Tamil stories

11 views
Skip to first unread message

♥♥♥ Gud Friends™ ♥♥♥

unread,
Aug 2, 2007, 3:35:03 AM8/2/07
to

For those who are

NOT  sending mail to me. .......

 
 


FunAndFunOnly (www.mails4u.net.tc)

என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...

என்னுடைய வாழ்க்கை
தேவை
தேடல் என
சுவாரஸ்யமாக இருக்கிறது.

தேவையின் அவசரம்
தேடலை முடுக்குகிறது.
கிடைத்ததன் திருப்தி
இன்றுவரை இல்லை...
அடுத்த தேடலை நோக்கியே
அவசர வாழ்க்கை...

ஆசை என்றில்லாமல்
அவசியம் என்றே
தீர்மானிக்கப்படுகின்றன
தேடல்கள் அனைத்தும்.

மனமென்ற குரங்கு
தாவிக்கொண்டே இருக்கிறது
இருப்பினும்
என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்

 

 
கண்டவுடன் ஏற்பட்டது அது தெய்வீகக்காதல்! அடுத்தவளையும் கண்டேன் ஏற்பட்டது மறுபடியும் தெய்வீகக்காதல்! நில்! மறுபடியுமா? தெய்வமே. நல்லவேளை. முதலைத் தொடங்குமுன்னே நல்லவேளை அடுத்தவளையும் கண்காட்டினாய் அப்போதெனக்குப்புரிந்தது இது தெய்வீகக்காதலல்ல. இது வயநீர் காதல். வயநீர் -
தாயின் அதட்டலிலும்
தந்தையும் அறிவுரையிலும்
ஆசிரியையின் கண்டிப்பிலும்
நண்பனின் ஏளனத்திலும்
காதலியின் கோபத்திலும்
கூட தெரியும் அன்பு
 நடந்ததெல்லாம் நன்றாகவே நடந்தது. எரிமலைஅனல் நன்மைக்கு? ஆழியின் சீற்றம் நன்மைக்கு? அணுகுண்டின் தீவிரவாதம் நன்மைக்கு? மனதின் மதவாதம் நன்மைக்கு? ஆம்...அழிக்கவேண்டியவைகளை அழித்து விட்டால் நடந்ததெல்லாம் நன்மைக்கு! நடப்பதுஉம் நன்மைக்கு!? மந்திரவாதம் மூடம்! மனவியலும் ஜொதிடமும் மூடம்.. சக்தி செறிவித்தல் அறிவுவாதமாம். பிரார்த்திப்பதும் அறிவுவாதமாம். அறியாததெல்லாம் மாந்தற்ரு அறிவிலிகளின் மூடநம்பிக்கை
 
 மகா மாரியம்மன் [ஈ சூன்] 2

கோயில் வரலாறு

சிறுகுடிலில் மரத்தினால் செய்த மாரியம்மன் சிலையைச் செம்பவாங் எஸ்டேட் தோட்டத்
தொழிலாளர்கள் வழிபட்டு வந்தாக சொல்லப்படுகிறது. பிறகு அம்மனின் திருவுருவம் சுதையினால்
செய்யப்பட்டுச் செம்பவாங் இரப்பர் தோட்டத்தில் ஒரு சிறிய ஆலயத்தில் வைக்கப்பட்டதாகக்
கூறப்படுகிறது. இவ்வாலயம் அப்பகுதியில் வசித்த மக்களுக்கு ஒரு முக்கிய சந்திப்பு இடமாக
அமைந்தது. இரண்டாம் உலக போர் 1941-1945 வரை போர் மேகம் சூழ்ந்திருந்த காலத்தில்,
உயிர்க்கே உத்திரவாதம் இல்லாத நிலையில் ஜப்பானியரின் கொடுமையான ஆட்சியில் ஆலயத்தைச்
சரிவர பராமரிக்க இயலாமற்போனது. ஜப்பானியர் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சி வந்த
போதும், முன்போல் தமிழர்கள் கூடுதலாகத் தோட்ட தொழிலாளர்கள் வரவில்லை. ஆகையால்
செம்பவாங் 12-வது மைலில் இருந்து வந்த ஆலயத்தை 7-வது மைலிருந்த செம்பவாங் ஹில்ஸ்
(Sembawnag Hill) எஸ்டேட்டிற்கு இடம் மாறியது என்று நம்பபடுகிறது.

ஆலயத்தைப் பராமரிப்பதில் தொடர்ந்து இடர்களும், சிரமமும் ஏற்பட்டதால், 1948- ம் ஆண்டு
சில தொண்டர்களின் முயற்சியால், நீ சூன் பகுதியில் [மண்டாய் ரோடு] 10-வது மைலில் ஆலயம்
அமைக்கப்பட்டது. 1950 -களில் சுதையிலான தெய்வச் சிலைகள், மகாபலிபுரத்திலிருந்து
தருவிக்கப்பட்ட கருங்கல் விக்கிரங்களாக, ஸ்தாபனம் செய்து குடமுழுக்கு செய்யப்பட்டது.
1971-ம் ஆண்டு மற்றும் ஒரு புதுப்பிப்பு பணிக்குப் பிறகு கும்பாபிஷேகம் கண்டன.

மாரியம்மன், விநாயகர், முருகன், சிவன், கிருஷ்ணர் ஆகிய விக்கிரங்களுடன் சனீஸ்வரன்,
நாகர் ஆகிய விக்கிரங்கள் ஸ்தாபனம் கண்டது. அப்போது ஆலயத்தின் கூரையில் கலசம் ஒன்றும்
அமைக்கப்பட்டது.

நகர விரிவாக்கமும், நகர சீரமைப்பும் விரைவாக நிகழ்ந்ததால் 1981 - ஆண்டில் சிங்கப்பூர்
அரசாங்கம் புதிய ஆலயத்திற்கான புதிய இடத்தினைத் தேர்ந்தெடுக்கும்படி கோரியது. ஆலயம்
புதிய வீடமைப்புப் பேட்டை அருகில் அமைக்கவும், பொது போக்குவரத்து மூலம் எளிதில்
கோயிலுக்கு வரக்கூடிய சாத்தியத்தைக் கவனம் கொள்ள வேண்டியதாகியது.

அதன்படி 1993- ஆம் ஆண்டு ஈ சூன் வீடமைப்புப் பேட்டையில் 2000 ச.மீட்டர் அளவில்
30 வருட கால குத்தகைக்கு நிலம் 5 இலட்ச வெள்ளிக்கு ஒதிக்கீடு செய்தது.

1994 -ஆம் ஆண்டு தொடங்கி ஆலய கட்டுமான பணி 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,
8-ம் நாள் பால ஸ்தாபன கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

மாரியம்மன் கோவிலின் மூலவர் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன். கருவறை, முகமண்டபம்
இவைகளுடன், கருவறைக்கு மேலே இரண்டு தலங்களுடன் எண் வடிவத்தில் விமானம்
அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இரண்டு தலத்திலும், பராசக்தியின் சிறப்பான
அவதாரமான சிலைகள் செய்யப்பட்டுள்ளன. பதினான்கு வடிவங்களில் அம்பாள் வீற்றிருக்கிறாள்.
தெற்கு புறத்தில் விநாயகப் பெருமானும், வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சன்னதியும்.
மாரியம்மன் சன்னதியின் தெற்குப்புறம் சரஸ்வதி, துர்க்கை, பெரியாச்சி ஆகிய மூர்த்தங்கள்
உள்ளன. வடக்குப் பக்கம் கிருஷ்ணர், மகா லட்சுமி, சிவபெருமான் அருவத் திரு மேனி,
வெங்கட பெருமாள் மூர்த்தங்களும், கோவிலின் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள்
மண்டபம் அமைந்துள்ளன.

உலக நாயகியாக விளங்கும் அம்பாள் அவதாரம் பலப்பல. அவைகள் 108 சக்தி பீடமாக
பாரதம், பங்களா, பாகிஸ்தான் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இந்த 108 அம்பாளை அங்க
லட்சணங்களுடன், ஆயுத அமைப்புடன் இந்த கோவில் பிரகாரத்தில் சுதை வடிவில் அமைந்துள்ளது.
இந்த சுதை வடிவிலான 108 அம்பாள் வடிவங்கள் சிங்கப்பூரின் மற்ற ஆலயங்களில் காண கிடைக்காது
என்பது குறிப்பிடத்தக்கது.

விழாக்கள்

கொடி மரத்துடன் தங்க முலாம் பூசிய 108 கலசம் ஆலயத்தை அலங்கரிக்கிறது.
ஆடிமாதம் அம்மனுக்குரிய மாதமாகையால் இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
மற்ற விழாக்களான நவராத்திரி, சிவராத்திரி, தமிழ் வருட
பிறப்பு, பிரதேஷம், திருவிளக்கு பூஜை இன்னும்
முக்கிய சமய திருவிழாக்கள் நடைபெறுகிறன்றன.

அம்மையே! ஆத்தாள் உண்மையே! உமையே! ஒப்பற்றவளே நீயே!
அகிலம் முழுவதும் நிறைந்தே அழகினை பொழிபவளே! மாயே!
இம்மை உலகில் எல்லா நலன்களும் பெற்றிடவே ஏற்றருள்
இயக்கி மயக்கி எடுத்தே அணைத்து அனைத்தையும் அளிப்பவளே!
நன்மை எதுவென நானறியச் செய்தருள்வாய் என் கண்ணே!
நாடியும் பாடியும் நயந்தே உன்னடி பற்றிட செய்வாயே!
புன்மைகள் தீர்த்துப் புலன்களை அடக்கிப் பற்றிடச் செய்வாயே!
பொல்லா வினையேன் என்னையே புத்தி தந்து ஆள்வாயம்மா!

,

Sree Maha Mariamman Temple,
251 Yishun Avenus.
Singapore. 769061
Tel : 6756 6374 ௭ 6756 1208. Fax.6756 6084
வண்டி வாங்க ஆசை. பணத் தேவை. வங்கியில் கடன் கோரியிருந்தான். சந்தைதாரர்
விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்துகொண்டிருந்தார்.

தமிழில் கையெழுத்திட்டது திகைப்பை ஏற்படுத்தியது. நன்றி சொல்லி விட்டு
விடைபெற்றவர் மறுநாள் செல்பேசியில் தொடர்பு கொண்டார்.

தாங்கள் தமிழில் கையெழுத்திட்டுள்ளீர்கள். அதனால் இன்னொரு படிவத்திலும்
கையெழுத்திட வேண்டுமென்று வங்கிச் சட்டம் சொல்கிறது என்றார்.

அதனாலென்ன போட்டுட்டா போச்சு! சரி கொண்டு வாங்க என்றவனுக்கு படிவத்தை ஏன்
படித்தோம் என்றாகிவிட்டது.

தாய்மொழியில் கையெழுத்திட்ட குற்றத்திற்காக, படிக்காதவனாகப் பாவித்து
விட்டது அந்த வங்கி. கடன் பத்திரங்களை ஒருவர் வாசித்து பொருள் விளங்கிக்
கொண்டதாக ஒப்புக் கொள்ள வலியுறுத்தி கையெழுத்துக் கேட்டார் அந்த
வங்கியின் சந்தை தாரர்.

இத்தனைக்கும் அவன் படித்து பட்டம் பெற்று பந்நாட்டு நிறுவனம் ஒன்றில்
பணிபுரிபவன்.
காதலில் தோற்றவனின் கவிதை......
 
ஷேவிங் செலவை

சேவிங் செய்தால்

 என் காதலி!!!!!!!!!
 
Can you read this????  

  • Not possible to read anything? then follow the guidelines given below   ...  






 
  • Close your eyes almost 90% so that you can actually read it........!!!!!!!!!!!

 
"Have you ever noticed that anybody driving slower than you is an idiot and anyone going faster than you is a maniac?"

"It's amazing that the amount of news that happens in the world everyday always just exactly fits the newspaper."

"If it were not for Thomas Edison, we would all be watching television in the dark."

"Computers will never take the place of books. You can't stand on a floppy disk to reach a high shelf."

"An consultant is someone who takes a subject you understand and makes it sound confusing."

"Love is so confusing -  you tell a girl she looks great and what's the first thing you do?Turn out the lights!"

"I don't suffer from stress. I'm a carrier."

"The male is a domestic animal which, if treated with firmness and kindness, can be trained to do most things."

"I couldn't repair your brakes, so I made your horn louder."

"Always remember that you are absolutely unique. Just like everyone else."

"When your dreams turn to dust, it's time to vacuum."

"Always borrow money from a pessimist. He won't expect it back. "

"It's better to have loved and lost than to do forty pounds of laundry a week."

"Wealthy people miss one of life's greatest thrills. Making the last car payment."

"They've finally come up with the perfect office computer.If it makes a mistake,it blames another computer."

"Since light travels faster than sound, people appear bright until you hear them speak."

"The two most common elements in the universe are hydrogen and stupidity.But not in that order"

"When I was born I was so surprised I didn't talk for a year and a half."

"Money isn't everything but it sure keeps you in touch with your children."

"Compatible Your money fits in the salesperson's wallet."

"When you are waiting for the bus and someone asks, "Has the bus come yet?".If the bus came would I be standing here?"

"Always and never are two words you should always remember never to use."

"There are three sides to any argument: your side, my side and the right side."

"Giving up smoking is the easiest thing in the world. I know because I've done it thousands of times."

"Doing nothing is very hard to do, you never know when you're finished. "

"Never argue with a fool. People might not know the difference."

"Don't be irreplaceable. If you can't be replaced, you can't be promoted. "

"We are born naked, wet, and hungry, and get slapped on our butt then things get worse."

"It's always darkest before dawn So if you're going to steal your neighbor's newspaper, that's the time to do it. "

"The brain is a wonderful organ. It starts working the moment you get up in the morning and does not stop until you get into the office"

"I always arrive late at the office, but I make up for it by leaving early."

"The guy who invented the first wheel was an idiot; The guy who invented the other three, he was the genius. "

"If our constitution allows us free speech, why are there phone bills?"

"You know the speed of light, so what's the speed of dark? "

"Honesty may be the best policy,  but it's important to remember that apparently, by elimination,dishonesty is the second-best policy."

"If you can't convince them, confuse them."

"I am so clever that sometimes I don't understand a single word of  what I am saying."

"If it weren't for electricity we'd all be watching television by candlelight.";

 

A girl in love asked her boyfriend.
Girl: Tell me. Who do you love most in this world?
Boy: You, of course!
Girl: In your heart, what am I to you?
Boy: The boy thought for a moment and looked intently in her eyes and said, "You are my rib. It was said that God saw that Adam was lonely, during his sleep, God took one of Adam's rib and created Eve. Every man has been searching for his missing rib, only when you find the woman of your life, you'll no longer feel the lingering ache in your heart."

After their wedding, the couple had a sweet and happy life for a while.However, the youthful couple began to drift apart due to the busy schedule of life and the never-ending worries of daily problems, their life became mundane.All the challenges posed by the harsh realities of life began to gnaw away their dreams and love for each other. The couple began to have more quarrels and each quarrel became more heated.


One day, after the quarrel, the girl ran out of the house. At the opposite side of the road, she shouted, "You don't love me!"The boy hated her childishness and out of impulse, retorted, "Maybe, it was a mistake for us to be together! You were never my missing rib!"Suddenly, she turned quiet and stood there for a long while. He regretted what he said but words spoken are like thrown away water, you can never take it back. With tears, she went home to pack her things and was determined in breaking-up. Before she left the house, "If I'm really not your missing rib, please let me go." She continued, "It is less painful this way. Let us go on our separate ways and search for our own partners."

Five years went by...
He never remarried but he had tried to find out about her life indirectly. She had left the country and back. She had married a foreigner and divorced. He felt anguished that she never waited for him.In the dark and lonely night, he lit his cigarette and felt the lingering ache in his heart. He couldn't bring himself to admit that he was missing her.

One day, they finally met. At the airport, a place where there were many reunions and good byes. He was going away on a business trip. She was standing there alone, with just the security door separating them. She smiled at him gently. Boy: How are you?
Girl: I'm fine. How about you? Have you found your missing rib?
Boy: No.
Girl: I'll be flying to New York in the next flight.
Boy: I'll be back in 2 weeks time. Give me a call when you are back. You know my number. Nothing has changed.
With a smile, she turned around and waved good bye.
Good bye...


One week later, he heard of her death. She had perished in New York, in the event that shocked the world.Midnight, once again, he lit his cigarette. And like before, he felt the lingering ache in his heart. He finally knew. She was the missing rib that he had carelessly broken.

Sometimes, people say things out of moments of fury. Most often than not, the outcome could be disastrous and detrimental. We vent our frustrations 99% at our loved ones. And even though we know that we ought to "think twice and act wisely", it's often easier said than done .
Things happen each day, many of which are beyond our control. Let us treasure every moment and everyone in our lives.


Tomorrow may never come. Give and accept what you have today
 
வேக வேகமாய் ஓடி வந்த சுதா பிரதாப்பின் மேல் மோதி நின்றாள். ஒரு நிமிடம் தடுமாறி சுதாரித்தவன்

"எரும மாடே! கண்ணு தெரியல? உங்கப்பா உன்ன இப்படிதான் வளத்தாரா? அடக்க ஒடுக்கம்னா என்னன்னே தெரியாது" என்று திட்ட சுய நினைவுக்கு வந்தவள்

"எவ்ளோ கொழுப்பு இருந்தா நீ எங்கப்பாவ பத்தியெல்லாம் பேசுவ? உங்கம்மாட்ட அப்பவே சொன்னேன். இவனுக்கு நெய் ஊத்தி போடாதீங்க. கொழுப்பு ஏறிட்டே போகுதுனு. உங்கம்மா கேட்டாதான?" என்று இடுப்பில் கைவைத்து அவள் திமிராய் சொல்ல

"ஆமா.... உங்கப்பா மாசம் ஆனா வண்டி வண்டியா நெய் அனுப்பறாரு... போடி.... சொல்ல வந்துட்டா" என்றான் கிண்டலாய்.

"எங்கப்பா எதுக்குடா உனக்கு நெய் அனுப்பனும்?" என்று அவள் எகிற

"ஏ! மரியாதையா பேசுடி.... உங்கப்பா உனக்கு மரியாதை கூட சொல்லி தரலையா? வாங்க மாமா போங்க மாமானு மரியாதையா சொல்லு"

"வாடா மாமா..... போடா மாமா..... இது ஓகேவாடா மாமா உனக்கு???" என்று அவள் பழிப்பு காட்டினாள்.

"எவ்வளவு திமிருடி உனக்கு???" என்றபடி அவன் கையை ஓங்க

"அத்தை.... என்னை அடிக்கறான்" என்று கத்தியபடியே சமையலறைக்குள் ஓடினாள்.

"ஏன்டா அவள்ட்ட சும்மா வம்பு பண்ணிட்டே இருக்க?" என்று ப்ரதாப்பின் அம்மா சலித்துக் கொள்ள

"அவள மொதல்ல சும்மா இருக்க சொல்லுங்கம்மா" என்று அவன் புகார் வாசித்தான்.

"என்னவோ உங்க சண்டைல என்னை இழுக்காதீங்க" என்று அவர் கழண்டு கொள்ள அமுக்கமாய் சுதா கிளுக்கி சிரித்தாள்.

"உன்ன அப்புறம் கவனிச்சிக்கறேண்டி" என்று அவன் விரலை ஆட்டி சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

------------------------------------ooOoo------------------------------------

"ஏய்! என் பெயிண்டிங்ஸ் எடுத்து என்னடி பண்ற?" என்றபடியே வேக வேகமாய் ரூமுக்குள் வந்தான் ப்ரதாப். அவன் பெட்டில் அமர்ந்து அவனுடைய பெயிண்டிங்ஸ் எல்லாவற்றையும் எடுத்து அவளைச் சுற்றி பரப்பி வைத்திருந்த சுதா

"ஓ! இதெல்லாம் நீ வரைஞ்சதா மாமா???!!! நான் கூட ஏதோ பிக்காஸோ பெயிண்டிங்ஸ்தான் வாங்கி வச்சிருக்கியோஓஓஓ.......னு நினைச்சேன்" என்று அவள் உதட்டை பிதுக்கி சிரித்தாள்.

"உன்ன........" என்று பற்களை கடித்தவன் அவள் கழுத்தில் கைவைத்து சுவற்றோடு சாய்த்தான்.

"அய்யோ என்னை கொல்றான் கொல்றான்" என்று அவள் கத்த அவள் வாயில் கை வைத்து பொத்தினான். அவள் பயத்தில் விழிக்க அருகில் வந்தவன் அலைபாயும் அவளிரு விழிகளையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தான். அவள் அப்படியே கண்களை மூட ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன் பின் கைகளை விலக்கி திரும்பி வெளியே சென்றான்.

ஏதோ இனம் புரியாத உணர்வொன்று அவளை சூழ்ந்து கொள்ள அதுவரை சொல்லாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த காதல் மழை மேகம்
கண்ட மயில் தோகையாய் அழகாய் விரிந்து ஆடியது.

------------------------------------ooOoo------------------------------------

கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் வழியில் ஒரு சிறுவன் ஒரு சிறுமிக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுப்பதை கண்டதும் அவளையும் மீறி அவள் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.

"நீ நடக்க ஆரம்பிச்சப்ப பொசுக்கு பொசுக்குனு விழுந்துடுவ. ப்ரதாப் தான் ஓடி வந்து தூக்கி கைப்பிடிச்சி நடக்க வைப்பான்"

"அவன் எப்பயாச்சும் சான்ஸ் கிடைச்சா நல்லா அடிபடற மாதிரி தள்ளி விடலாம்னு ப்ளான் பண்ணிதான் இதெல்லாம் பண்ணியிருப்பான்" என்று அதற்கும் வாயாடியது நினைவுக்கு வர மெலிதாய் புன்னகைத்தாள்.

'இப்படி உன்னோட எப்பவும் சண்டை போட்டேதானடா எனக்கு பழக்கம்? எப்படி எனக்குள்ள வந்த??' என்றவளது எண்ணம் பின்னோக்கி சென்றது.

அவள் பன்னிரெண்டாம் வகுப்பிலிருந்த போது அவன் கல்லூரி இறுதியாண்டு. ப்ராஜக்டிற்காக ஹைதராபாத் கிளம்பி கொண்டிருந்தான். முடித்தபின் அங்கேயே வேலையில் சேர்ந்து கொள்வது போல கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியிருந்தான். அவனுக்கு விடை கொடுப்பதற்காக சுதா வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர். எப்பொழுதும் போல இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது யதேச்சையாய்

"இனிமேல் பாருடி... அங்க போயி ஒரு நல்ல ஃபிகரா பாத்து ஃப்ரெண்டு பிடிச்சு அவளோடதான் பேசுவேன். உன்னோட இனி பேசக் கூட
மாட்டேன்" என்று அவன் சொன்னதும் அவளுக்கு பொசுக்கென்று கோபம் வந்தது.

"நீ பேசலைனு நான் ஒண்ணும் அழலை. எங்கேயோ போயி எக்கேடோ கெட்டு போ...... எனக்கென்ன வந்துச்சாம்" என்று எரிந்து விழுந்தவள் அவனிடம் அதற்கு பிறகு பேசவே இல்லை.

அதற்கு பின் ஒவ்வொரு முறையும் அவன் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் எதோ ஒன்றை தொலைத்தது போலவே தவித்தாள். என்னவென்று புரியாமல் குழம்பினாள். ஃபோன் செய்து பேசலாம் என்று நினைக்கும்போதெல்லாம் அவனாய் பேசும் வரை தானும் பேசக் கூடாது என்ற ஈகோ வந்து தடுத்தது. இந்த நிலையில் முழுத் தேர்வு வந்தது. அதில் கவனம் செலுத்தியதில் அவனைப் பற்றிய நினைவு சிறிது விலகிப் போயிருந்தது. தேர்வுக்கு இரண்டு நாட்களே இருக்கும்போது அவனிடம் இருந்து தேர்வு நன்றாய் எழுத வாழ்த்து அட்டை வந்தது. அதை கண்டதும் வாழ்க்கையில் தொலைத்த அதி அத்தியாவசியமான பொருள் ஒன்று மீண்டும் கைசேர்ந்தது போல பொங்கிய சந்தோஷத்தில் கண்கள் பனித்தது. ஓடிச் சென்று அவசர அவசரமாய் ஃபோன் செய்து அவனிடம் பேசினாள். நான்கு மாதங்களாய் சேர்த்து வைத்திருந்த ஏக்கங்கள் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாள்.

அன்று மனதில் பூத்த காதல் இது நாள் வரை அவளது இதயத்தில் மட்டுமே மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அவனிடம்தான் முதலில் சொல்ல
வேண்டுமென்ற எண்ணத்தில் அவளது நெருங்கிய தோழியிடம் கூட சொல்லாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தாள். ஆனால் அவனிடம்
சொல்வதற்கு இதுவரை தைரியமே வரவில்லை. இதுவரை அவன் என்ன நினைக்கிறான் என்பது பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தவள் நேற்று
அவன் நடந்து கொண்ட விதத்தில் அதையும் சிந்திக்க ஆரம்பித்தாள். இந்த முறை நிச்சயம் சொல்லி விட வேண்டுமென்று முடிவெடுத்த வேளையில்
வீட்டை அடைந்திருந்தாள்.

"அம்மா இங்க பாருங்களேன் உங்க அண்ணன் மகள.... இவளுக்கு அப்போவே கீழ்ப்பாக்கத்துல ஒரு சீட் புக் பண்ணிடலாம்னு அப்பவே சொன்னேன். யாராவது கேட்டீங்களா??? அய்யோ.... இப்ப வேற சீட் கிடைக்குமானு தெரியலையே" என்று ப்ரதாப் புலம்ப அவனை என்ன என்பது போல பார்த்தாள்.

"உனக்கு மொதல்ல சீட் இருக்கானு பாரு" என்று மெதுவாய் சொன்னாள்.

"நானா கைல குடைய வச்சுக்கிட்டு மழைல நனைஞ்சுகிட்டே ட்ரீம் அடிச்சிட்டு வரேன்???" என்று அவன் கேட்டதும் தான் கவனித்தாள் கையிலேயே குடையை வைத்துக் கொண்டு தொப்பலாய் நனைந்திருப்பதை...
தொடரும்....


ப்ரதாப் அவனது கம்ப்யூட்டரில் ஏதோ வேலையாயிருக்க அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்த சுதா "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கிறது" என்று அவனைப் பார்த்து பாடியபடியே வந்தாள். சத்தம் கேட்டு அவன் திரும்பி பார்த்த போது அவசர அவசரமாய் வேறுபுறம் பார்வையை திருப்பினாள். அவன் கையில் காபியை கொடுத்தவள் அவனுக்கு எதாவது புரிந்திருக்குமோ என்ற ஆசையாய் அவனைப் பார்த்தால் அவனோ எதையும் சட்டை செய்யாமல் அவனது வாழ்க்கையின் சந்தோஷமே அந்த காபியை குடிப்பதில்தான் இருக்கிறது என்பது போல காபியை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தான். சற்றே எரிச்சலுற்றவள் இன்று எப்படியாவது சொல்லி விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். எவ்வளவுதான் தைரியமான பெண்ணாயிருந்தாலும் காதல் கோழையாக்கி விடுவது இயல்புதானே. அதற்கு சுதா மட்டும் விதிவிலக்கா என்ன? எப்படி ஆரம்பிப்பதென்று யோசித்தவள் மீண்டும் பாடலின் துணையையே நாடினாள்.

"காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவி நான்" என்று அவனுக்கு நேராய் ஜன்னலில் சாய்ந்து நின்றபடி பாடினாள். இம்முறை அவளது பாடலுக்கு செவி சாய்த்தவன் நிமிர்ந்து பார்த்தான். இப்பொழுதாவது புரிந்து விட்டதா? இதயம் படபடவென்று வேகமாய் அடிக்க கண்களில் காதல் ததும்ப அவனை ஆவலாய் பார்த்தாள்.

"ஏன்டி..... ஏழாங்கிளாஸ்லயே ஏழு தடவ உக்காந்து உக்காந்து வந்த..... நீயெல்லாம் எங்க ஒரே அட்டம்ப்ட்ல பாஸ் பண்ண போற?" என்று சத்தம் போட்டு சிரித்த சிரிப்பு அவளுள் இருந்த சுயமரியாதையை தட்டி எழுப்ப

"ட்வெல்த்லயும் ஸ்கூல் ஃபர்ஸ்ட்.... இதுவரைக்கும் எல்லா செமஸ்டர்லயும் ஃபர்ஸ்ட் மார்க்... என்ன பாத்தாடா ஏழாங்கிளாஸ்லயே ஏழு தடவ ஃபெயிலுனு சொல்ற" என்றபடியே அவன் தலையில் அடித்தாள். அவன் சிரித்தபடியே தடுக்க கோபம் பொங்கியவளாய் அறையை விட்டு வெளியேறினாள்.

நேராக வீட்டிற்கு வெளியே சென்றவள் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தாள். கோபத்தில் இதழ்கள் துடிக்க ஒரு ஐந்து நிமிடம் அமைதியாய் இருந்தாள். ச்சே. எப்பவும் போல விளையாட்டுக்குதான பேசினான். ஏன் இப்படி கோபப்பட்டு வந்தேன் என்று தன்னைதானே கடிந்து கொண்டவளுக்கு இது அவனது கிண்டலினால் வந்த கோபம் அல்ல. அவளது காதலை அவன் புரிந்து கொள்ளாததால் வந்த கோபம் என்று தெளிவாக புரிந்தது. ப்ச்.... பாவம் அவனை வேறு அடித்து விட்டோமே என்று வருந்தியவள் எழுந்து அவனது அறைக்கு சென்றாள். அவன் யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததால் அமைதியாய் பின்னால் நின்றாள்.

"டேய்! ப்ளீஸ்டா செல்லம். நாளைக்கு உன்னை கண்டிப்பா ஷாப்பிங் கூட்டிட்டு போறேன். இதுக்காக எல்லாம் பேச மாட்டேனு சொல்லாத.... நீ பேசாம என்னோட யார் பேசுவாங்கன்னு சொல்லு.... செல்லம் இல்ல.... தங்கம் இல்ல.... என் புஜ்ஜி இல்ல....." என்று அவன் பாட்டுக்கு கொஞ்சி கொண்டிருக்க அவளுக்கு ஏதோ சுறுசுறுவென்று ஏறியது. சிறிது நேரத்தில் அவன் வைத்து விட அவன் முன் போய் நின்றவள்

"யாருகிட்ட மாமா இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்த?" என்றாள்.

"இப்போதான் பெரிய இவளாட்டம் கோவிச்சிக்கிட்டு போன? இப்ப மட்டும் எதுக்குடி பேசற?"

"நீ மொதல்ல சொல்லு.... யார்ட்ட பேசிட்டு இருந்த?"

"என் ஃப்ரெண்டுடி.... கூட வொர்க் பண்றா...."

"அதுக்குனு இப்படி கொஞ்சிட்டு இருக்கற"

"ஏய்! அவ எனக்கு ரொம்ப க்ளோஸ். இன்னைக்கு ஷாப்பிங் போகணும்னு சொல்லியிருந்தா. என் டேமேஜர் அதுக்குள்ள வேலைய குடுத்து உக்கார வச்சுட்டாரு. அதான் கோவிச்சிக்கிட்டு பேச மாட்டென்றா" என்றவாறு அவன் எழுந்து வெளியே செல்ல அவன் சட்டையை பிடித்து உள்ளிழுத்தாள். அவனை சுவறோடு சாய்த்து அவன் சட்டை காலரைப் பிடித்து

"இங்க பாரு. இனிமேல் ஃப்ரெண்டு அவ இவனு யார்கூடயாவது சுத்திட்டு இருந்த...... என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது...... சரியா?" என்றாள். அவன் திகைத்து விழிக்க

"இங்க பாரு மாமா உன்னைதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு என்னைக்கோ முடிவு பண்ணிட்டேன். ஐ லவ் யூ"

அவன் விழிகள் அதிர்ச்சியில் அப்படியே உறைய
"இங்க பாரு உனக்கு ரெண்டே ரெண்டு சாய்ஸ்தான். ஒண்ணு மி டூன்னு சொல்லு. இல்லைனா எப்போ கல்யாணத்த வச்சுக்கலாம்னு கேளு".
அவன் மௌனமாய் இருக்கவே

"நீ எனக்கு தாலி கட்டறியா இல்ல உன்னை தூக்கிட்டு போய் நான் கட்டவா?" என்று அவள் பொறுமையிழந்து கேட்கவும் நினைவு வந்தவனாய் அவள் கையை எடுத்து விட்டவன்

"என்னடி விட்டா ரொம்ப பேசிட்டே போற?" என்று மீண்டும் சேரில் அமர்ந்தான்.

"உன் பதில் என்னன்னு சொல்லு"

எவ்வித உணர்ச்சியுமின்றி ஒரு நிமிடம் அவளையே இமைக்காமல் பார்த்தான்.
"ஏன்டி உனக்கு இப்படியெல்லாம் தோணுது? இதுவரைக்கும் எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்ல. இனிமேலும் வருமோனு தெரியாது" என்று அவன் சொன்னதை கேட்டதும் அவளால் அங்கே நிற்க முடியவில்லை. எதோ இருட்டிக் கொண்டு வருவது போல இருந்தது. அப்படியே தலையை பிடித்துக் கொண்டு பெட்டில் அமர்ந்தாள். ஒரு ஐந்து நிமிடம் பொறுத்து அவன் எழுந்து அவளருகில் வந்தான்.
"என்னடி ஆச்சு?" என்றபடி அவள் தலையில் கைவைக்க அவனது கைகளை பட்டென்று தட்டி விட்டாள். வேகமாய் எழுந்தவள்

"இங்க பாரு. இனிமேல் நீயா வந்து கேட்டா ஏன் காலைப் பிடிச்சு கெஞ்சினா கூட நான் உன்னை நிச்சயமா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று அவனை நேராக பார்த்து சொல்லி விட்டு விடுவிடுவென்று அறையை விட்டு வெளியேறினாள்.
தொடரும்......

Death of an Inn ocent ( pOem )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

***********
D.Bala Ganesan
 
+91 99 4 22 22 344
 

Reply all
Reply to author
Forward
0 new messages