வகொவி
On Aug 9, 8:43 am, Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>
wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மொகஞ்சொதரோ ஹாரப்பா எழுத்தாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த (See current science, recent issue, Dr. S. Srinivasan) நண்பனின் இதே கேள்விக்கு நான் (ஆதாரமற்ற கற்பனையால்) இவ்வாறு பதில் அளித்திருந்தேன்.ஒன்பது பற்றித்தெரியாது; அது முதல் தோற்றம். பத்தில் ஒன்று குறைவதைக் குறிப்பிடக்கூடும். முழுதொன்றின் பாதியை 'அரை' என்றும், அதன் பாதியைக் 'கால்' என்றும் மனிதனின் உடல் பகுதியைக் குறிக்கும் சொல்லால் குறிப்பதைப் போலவே, 'தோள்' என்ற பகுதி '9/10' பங்கைக் குறிக்கும் வகையில் தோன்றி 'தோள் நூறு' என்பது 'தொண்ணூறு' என்று மாறி இருக்கலாம். மிகப் பெரிய எண்களின் 9/10 பங்கைக் குறிக்க இம்மூன்று எண்களுக்கு மேல் தேவைப்படவில்லையே.நல்வாழ்த்துக்களுடன்,கோபால்.
|
| மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை |
புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற் | |
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை | |
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
| |
| 5 | பெண்கொலை புரிந்த நன்னன் போல |
வரையா நிரையத்துச் செலீஇயரோ வன்னை | |
ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப் | |
பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே.
|
--
மொழி என்பது தர்க்கம், லாஜிக்கினால் செய்யப்பட்டது அல்ல. அது பழகு முறை,
வழக்குதான். எதோ, எப்படியோ வழக்கு தொள்ளாயிரம் என ஆகிவிட்டது, அதனால்
அப்படியே பின்பற்றுகிறோம், அது தொடர்கிறது.
வகொவி
>> <mailto:jeanluc.c...@gmail.com>>
>>
>> Dear Rangan,
>>
>> I am not sure I understand what you suggest
>> (with respect to French)
>>
>> My usual explanation is that "toḷ" [தொள்] = SLACK.
>>
>> தொள் + ஆயிரம் = Slack-THOUSAND = 90% of Thousand = 900
>>
>> தொள் + நூறு = Slack-HUNDRED = 90% of Hundred = 90
>>
>> தொள் + பத்து = Slack-TEN = 90% of ten = 9 (ஒன்பது = தொன்பது = தொண்டு
>> )
>>
>> -- Jean-Luc
>>
>>
>> On 09/08/2012 13:56, Mohanarangan V Srirangam wrote:
>>> ஆனால் இந்த வழக்கம் ஃப்ரெஞ்சிலும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
>>> இன்னும் பல
>>> மொழிகளிலும் உண்டு என்று இருக்கலாம்.
>>>
>>> ப்ரெஞ்சில் சாந்த் முவான் திஸ் அதாவது நூறுக்குப் பத்து குறைச்சல் என்று
>>> சொல்லப்
>>> படுகிறது. ழான் லுக் தான் சொல்ல வேண்டும்.
>>>
>>> சம்ஸ்க்ருதத்திலும் முழு எண்ணைச் சொல்லி அதில் இவ்வளவு ஊனம் என்ற
>>> வகையில்
>>> எண்ணிக்கையிடுவது உண்டு என்ற ஞாபகம்.
>>>
>>> நல்ல கேள்வி. ஆனால் ஆயிரம் என்று வரும் போது ஏன் ஒன்பதே
>>> வந்துவிடுகிறது...
>>> என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று.
>>>
>>> ***
>>>
>>>
>>>
>>> 2012/8/9 விஜயராகவன் <vij...@gmail.com <mailto:vij...@gmail.com>>
>>>
>>> மொழி என்பது தர்க்கம், லாஜிக்கினால் செய்யப்பட்டது அல்ல. அது பழகு
>>> முறை,
>>> வழக்குதான். எதோ, எப்படியோ வழக்கு தொள்ளாயிரம் என ஆகிவிட்டது,
>>> அதனால்
>>> அப்படியே பின்பற்றுகிறோம், அது தொடர்கிறது.
>>>
>>>
>>> வகொவி
>>>
>>>
>>> On Aug 9, 8:43 am, Niranjan Bharathi
>>> <niranjanbhara...@gmail.com <mailto:niranjanbhara...@gmail.com>>
>>> wrote:
>>> > அனைவர்க்கும் வணக்கம்,
>>> >
>>> > 9 க்குப் பிறகு 10 வந்தாலும், தமிழில் 9, ஒன்பது என்று
>>> அழைக்கப்படுகிறது.
>>> >
>>> > 90 க்குப் பிறகு 100 வந்தாலும் 90 , ஏன் தொண்ணூறு என்று
>>> அழைக்கப்படுகிறது.
>>> >
>>> > 900 க்குப் பிறகு 1000 வந்தாலும் 900, ஏன் தொள்ளாயிரம் என்று
>>> > அழைக்கப்படுகிறது.
>>> >
>>> > ஆனால் , போகப் போக ஒன்பதாயிரம், ஒன்பது லட்சம் என்று இந்த எண்
>>> > குடும்பத்தின் பெயர்கள் மாறி விடுகின்றன.
>>> >
>>> > 9 க்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு ?
>>> >
>>> > அன்புடன்,
>>> > நிரஞ்சன்
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil
>>> Heritage Foundation. Visit our website:
>>> http://www.tamilheritage.org; you may like to visit our
>>> Muthusom Blogs at:
>>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to
>>> this group, send email to minT...@googlegroups.com
>>> <mailto:minT...@googlegroups.com>
>>> To unsubscribe from this group, send email to
>>> minTamil-u...@googlegroups.com
>>> <mailto:minTamil-u...@googlegroups.com>
>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/minTamil
>>>
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
>>> may like to visit our Muthusom Blogs at:
>>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this
>>> group, send email to minT...@googlegroups.com
>>> <mailto:minT...@googlegroups.com>
>>> To unsubscribe from this group, send email to
>>> minTamil-u...@googlegroups.com
>>> <mailto:minTamil-u...@googlegroups.com>
என்பது அப்புறம் ஒன்பது
என்னூறு அப்புறம் தொன்னூறு
நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுதுங்கோ
நாகராசன்
2012/8/10 naturalfoodworld <naturalf...@gmail.com>:
> நண்பருக்கு சரியான கேள்வி தான் ,
>
> பிரச்சினை எங்கு ஆரம்பம் என்றால் 90 -ல் தான் ஆரம்பம் , 80 -ஐ என்பது
> என்கிறோம், 90 - ஐ தொன்பது என்று தான் சொல்ல வேண்டும், ஆனால் இரண்டு முறை
> சொல்லுங்கள் தொன்பது என்று “ பத்தொன்பது - அதாவது 19 என்று ஒலி வரும் “ இதனால்
> தொன்ணூறு என மாற்றிவிட்டனர். அப்ப 900 ஐ என்ன சொல்ல வேண்டும் அங்கும் 900
> சொல்ல முடியாதல்லவா அதனால் அதற்கு தொள்ளாயிரம் இப்படித்தான் வந்திருக்க
> வேண்டும். :)
2012/8/11 Prakash Sugumaran <praka...@gmail.com>
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran
visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/
--
"தொண்டு தலையிட்ட" என்று தொடங்கும் நூற்பா உரையாசிரியர்களைக் கலக்கியடித்திருக்கிறது. பாகவத மேடை போல ஒன்று போட்டு அலசவேண்டிய நூற்பா. வருகிறேன் ஒரு நாள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்தப் பூஜ்யம் அல்லது பாழ் எனும் எண்குறி பற்றிய ஆதிப்பழமையான தமிழ்
உசாத்துணை எது? அதை இங்கிடமுடியுமா?
இது சர்வதேச அளவில் மிக முக்கிய விடயம்!
நா.கண்ணன்
இந்தப் பூஜ்யம் அல்லது பாழ் எனும் எண்குறி பற்றிய ஆதிப்பழமையான தமிழ்உசாத்துணை எது? அதை இங்கிடமுடியுமா?
புரியவில்லை. அறிஞர்கள் விரிவாக
எழுதினால் நல்லது
எழுநூற்று ஒன்பதில் பத்துக் குறைந்தது -- 709 - 10 = 699இந்த வகைக் கணக்கில் தொடை வகை = 13,699 (10,000 + 3,000 + 699).இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமானால் நக்கல்/கிண்டல் செய்யாமல் கேட்கவும். ;-) மறுப்புக் கொண்டால் தெளிவாகத் தெரிவிக்கவும்! ;-) நன்றி.அன்புடன்,ராஜம்
தாங்கள் இந்த உள்குத்து, வெளிக்குத்து விவகாரங்களைப் பற்றிக்
கவலைப்படாதீர்கள். இந்த ஆண்கள் ஒன்று கத்தியைத்தூக்கும் அது இப்போது
முடியாது என்பதால் உள்குத்து ;-) உடன் பிறந்தது. மாறாது :-))
பரிபாடலின் காலம் என்னவாக இருக்கும்? கிபி 5?
இந்தச் சூன்யம், பாழ் என்பதன் தோற்றம் பற்றிப் பேசும் பிபிசி ஆவணம்
குஜராத்தில் ஒரு கோயில் சுவரில் வாக்கியங்களுக்கிடையில் தெளிவாக, ‘0’
எனும் குறியீடு போட்டிருப்பதைக் காட்டிப் பேசுகிறது. அது 10
நூற்றாண்டிற்குப் பிற்பட்ட விஷயம். பரிபாடல் அதற்கும் தொன்மை.
தாங்கள் கூறும் கல்வெட்டு, அதன் காலம் அறிந்தால் இன்னும் நன்மை.
நம்மவரில் யாராவது ஒருவர் அந்தக் கோயிலுக்குப் போய் பூசாரிக்கு தட்சிணை
கொடுத்துவிட்டு படம் பிடித்தால் தேவலை!
மேலும் இது குறித்த ஒரு சிறு குறிப்பை நாம் ஆங்கிலத்திலும் தயாரித்து
வெளியிட வேண்டும். இவையெல்லாம் நம் பழமையான கணிதப்புலமைக்குச் சான்று.
உலகு அறியச் செய்ய வேண்டும்! (ஹரிகி, தமது ஆங்கிலக்கட்டுரைகளில் இது
பற்றி இன்னும் சொல்லாமலிருந்தால் :-)
நன்றி.
நா.கண்ணன்
2012/8/13 rajam <ra...@earthlink.net>:
On Monday, 13 August 2012 16:18:41 UTC-7, rajam wrote:
>>>> ஐ ஈர் ஆயிரத்து ஆறு
ஐஞ்ஞூற்றொடு -- ஐந்து
வகைப்பட்ட
இரண்டாயிரத்தோடு ஆறு
ஐஞ்ஞூற்றோடு [10, 000 < (5x2,000) + 3,000 < (6x500)]]
தொண்டு தலையிட்ட பத்துக்
குறை எழுநூற்று-
ஒன்பஃதென்ப
தொண்டு என்ற எண் முதலில் நிற்க,
எழுநூற்று ஒன்பதில்
பத்துக் குறைந்தது -- 699.
அதாவது 9 என்ற எண்
"தலையில்" நிற்க ("to the rightmost position"):
எழுநூற்று ஒன்பதில்
பத்துக் குறைந்தது -- 709 - 10 = 699
சரி! சென்னைவாசிகளில் யார் அந்த அதிர்ஷ்டசாலி, இப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள?
நம்ம கிடாரிப்பேட்டை நந்தினி எப்போது சென்னை மீட்பு?
நா.கண்ணன்
2012/8/14 rajam <ra...@earthlink.net>:
பரிபாடலின் காலம் கி.பி 7-க்கு முற்பட்டது என்று தோன்றூகிறது. திட்டமான காலத்தைச் சொல்ல எனக்குத் தெரியவில்லை.
கல்வெட்டின் காலம், இடம் போன்ற விவரத்தை நண்பர் மணிவண்ணனிடம் கேட்கலாம். அவரை இன்னும் சில நாட்களில் பார்ப்பேன். கேட்டுச் சொல்கிறேன். அதற்குமுன் அவரே உங்கள் மடலுக்கு மறுமொழி கொடுத்தால் மிகவும் நல்லது.
கல்வெட்டைப் படம் பிடிக்கச் செயல் முறை:
----------------------------------------------------
1. த.ம.அ பரிவாரத்தில் ஒரு தொண்டர் மணிவண்ணன் அவர்களைத் தொடர்பு கொள்ளவேண்டும்.
2. தொண்டரும் மணிவண்ணன் அவர்களும் (இல்லத்தரசி ஆஷாவுடன்) அந்தக் கல்வெட்டு இருக்கும் கோயிலுக்குப் போகவேண்டும்.
3. எல்லாருமாகச் சேர்ந்து அந்தக் கல்வெட்டு இருக்கும் இடத்தை எப்படியாவது கண்டுபிடிக்கவேண்டும்.
4. பிறகு, மணிவண்ணன் அவர்களின் கண்களைக் கட்டிப் போட்டு, மனைவி ஆஷாவின் பாதுகாப்பில் ... அவரைக் கோயிலுக்கு வெளியே உட்கார்த்திவைக்கவேண்டும். கோயிலுக்கு உள்ளே உட்கார்த்திவைத்தால் ... "நான் இந்தக் கோயிலுக்குள் இருக்கும்போது இந்த மாதிரி அதர்மம் நடக்கலாமா?" என்று கோபாலகிருஷ்ண பாரதியார், ஊத்துக்காட்டுக்கவி பாணியில் தொடங்கினாலும் தொடங்கிடுவார்! :-) ஆஷா மிகவும் திறமைசாலி; அவரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்.
5. த.ம.அ தொண்டர் கோயில் சுற்றுப்புறத்தில் கழுகுப் பார்வையுடன் உட்கார்ந்திருக்கும் பூசாரிகளை மயக்கி அந்தக் கல்வெட்டைப் படம் பிடித்து வரவேண்டும்.
என்ன, நாஞ்சொல்றது சரியா?
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வடநாட்டு இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும்
பேரெண்கள் வலமிருந்து இடமாக எழுதப்படுகின்றன.
இதற்கான உதாரணங்களை நான் படித்த நூல்கள்,
(1) The Nothing that Is: A Natural History of Zero
(Robert Kaplan, OUP, 1999)
(2) Zéro: The Biography of a Dangerous Idea
(Charles Seife, Penguin, 2000)
எ-டு: 73189 என்ற எண்ணை 98137 என எழுதுவர்.
அதைத் திருப்பிப்போட்டுப் படிக்கவேண்டும்.
தசம எண் முறை உருவானபின் பூஜ்ஜியம்
புள்ளியை அதற்கடுத்த எண்ணின் மேலே குறிப்பர்.
ஆனால், தமிழ் கல்வெட்டுக்களில் பூஜ்ஜியத்துக்கான
தனிக் குறியீடு இல்லை. 10, 100, 1000 இவற்றுக்கே
குறியீடுகள் உள்ளன. பூஜ்ஜியத்தைத் தமிழ்க்
கணிக்குறியீட்டில் ஏற்றியபோது கி.பி. 1825ல்
பண்டள இராமசாமி நாயக்கர் எழுதிய
கணித தீபிகையில் முதன்முதலாக பூஜ்ஜியம்
தனிக்குறியீடாகத் தமிழ் நூல்களில் வருகிறது
என்ற தகவலைக் கொடுத்திருந்தேன்.
தொல்காப்பியத்தில் பேரெண்களை விளக்குகிறபோது
இரண்டு ”தலையிட்ட”, மூன்று ”தலையிட்ட”, தொண்டு
”தலையிட்ட”, ... என்று சூத்திரங்களில் காண்கிறோம்.
தலை என்றால் முதல். தலைவன் = முதல்வன்.
கட்டுரைக்குத் தலைப்பு முதலில் இருக்கும்.
புலவர்கள் பாடத் தொடங்கும்போது தலைப்பில்
காப்புச் செய்யுளும், கடைசியில் பலஸ்ருதிச் செய்யுளும்
இருக்கும். ”புலவிச்சொற் பொறித்த வோலை
திருமுடி துளக்கி நோக்கித் தலைவைத்த காப்பு”
இந்தச் சீவகசிந்தாமணிச் செய்யுளில் கடிதத்தின்
தலைப்பிலே இருந்த காப்புச் செய்யுளைப் படித்தான்
என்று பாடியுள்ளார் திருத்தக்கதேவர் என்று
கருதுகிறேன். தேவரே “ஐந்நூறு நூறு தலையிட்ட வாறா யிரவர்”
எனப் பாடுகிறார். 50000+6000 = 56000, தேவர் காலத்தில்
எண்முறை மாறிவிடுகிறது. எனவே, 50K தலையிட்டு
முதலாக வருகிறது.
2/3/தொண்டு(9) தலையிட்ட ... எனத் தொடங்கும்
தொல்காப்பியச் சூத்திரங்களின் பொருளைச் சிந்திப்போம்.
தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களில் உள்ள எண்கள்
இப்போதைய இடமிருந்து வலமாக எழுதப்பெறவில்லை.
வட இந்தியா போலவே, வலமிருந்து இடமாகவே
பேரெண்கள் எழுதப் பட்டுள்ளன. எனவே தான்,
699 என்றால் 996 என இருக்குமாதலால், தொல்காப்பியர்
“தொண்டு தலையிட்ட” எனச் சூத்திரிக்கிறார் என
எண்ணுகிறேன். பிற்காலத்தில் வடக்கே இருந்து வந்த
இந்த வலமிருந்து இடமெழுதும் எண்முறை மாறியிருக்கிறது
என்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது.
இனி, “தலையிட்ட” என்னும் தொடருக்கு
முழுத் தொல்காப்பியத்துக்கும் அரிய உரை
எழுதிய ச. பாலசுந்தரனாரும், முன்னுரையில்
தி. வே. கோபாலையரும் கூறும் உரையை
தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் தரும் எண்கள்
எழுதும் முறையுடன் ஒப்பீடு செய்தல் வேண்டும்:
http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=2&pno=21
"நூ.103: மூன்று தலையிட்ட முப்பது, இரண்டு தலையிட்ட இருபஃது -
இவை ஏகாதசம், துவாதசம் போன்ற உம்மைத்தொகைகள் அல்ல.
தம்மகப்பட்டவற்றை முற்கூறிப் பெரிய எண்களைப் பிற்கூறல் தமிழ்மரபன்று;
இது வடமொழிமரபே. தேவைப்பட்டபோது இம் மரபினையும் தமிழில்
கொள்வதனால் சிதைவு ஒன்றுமில்லை என்பதனைக் காட்டவே மூன்று
தலையிட்ட முப்பது போல்வன இடம்பெற்றுள்ளன. [12] (ச. பாலசுந்தரம்).
[12] இம்மரபு தமிழிற்கும் உரியதென்பது என் கருத்து. (தி. வே, கோபாலையர்)
“
தொல். சொல்லதிகாரம்:
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அந்நா லைந்தும் மூன்று தலையிட்ட
முன்னுறக் கிளந்தன உயர்திணை யவ்வே.
”(இ - ள்.) பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறிய வந்த
மூன்றனை முடியிலே உடைய இருபதும் மேற் கிளவியாக் கத்து
முன்னுறச் சொல்லப்பட்ட உயர்திணையன ஆம். (எ - று.)
மூன்று தலையிட்ட அந்நாலைந்து எனக் கொள்க. ”
(கல்லாடனார் விருத்தியுரை).
”இ - ள். பன்மையும் ஒருமையுமாகிப் பாலுணர வரும் மூன்று தலையிட்ட இருபதும்
முந்துற எடுத்து ஓதப்பட்ட உயர்திணை இடத்த, எ - று.
பெயரெச்சம் மொழி மாறிநின்றது. இவ்வாறு மாறிவருவன உடம்பொடு
புணர்த்ததனானும் கொள்க. மேல் ஓதப்பட்ட ஈறுகள் உயர்திணை என்பது
இச்சூத்திரத்தாற் பெறப்பட்டது. அவை இருபத்துமூன்றுமாவன:--அம், ஆம், எம்,
ஏம், கும், டும், தும், றும், கு, து, று, என், ஏன், அல், அன், ஆன், அள்,
ஆள், அர், ஆர், ப, மார் என்பன.” (தெய்வச்சிலையார்)
தமிழ் பிராமி மற்றும் அசோக பிராமி கல்வெட்டுக்கள் தொல்காப்பியத்தின்
எண்களைப் பற்றிய நூற்பாக்களின் “தலையிட்ட” என்பதன் பொருளை
ஆராய உதவுகின்றன. காட்டாக, “மூன்று தலையிட்ட முப்பதிற்று
எழுத்தின்’’ (புணர்-1)
3 [10] 3 என தமிழ் பிராமியில் வரும். “இரண்டு தலையிட்ட முப்பதிற்று
எழுத்து”
எண்ரிருந்தால் 2 [10] 3 என இருக்கும். [10] பத்தின் பிராமிச் சின்னம்.
[100] இன் பிராமிச் சின்னம் ஸ எனத் தமிழ் பிராமியில் உள்ளது (சதம் =
100).
More later.
நா. கணேசன்
> ஆனால், தமிழ் கல்வெட்டுக்களில் பூஜ்ஜியத்துக்கான
> தனிக் குறியீடு இல்லை. 10, 100, 1000 இவற்றுக்கே
> குறியீடுகள் உள்ளன. பூஜ்ஜியத்தைத் தமிழ்க்
> கணிக்குறியீட்டில் ஏற்றியபோது கி.பி. 1825ல்
> பண்டள இராமசாமி நாயக்கர் எழுதிய
> கணித தீபிகையில் முதன்முதலாக பூஜ்ஜியம்
> தனிக்குறியீடாகத் தமிழ் நூல்களில் வருகிறது
> என்ற தகவலைக் கொடுத்திருந்தேன்.
அப்படியா? இது எவ்வளவு தூரம் உண்மை? பூஜ்யமெனும் கருதுகோள் வந்த பின்
அதற்குக் குறியீடு இல்லை என்பது நம்பத்தகுந்ததாக இல்லையே! நாம்
சோம்பேறிகள் இன்னும் தேடிக்கண்டுபிடிக்கவில்லை என்று இதை எடுத்துக்
கொள்ளலாமா? 19ம் நூற்றாண்டில்தான் ‘0’ எனும் குறியீடு தெற்கே
காணப்படுகிறது என்பது புரட்சிக்கருத்தாக உள்ளது!
நா.கண்ணன்
பூஜ்யம் முதலில் வடபுலத்தில் வடமொழியில் தோன்றியது. சூன்யம் என்ற வெறுமையைக் குறிக்கும் குறியீடாகக் கருதப்படுகிறது. பின்னர் பிரெஞ்ச் நாட்டின் கணித அறிஞர் லெபிட்ஜ்சு இருநிலைக் கணக்கிடும் அலகீடுக்கான குறியைத் தேடிக்கொண்டிருந்தபோது அவருக்கு இந்தியாவில் சூன்யத்துக்கு சுழியைப் பயன்படுத்தியது தெரிய வந்தது
கிறித்துவ மத நம்பிக்கையில் ஆழ்ந்திருந்த அவர் இறைவன் உலகத்தைச் சூன்யம் அல்லது வெறுமையிலிருந்து படைத்தான். மனிதனை மண்னிலிருந்து படைத்தான். பெண்னை மனிதனின் இடுப்பெலும்பிலிருந்து படைத்தான் என்ற அடிப்படையில் படைப்புநிலைக்கு ஒன்று என்றும் சூன்யநிலைக்குச் சுழி என்றும் குறியீடு செய்து அவரின் இருநிலைக் கணிப்புமுறையை உலகுக்கு அளித்தார். அதுவே பின்னர் கணினியின் உள்ளுறை குறியீடாக கணினி மொழியாக மாறியது
தமிழர்களுடைய கணக்கிடும் முறையில் சூன்யம் அல்லது சுழி தொடக்கத்தில் இடம்பெறவில்லை
பூஜ்யம் முதலில் வடபுலத்தில் வடமொழியில் தோன்றியது. சூன்யம் என்ற வெறுமையைக் குறிக்கும் குறியீடாகக் கருதப்படுகிறது. பின்னர் பிரெஞ்ச் நாட்டின் கணித அறிஞர் லெபிட்ஜ்சு இருநிலைக் கணக்கிடும் அலகீடுக்கான குறியைத் தேடிக்கொண்டிருந்தபோது அவருக்கு இந்தியாவில் சூன்யத்துக்கு சுழியைப் பயன்படுத்தியது தெரிய வந்தது
கிறித்துவ மத நம்பிக்கையில் ஆழ்ந்திருந்த அவர் இறைவன் உலகத்தைச் சூன்யம் அல்லது வெறுமையிலிருந்து படைத்தான். மனிதனை மண்னிலிருந்து படைத்தான். பெண்னை மனிதனின் இடுப்பெலும்பிலிருந்து படைத்தான் என்ற அடிப்படையில் படைப்புநிலைக்கு ஒன்று என்றும் சூன்யநிலைக்குச் சுழி என்றும் குறியீடு செய்து அவரின் இருநிலைக் கணிப்புமுறையை உலகுக்கு அளித்தார். அதுவே பின்னர் கணினியின் உள்ளுறை குறியீடாக கணினி மொழியாக மாறியது
தமிழர்களுடைய கணக்கிடும் முறையில் சூன்யம் அல்லது சுழி தொடக்கத்தில் இடம்பெறவில்லை
Q: What can you tell me about Tamil Digit Zero?
A: "Tamil Digit Zero" is a modern innovation. An encoding for Tamil zero was added as of Unicode 4.1, U+0BE6 TAMIL DIGIT ZERO, for implementations which need to support it. For more information on Tamil digits please see Unicode Technical Note #21: "Tamil Numbers".
N. Ganesan
வடபுலத்தில், ‘0’ எனும் குறியீடு காணப்படும் ஓரிடத்தை பிபிசிக்காரர் காட்டுகிறார்.
இன்னும் கூட நம்புதற்கு முடியவில்லை. சூன்யமெனும் கருதுகோள்
தொல்காப்பியர் காலத்திலேயே உண்டு, ஆனால் அதற்கான குறியீடு இல்லை என்பது!
ஏன்?
கணிதம் எப்படி காலத்தை ஓட்டியது?
நா.கண்ணன்
2012/8/15 N. Kannan <navan...@gmail.com>:
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> பாபிலோன் மற்றும் இந்தியாவின் வடபுலம் தவிர மற்ற மொழிகளில்
> கண்ணெழுத்துக்கள் என அழைக்கப்படும் எண்களுக்கான நெடுங்கணக்கில் சூன்யம்
> என்ற கருத்துருவுக்கான எழுத்துருவோ வரிவடிவமோ இல்லை
பத்தில் குறைவுடையது ஒன்பது, 100ல் குறையுடயது 90 என்றெல்லாம் கணக்கிடும்
போது 10க்கும் நூறுக்கும் எது வித்தியாசம் என்று எப்படிச்
சொல்லியிருப்பர்? 10க்கு ஒரு சைபர், 100க்கு இரண்டு சைபர் என்றுதானே
சொல்லியிருக்க முடியும்? குறியீடு இல்லாமல் எப்படி? எங்கேயோ உதைக்கிறதே!
இதில் அரேபியர் போல வலமிருந்து இடம் எண்களை எழுதினர் எனும் புதுக்கதை
வேறு. சங்ககாலத்தின் மீது நம்பிக்கையே போச்சு -))
க.>