உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ்ப்பணியையே முதற்பணியாகக் கொண்டு அறுபது
ஆண்டுகளுக்குமேல் தமிழ்நூற்பதிப்புகளைச் செய்து வெளியிட்டு மறைந்த
பெரும்புலவர்கள் இருவர்.
ஒருவர் ‘தமிழ்த்தாத்தா’ டாக்டர். உ. வே. சாமிநாத ஐயரவர்கள்,
மற்றொருவர் ’தணிகைமணி’ வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள்.
பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளியிட்டு, தமிழ்க் கல்வியின் எல்லையை
விரிவாக்கி, பழந்தமிழ் இலக்கியங்களையும் காப்பியங்களையும் சமய
இலக்கியங்களையும் காலத்தின் அழிவினின்றும் மீட்டுத்தந்து, தமிழ்
ஆய்வுத்துறையில் வழிகாட்டிகளாய் அமைந்தவர்கள் இவர்கள்.
தமிழ் இலக்கியப் பதிப்புத்துறையில் இவர்கள் பாடுபட்டு உருவாக்கித் தந்த
நூல்களின் பயனாக இன்று புதுப்புது ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இன்று உலம் முழுவதும் தமிழ் மொழியைப் பற்றிப்பேசி, தமிழ்மொழியை ஆராய்ந்து
வருகிறது என்றால், தமிழ் மாநாடுகள் நடபெறுகின்றன என்றால் அதற்குப்
பெருங்காரணமாக அமைபவர்கள் இத்தகைய பெருமக்களேயாவர். இவர்களின் வாழ்வும்
பணியும் அனைவரும் அறியத்தக்கன.
சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இந்த நூற்றாண்டில் மறைந்த
இவ்விருவரும் சோழ நாட்டில் கல்வி பெற்று, தொண்டைநாட்டில் சான்றோராய்த்
திகழ்ந்தவர்கள்.’தொண்டைநாடு சான்றோருடைத்து’ என்னும் முது மொழிக்கேற்ப
இவர்களின் இறுதிகாலம் வரை இவர்தம் இலக்கியப் பெரும்பணிகள் தொண்டை
நாட்டிலேயே நிகழ்ந்தது .
ஆண்டுதோறும் தணிகைமணியவர்கள் தமிழ்த்தாத்தா டாக்டர். உ. வே.
சாமிநாதையர்அவர்களைப் பார்த்து உரையாடி மகிழ்வது வழக்கம். 1942 ஆம்
ஆண்டில் ஒரு நாள் இருவரும் ஐயரவர்கள் இல்லத்தில் உரையாடிக்
கொண்டிருந்தனர். அச்சமயம் ஐயரவர்கள் நோயுற்றிருந்தார்.
தமிழ்நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் உயர்ந்திருந்த நிலையில் ஏற்பட்ட
உடற்தளர்ச்சியால் மெலிவுற்றிருந்த அவர், இனி நிகழ வேண்டிய பணிகள்
குறித்து அளவளாவிக் கொண்டிருந்தார். திடீரென்று தணிகைமணியின் கைகளைப்
பிடித்துத், “திருப்புகழ் ஆராய்ச்சி செய்த கைகளாயிற்றே இவை”
என்றுகூறிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். தமிழ்த்தாத்தாவின் செயலால்
அதிர்ச்சியுற்ற தணிகைமணி உடனே ஐயரவர் களுடைய கால்களைப் பிடித்துக்
கொண்டு "சங்கத்தமிழ் நூல் ஏடுகளை எல்லாம் தேடித் தேடி ஊர் ஊராகச் சுற்றிய
கால்களல்லவோ இவை" என்று கூறி வணங்கினார்.
”தாய்மைப்பேற்றின் சிறப்பை மற்றொரு தாயானவளே உணரமுடியும்” என்பது போல,
நூல் இயற்று வதிலும், நூல்பதிப்பிலும் கடுமையாக உழைத்தோரே மற்றவரின்
உழைப்பை உணர்ந்து பாராட்ட இயலும் என்பதற்கு மேற்கண்ட நிகழ்ச்சியே
சான்றாகும். அத்துடன் தணிகைமணி தம்மைவிட இளைய வராயினும் அவர் செய்த அரும்
செயல்களைப் பாராட்டி மகிழும் தமிழ்த்தாத்தாவின் பெருந்தன்மையும்,
சிறப்பும் குறிப்பிடத் தக்கதாகும்
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=345&Itemid=460
தேவ்
On Jul 24, 2:27 pm, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> அன்புள்ள மின் தமிழ் அன்பர்களே,
>
> பிசிராந்தையார் என்னும் சங்க காலப் புலவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
>
> (கேள்விப்படாதவர்கள் தேடித் தெரிந்துகொள்ளுங்கள்)
> நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர்களைக் குறிப்பிடுங்கள் எனச் சொன்னால்,
> உடனே நினைவுக்கு வருபவர் பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழன் என்பவர்கள்தாம்.
> இவர்கள் நட்பிற்கும் மற்றவர்கள் நட்பிற்கும் என்ன வேறுபாடு?
> இவர்கள் ஒருவரை ஒருவர் நேரில் கண்டு பழகாமலேயே ஒருவர் மேல் ஒருவர் நட்பு
> பாராட்டியவர்கள்.
> இது என்ன பெரிய சிறப்பு?
> மகன் தன் தந்தையான கோப்பெருஞ்சோழன் மீதே ஆட்சியைப் பிடிக்கப் படைஎடுக்கிறான்.
> இதனால் மனம் வெறுத்த தந்தை உண்ணா நோன்பு இருந்து (வடக்கிருந்து) உயிர் விட
> முடிவுசெய்கிறான். மன்னனோடு நெருங்கிப் பழகிய பலர் அவனோடு உயிர் விட
> உண்ணாநோன்பு இருக்கின்றனர். அப்போது கோப்பெருஞ் சோழன் தன் நண்பர்
> பிசிராந்தையாருக்கும் ஓர் இடம் ஒதுக்கும்படி கூறினான். அவன் வடக்கிருப்பதை
> அறிந்த பிசிராந்தையாரும் அவனோடு வடக்கிருக்க அவன் இருக்கும் இடம் நாடி வந்தார்
> என்னும் செய்திகள் புறநானூற்றில் பதியப்பட்டுள்ளன.
> பலருக்கும் தெரிந்த இக்கருத்தை இப்பொழுது சொல்ல என்ன காரணம் எனக் கேட்கலாம்.
>
> எனக்கு மின் தமிழ் புதிய அறிமுகம். இணையமே புதிய அறிமுகம்தான். *மின்தமிழ்
> மடலாடற்குழுவிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே எனக்குத் தோன்றிய எண்ணம் சங்க
> காலப் பிசிராந்தையார்களும் கோப்பெருஞ் சோழர்களும் நிறைந்த, நிறைந்திருக்கிற,
> நிறைந்திருக்க வேண்டிய இடம் என்பதுதான்*. அப்படித்தான் இருக்க முடியும்
--
மின்வெளி ஊடகம் முழுவதும் நிழல் ஊடகமல்ல. நிஜத்தை அங்கு பிரதிபலிக்கச்
செய்ய முடியும். மின்தமிழ் உருப்பினர்கள் அனைவரும் தங்கள் PROFILE பதிவு
செய்வது அவசியம் என்று கொண்டு வரலாம். தொழில்முறை வல்லுநர்கள் இது பற்றி
யோசிக்க. இந்த PROFILE, ஜி-மெயில், யாகூ, ஃபேஸ்புக் போன்றவற்றில்
இருந்தால் தொடுப்போ அல்லது நமது சேவியிலேயே இதை சேகரிக்க முடியுமா? என்று
யோசிக்க வேண்டும்.
ஏன் PROFILE? மின்தமிழ் கல்வியிற் சிறந்த சான்றோர் கூடும் கூடமாக
மாறிவருகிறது. இங்கு பொய்யுரையும், முகமூடியும் அவசியமில்லை. தன்னை
யாரென்று அடையாளப்படுத்த முடியாதவருடைய கருத்தை நாம் கட்டாயம்
கேட்கவேண்டுமென்ற தலையெழுத்தெல்லாம் இல்லை. எனவே எல்லோரும் தத்தம்
உண்மையான சொரூபத்தை எல்லோருக்கும் காட்ட வேண்டும்.
இம்மாதிரிக் குழுமங்களில் குற்றம் காண்பது எப்படி வருகிறது என யோசித்தால்
அது நாம் எழுதும் எழுத்தின் குறைபாடு என்பது புரியும். எவ்வளவோ பண்பாக
எழுதுகிறோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும் நாம் எழுதும்
வார்த்தைகள் சேர்வோரின் `இணைப்புகளை` (associations)ப் பொறுத்து பொருள்
கொள்ளப்படுகின்றன. உம். ரங்கன் சித்தர்களைப் பற்றி எழுதியது `என்னைச்
சுடவில்லை`. காரணம், அதில் தெளிவாக அவர் இதைத் `தன்னுடைய சொந்தக்
கருத்து` என்று அடையாளப்படுத்திவிட்டார். அவரவர் சொந்தக் கருத்துகளைப்
பற்றி நாம் அபிப்பிராயப்படலாமே தவிர காயமடைய வேண்டியதில்லை. அதே
நேரத்தில் சித்தர்கள் மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் இல்லை என்ற
பொருளில்லை. அவர்களுக்கு நம்மைக் கட்டிக்காக்கும் திறன் இருக்கிறது.
அவர்கள் மேலோர். அவர்களை நாம் காக்க வேண்டிய அவசியமில்லை என்று என்
உள்ளுணர்வு சொல்லியதால் நான் அக்கருத்து பற்றி academic discussion
செய்யலாமென்றேன். அவ்வளவுதான். அதே நேரம் நக்கினம் சிவம் அவர்கள் சித்தர்
வழியை அன்றாடம் பயின்று வருபவர். மிக அன்பான மனிதர். தன்னலம் இல்லாத
நபர். அவருக்கு உண்மையான சித்தர்களுடன் உறவு இருப்பதால் மின்தமிழ்
உரையாடல் உவப்பளிக்கவில்லை. அதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
எனவே, இம்மடலாடலில் நாம் கருத வேண்டிய முக்கிய பொருள் என்னவெனில், இது
வெறும் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே எனும் எண்ணம். நம் எண்ணங்கள்,
கருத்துக்கள் கல்லு போல் நிலையானவை அல்ல. அவை மாறுகின்றன,
வளர்ச்சியுறுகின்றன. எனவே ஒரு கருத்தை ஒருவாறு இன்று சொல்லும் ஒரு நபர்
வேறொரு நாள் வேறொரு புரிதலில் அக்கருத்தை மாற்றிக்கொள்ளலாம். எனவே
கருத்துடன் ஆட்களை அடையாளப்படுத்தி காயமடைய வேண்டியதில்லை. ஏனெனில்,
நாவினால் சுட்ட வடு ஆறுவதல்ல. எனவே தனிமனித தாக்குதலை விடுத்து (அடிக்கடி
என் தலையை உருட்டாமல் என்றும் இதைக் காணலாம் ;-) கருத்தைக் கருத்தாக
பாவித்து மின்தமிழால் வளர்வோம்.
மானுடம், மனிதநேயம் மிக, மிக முக்கியம்.
டாக்டர் செல்வகுமார், நாக.இளங்கோவன் இக்குழுவில் நீண்டநாள் இருந்து
கருத்து வேறுபாட்டால் வெளியே போய் தனிக்குழு ஆரம்பித்தனர். அது அவரவர்
சுதந்திரம். ஆயினும், நேரில் கோவையில் பார்த்த போது மிகவும் அன்பாகவும்,
ஆறுதலுடன் சந்தித்து மகிழ்ந்தோம். நம்மில் யாரும் பூரணமானவர்கள் இல்லை.
எல்லோரிடமும் குறைகள் உள்ளன. ஒருவரின் குறை சகிக்க முடியாது என்று
பட்டால் விலகி நிற்பது நலம். அதைவிடுத்து தனிம்னிதத் தாக்குதலில்
இறங்குவது மனிதநேயத்தைக் கொன்று விடுகிறது. நிஜ வாழ்வில் ஆயிரம்
கருத்துக்களுடன்தான் மானுடம் இந்தப் பூமியில் வாழ்ந்து வருகிறது. எனவே
மடலாடற்குழுக்களிலும் அதே செயற்பாட்டைக் கொள்ளலாம்.
எல்லோரும் ஈடுபாட்டுடன் யோசியுங்கள்.
நா.கண்ணன்
2010/7/25 Ashwinji <ashv...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Pythias asked to be allowed to return home to settle his affairs and bid his family farewell. But the King suspected that Pythias would not return. Pythias called for Damon and asked him to take his spot while he was away. King agreed, on the condition that, if Pythias does not return , Damon would be put to death and Damon agreed, and Pythias was released.
Pythias was delayed, and the king ionysius prepared to execute Damon. But just as the executioner was about to kill Damon, Pythias returned.
Apologizing to his friend for his delay, Pythias told of how pirates had captured his ship on the passage back to Syracuse and thrown him overboard. Dionysius listened to Pythias as he described how he swam to shore and made his way back to Syracuse as quickly as possible, arriving just in the nick of time to save his friend.
(http://www.tamilheritage.org/old/audio/luvmusic.html -
http://www.tamilheritage.org/old/tamievol.html )
நன்றி வணக்கம்.
இன்னம்பூரான்
2010/7/25 ananda rasa thiruma <aara...@gmail.com>
>
அன்புள்ள மின் தமிழ் அன்பர்களே,
2010/7/26 ananda rasa thiruma <aara...@gmail.com>:
> திரு இன்னம்பூரான்
2010/7/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>: