ஒருகுறையும் இல்லாத ஒரு தமிழ் மொழி வாழ்த்து உருவாக வேண்டும், அது அனைத்துத் தமிழர்களையும், ஏன் இணையத்துத் தமிழையும் உள் வாங்க வேண்டும்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
--
முழுப்பாடலில் இதுக்கு முன்னாடி ஆரியம் போல் வழக்கொழியாதுன்னு ஒரு வரியுண்டுன்னும் அதை நீக்கி இவ்வாழ்த்த பிறந்ததுன்னும் கேள்வி.
அந்த வரியோடு கூடிய முழுப்பாடல் என்ன?
On May 11, 5:06 am, coral shree <cora...@gmail.com> wrote:
> அன்பின் நாகராசன் சார்,
>
> அருமையாகச் சொன்னீர்கள். பாரதியாரின் பாடல்களைவிட எளிமையான அழகான தமிழ் வேறு
> எங்கு கிடைக்கும்.. எளிமை என்று நான் சொன்னது உட்கருத்துகளை அல்ல.. எளிமையான
> வார்த்தைகள்.. சொற்கள்.
>
> அன்புடன்
> பவளா.
>
I agree with Prof. Nagarajan's suggestion. People can use some good
song by Bharathiyar.
There are more than 1000 Tamil thaay vaazhththu songs, but the
Official
one by Tamil Nadu Govt. is "Niiraarum kaDal uDuththa ...",
It is like National anthems, many are there - but official one
is Tagore's Jana Gana Mana.
N. Ganesan
> 2012/5/11 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
>
>
> > வாதத்துக்குச் சுவையாக இருக்கலாம் ஆனால் நடப்புக்கு ஒத்து வராது.
> > சுந்தரம்பிள்ளை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பான தமிழகத்தை கருத்தில் கொண்டு
> > பாடியது. அப்போது புலம் பெயர்ந்த தமிழர்கள் கண்ணிர்க் கதையில் கரும்புத்
> > தோட்டத்திலும் ரப்பர் காடுகளிலிலும் தேயிலை எஸ்டேட்டுகளிலும் அடிமையாக
> > வாழ்ந்தார்கள். தமிழனின் பெருமை பேச நினைத்தவர் இதை நாசூக்காக மறைப்பது
> > நியாயம்.
> > இப்போது புலம் பெயர்ந்த தமிழர்கள் தொழில் வணிகத்தில் கொடிகட்டிப்
> > பறக்கின்றனர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகின்றனர். இப்போது தமிழனைத்
> > தூக்கிவைத்துப் பாடச் சமயம் வாய்த்திருக்கிறது
> > இருக்கவே இருக்கிறது இசையுடன் கூடிய பாரதியின் பாடல்கள். உலகளாவிய
> > தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றப் பாரதியின் பாடலைப் பயன் படுத்தலாமே
> > நாகராசன்
>
> > 2012/5/11 N. Kannan <navannak...@gmail.com>
>
> > தமிழ் தமிழர்களை இணைக்கும் பாலம். எனவே இம்மொழியை பெண்ணாக உருவகப்படுத்தி
> >> வாழ்த்துப்பாடுதல் ஒருமுறை. உருவகப்படுத்தாமல் மொழியை வாழ்த்துவதுமுண்டு.
> >> மனோன்மணீயத்தில் (பெ. சுந்தரம் பிள்ளை) இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான
> >> நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால்
> >> தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
>
> >> தமிழ்நாட்டு வாழ்த்து
>
> >> நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
> >> சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
> >> தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
> >> தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
> >> அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
> >> எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
> >> உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
> >> வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !
>
> >> அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை
> >> அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின்
> >> வாசனைப் போல்
> >> அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும்
> >> தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக்
> >> கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
> >> வாழ்த்துகிறோம்.
>
> >> இப்பாடலைக் கேட்க! <http://www.raaga.com/play/?id=97856>
>
> >> இப்பாடல் மிகத்தெளிவாக இந்தியாவில் இருக்கும் தமிழ்நாட்டைச் சுட்டும் பாடலாக
> >> அமைந்துவிடுவதைக் காண்கிறோம். ஆனால் தமிழர்களோ இன்று 22 நாடுகளில் பரந்து
> >> விரிந்து வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் சுட்டும் வரிகள் இப்பாடலில் இல்லை.
>
> >> தமிழின் பூர்வகுடிகள் இந்தியா, இலங்கை என்ற நாடுகளில் வாழ்ந்து
> >> செழித்தார்களெனில் இலங்கை பற்றிய எக்குறிப்பும் இப்பாடலில் இல்லை. எனவே இலங்கை
> >> மக்கள் தங்களுக்கென ஒரு தமிழ்மொழி வாழ்த்துச் சொல்வதில் தவறில்லை.
> >> அப்படித்தான் அமைகிறது புலவர் சிவநாதனின் ஒரு பாடல்.
>
> >> சீருடைச் செந்தமிழ் மகள் வாழி! எம்
> >> சிந்தையில் நிறைந்த அவள் வாழி
> >> போருடைப் புறமும் அன்புடை யகமும்
> >> போர்த்த பேரழகாள் புகழ் வாழி!
>
> >> ஆரமாயியலோடு தேனிசை நாடகம்
> >> அணிந்தவள் சங்கம் தனிலூறிச்
> >> சாரமாய் வடிந்த காவியச் சோஐயில்
> >> களி நடம் பயின்றவள் பேர் வாழி!
>
> >> ஏருடை நிலமுங் காருடை வளமும்
> >> தாருடை அரசும் இல்லாமல்
> >> பாரினில லையுந் தமிழரை யிணைத்தே
> >> வீறுடைச் செல்வியாய் அவள் வாழி
>
> >> இப்பாடலை இசை அமைத்துப் பாடியுள்ளார் இலண்டனைச் சேர்ந்த மாதினி
> >> ஸ்ரீஸ்கந்தராஜா. இப்பாடலை தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல்
> >> வலைப்பதிவில் கேட்கலாம்!
>
> >> இப்பாடலைக்கேட்க!<http://voiceofthf.blogspot.co.uk/2012/05/blog-post.html>
>
> >> ஒருகுறையும் இல்லாத ஒரு தமிழ் மொழி வாழ்த்து உருவாக வேண்டும், அது அனைத்துத்
> >> தமிழர்களையும், ஏன் இணையத்துத் தமிழையும் உள் வாங்க வேண்டும் எனும் நோக்கில்
> >> மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பெருமுயற்சி எடுத்து கவிஞர் சீனி நைனா
> >> முகம்மதுவைக் கொண்டு ஒரு பாடலை இயற்றியது. இப்பாடலுக்கு இசை அமைத்தவர்
> >> ஆர்.பி.எஸ்.ராஜூ, பாடியவர்கள்: துருவன், பாபு லோகநாதன். அப்பாடல் வரிகள்:
>
> >> நிலைபெறநீ வாழியவே!
>
> >> காப்பியனை ஈன்றவளே!
> >> காப்பியங்கள் கண்டவளே!
> >> கலைவளர்த்த தமிழகத்தின்
> >> தலைநிலத்தில் ஆள்பவளே!
> >> தாய்ப்புலமை
>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
சிந்து சமவெளிங்கறதை எப்படி நீங்க மறக்கலாம்னேன். ;-)
ஐயா,
இப்ப இருக்கும் தமிழ்தாய் வாழ்த்து எல்லோருக்கும் பழகிவிட்டது. பாடல் வரிகள் குறைவு என்பதாலும் தமிழணங்கே, தமிழணங்கே, வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே மாதிரி ரிபீட் வார்த்தைகளும் இருப்பதாலும் மனப்பாடம் செய்ய எளிது. தமிழர்கள் உலகெங்கும் வசித்தாலும் அனைவருக்கும் மூதாதையர்மண் தமிழ்நாடுதான். அதனால் அது தமிழ்நாடு சென்ட்ரிக்காக இருப்பதில் யாருக்கும் பிரச்சனை இருக்கபோவதாக தெரியவில்லை.
புதிய பாடலில் "எங்களெழில் மலேசியத்தில்" என வருகிறது. மலேசிய தமிழர்கள் இதை பாடுதல் பொருத்தமாக இருக்கும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> There are more than 1000 Tamil thaay vaazhththu songs,
இப்படிப் பொத்தாம் பொதுவாய் சொல்லிப்போவதால் ஒரு மேட்டிமைத்தனத்தை
உருவாக்கமுடியுமே தவிர வேறு பயனில்லை.
இந்த 1000 தமிழ் வாழ்த்துக்களைப் பட்டியிலிடமுடியுமா? சுவாரசியமாக இருக்கும்!
அடுத்து, பாரதி பாடலை இன்னும் பாடிக்கொண்டிருப்போருண்டு. நான் காட்டும்
பாடல்களின் கவி/இசை இனிமை பற்றி ஒருவரும் பேசக்காணோமே!
நா.கண்ணன்
அப்படிப்போடு அருவாளை :-)
க.>
பிகு: ஆப்பிரிக்காவிலிருந்து கடல்வழி வந்தால் முதலில் இலங்கைக்கு
வந்திருக்கக்கூடும். அதுவே தமிழின் தாயகமாக இருந்திருக்கக்கூடும்!
"மனோன்மணீயம்"
ஆசிரியர்: பெ. சுந்தரம் பிள்ளை (1855-1891)
(நன்றி: மதுரைத் தமிழ்த் திட்டம்
தமிழ்த் தெய்வ வணக்கம்
(பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா)
.
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.
கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.
ஒரு பிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாகக் காரணத்தி னறிகுறியே.
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே.
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.
வள்ளுவர்செய் திருக்குறளை மறவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி
மனங்கரைந்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.
> அது சரி ,மலேசியாவில் ஒரு புது தமிழ்வாழ்த்து போட்டார்களே அதன் முழு வரிகள்
> என்ன?
>
அடியைப் புடிடா! பாரத பட்டா! :-)
முதல் இடுகைக்குச் செல்க!
(ஏனிப்படி ஆச்சர்யமான கேள்விகள்?)
க.>
இந்த விழியத்தை நம் சேகரிப்பில் போட்டுவிட்டேன்!
http://video-thf.blogspot.co.uk/2012/05/blog-post_12.html
வாழ்க நிரந்தரம் நம்ம ஸ்லோகன் ஆச்சே! :-)
க.>
2012/5/11 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இது யாருக்காவது புரியுதா? :-))
என்ன சார் சொல்லறீங்க?
மடல்கள் எங்கே வருகின்றன?
கையோடு ஒரு கூகுள் கணக்கைத் துவங்குங்கள்!
தும்பிலிருந்து வால்வரை ஒரே இழையில் கிடைக்கும்!
இன்னும் எனக்குப் புரியவே இல்லை! எப்படி இவர் பாதியிலிருந்து படிப்பார்???????
க.>
//மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைப் பாட்டைப் படித்தபோது மனதில் பட்டதைச் சொல்லுகிறேன். இவ்வளவு ஆரிய எதிர்ப்பு உடைய பிள்ளைவாளுக்கு சம்ஸ்கிருதச் சொல்லைத் தவிர வேறு தமிழ்ச் சொல்லே கிடைக்கவில்லையா? சம்ஸ்கிருதத்தை மட்டம் தட்டும் பாட்டிலும் வரிக்குவரி சம்ஸ்கிருதச் சொல்லாக இருக்கிறதே!!!! யாராவது அதிலுள்ள சம்ஸ்கிருத்ச் சொற்களின் எண்ணிக்கையை எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.//
//அது போகட்டும். சுந்தரம் பிள்ளைய ஏன் தமிழ்நாடு அரசு மட்டம் தட்டியது? அவர் சொன்னது உண்மையில்லை என்று நினைத்து ஆரிய எதிர்ப்பு வரிகளை வெட்டி விட்டதா? சுந்தரம் பிள்ளை அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இதை அனுமதிதிருப்பாரா?//
ஓட்டு பொறுக்கு ஆரிய எதிர்ப்பு உதவாது என்று தமிழை மறந்த திராவிடத் தலைமையின் திருவிளையாடல். அதற்கு சுந்தரம் பிற்றை என்ன செய்வார்
சேசாத்திரி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
உண்ணிகிருஷ்ணன் போன்றோர் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து:
http://www.raaga.com/play/?id=59575
தமிழ்நாட்டின் அரசாங்கத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு
ஓர் அழகிய மொழிபெயர்ப்பு (புனரபி பாரதி, 1993):
Anthem to Mother Tamil
The earth is a maiden draped
in a sea-sari of surrounding water:
This stretching sub-continent
is her gentle, sublime face.
The Deccan plateau
her compact, crescent forehead,
and the fabled Dravidian land in it,
the sacred vermilion spot she wears.
Mother Tamil! There you were
as that sweet smell of vermilion
spreading in every direction,
and your fame brought joy
to people everywhere.
Ancient spirit! You are still here.
Your splendid youth still endures.
Struck by this miracle,
we forget everything and remember
only to offer you worship and chant:
Greetings! Greetings! Greetings!
Translated by Punarapi Bharathi - 1993.
நா. கணேசன்
//கன்னடர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் மலையாளர்களுக்கும், தமிழ்த்தாய் ஏதோ கோஷா ஆஸ்பத்ரியில் போய் படுத்துக் கொண்டு ஒரே இரவில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பெங்களூரில் உள்ள தமிழ் வெறுப்புக்கு மூல காரணம் இந்த அடிகள். சமஸ்கிருதம் தமிழுக்குத் தாய் என்றால் நமக்கு என்ன கோபம் வருகிறதோ, அதே கோபம் அவர்களுக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது?//
-
//வழக்கொழிந்துன்னு எழுதாம வழக்குறைந்துன்னு எழுதியிருக்கலாம். பொருட் பிழையுடைய பாடல்//
.
--
ஆமாச்சு
பாவாணர் ஒரு பாவை எப்போது பிறந்தது இறப்பதற்கு என்பார் அவர் கூற்றுப்படி ஒரு மொழி மக்கள் வழக்கு மொழியாய் இருந்தால் அன்றோ அது வழக்கு ஒழிந்தது என்பதற்கு என்பார். அவர் சொல்வது சமற்கிருதம் யாருக்கும் தாய் மொழி இல்லை அது அறிஞரிடம் மட்டும் வழங்கியது இன்றும் அறிஞரிடமே வழங்குகின்றது.






அப்போ தமிழ் அறிஞர் மொழியில்லையா?
அறிஞர்கள் மக்களில்லையா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
//அப்போ தமிழ் அறிஞர் மொழியில்லையா?//
//அறிஞர்கள் மக்களில்லையா?//
தேவ்
2012/5/12 ஆமாச்சு <ama...@amachu.net>
//அப்போ தமிழ் அறிஞர் மொழியில்லையா?//அறிஞரே இல்லாவடினும் முதலிலும் இறுதியிலும் மக்களே இருப்பர் என்பதால் தமிழ் 8 கோடி மக்களின் மொழி.
2012/5/12 Santhanam Swaminathan <swam...@yahoo.com>//மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைப் பாட்டைப் படித்தபோது மனதில் பட்டதைச் சொல்லுகிறேன். இவ்வளவு ஆரிய எதிர்ப்பு உடைய பிள்ளைவாளுக்கு சம்ஸ்கிருதச் சொல்லைத் தவிர வேறு தமிழ்ச் சொல்லே கிடைக்கவில்லையா? சம்ஸ்கிருதத்தை மட்டம் தட்டும் பாட்டிலும் வரிக்குவரி சம்ஸ்கிருதச் சொல்லாக இருக்கிறதே!!!! யாராவது அதிலுள்ள சம்ஸ்கிருத்ச் சொற்களின் எண்ணிக்கையை எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.//
ஐயா அவர் காலத்தில் இது சமற்கிருதம் இது தமிழ் என்று பிரித்துக்காட்ட மறைமலையார் வரவில்லை.
நீங்கள் ஆங்கிலத்தில் எழுதினாலும் தவறில்லை. மொழி என்பது கருத்து பரிமற்றத்திற்கான ஒரு சாதனமே.
மொழி என்பது கருத்தைத் தெரிவித்து ஆனந்தமடையும் ஒரு கருவி. அதில் போய் இப்படி மனிதர்கள் சண்டை போடுகிறார்களே என்று வருத்தப் பட்டேன். காதூ கேளாத வாய் பேசாத அந்தப் பெண்களைப் பார்த்துவிட்டால் மனிதர்கள் மொழிச் சண்டையே போட மாட்டார்கள்.
மனோன்மணீயம் எளிய மக்களுக்காக எழுதப்பட்டதன்று. அறிஞர்களுக்காகப்
படைக்கப்பட்ட நாடக நூல். தமிழில் நாடக நூல்கள் இல்லை என்ற குறை நீக்கப்
பாடியது. பெ. சுந்தரனார் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர், சமஸ்கிருதமும்,
தமிழும்
நன்கு தெரியும். அவருக்கு எது தமிழ், எது சமஸ்க்ருதம் எனத் தெரியாது
என்ற கூற்றுப் பொருந்தாது.
தமிழில் ஏராளமான (1000+) தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்கள் உள்ளன.
அவற்றில் முக்கியமான
5 (அ) 6 பாடல்களைப் பற்றி இங்கே எழுதியுள்ளேன். வில்லிபுத்தூராழ்வார்
மகன்
வரந்தருவார் கொங்கர்கோன் வக்கபாகை ஆட்கொண்டான் புரந்து எழுந்த
பாரதத்தில் (14-ஆம் நூற்.) முதல் தமிழ்த்தாய் வாழ்த்து. அங்கே தமிழ்
பூமிதேவியாகப்
பாடப்படுகிறாள். பின்னர் துறைமங்கலம் வீரசைவர் கருணைப்பிரகாச சுவாமிகள்
பாடல். பின்னர், எல்லிசு-கால்ட்வெல் நூல்கள் தோன்றின, தமிழ்
சம்ஸ்கிருதத்தில்
இருந்து பிறக்கவில்லை என்று முதன்முதல் மொழியியல் விஞ்ஞானத்தில்
நிறுவிய ஆய்வுகள். கிறித்துவ அறிஞர்களின் படைப்புகளை முழுதும்
பயன்படுத்திப்
பாடியது மனோன்மணீயத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து. தமிழகத்தின்
அதிகாரபூர்வமான
தமிழ்த்தாய் வாழ்த்து இதுதான். பல புரட்சிகளை இப்பாடலில் செய்கிறார்
பெ. சுந்தரனார். பார்த்தால் தெரியும்: தெற்கு துருவத்தை உச்சியில்
வைத்து, வடதுருவத்தை
அடியில் வைக்கிறார். அப்போதுதான் பாரதத்தின் நெற்றிப் பொட்டாக தமிழ்நாடு
திகழும். அதற்காக அவ்வாறு செய்கிறார்.
இன்னொரு முக்கியமான பாட்டு, பாவாணர் மாணவர் பெருஞ்சித்திரனார் பாடல்.
அதையும் இங்கே கொடுத்து எழுதியுள்ளேன். அதில் உலக மொழிகளுக்கெல்லாம்
மூத்தவள், அவற்றுக்கெல்லாம் தாய் என்ற பாவாணர் கோட்பாடு இருக்கும்.
தமிழர் “லெமூரியா” கண்டத்துச் சமாச்சாரம் இதெல்லாம். பெரியார்
கால்ட்வெல் புஸ்தகத்தை மொழிபெயர்த்ததை வாழ்த்தி திராவிட மொழிஞாயிறு
என்ற பட்டத்தைப் பாவாணருக்கு வழங்கினார். அதில் திராவிட என்ற
சொல்லைக் கழற்றிவிட்டதால் வந்த வினை. திராவிட மொழிகளுக்குள்ளேயே
பாவாணர் நின்று வேர்ச்சொல் ஆய்வுகளைத் தொடர்ந்திருந்தால் உலகப்
பல்கலைக் கழகங்களில் அவர் நூல்களுக்கு இன்னும் மதிப்பு கூடியிருக்கும்.
ஆனால், எகிப்து, ஆங்கிலம், லத்தீன், கிரேக்கம், ... எல்லாவற்றுக்கும்
தாய் தமிழ்தான் என்றது ஆய்வுக்கூடங்களில் ஏறாது அன்றோ?
செல்வன் சொல்வதுபோல், மலேசிய தமிழ்த்தாய் வாழ்த்தை அங்கே சிலர்
பயன்படுத்தலாம். மற்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்களும் கச்சேரிகளில்
பாடலாம். உ-ம்: பாரதி, பாரதிதாசன், ....
---------------
பாரத நாட்டுக்கு தாகூரின் ஜனகனமன, தமிழ் நாட்டுக்கு ‘நீராரும் கடலுடுத்த’
முழுப்பாடலுக்கும் மயிலை சீனி வேங்கடசாமி நாயகர் ஓர் அரிய உரை
செய்துள்ளார்.
எம்எஸ்வி இசையில் பி. சுசீலா, டிஎம்எஸ் பாடியது:
http://psusheela.org/audio/ra/tamil/misc/neeraarum.ram
உண்ணிகிருஷ்ணன் போன்றோர் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து:
http://www.raaga.com/play/?id=59575
தமிழ்நாட்டின் அரசாங்கத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு
ஓர் அழகிய மொழிபெயர்ப்பு (புனரபி பாரதி, 1993):
Anthem to Mother Tamil
------------------------
தொகுத்தளித்தால் நன்று!
> பாடியது மனோன்மணீயத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து. தமிழகத்தின்
> அதிகாரபூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்து இதுதான்.
>
> செல்வன் சொல்வதுபோல், மலேசிய தமிழ்த்தாய் வாழ்த்தை அங்கே சிலர்
> பயன்படுத்தலாம். மற்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்களும் கச்சேரிகளில்
> பாடலாம். உ-ம்: பாரதி, பாரதிதாசன், ....
>
தமிழக அரசு சொல்வது மற்ற அரசுகளுக்கு எப்படிப் பொருந்தும்? நீராரும்
கடலுடத்த தமிழ் மண்ணிற்கே பொருந்தவில்லை. ஆரியம் எங்கே வழக்கொழிந்தது?
‘கிருஷ்ணா’ போன்ற சமிஸ்கிருதப் படங்கள் உருவாகும் போது யோசனைக்கு
தமிழகம்தான் வருகின்றனர். இன்றும் சமிஸ்கிருதம் பேசும் கிராமங்கள் உண்டு.
உம். இராஜபாளையம் அருகே (சேதி கவிஞர் மதுமிதா)
மலேசியப்பாடலில் மலேசியா வருகிறது. வந்தால் அது மலேசியாவிற்குச் சொந்தம்
எனவே மலேசியர்கள் பாடிக்கொள்ளட்டுமென்று சொன்னால். அதே வாதத்தால் நம்
நிலை அடிபட்டுப்போகிறது. தெக்கணமும், அதிற் சிறந்த திராவிட நற்றிருநாடும்
என்பதால் அது தமிழ்நாட்டிற்குப் பொருந்தும் அவர்களே பாடிக்கொள்ளட்டும்
என்று விட்டுவிடுவதுதானே? :-)
நானிட்ட மூன்று பாடல்களில் சீனி நைனா முகம்மதுவின் பாடலே இன்றுள்ள
உலகத்தமிழன் பயன்படுத்தக்கூடிய பாடலாக உள்ளது! அதன் கவிதைக்கு என்ன குறை,
இசைக்கு என்ன குறை? மனப்பாடம் செய்யவியலாத்தன்மைகள் ஏதேனும் உண்டா, என்ன?
நா.கண்ணன்
பிகு: நம் சுவாமிக்காக. மூலத்தொடர் தொடுப்பு:
https://groups.google.com/forum/?hl=en&fromgroups#!topic/mintamil/MI-3a-N3fzk/overview
தமிழ்த்தாயே பாடுவதாக பாரதியார் ஒரு பாடல்
அற்புதமாக நமக்குக் கொடுத்துள்ளார். தமிழ்த்தாயின் சிறப்புக்கள்
என அப்போது கருதிய எல்லாமும் சொல்லியுள்ளார்.
யாராவது அழகாக இப்பாடல் முழுமையும் பாடியுள்ளனரா?
பரத நாட்டியம் அபிநயம் காட்டி நிச்சயம் ஆடியிருப்பார்கள்.
காணொளி, கேட்பொலி கிடைத்தால் தேவலை.
தமிழ்த் தாய்
பாரதியார்
தன் மக்களைப் புதிய சாத்திரம் படைக்க வேண்டுதல்
(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)
ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். 1
மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். 2
கள்ளையும் தீயையும் சேர்த்து – நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் – பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். 3
சாத்திரங் கள்பல தந்தார் – இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்;
நேத்திரங் கெட்டவன் காலன் – தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். 4
நன்றென்றுந் தீ தென்றும் பாரான் – முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் -வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். 5
கன்னிப் பருவத்தில் அந்நாள் – என்றன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு – பின்னர்
யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர் 6
தந்தை அருள் வலி யாலும் – முன்பு
சான்ற புலவர் தவவலி யாலும்.
இந்தக் கணமட்டும் காலன் – என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான். 7
இன்றொரு சொல்லினைக் கேட்டேன்! – இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! 8
“புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள்கூறும்:
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 9.
சொல்லவும் கூடுவ தில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்.” 10
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ!
சென்றிடு வீர்எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! 11
தந்தை அருள்வலி யாலும் – இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். 12
------------
வாழ்க தமிழ்மொழி! வாழ்க நிரந்தரம்!
http://www.youtube.com/watch?v=ac4jgzVQExM&
http://www.youtube.com/watch?v=yF4yTMfAwm8
நா. கணேசன்
ஆதிசிவன் பெற்றுவிட்டான் - இப்பாடலுக்கு பாரதிதாசன் எதிர்வினை
புரிந்துள்ளார்.
குழும உறுப்பினர் பாரி செழியனின் பதிவில்
ஆ.ஆனந்தன் M.A.,M.A.,B.Ed.,M.Phil.,
(P.hd).,
(விரிவுரையாளர்., ஆச்சாரியா தொழிற்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரி -
புதுச்சேரி)
சில வரிகள் இட்டுள்ளார்.
இன்னொரு கண்ணன், நண்பர் மரு. ஔவை ந. கண்ணன் எங்கே? வெகுநாள் காணோமே.
> ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
> ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
> வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
> மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். 1
>
> சொல்லவும் கூடுவ தில்லை – அவை
> சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
> மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
> மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்.” 10
> ஆதிசிவன் பெற்றுவிட்டான் - இப்பாடலுக்கு பாரதிதாசன் எதிர்வினை
> புரிந்துள்ளார்.
> குழும உறுப்பினர் பாரி செழியனின் பதிவில்
> ஆ.ஆனந்தன் M.A.,M.A.,B.Ed.,M.Phil.,
> (P.hd).,
> (விரிவுரையாளர்., ஆச்சாரியா தொழிற்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரி -
> புதுச்சேரி)
> சில வரிகள் இட்டுள்ளார்.
>
ஆக, controversy என்பதே கட்டிக் கரும்பாய் இனிக்கிறது. நான் சுட்டிய
பாடல்களின் இனிமை பற்றிப்பேச உள்ளம் வரவில்லை! தும்பை விட்டு
வாலைப்பிடிப்பது என்பதே மின்னிழைகளின் நடப்பாகிப் போனது! :-(
நா.கண்ணன்
> நீங்கள் தானே இது தமிழ்நாட்டோடது இது இலங்கையோடதுன்னு கான்டிரவோரஸியையும்
> தொடங்கி வைத்தீங்க ;-)
>
> பாடல்களின் இனிமை மட்டும் பேசியிருக்கலாம்ல..
>
உலக நிலமை சொன்னேன் :-)
தமிழன் உலகக் குடிமகன் எனும் நோக்கில் எப்பாடல் பொருந்துமென்றும்
சொன்னேன். நீராரும் கடலுடத்த மெட்டைக் கேட்டுவிட்டு ஒரு கொரிய நண்பர் அது
மிலிடரி மார்ச் பாடல் போல் உள்ளது என்றார். தமிழ்த்தாய்க்கு மிலிடெரி
யுனிபார்ம் கொடுத்துப் பார்த்தேன் :-)
க.>
ஆமாச்சு,
உலகத் தமிழர்கள் உலகின் எல்லா நகரங்களிலும் தமிழ்ச் சங்கங்களில்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகின்றனர். குழந்தைகளின் தமிழ்ப் பள்ளிகளில்
தமிழ்த்தாய் வாழ்த்து கற்பிக்கப்பட்கிறது. பல குழந்தைகள்
தமிழ்த்தாய் வாழ்த்தை அழகாகப் பாடுகின்றனர்.
இந்த மாதம் 3 லட்சம் $-ல் ஹ்யூஸ்டனில் தமிழ்நாடு ஃபௌண்டேஷன்
விழா நடத்துகிறோம். மதுரையிலிருந்து கருமுத்து தி. கண்ணன்
வருகிறார். ஜெயா டிவி கு. ஞானசம்பந்தன், சுகாசினி, ராகுல் நம்பியார்,
நெல்லை கண்ணன், ... பலரும் உண்டு. ஹூஸ்டன் மாநகரத்தின்
தமிழ்க் குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் வரவேற்பர்.
பெட்னா அமைப்புக்கு பழமைபேசி மணி செக்ரட்டரியாய்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பெட்னா என்பது அனைத்து நகர தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு.
25 ஆண்டுகளாய் ஃபெட்னா விழாக்களில் ’நீராருங் கடலுடுத்த’ தமிழ்த்தாய்
வாழ்த்து உண்டு.
பாரத நாட்டுக்கு ஜனகனமன, தமிழ் நாட்டுக்கு நீராருங்கடல்,
தமிழ்நாட்டின் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில் ராயகோபுரம்.
டிகேசி அம்மாள் ஊர் ஆனதால், கோவைகிழார் போன்றோர் தேர்ந்தெடுத்து
அமல் படுத்தினது. என்னதான் விடுதலைக் கட்சிகள் திருமா, ரவிகுமார்
சொன்னாலும், சீவில்லிபுத்தூர் கோபுரம்தான் தமிழ்நாட்டு அரசச் சின்னம்.
அதை எடுத்துவிட்டு சமண முனிபுங்கவரான வள்ளுவர் ஆதாரம் இருக்க,
தாடி மீசையுடன் சைவ சித்தராக உள்ள சிலை நாடெங்கும் உள்ளது.
அதைத் தமிழ்நாட்டு சின்னம் ஆக்குவது கூடாது.
ரவிக்குமார், முன்னாள் எம் எல் ஏ, சட்டமன்றத்தில்
சீவில்லிபுத்தூர் கோபுரத்தை அரச சின்னத்தில் இருந்து கைவிட வேண்டிக்
குரல் 2010-ல் கொடுத்தார்:
http://nirappirikai.blogspot.com/2010/11/blog-post_662.html
”தமிழக அரசின் இலச்சினை: கோபுரம் சின்னம் ஒரு குறிப்பிட்ட சமயத்தினுடைய
சின்னத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
[...]
திரு. து. ரவிக்குமார்: ஒரு நிமிடம் கொடுங்கள், ஒரே நிமிடம். மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் நம்முடைய மாநிலத்திலே மிகப் பெரிய
மாறுதல்களையெல்லாம் செய்திருக்கின்றார்கள். தமிழக அரசின் இலச்சினையாக
இருக்கிற அந்த கோபுரம் சின்னம் என்பது, நம்முடைய அரசு ஒரு சமய சார்பற்ற
அரசு என்றபோதிலும் அந்தச் சின்னத்திலே ஒரு கோபுரம் இடம் பெற்றிருப்பது
என்பது ஒரு குறிப்பிட்ட சமயத்தினுடைய சின்னத்தை வெளிப்படுத்துவதாக
இருக்கிறது. எனவே, அந்தக் கோபுரம் சின்னத்தை மாற்றிவிட்டு இன்றைக்கு
சமத்துவத்திற்கு, சமயச் சார்பின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக நம்முடைய
முதலமைச்சர் அவர்களால் பாராட்டப்படுகிற திருவள்ளுவரின் உருவத்தை அதிலே
பொறித்து, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வாசகத்தை இடம் பெறச்
செய்கின்ற புதிய இலச்சினையை தமிழக அரசிற்காக உருவாக்குவதற்கு மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டு, வாய்ப்புக்கு
நன்றி சொல்லி, அமைகின்றேன், வணக்கம். “
தமிழ் இலக்கிய வரலாற்றுப் பிழைகொண்ட சிலை தமிழ்நாடு முழுதும் எங்கும் சில
ஆண்டுகளாய்
இருக்கிறது. இனி, தமிழ்நாட்டு இலச்சினையிலும் வேண்டுமா? தமிழாய்ந்த
பேராசிரியர்களின் வள்ளுவர்
பற்றிய முடிபுகள் பொதுஜனங்கள் அறிவதெப்படி?
பல தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடலாம், ஆடலாம். அதற்கு நல்ல வரவேற்பை
நல்குவோம்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துகள் உள. பத்மா சுப்ரமணியம்
(அல்லது,
அவர் மாணவியர்) போன்றோர் பாரதியாரின் ஆதிசிவன் பெற்று அகத்தியன் வளர்த்த
தமிழ்த்தாய்
வாழ்த்தை ஆட வேண்டும். பலர் பாடவேண்டும்.
நீராரும் பாட்டு, சீவில்லிபுத்தூர் கோபுரம் தமிழ்நாட்டு அரச சின்னங்கள்.
அம் மரபு
தமிழ்நாட்டிலும், வெளியேயும் இருக்கும்.
நா. கணேசன்
மலேசியப்பாடலில் மலேசியா வருகிறது. வந்தால் அது மலேசியாவிற்குச் சொந்தம்
எனவே மலேசியர்கள் பாடிக்கொள்ளட்டுமென்று சொன்னால். அதே வாதத்தால் நம்
நிலை அடிபட்டுப்போகிறது. தெக்கணமும், அதிற் சிறந்த திராவிட நற்றிருநாடும்
என்பதால் அது தமிழ்நாட்டிற்குப் பொருந்தும் அவர்களே பாடிக்கொள்ளட்டும்
என்று விட்டுவிடுவதுதானே? :-)
முஸ்லிம்கள் உலகில் எங்கிருந்தாலும் மெக்காவை நோக்கி வணங்குகின்றனர். அது அவர்கள் பாரம்பரியத்துக்கு அவர்கள் அளிக்கும் மரியாதை. உலக தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழ்நாட்டை வணங்குவது அதே போல் அவர் பாரம்பரியத்துக்கு அளிக்கும் மரியாதை.
நீங்க கொரியாவில் இருந்தாலும் உங்க தாய்மண் தமிழ்நாடுதானே?எனக்கும் அப்படிதான்.இங்கிருக்கும் அனைவருக்கும் அப்படிதான்
--
செல்வன்
தமிழ் தமிழர்களை இணைக்கும் பாலம். எனவே இம்மொழியை பெண்ணாக உருவகப்படுத்தி வாழ்த்துப்பாடுதல் ஒருமுறை. உருவகப்படுத்தாமல் மொழியை வாழ்த்துவதுமுண்டு. மனோன்மணீயத்தில் (பெ. சுந்தரம் பிள்ளை) இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டு வாழ்த்து
நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல்
அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.
இப்பாடலைக் கேட்க!
இப்பாடல் மிகத்தெளிவாக இந்தியாவில் இருக்கும் தமிழ்நாட்டைச் சுட்டும் பாடலாக அமைந்துவிடுவதைக் காண்கிறோம். ஆனால் தமிழர்களோ இன்று 22 நாடுகளில் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் சுட்டும் வரிகள் இப்பாடலில் இல்லை.
தமிழின் பூர்வகுடிகள் இந்தியா, இலங்கை என்ற நாடுகளில் வாழ்ந்து செழித்தார்களெனில் இலங்கை பற்றிய எக்குறிப்பும் இப்பாடலில் இல்லை. எனவே இலங்கை மக்கள் தங்களுக்கென ஒரு தமிழ்மொழி வாழ்த்துச் சொல்வதில் தவறில்லை. அப்படித்தான் அமைகிறது புலவர் சிவநாதனின் ஒரு பாடல்.
சீருடைச் செந்தமிழ் மகள் வாழி! எம்
சிந்தையில் நிறைந்த அவள் வாழி
போருடைப் புறமும் அன்புடை யகமும்
போர்த்த பேரழகாள் புகழ் வாழி!
ஆரமாயியலோடு தேனிசை நாடகம்
அணிந்தவள் சங்கம் தனிலூறிச்
சாரமாய் வடிந்த காவியச் சோஐயில்
களி நடம் பயின்றவள் பேர் வாழி!
ஏருடை நிலமுங் காருடை வளமும்
தாருடை அரசும் இல்லாமல்
பாரினில லையுந் தமிழரை யிணைத்தே
வீறுடைச் செல்வியாய் அவள் வாழி
இப்பாடலை இசை அமைத்துப் பாடியுள்ளார் இலண்டனைச் சேர்ந்த மாதினி ஸ்ரீஸ்கந்தராஜா. இப்பாடலை தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் வலைப்பதிவில் கேட்கலாம்!
இப்பாடலைக்கேட்க!
ஒருகுறையும் இல்லாத ஒரு தமிழ் மொழி வாழ்த்து உருவாக வேண்டும், அது அனைத்துத் தமிழர்களையும், ஏன் இணையத்துத் தமிழையும் உள் வாங்க வேண்டும் எனும் நோக்கில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பெருமுயற்சி எடுத்து கவிஞர் சீனி நைனா முகம்மதுவைக் கொண்டு ஒரு பாடலை இயற்றியது. இப்பாடலுக்கு இசை அமைத்தவர் ஆர்.பி.எஸ்.ராஜூ, பாடியவர்கள்: துருவன், பாபு லோகநாதன். அப்பாடல் வரிகள்:
நிலைபெறநீ வாழியவே!
காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!
எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!
செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!
குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!
இனிய இப்பாடலைக் கேட்க தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் வலைப்பதிவிற்குச் செல்ல வேண்டும்:
இப்பாடலைக் கேட்க!
இந்தியாவிலுள்ள தமிழகம் இனிமேலும் தமிழ் மொழி மீது ஆதிக்கம் செலுத்தும் என நம்ப முடியாது. அங்கு நடக்கும் அரசியல் கோமாளித்தனத்தில் ஒரு முதல்வர் எழுதி, புத்தகங்களில் அச்சிடப்பட்ட செம்மொழிப் பாடலை அடுத்த முதல்வர் வந்தவுடன் கிழித்து விடுகிறார். மேலும் ஈழத்தமிழர்கள் துயருற்ற போது அரசியல் பலத்தை ஒருங்கிணைத்து அல்லல் படும் மக்களுக்கு ஆறுதல் செய்ய தமிழக அரசுகள் தவறிவிட்டன. எனவே உலகத் தமிழனத்தின் தானைத்தலைவன் என்றெல்லாம் இனி இந்தியாவில் யாரும் பட்டம் சூடிக்கொள்ள முடியாது. மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாட்களில் வாழும் தமிழர்களுக்கு நாளை ஒரு பிரச்சனை என்றால் இந்தியத் தமிழ்நாடு வெற்றுக் கோஷம்தான் போடமுடியுமே தவிர அரசியல் ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது.
எனவே இச்சூழலை அவதானித்து மலேசியா செய்திருக்கும் பாடலே அனைத்துத் தமிழர்களும் பாடத்தக்க தமிழ் மொழி வாழ்த்தாக அமையமுடியும் என்பது வெள்ளிடை மலை!
நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
தமிழ் தமிழர்களை இணைக்கும் பாலம். எனவே இம்மொழியை பெண்ணாக உருவகப்படுத்தி வாழ்த்துப்பாடுதல் ஒருமுறை. உருவகப்படுத்தாமல் மொழியை வாழ்த்துவதுமுண்டு. மனோன்மணீயத்தில் (பெ. சுந்தரம் பிள்ளை) இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டு வாழ்த்து
நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல்
அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.
இப்பாடலைக் கேட்க!
இப்பாடல் மிகத்தெளிவாக இந்தியாவில் இருக்கும் தமிழ்நாட்டைச் சுட்டும் பாடலாக அமைந்துவிடுவதைக் காண்கிறோம். ஆனால் தமிழர்களோ இன்று 22 நாடுகளில் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் சுட்டும் வரிகள் இப்பாடலில் இல்லை.
தமிழின் பூர்வகுடிகள் இந்தியா, இலங்கை என்ற நாடுகளில் வாழ்ந்து செழித்தார்களெனில் இலங்கை பற்றிய எக்குறிப்பும் இப்பாடலில் இல்லை. எனவே இலங்கை மக்கள் தங்களுக்கென ஒரு தமிழ்மொழி வாழ்த்துச் சொல்வதில் தவறில்லை. அப்படித்தான் அமைகிறது புலவர் சிவநாதனின் ஒரு பாடல்.
சீருடைச் செந்தமிழ் மகள் வாழி! எம்
சிந்தையில் நிறைந்த அவள் வாழி
போருடைப் புறமும் அன்புடை யகமும்
போர்த்த பேரழகாள் புகழ் வாழி!
ஆரமாயியலோடு தேனிசை நாடகம்
அணிந்தவள் சங்கம் தனிலூறிச்
சாரமாய் வடிந்த காவியச் சோஐயில்
களி நடம் பயின்றவள் பேர் வாழி!
ஏருடை நிலமுங் காருடை வளமும்
தாருடை அரசும் இல்லாமல்
பாரினில லையுந் தமிழரை யிணைத்தே
வீறுடைச் செல்வியாய் அவள் வாழி
இப்பாடலை இசை அமைத்துப் பாடியுள்ளார் இலண்டனைச் சேர்ந்த மாதினி ஸ்ரீஸ்கந்தராஜா. இப்பாடலை தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் வலைப்பதிவில் கேட்கலாம்!
இப்பாடலைக்கேட்க!
ஒருகுறையும் இல்லாத ஒரு தமிழ் மொழி வாழ்த்து உருவாக வேண்டும், அது அனைத்துத் தமிழர்களையும், ஏன் இணையத்துத் தமிழையும் உள் வாங்க வேண்டும் எனும் நோக்கில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பெருமுயற்சி எடுத்து கவிஞர் சீனி நைனா முகம்மதுவைக் கொண்டு ஒரு பாடலை இயற்றியது. இப்பாடலுக்கு இசை அமைத்தவர் ஆர்.பி.எஸ்.ராஜூ, பாடியவர்கள்: துருவன், பாபு லோகநாதன். அப்பாடல் வரிகள்:
நிலைபெறநீ வாழியவே!
காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!
எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!
செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!
குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!
இனிய இப்பாடலைக் கேட்க தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் வலைப்பதிவிற்குச் செல்ல வேண்டும்:
இப்பாடலைக் கேட்க!
இந்தியாவிலுள்ள தமிழகம் இனிமேலும் தமிழ் மொழி மீது ஆதிக்கம் செலுத்தும் என நம்ப முடியாது. அங்கு நடக்கும் அரசியல் கோமாளித்தனத்தில் ஒரு முதல்வர் எழுதி, புத்தகங்களில் அச்சிடப்பட்ட செம்மொழிப் பாடலை அடுத்த முதல்வர் வந்தவுடன் கிழித்து விடுகிறார். மேலும் ஈழத்தமிழர்கள் துயருற்ற போது அரசியல் பலத்தை ஒருங்கிணைத்து அல்லல் படும் மக்களுக்கு ஆறுதல் செய்ய தமிழக அரசுகள் தவறிவிட்டன. எனவே உலகத் தமிழனத்தின் தானைத்தலைவன் என்றெல்லாம் இனி இந்தியாவில் யாரும் பட்டம் சூடிக்கொள்ள முடியாது. மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாட்களில் வாழும் தமிழர்களுக்கு நாளை ஒரு பிரச்சனை என்றால் இந்தியத் தமிழ்நாடு வெற்றுக் கோஷம்தான் போடமுடியுமே தவிர அரசியல் ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது.
எனவே இச்சூழலை அவதானித்து மலேசியா செய்திருக்கும் பாடலே அனைத்துத் தமிழர்களும் பாடத்தக்க தமிழ் மொழி வாழ்த்தாக அமையமுடியும் என்பது வெள்ளிடை மலை!
நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
தமிழ் தமிழர்களை இணைக்கும் பாலம். எனவே இம்மொழியை பெண்ணாக உருவகப்படுத்தி வாழ்த்துப்பாடுதல் ஒருமுறை. உருவகப்படுத்தாமல் மொழியை வாழ்த்துவதுமுண்டு. மனோன்மணீயத்தில் (பெ. சுந்தரம் பிள்ளை) இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டு வாழ்த்து
நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல்
அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.
இப்பாடலைக் கேட்க!
இப்பாடல் மிகத்தெளிவாக இந்தியாவில் இருக்கும் தமிழ்நாட்டைச் சுட்டும் பாடலாக அமைந்துவிடுவதைக் காண்கிறோம். ஆனால் தமிழர்களோ இன்று 22 நாடுகளில் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் சுட்டும் வரிகள் இப்பாடலில் இல்லை.
தமிழின் பூர்வகுடிகள் இந்தியா, இலங்கை என்ற நாடுகளில் வாழ்ந்து செழித்தார்களெனில் இலங்கை பற்றிய எக்குறிப்பும் இப்பாடலில் இல்லை. எனவே இலங்கை மக்கள் தங்களுக்கென ஒரு தமிழ்மொழி வாழ்த்துச் சொல்வதில் தவறில்லை. அப்படித்தான் அமைகிறது புலவர் சிவநாதனின் ஒரு பாடல்.
சீருடைச் செந்தமிழ் மகள் வாழி! எம்
சிந்தையில் நிறைந்த அவள் வாழி
போருடைப் புறமும் அன்புடை யகமும்
போர்த்த பேரழகாள் புகழ் வாழி!
ஆரமாயியலோடு தேனிசை நாடகம்
அணிந்தவள் சங்கம் தனிலூறிச்
சாரமாய் வடிந்த காவியச் சோஐயில்
களி நடம் பயின்றவள் பேர் வாழி!
ஏருடை நிலமுங் காருடை வளமும்
தாருடை அரசும் இல்லாமல்
பாரினில லையுந் தமிழரை யிணைத்தே
வீறுடைச் செல்வியாய் அவள் வாழி
இப்பாடலை இசை அமைத்துப் பாடியுள்ளார் இலண்டனைச் சேர்ந்த மாதினி ஸ்ரீஸ்கந்தராஜா. இப்பாடலை தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் வலைப்பதிவில் கேட்கலாம்!
இப்பாடலைக்கேட்க!
ஒருகுறையும் இல்லாத ஒரு தமிழ் மொழி வாழ்த்து உருவாக வேண்டும், அது அனைத்துத் தமிழர்களையும், ஏன் இணையத்துத் தமிழையும் உள் வாங்க வேண்டும் எனும் நோக்கில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பெருமுயற்சி எடுத்து கவிஞர் சீனி நைனா முகம்மதுவைக் கொண்டு ஒரு பாடலை இயற்றியது. இப்பாடலுக்கு இசை அமைத்தவர் ஆர்.பி.எஸ்.ராஜூ, பாடியவர்கள்: துருவன், பாபு லோகநாதன். அப்பாடல் வரிகள்:
நிலைபெறநீ வாழியவே!
காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!
எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!
செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!
குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!
இனிய இப்பாடலைக் கேட்க தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் வலைப்பதிவிற்குச் செல்ல வேண்டும்:
இப்பாடலைக் கேட்க!
இந்தியாவிலுள்ள தமிழகம் இனிமேலும் தமிழ் மொழி மீது ஆதிக்கம் செலுத்தும் என நம்ப முடியாது. அங்கு நடக்கும் அரசியல் கோமாளித்தனத்தில் ஒரு முதல்வர் எழுதி, புத்தகங்களில் அச்சிடப்பட்ட செம்மொழிப் பாடலை அடுத்த முதல்வர் வந்தவுடன் கிழித்து விடுகிறார். மேலும் ஈழத்தமிழர்கள் துயருற்ற போது அரசியல் பலத்தை ஒருங்கிணைத்து அல்லல் படும் மக்களுக்கு ஆறுதல் செய்ய தமிழக அரசுகள் தவறிவிட்டன. எனவே உலகத் தமிழனத்தின் தானைத்தலைவன் என்றெல்லாம் இனி இந்தியாவில் யாரும் பட்டம் சூடிக்கொள்ள முடியாது. மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாட்களில் வாழும் தமிழர்களுக்கு நாளை ஒரு பிரச்சனை என்றால் இந்தியத் தமிழ்நாடு வெற்றுக் கோஷம்தான் போடமுடியுமே தவிர அரசியல் ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது.
எனவே இச்சூழலை அவதானித்து மலேசியா செய்திருக்கும் பாடலே அனைத்துத் தமிழர்களும் பாடத்தக்க தமிழ் மொழி வாழ்த்தாக அமையமுடியும் என்பது வெள்ளிடை மலை!
நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
> நீராரும் பாட்டு, சீவில்லிபுத்தூர் கோபுரம் தமிழ்நாட்டு அரச சின்னங்கள்.
> அம் மரபு
> தமிழ்நாட்டிலும், வெளியேயும் இருக்கும்.
>
ம்ம்ம்..இதுவொரு மேலாண்மை மனப்பான்மை. தமிழகம் அந்த கௌரவத்தை உலகத்தமிழர்
உள்ளத்தில் தக்க வைத்துள்ளதா? என்பது கேள்விக்குறி.
முதலில் பாடல் தேர்விலேயே உலகப்பொதுமைக்கான பாடலாகத்தெரிவு செய்திருக்க
வேண்டும். சங்கத்தமிழரிடம் இருந்த திறந்த மனது இப்போதுள்ள பாடலில் உள்ளதா
என்பதே கேள்வி!
இந்தியத்தமிழர் உலகத்தமிழர் என உணரும் பொழுதுதான் நான் சொல்ல வருவது
புரியும். கணேசனாருக்குப் புரியாது!
நா.கண்ணன்
காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !
நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்றுஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !
அது 1980 ஆம் ஆண்டு.
உலகத் தமிழ் மாநாடு நடக்கிறது.
எம்.ஜி..ஆர் 1980 ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கவியோகி கலந்து கொள்வதற்காக, நட்சத்திர ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்து, அழைப்பிதழும் அனுப்பியிருந்தார். ஆனால், அரசியல் சாணக்கியர்கள், "அட சாமியார் எங்கே வரப்போறாரு!" என்று, அறை ஏற்பாட்டையோ, இல்லை அழைப்பிதழ் அனுப்பியது பற்றியோ, கவியோகிக்கு செய்தி அனுப்பாமல், அவர்களே அந்த அறையில் கும்மாளமடித்துள்ளனர்!
ஆனால், சுத்தானந்தரோ, " என் தாய் தமிழுக்கு விழா! நான் போகவேண்டும்!! என்று சொல்லி விழாவுக்குச் சென்றுவிட்டார்! பழ.நெடுமாறன் கவியோகி மேடையை நோக்கி வருவதைப் பார்த்ததும், ஓடோடிச் சென்று மேடைக்கு அழைத்து வந்தார். மேலே அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துவிட்டது!
அவர் தாமே, கவியோகியை அருகில் அழைத்து, முதல் நாள் விழாவைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்! கவியோகி கணீர் குரலில் தான் எழுதிய தமிழ் தாய் வாழ்த்தான, " காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்.." எனும் பாட்டை பாடி வணங்கிவிட்டு, வணங்கி, கீழே இறங்கிச் சென்றுவிட்டார்!! பதைத்துப் போன எம்.ஜி.ஆர், திரு.பில்லப்பனை அழைத்து, "சுத்தானந்த பாரதியாரை எப்படியேனும் 5ஆம் நாள் விழாவில் பங்கு பெறச்செய்யுங்கள்." என்று கூறினார். மாநாட்டின் கடைசி நாளான 5ஆம் நாள் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால், 5 தமிழ் அறிஞர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட இருந்தது! தான் தந்த பெயர் இல்லாததைக் கண்ட எம்.ஜி.ஆர், தனது கையாலேயே ஒரு பெயரை நீக்கிவிட்டு, கவியோகியின் பெயரை எழுதினார்! அவர் செய்ததை அடித்தெழுத யாருக்குத் தைரியம் வரும்? கடைசியில், எங்கோ திருச்சி வானொலி நிலையத்தில், தமிழ் கவிதை வாசிக்கச் சென்றிருந்த கவியோகியை, தனிக் காரில் அழைத்து வந்து அன்னை இந்திரா காந்தியால் கெளரவித்தார்கள், உலகத்தமிழ் மாநாட்டினர்!”
இப்படிப் புறக்கணிக்கப் பட்ட, தமிழ் கூறும் 'நல்லுலகம்' அனேகமாக மறந்தே போன கவியோகி சுத்தானந்த பாரதியைப் பற்றி தனது வலைப் பதிவில் குமுறியிருந்தார் மரபூர் J சந்திர சேகரன்.
மேற்கூறிய பதிவை மதுரை கிருஷ்ணமூர்த்தி தனது consenttobenothing.blogspot.com ல் பதிவு செய்துள்ளார்.
உலகத் தமிழர்கள் எங்கிருந்தாலும், மேற்கண்ட பாடலை, தமிழ்த்தாய் வாழ்த்தாகக் கொள்ளலாம்.
On May 13, 7:49 pm, Chandrasekaran <plasticschan...@gmail.com> wrote:
> உலகத் தமிழர்கள் எங்கிருந்தாலும், மேற்கண்ட பாடலை, தமிழ்த்தாய் வாழ்த்தாகக்
> கொள்ளலாம்.
> ** <http://maraboorjc.blogspot.com/2006/03/blog-post.html>
ஆம். முன்பும் பேசியிருக்கிறோம். நல்ல ஆடியோ, விடியோ செய்யலாம்.
கவியோகி பற்றி நாமக்கல் கவிஞர் ‘என் கதை’யில் எழுதியிருக்கிறார்.
படிக்கக் கிடைத்ததா?
நா. கணேசன்
17-ஆம் நூற்றாண்டில் இருந்து ஓர் தமிழ்த்தாய் வாழ்த்து.
இத்துடன் தான் மனோன்மணீயம் எழுதத் தொடங்குகிறார் அதன் ஆசிரியர்.
சீகாளத்திப் புராணம் - தமிழ்த் தெய்வ வணக்கம்
-------------------------------------------------
மறைமுதற் கிளந்தவாயான் மதிமுகிழ் முடித்தவேணி
யிறைவர்தம் பெயரைநாட்டி யிலக்கணஞ் செய்யப்பெற்றே
யறைகடல் வரைப்பிற்பாடை யனைத்தும்வென் றாரியத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல்செய்வாம்.
~ துறைமங்கலம் கருணைப்பிரகாசர்
நா. கணேசன்
மறைமுதற் கிளந்தவாயான் மதிமுகிழ் முடித்தவேணி
யிறைவர்தம் பெயரைநாட்டி யிலக்கணஞ் செய்யப்பெற்றே
யறைகடல் வரைப்பிற்பாடை யனைத்தும்வென் றாரியத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல்செய்வாம்.
~ துறைமங்கலம் கருணைப்பிரகாசர்
ஆகா, அருமை அருமை; மிக்க நன்றி.
ஆனால் ஒரு சந்தேகம். இது 17ம் நூற்.
ஆனதால் இதை இந்துத்துவ முயற்சி எனும்
பகுப்பில் சேர்க்க வேண்டுமா அல்லது
அரிய தமிழ்க்கொடை என்று சொல்ல
வேண்டுமா என்பதையும் விளக்க
வேண்டும்
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கவியோகியின் பாடல் அருமை!
நிச்சயம் இசையமைத்துப் பாடவேண்டிய பாடல்! சந்தேகமில்லை!
நம்மாழ்வரை நினைவுருத்துவது அரிது! அவரது (நம்மாழ்வார்)
தமிழ்ப்பங்களிப்பு பற்றி நம் மோகனரங்கன் ஏதாவது புத்தகம் எழுதினாலுண்டு!
நா.கண்ணன்
2012/5/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
On May 14, 4:55 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> திரு சந்திரா அவர்கள் சுட்டியுள்ள இணைப்பில் சுத்தானந்தர் பற்றிய தகவல்
> கூகிளார் தேடலில் காணக் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்
> இங்கே குறிப்பிட்டுள்ள கவியோகியின் பாடல் வாத்திகன் ரேடியோவில்
> குறிப்பிடப்பட்டுள்ளது
> சுத்தானந்தர் பற்றிய பல அரிய தகவல் ஸ்விட்ஜர்லாந்திலிருந்து. இணைப்பு கீழேhttp://www.christianpiaget.ch/centre/anglais/Association/DrShuddhanan...
> கனகாபிஷேகம் பற்றிய நான்கு வீடியோக்கள் உள்ளன. நாலாவது வீடியோ கலை
> நிகழ்ச்சி. சுத்தானந்த பாரதியின் பாடல்களை டி.கே பட்டம்மாளும் நித்ய ஸ்ரீ
> யும் பாடியிருக்கிறார்கள்http://www.youtube.com/watch?v=UpVZn9evib4&feature=youtu.be
> நாகராசன்
>
நல்ல இணைய தளம்.
கவியோகி சுத்தானந்த பாரதியின் சினிமாப்பாடல்களை ஆடியோ, விடியோக்கள்
யுட்யூபில் ஏற்ற வேண்டும்.
நா. கணேசன்
எல்லா தமிழ்மொழி வாழ்த்துக்களையும் நம் தமிழ் விக்கியில் சேர்த்துவைப்பது எதிர்காலத்தில் பயன் தரும். இசையுடன் கிடைத்தால் அதையும் சேர்த்துவைப்பது நல்லது.
க.>
2012/5/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து
இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை,
நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை, மருங்கிலே வளருகின்றாள்
- நல்லாப்பிள்ளை பாரதம்
http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-002/0804npb_mahabharat-verses.php
தேவ்
> http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-002/0804npb_m...
--
//மூன்று பாடல்களை நான் தொகுத்துள்ளேன். பிற பாடல்கள் எம்.பி3 யாகக் கிடைத்தால் நலம்.//
கணேசனார் ஆயிரம் பாடல்கள் என்று ஒரு பேச்சுக்கு சொல்லிவிட்டார்
கீழே பத்துப் பாடல்களின் இணைப்பு உள்ளது
யூ ட்யூப் டவுன்லோடர் மூலம் எம்பி 3 ஆக மாற்றிக்கொள்ளலாம்
நாகராசன்
Thamizh thai vazhththu
http://www.youtube.com/watch?v=wwCs8D7aISc&feature=related
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hJ3S_jQdmKw#!
http://www.youtube.com/watch?v=jL809wG06PM&feature=related
http://www.youtube.com/watch?v=CpDAMM7K_Hc&feature=related
http://www.youtube.com/watch?v=zx3y9ub-hnQ&feature=fvwrel
http://www.youtube.com/watch?v=ac4jgzVQExM&feature=related
http://www.youtube.com/watch?v=7-GmD7hxDy0&feature=related
http://www.youtube.com/watch?v=ST39ZHOA9VY&feature=related
http://www.youtube.com/watch?v=w0ywbVYrQXc&feature=related
http://www.youtube.com/watch?v=tpvOyMEPfOw&feature=related
http://www.youtube.com/watch?v=QWOEJSj_qeE&feature=related
அப்படித்தான் இருக்க வேண்டும் :-)
ஆயினும் தமிழ் மொழி வாழ்த்து எனும் கருதுகோளில் அவர் நம் மரபு விக்கிக்கு
ஒரு கட்டுரை எழுத்தி அனுப்பினால் நல்லது. மலேசியாவில் பேசிய சீனி நைனா
முகம்மது, கடவுளை வாழ்த்தும் மரபு உண்டே தவிர மொழியை வாழ்த்தும் மரபு
கிடையாது என்றார். அது சமீபத்தியது என்றார். கணேசனார் இல்லை என்கிறார்.
எனவே அவர் கட்டுரை எழுத்தித்தந்தால் நல்லது. செய்வாறா? அதுவும் மரபு
விக்கிக்கு?
நா.கண்ணன்
On May 15, 4:55 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2012/5/15 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:
14-ஆம் நூற்றாண்டு தமிழ்த்தாய் வாழ்த்து முகம்மது சொல்கிறார் என்று
நீங்கள்
சொன்னபோதே அளித்தேனே. நேற்று, 17-ஆம் நூற்றாண்டு தமிழ்த்தாய் வாழ்த்து
அனுப்பியுள்ளேன். நைனா முகம்மதுக்கு அனுப்பி வைக்கவும்.
ஏராளமான தமிழ்த்தாய் வாழ்த்துகள் உருவாகிவிட்டன. தொகுப்பு நூல்களும்
உள்ளன.
நா. கணேசன்
இதை எழுதியவர் நல்லாப்பிள்ளை அல்லர்.
14-ஆம் நூற்றாண்டில் பிறந்த நூல் பற்றியும்,
அதனைப் புரந்தோனையும் இங்கே சில குறிப்புகள்
கொடுத்து எழுதியுள்ள கட்டுரை த.ம.அ. இணையதளத்தில்
உள்ளது.
http://www.tamilheritage.org/kidangku/kongku/thakkai.pdf
நமக்குத் தெரியவரும் முதல் தமிழ்த்தாய்
வாழ்த்து வில்லிபாரதந்தான். பின்னர் 1000 தமிழன்னை
வணக்கம் இருக்கும். 20-ஆம் நூற்றாண்டிலே
ஈழம், மலையம், இந்தியா பத்திரிகைகளைத் தேடினால்
கிட்டும். வில்லிபாரதத்தின் பின்னர் எழுந்த
புராணங்கள், பிரபந்தங்களையும் பார்க்கவேண்டும்.
முதல் தமிழ்த்தாய் வாழ்த்து - 14ஆம் நூற்றாண்டு -
பாடுவித்தவன் 4-ஆம் தமிழ்ச் சங்கம் கண்டவன்.
5-ஆம் தமிழ்ச் சங்கம் மதுரையில் கண்டவர்
பாண்டித்துரைத் தேவர். அதன் பின் ஏராளமான
தமிழ்த்தாய் வாழ்த்து தோன்றிவிட்டன.
நேரம் கிடைக்கிற போது கட்டுரை எழுதலாம்.
ரிட்டையர் ஆனபின்? முதலில் நைனாமுகமது
தமிழ்த்தாய் வாழ்த்து பெ. சுந்தரனாருக்கு முன்
இல்லை என விளக்கிக் கட்டுரை எழுதினால்
படிப்போம்.
நா. கணேசன்
> http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-002/0804npb_m...