தமிழகத்தில் ஓலைச்சுவடி தேடும் திட்டம் - தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் செய்து முடித்த திட்டம்

135 views
Skip to first unread message

Suba.T.

unread,
Jan 29, 2015, 2:24:08 AM1/29/15
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக முக்கியமான, மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான ஒரு செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. அதனை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மன மகிழ்கின்றேன்.

2009ம் ஆண்டின் இறுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ஓலைச்சுவடி தேடும் திட்டத்திற்காக  வழங்கப்பட்ட நிதிக்கு கால அவகாசம் முடியும் தருவாயில், வழங்கப்பட்ட நிதி திருப்பி அனுப்ப வேண்டிய சூழலில் அப்போதைய துணை வேந்தரும்  கணையாழி ஆசிரியருமான டாக்டர்.ம.ராஜேந்திரன் அவர்களுடன் பேசியதில் தமிழ் மரபு அறக்கட்டளை  இந்தப் பணியை பல்கலைக் கழகத்துடன் இணைந்து செய்யும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டோம்.

அதன் அடிப்படையில் நமது அறக்கட்டளை சார்பாக நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளம், உதவித் தொகைகள் என்ற வகையில் நிர்ணயித்து இத்தேடுதல் பணியில் நமது நண்பர்களான திரு.அண்ணாமலை சுகுமாரன், செல்வமுரளி இருவரையும் நான் இப்பணிக்குப் பரிந்துரை செய்தேன். அதன் அடிப்படையில் பல்கலைக்கழக ஊழியர்களின் துணையோடு நமது பிரதினிதிகள் முக்கியப் பங்காற்றும் வகையில் திட்டங்களை வகுத்தோம். 

முதல் கட்டமாக இப்பணி 2010ம் ஆண்டில் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் இறுதி வரை நிகழ்த்தப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் நமது இரண்டு பிரதிநிதிகளுக்கும் நான்  ஏற்பாடு செய்திருந்த மாதச் சம்பளத் தொகை வருவதில் பல்கலைக்கழக் சூழலில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டது. இது அடுத்தடுத்த மாதங்களில் பிரச்சனையை அதிகரிக்க, ஒரு குறிப்பிட்ட தொகையை நமது பிரதி நிதிகளுக்கு நானே எனது சொந்தப் பணத்தில் அனுப்பி வைத்தேன். அதில் செல்வ முரளிக்கு மிகக் குறிவான ஒரு தொகை மட்டுமே 2 மாதங்கள் கிடைக்க 3வது மாதம் சம்பளம் இன்றியே அவர் பணியாற்றினார்.

நிர்ணயித்த மாதச் சம்பளம் வராத நிலையில் பணியைத் தொடர்வது சாத்தியமன்று என்பதை உணர்ந்து மேமாதம் இப்பணியைத் தற்காலிகமாக நிறுத்தினோம்.  செம்மொழி மாநாடு முடிந்து நான் சென்னையிலிருந்து திரும்பும் முன்னர் மீண்டும் துணை வேந்தரை சந்தித்து இது குறித்து பேசி இப்பணியை மீண்டும் சீரியஸாக தொடங்கும் வேலையை தொடக்கினேன். செல்வமுரளியின் தொழில் பாதிக்கும் என்ற நிலையில் திரு.அண்ணாமலை சுகுமாரன் அவர்கள் மட்டும் பல்கலைக்கழக ஊழியர்களுடன் சென்று களப்பணி ஆற்றுவது என முடிவெடுத்தோம்.

அதன் அடிப்படையில் மீண்டும் இப்பணி ஆகஸ்டு மாதம் தொடங்கியது. நவம்பர் மாத இறுதியில் நிறைவாக்கினோம். 

அதன் பின்னர் அச்சுவடிகளின் மின்னாக்கம் பற்றி பல கடிதத் தொடர்புகளை மேற்கொண்டேன். பலரைச் சந்தித்து இப்பணிகள் தொடர என் சக்திக்கு இயன்ற வகையில் முயற்சித்தேன். இதில் எனக்கு மிக உதவியாக மறைந்த ஆண்டோ பீட்டர், முனைவர் அருள் நடராசன் அவர்களின் உதவி அமைந்தது. 

கடந்த ஆண்டு இவ்வோலைகளின் மின்னாக்கப்பணிகள்  தமிழ் கல்விக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். இது பற்றிய எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் தமிழப் பலகலைக்கழகத்தினால் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளித்தது. 

முறையான தயாரிப்புக்களை மேற்கொண்டு தமிழ் கல்விக் கழகத்தின் இயக்குனர் டாக்டர். நக்கீரனை நேரில் சந்தித்து இது பற்றி விரிவாகப் பேசியதில் நல்ல விளைவுகள் ஏற்பட்டுள்ளன. 

இதன் அடிப்படையில் தமிழ் கல்விக் கழகத்தின் வலைப்பக்கத்தில் அதாவது  நமது இத்திட்டத்தின் வழி சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் மின்னாக்கம் செய்யப்பட்டு வலையேற்றம் செய்யப்படும் அதே வலைத்தளத்தில் நமது முயற்சி பற்றிய விரிவான விளக்கம் கொண்ட பகுதி தமிழ் கல்விக் கழகத்தின் வலைப்பக்கத்திl இணைக்கப்படுள்ளது. 

இதன் வழி இந்த முயற்சிக்கு இதுவரை நாம் எதிர்பார்த்த பலன் கிட்டியுள்ளது. நமது பணிக்கான அங்கீகாரம் முறையாக வழங்கப்பட்டுள்ளது.

இப்பணியில் நம் சார்பில் களப்பணியில் ஈடுபட்ட  திரு.அண்ணாமலை சுகுமாரன், செல்வமுரளி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை நான் இவ்வேளையில் சமர்ப்பிக்கின்றேன்.

எனக்கு பல வேளைகளில் உறுதுணையாக் இருந்த மறைந்த அன்பர் ஆண்டோ அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது.

இப்பணீ நடந்து கொண்டிருக்கும் போது ஒரு காலகட்டத்தில் இப்பணிக்காக எனக்கு 20 லட்சம் பணம் கிடைத்ததாக ஒரு சிலர் அதிலும் நமது நண்பர்கள் வட்டாரத்திலேயே பொய்யான பிரச்சாரத்தை கிளப்பினர். அப்போது மனம் உடைந்து போனேன்.  அக்கால கட்டங்களில் எனக்கு பக்க பலமாக இருந்த திரு.சுந்தர் பரத்வாஜ், டாக்டர்.மா.ரா. டாக்டர்.நா.கண்ணன் ஆகியோரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் நன்றி செலுத்த கடமை பட்டுள்ளேன்.

இப்போது http://www.tamilvu.org/tdb/tdbindex/tdbindex_06.htm  பக்கத்தில் இப்பகுதி இணைக்கப்பட்டுள்ளது.


​ 




இப்பணியின் வாயிலாக தமிழ் மரபு அற்க்கட்டளை 96,000 சுவடிகளை தமிழகத்தின் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் தேடுதல் பணியை நிகழ்த்தியதன் வழி சேகரித்து வழங்கினோம்.


அன்புடன்,
சுபாஷிணி
துணைத்தலைவர், தமிழ் மரபு அற்க்கட்டளை






--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba.T.

unread,
Jan 29, 2015, 2:24:59 AM1/29/15
to மின்தமிழ், Subashini Tremmel


தமிழ் மரபு அறக்கட்டளையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளும் ஓலைச் சுவடிகள் தேடும் பணி

 

 

                 

 

 

 

தமிழ் மரபு அறக்கட்டளை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 18.12.2009 அன்று செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் கட்ட நடவடிக்கையாக தனியார் வசம் பாதுகாக்கப்பட்டு வரும் பனை ஓலைகளைத் தேடும் பணி ஜனவரி முதல் வாரத்திலிருந்து தொடங்கப்பட்டது.  ஜனவரி மாதம் ஏற்பாட்டு வேலைகளும் அதனைத் தொடர்ந்து பிப்ரவரி, மார்ச்சு மாதங்கள் நேரடி களப்பனிகளும் மேற்கொள்ளப்பட்டன.

 

 

 

 

படத்தில்:  முனைவர்.ஜெயக்குமார், திரு.சுகுமாரன், திருமதி சுபாஷினி ட்ரெம்மல் (துணைத்தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை),  முனைவர்.ராசேந்திரன் (துணை வேந்தர்,  தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்),  முனைவர்.கார்த்திகேயன் (பதிவாளர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்),  முனைவர்.மாதவன் (சுவடிப்புலத்தலைவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்)

திகதி: 18.12.2009

 

 

தனியார் வசமுள்ள ஓலைச் சுவடிகள் தேடும்  பணியின் முதல் திட்டம்:

 

இந்த முதல் கட்டப் பணியில் தமிழகத்தின் சில இடங்கள் தேந்த்தெடுக்கப்பட்டு இப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதிநிதிகளாக  திரு.சுகுமாரன், திரு.செல்வமுரளி இருவரும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தற்காலிக ஊழியர்களாக இந்தத் திட்டம் நடைபெறும் வரை பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்களுடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக சுவடிப்புல ஆசிரியர் முனைவர்.கோவை மணி அவர்களும் முழுதுமாக இந்த்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

 

 

களப்பணியின் போது திரு.சுகுமாரன்

 

 

முதல் கட்ட களப்பணிக்காக தேர்ந்தெடுக்கபப்ட்ட இடங்கள் :

  • திருவள்ளூர்
  • சென்னை
  • காஞ்சிபுரம்
  • காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதூர்
  • காஞ்சிபுரம் -  உத்தரமேரூர்
  • நாமக்கல்
  • கொல்லி மலை
  • திருநெல்வேலி
  • கண்யாகுமரி
  • நாகர்கோவில்

 

இவற்றில் சுவடி நூல்கள் உள்ளவர்களில் இல்லங்கள் ஒவ்வொன்றாகச் சென்று அவர்களுடன் கலந்துரையாடி சுவடி பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்து மின்பதிப்பு சுவடி நூல் ஆய்வு எனும் வகையில் விழிப்புணர்ச்சியையும் இந்த நடவடிக்கையின் வழி மேற்கொண்டனர் இம்மூவரும். சுவடி நூல்களை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்து சுவடிப்புலத்தில் பாதுகாப்பதின் வழி முறையாக  ஆய்வு செய்ய உதவும்  என நினைப்பவர்களிடமிருந்து மட்டும் இச்சுவடி நூல்கள் பெற்று வரப்பட்டுள்ளன.

 

 

களப்பணியின் போது திரு.கோவை மணியுடன் திரு.செல்வ முரளி

 

இதுவரை  பொது மக்களிடமிருந்து பெற்று வரப்பட்ட பனை ஓலை சுவடி நூல்களில் :

  • மருத்துவம்
  • தமிழ் இலக்கியம்
  • கதைகள்
  • ஓவியங்கள்
  • குடும்ப குறிப்புக்கள்
  • குடும்ப கணக்கு விபரங்கள்
  • இலக்கண நூல்
  • குற்றாலக் குறவஞ்சி
  • ஆருடம்
  • சோதிடம்
  • நஞ்சு முறிவு
  • மாட்டு வைத்தியம்
  • சைவ நூல்கள்
  • வைஷ்ணவ நூல்கள்
  • நிகண்டு
  • சிலப்பதிகாரம்
  • மாந்த்ரீகம்
  • தல புராணங்கள்

 

என பல விதமான் நூல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

 

பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட இந்த சுவடி நூல்கள் அனைத்தும் உடனுக்குடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்து சுவடிப்புலத்தில் உடன் சேர்ப்பிக்கப்பட்டுள்ளன.  இவை முறையே தூய்மை செய்யப்பட்டு, மின்பதிப்பு செய்யப்பட்டும, அப்குக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

 

 இதுவரை சேகரிக்கப்பட்ட ஓலை நூல்கள் பகுதி வாரியாக:

 

எண்பகுதிஇடம்ஓலை எண்ணைக்கைகுறிப்பு
1திருவள்ளூர், சென்னைபழவேர்க்காடு300இலக்கியம், மருத்துவம்
2காஞ்சிபுரம்ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர் 8,400  மருத்துவம், ஆரூடம்,  அருணாசல புராணம், நாலடியார், சில தமிழ் இலக்கியங்கள்
3நாமக்கல், கொல்லி மலை  12,550வெவ்வேறு வகை
4திருநெல்வேலி  3090 சகாதேவன் வாகடம், விஷ்ணு சகஸ்ரநாமம், குற்றாலக் குறவஞ்சி, தொடுகுறி சாஸ்திரம், காப்பியம், ராமாயணம், மார்கண்டேய புராணம், சித்திர குப்த புராணம், திருமண வாழ்த்து, மருத்துவம்
5கன்யாகுமரி  700இலக்கியம், நெல்லியின் கதை
6பாளையங்கோட்டை  70 
7நாகர்கோவில்  1775விஷக்கடி மருந்து, மருத்துவம், மாந்திரீகம்
     

 

 

முதல் கட்ட தேடுதல் பணியில் சேகரிக்கப்பட்ட பனை ஓலைகள்:  26,885

 


 

தமிழகத்தில் ஓலைச்சுவடி தேடுதல் பணி - இரண்டாம் கட்ட தேடுதல் பணி

 

இந்த இரண்டாம் கட்ட  ஓலைச்சுவடி தேடுதல் பணி ஆகஸ்டு 2010 தொடங்கி நவம்பர் 2010 வரை நடைபெற்றது.  இப்பணியில் தமிழ் மரபு அறக்கட்டளயைப் பிரதிநிதித்து திரு. சுகுமாரன் அவர்கள் இத்தேடுதல் களப்பணியின் குழுவுக்குத் தலைமை பொறுப்பேற்றார்.  இந்த நான்கு மாதங்களில் தமிழகத்தின் கீழ்க்காணும் பகுதிகளில் ஓலைச்சுவடி தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

  • விருது நகர்   மாவட்டம்
  • தூத்துக்குடி    
  • கன்னியாகுமரி       
  • தேனீ மாவட்டம்           
  • திண்டுக்கல்           
  • சிவகங்கை          
  • ராமநாதபுரம்             
  • காஞ்சிபுரம்    

 

இந்த தேடுதலில் இடங்கள் வாரியாக கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடி கட்டுக்கள் அதில் உள்ள ஓலைகளின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் வருமாறு:

 

 இடங்கள்கட்டுகள்ஓலைகளின் எண்ணிக்கை
1.விருது நகர்   மாவட்டம்                                    237 36,053
2.தூத்துக்குடி                                                                797261
3.கன்னியாகுமரி                                                       4       630
4.தேனீ மாவட்டம்                                                         13850
5.திண்டுக்கல்                                                                    648918
6.சிவகங்கை                                                              3    120
7.ராமநாதபுரம்                                                                 9500
8.காஞ்சிபுரம்                                  340
9.விருது நகர் -தூத்துக்குடி                                              5000

 

பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட இந்த சுவடி நூல்கள் அனைத்தும் உடனுக்குடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்து சுவடிப்புலத்தில் உடன் சேர்ப்பிக்கப்பட்டுள்ளன.  இவை முறையே தூய்மை செய்யப்பட்டு, மின்பதிப்பு செய்யப்பட்டும, பகுக்கப்பட்டு பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழக சுவடிப்புலத்து ஆழ்வாளர்களால் ஆய்வு செய்யப்படும்.

 

இரண்டாம் கட்ட தேடுதல் பணியில் சேகரிக்கப்பட்ட பனை ஓலைகள்:  59,372

 

07-Feb, 2011

சுபாஷினி ட்ரெம்மல்

[துணைத் தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை]

Pandiyaraja

unread,
Jan 29, 2015, 2:30:09 AM1/29/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
பாராட்டுக்கள் சுபா அம்மையீர்.
>>
இப்பணியின் வாயிலாக தமிழ் மரபு அற்க்கட்டளை 96,000 சுவடிகளை தமிழகத்தின் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் தேடுதல் பணியை நிகழ்த்தியதன் வழி சேகரித்து வழங்கினோம்.<<
>>
சில குறிப்பிட்ட மாவட்டங்களில்<<
இன்னும் பல மாவட்டங்களில் செய்யவேண்டிய பணி நிறைய இருக்கிறதே. யார் செய்வர்?
செய்திக்கு மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 29, 2015, 2:34:26 AM1/29/15
to mint...@googlegroups.com
தகவல் அறிய மிக்க மகிழ்ச்சி. தங்கள் இடையறா முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
சொ.வி

On 1/29/15, Suba.T. <ksuba...@gmail.com> wrote:
> வணக்கம்.

Ranjani Narayanan

unread,
Jan 29, 2015, 2:34:29 AM1/29/15
to mintamil
உங்களது உற்சாகமான, மனம் தளராத  பணிக்குப் பாராட்டுக்கள். தமிழ் உள்ளவரை உங்கள் பணிகள் போற்றப்படும். 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

shylaja

unread,
Jan 29, 2015, 3:28:05 AM1/29/15
to mintamil
கடின உழைப்பின்றி இதெல்லாம் சாத்தியமே இல்லை...சுபாவின் அரிய பணிக்கு  உளம் நிறைந்த  பாராட்டுக்கள்! 
 
அன்புடன்
ஷைலஜா

///கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று 
காட்டுமறைகளெல்லாம் – நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு 
அவங்கள் புரிவீரோ.//...
பாரதி .

தேமொழி

unread,
Jan 29, 2015, 3:42:51 AM1/29/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
பாராட்டுகள் சுபா ....

இத்திட்டத்தில் பங்கேற்ற த ம அ குழுவினர் அனைவருக்குமே பாராட்டுகள்.


இப்போது http://www.tamilvu.org/tdb/tdbindex/tdbindex_06.htm  இலும் இணைக்கப்பட்டுள்ளதைப் பார்ப்பது மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது.


..... தேமொழி

Geetha Sambasivam

unread,
Jan 29, 2015, 4:08:06 AM1/29/15
to மின்தமிழ்
இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டதையும் திரு சுகுமாரனும், செல்வமுரளியும் சென்றதையும் மற்றும் சுபாவுக்கு இதன் மூலம் ஏற்பட்ட அவப்பெயர் ஆகியவற்றை நன்கறிவேன்.  எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு மேன்மேலும் தமிழ்த் தொண்டு ஆற்றி வரும் சுபாவுக்கு என் வாழ்த்துகள். இது ஒரு வெறும் அங்கீகாரம் மட்டுமல்ல. சுபாவின் தமிழார்வத்துக்குக் கிடத்த பெரிய பரிசு. இது போல் மேலும் பற்பல பரிசுகளையும் விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற வாழ்த்துகள். 

களப்பணியில் ஈடுபட்டோருக்கும், அவர்களுக்குப் பேருதவி செய்த சுபாவுக்கும் வாழ்த்துகள்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 29, 2015, 4:48:17 AM1/29/15
to mintamil, Subashini Tremmel
வணக்கம்.
செயற்கரிய செயல்கள் பல செய்துவரும் தங்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.



ஓலைச்சுவடிகள் சேரிக்கப் பெரிதும் உழைத்த ஐயா அண்ணாமலை சுகுமாரன் அவர்களுக்கும், நண்பர்  திரு.கோவை மணி, திரு.செல்வ முரளி மற்றும் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர் மாதவன், அலுவலர்கள், ஓட்டுனர், அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் அனைவரது உழைப்பும் தமிழைப் பாதுகாத்துள்ளது.  தாங்கள் அனைவரும் தமிழ்போல் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்


2015-01-29 12:54 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Jan 29, 2015, 6:00:42 AM1/29/15
to mintamil, Subashini Tremmel
திருமதி.கீதா சாம்பவசிவம் கூறிய எல்லா செய்திகளையும் நானும் அறிவேன். பணி தொடங்கும் முன்பே, திரு.கண்ணனும் நானும் பல யோசனைகளை பகிர்ந்து கொண்டோம். திருமதி. சுபாஷிணி பட்ட இன்னல்களை சொல்லி மாளாது. மனதளவில் நான் பெற்ற ஏமாற்றங்களை நான் பகிர்ந்து கொள்ளவில்லை. இன்றைய செய்தி ஒரு டானிக். ஆல் தெ பெஸ்ட், சுபாஷிணி.

ஜீவ்ஸ்

unread,
Jan 29, 2015, 8:15:15 AM1/29/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
மிக அற்புதமான பணி, வாழ்த்துகள் சுபா.
 
மின்னாக்கம் செய்யப்பட்டவற்றை ஆன்லைனில் மட்டும் தான் படிக்க இயலுமா? கணினியில் இறக்கி வைத்துக் கொண்டு படிக்க இயலாதா ?  சில சுவடிகள் அண்ணனுக்குத் தேவையாக இருக்கிறது. அவருக்கு இணைய வசதி எல்லாம் கிடையாது. ஊரில்.
 
அன்புடன்
ஐயப்பன்.

N. Ganesan

unread,
Jan 29, 2015, 8:38:23 AM1/29/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com


On Wednesday, January 28, 2015 at 11:30:09 PM UTC-8, Pandiyaraja wrote:
பாராட்டுக்கள் சுபா அம்மையீர்.
>>
இப்பணியின் வாயிலாக தமிழ் மரபு அற்க்கட்டளை 96,000 சுவடிகளை தமிழகத்தின் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் தேடுதல் பணியை நிகழ்த்தியதன் வழி சேகரித்து வழங்கினோம்.<<
>>
சில குறிப்பிட்ட மாவட்டங்களில்<<
இன்னும் பல மாவட்டங்களில் செய்யவேண்டிய பணி நிறைய இருக்கிறதே. யார் செய்வர்?
செய்திக்கு மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா



பாராட்டுகள். 

பழைய மருத்துவம், வாகடம், சோதிடம், அரண்மனைக் கணக்குகள், ... எல்லாம்
ஓலைச்சுவடிகளில் மறைந்துவருகின்றன. அவற்றை எல்லாம் தேடி ஆவணப்படுத்துதல்
மிக அவசியம். ஓரிரு அரிய இலக்கியங்களும் கிடைக்கலாம்.

நா. கணேசன்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 29, 2015, 11:20:57 AM1/29/15
to Minthamil
வாழ்த்துகள் திருமதி சுபாஷிணி அவர்களே.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


rajam

unread,
Jan 29, 2015, 12:02:27 PM1/29/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
என் பாராட்டும் வாழ்த்தும், சுபா! 

ஒரே ஒரு வேண்டுகோள் ... தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் கிடைக்கும் மின்னாக்கப்பட்ட ஓலைச்சுவடிகளின் அட்டவணை/பட்டியலில் கோப்புமுறையும் நிரலும் தெளிவும் தேவை. 

பல நாட்களுமுன் சில பாடல்களைத் தேடுவதற்காகத் திரு அரவிந்த் சுவாமிநாதன் எனக்கு உதவினார். நானும் பலமுறை பல பாடல்களைத் தேட முயன்று சோர்வடைந்தேன். 

தயவுசெய்து என் சொற்களுக்குச் செவிமடுக்கவும். மின்னாக்கப்பட்ட சுவடிப்பதிப்புகளைத் தொகுத்தும் விரித்தும் வகைப்படுத்தியும் இணையவழித் தேடுகிறவர்களுக்கு ஏற்ற வழியைக் காட்டவேண்டும். அந்த வகை முயற்சிகளை இப்போது காணவில்லை. வருந்துகிறேன்.

இப்படிக்கு,
ராஜம்


On Wednesday, January 28, 2015 at 11:24:08 PM UTC-8, Suba.T. wrote:

Anbu Jaya

unread,
Jan 29, 2015, 4:40:42 PM1/29/15
to mintamil, Subashini Tremmel
வாழ்த்துகள்



அன்புடன்,
அன்பு ஜெயா


--
Reply all
Reply to author
Forward
0 new messages