நான் கார் ஓட்டக் கற்றுக் கொள்வதற்கு முன்பு சாலையில் காரை எடுத்தது இல்லை.அன்புடன்பென்னேஸ்வரன்
2009/9/4 sk natarajan <sknatar...@gmail.com>
ஒரு மண்ணின் குரல்
முற்றுப் பெறாத சோகம்
மனதினில் வறண்டு
போன நம்பிக்கை
எழுத்துக்களில் எட்டிப் பார்கின்றதே
இளைஞனே
முக - வரி வந்தாலும்
உன் முகவரியைத்
தொலைத்துவிடாதே
தளர்ச்சியுற்றும் முதிர்ச்சியின்
பக்கம் சாய்ந்து விடாதே
இன்னமும் உன்னிடம்
நிறைய எதிர்பார்த்து
எதிர்பார்த்து இமை சரியாமல்
நிற்கின்றது உலகம்
இளம் - புயலே
இன்னல்கள் களைந்திட
விடியலில் வந்துவிடு
விடுதலை தந்துவிடு
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
மரபு சாரா கவிதைகள் பல நாட்களாக வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
உணர்ச்சிகளை மட்டுமே பாருங்கள் என்கிறார்கள்.
கவிதை ஏன் எழுத வேண்டும்? உள்ளே இருக்கிற உணர்ச்சி அடங்க... அவ்வளவே.
வேறு ஒன்றும் எதிர்பாராதீர்கள்.
திவா
சுஜாதா இருந்த காலத்தில் சிறுகதை பட்டறைகள் நடத்துவார். அதன் நோக்கு
என்னவெனில் நமக்கு முதலில் எழுத்துப் பயிற்சி வேண்டும். அடுத்து எப்படி
சிந்திப்பது என்றும் கற்றுக் கொடுப்பார். சித்திப்பதையெல்லாம்
எழுதக்கூடாது. ஆனால் சிந்தனையைக் கூர்மை செய்ய முடியும்.
நம்மவர் எடுத்தவுடனேயே கவிதைக்கு வந்து விடுகின்றனர். உண்மையில்
கவிதையின் என்பது மொழியின் உச்ச வெளிப்பாடு. அது லலித கலை. அதற்குள்
எடுத்தவுடன் குதிக்கக்கூடாது. அதனால்தான் பெரும்பாலோர் கவிதை, உரைநடையை
மடக்கிப்போட்டது போல் உள்ளது.
உரைநடை கேவலமில்லை. உரைநடை வளர வேண்டும். முதலில் non-fiction முறையில்
உள்ளது உள்ளபடி சொல்லிப்பழக வேண்டும்.
அடுத்து கொஞ்சம் கற்பனை கலந்து வர்ணனை கூட்டி எழுத்திப்பழக வேண்டும்.
மொழி ஆளுமை வந்த பின்னரே கவிதைக் களத்தில் இறங்க வேண்டும்.
மொழி ஆளுமை பெற நிறைய வாசிக்க வேண்டும். எது நல்ல எழுத்து என்று இனம்
காணத்தெரிய வேண்டும்.
எழுதுவதெல்லாம் கவிதையாகாது. எது கவிதை என்றும் கணித வாய்ப்பாட்டில்
சொல்லிட முடியாது. மல்லிகையின் வாசத்தையும், மழை பெய்து முடிந்த பின்
வரும் மண்ணின் வாசத்தையும் கணக்குப்பாடத்தில் விளக்கிட முடியாது. அதை
உணர்ந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.
பென்னேஸ்வரன் மாதிரி நமக்கு நிறைய `நக்கீரர்கள்` வேண்டும். விமர்சனம்
வேண்டும். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சி கைவரவேண்டும்.
வாழ்த்துக்கள்.
நா.கண்ணன்
2009/9/5 sk natarajan <sknatar...@gmail.com>:
> ஐயா நான் சென்றடைய வேண்டிய பாதை எனக்குத் தெரிகின்றது
தேவ்
நான் கார் ஓட்டக் கற்றுக் கொள்வதற்கு முன்பு சாலையில் காரை எடுத்தது இல்லை.
மரபில் இருந்தால்தான் கவிதை என்று இல்லை.
ஆயினும் எதையும் வெண்பாவாக்கும் வித்தகர்கள் உண்டு இச்சபையில்.
க.>
2009/9/6 sk natarajan <sknatar...@gmail.com>:
//எழுதுவதெல்லாம் கவிதையாகாது. எது கவிதை என்றும் கணித வாய்ப்பாட்டில்
சொல்லிட முடியாது. மல்லிகையின் வாசத்தையும், மழை பெய்து முடிந்த பின்வரும் மண்ணின் வாசத்தையும் கணக்குப்பாடத்தில் விளக்கிட முடியாது. அதை
உணர்ந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.//
“இந்தப் பையன் பண்ற காரியத்தைத்தான் ‘அவன்’ தமிழை வச்சிண்டு பண்ணிண்டு இருக்கான்”
இங்கே நடராஜனும் தான் சொல்ல வந்தை பொருள் மாறாமல் மரபுக் கவிதைகயில சொல்லுங்கள் என்று ரொம்பவும் பணிவாகக் கேட்கிறார். இதுவும்தான் சற்று பயமாக இருக்கிறது.
நீங்கள் என்னிடம் கொடுக்கும் மண்ணின் குரல் கவிதையை நான் எழுதினால் இன்னும் மஹா கண்றாவியாக இருக்கும்.ஆனால் அதற்காகக் கவிதைகள் படிக்கக் கூடாது என்றோ நல்ல கவிதைகளை எதிர்பார்க்கக் கூடாது என்றோ ஆசைப்படக் கூடாது என்றோ சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.








//எழுதுவதெல்லாம் கவிதையாகாது. எது கவிதை என்றும் கணித வாய்ப்பாட்டில்
சொல்லிட முடியாது. மல்லிகையின் வாசத்தையும், மழை பெய்து முடிந்த பின்வரும் மண்ணின் வாசத்தையும் கணக்குப்பாடத்தில் விளக்கிட முடியாது. அதைஉணர்ந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.//
என்ன ஒரு முதிர்ச்சியான பார்வை இது. கண்ணன் நன்றாகவும் தெளிவாகவும் சொல்கிறார். எனக்கு சொல்லத் தெரியவில்லை.நடராஜனனின் பணிவு சற்று அச்சம் தருகிறது.
ஏனென்றால் துவக்கத்தில் இதை வி அதிகமாகன பணிவு காட்டிய துரை நேற்று இன்னும் ஒரு கவிதையல்லாத ஒன்றை எழுதியிருக்கிறார். அவருக்கும் நான் அறிவுரை சொல்வதாக நினைத்து ஒருமுறை எழுதியிருந்தேன். ஆனால் அவரும் வேறு மாதிரி தவறாகப் புரிந்து கொர்ணடு கவிதை வடிவத்தில் தன் கோபத்தைப் பதிவு செய்ய முயற்சித்து இருக்கிறார்.
துரை அவர்களையும் என்னையும் ஒப்பிட வேண்டாமே
இங்கே நடராஜனும் தான் சொல்ல வந்தை பொருள் மாறாமல் மரபுக் கவிதைகயில சொல்லுங்கள் என்று ரொம்பவும் பணிவாகக் கேட்கிறார். இதுவும்தான் சற்று பயமாக இருக்கிறது.
இதில் பயமென்ன இருக்கின்றது
இங்கே பிரச்னை மரபுக் கவிதையா புதுக்கவிதையா என்பது அல்ல. கவித்துவம் தான் பிரச்னை என்று நினைக்கிறேன். மொழியை கையாள்வதில்தான் பிரச்னை என்று நினைக்கிறேன்.
அதைத்தான் சொல்லுங்கள் என்கிறேன்
எழுத்தாளர் மௌனியின் நெருங்கி நண்பர் ஒருவர் எனக்கும் நண்பர். அவர் ஒருமுறை சொன்னார். மௌனியிடம் இவர்கள் சாதாரணமாக வீட்டில் உரையாடிக் கொண்டு இருந்தபோது ஒரு எழுத்தாளரின் (பெயர் வேண்டாமே) எழுத்து நடை பற்றி பேச்சு எழுந்ததாம். பேசிக்கொண்டே நண்பர்களையும் வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்த மௌனி வீதியில் ஒரு சிறுவன் நாய்க்குகட்டி ஒன்றின் கழுத்தில் சணல் பிரிக்கயிற்றைக் கட்டி இழுக்க அந்தக் குட்டிநாய் ஏகத்துக்கும் முரண்டு பிடித்து நகரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருந்ததாம்.மௌனி என் நண்பரிடம் சொன்னாராம்.
“இந்தப் பையன் பண்ற காரியத்தைத்தான் ‘அவன்’ தமிழை வச்சிண்டு பண்ணிண்டு இருக்கான்”
ஐயா உண்மையில் இந்த உதாரணம் உங்களுக்கு பெருமை சேர்க்கக் கூடியதா ?
பொதுவாக உரைநடையிலும் சரி. உரைநடை சார்ந்த கவிதையிலும் சரி. வேறு எந்தக் கவிதையிலு் சரி. இந்த வேலையைப் பண்ணாமல் இருக்க முயற்சித்தாலே ஒரு நல்ல கவிதைக்கான துவக்கத்தை நோக்கி நாம் நகரத் துவங்குவோம் என்பது என்னுடைய நம்பிக்கை.
ஐயா உங்க பாணியிலே சொல்ல வேண்டுமென்றால் கார் ஓட்ட வேண்டுமென்றால் காருக்குள் உட்கார்ந்து தான் பழக வேண்டும்
இதைத்தான் கவிதை எழுதத்துவங்கும் நண்பர்களிடம் சொல்ல முயற்சிப்பது. என்ன பிரச்னை என்றால் என்னால் தளுக்காக சொல்ல முடிவதில்லை. (வேறு பல விஷயங்களில் எத்தனையோ சாமர்த்தியங்கள் இருந்தாலும்) இதுபோன்ற விஷயங்களில் எங்காவது அநியாயத்துக்கு மாட்டிக் கொள்கிறேன்.கண்ணன் சொல்வது போல நக்கீரன் என்றெல்லாம் கிடையாது. கொஞ்சம் அதிகப் பிரசங்கம் அவ்வளவுதான். நக்கீரனுக்கும் (நான் சொல்வது தாடி உடைய நக்கீரன்) எனக்கும் மிகப்பெரிய வித்யாசம் நக்கீரன் மிகப்பெரிய அறிவாளி. ஞானி. அவர் அரனையே கேள்வி கேட்டவர். நான் பூசாரிகளுக்கு எல்லாம் நடுங்கிக் கொண்டு இருப்பவன்.இந்த மாத ஜோசியத்தில் அதிகம் பேசக்கூடாது என்று எனக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.கமலம் அம்மையர் துவங்கிய இன்னொரு இழையில் நடராஜனுக்கு நான் ஒரு மடல் அனுப்பி இருக்கிறேன்.
இது தான் ஏன்ஐயா ?
அதை அவர் படித்தாரா என்று தெரியவில்லை.
படித்தேன் அதனால் தான் உங்களுக்கும் ஏன் எனக் கேட்டு பதில் அனுப்பித்தேனே ஐயா
விமர்சகர் படைக்கும் ஆற்றல் பெற்றவராக இருக்கணும்ன்னு ஒண்ணும் இல்லையே?விமர்சிக்கும் பொருளின் -- ஞானம் உள்ளவர்கள் விமர்சனம் செய்வது தான் முறை
திவா
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
உங்கள் அன்பையோ, அடக்கத்தையோ, உங்கள் திறமைகளையோ யாருமே இங்கு குறைத்து
மதிப்பிடவும் இல்லை, விமர்சிக்கவும் இல்லை.
கவிதை அழகியல் சார்ந்த பிரச்சனை.
கவிதை என்பது சீரிலோ, தளையிலோ, மொழி வீச்சிலோ இருப்பதில்லை. மல்லிகையின்
வாசமாக, தெய்வத்தின் அருளாக ஊடு பாய்ந்து இருக்கிறது. அதை எப்படி
விளக்குவது?
மின்தமிழ் குழுவின் 'ரசனையை' நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களை
நல்ல ரசிகராக்க முயல்கிறார்கள்.
எனவே நான் நல்ல கவிஞன் இல்லை என்று சொல்லுகிறார்கள் என்று தன்னிரக்கம்
கொள்ள வேண்டாம்.
முன்பு துரைக்கு பதில் சொல்லிய சித்தன் சில கவிதைகளை இங்கு இட்டார்.
யுகமாயினியில் வெளிவரும் கவிதைகளை இங்கு அவர் தொடர்ந்து இடலாம் (கூடல்
திணை).
ஸ்ரீரங்கம் மோகனரங்கன், உலகின் ஆகச்சிறந்த கவிதைகளை எடுத்து
தமிழாக்கியுள்ளார். அவர் கவிதை பற்றிய ஒரு திறனாய்வு செய்கிறார்
அப்புத்தகத்தில். அதைப் படித்துவிட்டால் இங்கு நம்மால் கவிதையே செய்ய
முடியாது. அது பெரிய சமாச்சாரம். அவரும் இது பற்றி ஏதாவது
சொல்லித்தந்தால் நல்லது.
மரபு பற்றி சொல்லித்தர ஹரி.கி, நா.கணேசன் போன்றோர் உள்ளனர். அமுதாவின்
மரபுக் கவிதைகளை வாசீத்தீர்களோ?
ஒரு குழுமத்திற்கு வந்தால் அதன் நாடியைப் முதலில் புரிந்து கொள்ள முயல
வேண்டும். இப்போதெல்லாம் ஒரு மடலை எழுதி 10 மடலாடற்குழுக்களுக்கு
அனுப்பிவிடுகின்றனர். எந்தக்குழுவின் மனோலயமும் புரியாமல். நீங்கள்
அப்படியென்றால் மாற்றிக்கொள்ளுங்கள். மின்தமிழின் நடையை ஊன்று
கவனியுங்கள்.
வேதாந்த தேசிகன் எழுதுகிறார் இறைவன் பற்றி, 'நானும் நீயும் ஒன்றே!
என்னுள் நீ உறைதலால்' என்று. அவன் நம் எல்லோருள்ளும் உறையும் போது உங்களை
யாருடன் ஒப்புநோக்கி சமன்சீர் செய்யவியலும்? அஞ்சற்க!
கண்ணன்
2009/9/6 sk natarajan <sknatar...@gmail.com>:
2009/9/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>
நடராஜனனின் பணிவு சற்று அச்சம் தருகிறது. ஏனென்றால் துவக்கத்தில் இதை வி அதிகமாகன பணிவு காட்டிய துரை நேற்று இன்னும் ஒரு கவிதையல்லாத ஒன்றை எழுதியிருக்கிறார். அவருக்கும் நான் அறிவுரை சொல்வதாக நினைத்து ஒருமுறை எழுதியிருந்தேன். ஆனால் அவரும் வேறு மாதிரி தவறாகப் புரிந்து கொர்ணடு கவிதை வடிவத்தில் தன் கோபத்தைப் பதிவு செய்ய முயற்சித்து இருக்கிறார்.
அன்புள்ள சா கி நடராஜன் அவர்களே
ஒரு மண்ணின் குரல்
முற்றுப் பெறாத சோகம் மனதினில் உண்டு
முற்றும் பெறாத சோகமும் மனதில் கண்டு
வறண்டு போன நம்பிக்கை அதனாலுண்டு
எழுத்துக்களில் எட்டிப் பார்க்கின்றதே ஏக்க வண்டு
இளைஞனே முக -வரி வந்தாலும் உன் முகவரியைத்
தொலைத்துவிடாதே அகவரியை
எட்டிப் பார்க்கும் ஆற்றல் நமக்குண்டு
தளர்சியுற்றும் முதிர்ச்சியின் பக்கம் சாய்ந்து விடாதே
இன்னமும் உன்னிடம் நிறைய எதிர்பார்த்து
எதிர்பார்த்து இமை சரியாமல் நிற்க பலருண்டு
இளம் புயலே இன்னல்கள் களைந்திட துணிவு கொண்டு
சோக விடுதலை கொண்டுவிடு வந்துவிடு
விடியலைத் தந்துவிடு
அன்புடன்
தமிழ்த்தேனீ
இது என்ன கல்யாண வீடு மாதிரி் ஆகிவிட்டது. ஆளாளுக்கு முறுக்கிக் கொள்கிறார்கள்?இதுக்கெல்லாம் ஒதுங்கணுமா துரை?உங்களுக்கு நான் அறிவுரை சொல்ல முயற்சித்து கவிதையில் எனக்கு நீங்கள் அறிவுரை சொல்ல முயற்சிக்கிறீர்கள் என்று நினைத்துத்தான் எழுதினேன்.
அப்படி இல்லை என்றால் மகிழ்ச்சி. அப்படித்தான் என்றாலும் வருத்தம் இல்லை.தொடருங்கள் உங்கள் கவிதைப் பணியை.அன்புடன்பென்னேஸ்வரன்
அன்புள்ள திருமூர்த்தி அவர்களுக்குநீங்க எழுதினா கண்ராவியா இருக்கும்னாலும் விமர்சனம் நுட்பமா செய்ய முடியுமானா செய்யுங்க என்கிறேன். நல்லா இருக்கு இல்லைன்னு யார் வேணுமானாலும் சொல்லிடலாம். அது ஏன் நல்லா இல்லை? ஆ! அது சொல்ல இன்னும் திறமை வேணும்; ஞானம் வேணும்.நீங்கள் கற்றவர்கள்
நானும் கற்றவன்
எனக்கு மரபுக் கவிதை எழுத தெரியாமல் இருக்கலாம்
உங்களுக்கு அது எழுத வருமா எனத் தெரி யாது எனக்கு
ஆனால் மரபு மீறி நான் பேசுவதுக் கிடையாது
என் வரிகளிடம் நீங்கள் காணும் குறைகளைக் களைந்து எழுதிக் காட்டுங்கள் என்கிறேன்
நல்ல சொற்கள் இருக்கும் போது அவற்றையே பயன்படுத்துவோமே
காசுமி சொன்னது போல் கட்டற்ற சுதந்திரம் கையில் உள்ளது. முன்பெல்லாம்
கணையாழிக்கு கவிதை எழுதிவிட்டு தேறுமாவென ஒரு மாதம் காத்திருப்பேன்.
காலம் மாறிவிட்டது. எழுதினோமோ, தட்டினோமா என்று இருக்கிறது!
நான் கமலத்திற்கு சொல்லிய வண்ணம் இதை ஒரு சாக்காக வைத்து கவிதை பற்றி
கொஞ்சம் பேச முடிந்தது. உங்கள் நகைச்சுவை தளும்பும் எழுத்தை ரசிக்க
முடிந்தது.
அடம் பிடிக்காமல் கேட்டால், யாராவது நல்ல கவிதைகளைக் காட்டக்கூடும்.
(இப்போ தி.வாவே கவிதையில் இறங்கிவிட்டார் என்று கேள்வி ;-)
க.>
2009/9/6 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
>
அன்பார்ந்த சகோதரர் நடராஜன்,
நிங்ஙளின் வருத்தம் தோய்ந்த மடல் கஷ்டமாக இருக்கிறது.
நிங்ஙள் கவலைப்பட வேண்டாம். பதட்டப்பட வேண்டாம்.மனசு சஞ்சலப்பட வேண்டாம்.
இங்கு இலக்கிய இதழ்களில் கூட இல்லாத இலக்கியப்பார்வை உள்ளது.
ஆயினும் கூட அவர்கள் உடனே வருத்தம் தெரிவித்து விட்டார்கள் தானே?அதனால் நிங்ஙள் மன்னிக்கலாம்.
நிங்ஙளின் பணி பற்றி எழுதிய வரிகள் படித்த உடனேயே, ஞான் அனுப்பவிருந்த கவிதை பற்றிய கட்டுரையை ,
அப்படியே மாற்றி வைத்துவிட்டேன்.
அன்பின் நடராஜன்,
நிங்ஙளின் தொழிலே கவிதைதான், அந்தப் பிள்ளைகளே கவிமலர்கள் தான்.பென்னேஸ்வரன், தி.வா. கண்ணன்,
கூறியதுபோல் அதைவிட,கவிதை விட வேறுண்டா?
என்டெ வீட்டில் இவ்வாண்டு ஓண சத்யை[விருந்து]க்கு வந்த வி.ஐ.பி.க்கள் யார் தெரியுமா>
பங்களா தேஷிலிருந்தும்,தமிழ் நாட்டிலிருந்தும் வந்து பணி செய்யும் அன்பான அந்த தம்பிகள்தான்.
துப்புரவு வேலை செய்யும், கட்டடப்பணி செய்யும், கூலிப்பணி எடுக்கும் அந்த தம்பிகள் தான் என்டெ அதிதிகள்
சந்தோஷமாக அவர்களுக்கு பல்சுவை விருந்தோடு எண்டெ அன்பையும் சேர்த்தே பரிமாறினேன்.
பங்கலாதேஷ் தம்பிகள், aunty, thank you,, aunty, food good, i come singapore, today happy, thank you aunty'
என்றே திரும்பத்திரும்ப கூறியபோது , எனக்கு மனசெல்லாம் கலங்கி கலங்கி , அழுகை வந்தது.
அவர்கள் மொழி எனக்குப்புரியும் .எண்டெ மனசில் அன்று அவர்கள் தான் கவிதை.
போகாட்டும், காசுமியின் கவிதைகள் படியுங்கள். ஹரிகிருஷ்ணன் என்றொரு அற்புதமான கவிஞர் இக்குழுமத்தில் உண்டு.
அவர் ஏன் எழுதுவதில்லை என்று தெரியவில்லை.முனைவர் கண்ணனின் பாசுரமடல் அவசியம் படியுங்கள்.
என்றாலும் கண்ணன் கூறியதுபோல்,நிரம்ப நூல்களை வாசிக்கணும்.
அப்பொழுது மொழிச் சரளம் வரும். மொழி மட்டும் போதாது. இலகுவான வரிவடிவினூடும் நுண்ணுணர்வான,
பொதிந்து நிற்கும் உள்ளார்ந்த உருவகம், மட்டும் கைக்கு வந்து விட்டால், நிங்ஙள் கவிதையில் கோலோச்சலாம்.
அப்படியே இல்லாவிட்டாலும் கூட என்ன நஷ்டம்,?
ஆசிரியத்தொழிலில் கிட்டியுள்ள நிங்ஙளின் மாணவ மணிகளுக்கு , நிங்ஙள் செய்யும் கவிதைதான் எனக்குப் பிடித்திருக்கிறது
இக்குழுமத்தில் என்னை சேச்சி என்பார்கள்.அதனால்
அன்புடன் சேச்சி
கண்ணன்
>
New Email names for you!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!
http://mail.promotions.yahoo.com/newdomains/sg/
(இப்போ தி.வாவே கவிதையில் இறங்கிவிட்டார் என்று கேள்வி ;-)
இதென்னயாது புதுக்கவிதையா ச்சீ! புதுக்கதையா இருக்கு. எனக்கும் கவிதைக்கும் காத தூரம்.
<<< அந்தக்கதை எல்லாம் இங்கே வேண்டாம்.
வலைப்பதிவில் எழுதும் அருமையோ அருமைகளை இங்கும் இடலாம்.
கவிஞர் இல்லையென்று சொல்லிக் கொள்வது இப்பொழுது ஃபேஷனாகி விட்டது போலும்
கமலம்
<<< அந்தக்கதை எல்லாம் இங்கே வேண்டாம்.
வலைப்பதிவில் எழுதும் அருமையோ அருமைகளை இங்கும் இடலாம்.
கவிஞர் இல்லையென்று சொல்லிக் கொள்வது இப்பொழுது ஃபேஷனாகி விட்டது போலும்
கமலம்
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
2009/9/6 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>
2009/9/6 sk natarajan <sknatar...@gmail.com>
> இப்போதைக்கு நானும் கண்ணனும் கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சு விட்டுக் கொள்ளலாம்.
>
> கண்ணனுக்கு எப்படி என்று தெரியாது. நான் கவிதை வேறு எழுதியாக வேண்டுமா என்ற
> பீதியில் அலைந்து கொண்டிருந்தேன்.
>
உண்மை! உண்மை! நஞ்சுண்ட கண்டர் அன்று மட்டுமில்லை, இன்றும்
காப்பாற்றிவிட்டார். நான் வேறு மாதிரி சமாளிக்க இருந்தேன் ;-) பொதுவாக
என்னுள் ஊறிய ஒன்றே கவிதையாக வெளிவருகிறது. இதுவரை மற்றவர் சரக்கை கவிதை
ஆக்கியத்தில்லை. எனவே எனக்கும் தர்ம சங்கடம்தான்.
வேறொரு வகையில் நீங்கள் கவலை நீக்கலாம். புதுக்கவிதை 50 இழை
தொடங்கப்பட்டு விட்டது. அதில் சில கவிதைகளை இனம் காட்டலாம்.
சித்தன்......காதில் விழுகிறதா? ;-)
க.>
1.சா கி நடாரஜன், நீங்கள் செய்வது அப்பட்டமான அடாவடி.
நடராஜன் ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வணக்கம்
2.சமையல் சகிக்கலை என்று சொல்பவரையே சமைத்துக் காட்டுக என்று சவாலுக்கு அழைப்பது எவ்வகையில் சரி?
மன்னிக்கவும் நான் யாரையும் சவாலுக்கு அழைக்க வில்லை
3.மரபுக் கவிதைதான் சிறந்தது என்று விமர்சித்தவர் சொல்லாதபோது ஏன் மரபுக் கவிதை வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள்?
கற்றோர் நிறைந்த சபை இது என்று சொன்னார்களே ?ஏன் மரபுக் கவிதை இயற்ற முடியாதா ?பின்னர் எந்தக் கவிதை இயற்றினாலும் சரி என்று சொன்னேனே ?
4.எதுகை மோனைக்கு சற்றும் தொடர்பற்ற ஒரு சொற்குவையை எழுதிவிட்டு தேனி எழுதியதில் அவை எங்கே எனக் கேட்பது என்ன நியாயம்?
ஐயா எனக்கு தமிழ் தேனீ ஐயா அவர்களை முன்னறேத் தெரியும்
5.அந்த சொற்குவையை மரபுக் கவிதையாக மாற்றுவது என்பது இயலாத காரியம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?
அதை யாரும் சொல்லவில்லையே ?
6. மரபுக் கவிதைகளில் எதுகைமோனை எந்த அளவுக்கு அவசியம் என்பதில் உங்களுக்கு அடிப்படைப் புரிதல் ஏதாவது இருக்கிறதா?
புரிய வைக்கும் படியல்லவா இதுகாறும் உங்களைக் கேட்டு வருகின்றேன் நீங்கள் இழையின் ஆரம்பம் முதலே படித்து விட்டு வாருங்கள் ஐயா
ஒரு நடராஜனுக்கு இன்னொரு நடராஜனின் பதில்!
:))))
சா கி நடராஜனின் சொற்குவை:
எனது - கிறுக்கல்கள் சொற்குவை என்பதில் மகிழ்ச்சிதானே உங்களுக்கு
நண்பரே!
இது உங்கள் வரிகள்தான்.
இப்படி எழுதுவது கலைஞர் பாணி. கவித்துவமான உரைநடை என்பர் கழகத்தவர்.
கண்ணன்
2009/9/7 sk natarajan <sknatar...@gmail.com>:
நானும் சொல்ல நினைத்தேன். இணையம் என்பது தமிழின் தரத்தை நீர்த்துப்போக
வைத்தல் கூடாது. தரக்கட்டுப்பாடு பற்றிப் பேசுவது நல்லதே.
மின்தமிழின் தரம் பற்றிய அக்கறையில்தான் சித்தனும் அவ்வாறு
எழுதியிருக்கிறார். நல்ல எழுத்துக்கள் வரும் போது அது பற்றிய ஒருவரி
விமர்சனம் கூட செய்யத்தெரியாத ஒரு குழு. ஒரு சின்னக்கவிதையை வைத்து
மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கிறது என்றால், நாம் சீரிய
விஷயங்களிலிருந்து கேளிக்கைக்கே புலம் பெயரத்துடிக்கிறோம் என்பதைக்
காட்டுவதாகவே உணர்கிறேன்.
சுபா நம் தரம் பற்றி அடிக்கடி நினைவுறுத்துவது இங்கு உற்று நோக்கத்தக்கது.
தனியிழையில் கூட இது பற்றிப் பேசலாம்.
கண்ணன்