' கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்'.

1,803 views
Skip to first unread message

K. Saravanan

unread,
Oct 19, 2011, 11:58:05 AM10/19/11
to thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, sangam...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
' கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்'.
தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே
மிகுதி என்றால் அது மிகையாகாது. இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த
விளைவு தான் இது. இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். அந்தப் பிழை
என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப் பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று
காண்போம்.
'கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக
இருந்தாலும் அவன் உன் புருசனே.'
ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு பெண் தனது கணவனை எந்தெந்த
வகைகளில் எல்லாம் அனுசரித்துப் போக வேண்டும் என்று அப் பெண்ணுக்கு அறிவுரை கூறுவதாக
இந்தப் பழமொழியின் பொருள் உள்ளது. இதனால் இல்லறத்தில் இருந்து ஆணும் பெண்ணும் பிரிந்து
செல்லாமல் ஒன்றாக வாழும் ஒரு நன்மை உண்டெனினும் தீமைகளே அதிகமாக விளைகின்றன.
இல்லறத்தில் ஆணின் கையே எப்போதும் ஓங்கி இருக்கவும் பெண்ணின் கை எப்போதும் தாழ்ந்து
இருக்கவுமாக ஒரு தவறான சமுதாய வழிநடத்தலுக்கு இக் கருத்து வழிவகுத்து விட்டது.
இதனால் பாதிப்படைந்த குடும்பங்கள் மிகப் பல. இவ்வளவு கீழான பொருளில் ஒரு பழமொழி ஏன்
நடைமுறையில் இருக்க வேண்டும்?. இது தவறான வழிநடத்தலுக்கு வழிவகுக்கும் என்று அறிந்தும்
இதை இப்பொருளில் உலவ விட்டது யாருடைய குற்றம்?. விடைதெரியாத கேள்விகள் இவை.
ஒரு காட்டை எரித்துச் சாம்பலாக்குவதற்கு ஒரு சின்னத் தீப் பொறி போதுமானதைப் போல ஒரே
ஒரு எழுத்துப் பிழை போதுமே ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைப்பதற்கு. அவ்வாறே இந்தப்
பழமொழியில் ஒரே ஒரு எழுத்து தவறாக எழுதப்பட்டதன் விளைவு இதில் உள்ள சொற்களுக்குத்
தவறான பொருட்களைக் கொள்ளச் செய்து பழமொழியின் நோக்கத்தையே சிதைத்து விட்டது. உண்மையில்
இந்தப் பழமொழியினைக் கூறியவர் ஒரு சித்தராகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சித்தர்கள்
மட்டுமே எந்தப் பொருளையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாக உணர்த்துவர். நாம் ஒரு
பொருளைக் குறிக்க ஒரு சொல்லைப் பயன்படுத்தினால் அவர்கள் அதே சொல்லை வேறு பொருளைக்
குறிக்க பயன்படுத்துவர். இந்தப் பொருள் வேறுபாடுகளைக் காணும் முன்னர் ஒரு சிறுகதையினைப்
பார்ப்போம்.
crane+on+stoneஒரு ஊரில் ஒரு கொக்கு இருந்தது. அது ஒரு குறிப்பிட்ட பாறாங்கல்லின்
மேல் அமர்ந்து இளைப்பாறிய பின் மலம் கழித்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
இவ்வாறு நாள்தோறும் தன்னை அசிங்கப் படுத்துவதைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கல்
ஒருநாள் பொறுமை இழந்து கொக்கிடம் கேட்டது ' ஏன் நாள்தோறும் என்மேல் வந்து அமர்ந்து என்னை
அசிங்கப் படுத்துகிறாய்?. நான் உனக்கென்ன கெடுதல் செய்தேன்?. சிவனே என்று நான் ஒரு
ஓரமாகத் தானே இருக்கிறேன். நீ வேண்டும் என்றே என்னைத் தேடிவந்து என் மேல் அமர்ந்து
இளைப்பாறுவதுடன் அசிங்கம் வேறு செய்துவிட்டுப் போகிறாயே? இது ஏன்? உனக்கு இவ்வாறு
நடந்து கொள்வதில் குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா?'. அதற்கு கொக்கு இறுமாப்புடன் பதில்
சொன்னது ' நீ இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் கிடக்கிறாய். உன்னால் ஒரு பயனும் இல்லை. நான்
அங்கிங்கென தன்னிச்சையாய் பறந்து திரிபவன். உன்னை விட உயர்ந்தவன் என்பதால் இதை நீ ஏற்றுக்
கொள்ளத்தான் வேண்டும்.'
அதைக் கேட்ட கல் கடகட என்று சிரித்தது. பின்னர் சொன்னது ' அட முட்டாள் கொக்கே! நான்
இயக்கமே இல்லாமல் கிடந்தாலும் இறைவனின் திருமேனி ஆகும் தகுதி பெற்றவன். எப்போதுமே
பறந்து கொண்டிருந்தாலும் உனக்கு அந்தத் தகுதி இல்லை. நீ எத்துணை முறை என்னை
மாசுபடுத்தினாலும் மழைநீரால் கழுவப்பட்டு மீண்டும் பொலிவுடன் நிற்பவன் நான். அகத்திலும்
புறத்திலும் எப்போதும் அழுக்குகளைச் சுமந்துகொண்டு திரிபவன் நீ. இறைவனைப் போல நான்
இயக்கமற்று இருக்க இயங்கித் திரிவதால் நீ ஒரு ஆன்மா ஆகிறாய். இயங்கிக் கொண்டிருக்கும்
வரையில் தான் நீ ஓர் ஆன்மா. இயக்கம் நின்று விட்டால் எனது நிலையே உனக்கும். இந்த உண்மையைப்
புரிந்துகொண்டால் என்னை ஏளனம் செய்யமாட்டாய்.' கல் சொன்ன பதிலைக் கேட்டு மெய்உணர்வு பெற்ற
கொக்கு கல்லை வணங்கி விட்டு சென்றது.
இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?. கல் இயங்காத தன்மை உடையது ஆனாலும் அத்தகைய
பண்புடையதே நம் இறைவன் ஆகிய தலைவன். பறவை இயங்கிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது
ஆனாலும் அத்தகைய பண்புடையதே ஆன்மா ஆகும். இதுவே இப்பழமொழியின் கருத்து ஆகும். இந்த
ஆன்மா அடிக்கடி இறைவனிடத்தில் தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்வதுடன் என்றும் இறைவனுக்குக்
கட்டுப்பட்டது என்னும் உயரிய ஆன்மீகக் கருத்தை உணர்த்துவதே இப் பழமொழியின் நோக்கம் ஆகும்.
இனி சரியான பழமொழி இது தான்.
'கல் ஆனாலும் கணவன்; புள் ஆனாலும் புருசன்.'
(கணவன் = இறைவன்; தலைவன்; புள் = பறவை; புருசன் = ஆன்மா.)
(நன்றி: திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக கையகராதி)
வாழ்க தமிழ்!---------------------------------------------
பதிவு: இளமுனைவர் பொன்.சரவணன்
thiruththam.blogspot.com/2009/02/blog-post_1218.html

--
க. சரவணன்

உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை
அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
கரூர். 639005
தொலைபேசி: 04324255558
அலைபேசி: 9787059582, 9677170008, 8903731558.

தனி மின்னஞ்சல்: tamizper...@gmail.com

skype: ksnanthusri

Innamburan Innamburan

unread,
Oct 19, 2011, 4:15:16 PM10/19/11
to mint...@googlegroups.com

பாயிண்ட் மேட், பொன்னான சரவணன்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 20, 2011, 1:03:45 AM10/20/11
to mint...@googlegroups.com
நன்றி திரு. க.சரவணன் அண்ட் இ சார்.

அன்புடன்,

தி.பொ.ச.

2011/10/20 Innamburan Innamburan <innam...@gmail.com>

பாயிண்ட் மேட், பொன்னான சரவணன்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

தாரகை

unread,
Oct 20, 2011, 5:15:40 AM10/20/11
to மின்தமிழ்
ஒரு பக்கத்தை பாழாக்கி இல்லாத கற்பனையை இருப்பதாக சொல்பவனுக்கு
"பித்தன்" என்று பெயர். எந்தச் சொல்லையும் நேர்ப்பொருள்பட கூறாதவன்
தமிழாசிரியராக இருக்கலாகாது என்று சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை
சொன்னதாக ஒரு கருத்து உண்டு.

புருஷன் என்ற சொல்லே நேற்று வந்தது. பெண்ணுரிமை இல்லாத நிலையில்
பெயருக்கு ஒரு கணவன் இருந்தால் போதுமென்று நினைத்த மூடச்சமுதாயத்தின்
உளறல் மொழி அது.

கணவனே இல்லாமலும் மகளிர் தமியராக வாழலாம், துணையே இல்லாமல் காமராசராக
வாழலாம்.

கண்ணெதிரில் சான்றுகளைப் பார்த்தும் கூட கரூர்ச்சித்தராக நீங்கள்
மாறுவதை தவிரித்துக்கொள்ளவும்.

கல்லால் தான் கடவுள் வடிக்கப்படுகிறார் என்ற காலம் போய் ஐம்பொன்னும்,
வார்ப்பியம்,
கற்காரைச் சிலைகளாக வருகின்றன.

கல்வித்தெளிவும், கலைப்புலமையும் இல்லாமல் வாய்மொழியாகச் சொன்ன
வஞ்சகசொற்களுக்கு "சித்தர் மொழி" என்று சொல்கிறார்கள்!

மருந்து, கடவுள், சோதிடம் இந்த மூன்றையும் பற்றி ஆளுக்கொரு வகையாக
பேசுவார்கள். இதில் பிறந்தது தான் எத்துக்களும், ஏமாற்றுகளும் என்று
பேராசிரியர் மு.வ அவர்கள் வகுப்பில் சொல்லியதாக ஒரு குறிப்புண்டு.

கொக்குத்தலையில் வெண்ணையை வைப்பது போல மக்குக்கதைகளை தமிழாசிரியர்கள்
சொல்லலாமா?

பால் என்ற நிர்மலமான பிரபஞ்சத்தில் வடிநீர் என்ற மாயைக்கலந்து
சிற்றின்பம் என்ற சர்க்கரை சேர்த்த உட்பொருள் உண்மையைத்தான் சைவ
சித்தாந்தம் கூறுகிறது என்று ஆஸ்திரேலியா கொக்கு சொன்னதும்,
பாறையிலிருந்து ஏசுநாதர் வெடித்து வந்து சைவனாக
மாறிவிட்டார் என்று சரவணன் ஒரு கதையை மேற்கோள் காட்டிவிட
முற்படாதீர்கள்!

பழமொழிகள் பல நிலைகளில் இலை மொழிகளாக, சருகு மொழிகளாக இருக்கின்றன. காலம்
தானாகவே அவற்றைக் கழித்துவிடும்!

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 20, 2011, 5:41:25 AM10/20/11
to mint...@googlegroups.com
தாரகை,

பெயரில் இருக்கும் ஒளி பேச்சில் இல்லையே :(((

அன்புடன்,

தி.பொ.ச

2011/10/20 தாரகை <thar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

K. Saravanan

unread,
Oct 20, 2011, 1:40:01 AM10/20/11
to mint...@googlegroups.com
அன்பிற்கினிய திரு பொன் சரவணன் அவர்களுக்கு வணக்கம்.
உந்கள் வலைப்பூந்காவில்  மலரும் புத்தம் புது மலர்களை நாள்தோரும் நேசித்து, வாசித்து அவற்றின் வாசனையை ஸ்வாசித்து வருகிறேன்.
 படித்தவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறேன்..
 தொடரட்டும் உந்கள் தமிழ்ப்பணி!


-- 
க. சரவணன்

உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை  
அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
கரூர். 639005
தொலைபேசி: 04324255558
 அலைபேசி: 9787059582, 9677170008, 8903731558.

 தனி மின்னஞ்சல்: tamizper...@gmail.com

skype:  ksnanthusri

 

10/20/2011 10:33 AM-ல், திருத்தம் பொன்.சரவணன் எழுதினார்:

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 20, 2011, 6:27:05 AM10/20/11
to mint...@googlegroups.com
மிக்க நன்றி திரு. சரவணன்.

உங்கள் சொற்களே நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்று காட்டிக் கொடுக்கின்றனவே. :))))

அன்புடன்,

தி.பொ.ச.



2011/10/20 K. Saravanan <ksnan...@gmail.com>

தாரகை

unread,
Oct 20, 2011, 10:17:10 AM10/20/11
to மின்தமிழ்
> பெயரில் இருக்கும் ஒளி பேச்சில் இல்லையே :(((

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்! (293)

karuannam annam

unread,
Oct 20, 2011, 2:14:47 PM10/20/11
to mint...@googlegroups.com


2011/10/20 தாரகை <thar...@gmail.com>

> பெயரில் இருக்கும் ஒளி பேச்சில் இல்லையே :(((

அன்பிற்கினிய திரு பொன் சரவணன்
திரு தாரகை எழுதியுள்ளது மிகவும் சரியானது என எண்ணுகிறேன். நேர்படப் பொருள் உரைப்பது இனியது. புள் எனத் திருத்திப் பொருள் கொளவது பொருத்தமாக இல்லை.(கள் என்று முதல் தொடர் இல்லையே). தங்கள் அளப்பரிய திறன் நேர்பட ஆய்வுப் பொருள் கண்டால் பொன் மலர் நாற்றமுறும் என்ற நோக்கில் என் கருத்தைப் பதிந்துள்ளேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

சிவக்குமார்

unread,
Oct 20, 2011, 10:48:39 PM10/20/11
to மின்தமிழ்

நன்றி.

நல்லவிளக்கம். புல்லறிவான்மையை விளக்ககூடியது

- சிவக்குமார்


செல்வன்

unread,
Oct 20, 2011, 10:58:20 PM10/20/11
to mint...@googlegroups.com
கட்டுரை நல்ல முறையில் அமைந்துள்ளது திருத்தம் சரவணன் ஐயா. பல பழமொழிகளுக்கு இதுபோல் மாற்று விளக்கங்களை படித்ததுண்டு

பந்திக்கு முந்து,படைக்கு பிந்து என்பதற்கு "பந்தியில் உண்ணும்போது கைகள் முன்னே இருக்கும்.படையில் சேர்ந்து வேலை எறியும்போது கைகள் உடலுக்கு பின்னே இருக்கும்" என்ற ஒரு விளக்கத்தை படித்தேன்.

"உம்மாச்சி கண்ணை குத்திரும்" என்பதில் உள்ள உம்மாச்சி என்பது உமாமகேசுவரன் என சங்கராச்சாரியார் எழுதினதை படித்துள்ளேன்.

சேலைகட்டிய மாதரை நம்பாதே என்பதுக்கு "சேல் அகட்டிய மாதரை நம்பாதே" எனவும் ஒரு விளக்கம் படித்துள்ளேன்.

0511-0906-2800-3425_Boy_Throwing_a_Javelin_at_a_Track_and_Field_Event_clipart_image.jpg
--
செல்வன்



N. Ganesan

unread,
Oct 21, 2011, 1:28:26 AM10/21/11
to மின்தமிழ்

On Oct 20, 9:58 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> கட்டுரை நல்ல முறையில் அமைந்துள்ளது திருத்தம் சரவணன் ஐயா. பல பழமொழிகளுக்கு
> இதுபோல் மாற்று விளக்கங்களை படித்ததுண்டு
>
> பந்திக்கு முந்து,படைக்கு பிந்து என்பதற்கு "பந்தியில் உண்ணும்போது கைகள்
> முன்னே இருக்கும்.படையில் சேர்ந்து வேலை எறியும்போது கைகள் உடலுக்கு பின்னே
> இருக்கும்" என்ற ஒரு விளக்கத்தை படித்தேன்.
>
> "உம்மாச்சி கண்ணை குத்திரும்" என்பதில் உள்ள உம்மாச்சி என்பது உமாமகேசுவரன் என
> சங்கராச்சாரியார் எழுதினதை படித்துள்ளேன்.
>
> சேலைகட்டிய மாதரை நம்பாதே என்பதுக்கு "சேல் அகட்டிய மாதரை நம்பாதே" எனவும் ஒரு
> விளக்கம் படித்துள்ளேன்.
>
> [image:
> 0511-0906-2800-3425_Boy_Throwing_a_Javelin_at_a_Track_and_Field_Event_clipart_image.jpg]

பழைய மடல் ஒன்றில் நாகராஜன் எழுதியிருந்தார்.
Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> aகல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி என்ன சொல் விளக்கம்
> தருகிறது
> கணவனை கல் என்றும் புல் என்றும் உருவகப்படுத்தியுள்ளதில் ஏதேனும் உள்நோக்கம்
> உண்டா?
> தற்காலக் கணவன் என்ற அளவில் கள் ஆனாலும் கண்வன் ஃபுல் ஆனாலும் புருஷன் என்பதைத்
> தற்கால மனைவியர் ஏற்று நடக்கிறார்கள்
> நாகராசன்


அந்த இழையில் நான் தந்த விளக்கம்:

கல் ஆனாலும் கணவன் - நடுகல்லாக ஆனாலும் கணவன் வழி நடப்பவள்.
புல் ஆனாலும் புருஷன் - மண்ணாகி மண்மேட்டில் புல் முளைத்தாலும் அஃதே.

நா. கணேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 21, 2011, 1:59:58 AM10/21/11
to mint...@googlegroups.com
செல்வன் ஜிக்கும் சிவக்குமார் ஐயாவுக்கும் நன்றி.

சொ.வி. ஐயா

ஒரு கருத்தை நான் கூறும் முன் பலமுறை ஆராய்ந்த பிறகே கூறுவேன்.முதலில் நீங்கள் என் மீது வைக்க வேண்டியது நம்பிக்கை. 

இருந்தாலும் உங்களுக்காக, தாரகைக்காக அல்ல, இங்கு மீண்டும் விளக்குகிறேன்.

புல் என்றாலும் புள் என்றாலும் பறவையைக் குறிக்கும். இதை நீங்கள் சென்னைத் தமிழ் இணையப் பேரகராதியில் காணலாம். நான் பழமொழியை புள் என்று திருத்திக் கூறியதின் நோக்கம் மக்களுக்கு எளிதில் புரிய வேண்டும் என்பதற்காகவே.

இப்போதாவது நான் நேர்படப் பொருள் கூறியிருப்பதாக எண்ணுவீர்கள் என்று நினைகிறேன்.

அன்புடன்,
தி.பொ.ச.


2011/10/20 karuannam annam <karu...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 21, 2011, 2:24:01 AM10/21/11
to mint...@googlegroups.com
நன்றி செல்வன் ஜி

பந்திக்கு முந்து என்ற பழமொழியைப் பற்றிய எனது புதிய விளக்கத்தை எனது வலைப்பூவில் இட்டுள்ளேன்.

நேரம் கிடைக்கும் பொழுது அதைப் படியுங்கள்.

அன்புடன்,
தி.பொ.ச.


2011/10/21 செல்வன் <hol...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

karuannam annam

unread,
Oct 21, 2011, 2:32:33 AM10/21/11
to mint...@googlegroups.com
மகிழ்ச்சி.

அன்புடன்
சொ.வி


2011/10/21 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

K. Saravanan

unread,
Oct 20, 2011, 8:05:58 PM10/20/11
to mint...@googlegroups.com
அன்பிற்கினிய தாரகை அவர்களுக்கு வணக்கம்.
எந்த ஓர் ஆய்வின் முடிவையும் முடிந்த முடிவாக கருதிவிட முடியாது என்பது உண்மைதான்.
ஆனால் அதே நேரம் அந்த ஆய்வை மருப்பவர் சரியான காரணந்களை குரிப்பிடவெண்டும் என்பது
உந்களுக்கு தெரியாததல்ல!

திரு பொன் சரவணன் அவர்களின் இப்பழமொழி குரித்த ஆய்வை நீந்கள் முழுமையான
காரணந்களைக்கொண்டு மருக்கவில்லை.
அதே நேரம் சில தமிழ் பெரியோர்களின் வார்த்தைகளைக்கொண்டு ஆய்வாலர்களை,
தமிழாசிரியர்களை ஒட்டுமொத்தமாக குரை கூறுவது சரியல்ல.

--
க. சரவணன்

உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை
அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
கரூர். 639005
தொலைபேசி: 04324255558
அலைபேசி: 9787059582, 9677170008, 8903731558.

தனி மின்னஞ்சல்: tamizper...@gmail.com

skype: ksnanthusri


10/20/2011 7:47 PM-ல், தாரகை எழுதினார்:

தாரகை

unread,
Oct 21, 2011, 6:05:12 AM10/21/11
to மின்தமிழ்
> திரு பொன் சரவணன் அவர்களின் இப்பழமொழி குரித்த ஆய்வை நீந்கள் முழுமையான
> காரணந்களைக்கொண்டு மருக்கவில்லை.

காலத்திற்கு ஏற்றார்ப்போல பழமொழிகள் மாறும் அல்லது மறையும். அவ்வாறே,
இந்த இழையில் குறிப்பிட்டுள்ள பழமொழியும்.

இக்காலத்தில் நிலவும் வாழ்வுநிலைகளுக்கு ஏற்ற பழமொழியாக இல்லை என்பதுதான்
உ(ள்)ள நிலை. முன்னர் வழிமொழிந்த வரிகளை நினைந்து பார்க்கவும். "கணவனே
இல்லாமலும் மகளிர் தமியராகவும், துணையே இல்லாமல் காமராசராக வாழ்ந்துவரும்
சூழல்கள்", கண்ணெதிரில் சான்றுகளாக இருந்தும் காரணங்கள் இல்லை என்று
கூறுவது ஆண் ஆதிக்க நிலையின் நேர்மையின்மை!

இக்குழுமத்தில் உள்ள பெண்டீர் இவ்விழையில் கருத்தளிக்க வராத நிலைவறியா
ஆண்களை நினைக்கும் போது இப்பழமொழி வஞ்சகசொற்களாகத் தான்
காட்சியளிக்கிறது. தேவைப்படும் போது மாகவியின் வரிகளை கூறுவதம்,

மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பாராம்;
மூடக் கட்டுகள் யாவுந் தகர்ப்பராம்

போற்றி! போற்றி! ஜயஜய போற்றி! இப்
புதுமைப் பெண்னொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமையுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே.....

பிறகு மறப்பதும், ஆண்களுக்கு புதிதல்லவே! சீர்திருத்தக்கதிரொளி
வீசும்போது சிலர்க்கு கண் கூசும். இருள் நிலவில் இருப்போருக்கு "தாரகை"
சிலர் கண்ணுக்குத் தான் தெரியும்.

மூடச்சிந்தனைக்கு எப்போதும் மூடுவிழா நடத்த வேண்டும் என்பதில்
ஐயமேதுமில்லை.

Geetha Sambasivam

unread,
Oct 21, 2011, 6:47:39 AM10/21/11
to mint...@googlegroups.com
இந்த விவாதம் சுவையாக இருந்தது.  அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து படித்தேன்.
2011/10/21 தாரகை <thar...@gmail.com>

N. Ganesan

unread,
Oct 21, 2011, 9:01:58 AM10/21/11
to மின்தமிழ்

On Oct 20, 7:05 pm, "K. Saravanan" <ksnanthu...@gmail.com> wrote:
> அன்பிற்கினிய தாரகை அவர்களுக்கு வணக்கம்.
> எந்த ஓர் ஆய்வின் முடிவையும் முடிந்த முடிவாக கருதிவிட முடியாது என்பது உண்மைதான்.
>   ஆனால் அதே நேரம் அந்த ஆய்வை மருப்பவர் சரியான காரணந்களை குரிப்பிடவெண்டும் என்பது
> உந்களுக்கு தெரியாததல்ல!
>
>   திரு பொன் சரவணன் அவர்களின் இப்பழமொழி குரித்த ஆய்வை நீந்கள் முழுமையான
> காரணந்களைக்கொண்டு மருக்கவில்லை.
>   அதே நேரம் சில தமிழ் பெரியோர்களின்   வார்த்தைகளைக்கொண்டு ஆய்வாலர்களை,
> தமிழாசிரியர்களை ஒட்டுமொத்தமாக குரை கூறுவது சரியல்ல.
>

தமிழாசிரியர் ஐயா,

புல் என்பதும், புள் என்பதும் அடிப்படையில் வேறான
சொற்கள் அல்லவோ?

நா. கணேசன்

> --
> க. சரவணன்
>
> உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை
> அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
> கரூர். 639005
> தொலைபேசி: 04324255558
>   அலைபேசி: 9787059582, 9677170008, 8903731558.
>

>   தனி மின்னஞ்சல்: tamizperasiri...@gmail.com

karuannam annam

unread,
Oct 21, 2011, 12:42:23 PM10/21/11
to mint...@googlegroups.com
புல் - புள் ஒன்றுக்கொன்று இணையாகப் பயிலும் சொல்லாட்சி இலக்கியத்தில் உண்டா திரு தி.பொ.ச.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

2011/10/21 N. Ganesan <naa.g...@gmail.com>



புல் என்பதும், புள் என்பதும் அடிப்படையில் வேறான
சொற்கள் அல்லவோ?

நா. கணேசன்
 
2011/10/21 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages