தமிழ் இலக்கியங்களில் ஓசோன்!

11 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Nov 21, 2009, 5:31:06 PM11/21/09
to Min Thamizh
தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக
  1. ட்ரோபோஸ்பியர்  (troposphere)
  2. ஸ்ட்ரோட்ஸ்பியர் (stratosphere)
  3. மீஸோஸ்பியர்      (mesosphere)
  4. தெர்மாஸ்பியர்      (thermosphere)
  5. எக்ஸோஸ்பியர்    (exosphere)
  6. நத்திங்னஸ்            (nothingness)
என அவை அமைந்துள்ளன. 
http://www.dinamani.com/Images/article/2009/11/22/22tamil1.jpg

இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது
ட்ரோபோஸ்பியர்.

இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது. 

இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.

"இருமுந்நீர்க் குட்டமும்
 வியன் ஞாலத்து அகலமும்
 வளிவழங்கு திசையும்
 வறிதுநிலைஇய ஆகாயமும்
." (புறநா - 20) 

என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

"செஞ்ஞாயிற்றுச் செலவும்
 அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
 சூழ்ந்த மண்டிலமும்
 வளிதரு திசையும்
 வறிதுநிலை காயமும்
." (புறநா - 30) 

என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
 இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய
 வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்
." (புறநா - 365) 

என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இவற்றுள் "திசை" என்னும் பகுதியில் காற்று இருக்கும். "ஆகாயம்", "நீத்தம்" என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. "நீத்தம்" என்பது இன்றைய அறிவியலார் கூறும் "வெறுமை" (நத்திங்னஸ்) என்னும் பகுதி. 

புவிக்கு மேல் இருக்கின்ற இரண்டாவது பகுதியான "ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும் பகுதியில் தான் "ஓசோன்" எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது. இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது.  20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?

"நிலமிசை வாழ்வர் அலமரல் தீர
 தெறுகதிர் வெம்மை கனலி தாங்கி
 காலுண வாக சுடரொடு கொட்கும்
 அவிர்சடை முனிவரும் மருள
." (புறநா - 43) 

என்னும் பாடல் வரிகளின் கருத்து, "புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்" என்பதாகும். 

மேலும், முருகக் கடவுளின் ஒரு கை, "விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது" என்று திருமுருகாற்றுப்படை (107) யிலும், "சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின் இணையடி தொழுதோம்" என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி - 18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது.  முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே, மற்ற மதத்தினரும் பகுத்தறிவுவாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும். 

முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று. 

கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நம் அனைவரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறதல்லவா?

கா.மு.சிதம்பரம்

நன்றி:- தினமணி

Innamburan Innamburan

unread,
Nov 21, 2009, 8:22:46 PM11/21/09
to mint...@googlegroups.com
திரு. காமு.சிதம்பரம் அவர்களை பிடிக்கவேண்டும். வைகறையில், இந்த இடுகை மகிழ்வூட்டியது; அறிவு வளர்த்தது; மொழியை போற்றியது; தொன்மை பாராட்டியது.

இன்னம்பூரான்

2009/11/22 Kannan Natarajan <thar...@gmail.com>

Hari Krishnan

unread,
Nov 21, 2009, 11:25:17 PM11/21/09
to mint...@googlegroups.com


2009/11/22 Innamburan Innamburan <innam...@googlemail.com>

திரு. காமு.சிதம்பரம் அவர்களை பிடிக்கவேண்டும். வைகறையில், இந்த இடுகை மகிழ்வூட்டியது; அறிவு வளர்த்தது; மொழியை போற்றியது; தொன்மை பாராட்டியது.

இன்னம்பூரான்

வளிமண்டலத்தை மொத்தம் 49 பகுதிகளாகப் பிரித்திருந்தனர்.  மா-ருத் என்றால் ‘அழாதே’ என்று பொருள்படும்.  எப்படி அப்படி ஒரு பெயர் வந்தது, வளிமண்டலத்தின் 49 பகுதிகள் என்னென்ன என்றெல்லாம் சொல்லலாம்.  ஆனால் செங்கிருதத்தில் இருக்கிறது..... மொழி எல்லைகளைக் கடந்து சிந்தனை மரபாகப் பார்க்கும் மனநிலை இருக்குமானால், மொழிவெறுப்பு இடையிடாது என்றால் மற்ற விவரங்களைத் தருகிறேன்.

(இதுக்கே, தமிழ்ல இருக்குன்னு சொன்னா, வடமொழில இருக்குன்றான்...என்ற முணுமுணுப்பு எழத்தான் போகிறது.  அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்.  என் தமிழ்ப்பற்று எவருடைய தமிழ்ப்பற்றுக்கும் இளைத்ததன்று.{இளைத்ததல்ல என்பதற்கும் இளைத்தன்று என்பதற்கும் உள்ள வேறுபாடு அறிந்தே பயன்படுத்துகிறேன்.)


--
அன்புடன்,
ஹரிகி.

Satheesh kumar R

unread,
Nov 22, 2009, 12:22:52 AM11/22/09
to mint...@googlegroups.com
ஆஹா!
 
இவற்றையெல்லாம் ஒழுங்காகக் கற்றிருந்தோமானால், மேலைநாட்டு அறிவியல்தான் சிறந்தது என்று சொல்பவர்களுக்கு நல்ல பதில் எப்பொழுதோ கொடுத்திருக்கலாமே.
 
நல்லதொரு கட்டுரை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி,
சதீஷ்

22 நவம்பர், 2009 1:31 am அன்று, Kannan Natarajan <thar...@gmail.com> எழுதியது:

Tthamizth Tthenee

unread,
Nov 22, 2009, 12:25:05 AM11/22/09
to mint...@googlegroups.com
மொழி வெறுப்பு  இடையிடாது
 
அப்படியே இடையிட்டாலும் அவற்றை  ஒதுக்கி
 
கற்றுக் கொள்ள முயலுவோம்  பல அறிவார்ந்த  செய்திகளை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
22-11-09 அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதினார்:

devoo

unread,
Nov 22, 2009, 1:34:36 AM11/22/09
to மின்தமிழ்
Nov 22, 9:25 am, Hari Krishnan
//வளிமண்டலத்தை மொத்தம் 49 பகுதிகளாகப் பிரித்திருந்தனர். மா-ருத்

என்றால்
‘அழாதே’ என்று பொருள்படும். எப்படி அப்படி ஒரு பெயர் வந்தது,
வளிமண்டலத்தின்
49 பகுதிகள் என்னென்ன என்றெல்லாம் சொல்லலாம்.
தமிழ்ல இருக்குன்னு சொன்னா, வடமொழில இருக்குன்றான்... //

அப்படியெல்லாம் அழமாட்டோம் ஹரி அண்ணா, ஒன்றின் தொடர்ச்சி மற்றதில் என்று
எடுத்துக்கொள்ளும் சித்த பரிபக்குவம் மிக்கவர்களின் குழுமம் இது.கேட்க
ஆவலாக உள்ளது; தொடருங்கள்.

தேவ்

Hari Krishnan

unread,
Nov 22, 2009, 1:52:51 AM11/22/09
to mint...@googlegroups.com


2009/11/22 devoo <rde...@gmail.com>
கதை இங்கே இருக்கிறது: 


ஆவாஹ, ப்ரவாஹ, ஸம்வாஹ, உத்வாஹ, விவாஹ, பரிவாஹ பராவாஹ என்று வளிமண்டலத்தின் ஏழு அடுக்குகளுக்குப் பெயர்.  ஒவ்வொரு ஏழு அடுக்குக்கும் ஏழு ஏழு உட்பிரிவுகள் உண்டு.  

ஒருமுறை அனுமானையும் time-zone விவகாரத்தையும் சற்றே இந்தக் கால அணுகுமுறையோடு பார்க்கப்போக, ‘எல்லாத்தையும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்க முயலும் அஸோடு’ என்று (இங்கேயே இருக்கின்றார் அந்தப் பெரியவர்) பரிகசிக்கப்பட்டதன் பின் நான் இந்த மாதிரி விஷயங்களில் கம்முன்னு ஆய்ட்டேன்.  இந்த 49 belts of wind என்ன பொருள்படும் என்பதை அறிந்தவர்கள் சொல்லட்டும்.  நாம கேட்டுக்கலாம்.  ம்ம்???  :-))
 

N. Kannan

unread,
Nov 22, 2009, 5:27:29 AM11/22/09
to mint...@googlegroups.com
2009/11/22 Hari Krishnan <hari.har...@gmail.com>:

>>மொழி எல்லைகளைக் கடந்து சிந்தனை மரபாகப் பார்க்கும் மனநிலை
> இருக்குமானால், மொழிவெறுப்பு இடையிடாது என்றால் மற்ற விவரங்களைத் தருகிறேன்.
> (இதுக்கே, தமிழ்ல இருக்குன்னு சொன்னா, வடமொழில இருக்குன்றான்...என்ற
> முணுமுணுப்பு எழத்தான் போகிறது.  அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்.

ஹரிகி:

இந்தியமரபு என்பது ஒன்றுதான் என்று அறிவியலும் ஒத்துக்கொள்கின்ற
இக்காலத்தில் வெறுப்போடு பேசும் மாந்தரை நாம் ஏன் கணக்கில் கொள்ள
வேண்டும்?

நமது அறிவியல் சிந்தனை மரபைப் பற்றி நிரப்பச் சொல்லுங்கள்.
கேட்கத்தயாராயுள்ளோம். நீங்கள் இது பற்றியெல்லம் முன்பு தமிழ்.நெட்டில்
பேசியவை நினைவிற்கு வருகின்றன.

கண்ணன்

Innamburan Innamburan

unread,
Nov 22, 2009, 6:38:42 AM11/22/09
to mint...@googlegroups.com
பரிஹாஸத்தைப் புறக்கணிக்க, ஹரிகி அவர்களே.
இன்னம்பூரான்

2009/11/22 N. Kannan <navan...@gmail.com>



--
Reply all
Reply to author
Forward
0 new messages