இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம். கல்லூரிகளில் எல்லா நிலை மாணவர்களுக்கும் கட்டாய பாடம் என்று ஒன்று வைத்து படிக்க வேண்டிய சில முக்கிய நூல்கள் என பட்டியலிட்டால் இதனை கட்டாயம் அதில் இணைக்க வேண்டும் என்று நான் முன் மொழிவேன். இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா.தொடரும்...அன்புடன்சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
’என் சரித்திரம்’ பற்றி விரிவாக எழுதுங்கள்.
நூலைப் படிக்க விரும்புவோருக்கு
தமிழ் இணையப் பல்கலையின்
இந்த வலைக்கண் உதவும்.
என் சரித்திரம்
மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள்
http://www.tamilvu.org/library/lA471/html/lA471ind.htm
பொருளடக்கம்:
http://www.tamilvu.org/library/lA471/html/lA471cnt.htm
நா. கணேசன்
இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம். கல்லூரிகளில் எல்லா நிலை மாணவர்களுக்கும் கட்டாய பாடம் என்று ஒன்று வைத்து படிக்க வேண்டிய சில முக்கிய நூல்கள் என பட்டியலிட்டால் இதனை கட்டாயம் அதில் இணைக்க வேண்டும் என்று நான் முன் மொழிவேன். இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா. //
நன்கு உணர்ந்து கூறும் வார்த்தைகள். இதைத் தமிழ்நாட்டின் பாடத்திட்டம் தயாரிப்போர் உணர வேண்டும். கல்லூரியிலே ஆரம்பிக்காமல் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் கால கட்டத்திலேயே ஆரம்பிக்கலாம். உங்கள் கருத்து மிகவும் அருமையான ஒன்று.
2012/5/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம். கல்லூரிகளில் எல்லா நிலை மாணவர்களுக்கும் கட்டாய பாடம் என்று ஒன்று வைத்து படிக்க வேண்டிய சில முக்கிய நூல்கள் என பட்டியலிட்டால் இதனை கட்டாயம் அதில் இணைக்க வேண்டும் என்று நான் முன் மொழிவேன். இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா.--தொடரும்...அன்புடன்சுபா
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
என் அருமைத் தமிழ் மாணவியே, சுபாஷிணியே, மின்தமிழ்ப் பெண்ணே ... (இன்னும் சொல்ல விருப்பம்) I may get mushy that others can't understand it! :-)சொல்லுங்கள், சொல்லுங்கள் ... நீங்கள் உ.வே, சாவின் "என் சரித்திரம்" படித்தபடி.
இதைப் படித்தபோது மனமெல்லாம் சந்தோஷம் நிறைந்தது. எனக்கு நானே சிரித்துக் கொண்டேன். தமிழறிஞர்.. உங்களைப் போன்றோர் இப்படி சொல்வது எனக்கு எவ்வளவு ஊக்கமாக இருக்கின்றது தெரியுமா?நிச்சயமாக தொடர்ந்து எழுதுகின்றேன். நூலில் நிறைய விஷயங்கள் உள்ளன. நிச்சயம் இப்பதிவு தொடரும்.சுபா
அப்பப்பா! நான் எழுத நினைப்பேன். அதற்குள் இந்த முனைவர் ராஜம் எழுதி விடுவார். அதற்காக நான் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. உரிமை போராட்டம்.ஸுபாஷிணி!தமிழ்த்தாத்தா உனது கட்டுரையை மெச்சியிருப்பார். என்ன நேர்த்தி! என்ன விசாலம்!
முன்னர் வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை எனது புரிதலில் உணர முடிந்தது.
மிகவும் சரியான மொழி.
உ.வே.சா அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சுயசரிதத்தை எழுதி வெளியிட்டிருந்தார்கள்.
அவரது எழுத்தில் இறுதியாக வந்த அத்தியாயம் மே மாதத்துடன் முற்றுப்பெறாமலேயே நிறைவடைந்தது. ஆக 122 அத்தியாயங்களுடன் என் சரித்திரம் முற்றுப் பெறாத சரித்திரமாகவே நம் கையில் தவழ்கின்றது.
நமது தவக்குறைவால் மேலும் பல தகவல் பதிவாவதை நாம் இழந்திருக்கின்றோம் என்பதில் ஐயமில்லை.
இவர் கடந்து வந்த வாழ்க்கை படிகள் இன்றைக்கு ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதால் அக்கால வழக்கங்கள், தமிழ்க்கல்வியின் நிலை, தரம், சைவ ஆதீனங்களின் தமிழ்ப் பணி, தமிழ் நூல் அச்சு பதிப்பாக்க முயற்சிகள் போன்றவை பற்றி பல விஷயங்களை இந்த நூலின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.ஒவ்வொரு பகுதியையும் படிக்கும் போது எளிய தமிழில் அவை அமைந்துள்ளமையால் வாசகங்களோடு ஒன்றித்து போய் உ.வே.சாவின் உணர்வுகளையும் அறிந்து பயணிக்கும் நிலையை ஒவ்வொரு அத்தியாயங்களை வாசிக்கும் போதும் உணர்ந்தேன்.
இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா.
தொடரும்...அன்புடன்சுபா
திருமிகு சுபா அம்மா.
உ.வே.சா அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சுயசரிதத்தை எழுதி வெளியிட்டிருந்தார்கள்.இந்த நூலின் பெயர் என்ன? எந்தத் தகவலையும் உடன் தேடித் தரும் திரு கணேசனார் இtந்த நூலின் மின்பதிப்பு இருந்தால் தொடர்பு நல்க.
..
திருமிகு சுபா அம்மா.மிக அருமையான தொடக்கம். தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்
அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
On May 17, 11:35 am, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:
> 2012/5/15 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
>
>
> > முன்னர் வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை
> > எனது புரிதலில் உணர முடிந்தது.
>
> > மிகவும் சரியான மொழி.
>
> > உ.வே.சா அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின்
> > சுயசரிதத்தை எழுதி வெளியிட்டிருந்தார்கள்.
>
> இந்த நூலின் பெயர் என்ன? எந்தத் தகவலையும் உடன் தேடித் தரும் திரு கணேசனார்
> இtந்த நூலின் மின்பதிப்பு இருந்தால் தொடர்பு நல்க.
>
>
sorry for english. No e-book (yet). Tamil University reprinted the
book in 1986.
mANaakkanum, aasaanum
http://www.kalachuvadu.com/issue-79/katturai02.htm
NG
>
> அவரது எழுத்தில் இறுதியாக வந்த அத்தியாயம் மே மாதத்துடன் முற்றுப்பெறாமலேயே
>
>
>
>
>
> > நிறைவடைந்தது. ஆக 122 அத்தியாயங்களுடன் என் சரித்திரம் முற்றுப் பெறாத
> > சரித்திரமாகவே நம் கையில் தவழ்கின்றது.
> > நமது தவக்குறைவால் மேலும் பல தகவல் பதிவாவதை நாம் இழந்திருக்கின்றோம்
> > என்பதில் ஐயமில்லை.
>
> > இவர் கடந்து வந்த வாழ்க்கை படிகள் இன்றைக்கு ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு
> > முற்பட்டவை என்பதால் அக்கால வழக்கங்கள், தமிழ்க்கல்வியின் நிலை, தரம், சைவ
> > ஆதீனங்களின் தமிழ்ப் பணி, தமிழ் நூல் அச்சு பதிப்பாக்க முயற்சிகள் போன்றவை
> > பற்றி பல விஷயங்களை இந்த நூலின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.
>
> > ஒவ்வொரு பகுதியையும் படிக்கும் போது எளிய தமிழில் அவை அமைந்துள்ளமையால்
> > வாசகங்களோடு ஒன்றித்து போய் உ.வே.சாவின் உணர்வுகளையும் அறிந்து பயணிக்கும்
> > நிலையை ஒவ்வொரு அத்தியாயங்களை வாசிக்கும் போதும் உணர்ந்தேன்.
>
> > இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது
> > அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா.
>
> > தொடரும்...
>
> > அன்புடன்
> > சுபா
>
> > திருமிகு சுபா அம்மா.
>
> மிக அருமையான தொடக்கம். தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்.- Hide quoted text -
>
> - Show quoted text -
சரியான த்கவல்.நானும் கண்ணனும் வேங்கடகிருஷ்ணனுடன் (உ. வே சா வின் பெயரன்) அவர் “இடையன் வெட்டு அரை வெட்டு” என்ற சொற்றொடருக்கு உ. வே. சா பொருள் கண்ட கதை சொன்னார்.அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இல்லையெனில் சொல்கிறேன்.நரசய்யா
“நாங்கள்
பாபநாசத்துக்குப் பக்கத்திலுள்ள உத்தமதான புரத்திலிருந்து
வருகிறோம். தங்களைப் பார்க்கத்தான் வந்தோம். இவன் என்
குமாரன். தமிழ்
படித்து வருகிறான். சிலபேரிடம் பாடம் கேட்டிருக்கிறான். சங்கீதமும்
அப்பியாசம் செய்திருக்கிறான். தங்களிடம் பாடம் கேட்க
வேண்டுமென்று
மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறான். தமிழைத் தவிர வேறு
ஒன்றிலும் இவன்
புத்தி செல்லவில்லை. எப்போதும் தங்கள் ஸ்மரணையாகவே
இருக்கிறான்.
ஆகையால் தங்களிடம் இவனை அடைக்கலமாக ஒப்பித்து விட்டுப் போக
வந்தேன்.”
“உங்கள் பெயர் என்ன?”
“என்
பெயர் வேங்கடஸூப்பன் என்பர். இவன் பெயர் வேங்கடராமன்”
என்றார் என் தந்தையார்.
“வேங்கடஸூப்பனென்பது
நல்ல பெயர். வேங்கட ஸூப்ர
மணியனென்பதன் மரூஉ அது. திருவேங்கட மலையில் முருகக் கடவுள்
கோயில் கொண்டிருக்கிறாரென்பதற்கு இந்த வழக்கு ஓர் ஆதாரம்.”
அவர்
பேச்சிலே ஒரு தனி இனிமையை நான் உணர்ந்தேன்.
“சாதாரணமாகப் பேசும்போதே அருமையான விஷயம் வெளி வருகின்றதே!”
என்று நான் ஆச்சரியம் அடைந்தேன்.
நான்
இவ்வாறு பாடம் கேட்டு வந்தபோது ஒருநாள் ஏதோ
விசாரிக்கையில் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, “உமக்கு
‘வேங்கடராமன்’
என்று ஏன் பெயர் வைத்தார்கள்?” என்று
கேட்டார். நான், “வேங்கடாசலபதி
குல தெய்வமாதலால் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் அக்
கடவுள்
பெயரையே கொள்வது வழக்கம்” என்பதைத்
தெரிவித்தேன். வேங்கடராமன்
என்ற பெயரை அவர் விரும்பவில்லையென்று எனக்குக் குறிப்பாகப்
புலப்பட்டது.
“உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா?” என்று அவர் கேட்டார்.
“எங்கள் வீட்டில் என்னை ‘சாமா’ என்று அழைப்பார்கள்” என்றேன்.
“அப்படி ஒரு பெயர் உண்டா, என்ன?”
“அது
முழுப் பெயரன்றே! சாமிநாதனென்பதையே அவ்வாறு மாறி
வழங்குவார்கள்.”
“அப்படியா? சாமிநாதன்
என்ற பெயர் எவ்வளவு நன்றாக இருக்கிறது!
உம்மை நானும் அப்பெயராலேயே அழைக்கலாமென்று எண்ணுகிறேன். நீரும்
இனிமேல் அப்பெயரையே சொல்லிக் கொள்ளும்” என்று
அவர் சொன்னார்.
நான்
அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டேன். வேங்கடராமனாக
இருந்த நான் அன்று முதல் சாமிநாதனாகி விட்டேன். பிள்ளையவர்கள்
விருப்பத்தின்படி எல்லோரும் சாமிநாதன் என்ற பெயரையே
வழங்கலாயினர்.
அன்புகனிந்த அவர் உள்ளத்திற்கு உவப்பைத் தந்த அப்பெயரே
எனக்கு
நிலைத்து விட்டது.
என் பெயர் மாறின சில நாட்கள் வரையில்
எனக்குச் சிறிது கஷ்டமாக
இருந்தது. “சாமிநாதையர்” என்று
யாராவது என்னை அழைத்தால் நான்
என்னைத்தான் அப்படி அழைக்கிறார்கள் என்பதை உடனே உணர்ந்து
கொள்ளவில்லை. என் காது வேங்கடராமன் என்றும் சாமா என்றுமே
கேட்டுப்
பழகியிருந்தது. யாரேனும் என் பெயரைக் கேட்டால் வேங்கடராமன்
என்றுசொல்ல வாயெடுப்பேன்; சட்டென்று மாற்றிக் கொண்டு சாமிநாதன்
என்பேன். நாளாக ஆகப் புதிய பெயரே வழக்கில் வந்தது.
நன்றி - தமிழ் இணைய பல்கலைக்கழகம்
> 2012/5/18 K R A Narasiah <narasiah...@gmail.com>
> > சரியான த்கவல்.
> > நானும் கண்ணனும் வேங்கடகிருஷ்ணனுடன் (உ. வே சா வின் பெயரன்) அவர் “இடையன்
> > வெட்டு அரை வெட்டு” என்ற சொற்றொடருக்கு உ. வே. சா பொருள் கண்ட கதை சொன்னார்.
> > அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இல்லையெனில் சொல்கிறேன்.
> > நரசய்யா
> நன்றி ஐயா. சொற்றொடர் பற்றி இயன்றபோது எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்.
சு. வேங்கடகிருஷ்ணன் உவேசா கொள்ளுப்பெயரன்.
இடையன் எறிந்த மரம் - தமிழின் பழைய மரபுத்தொடர். பழமொழி 400-ல் வெண்பா
உள்ளது. சிந்தாமணியிலும், திருமங்கை மன்னர் பெரிய திருமொழியிலும்
பாடியுள்ளனர்.
இடையன் வெட்டு அறாவெட்டு - தமிழ்ப் பழமொழி.
நா. கணேசன்
> > 2012/5/18 Karuannam Annam <karuan...@gmail.com>
> >> பெயர் பற்றிய மாற்றம் இரசிக்கவும் *ஆராயவும் தக்கது* ஐயா. அவரது இயற்பெயர்
> >> வேங்கடராமன் என்ற சாமிநாதன். சாமா என்று அழைத்திருக்கிறார்கள். சாமிநாதன் என்ற
> >> பெயர் அவரே மறந்தது.
> >> தந்தையார் அவரை அழைத்துக்கொண்டு பிள்ளையவர்களைத் தரிசித்தபோது பிள்ளையவர்கள்
> >> தந்தையார் பெயரை வினவுகிறார். வேங்கடசுப்பன் என்ற வேங்கடராமன் என்ற போது
> >> பிள்ளையவர்கள் வேங்கடசுப்பன் என்ற பெயரைக் கேட்டு மகிழ்ந்துள்ளார்.
> >> வேங்கடக்கடவுள் முருகன் என்பதற்கு அப்பெயரே சாட்சி என்று சுட்டியுள்ளார்.
> >> பிற்பாடு பாடம் சொல்லும்போது தனித்திருந்தபோது ஐயரவர்களிடம் அவர் பெயர்
> >> பற்றிக் கேட்கிறார். பெயர் குலதெய்வப் பெயரான வேங்கடராமன் எனப் பதில்
> >> வருகிறது. சைவரான பிள்ளையவர்கள் மவுனம் சாதித்துவிட்டு வேறு பெயர் உண்டா என்று
> >> கேட்கிறார். ஐயரவர்கள் சாமா என்ற சாமிநாதன் என்றும் அழைப்பார்கள் என்கிறார்.
> >> உடனே பிள்ளையவர்கள் மகிழ்ந்து இனிமேல் நான் உங்களைச் சாமினாதன் என்றே
> >> அழைப்பேன். நீங்களும் அவ்வாறே கூறிக்கொள்ளுங்கள் என்கிறார். சாமாவுக்குச்
> >> சாமினாதன் என்ற பெயரே காதுக்குப் புதிதாக இருக்கிறது. பிள்ளையவர்கள் சாமி
> >> நாதய்யர் என்றே அழைத்து வருகிறார்.
> >> தமிழ்த்தாத்தா என்று தமிழுக்கே தாத்தாவானவருக்குக் குரு அருளால் சுவாமிநாதன்
> >> என்ற பெயர் நிலைத்தது.
> >> பிள்ளையவர்கள் அணுக்கச்சீடர் சவேரிநாதருக்குச் சைவப்பெயர் வைத்த்தும் புதுப்
> >> பெயர் பெற்றவர் அதற்காக் கொண்டாடியதும் தனிக்கதை.
> >> அன்புடன்
> >> சொ.வினைதீர்த்தான்.
> >> 2012/5/18 K R A Narasiah <narasiah...@gmail.com>
23 அல்லது 24 ஆண்டுகளுக்கு முன்னர்..அவ்வப்போது தஞ்சாவூரிலிருந்து மலேசியாவிற்கு தனது அக்காவை, அதாவது என் அம்மாவைப் பார்க்க வரும் எனது மாமா சம்பத் கையோடு சில புத்தகங்களும் கொண்டு வருவார். கவிதை நூல்களும் இருக்கும், சித்தர் நூல்களும் இருக்கும். கதை, நாவல்களும் இவற்றுள் இருக்கும். பொதுவான வாசிப்பு நூல்களும் சில இருக்கும். ஒரு முறை இப்படி கொண்டு வந்த நூல்கட்டில் கந்தபுராணம், திருப்புகழ், என் சரித்திரம் மூன்றும் சேர்ந்திருந்தன. இவை மூன்றையும் அப்போதே விடாது படித்து முடித்ததால் இந்த நிகழ்ச்சி இன்னமும் ஞாபகம் இருக்கின்றது. அதிலும் கந்தபுராணம் நூலின் அட்டைப்படத்தில் மயிலின் மேல் இளம் முருகன் வேலுடன் அமர்ந்தவாறு இருக்கும் காட்சி கூட இன்னமும் மனதில் நிழலாடுகின்றது. ஆக, அப்போது முதன் முதலாக என் சரித்திரம் நூலை முழுதாகப் படித்து முடித்தேன். நூலிலிருந்த ஒரு சில செய்திகள் மட்டும் தான் ஓரளவு ஞாபகத்தில் இருந்தன.
இந்தக் கட்டுரையும் மரபு விக்கியில் இடம் பெற்றுள்ளது.
2012/5/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>
இந்தக் கட்டுரையும் மரபு விக்கியில் இடம் பெற்றுள்ளது.
ஆமாம் திருமதி கீதா. அத்துடன் 22 மின்னூல்கள் திருவேங்கடமணி அவர்கள் முயற்சியில் நமது மின்னூல்கள்தளத்திலும் உள்ளன. இவை உங்களால் தட்டச்சப்பட்டு மரபு விக்கியிலும் இணைக்கப்பட்டுள்ளன.சுபா
--
Suba Tremmelhttp://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
திரு.சொ.வினைதீர்த்தான் அவர்களே,மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ள பற்றி நீங்கள் கேட்டிருந்ததால் உங்களுடன் மேலும் ஒரு தகவலைப் பகிர்ந்து கொள்கின்றேன். நமது வலைப்பக்கத்தில் உள்ள நாகநந்தி மணிமண்டபப் பகுதியில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பற்றிய ஒலிப்பதிவுகள் உள்ளன.அவற்றை இங்கே காணாலாம், கேட்கலாம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பகுதி 2“ ”எப்போதும் சிவ பக்தி பண்ணிக் கொண்டிரு” என்பது என் தந்தையார் எனக்குக் கடைசியில் கூறிய உபதேசம். அந்த உபதேசத்தை நான் கடைபிடிப்பதனால் இந்த அளவில் தமிழ்த் தொண்டு புரியவும் அன்பர்களுடைய ஆதரவைப் பெறவும் முடிந்ததென்று உறுதியாக நம்பிருக்கின்றேன். ” என்று உ.வே.சா என் சரித்திரத்தில் 6ம் அத்தியாயத்தில் கூறுகின்றார்.உ.வே.சா அவர்களின் தந்தையாரைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கருதுகின்றேன். உ.வே.சாவின் வாழ்க்கையில் அவர் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக நின்றவர் அவர் தந்தையார். அவரைப் பற்றிய சில ஆரம்பகால செய்திகளை வாசிப்பதும் உ.வே.சாவின் இளமை காலத்தையும் வாழ்க்கைச் சூழலையும் தெரிந்து கொள்ள உதவும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பகுதி 3மாதாமகர் என்ற ஒரு சொல் ப்ரயோகத்தை இந்த நூலில் தான் தெரிந்துகொண்டேன். தாயாரின் அப்பா, அதாவது தாத்தாவை இச்சொல் குறிக்கின்றது. தனது மாதாமகரைப் பற்றியும் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றியும் உ.வே.சா என் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.
குறிப்பு:இப்பதிவு தொடர்பான குறிப்புக்கள் 7 அத்தியாயத்தில் உள்ளன.தொடரும்..
சுபா
Suba Tremmelhttp://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
பகுதி 3மாதாமகர் என்ற ஒரு சொல் ப்ரயோகத்தை இந்த நூலில் தான் தெரிந்துகொண்டேன். தாயாரின் அப்பா, அதாவது தாத்தாவை இச்சொல் குறிக்கின்றது. தனது மாதாமகரைப் பற்றியும் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றியும் உ.வே.சா என் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.
கன மார்க்க சங்கீதத்தைப் பயிற்சி செய்ய நல்ல உடல் பலமும் தேக ஆரோக்கியமும் முக்கியமாம். தன் மகன் வேங்கட சுப்பையரை தனது தமையனார் கனம் கிருணையரிடம் செல்லத்தம்மாள் ஒப்படைத்தபோது வேங்கட சுப்பைய்யர் மிக மெலிந்ததேகத்தோடு இருந்ததாகவும் "இவனுக்கு புஷ்டி போதாது. நன்றாகச் சாப்பிட வேண்டும், உடம்பு வளைந்து வேலை செய்ய வேண்டும்" என்று சொன்னதையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். "இனிமேல் மண் வைத்து ஒட்டிப் புஷ்டிப் படுத்த முடியுமா? இருக்கிற உடம்பைச் சரியாக காப்பாற்றிக் கொண்டால் போதும்" என்று சொல்லிவிட்டு சில நாட்கள் அங்கே தங்கியிருந்து வேங்கட சுப்பையரை சங்கீத குருகுலத்தில் விட்டு வந்தார் உ.வே.சாவின் பாட்டியார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
//திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என்பவை, இப்போது இருக்கும் பள்ளிகள் போல திங்கள் தொடங்கி வெள்ளி வரை நடைபெறும் வழக்கமெல்லாம் அக்கால வழக்கில் இல்லை. பௌர்ணமி, அமாவாசை பிரதமை அஷ்டமி ஆகிய தினங்களில் பள்ளிக்கூடம் இருக்காது. இந்த விடுமுறை நாட்களை வாவு என்று குறிப்பிடுகின்றார் உ.வே.சா//
.
2012/6/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>//திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என்பவை, இப்போது இருக்கும் பள்ளிகள் போல திங்கள் தொடங்கி வெள்ளி வரை நடைபெறும் வழக்கமெல்லாம் அக்கால வழக்கில் இல்லை. பௌர்ணமி, அமாவாசை பிரதமை அஷ்டமி ஆகிய தினங்களில் பள்ளிக்கூடம் இருக்காது. இந்த விடுமுறை நாட்களை வாவு என்று குறிப்பிடுகின்றார் உ.வே.சா//மலையாளத்தில் கருத்த வாவு என்று கிருஷ்ண பட்சத்தையும், வெளுத்த வாவு என்று சுக்கில பட்சத்தையும் குறிப்பர். இந்த வாவு < உவா என்ற நிலவைக் குறிக்கும் சொல்லின் திரிபு. உ. வெ. சா வின் இளமைக் காலத்தில் வாவு என்ற சொல் வழக்கிலிருந்தது போலும்.
சேசாத்திரி.
//மலையாளத்தில் கருத்த வாவு என்று கிருஷ்ண பட்சத்தையும், வெளுத்த வாவு என்று சுக்கில பட்சத்தையும் குறிப்பர். இந்த வாவு < உவா என்ற நிலவைக் குறிக்கும் சொல்லின் திரிபு. உ. வெ. சா வின் இளமைக் காலத்தில் வாவு என்ற சொல் வழக்கிலிருந்தது போலும்.
அப்படியா..? இப்போது இந்தச் சொல் ஏதாகினும் வகையில் தமிழர் பேச்சு வழக்கத்தில் உள்ளதா ?//
பகுதி 5சாமி மலையில் இருக்கின்ற கடவுள் நாமிநாதன். அந்த மூர்த்தியின் பெயரை நினைத்து இடப்பட்ட பெயரே உ-வே.சா அவர்களுக்கு வாய்த்தது, இவரை அனைவரும் சாமா என்றே பெயரைச் சுருக்கி அழைப்பார்களாம். ஐந்து வயதான போது உ.வே.சா அவர்களுக்கு வித்தியாப்பியாசம் செய்து வைத்தனர் இவர் குடும்பத்தினர். இவரது பாட்டனார் அரிச்சுவடி சொல்லி கல்வியைத் தொடக்கி வைத்தார். இப்படித்தான் இவரது கல்வி முதலில் தொடங்கியது.
நடந்தாய் வாழி காவேரி! என்று இளங்கோ அடிகள் நடந்தது போல. தி.ஜாவும்,
சிட்டியும் நடந்தது போல் இதுவொரு புது முயற்சி.
கைகோர்க்கும் ஆள் பெரிய ஆளாக இருந்தால் கற்பதும் அதைப்பகிர்வதும் இன்னும்
சிறப்படைந்துவிடும். இங்கு நடை பயில்வது தமிழ்த்தாத்தாவுடன்!
நடந்தாய் வாழி! சுபா!
நா.கண்ணன்
2012/7/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
> பகுதி 6
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பகுதி 6உ.வே.சா அவர்களின் வாழ்க்கையின் இளமைப் பருவத்தில் சங்கீதமும் தமிழும் சேர்ந்தே அமைந்திருந்தன. பிற்காலத்தில் தமிழ் அவரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும் ஆரம்ப கால வாழ்க்கையில் தமிழையும் சங்கீதத்தையும் இரண்டு முக்கிய அங்கங்களாகவே உ.வே.சா அவர்களின் வாழ்க்கையில் அமைந்திருந்தன. ஆகினும் தமிழையும் சங்கீதத்தையும் ஒரே நிலையில் வைப்பது என்பதை விட ஒன்று மற்றொன்றிற்குத் துணை செய்வதாக அமைந்தது என்று குறிப்பிடுவதே சாலப் பொருந்தும்
பகுதி 7முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குக் கூட தேர்ந்தெடுத்த ஒரு சில நூல்களில் மட்டும் கவனம் செலுத்தி அது முடிந்து பட்டம் கிடைத்த பிறகு புதிய நூல்களைத் தேடி எடுத்து தொட்டுப் பார்க்கும் ஆர்வம் குறைந்தவ்ர்கள் சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு நோயாகத்தான் என் மனதிற்குப் படுகின்றது.
எத்தனை இல்லங்களில் புத்தக அலமாரி இருக்கின்றது? அதில் எத்தனை நூல்கள் இருக்கின்றன? அவற்றில் எத்தனை தரமான சிந்தனையை வளர்க்கும் நூல்கள் இருக்கின்றன,
பிறர் தெரிந்து கொள்ள பாடம் சொல்கின்றோம் என்பதில் சொல்கின்ற நாமும் தெரிந்து கொள்கின்றோம் பல விஷயங்களைச் சிந்திக்கின்றோம். வாசிக்கின்றோம் என்பதால் வாசிக்கின்றவர்கள் மட்டும் பலன் அடைகின்றார்கள் என்றில்லாது சொல்லும் அல்லது எழுதும் நாமும் கற்கின்றோம் என்பதில் பலனடைந்தவர்களாக நாமும் ஆகின்றோம்
அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
மதி போல - பரி 11/37 என்ற பரிபாடல் அடியைக் கவனியுங்கள். உவா என்ற சங்கச் சொல்லின் திரிபே வாவு என வந்திருக்கவேண்டும்
பகுதி 6உ.வே.சா அவர்களின் வாழ்க்கையின் இளமைப் பருவத்தில் சங்கீதமும் தமிழும் சேர்ந்தே அமைந்திருந்தன. பிற்காலத்தில் தமிழ் அவரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும் ஆரம்ப கால வாழ்க்கையில் தமிழையும் சங்கீதத்தையும் இரண்டு முக்கிய அங்கங்களாகவே உ.வே.சா அவர்களின் வாழ்க்கையில் அமைந்திருந்தன. ஆகினும் தமிழையும் சங்கீதத்தையும் ஒரே நிலையில் வைப்பது என்பதை விட ஒன்று மற்றொன்றிற்குத் துணை செய்வதாக அமைந்தது என்று குறிப்பிடுவதே சாலப் பொருந்தும்
கல்வி.. கல்வி.. தமிழ்க் கல்வி என்று தேடியவர். ஆன்மாவின் தேடலாக அது அவருக்கு அமைந்தது. சடகோபயைங்கார் உ.வே.சா.அவர்களின் உள்ளத்தில் தமிழ் விதையை விதைத்தார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் அத்தேடலை செம்மைப் படுத்தி உ.வே.சாவின் தமிழ்கல்வியின் அடிப்படையை அமைத்துக் கொடுத்தார்.தொடரும்...சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பகுதி 7கல்லூரி ஆசிரியர்களும் முனைவர் பட்டத்தைப் பெற்ற தமிழ் பேராசிரியர் பலரும் கூட தங்கள் வகுப்பு போதனைக்கு மட்டுமே தேவைப்படும் நூல்களை மட்டும் கற்கும் நிலையைத்தான் பெரும் பாலும் இப்போதெல்லாம் காண்கின்றோம். முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குக் கூட தேர்ந்தெடுத்த ஒரு சில நூல்களில் மட்டும் கவனம் செலுத்தி அது முடிந்து பட்டம் கிடைத்த பிறகு புதிய நூல்களைத் தேடி எடுத்து தொட்டுப் பார்க்கும் ஆர்வம் குறைந்தவ்ர்கள் பலர் இருப்பதும் நம் அனுபவத்தில் சந்திக்கின்ற நிகழ்வுகளுள் அடங்குகின்றது. இது சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு நோயாகத்தான் என் மனதிற்குப் படுகின்றது.கல்வி.. கல்வியை நோக்கிய தேடல் என்பவை ஆத்மார்த்தமானவை என்ற எண்ணம் மறைந்து வேலைக்கும் ஊதியத்துக்கும் மட்டும் தேவைப்படும் கருவியாக மட்டும் நினைக்குமொரு நிலையைப் பொதுவாகவேப் காண்கின்றோம். எத்தனை இல்லங்களில் புத்தக அலமாரி இருக்கின்றது? அதில் எத்தனை நூல்கள் இருக்கின்றன? அவற்றில் எத்தனை தரமான சிந்தனையை வளர்க்கும் நூல்கள் இருக்கின்றன, குடும்பத்தில் எத்தனை பேர் அந்த புத்தகங்களை எடுத்து வாசிக்கின்றனர் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஒரு சிலரே புத்தகங்களை விரும்பும் மனிதர்களாக இருப்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உலகமே வேறு. அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை. வறுமையில்லை. இளைப்பில்லை. அந்த உலகத்திற்கு அவர் என்னையும் இழுத்துக் கொண்டார். "
நிதர்சனமான பேச்சு ஸுபாஷிணி. நான் அந்தக்காலத்து மனிதன். திண்ணை பள்ளிக்கூடத்தில் தான் வித்யாரம்பம், சம்பிரதாயமான நுழைவு, கள்ளர் பள்ளி என்றாலும். என் ஆசிரியர்களில் பெரும்புலவர்கள் இருந்தார்கள், வறுமையை காட்டிக்கொள்ளாமல். நம் சமுதாயம் கல்வியை போற்றியது. பரவ தவறி விட்டது. மேலோர்கள் அதிக்கம்.
வணக்கம்.2012/7/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உலகமே வேறு. அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை. வறுமையில்லை. இளைப்பில்லை. அந்த உலகத்திற்கு அவர் என்னையும் இழுத்துக் கொண்டார். "
பதிவு 8சடகோபையங்காரின் நிலையே பல தமிழ் புலவர்களுக்கும் அக்கால கட்டத்தில் பொதுவான நிலையாக இருந்தமை என் சரித்திரம் வாசிக்கும் போதே நன்கு உணர முடிகின்றது. புலமையும் வருமையும் இணைந்தே இருப்பவையோ என்ற கேள்வியும் மனதில் தோன்றி மறைகின்றது.அனைவருக்கும் கல்வி என்ற நிலை அமைவது சுலபமான ஒன்றா என்றால் இல்லை என்பதே பதிலாக நிற்கின்றது. உ.வே.சா காலத்திலும் கூட கல்வியாகியது உயர்ந்த சாதி மக்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் கிடைக்கக் கூடிய விஷயமாக அமைந்திருந்தது என்பதனை கண்கின்றோம். கீழ்ச்சாதி மக்களின் குழந்தைகள் கல்வியறிவு பெறுவது என்பது அச்சு இயந்திரங்கள் பரவலாக வந்து கல்வி பொது மக்களுக்கும் கிடைக்கும் நிலை அரசியல் ரீதியாக மாற்றம் கண்ட பின்னரே தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக அமைந்தது. இன்றளவும் அனைவருக்கும் கல்வி என்பது முழுமையாக நடைமுறைபடுத்தப்படுகின்றதா என்பது ஐயத்திற்குட்படுத்தப்பட வேண்டியதொரு விஷயமே. இந்த சூழலில் கல்வியை வணிகமாகவும் நோக்கும் நிலையும் பரவி விட்டது. அரசாங்க பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் பால் மக்களின் நாட்டம் மிக அதிகரித்து பணத்தைச் செலவழித்து குழந்தைகள் கல்வியை திட்டமிடும் நிலையில் பெற்றோர்கள் இருக்கின்றனர். நிற்க!
உபநயன ஊர்வலம் வாகன ஊர்வலம் என்பது இல்லாமல் தான் நடைபெற்றிருக்கின்றது. பொதுவாகவே இச்சடங்கின் போது உபநயனம் பெறும் சிறுவனை அம்மான் தன் தோளில் ஏற்றிக் கோள்வாராம். மக்கள், பெண்களும் ஆண்களுமாக வாத்திய கோஷ்டியின் கோஷங்களுடன் ஊர்வலமாக்ச் செல்வார்களாம். இப்படிச் செல்லும் கோஷ்டி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்குமாம். வீட்டிலுள்ள பெண்கள் இப்படி வந்து நிற்கும் உபநயனப் பையனுக்கு ஆரத்தி எடுப்பார்களாம். இதே சடங்குதான் உ.வே.சா அவர்களின் இளம் ப்ராயத்திலும் இவருக்கு நடந்திருக்கின்றது.இவர்களின் குடும்ப வழக்கத்தின் படி உபநயன காலத்தில் சிறப்பு பெயர் சூட்டுவது வழக்கமாக இருந்துள்ளது அந்த வகையில் இச்சடங்கை முன்னிட்டு இவருக்கு வேங்கடராம சர்மன் என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டு இப்பெயர் இவரது தகப்பனாருக்கும் ஏனைய பெரியோர்களுக்கும் பிடித்துப் போகவே இப்பெயரே இவருக்கு சில காலங்கள் வழக்கில் இருந்து வந்திருக்கின்றது. உ.வே.சா வேங்கடராம சர்மனாக சில காலம் அடையாளங் கொள்ளப்பட்ட கதை இது தான்.
//உபநயன ஊர்வலம் வாகன ஊர்வலம் என்பது இல்லாமல் தான் நடைபெற்றிருக்கின்றது. பொதுவாகவே இச்சடங்கின் போது உபநயனம் பெறும் சிறுவனை அம்மான் தன் தோளில் ஏற்றிக் கோள்வாராம். மக்கள், பெண்களும் ஆண்களுமாக வாத்திய கோஷ்டியின் கோஷங்களுடன் ஊர்வலமாக்ச் செல்வார்களாம். இப்படிச் செல்லும் கோஷ்டி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்குமாம். வீட்டிலுள்ள பெண்கள் இப்படி வந்து நிற்கும் உபநயனப் பையனுக்கு ஆரத்தி எடுப்பார்களாம். இதே சடங்குதான் உ.வே.சா அவர்களின் இளம் ப்ராயத்திலும் இவருக்கு நடந்திருக்கின்றது.//
இப்போதும் அம்மான் என அழைக்கப்படும் தாய் மாமன் தோள் தூக்கிக் கொண்டு வந்தே பிரம்மோபதேசம் செய்யப்படுவதற்கு மருமகனை அமர்த்தி வைக்கும் வழக்கம் உண்டு. அதே போல் பாட்டனார் இருந்தாலும் கூட தாய் மாமனுக்கு எனத் தனி பஞ்சாதி சொல்லிச் சீர் வகைகளை தாய்மாமனின் பெயர், கோத்திரத்தோடு புரோகிதர் ஓதி விடுவார். தாய் மாமனுக்கு மிகவும் முக்கியத்துவம். முதன்முதல் காது குத்துகையிலும், மொட்டை அடிக்கையிலும் கூடத் தாய் மாமனுக்கே முதல் இடம்.
//இவர்களின் குடும்ப வழக்கத்தின் படி உபநயன காலத்தில் சிறப்பு பெயர் சூட்டுவது வழக்கமாக இருந்துள்ளது.//
இது எல்லாருக்குமே வழக்கம் தான். எல்லாக் குடும்பங்களிலும் உபநயனத்தின்போதே சிறப்புப் பெயரான சர்மாவைச் சொல்லுவார்கள். சிலருக்குப் பிறந்தபோதில் இருந்த பெயரே இருக்கும். சிலருக்குப் பெயரை உபநயனத்தின் போது மாற்றுவார்கள். திருமணப் பத்திரிகைகளிலும், மற்றும் பெரியோருக்கு, "அபிவந்தனம்" செய்து நமஸ்கரிக்கையிலும் உபநயனப் பெயரான சர்மாவைச் சொல்லியே அறிமுகம் செய்து கொண்டு நமஸ்கரிப்பார்கள். என் கணவரின் தொட்டில் பெயர் பாலசுப்ரமணியன். உபநயனப் பெயர் தான் சாம்பசிவம். பின்னர் இதுவே நிலைத்துவிட்டது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உபநயனம் பற்றி பல புதிய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. பல சடங்குகள் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் இது போன்ற இடுகைகள் நினைவு கூரச்செய்வது நல்ல விசயம். அருமை,
| சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்ற. ‘இ(வ்)அளவது’ என ஒரு கரை பிறிது இலவா. உவள் அரு மறையினொடு ஒழிவு அறு கலையும். தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே. (கம்பர்..பால..127)(த.இ.ப) | |
|
சவுளம்: குடுமிக் கல்யாணம் என்பர் (தலை முடி சவுளம் முதலிய சடங்குகளை விதிப்படி நடத்தியபின் வசிட்ட | |
--
ரொம்பவே ஆசாரமான குடும்பங்களில் இப்போதும் குடுமிக் கல்யாணம் உண்டு. அது தனியாக நடக்கும். உபநயனத்தின் போது முடியை மழித்தல் அதுவும் முன் முடியை மழித்தல் என்பது ரிக், யஜுர் வேதக்காரர்களுக்கு மட்டுமானது. சாமவேதக்காரர்களுக்கு உபநயனத்தின் போது முழு மொட்டை. உபநயனத்திற்குப் பின்னர் அவர்கள் பிரார்த்தனைக்காகக் கூட மொட்டை போடக் கூடாது என்று ஒரு சம்பிரதாயம். தற்காலத்தில் யாரும் பின்பற்றுவதில்லை. அதர்வண வேதக் காரர்களில் உபநயனம் என்றால் அது தனி. ரிக், யஜுர்க்காரங்க அதர்வ வேதம் கற்பது என்றாலே மீண்டும் உபநயனம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்றோ என்னவோ சொல்வார்கள். இது குறித்துத் தகவல் சேகரித்து வைத்திருக்கிறேன். அதைத் தேடிப் பார்த்துத் தருகிறேன். ஒருவேளை திரு திவா அவர்களால் இந்த இழை பார்க்கப் பட்டால் அவரால் இன்னும் அதிகமான தகவல்களை அளிக்க முடியும்.
Sacred Thread Ceremony
This introduces the male child to a teacher (guru) in order to receive
education, marking the entry of the child into the Brahmacharya Ashrama (period
of studentship), the first of the four stages of life. This samskara is
performed from the fifth to the eighth year of age, when the male child is
invested with a sacred thread (consisting of three strands) to be worn around
the neck and waist. The three symbolize the following three debts that the child
repays during his adult life: debt to one's parents, debt to one's guru, and
debt to God.
The sacred thread is intended to be a constant reminder of one's individual
duties and obligations. At the time of marriage and as a part of the wedding
ceremony, the bridegroom is invested with three more strands of the sacred
thread, which symbolize three more debts that he repays to his spouse. Thus the
six-stranded thread around the neck of a Hindu is a reminder of the six debts
that he must repay during adulthood.
(source: The Hindu Mind - By Bansi Pandit.
p 253-254)
--
நீங்கள் இந்தச் சுற்றுச் சூழலிலேயே இருப்பதால் இன்னமும் பல விஷயங்களை ஞாபகம் வைத்திருந்தும் நேரில் பார்த்தும் கேட்டும் பகிர்ந்து கொள்ள முடிகின்றது. இது உபநயனம் பற்றி தெரிந்து கொள்ள எனக்கும் மிக உதவியாக உள்ளது. மலேசியாவில் உபநயனம் செய்யும் பழக்கம் அடியோடு விட்டுப் போன ஒன்றாகி விட்டது.நீங்கள் தகவல் சேகரித்து உபநயனம் என்பதன் பொருள், அதனை எப்படிச் செய்வார்கள், எந்தெந்த குலத்தினர் அல்லது சமூகத்தினர் எவ்வவ்வகையில் செய்வார்கள் சடங்குகளின் தன்மை, இப்போதைய உபநயனச் சடங்கு முறை என சேர்த்து முழுமையான ஒரு கட்டுரை படைக்க வேண்டும் என்பது என் விருப்பம். நேரம் கிடைக்கும் போது இதனைத் தயாரித்துத் தாருங்களேன். ஒரு பாரம்பரிய சடங்கினைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள பலருக்கும் இது உதவும்.நன்றி.சுபா


அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.நேற்றும், நேற்று முன்தினமும் கோட்டையூரில் தமிழகத் தொல்லியல் கழகம் நடத்திய கருத்தரங்கில்திரு.குப்பான் செட்டியார் அவர்கள், தன்னிடமிருந்த பழமையான நூல்களைக் கண்காட்சியாக வைத்திருந்தார்.அந்நூல்களுள்,
தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் சதாபிஷேக வரலாறு என்ற நூலும் இருந்தது.
அந்நூலைப் பார்த்ததும், தங்களது இந்த இழை நினைவிற்கு வந்தது.நூலை விலைக்குக் கேட்டேன். “ எதுவும் விற்பனைக்கு அல்ல“ என்று கூறிவிட்டார்.படம் மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தார்.அன்பன்கி.காளைராசன்
யோவ் காளை! ஸுபாஷிணி சொன்னதை, தந்தி போல் பாவித்து, உடனே நிறைவேற்றவும்.
இப்படியெல்லாம் முதுசொம் பாதுகாப்பு நடப்பதை நாம் எல்லோரும் அறிந்து
கொள்ள வேண்டுமென்ற அவாவில் இங்கு வெளியிட்டுள்ளமை பாராட்டற்குரியது.
எம்மால் ஏதேனும் உதவி செய்ய முடியுமெனில் காத்திருக்கிறோம் என்று
சொல்லுங்கள். திரு.குப்பன் செட்டியார் மின் மாளிகை ஒன்றை உருவாக்க
முடியும் என்று சொல்லவும்!
நா.கண்ணன்
2012/7/16 கி.காளைராசன் <kalair...@gmail.com>
>
> அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.
>
> நேற்றும், நேற்று முன்தினமும் கோட்டையூரில் தமிழகத் தொல்லியல் கழகம் நடத்திய
> கருத்தரங்கில்
>
> திரு.குப்பான் செட்டியார் அவர்கள், தன்னிடமிருந்த பழமையான நூல்களைக்
> கண்காட்சியாக வைத்திருந்தார்.
> அந்நூல்களுள்,
>
>
மின்தமிழ், மின்னாக்கம் பற்றி அவரிடம் பேசினேன். உ.வே.சா. எழுதியுள்ள நம் மின்னாக்கத்தில் வந்துள்ளவை போன்ற சிறு பதிப்புக்களும் அங்கு கண்டேன்.
மாலை இல்லம் வருவதாகக் கூறியுள்ளார். அவரிடம் பேசிவிட்டு அரிய நூல்கள் பிற விவரங்கள் பகிர்ந்துகொள்கிறேன்.
நண்பர் காளைராசனின் அன்பும் அவர் பிறர்பால் காட்டும் மதிப்பும் சாதாரண செல்பேசியில் நிழற்படம் எடுத்து அதனைத் தக்கபடி வெளியிடுகின்ற பான்மையும் மிகக் கவர்ந்தன,
பதிவு 9உ.வெ.சா அவர்கள் வேங்கடராம சர்மன் என்ற பெயர் கொண்ட விஷயத்தையும் அதன் தொடர்பான சம்பவங்களையும் இந்தப் பதிவில் சொல்லலாம் என நினைக்கின்றேன்.
" மிகச் சிறந்த ஸ்தலங்களுக்குச் சென்று அங்குள்ள மூர்த்திகள் பால் ஈடுபட்டவர்கள் தங்கள் ஊரிலும் அந்த ஸ்தலங்களைப் போன்ற அமைப்புக்களை உண்டாக்கி வழிபடுதல் பழங்காலத்து வழக்கம். பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் சோழ நாட்டிலுள்ள திருநாகேசுவரமென்னும் சிவ ஸ்தலத்தில் ஈடுபாடுடையவர். அவர் சென்னைக்கருகே உள்ள தம் ஊராகிய குன்றத்தூரிலும் ஒரு திருநாகேசுவரத்தை உண்டாக்கினார். நடுநாட்டில் பெண்ணையாற்றங் கரையில் ஸ்ரீரங்கம், ஜம்புகேசுவரம், தாயுமானவர் கோயில் என்னும் மூன்று ஸ்தலங்களுக்கும் பிரதியாக மூன்று ஸ்தலங்கள் உள்ளன. அரியிலூரில் உள்ள ஆலந்துறேசர் கோயில் தேவார ஸ்தலமாகிய கீழைப் பழுவூரிலுள்ள கோயிலைக் கண்டு அமைத்ததே யாகும். இவ்வாறே கும்பகோணத்தில் கும்பேசுவரரைத் தரிசித்த ஒருவர் குன்னத்தில் ஒரு கோயில் நிருமித்து அங்கே பிரதிஷ்டை செய்த மூர்த்திக்கு ஆதி கும்பேசரென்னும் திருநாமத்தையும் அம்பிகைக்கு மங்களாம்பிகை என்னும் பெயரையும் இட்டனர்............இவ்வகையில் அமைந்த ஆலயங்களின் பட்டியல் ஒன்றை நாம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலோங்கியது. இது தனி நபர் செய்யக்கூடிய ஒரு காரியமன்று. பலரும் சேர்ந்து தமக்குத் தெரிந்த கோயில்களில் அவை ஏதாகினும் வேறொரு கோயிலின் அமைப்பை ஒத்து அமைந்திருந்தால் அதன் பெயர்களை வழங்கினால் அவற்றை நாம் தொகுக்க ஆரம்பிக்கலாம்.
அடிக்குறிப்பு (1) ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழகம் ஊரும் பேரும், பக்கம் 293 மற்றும் 294 (No. 475 of the Madras Epigraphical Collection fro 1916 ; T.A.S. Vol. 1Z, P.25) பதிப்பகத்தார் - பழனியப்பா பிரதர்ஸ்
அடிக்குறிப்பு (2)
(A. R. No. 473 of 1929-30.)
Attur, Tiruchchendur Taluk, Tirunelveli District.
On a stone in the pavement of the amma shrine in the Somanathesvara temple.
This inscription dated in the 21st year of Jatavarman Sundara-Cholapandya is damaged at the end. It registers some gift made by Lokaditta-kkuttan of the Bharadvaja-gotra, a resident of Arrur-Sendamangalam for burning a lamp in the temple of Somanathesvara alias Ten-Tiruppuvanamudaiyar at Arrur-Sendamangalam, a brahmadeya in Kuda-nadu, a subdivision of Uttamasola-valanadu. Ten-Tiruppuvanam must have been so named after the god of the same name in the Ramanathapuram district. (Now in Sivaganga district.) http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_14/stones_151_to_175.html
> கோயில்களை வியந்து பார்த்து மகிழ்வுறும் அதே தருணம் கோயில்கள் பாதுகாப்பு,
> கோயில்களிலுள்ள சிற்பங்களின் பாதுகாப்பு, கோயில் சுற்றுப்புற பாதுகாப்பு,
> பராமரிப்பு, தூய்மை என்ற வகையிலும் தவறாமல் சென்று விடும் என் மனம். கோயிலுக்கு
> வருகின்ற மக்களின் சிந்தனையில் தங்களது வேண்டுதல், அது நிறைவேறுதல் வேண்டும்,
> அதற்காக சில சடங்குகள் செய்தல் வேண்டும் என்ற எண்ணமே ஆழப்பதிந்து போய்
> விட்டமையினால் மக்கள் கோயிலைப் பற்றிய ஸ்தல புராணத்தை அறிந்து கொள்வது >பற்றியோ,> கோயில் வரலாற்றை அறிந்து கொள்வது பற்றியோ ஸ்தல விருட்சத்தைப் பற்றி >அறிந்து > கொண்டு சுவாமியைப் பற்றி பேசி மனம் மகிழும் நிலையிலில்லாத மாந்தர்களாக
> மாறிப்போய்விட்டனர் என்பது கண்கூடு. கோயில் கட்டிடக் கலையை ரசித்தல், கோயில்
> சிற்பங்களின் கவின் நயத்தை கண்டு களிப்பதில் ஈடுபடுதல் என்பதெல்லாம் இல்லாமல்
> சடங்குகள் சடங்குகள் என்று திளைத்துப் போய் இருப்பதையே பக்தி என்ற புரிதலோடு
> வாழ்க்கையில் கடைபிடிக்கும் நிலையில் பொதுவாகவே இக்கால மக்கள் இருக்கின்றனர்.
சுபா
இது ஒரு பரிணாம வளர்ச்சியென்று காண்கிறேன். சாமி மேலேயிருந்து வரம்
கொடுக்கும் என்பது அடிப்படை நம்பிக்கை. படையல் கொடுத்து, பலி கொடுத்து
சாமியைக் குஷிப்படுத்தி வேண்டியதை சாதித்துக்கொள்ளும் வழக்கம் பழங்குடி
வாழ்வில் ஆரம்பமாகிறது. இதை இப்போதும் நாம் கிராம தேவதை வழிபாட்டில்
காணலாம்.
பின் அதையே யாகங்கள், யக்ஞங்கள் என்று கொஞ்சம் விரிவு படுத்தி பூஜாரிகளை
(வைதீகர்களை) முன் வைத்து செய்தனர். இதுவும் இன்னும் நடக்கிறது. இவை
நலினமுற்றால் தேவர்களுக்கு சாப்பாட்டு கிடையாது. கல்கி புராணத்தில் எல்லா
தேவர்களும் கலியில் யாரும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றுவதில்லை என்று
பிரம்மாவிடம் முறையிடுகின்றனர்.
இவைகளை அப்படியே குறியீட்டு முறையில் ஒரே இடத்திற்குக் கொண்டு போகும்
முயற்சிதான் கோயில்கள், ஆகமங்கள். அங்கும் படையலுண்டு ஆனால் அதற்குப்
பெயர் ’பிரசாதம்’. அங்கும் ‘பலி’ உண்டு, ஆனால் உயிர்ப்பலி கிடையாது
சோற்று உருண்டையுண்டு (கிறிஸ்தவ சம்பிரதாயத்தில் கூட ‘திருப்பலி’ எனும்
சொல்லாட்சி காண்க). யக்ஞமுண்டு, ஆனால் அத்ம நிவேதனமாக. வேண்டுதலுண்டு அது
பக்தியாக. இப்படிக் கோயில் என்பது ஒரு உச்ச கட்ட குறியீட்டுச் செயற்பாடு.
இதை முறையாக நிர்வகித்தால்தான் ‘அந்தப் பொருளில்’ அது செயல்படும். ஆனால்
கோயிலிலும் மக்களாட்சி முறைமை வந்த பின், பொது மக்கள் கிராம தேவைகளை
எப்படி நடத்துகின்றனரொ அதைப்போலவே கோயில்களையும் நடத்த முயல்கின்றனர்.
அவர்களுக்கு சிற்பங்கள் ஒரு தத்துவத்தின் குறியீடு என்பது புரியாது.
எல்லாக் கோயில்களிலும் பெண் சிலைகளின் முலை வழு, வழுப்பாய் இருக்கும்.
எல்லோரும் தொட்டு அனுபவித்து உள்ளனர் என்று பொருள். மீனாட்சி கோயிலில்
ஒரு பிள்ளை பெறும் சிற்பம் இப்போது எண்ணெய் காப்பிட்டு வழிபடும்
தெய்வமாகிவிட்டது! அதே கோயிலில் காளியின் முகத்தில் வெண்ணெயை வீசி
அடிப்பது சாதாரண புத்தி. கோயிலின் குறியீட்டை அறியாத புத்தி.
கலி முத்திவிட்டால் இது சகஜம் என்பார்கள் :-)
> இதனை வாசித்து முடித்த போது இவ்வகையில் அமைந்த ஆலயங்களின் பட்டியல் ஒன்றை
> நாம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலோங்கியது. இது தனி நபர்
> செய்யக்கூடிய ஒரு காரியமன்று. பலரும் சேர்ந்து தமக்குத் தெரிந்த கோயில்களில்
> அவை ஏதாகினும் வேறொரு கோயிலின் அமைப்பை ஒத்து அமைந்திருந்தால் அதன் பெயர்களை
> வழங்கினால் அவற்றை நாம் தொகுக்க ஆரம்பிக்கலாம். முயற்சித்துப் பார்ப்போமே.
> விஷயங்கள் அறிந்த நண்பர்கள் தகவல் கொடுக்கத் தொடங்கலாமே!
>
தமிழகத்தில் மட்டும் ஆயிரம் ‘தென்திருப்பதிகள்’ உண்டு :-)
நா.கண்ணன்
தமிழகத்தில் மட்டும் ஆயிரம் ‘தென்திருப்பதிகள்’ உண்டு :-)
> இதனை வாசித்து முடித்த போது இவ்வகையில் அமைந்த ஆலயங்களின் பட்டியல் ஒன்றை
> நாம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலோங்கியது. இது தனி நபர்
> செய்யக்கூடிய ஒரு காரியமன்று. பலரும் சேர்ந்து தமக்குத் தெரிந்த கோயில்களில்
> அவை ஏதாகினும் வேறொரு கோயிலின் அமைப்பை ஒத்து அமைந்திருந்தால் அதன் பெயர்களை
> வழங்கினால் அவற்றை நாம் தொகுக்க ஆரம்பிக்கலாம். முயற்சித்துப் பார்ப்போமே.
> விஷயங்கள் அறிந்த நண்பர்கள் தகவல் கொடுக்கத் தொடங்கலாமே!
>
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.2012/7/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>" மிகச் சிறந்த ஸ்தலங்களுக்குச் சென்று அங்குள்ள மூர்த்திகள் பால் ஈடுபட்டவர்கள் தங்கள் ஊரிலும் அந்த ஸ்தலங்களைப் போன்ற அமைப்புக்களை உண்டாக்கி வழிபடுதல் பழங்காலத்து வழக்கம். பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் சோழ நாட்டிலுள்ள திருநாகேசுவரமென்னும் சிவ ஸ்தலத்தில் ஈடுபாடுடையவர். அவர் சென்னைக்கருகே உள்ள தம் ஊராகிய குன்றத்தூரிலும் ஒரு திருநாகேசுவரத்தை உண்டாக்கினார். நடுநாட்டில் பெண்ணையாற்றங் கரையில் ஸ்ரீரங்கம், ஜம்புகேசுவரம், தாயுமானவர் கோயில் என்னும் மூன்று ஸ்தலங்களுக்கும் பிரதியாக மூன்று ஸ்தலங்கள் உள்ளன. அரியிலூரில் உள்ள ஆலந்துறேசர் கோயில் தேவார ஸ்தலமாகிய கீழைப் பழுவூரிலுள்ள கோயிலைக் கண்டு அமைத்ததே யாகும். இவ்வாறே கும்பகோணத்தில் கும்பேசுவரரைத் தரிசித்த ஒருவர் குன்னத்தில் ஒரு கோயில் நிருமித்து அங்கே பிரதிஷ்டை செய்த மூர்த்திக்கு ஆதி கும்பேசரென்னும் திருநாமத்தையும் அம்பிகைக்கு மங்களாம்பிகை என்னும் பெயரையும் இட்டனர்............இவ்வகையில் அமைந்த ஆலயங்களின் பட்டியல் ஒன்றை நாம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலோங்கியது. இது தனி நபர் செய்யக்கூடிய ஒரு காரியமன்று. பலரும் சேர்ந்து தமக்குத் தெரிந்த கோயில்களில் அவை ஏதாகினும் வேறொரு கோயிலின் அமைப்பை ஒத்து அமைந்திருந்தால் அதன் பெயர்களை வழங்கினால் அவற்றை நாம் தொகுக்க ஆரம்பிக்கலாம்.திருப்பூவணம் பெயரில் உள்ள மற்றொரு ஊர்பாண்டியநாட்டின் வடபகுதியில் உள்ள இத்திருப்பூவணம் நால்வர் பாடலும் பெற்றுச் சிறப்புடன் விளங்கிவருகிறது, இவ்வூரைப் போலத் தங்களது ஊரும் சிறக்கவேண்டும் என்ற எண்ணத்தில் “தென்பாண்டி நாடெனப்படும் நெல்லை நாட்டில் மற்றெhரு திருப்பூவணம் உண்டாயிற்று, திருநெல்வேலிக்கு அருகில் உள்ள இந்த ஊரைத் ‘தென்திருப்பூவணம்‘ என்றார்கள். முள்ளி நாட்டுத் தென்திருப்பூவணம் என்று சாசனத்திற் குறிப்பிடுகின்றனர். இவ்வூர். தென்திருப்புவனம் என்னும் பெயரோடு அம்பாசமுத்திர வட்டத்தில் உள்ளது. இங்குள்ள திருக்கோயிலும் ‘புஷ்பனேஸ்வரம்‘ என்றே வழங்குவதாகும்“ (அடிக்குறிப்பு 1).இச் செய்தி கல்வெட்டு ஒன்றில் உள்ளது (அடிக்குறிப்பு 2)அடிக்குறிப்பு (1) ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழகம் ஊரும் பேரும், பக்கம் 293 மற்றும் 294 (No. 475 of the Madras Epigraphical Collection fro 1916 ; T.A.S. Vol. 1Z, P.25) பதிப்பகத்தார் - பழனியப்பா பிரதர்ஸ்
அடிக்குறிப்பு (2)
(A. R. No. 473 of 1929-30.)
Attur, Tiruchchendur Taluk, Tirunelveli District.
On a stone in the pavement of the amma shrine in the Somanathesvara temple.
This inscription dated in the 21st year of Jatavarman Sundara-Cholapandya is damaged at the end. It registers some gift made by Lokaditta-kkuttan of the Bharadvaja-gotra, a resident of Arrur-Sendamangalam for burning a lamp in the temple of Somanathesvara alias Ten-Tiruppuvanamudaiyar at Arrur-Sendamangalam, a brahmadeya in Kuda-nadu, a subdivision of Uttamasola-valanadu. Ten-Tiruppuvanam must have been so named after the god of the same name in the Ramanathapuram district. (Now in Sivaganga district.) http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_14/stones_151_to_175.html
--அன்பன்
கி.காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
http://en.wikipedia.org/wiki/List_of_temples_in_Tamil_Nadu
நாகராசன்
2012/7/29 coral shree <cor...@gmail.com>:
பதிவு 10தமிழகத்திற்கான எனது ஒவ்வொரு முறை பயணத்தின் போதும் நான் தவறாது கோயில்களுக்குச் சென்று வருவதுண்டு. அதிலும் குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் கணிசமான எண்ணிக்கையில் பற்பல ஊர்களில் கோயில்களைப் பார்த்திருக்கின்றேன். ஓவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு விதம். எது எதனினும் சிறந்தது என்று சொல்ல முடியாது திகைத்துப் போய் பல முறை வியந்து வியந்து பார்த்திருக்கின்றேன்.
இணையத்தில் ஏற்கனவே இந்த முயற்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது
http://en.wikipedia.org/wiki/List_of_temples_in_Tamil_Nadu