான்!
* பெருநற் கிள்ளி = இராஜசூய யாகம் வேட்ட பெரு நற் கிள்ளி -ன்னு மாறிட்டான்!

என்று கட்டுரையாளர்  குறிப்பிடும்  முது குடிப் பெருவழுதி  என்பவன்  பல் “யாகசாலை” முதுகுடுமிப் பெருவழுதி என ஆனதற்கு சான்று காட்டும்  முயற்சி 



முதுகுடிப் பெருவழுதி எனப் பெயர் இல்லை. பாண்டிய மன்னன் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) பெருவழுதி வருணனுக்கு யூபம் நட்டி யாகம் செய்த
நாணயங்கள் வெளியிட்டுள்ளான். அவர் பெயர்: முதுகுடுமிப் பெருவழுதி. தொன்மையான குடும்பத்தில் தோன்றினவன் என்பதை
முதுகுடுமி என அழைத்தனர். அவனது நாணயம் பற்றி வல்லமை இதழில் ஆய்வுக் கட்டுரை விரிவாக எழுதியுள்ளேன். அப்பொழுது லிங்கக் குறியீடு சிவனுக்கு
ஏறாத காலம். 

பழுத்தல் என்ற வினையின் அடியாகப் பிறந்தது பண்டு, பாண்டியர், பாண்டவர். பாண்டியர் என்ற சொல்லையும், பாண்டவர் என்ற சொல்லையும்
விளக்கினவர் பாணிநி முனிவரின் இலக்கணத்துக்கு மஹாபாஷ்யம் எழுதிய பதஞ்சலி முனிவர்.

பகு:வகு. (ஆயர்/இடையர்) பாடிவாசல்:வாடிவாசல் என்பது போல, பழுதி (Cf. pANDya/pANDava) என்ற சொல்லில் பகரம் வகரம் ஆகி வழுதி எனப்படுகின்றனர்
பாண்டியராஜாக்கள். அக்கொடிவழியில் வந்தவன் முதுகுடுமிப் பெருவழுதி. ராஜசூய யாகம் வேட்டவன் சோழப் பேரரசன். அவன் நற்கிள்ளி எனப்
போற்றப்படுகிறான்.

நா. கணேசன்

செல்வன்

unread,
Feb 22, 2017, 9:56:36 AM2/22/17
to mintamil, vallamai
அடலருந் துப்பின் .. .. .. .. 
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு                                      5

இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்                      10

கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

---------

உரை: அழித்தற்கரிய வலிமையையுடைய … குரவமலர், தளவுமலர், குருந்த மலர், முல்லைமலர் ஆகிய இந்நான்கு மலர்களைத் தவிர வேறு மலர்களும் இல்லை. 

கரிய அடியையுடைய வரகு, பெரிய கதிரையுடைய தினை, சிறிய கொடியில் விளையும் கொள், புள்ளிகள் நிறைந்த அவரை இவை நான்கைத் தவிர வேறு உணவுப்பொருட்களும் இல்லை. 

 துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய இந்நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகளும் இல்லை. 

 மனம் பொருந்தாத பகைவரின் முன்னே நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து, ஒளிறும் உயர்ந்த கொம்புகளையுடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண்பட்டு இறந்தவர்களின் நடுகல்லைத் தவிர,  நெல்லைத் தூவி வழிபடுவதற்கேற்ற கடவுளும் வேறு இல்லை.

---------

உலகில் பலவகை மலர்கள் இருப்பினும் ரவமலர், தளவுமலர், குருந்த மலர், முல்லைமலர் ஆகியவையே மிக சிறப்பானவை

என துவங்கி

கடவுளரில் நடுகல்லாக வழிபடும் வீரர்களே சிறப்பனாவர்கள் என பாடல் முடிகிறது

இந்த நான்கு வகை மலர்களை அன்றி வேறு மலர்கள் உலகில் ஏராளம் உண்டு, அவையும் அழகானவையே என்பது கவிஞருக்கு தெரியாதா?

ஆனால் ஒன்றை போற்றுகையில் அதை உலகிலேயே உயர்ந்தது என சொல்லுதல் கவிதையில் வழக்கமே

குறளிலும் இதை காணலாம்

கடவுள் வாழ்த்தில் கடவுளை அப்படி போற்றி புகழ்ந்த வள்ளுவர் கற்பின் சிறப்பை குறிக்கையில்

"தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யென பெய்யும் மழை"

என கணவனை தொழுதாலே போதும், தெய்வத்தை தொழவே வேண்டாம் என்கிறார்

இதன் பொருள் வள்ளுவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதா அல்லது வேறு கடவுளரை வணங்ககூடாது என்பதா?

அல்லவே?

அது ஒரு உயர்வுநவிற்சி அணி மட்டுமே

அதுபோல் தான் மாங்குடி கிழாரின் இப்பாடலும்



திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 22, 2017, 10:25:27 AM2/22/17
to mintamil

2017-02-22 20:26 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
"தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யென பெய்யும் மழை"

என கணவனை தொழுதாலே போதும், தெய்வத்தை தொழவே வேண்டாம் என்கிறார்

இதன் பொருள் வள்ளுவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதா அல்லது வேறு கடவுளரை வணங்ககூடாது என்பதா?

கணவனைத் தொழுதாலும் சரி
கடவுளைத் தொழுதாலும் சரி

யார் சொன்னாலும் பெய் என்றால் மழை பெய்யாது.

அப்படி யாராச்சும் சொல்லி மழை பெய்தால் சொல்லுங்கள். வந்து பார்க்கிறோம். :))

குறள்ல எழுத்துப்பிழைய வச்சிக்கிட்டு இப்படியே காமேடி பண்ணிக்கிட்டு இருங்க. :))

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளா !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

செல்வன்

unread,
Feb 22, 2017, 10:38:03 AM2/22/17
to mintamil

2017-02-22 9:25 GMT-06:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
கணவனைத் தொழுதாலும் சரி
கடவுளைத் தொழுதாலும் சரி

யார் சொன்னாலும் பெய் என்றால் மழை பெய்யாது.

முலையை திருகி எறிந்தால் மதுரை நகர் பற்றி எரியுமா?

சிலம்பிலும் எழுத்துபிழைன்னு சொல்லி அதையும் திருத்த போறீங்களா? :-) என்னன்னு?




--

தேமொழி

unread,
Feb 22, 2017, 5:06:23 PM2/22/17
to மின்தமிழ்


On Wednesday, February 22, 2017 at 6:56:36 AM UTC-8, செல்வன் wrote:
அடலருந் துப்பின் .. .. .. .. 
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு                                      5

இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்                      10

கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

---------

உரை: அழித்தற்கரிய வலிமையையுடைய … குரவமலர், தளவுமலர், குருந்த மலர், முல்லைமலர் ஆகிய இந்நான்கு மலர்களைத் தவிர வேறு மலர்களும் இல்லை. 

கரிய அடியையுடைய வரகு, பெரிய கதிரையுடைய தினை, சிறிய கொடியில் விளையும் கொள், புள்ளிகள் நிறைந்த அவரை இவை நான்கைத் தவிர வேறு உணவுப்பொருட்களும் இல்லை. 

 துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய இந்நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகளும் இல்லை. 

 மனம் பொருந்தாத பகைவரின் முன்னே நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து, ஒளிறும் உயர்ந்த கொம்புகளையுடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண்பட்டு இறந்தவர்களின் நடுகல்லைத் தவிர,  நெல்லைத் தூவி வழிபடுவதற்கேற்ற கடவுளும் வேறு இல்லை.

இதில் வருவது புலிபசித்தாலும் புல்லைத் தின்னாது போன்ற குறிப்பாக எனக்குத் தோன்றுகிறது (கண்ணகி  பீடன்று எனச் சொன்னது  போல)
தங்கள் தொன்ம வழக்கப்படி வீரத்திருமகன்களின் நடுகல்லை வழிபடுவதை மேன்மையானது  கருதும் மனப்பாங்கு.

இக்கால மக்கள் போல "தமிழன்டா" என்ற  கருத்து தொனிக்கிறது



..... தேமொழி

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2017, 11:49:09 PM2/22/17
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan
//// தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யென பெய்யும் மழை ///

இக்குறளுக்கு என் விளக்கம் :  

அந்தக் காலத்தில் தெய்வத்தைத் தொழும் மாதர் பலர்.  கணவனைத் தொழுதெழும் மாதர் இலர்; [கணவன் சொற்படி நடக்காத மாதர் பலர்]. ஆணாதிக்க உலகில் வள்ளுவர் எழுதுகிறார் : தெய்வம் தொழாது கணவனை வணங்கும் மாதர், பெய்யெனப் பெய்யும் மழை என்று நகைப்பாகச் சொல்கிறார்.   

அதாவது கணவனைத் தொழுதெழும் மாதர் அநேகமாக அந்தக் காலத்தில் இல்லை. கணவனை மீறும் மாதரே அதிகம்.

சி. ஜெயபாரதன்.

செல்வன்

unread,
Feb 23, 2017, 10:21:20 AM2/23/17
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan, Oru Arizonan

2017-02-22 22:48 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
அதாவது கணவனைத் தொழுதெழும் மாதர் அநேகமாக அந்தக் காலத்தில் இல்லை. கணவனை மீறும் மாதரே அதிகம்.


எந்த காலத்திலும் அப்படிப்பட்ட மாதர்கள் இருந்ததில்லை :-)

சம உரிமை எல்லாம் வேண்டாம், ஒரு 5% அல்லது 10% உரிமையாவது கொடுங்கள் எனத்தான் காலம்காலமாக ஆண்கள் கேட்டு வருகிறார்கள். பாவப்பட்ட ஆண்களுக்கு குரல் கொடுக்க யாருமே இல்லை :-)

இந்த அழகில் காலில் விழுந்து, தொழுதெழுந்து...யப்பாடி...கேட்கவே நகைச்சுவையா இல்லை?

வள்ளூவர் தன் மனைவியிடம் காமடி பண்ண இந்த குறளை எழுதியிருக்கலாம். இதைபடித்தபின் அவர் மனைவி "ஆசை, தோசை, அப்பளம், வடை" என அவர் கன்னத்தில் ஒரு செல்ல இடி இடித்திருப்பார் என தான் எனக்கு தோன்றுகிறது :-)


--

nkantan r

unread,
Feb 23, 2017, 10:34:07 PM2/23/17
to மின்தமிழ்
when i wrote ஊ வே சு  inplace of ஊ வே  சா , NG had great pleasure in pointing out:
==========
On Wednesday, February 22, 2017 at 6:29:01 AM UTC-8, nkantan r wrote:

தமிழ்த்தாத்தா ஊ வே சு தமிழ் பேசும் பிராமணரே; 


ஊ வே சு என்று எந்த தமிழ்த்தாத்தாவும் இருந்ததில்லை.

fyi

NG
========

Do note i am r n kantan not nkandan (NG surely knows the difference!)

regardas
rnkantan



On Tuesday, February 21, 2017 at 9:15:18 PM UTC+5:30, N. Ganesan wrote:


Ravi lives in New York, and a good writer. Now that many interested in topics that Ravishankar wrote about, we can all welcome him back.
In those years, when I was mentioning linguists and scholars of Tamil concluding that Valluvar was a Jaina, there was strong opposition.
You can check the archives. May be that is one reason why KRS left writing in googlegroups. As a thinker, he can add value to discussions
here.

Now Pandiaraja, Themozhi, Nkandan, Arizonan, Innamburan, Singanenjan,  Dev, Banukumar, .... are interested in discussions,
and KRS can write his thought provoking ideas. 


nkantan r

unread,
Feb 23, 2017, 10:47:01 PM2/23/17
to மின்தமிழ்
though i am a staunch non-believer in "GODS" (as b shaw mentions in Man and Superman), the simple essence of the poem is

1) there had been believers in gods of myriad variety
2) the poet points out that sacrifice of a brave man is worth more worshipping than these gods ( the man who helped and martyred for the cause is more useful and worship-worthy than the so called gods to whom many things are "donated"


(see KCR donating  governement gold to tirupati!  http://www.news18.com/news/india/public-funds-for-private-vows-kcr-donates-rs-5-cr-to-tirumala-temple-1351978.html)

regards
rnkantan

N. Ganesan

unread,
Feb 24, 2017, 12:06:28 AM2/24/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Wednesday, February 22, 2017 at 6:56:36 AM UTC-8, செல்வன் wrote:
அடலருந் துப்பின் .. .. .. .. 
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு                                      5

இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்                      10

கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

---------


இந்தப் புறப்பாட்டு சங்ககாலச் சமூகத்தின் பல செய்திகளைச் சொல்லிச் செல்கிறது. மேல்நிலையில் வடக்கே இருந்து வேளிர் வருகை. யாகங்கள், நாற்பால் என்னும் வருண தர்மம் முதலியன
ஆரம்பிக்கின்றன. சோழன் நற்கிள்ளி பல ராஜசூய வேள்விகளை நடாத்துகிறான். பாண்டியன் பல்யாகசாலை வேட்ட முதுகுடுமிப் பெருவழுதி ஆகிறான் (பழுதி:வழுதி, பாடிவாசல்:வாடிவாசல், போல).
பாண்டியரும், சேரரும், அதியமான்களும், மலையமான்களும் புரந்த அசுவமேத யாகங்களுக்கு வருணன் வழிபாட்டுடன் நாணயங்களை வெளியிட்டமைக்கு சான்றுகள் கிடைத்துள்ளன.
நான்கு வருணங்களின் பேதம் பற்றி ‘வேற்றுமை தெரிந்த நாற்பால்’ என்று பாண்டியன் நெடுஞ்செழியன் குறிப்பிடுகிறான்.

இந்தப் புறப்பாடல் மேல்நிலையில் உருவாகும் 4 வருணங்களுக்கு மாறாக  எங்கும் கிடைக்கும் நான்கு சாதாரண பூக்கள், அடிநிலையில் இருந்த நான்கு மக்கள், நான்கு மேட்டுக்காட்டுத் தானியங்கள், யாகங்கள் போன்றன அரசர்கள் ஆதரிக்கும் முன் மக்கள் வழிபாடு செய்த நடுகற்கள், ... என்று குறித்துப் பாடும் புரட்சிக் கவிதை இது. 

சங்ககாலப் புறப்பாட்டில் வருணப் பகுப்பைப் பாண்டிய மன்னன்
நெடுஞ்செழியன் குறிப்பிட்டுப் பாடுகிறான். புறம் 335-ஆம்
பாடல் வடஇந்தியாவின் நால்வர்ணத்தை திருப்பிப் போட்டுக் கேள்வி கேட்கும் பாடல்.
335
அடலருந் துப்பின்............
.........................குருந்தே முல்லையென்
றிந்நான் கல்லது பூவு மில்லை
கருங்கால் வரகே யிருங்கதிர்த் தினையே
5சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொ
டிந்நான் கல்ல துணாவு மில்லை

துடியன் பாணன் பறையன் கடம்பனென்
றிந்நான் கல்லது குடியு மில்லை

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
10ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே.
அடிநிலை மாந்தர்கள், எங்கும் கானக்காட்டில் கிடைக்கும்
தானியங்கள் 4, சாதாரணமாக வேலியிலும், பொட்டலிலும் பூக்கும்
நான்கு பூக்கள், ... என நான்கு, நான்கு எனச் சொல்லும் அரிய சங்கப்பாடல்.
சாணியில் செய்த பிள்ளையார் மீது செருகும் பிள்ளையார்பூவும்
அந்நான்கு பூக்களில் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், குருந்து, காட்டு
முல்லை இரண்டே கிடைத்தது. மற்றிரண்டு வனமலர்கள் பெயர்
மறைந்துவிட்டன. பட்டிப்பூவும் அந்த இரண்டில் ஒன்றாக இருக்கமுடியும்.

கசப்பினால் ஆடுமாடுகளும் தின்னாதது இந்தப் பட்டிப்பூ. ஆனால்,
புற்றுநோய்க்கு இரண்டு முக்கிய மருந்துகளை அளித்துள்ளது.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Mar 17, 2017, 10:33:06 AM3/17/17
to மின்தமிழ், vallamai


On Monday, February 20, 2017 at 2:22:15 AM UTC-8, singanenjan wrote:
அழகான படைப்பு. இருமுறைபடித்து இறும்பூதெய்தினேன்.


கே ஆர் எஸ் எழுதியிருந்தாலும், இந்தியா முழுமைக்கும் இருந்த மொழியை, கடவுளரை எழுதியுள்ளனர்.
இதனை பிராமி அறிமுகப்படுத்திய காலகட்டத்திலேயே காணலாம். பல வடமொழி எழுத்துக்கள், வார்த்தைகள்
உள்ளன,

வருள்வது வருணன் என்றால், வருள்வது என்றால் என்ன பொருள்?

நா. கணேசன்
 

வருணன் வேத காலத்திலும், சங்க காலத்திலும் முக்கியமான கடவுள். Anthropomorphic Axe உருவில்
முதல் சிலை அவனுக்குத்தான். இறப்புக்கு அதிதெய்வம். இன்றும் ஹிந்து திருமணங்களில்
சொல்லப்படும் மந்திரங்கள் - முதலில் ராஜாக்கள் பட்டாபிஷேகத்தில் சொல்லப்பட்டவை -
வருணன் தொடர்பானவை.


கண்ணபிரான் ரவிசங்கர் கட்டுரை படித்தேன். ஹிந்து, பௌத்தம், சமண சமயங்கள்,
இரும்பு, குதிரை, ஐயனார் வழிபாடு, ... பற்றிய வட - தென் இந்திய சமய, சமூக வரலாறுகளைக்
காட்டுவதாக இக்கட்டுரை அமையவில்லை.

நகைச்சுவையாக, இரு கட்டுரைகளில் ஜெயமோகன் ட்விட்டரில் கரச எழுதுபவை பற்றி எழுதியுள்ளார். படிக்க வேண்டியவை.

தூய்மைவாதிகள் வருக!


பனித்தமிழ்:

வேந்தன் அரசு

unread,
Mar 17, 2017, 12:04:06 PM3/17/17
to vallamai, மின்தமிழ்
புல்லிலை எருக்கம் ஆயினும் கடவுள் பேணேம் என்னா’ என்பதால், காணாமல்போன் இரண்டில் ஒன்று எருக்கமாக இருக்கலாம்.

வருணனைப்பாடும் சங்கப்பாடல்கள் உளவா?



17 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 7:33 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages