-சுபா
அம்மையீர் சுபா அவர்களுக்கு வணக்கம்,
அப்போது நான் சிறுவன், 6ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்,
வீட்டில் ஒரு பெரிய அறை, அதில் ஒரு பெரிய கொசுவலை. உள்ளே, நான், அண்ணன்
தம்பி தங்கை அன்னை தந்தையுடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்,
திடீரென பெரிய சப்தம்,
விழித்துப் பார்த்தால் கொசுவலையைக் காணோம்,
என்னைப் போல் எல்லோரும் எழுந்து உட்கார்ந்து இருந்தனர்,
என் தந்தை கையில் ஒரு குடத்தை எடுத்து வந்து அதில் இருந்த தண்ணீரை
அப்படியே தன்தலை ஊற்றிக் கொண்டார், ஒரு விதமாகச் சப்தம் செய்தார்,
மற்றொரு குடத்தை எடுத்து வந்து, தண்ணீரை எங்கள் மீதும் ஊற்றினார்,
பயங்கரமாகச் சப்தம் செய்தார், "எங்கேயடா வந்து உன் வேலையைக்
காட்டுகிறாய்" என்றார், ஆனால் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும்
வீட்டில் இல்லை,
மிகவும் பயந்துபோய் இருந்தோம்,
நாங்கள் எல்லாம் பயந்து ஒரு மூலையில் போய் இருந்து கொண்டோம்,
எங்களை அந்த இடத்திலேயே இருக்குமாறு கையைக் காட்டினார்,
வீட்டில் இருந்த ஒரு செல்ப் அதுதான் பூசை அறை,
அதைத் திறந்தார்,
விபூதி எடுத்துப் பூசிக் கொண்டார்,
லத்திக் (காவல்துறையினர் பயன்படுத்தும் கம்பு) கம்பைக் கையில் எடுத்துக்
கொண்டு ஓடுடா! ஓடுடா! என விரட்டிச் சென்றார். எவ்வளது தூரம் சென்றார்
என்று அறியோம்,
சிறிதுநேரம் சென்று மீண்டும் திரும்பி வந்தார்,
இப்போது, மிகவும் இயல்பாக நடந்து கொண்டார்,
எங்களுக்கு எல்லாம் திருநீறு இட்டார்,
அவருக்குத் தன் பெண்டு பிள்ளைகளைத் தீய சக்தியிடமிருந்து காப்பாற்றி
விட்டோம் என்று அவ்வளவு மகிழ்ச்சி,
பயப்படாதீர்கள், அவனை விரட்டி விட்டேன், இனிமேல் பயம் இல்லை என்று சொன்னார்,
வந்தவன் யார்? விரட்டியது யார்?
அன்பன்
கி. காளைராசன்
--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சாமி வந்து ஆடுவதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது. போலியும்
இருக்கின்றதா என்ற உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.
சாமி வந்து ஆடுவதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது. போலியும்
இருக்கின்றதா என்ற உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.-சுபா

சாமி வருவது அருள் ஆடுவது என்பன விமர்சிக்கபடுவது கூட சாமி குத்தம் என்ற
மனோபாவம் உள்ளது
.நடைமுறையில், இறைவனே நேரடியாக அருள்பாலிக்கலாம்.பல மகான்கள் இறை
நெறியாளர்கள் இவர்களை விடுத்து மற்றவர்களை தேர்வு செய்வது முறையாக
இருக்குமா ?
பெரும்பாலும் இம்மாதிரி நிகழ்வுகள் பயமுறுத்தல் பாணியில் இருப்பது ஏன் ?
மக்களின் குறைகளும் துன்பங்களும் உடனடியாக விலக வேண்டும் என்கிற
மனப்பாங்கு இது போன்ற செய்திகளுக்கு உரமாக அமைகின்றன.
பாப்பாரப்பட்டிநாகராஜன்
On Jan 19, 1:57 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> அருள் வந்து ஆடுவது உலகின் மிக தொன்மையான ஆன்மிகம்.
> சைபிரியா,தைவான்,செவ்விந்தியர்கள் என பல தொல்குடி மக்களிடம் இப்பழக்கம்
> இருக்கு.
>
> http://en.wikipedia.org/wiki/Shamanism
>
> --
> செல்வன்
>
> அடுத்தவனை கெடுத்ததில்லை
> வயத்துலதான் அடிச்சதில்லை
> உழைப்பை நம்பி பொழச்சி நிக்கறேன்
> நான் உண்மையாக ஊருக்குள்ளே
>
அருள் வந்து ஆடுவது உலகின் மிக தொன்மையான ஆன்மிகம். சைபிரியா,தைவான்,செவ்விந்தியர்கள் என பல தொல்குடி மக்களிடம் இப்பழக்கம் இருக்கு.
http://en.wikipedia.org/wiki/Shamanism
செல்வன்,
ராஜசங்கர்
ஐயா ராஜசங்கர் அவர்களுக்கு வணக்கம்,
எங்களது குலதெய்வ வழிபாட்டின் (வருடம் ஒருமுறை) சாமி ஆடுவார்கள்,
அதில் சாமி ஆடுபவர் முன் நின்று, "நீயார்? ஏன் ஆடுகிறாய்? என்ன
வேண்டும்?" என்று பூசாரி (வேளார்) கேட்பார்!
அதற்கு சாமி ஆடுபவர்கள் ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரைக் கூறுவர்,
உடனே விபூதி குங்குமம் மடித்துப் போடுவார்கள்,
ஆண் தெய்வத்தின் பெயர் கூறிய சாமியாடி விபூதிப் பொட்டலத்தைச் சரியாக
எடுத்துக் கொடுக்க வேண்டும்,
பெண்தெய்வத்தின் பெயர் கூறிய சாமியாடி குங்குமம் எடுத்துக் கொடுக்க வேண்டும்,
(அப்படிச் சரியாக எடுத்துக் கொடுக்காதவருக்குப் பூசாரி திருநீறு
அணிவித்து சாமியை மலையேற்றி வைக்க வேண்டும்,)
சரியாக எடுத்துக் கூறிய சாமியாடி மட்டுமே தொடர்ந்து சாமியாடி குறி
சொல்வர், குலத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக அவரது காலில் கும்பிட்டு
விழுந்து ஆசி பெறுவோம்,
இதில் சிறப்பு என்ன வென்றால்,
எனக்கு வயது 54 ஆகிறது, நான் அறிந்த வரையில் எங்களது குல தெய்வ வழிபாட்டின் போது
எல்லாச் சாமியாடியும் மிகச் சரியாகவே குறி எடுத்துக் கொடுப்பர்,
இதை அறிவியல் அடிப்படையில் நம்பியே ஆக வேண்டியுள்ளது,
அன்பன்
கி. காளைராசன்
சாமி வந்து ஆடுவது அடக்கி வைத்த உணர்ச்சிகள் பீறிட்டு கிளம்புவது என நினைக்கிறேன். என் மாமியார் மிகவும் அடக்கமான மருமகள் அவரின் மாமியாரால் அடக்கி ஆள பட்டவர், அவரை யாரும் ஒரு மனுஷியாகவே மதிக்கவில்லை. அவருக்கு பழனிக்கு போனால் சாமி வந்துவிடும். எல்லாரையும் ஏகத்தாளத்தில் கூப்பிடுவார். அவரின் மாமியார் சிவலோக பதவி அடைந்தவுடன் இவருக்கு சாமி வருவதில்லை. :)
ராஜசங்கர்
ஐயா ராஜ சங்கர் அவர்களுக்கு வணக்கம்,
தங்களது இக்கருத்தை என்னளவில் ஏற்க இயலவில்லை,
எங்களது குலதெய்வ வழிபாட்டின் போது கருப்பண சாமி ஆடுவார் ஒருவர் (எனக்கு
பங்காளி முறை) நடத்திய உண்மைச் சம்பவம்,
ஒருமுறை கிராமத்தில் ஒரு குழந்தைக்கு நோய் வந்து மருத்துவமனையில்
கைவிட்டுவிட்டனர், இன்னும் சில நாட்கள்தான் உயிரோடு இருக்கும்
இக்குழந்தை, எடுத்துச் செல்லுங்கள் எனக்கூறிவிட்டனர்,
பெற்றோர் குழந்தையைத் தூக்கி வந்து விட்டனர்,
நல்லிரவு நேரம், குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருக்கிறது.
குழந்தையின் தாய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து, கருப்பணசாமியாடி
வீட்டுக் கதவைத் தட்டியுள்ளாள். சாமியாடி எழுந்து வந்து கதவைத் திறந்து
பார்த்து என்ன எனக் கேட்க!
நடந்த விபரங்களை அந்தத்தாய் கண்ணீரும் கம்பலையுமாகக் கூறியுள்ளாள்,
இதற்குள் கிராமமே சாமியாடி வீட்டில் திரண்டு விட்டது.
சாமியாடி பூசைஅறையில் தீபத்தை ஏற்றி வைத்து
சாமியாடியுள்ளார். அப்போதும் விபூதியும் குங்குமமும் கட்டிப்
போட்டுள்ளனர், "கருப்பணன் திருநீறு எடுத்துக் கொடுகிறேன்டா" என்று
கூறிச் சாமியாடி திருநீற்றுப் பொட்டலத்தைச் சரியாக எடுத்து, அதனுள்ளே
இருந்த திருநீற்றை அந்தக் குழந்தையின் நெற்றி மற்றும் உடலெங்கும் பூசி
விட்டுள்ளார்,
இப்போது மூன்றுவருடங்களுக்கும் மேலாக உள்ளது, அக்குழந்தை நன்றாக
ஆரோக்கியமாக உள்ளது, குழதெய்வ வழிபாட்டிற்கு அக்குழந்தையையும் அழைத்து
வருவார்கள்,
இன்று, அந்த சாமியாடி ரோட்டில் நடந்து சென்றால் போதும், எதிர்
வருவோர், அவரைக் கருப்பணசாமியாகவே நினைத்து அவர் காலில் விழுந்து
கும்பிடுகின்றனர்,
இதை என்ன என்று சொல்வது!
வரும் வைகாசி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக் கிழமை அன்று குலதெய்வ
வழிபாடு வரும். ஆர்வம் இருந்தால் வந்து வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் அழைக்கிறேன்,
அன்பன்
கி.காளைராசன்
உண்மையிலேயே தெய்வம் என்னும் மஹாசக்தி ஒரு மனிதனின் உடலில் இறங்கினால்
அன்புடன்கால்கரி சிவா
திருச்சிற்றம்பலம்.
ஐயா கால்கரி சிவா அவர்களுக்கு வணக்கம்,
அறிமுகம்,
ஐயா, எனது பெயர் கி.காளைராசன்
காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளாராகப்
பணியாற்றி வருகிறேன்,
திருப்பூவணம் கோயில் அமைப்பு அதன் சிறப்பு தொடர்பாக ஆய்வு
செய்துள்ளேன். திருப்பூவணப் புராணத்தை ஆய்வு செய்துள்ளேன்,
திருப்பூவணக் காசி, திருப்பூவணப் புராணம், புவனம் போற்றும் பூவணம் எனும்
மூன்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன்,
ஆன்மிகம் அறிவியல் அடைப்படையிலானது என ஐந்து கட்டுரைகள் எழுதி வெளியாகியுள்ளன,.
திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளேன்
தங்களை எல்லோரும் சிறப்பு செய்வதால், தாங்கள் ஓர் நல்ல நண்பர் என்ப
தை உணர்ந்து கொள்கிறேன்,
தங்களது குலாமில் என்னையையும் இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்
http://www.freewebs.com/thirupoovanam/ என்ற இணையத்தில் திருப்பூவணப்
புராணம் மற்றும் திருப்பூவணக்காசி நூல்கள் உள்ளன. படித்துப் பயனுற
வேண்டுகிறேன்,
Hello =?UTF-8?B?4K6V4K6+4K6y4K+N4K6V4K6w4K6/IOCumuCuv+CuteCuvg==?=,
Your message about "=?UTF-8?B?UmU6IFtNaW5UYW1pbF0g4K6a4K6+4K6u4K6/IOCuteCuqOCvjeCupOCvgSDgrobgrp8=?= =?UTF-8?B?4K+B4K614K6k4K+BIOCuieCuo+CvjeCuruCviOCur+Cuvj8=?=" was waitlisted.
Please add yourself to my Guest List so your messages will be delivered to my Inbox. Use the link below.
Click here to deliver your message
Thank you,
dr.n...@gmail.com
Powered by Boxbe -- "End Email Overload"![]()
Final-Recipient: rfc822; dr.n...@gmail.com
Diagnostic-Code: X-Boxbe-Notice; Sender not pre-approved. Follow instructions in above notice
Status: 4.7.0
---------- Forwarded message ----------
From: "கால்கரி சிவா" <calga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Date: Thu, 20 Jan 2011 12:13:54 -0500
Subject: Re: [MinTamil] சாமி வந்து ஆடுவது உண்மையா?
> இந்தியாவிற்கு வந்தால் டெல்லியில் இறங்கி ஹரித்துவார், ரிஷிகேஷ் கங்கையில்
> குளித்துவிட்டுதான்
தங்களது ஆன்மிக அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்,
கடந்த 1-1-11அன்று காசியில் கங்காஸ்தானம் செய்யும் பேறு கிடைக்கப் பெற்றேன்,
தாங்கள் எழுதும்போது நானும் உடன் சேர்ந்து கொள்கிறேன்,
மதுரைக்கு வருவதாக பேசிக்கொண்டிருக்கிறோம்.
மதுரைக்கு வரும்போது அவசியம் திருப்பூவணம் (திருப்புவனம்)வந்து
செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்பன்
Whatever noble persons do, others follow.
Whatever standard they set up, the world follows.
இது போன்று தமிழ் இலக்கியத்திலும் ஏதேனும் உண்டென்றால், தயை கூர்ந்து
எவரேனும் பகிர்ந்து இந்த குழப்பத்திற்கு வழிகாட்டுங்கள்.
On Jan 20, 11:59 pm, கால்கரி சிவா <calgarys...@gmail.com> wrote:
> சாமி வந்து ஆடுவதும் பேய் பிடித்து ஆடுவதும் ஒன்றே தானே. ஒன்றில் குறி
> சொல்வார்கள் மற்றதில் திட்டுவார்கள் :)
>
> 2011/1/20 <nore...@boxbe.com>
>
> > Hello =?UTF-8?B?4K6V4K6+4K6y4K+N4K6V4K6w4K6/IOCumuCuv+CuteCuvg==?=,
>
> > Your message about
> > "=?UTF-8?B?UmU6IFtNaW5UYW1pbF0g4K6a4K6+4K6u4K6/IOCuteCuqOCvjeCupOCvgSDgrobgrp8=?=
> > =?UTF-8?B?4K+B4K614K6k4K+BIOCuieCuo+CvjeCuruCviOCur+Cuvj8=?=" was
> > waitlisted.
>
> > Please add yourself to my Guest List so your messages will be delivered to
> > my Inbox. Use the link below.
>
> > Click here to deliver your message
> > <https://www.boxbe.com/crs?tc=6639492005_73644170>
>
> > Thank you,
> > dr.n.a...@gmail.com
>
> > [image: Boxbe] <http://www.boxbe.com/how-it-works?tc=6639492005_73644170>
> > Powered by Boxbe -- "End Email Overload"
>
> > Final-Recipient: rfc822; dr.n.a...@gmail.com
என் அனுபவத்தில் மதுரையில், திருநகரில் நான் பள்ளிப்படித்தபோது நடந்தது.அண்ணாமலை பல்கலையில் விவசாயம் பயிலும் ஹாக்கி ப்ளேயர் - என் பள்ளித் தோழனின் நண்பன். அவனை திடீரென்று வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டார்கள்.பெண் போல் பேசுவதும் பெண் போல் நடப்பதும், நாம் காண்பதும் கேட்பதும் உண்மையா என்று தெரியவில்லை. அவர்கள் வீட்டு வேலைக்கார அம்மாள், சக்தி உபாசகி. கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு, அந்த பையனை ஒரு ஓரத்தில் உட்கார வைத்து, நாலு சாத்து சாத்தினார்கள். என்னிடம், ‘அய்யரே, கந்தர் சஷ்டி கவசம் சொல்லு, தெரியுமில்லஏ,” என்றார்கள். அவரது உருளும் கண்களுக்கும், வேப்பிலைக்கும் பயந்து, மளமளவென சஷ்டி கவசம் சொல்லலானேன். கொஞ்ச நேரத்தில், ‘ மோகினிப் பேய்’ பிடித்த பையன் சொல்ல ஆரம்பித்தான்/ள்!!! காலேஜ் காம்பஸில் ஒருத்தன் அந்த பெண்ணை ஏமாற்றிக் கொன்றுவிட்டான். அவளோ படிக்காதவள். இந்த பையன் நல்லவனாய் தெரிந்ததும், இவனைப் பிடித்துக் கொண்டாள். நல்ல சாப்பாடும், ஒரு புடவையும் கொடுத்ததும், சத்தியம் செய்து மறைந்து போனாள். நண்பனின் அண்ணன் எல்லாம் சரியானதும், “ஐய்ய, இது என்ன தலைலெல்லாம் விபூதி?” என்று கடிந்து கொண்டே எழுந்திருந்தது, எனக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.சாமி வந்த கதை: என் பெரிய அக்காள், பக்கத்து வீட்டில் கார்த்திக் என்ற குழந்தைக்கு உண்வு ஊட்டுவதற்கு (இவள் மாத கர்ப்பிணி) ‘கார்த்திக், கார்த்திக்’ என்று கூவி அழைக்க, திருத்தணிப் ப்க்கம் சேர்ந்த அவ்ர்களது வேலைக்கார அம்மா, “யேய்,என்று கூவிக் கொண்டே எங்கள் வீட்டில் நுழைந்தாள். அவள் பெரிய முருக பக்தை. அக்கவை உட்கார வைத்து, தலையில் கை வைத்து, கூப்பிட்ட வந்துட்டேன். உன் பிரசவம் நல்லா ஆகும்.” என்று கூறியபடியே சாமி ஆடினார். என் தாயார் உடனே தைரியமாக ‘முருகா, அவ பிள்ளத்தாச்சி. என்ன வேணும் சொல்லு தர்றோம்,” என்றது. பானகம் என்று கேட்டாள்(ர்?). ஒரு குடம் பானகத்தி அப்படியே ‘லபக்’க்கிவிட்டு, முருகன் மலை இரங்கிங்!இதுவும் கண்ணால் பார்த்தது.இப்படி எத்தனையோ சம்பவங்கள்.மனதுக்கும் மூளைக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இந்த உலகில் நடந்து நமக்கு இறைவன் இருப்பதை காட்டுகிறது.பேய்களும் :(இறை சிந்தனை தொடர்ந்து இருந்தால் ‘பேய்கள்’ அண்டா]து. சஷ்டிக் கவசம் காப்பு.சந்திரா (சாமி)
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மேலும் பெண்கள்தான் அதிகம் ஆடுபவர்கள். சிறுவர்களும் உண்டு. ஆண்களில்
பெரும்பாலும் ஏதோ உள் நோக்கத்திற்காக உண்டு.
பொதுவாக பலவீன மனம், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் பம்பை ஒலி கேட்டவுடன்
ஒரு மயக்க நிலைக்குச் சென்றுவிடுவார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்
என்பது அவர்களுக்கே தெரியாது.
ஒருவர் ஆடுவதைப் பார்த்ததும் உணர்ச்சி வயப்பட்டு மற்றவர் சிலரும் ஆடுவது
உண்டு.
உடல் பலவீனம் மட்டும் அன்றி ஒரு சமுதாய அங்கீகாரத்தையும் தனித்தன்மையை
நிலைப்படுத்தவும் சிலர் ஆடுவார்கள்.
ஒலிக்கு உணர்ச்சிகளைத் தூண்டும் தன்மை உண்டு. போருக்குச் செல்லும்
வீரர்கள் போர் முரசு ஒலிக்கக் கேட்டதும் நரம்புகள் முறுக்கேறி துள்ளிக்
குதித்துக் கொண்டு போரிடச் செல்வர்.
பெரும்பாலும் இவர்களுக்குத் தூக்கமாத்திரையும் வைடமின் மாத்திரைகளையும்
சில காலம் கொடுத்து வந்தால் அதே சூழ்நிலையிலும் ஆடாமல் அமைதியாக
மற்றவர்களை வேடிக்கை பார்க்க் காணலாம்.
கூட்டதில் ஒருவராக இருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூட்டத்தின்
எதிர்பார்ப்பைத் தாமும் பகிர்ந்து கொண்டவர்கள் என்பதால் அது தொடர்பான சில
கருத்துகளைக் கூறுவார்கள். அவை பலிதமாகும்போது நாம் வியக்கிறோம்.
இவர்கள் எவரும் மன நிலை பாதிக்கப் பட்டவர் அல்ல. அது வேறு நிலை. நிகழ்
உலகத்திலிருந்து நழுவி நிழல்
உலகைக் கண்டு அதற்கு ஏற்பச் செயல் புரிபவர்கள்.
இவ் விளக்கக் குறிப்புகள் சிலருக்கு ஏற்புடையனவாக இல்லாமல் இருக்கலாம்.
அவர்கள் என்னை நோகவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
எம்.டி.ஜெயபாலன்
On Jan 19, 3:04 pm, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> அன்பின் சுபா,
>
> நீங்கள் சொல்வது நடப்பது இங்கு இந்தியாவில் சர்வசாதாரணம். மனநல மருத்துவரிடம்
> போவது ஒரு தெய்வ குற்றமாக கருதப்படுவதால் இந்த மாதிரி ஏமாற்றும் ஆட்கள் அதிகம்.
> நீங்கள் சொன்னதை போல் நடப்பதை ஒரு ஜோசியரே என்னிடம் ஒப்புகொண்டிருக்கிறார்.
>
> பெண்களாக இருந்தால் ஆணால் பிரச்சினையும், ஆணாக இருந்தால் பெண்களால்
> பிரச்சினையும் பொதுவாக இருக்கும். இதில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக
> எல்லாவற்றையும் கறந்துவிடுவார்கள். ஆர். கே நாராயணன் இதை வைத்து ஒரு கதை எழுதி
> இருந்ததாக ஞாபகம். பொதுவாக எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்களே
> இதில் ஏமாறுகின்றனர். அடுத்தபடியாக பேராசை கொண்டவர்களும் உழைக்காமலே சம்பாதிக்க
> விரும்பும் நபர்கள் இப்படி ஏமாறுகின்றனர்.
>
> ராஜசங்கர்
>
> 2011/1/19 Subashini Tremmel <ksubash...@gmail.com>
> > 2011/1/19 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
> >> சுபா,
>
> >> இதெல்லாம் அமானுடம் என்று தான் சொல்ல முடியும், ஏன், எப்படி என அறிவியலால்
> >> விளக்க முடிவதில்லை.
>
> >> எங்கள் ஊரில் அருள் வந்து ஆடும் ஒருவரிடம் இதைப்பற்றி
>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

--
2011/1/21 Dr M.D.Jayabalan <jayabalan...@gmail.com>
- Show quoted text -
சாமியாடிகள் தம்மை மறந்த நிலையில் ஆடுவதை நான் பல முறை
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
- Show quoted text -
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil