தினமணி - இந்திய அறிவியல் ஓங்கி வளர ஒரு வாய்ப்பு

34 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jan 24, 2010, 6:50:50 PM1/24/10
to Min Thamizh
இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு.

பண்டைய நாளில் இந்தியா மனிதகுலத்துக்கு இன்றியமையாத அடிப்படை அறிவை வழங்கியுள்ளது.

அறிவியலுக்கெல்லாம் அடிப்படையான கணிதம் வளர, எண்களின் இடமதிப்பும் "சூனியமும்" முக்கியமானவை.

இவை பண்டைய இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட் டன.

நமது மக்கள்தொகை 100 கோடியைத் தாண்டிவிட்டது.

மக்கள்தொகையில் முதலிடத்தை இந்தியா கைப்பற்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

இன்னும், நமது பழம்பெருமையைப் பற்றி புகழ் பாடிக் கொண்டிருந்தால் போதுமா?

நமது கண்டுபிடிப்பு "சூனியம்" என்றால் போதுமா?

எல்லா நவீன அறிவியலையும், தொழில் நுட்பங்களையும் அயல்நாட்டவரிடமிருந்தே வாங்கிக் கொண்டிருக்க வேண்டுமா?

நாம் இவற்றை மற்றவர்களுக்குக் கொடுப்பது எக்காலம்?

அடிப்படை அறிவை நாமே உண்டாக்குவது எக்காலம்?

இதற்கு ஓர் அரிய வாய்ப்பு நமக்கு இப்போது கிடைத்துள்ளது.

இதுவே "நியூட்ரினோ" என்னும் அடிப்படைத்துகளைப் பற்றிய ஆராய்ச்சி.

சமீப காலத்தில்,
  • பெதிக விஞ்ஞானத்திலும்
  • விண்வெளி ஆராய்ச்சியிலும்
நியூட்ரினோவைப் பற்றிய மிக முக்கியமான உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு 2002ம் ஆண்டில் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

நியூட்ரினோக்கள் அண்டம் முழுவதும் மிக,மிக அதிக அளவில் பரவிக்கிடக்கின்றன.

ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து
வெளியேறிய வண்ணம் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் வரை,நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போன்று எடை அற்றவை
என்று விஞ்ஞானிகளால் கருதப்பட்டு வந்தது.

ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்பால், பெ
திக, விண்வெளி அறிவியலில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூட்ரினோவைப் பற்றிய இன்னும் பல அரிய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட உள்ளன.

ஆகவே, உலகெங்கிலும் பல நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடங்கள் கட்டும் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று உலக நாடுகளிடையே பெரிய போட்டி தொடங்கியுள்ளது.

நியூட்ரினோ அறிவியல் ஆராய்ச்சியில் ஏற்கெனவே முன்னேற்றம் கண்டுள்ளது நம் நாடு.

காஸ்மிக் கதிர்களிலிருந்து உண்டாகும் நியூட்ரினோக்கள் முதன்முதலில் தென் இந்தியாவிலுள்ள
கோலார் தங்கவயல் சுரங்கத்தில்தான் 1965ல் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் அந்தச் சுரங்கங்கள் 15 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டு விட்டன.

இவ்வாறு, இழந்த வாய்ப்பை மறுபடி நம்மால் மீட்க முடியுமா?

முடியும்.

இது தான் இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம் (INO - www.imsc.res.in/~ino/) என்ற திட்டத்தின் குறிக்கோள்.

இந்தியாவிலுள்ள பல
  • அறிவியல் நிறுவனங்களும்
  • பல்கலைக்கழகங்களும்
இணைந்து இந்த பாதாள அறிவியற் கூடத்தை நிறுவ முனைந்துள்ளன.

சுமார் 100 விஞ்ஞானிகளும்,பொறியியல் வல்லுநர்களும் இந்தப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பாதாள அறிவியற்கூடம் நியூட்ரினோவைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும்.

ஐ.என்.ஓ ஆராய்ச்சிக் கூடம் ஒரு மலையின் உள்ளே அமைக்கப்படும்.

மலையின் உச்சியிலிருந்து 1.3 கிலோமீட்டர் கீழே, 120மீ ல 25மீ ல 30மீ பரிமாணமுள்ள பெரிய பாதாளக்குகை தோண்டப்படும்.

மலையின் வெளிப்பாகத்திலிருந்து 2.5 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாக இந்தக் குகையை அணுக வேண்டும்.

ஆகவே இந்தச் சுரங்கப்பாதை முதலில் தோண்டப்படும்.

50 கிலோ டன் இரும்பினாலான மிகப் பெரியதொரு நியூட்ரினோ காணும் கருவி பாதாளக்குகையில் அமைக்கப்படும்.

இந்த ஆராய்ச்சிக்கு ஒரு கிலோமீட்டர் பரிமாணமுள்ள பாறை அவசியம்.

நியூட்ரினோ காணும் கருவியைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்த பட்சம் ஒரு கிலோமீட்டர்
பாறை இருந்தால் தான் இந்த ஆராய்ச்சியை நடத்த முடியும்.

இவ்வளவு பெரிய பாறையால் தான் வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களைத் தடுத்து நிறுத்த முடியும்.

இவற்றைத் தடுத்து நிறுத்தினால் தான் காணும் கருவியால் நியூட்ரினோக்களைக் காண முடியும்.

முதற்கட்டமாக,  ஐ.என்.ஓ ஆராய்ச்சிக் கூடத்தில் காஸ்மிக் கதிர்கள் உண்டாக்கும் நியூட்ரினோக்களைப் பற்றிய
ஆராய்ச்சிகள் நடத்தப்படும்.

இரண்டாம் கட்டத்தில், நியூட்ரினோ ஆராய்ச்சி மிக முக்கியமானதொரு திருப்பத்தைச் சந்திக்கும்.
  • ஜப்பான்
  • சுவிட்சர்லாந்து
  • அமெரிக்கா
முதலிய நாடுகளிலுள்ள அதி ஆற்றல் வேக வளர்ச்சி ஆலைகள் உண்டாக்கும் நியூட்ரினோக்கள் பூமியினுள்ளே
ஊடுருவிச் சென்று ஆராய்ச்சிக் கூடத்தை வந்தடையும்.

ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவைப் பூமியின் உள்ளே கடந்து வரும் இந்த நியூட்ரினோக்களைப்
பற்றிய ஆராய்ச்சி பல புதிய அறிவியல் உண்மைகளை நமக்கு விளக்கும்.

மிக முக்கியமான கண்டுபிடிப்புகளைத் தவிர அறிவியல் துறையில் பல ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவித்து
அவர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை உலக அளவில் தகுதியுள்ள இளம் அறிவியலாளர்களாக உருவாக்குவதும்
ஐ.என்.ஓவின் மற்றொரு குறிக்கோள்.

இந்த ஆராய்ச்சி மாணவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சியளிக்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

நியூட்ரினோ டிடெக்டர் கருவியை நிறுவத் தேவையான பல தொழில்நுட்பங்களின் ஆயத்த வேலையும் தொடங்கிவிட்டது.

ஏற்கெனவே கூறியபடி நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை நிறுவ கடினமும் உறுதியும் கொண்ட மலைப்பாறை அவசியம்.

மலையின் உள்ளே தான் இந்த ஆய்வினை நடத்த முடியும்.

தமிழ்நாட்டிலுள்ள கடினமான மலைகளைப் போன்றவை இந்தியாவில் வேறெங்கும் இல்லை.

இயற்கையே ஐ.என்.ஓவிற்காக தமிழகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.

அறிவியல் வளர்ச்சியில் தமிழ்நாடு தனித்த பெயரும் புகழும் பெறுவதற்கான வாய்ப்புக்  கிட்டியுள்ளது.

நமது ஆராய்ச்சி மாணவர்களையும்,இளம் விஞ்ஞானிகளையும்,பொறியியல் வல்லுநர்களையும் உலகத்தரம்
வாய்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தும் இந்த அரிய வாய்ப்பைத் தமிழகம் இழந்துவிடக்கூடாது.

ஐ.என்.ஓவைப் பற்றிப் பல தவறான கருத்துகள் மக்களிடையே உலவி வருகின்றன.

ஐ.என்.ஓ ஆராய்ச்சிக் கூடத்தில் எந்தவிதமான ஆபத்தான கதிர்வீச்சுப் பொருள்களும் பயன்படுத்தப்பட மாட்டா.

சுற்றுப்புறத்தையோ காற்று மண்டலத்தையோ நீர், நில வளத்தையோ  ஐ.என்.ஓ ஆராய்ச்சி எந்த விதத்திலும் பாதிக்காது.

நியூட்ரினோ காணும் கருவி விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் தொலைநோக்குக் கருவியைப் போன்றது.

தொலைநோக்குக் கருவி ஒளியைக் கிரகித்து, நமக்கு விண்வெளியிலுள்ள பொருள்களை ஆராய உதவுகிறது.

அதுபோன்று நியூட்ரினோ டிடெக்டர் விண்வெளியிலிருந்தும் பூமியிலிருந்தும் வரும் நியூட்ரினோக்களைக் கிரகித்து
அண்டவெளியைப் பற்றியும் பூமியைப் பற்றியும் ஆராய உதவும்.

தொலைநோக்குக்  கருவியால் நமக்கு எந்தவிதமான ஆபத்தும் கிடையாது.

அதேபோன்று, நியூட்ரினோ டிடெக்டரினாலும் நமக்கு எந்தவிதமான ஆபத்தும் கிடையாது.

இந்த நியூட்ரினோ ஆராய்ச்சிக்கும் நாசமுண்டாக்கும் அணுகுண்டு உற்பத்தி செய்யும் வேலைகளுக்குமோ அல்லது
அணுசக்தியிலிருந்து மின்சாரம் எடுக்கும் வேலைகளுக்குமோ எந்தவிதத் தொடர்பும் இல்லை. 

ஐ.என்.ஓவில் எந்தவித வியாபாரப் பொருள்களும் உற்பத்தி செய்யப்பட மாட்டா.

அறிவியல் அறிவு மட்டுமே உற்பத்தி செய்யப்படும்.

நியூட்ரினோ ஆராய்ச்சி அடிப்படை அறிவியல் உண்மைகளை அறியும் ஆராய்ச்சி.

இத்தகைய ஆராய்ச்சியால் தான் மனித இனம்
  • தன்னைப் பற்றியும்
  • பூமி
  • சூரியன்
  • அண்டம்
யாவற்றைப் பற்றியும் அறிவியல் உண்மைகளை இதுவரை கண்டறிந்துள்ளது.

அவ்வறிவினால் தன் வாழ்க்கையையும் உயர்த்தியுள்ளது.

இன்னும் எவ்வளவோ உண்மைகள் கண்டறியப்பட உள்ளன. 

ஐ.என்.ஓ ஆராய்ச்சி இந்திய இயற்பியல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.

உலக அரங்கில் நம் நாடு அறிவியல் சாதனை புரிய நல்லதொரு வாய்ப்பைத் தரவல்லது.

பன்னாட்டு விஞ்ஞானிகள் ஐ.என்.ஓவின் ஆராய்ச்சியையும்,ஆராய்ச்சி முடிவுகளையும் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

ஆனால், அவர்கள் எந்நாளும் காத்திருக்கமாட்டார்கள்.

அமெரிக்காவும், சீனாவும் மிகப்பெரிய நியூட்ரினோ ஆய்வுக்கூடங்களை அமைக்க ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றன.

காலம் நழுவிக்கொண்டிருக்கிறது.

ஐ.என்.ஓவினால் செய்யக்கூடிய பணியின் முக்கியத்துவம் நம்மை விட்டு நழுவிக்கொண்டிருக்கிறது.

காலதாமதம் ஐ.என்.ஓவின் வெற்றியைப் பாதிக்கும்.

உலகெங்கிருந்தும் புகழ்பெற்ற  விஞ்ஞானிகள் பலர், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு
வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் ஐ.என்.ஓ ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுமானால் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள கல்லூரி, பள்ளி மாணவர்கள் அங்கு
சென்று பல அறிவியல் உண்மைகளை நேரடியாக அறிந்து கொள்ள முடியும்.

பல நாடுகளிலிருந்து முன்னிலை அறிவியல் அறிஞர்கள் அடிக்கடி அங்கு வருவார்கள்.

அவர்களது வருகையை மாணவர்களும்,ஆசிரியர்களும் தங்கள் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகக் கல்லூரி, பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க ஐ.என்.ஓ ஓர் அரிய வாய்ப்பு.

தமிழகம் பல புகழ்பெற்ற விஞ்ஞானிகளைத் தந்திருக்கிறது.

அவர்களுள்,
  • சி. வி. ராமனும்
  • சந்திரசேகரும்
  • வெங்கடராமன் ராமகிருஷ்ணனும்
நோபல் பரிசையும் பெற்றுள்ளனர்.

ஆனால், இம்மூவரும் தமிழகத்தை விட்டு வெளியேறித் தான் தங்கள் அறிவியல் திறனை வளர்த்து சாதனை புரிய முடிந்தது.

இந்நிலை மாற வேண்டும்.

தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழ்நாட்டு ஆராய்ச்சி நிலையங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் பணிபுரிந்து உலகப் புகழ் பெற வேண்டும்.

இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் தமிழகத்தில் உருவாக வேண்டும். தமிழக மக்களும், அரசும் இதற்கு ஒத்துழைப்பைக்
கொடுக்க வேண்டும்.

தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து இத் திட்டத்துக்கு
அனுமதியை அளித்து இத்திட்டம் விரைவில் தொடங்க வழிவகுப்பது
அவசியம்.

கட்டுரையாளர்:-  ஜி. இராஜசேகரன் - கணித அறிவியல் பேராசிரியர்

நன்றி:- தினமணி

S.Partha sarathy

unread,
Jan 24, 2010, 11:35:40 PM1/24/10
to mint...@googlegroups.com
மிகத் தேவையானது.அனைத்தும் நாம் முன்னோர்தான் கண்டுபிடித்தது என திண்ணைப் பேச்சை எத்தனை நாள்தான் கேட்டுக்கொண்டு இருப்பது. பாட்டன் சொத்தை அனுபவிப்பவராக மட்டும் இல்லாமல்  நம் சந்ததியனருக்கு நாம் புதியாய் ஆக்கபூர்வமாக என்ன கண்டுபிடித்துக்கொடுத்திருக்கின்றோம்?
 என்ற சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும் என்ற கருத்துள்ள இவ்விழையை இட்டத்தற்கு நன்றி.

அன்புடன்
பார்த்தசாரதி

2010/1/25 Kannan Natarajan <thar...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tirumurti Vasudevan

unread,
Jan 25, 2010, 1:16:19 AM1/25/10
to mint...@googlegroups.com
சமீபத்தில் தமிழகத்தில் அமையவிருந்த இது சம்பந்தமான திட்டத்துக்கு அரசு அனுமதி மறுத்ததாக நினைவு. காண்ட்ராக்ட் கிடைக்க வாய்ப்பில்லை போல இருக்கு!
:-(


2010/1/25 S.Partha sarathy <spsar...@gmail.com>

N. Kannan

unread,
Jan 25, 2010, 2:56:39 AM1/25/10
to mint...@googlegroups.com
இச்சேதியைக் கவனமாக வாசிக்க வேண்டும். கட்டுரையாளர் ஏதோ இந்தியா இன்னும்
கட்டை வண்டி காலத்தில் இருப்பது போல் எழுத்திக் கொண்டிருக்கிறார்.

Nature, Science - உலகின் முதல் இரண்டு உயர் அறிவியல் சஞ்சிகைகள் போட்டி
போட்டுக் கொண்டு இந்திய அறிவியல் பற்றிப் பேசி வருகின்றன. இந்திய
விஞ்ஞானத்தை மிகக்கவனமாக மேலுலகம் கவனிக்க ஆரம்பித்து வருஷங்களாகின்றன.

பல துறைகளில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது.

நமது அடிப்படைப் பிரச்சனைகள் பூதாகாரமாய் இருப்பதால் இவையெல்லாம் அதில்
அடிபட்டுப் போகின்றன. என்ன செய்ய?

இந்தியா ஐ.டி நாடு என்ற பிரம்மிப்புடன் போயிருக்கும் என் இரு கொரிய
சகாக்களுக்கும் உடனடி இணையத்தொடர்பு கிடைக்கவில்லை (எந்த ஹோட்டலோ? எந்த
விமான நிலையமோ?) என்று குற்றம் சொல்லியிருப்பதாக காதிற்கு சேதி வந்தது.
நாம் இன்னும் அடிப்படைத் தேவைகளென இணையத்தொடர்பை நினைக்கவில்லையே.
மின்சாரம் எப்போதும் இன்னும் இருப்பதில்லையே..இத்யாதி..

க.>

Innamburan Innamburan

unread,
Jan 25, 2010, 3:30:38 AM1/25/10
to mint...@googlegroups.com
"அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க..." ..என்ற இழையில் இது பற்றியும் விவாதிக்கப்படும்,


 
2010/1/25 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
இன்னம்பூரான்

S.Partha sarathy

unread,
Jan 25, 2010, 3:44:27 AM1/25/10
to mint...@googlegroups.com
 ஐயா,
கட்டுரையாளரின் கேள்விகள் நியாயமானதே!

  ///எல்லா நவீன அறிவியலையும், தொழில் நுட்பங்களையும் அயல்நாட்டவரிடமிருந்தே வாங்கிக் கொண்டிருக்க வேண்டுமா?

நாம் இவற்றை மற்றவர்களுக்குக் கொடுப்பது எக்காலம்?

அடிப்படை அறிவை நாமே உண்டாக்குவது எக்காலம்? ///



சுதந்திரத்திற்குப்பிறகு உலக அளவில் அடிப்படை அறிவியலில் ( Fundamental Sciences) இந்தியாவின் பங்கு என்ன? நம்முடைய கண்டுபிடிப்புதான் என்ன?



 அன்புடன்
பார்த்தசாரதி


2010/1/25 N. Kannan <navan...@gmail.com>

S.Partha sarathy

unread,
Jan 25, 2010, 3:58:15 AM1/25/10
to mint...@googlegroups.com
        ///சமீபத்தில் தமிழகத்தில் அமையவிருந்த இது சம்பந்தமான திட்டத்துக்கு அரசு அனுமதி மறுத்ததாக நினைவு. காண்ட்ராக்ட் கிடைக்க வாய்ப்பில்லை போல இருக்கு!/////

ஒரு திருத்தம்.. நீலகிரியில் சிங்காரா என்ற இடத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ( புலிகள், யானைகள்) என்ற எதிர்ப்பினால் தற்போது தேனி மாவட்டம் சுருளி அருகே மாற்றப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.


அன்புடன்
பார்த்தசாரதி


2010/1/25 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

ம ஸ்ரீ ராமதாஸ்

unread,
Jan 25, 2010, 11:22:08 AM1/25/10
to mint...@googlegroups.com
S.Partha sarathy wrote:
> சுதந்திரத்திற்குப்பிறகு உலக அளவில் அடிப்படை அறிவியலில் ( Fundamental
> Sciences) இந்தியாவின் பங்கு என்ன? நம்முடைய கண்டுபிடிப்புதான் என்ன?

உயர்ந்த ஞானம் ஒரு மொழியில் வெளிப்படுத்தப்பட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கிறது
(உள்ளூரிலேயே!).

அங்கீகாரம் எதையும் எதிர்பாராது செய்வோர் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

அதே சமயம், அம்மொழியை தன் வசமாக்கிக் கொண்டுள்ள பலர் நிறைய செய்திருக்கிறார்கள்.

--

ஆமாச்சு

S.Partha sarathy

unread,
Jan 25, 2010, 11:41:25 AM1/25/10
to mint...@googlegroups.com


  ///உயர்ந்த ஞானம் ஒரு மொழியில் வெளிப்படுத்தப்பட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கிறது (உள்ளூரிலேயே!).
அங்கீகாரம் எதையும்  எதிர்பாராது  செய்வோர் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.
அதே சமயம், அம்மொழியை தன்  வசமாக்கிக் கொண்டுள்ள பலர் நிறைய செய்திருக்கிறார்கள்.///////

ஏதேனும் ஒன்றைக்க்கூட சொல்ல இயலைவில்லை என்பதால் பதில் இப்படி பட்டும்படாமலும் இருப்பதாக்வே நான் கருதுகின்றேன்.
இந்தி்ய இளைஞர்கள் அறிவில் வீருகொண்டு எழவேண்டும் என்பதுதான் விருப்பம்.

அன்புடன்
பார்த்தசாரதி

2010/1/25 ம ஸ்ரீ ராமதாஸ் <rama...@amachu.net>

--

ம ஸ்ரீ ராமதாஸ்

unread,
Jan 25, 2010, 11:57:35 AM1/25/10
to mint...@googlegroups.com
S.Partha sarathy wrote:
> ///உயர்ந்த ஞானம் ஒரு மொழியில் வெளிப்படுத்தப்பட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கிறது
> (உள்ளூரிலேயே!).
> அங்கீகாரம் எதையும் எதிர்பாராது செய்வோர் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.
> அதே சமயம், அம்மொழியை தன் வசமாக்கிக் கொண்டுள்ள பலர் நிறைய செய்திருக்கிறார்கள்.///////
>
> ஏதேனும் ஒன்றைக்க்கூட சொல்ல இயலைவில்லை என்பதால் பதில் இப்படி பட்டும்படாமலும்
> இருப்பதாக்வே நான் கருதுகின்றேன்.
> இந்தி்ய இளைஞர்கள் அறிவில் வீருகொண்டு எழவேண்டும் என்பதுதான் விருப்பம்.

Yesterday ibnlive had a telecast on Makers of India. One would
definitely answer you.

--

ஆமாச்சு

S.Partha sarathy

unread,
Jan 25, 2010, 12:20:18 PM1/25/10
to mint...@googlegroups.com
ஐயா ரொம்ப கஷ்டப்படவேண்டாம்...பதில் உடனடியாககிடக்கவில்லை என்பதிலிருந்தே நம் நிலமையை நாம் ஒப்புக்கொண்டு முன்னேன்றத்திற்கான வழியைத்தான் நாம் தேடவேண்டும்.


அன்புடன்
பார்த்தசாரதி

2010/1/25 ம ஸ்ரீ ராமதாஸ் <rama...@amachu.net>
S.Partha sarathy wrote:


--

ஆமாச்சு

ம ஸ்ரீ ராமதாஸ்

unread,
Jan 25, 2010, 12:36:34 PM1/25/10
to mint...@googlegroups.com
N. Kannan wrote:
> நமது அடிப்படைப் பிரச்சனைகள் பூதாகாரமாய் இருப்பதால் இவையெல்லாம் அதில்
> அடிபட்டுப் போகின்றன. என்ன செய்ய?
>
> இந்தியா ஐ.டி நாடு என்ற பிரம்மிப்புடன் போயிருக்கும் என் இரு கொரிய
> சகாக்களுக்கும் உடனடி இணையத்தொடர்பு கிடைக்கவில்லை (எந்த ஹோட்டலோ? எந்த
> விமான நிலையமோ?) என்று குற்றம் சொல்லியிருப்பதாக காதிற்கு சேதி வந்தது.
>
வேலையெல்லாம் வெளியிலே போகனும்னு கல்லூரிகளெல்லாம் விழுந்து விழுந்து பயிற்சி தரும்
நாடு! அப்படியிருக்க எதிர்பார்ப்பு கொஞ்சம் டூ மச் ;-)

உள்நாட்டுக்கே உற்பத்திக் குறைவு இருக்கும் போது வெளிநாட்டுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி
செஞ்சுக்கிட்டிருக்கறவங்கதானே நாமெல்லாம். :-)

//நாம் இன்னும் அடிப்படைத் தேவைகளென இணையத்தொடர்பை நினைக்கவில்லையே.
மின்சாரம் எப்போதும் இன்னும் இருப்பதில்லையே..//

When countries like Finland have made broad band a fundamental right ன்னு
சொல்லுங்க ;-)

http://trendsupdates.com/finland-makes-broadband-a-fundamental-right/

ஆனா, இப்போ வயர்லெஸ் ரொம்ப வேகமா பரவிக்கிட்டிருக்கு..

ரிலையன்ஸ் டாடா டிகோனா...

--

ஆமாச்சு

N. Kannan

unread,
Jan 25, 2010, 9:34:44 PM1/25/10
to mint...@googlegroups.com
2010/1/26 ம ஸ்ரீ ராமதாஸ் <rama...@amachu.net>:

> வேலையெல்லாம் வெளியிலே போகனும்னு கல்லூரிகளெல்லாம் விழுந்து விழுந்து பயிற்சி
> தரும் நாடு! அப்படியிருக்க எதிர்பார்ப்பு கொஞ்சம் டூ மச் ;-)
>
> உள்நாட்டுக்கே உற்பத்திக் குறைவு இருக்கும் போது வெளிநாட்டுக்கு வெற்றிகரமாக
> ஏற்றுமதி செஞ்சுக்கிட்டிருக்கறவங்கதானே நாமெல்லாம். :-)
>

ஆமாச்சு:

60-70 களில் அமெரிக்கா உலக நாடுகள் பலவற்றின் உயர் கனவாக இருந்தது.

ஆயின் இந்த ஐடி பூம் வந்த பின் நம் தமிழ் இளைஞர்களை உலகம் முழுவதும் காண
முடிகிறது. அவர்களுக்கு வெளிநாட்டு மாயையெல்லாம் இல்லை. பலர் இந்தியா
திரும்பிக் கொண்டுள்ளார்கள். (திறமையினாலும், திறமை இன்மையினாலும் ;-)

க.>

> //நாம் இன்னும் அடிப்படைத் தேவைகளென இணையத்தொடர்பை நினைக்கவில்லையே.
> மின்சாரம் எப்போதும் இன்னும் இருப்பதில்லையே..//
>
> When countries like Finland have made broad band a fundamental right ன்னு
> சொல்லுங்க ;-)
>
> http://trendsupdates.com/finland-makes-broadband-a-fundamental-right/
>
> ஆனா, இப்போ வயர்லெஸ் ரொம்ப வேகமா பரவிக்கிட்டிருக்கு..
>
> ரிலையன்ஸ் டாடா டிகோனா...
>
> --
>
> ஆமாச்சு
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

karthi

unread,
Jan 25, 2010, 10:08:11 PM1/25/10
to mint...@googlegroups.com
நல்ல கட்டுரைதான். அறிவியல் செய்திக் கட்டுரை. சாதாரண வாசகனுக்காக எழுதப்பட்டுள்ளது.
ஆனால் இதன் முன்னுரையும் முடிவுரையும் கொஞ்சம் மலினமான பிரச்சாரமாக
இருக்கிறது. மிகவும் நம்பிக்கையுடனும் கம்பீரத்துடனும் கண்ணியத்துடனும் எழுதப்பட வேண்டிய
இந்தக் கட்டுரைக்கு இப்படிப்பட்ட தாழ்வு மன்ப்பான்மையை வெளிப்படுத்தும் முன்னுரை முடிவுரை
பொருந்தவில்லை.
 
கோலார் தங்க வயலில் நியூட்ரினோ காணப்பட்ட செய்தி 2012 திரைப்படத்திலும் வந்ததல்லவா?
உலக அறிவியல் நிலப்படத்தில் இந்தியா இடம் பெறும் அளவுக்கு வந்துவிட்ட பின்னர்
இந்த ஓலங்களை நாம் குறைத்துக் கொள்வது நல்லது. முனைவர் கண்ணனும் இதைத்தான்
கூறினார்.
 
ஒரு வேளை தமிழ்நாட்டில் அறிவியல் வளர்ந்த அளவுக்கு தமிழ் இதழியல் வளரவில்லை போலும்.
 
ரெ.கா.
--

karthi

unread,
Jan 25, 2010, 10:09:54 PM1/25/10
to mint...@googlegroups.com
வாலாக ஒரு கேள்வி:
 
தமிழ் நாட்டின் பல்கலைக் கழகங்களில், ஜர்னலிசம்
போதிக்கும் கல்லூரிகளில் பாடங்கள் தமிழில்
நடக்கின்றனவா?
 
தெரிந்தவர் சொல்ல வேண்டுகிறேன்.
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Monday, January 25, 2010 7:50 AM
Subject: [MinTamil] தினமணி - இந்திய அறிவியல் ஓங்கி வளர ஒரு வாய்ப்பு

--

Hari Krishnan

unread,
Jan 25, 2010, 10:13:05 PM1/25/10
to mint...@googlegroups.com


2010/1/26 karthi <karth...@gmail.com>

வாலாக ஒரு கேள்வி:
 
தமிழ் நாட்டின் பல்கலைக் கழகங்களில், ஜர்னலிசம்
போதிக்கும் கல்லூரிகளில் பாடங்கள் தமிழில்
நடக்கின்றனவா?
 
தெரிந்தவர் சொல்ல வேண்டுகிறேன்.
 
ரெ.கா.

என்னது....வரவர ரொம்ப ஜோக்கெல்லாம் அடிக்கத் தொடங்கிட்டீங்க!  (தமிழில் சருனலிசம் நடைபெறுகின்றது என்றெல்லாம் சொல்லி எனக்கு யாராவது மாரடைப்பை ஏற்படுத்திடாதீங்கப்பா...) 


--
அன்புடன்,
ஹரிகி.

karthi

unread,
Jan 25, 2010, 10:21:26 PM1/25/10
to mint...@googlegroups.com
ஹரிகி,
 
தமிழ்நாட்டிலேயே பதிப்பிக்கப்படும் செய்தித்தாள்கள், காலவாரி இதழ்கள் இவற்றில்
மொழியைப் பயன் படுத்துவதில் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் உள்ள வேறுபாடுகளைப்
பார்த்த பின்தான இந்த சந்தேகம். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தமிழ்
செய்தியாளர்களுக்கு தமிழில் செய்தி எழுதும் முறையான பயிற்சி இல்லை
என்றுதான் படுகிறது.
 
ரெ.கா.
 
 
--

Hari Krishnan

unread,
Jan 25, 2010, 10:32:16 PM1/25/10
to mint...@googlegroups.com


2010/1/26 karthi <karth...@gmail.com>

ஹரிகி,
 
தமிழ்நாட்டிலேயே பதிப்பிக்கப்படும் செய்தித்தாள்கள், காலவாரி இதழ்கள் இவற்றில்
மொழியைப் பயன் படுத்துவதில் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் உள்ள வேறுபாடுகளைப்
பார்த்த பின்தான இந்த சந்தேகம். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தமிழ்
செய்தியாளர்களுக்கு தமிழில் செய்தி எழுதும் முறையான பயிற்சி இல்லை
என்றுதான் படுகிறது.
 
ரெ.கா.

ரெகா,

இது இன்னொரு குழுவில், சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு சந்தித்த நண்பருக்கு எழுதிய கடிதம்.  முப்பது வருடங்களுக்கு மு்ன்னால் தொடர்பில் இருந்தோம்.  பிறகு தொடர்பு விட்டுப்போய்விட்டது.  நட்பின் உரிமை அப்படியே இருக்கிறது.  அவரிடம் நான் எழுப்பிய வினாக்களும், அவரளித்த விடைகளும் கீழே தரப்பட்டுள்ளன: 

22.11.2009
 
ஹரிகிருஷ்ணனுக்கு,

சில  நாள்களுக்கு முன் எழுப்பிய சில வினாக்களுக்கு எனக்குத் தெரிந்த விடை இதோ:
 
1 ) எந்தத் தமிழ்ப் பத்திரிகையாளனுக்காவது, பெயர்ச்சொல் வினைச்சொல், வினைவடிவை வினைவடிவாகக் கையாள்வது போன்ற சிறிய சிறிய இலக்கணப் பகுதிகளில் தேர்ச்சி உண்டா கிருஷ்ணா?

பதில்: இல்லை. 99 விழுக்காடு செய்தியாளர்களுக்கு தமிழ் அடிப்படை பயிற்சியே இல்லை. அதனால்தான் அடியேன் ஊடகத் தமிழ் என்று எழுத் வருகிறானே. சில பல்கலைக்கழகங்களுக்கு என் திட்ட அறிக்கையையும் (project report) அளித்துள்ளேன்.

2) கொலைசெய்ய முயற்சி செய்தான் என்றுதான் பெரும்பாலான பத்திரிகைகளில் காணப்படும் போக்கும் வாக்கும்.  யாராவது ஒரே ஒருத்தர் ‘கொல்ல முயன்றான்’ என்று நேரடியாக எழுதத் தெரிந்தவர்கள் பத்திரிகை உலகில் உண்டா கிருஷ்ணா?

பதில்: இந்த வினாவும் சரியானதே. ஆனால் இதழ்களை பொறுத்தவரையில் இடப் பிரச்சினை உள்ளது. அதனால்தான் பல ஆங்கில சொற்கள் கூட சுருங்கி விடுகிறது. தற்கொலை செய்தான், முயற்சித்தான், பயிற்சியாளர் (Trainer) எனப்தெல்லாம் சரியே அல்ல. தற்கொலை செய்துகொண்டான், முயன்றான், பயிற்றுநர் என்பனவே சரி. ஆனால் பல சமயம் அச்சு யந்திரம் நம்மை ஆள்கிறது. தற்போது ககணினி  அதை செய்கிறது.
லை என்ற எழுது பழைய தட்டச்சு யந்திரத்தில் யானை துதிக்கையைப் போல் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், தற்போதுள்ள லை எழுத்தை வெற்றிகரமாக அமல் படுத்தியது தட்டச்சு யந்திரம்தான். அய், ஆனய்  போன்ற அய்யா (ஐயா) பெரியார் கடைப்பிடித்த எழுய்துக்களுக்கு தட்டச்சு யந்திரம் இன்னும் அனுமதி தரவில்லை. அது போல், வீரமாமுனிவர் எழுதுக்கைளை சீர்திருத்தம் செய்யச செய்தது ஒலைசசுவடிதான். யார் கண்டது, எதிர்கால தமிழின் எழுத்து இலக்கணம் யாவற்றையுமே கணினி செய்யுமோ?  ஆனால் இதழியலும் கணிசமாக கைங்கர்யம் செய்யும் என  நினைக்கிறேன். (அதிகம் சொல்லிவிட்டோமோ?)
  
நண்பருடைய பெயர் பா. கிருஷ்ணன்.  தினமணி நாளிதழின் முதுநிலைத் துணையாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றியவர்.  தற்போது டெக்கான் கிரானிகிள் (ஆங்கிலப் பத்திரிகை, சென்னைப் பதிப்பு) பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இடப்பிரச்சினையைத்தான் இவரும் சுட்டியிருக்கிறார் என்றாலும், கொலைசெய்ய முயற்சிசெய்தான் என்பதைக் காட்டிலும் கொல்ல முயன்றான் என்பது குறைவான இடத்தையே பிடிக்கும்; பெண் சிநேகிதிகள் என்பதைக் காட்டிலும் சிநேகிதிகள் என்பது குறைவான இடத்தையே பிடிக்கும்; பெண் ரசிகைகள் என்பதைக் காட்டிலும் ரசிகைகள் என்பது குறைவான இடத்தையே பிடிக்கும் என்பதையெல்லாம்.......போகட்டும் விட்டுவிடுவோம்....நான் இந்தக் கேள்விகளையே எழுப்பவில்லை.  அவரும் இவற்றைப் படிக்கவே இல்லை. :-))
 

vj kumar

unread,
Jan 25, 2010, 10:50:33 PM1/25/10
to mint...@googlegroups.com
i was reading 5 point someone - by Chetan Bagat, one of the fast rising authors in India tdy. His writing is simple and enjoyable. He asks some pertinent questions. in the last 30 years, what is the contribution of the IIT's to scientific research in india -how do we measure them. maybe check number of patents filed by IIT's

rgds
vj
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2010/1/26 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

ம ஸ்ரீ ராமதாஸ்

unread,
Jan 25, 2010, 11:04:40 PM1/25/10
to mint...@googlegroups.com
vj kumar wrote:
> maybe check number of patents filed by IIT's
All patents deserve mass violations :-)

--

Sri Ramadoss M

S.Partha sarathy

unread,
Jan 26, 2010, 12:42:48 AM1/26/10
to mint...@googlegroups.com
   ///ஆனால் இதன் முன்னுரையும் முடிவுரையும் கொஞ்சம் மலினமான பிரச்சாரமாக
இருக்கிறது. மிகவும் நம்பிக்கையுடனும் கம்பீரத்துடனும் கண்ணியத்துடனும் எழுதப்பட வேண்டிய இந்தக் கட்டுரைக்கு இப்படிப்பட்ட தாழ்வு மன்ப்பான்மையை வெளிப்படுத்தும் முன்னுரை முடிவுரை பொருந்தவில்லை.////

       ஐயா, உண்மையான பிரச்சினை சுற்றுச்சூழல் பிரச்சனை அல்ல. சிங்காரா பகுதி மக்கள் அனைவரும் இத்திட்டத்தை வரவேற்கின்றனர்.  ஆனால் இப்பகுதியில் Eco Tourism என்ற பெயரில் சில கம்பேனிகள் பெருந்தொகையை முதிலீடு செய்து உள்ளனர். அவர்கள் சுயலாபத்திற்காகவே யானைக்கு புலிக்கும் (இவர்களது
Eco Tourism திற்கு மூலவர்கள்) பிரச்சினை இருப்பதாக கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர் சிலரை தூண்டிவிடுகின்றனர்.

     சிங்காரவை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் இப்பகுதி மிகக்கடினமான் பாறை. இமையமலைவிட மிகப்பழமை வாய்ந்த்தது. நியூட்ட்ரினோ துகள் எதனோடும் வினைபுரியாது என்பதால் பூமியையும் ஊடுரிவிச்செல்லும் பண்புடையது.  நியூட்டிரினோத் துகள்  உணர்வியின் செயல்திறன் அதிகரிக்கவேண்டுமானால் மற்ற background கதிவீச்சுக்கள் இருக்ககூடாது. என்வேதான் மலையை குடைந்து சுமார் 1கி.மீ. அடியில் உணர்வியை வைக்கின்றனர்.  கோலாரிலும் ஏற்கன்வே சுரங்கம் தோண்டிரிருந்த்தால் முதலில் அங்கு திட்டம் ஆரமிக்கப்பட்டது. சுரங்கம் மூடப்படவும் நியூட்டிரினோ திட்டமும் நின்றது.
பிறகு Geological Survey of India ஆய்வுமேற்கொண்டு பரிந்துரைசெய்த பகுதியில் முதன்மையானதுவே சிங்காரா பகுதி.
சிங்காரவில் ஏற்கனவே தமிழ்நாடு மின்சாரவாரியம் மலையை குடைந்து நீர் மின் திட்டம் செயல்பட்டுவருகின்றது. ( அப்பொழுது Eco Tourism கம்பேனிகள் இல்லையாத்தால் எதிப்பும் இல்லை.) மேலும் திட்டத்திற்கு தேவையான மின்சாரம் நீர் போன்றவற்றிர்க்கும் பிரச்சினை இல்லை.

உணர்ச்சிப்பூர்வமான மக்களிடம் எப்படி அறிவுப்பூர்வமாக் விளக்குவது என்று தெரியாமல் கையை பிசைக்கிக்கொண்டு நிற்கின்றனர் விஞ்ஞானிகள்.

அன்புடன்
பார்த்தசரதி


2010/1/26 karthi <karth...@gmail.com>

karthi

unread,
Jan 26, 2010, 12:46:24 AM1/26/10
to mint...@googlegroups.com
ஹரிகி,
 
தமிழ்ப் பயிற்சி என்பது அடிப்படை மொழி. ஆனால் ஊடக மொழிக்கு என்று
தனிப் பயிற்சி தேவை. பல்கலைக் கழக பத்திரிகைத் துறைகளில் Reporting and Writing
மேலும் Headline Writing ஆகிய வகுப்புக்கள் அடிப்படைப் பயிற்சிகள் ஆகும்.
இவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழில் நடத்துவது மிக முக்கியம்.
இல்லையானால் தமிழ் பத்திரிகைத் துறை trial and error முறையிலேயே தட்டுத்
தடுமாறித்தான் வளரும்.
 
வளருமா? விற்பனை வளரும். மொழி முடங்கும்.
 
தமிழ் நாட்டில் விகடன் பத்திரிகையாளர் திட்டம்தான் கேள்விப் பட்டிருக்கிறேன்.
அது கூட செய்முறைப் பயிற்சி அல்லவா? கல்லூரிகளில் தமிழில் பயிற்சியே
கிடையாதா? ஆச்சரியம்தான்.
 
ரெ.கா.
 
 
----- Original Message -----
Sent: Tuesday, January 26, 2010 11:32 AM
Subject: Re: [MinTamil] தினமணி - இந்திய அறிவியல் ஓங்கி வளர ஒரு வாய்ப்பு



--

ம ஸ்ரீ ராமதாஸ்

unread,
Jan 26, 2010, 1:37:42 AM1/26/10
to mint...@googlegroups.com
S.Partha sarathy wrote:
> ஐயா ரொம்ப கஷ்டப்படவேண்டாம்...பதில் உடனடியாககிடக்கவில்லை என்பதிலிருந்தே நம்
> நிலமையை நாம் ஒப்புக்கொண்டு முன்னேன்றத்திற்கான வழியைத்தான் நாம் தேடவேண்டும்.
>

தேடணும்தான்.. அதே சமயம் தாங்கள் நான் குறிப்பிட்ட நிகழ்ச்சியை காணுங்கள்.. முனை. சதீஷ்
தவனிலிருந்து விடைகள் கிளைக்கும் :-)

--

ஆமாச்சு


Tirumurti Vasudevan

unread,
Jan 26, 2010, 1:47:42 AM1/26/10
to mint...@googlegroups.com
செய்கிறவங்களுக்கு சொல்லத்தெரியலே! சொல்கிறவங்களுக்கு செய்யத்தெரியலே!

2010/1/26 karthi <karth...@gmail.com>

ஒரு வேளை தமிழ்நாட்டில் அறிவியல் வளர்ந்த அளவுக்கு தமிழ் இதழியல் வளரவில்லை போலும்.



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

S.Partha sarathy

unread,
Jan 26, 2010, 2:18:47 AM1/26/10
to mint...@googlegroups.com
///செய்கிறவங்களுக்கு சொல்லத்தெரியலே! சொல்கிறவங்களுக்கு செய்யத்தெரியலே!///
 உண்மைதான் திவாஜி அவர்களே! ஆனால் இழப்பு நாட்டிற்கே.

2010/1/26 S.Partha sarathy <spsar...@gmail.com>

Hari Krishnan

unread,
Jan 26, 2010, 3:07:40 AM1/26/10
to mint...@googlegroups.com


2010/1/26 karthi <karth...@gmail.com>
ஹரிகி,
 
தமிழ்ப் பயிற்சி என்பது அடிப்படை மொழி. ஆனால் ஊடக மொழிக்கு என்று
தனிப் பயிற்சி தேவை. பல்கலைக் கழக பத்திரிகைத் துறைகளில் Reporting and Writing
மேலும் Headline Writing ஆகிய வகுப்புக்கள் அடிப்படைப் பயிற்சிகள் ஆகும்.
இவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழில் நடத்துவது மிக முக்கியம்.
இல்லையானால் தமிழ் பத்திரிகைத் துறை trial and error முறையிலேயே தட்டுத்
தடுமாறித்தான் வளரும்.

தமிழ்நாட்டில் வெளிவந்துகொண்டிருக்கும் முன்னணி தினசரிகளை மேம்போக்காக ஒரு நோட்டம் விட்டாலே போதும்.  நிலைமை என்னவென்று புரிந்துவிடும்.  தினமணி ஓரளவுக்கு விதிவிலக்கு.   
 
வளருமா? விற்பனை வளரும். மொழி முடங்கும்.
 

பத்தீங்காளா?  இதத்தான இவ்ள காலமா கூரைமேல ஏறி நின்றுகொண்டு கூவிக்கொண்டிருக்கிறோம்!   அல்லாரும் ஒர்தபா ஜோரா கை தட்டுங்கப்பா.... எங்க கட்சிக்கு இன்னும் ஒரு ஆள் கிடச்சாச்சு.....:-))

 
தமிழ் நாட்டில் விகடன் பத்திரிகையாளர் திட்டம்தான் கேள்விப் பட்டிருக்கிறேன்.
அது கூட செய்முறைப் பயிற்சி அல்லவா?

என்னது? விகடன் பத்திரிகையாளர் தி்ட்டமா?  ணா... மூலைக்கு மூலை ரிப்போர்ட்டர்ங்களை அனுப்பி செய்தி சேகரிச்சு சிரமப்படாம இருக்க ஒரு எளிய வழிங்ணா அது...  செயல்முறைப் பயிற்சின்னா, யாரு பாடதிட்டம் வச்சிருக்காங்க, யாரு சொல்லிக் கொடுக்கறாங்க?  You must be renamed as Alice and what you are perceiving is a wonderland.    வண்டிச் சக்கரத்துல இருந்து கழற்றின ட்யூபுக்கு கொஞ்சம்போற காத்தடிச்சு (மாணவ நிருபர் அந்தஸ்தை சொல்றேன்) தண்ணிக்குள்ள தள்ளிவிட்டுடறாங்க.  அதுக்கு மேல யாரு, என்ன பயிற்சி கொடுக்கறாங்க, என்ன விளக்கறாங்க, என்ன பாடம், என்ன வழிமுறை, என்ன நடைமுறை, இன்னது செய்தி, இன்னது செய்தி இல்லை என்ற விளக்கம்....இதெல்லாம் நடக்குதுங்கறீங்க? அதுல தப்பித் தவறி ஒரு சிலது தானா தேறிடும்.  

தினமணியில் மூத்த பத்திரிகையாசிரியராகப் பணியாற்றிவர் கொடுத்த வாக்குமூலத்தைப் படிச்சீங்கதானே?

 
கல்லூரிகளில் தமிழில் பயிற்சியே
கிடையாதா? ஆச்சரியம்தான்.

ஆகா. இருக்கிறதே!  கல்லூரிவரைக்கும் தமிழ்ல படிச்சுட்டு வந்தவன்தான் நானும்.  இதோ இப்பவும் தமிழ் வகுப்புகள் நடக்கின்றன.  யாராவது சொல்லிக் கொடுக்கிறார்களா இல்லை யாராவது கற்றுக்கொள்கிறார்களா என்பது மட்டும் தெரியாது. ஆஊன்னா குற்றியலுகரம்னா என்னன்னு தெரிஞ்சனாலதான் நல்ல தமிழ் எழுத முடியுமா என்று பேட்டை வஸ்தாத் கணக்கா கையை மடக்கி மஸில்ஸ் காட்றாங்க. ‘ I leaved him அப்படின்னு எழுதினா மட்டும், அய்யிய்யே...படிப்பே போறலியே! மக்கு முண்டமா இருக்கே’ என்கிறார்கள்.  Seeing sseing there is no using and therefore I stopded. and keepded all my thoughts  in the ceiling shelf.  அக்காங்.  

பாடத்திட்டத்திலிருந்து (மதம் சார்ந்தது என்று காரணம் காட்டி) பல பழைய இலக்கியங்களை நீக்கிவிட்டார்கள் என்று கேள்விப்படுகிறேன்.  நான் பெங்களூரில் இருப்பதால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியாது.  
 


Tirumurti Vasudevan

unread,
Jan 26, 2010, 3:18:10 AM1/26/10
to mint...@googlegroups.com


ஆஊன்னா குற்றியலுகரம்னா என்னன்னு தெரிஞ்சனாலதான் நல்ல தமிழ் எழுத முடியுமா என்று பேட்டை வஸ்தாத் கணக்கா கையை மடக்கி மஸில்ஸ் காட்றாங்க.



2010/1/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

பத்தீங்காளா?  இதத்தான இவ்ள காலமா கூரைமேல ஏறி நின்றுகொண்டு கூவிக்கொண்டிருக்கிறோம்!   அல்லாரும் ஒர்தபா ஜோரா கை தட்டுங்கப்பா.... எங்க கட்சிக்கு இன்னும் ஒரு ஆள் கிடச்சாச்சு.....:-))

B9E.gif
B9E.gif
B5E.gif

தாரகை

unread,
Jan 28, 2010, 7:40:36 PM1/28/10
to மின்தமிழ்
> என்னது....வரவர ரொம்ப ஜோக்கெல்லாம் அடிக்கத் தொடங்கிட்டீங்க! (தமிழில் சருனலிசம் நடைபெறுகின்றது என்றெல்லாம்
> சொல்லி எனக்கு யாராவது மாரடைப்பை ஏற்படுத்திடாதீங்கப்பா...)

பழமை மாறாத இதழியல் பாடங்கள்!

மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) கடந்த மாதம் வெளியிட்ட
தகவலில் 11ம் வகுப்பில் விருப்பப் பாடங்களில் ஒன்றாக "ஊடகம்" என்னும்
புதிய பாடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதழியல் கல்வியில் தில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பியல் கழகம்
நாட்டிலேயே முதன்மையான நிறுவனமாக விளங்குகிறது.

ஆனால், நம் நாட்டில் பெரும்பாலான கல்வி நிலையங்களில் வழங்கப்படும்
இதழியல் படிப்புகள் என்பது புதுப்பிக்கப்படாமல் "பழங்கால"ப்
பாடத்திட்டங்களையே போதிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் பிரபலமாக உள்ள பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர் இதழியல்
படிப்பு படித்தவர்கள் அல்ல.

எனினும் இன்றைய நிலையில், தொலைக்காட்சிகளும், இணைய இதழ்களும்
பெருகிவிட்டதால் தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்களின் தேவை
அதிகரித்துள்ளது.

எனவே, ஊடக நிறுவனங்களில் இதழியல் மாணவர்களுக்கு முன்னுரிமை
வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அத்தகைய படிப்புகளில் ஆர்வத்துடன் சேர வரும் மாணவர்களுக்கு
உரிய கல்வியை வழங்க வேண்டியது அரசு மற்றும் பல்கலைக்கழகங்களின்
கடமையாகும்.

"பத்திரிகைச் சட்டம்" என்ற பாடத்தில் பத்திரிகைச் செய்திகள் தொடர்பான
வழக்கு விவரங்களையும்,சர்ச்சைகளையும் மட்டும் தெரிவிப்பதோடு,

* அரசியலமைப்புச் சட்டம் மற்றும்
* தகவல் உரிமைச் சட்டம்


குறித்து முழுமையான பாடங்களை அறிமுகப்படுத்தலாம்.

மேலும், இணையதளச் சட்டங்கள் குறித்த தகவல்களும் பாடத்திட்டத்தில் அவசியம்
சேர்க்கப்பட வேண்டும்.

"பத்திரிகையாளர் கடமைகள்" என்ற புதியதொரு தனிப்பாடத்தை
அறிமுகப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

ஆம், பத்திரிகையாளர்களுக்கான கடமை மற்றும் பொறுப்புணர்வு குறித்து
அத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்குப் போதிக்கப்படுவது மிகவும் அவசியம்.

நாட்டின் மிகப்பெரிய தனியார் கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படும்
இதழியல் கல்விக்கான கட்டணங்கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த
மாணவர்களால் கட்ட இயலாத அளவுக்கு உள்ளது.

எனினும், இத்தகைய மையங்களில் ஊடகக் கல்வி என்பது பெரும்பாலும் களம்
சார்ந்த பயிற்சியாக இருப்பது பாராட்டுக்குரியது.

சில கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இதழியல் படிப்புகள், சுமார் 10
ஆண்டுகளாக அவற்றின் பாடத்திட்டம் மாற்றப்படாமல் "பழமை"மிக்கதாக உள்ளன.

எனவே, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் படிப்புகள் ஆண்டுதோறும்
புதுப்பிக்கப்பட வேண்டியது மிக அவசியம்.

மேலும், நடைமுறை சார்ந்த மற்றும் களப் பயிற்சிகள் அதிகம் வழங்கப்பட


வேண்டும்.

நாட்டின் முக்கிய ஊடகங்கள் எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டு முன்னணி இடத்தைப்
பிடித்தன என்கிற வரலாற்றையும் வருங்கால ஊடகத்துறையினர் தெரிந்து
வைத்திருப்பது அவசியம்.

எனவே, "பத்திரிகைகளின் வரலாறு" என்ற பெயரில் முழுமையான வரலாற்றைத்
தயாரிப்பதும் அவற்றைப் பல்கலைக்கழகங்கள் பாடமாக வைப்பதும் அவசியம்.

இன்றைய காலத்தில்,

* அச்சுப் பத்திரிகைகள்
* மின்னணு ஊடகங்கள்

என்று பிரிவு சார்ந்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில்
90 சதவீத இதழியல் மாணவர்கள் செய்திகளை இணையதளம் வாயிலாகவே தெரிந்துகொள்ள
விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று,
அப்பல்கலைக்கழகத்தின் ஊடகக் கல்வித்துறை பேராசிரியர் ஆலன் நைட் (http://
en.wikipedia.org/wiki/Alan_Knight_%28academic%29 & http://www.tafe.qld.gov.au)
கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள முன்னணி பயிற்சி நிலையங்களில் "புதிய ஊடகம்" என்று
அழைக்கப்படும் இணைய இதழியலுக்குத் தனிப் படிப்பு உள்ளது.

எனினும், இன்னும் பல பல்கலைக்கழகங்களில் இணையதள ஊடகம் குறித்த பாடங்கள்
அறிமுகப்படுத்தப்படாமல் இருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

இதழியல் படிப்புகளில்

* அரசியல்
* கல்வி
* வணிகம்
* விளையாட்டு
* சினிமா
* குற்ற நிகழ்வுகள்


என்று அனைத்துப் பிரிவுகளுக்கும் சிறப்புப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட


வேண்டும்.

அப்போது தான் ஒரு மாணவர் ஊடகத் துறையில் அனைத்துச் செய்திகளையும்
வழங்கக்கூடிய திறமை பெற்ற பத்திரிகையாளராக ஏற்றம் பெற இயலும்.

50 ஆண்டுகளுக்கு முன்னர், முக்கிய நிகழ்வுகளுக்கு அகில இந்திய வானொலி
செய்தியாளர் உள்பட ஓரிரு செய்தியாளர்களே வருவார்கள்.

ஆனால், இன்று தொலைக்காட்சிகளும், இணையதளங்களும் கணிசமாகப் பெருகிவிட்ட
நிலையில், நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் கூடுகின்றனர்.

சரியான செய்தியை சரியான முறையில் வழங்கப் பயிற்சி பெற்ற
பத்திரிகையாளர்களின் தேவையும் ஊடகங்களுக்கு அதிகரித்திருக்கின்றன.

பத்திரிகையாளர்களுக்குத் தனி நல வாரியம் அமைப்பது குறித்து மாநில அரசு
ஆலோசித்து வருகிற அதேநேரத்தில், இதழியல் கல்வியை நெறிப்படுத்துவது
குறித்தும் அரசு சற்று கவனம் செலுத்த வேண்டும்.

மணிஷ்

karthi

unread,
Jan 28, 2010, 8:54:30 PM1/28/10
to mint...@googlegroups.com
எனக்கு இன்னும் தெளிவாகாத செய்தி, இந்த வகுப்புக்கள்
தமிழில் நடத்தப்படுகின்றனவா அல்லது ஆங்கிலத்திலா என்பதுதான்.
ஹரிகி சொல்வதைப் பார்த்தால் ஆங்கிலத்தில்தான் எனத்
தெரிகிறது.

நான் முன்பு பணிபுரிந்த மலேசியப் பல்கலைக்கழகத்தில் Mass Communication
துறையில் Journalism பிரிவில் அநேகமாக இங்கு குறிப்பிடப்படும்
எல்லாப் பாடங்களையும் நடத்தினோம் (இன்றும் உண்டு).
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை curriculum review நடத்தி எல்லா
வகுப்புக்களையும் பாடத்திட்டங்களையும் மேபடுத்துவதுடன்
காலத்திற்கேற்ப புதிய பாடங்களைச் சேர்த்துக் கொள்வோம்.
முதுகலை அளவில் "அறிவியல் இதழியல்" "சுற்றுச் சூழல் இதழியல்"
எல்லாம் உண்டு. அனைத்தும் மலாய் மொழியில்தான் நடத்தப்படும்.
ஆனால் Writing for the English Language Media என்ற ஒரு வகுப்பு ஆங்கிலத்தில்


நடத்தப்படும்.

இப்போதாவது இந்தியா இந்தத் துறையில் விழித்துக் கொள்வது ஆறுதல்.

ரெ.கா.

தாரகை

unread,
Jan 29, 2010, 1:34:40 AM1/29/10
to மின்தமிழ்
> இப்போதாவது இந்தியா இந்தத் துறையில் விழித்துக் கொள்வது ஆறுதல்.

Below news from Thinakaran (India)

"கற்கும் பாரதம்" திட்டம் அறிமுகம்

தொடர் கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் "கற்கும் பாரதம்" திட்டம்
குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு
அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று
(28/01/10) நடந்தது.

சென்னை பல்கலைக்கழக

வயது வந்தோர் மற்றும் தொடர் கல்வித்துறை
இதழியல் துறை
மாநில கல்விக் கருவூல மையம்

ஆகியவை இணைந்து, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

உயர் நீதிமன்ற நீதிபதி சுகுணா, இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

முறைசாராக் கல்வி மற்றும் வயது வந்தோர் தொடர் கல்வித்துறை இயக்குனர்
இலட்சுமி, சமூக சேவகி ஆயிஷா பர்னாலா சாண்டு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் பேசுகையில், ‘‘அடித்தட்டில்
உள்ள மக்களுக்கு எழுத்தறிவு மட்டும் ஊட்டினால் போதாது, அதனுடன் தொழில்
முறைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

இதுபோன்ற அம்சங்கள் கிராம மக்களை கவரும் என்பதில் ஐயம் இல்லை. ‘கற்கும்
பாரதம்’ என்ற இந்த திட்டம், மதிப்பு கூட்டு திட்டமாக அமைய வேண்டும்’’
என்றார்.

ஆன்லைன் மூலம் இதழியல் படிப்பு:-

சென்னை பல்கலைக்கழக வயது வந்தோர் மற்றும் தொடர் கல்வித்துறை மூலம் கணினி,
எலக்ட்ரிக்கல், பியூட்டி பார்லர் உள்ளிட்ட 10 வகையான புதிய படிப்புகளை
தொடங்க பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு பத்திரிகையாளர்களுக்கு ‘ஆன்லைன்’ மூலம் இதழியல் படிப்புகளை
நடத்தவும் சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது.

கருத்தரங்குகள் நடக்கும் அரங்குகளுக்கு பெயர் சூட்ட சிண்டிகேட் ஒப்புதல்
அளித்துள்ளது.

அதன்படி,

‘எப் 50’ அரங்கத்துக்கு - "தந்தை பெரியார்"
‘ஜி 33’ அரங்கத்துக்கு - "நெ.து.சுந்தரவடிவேலு"
‘எஸ் 20’ அரங்கத்துக்கு - "ஆதிசேஷய்யா"

என்று பெயரிடப்பட்டுள்ளது.

இத்தகவல்களை திருவாசகம் தெரிவித்தார்.

தாரகை

unread,
Jan 29, 2010, 11:25:34 PM1/29/10
to மின்தமிழ்
Tamil journalism courses

A Chennai-based Softview Visual Communication has started courses on
Tamil journalism through the distance mode (by post).

The course is delivered in the form of contact classes, course
materials and exercise book.

The course will cover among others history of printing and journalism;
types of news; Tamil news writing, reporting and editing; journalism
laws and ethics; public relations & media management; photography and
its types; computer tools and aids; focus on Internet and television
media.

The course fee is Rs.1,250.

For details contact telephone numbers 5211 3535 or 98403-94144.

Application forms will be issued till December 31.

Courtesy:- The Hindu (Friday, Nov 11, 2005)

தாரகை

unread,
Jan 29, 2010, 11:28:51 PM1/29/10
to மின்தமிழ்
The beginning of Tamil journalism

S. MUTHIAH

C.R. Srinivasan bought the Whiteaway's building shortly after
Independence and linked the Swadesamitran's fortunes with it. He named
it Victory House, marking the success of the `Quit India' movement.

It is here that one saw the birth of Tamil journalism.

ACROSS FROM D'Angeli's Hotel were two Indo-Saracenic buildings that
were landmarks in Madras throughout the 20th Century. The former no
longer exists, replaced by a typical tasteless highrise, but in its
loss only a bit of the city's architectural heritage has been lost.
The latter underwent one remodelling, and is in the throes of another,
but neither marks the significance of what flourished behind its once-
handsome façade, namely, the beginnings of Tamil Journalism.

The building that vanished was first known as Tawker's Building. The
Tawkers from Gujarat - a family that still calls Madras home - were
the city's leading jewellers in the 19th Century, their business
having been established in the city in 1761, shortly after they
arrived here. The family was equally renowned for its philanthropy. A
trust endowed by two women of the family built the Sri Kasi
Viswanathar Temple in 1805 and the neighbouring Tawker's Choultry in
Ayyanavaram and endowed several other charities. The Choultry was
being used as a students' hostel the last I heard of it, but the
tradition of the Tirupati umbrellas taken to Tirumala from Madras
being kept in the Kasi Viswanathar Temple for the night still
continues.

T.R Tawker and Sons bought the Mount Road site in 1893 and had Henry
Irwin design them a showroom worthy of their jewellery and gem
collection. T. Manavala Chetty, the contractor, built a building to
last; little did he dream that in 80 years, it would be deliberately
pulled down. When the golden era of Tawker's began to dull, the firm
sold the building to the Rajah of Venkatagiri in 1926 who, in turn,
sold it to Kasturi Estates five years later. The South Indian
Cooperative Insurance Society, founded in 1932, bought the property in
1948 and, on the nationalisation of insurance in 1956, it became the
Life Insurance Corporation's. From 1953, Indian Airlines occupied its
ground floor in considerable spaciousness, but when it moved into its
more modern offices in 1979, the LIC, an organisation not the most
sympathetic to heritage or architecture, decided to pull it down. And
so the building came down in 1980 - a classical Irwin design with a
clock almost as famed as P.Orr's lost forever.

Next door remains the building that VGP, those pioneers of consumer
durables' hire purchase, keep remodelling as they refurbish what has
become a giant showroom. Interestingly, the building's beginnings go
back to another merchandiser of consumer products. In the 1890s,
Whiteaway, Laidlaw's, `Furnishers and General Drapers', were as much
into textile retailing and tailoring as they were into selling a whole
range of household requirements. The firm had branches throughout
British India as well as in the capitals of many of the other British
colonies in the East. Looking very much like its neighbour, the
Whiteaway's building could very likely have been built around the same
time as the Tawker's Building by the same team. But where it got the
name it became known by, Victory House, is something I have not been
able to discover with any certainty.

A story I've heard is that when C.R. Srinivasan bought the building
shortly after Independence and linked the Swadesamitran's fortunes
with it he named it Victory House, marking the success of the `Quit
India' movement. Others hold that it's an older name, going back to
Whiteaway's commemorating the Allied victory in the Great War.
Whatever the reality, it is as the home of the Swadesamitran that I
knew Victory House, even if most of the activities of that pioneering
Tamil daily took place well behind the handsome Mount Road façade.

Rajavritti Bodhini and Dina Varthamani in 1855 and Salem Pagadala
Narasimhalu Naidu's fornightlies, Salem Desabhimini in 1878 and
Coimbatore Kalanidhi in 1880, were the earliest Tamil journals. But in
1882 there arrived on the Tamil publishing scene a journal that would
transform Tamil Journalism. It was started by G. Subramania Aiyer, the
Founder-Editor of The Hindu, while he was still with the paper he had
founded. He was more familiar with English, but he was to hone his
Tamil with the Swadesamitran; in the event he was never to become a
great Tamil writer, but he created a whole new Tamil political
vocabulary. His foray into Tamil journalism was to be later explained
by Narasimhalu Naidu so: "(He) was conscious that those with a
knowledge of English are a small number and those with a knowledge of
Indian languages the vast majority. He felt that unless our people
were told about the objectives of British rule and its merits and
defects in the Indian languages, our political knowledge would never
develop." Subramania Aiyer, an Anglophile in his early years, saw
himself as a bridge of understanding and communication between the
ruler and the ruled.

When Subramania Aiyer quit The Hindu 1898, feeling so fettered by his
partner that he could not wage his impassioned campaigns for social
reforms, he made the Swadesamitran his full-time business. Operating
from premises at the rear of Whiteaway's, he made it a thrice-weekly
paper, then, in 1899, the first Tamil daily. It was to enjoy this
status for 17 years - and even thereafter did not meet any real
challenge till Swararajya started in 1925, Tamil Nadu in 1927 and
Dinamani in 1934, but they too were unable to shake the
Swadesamitran's primacy till the 1950s.

Subramania Aiyer's "pugnacious style, never qualifying words to soften
the sharp tenor of a sentence," his use of words "dipped in a paste of
extra pungent green chillies," made the Swadesamitran sought by the
zamindars and the plutocrats by the "Sanga Boyans and the Rama Boyans"
as well as women and Tamils wherever they lived in the world. And the
daily became even more popular when Subramania Bharati joined it in
1904. But with two heavyweights, something had to give way and Bharati
left in 1906 to start his weekly, India. The next year, when Lala
Lajpat Rai was arrested and agitation followed in the Punjab,
Subramania Aiyer's attitude to the British changed and he became a
trenchant political critic of the Raj. Arrested in 1908 for sedition,
he broke when faced with hard labour and was a beaten man thereafter.
Nevertheless, Bharati in 1914 wrote of him, "unaided he has made Tamil
Journalism a fact of the world in spite of his imperfect early
training in Tamil. ... They win who dare; Mr. Aiyer dared and he has
succeeded in establishing a Tamil daily journal which, with all its
faults, is the most useful paper in the Tamil country. His whole
political gospel can be summed up in these words: `Peaceful but
tireless and unceasing effort.' Let us sweat ourselves into Swaraj, he
would seem to say."

Seriously ill in 1915, Subramania Aiyer persuaded A. Rangaswami
Iyengar, Kasturi Ranga Iyengar's nephew and right-hand man at The
Hindu, to take over the paper and he made the Swadesmitran "a new
force, potent and pervasive... (changing) the placid atmosphere of
Tamil Journalism". Rangaswami Iyengar brought in his kin C.R.
Srinivasan to manage the business end of the paper and Bharati, back
from Pondicherry, rejoined the paper in 1920. The three made the
Swadesamitran " a literary masterpiece of political analysis."

When Rangaswmi Iyengar returned to The Hindu in 1928 to become a
memorable editor, Srinivasan bought him out. And the readers of the
Swadesamitran discovered what a trenchant writer Srinivasan could be.
He made the paper such a success that he could buy the Whiteaway's
building and make it better remembered as the home of the
Swadesamitran. But after his death in 1962, the paper began to fade,
especially in the face of the `new journalism' introduced by the Dina
Thanthi. And by the 1970s, the end was inevitable, a sad end to a
paper that had created Tamil Journalism.

Courtesy:- The Hindu (Wednesday, Jul 23, 2003)

தாரகை

unread,
Jan 29, 2010, 11:35:22 PM1/29/10
to மின்தமிழ்
Periyar University Admissions - Diploma in Journalism & Mass
Communication (Tamil Medium only)

Periyar University
Bangalore Main Road
Salem 636 011
Tamilnadu INDIA
Phone No:+91-427-2345766,2345520,2346277,2346265-69(5 lines).
Fax No :VC Office: +91-427 2345565
Registrar Office: +91-427 2345124
Distance Education: +91-427 2345258

தாரகை

unread,
Jan 29, 2010, 11:39:10 PM1/29/10
to மின்தமிழ்
Annamalai University PG/Post Diploma and Diploma Programmes

Duration: One year

Diploma in Tamil Journalism (Tamil Medium)

தாரகை

unread,
Jan 29, 2010, 11:45:18 PM1/29/10
to மின்தமிழ்
Madurai Kamaraj University, Directorate Of Distance Education,
Madurai, Tamil Nadu

The Director, Directorate of Distance Education, Madurai Kamaraj
University, Palkalai Nagar, Madurai - 625 021

Phone:- +91-452-2458471, 2458932
Fax : +91-452-2458265

M.A Mass Communication & Journalism
Eligibility:- Any Degree
Duration:- 2 years
Medium:- English & Tamil

Post Graduate Diploma In Journalism & Mass Communication (PGJMC)
Eligibility:- Any Degree
Duration:- 1 year
Medium:- English & Tamil

M.Phil Journalism

M.Phil JMC

Eligibility:- PG in JMC, M.A. in Communication / Journalism and Mass
Communication, Master of Communication and Journalism, Master of
Journalism, M.A. Tamil (with one paper in Journalism / Communication),
M.A. English Lit. (with one paper in Journalism / Communication),
M.A., M.S. or M.Sc. in Mass Communication / Communication /
Development Communication, M.Sc. in Electronic Media, M.A. / MFA
(Master of Fine Arts), M.Sc. in Visual Communication, M.A. in
Sociology (with a paper on Sociology of Communication / Media and
Society), Master Degree in any subject with a university PG Diploma in
Journalism / Communication or a PG Diploma in Journalism /
Communication awarded by any reputed institution such as the Indian
Institute of Mass Communication, the Asian College of Journalism and
the Bharathiya Vidhya Bhavan.

Duration:- 1 year

Medium:- English, Tamil


தாரகை

unread,
Jan 30, 2010, 12:01:53 AM1/30/10
to மின்தமிழ்
Article from Webdunia

இதழியல் துறையில் சாதிக்கலாம் வாங்க...

முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஏணியாக பல்வேறு துறைகளில் ஏராளாமான
வேலைவாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. அவற்றுள் முக்கியமானது இதழியல்
துறையும் ஒன்று.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக வர்ணிக்கப்படும் பத்திரிக்கை, தொலைக்காட்சி
போன்ற ஊடகத்துறைகள் இன்றைய இளைஞர்களுக்கு பணத்தை மட்டும் தருவதுடன்
பெயரையும் புகழையும் சம்பாதித்துத் தருகின்றன.

இத்துறையில் சாதிக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? இதோ உங்களுக்காக...

தற்போதுள்ள காலகட்டத்தில் இதழியல் துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

* ஒன்று அச்சு ஊடகத்துறை
* மற்றொன்று மின்னணு ஊடகத்துறை.


இதில் அச்சு ஊடகத்துறை என்பது அச்சில் வெளிவரக்கூடிய தினசரி, வார, மாத
இதழ்களைக் குறிக்கிறது.

இவற்றில் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியருக்குக் கீழ்

* உதவி ஆசிரியர்கள்
* நிருபர்கள்
* சிறப்பு செய்தியாளர்கள்
* பத்தி எழுத்தாளர்கள்


என்ற இனங்களில் பணி புரிய வாய்ப்புகள் உண்டு.

இதுதவிர,

* கார்ட்டூனிஸ்ட்
* புகைப்படக் கலைஞர்
* பிழை திருத்துனர்
* வரைகலை வடிவமைப்பாளர்
* பக்க வடிவமைப்பாளர்


என பல வேலைகளும் இதில் உள்ளன.

மின்னணு ஊடகத்துறை என்பது

* தொலைக்காட்சி
* வானொலி
* இணைய தளம்


போன்ற ஊடகங்களை உள்ளடக்கியது.

அச்சு ஊடகத்துறையில் இருந்து இது வேறுபட்டது; நவீனமயமானதும் கூட.

மின்னணு ஊடகங்களில்

* ஆசிரியர்
* உதவி ஆசிரியர்கள்
* நிருபர்கள்
* புகைப்படக் கலைஞர்கள்
* ஒளி - ஒலிப்பதிவாளர்கள்
* தொழில்நுட்பக் கலைஞர்கள்
* செய்தி வாசிப்பாளர்
* இணையத்தில் பக்க வடிவமைப்பாளர்
* அரங்கு அமைப்பாளர்


என பல்வேறு வகைகளில் வேலைவாய்ப்பு உள்ளன.

இன்றை கால கட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் தேவை அதிகரித்த வண்ணம்
உள்ளன.

அதற்கேற்ப எளிதான, பரந்த வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன.

ஒரு காலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வானொலி, தொலைக்காட்சிகள்
மட்டுமே தகவல் அறிய உதவும் சாதனங்களாக இருந்தநிலை, இன்று தலைகீழாக
மாறியிருப்பது ஒன்றே, இத்துறையில் வளர்ச்சியை காட்டுகிறது.

இதழியல் துறையில் அவரவர் பதவி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் கிடைக்கிறது.
பேனாவும், புகைப்படக் கேமராவும் மட்டும் இருந்தால் போதும் என்று
எண்ணக்க்கூடாது.

நடப்பு விவகாரங்கள் உட்பட

* அனைத்து துறைகள் சார்ந்த அறிவும்
* தெளிவான கண்ணோட்டமும்
* எளிய மொழி நடையும்
* கருத்துக்களை துணிவுடன் வெளியிடக்கூடிய மனப்பாங்கும்
* எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும்


இத்துறைக்கு இன்றியமையாதது.

நேரம்,காலம் கருதாமல் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டியதும்
பத்திரிக்கையாளர்களின் கடமை.

அரசு வகுத்துள்ள நெறிகளின்படி நிருபருக்கு குறைந்த பட்சம் ரூ.5,500 ல்
இருந்து 10,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. மூத்த நிருபருக்கு இந்த
ஊதியம் மேலும் அதிகரிக்கிறது.

உதவி ஆசியர் பணிக்கு ரூ.8,000 என்று தொடங்கி ரூ.15,000 ஆயிரம் வரை
கிடைக்கிறது.

அனுபவம், தகுதி போன்றவற்றின் அடிப்படையில் இது மேலும் அதிகரிக்கும்.

பணி புரியும் நிறுவனங்களைப் பொறுத்து இந்த ஊதியம் வேறுபடுகிறது. தற்போது
இத்துறையில் போட்டி அதிகரித்திருப்பதால், பத்திரிக்கையாளர்களின் ஊதியமும்
அதற்கேற்ப அதிகரித்து வருகிறது.

மேலும் பயணப்படி, தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட பிற சலுகைகளும்
பத்திரிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

பலதரப்பட்ட பிரமுகர்களோடு பழகும் வாய்ப்பு, இத்துறையில் பணி
புரிபவர்களுக்கு கிடைக்கும் சாதகமான அம்சம் ஆகும்.

நாட்டில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் இதழியல்
பாடங்கள் உள்ளன.

தமிழகத்தில்,

* சென்னைப் பல்கலைக்கழகம்
* மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
* பாரதிதாசன் பல்கலைக்கழகம்


உள்ளிட்ட பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இதழியல் பட்டப் படிப்புகள்,
பட்டயப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

என்ன,சவால் நிறைந்த இதழியல் துறையில் அடியெடுத்து வைத்து சாதிப்பதற்கு
நீங்கள் தயாரா?

தாரகை

unread,
Jan 30, 2010, 12:08:23 AM1/30/10
to மின்தமிழ்
இதழியல் மாணவர்களின் வலைப்பதிவு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இதழியல் துறையில் முதுகலைப்
பட்டப் படிப்பை இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு செய்யவிருக்கும்
மாணவர்கள் புதியவலைப்பதிவைத் http://tnmediawatch.blogspot.com/
தொடங்கியிருக்கிறார்கள். (தமிழ் ஊடகங்கள் வெளியிடும் விதம் குறித்த
பல்கலைக் கழக இதழியல் மாணவர்களின் விமர்சனப் பதிவு)

"எங்களின் பட்ட மேற்படிப்பில் ஊடக ஒழுக்கங்கள் குறித்து கற்று வருகிறோம்.
இதில், அற ஒழுக்கங்கள் குறித்தும், ஊடகச் சட்டங்கள் குறித்தும் படித்து
வருகிறோம். தேர்தல் வேளையில், தமிழ் நாளிதழ்கள் எவ்வாறு செய்திகளை
வெளியிடுகின்றன என்பது குறித்து ஆராய்வதே எங்களின் முக்கிய நோக்கம்.

குறிப்பாக, துல்லியம், பக்கம் சாராமை, நியாயமுடன் செய்திகளை வெளியிடுதல்
போன்ற அடிப்படை விஷயங்களில் தமிழ் நாளிதழ்கள் என்ன விதமான போக்கினைக்
கையாண்டு வருகின்றன என்பதைக் கண்டுணர்வதே எம்முடைய
அக்கறையாக இருக்கும்.

இது, தமிழ் நாளிதழ்களைப் புரிந்து கொள்ள எமக்குப் பெரிதும் உதவும் என்று
நம்புகிறோம்."

இந்த வலைப்பதிவைத்தொடர்நது படித்து கருத்துக்கள் சொல்வது மாணவர்களின்
வளர்ச்சிககு உதவும. எனவே அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்.

தாரகை

unread,
Jan 30, 2010, 12:15:29 AM1/30/10
to மின்தமிழ்
Sample of the course notes fro Tamil Journalism at Bharathithasan
University webpage - http://ve.bdu.ac.in:8080/tamil/mat/matt09/html/mat09001eap1.htm

karthi

unread,
Jan 30, 2010, 3:49:14 AM1/30/10
to mint...@googlegroups.com
Taragai,

Thanks for the bunch of mails on Tamil Journalism.
Very helpful for a paper I am writing for Chemmozhi
Conf. at Coimbatore. Exactly what I was looking for.

Thanks again.

Re.Ka.


----- Original Message -----
From: "தாரகை" <thar...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>

--

Reply all
Reply to author
Forward
0 new messages