காவிரியில் மிதந்த கஞ்சமலை இரும்பு.

258 views
Skip to first unread message

Singanenjam Sambandam

unread,
Apr 26, 2016, 10:54:24 AM4/26/16
to mint...@googlegroups.com

காவிரியில் மிதந்த கஞ்சமலை இரும்பு.

  சேலம் மாநகரிலிருந்து எட்டு கி.மீ. தென்மேற்கே உள்ள கஞ்ச மலைக்கு யார் அந்தப் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. உண்மையிலேயே கஞ்சமலை, கஞ்ச-மலை அல்ல. சேலம் மாவட்டம் கனிவளத்திற்கு, அதாவது மாங்கனி வளத்திற்கு பெயர் பெற்றதென்றால், நம் சேலம் நகரம் கனிம வளத்திற்கு, அதாவது மேக்னடைட் மற்றும் மேக்னசைட் கனிம வளங்களுக்கு புகழ் பெற்றது. கஞ்சமலையில் மேக்னடைட் எனும் இரும்புத்தாது பெருமளவில் கிடைக்கிறது. இன்னொரு முக்கியமான இரும்புத்தாது -ஹெமடைட். அது இங்கே அதிகம் இல்லை. இந்த மேக்னடைட் தாது Banded Magnetite Quartzite (நம் தமிழில், “பட்டை இரும்புக் கல்”) எனும் பாறையிலிருந்து கிடைக்கிறது..

  கஞ்சமலையின் நீளம் சுமார் எட்டு கி.மீ., அகலம் சுமார் மூன்றரை கி.மீ., உயரம்  அங்குள்ள தரைமட்டத்திலிருந்து சுமார் அறுநூறு மீ.  இந்த  மலை முழுவதுமே,  பட்டை இரும்புக் கல்லால் ஆனது அல்ல. வேறு பலவிதமான பாறைகளும் கலந்தே இருக்கின்றன. 

  புவியியல் அமைப்புப்படி , கஞ்சமலை ஒரு குழிமுக மடிப்பு மலை, அதாவது பாறைகளின் பரப்பு எல்லா மலைகளையும் போல் வெளிப்புறம் சரிந்திருந்தாலும், பாறை அமைப்புகள் உட்புறமாக சரிந்துள்ளன, ஒரு தோணி யைப் போல. (கூகுள் படத்தில் இரு முனைகளிலும் மடிப்பைப் பார்க்கலாம்). பட்டை இரும்புப் பாறை, மூன்று பெரும் கிடைகளாக மலையின் எல்லாப்பக்கத்திலும்  காணப்படுகிறது  ( கூகுள் படத்தில் கரும் பச்சை நிறத்தில் உள்ளவை).

 நம் நாட்டை  ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் முதன்முதலில் பறங்கிப்பேட்டை எனும் இடத்தில்தான் இரும்பு உருக்காலை துவங்கப்பட்டது. பறங்கிப்பேட்டைக்கு போர்ட்டோ நோவோ எனும்  பெயரும் உண்டு..போர்த்துகீசிய  மொழியில் புதிய துறைமுகம் என்று பொருள். இசுலாமியர்கள் முகம்மது பந்தர் என்று அழைப்பார்கள். அங்கே JOSHUA MARSHALL HEATH  எனும் வெள்ளையரின் பெரும்  முயற்சியால்  1830ஆம் ஆண்டு துவங்கப்பட்டு   பின்  1877 ஆம் ஆண்டு வரை POTONOVO IRON WORKS  எனும் பெயரில் இரும்பு  ஆலை நடத்தப்பட்டது. அந்த  ஆலைக்கு வேண்டிய இரும்புத் தாது சேலத்திலிருந்துதான்  கொண்டு செல்லப்பட்டது. மலையை சுற்றி சிதறிக் கிடக்கும் float ore எனும் உதிரித் தாதுதான் அள்ளிச் செல்லப் பட்டிருக்கிறது. அதுவே பல லட்சம் டன்கள் இருக்கும். புதியதாக தாது வெட்டி எடுத்ததாகத் தெரியவில்லை.  கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன், சாலை வசதி இல்லை, ரயில்  வசதி  இல்லை. சுமார் இருநூறு கி.மீ. தூரம். கனமான இரும்புத் தாதுவை எப்படிக் கொண்டு  செல்வது.  

ஆச்சர்யப்படாதீர்கள். காவேரி-கொள்ளிடம்- வெள்ளாறு  வழியே  பரிசல்களில் கொண்டு  சென்றிருக்கிறார்கள். அப்போது “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி” யில் ஆண்டில் ஆறு மாதம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது ( கே.ஆர். சாகர், கபினி அணை , மேட்டூர் எதுவும் இல்லை அல்லவா.).  ஆனி முதல் மார்கழி-தை வரை தண்ணீர் ஓடியிருக்கும். சுமார் முன்னூறு கி.மீ. காவிரியில் மிதந்து வந்திருக்கிறது, கஞ்சமலை இரும்புத் தாது.   

சேலத்தில் தரத்தில் உயர்ந்த இரும்புத் தாது ஏராளமாக உள்ளது என அக்காலக் குறிப்புகளில் காணப்படுகிறது. பறங்கிப் பேட்டையில் தயாரான இரும்பு இங்கிலாந்தில் மிகவும் விரும்பி வாங்கப் பட்டதாம். இப்போதும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் “ MADE IN PORTO NOVO” என எழுதப்பட்ட இரும்புத்தூண்கள் உள்ளதாகக்  கூறுகிறார்கள். இதை விட முக்கியம் என்னவெனில்,சேலம் இரும்புதாதுவிலிருந்து,பறங்கிப்பேட்டையில் தயாரிக்கப்பட்ட இரும்பு, அதன் தரத்தின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள BRITAANICA TUBULAR  மற்றும்   STAIN STRAIT BRIDGE ஆகியவற்றில்  பயன் படுத்தப்பட்டது- மும்பையில் உள்ள Bandra ரயில் நிலையத்தில்  பயன் படுத்தப்பட்டது என்று S.B. JOSHI  எனும் ஆய்வாளர் “HISTORY OF METAL FOUNDING ON INDIAN SUBCONTINENT SINCE ANCIENT TIMES” (pp97)தனது எனும் நூலில் குறிப்பிடுகிறார்..

சரி, முடிவாக சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இரும்புத்தாதுவின் அளவு  சுமார் 75 மில்லியன் டன்கள். மலையை சுற்றியு கீழே விழுந்த

தாதுதான் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது. 1960களில் இந்தத் தாது சேலத்திலிருந்து  ரயில் மூலம் கடலூர் துறைமுகம் சென்று அங்கிருந்து ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

சேலத்தில் தற்போது செயல்படுவது இரும்பு உருக்காலை அல்ல; உருட்டாலை. இங்கே எந்தக்  கனிமமும் உருக்கப்படுவதில்லை. மாறாக ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் தகடுகள் தயாரிக்கப்பட்டு உருட்டி அனுப்பப் படுகின்றன.

SA9.png
sa11.png
po1.png

N D Logasundaram

unread,
Apr 26, 2016, 11:58:49 AM4/26/16
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, podhuvan sengai, Sivakumar M A
அன்புள்ள சிங்கநெஞ்ச ன் அவர்களுக்கு 
நல்ல தரமான வைப்பு மடல்குழுவினர் ஆவணமாக சேமித்தும் வைக்கலாம் 

1967 ல் திரு அண்ணா  அவர்கள் ஆட்சிக்கு வந்த வுடன் சில மதங்களுக்கு பின் அப்போதிய மாநிலக்கல்லுரி புவியியல்துறை பேராசிரியர் எழுதிய சேலத்து இரும்பு எனும் நூல் எழும்பூர் அசோகா ஓட்டலில் வெளி யீட்டு விழ நடைபெற்றபோது என் தந்தைக்கு வந்த அழைப்பினில் நானும் உடன் சென்றிருந்தேன் என் தந்தையருக்கு 
பேராசியர் நண்பர் அவரை  மவுண்ட் ரோடு அரசுவளாகத்தமைந்த குடியிருப்புகளில் இருந்த போதே நேரடி சந்தித்துள்ளோம். பிற் கா லத்து அரசு தானே TAMIN எனும் கருங்கல் ஏற்றுமதி நிறுவனம் தொடங்கியபோது அதன் தலைவராக இருந்தார்  
அந்த அரசின் பெரு   முயற்சியில் பல முயல்வுகள் நடைபெற் று ருந்தாலும் முறையான சேலத்து இரும்பு தாது வி னை யாரும் இந்நாள்  வரை  பயன் படுத்தவில்லை அதற்கு பலப்பல காரணங்கள் கட்டப்பட்டன பின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி கொண் டு ஓர் ஜேர்மன் அமைப்பின் தயாரிப்பு  வழி முயலவு என காலம் தள்ள  பின் அது சரியனதல்ல  என் முடிவு செய்து கண்துடைப்பாக அதுவும் பற்ப ல ஆண்டுகள் கழிந்தபின் சேலம் இரும்பாலை எனும் பெயர் மட்டும் தாங்கி ஜப்பானிலிருந்து உ ருக்கா கவே வரவழைக்கட்ட எவர்சில்வர் பாள ங்களை தகடாக உருட்டும் ஆலை தொடங்கப்பட்டு நடந்து வரு கின்றது 
அதேநேரத்தில் தமிழகத்தில் தொழில்  வளர்ச்சி குறைவுதான் எனும் பெரும் போராட்டத்திற்குப்பின் சரிகட்ட நடுஅவண் அரசினால்  நிறுவப்பட்ட தொழில்கள் இன்று முற்றும் மூடப்பட்டுள்ளன 
மத்திய அரசினை எதிர்கொள்ளும் போக்கு உடை அரசு இருந்ததால் நடுவண் அரசு பாரபட்ச மாக நடந்து பின் சரிகட்ட  வந்ததும் போலியான கண்துடைப்பு தொ ழில்களாக அமைந்தன அவை 

(1​ நீலகிரி பிலிம் தொழிசாலை முதலில் தொழில் நுட்பம் கிடைக்காது கருப்பு வெளை  என தயார் செய்து  பின் அதுவும் பெரும் உருளைகளாக வே வெளிநாட்டிலிருந்து வரவைக்கப்பட்டு துண்டுகளாக்கி விற்று வந்தனர் 
பலநிற பிலிம்வந்தபின்  தாம்  செய்ய முலாமல்வாணி பத்தைக்கூட எடுத்துக்கொள்ளாமல்அதனையும்  தனியாருக்கு (ஏவிஎம்) இறக்குமதி செய்ய அனுமதித்து   தொழிற்சாலையை மூடி விட்டனர் 

(2) நந்தம்பாக்கம் அறுவைசிகிச்சை கருவிகள் தொழிற்சாலை உரசியாவின்  கூட்டு 
அது  சரிவராத தால் பின் இறக்குமதி செய்யப்பட மருந்துகளை கலந்து டப்பாவில் கலந்து விநியோகம் என மாற்றப்பட்டு இப்போது ஏதும் இல்லாமமல் தா னமாக கொடுக்கப்பட்ட நிலம் முதலியன் பாழாகிக் கொண்டு வருகின்றது 

(3 கிண்டி பரங்கிமலை அருகு டெலிப்ரிண்டேர்ஸ் தொழிற்ச்சாலை முற்றிலும் மா ற்று என ஒன்றும் கூட முயலாமல் நடுவண் அரசு முற்றும் அதனை மூடி விட்டது  
 இந்த செய்திகளையும் மடல்கலகவே சேமித்தல் நலமா என நினைக்கின்றேன் 

  

நூ த லோ சு 
மயிலை 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Apr 26, 2016, 12:35:34 PM4/26/16
to மின்தமிழ்
கஞ்சமலை என  உலோக மலையைக்  குறிக்க அவ்வாறு சொல்லியிருப்பார்களோ!!!
பொன் என்பது இரும்பு என்றும் உலோகம் என்றும் பொருள் கொடுப்பது உண்டே. 

கஞ்ச என்றால் வெண்கலம்.
கஞ்சிரா எனத் தாளக்கருவிக்கு பெயர் கொடுக்கப்பட்டவிதம் அதனால்தான்.

..... தேமொழி

Suba

unread,
Apr 26, 2016, 1:17:40 PM4/26/16
to மின்தமிழ்

--

​அருமை.
இந்தப் பதிவை மின்தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

சுபா
 

Singanenjam Sambandam

unread,
Apr 26, 2016, 1:23:24 PM4/26/16
to mint...@googlegroups.com
நன்றி  சுபா .

--

Singanenjam Sambandam

unread,
Apr 26, 2016, 1:36:30 PM4/26/16
to mint...@googlegroups.com
ஆமாங்க தேமொழி, கான்ச்  என்றால்  செம்புதான். காஞ்சனம் என்றால் பொன் என்பதும் தெரிந்ததே. இங்குள்ள இரும்பு  தாது மேல் மூலிகை சாற்றை ஊற்றினால்  அது  பொன்னாக  மாறிவிடும்  எனும் தவறான  நம்பிக்கை சிலரிடம் உள்ளது. உண்மையிலேயே தங்கமும் இங்கே கிடைப்பதாக   இங்குள்ள மக்கள்   நம்புகிறார்கள்.  ஒரு வேளை , இங்குள்ள  குவார்ட்ஸ்  கொடிகளில்  காணப்படும் பைரட் ( இரும்பு ஸல்பைட்) எனும் கனிமத்தைப் பார்த்துவிட்டு , தங்கம்  என் நினைத்திருக்கலாம்.. இந்த பைரட் கனிமத்திற்கு  FOOLS GOLD எனும் பெயரும் உண்டு.( காண்க : படம்)
p2.png
p1.png
p3.png

Singanenjam Sambandam

unread,
Apr 26, 2016, 1:52:24 PM4/26/16
to mint...@googlegroups.com
கஞ்சமலை  ஒரு குழிமுக  மடிப்பு மலை  என்பதைக் காட்டும் கூகுள்  பதிமங்கள்.
SA1.png
SA3.png

Oru Arizonan

unread,
Apr 26, 2016, 3:17:52 PM4/26/16
to mintamil
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவொன்றினை நல்கியதற்கு மிக்க நன்றி, சிங்கநெஞ்சனாரே!  இந்த வழியில் சிந்தனை செய்தால், தமிழரின் வரலாறு எப்படி இருந்திருக்கும், அவர்கள் பல கலைகளில் எப்படி முன்னேறி விளங்கினார்கள் என்று உருவகப்படுத்த இயலும் [circumstantial theory and hypothesis].  அத்துடன், வெளிநாட்டாரே பலகலைகளிலும் சிறந்தவர்கள், அவர்கள்தாம் நமக்கு அறிவுபுகட்டினார்கள் என்ற நம்முடைய தவறான எண்ணம் நீங்கி, அவர்கள் நமது திறமைகளையும், கலைத்திறன்களையும் எப்படி முடக்கிவைத்தார்கள் என்பதும் புலனாகும்.  இவண் நான் கலை என்று குறிப்பிடுவது art, science, scientic knowledge என்பதே,
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Apr 27, 2016, 3:01:26 AM4/27/16
to மின்தமிழ்


On Tuesday, April 26, 2016 at 10:17:40 AM UTC-7, Suba.T. wrote:
2016-04-26 16:54 GMT+02:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

காவிரியில் மிதந்த கஞ்சமலை இரும்பு.

​அருமை.
இந்தப் பதிவை மின்தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

மின்தமிழ்மேடையில்  இங்கே >>> http://mymintamil.blogspot.com/2016/04/blog-post_26.html   இணைக்கப்பட்டுள்ளது.

..... தேமொழி


 

சுபா
 

Seshadri Sridharan

unread,
Apr 27, 2016, 3:03:32 AM4/27/16
to mintamil
2016-04-26 22:05 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
கஞ்சமலை என  உலோக மலையைக்  குறிக்க அவ்வாறு சொல்லியிருப்பார்களோ!!!
பொன் என்பது இரும்பு என்றும் உலோகம் என்றும் பொருள் கொடுப்பது உண்டே. 

கஞ்ச என்றால் வெண்கலம்.
கஞ்சிரா எனத் தாளக்கருவிக்கு பெயர் கொடுக்கப்பட்டவிதம் அதனால்தான்.

 கஞ்சன் என்ற ஆள் பெயரில் அம்மலை குறிக்கப்பட்டிருக்கலாம். ராசசுதானம், பஞ்சாபு பகுதிகளில்  இப்பெயர் உண்டு.


மஞ்சன்   

N D Logasundaram

unread,
Apr 27, 2016, 7:02:36 AM4/27/16
to mintamil
Inline image 1
Inline image 1

கஞ்சமலையின் செந்நிற தோற்றம் கூகுள் எர்த் வழி கிட்டியது (நன்றி கூகுள் ) 

மேலும் இரு கட்டுரைகள் இந்துவில் வந்தது 
இணைப்பில் காணும் சுட்டி வழி காண்க 

நூ த லோ சு 
மயிலை 
Kanjamalai.docx
kanjamalai The Hindu.docx

Singanenjam Sambandam

unread,
Apr 27, 2016, 9:24:20 AM4/27/16
to mint...@googlegroups.com
நூ.தா.லோ.சு. அய்யா அவர்களுக்கு வணக்கம். 
நீங்கள் குறிப்பிட்டுள்ளா  பேராசிரியர்  சரவணன் அய்யா அவர்கள்,  என் அண்ணா (சகலபாடி) வின் குடும்ப நண்பர். அவரை பலமுறை  சந்தித்து  பேசியிருக்கிறேன். அவரின்  நூலினையும்   படித்துள்ளேன்.  

நெய்வேலி-சேலம் திட்டம் பற்றி எழுதுவதை  சில காரணங்களுக்காக  தவிர்த்தேன்.பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
நீங்கள்  இணைத்துள்ள படங்கள் false colour composite images என  நினைக்கிறேன். Remote Sensing எனக்கு  மிக மிக பிடிக்கும் என்றாலும் அதில் அனுபவம் இல்லை. 

நீங்கள்  புவியியலில்  காட்டும் ஆர்வம் கண்டு  மகிழ்கிறேன். தொடர்ந்து எழு துங்கள் 

Singanenjam Sambandam

unread,
Apr 27, 2016, 9:28:20 AM4/27/16
to mint...@googlegroups.com
###கஞ்சன் என்ற ஆள் பெயரில் அம்மலை குறிக்கப்பட்டிருக்கலாம். ராசசுதானம், பஞ்சாபு பகுதிகளில்  இப்பெயர் உண்டு.####

நண்பரே , அது கஞ்சன் அல்ல, கான்ச்சன்.- எனக்கும் அந்தப் பெயரில் நண்பர்  ஒருவர் இருக்கிறார்.

N. Ganesan

unread,
Apr 27, 2016, 9:47:38 AM4/27/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Tuesday, April 26, 2016 at 9:35:34 AM UTC-7, தேமொழி wrote:
கஞ்சமலை என  உலோக மலையைக்  குறிக்க அவ்வாறு சொல்லியிருப்பார்களோ!!!
பொன் என்பது இரும்பு என்றும் உலோகம் என்றும் பொருள் கொடுப்பது உண்டே. 

கஞ்ச என்றால் வெண்கலம்.
கஞ்சிரா எனத் தாளக்கருவிக்கு பெயர் கொடுக்கப்பட்டவிதம் அதனால்தான்.

..... தேமொழி


On Wednesday, April 27, 2016 at 6:28:20 AM UTC-7, singanenjan wrote:
###கஞ்சன் என்ற ஆள் பெயரில் அம்மலை குறிக்கப்பட்டிருக்கலாம். ராசசுதானம், பஞ்சாபு பகுதிகளில்  இப்பெயர் உண்டு.####

நண்பரே , அது கஞ்சன் அல்ல, கான்ச்சன்.- எனக்கும் அந்தப் பெயரில் நண்பர்  ஒருவர் இருக்கிறார்.


அன்பின் சிங்கநெஞ்சன், காஞ்சன் என்பது உங்கள் நண்பர் பெயர். காஞ்சனன் என்று தமிழில் பெயர்கள் உண்டு. 
வெயில் காய்கிறது, காய்ஞ்சது (காஞ்சது) என்கிறோமே, அதில் இருந்து இந்தப் பழமையான உலோகப்
பெயர்கள் திராவிட மொழிகள் சம்ஸ்கிருதத்திற்குத் தரும் சொல் ஆகும்.

கஞ்சம் = வெண்கலம்/வெங்கலம். காஞ்சனம் = பொன்.

கஞ்சமலை என்னும் கொங்குநாட்டு மலை இரும்பை உருக்கி உருக்கு (Wootz) செய்வதால் ஏற்பட்ட பெயர். 

குகைகளில் சமண துறவியரின் கல்படுக்கைகளுக்கு கஞ்சணம் எனப் பெயர். சற்றுக் குழிவாக இருக்கும். காய்ச்சியதை ஊற்றும் தொட்டி
போல. இப் படுக்கைகள் கஞ்சம்பட்டி என்னும் ஊரருகே மலையில் இருக்கும் என்று பொள்ளாச்சி
வரும்போது எப்பொழுதும் சொல்பவர் புலவர் செ. இராசு அண்ணன். அவர்தான் இந்தியாவின் மிகப்
பழைய இசைக் கல்வெட்டாம் அறச்சலூர்க் கல்வெட்டை ஆட்டுக்காரக் கிழவி சொல்லிக் கண்டவர்.
அதில் புள்ளி இருக்கிறது என அறிவித்தவர். அகநானூற்றின் கொடுமணம் என்ற இடம் இது எனக்
காட்டியவர். பின்னர் 30 ஆண்டுகள் அவர் மாணவர் பேரா. கா. ராஜன் அகழ்ந்து ஆராய்ந்து பிராமி வளர்ச்சிநிலைகளைக்
காட்டிவிட்டார். 

காய்ச்சுவது கஞ்சி என்கிறோம். காலையில் குடிப்பது.கஞ்சி. இதுவும் நீர்விட்டுக் காய்ச்சுதால் ஏற்படும் பெயர்:கஞ்சி.
இதே தாதுவேரில் உருவாவது: கஞ்சம், கஞ்சணம், காஞ்சநம் (=பொன். அந்தக் காலத்தில் இரும்பு, செம்பு, தங்கம், வெள்ளி என அனைத்து உலோகமும்),
கஞ்சமலை உருக்கு (ஸ்டீல்) செய்ய இரும்புத்தாது கிடைப்பதால். கஞ்சமலை அருகே மணிகளும் கிடைத்தன.
கிபி முதல் நூற்றாண்டிலேயே மகயான சூத்திரம் ஆன கண்டவியூகம் சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
கஞ்சமலை, கொல்லிமலையில் வசுமித்திரை வர்ணனை இருக்கிறது. சுதனன் என்னும் செட்டிப்பிள்ளைக்கு
பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களில் ஒருத்தி இந்த வசுமித்ரா. கல்யாணமித்ரர்கள் 54 பேருக்கும் கட்டிய மகாயான
மெமோரியல் தான் போரோபுதூர் (இந்தோனேசியாவில்). 8-ஆம் நூற்றாண்டு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 27, 2016, 10:17:02 AM4/27/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com


On Wednesday, April 27, 2016 at 6:47:38 AM UTC-7, N. Ganesan wrote:

On Tuesday, April 26, 2016 at 9:35:34 AM UTC-7, தேமொழி wrote:
கஞ்சமலை என  உலோக மலையைக்  குறிக்க அவ்வாறு சொல்லியிருப்பார்களோ!!!
பொன் என்பது இரும்பு என்றும் உலோகம் என்றும் பொருள் கொடுப்பது உண்டே. 

கஞ்ச என்றால் வெண்கலம்.
கஞ்சிரா எனத் தாளக்கருவிக்கு பெயர் கொடுக்கப்பட்டவிதம் அதனால்தான்.

..... தேமொழி


On Wednesday, April 27, 2016 at 6:28:20 AM UTC-7, singanenjan wrote:
###கஞ்சன் என்ற ஆள் பெயரில் அம்மலை குறிக்கப்பட்டிருக்கலாம். ராசசுதானம், பஞ்சாபு பகுதிகளில்  இப்பெயர் உண்டு.####

நண்பரே , அது கஞ்சன் அல்ல, கான்ச்சன்.- எனக்கும் அந்தப் பெயரில் நண்பர்  ஒருவர் இருக்கிறார்.


அன்பின் சிங்கநெஞ்சன், காஞ்சன் என்பது உங்கள் நண்பர் பெயர். காஞ்சனன் என்று தமிழில் பெயர்கள் உண்டு. 
வெயில் காய்கிறது, காய்ஞ்சது (காஞ்சது) என்கிறோமே, அதில் இருந்து இந்தப் பழமையான உலோகப்
பெயர்கள் திராவிட மொழிகள் சம்ஸ்கிருதத்திற்குத் தரும் சொல் ஆகும்.

மணிமேகலைக் காப்பியத்தில்:
உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை

மணிமேகலை வெண்பா - பாரதிதாசன்
காஞ்சனன் ஐயப்பாடு

வாஞ்சநன் மாற்றமெலாம் மங்கைசொலும் போதங்குக்
காஞ்சனன் வந்துகண்டான் கண்ணேரில்-தீஞ்சொல்லாள்
காயசண்டி கைதான் கசந்தாளோ என்னைஎன்றான்
ஆயஅண்டி னான் அவளை அங்கு. 310

Singanenjam Sambandam

unread,
Apr 27, 2016, 10:45:29 AM4/27/16
to mint...@googlegroups.com
மிக்க   நன்றி...நல்ல   தகவல்கள்.


இரும்புத் தாது இருக்குமிடத்தில் மணி கள்  இருக்கும் என்பதில்லை. அருகே உள்ள சித்தம்பூண்டியில்  ரூபி, கரூர்  குளித்தலை பகுதிகளில்  பெரில், அக்குவாமரின்  போன்றவை   கிடைக்கின்றன.

N. Ganesan

unread,
Apr 28, 2016, 4:10:48 AM4/28/16
to மின்தமிழ், vallamai, Santhavasantham, மு இளங்கோவன், housto...@googlegroups.com


On Wednesday, April 27, 2016 at 7:45:29 AM UTC-7, singanenjan wrote:
மிக்க   நன்றி...நல்ல   தகவல்கள்.

இரும்புத் தாது இருக்குமிடத்தில் மணி கள்  இருக்கும் என்பதில்லை. அருகே உள்ள சித்தம்பூண்டியில்  ரூபி, கரூர்  குளித்தலை பகுதிகளில்  பெரில், அக்குவாமரின்  போன்றவை   கிடைக்கின்றன.

ஆமாம்.  கஞ்சமலை உள்ள கொங்கில் பல ஊர்களில் பெரில் (beryl) கிடைக்கிறது. இது ‘வெளிறு’ என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து பிறக்கும் ஆங்கிலச் சொல்.
வெளிறு (> பெரில்) போன்ற கல்மணிகள் அதிகம் கிடைக்குமிடம் காங்கயம் அருகே உள்ள படியூர். படியூர் - படி - ஸ்படிக. கொல்லிமலை அடிவாரத்தில் வேளுக்குறிச்சி உள்ளது.
இந்த வேளூர் வடமொழி வேடூர் என்றாகும் (சோழ/சோள வடமொழியில் சோட என்பர்). வேடூரில் கிடைக்கும் கல்மணி ‘வைடூர்யம்’ ஆகிறது. vaiDuurya < vEDuur < vELuur.

உணவு சோறு, கஞ்சி, கூழ் காய்ச்ச தேவை நீர். எனவே, நீருக்கே ஆகுபெயராய் கஞ்சம் என்றொரு பெயர் உண்டு. கஞ்சமலர் என்றால் நீர்ப்பூவில் சிறந்த தாமரை.
‘கஞ்சமலர் மாதுநீ, வஞ்சமதி வாணனை வெஞ்சமரில் கண்டதுண்டம் செய்தவளும் நீ’ என்று பண்டாரங்கள் செய்யும் அருச்சனையில் கேட்கலாம்.

புலவர் செ. ராசு கஞ்சம்பட்டிக் குன்றில் நின்றபோது கஞ்சணம்பட்டி மலை என்றார். கஞ்சணம் என்றால் தொட்டி போன்ற சமணத் துறவியரின் கல்படுக்கை
என எனக்கு விளக்கினார்கள். ஊரில் பஞ்ச காலத்தில் கல்தொட்டியில் மக்கள் கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். ஏழை ஜனங்களுக்கு கஞ்சி அதிலிருந்து வார்ப்பர்.
அதற்கு, கொங்குநாட்டில் கஞ்சணம் எனப் பெயர் என்றும், கஞ்சணம் = கஞ்சித் தொட்டி போல வடிவில் சற்றுக் குழிவாக சமணர் படுக்கைகள் குடையப்படும் என்றார்.
மறுகால்தலை என்ற ஊரில் ‘வெண்காஸிபன் குடுப்பித்த கல் கஞ்சணம்’ என்ற பிராமிக் கல்வெட்டு உள்ளது. ஐராவதம் கி.மு. 2-ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கிறார்.

மயிலை சீனி. வேங்கடசாமி ‘கஞ்சணம்’ என்றுவரும் பிராமிக் கல்வெட்டை விளக்குகிறார்:

திரு. ஐ. மகாதேவன், இந்தச் சாசனத்தைச் சரியாகவே படித்திருக் கிறார். ஆனால், இவர், வேண் காசிபன் என்பதை வேன்காசிபன் என்று படித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது.

இனி, இந்தப் பிராமி எழுத்து வாசகத்தை நாம் படித்து பொருள் காண்போம்.

வெண் காஸிபன் கொடுபித கல் கஞ்சணம்

என்று இதைப் படிக்கிறோம். இதனை விளக்கிக் கூறுவோம். முதற்சொல் வெண் என்பது. பிராமி எழுத்தில் எகரமும் ஐகாரமும் ஒரே மாதிரி எழுதப்படுகிறது. இதை வெண் என்றும் வேண் என்றும் படிக்கலாம். மேலே கூறப்பட்ட அறிஞர்கள் இதை ‘வேண்’ என்று படித்துள்ளனர். ஆனால் ‘வெண்’ என்று படிப்பதே இந்த இடத்துக்குப் பெரிதும் பொருந்து கிறது. முதல் ஆறு எழுத்துக்களையும் ‘வெண்காசிபன்’ என்று படிக்கலாம். சங்ககாலத்தில் வெண் என்னும் தொடக்கத்தை யுடையவர் இருந்ததைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். வெண்கண்ண னார், வெண் கொற்றனார், வெண்பூதனார், வெண்பூதியார், வெண்மணிப்பூதியார் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் வழங்கி வந்ததை அறிகிறோம்.

வெண்கண்ணனார் அகநானூறு 130, 192ஆம் செய்யுள்களைப் பாடிய புலவர். வெண்கொற்றனார் குறுந்தொகை 86ஆம் செய்யுளைப் பாடிய புலவர். வெண்பூதனார் குறுந்தொகை 83ஆம் செய்யுளைப் பாடியவர். வெண்பூதியார் குறுந்தொகை 97, 174, 219 ஆம் செய்யுள்களைப் பாடியவர். வெண்மணிப்பூதியார் குறுந்தொகை 299 ஆம் செய்யுள்களைப் பாடியவர். ஆகையால், இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்தில் கூறப்படுபவரை வெண்காசிபன் என்று

கொள்வதுதான் சாலப் பொருத்தம் ஆகும். இப்படிக் கொள்வதுதான் அந்தக் காலச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது.

அடுத்த நான்கு எழுத்துக்கள் ‘குடுபித’ என்றிருக்கின்றன. இந்தச் சொல் ‘குடுப்பித்த’ என்றிருக்க வேண்டும். தகர ஒற்றெழுத்து எழுதப்படவில்லை. இது கற்றச்சனுடைய பிழையாக இருக்கலாம். குடுஎன்பதும் கொடு என்பதும் ஒரே பொருளுடைய சொற்கள். குடு, கொடு என்னும் சொற்கள் சாசனங்களில் பயின்று வந்துள்ளன.

இதற்கு அடுத்த இரண்டு எழுத்துக்கள் ‘கல’ என்று எழுதப் பட்டிருக்கிறது. இதைக் கல் என்று வாசிக்கிறோம். புள்ளியிடப்பட வேண்டிய எழுத்துக்கள் புள்ளியிடப்படாமலே பெரும்பாலும் எழுதப்படுகின்றன. ஆகவே இதைக் கல் என்று ஐயமில்லாமல் படிக்கலாம். கல் என்றால் மலை என்பது பொருள்.

கடைசி ஐந்து எழுத்து ‘கா ஞ ச ண ம’ என்றிருக்கிறது. புள்ளி வைக்க வேண்டிய எழுத்துக்களுக்குப் புள்ளி வைத்துப் படித்தால் ‘காஞ்சணம்’ என்று படிக்கலாம். இது தமிழ்ச் சொல் அன்று. பிராகிருத மொழிச் சொல்லாக இருக்கலாம். இதனுடைய நேரான பொருள் தெரியவில்லை. இந்த இடத்தில் இது கற்படுக்கைகளைக் குறிக்கிறது.

வெண் காஸிபன் கொடுப்பித்த கல் காஞ்சணம் என்று படிக்கிறோம்.

வெண்காசிபன் என்பவர் முனிவர்களுக்காக மலைக்குகையில் அமைத்துக் கொடுத்த கற்படுக்கை என்பது இதன் பொருள். 
Reply all
Reply to author
Forward
0 new messages