தாக்கம் என்றால் என்ன அர்த்தம் ?

993 views
Skip to first unread message

Jean-Luc Chevillard

unread,
Nov 4, 2009, 3:13:35 PM11/4/09
to minT...@googlegroups.com, Vinodh Rajan
Dear Vinodh,

தாக்கம் என்றால் என்ன அர்த்தம் ?

please clarify for me your use of the word "தாக்கம்" inside the sentence
fragment "ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு." contained
inside your message.

Does it mean that Tamil has been ATTACKED by Prakrit?

Does it mean that Tamil has been INFLUENCED by Prakrit?

Does it mean that Tamil has BORROWED from Prakrit?

When the famous French writer Marcel Proust (1871-1922) (SEE
<http://en.wikipedia.org/wiki/Proust>) uses the word "vétiver" (also
spelt "vétyver") inside his famous book "À la recherche du temps perdu"
(SEE <http://en.wikipedia.org/wiki/In_Search_of_Lost_Time>), nobody in
France thinks that French is being ATTACKED by Tamil (=French "Tamoul"),
although "vétiver" is a Tamil word (வெட்டி வேர்).

Please clarify!

Yours with every good wish

-- Jean-Luc (தமிழ் மாணவன், Paris)

வினோத் ராஜன் a écrit :
>> இது சுவாரசியமான பாயிண்ட். தொல்தமிழில் பல சொற்கள் பிராகிரதத்தில்
>> இருந்து எடுக்கப் பட்டன் (உம்: அமைச்சர், அவை, படிகம்). அது பல்லவர்
>> காலத்திற்க்கு முன்பு.
>>
>
> ஆம்.
>
> ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு. பிறகு
> தான் நேரடி சமஸ்கிருத தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
>
> இன்று தமிழ்ச்சொற்களாக அறியப்படுபவை பல பிராகிருத மூலத்தை கொண்டவை தான்.
>
> நா.கணேசன் அவர்களே கூட , கண்ணனும் (< கண்ஹ < கிருஷ்ண ), கண்ணகி ( <
> கர்ணகீ ), மாசாத்துவனும் முதலியவை எல்லாம் கூட பிராகிருத மூலம் கொண்டவை
> என்று நிறுவியுள்ளாரே.
>
> V
>
> On Nov 4, 11:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
>> On 4 Nov, 15:56, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>> wrote:
>> இதோ
>>
>>
>>> நேயம் என்பதற்கு தமிழ் லெக்ஸிகன் பட்டியல் இடும் பொருள்
>>> வரிசையும், சொற்பிறப்புக் குறிப்புகளும் ----
>>>
>>> நேயம் -- n <Pkt. nE-am < snEha
>>> 1) Love, affection; அன்பு.
>>>
>
>
>> அதன் பின்னர் நேராக சமஸ்கிருத தாக்கம் வந்தது
>>
>> கடந்த சில நூறு ஆண்டுகளாக தமிழர்கள் சமஸ்கிருத வார்த்தைகளை நேரடியாகவே -
>> அதாவது தமிழ் சொல்மாற்ற விதிகளுக்கு உட்பட்டு- வாங்குகிறது என்பது என்
>> அவதானம் .
>>
>> உதாரணம் : நேயம் மூல சமஸ்கிருதம் பிராகிருதம் மூலமாக தமிழில் வந்தது. அதே
>> மூலச்சொல் சிநேகிதன் என்றும் தற்கால தமிழில் வருகின்றது.
>>
>> விஜயராகவன்
>>
>
>

விஜயராகவன்

unread,
Nov 4, 2009, 3:37:08 PM11/4/09
to மின்தமிழ்
Vinod may give his own answers. My answer is 'influenced by'. I don't
know whether this is the dictionary meaning or not, but this is how it
is used nowdays esp. in internet Tamil. Even though I was also puzzled
by it's meaning since it comes close to தாக்குதல் involving some kind
of force, I think it is generally used to mean 'influenced by'. If I
am wrong , I will change my wording

Vijayaraghavan


On 4 Nov, 20:13, Jean-Luc Chevillard <jean-luc.chevill...@univ-paris-

> >> விஜயராகவன்- Hide quoted text -
>
> - Show quoted text -

Jean-Luc Chevillard

unread,
Nov 4, 2009, 4:27:23 PM11/4/09
to mint...@googlegroups.com
Dear Vijayaraghavan,

let us wait indeed for Vinodh's comment,

I was certainly influenced in my reading/interpreting
by my immersion in ancient texts.

The first time I saw (more than 20 years ago) the word "தாக்குதல்"
was when I tried to understand the following குறள் verse:

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
(குறள் 1082)

Best

-- jlc


விஜயராகவன் a écrit :

N. Ganesan

unread,
Nov 4, 2009, 5:59:40 PM11/4/09
to மின்தமிழ்
ஜ்யான் - லூய்க்,

செல்வாக்கு, வசப்பாடு = influence

தாக்கம் = impact (ஒரோவழி influence ஆகும்)

-------

அணங்கு - சங்கத்தில் முக்கியச் சொல்.

வி. எஸ். ராஜத்தின் கட்டுரையில் (JAOS)
பேசாப் பொருள்கள் பல உள.

ஹார்ட்டும், நாமும் பேசியது நினைவிருக்கலாம்.

கணேசன்


On 4 Nov, 15:27, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:

> >> - Show quoted text -- Hide quoted text -

Innamburan Innamburan

unread,
Nov 4, 2009, 7:29:39 PM11/4/09
to mint...@googlegroups.com
நண்பர்களே,

இந்த அருமையான இழையை, ஒரு - ட்யூட்டோரியல் - பாடமாக அமைத்தால், பிறகு தொகுத்து வெளியிடலாம். என்ன ஸூபாஷினி.
இன்னம்பூரான்

2009/11/5 N. Ganesan <naa.g...@gmail.com>



--
இன்னம்பூரான்

Jean-Luc Chevillard

unread,
Nov 5, 2009, 12:11:39 AM11/5/09
to mint...@googlegroups.com
Dear all,

my complete misunderstanding of what Vinodh said
shows that it is quite difficult and tricky to switch from Classical or
medieval Tamil texts
(which is my field of research)
to Modern Tamil.

The *Tamil Lexicon* (page 1821) gives 6 meanings for தாக்கம். They are in
this order:

1.Attack, assault, hit
2. Reaction, counteraction
3. Force, strength
4. Onerousness
5. Swelling
6. Preponderance

[the full entry is: தாக்கம்¹ tākkam, n. < தாக்கு-. 1. Attack, assault, hit;
தாக்கு. Loc. 2. Reaction, counter- action; எதிர்தாக்குகை. (W.) 3. Force;
strength; power, as of blow, medicine or fire; momentum; வேகம். (W.) 4.
Onerousness, heaviness; கனத் திருக்கை. (யாழ். அக.) 5. Swelling; வீக்கம். (யாழ்.
அக.) 6. Preponderance; மிக்கிருக்கை. (W.)]

BUT, in Cre-A dictionary (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, Second edition,
2008), the presentation is quite different: The entry reads (on page 701):

**தாக்கம் /பெ./**
1. *(குறிபபிட்ட விளைவை ஏற்படுத்தும் வகையிலான) பாதிப்பு;* impact; influence.
/உங்கள் கதைகள் வாசகனின் மனத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று
நினைக்கிறீர்கள்? // மேல்நாட்டுப் பண்பாட்டின் தாக்கத்தை அவருடைய பேச்சில் காண முடிகிறது./
2. (-ஆக, -ஆன) (இலங்) *மனத்தைப் புண்படுத்தும் அல்லது வேதனைக்கு உள்ளாக்கும் தன்மை; *
hurtful (speech, etc.). /உன் பேச்சு தாக்கமாக இருக்கிறது. // அவரிடம் கேட்ட
தாக்கமான கேள்விகளால் தலை குனிந்தார்/

I shall try to learn from that mistake and always verify with the Cre-A
dictionary what is unclear for me in the messages posted on that list.

Thanks for the tutorial!

-- Jean-Luc

Innamburan Innamburan a écrit :

வினோத் ராஜன்

unread,
Nov 5, 2009, 12:16:03 AM11/5/09
to மின்தமிழ்
Jean,

I think I responded to you Via PM :

There was a thread in Min Tamil too ?

Anyways I will copy, paste my response here:

************************

Dear Jean,

தாக்கம் = Influence :-)

I had no idea that தாக்கம் also = Attack. Isn't that தாக்குதல் ?


*************************

V

V

On Nov 5, 10:11 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:

> > 2009/11/5 N. Ganesan <naa.gane...@gmail.com>

N. Ganesan

unread,
Nov 5, 2009, 12:39:42 AM11/5/09
to மின்தமிழ்

On Nov 4, 11:16 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
> I had no idea that தாக்கம் also = Attack. Isn't that தாக்குதல் ?
>

தாக்கம் = Attack (hence, Impact, Influence, ...)
தாக்குதல் = to attack

NG

N. Kannan

unread,
Nov 5, 2009, 1:07:20 AM11/5/09
to mint...@googlegroups.com
2009/11/5 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
>
> 1.Attack, assault, hit

இந்த 'assault' எனும் சொல்லையும் தமிழர்கள் பிறழ்வுற்ற பொருளில்
பயன்படுத்துகின்றனர்.
"எங்க தலைவர் இம்மாதிரி பெரிய காரியங்களையெல்லாம் 'அசால்ட்டா' செய்வார்"
என்பது வசனம்.
இங்கு அசால்ட் என்றால் தாக்கு என்ற பொருள் அல்ல.
மிக எளிதாக, இலகுவாகச் செய்வார் என்று பொருள்படுகிறது.
இது எல்லா மொழிகளிலும் நடைபெறுகிறது.
உதாரணமாக ஜெர்மன் மொழியில் வேலை (உத்தியோகம்) என்பதற்கு arbeit
(அர்பைட்) என்ற சொல்.
இதே சொல்லை ஜப்பானியரும், அவர்களிடமிருந்து கொரியர்களும்
பயன்படுத்துகின்றனர். ஆனால் part-time job எனும் பொருளில்.

கண்ணன்

devoo

unread,
Nov 5, 2009, 1:24:15 AM11/5/09
to மின்தமிழ்
நடைமுறையில் Impact;Influence/Attack என்னும் இருவிதமான பொருளில்
கையாள்கின்றனர் -

வருகிற தேர்தலில் ஈழப்பிரச்சனை பிரதான தாக்கம் ஏற்படுத்துமா?
தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் தாக்கம்
பணவீக்க தாக்கம் - எளிய விளக்கம்.
நெருங்கி வரும் ஆபத்து ...நிதி நெருக்கடியின் உச்ச தாக்கம்
டோவ்ன்டப் (Downdap) வைரஸ் பல மில்லியன் கணனிகள் தாக்கம்
அரசியலில் என்.எஸ்.ஜி.யின் தாக்கம்
http://www.tamilish.com

Influence; Impact -
நவீன தென்னிந்தியாவில் இராமாயணப் பாத்திரங்களின் தாக்கம்
சமுதாய வாழ்க்கையில் மார்க்கத்தின் தாக்கம்
சிறிய தாக்குதல் பெரிய தாக்கம்
ஒரு முடிவின் தாக்கம்
எனக்குள் ஒரு தாக்கம்

Attack -
ஆழிப்பேரலை தாக்கம்
மீள்குடியேற்றம் தாமதமென்போருக்கு கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது
யாழ்ப்பாண முகாம்களில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய்த் தாக்கம்
வன்னிக் களமுனையில் வைரஸ் தாக்கம்
இலைச்சுருள் தாக்கம்

On Nov 5, 1:13 am, Jean-Luc Chevillard <jean-luc.chevill...@univ-paris-

வி. சு.

unread,
Nov 5, 2009, 1:29:54 AM11/5/09
to மின்தமிழ்
ஒரு சந்தேகம்,

"தாக்குதலுக்கு உட்படு" என்பதை ஒரே வினைச் சொல்லில் சொல்ல இயலுமா ?

தாக்கு - பிறவினை

??? - தன்வினை

N. Ganesan

unread,
Nov 5, 2009, 1:36:36 AM11/5/09
to மின்தமிழ்

தாங்கு

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே. (5.19.9.)

N. Ganesan

unread,
Nov 5, 2009, 1:38:09 AM11/5/09
to மின்தமிழ்

On Nov 5, 12:36 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Nov 5, 12:29 am, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:
>
> > ஒரு சந்தேகம்,
>
> > "தாக்குதலுக்கு உட்படு" என்பதை ஒரே வினைச் சொல்லில் சொல்ல இயலுமா ?
>
> > தாக்கு - பிறவினை
>
> > ??? - தன்வினை
>
> தாங்கு
>

தாக்கு-:தாங்கு-,

வாக்குதல்:வாங்குதல்
வீக்குதல்: வீங்குதல்
....

N. Ganesan

unread,
Nov 5, 2009, 1:53:23 AM11/5/09
to மின்தமிழ்

On Nov 5, 12:29 am, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:

His hypotheses are influenced by Einstein's theories.
=
அவரது கருதுகோள்கள் ஐன்ஸ்டைனின் தத்துவத் தாங்கல் (=செல்வாக்கு) கொண்டவை.

வி. சு.

unread,
Nov 5, 2009, 1:53:59 AM11/5/09
to மின்தமிழ்
On Nov 5, 11:36 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
...

> > தாக்கு - பிறவினை
> > ??? - தன்வினை
> தாங்கு
...

வாங்கு - தன்வினை
??? - பிறவினை (வாக்கு ?!)

கேள்விகள் கேட்பதுதான் எவ்வளவு எளிது ? :)

N. Ganesan

unread,
Nov 5, 2009, 2:00:22 AM11/5/09
to மின்தமிழ்

வாங்குதல் = to bend
வாக்கு = Bend (the result by the action above)

(Nothing to do with Sanskrit Vaac-/vaak- as in vaakdevi = Saraswati)

Jean-Luc Chevillard

unread,
Nov 5, 2009, 2:44:01 AM11/5/09
to mint...@googlegroups.com
Dear NG,

In the case of this verse from Appar தேவாரம்,
the meaning given for தாங்குதல்
by traditional scholars
is "to protect".

See the English paraphrase by V.M. Subramanya Ayyar for this verse:

நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
Civaṉ who has as a half Umai who gave birth to our Kaṭampaṉ

தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
who dwells in the holy temple of Karakkōyil in beautiful Katampai (Kaṭampūr)

தன் கடன் அடியேனையும் தாங்குதல்
It is his duty to protect even me who is low and who is his devotee

என் கடன் பணி செய்து கிடப்பதே
my duty is to follow the path shown by his grace without ever thinking
with egotism even in a small measure "it is my action"

And see the பொழிப்புரை and the குறிப்புரை found on the <www.thevaaram.org>
site:

பொழிப்புரை
கடம்பமாலை சூடிய நம் முருகனைப் பெற்ற உமாதேவியினைப் பங்கில் உடையவனாகிய தென் கடம்பைத்
திருக்கரக்கோயிலான் தன் கடன் அடியேன் போன்றாரைத் தாங்குதல் ; என் போன்றார் கடன் பணிசெய்து
தற்போதம் இன்றியே இருத்தல்.

குறிப்புரை:
நங்கடம்பன் - நம்மால் விரும்பிப் போற்றப்படும். கடம்பமலர் சூடும் முருகன். பெற்றவள் -
பார்வதி. பங்கினன் - பாகமாக உடையவன். தென் - அழகிய. தன்கடன் - அப்பெருமான் தன் கடமை.
அடியேனையும் - அடியவனாகிய என்னையும். உம்மை இழிபுணர்த்திற்று. தாங்குதல் -
காப்பாற்றுதல். என்கடன் - என்னுடைய கடமை. கிடப்பது - அவன் அருள்வழி நின்று என்செயல்
என்பது சிறிதும் இன்றி இருத்தல்.

Best wishes

-- jlc


N. Ganesan a écrit :
> [...]

Hari Krishnan

unread,
Nov 5, 2009, 2:54:21 AM11/5/09
to mint...@googlegroups.com


2009/11/5 வி. சு. <vijayakuma...@gmail.com>
தாக்கப்படு. தாக்கம்பெறு (be influenced).  தாக்கலுறு (be attacked).  தாக்கமடை . 

--
அன்புடன்,
ஹரிகி.

விஜயராகவன்

unread,
Nov 5, 2009, 3:05:49 AM11/5/09
to மின்தமிழ்
Dear Jean-Luc

> I shall try to learn from that mistake and always verify with the Cre-A
> dictionary what is unclear for me in the messages posted on that list.
>
> Thanks for the tutorial!
>
> -- Jean-Luc

I think Crea-A is a worthy successor to and complements MTL in knowing
current Tamil. CreaA is making a 350,000 சொல் களஞ்சியம்.


Vijayaraghavan

Hari Krishnan

unread,
Nov 5, 2009, 3:19:20 AM11/5/09
to mint...@googlegroups.com


2009/11/5 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>

Dear NG,

In the case of this verse from Appar தேவாரம்,
the meaning given for தாங்குதல்
by traditional scholars
is  "to protect".

Exactly.  The word in this thEvAram has the connotation 'to protect'

The word தாங்கு(தல்) is loaded with various meanings, which needs to be read with context.

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை - to bear, to forbear

தார் தாங்கிச் செல்வது தானை தலைவந்த 
போர்தாங்கும் தன்மை அறிந்து - தார்தாங்கி-To bear (the garland) and hence it implies 'to wear'. போர்தாங்கும் தன்மை - to withstand, to resist, to overcome

On the other hand, the word தாங்கா 

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் 
தாங்காது மன்னோ பொறை - cannot bear; would not support

Therefore, the thEvAram line

கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்

means, it is the duty of the Lord to bear/protect/support, even such a one as me. The other meaning offered does not fit in. 

வி. சு.

unread,
Nov 5, 2009, 3:56:46 AM11/5/09
to மின்தமிழ்
On Nov 5, 12:54 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>
...

> > "தாக்குதலுக்கு உட்படு" என்பதை ஒரே வினைச் சொல்லில் சொல்ல இயலுமா ?
...

> தாக்கப்படு. தாக்கம்பெறு (be influenced).  தாக்கலுறு (be attacked).  தாக்கமடை
...

இல்லை. இச்சொற்களில், படு, பெறு, உறு, அடை போன்ற துணைவினைகள் வந்துள்ளன.

Hari Krishnan

unread,
Nov 5, 2009, 4:00:22 AM11/5/09
to mint...@googlegroups.com


2009/11/5 N. Ganesan <naa.g...@gmail.com>





வாங்குதல் = to bend
வாக்கு = Bend (the result by the action above)

(Nothing to do with Sanskrit Vaac-/vaak- as in vaakdevi = Saraswati)


It has everything to do with the Sanskrit vaac in many places.  For instance, 

வாக்கினுக் கீசனையும் நின்
   வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய்....

(பாரதி, பாஞ்சாலி சபதம்)

வாகீசன் வாக்கினுக்கு ஈசன்.  வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய்...வாகீசனையும் உன்னுடைய வாக்கினால் அசைக்கக்கூடிய வலிமையை உடைய கண்ணனே.

வாக்கு மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்

நோக்கு இழந்தனர் வானவர், எங்களால்; அவ் வகை நிலை நோக்கி, 
தாக்கணங்கு அனையவள், பிறர்மனை' எனத் தடுத்தனென் தக்கோர் முன் 
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி தன்னொடு மாற்றாரால் 
மூக்கு இழந்த பின் மீளல் என்றால், அது முடியுமோ? முடியாதாய்! 

கம்பராமாயணம், கும்பகருணன் உரை, கும்பகருணன் வதைப் படலம்)

இந்தப் பாடலில் உள்ள இரண்டாம் அடியில் காணப்படும் தாக்கணங்கு அனையவள் என்பது திருக்குறளில் உள்ள ஆட்சி.  இதே தாக்கணங்கு என்ற பிரயோகத்தை அயோத்தியா காண்டத்திலும் கம்பன் பயன்படுத்துகிறான்.

நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேலிணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன
வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும்
தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்ததே

தாக்கணங்கு என்ற பெயரால் சீதையைப் பல இடங்களில் கம்பன் குறிக்கிறான்.  இலக்குமியைக் குறிக்கும் ஓரிடம் இது:

காக்கவோ கருத்து?' என்று, கதத்தினான்
பூக்க மூரல் புரவலர் புங்கவன்
தாக்கணங்கு உறை தாமரைத் தாளினால்
நூக்கினான் அக்கதவினை நொய்தினால்

(கிட்கிந்தைப் படலம், கிட்கிந்தா காண்டம்)

கோபத்தோடு வருகிற லக்ஷ்மணனைக் கண்டு அஞ்சி, வானரங்கள் கதவைக் கற்களைக் கொண்டு அடைத்தன.  அப்படி அவை அடைக்கும் செயலாம் இன்னமும் கோபமடைந்த லக்ஷ்மணன், திருமகள் வாசம் செய்கின்ற தன்னுடைய பாதத்தால் அந்தக் கதவை எளிதாக எற்றி உதைத்துத் திறந்தான்.

இனி, வாக்கு, வாக்க என்ற சொல்லுக்கு to pour என்ற பொருளும் உண்டு.

வாக்க, உக்க தேக்கட்டேறல் 
கல்லலைத்து ஒழுகும் மன்ன

வார்க்கும்போது சிந்திய கள்ளானது, மலையிலிருந்து கற்களைப் புரட்டியபடி ஒழுகும். (புறநானூறு)

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து
ஊக்கமே மிகுந்து உள்தெளி வின்றி
தேக்கெறிந்து வருதலில் தீம்புனல்
வாக்குதேன் நுகர் மக்களை மானுமே.

வார்க்கப்பட்ட கள்ளை நுகரும் மக்களை ஒத்தது.  (கம்பராமாயணம், ஆற்றுப் படலம்)

வாங்கு என்ற பொருளில், வாக்கு என்ற வடிவம் பயன்படுத்தப்பட்டிருந்தால், இடம் சுட்டினால் பயனுடையதாக இருக்கும்.  

-- 

Hari Krishnan

unread,
Nov 5, 2009, 4:01:57 AM11/5/09
to mint...@googlegroups.com


2009/11/5 வி. சு. <vijayakuma...@gmail.com>
துணைவினை வந்தால் அது ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லா?  அப்படியும் இலக்கணம் சொல்கிறதா? வியப்பாகத்தான் இருக்கிறது. இது தவறென்றால், இதற்குரிய சொல்லை நீங்களே சொல்லுங்கள்.  கேட்டுத் தெளிந்துகொள்கிறேன்.  

Hari Krishnan

unread,
Nov 5, 2009, 4:16:35 AM11/5/09
to mint...@googlegroups.com


2009/11/5 வி. சு. <vijayakuma...@gmail.com>
செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும்போது துணைவினைகள் அவசியம் தேவைப்படும்.  ஆங்கிலத்திலேயே கூட be என்பதன் துணையில்லாமல் மாற்றுவது பெரும்பாலான சொற்களுக்குச் சாத்தியமில்லை அல்லவா.  


துணைவினை சேர்ந்தால் அது தனிச்சொல் ஆகாது என்றால், வந்தான் தனிச்சொல், வந்திட்டான் சொற்றொடரா? கேட்டிட்டான், சொல்லிட்டான், தந்திட்டான், என்றிட்டான் எல்லாவற்றையும் தனிச்சொல் என்று சொல்வதா, சொற்றொடர் என்று கொள்வதா?

இன்னமும் நிறைய எடுத்துக்காட்டுகள் தர இயலும்.  தாக்குதலுக்கு உட்படு என்பதை தங்களுடைய இலக்கணப்படி ஒரேசொல்லில் எப்படிச் சொல்வது என்பதை (என்பதை ஒருசொல்; என்பதனை என்பது ஒரு தொடர் என்று பொருள்படுகிறது தங்களுடைய அணுகுமுறை) அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.   

N. Kannan

unread,
Nov 5, 2009, 5:47:23 AM11/5/09
to mint...@googlegroups.com
>  இலக்குமியைக் குறிக்கும் ஓரிடம் இது:
> காக்கவோ கருத்து?' என்று, கதத்தினான்
> பூக்க மூரல் புரவலர் புங்கவன்
> தாக்கணங்கு உறை தாமரைத் தாளினால்
> நூக்கினான் அக்கதவினை நொய்தினால்
> (கிட்கிந்தைப் படலம், கிட்கிந்தா காண்டம்)
> கோபத்தோடு வருகிற லக்ஷ்மணனைக் கண்டு அஞ்சி, வானரங்கள் கதவைக் கற்களைக் கொண்டு
> அடைத்தன.  அப்படி அவை அடைக்கும் செயலாம் இன்னமும் கோபமடைந்த லக்ஷ்மணன்,
> திருமகள் வாசம் செய்கின்ற தன்னுடைய பாதத்தால் அந்தக் கதவை எளிதாக எற்றி
> உதைத்துத் திறந்தான்.

பரம வைஷ்ணவனான கம்பன் இப்பொருள்படும்படி சொல்லியிருப்பானா?

ஜெகன்மாதாவான திருமகள் ”அகலுகில்லேன் என்று திருமகள் உறை மார்பா” என்று
சொல்லும்படியாக பரமனின் மார்பில் உறைபவளாயிற்றே. பரம பவித்ரமான இடத்தை
அன்றோ பரமன் அவளுக்கு அளித்திருக்கிறான். அப்படி இருக்கும் போது திருமகள்
வாசம் செய்கின்ற பாதம், அதுவும் அன்னையின் காலடியில் நாய் போல் கிடைக்க
வரம் வேண்டும் பரம பாகவதனான இளையாழ்வான் `பாதத்தில்` அன்னை உறைகிறாளா?
பொருந்தவே இல்லையே!

இந்த அபச்சாரத்தை கம்பன் செய்திருப்பான் என்று மனம் ஒப்பவில்லை. வேறு
பொருள் இருக்கும்.

அடியேன்.

Hari Krishnan

unread,
Nov 5, 2009, 6:10:12 AM11/5/09
to mint...@googlegroups.com


2009/11/5 N. Kannan <navan...@gmail.com>


பரம வைஷ்ணவனான கம்பன் இப்பொருள்படும்படி சொல்லியிருப்பானா?

ஜெகன்மாதாவான திருமகள் ”அகலுகில்லேன் என்று திருமகள் உறை மார்பா” என்று
சொல்லும்படியாக பரமனின் மார்பில் உறைபவளாயிற்றே. பரம பவித்ரமான இடத்தை
அன்றோ பரமன் அவளுக்கு அளித்திருக்கிறான். அப்படி இருக்கும் போது திருமகள்
வாசம் செய்கின்ற பாதம், அதுவும் அன்னையின் காலடியில் நாய் போல் கிடைக்க
வரம் வேண்டும் பரம பாகவதனான இளையாழ்வான் `பாதத்தில்` அன்னை உறைகிறாளா?
பொருந்தவே இல்லையே!

இந்த அபச்சாரத்தை கம்பன் செய்திருப்பான் என்று மனம் ஒப்பவில்லை. வேறு
பொருள் இருக்கும்.

அடியேன்.

அடியேன் என்றால் ‘அடியேன் பாக்கலாம்’ என்று அடிக்க அழைப்பதாகக் கொள்வதா அல்லது ‘அடிக்கமாட்டேன்’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வதா?  அடியேனுக்கு தடியேன் எழுதும் தெண்டம் சமர்ப்பித்த லிகிதம்.

ஹரி கிருஷ்ணன் எதை எழுதினாலும், முதலில் தனக்குத் தெளிவில்லாத ஒன்றை எழுதமாட்டான்; தனக்குத் தெளிவிலலை என்றால் ‘இது எனக்குப் புரியவில்லை’ ‘இதில் எனக்கு உடன்பாடில்லை‘, ‘இது இப்படி இருக்காது என்று தோன்றுகிறது’ என்பன போன்ற வாக்கியங்களைச் சேர்த்துதான் எழுதுவான் என்ற நம்பிக்கை இருக்குமிடத்திலிருந்து இப்படி ஒரு வார்த்தை தோன்றியிருக்க சாத்தியமில்லை.  ஆகவே, பரம பரம பரமா பரம, லட்சம் கோடி பரம வைணவராகிய வை மு கோபாலகிருஷ்ணமாசாரியாருடைய உரையிலிருந்து குறிப்பிட்ட பாடலுக்கான உரை விளக்கத்தைப் புகைப்படங்களாக இணைத்திருக்கிறேன்.  இது வைமுகோ உரைதான் என்று ஆதாரம் காட்டுவதற்காக, அந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தையும் இணைத்திருக்கிறேன்.

இந்தப் பாடலுக்கு இதுதான் பொருள்.  ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது, என்ன சம்பிரதாயம் என்பது எனக்குத் தெரியவில்லை.  தெரிந்தவர்கள் விளக்கினால் தெரிந்துகொள்கிறேன்.  சொற்பொருள் இதுதான்.  நான் கண்ட பொருள் சரியானதுதான் என்பதை வைமுகோ உறுதி செய்கிறார்.  (ஆமா, அபச்சாரம் என்று எழுதுவதே அபசாரம் இல்லையோ?  தேவையில்லாத இடங்களில் ச்சாதீரும் ஓய்!)
கம்பன் 001.jpg
கம்பன் 002.jpg

வி. சு.

unread,
Nov 5, 2009, 6:27:02 AM11/5/09
to மின்தமிழ்
On Nov 5, 2:01 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>

> > On Nov 5, 12:54 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> > > 2009/11/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>
> > ...

> > > > "தாக்குதலுக்கு உட்படு" என்பதை ஒரே வினைச் சொல்லில் சொல்ல இயலுமா ?
> > ...
> > > தாக்கப்படு. தாக்கம்பெறு (be influenced). தாக்கலுறு (be attacked).
> > தாக்கமடை
> > ...
> > இல்லை. இச்சொற்களில், படு, பெறு, உறு, அடை போன்ற துணைவினைகள் வந்துள்ளன.
> துணைவினை வந்தால் அது ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லா? அப்படியும் இலக்கணம்
> சொல்கிறதா? வியப்பாகத்தான் இருக்கிறது. இது தவறென்றால், இதற்குரிய சொல்லை
> நீங்களே சொல்லுங்கள். கேட்டுத் தெளிந்துகொள்கிறேன்.

எனக்கும் தெரியாது.

நான் முதலிலேயே தெளிவாக கேட்டிருக்க வேண்டும். ஒரே வினைச் சொல்லாக,
துணைவினை இல்லாமல் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

கேட்டிட்டான், சொல்லிட்டான், தந்திட்டான், என்றிட்டான் இவற்றிலும் 'இடு'
என்ற வினை சேர்ந்து இருக்கிறது.

Hari Krishnan

unread,
Nov 5, 2009, 6:38:59 AM11/5/09
to mint...@googlegroups.com


எனக்கும் தெரியாது.

நான் முதலிலேயே தெளிவாக கேட்டிருக்க வேண்டும். ஒரே வினைச் சொல்லாக,
துணைவினை இல்லாமல் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.



அப்படியானால், தாக்கு என்ற செய்வினைக்கு நேரடியான செயப்பாட்டு வினை இல்லை.  அடிக்கப்படு என்று சொல்லும் வழக்கம் தமிழில் இல்லை.  ஆங்கிலத்திலும் அடிபடு, உதைபடு, காயப்படு என்றெல்லாம் ஒருசொல்லில் சொல்வதில்லை.  மற்ற மொழிகளைப் பற்றித் தெரியாது.  

துணைவினை சேர்ந்த சொல் தனிச்சொல்தான்.  அது ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லாகக் கருதப்படாது.  கருத்துக்கு என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், கருத்து+கு.  இதையே இப்போதெல்லாம் கருத்திற்கு (கருத்து+இன்+கு) என்று எழுதுகிறார்கள்.  என்சைக்ளோபீடியாவைத் தமிழாக்கம் செய்யும்போது, முதலில் இந்த ‘இன்’ துணைவினையை விட்டொழியுங்கள் என்று வலியுறுத்தி, எவ்வளவோ ஆயிரக்கணக்கான இடங்களில் திருத்தி, கடைசியில் ‘விற்கு, திற்கு, சிற்கு’ போன்ற பலவிதமான பிரயோகங்களை ‘இன்’துணைவினையை நீக்கி, மாற்றி அமைப்பதற்கான ஒரு ப்ரோகிராம் எழுத வைத்தோம்.  

எதற்குச் சொன்னேன் என்றால் துணைவினைகள் சேர்கின்ற காரணத்தால் ஒருசொல், ஒரேசொல்லாகத்தான் நிற்கும்.  அதற்கு மேற்பட்ட சொல்லாகக் கருத இடமில்லை.  உறு, படு போன்றவை சேர்வதால் அது ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லாகக் கருதப்படமாட்டாது.  பைதலுண்கண் என்பது ஒரு சொல்லா, ஒரு தொடரா? 

 
கேட்டிட்டான், சொல்லிட்டான், தந்திட்டான், என்றிட்டான் இவற்றிலும் 'இடு'
என்ற வினை சேர்ந்து இருக்கிறது.


சேர்ந்து இருக்கிறது என்பதனால்தான் இவையெல்லாம் ஒரு சொல்லா அல்லது சொற்களா என்று கேட்டேன். :-) 

வி. சு.

unread,
Nov 5, 2009, 6:59:22 AM11/5/09
to மின்தமிழ்
On Nov 5, 4:38 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
...

> > கேட்டிட்டான், சொல்லிட்டான், தந்திட்டான், என்றிட்டான் இவற்றிலும் 'இடு'
> > என்ற வினை சேர்ந்து இருக்கிறது.
>
> சேர்ந்து இருக்கிறது என்பதனால்தான் இவையெல்லாம் ஒரு சொல்லா அல்லது சொற்களா
> என்று கேட்டேன். :-)

இவையெல்லாம் துணைவினை சேர்ந்த தனிச்சொற்கள், அல்லது இரு செற்கள் சேர்ந்த
தனிச்சொற்கள் என்று வைத்துக் கொள்ளலாம். "இருவரும் சேர்ந்து தனியாக.."-
என்பதில் வரும் தனி போல. :-)

தனி ??

தன் - தனி ??

யோசித்தால் கேள்விகள்"தான்" வருகின்றன.

N. Ganesan

unread,
Nov 5, 2009, 7:34:10 AM11/5/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com

ஏத்து-:ஏந்து- போன்ற தொடர்புடைய வினைச்சொற்கள் தாக்கு-:தாங்கு-

The one who attacks = தாக்குபவன்
The one who gets attacked = தாங்குபவன்.


So, for a thing to be influenced by something else
we can employ verbs - vayappaTal, Entutal, taaGgutal etc.,

சற்றே வேறுபடுத்திக் காட்ட,


தாக்கம் = impact

தாங்கல் = influence
என்று கொண்டால் மொழிபெயர்ப்புகளில் துல்லியம் மிகும்.
(இல்லையெனில், இராமகி குறிப்பிடுவதுபோல்,
ப்ராஜக்ட், ப்லான், .... எதுவானாலும் “திட்டம்”
என்பதுபோல் ஆகிவிடும்).

வாக்கு = வளைவு
வாங்கு- = வளைதல்

நா. கணேசன்


On Nov 5, 1:44 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:

> > என்க டன்பணி செய்து கிடப்பதே. (5.19.9.)- Hide quoted text -

N. Kannan

unread,
Nov 5, 2009, 7:41:37 AM11/5/09
to mint...@googlegroups.com
அகோ வாரும் பிள்ளாய்!!
 
நல்லவேளை உரை அனுப்பினீர் நான் பிழைத்தேன் (நீர் பிழைத்தீர் என்று சொல்லவில்லை பாரும். அது பாகவத சம்பிரதாயம் ;-)
 
நீர் என்ன எழுதுகிறீர்:
 
கோபமடைந்த லக்ஷ்மணன், திருமகள் வாசம் செய்கின்ற தன்னுடைய பாதத்தால் அந்தக் கதவை எளிதாக எற்றி உதைத்துத் திறந்தான்.
 
 ஆனால் உரை என்ன சொல்கிறது. ”எல்லோராலும் விரும்பப்படுகிறவளான லக்ஷிமி, தான் விரும்பி வாசம் செய்யும் தாமரை மலர். இளையபெருமாள் பாதம் அண்ணனை ஒத்து தாமரை போல் உள்ளதாம். வெறும் தாமரை இல்லையாம். திருமகள் வாசம் செய்யும் தாமரை போல் உள்ளதாம்.”
 
வித்தியாசம் இருக்குங்காணும்.
 
லக்ஷிமி இளையபெருமாள் பாதத்தில் வாசம் செய்பவள் இல்லை. அப்படி நினைப்பதே பாபம். அதுவும் கம்பன் அப்படியொரு அபச்சாரம் செய்பவனில்லை. அது கம்பராமயணத்திற்கே இழுக்காக அமையும். அவன் பூஜிக்கின்ற அன்னை சீதாதேவி. அவள் பெருந்தேவி. அவள் எப்படி இளையபெருமாள் பாதத்தில் வாசம் செய்வாள்? அப்படி எழுத அவன் மனம் எப்படி ஒக்கும்?
 
மன்னிக்க.
 
அடியேன் (நீர் அடித்தாலும் இதைத்தான் சொல்லுவேன் ;-)
 
 
 
2009/11/5 Hari Krishnan <hari.har...@gmail.com>:
> அடியேன் என்றால் ‘அடியேன் பாக்கலாம்’ என்று அடிக்க அழைப்பதாகக் கொள்வதா அல்லது
> ‘அடிக்கமாட்டேன்’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வதா?  
 

வினோத் ராஜன்

unread,
Nov 5, 2009, 7:42:44 AM11/5/09
to மின்தமிழ்
> சற்றே வேறுபடுத்திக் காட்ட,
> தாக்கம் = impact
> தாங்கல் = influence

அப்பப்ப,,

"கைத்தாங்கலா"ன்னு சொல்றாங்களே.. அப்ப அதை என்னப்பன்றது :-)

ஏற்கன்வே இருக்குற வார்த்தையோட அர்த்தத்தை மாத்தி ஏன் குழப்பணும் ?

V

On Nov 5, 5:34 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> ஏத்து-:ஏந்து- போன்ற தொடர்புடைய வினைச்சொற்கள் தாக்கு-:தாங்கு-
>
> The one who attacks = தாக்குபவன்
> The one who gets attacked = தாங்குபவன்.
>
> So, for a thing to be influenced by something else
> we can employ verbs - vayappaTal, Entutal, taaGgutal etc.,
>

> என்று கொண்டால் மொழிபெயர்ப்புகளில் துல்லியம் மிகும்.

N. Ganesan

unread,
Nov 5, 2009, 7:47:48 AM11/5/09
to மின்தமிழ்

On Nov 5, 3:00 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/5 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
> > வாங்குதல் = to bend
> > வாக்கு = Bend (the result by the action above)
>

வாக்கு² vākku , n. < வாங்கு-. 1. Bend; வளைவு. கோட்டிய வில்வாக்
கறிந்து (நாலடி, 395).

----------

நான் இங்கே குறிப்பிட்டது வடசொல் வாச்-/வாக்-/வசனம்/வாசகர்.... அல்ல


> > (Nothing to do with Sanskrit Vaac-/vaak- as in vaakdevi = Saraswati)
>
> It has everything to do with the Sanskrit vaac in many places.  For
> instance,
>
> வாக்கினுக் கீசனையும் நின்
>    வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய்....
>
> (பாரதி, பாஞ்சாலி சபதம்)
>

ஆம். நிறைய வாக்-/வாச்- .... தமிழில் உண்டு.

போரின் தேவதை துருக்கை (தமிழில் கொல்லி- , கொற்றவை (< கொல்-),
வாக்தேவி ஏன் என்பதற்கு பழைய சமற்கிருத நூல்களில் இருந்தும்,
தமிழின் தொடர்பு பற்றியும் ஆராய்ச்சிக் கட்டுரை:

Vāc as a Goddess of Victory in the Veda and her relation to Durgā
(2000)
http://repository.kulib.kyoto-u.ac.jp/dspace/handle/2433/48782

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 5, 2009, 7:50:16 AM11/5/09
to மின்தமிழ்

On Nov 5, 6:42 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> > சற்றே வேறுபடுத்திக் காட்ட,
> > தாக்கம் = impact
> > தாங்கல் = influence
>
> அப்பப்ப,,
>
> "கைத்தாங்கலா"ன்னு சொல்றாங்களே.. அப்ப அதை என்னப்பன்றது  :-)
>
> ஏற்கன்வே இருக்குற வார்த்தையோட அர்த்தத்தை மாத்தி ஏன் குழப்பணும் ?
>

இருக்கிற அர்த்தம் தான்:

> > > - Show quoted text -- Hide quoted text -

N. Ganesan

unread,
Nov 5, 2009, 8:00:32 AM11/5/09
to மின்தமிழ்
On Nov 5, 1:44 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> Dear NG,
>
> In the case of this verse from Appar தேவாரம்,
> the meaning given for தாங்குதல்
> by traditional scholars
> is  "to protect".
>

Look at this Tevaram:
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

Here "tAGgutal" = to bear in mind.

Appar's writings are influenced by Vedic texts.
அப்பரின் எழுத்துக்கள் வேதங்களின் கருத்துக்களைத் தாங்கியவை.

Here "tAGgutal" = to bear in mind.

NG

வி. சு.

unread,
Nov 5, 2009, 8:06:06 AM11/5/09
to மின்தமிழ்
On Nov 5, 5:50 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
...

> > > சற்றே வேறுபடுத்திக் காட்ட,
> > > தாக்கம் = impact
> > > தாங்கல் = influence
...

வேறு பயன்பாடுகள்,

தாங்க முடியவில்லை - பொறுத்துக் கொள்ள முடியவில்லை
அவனைத் தாங்க வேண்டுமா ? - கெஞ்சிக் கேட்க வேண்டுமா ?
தாங்கு - சுமை

வி. சு.

unread,
Nov 5, 2009, 8:10:15 AM11/5/09
to மின்தமிழ்

தாங்குவதில் சுமை கைக்கு மேல் இருக்கும், தூக்கும் போது சுமை கைக்கு கீழ்


இருக்கும்.

வேடந்தாங்கல் ??

Jean-Luc Chevillard

unread,
Nov 5, 2009, 8:17:42 AM11/5/09
to mint...@googlegroups.com
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்தன்னைத்
தாக்கினான், விரலினாலே தலைபத்தும் தகர ஊன்றி;
நோக்கினார், அஞ்சத் தன்னை, நோன்பு இற; ஊன்று சொல்லி
ஆக்கினார், அமுதம்ஆக---அவளிவணல்லூராரே.
(தேவாரம், 4.59, 10)

Is Irāvaṇaṉ used as a சுமைதாங்கி ?

- jlc


வி. சு. a écrit :
> [....]


>
> வேறு பயன்பாடுகள்,
>
> தாங்க முடியவில்லை - பொறுத்துக் கொள்ள முடியவில்லை
> அவனைத் தாங்க வேண்டுமா ? - கெஞ்சிக் கேட்க வேண்டுமா ?
> தாங்கு - சுமை
>

> [...]

N. Ganesan

unread,
Nov 5, 2009, 8:17:55 AM11/5/09
to மின்தமிழ்

On Nov 5, 3:01 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>
>
> > On Nov 5, 12:54 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> > > 2009/11/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>
> > ...
> > > > "தாக்குதலுக்கு உட்படு" என்பதை ஒரே வினைச் சொல்லில் சொல்ல இயலுமா ?
> > ...
> > > தாக்கப்படு. தாக்கம்பெறு (be influenced).  தாக்கலுறு (be attacked).
> >  தாக்கமடை
> > ...
>
> > இல்லை. இச்சொற்களில், படு, பெறு, உறு, அடை போன்ற துணைவினைகள் வந்துள்ளன.
>
> துணைவினை வந்தால் அது ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லா?  அப்படியும் இலக்கணம்
> சொல்கிறதா? வியப்பாகத்தான் இருக்கிறது. இது தவறென்றால், இதற்குரிய சொல்லை
> நீங்களே சொல்லுங்கள்.  கேட்டுத் தெளிந்துகொள்கிறேன்.
>

Look at this Tevaram:


வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

Here "tAGgutal" = to bear in mind.

Appar's writings are influenced by Vedic texts.
அப்பரின் எழுத்துக்கள் வேதங்களின் கருத்துக்களைத் தாங்கியவை

> --

devoo

unread,
Nov 5, 2009, 8:18:35 AM11/5/09
to மின்தமிழ்
Nov 5, 6:10 pm, வி. சு.

>> வேடந்தாங்கல் <<

சென்னைக்குப் பக்கத்தில் நீர் தேங்கி நிற்கும் குளங்களை (tanks) தாங்கல்
என்றே அழைப்பர். அய்யப்பன் தாங்கல், ஈக்காட்டுத் தாங்கல் போன்ற
இடப்பெயர்களை நோக்குக.

இராம.கி.

http://www.treasurehouseofagathiyar.net/21200/21226.htm

Message has been deleted

N. Ganesan

unread,
Nov 5, 2009, 8:22:12 AM11/5/09
to மின்தமிழ்
On Nov 5, 7:17 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:

> ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்தன்னைத்


> தாக்கினான், விரலினாலே தலைபத்தும் தகர ஊன்றி;
> நோக்கினார், அஞ்சத் தன்னை, நோன்பு இற; ஊன்று சொல்லி
> ஆக்கினார், அமுதம்ஆக---அவளிவணல்லூராரே.
> (தேவாரம், 4.59, 10)

சிவன் தாக்கினான், இராவணன் தாங்கினான்.

> Is Irāvaṇaṉ used as a சுமைதாங்கி ?

> - jlc

> வி. சு. a écrit :

> > [....]

> > வேறு பயன்பாடுகள்,

> > தாங்க முடியவில்லை - பொறுத்துக் கொள்ள முடியவில்லை
> > அவனைத் தாங்க வேண்டுமா ? - கெஞ்சிக் கேட்க வேண்டுமா ?
> > தாங்கு - சுமை

> > [...]- Hide quoted text -

N. Ganesan

unread,
Nov 5, 2009, 8:27:49 AM11/5/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com

On Nov 5, 6:42 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:

> > சற்றே வேறுபடுத்திக் காட்ட,
> > தாக்கம் = impact
> > தாங்கல் = influence
>
> அப்பப்ப,,
>
> "கைத்தாங்கலா"ன்னு சொல்றாங்களே.. அப்ப அதை என்னப்பன்றது  :-)
>
> ஏற்கன்வே இருக்குற வார்த்தையோட அர்த்தத்தை மாத்தி ஏன் குழப்பணும் ?

Not really.

Look at this Tevaram:
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

tAGku- "to bear". That can happen in a physical or abstract (mental,
non-physical) sense.

tAGkal = "influence" uses the Tamil verb, tAGku- in the abstract
sense.

Look at Tevaram verse: Aakkuur citizens "4 maRaiyOTu 6 aGkam pala
kalaikaL tAGkinAr"
- here, people are bearing in mind vedas etc.,

NG


Jean-Luc Chevillard

unread,
Nov 5, 2009, 8:37:04 AM11/5/09
to mint...@googlegroups.com
சிவன் தாக்கினான், இராவணனால் தாங்க முடியவில்லை.

-- jlc

N. Ganesan a écrit :

Hari Krishnan

unread,
Nov 5, 2009, 11:45:30 AM11/5/09
to mint...@googlegroups.com


2009/11/5 N. Kannan <navan...@gmail.com>

அகோ வாரும் பிள்ளாய்!!
 
நல்லவேளை உரை அனுப்பினீர் நான் பிழைத்தேன் (நீர் பிழைத்தீர் என்று சொல்லவில்லை பாரும். அது பாகவத சம்பிரதாயம் ;-)
 
நீர் என்ன எழுதுகிறீர்:
 
கோபமடைந்த லக்ஷ்மணன், திருமகள் வாசம் செய்கின்ற தன்னுடைய பாதத்தால் அந்தக் கதவை எளிதாக எற்றி உதைத்துத் திறந்தான்.
 
 ஆனால் உரை என்ன சொல்கிறது. ”எல்லோராலும் விரும்பப்படுகிறவளான லக்ஷிமி, தான் விரும்பி வாசம் செய்யும் தாமரை மலர். இளையபெருமாள் பாதம் அண்ணனை ஒத்து தாமரை போல் உள்ளதாம். வெறும் தாமரை இல்லையாம். திருமகள் வாசம் செய்யும் தாமரை போல் உள்ளதாம்.”
 
வித்தியாசம் இருக்குங்காணும்.


அன்புள்ள கண்ணன்,

சகவாச தோஷம் என்பது மிக எளிதில் பற்றிக் கொள்ளக் கூடியது; என்னதான் ஆதாரங்களை எடுத்துக் காட்டினாலும், அதில் தனக்குச் சாதகமாக ஏதேனும் ஒரு மூலையில் என்னத்தையாவது சொல்லியிருந்தாலும் (ஒருசிலர் விஷயத்தில் சொல்லாமலே இருந்தால்கூட) அதையே பிடித்துக்கொண்டு தான் பிடித்ததையே திரும்பத் திரும்பச் சொல்லி சாதித்துக் கொள்வது என்ற வகையில் குழு ததும்பி வழிகிறது.  குறிப்பாக ஓரிருவர், நாம் என்ன சொன்னாலும் அதைப் படிக்கவே படிக்காத பாவனையில், தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, தாம் சொல்வதுதான் உண்மை என்பது போன்ற பிரமையை உண்டுபண்ணுவார்கள்.  அந்தக் காற்று படுத்தும் பாடு.... தலைமைப் பீடம்வரையில் கலகலக்கிறது. :-))

நீங்கள் எடுத்துக் காட்டியிருப்பது பின்னால் விரித்துக் கூறப்படும் சிறப்புரைப் பகுதியிலிருந்து.  திருமகள் வாசம் செய்வதாகிய தாமரை மலருக்குத் திருமகள் ஆகிவந்தாள் என்ற உரையைக்கூட நான் படித்திருக்கிறேன்.  இது ஆகுபெயர் என்றும் விளக்கம் உண்டு. ஆகவே, இந்த விஷயத்தில் என்னை டபாய்க்க முடியாது. :-))  நான் அறிந்ததில் எனக்குத் தெளிவில்லாவிட்டால் அழுந்தச் சொல்லவே மாட்டேன்.  அதில் ஐயமே வேண்டாம். 

பாடலை அடுத்து, பகுதி பகுதியாகப் பாடலைப் பிரித்துப் பொருள் சொல்கிறாரே, அது சொற்பொருள்.  சொற்பொருள் சொல்லும்போது என்ன சொல்கிறார் என்பதை தயவுசெய்து கவனமாகப் படித்துப் பாருங்கள்.  உங்களுக்காக ஒருமுறை டைப் அடித்தே தருகிறேன்:

(வாநரங்கள் நகரவாயிற் கதவை யடைத்தமை கண்டு) புரவலர் புங்கவன் -அரசரிற் சிறந்தவனான இலக்குமணன், காக்கஓ கருத்து என்று - ‘நம்மிடத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவோ (இவர்கள்) கருதியது என்று எண்ணி, கதத்தினால் மூரல் பூக்க - கோபத்தாற் புன்சிரிப்பு உண்டாக - தாக்கணங்கு உரை தாமரை தாளினால் - இலக்குமி வசிக்கின்ற செந்தாமரை மலர் போன்ற (தனது) திருவடியினால், அ கதவினை நொய்தின் நூக்கினான் - அவ்வாயிற் கதவை அலட்சியமாகத் தள்ளினான்.  

இது சொற்பொருள். இலக்குமி வசிக்கின்ற செந்தாமரை மலர் போன்ற என்று எழுதிவிட்டு (தனது) என்று நகவளைவுக்குள் வருவித்துச் சொல்லியிருக்கிறார் என்பதை கவனிக்கவும்.  நீங்கள் மேற்கோள் காட்டியிருப்பது சிறப்புப் பொருள் விளக்கத்திலிருந்து.  அதை நான் படித்திருக்க மாட்டேன் என்றா கருதினீர்ள்?  அவ்வளவு அரைகுறையா நான்?  ஒழுங்காகப் படிக்காமல் சபைக்குள் கால் எடுத்து வைக்கும் கழாஅக் காலா என்னுடையது?

 
லக்ஷிமி இளையபெருமாள் பாதத்தில் வாசம் செய்பவள் இல்லை. அப்படி நினைப்பதே பாபம். அதுவும் கம்பன் அப்படியொரு அபச்சாரம் செய்பவனில்லை. அது கம்பராமயணத்திற்கே இழுக்காக அமையும். அவன் பூஜிக்கின்ற அன்னை சீதாதேவி. அவள் பெருந்தேவி. அவள் எப்படி இளையபெருமாள் பாதத்தில் வாசம் செய்வாள்? அப்படி எழுத அவன் மனம் எப்படி ஒக்கும்?
 
மன்னிக்க.

ஐயா திரு கண்ணன், சுமார் 25 வருடங்களாக எத்தனையோ நூறு முறை படித்தது கம்பராமாயணம்.  அதில் எனக்கு உங்களுடைய பரிபாஷைகள் வேண்டுமானால் விளங்காதிருக்கலாம்.  ஆனால், அதிலுள்ள தமிழ் எனக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கும் ஒன்றுதான்.  உங்களுடைய விளக்கத்தை ஏற்பதற்கில்லை.  இதன் பொருள் இன்னது என்பது வைமுகோவால் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது.  அதிலிருந்து நழுவப் பார்ப்பது சரியில்லை.  என்னைத் தமிழறியாதவனாகக் கருதிவிடாதீர்கள்.  நான் ஆரம்பக் கல்விப் பருவத்தைக் கடந்து வெகுகாலம் ஆகிறது.

கடுமையாகச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும். உங்களிடம் சலுகையும் உரிமையும் பாராட்டுவது என் வழக்கம்தான்.  

உங்களுக்கு ஏற்புடையதாக இதே வாக்கியத்துக்குப் பொருள் சொல்லவும் முடியும்; அதுவும் தெரியும்.  ஆனால் இப்போதைக்கு அதைப் பற்றிப் பேசப்போவதில்லை.  என்னுடைய தமிழறிவை இவ்வளவு குறைத்து மதிப்பிட முனைவார்கள் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை.  மிக்க மகிழ்ச்சி.  வந்தனம்.  

N. Kannan

unread,
Nov 5, 2009, 6:06:58 PM11/5/09
to mint...@googlegroups.com
மன்னிக்கவும் ஹரிகி.
 
தாங்கள் சொல்வதுதான் அதன் பொருள் எனில் கம்பனை நான் என் மதிப்பிற்குரிய பெரியவர்கள் பட்டியலிலிருந்து கழித்துக்கட்டுகிறேன்.
 
எம் ஆழ்வார்களெனில் இப்படியொரு அபச்சாரம் செய்திருக்க மாட்டர். கம்பராமாயணமே இவ்வொரு பாடலால் பொருள் இழந்து போகிறது. அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும்.
 
இதை அகங்காரத்தால் சொல்லவில்லை, ஆற்றாமையால் சொல்கிறேன். இப்படித்தான் அதற்கு பொருள் கொள்ளமுடியுமெனில் அது என்னை இத்தனை நாள் குடைந்து கொண்டிருந்த ஒரு கேள்விக்கு விடையளிக்கிறது. கம்பனை ஏன் அரங்கத்துப் பெரியோர் அவ்வளவு பெரிதாகக் கொள்ளவில்லை என்பது. இது இன்னம்புரான் கேட்ட கேள்விக்கும் பதில் அளிக்கிறது.
 
இன்று எனக்கு மிகவும் வருத்தமான நாள்.
 
கண்ணன்

2009/11/6 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Nov 5, 2009, 10:39:18 PM11/5/09
to mint...@googlegroups.com


2009/11/6 N. Kannan <navan...@gmail.com>

மன்னிக்கவும் ஹரிகி.
 
தாங்கள் சொல்வதுதான் அதன் பொருள் எனில் கம்பனை நான் என் மதிப்பிற்குரிய பெரியவர்கள் பட்டியலிலிருந்து கழித்துக்கட்டுகிறேன்.
 

வருத்தமான நாள் என்று சொல்லியிருப்பதால் இந்த மடலை எழுதுகிறேன்.  இந்தத் தலைப்பில் இதற்கு மேல் எழுதவேண்டியதில்லை என்றுதான் முதலில் நினைத்திருந்தேன்.

நான் ‘சொற்பொருள் சொற்பொருள்’ என்றுதான் நூறுமுறை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  உட்பொருள், உறைபொருள், உள்ளுறை என்றெல்லாம் சொல்லவில்லை.  இவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு நான் சொல்லி விளக்கத் தேவையில்லை.  அவற்றை அறிந்தவர்கள் சொல்லும் வரையில் காத்திருக்கும் பொறுமை இல்லை என்பதுதான் உண்மையிலேயே வருத்தத்துக்கு உரியது.  இலக்குமி உறையும் பாதம் என்று கம்பன் எழுதமாட்டான் என்று எனக்குமட்டும் தெரியாதா என்ன?  உங்கள் அளவுக்கு நான் பக்தன் இல்லை என்று எனக்குத் தெரியும்.  ஆனால் நானும பக்தி நெறியில் வந்தவன்தானே, எனக்கும் இந்தச் சம்பிரதாயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு அல்லவா?  நான் பாசுரம் படிக்காதவனா அல்லது ஆண்டாளை ரசிக்காதவனா?  வைணவனாகப் பிறந்தவனுக்கு மட்டும்தான் இந்த நெறிகள் எல்லாம் தெரிந்திருக்குமா?  மற்றவர்களுக்குப் புரியாதா? 

சொற்பொருளை அவ்வளவு தெளிவாக எழுதியிருக்கிறாரே வைமுகோ, அவர் இப்படி ஒரு குறைபட்ட பாடலாக இருந்திருந்தால் அதற்குப் பொருள் எழுதியிருப்பாரா அல்லது கம்பராமாயணத்தைத் தமிழின் தலையாய இலக்கியமாகக் கொண்டாடியிருப்பாரா?  அவருடைய மாணவரும் விவேகானந்தா கல்லூரியில் பணியாற்றியவருமான ஜெகநாதாசாரியாருடைய பேச்சுகளை நீங்கள் கேட்டதில்லையோ என்று தோன்றுகிறது.  விளக்கத்தையோ, விரிவையோ கேட்க உங்களுக்குப் பொறுமை இல்லை என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.  இப்படியெல்லாம் முடிவுக்கு வந்திருந்தால் ஒன்று வைமுகோ, ஜெகநாதாசாரியார் போன்ற வைணவர்கள் பெரியவர்களாக இருக்க முடியாது; அல்லது வைணவர்களாக இருந்திருக்க முடியாது்; அப்படியும் இல்லாவிட்டால் உங்க்ள அளவுக்கு அவர்களுடைய முதிர்ச்சி இருந்திருக்க முடியாது.  அவர்களெல்லாம் கம்பனை ஏன் போற்றினார்கள்?  \எதோ சில சில்லறைகளும், திராவிட வழிவந்த தீரர்களும் மதிக்காத காரணத்தால் ‘நானும் அந்த வழியையே தேர்கிறேன்’ என்று நீங்கள் சொல்வீரு்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.   நான் பேசிக்கொண்டிருந்த கான்டெக்ஸ்ட் வேறு.  அந்த கான்டெக்ஸ்டில் இந்தப் பொருளை விளக்குவானேன், சற்றுப் பொறுத்து சொல்லலாமே என்று எண்ணினேன்.  என்னுடைய கட்டுரைத் தொடரைத் தொடரவேண்டிய நேர நெருக்கடியில் இருந்ததால் சுருக்கமாகச் சொல்லி வைத்தேன்.  அதற்குள் கம்பராமாயணத்தையே கழித்துக் கட்டுகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டுவிட்டீர்கள்.  கல்வி சிறந்த தமிழ்நாடு என்று பாடியவுடன் பாரதியின் நினைவுக்கு வந்தவன் கம்பன்.  கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ் - கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று கம்பனைத்தான் சிறப்பித்தான் பாரதி.  ஆகவே, கம்பனைக் கழித்துக்கட்டிய கையோடு பாரதியையும் கழித்துக் கட்டிவிடுங்கள்.  நான் என்னையே கழித்துக் கட்டிக்கொள்கிறேன்.  இவ்வளவு அவசரமும் உணர்ச்சிவசப்படுதலும் பொருத்தமாக இல்லை.  

கம்பனை நீங்கள் உங்களுடைய பட்டியலிலிருந்து நீக்குவதால் கம்பனுக்கு ஒரு குறையும் இல்லை.   கூடவே பாரதியையும் நீக்கிவிடுங்கள்.  எனக்குச் சற்று அவகாசம் கொடுங்கள்.  நானும் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறேன்.  இல்லாவிட்டால் எனக்கு அந்தச் சிரமத்தை மிச்சம் வைக்காமல் நீங்களே என்னை நீக்கிவிடுங்கள்.  கம்பனை மதிக்காத இடத்தில் எனக்கு ஒரு வேலையும் இல்லை.  


N. Ganesan

unread,
Nov 5, 2009, 10:55:13 PM11/5/09
to மின்தமிழ்

On Nov 5, 5:10 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> இலக்குமியைக் குறிக்கும் ஓரிடம் இது:

> காக்கவோ கருத்து?' என்று, கதத்தினான்
> பூக்க மூரல் புரவலர் புங்கவன்
> தாக்கணங்கு உறை தாமரைத் தாளினால்
> நூக்கினான் அக்கதவினை நொய்தினால்

> (கிட்கிந்தைப் படலம், கிட்கிந்தா காண்டம்)

> இந்தப் பாடலுக்கு இதுதான் பொருள்.  ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது, என்ன


> சம்பிரதாயம் என்பது எனக்குத் தெரியவில்லை.  தெரிந்தவர்கள் விளக்கினால்
> தெரிந்துகொள்கிறேன்.  சொற்பொருள் இதுதான்.  நான் கண்ட பொருள் சரியானதுதான்
> என்பதை வைமுகோ உறுதி செய்கிறார்.  (ஆமா, அபச்சாரம் என்று எழுதுவதே அபசாரம்
> இல்லையோ?  தேவையில்லாத இடங்களில் ச்சாதீரும் ஓய்!)
>

ஹரிகி,

என் கருத்து ஒன்று. துர்க்கா-லக்‌ஷ்மி-சரஸ்வதியை
இன்றும் முப்பிடாரி அம்மன் என்று வழிபடுகிறோம்.

துர்க்கை-வாணி பூர்வசரிதத் தொடர்புகள் உள்ள
கட்டுரை (பார்ப்போலா) கொடுத்தேன். அதுபோல,
துர்க்கை-லக்குமி தொடர்புகள் உள்ள கட்டுரை
அறிஞர் ஒருவரால் எழுதப்பட வேண்டும்.

தாக்கணங்கு என்று இலக்குமியை
துர்க்கையாக வர்ணிப்பதாகப் படுகிறது.
திருப்பாவை நோன்பு என்பதும்
துர்க்கையை வழிபடுவது. (கொல்லிப்) பாவை
வழிபாடுதான் அது.

அன்புடன்,
நா. கணேசன்

karthi

unread,
Nov 5, 2009, 11:30:23 PM11/5/09
to mint...@googlegroups.com
கண்ணன், ஹரி,
 
Cool it for a while. நீங்கள் இருவரும் இல்லாமல் மின் தமிழ்தான் ஏன்?
கொஞ்ச காலம் இதை குளிர் பதனப் பெட்டியில் வைத்திருந்து
மீண்டும் எடுத்து குளிரக் குளிரப் பேசுங்கள்.
 
ரெ.கா.

srirangammohanarangan v

unread,
Nov 6, 2009, 12:28:56 AM11/6/09
to mint...@googlegroups.com
திரு ஹரிகிருஷ்ணன்,    கண்ணன்     இரண்டு  கண்ணன்களுக்கு  நடுவில்   எதற்கிந்த   சகடாசுரம்?     வை  மு  கோ  உரையில்   மலரை  சிறப்பித்துப்  பின்  அதைத்  தாளுக்கு   உவமையாக்கியும்,    விளக்கத்தில்    தாளுக்கே    தாக்கணங்கு    உறைவதை    ஆக்கியும்   பொருள்  உரைக்கிறார்.    கம்பன்    தமிழில்   பெருங்காவியம்  செய்தவர்.   காவியத்தில்   பலவித  பாட்டுக்களும்   இருக்கும்.    கால  ஓட்டத்தில்  இடைச்செருகலும்    இருக்கலாம்.     இதுதான்  விஷயம்.   இதற்கு  மேல்  நீங்கள்  படிக்கும்போது  எழும்   உணர்ச்சிகளைச்   சுவையாக்கப்   பாருங்கள்.    வெறும்  உணர்ச்சிகள்    விரசத்தில்  அன்றோ  முடியும்.  
பக்தி  உலகம்   வேறு    இலக்கியம்  வேறு    என்பதை    நீங்கள்   இருவருமே    நன்கு  உணர்ந்தவர்கள்    தாமே.    smile  please :--)))      

 

Raja sankar

unread,
Nov 6, 2009, 12:34:00 AM11/6/09
to mint...@googlegroups.com
இலக்குவனின் பாதம் எப்படியிருக்கிறது  என்பது கம்பர் வர்ண்ணை

இலக்குமி வசிக்கும் செந்தாமரை மலர் போல் மெல்லியது, பாதத்தாமரை என்று சொல்லப்படுகிதே அது போல்.

இதில் இலக்குமிக்கு எங்கே இழிவு வந்தது என்பது எனக்கு புரியவில்லை. :-))))))

ராஜசங்கர்



2009/11/6 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Nov 6, 2009, 12:37:32 AM11/6/09
to mint...@googlegroups.com
அன்பின் ஹரிகி:
 
நான் பொருள் மயக்கம் தோன்றக்கூடாது என்றுதான் விண்ணப்பித்தேன். (எனக்கு ஒப்பவில்லை என்பதே என் தொணி)
 
முதலில் தாங்கள் எழுதியது:
 
கோபமடைந்த லக்ஷ்மணன், திருமகள் வாசம் செய்கின்ற தன்னுடைய பாதத்தால் அந்தக் கதவை எளிதாக எற்றி உதைத்துத் திறந்தான்.
 
நான் கேள்வி எழுப்பியபின் தாங்கள் எழுதியது:
 
தாக்கணங்கு உரை தாமரை தாளினால் - இலக்குமி வசிக்கின்ற செந்தாமரை மலர் போன்ற (தனது) திருவடியினால்,
 
இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.
 
முதல் வசனத்தில் இளைய பெருமாள் பாதத்தில் பெருந்தேவி வசிக்கிறாள் என்று பொருள் வருகிறது.
இரண்டாவது வசனத்தில் பெருந்தேவி வசிக்கும் செந்தாமரை போன்ற பாதங்களை உடையவராக இளைய பெருமாள் இருக்கிறார் என்பது.
 
தாங்கள் கூறும் இரண்டாவது பொருளே ஏற்புடையது. அது தாங்களும் அறிந்ததே. உரையாசிரியரும் அவ்வாறே சொல்கிறார். வெறும் தாமரை ஒத்த பாதங்கள் என்று சொல்லப்புகாமல், பெருந்தேவி விருப்புடன் வசிக்கும் தெய்வத்தாமரையை ஒத்த பாதங்கள் என்று சிறப்பித்துச் பேசுகிறான் கம்பன் என்பது உரை.
 
மன்னிக்க வேண்டும். நான் பகவத், பாகவத அபச்சாரப்பட்டுவிடக்கூடாதே என்ற பதட்டத்தில் அப்படி எழுதினேன்.
 
நான் பண்டிதனல்லேன். பாமரன். ஏதலன். ஏழை.
 
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனும் அறியேன்.
 
பெரியோர் இச்சிறுபிழை பொறுக்க.
 
ஹரிகி இன்றி மின்தமிழா?
 
மிக்க அன்புடன்
நா.கண்ணன்

2009/11/6 Hari Krishnan hari.har...@gmail.com

srirangammohanarangan v

unread,
Nov 6, 2009, 1:12:08 AM11/6/09
to mint...@googlegroups.com
திரு  கண்ணன்,  திரு  ஹரி,  திரு  ராஜசங்கர்,   இதில்  மேலும்  ஒரு  விஷயத்தை  நினைவில்  கொள்ள  வேண்டும்.     சம்ஸ்க்ருதத்திலும்  சரி,   தமிழிலக்கியத்திலும்   சரி,   சமய  இலக்கியங்களில் கூட,       லக்ஷ்மி    என்பது   ஸ்ரீ  என்ற  பெரிய   பிராட்டியின்     சிறப்புப் பெயராகப்  பயன்படுத்தும்   இடங்கள்  மட்டுமில்லை,    பொதுவாக  சிறப்பு,   செல்வம்,   எட்டுவித     வளங்கள்  என்பதைக்  குறிக்கப்  பயன்படுத்தப்படும்   பொதுச்சொல்லாகவும்    பயன்படுவதுண்டு.     பொது   உரிச்சொல்லாகப் பயன்படும்  இடத்தில்    அது    திருமாலின்   அகலகில்லேன்  உறை  மார்பா   என்னும்  பிராட்டியைக்  குறிப்பதாக    மயங்குதல்  கூடாது.    ஒரு  இடத்தில்   திரு   என்பது   சிறப்புபெயராக    வரும்,  வேறொரு  இடத்தில்     பொதுச்சொல்லாக   வரும்.     
 
சம்ஸ்க்ருதத்தில்      விபீஷணன்    வந்து  சரணடையும்  கட்டத்தில்       வால்மீகி     ‘அந்தர்கத   ஸ்ரீமான்’   என்று  சொல்கிறார்.    அப்பொழுது    பொருள்    ஸ்ரீராமனைச்  சரணடைந்து     அவனுக்கே    குற்றேவல்  செய்ய  வேண்டும்   என்ற   ஊக்கமாகிய    கைங்கர்யஸ்ரீ     நிரம்பப்  பெற்ற     விபீஷணன்   என்பது.     ஸ்ரீ  என்று  வந்ததாலேயே   அது    விஷ்ணு   பத்னியைக்    குறிக்கிறது   என்று  கொள்வதில்லை. 
 
திருவாய்மொழியில்     ‘திருவுடை மன்னரைக்  காணில்    திருமாலைக்  கண்டேனே  என்னும்’  என்று  வருகிறது.     இங்கு  முதல்    திரு    பொதுச்சொல்    செல்வத்தையும்,    புகழையும்,  வீரத்தையும்  குறித்து  வந்தது.     திருமாலில்   உள்ள  திரு    பெரியபிராட்டியாரைக்   குறித்து  வந்தது.     இதுபோல்  நெடுக   வடமொழி   இலக்கியங்களிலும்,  தமிழ்    இலக்கியங்களிலும்     காணலாம்.  
 
இங்கு   எடுக்கப்பட்ட   பாடலுக்குப்  பொருள்  சொல்ல வந்த   ஸ்ரீ  வை மு கோ  அவர்களும்      விளக்கத்தில்    இலக்குவன்    பாதத்தில்   கைங்கர்யஸ்ரீ   உறைவதைக்  குறிப்பிடுகிறார்.     எனவே     திருமகள்    உறைகின்ற    தாமரை   மலர்   போன்ற    திருவடிகளை   உடையவன்   என்னும்  போது       தாக்கணங்கு  என்பது    திரு  ஆகிய    சிறப்பு  பெயரைக்  குறிக்கும் எனவும்,      தாளுக்கே   நேராகச்  சொல்லும்  போது     வீரமும்,   தொண்டாகிய   பேறும்   ஆகிய     தாக்கணங்கு    உறை   தாள்   என்றும்   பொதுச்சொல்லாக்கிப்    பொருள்  கொள்ளுதல்    தமிழ்,  வடமொழி   இலக்கிய    பிரயோகங்களுக்கு      ஒப்பிய    முறையாகும்    என்று  நினைக்கிறேன்.  

 

Raja sankar

unread,
Nov 6, 2009, 1:18:13 AM11/6/09
to mint...@googlegroups.com
//   தாளுக்கே   நேராகச்  சொல்லும்  போது     வீரமும்,   தொண்டாகிய   பேறும் 
  ஆகிய     தாக்கணங்கு    உறை   தாள்   என்றும்   பொதுச்சொல்லாக்கிப்    பொருள்  கொள்ளுதல்    தமிழ்,  வடமொழி   இலக்கிய    பிரயோகங்களுக்கு      ஒப்பிய    முறையாகும்    என்று  நினைக்கிறேன்.  //

அப்படியே. விரிவான விளக்கத்திற்கு நன்றி.

ராஜசங்கர்



2009/11/6 srirangammohanarangan v <ranga...@gmail.com>

devoo

unread,
Nov 6, 2009, 1:55:48 AM11/6/09
to மின்தமிழ்
Nov 6, 11:12 am, srirangammohanarangan v

* கைங்கர்யஸ்ரீ *

>> வால்மீகி *அந்தர்கத ஸ்ரீமான்*என்று சொல்கிறார் <<

*அந்தரிக்ஷகத ஸ்ரீமாந்*

‘லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:’ என்று இளைய பெருமாளுக்கும்;
தொண்டெனும் திருவை வளர்ப்பவர் என்னும் பொருளில்.

பசுமாட்டின் பின்புறம்,வில்வ இலையின் பின்புறம்,மங்கையரின் வகிடு,தாமரை
வனம், பசுஞ்சாணம்,மறை முழங்கும் இடம் இவையும் இலக்குமி உறையும் தலங்கள்.

காலக்ஷேபம் நடைபெறுவதற்காகக் குடில் ஒன்று அமைக்கச் செய்கிறார்
ஆளவந்தார்; மறையவர் புண்யாஹ வாசநம் நடத்துமுன் அதைப் பார்க்க ஆசை
கொள்கிறார் யாமுனாசார்யரின்
அருமைச் சீடரான மாறநேர் நம்பிகள்.முதலிகள் முதல் தினம் அவரை
அக்குடிலுக்கு அழைத்துச் சென்று காண்பிக்கின்றனர். அடுத்த நாள் செய்தி
அறிகிறார் ஆளவந்தார்; புண்யாஹ வாசநம் இனித் தேவையில்லை என்று உடனே
அறிவிக்கிறார்.

கைங்கர்ய ஸ்ரீ நிரம்பிய பாகவதரின் திருவடியின் ப்ரபாவம்

தேவ்

N. Kannan

unread,
Nov 6, 2009, 2:56:45 AM11/6/09
to mint...@googlegroups.com
2009/11/6 srirangammohanarangan v ranga...@gmail.com
 
இங்கு   எடுக்கப்பட்ட   பாடலுக்குப்  பொருள்  சொல்ல வந்த   ஸ்ரீ  வை மு கோ  அவர்களும்      விளக்கத்தில்    இலக்குவன்    பாதத்தில்   கைங்கர்யஸ்ரீ   உறைவதைக்  குறிப்பிடுகிறார்.     எனவே     திருமகள்    உறைகின்ற    தாமரை   மலர்   போன்ற    திருவடிகளை   உடையவன்   என்னும்  போது       தாக்கணங்கு  என்பது    திரு  ஆகிய    சிறப்பு  பெயரைக்  குறிக்கும் எனவும்,      தாளுக்கே   நேராகச்  சொல்லும்  போது     வீரமும்,   தொண்டாகிய   பேறும்   ஆகிய     தாக்கணங்கு    உறை   தாள்   என்றும்   பொதுச்சொல்லாக்கிப்    பொருள்  கொள்ளுதல்    தமிழ்,  வடமொழி   இலக்கிய    பிரயோகங்களுக்கு      ஒப்பிய    முறையாகும்    என்று  நினைக்கிறேன்.   

 
 
தன்யன் ஆனேன்.
 
க.>

Kamala Devi

unread,
Nov 6, 2009, 3:05:56 AM11/6/09
to mint...@googlegroups.com
சுழல் பந்து சார், என்ன நடக்கிறது இங்கே?--[  அழுகை வருகிறது?]
கேட்பதற்கு யாருமே இல்லை என்று நினைப்பா?  ஞான் ஒருத்தி இருக்கிறேன், என்ற பயம் கூடவா இல்லை?
தேவ் சார், திவாகர்,மீனா, கீதா, என அனைவரும் இப்படி வாருங்கள்.கேளுங்கள் நியாயத்தை.
இரண்டு குழந்தைகள் முகத்தைத்திருப்பியா, இல்லையே, என்னவோ போல் முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்களே? என்ன சேதியாம், அட, ஒன்றுமேயில்லை,
சக்கப்ரதமனில் நெய்  என்பது ஆழ்வாரின் வாதம்.
இல்லை பாலடப்ப்ரதமனில் தான் நெய் என்பது எங்கள் ஹரியின் வாதம்.
இரண்டு குழந்தைகளையும் தரதரவென்று இழுத்துக்கொண்டு வாருங்கள் இங்கே?
கருத்து கந்தசாமி-- ஞான் எதற்கு இருக்கிறேன், இதோ, முட்டிபோட்டு உட்கார்த்தியாச்சு?இனி என்ன செய்ய வேண்டும்?
இதோ, இந்த நெய் விழுதை இருவரும்  அப்படியே  வாயில் --ஆ, என்ன இப்படியா அவசரப்படுவது?
மெல்ல, மெல்லசாப்பிடுங்கள்.நெய் விழுது விழுதாய் வழித்துபோட்டாச்சா?.
இனி போய் விளையாடுங்கள். அட, உண்னி அப்பத்துக்கு அடுத்த சண்டையா?
எங்கே அந்த பிரம்பு?
, எங்கள் அன்பு ஹரி, இனி  ஒன்று சொல்லட்டுமா? நிங்ஙளும்  வேண்டும்.ஆழ்வாரும் வேண்டும்.
நிங்ஙளிருவரின் தமிழில் எவ்வளவு கற்றுக் கொள்கிறேன்.
உலகமே அன்புமயம் கமலம், என்பது ஆழ்வாரின் அமுதமொழி.
ஹரியின் கவிதையில், தமிழறிவில், எல்லோருக்குமே ப்ரீதி உண்டு.ஆழ்வாரின் தமிழறிவிலும் அப்படியே,
நாங்கள் என்ன பாவம் செய்தோம், எங்களுக்கும்  இனிய தேனமுதம் கேட்கும் ஆசை இருக்காதா?
எவ்வளவு அரிய விஷயங்களை எல்லாம் அனாயாசமாய் எழுதுகிறீர்கள்.அதனால்  இதெல்லாம்  வேண்டாம்.
உடனே அடுத்த இழையை ஆரம்பியுங்கள்.படிக்க ஆவலாயுள்ள  ,
அன்பு  கமலம்
 
http://www.kamalagaanam.blogspot..com



கண்ணன், ஹரி,
 Cool it for a while.. நீங்கள் இருவரும் இல்லாமல் மின் தமிழ்தான் ஏன்?
அன்புடன்,
ஹரிகி.




Get your new Email address!
Grab the Email name you've always wanted before someone else does!

N. Kannan

unread,
Nov 6, 2009, 3:25:39 AM11/6/09
to mint...@googlegroups.com
அன்பின் கமலம்.
 
அழவைத்துவிட்டீர்கள்.
நான் ஏன் பதறினேன்?
நம் ஜெகன்மாதாவிற்கு இழுக்கு வந்துவிடக்கூடாதே என்றுதானே! என் படோடாபத்தைக்காட்டவா? இல்லையே.
இந்த ஹரி.கி சாதாரண ஆளா? 'கற்பின் கனலி' என்று அன்னை சீதை பற்றி எழுதி என்னை அழவைத்தவர்தானே!
அவர் வாக்கில் வந்தவுடன் சுரீர் என்றது. அவ்வளவுதான்.
அவரே பின்னால் விளக்கிவிட்டார், கூடவே மோகனரங்கனும், தேவ்வும்.
அன்னை எந்தவித அகௌரவமும் இன்றி இருக்கிறாள் என்றரிந்து அமைதியானேன். தாய்ப்பாசம் என்ன செய்ய?
ஹரிகி மீது எனக்கு கோபம் வருமா? துளிக்கூட இல்லை.
என் கோபமெல்லாம் கம்பன் மேல்தான். ஹரிகி இதுதாண்டா பாடம் என்றவுடன் கம்பனைக் கழட்டிவிட்டேன்.
இப்போ சேர்த்துக்கொண்டேன் ;-)
சரி,சரி இன்னும் ரெண்டு விழுது போடுங்கோ, முழங்கை வழிய நெய் கொண்ட அக்காரடிசில் என்றால் எங்கள் ஆண்டாளுக்கும் பிடிக்கும், அடியேனுக்கும் பிடிக்கும் ;-)
 
க.>

2009/11/6 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

Kamala Devi

unread,
Nov 6, 2009, 3:36:43 AM11/6/09
to mint...@googlegroups.com
எனக்கும் அழுகை வந்துவிட்டது..
இப்பொழுதுதான் மின்தமிழுக்கு வந்தேன்.
பார்த்தால், என்டெ அன்பான ரெண்டு குட்டிப்பாப்பாக்கள்,---
போகட்டும், சட்டுவம் நிறைய நிறைய நெய் தந்தாச்சு, இனி ஒரு விள்ளல் கூட தரமுடியாது.
வயிறு கெட்டுப்போகும்.வேண்டுமானால் உண்னி அப்பம் தருகிறேன்.போய் விளையாடுங்கள்.
ஆ, ஒரு சுவாரஸ்யமான  தகவல் தருகிறேன்.
மலையாளம்தான் உலகிலேயே அமுதமொழி,ஸ்வப்ன மொழி, ஒப்பற்ற மொழி---?/?
தமிழறிஞர்களே,சிலிர்த்தெழுந்து  ஓடி வாருங்கள்.
கமலத்தை ----கிழித்துப்போடவேண்டாமா?
[அப்பாடா! இழையை திருப்பி விட்டாச்சு]
 அன்பில் மட்டுமே கமலம்
 
http://www.kamalagaanam.blogspot..com



From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Friday, 6 November 2009 4:25:39

Subject: [MinTamil] Re: தாக்கம் என்றால் என்ன அர்த்தம் ?

அன்பின் கமலம்.
 
அழவைத்துவிட்டீர்கள்.
நான் ஏன் பதறினேன்?
நம் ஜெகன்மாதாவிற்கு இழுக்கு வந்துவிடக்கூடாதே என்றுதானே! என் படோடாபத்தைக்காட்டவா? இல்லையே.
இந்த ஹரி.கி சாதாரண ஆளா? 'கற்பின் கனலி' என்று அன்னை சீதை பற்றி எழுதி என்னை அழவைத்தவர்தானே!
அவர் வாக்கில் வந்தவுடன் சுரீர் என்றது. அவ்வளவுதான்.
அவரே பின்னால் விளக்கிவிட்டார், கூடவே மோகனரங்கனும், தேவ்வும்.
அன்னை எந்தவித அகௌரவமும் இன்றி இருக்கிறாள் என்றரிந்து அமைதியானேன்.. தாய்ப்பாசம் என்ன செய்ய?
ஹரிகி மீது எனக்கு கோபம் வருமா? துளிக்கூட இல்லை.
என் கோபமெல்லாம் கம்பன் மேல்தான். ஹரிகி இதுதாண்டா பாடம் என்றவுடன் கம்பனைக் கழட்டிவிட்டேன்.
இப்போ சேர்த்துக்கொண்டேன் ;-)
சரி,சரி இன்னும் ரெண்டு விழுது போடுங்கோ, முழங்கை வழிய நெய் கொண்ட அக்காரடிசில் என்றால் எங்கள் ஆண்டாளுக்கும் பிடிக்கும், அடியேனுக்கும் பிடிக்கும் ;-)
 
க.>

2009/11/6 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
இரண்டு குழந்தைகளையும் தரதரவென்று இழுத்துக்கொண்டு வாருங்கள் இங்கே?
கருத்து கந்தசாமி-- ஞான் எதற்கு இருக்கிறேன், இதோ, முட்டிபோட்டு உட்கார்த்தியாச்சு?இனி என்ன செய்ய வேண்டும்?
இதோ, இந்த நெய் விழுதை இருவரும்  அப்படியே  வாயில் --ஆ, என்ன இப்படியா அவசரப்படுவது?
மெல்ல, மெல்லசாப்பிடுங்கள்.நெய் விழுது விழுதாய் வழித்துபோட்டாச்சா?.
இனி போய் விளையாடுங்கள். அட, உண்னி அப்பத்துக்கு அடுத்த சண்டையா?
எங்கே அந்த பிரம்பு?




Yahoo! Toolbar is now powered with Search Assist. Download it now!

meena muthu

unread,
Nov 6, 2009, 3:43:06 AM11/6/09
to mint...@googlegroups.com
உஸ்...! அப்பா... என்னதான் செய்வது இந்த பிள்ளைகளை என்று புரியாமல் தவித்திருந்தேன்...!


>> ஹரிகி மீது எனக்கு கோபம் வருமா? துளிக்கூட இல்லை.
என் கோபமெல்லாம் கம்பன் மேல்தான். ஹரிகி இதுதாண்டா பாடம் என்றவுடன் கம்பனைக் கழட்டிவிட்டேன்.
இப்போ சேர்த்துக்கொண்டேன் ;-) <<

ம்ம்...இப்பத்தான் சமத்து...!எங்கே அந்த இன்னொரு சமத்து...? இதோ... ஓடி வந்துருமாம்! அம்மா கூப்பிட்டால் வராத பிள்ளையும் உண்டோ...! :))


>> மலையாளம்தான் உலகிலேயே அமுதமொழி,ஸ்வப்ன மொழி, ஒப்பற்ற மொழி---?/?
தமிழறிஞர்களே,சிலிர்த்தெழுந்து  ஓடி வாருங்கள். <<

இதென்ன புது வம்பு...!   (:))



2009/11/6 N. Kannan <navan...@gmail.com>

karthi

unread,
Nov 6, 2009, 4:14:06 AM11/6/09
to mint...@googlegroups.com
>>ஆ, ஒரு சுவாரஸ்யமான  தகவல் தருகிறேன்.
மலையாளம்தான் உலகிலேயே அமுதமொழி,ஸ்வப்ன மொழி, ஒப்பற்ற மொழி<<
 
அது தெர்யாது தாயி! ஆனா மின் தமிழில் கமல மொழிதான் அமுத மொழி.
 
ரெ.கா.
----- Original Message -----

N D Llogasundaram

unread,
Nov 7, 2009, 7:12:57 AM11/7/09
to mint...@googlegroups.com
Dear Jean-Luc Chevillard,

The word 'tAkkam' in Tamiz has equalent in English is 'impact' as we use in prose on date

You have already put it as the second in your list i.e. 'influenced'

anpudan
NDLS


2009/11/4 Jean-Luc Chevillard <jean-luc....@univ-paris-diderot.fr>
Dear Vinodh,


தாக்கம் என்றால் என்ன அர்த்தம் ?

please clarify for me your use of the word "தாக்கம்" inside the sentence
fragment "ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு." contained
inside your message.

Does it mean that Tamil has been ATTACKED by Prakrit?

Does it mean that Tamil has been INFLUENCED by Prakrit?

Does it mean that Tamil has BORROWED from Prakrit?

When the famous French writer Marcel Proust (1871-1922) (SEE
<http://en.wikipedia.org/wiki/Proust>) uses the word "vétiver" (also
spelt "vétyver") inside his famous book "À la recherche du temps perdu"
(SEE <http://en.wikipedia.org/wiki/In_Search_of_Lost_Time>), nobody in
France thinks that French is being ATTACKED by Tamil (=French "Tamoul"),
although "vétiver" is a Tamil word (வெட்டி வேர்).

Please clarify!

Yours with every good wish

-- Jean-Luc (தமிழ் மாணவன், Paris)



வினோத் ராஜன் a écrit :
>> இது சுவாரசியமான பாயிண்ட். தொல்தமிழில் பல சொற்கள் பிராகிரதத்தில்
>> இருந்து எடுக்கப் பட்டன் (உம்: அமைச்சர், அவை, படிகம்). அது பல்லவர்
>> காலத்திற்க்கு முன்பு.
>>
>
> ஆம்.
>
> ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு. பிறகு
> தான் நேரடி சமஸ்கிருத தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
>
> இன்று தமிழ்ச்சொற்களாக அறியப்படுபவை பல பிராகிருத மூலத்தை கொண்டவை தான்.
>
> நா.கணேசன் அவர்களே கூட , கண்ணனும் (< கண்ஹ < கிருஷ்ண ), கண்ணகி ( <
> கர்ணகீ ), மாசாத்துவனும் முதலியவை எல்லாம் கூட பிராகிருத மூலம் கொண்டவை
> என்று நிறுவியுள்ளாரே.
>
> V
>
> On Nov 4, 11:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
>> On 4 Nov, 15:56, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>> wrote:
>>    இதோ
>>
>>
>>> நேயம்  என்பதற்கு   தமிழ்  லெக்ஸிகன்   பட்டியல்  இடும்    பொருள்
>>> வரிசையும்,    சொற்பிறப்புக்  குறிப்புகளும் ----
>>>
>>> நேயம் -- n  <Pkt.  nE-am < snEha
>>> 1) Love,  affection;  அன்பு.
>>>
>
>
>> அதன் பின்னர் நேராக சமஸ்கிருத தாக்கம் வந்தது
>>
>> கடந்த சில நூறு ஆண்டுகளாக தமிழர்கள் சமஸ்கிருத வார்த்தைகளை நேரடியாகவே -
>> அதாவது தமிழ் சொல்மாற்ற விதிகளுக்கு உட்பட்டு-  வாங்குகிறது என்பது என்
>> அவதானம் .
>>
>> உதாரணம் : நேயம் மூல சமஸ்கிருதம் பிராகிருதம் மூலமாக தமிழில் வந்தது. அதே
>> மூலச்சொல் சிநேகிதன் என்றும் தற்கால தமிழில் வருகின்றது.
>>
>> விஜயராகவன்
>>
>
>






shivan .

unread,
Nov 8, 2009, 9:29:56 AM11/8/09
to mint...@googlegroups.com
ஹரிகிருஷ்ணன் ஜி

ஏற்கனவே சற்று சூடாக போய்க் கொண்டிருக்கும் மடலாடல்கள் இடையே  என் கருத்தை சொல்ல தயங்கினேன். இருப்பினும் இங்கே சொல்ல விழைகிறேன்; பணிவுடன் இங்கே இடுகிறேன்.

எனக்கும் அந்த பாடலை, பதம் பிரித்து பொருள் சொல்லும் போது கூட, திருமகள் உரைகின்ற தாமரை போன்ற இளஞ்சிவப்பு பாதங்கள் என்றுதான் புரிகிறது.  வை. மு. கோ அவர்களுடைய உரையிலும் இதே போல் தான் புரிகிறது.

ஏனெனில் இது போன்ற சொல்லாடலை வேறெங்கோ படித்த நினைவும் வருகிறது. மஹாலக்ஷ்மி உரையும் தாமரையை போன்ற கண்கள் என்பதாக ஒருபாடலை படித்த நினைவு. இளஞ்சிவப்பாக இருக்கும் எதைசொன்னாலும் லக்ஷ்மியை சொல்லை பின் தாமரையை சொல்லி அது போல என்பதாகத்தான் சொல்லப்படும் வழக்கம் இருந்திருக்கிறது.

நிச்சயமாக இலக்ஷ்மணன் பாதத்தில் லக்ஷ்மி உரைவதாக சொல்லியிருக்க முடியாது என்றுதான் அடியேனும் கருதுகிறேன்.

ஆகவே இது அந்த காலத்தில் சொல்லப்படும் வழக்கமாகத்தான் இருந்திருக்கிறது.



2009/11/5 Hari Krishnan <hari.har...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 11, 2009, 5:49:57 AM11/11/09
to mint...@googlegroups.com
.//தேவ் சார், திவாகர்,மீனா, கீதா, என அனைவரும் இப்படி வாருங்கள்.கேளுங்கள் நியாயத்தை.//

இன்னிக்குத் தான் வந்தேன், :D

2009/11/6 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
Reply all
Reply to author
Forward
0 new messages