1. குறட் கடலிற் சில துளிகள் 35 : துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை-இலக்குவனார் திருவள்ளுவன் ++2. வெருளி நோய்கள் 724-728: இலக்குவனார் திருவள்ளுவன்

6 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
3:32 PM (2 hours ago) 3:32 PM
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore

வெருளி நோய்கள் 724-728: இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன் 
     24 November 2025      அகரமுதுல


(வெருளி நோய்கள் 723: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 724-728

  1. கன்சாசு வெருளி – Kansasphobia
    கன்சாசு(Kansas)மாநிலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கன்சாசு வெருளி.
    கன்சாசு(Kansas)மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் 34 ஆவது மாநிலமாக 1861 இல் இணைந்தது. இதன் தலைநகரம் தொபெக்கா(Topeka).
    கான்சாசு மாநிலம் தொடர்பான பொருள்கள், கொடி,முத்திரை, வணிகம், தொழில், பண்பாடு, நாகரிகம் முதலானவைமீதான வரம்பு கடந்த பேரச்சம் கொள்வோர் இவ்வெருளிக்கு ஆளாகின்றனர்.
    00
  2. கன்னபாகு வெருளி – Calamusphobia
    கன்னல்பாகு(caramel) குறித்த வரம்பற்ற பேரச்சம் கன்னல்பாகு வெருளி.
    கேரமல் என்னும் ஆங்கிலச்சொல் பிரஞ்சுச் சொல்லான கேரமலிலிருந்தும், பிரெஞ்சுச் சொல் இசுபானியச் சொல்லான caramelo (18 ஆம் நூற்றாண்டு)விலிருந்தும், இசுபானியச் சொல் போர்த்துகீசியச் சொல்லான “caramel-கரமலிலிருந்தும்” உருவாகியிருக்கலாம் என்கின்றனர். கரும்பைக் குறிக்கும் calamellus என்னும் பிற்கால இலத்தீன் சொல்லில் இருந்து இஃது உருவாகியிருக்கலாம். இடைக்கால இலத்தீனில் கன்ன என்றால் கரும்பு மெல்லா என்றால் தேன் எனப்பொருள். இரண்டும் இணைந்த கன்னமெல்லா வந்திருக்கலாம் என்கின்றனர். நிறமூட்டியாகவும் சுவைக்காகவும் உணவுப் பண்டத்தின்மீது ஊற்றிப் பயன்படுத்துகின்றனர். இதனைக் கன்னல் பாகு எனலாம்.
    00
  3. கன்னியர் வெருளி-Parthenophobia
    பெண்கள், குறிப்பாகக் கன்னிப்பெண்கள்பற்றிய தேவையற்ற வெறுப்பும் அச்சமும் கன்னியர் வெருளி.
    மண வாழ்க்கையில் நாட்டமில்லாதவர்களும் பெண்களை நல்வாழ்க்கைக்கு எதிரானவர்கள் எனத் தவறாக எண்ணுபவர்களும் இவ்வெருளிக்கு ஆட்படுகின்றனர். பெண்ணுறுப்பு தொடர்பான வெருளியர்க்கும் இவ்வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
    partheno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கன்னிமை, இளம் பெண், கன்னி.
    00
  4. கன்னெய் வெருளி – Benziphobia

கன்னெய்(gasoline/ petrol) பற்றிய அளவு கடந்த பேரச்சம் கன்னெய் வெருளி.
கல்+நெய் = கன்னெய்.
கன்னெய்யில் எரிநறா(எத்தனால்) அல்லது வேறு எதுவும் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தாலும் கன்னெய்மீது பேரச்சம் வருவதுண்டு. வளி நிலைய வெருளி(Aerostatiophobia) உள்ளவர்களுக்கும் கன்னெய் வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00

  1. காணுகை வெருளி – Ocuviaphobia
    பிறரால் பார்க்கப்படுவது அல்லது காணப்படுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காணுகை வெருளி
    பணியிடத்தில் அல்லது பொதுவிடத்தில் பிறர் தன்னையே பார்ப்பதுபோன்ற எண்ணத்தால் ஏற்படும் அளவு கடந்த பேரச்சமாகும்.
    அழகாக இருப்பதால் பார்ப்பதாகவும் எண்ணலாம். அழகில்லை என்பதால் கேலியாகப் பார்க்கிறார்கள் எனவும் கருதலாம்.
    ocu என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கண். ocuvia கண்ணால் காண்பதைக் குறிக்கிறது.
    00

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் 2/5

++

குறட் கடலிற் சில துளிகள் 35 : துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை-இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      24 November 2025      கரமுதல


(குறட் கடலிற் சில துளிகள் 34 : கடிந்துரைப்போர் இல்லாதவன் அழிவான்! –jதொடர்ச்சி)

குறட் கடலிற் சில துளிகள் 35

துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்

சார்பிலார்க் கில்லை நிலை

(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௯ – 449)

முதல் இல்லாதவர்க்கு ஆதாய ஊதியம்(இலாபம்) இல்லை; அதுபோலத் தம்மைத் தாங்கியுதவும் துணை இல்லாதவர்க்கு நிலைத்திருக்கும் தன்மை இல்லை.

பதவுரை: முதல்=முதற்பொருள், முன்பணம், அஃதாவது மூலதனம்; இலார்க்கு=இல்லாதவர்க்கு; ஊதியம்=வருவாய், இலாபம், பேறு, ஆக்கம்; இல்லை=இல்லை; மதலை-முட்டுத்தூண், பாரந்தாங்கும் தூண், உத்தரம், வன்மையுடையது; ஆம்-ஆகும்; சார்பு-துணை; இலார்க்கு-இல்லாதவர்க்கு; இல்லை-இல்லை; நிலை-நிலைபேறு, சலியாது நிற்றல்.

சிறு கடை வைப்பதாக இருந்தாலும் பெருந் தொழிலாக இருந்தாலும் அடிப்படைத் தேவை முதலீடே. முதலீடு இன்றி வணிகம் தொடங்கவும் இயலாது. அப்படியே தொடங்கினாலும் சிறக்கவும் இயலாது. முதலீட்டு அடிப்படையிலேயே வணிக வளர்ச்சியும் அதன் அடிப்படையிலேயே ஆதாயமும் கிட்டும். அதுபோல்தான் செயல் சிறப்பதற்குத் தேவை துணை.

இடையூறு வரும்போது தாங்கிப்பிடிக்கும் சார்பாக, நல்ல தூணாக விளங்குவது பெரியாரின் துணையே. பெரியாரின் நல் வழிகாட்டலும் அறிவுரையும் நெறிப்படுத்தலும் நல்ல துணையாக விளங்கி அரசை நிலைபேறாக்கும். பிறருக்கும் பெரியாரின் தக்க அறிவுரையே அவர்களைச் சிறக்கச் செய்யும்.

முதலிலார்க்கு ஊதியம் இல்லை என்று சொல்வதன் மூலம் அதனால் இழப்பும் கேடும் வரும் என உணர்த்துகிறார். அதுபோல் பெரியாரின் துணை இல்லாதவர்க்கும் தீங்கு நேரும் என உணர்த்துகிறார். கட்டடத்தில் தூண் தளத்தைத் தாங்குவதுபோல் பெரியாரின் துணை நம்மைத் தாங்கும். அத் துணை இல்லையேல், தகாதன நேரும்பொழுது அதனைத் தடுத்து நிறுத்துவோர் இன்மையால் தீங்குதான் நேரும். எனவே, தீமையிலிருந்து தற்காத்துக் கொள்ள பெரியே்ாரின் துணை நம்மைத் தாங்கும் தூணாகத் தேவை.

துணை என்பது நல்லாற்றுப்படுத்தும் பெரியோரை, அவர்கள் தரும் அறிவுரையை, அவர்களின் வழிகாட்டுதலை,அவர்களின் நெறியுரையை. நம்மைத் துன்பச் சுமையிலிருந்து தாங்கும் சுமைதாங்கியாய் இருப்போர் பெரியோரே.இஃது ஆட்சியாளர்களுக்கும் மட்டுமல்ல. எந்த நிலையிலிருக்கும் யாராயினும் அவர்களுக்குப் பொருந்தும்.

நிலை என்பதற்கு நிலைபேறு என அனைவரும் பொருள் கூறியுள்ளது சரிதான். என்றாலும் நிலை என்று நன்னிலையைக் கூறுவதாகவும் கருதலாம். பெரியாரைத் துணையாகக் கொள்ளாதவர்க்கு நன்னிலை இல்லை எனலாம் அல்லவா?

எனவே, எக்காலத்திலும் எச்சூழலிலும் நாம்  நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் இடுக்கண்களிலிருந்து காத்துக் கொண்டு நன்னிலை எய்த பெரியோரைத் துணையாகக் கொள்வோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

++



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages