இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் பல செய்திகள் மறைந்தோ அல்லது மறக்கப்பட்டோ மக்கள் கவனத்துக்கு வராமல் போய்விட்டன. குறிப்பாகத் தமிழ்நாட்டுச் செய்திகள் வெளிவ்ரவேயில்லை. "காங்கிரஸ் சரித்திரம்" எழுதிய பட்டாபி சீத்தாராமையாகூட நம்வீரர்களான வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்றவர்களை இருட்டடிப்பு செய்திருக்கிறார். எனவே நம் தமிழ்நாட்டு வீரர்களையும், தமிழ்நாட்டுச் சுதந்திரப் பொர் நிகழ்வுகளையும் மக்களுடைய கவனத்துக்குக் கொண்டுவரவேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. அந்த வகையில் தென் தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினத்தில் நடந்த கலவரத்தையும் அதன் விளைவாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தூக்குமேடை ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோரைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் விதமாக, முதலில் அந்த குலசேகரப்பட்டினம் கலவரத்தைப் படிக்கத் தருகிறேன். உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
Thanjai VGopalan