புணர்ச்சி விதிகள்

809 views
Skip to first unread message

PRASATH

unread,
May 5, 2014, 3:09:12 PM5/5/14
to mint...@googlegroups.com, vallamai
வணக்கம்...

புணர்ச்சி விதிகள்: தமிழ் இலக்கணத்தின் ஒவ்வொரு பகுதியும் பருக பருக திகட்டாத தேன் துளி என்றாலும், புணர்ச்சி விதி அதில் கொம்புத்தேனாய் இனிக்கும் ஒரு பகுதி. யாருக்குனு கேட்கறீங்களா... எனக்குத்தாங்க... காரணம், என்னோட வயசாவும் இருக்கலாம்... :)))

இனி பேச்சுத் தமிழ்... :)))

இது ஒன்னும் யாருக்கும் தெரியாத விஷயம் இல்லை... நான் சொல்லப் போற விதமும் மத்தவங்க சொன்ன விதத்தைக் காட்டிலும் எந்த விதத்திலும் புதுசாவும் இருக்கப் போறதில்லை... அப்புறம் எதுக்குடா இந்த மடல்னு கேட்கறீங்களா... என்ன செய்ய, சில தப்பைப் பார்க்குறச்சே சில மடல்கள் எழுதணும்னு தோணுதே... எழுதி நானே வச்சுக்கிட்டா அதுல என்ன திருப்தி... நாலு பேருக்கு அனுப்பி அவங்களையும் குழப்புறதுல தானே நமக்கு திருப்தி...

புணர்ச்சி விதியை ஏழாம் வகுப்பு இலக்கணப் புத்தகத்துல தான் முதன் முதலா படிச்சதா நினைப்பு... 

இயல்பு + புணர்ச்சி = இயல்பு புணர்ச்சி

விகாரம் + புணர்ச்சி = விகாரப் புணர்ச்சி

புணர்ச்சியில தோன்றல், திரிதல், கெடுதல்னு வகைகள் இருக்கு...

சரி இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், நான் எதுக்காக இந்த மடலை ஆரம்பிச்சேன்னு சொல்லவே இல்லையே இன்னும்... இதோ வந்துடறேன் மேட்டருக்கு...

பல மடல்களாக பிரிஞ்சு பல பேரு விவாதம் பண்ற இழையில ஒரு விஷயம் பார்த்தேன்...

அது,

தே + வாரம் = தேவாரம் அப்படின்னு...

சில விஷயங்களை எழுதும் போது, நமக்கு பின்னால வர்ர சந்ததியினருக்கு நாம தப்பான ஒரு விஷயத்தை முன்னுதாரணமா தரக் கூடாதுனு பெரியவங்க எல்லாம் நினைச்சா நல்லாருக்கும்...

தேவாரத்தை தே + வாரம்னு பிரிச்சா, பூவரசன் அப்படின்றதை பூ + வரசன் அப்படின்னு பிரிச்சு எழுதுவீங்களா...

பூ + அரசன்  = பூவரசன்

எப்படி ஆகுது. 

இ,ஈ, ஐ வழி யவ்வும் ஏனைய உயிர்வழி வவ்வும் என்னும் விதிப்படி

பூ + அரசன் = பூவ்+அரசன் என்றாகி பின் உடலொடு உயிரொன்றுதல் இயல்பே என்னும் விதிப்படி பூவரசன் என ஆகுது...

இதன் படியே,

தேவாரம் என்பதை தே + ஆரம் என்றோ அல்லது தேவு + ஆரம் என்றோ பிரித்து புணர்ச்சி விதிப்படி தேவாரம் ஆனதுனு சொல்லலாம்.

முதல்ல,

தே + ஆரம், பூவரசனுக்கு சொன்னாப்புலயே, இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனைய உயிர் வழி வவ்வும் விதியும், உடலொடு உயிரொன்றுதல் இயல்பு  விதியும் சேர்ந்து தேவாரம் ஆச்சுதுன்னு சொல்லலாம்.

அப்படி இல்லையா,

தேவு + ஆரம், உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் விதிப்படி 

முதல்ல தேவ் + ஆரம் என திரிந்து பின் உடலொடு உயிரொன்றுவது இயல்பே என தேவாரம் ஆச்சுதுன்னும் சொல்லி இருக்கலாம்...

அதையெல்லாம் விடுத்து, ஏதோ இயல்பு புணர்ச்சியா வர்ராப்புல தே + வாரம் = தேவாரம்னு சொல்லி ஔ தவறான முன்னுதாரணத்தை தர்ரது நல்லாவா இருக்கு சொல்லுங்க...

பின்குறிப்பு: தேவாரம் = தே + ஆரம் என்பதே நூறு சதம் சரி என எனக்குத் தோன்றினாலும், தேவு + ஆரம் என்பதும் தவறல்ல என்றே தோன்றுகிறது. தேவு எனும் சொல் பழங்காலத்தில் தேவர்களை, தெய்வங்களைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டிருப்பதாக என் உள்ளுணர்வு சொல்வதால் அதற்கான விளக்கமும் கொடுத்திருக்கிறேன். இக்கட்டுரையை ஏற்பவர்கள் இதன் தொடர்ச்சியாக தேவு என்னும் பதம் சரியா தவறா என ஆராய்ந்து அதன் பிறகு அதனை ஏற்றுக் கொள்ளவே நான் ஆலோசனை வழங்குகிறேன். இப்பதிவு முழுக்க முழுக்க எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் எழுதியதே... நான் எழுதியதற்கு ஆதாரம்  நான் கற்றறிவும் எனது சிற்றறிவும் மட்டுமே...

மீண்டும் சந்திப்போம்... :)))

வேந்தன் அரசு

unread,
May 6, 2014, 6:56:05 AM5/6/14
to vallamai, மின்தமிழ்



5 மே, 2014 3:09 பிற்பகல் அன்று, PRASATH <pras...@gmail.com> எழுதியது:
வணக்கம்...



பிடிச்சிட்டீங்க.ஒரு பிடி.
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

PRASATH

unread,
May 6, 2014, 7:57:54 AM5/6/14
to vallamai, மின்தமிழ்
:)))
 
பிடி தளர்த்தி பிடித்திருக்கிறேன்... :)))

Innamburan S.Soundararajan

unread,
May 6, 2014, 11:09:23 AM5/6/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
சில இலக்கணப் புத்தகங்களுடன் அ.கி. ப. எழுதிய "நல்ல தமிழ் எழுத
வேண்டுமா?" என்ற புத்தகமும் இருக்கிறது. ஆனால், ஒரு பத்து பக்கங்கள்
படித்தவுடன் தலைசுற்றுகிறது. எல்லா புத்தகங்களும் ஆரம்பத்தில் எளிதாக
இருக்கும், போகப்போக.... இலக்கணத்தின் இலக்கணம் அதுதானே!

பள்ளிப் பருவத்தில் தமிழாசிரியரை சபித்ததன் விளைவு என்று நினைக்கிறேன்.
ஆனால், கட்டுரைகள் எழுதும்போது தெய்வசுந்தரம் ஐயா அவர்களின் "மென்தமிழ்"
கை கொடுக்கிறது.

பரிட்சை வச்சா நான் ஃபெயில்தான்!

~ அதெல்லாம் ஒன்ணும் இல்லீங்க. தெளிவான நூல்கள் பல. வித்துவான்.
முத்துக்கண்ணப்பனாரின் நூல் நம் மின்னூல்களில். முனைவர் நூமானின் தற்கால
இலக்கணம் பரவாயில்லை. சில நல்ல நூல்களை, நீங்கல் வரும்போது காட்றேன்.
நான் கூட பரிக்ஷை தகராறு தான். எக்கச்சக்க விசிடர்ஸ். பல வருடங்களுக்குப்
பிறகு பொதிகை டி.வி. அலைச்சல்.

பரிந்துரை நல்ல புத்தகமாக இருக்கும் போல தெரிகிறது…

ஆமாம். சின்ன புத்தகம். க்வார்ட்டோ 44 பக்கம். முனைவர் ராஜம் கொடுத்த அன்பளிப்பு.

அன்புடன், இன்னம்பூரான்.

--









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

PRASATH

unread,
May 6, 2014, 11:17:13 AM5/6/14
to vallamai, மின்தமிழ்
நல்லது ஐயா...

இந்த வார இறுதியில் அவசர பயணமாக நான் சென்னை வந்தாலும் வரலாம்... முடிந்தால் தங்களையும் நேரில் பார்த்து இந்த புத்தகத்தையும் ஒரு முறை பார்த்து விடுகிறேன்... :)))

Megala Ramamourty

unread,
May 6, 2014, 2:45:32 PM5/6/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
//தொன்னூறு//

வெண்பா வேந்தரே! தொன்னூறு என்று எழுதுவது சரியோ? அஃது தொண்ணூறு அல்லவோ!

அன்புடன்,
மேகலா


On Tue, May 6, 2014 at 11:48 AM, PRASATH <pras...@gmail.com> wrote:
தொன்னூறு சதவிகிதம்... :)))

(சனி ஞாயிறு அல்லது சனி அல்லது ஞாயிறு)

2014-05-06 21:42 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:

ஆஹா! பிரஸாதம் வருகிறதா?


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

PRASATH

unread,
May 7, 2014, 12:11:46 AM5/7/14
to vallamai, மின்தமிழ்
காரணம் ஆயிரம் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என்றாலும் பிழை பிழையே...:)))
 
தொண்ணூறு தான் சரி அக்கா...

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 7, 2014, 2:34:12 AM5/7/14
to mintamil
தொண்ணூறு = 90
தொன்னூறு = 100 ( தொல்+நூறு = பழைய பாக்கி நூறு)

ஹி ஹி..

அன்புடன்,

தி.பொ.ச.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

PRASATH

unread,
May 7, 2014, 2:47:39 AM5/7/14
to mint...@googlegroups.com
:)))

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 7, 2014, 3:18:15 AM5/7/14
to Minthamil
ஒரு சந்தேகம்.  பொன்னுக்கும் சரவணனுக்கும் இடையே புள்ளி ஏன்?

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 7, 2014, 3:31:03 AM5/7/14
to mintamil
அது எனது தலைப்பெழுத்து (இனிசியல்) ஐயா.

தந்தை பெயர் பொன்ராஜ்.

அன்புடன்,

தி.பொ.ச.

Innamburan S.Soundararajan

unread,
May 7, 2014, 4:17:52 AM5/7/14
to mintamil
தொண்ணூறு = 90
தொன்னூறு = 100 ( தொல்+நூறு = பழைய பாக்கி நூறு)
திருநீறு _ திருத்தம்.

பொன்னுக்கும் சரவணனுக்கும் இடையே புள்ளி ஏன்?
அதுவா? பொன்னெழுத்து.










இன்னம்பூரான்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 7, 2014, 5:00:39 AM5/7/14
to mintamil
:)))
Reply all
Reply to author
Forward
0 new messages