--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மிக அருமையான விளக்கம் படித்தேன்.இந்த நூல் எங்கே விற்பனைக்கு உள்ளது? நன்றி


இதில் ஒரே சந்தேகம். இப்போது இருப்பதைவிட சங்கதம் தமிழகத்தில் அரசு ஆதரவுடனும், மொழியியல் ஆர்வம் கொண்டும் செழித்திருந்த காலங்களுண்டு. சங்கதம் கற்றதால் அதுவே உயர்வு எனக் கருதாத பெரும் புலவர்களும் வாழ்ந்திருக்கின்றனர். நாதமுனி தொடக்கம், மணவாளமாமுனிகள் வாழ்ந்த ஆச்சார்யர்கள் எப்போதும் தமிழின் உயர்வையே போற்றிப் பேசினர். அவர்கள்தான் தமிழுக்கு discourse analysis எனும் வியாக்கியான பாரம்பரியத்தை வளர்த்து எடுத்தனர். அப்படி இருந்தபோதும் அவர்கள் தொல்காப்பியம் பாணினிக்கு முந்தியது என்று கருதியதில்லை என எண்ணுகிறேன். சங்கத அறிவு கொண்டோர் அருகி வரும் இக்காலக்கட்டத்தில் தமிழ்தான் ஆதி மொழி என்றால் வாதமிடக்கூட ஆளில்லை. எங்கோ இடிப்பது போல் தெரிகிறது. நமது லண்டன் தமிழ்ச் சங்க மேனால் செயலர் சுவாமிநாதன் தனது வலைப்பதிவில் பாணினி மூத்தது என்பதைச் சில வாதங்களோடு சொல்கிறார்.மேலும் இவரது பல கட்டுரைகள் தொல்காப்பியர் காலம் தவறு எனச்சுட்டுகிறது(அத்தொடர் முழுவதும் தேடித்தொடுப்பு கொடுக்க முடியவில்லை 3,4,5 கிடைக்கிறது)தொல்காப்பியர் காலமும், வள்ளுவனின் காலமும் ன்று எனச் சொல்லி இருவரும் கிபி 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று நம்பும் படி வாதிடுகிறார்.சுவாமிநாதன் இக்குழுமத்தில் உள்ளாரா எனத்தெரியவில்லை. கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். இங்கு இச்செம்மொழி இரண்டுமறிந்த இன்னொருவர் நண்பர் ஶ்ரீரங்கம் மோகனரங்கன். இவர்களது திறனாய்வு பயனளிக்கும் என்று நம்புகிறேன்.நா.கண்ணன்
நல்ல நூல் அறிமுகம். ஆனால் ஏனோ படங்கல் என் மின்னஞ்சலில் வரவில்லை.இந்த நூல் விமர்சனத்தை நம மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.
சுபா
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆதிமொழி பக்கம் 175பல்வேறு உயிரினங்கள் எங்குத் தோன்றினவோ அங்குதான் மாந்த இனமும் தோன்றியிருக்க முடியும். முதல் மாந்தன் எங்குத் தோன்றினானோ அங்குத்தான் உலக முதன் மொழியும் தோன்றியிருக்க முடியும். அந்த மாந்தனின் மொழிகள் அவனுக்குப் பிறகு தோன்றிய மாந்த இனத்துக்கும் தாய்மொழியாக அமைந்திருக்கும்.இலங்கை தொடங்கிய அடுத்தடுத்துள்ள நிலப்பகுதிகள் இன்னும் திராவிட மொழிகளின் ஊற்றிடங்களாக உள்ளன. தென்னிந்திய மொழிகளுக்குத் தாயாக உள்ள தமிழே பழந்திராவிட முதல் தாய்மொழியாக இருந்திருக்கும் என்னும் உண்மை இதனால் நிலை நாட்டப்படுகிறது. இப்பகுதியிலிருந்து உலக முழுவதும் பரவிய உலகமொழிகள் அனைத்துக்கும் தமிழே தாய்மொழி என்பது உறுதிப்படுவதால் தமிழை ஆதிமொழி என்று அழைக்கலாம்
அன்பின் சேசாத்திரி
எனக்கு சங்கதம் தெரியாது. தெரிந்தோரிடம் பழக்கமுண்டு.
நான் கேட்டது பொதுவான சந்தேகங்கள். தமிழ் இயல்பான, இயற்கையான மொழி என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. என் தாய் மொழி இனிது என்று நாளும் திளைப்பவன். ஆயினும் ஒப்பியல் ஆய்வு என்று வரும் போது பலவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.
தமிழை ஆதிமொழி என நிருவத்தேவை என்ன? உளவியல் காரணமென்ன? எனக் கேட்பது சுவாரசியமாக உள்ளது.
தமிழ் 'தாய்' என்றால் பிறமொழிகள் சேய். ஒரு தாயின் மனத்தோடு தமிழன் இருப்பதாகத் தெரியவில்லை. எப்போதும் பிற மொழி மீதொரு வெறுப்பு. தானே தலைவன் என நிருவ முயலும் அகந்தை. இதுவே கண்ணில் படுகிறது.
அதுபோக வையாபுரியாரின் ஆய்வை நாமெல்லோரும் புறம் தள்ளுவதின் காரணமென்ன? சுவாமிநாதனின் கூற்றுக்குப் பதில் என்ன?
இது புத்தகம் பற்றித் தாங்கள் கொடுத்த விளக்கத்தின் மீதான விமர்சனமே. ;-)
நா.கண்ணன்
--
ஆயினும் ஒப்பியல் ஆய்வு என்று வரும் போது பலவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. தமிழை ஆதிமொழி என நிருவத்தேவை என்ன? உளவியல் காரணமென்ன? எனக் கேட்பது சுவாரசியமாக உள்ளது.
தமிழ் 'தாய்' என்றால் பிறமொழிகள் சேய். ஒரு தாயின் மனத்தோடு தமிழன் இருப்பதாகத் தெரியவில்லை. எப்போதும் பிற மொழி மீதொரு வெறுப்பு. தானே தலைவன் என நிருவ முயலும் அகந்தை. இதுவே கண்ணில் படுகிறது.
அதுபோக வையாபுரியாரின் ஆய்வை நாமெல்லோரும் புறம் தள்ளுவதின் காரணமென்ன? சுவாமிநாதனின் கூற்றுக்குப் பதில் என்ன?
இதில் ஒரே சந்தேகம். இப்போது இருப்பதைவிட சங்கதம் தமிழகத்தில் அரசு ஆதரவுடனும், மொழியியல் ஆர்வம் கொண்டும் செழித்திருந்த காலங்களுண்டு. சங்கதம் கற்றதால் அதுவே உயர்வு எனக் கருதாத பெரும் புலவர்களும் வாழ்ந்திருக்கின்றனர். நாதமுனி தொடக்கம், மணவாளமாமுனிகள் வாழ்ந்த ஆச்சார்யர்கள் எப்போதும் தமிழின் உயர்வையே போற்றிப் பேசினர். அவர்கள்தான் தமிழுக்கு discourse analysis எனும் வியாக்கியான பாரம்பரியத்தை வளர்த்து எடுத்தனர். அப்படி இருந்தபோதும் அவர்கள் தொல்காப்பியம் பாணினிக்கு முந்தியது என்று கருதியதில்லை என எண்ணுகிறேன். சங்கத அறிவு கொண்டோர் அருகி வரும் இக்காலக்கட்டத்தில் தமிழ்தான் ஆதி மொழி என்றால் வாதமிடக்கூட ஆளில்லை. எங்கோ இடிப்பது போல் தெரிகிறது. நமது லண்டன் தமிழ்ச் சங்க மேனால் செயலர் சுவாமிநாதன் தனது வலைப்பதிவில் பாணினி மூத்தது என்பதைச் சில வாதங்களோடு சொல்கிறார்.மேலும் இவரது பல கட்டுரைகள் தொல்காப்பியர் காலம் தவறு எனச்சுட்டுகிறது(அத்தொடர் முழுவதும் தேடித்தொடுப்பு கொடுக்க முடியவில்லை 3,4,5 கிடைக்கிறது)தொல்காப்பியர் காலமும், வள்ளுவனின் காலமும் ன்று எனச் சொல்லி இருவரும் கிபி 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று நம்பும் படி வாதிடுகிறார்.
ஆனால்,தொல்காப்பியத்தின் காலக் கணிப்புக்கு தொல்லியற் சான்றுகள் மிக உதவுகின்றன. உ-ம்: புள்ளியிட்ட மெய்யெழுத்துக்கள்பற்றி தொல்காப்பியம் விரிவாக உரைக்கிறது. புள்ளி எழுத்தின் மீது வரும் காலம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. ஐராவதம் மகாதேவன் குறில் எ, ஒ உருவாக்க, ஏ, ஓ பிராமி எழுத்துக்கள் மீது புள்ளி இடலையும் காட்டுகிறார்.இதுவும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பின்னர் ஏற்பட்டதே ஆகும்.
ஆனால், மொழியியற் கூறுகளை ஆராய்ந்தால் சம்ஸ்கிருதத்தில் பல திராவிட மொழியின் கூறுகள் இருப்பதை நிறுவியுள்ளனர். தொல்காப்பியம் பாணினிக்கு காலத்தால் பிற்பட்டதாயினும், பாணினிக்கு ஒரு கைவிளக்காக விளங்குவதுதொல்காப்பியம். பாணினியின் மகாபாஷ்யம் பதஞ்சலி முனிவர் செய்தது. இந்த மாபாடியத்தின் தாக்கம் தொல்காப்பியத்தில் இருப்பதை ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் விரிவாக எழுதியுள்ளார்.
----------------------------------சட்டாம்பி சுவாமிகள் போன்ற மலையாள ஆசான்கள் ரெவரண்ட் கால்ட்வெல் நூலின் தாக்கம் தெரிகிறது, திராவிட மகாத்மியம் என்ற நூலும் செய்துள்ளார். இந்தியச் செம்மொழிகள் இரண்டையும் - தமிழ், சம்ஸ்கிருதம்
இரண்டையும் ஒப்புநோக்கி தமிழ் ஆதிமொழி என நிறுவியுள்ளார். இது ஐரோப்பியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் கண்டுபிடித்த மொழியியல் ஆராய்ச்சிமுடிவுகளின் வளர்ச்சி இந்திய மொழிகளில் எதிரொளிக்கத் தொடங்கியதன் கூறுகள் ஆகும்.
நல்ல நூலை அறிமுகம் செய்த சேசாத்திரிக்கு நன்றிகள். சட்டாம்பி சுவாமிகளின் நூல்கள் எல்லாமும் ஒரே தொகுதியாக தமிழில் மொழியாக்கம் ஆக வேண்டும்.
ஆனால்,தொல்காப்பியத்தின் காலக் கணிப்புக்கு தொல்லியற் சான்றுகள் மிக உதவுகின்றன. உ-ம்: புள்ளியிட்ட மெய்யெழுத்துக்கள்
பற்றி தொல்காப்பியம் விரிவாக உரைக்கிறது. புள்ளி எழுத்தின் மீது வரும் காலம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. ஐராவதம் மகாதேவன் குறில் எ, ஒ உருவாக்க, ஏ, ஓ பிராமி எழுத்துக்கள் மீது புள்ளி இடலையும் காட்டுகிறார்.இதுவும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பின்னர் ஏற்பட்டதே ஆகும். ஆனால், மொழியியற் கூறுகளை ஆராய்ந்தால் சம்ஸ்கிருதத்தில் பல திராவிட மொழியின் கூறுகள் இருப்பதை நிறுவியுள்ளனர். தொல்காப்பியம் பாணினிக்கு காலத்தால் பிற்பட்டதாயினும், பாணினிக்கு ஒரு கைவிளக்காக விளங்குவது தொல்காப்பியம். பாணினியின் மகாபாஷ்யம் பதஞ்சலி முனிவர் செய்தது.
இதற்கே நானும் மதிவாணரும் 9 ஆண்டுகள் வண்டிக்காரன் மாட்டின் பின்னங்கால் இடுக்கில் காலைவிட்டு ஆட்டி கிச்சு கிச்சு செய்து வண்டியை வேகப்படச் செய்வது போல் செய்யவேண்டியிருந்தது
நன்றி,நா.கண்ணன்
--
தாங்கள் தொடர்ந்து இது பற்றிப் பேசிவருவது அறிவேன். அது பாராட்டுதலுக்குரியதே. ஆய்வு மாணவனான என்னால் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது! தமிழின் தொன்மை பற்றி ஆற்றொழுக்காக தடயங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதற்குள் குமரிக்கண்டம், உலகின் முதல் மொழி போன்ற நிருவப்படாத கதைகள் ஓட்டத்தில் வந்துவிட்டன. வள்ளுவர் காலம் இன்னும் ஆய்வு பூர்வமாக நிருவப்படவில்லை. சங்க காலத்தில் இருந்த தரக்கட்டுப்பாடு கூட அறிவியல் வளர்ந்துவிட்ட 21ம் நூற்றாண்டில் இல்லை என்றால் தமிழன் எதற்காக அவசரப்படுகிறான்? எதை இதனால் சாதிக்க விரும்புகிறான் என்ற கேள்விகள் எழாமல் இருக்க முடியாது. ஆரிய மேலாண்மைக்கான எதிர்க்குரல் என்பது மட்டுமே விளங்குகிறது. அதற்காக உலகின் முன் நாம் கோமாளிகள் ஆகக்கூடாது என்ற அக்கறை என்னுள் எழுகிறது. - நா.கண்ணன்
2016-02-09 18:16 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:ஆனால்,தொல்காப்பியத்தின் காலக் கணிப்புக்கு தொல்லியற் சான்றுகள் மிக உதவுகின்றன. உ-ம்: புள்ளியிட்ட மெய்யெழுத்துக்கள்பற்றி தொல்காப்பியம் விரிவாக உரைக்கிறது. புள்ளி எழுத்தின் மீது வரும் காலம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. ஐராவதம் மகாதேவன் குறில் எ, ஒ உருவாக்க, ஏ, ஓ பிராமி எழுத்துக்கள் மீது புள்ளி இடலையும் காட்டுகிறார்.இதுவும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பின்னர் ஏற்பட்டதே ஆகும்.தமிழ் பிராமி கல்வெட்டுகளின் காலக்குறிப்பு மிகத் தவறானவை.
ஆனால், மொழியியற் கூறுகளை ஆராய்ந்தால் சம்ஸ்கிருதத்தில் பல திராவிட மொழியின் கூறுகள் இருப்பதை நிறுவியுள்ளனர். தொல்காப்பியம் பாணினிக்கு காலத்தால் பிற்பட்டதாயினும், பாணினிக்கு ஒரு கைவிளக்காக விளங்குவதுதொல்காப்பியம். பாணினியின் மகாபாஷ்யம் பதஞ்சலி முனிவர் செய்தது. இந்த மாபாடியத்தின் தாக்கம் தொல்காப்பியத்தில் இருப்பதை ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் விரிவாக எழுதியுள்ளார்.பதஞ்சலி முனிவர் காலம் கி.பி 8 ஆம் நூற்றாண்டு. அப்படியானால் தொல்காப்பியம் 9 ஆம் நூற்றாண்டா?"தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:"நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்என்றிவர் என்னோடு எண்மருமாம்!
சட்டம்பி பாணினீயத்திற்கு முந்தையது மகேசுர சூத்திரம் என்கிறார். http://vediccafe.blogspot.in/2012/08/the-sanskrit-alphabet-sequence.html----------------------------------சட்டாம்பி சுவாமிகள் போன்ற மலையாள ஆசான்கள் ரெவரண்ட் கால்ட்வெல் நூலின் தாக்கம் தெரிகிறது, திராவிட மகாத்மியம் என்ற நூலும் செய்துள்ளார். இந்தியச் செம்மொழிகள் இரண்டையும் - தமிழ், சம்ஸ்கிருதம்இரண்டையும் ஒப்புநோக்கி தமிழ் ஆதிமொழி என நிறுவியுள்ளார். இது ஐரோப்பியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் கண்டுபிடித்த மொழியியல் ஆராய்ச்சிமுடிவுகளின் வளர்ச்சி இந்திய மொழிகளில் எதிரொளிக்கத் தொடங்கியதன் கூறுகள் ஆகும்.அப்படி எந்த ஐரோப்பியர் நூலையும் அவர் மேற்களாக சுட்டவில்லை.
நல்ல நூலை அறிமுகம் செய்த சேசாத்திரிக்கு நன்றிகள். சட்டாம்பி சுவாமிகளின் நூல்கள் எல்லாமும் ஒரே தொகுதியாக தமிழில் மொழியாக்கம் ஆக வேண்டும்.
[ இந்நூலுக்கு அணித்துரை வழங்கிய இனமான தலைவர் க.அன்பழகன், "தாம் பரப்பிய பிராமண வைதிக மத வழியில் தாம் பெற்ற செல்வாக்காலும், நாடாண்ட மன்னர்களிடம் தாம் கொண்ட ஆதிக்கத்தாலும் அந்த மன்னர்களைக் கொண்டே கட்டளையாகப் பிறப்பித்தனர்.குறிப்பாகச் சொன்னால், எதிரிகளின் படை வந்தால் நாட்டைக் காப்பாற்றுவது கடமை மற்ற காலங்களில் மன்னனுக்கும் சேர்த்து கட்டளை பிறப்பித்து வருணாசிரம தரும ஆட்சி நடத்துவது பிராமணர்கள். ஆம், அதன் விரிவான விளக்கம்தான், ஆரிய சமாசத்தின் தலைவரான சுவாமி இராமதீர்த்தர் எழுதியுள்ள நூல் The Hindu Imperialism" என்று மேற்கோள் தருகிறார் அன்பழகன்]நான் வலைத்தளத்தில் தேடியதில் சுவாமி தர்ம தீர்த்தர் எழுதிய நூல் தான் கிட்டுகிறது. சுவாமி இராம்தீர்த்தர் எழுதிய நூல் உங்களிடம் நூல் இருந்தால் தாருங்கள்.1. இனி, இந்திய வரலாறே தவறான காலக் கணிப்பின் அடிப்படையில் எழுத்தப் பட்டுள்ளது. இதாவது கி.பி.8 ஆம் நூற்றாண்டை கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என்று உபநிடதம், புராணங்களுக்கு குறித்துள்ளனர். இந்நிலையில் அரசர்களை கைப்பொம்மைகளாக ஆக்கி பிராமணர் ஆண்டனர் என்பது எவ்வகையில் சரியானது? இதற்கு என்ன சான்று ?2. வருணாசிரம தருமத்தை விட குமுகத்தை சாதி தருமம் தான் ஆட்டிப்படைகின்றது. இவ்வாறு இருக்க சாதியை மறைத்து அதைவிட வலி குன்றிய வருணாசிரம தருமத்தை பெரிதாக முன்னிலைப்படுத்துவது பிராமணரைத் தனிமைப்படுத்தத்தான் என்ற கருத்தை .உண்டாக்குகிறது.
3. ஆண்ட பரம்பரை, அடக்கி ஆண்டவர்கள், ஆளப்பிறந்தவர்கள் என்பதெல்லாம் என்ன பகட்டாரப் பேச்சா? பொய்யா? பிராமணர்களை ஆளவிட இவர்கள் இளித்தவாயர்களா?
4. சரி பிராமணரே ஆண்டாலும் இன்று போல் அன்றைய முடியாட்சி நன்னல ஆட்சியாக (welfare state) இருக்கவில்லை. அரசர்கள் சாலை போடுதல், உணவு அளித்தல் போன்ற அறங்களைச் செய்யவில்லை என்ற நிலையில் மக்களுக்கும் மன்னர்களுக்கும் இருந்த உறவு அதிக இடைவெளி கொண்டிருந்தது எனும் போது மன்னருக்கு பின்னே இருந்து பிராமணர் ஆண்டாலும் மக்களுக்கு என்ன தொல்லை நேரப்போகிறது? இந்த பின்புற ஆட்சித தொல்லைக் கருத்து மிகைக்கூற்றாகவே தோன்றுகிறது.5. கேரளத்திலும் மராட்டியத்திலும் பிராமணர் ஆளுகை செலுத்தியதை நாடு முழுமைக்கும் பொருத்திப் பார்ப்பது முறையா? தமிழகத்திற்கு இது பொருத்துவது சரியா ?
உமது கருத்தை பகிர வேண்டுகிறேன்.
2016-02-17 21:39 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:[ இந்நூலுக்கு அணித்துரை வழங்கிய இனமான தலைவர் க.அன்பழகன், "தாம் பரப்பிய பிராமண வைதிக மத வழியில் தாம் பெற்ற செல்வாக்காலும், நாடாண்ட மன்னர்களிடம் தாம் கொண்ட ஆதிக்கத்தாலும் அந்த மன்னர்களைக் கொண்டே கட்டளையாகப் பிறப்பித்தனர்.குறிப்பாகச் சொன்னால், எதிரிகளின் படை வந்தால் நாட்டைக் காப்பாற்றுவது கடமை மற்ற காலங்களில் மன்னனுக்கும் சேர்த்து கட்டளை பிறப்பித்து வருணாசிரம தரும ஆட்சி நடத்துவது பிராமணர்கள். ஆம், அதன் விரிவான விளக்கம்தான், ஆரிய சமாசத்தின் தலைவரான சுவாமி இராமதீர்த்தர் எழுதியுள்ள நூல் The Hindu Imperialism" என்று மேற்கோள் தருகிறார் அன்பழகன்]நான் வலைத்தளத்தில் தேடியதில் சுவாமி தர்ம தீர்த்தர் எழுதிய நூல் தான் கிட்டுகிறது. சுவாமி இராம்தீர்த்தர் எழுதிய நூல் உங்களிடம் நூல் இருந்தால் தாருங்கள்.1. இனி, இந்திய வரலாறே தவறான காலக் கணிப்பின் அடிப்படையில் எழுத்தப் பட்டுள்ளது. இதாவது கி.பி.8 ஆம் நூற்றாண்டை கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என்று உபநிடதம், புராணங்களுக்கு குறித்துள்ளனர். இந்நிலையில் அரசர்களை கைப்பொம்மைகளாக ஆக்கி பிராமணர் ஆண்டனர் என்பது எவ்வகையில் சரியானது? இதற்கு என்ன சான்று ?2. வருணாசிரம தருமத்தை விட குமுகத்தை சாதி தருமம் தான் ஆட்டிப்படைகின்றது. இவ்வாறு இருக்க சாதியை மறைத்து அதைவிட வலி குன்றிய வருணாசிரம தருமத்தை பெரிதாக முன்னிலைப்படுத்துவது பிராமணரைத் தனிமைப்படுத்தத்தான் என்ற கருத்தை .உண்டாக்குகிறது.திருத்தத்துடன் தெளிவாக விளக்க விரும்புகிறேன். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் பகுத்துமுறையே முதல் உயர்ந்தோர் இரண்டாவது உயர்ந்தோர் என பிறப்பு வழி ஏற்றத் தாழ்வுகளை வித்துவது வருணாசிரமம். சாதி தருமம் இதே போல் தோன்றினாலும் உன்னித்து நோக்க இதனினும் வேறுபட்டது. காட்டாக, வடகலை பிராமணர் தென்கலை பிராமணர் இருவரும் வருணாசிரமப்படி முதல்நிலை பெற்றவர் சமமானவர். ஆனால் நடைமுறையில் வடகலையார் தம்மை தென்கலையரினும் மேலோர் என்று மார் தட்டுகின்றனர். இங்கே வருணாசிரம தருமம் தோற்றுப் போய் சாதி தருமம் வெல்கிறது. ஆனால் நாயர்களில் மேனன், பிள்ளை,குருப்பு என உண்டு, சாதி ஒன்று தான். இதில் மேனனே உயர்ந்தோர் குருப்பு தாழ்ந்தோர். வன்னியரில் படையாட்சிகள் உயர்ந்தோர் மற்றோர் அவர்க்கு தாழ்ந்தோர். இதை வைத்து பார்க்கும் போது வருணாசிரம தரும விதிகளை விட சாதி தரும விதியே வலுவாக உள்ளது. இந்த சாதி தருமம் அதிகாரம், ஆதிக்கம், செல்வநிலை, கல்வி ஆகியவற்றால் உருவானது. மதமோ பிராமணரோ சாதி தருமத்தை உருவாக்கவில்லை. இந்த சாதி தருமத்தை அடியோடு புறக்கணித்து தெளிவற்ற வருணாசிரமத்தை சாடுவது பிராமணரை சாடுவோரது பொய்மையைக் காட்டுகிறது.
உங்கள் பதிலிலேயே விளக்கமிருக்கிறது சேசாத்திரி ...இந்த சாதி தருமம் அதிகாரம், ஆதிக்கம், செல்வநிலை, கல்வி ஆகியவற்றால் உருவானது.இதைத் திருப்பிப் போடுங்கள்....கல்வி >>> செல்வநிலை >>> ஆதிக்கம் >>> அதிகாரம்அதிகார நிலையை அடைய வேண்டுமானால் அதற்குத் தேவை அடிப்படை அறிவினைப்பெறுவது. இது மறுக்கமுடியாத உண்மை.
1700 களில் சீகன்பால்கு தமிழ் கற்க விரும்பியபொழுது கற்றோர் சதவிகிதம் 3% எனக் குறிப்பிட்ட நினைவு .1900 களின் துவக்கத்தில் பெரியார் சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்ப பத்திரிக்கைகள் தொடங்கிய பொழுது கற்றோர் 5% அதிலும் கற்றோரில் பெரும்பாலோர் உயர்சாதி என்று கூறப்படுவோர் என்று படித்த நினைவும் இருக்கிறது (பெரிய வாசகர் வட்டத்துடன் தான் பத்திரிக்கை நடத்தத் துவங்கியிருக்கிறார் !!! தங்களைத் தாக்கி எழுதும் செய்திகளை காசு கொடுத்து வாங்கி படிக்கப் போவது யார்?)
சாதிப்பெயரை பின்னால் இணைத்துக் கொள்ளும் கடந்த நூற்றாண்டின் முதல் பகுதியில் இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் தகவல், நூல் பதிப்புத் தகவல் என்று தேடினால் ...... அதில் என்னென்னன பெயர்கள் வருகிறது என்று இங்கு குழுமத்தில் அது போன்ற தகவல் பதியப்ப்படும்பொழுதும் நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன்.
தனக்கு ஊழியம் செய்ய உருவாக்கியுள்ள பெண்களுக்கும் ...உழைக்கும் வர்க்கத்தினருக்கும் கல்வி மறுக்கப்பட வேண்டும்...அதனை வேதம் சொன்னது, சாஸ்திரம் சொன்னது... போன்ற கற்பிதங்களைக் கூறி ஒடுக்கி வைக்க வேண்டும்...
இதையெல்லாம் செய்தவர் யார்?இதனைச் சொன்னவர்கள்
தமிழ் மக்களைக் குழப்பி அவரிடையே வெறுப்பை நீரூற்றி வளர்த்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருப்பவர்களா?இக்காலத்தில் இருந்து கொண்டு மேலோட்டமாக ஆராயாமல் வரலாற்று நோக்கில் அலசுவது உதவும்.
நீங்கள் இக்கால நடைமுறையை சொல்கிறீர்கள். அக்காலத்தே கல்வி ஒருபொருட்டல்ல. படை வலிமை, வாள் வலிமை இருந்தால் அதிகாரம் கிட்டும், ஆதிக்கமும் உடனே வந்து விடும். செல்வநிலையும் ஏற்படும். கல்விக்கு கூலிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதே நிலை. ஆக நான் சரியாகவே சொல்லியிரிருக்கிறேன்.இப்படி ஒரு நிலை ஏற்பட்டவுடன் அதைத் தக்கவைக்க தம்போன்றே அதிகாரம், ஆதிக்கம், செல்வநிலை, கல்வி உடைய குடும்பத்தாரோடு மணஉறவு என்று ஒரு தனிக் கூட்டமே உருவாக்கப்படுகிறது.இதுவே சாதி தருமம் ஆகும். இக்கால் பொறியியல், மருத்துவம் படித்து உயர்நிலையில் உள்ள S C மக்கள் கூட தம்நிலையைப் (அந்தஸ்து) பேணவே விரும்புகின்றனர். அதனால் தம்மை ஒத்த தகுதி இல்லாதவரை மணக்க எண்ணுவதில்லை.
1700 களில் சீகன்பால்கு தமிழ் கற்க விரும்பியபொழுது கற்றோர் சதவிகிதம் 3% எனக் குறிப்பிட்ட நினைவு .1900 களின் துவக்கத்தில் பெரியார் சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்ப பத்திரிக்கைகள் தொடங்கிய பொழுது கற்றோர் 5% அதிலும் கற்றோரில் பெரும்பாலோர் உயர்சாதி என்று கூறப்படுவோர் என்று படித்த நினைவும் இருக்கிறது (பெரிய வாசகர் வட்டத்துடன் தான் பத்திரிக்கை நடத்தத் துவங்கியிருக்கிறார் !!! தங்களைத் தாக்கி எழுதும் செய்திகளை காசு கொடுத்து வாங்கி படிக்கப் போவது யார்?)
எப்படி இருப்பினும்... இந்தத் திசையில் செல்வது இலக்கண நூல்கள் ஆய்வு விவாதத்திற்கு உதவாது என்ற எண்ணத்தில் நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். - தேமொழி