குரு பக்தியில் விஞ்சியவர்கள் மாணவர்களா அல்லது மாணாக்கர்களா?

160 views
Skip to first unread message

பாம்பாட்டிச் சித்தன்

unread,
Nov 4, 2014, 8:22:35 AM11/4/14
to mint...@googlegroups.com
நேற்று என்னுடைய சமகால மூத்த பேராசிரியரின் அன்புத் தொல்லையால் பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தில் நடந்த தேசிய அளவிலான ஆராய்ச்சி நெறிமுறைபற்றிய தொடக்கவிழாவில் பங்குகொண்டு முதல் இரண்டு பொழிவுகளையும் நடத்தினேன்.  அங்கு போனபின்னரே தெரிந்தது அங்கிருந்த பெரும் பாராசியைகள் எல்லாம் என் மாணவர்களாக இருந்து ஆரய்ச்சி நெறிமுறையாகக் கற்றவர்கள் என்பது தெரிந்தது

தொடக்கத்தில் இருந்து இறுதிவரை கனிவுடனும் பாசத்துடனும் அக்கறையுடனும் பார்த்துக்கொண்டு கிளம்ப்பும்போது கார்வரை வந்து வணக்கம் சொல்லி பத்திரம் பாதுகப்பாகச் செல்லுங்கள் என்று மொழிந்தனர்.

மாணவர்கள் குருவே உங்களால்தான் நான் இந்த நிலைக்கு உயர்ந்தேன் என்று சொன்னாலும் இந்த அளவுக்குப் பாசத்தைக் காட்டுகிறார்களா என்ற ஐயம் உருவாகிறது.

மின்தமிழிலும் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் என்னை ஆசிரியராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.  இங்கும் மாணவரின் பக்தி விஞ்சியதா மாணவியிம் பக்தி விஞ்சியதா என்ற கேள்வி எழுகிறது

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்ற பாண்டிய அரசனின் கேள்விக்குப் பதில் வந்ததுபோல் இந்தக் கேள்விக்கும் ஒரு பதில் வேண்டும்  இறைவனிடமிருந்தோ அல்லது தருமியிடமிருந்தோ வந்ததுபோல் வரவேண்டும்.  இங்கே நக்கீரர்கள் அதிகம் என்பதால் அச்சப்பட்டு ஓடவேண்டாம்

பாசி

திவாஜி

unread,
Nov 4, 2014, 8:38:09 AM11/4/14
to mint...@googlegroups.com

2014-11-04 18:52 GMT+05:30 பாம்பாட்டிச் சித்தன் <radius.co...@gmail.com>:
மின்தமிழிலும் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் என்னை ஆசிரியராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.  இங்கும் மாணவரின் பக்தி விஞ்சியதா மாணவியிம் பக்தி விஞ்சியதா என்ற கேள்வி எழுகிறது

ம்கும்! ஏன் பக்திதேன்!

shylaja

unread,
Nov 4, 2014, 10:35:29 AM11/4/14
to mintamil
திவாஜி சார் ஒரு சந்தேகம் மாணவர்கள்  வேறு மாணாக்கர்கள்  வேறா? உங்க பதில்ல  ஏன்பக்தி தேன்  என சொல்வது  புரியவே இல்லை  விளக்க இயலுமா?!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!- 
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதா!-
பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ             

(பெரிய திருமொழி)

Tthamizth Tthenee

unread,
Nov 4, 2014, 10:43:58 AM11/4/14
to mint...@googlegroups.com
மாணவன்  குருவின் தகுதியை அறிந்து  கொண்டால்  மாணவன்

தன்னை அறிந்து கொண்டால்  மாணாக்கன்


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



Megala Ramamourty

unread,
Nov 4, 2014, 11:03:15 AM11/4/14
to மின்தமிழ்
மாணாக்கன் என்ற சொல்லே காலப்போக்கில் மாணவன் என்று திரிந்திருக்க வேண்டும்.

எனவே மாணவன் என்று குறிப்பிட்டால் அதன் எதிர்ப்பதம் மாணவி.
மாணாக்கன் என்றால் அதன் எதிர்ப்பதம் மாணாக்கி. (though it's not commonly used).  :-)

’மாணாக்கன்’ என்ற சொல் சங்கப் பாடல்களிலேயே பயின்று வந்திருப்பது அதன் பழமையைக் காட்டுகிறது.

”அன்னாய் இவனோர் இளமாணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே
” (குறுந்: 33)


இங்கே நம் குருநாதரான ’பாம்பாட்டிச் சித்தர்’ குறிப்பிட விழைந்தது குரு பக்தியில் விஞ்சியவர்கள் மாணவர்களா அல்லது மாணவிகளா என்பதே!

நம்மைப் போன்ற ’அருமையான’ மாணவிகளைப் பெற்றிருக்கும் இவருக்கு இதுபோன்ற ஐயங்கள் எழலாமோ????

சந்தேகமென்ன? குருபக்தியில் விஞ்சியவர்கள் (எங்களைப் போன்ற) மாணவிகளே என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.  :-))


மாணவிகள் அனைவர் சார்பாக,
மேகலா

தேமொழி

unread,
Nov 4, 2014, 3:18:14 PM11/4/14
to mint...@googlegroups.com


On Tuesday, November 4, 2014 8:03:15 AM UTC-8, megala.ramamourty wrote:

நம்மைப் போன்ற ’அருமையான’ மாணவிகளைப் பெற்றிருக்கும் இவருக்கு இதுபோன்ற ஐயங்கள் எழலாமோ???? 

/// 
மின்தமிழிலும் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் என்னை ஆசிரியராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.   
///

யாரோ ஒரே ஒருவர்தானாம் மேகலா, நன்றாகக்  கவனியுங்கள். 

எனக்குத் தெரிந்து அந்த 'ஒரு' மாணவரை (குரு)பக்தியில் விஞ்ச ஆளில்லை.  அவர் ஆசிரியர் பெயருக்கு ஏற்ப தனது  பெயரையைக் கூட மாற்றிக் கொள்வார். 

உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் இல்லையா :-)

..... தேமொழி





shylaja

unread,
Nov 4, 2014, 8:51:30 PM11/4/14
to mintamil
2014-11-04 12:18 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Tuesday, November 4, 2014 8:03:15 AM UTC-8, megala.ramamourty wrote:

நம்மைப் போன்ற ’அருமையான’ மாணவிகளைப் பெற்றிருக்கும் இவருக்கு இதுபோன்ற ஐயங்கள் எழலாமோ???? >>>அருமை பெருமை என நாமதான் சொல்லிக்கணும் மேகலா:)

/// 
மின்தமிழிலும் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் என்னை ஆசிரியராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.   
///

யாரோ ஒரே ஒருவர்தானாம் மேகலா, நன்றாகக்  கவனியுங்கள். >>ஒரு மாணவி  யாராம்?:)

எனக்குத் தெரிந்து அந்த 'ஒரு' மாணவரை (குரு)பக்தியில் விஞ்ச ஆளில்லை.  அவர் ஆசிரியர் பெயருக்கு ஏற்ப தனது  பெயரையைக் கூட மாற்றிக் கொள்வார். >>
 
ஆமாம்  மனம் அவருக்கு தன் குரு எனில்  காளைபோல வீறுநடைபோடும்,காரையாகாது கனிந்துவிடும் மகராசர்!

உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் இல்லையா :-)

..... தேமொழி





--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Nov 4, 2014, 10:10:25 PM11/4/14
to மின்தமிழ்
நான் ஏன் ரங்கனார்போல் விரித்த வலையில் மாட்டிக்கொள்ள வேண்டும்.
கேள்வி கேட்டால் அதற்குச் சரியான சுருக்கமான விடை வேண்டும்

மெய்நிகர் உலகில் குருபக்தியில் விஞ்சியவர் யார்? மாணவரா? மாணவியா அம்புட்டுத்தென்

சரியான விடை கும்பல் கூட்டி ஆசிரியரைக் கேரோ செய்தால் மாறிவிடாது


பாசி

shylaja

unread,
Nov 4, 2014, 10:14:49 PM11/4/14
to mintamil
யாரும் வலை விரிக்கல  யாரும் மாட்டிக்கவும் இல்லன்னு   சொல்லுங்க தேனிசார். இத்தனை நாளா ஆசிரியர் பணில இருக்கறவருக்கு  விடைதெரியலையாமா  மேகலா?:)

Nagarajan Vadivel

unread,
Nov 4, 2014, 10:31:35 PM11/4/14
to மின்தமிழ்
உயர் கல்வியில் அமெரிக்காவில் கூட்டதில் கோவிந்தா போடுவதும் கூட்டணி அமைத்துக் கற்றுக்கொள்ளும் க்ரவ்ட் சோர்சிங் தடை செய்யப்பட்ட செயல்.  அவங்க அவங்க திறமையை மட்டும் வெளிப்படுத்தவேண்டும்

இப்புடி தேனி மேகலா என்று கூட்டம் சேர்த்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

மாணவரா மாணவியா என்பதற்கு விடை சொல்வதை விட்டுவிட்டு என்னையும் இன்னொரு சாதுவான மாணவரையும் மோழை காளை என்றெல்லாம் மிரட்டக் கூடாது

நாங்க பரம சாது பயந்தவர்கள்

பாசி

திவாஜி

unread,
Nov 4, 2014, 11:59:06 PM11/4/14
to mint...@googlegroups.com
2014-11-04 21:05 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
உங்க பதில்ல  ஏன்பக்தி தேன்  என சொல்வது  புரியவே இல்லை  விளக்க இயலுமா?!

மலைமகளே அது ”என் பக்திதான்” என்பதே!​ திரிபு!


சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 5, 2014, 12:53:48 AM11/5/14
to mintamil, Kalairajan Krishnan
2014-11-05 1:48 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


எனக்குத் தெரிந்து அந்த 'ஒரு' மாணவரை (குரு)பக்தியில் விஞ்ச ஆளில்லை.  அவர் ஆசிரியர் பெயருக்கு ஏற்ப தனது  பெயரையைக் கூட மாற்றிக் கொள்வார். 

உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் இல்லையா :-)

:) இரசித்தேன்.
 
தெய்வ, மானுட பக்தியில் அவரையொத்த ஒருவரை நான் கண்டதில்லை.
சொ.வி 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 5, 2014, 1:15:30 AM11/5/14
to mintamil
உள்ளேன் ஐயா.

மாண்புடையோர் எல்லோரும் மாணக்கரே.
அவருள் ஆண் என்றும் பெண் என்றும் ஆசிரியரே பேதம் காண்பாரோ....என்று ஆசிரியரை மாணவர் கேள்வி கேட்க முடியாது.

மிகைநாடி மிக்க கொளல் என்ற அடிப்படையில்,
மாணவியை அகத்திற்கும், மாணவனை புறத்திற்கும் சிறப்பாகச் சொல்லலாம்.

சொன்னவேலையை மட்டும் சரியாகச் செய்ய வேண்டும் என்றால் மாணவியர் சிறப்பு.
சொல்லாத வேலையையும் தானாகவே செய்ய வேண்டும் என்றால் மாணவர் சிறப்பு.

ஆசிரியரைப் புகழ்ந்து பேசுவதில் மாணவியர் சிறப்பு
ஆசிரியரை பு(இ)கழ்ந்து பேசுவதில் மாணவர் சிறப்பு.

ஆசிரியரைப் பற்றி கதைபேசுவதில் மாணவியர் சிறப்பு.
ஆசிரியரைப் பற்றி கதைகட்டுவதில் மாணவர் சிறப்பு.

பின்பாட்டு பாடுவதில் மாணவியல் சிறப்பு
முன்பாட்டு பாடுவதில் மாணவர் சிறப்பு.

பரிசு உண்டென்றால் மாணவியர் சிறப்பு
பரிசு ஏதுமில்லையென்றாலுமி மாணவர் சிறப்பு.

ஜிகர்தண்டா என்றால் மாணவியர் சிறப்பு
இட்லி தோசை என்றால் மாணவர் சிறப்பு.

மாணவியரும் மாணவரும் ஒன்றாக நன்றாகப் படித்தால் ஆசிரியருக்குச் சிறப்பு

இப்படிக்கு,
இரண்டு நாட்களாக இணையப் பாடங்களை (பதிவுகளை)ப் படிக்காத மாணவன்.


குறிப்பு.
மாணவர் என்றால் ஆண் பெண் இருபாலரையுமே குறிக்கும்.
மாணவியர் என்றால் பெண்பாலரை மட்டுமே குறிக்கும்.
DSCN0182.JPG

Innamburan S.Soundararajan

unread,
Nov 6, 2014, 10:20:14 AM11/6/14
to mintamil
மாணவியை அகத்திற்கும், மாணவனை புறத்திற்கும் சிறப்பாகச் சொல்லலாம்.

~ தம்பீ! வம்பில் மாட்டிக்கொள்வாய்.
DSCN0182.JPG

Megala Ramamourty

unread,
Nov 6, 2014, 12:13:11 PM11/6/14
to மின்தமிழ்
இந்த இழையின் தலைப்பைப் பொதுவான அடிப்படையில் ஆராய்வோமேயானால்...
குரு, குருதட்சணை, குருகுலம், குருபக்தி போன்ற ‘concepts' வலுவாக நிலைபெற்றிருந்தது ஒருகாலம். அப்போது மாணாக்கர்கள் மட்டுமே குருவின் இல்லத்தில்/ஆசிரமத்தில் தங்கிப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். படிப்பு என்பது ஏட்டுப் படிப்பைக் கற்றுக்கொள்வது என்பதாக மட்டுமல்லாது ஒழுக்கம், பிரம்மசரியம் பேணல், குருவிற்கும் அவர் மனைவிக்கும் பணிவிடைகள் செய்தல் என்பன போன்ற நல்ல பல செயல்களை உள்ளடக்கியதாக இருந்தது.

’ஏகலைவன்’ என்ற வேடன் துரோணரையே தன் மானசீக குருவாகக் கொண்டு சுயமாகவே வில்வித்தையில் தேர்ச்சியடைந்தான். அது கண்ட அந்த உத்தம(?) குரு எங்கே அவன் தன் பிரிய சீடன் அர்ச்சுனனுக்குப் போட்டியாக வந்துவிடுவானோ என்று கவலை கொண்டு அவன் திறமையை முடக்க எண்ணி அவன் கட்டை விரலையே குருதட்சணையாகக் கேட்க, அந்த நல்லுள்ளம் கொண்ட அப்பாவி வேடனும் மகிழ்ந்து தன் கட்டை விரலை வெட்டித் தந்து குருபக்தியில் ஈடிணையற்று விளங்கினான். ஆகவே அன்றைய சூழலை மட்டும் கணக்கெடுத்துப் பார்த்தால் மாணாக்கர்களே (அவர்கள் மட்டுமே கற்றதனால்) குருபக்தியில் உயர்ந்திருந்தனர். அது அந்தக் காலம்!

ஆனால் 20-ஆம் நூற்றாண்டிலும், இப்போது நடைபெற்று வரும் 21-ஆம் நூற்றாண்டிலும் நிலைமை அதுவன்று. பெண்களே இப்போது குருவிடம் (அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி) மிகுந்த மதிப்போடும், மரியாதையோடும் நடந்துகொள்கின்றனர். (நானெல்லாம் என் வீட்டிற்கு என் பள்ளியாசிரியர்/கல்லூரியாசிரியர் யாரேனும் வந்தால் ’வாயெல்லாம் பல்லாக’ அவரை வரவேற்று, என் அம்மாவிடம் சொல்லி நல்ல டிகாக்‌ஷன் காஃபியாக போடச்சொல்லிக் கொண்டுவந்து கொடுப்பேன். அவர் எதிரில் பணிவோடு அமராவதியாக இருப்பேன் (அதாவது அமரக்கூட மாட்டேனாக்கும்!). அதுபோல், என் தந்தையிடம் கற்ற மாணவியர் பலர் இன்றும்கூட அவரை எங்குக் கண்டாலும் அன்போடு விசாரிப்பதையும், தங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று அன்போடு அழைப்பதையும் கண்டிருக்கிறேன்.

ஆனால் இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் சிறிதும் மரியாதையோ பயமோ பக்தியோ எதுவும் கிடையாது. தைரியமாக ஆசிரியர் எதிரிலேயே தேர்வு நடக்கும்போது ‘பிட்’ அடிக்கின்றனர். எதிர்த்துக் கேட்ட ஆசிரியரிடம் கத்தியைக் காட்டியிருக்கிறான் ’குருபக்தி’ மிகுந்த ஒரு மாணவன். ஏன் சமீபத்தில் சென்னையில் ஒரு மாணவன், ”நன்றாகப் படிக்கக்கூடாதா?” என்று கண்டித்த ஆசிரியையைக் கத்தியால் குத்திக் கொலையே செய்தானே! இதுவா குருபக்தி? இதனைக் ’குருமுக்தி’ என்று வேண்டுமானால் சொல்லலாம். :(

போதாக்குறைக்கு ஆசிரிய, ஆசிரியைகளைக் கேலி செய்வதிலும் அவர்களுக்குப் ‘பட்டப் பெயர்’ வைப்பதிலும் இன்றைய மாணவர்கள் சமர்த்தர்கள். ஒரு மாணவன் தன் ஆசிரியரின் தலை வழுக்கையாக இருப்பதால் அவருக்கு ‘டூம் லைட்’ என்று பட்டப் பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறான். அதுமட்டுமல்ல, ஆசிரியர் அமரும் நாற்காலியில் முள்வைப்பது, அவர் வண்டியைப் பஞ்சராக்குவது போன்ற அரிய சேவைகளைச் செய்வதிலும் இன்றைய மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். I can give you endless examples like these...

So, I would like to conclude by saying, ஒருகாலத்தில் மிகச் சிறந்துவிளங்கிய ‘குருபக்தி’ இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் மிகவும் குறைந்துவிட்டது; அருகிவிட்டது. ஏதோ (எங்களைப் போன்ற) மாணவியர் இருப்பதினால்தான் அதன் ஆயுள் இன்னும் முடியாமல் இருக்கிறது. I dare say we are the SAVIORS of that good quality!!

எனவே குருபக்தியில் வி(மி)ஞ்சியவர்கள்; அதனை வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள் மாணவியரே...மாணவியரே...மாணவியரே!   :-))

இனியாவது சந்தேகம் தீர்ந்து பேராசிரியர் எங்கள் அனைவரையும் தம் மாணவியராக மனமுவந்து ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன். (பேராசிரியர் பட்டமளிப்பு விழா கவுனை அணிந்துவந்து நல்ல தீர்ப்பை வழங்குவாராக!)  :-)

மாணவியர் அணி சார்பாக,
மேகலா

Nagarajan Vadivel

unread,
Nov 6, 2014, 12:40:49 PM11/6/14
to மின்தமிழ்

2014-11-06 22:43 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
எனவே குருபக்தியில் வி(மி)ஞ்சியவர்கள்; அதனை வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள் மாணவியரே...மாணவியரே...மாணவியரே!   :-))


ரொம்பவே
​ அடித்துப் பேசியிருக்காங்க. திங்களன்று பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்திலிருந்து சென்னை திரும்பும்போது பேராசிரியர்களாக இருக்கும் என் மாணவிகள் அன்போ அன்பு என்று அசத்திவிட்டார்கள்

அதே நேரம் நான் சென்னையின் பேர்பெற்ற ஒரு பெண்கள் கல்லூரியில் ஒரு செமஸ்டர் பாடம் எடுத்தேன்.  முதல்நாள் வகுப்புக்குப் போகப் படியேறிய என்னைக் கலாய் கலாய் என்று கலாய்க்க நான் கல்லூரி முதல்வரிடம் சரணடைந்து அவர் பாதுகாப்பில் வகுப்புக்குள் நுழைய முடிந்தது.  வட இந்தியப் பெண்கள் மட்டும் படிக்கும் மேலாண்மை நிறுவனத்தில் அதே கதைதான்.  மாணவிகள் வெளியில் கலாய்ப்பதைம் வகுப்புக்குள் ருத்ராட்சப் பூனையாக இருப்பதைம் இருப்பதை நேரில் பார்த்த என்னால் இன்னும் ஒரு இறுதி முடிவுக்கு வர இயலவில்லை

மாணவர்களைப்பற்றி நீங்கள் சாட்டிய குற்றச் சாட்டு நடுநிலை இல்லாமல் இருப்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது. 

பாசி​

Innamburan S.Soundararajan

unread,
Nov 6, 2014, 7:35:48 PM11/6/14
to mintamil
அன்னிக்குத்தான் வசமா மாட்டிக்கிட்டீங்களே!

--

Suba.T.

unread,
Nov 7, 2014, 2:34:53 AM11/7/14
to மின்தமிழ், Subashini Tremmel


2014-11-06 18:13 GMT+01:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
​..

ஆனால் 20-ஆம் நூற்றாண்டிலும், இப்போது நடைபெற்று வரும் 21-ஆம் நூற்றாண்டிலும் நிலைமை அதுவன்று. பெண்களே இப்போது குருவிடம் (அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி) மிகுந்த மதிப்போடும், மரியாதையோடும் நடந்துகொள்கின்றனர். (நானெல்லாம் என் வீட்டிற்கு என் பள்ளியாசிரியர்/கல்லூரியாசிரியர் யாரேனும் வந்தால்
​​
’வாயெல்லாம் பல்லாக’ அவரை வரவேற்று, என் அம்மாவிடம் சொல்லி நல்ல டிகாக்‌ஷன் காஃபியாக போடச்சொல்லிக் கொண்டுவந்து கொடுப்பேன். அவர் எதிரில் பணிவோடு
​​
அமராவதியாக இருப்பேன் (அதாவது அமரக்கூட மாட்டேனாக்கும்!). அதுபோல், என் தந்தையிடம் கற்ற மாணவியர் பலர் இன்றும்கூட அவரை எங்குக் கண்டாலும் அன்போடு விசாரிப்பதையும், தங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று அன்போடு அழைப்பதையும் கண்டிருக்கிறேன்.

ஆனால் இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் சிறிதும் மரியாதையோ பயமோ பக்தியோ எதுவும் கிடையாது. தைரியமாக ஆசிரியர் எதிரிலேயே தேர்வு நடக்கும்போது ‘பிட்’ அடிக்கின்றனர். எதிர்த்துக் கேட்ட ஆசிரியரிடம் கத்தியைக் காட்டியிருக்கிறான் ’குருபக்தி’ மிகுந்த ஒரு மாணவன். ஏன் சமீபத்தில் சென்னையில் ஒரு மாணவன், ”நன்றாகப் படிக்கக்கூடாதா?” என்று கண்டித்த ஆசிரியையைக் கத்தியால் குத்திக் கொலையே செய்தானே! இதுவா குருபக்தி? இதனைக் ’குருமுக்தி’ என்று வேண்டுமானால் சொல்லலாம். :(

போதாக்குறைக்கு ஆசிரிய, ஆசிரியைகளைக் கேலி செய்வதிலும் அவர்களுக்குப் ‘பட்டப் பெயர்’ வைப்பதிலும் இன்றைய மாணவர்கள் சமர்த்தர்கள். ஒரு மாணவன் தன் ஆசிரியரின் தலை வழுக்கையாக இருப்பதால் அவருக்கு ‘டூம் லைட்’ என்று பட்டப் பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறான். அதுமட்டுமல்ல, ஆசிரியர் அமரும் நாற்காலியில் முள்வைப்பது, அவர் வண்டியைப் பஞ்சராக்குவது போன்ற அரிய சேவைகளைச் செய்வதிலும் இன்றைய மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். I can give you endless examples like these...

​படித்து சிரித்தேன் மேகலா.

நீங்கள் ​
அமராவதியாக , 
’வாயெல்லாம் பல்லாக’ னிற்கும் காட்சி மனக்கண்ணில் தெரிந்தது :-)

 

So, I would like to conclude by saying, ஒருகாலத்தில் மிகச் சிறந்துவிளங்கிய ‘குருபக்தி’ இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் மிகவும் குறைந்துவிட்டது; அருகிவிட்டது. ஏதோ (எங்களைப் போன்ற) மாணவியர் இருப்பதினால்தான் அதன் ஆயுள் இன்னும் முடியாமல் இருக்கிறது. I dare say we are the SAVIORS of that good quality!!

எனவே குருபக்தியில் வி(மி)ஞ்சியவர்கள்; அதனை வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள் மாணவியரே...மாணவியரே...மாணவியரே!   :-))

இனியாவது சந்தேகம் தீர்ந்து பேராசிரியர் எங்கள் அனைவரையும் தம் மாணவியராக மனமுவந்து ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன். (பேராசிரியர் பட்டமளிப்பு விழா கவுனை அணிந்துவந்து நல்ல தீர்ப்பை வழங்குவாராக!)  :-)

மாணவியர் அணி சார்பாக,
மேகலா

--

Nagarajan Vadivel

unread,
Nov 7, 2014, 2:41:36 AM11/7/14
to மின்தமிழ்

2014-11-07 13:04 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
நீங்கள் ​
அமராவதியாக , 
’வாயெல்லாம் பல்லாக’ னிற்கும் காட்சி மனக்கண்ணில் தெரிந்தது :-)



அது

அப்புடிப்போடுங்க அரிவாள

பாசி​

shylaja

unread,
Nov 7, 2014, 2:47:53 AM11/7/14
to mintamil
மேகலா  கலக்கலா  எழுதிட்டீங்க... ஆனா  ஆசிரிய ஆசிரியைகளை  கேலி செய்வது  மாணவர்களுக்குமட்டுமெ உரியது என்பதை  முழுக்க ஏற்கமுடியலையே ஸ்ரீரங்கம்  உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகள்  பலருக்கு  நாமகரணம் சூட்டியபெருமை எனக்கும் என் தோழி விஜிக்கும் உண்டு  :) ஆனா அதை அவங்களே கேட்டு ரசிக்கிறமாதிரிதான் இருக்கும்,,பாட்டு சொல்லிக்க்கொடுக்க  ஒரு வாத்தியாரை வீட்டுக்குவரவழைத்திருந்தார் அப்பா. மகள்  பின்னாளில் பிரபல பாடகியாக மேடை ஏறிக்கச்சேரி செய்யவேண்டும் என்பது அவர் கனவு! அக்கம்பக்கம்  மேலும் இரு சிறுமிகளும் என்வீட்டில் வந்து  சீரியசாக பாட்டுக்கற்றுக்கொள்ள உட்காருவார்கள்  

 எனக்கோ அப்போது  மாலையில்  வாசலில்  மற்றபெண்களுடன் விளையாட ஆசை ஆகவே அவரை பாடும்போது  மகா கிண்டலடித்துக்கொண்டிருப்பேன். அவர்  என் அப்பாவிடம்’உங்கமகளுக்கு ஜன்மத்துக்கும் நான் பாட்டுகற்றுத்தரமுடியாது .ஏதாவது பேசி பக்கத்தில் இருக்கிறவர்களை சிரிக்கவைக்கிறாள். இல்லேன்னா எனக்கு பட்டப்பெயர்வச்சி என் எதிரிலேயே அழைக்கிறா மகா வால்.என்னால்முடியாது மன்னிச்சிடுங்க’ என்று ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டார். அன்னிக்கு அப்பா என்னை முறைச்சார் பாருங்க...:):)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Nov 7, 2014, 2:51:08 AM11/7/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-11-07 8:47 GMT+01:00 shylaja <shyl...@gmail.com>:
மேகலா  கலக்கலா  எழுதிட்டீங்க... ஆனா  ஆசிரிய ஆசிரியைகளை  கேலி செய்வது  மாணவர்களுக்குமட்டுமெ உரியது என்பதை  முழுக்க ஏற்கமுடியலையே ஸ்ரீரங்கம்  உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகள்  பலருக்கு  நாமகரணம் சூட்டியபெருமை எனக்கும் என் தோழி விஜிக்கும் உண்டு  :) ஆனா அதை அவங்களே கேட்டு ரசிக்கிறமாதிரிதான் இருக்கும்,,பாட்டு சொல்லிக்க்கொடுக்க  ஒரு வாத்தியாரை வீட்டுக்குவரவழைத்திருந்தார் அப்பா. மகள்  பின்னாளில் பிரபல பாடகியாக மேடை ஏறிக்கச்சேரி செய்யவேண்டும் என்பது அவர் கனவு! அக்கம்பக்கம்  மேலும் இரு சிறுமிகளும் என்வீட்டில் வந்து  சீரியசாக பாட்டுக்கற்றுக்கொள்ள உட்காருவார்கள்  

 எனக்கோ அப்போது  மாலையில்  வாசலில்  மற்றபெண்களுடன் விளையாட ஆசை ஆகவே அவரை பாடும்போது  மகா கிண்டலடித்துக்கொண்டிருப்பேன். அவர்  என் அப்பாவிடம்’உங்கமகளுக்கு ஜன்மத்துக்கும் நான் பாட்டுகற்றுத்தரமுடியாது .ஏதாவது பேசி பக்கத்தில் இருக்கிறவர்களை சிரிக்கவைக்கிறாள். இல்லேன்னா எனக்கு பட்டப்பெயர்வச்சி என் எதிரிலேயே அழைக்கிறா மகா வால்.என்னால்முடியாது மன்னிச்சிடுங்க’ என்று ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டார். அன்னிக்கு அப்பா என்னை முறைச்சார் பாருங்க...:):)

​நானும் என் தோழர்களும் எங்கள் ஆசிரியர்களுக்கு இனிய நாமகரணங்கள் சூட்டி அழைப்பதை செய்திருக்கின்றோம். கொடுத்து வைத்த ஆசிரியர்கள்.. இப்படியெல்லாம் செல்லப் பெயர்கள் பெற கொடுத்து வைத்தவர்கள் தானே.. இல்லையா? 
என்ன பெயர்கள் என்று கேட்டால் சொல்ல மாட்டேன்.. பல பெயர்கள் மலாய் மொழியில் ..:-)




--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba.T.

unread,
Nov 7, 2014, 2:52:13 AM11/7/14
to மின்தமிழ், Subashini Tremmel
On Fri, Nov 7, 2014 at 8:41 AM, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:

2014-11-07 13:04 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
நீங்கள் ​
அமராவதியாக , 
’வாயெல்லாம் பல்லாக’ னிற்கும் காட்சி மனக்கண்ணில் தெரிந்தது :-)



​ஆகா என்ன சிரிப்பு....:-)

​மராவதி என்னும் பெயருக்கு மேகலா புது அர்த்தம் கொடுத்து விட்டார் ..

சுபா

அது

அப்புடிப்போடுங்க அரிவாள

பாசி​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

shylaja

unread,
Nov 7, 2014, 2:56:33 AM11/7/14
to mintamil
ஆஹா நீங்களுமா  சுபா?:) மலாய்ல  அப்படிபேர்வச்சதை ஒண்ணு ரெண்டு எனக்குமட்டும் ப்ளீஸ்! 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 7, 2014, 3:08:07 AM11/7/14
to மின்தமிழ், Subashini Tremmel
////2014-11-06 18:13 GMT+01:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:////

///
 ஆசிரியர் அமரும் நாற்காலியில் முள்வைப்பது, அவர் வண்டியைப் பஞ்சராக்குவது போன்ற அரிய சேவைகளைச் செய்வதிலும் இன்றைய மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். I can give you endless examples like these.../////

தாங்கள் சொல்வது நிஜமே மேகலா!.. ஆனால் என் அனுபவம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. சென்னையின் பள்ளி ஒன்றின் அலுவலகத்தில் வேலை செய்த சமயம். . ரிசப்ஷனிஸ்ட் வேலையையும் சேர்த்துப் பார்த்ததில் பெற்றோர்கள், மாணவர்களுடன் சுமுகமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. பள்ளி, சாலிக்கிராமத்தில் இருந்ததால் பெரும்பாலான பெரிய திரை, சின்னத்திரை நட்சத்திரங்களின் வாரிசுகள் படித்தார்கள். .. இன்றிருக்கும் ஸ்டார் நடிகர்களுள் ஒருவர் அங்கு படித்தவரே!..

திரை வாரிசுகள் படிப்பில் சிறப்பது அபூர்வம். பாதி நாளும் பள்ளிக்கு வரமாட்டார்கள்.. நீங்கள் சொன்ன அட்டகாசங்கள் எல்லாம் உண்டு!. பிரபலங்கள் வீட்டுப் பிள்ளைகள் என்பதால் பெரிதாகக் கண்டிக்கவும் முடியாது. ஒரு நாள், ஒரு நடன இயக்குநரின் பிள்ளையை, ஒரு சந்தர்ப்பத்தில் நான் உட்கார்த்தி வைத்து, 'ஏன் படிக்க மாட்டேங்குற.. என்ன பிரச்னை?' என்று பொதுவாக கேட்டு வைக்க, 'படிச்சு என்ன பண்ணணுங்கறீங்க?' என்று ஷாக் கொடுத்தான் (ர்).

ப்ளஸ் டூ படிச்சாத்தான் (டான்ஸர்ஸ்) யூனியன்ல சேத்துப்பாங்க. அதுக்குதான் படிக்கிறேன். ஜஸ்ட் பாஸ் பண்ணா போறும் மிஸ்.. ஒரு நாள் வேலைக்கு 2500 ரூபாய் (அப்பத்திய ரேட்) தருவாங்க.. பத்து நாள் பாத்தாலும்  போதுமே!.. என்னத்துக்கு படிக்கணும்?' என்றார்.

இப்போது அவர் பிரபல நடன இயக்குநரிடம் உதவியாளராக இருக்கிறார். பல பாடல்களின் ஹீரோவின் பின்னணியில், முதல் வரிசை நடனம் ஆடுபவர்களுள் ஒருவராக  இருக்கிறார்.

சமீபத்தில் சென்னை வந்திருந்த போது, அவரைப் பார்க்க நேர்ந்தது. டூ வீலரில் பறந்து கொண்டிருந்தவர்,  என்னை அடையாளம் கண்டு கொண்டு நிறுத்தி நலம் விசாரித்தார். அவர் இல்லம் வர வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். அவர் வாழ்வில‌ மேலும் உயர வாழ்த்தி வந்தேன். 

ஒரு பிரபல நகைச்சுவை நடிகரின் மகன், படிப்பு முடிந்து வெளியே சென்ற பிறகும் அவ்வப்போது பள்ளிக்கு வந்து நலம் விசாரிப்பார். ஒரு பிரபல வில்லன் நடிகரின் மகன், மேற்படிப்புக்கு சிங்கப்பூர் செல்லும் முன், பள்ளிக்கு வந்து, நான் உட்பட ஆசிரியர்கள் அனைவருக்கும் பூச்செண்டு தந்து வாழ்த்துமாறு கோரினார்.

இப்படி நிறைய உதாரணங்கள்.. எனக்கென்னவோ பள்ளியில் விளையாட்டுப் பிள்ளையாக இருப்பவர்கள், பள்ளி விட்டு வெளியேறியதும் குருபக்தி மிக்கவர்களாக மாறி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது.

நான் இன்னமும் என் ஆசிரியப்  பெருமக்களுடன் தொடர்பில் இருக்கிறேன்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

shylaja

unread,
Nov 7, 2014, 3:14:35 AM11/7/14
to mintamil, Subashini Tremmel
அட  சொல்லவே இல்ல பாரு இதெல்லாம்? சுவாரஸ்யமா இருந்தது உங்க இந்த அனுபவம்!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Nov 7, 2014, 3:46:28 AM11/7/14
to மின்தமிழ்

2014-11-07 13:44 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
அட  சொல்லவே இல்ல பாரு இதெல்லாம்? சுவாரஸ்யமா இருந்தது உங்க இந்த அனுபவம்!


மக்களே
​ பாருங்க

மாணவப்பருவத்தில் ஒவ்வொருவரும் எப்படி அமைதிப் புறாக்களாக இருந்திருக்கிறார்கள் என்று

இப்பத்தானே தெரியுது ஆசிரியர்களை வாரும் பழக்கம் தொட்டில் பழக்கம் தொடரும் பழக்கம் என்று

யாரேங்கே என் பறக்கும் பஞ்ச கல்யாணிக் குதிரையைக் கொண்டுவாருங்கள் உயிர் தப்பித்தால் போதும்
ஓடிவிடுகிறேன்

பாசி​

Suba.T.

unread,
Nov 7, 2014, 4:11:47 AM11/7/14
to மின்தமிழ், Subashini Tremmel
​பஞ்சகல்யாணி மெயிண்டனன்ஸ்க்கு போயிருக்காம். ஓட முடியாது..:-)



 
பாசி​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 7, 2014, 4:29:36 AM11/7/14
to மின்தமிழ், Subashini Tremmel
சுபா சூப்பரு! :)))))))!

 புரொபசர் ஜி!.  நாட்டுக்குள்ள உங்களப் பத்திக் கேட்டா இப்படித்தான் சொல்லுறோம்!. (நாங்க பொய்க்கால் குதிரை தே!.. பஞ்சகல்யாணிக்கு எங்குட்டு போவ?!)


உண்மைய ஒத்துக்குறாங்க நல்ல மாணவிங்கன்னு ரெண்டு வார்த்த பாராட்டுவீகளா!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-11-07 14:41 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
                

shylaja

unread,
Nov 7, 2014, 4:52:08 AM11/7/14
to mintamil
அடேயப்பா எங்க பிடிக்கறீங்க  இந்தப்பாட்டெல்லாம் அதுவும் டக் டக்குனு?:)  ரொம்ப நல்லமாணவிங்கன்னு  பாராட்டு சீக்கிரமெ வரும் பாரு பாரு:)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!- 
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதா!-
பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ             

Suba.T.

unread,
Nov 7, 2014, 5:05:03 AM11/7/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், Subashini Tremmel
பாடல் சூப்பர். காட்சி அதை விட சூப்பர்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 7, 2014, 6:40:59 AM11/7/14
to mintamil, பார்வதி இராமச்சந்திரன்., Subashini Tremmel
நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் கோவிலுக்குப் பலமுறை சென்றும் சிவகங்கை சமஸ்தான தலபுராண புத்தகம் வாங்கிப் படித்திருந்தும் அழுகிணி சித்தர் குறித்து நான் அறிந்ததில்லை. 
தகவலுக்கு நன்றி திருமிகு பார்வதி. அடுத்தமுறை நாட்டரசன்கோட்டை செல்லும்போது பார்க்க வேண்டும். 
என் மகள் நாட்டரசன்கோட்டை மருமகள்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

தேமொழி

unread,
Nov 7, 2014, 7:39:28 AM11/7/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

அருமையான பாடல் காட்சி..நான் முதன்முதல் இப்பொழுதுதான் பார்க்கிறேன்.  நன்றி பார்வதி.

சூப்பர் ஸ்டார், சூரக்கோட்டை, தில்லுமுல்லு, சோதனை மேல் சோதனை..என பாடலில் வரும் பல குறிப்புகளைப் புரிந்து ரசிப்பதற்கு நல்ல திரைப்படப் பின்னணி இருக்க வேண்டும். 

...

சில சமயம் ஆசிரியர்களுக்கு யாரோ நம் மூத்த மாணவர்கள் வைக்கும் பெயர் நிலைத்து நாமும் சொல்லி வருவோம்.  ஆனால் மாணவிகள் சூட்டும் பெயர் அன்பு மிகுதியால் மரியாதை தரும்  ("கவனிக்க" மரியாதையைக் குறைகாத ...) வகையில்தான் இருக்கும்.

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் ஒரு வேதியல் பேராசிரியைக்கு "கிளிப் ஆண்ட்டி" என்ற பெயர் பலகாலம் இருந்தது.  அவர் கொண்டையில் எப்பபொழுதும் பெரிய கிளிப் இருக்கும்.  அது வழங்கி வந்த பெயர். நானும் என் தங்கையும் வீட்டில் பெற்றோரிடமும் அப்படியே அவரைக் குறிப்பிடுவோம் (35 ஆண்டுகள் முந்திய கதையிது)  . அவர் பெயர் மார்கரெட் டேவிஸ் (? உண்மை பெயர் புழக்கத்தில் இல்லாமல் இருந்ததால் சரியா எனத் தெரியவில்லை).  

பல ஆண்டுகள் கழித்து அப்பா சந்தித்த ஒரு பெண்ணிடம், என்னம்மா செய்யறீங்க? என்ற கேட்க, அந்தப் பெண் ஹோலிகிராஸில் கெமிஸ்ட்ரி படிக்கிறேன் என்று சொல்ல, அப்பா  அப்படியாம்மா, கிளிப் ஆண்ட்டி எப்படி இருக்காங்க?  என்று கேட்கவும் அந்தப் பெண் அதை எதிர்பார்க்காமல் ஆச்சரியம் அடைந்ததாகச் சொன்னார்கள்.  


..... தேமொழி

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 7, 2014, 8:31:50 AM11/7/14
to மின்தமிழ், Subashini Tremmel

பாராட்டுனவங்களுக்கெல்லாம் நன்றியோ நன்றி!...ஆனாலும்ம்ம்....

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .

www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com

shylaja

unread,
Nov 7, 2014, 8:54:35 AM11/7/14
to mintamil
 ஆமாம், ஆனாலும்ம்ம்ம்ம்ம்:)   (நான் 2ம்  கூட சேர்த்துக்கிட்டேன் மீதி மேகலா தேமொழிபவழாக்கு:)))

Megala Ramamourty

unread,
Nov 7, 2014, 9:44:03 AM11/7/14
to மின்தமிழ்
ஆகா என் தோழிமார்கள் எல்லாரும் வந்து எத்தனை எத்தனை இனிய தகவல்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்...அருமை! அருமை!

நம் பார்வதியின் அனுபவங்கள் மிகவும் சுவையாக இருக்கின்றன. ஸ்டார் வீட்டுப் பிள்ளைகளுடன் பழகக் கூடிய வாய்ப்பு எல்லாருக்கும் அமைவதில்லை...அந்த வாய்ப்பைப் பெற்ற நம் பார்வதியும் ஒரு ’சூப்பர் ஸ்டாரே!’  :-)

ஷைலு நீங்கள் சொல்வதுபோல் மாணவிகளும் ஆசிரியர்களுக்குப் பட்டப்பெயர் வைப்பதிலும், அவர்களைக் கேலி செய்வதிலும் மாணவர்களுக்குச் சளைத்தவர்கள் இல்லைதான். (ஏன் நானே இப்படிப் பெயர் வைப்பதில் ‘பெயர்’ பெற்றவளாக்கும்! அந்த விவரம் கீழே!) :-)) இருந்தாலும் நம்மைப் பற்றி நாம் மிகவும் உயர்வாகச் சொல்லிக்கொண்டு மாணவர்களைக் கொஞ்சம் மட்டம் தட்டினால்தானே நம் அணி ஜெயிக்கும். நம் பேராசிரியரும் நம்மைத் தன் மாணவிகளாகச் சேர்த்துக்கொள்வார் என்ற நப்பாசையில்தான் மாணவர்களின் லீலைகளை மட்டும் ’வெளிச்சம்’போட்டுக் காட்டினேன். :-))

இனி, கல்லூரியில் நான் ஒரு பேராசிரியைக்குச் சூட்டிய நாமகரணத்தைப் பற்றிய செய்தி...

எங்களுக்கு ’கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங்’ பாடம் நடத்திய பேராசிரியை எப்போதும் ‘உம்’மென்றே முகத்தை வைத்துக்கொண்டிருப்பார்; சிரிக்கவே மாட்டார். போதாக்குறைக்கு எங்களிடம் ஏதாவது குறை கண்டுபிடித்துக்கொண்டே வேறு இருப்பார். இதைக் கண்டு எரிச்சல் அடைந்த என் தோழிகள் என்னிடம் வந்து “இந்தப் புரபசருக்கு உடனடியாக ஏதாவது ‘பட்டப் பெயர்’ வைத்தாக வேண்டும்; வெளிப்படையாகப் பார்த்தால் புகழ்வதுபோல் இருக்கவேண்டும்; ஆனால் அதன் உட்பொருள் அவரைக் கிண்டல் செய்வதாக இருக்கவேண்டும் (வஞ்சப் புகழ்ச்சி); அப்படி ஒரு பெயரை உடனே கண்டுபிடித்து வை!” என்று என்னிடம் அன்புக் கட்டளை இட...மூளையைக் கசக்கிப் பிழிந்து நான் ஒரு பெயரை 15 நிமிடங்களில் கண்டுபிடித்து என் தோழிகளிடம் சொன்னேன். அவர்களும் ”பெயர் சூப்பர்!” என்றனர்.

அது என்ன பெயர் என்கிறீர்களா?

’GEM’ என்பதே அந்தப் பெயர். வெளிப்படையாகப் பார்த்தால் ‘Gem of a person' என்று பாராட்டுவதுபோல் இருக்கும். ஆனால் அதன் விரிவாக்கம் இதுதான்...'Ginger Eating Monkey' அதாவது இஞ்சி தின்றக் குரங்கு! :-)
(எப்போதும் முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டிருப்பவர்களை இப்படித்தானே அழைப்பார்கள்?) :-))
இதுபோல் ஆசிரிய/ஆசிரியைகளுக்குப் புதுப்பெயர் சூட்டி மகிழ்வதில் அப்போது ஓர் அலாதி ஆனந்தம் எங்களுக்கு!

அன்று என்னவோ அப்படியெல்லாம் பெயர் வைத்தோமே தவிர இப்போது யோசித்துப் பார்த்தால் அவையெல்லாம் நாகரிகமற்ற செயல்களாகத்தான் தெரிகின்றன. அன்று ஏனோ எங்களுக்கு அவ்வாறு தோன்றவில்லை; காரணம் அன்றிருந்த அறிவு முதிர்ச்சியின்மையோ? (இப்போது மட்டும் அறிவு பொங்கி வழிகிறதாக்கும் என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது)  :-))

ஆகவே பேராசிரியரே! past is past...இனிமேல் நாங்கள் சமர்த்துப் பிள்ளைகள். ‘பட்டப் பெயரெல்லாம்’ யாருக்கும் வைக்கமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். எனவே குருபக்தியில் உயர்ந்தவர்கள் மாணவிகளே!  :-)))

(பி.கு: நான் சிறுமியாக இருந்தபோது பார்த்த படம் ரஜினி நடித்த ’விடுதலை’. படம் ‘ஃபிளாப்’ என்றாலும் பாடல்கள் இனிமையானவை; அதிலும், நடிகர் திலகமும் சூப்பர் ஸ்டாரும் இணைந்து கலக்கிய இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும். இந்த அருமையான பாடலை ஒளிபரப்பி என் பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்க வழி செய்த பார்வதிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!)

அன்புடன்,
மேகலா
 


 


shylaja

unread,
Nov 7, 2014, 9:49:44 AM11/7/14
to mintamil
மேகலா  ஜம் என்று அந்த ஜெம்  விவரம் எழுதி இருக்கிறீர்கள். அப்படி இப்படி  சமாளித்து நாமும் குருபக்தில  மாணவியர் சிறந்தவர் என நிரூபித்துவிட்டோம்:)தீர்ப்பு எப்படி எனபார்க்கலாம்!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 7, 2014, 10:01:03 AM11/7/14
to மின்தமிழ்

மேக்ஸ் ராக்ஸ்!..ஹிந்தில சூப்பரா ஓடுன படம் 'குர்பானி'.. அத தமிழுல 'விடுதலை ' செஞ்சா படம் எப்புடி ஓடும்னேன்!!.. (அதாவது தமிழாக்கம் பொருந்தி வராம படம் 'ஓடீருச்சு'!..).

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .

www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com

Nagarajan Vadivel

unread,
Nov 7, 2014, 10:40:13 AM11/7/14
to மின்தமிழ்

2014-11-07 20:19 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
தீர்ப்பு எப்படி எனபார்க்கலாம்!


தீர்ப்பு
​ சொல்லுவதைவிட மக்கள் தங்களைப்பற்றி ரெண்டு நல்ல வார்த்தைகளைச் சொல்லச் சொன்னதை எடுத்துக்கொள்ளலாம் என்று கருதுகிறேன்

களத்தில் நால்வர் அவர்களுக்கான இரண்டு நல்ல வார்த்தைகள்
1. வஞ்சியா வசந்தை
2. துருதுரு சுறுசுறு
3.பயாஸ்கோப் பாரு
4.மெகாமெகா மேகா

எல்லோரும் தங்களின் மாணவப்பருவத்தில் நடத்திய அழிச்சாட்டியங்களை விலாவாரியாக எடுத்துச் சொல்லி தீர்ப்பு எதிர்பார்ப்புக்கு மாறாக இருக்குமேல் தீர்த்துடுவோம் என்று மறைமுகமாக எச்சரித்தாலும்

1.  பழைய சினிமாப்படங்களில் பார்த்த ஆண்களை அடக்கும் சண்டிரானிக் காட்சிகளின் தாக்கம் மறைந்திருந்தாலும் படைப்புத் திறன் சிந்தனை வளம்கொண்ட வஞ்சியா வசந்தை மகளிரணித்தலைவியாக இல்லாமல்ஆசிரியகளைக் காக்கும் ஜீவகாருண்ய சங்கத்தின் தலைவியாக இருந்து  செயல்புரிவதாக இருந்தால் மாணவியாக ஏற்றுக்கொள்ளலாம்

2. ஆறாந்திணையின் அடிப்படை ஒழுக்கத்தை அடிபிறழாமல் விரைவாகச் செயல்படுத்தும் துருதுரு சுறுசுறு எங்கெங்கு காணினும் ஆண்களைப் போட்டுத்தாக்குவது என்ற சூளுரையைக் கைவிட்டு இணையம் ஒரு சமதளம் என்று கருதினால் மாணவியாக ஏற்றுக்கொள்வதில் தடையில்லை

3.இம்மென்னும் முன்னே குழலூதி பாடல்போடும் திறன் அமைந்திருந்தும் எக்காலமும் அக்கா அக்கா என்று பம்மி சுண்டுவிரல் அசைவில் வார்த்தைக்கணைகளைத் தொடுப்பதைக் கைவிட்டு அமைதிவழிக்குத் திரும்பினால் மாணவியாக வாய்ப்புள்ளது

4. மேகவழி சஞ்சாரம் செய்யும் நாரதர்போல் அனைத்துத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்து சீராக ஆற்றொழுக்காக மெகாக் கட்டுரைகளை வரையும் திறன் இருந்தும் திடீரென்று தம்புராவை மீட்டி ஆண்களுக்கெதிரான தகவல்களைமட்டும் தருவதைக் குறைத்துக்கொண்டால் மாணவியாக வாய்ப்புண்டு

இவர்களைத் தவிர சமையல் குறிப்புகளைக் கொடுத்துக்கொண்டு சரியான சமயத்தில் சமையலில் வெங்காயம்போல் எல்லாவற்றிலும் உட்புகுந்து உள்குத்து விட்டு ஊமைக்காயத்தை விளைவிக்கும் இன்னொருவர் மாணவியாக மணுப்போடாததால் அவரின் சில்மிஷத்தை  ஆசிரியர் தாங்கிக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை

இதுவே என் தீர்ப்பு.  தீர்ப்பு சொல்வதற்குமுன் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக வசந்தைநகரின்  கைதேர்ந்த ஒரு சிகைக் கலைஞனின் கையால் தலைக்கு மசாஜ் செய்துவிட்டுவந்து இந்தத் தீர்ப்பை எழுதியுள்ளேன்

தீர்ப்புக்கு அப்பீல் செய்ய 24 மணிநேர அவகாசம் அளிக்கப்படும்

பாசி

தேமொழி

unread,
Nov 7, 2014, 11:11:02 AM11/7/14
to mint...@googlegroups.com


On Friday, November 7, 2014 7:40:13 AM UTC-8, பாம்பாட்டிச் சித்தன் wrote:

தீர்ப்புக்கு அப்பீல் செய்ய 24 மணிநேர அவகாசம் அளிக்கப்படும்

 

Megala Ramamourty

unread,
Nov 7, 2014, 11:13:33 AM11/7/14
to மின்தமிழ்
வானிலை அறிவிப்புச் செய்பவர் ’இன்று மழைவர வாய்ப்புண்டு’ என்று ஆரூடம் சொல்வதுபோல் நீங்களும்  எங்களை உங்கள் மாணவிகள்தான் என்று ஆணித்தரமாக அங்கீகரிக்காமல்’மாணவிகளாக (இருக்க) வாய்ப்புண்டு’ என்று பட்டுக்கொள்ளாமல் தீர்ப்புச் சொல்லியிருப்பது எங்களுக்குச் சற்றே வருத்தத்தை அளிக்கிறது.  :(

இனி வாதாடியோ, கருணை மனுப் போட்டோ பிரயோஜனமில்லை என்று பட்சி சொல்கின்றபடியால் நாங்கள் அனைவரும் உங்கள் வீட்டிற்கே (காதில்)பூ, பழத்தட்டுடன் விஜயம் செய்து, தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவர் கால்களிலும் விழுந்து ஆசி பெற்றுத் தங்கள் மாணவிகளாக ஆகிவிடுவது என்று முடிவுசெய்துவிட்டோம். :-)

எங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்து ஒரு காட்சி...
http://www.youtube.com/watch?v=6kVFH8Bl-LU

(பி.கு: எங்கள் மிதமிஞ்சிய பணிவைக் காட்டவே இக்காட்சியை இருமுறை ஒளிபரப்பியுள்ளோம் என்பதை மீண்டும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.) :-))

இப்படிக்கு,
தங்கள் (எதிர்கால) மாணவிகள்.  :-)



--

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 7, 2014, 12:40:47 PM11/7/14
to mintamil
பச்சபுள்ள மாதிரி என்ற வசனத்தை இரசித்தேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-11-07 21:43 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
வானிலை அறிவிப்புச் செய்பவர் ’இன்று மழைவர வாய்ப்புண்டு’ என்று ஆரூடம் சொல்வதுபோல் நீங்களும்  எங்களை உங்கள் மாணவிகள்தான் என்று ஆணித்தரமாக அங்கீகரிக்காமல்’மாணவிகளாக (இருக்க) வாய்ப்புண்டு’ என்று பட்டுக்கொள்ளாமல் தீர்ப்புச் சொல்லியிருப்பது எங்களுக்குச் சற்றே வருத்தத்தை அளிக்கிறது. 
:)

Oru Arizonan

unread,
Nov 7, 2014, 1:17:42 PM11/7/14
to mint...@googlegroups.com
good animation!  super!
oru arizonan

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Nov 7, 2014, 1:25:23 PM11/7/14
to mint...@googlegroups.com
பாசமுள்ள பாசி பேராசிரியர் மகளிர் அணிக்காகப் போடும் படமிது திரு. அரிசோனன்.

இதில் உள்ள நான்கு பெண்கள் யாரைக் குறிக்கும் என்ற மர்மத்தை அவர் வெளியிட்டதே இல்லை.

இதில் இல்லாதவர்கள் கீதாவும் பவளாவும் என்பது இப்பொழுது உறுதியாகிவிட்டது.


..... தேமொழி




On Friday, November 7, 2014 10:17:42 AM UTC-8, oruarizonan wrote:
good animation!  super!
oru arizonan
On Fri, Nov 7, 2014 at 9:11 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Friday, November 7, 2014 7:40:13 AM UTC-8, பாம்பாட்டிச் சித்தன் wrote:

தீர்ப்புக்கு அப்பீல் செய்ய 24 மணிநேர அவகாசம் அளிக்கப்படும்

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Nov 7, 2014, 1:26:32 PM11/7/14
to mint...@googlegroups.com
தாங்கள் இதில் ஒன்றா, தேமொழி?
ஒரு அரிசோனன் 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 7, 2014, 1:45:01 PM11/7/14
to mint...@googlegroups.com

இல்லையெனத் தெரிகிறது :)))

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 7, 2014, 1:53:19 PM11/7/14
to mintamil
2014-11-08 0:15 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

இல்லையெனத் தெரிகிறது :)))

ஆம். நீங்களெல்லாம் தலையாட்டிப் பொம்மைகள் இல்லை!
சொ.வி. 



On Friday, November 7, 2014 10:26:32 AM UTC-8, oruarizonan wrote:
தாங்கள் இதில் ஒன்றா, தேமொழி?
ஒரு அரிசோனன் 

 


Oru Arizonan

unread,
Nov 7, 2014, 3:27:40 PM11/7/14
to mint...@googlegroups.com
வினைதீர்த்தான் அவர்களே,

இவர்கள் தலையாட்டி பொம்மைகள் அல்லர்;  நடனமாடும் பொம்மைகள்!

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

rajam

unread,
Nov 7, 2014, 6:04:58 PM11/7/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
வணக்கம். இங்கே இழையைத் தொடங்கி, கேள்வி கேட்டவரே குழப்புகிறாரே! இழையின் தலைப்பு பொதுவாகக் குருபக்தியில் விஞ்சியவர்கள் மாணவரா மாணாக்கர்களா என்பது. ஆனால் இழை நடுவில் ///மெய்நிகர் உலகில் குருபக்தியில் விஞ்சியவர் யார்? மாணவரா? மாணவியா அம்புட்டுத்தென்/// என்கிறார். இவருக்கு ஒரு புதுப்பெயரை இங்கேயுள்ள மகளிர் கூட்டணிதேன் கொடுக்கோணும். 

அது சரி, இழையின் தலைப்புக்கான என் மறுமொழியைச் சொல்லுகிறேன் ஒரு நாள். இப்போது என் கேள்வி வேறு. பார்வதி இராமச்சந்திரன் மதுரை பாத்திமாக் கல்லூரியில் படித்ததாக இங்கே எப்போதோ படித்த நினைவு. 

பார்வதி, நீங்கள் பாத்திமாவில் படித்தது எப்போது? இன்னும் எந்த ஆசிரியைகளுடன் தொடர்பில் இருக்கிறீர்கள். அறிய ஆவல்.

அன்புடன்,
(மதுரை நக்கீர ...) ராஜம்

rajam

unread,
Nov 7, 2014, 6:08:52 PM11/7/14
to mint...@googlegroups.com
தேடுபுலி தேமொழிக்கு இங்கே மதிப்பெண் என்ன கொடுக்கலாம்? 50% கூட இல்லை. இணையத்தைப் புரட்டிப்போட்டு அலசும் தேமொழிக்கு மின்தமிழ் மடல்களில் தேட நேரமில்லையா! தேடுங்கள், கிடைக்கும்!


On Friday, November 7, 2014 10:25:23 AM UTC-8, தேமொழி wrote:
பாசமுள்ள பாசி பேராசிரியர் மகளிர் அணிக்காகப் போடும் படமிது திரு. அரிசோனன்.

இதில் உள்ள நான்கு பெண்கள் யாரைக் குறிக்கும் என்ற மர்மத்தை அவர் வெளியிட்டதே இல்லை.

இதில் இல்லாதவர்கள் கீதாவும் பவளாவும் என்பது இப்பொழுது உறுதியாகிவிட்டது.


..... தேமொழி




On Friday, November 7, 2014 10:17:42 AM UTC-8, oruarizonan wrote:
good animation!  super!
oru arizonan
On Fri, Nov 7, 2014 at 9:11 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Friday, November 7, 2014 7:40:13 AM UTC-8, பாம்பாட்டிச் சித்தன் wrote:

தீர்ப்புக்கு அப்பீல் செய்ய 24 மணிநேர அவகாசம் அளிக்கப்படும்

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Geetha Sambasivam

unread,
Nov 7, 2014, 7:57:18 PM11/7/14
to மின்தமிழ்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 7, 2014, 9:01:22 PM11/7/14
to மின்தமிழ்
///
2014-11-07 21:10 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
​​
3.இம்மென்னும் முன்னே குழலூதி பாடல்போடும் திறன் அமைந்திருந்தும் எக்காலமும் அக்கா அக்கா என்று பம்மி சுண்டுவிரல் அசைவில் வார்த்தைக்கணைகளைத் தொடுப்பதைக் கைவிட்டு அமைதிவழிக்குத் திரும்பினால் மாணவியாக வாய்ப்புள்ளது

தீர்ப்புக்கு அப்பீல் செய்ய 24 மணிநேர அவகாசம் அளிக்கப்படும்///

மொதல்ல எல்லாருக்கும் சேர்த்து அப்பீல் பண்ண மேகலாவுக்கு ரொம்ப நன்றி!..

நான் என் சார்பில இப்ப ஒரு மேல்முறையீடு செய்யறேன்!..

நல்லா என் பேர சேர்த்து பயாஸ்கோப் பாருன்னு போட்டுட்டீக.. என்னா நெனச்சீகளோ தெரியல. இது மெய்நிகர் உலகமா இருந்தாலும் மெய்யாலுமே ஒண்ணு சொல்லுறேன்... என் ஆசிரியப் பெருமக்கள் இல்லன்னா நான் இல்ல.. என்ன தட்டிக் கொடுத்து, குட்டி சரிப்படுத்திக் கொண்டு வந்த அந்தப் பெரியவங்கள மெய்யாலுமே நெதக்கும் நெனச்சு கையெடுத்துக் கும்புடுறேன்.. கொஞ்சம் (கொஞ்சம் என்ன நெறையவே) பயந்த சுபாவம் எனக்கு.. தயங்கித் தயங்கியே பாதி வேல பாக்க மாட்டேன்.. என்னப் புரிஞ்சுக்கிட்டு, என்ன ஊக்கப்படுத்தி நெறைய எழுத வைக்கிறாங்க ஷைலாக்கா.. அதுனால அவங்க மேல நெறைய அன்பும் மரியாதையும் இருக்கு. அது தான் வார்த்தைல வருது!.. அதுக்காவ  'சுண்டு விரல் அசைவில் வார்த்தைக் கணைகளை தொடுப்பதாக'ச் சொல்லுறீகளே சரியா சொல்லுங்க.. ஆமா, நானு எப்ப ஒங்க கூட சண்ட போட்டேன் அமைதி வழிக்கி திரும்புறதுக்கு!..அதும் புரியல..

இங்க எங்களுக்கும் அடி ஒதை எல்லாம் விழுறது உங்களுக்குத் தெரியாமக் கிடையாது.. நீங்க வெளிய சொல்லுறீக.. நாங்க சொல்லாம அடக்கி வாசிக்கிறோம்!.. அதனாலயே கூட்டணியா தலை காட்டுறோம்!.. மத்தபடி, உங்களுக்கு என்னிக்காச்சும் மறு பேச்சு உண்டா சொல்லுங்க?!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


​​
2014-11-07 21:10 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

​  
​    
​   
​   
​               

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 7, 2014, 9:17:42 PM11/7/14
to மின்தமிழ்
///
2014-11-08 4:34 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:////

///
பார்வதி, நீங்கள் பாத்திமாவில் படித்தது எப்போது? இன்னும் எந்த ஆசிரியைகளுடன் தொடர்பில் இருக்கிறீர்கள். அறிய ஆவல்.///

வணக்கம் அம்மா!.. நான் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் படித்தேன்.. வணிகவியற் புலம்.. என் துறைத் தலைவர் (இப்போது ஓய்வு பெற்று விட்டார்) திருமதி. மைதிலி மற்றும் திருமதி.ரோஸ்லின் என்னும் விரிவுரையாளர் இருவருடன் தொடர்பு இருக்கிறது.. ஆயினும் பள்ளி ஆசிரியைகள் அளவுக்கு நெருங்கிய தொடர்பில்லை எனினும் ஊருக்குச் செல்லும் போது நலம் விசாரிப்பதுண்டு..

பொதுவாகவே என் ஆசிரியைகள் அனைவரும் ஓய்வின்றிப் பணியாற்றும் திறன் கொண்டவர்கள்.. குறிப்பாக தமிழாசிரியைகள்.. திருமதி.சரஸ்வதி இராமனாதன் முதல் வருடம் பாடம் எடுத்தார். அவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் வருடம் அது. தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் கலக்கி வரும் திருமதி.விசாலாட்சியும் எம் தமிழாசிரியையே..

முக்கியமான ஒருவரைப் பற்றிச் சொல்ல வேண்டும். 'திண்ணை' உள்ளிட்ட தளங்களில் எழுதி வரும் திருமிகு எம்.ஏ.சுசீலா. இவர் ஒரு வலைப்பூவும் நடத்தி வருகிறார். என் கல்லூரி நாட்களில், நான் போட்டிகளில் பங்கு கொள்ள மிகுந்த ஊக்கமளித்தவர். மிகச் சிறந்த எழுத்தாளர்..   நான் பெரிய சாதனையாளர் இல்லை.. ஆயினும் என் சின்னச் சின்ன வெற்றிகளையும் அவருக்கு சிறு குழந்தையின் மலர் பறித்த மகிழ்வுடன் தெரியப்படுத்துவேன்.. என் தாயை விடவும் சந்தோஷப்படுவார்.. 'இன்னும் இன்னும்' ஊக்கப்படுத்துவார்.

அவர் வலைப்பூ இணைப்பு கீழே!..அவர் எத்தகைய திறன் பெற்றவர் என்பதை அறிந்து கொள்ளலாம்!.. 


​இம்மாதிரியான ஆசிரியப் பெருமக்களுக்கு தகுதியான மாணவியாக இருக்க வேண்டுமே என்கிற நினைவு எனக்கு எப்போதும் உண்டு..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


​​
2014-11-08 4:34 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
​ 
​  
​  
​          

Nagarajan Vadivel

unread,
Nov 7, 2014, 9:37:50 PM11/7/14
to மின்தமிழ்
2014-11-08 7:31 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
நல்லா என் பேர சேர்த்து பயாஸ்கோப் பாருன்னு போட்டுட்டீக.
​ கூடியதாகும்​

பெயர்ச்சொல்
​ இல்லை வினைச் சொல் பயாஸ்கோப் பாருங்க என்ற பொருளில்.  தணுஷ் ஒல்லிப்பிச்சான் போல ஒங்கபேரை கொத்துப் பரோட்டா பிச்சுப்போட்ட கோழி செய்யமாட்டேன் என்ற உத்திரவாதம் தரப்படுகிறது.  எனவே உங்கள் முதல் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது​



ஆமா, நானு எப்ப ஒங்க கூட சண்ட போட்டேன்

சென்ற ஆண்டு ரதம் ஓட்டியபோது ஒரு பட்டிமன்றம் வச்சு என்னை நடுவரா அழைச்சு அதிரடி ஆட்டம் ஆடியபோது நான் விலகிவிடுகிறேன் என்று சொனபோது யாரெங்க கதவை மூடுங்கள் நடுவரைக் கொஞ்சம் கவனிக்கலாம் என்று திருவாய் மல்ர்ந்தது யாரோ?

மதுரைப் பெண்களுக்குரிய போர்க்குணம் எவ்வளவுதான் மறைத்தாலும் சில நேரங்களில் வெளிப்பட்டுவிடும்.  நல்லா இருந்த மதுரையை எரித்ததும் ஒரு பெண்தானே.  அந்தம்மா எரிப்பதற்குமுன் யாரையெல்லாம் பாதிக்கக்கூடாது என்று பட்டியல் போட்டமாதிரி இல்லாமல் நீங்க ஒரு நடுவரை அதுவும் ஒரு பயந்தாங்கொள்ளியைப் பயமுறுத்தினீர்கள்.  கோர்ட்டார் ஆவண அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்து இரண்டாம் முறையீடும் தள்ளப்பட்டது என்று அறிவிக்கிறேன்

துன்பம் நேர்கையில் சோதனை நேரத்தில் வலிமையில்லாத எளிமையானவர்கள் ஒன்றுகூடி நிற்பது இயல்பு.  மின்தமிழில் சக்திமிக்க நால்வர் ஒன்று கூடினால் குழுவின் நிகர எண் எங்கேயோ எகிறிப்போய்விடுமே.  யானை பலம் அசுரபலம் வந்தால் தாக்குவது இயல்புதானே.  ஊர்கூடித் தேர் இழுத்தீர்கள் ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் வாய்மூடித்தான் இருந்தார்கள் வாழ்த்தினார்கள் வரவேற்றார்கள்.  ஏந்த ஒரு எதிர்ப்புக்குரலும் முணுமுணுப்பும்  கேட்கக்கூடாது என்று நினைப்பது அமைதிவழியா கொஞ்சம் யோசித்துப் பாரு என்றால் உடனே என்பெயரை நடுவர் யோசித்துப் பாரு என்று மாற்றிவிட்டார் என்று குற்றம் சாட்டுவீர்கள் என்பதால் தவிர்த்துவிடுகிறேன்

பாசி

Nagarajan Vadivel

unread,
Nov 7, 2014, 9:44:50 PM11/7/14
to மின்தமிழ்

2014-11-07 23:56 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
தாங்கள் இதில் ஒன்றா, தேமொழி?

ஊரென்றால்
​ அதில் நாலுபேர் இருப்பார்கள்.  அவர்கள் வாயில் விழாமல் ஊரில் நல்லது கெட்டது நடக்காது.  அந்த நாலுபேருக்குப் பயந்தே குடும்பங்கள் வாழும் என்பது தாங்கள் அறியாததா

மெய்நிகர் உலகில் மின் தமிழில் இவர்கள்தான் அந்த நால்வர்.  இப்படம் யாரையும் குறிப்பதல்ல.  படம் தஞ்சாவூரைச் சேர்ந்ததானாலும் தலையாட்டிப்பொம்மையில்லை.  தமிழ்நாட்டில் தலையாட்டிப் பொம்மைகள் ஆண்கள் என்று எப்போதே பொம்மை செய்பவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள்

பாசி​

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 7, 2014, 9:47:15 PM11/7/14
to மின்தமிழ்
தட்டச்சில் ஏற்பட்ட கவனக் குறைவுக்கு மன்னிக்கக் கோருகிறேன் அம்மா!.

///திருமதி.சரஸ்வதி இராமனாதன் முதல் வருடம் பாடம் எடுத்தார். அவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் வருடம் அது. ////

திருமதி சரஸ்வதி இராமனாதன் என்பவருடன் தொடர்பிருக்கிறது (இவர் அமுதத் தமிழில் சொற்பொழிவாற்றும் திருமதி.சரஸ்வதி இராமனாதன் அல்ல. இவர் வேறு..)

பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி. சக்தி பெருமாள் முதல் வருடம் பாடம் எடுத்தார். அவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் வருடம் அது. இப்படி இருக்க வேண்டும். தவறுக்கு மன்னிக்கக் கோருகிறேன்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-11-08 7:47 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 
​ 
​    

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 7, 2014, 9:50:24 PM11/7/14
to மின்தமிழ்
///யாரெங்க கதவை மூடுங்கள் நடுவரைக் கொஞ்சம் கவனிக்கலாம் என்று திருவாய் மல்ர்ந்தது யாரோ?////

நானில்லையே..வேணுன்னா மடல்களை எல்லாம் ஒரு தரம் நல்லாப் படிச்சுப் பாருங்க ஒரு தரம்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-11-08 8:07 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
​     

Nagarajan Vadivel

unread,
Nov 7, 2014, 9:50:31 PM11/7/14
to மின்தமிழ்
2014-11-08 4:34 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
இங்கே இழையைத் தொடங்கி, கேள்வி கேட்டவரே குழப்புகிறாரே! இழையின் தலைப்பு பொதுவாகக் குருபக்தியில் விஞ்சியவர்கள் மாணவரா மாணாக்கர்களா என்பது. ஆனால் இழை நடுவில் ///மெய்நிகர் உலகில் குருபக்தியில் விஞ்சியவர் யார்? மாணவரா? மாணவியா அம்புட்டுத்தென்

நெத்தியடி
​ சரியாக வளைத்துவிட்டீர்கள்.  தலைப்பென்னவோ மாணவரா மாணவியா என்றுபோட நினைத்து குழப்பிவிட்டதைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்.  இது எழுத்துப்பிழை

மெய்நிகர் உலகில் மாணவரா மாணவியா என்று கேட்பது கருத்துப்பிழை.  பாலற்ற பாழ்வெளியாம் இணையத்தில் ஆணென்ன பெண்ணென்ன என்பதை அறியாமலே இழை நீண்டுவிட்டது

மின்தமிழில் என்போன்றவர்கள் 2 + 2 = 4 என்று சொன்னாலே எதிர்ப்புக் கிளம்பும்போது இது போன்ற தலைப்புகள் வளர்வதில் வியப்பில்லை.

பாசி​

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 7, 2014, 9:52:54 PM11/7/14
to மின்தமிழ்
////என்பெயரை நடுவர் யோசித்துப் பாரு என்று மாற்றிவிட்டார் என்று குற்றம் சாட்டுவீர்கள் என்பதால் தவிர்த்துவிடுகிறேன்///


உங்க மேல எப்படி குத்தம் சொல்லுறது?!..என் நிலையை விளக்குவேன்.. தப்பிருந்தா கட்டாயம் மன்னிப்புக் கேட்பேன்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-11-08 8:20 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​      

Nagarajan Vadivel

unread,
Nov 7, 2014, 9:52:58 PM11/7/14
to மின்தமிழ்

2014-11-08 8:20 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
வேணுன்னா மடல்களை எல்லாம் ஒரு தரம் நல்லாப் படிச்சுப் பாருங்க ஒரு தரம்.

கட்டாயம்.
​  அதே நேரம் நீங்கள் அமைதியாக இருந்து நடுவருக்கு எதிர்ப்புக்குரல் கொடுக்காமல் பட்டிமன்றத்தில் பங்கேற்றீர்கள் என்பதை நீங்கள்தான் நிறுவ வேண்டும்

பாசி​

Nagarajan Vadivel

unread,
Nov 7, 2014, 9:57:03 PM11/7/14
to மின்தமிழ்

2014-11-08 8:22 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
தப்பிருந்தா கட்டாயம் மன்னிப்புக் கேட்பேன்.

இது
​ தப்புக்கெல்லாம் தப்பு.  பொதுவாகத் தமிழர்கள் மன்னிப்புக் கேட்க மறுப்பவர்கள்.  மனோகரா வசனத்தை மீடும் மனதில் நிறுத்துங்கள்.  தவறுக்கு வருத்தம் தெரிவிக்கலாம் அவ்வளவுதான்

ஆனானப்பட்ட பாரதியையே மன்னிப்புக் கேட்டு சிறையிலிருந்து வந்தவர் என்று கேலிபேசுகிறார்கள் அவரும் இதுபோல மரபுக்காக எழுதியதைப் பிடித்துக்கொண்டு அவரை வாட்டுகிறார்கள்.

நீங்கள் தவறிழைத்ததாக எங்கே சொல்லப்பட்டுள்ளது. நான் எழுதியது ஒன்றுக்கு மேற்பட்ட பொருளில் உள்ளதைக் குறிப்பிட்டேன் அவ்வளவே

பாசி​

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 7, 2014, 10:11:38 PM11/7/14
to மின்தமிழ்
என்னா சாமி இப்புடி சொல்றீக!.. நான் மட்டுமில்ல மகளிர் அணில யாருமே உங்கள எதிர்த்துக் குரல் கொடுக்கலையே!.. நீங்க கொஞ்சம் கலகலப்பாக பேசுறதுனால நாங்களும் கொஞ்சம் உரிமை எடுத்துட்டுப் பேசுனோம்.. அது உங்க மனசக் கஷ்டப்படுத்திருச்சுன்னு தெரிஞ்சதும் எல்லாருமே மன்னிப்புக் கேட்டமே மறந்திட்டீகளே!..

'உங்களால தான் யாரும் வரமாட்டேங்குறாங்க'ன்னு நீங்க சொன்னதும் ஒங்களுக்கு ஒத்தாசை பண்ணத்தானே நானும் வந்தேன்!.. மகளிர் அணில எல்லாரும் உங்கள மதிச்சு தான நடக்குறோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-11-08 8:22 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
​     

Nagarajan Vadivel

unread,
Nov 7, 2014, 10:48:19 PM11/7/14
to மின்தமிழ்
மேல் முறையீடு மறு ஆய்வு செய்யப்பட்டு அளிக்கும் இறுதித் தீர்ப்பு

மேல் முறையீட்டில் தீர்ப்பு வானிலை அறிக்கையுடம் ஒப்புமை செய்யப்பட்டுள்ளதால் கட்டாய மறு ஆய்வுக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது

மாணவர்கள் தேர்வில் ஆசிரியர்களோ கல்வி நிறுவனமோ அடிப்படைத் தகுதியைக் குறிப்பிட்டு நேர்முகத் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் தேர்வு செய்வதைக் கருத்தில் எடுத்துக்கொண்டு மாணவர் தகுதிக்கு அறிவுடுத்திய தகுதிகள் ஒவ்வொருவரின் தனித் தன்மையைச் சுட்டும் பண்பாக விளங்குவதாலும் அதை விலக்கினா அவர்களின் ஆளுமை வெளிப்படும் வாய்ப்புக் குறைந்துவிடும் என்பதாலும் முதலில் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு விலக்கப்பட்டு அவர்கள் நால்வரும் விரும்பினால் மாணவர்களாக வாய்பளிக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்படுகிறது

தமிழ்நாட்டில் எவ்வளவோ நல்லாசிரியர்கள் இருக்கும்போது இந்தப் பேராசிரியருக்கு இப்படியும் ஒரு வாய்ப்பா என்று இந்த நீதிமனறம் வாய்பிளப்பது தவிர்க்க இயலவில்லை

பாசி

2014-11-07 21:43 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

தேமொழி

unread,
Nov 7, 2014, 10:58:04 PM11/7/14
to mint...@googlegroups.com

///
இந்தப் பேராசிரியருக்கு இப்படியும் ஒரு வாய்ப்பா என்று இந்த நீதிமனறம் வாய்பிளப்பது தவிர்க்க இயலவில்லை
///

ஐயோ பாவம் .... இந்தப் பேராசிரியருக்கு இப்படியும் ஒரு "சோதனையா" என்று இந்த நீதிமனறம் "அதிர்ச்சியில்" வாய்பிளப்பது தவிர்க்க இயலவில்லை.


என்று மாற்றிப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.


..... தேமொழி 



--
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Nov 7, 2014, 11:03:40 PM11/7/14
to மின்தமிழ்
எல்லாம் நடக்கும்போது பாத்துக்கலாம் யாருக்கு வாய்ப்பு யாருக்குச் சோதனை என்று
பாலத்தை நெருங்கினால் கடப்பதை நீ யோசி என்று அறவுரை உண்டே

பாசி

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba.T.

unread,
Nov 8, 2014, 3:24:03 AM11/8/14
to மின்தமிழ், Narayanan Kannan
மாணவியாக பதவி பெற சிலர் மனு போட்டிருக்கின்றார்களா என்ன..??

யார் அவர்கள்..?

பாவம்.. மாணவி ஆகமனு ஓட்டவரை சொல்லவில்லை.. ஆசிரியராக இருக்கப்போகின்றவரைச் சொன்னேன். :-)

சுபா

2014-11-07 16:40 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-11-07 20:19 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
தீர்ப்பு எப்படி எனபார்க்கலாம்!


தீர்ப்பு
​ சொல்லுவதைவிட மக்கள் தங்களைப்பற்றி ரெண்டு நல்ல வார்த்தைகளைச் சொல்லச் சொன்னதை எடுத்துக்கொள்ளலாம் என்று கருதுகிறேன்

களத்தில் நால்வர் அவர்களுக்கான இரண்டு நல்ல வார்த்தைகள்
1. வஞ்சியா வசந்தை
2. துருதுரு சுறுசுறு
3.பயாஸ்கோப் பாரு
4.மெகாமெகா மேகா

எல்லோரும் தங்களின் மாணவப்பருவத்தில் நடத்திய அழிச்சாட்டியங்களை விலாவாரியாக எடுத்துச் சொல்லி தீர்ப்பு எதிர்பார்ப்புக்கு மாறாக இருக்குமேல் தீர்த்துடுவோம் என்று மறைமுகமாக எச்சரித்தாலும்

1.  பழைய சினிமாப்படங்களில் பார்த்த ஆண்களை அடக்கும் சண்டிரானிக் காட்சிகளின் தாக்கம் மறைந்திருந்தாலும் படைப்புத் திறன் சிந்தனை வளம்கொண்ட வஞ்சியா வசந்தை மகளிரணித்தலைவியாக இல்லாமல்ஆசிரியகளைக் காக்கும் ஜீவகாருண்ய சங்கத்தின் தலைவியாக இருந்து  செயல்புரிவதாக இருந்தால் மாணவியாக ஏற்றுக்கொள்ளலாம்

2. ஆறாந்திணையின் அடிப்படை ஒழுக்கத்தை அடிபிறழாமல் விரைவாகச் செயல்படுத்தும் துருதுரு சுறுசுறு எங்கெங்கு காணினும் ஆண்களைப் போட்டுத்தாக்குவது என்ற சூளுரையைக் கைவிட்டு இணையம் ஒரு சமதளம் என்று கருதினால் மாணவியாக ஏற்றுக்கொள்வதில் தடையில்லை

3.இம்மென்னும் முன்னே குழலூதி பாடல்போடும் திறன் அமைந்திருந்தும் எக்காலமும் அக்கா அக்கா என்று பம்மி சுண்டுவிரல் அசைவில் வார்த்தைக்கணைகளைத் தொடுப்பதைக் கைவிட்டு அமைதிவழிக்குத் திரும்பினால் மாணவியாக வாய்ப்புள்ளது

4. மேகவழி சஞ்சாரம் செய்யும் நாரதர்போல் அனைத்துத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்து சீராக ஆற்றொழுக்காக மெகாக் கட்டுரைகளை வரையும் திறன் இருந்தும் திடீரென்று தம்புராவை மீட்டி ஆண்களுக்கெதிரான தகவல்களைமட்டும் தருவதைக் குறைத்துக்கொண்டால் மாணவியாக வாய்ப்புண்டு

இவர்களைத் தவிர சமையல் குறிப்புகளைக் கொடுத்துக்கொண்டு சரியான சமயத்தில் சமையலில் வெங்காயம்போல் எல்லாவற்றிலும் உட்புகுந்து உள்குத்து விட்டு ஊமைக்காயத்தை விளைவிக்கும் இன்னொருவர் மாணவியாக மணுப்போடாததால் அவரின் சில்மிஷத்தை  ஆசிரியர் தாங்கிக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை

இதுவே என் தீர்ப்பு.  தீர்ப்பு சொல்வதற்குமுன் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக வசந்தைநகரின்  கைதேர்ந்த ஒரு சிகைக் கலைஞனின் கையால் தலைக்கு மசாஜ் செய்துவிட்டுவந்து இந்தத் தீர்ப்பை எழுதியுள்ளேன்

தீர்ப்புக்கு அப்பீல் செய்ய 24 மணிநேர அவகாசம் அளிக்கப்படும்

பாசி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Nagarajan Vadivel

unread,
Nov 8, 2014, 3:43:04 AM11/8/14
to மின்தமிழ்
மாணவியாக பதவி பெற சிலர் மனு போட்டிருக்கின்றார்களா என்ன..??

சும்மாவா காதுல பூ கையில பழத்தட்டோடவாக்கும்

பாவம்.. மாணவி ஆகமனு ஓட்டவரை சொல்லவில்லை.. ஆசிரியராக இருக்கப்போகின்றவரைச் சொன்னேன். :-)

அய்யய்யோ இப்படி நீஙக எழுதப்போய் நீங்கதான் அந்த ஆனியனா வந்து ஊடாடி உள்குத்தும் ஐந்தாம் ஆளான்னு யாராவது கேட்டுவக்கப் போறாங்க

பாசி





நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 10, 2014, 9:57:17 AM11/10/14
to mintamil


விழுமியவின்சொல்வித்தை விதைத்தார்மாணவருட்செய்யை

மெழுகுசெய்தின் சொல்வித்தை விதைக்குமாசிரியரொத்தார்

On 06-Nov-2014 8:50 pm, "Innamburan S.Soundararajan" <innam...@gmail.com> wrote:
மாணவியை அகத்திற்கும், மாணவனை புறத்திற்கும் சிறப்பாகச் சொல்லலாம்.

~ தம்பீ! வம்பில் மாட்டிக்கொள்வாய்.


2014-11-05 11:45 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
உள்ளேன் ஐயா.

மாண்புடையோர் எல்லோரும் மாணக்கரே.
அவருள் ஆண் என்றும் பெண் என்றும் ஆசிரியரே பேதம் காண்பாரோ....என்று ஆசிரியரை மாணவர் கேள்வி கேட்க முடியாது.

மிகைநாடி மிக்க கொளல் என்ற அடிப்படையில்,
மாணவியை அகத்திற்கும், மாணவனை புறத்திற்கும் சிறப்பாகச் சொல்லலாம்.

சொன்னவேலையை மட்டும் சரியாகச் செய்ய வேண்டும் என்றால் மாணவியர் சிறப்பு.
சொல்லாத வேலையையும் தானாகவே செய்ய வேண்டும் என்றால் மாணவர் சிறப்பு.

ஆசிரியரைப் புகழ்ந்து பேசுவதில் மாணவியர் சிறப்பு
ஆசிரியரை பு(இ)கழ்ந்து பேசுவதில் மாணவர் சிறப்பு.

ஆசிரியரைப் பற்றி கதைபேசுவதில் மாணவியர் சிறப்பு.
ஆசிரியரைப் பற்றி கதைகட்டுவதில் மாணவர் சிறப்பு.

பின்பாட்டு பாடுவதில் மாணவியல் சிறப்பு
முன்பாட்டு பாடுவதில் மாணவர் சிறப்பு.

பரிசு உண்டென்றால் மாணவியர் சிறப்பு
பரிசு ஏதுமில்லையென்றாலுமி மாணவர் சிறப்பு.

ஜிகர்தண்டா என்றால் மாணவியர் சிறப்பு
இட்லி தோசை என்றால் மாணவர் சிறப்பு.

மாணவியரும் மாணவரும் ஒன்றாக நன்றாகப் படித்தால் ஆசிரியருக்குச் சிறப்பு

இப்படிக்கு,
இரண்டு நாட்களாக இணையப் பாடங்களை (பதிவுகளை)ப் படிக்காத மாணவன்.


குறிப்பு.
மாணவர் என்றால் ஆண் பெண் இருபாலரையுமே குறிக்கும்.
மாணவியர் என்றால் பெண்பாலரை மட்டுமே குறிக்கும்.

2014-11-05 9:01 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
உயர் கல்வியில் அமெரிக்காவில் கூட்டதில் கோவிந்தா போடுவதும் கூட்டணி அமைத்துக் கற்றுக்கொள்ளும் க்ரவ்ட் சோர்சிங் தடை செய்யப்பட்ட செயல்.  அவங்க அவங்க திறமையை மட்டும் வெளிப்படுத்தவேண்டும்

இப்புடி தேனி மேகலா என்று கூட்டம் சேர்த்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

மாணவரா மாணவியா என்பதற்கு விடை சொல்வதை விட்டுவிட்டு என்னையும் இன்னொரு சாதுவான மாணவரையும் மோழை காளை என்றெல்லாம் மிரட்டக் கூடாது

நாங்க பரம சாது பயந்தவர்கள்

பாசி

2014-11-05 8:44 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
யாரும் வலை விரிக்கல  யாரும் மாட்டிக்கவும் இல்லன்னு   சொல்லுங்க தேனிசார். இத்தனை நாளா ஆசிரியர் பணில இருக்கறவருக்கு  விடைதெரியலையாமா  மேகலா?:)

2014-11-04 19:10 GMT-08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

நான் ஏன் ரங்கனார்போல் விரித்த வலையில் மாட்டிக்கொள்ள வேண்டும்.
கேள்வி கேட்டால் அதற்குச் சரியான சுருக்கமான விடை வேண்டும்

மெய்நிகர் உலகில் குருபக்தியில் விஞ்சியவர் யார்? மாணவரா? மாணவியா அம்புட்டுத்தென்

சரியான விடை கும்பல் கூட்டி ஆசிரியரைக் கேரோ செய்தால் மாறிவிடாது


பாசி

2014-11-05 7:21 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:


2014-11-04 12:18 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Tuesday, November 4, 2014 8:03:15 AM UTC-8, megala.ramamourty wrote:

நம்மைப் போன்ற ’அருமையான’ மாணவிகளைப் பெற்றிருக்கும் இவருக்கு இதுபோன்ற ஐயங்கள் எழலாமோ???? >>>அருமை பெருமை என நாமதான் சொல்லிக்கணும் மேகலா:)

/// 
மின்தமிழிலும் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் என்னை ஆசிரியராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.   
///

யாரோ ஒரே ஒருவர்தானாம் மேகலா, நன்றாகக்  கவனியுங்கள். >>ஒரு மாணவி  யாராம்?:)

எனக்குத் தெரிந்து அந்த 'ஒரு' மாணவரை (குரு)பக்தியில் விஞ்ச ஆளில்லை.  அவர் ஆசிரியர் பெயருக்கு ஏற்ப தனது  பெயரையைக் கூட மாற்றிக் கொள்வார். >>
 
ஆமாம்  மனம் அவருக்கு தன் குரு எனில்  காளைபோல வீறுநடைபோடும்,காரையாகாது கனிந்துவிடும் மகராசர்!

உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் இல்லையா :-)

..... தேமொழி





--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!- 
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதா!-
பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ             

(பெரிய திருமொழி)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!- 
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதா!-
பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ             

(பெரிய திருமொழி)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
BA0.gif
DSCN0182.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages