உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முன்னேற்பாடுகள்

320 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jan 8, 2010, 11:14:35 PM1/8/10
to Min Thamizh
வெளிநாடுகளிலிருந்து 32 பேராளர்கள்:- கவிஞர் வைரமுத்து

கோவையில் நடைபெற உள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 32 வெளிநாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் பங்கேற்க உள்ளனர் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

கோவையில் நடைபெற உள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பேராளர்களை வரவேற்பது, அவர்களுக்கான வசதியைச் செய்து தருவது குறித்து எங்கள் குழுவின் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மாநாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 32 வெளிநாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்க விரும்பும் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் வரும் 31ம் தேதி வரை மாநாட்டுக்குப் பதிவு செய்யலாம்.

பதிவு முடிந்த பிறகே வெளிநாடுகளில் இருந்து எத்தனை பேர் பங்கேற்பர் எனக் கூற  முடியும்.

பேராளர்களை தங்க வைப்பது உள்ளிட்டவற்றுக்கான நிதியை அரசே அளிக்கும்.

இந்தக் குழுவில் எடுத்த முடிவுகள் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்து ஆலோசனை பெறப்படும் என்றார்.

பேராளர் தொடர்புக் குழுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை (08/01/10) நடைபெற்றது.

நன்றி:- தினமணி

Kannan Natarajan

unread,
Feb 7, 2010, 6:26:57 PM2/7/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு இன்னும் 136 நாட்கள்:- ஆய்வுச் சுருக்க நுண்ணாய்வுப் பணி இன்றுடன் (பிப்ரவரி 8) முடிகிறது

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள

  • ஆய்வுக் கட்டுரைகளின்
  • ஆய்வுச் சுருக்கங்களை

நுண்ணாய்வு செய்யும் பணி இன்றுடன் முடிகிறது.

மாநாட்டு குழுக்களின் கூட்டங்கள் குறித்து தகவல் சேகரித்து ஊடகங்களுக்கு வழங்க தனி மக்கள் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட உள்ளார்.

http://www.dinamani.com/Images/article/2010/2/7/08tamil.jpg

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்திடும் வகையில் 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.​ ​

மாநாட்டு தலைமைக் குழு மற்றும் மாநாட்டு ஆலோசனைக் குழுவுக்கு முதல்வர் கருணாநிதி தலைவராக உள்ளார்.

மாநாட்டுச் சிறப்பு மலர்க்குழுவுக்கு நிதியமைச்சர் க.அன்பழகன் தலைவராக உள்ளார்.​​

மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வைக் குழு தலைவராக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு வகித்து வருகிறார்.​​

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவுக்கு தனி அலுவலராக கா.அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் இணைய மாநாட்டுக் குழுவுக்கு ஐ.ஐ.டி.(கான்பூர்) தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைவராக உள்ளார்.

இதர குழுக்கள்:-​​

இதர குழுக்களுக்கு அமைச்சர்களும்,​​எம்.எல்.ஏக்கள் என பல்வேறு துறை சார்ந்தவர்கள் தலைவர்களாகவும்,​​துணை தலைவர்களாகவும்,​​அமைப்பாளர்கள்,​​ஒருங்கிணைப்பாளர்கள்,​​உறுப்பினர்கள் என பல்வேறு பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

டிசம்பரில் (2009) முதல் கூட்டம்:-​​ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அறிவிப்புக்கு பிறகு 2009 டிசம்பர் 31ம் தேதி குழுக்களின் தலைவர்கள் மற்றும் இதர பிரதிநிதிகளுடன் முதல்வர் கருணாநிதி கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

தலைமைக் குழு கூட்டம்:-​​ அதைத்தொடர்ந்து ஜனவரி 23ம் தேதி தலைமைக் குழு மற்றும் அனைத்து குழுக்களின் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.​ அந்தக் கூட்டத்தில் மாநாட்டின் தொடக்க விழாவில் (ஜூன் 23) பங்கேற்க குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் சம்மதம் தெரிவித்துள்ளார் என அறிவிக்கப்பட்டது.

நுண்ணாய்வுப் பணி இன்றுடன் (பிப்ரவரி 8) முடிகிறது:-​​ ஒவ்வொரு குழுக்களின் ஆலோசனைக் கூட்டம் இப்போது தொடர்ந்து நடந்து வருகிறது.​ மாநாட்டின் முக்கிய நிகழ்வான ஆய்வரங்கத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள ஆய்வுக் கட்டுரைகளுக்காகப் பெறப்பட்ட ஆய்வுச் சுருக்கங்களை நுண்ணாய்வு செய்யும் பணி இப்போது நடந்து வருகிறது.​ இப்பணி பிப்ரவரி 8ம் தேதி முடிகிறது.

தனி மக்கள் தொடர்பு அலுவலர்:-​ மாநாட்டு குழுக்களின் கலந்தாய்வுக் கூட்டங்கள் குறித்து ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காகத் தனி மக்கள் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட உள்ளார்.​ இதற்கான பரிந்துரை அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநாட்டு தனி அலுவலர் கா.அலாவுதீன் கூறுகையில்,​​"மாநாட்டு குழுக்களுக்கு அவர்களின் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.​ ஒவ்வொரு குழுவும் இப்போது தொடர்ந்து கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி,​​அடுத்த கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.​ மாநாடு நடைபெறும் கோவை நகரில் மே மாதத்திற்குள் அனைத்து அடிப்படை வசதிகளை செய்துமுடிக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன" என்றார்.

Kannan Natarajan

unread,
Feb 10, 2010, 4:52:15 PM2/10/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு இன்னும் 133 நாள்கள்:- அறிஞர்களை வரவேற்க துணைக் குழுக்கள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான வரவேற்புக் குழுவின் 2வது கூட்டம் ​சென்னையில் புதன்கிழமை (10/02/10) நடைபெற்றது.​ குழுவின் தலைவரும்,​​ மின் துறை அமைச்சருமான ஆர்க்காடு வீராசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டப் பேரவைத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி,​​ சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.​ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் அறிஞர்கள்,​​ முக்கியத் தலைவர்களை வரவேற்பதற்காகத் துணை குழுக்கள் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.​

ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து வெளிநாட்டு அறிஞர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.​ 

மாநாட்டு ஆய்வரங்கம் மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்பதாக சுமார் 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அறிஞர்கள் வருகின்றனர்.​

இதுதவிர மலேசியா,​​ சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் வருகைதர உள்ளனர்.​ அவர்களை விமான நிலையத்தில் வரவேற்கவும்,​​ முறையான வாகன வசதிகளை செய்துதரவும் வரவேற்புக் குழுவில் துணைக் குழுக்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

"மாநாட்டு அழைப்பிதழ் அச்சடிக்க சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.​

அதேபோல வெளிநாட்டில் இருந்து வரும் அரசு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களை வகைப்படுத்தவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.​ சென்னைக்கு வரும் விருந்தினர்களை கோவைக்கு அழைத்து சென்று தங்கும் ​வசதிகளை ஏற்பாடு செய்து தருதல் மற்றும் மாநாடு முடிந்த பிறகு அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைத்தல் போன்ற பணிகளை செய்வதற்கு குழு அமைப்பது பற்றி ​ விவாதிக்கப்பட்டது.​

அழைப்பிதழ்களை ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து விருந்தினர்களுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் பேரவைத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி.​

கணினித் தமிழ் வரைகலைப் போட்டிகள்...:​​-

உலகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கணினித் தமிழ் வரைகலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.​ இப்போட்டிகள் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 12ம் தேதி நடைபெறுகிறது.


10,700 மாணவர்கள் பதிவு...:​-


தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.​ சுமார் 10,700 மாணவர்கள் பதிவு ​செய்துள்ளனர்.​ அதிகபட்சமாக கோவை,​​ கன்னியாகுமரி,​​ தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

உலகத் தமிழ் இணைய மாநாடு...:-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு அங்கமாக நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் 8வது ஆலோசனைக் கூட்டம் வரும் பிப்ரவரி 18ம் தேதி அதன் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெறுகிறது.

Kannan Natarajan

unread,
Feb 12, 2010, 10:57:26 PM2/12/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு இன்னும் 131 நாள்கள:- செம்மொழி மாநாட்டில் பங்கேற்க உலகத் தமிழர்கள் ஆர்வம்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க உலகத் தமிழர்கள் ஆர்வமாக உள்ளதாக வெளிநாட்டுப் பேராளர் தொடர்பு குழுத் தலைவர் கவிஞர் வைரமுத்து கூறினார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை (12/02/10) செம்மொழி மாநாட்டு வெளிநாட்டு பேராளர் குழுவின் 2வது கூட்டம் கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து கூறியது:-

இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் பட்டியல் தொகுக்கப்பட்டது. முதல்வர் வழிகாட்டுதலுக்கு இணங்க அவர்களைத் தொடர்பு கொள்வோம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க உலகத் தமிழர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இப்போதே மலேசியாவில் இருந்து 86 தமிழ் ஆர்வலர்கள் கோவை மாநாட்டில் பங்கேற்க பயணச் சீட்டை முன்பதிவு செய்து அனுப்பியுள்ளனர். தங்களுக்கு தங்கும் வசதி வேண்டும் என்று கோரியுள்ளனர். பங்கேற்பாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் வகையில்
  • விருந்தோம்பல் குழு
  • தங்கும் வசதி குழு
  • போக்குவரத்துக் குழு
ஆகியவற்றுடன்
  • வெளிநாட்டுப் பேராளர் குழுவும்
இணைந்து நடத்தும் கூட்டம் அடுத்து நடைபெற உள்ளது.

இதுவரை பங்கேற்பாளர்கள் வழங்கியுள்ள 6 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகளை "நுண் ஆய்வு" செய்து வருவதாகவும் கூறினார் வைரமுத்து.

முதல்வர் தலைமையில் அனைத்துக் குழு கூட்டம்:-

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் அனைத்துக் குழுக்களும் பங்கேற்கும் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 21 குழுக்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒர் இணைப்பாக நடத்தப்படும் உலகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளிடையே கணினித் தமிழ் வரைகலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதுபோல் கல்லூரி மாணவர்களிடையே கட்டுரைப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் வைரமுத்து.

Kannan Natarajan

unread,
Feb 12, 2010, 11:13:33 PM2/12/10
to Min Thamizh
தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டை ஒட்டி, தமிழ் காப்பியப் பாடல்களை "அனிமேஷன்" முறை மூலம் பள்ளி மாணவர்கள் வடிவமைக்கும் மாநில அளவிலான போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, விடியோ கான்பரன்சிங் முறை மூலம் வெள்ளிக்கிழமை (12/02/10) தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி.

அப்போது, அவர் ஆற்றிய உரை:-

"தகவல் தொழில்நுட்ப தொழிற்கொள்கையை இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக உருவாக்கிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கல்லூரிகளில் மட்டுமல்லாது பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் நோக்கில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி மையங்கள் அமைக்கப்பட்டு கணினி அறிவியல் கல்வி கற்பிக்கப்பட்டது. தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகள் அனைத்தையும் கணினிமயமாக்கவும், பள்ளிக் கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைக்கவும், தமிழ் மென்பொருளை உருவாக்கி பரப்பவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


தகவல் தொழில்நுட்பப் பூங்கா...

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், சென்னை தரமணியில் "டைடல் மென்பொருள் பூங்கா" அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமல்லாது,
  • கோவை
  • மதுரை
  • திருச்சி
  • நெல்லை
  • சேலம்
  • ஓசூர்
போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில் நுட்பத் தொழில்கள் தொடங்கப்பட உள்ளன.

அதற்குத் தேவையான அதிநவீன வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்ற வகையில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றுள், கோவை தகவல் தொழில்நுட்பப் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக, தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மென்பொருள்களின் மதிப்பு கடந்த நிதியாண்டில் ரூ.36 ஆயிரத்து 680 கோடியே 40 லட்சம் அளவுக்கு உயர்ந்து மகத்தான வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக...

இந்தியாவிலேயே முதல் முறையாகப் பள்ளி மாணவ, மாணவியரின் வரைகலை ஆற்றலை வளர்ப்பதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையதளத்தின் வாயிலாகப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன, என்றார் முதல்வர் கருணாநிதி.

இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் டேவிதார், எல்காட் மேலாண் இயக்குநர் சந்தோஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

N. Ganesan

unread,
Feb 13, 2010, 2:02:02 PM2/13/10
to மின்தமிழ்

On Feb 12, 10:13 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது.
>

திரு. கண்ணன் நடராசன்,

பழ. நெடுமாறன் உலகத் தமிழ் மாநாடுகளை எல்லா தலைவர்களும்
கலந்துகொள்ளும் நிலையைப் புறக்கணிக்கும் செயலைத்
துவக்கிவைத்தவர் கலைஞர் என்று விளக்குகிறார்:
http://tamilthesiyam.blogspot.com/2010/02/blog-post_909.html

அன்புடன்,
நா. கணேசன்

தாரகை

unread,
Feb 13, 2010, 5:10:39 PM2/13/10
to மின்தமிழ்
> பழ. நெடுமாறன் உலகத் தமிழ் மாநாடுகளை எல்லா தலைவர்களும் கலந்துகொள்ளும் நிலையைப் புறக்கணிக்கும்
> செயலைத் துவக்கிவைத்தவர் கலைஞர் என்று விளக்குகிறார்.

உலகத் தமிழ் மாநாடுகள் அனைத்தும் தமிழறிஞர்கள், தமிழார்வாளர்கள் அனைவரும்
கலந்துகொண்டு தமிழ்மொழியின் சிறப்பை எவ்வாறு மேலும் மேம்படுத்தலாம்
என்பது தான் இம்மாநாடுகளை விரும்பியோரின் கனவு. காலவெள்ளத்தில் அரசியலின்
கோலம் மிகுதியினால் - தமிழை விட மாநாடுகளில் எவ்வாறு அரசியலை நுழைக்கலாம்
என்று சிலர் ஆராய்ந்தும், செய்தும் வருகின்றனர்!

பழ.நெடுமாறன் உலகத் தமிழ் மாநாடுகளை எல்லா தலைவர்களும் கலந்துகொள்ளும்


நிலையைப் புறக்கணிக்கும் செயலைத்

துவக்கிவைத்தவர் கலைஞர் என்று குற்றம் சாட்டினாலும், அவரவர் காலத்தில்
செய்கின்ற தவறையன்றோ இவரும் செய்கிறார்!

தமிழ் மொழி ஆர்வாளராக விளங்கும் பழ.நெடுமாறன் - தமிழ்மொழிக்கு நடைபெறும்
ஒரு விழாவிற்கு கட்சிவேறுபாடின்றி, கொள்கைவேறுபாடின்றி நான்
கலந்துகொள்வேன் என்று கூறியிருந்தால் - தமிழரனைவருக்கும் தமிழ்
மொழியின்பால் இருக்க வேண்டிய ஈர்ப்பிற்கு ஓர் நல்லுதாரணமாக
விளங்கியிருப்பார். முன்னவர்கள் செய்த பிழையை இவரும்
எழுத்திலும்,செய்கையிலும் நிலைநாட்டுவதால் தவறுக்கும் தவறான தவறை
புரியும் வாய்ப்பு தொடர்கிறது.......

“தவறுக்கும் தவறான தவறைப் புரிந்து விட்டு
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே"

என்ற "மக்கள் கவிஞர்" பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் தங்கவரிகள் தான்
"தமிழ்த்தாயி"டம் உள்ள தலைவர்களின் நிலையாமைக்கு விடை!

N. Ganesan

unread,
Feb 13, 2010, 6:13:52 PM2/13/10
to மின்தமிழ்

On Feb 13, 4:10 pm, தாரகை <thara...@gmail.com> wrote:
> > பழ. நெடுமாறன் உலகத் தமிழ் மாநாடுகளை எல்லா தலைவர்களும் கலந்துகொள்ளும் நிலையைப் புறக்கணிக்கும்
> > செயலைத் துவக்கிவைத்தவர் கலைஞர் என்று விளக்குகிறார்.
>
> உலகத் தமிழ் மாநாடுகள் அனைத்தும் தமிழறிஞர்கள், தமிழார்வாளர்கள் அனைவரும்
> கலந்துகொண்டு தமிழ்மொழியின் சிறப்பை எவ்வாறு மேலும் மேம்படுத்தலாம்
> என்பது தான் இம்மாநாடுகளை விரும்பியோரின் கனவு. காலவெள்ளத்தில் அரசியலின்
> கோலம் மிகுதியினால் - தமிழை விட மாநாடுகளில் எவ்வாறு அரசியலை நுழைக்கலாம்
> என்று சிலர் ஆராய்ந்தும், செய்தும் வருகின்றனர்!
>

உத்தமம் (http://infitt.org) குழுக்களில் கூடப் பார்த்தேன். அருமை
நண்பர்கள் பலர்
திரு. கருணாநிதி நடத்தும் விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என்றனர்.
சிலர் இலங்கைப் போர் இவ்வாறு ஆன நிலையில் செம்மொழி மாநாடு தேவையா?
என்ன அவசரம்? என்றும் வினாக்கள் பரவலாக உள்ளன.
ஆனால், முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் உத்தமத்தின் இணைய
மாநாடு அவர் போன்றோராலும், உத்தமம் செயற்குழுவாலும் திறம்பட நடத்த
ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

அரசு இவ்வளவு கோடிகள் செலவு செய்து கோவையில் நடத்தும் விழாவில்
தமிழ் மக்களுக்கு இணையத் தமிழை எடுத்துச் செல்ல ஒரு பெரிய வாய்ப்பாக
அமையும். அதனால் என் ஆதரவு உண்டு என்று அறிவித்தேன். அமெரிக்காவில்
இருந்து எவ்வளவு பேர் வருகின்றனர் என்று தெரியவில்லை. இண்பிட் செயலர்
கவிஅரசன், நான், வாசு ரெங்கநாதன் (பென்சில்வேலியா பல்கலை) - நிச்சயம்
இருப்போம்.
மற்ற நண்பர்களை கலந்துகொள்ளச் சொல்லி அழைக்கவும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 13, 2010, 6:16:03 PM2/13/10
to மின்தமிழ்

On Feb 12, 10:13 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:

> தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது.
>
> இந்த மாநாட்டை ஒட்டி, தமிழ் காப்பியப் பாடல்களை "அனிமேஷன்" முறை மூலம் பள்ளி
> மாணவர்கள் வடிவமைக்கும் மாநில அளவிலான போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
> இந்தப் போட்டியை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, விடியோ கான்பரன்சிங் முறை
> மூலம் வெள்ளிக்கிழமை (12/02/10) தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி.
>
> அப்போது, அவர் ஆற்றிய உரை:-
>
> "தகவல் தொழில்நுட்ப தொழிற்கொள்கையை இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு எல்லாம்
> முன்னோடியாக உருவாக்கிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கல்லூரிகளில்
> மட்டுமல்லாது பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை
> வழங்கும் நோக்கில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி மையங்கள்
> அமைக்கப்பட்டு கணினி அறிவியல் கல்வி கற்பிக்கப்பட்டது. தமிழக அரசின் கீழ்
> செயல்படும் துறைகள் அனைத்தையும் கணினிமயமாக்கவும், பள்ளிக் கல்வியில் தகவல்
> தொழில்நுட்பத்தை இணைக்கவும், தமிழ் மென்பொருளை உருவாக்கி பரப்பவும் பல்வேறு
> நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
>

இருந்தாலும், இன்னும் தமிழ்நாட்டு அரசாங்க வலைத்தளங்கள் ஒன்றும்
தமிழில் பெரிதாகக் காணோம். யூனிகோடில் இயங்கும் வகையில்
செய்தால் பலருக்கும் செய்திகள் கிட்டும்.

நா. கணேசன்


> *தகவல் தொழில்நுட்பப் பூங்கா...*


>
> இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், சென்னை தரமணியில் "டைடல்
> மென்பொருள் பூங்கா" அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமல்லாது,
>

>    - கோவை
>    - மதுரை
>    - திருச்சி
>    - நெல்லை
>    - சேலம்
>    - ஓசூர்


>
> போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில் நுட்பத் தொழில்கள் தொடங்கப்பட
> உள்ளன.
>
> அதற்குத் தேவையான அதிநவீன வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்ற வகையில் தகவல்
> தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றுள், கோவை தகவல்
> தொழில்நுட்பப் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது. அரசின் பல்வேறு
> நடவடிக்கைகளின் பயனாக, தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
> செய்யப்படும் மென்பொருள்களின் மதிப்பு கடந்த நிதியாண்டில் ரூ.36 ஆயிரத்து 680
> கோடியே 40 இலட்சம் அளவுக்கு உயர்ந்து மகத்தான வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
>

> *முதல் முறையாக...*

தாரகை

unread,
Feb 13, 2010, 6:23:52 PM2/13/10
to மின்தமிழ்
> இருந்தாலும், இன்னும் தமிழ்நாட்டு அரசாங்க வலைத்தளங்கள் ஒன்றும்
> தமிழில் பெரிதாகக் காணோம். யூனிகோடில் இயங்கும் வகையில்
> செய்தால் பலருக்கும் செய்திகள் கிட்டும்.

மாநாட்டின் போதும், மாநாட்டிற்கு பிறகும் சில தமிழ் வளர்ச்சிகள்
இருக்கவேண்டுவல்லவா - ஒருவேளை, நீங்கள் கூறுவதெல்லாம் படிப்படியாகத்
தோன்ற - திட்டயளவில் உள்ளதோ, என்னவோ!

தமிழின் ஒருங்குறியை ஒருங்கிசைவாக எதிர்ப்பார்போம்!

Kannan Natarajan

unread,
Feb 13, 2010, 6:35:58 PM2/13/10
to Min Thamizh
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள
  • பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்புப் பணிகள் குழு
பாதுகாப்பு தொடர்பாக பல கட்ட கூட்டங்களை நடத்தி வருகிறது.

இக்குழு மாநாட்டு ஊர்வலம், முக்கியத் தலைவர்கள் தங்கும் இடம் ஆகிய இடங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் 1,000 தீயணைப்பு வீரர்களையும், சிறப்பு பயிற்சி பெற்ற 150 கமாண்டோ படையினரையும் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.

இதற்கென ஒரு தனி துணைக் குழுவையும் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறது.
 
கோவையில் ஜூன் 23ம் தேதி தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள், அதிபர்கள், அரசு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.
 
மாநாட்டில் எவ்வித அசாம்பாவிதமும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்புப் பணிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பல கட்டங்களாக கூடி ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.
 
இதுபற்றி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் கூறியது:-
 
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி ஊர்வலம் நடைபெறும் பகுதிகள், மாநாட்டு அரங்குகள், தலைவர்கள் தங்கும் இடம் என முக்கிய இடங்களில் சுமார் ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 
அதுமட்டுமல்லாமல் முக்கியத் தலைவர்கள் தங்கும் இடம், மாநாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் 150 கமாண்டோ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 
தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரின் பாதுகாப்பு தணிக்கையும் நடைபெறும். அதிக மக்கள் கூடும் இடங்களில் நெரிசல் ஏற்படும் சமயங்களில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் அவர்களை வெளியேற்றுவது போன்ற பணிகள் குறித்து பாதுகாப்பு தணிக்கை செய்யப்படும். மாநாட்டு பாதுகாப்பிற்கென தனி துணைக் குழுவை ஏற்படுத்தி பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
 
குழுக்களின் பணி முன்னேற்றம் குறித்த சிறப்புக் கூட்டம்: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான சிறப்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 17) நடைபெறுகிறது.
 
செம்மொழி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுக்களின் செயல்பாடு தொடர்பாகவும், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்ய முதல்வர் கருணாநிதி இந்தச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
 
பல்வேறு குழுக்களின் தலைவர்களும், அலுவல் சார் ஒருங்கிணைப்பாளர்களும் இதில் பங்கேற்க வேண்டும். தங்களது குழுக்களின் சார்பில் மேற்கொண்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்து கூட்டத்தில் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

N. Ganesan

unread,
Feb 14, 2010, 1:17:48 PM2/14/10
to மின்தமிழ்

ஆட்சிமொழியாகத் தமிழ்! மு. கருணாநிதி
http://www.youtube.com/watch?v=9yBOZ2ZaMlU

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 14, 2010, 1:27:38 PM2/14/10
to மின்தமிழ்

Kannan Natarajan

unread,
Feb 15, 2010, 7:57:57 AM2/15/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு இன்னும் 129 நாள்கள்:- பிரமாண்ட அலங்கார ஊர்வலம்!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஊர்வலத்தை பிரமாண்டமாக நடத்த ஊர்வலக் குழு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் அலங்கார ஊர்திகளில் இடம்பெறும் ஓவியங்கள் குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (14/02/10) ஆலோசனை நடத்தப்பட்டது.

"அலங்கார ஊர்திகளில் இடம்பெறும் ஓவியங்களை முதல்வர் கருணாநிதி விரைவில் இறுதி செய்ய உள்ளார்.​ அதைத்தொடர்ந்து ஓவியங்கள்,​​ சிற்பங்களை வடிக்கும் பணி தொடங்கும்" என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஊர்வல அமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் உறுப்பினர்களுடன் ஊர்வலத்தில் செல்லும் அலங்கார ஊர்திகள்,​​ அதன் கருப்பொருள் குறித்தும்,​​ வரையப்படும் ஓவியங்கள் குறித்தும் கனிமொழி எம்.பி.​ சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (14/02/10) கேட்டறிந்தார்.

ஓவியர் மருது வரைந்த கருப்பொருள் மற்றும் ஓவியங்களையும் அவர் பார்வையிட்டார்.​ சங்க காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.​

60க்கும் மேற்பட்ட கருப்பொருள்கள் அடங்கிய ஓவியங்களை ஓவியர் மருது வரைந்திருந்தார்.

http://www.dinamani.com/Images/article/2010/2/14/15kanimozhi.jpg

இதுபற்றி ஓவியர் மருது கூறுகையில்,​​ "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை முன்னிறுத்தி சங்க காலத்தில் இருந்து தற்காலம் வரையிலான தமிழர் வாழ்க்கை குறித்த சுமார் 60 ஓவியங்களை கருப்பொருளாக வரைந்து கொடுத்துள்ளேன் என்றார்.

ஓவியங்கள் விரைவில் தேர்வு:​-

ஊர்வலத்தில் அலங்கரிக்கும் வகையில் செல்லும் அலங்கார ஊர்திகளில் இடம்பெறும் ஓவியங்கள்,​​ சிற்பங்களை முதல்வர் கருணாநிதி விரைவில் இறுதி செய்ய உள்ளார் என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

60 அலங்கார ஊர்திகள்:​ மாநாட்டு ஊர்வலம் கோவை வ.உ.சி.​ பூங்காவில் இருந்து கொடீசியா அரங்கம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெறுகிறது.​ ஊர்வலத்தில் சுமார் 60 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன.​ ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து ஒரு அலங்கார ஊர்தி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விஜயராகவன்

unread,
Feb 15, 2010, 9:35:41 AM2/15/10
to மின்தமிழ்
The whole government machinery is involved in this Tamil conference as
if it is Olympic Games. A country's international stature is
recognised only when it can host and successfully organize Olympic
Games.

Vijayaraghavan

On 15 Feb, 12:57, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> *செம்மொழி மாநாடு இன்னும் 129 நாள்கள்:- பிரமாண்ட அலங்கார ஊர்வலம்!*


>
> உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஊர்வலத்தை பிரமாண்டமாக நடத்த ஊர்வலக் குழு
> திட்டமிட்டுள்ளது.
>
> அந்த வகையில் அலங்கார ஊர்திகளில் இடம்பெறும் ஓவியங்கள் குறித்து சென்னையில்
> ஞாயிற்றுக்கிழமை (14/02/10) ஆலோசனை நடத்தப்பட்டது.
>
> "அலங்கார ஊர்திகளில் இடம்பெறும் ஓவியங்களை முதல்வர் கருணாநிதி விரைவில் இறுதி
> செய்ய உள்ளார்.​ அதைத்தொடர்ந்து ஓவியங்கள்,​​ சிற்பங்களை வடிக்கும் பணி
> தொடங்கும்" என எதிர்பார்க்கப்படுகிறது.
>
> உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு
> தலைமையில் ஊர்வல அமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
>
> இக்குழுவின் உறுப்பினர்களுடன் ஊர்வலத்தில் செல்லும் அலங்கார ஊர்திகள்,​​ அதன்
> கருப்பொருள் குறித்தும்,​​ வரையப்படும் ஓவியங்கள் குறித்தும் கனிமொழி எம்.பி.
> சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (14/02/10) கேட்டறிந்தார்.
>
> ஓவியர் மருது வரைந்த கருப்பொருள் மற்றும் ஓவியங்களையும் அவர் பார்வையிட்டார்.
> சங்க காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.
>
> 60க்கும் மேற்பட்ட கருப்பொருள்கள் அடங்கிய ஓவியங்களை ஓவியர் மருது
> வரைந்திருந்தார்.
>
> [image:http://www.dinamani.com/Images/article/2010/2/14/15kanimozhi.jpg]
>
> இதுபற்றி ஓவியர் மருது கூறுகையில்,​​ "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை
> முன்னிறுத்தி சங்க காலத்தில் இருந்து தற்காலம் வரையிலான தமிழர் வாழ்க்கை
> குறித்த சுமார் 60 ஓவியங்களை கருப்பொருளாக வரைந்து கொடுத்துள்ளேன் என்றார்.
>

> *ஓவியங்கள் விரைவில் தேர்வு:​- *

Kannan Natarajan

unread,
Feb 16, 2010, 8:06:53 AM2/16/10
to Min Thamizh
உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் அதிகளவில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
உலகத் தமிழ் இணைய மாநாட்டின் 8வது கூட்டம் அதன் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் பிப்ரவரி 18ம் தேதி நடைபெறுகிறது.
 
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒர் அங்கமாக உலகத் தமிழ் இணைய மாநாடு ஜூன் 23 முதல் 27 வரை நடைபெறுகிறது.

இம்மாநாட்டில்,
  • இணையத்தில் தமிழ் முன்னேற்றம்
  • இணையத் தமிழ்
  • மின்சாதனங்களில் தமிழ் மொழி (செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள்)
உள்பட 9 தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

இதற்கான ஆய்வுச் சுருக்கங்களை மார்ச் 15ம் தேதி வரை அனுப்பி வைக்கலாம்.

ஆய்வு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு:-

"பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி ஆய்வு மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். தமிழகத்தில் இருந்து அதிகளவில் மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆய்வுக் கட்டுரை ஏற்கப்பட்டால் தங்கும் வசதி, பயண வசதி இலவசமாக செய்து தரப்படும்" என்றார் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் தலைவரும், ஐ.ஐ.டி. கான்பூர் தலைவருமான மு.ஆனந்தகிருஷ்ணன்.
 
ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்புக் கருத்தரங்கம்...:-

செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்தைத் தவிர, உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கும் தனி ஆய்வரங்கம் நடைபெறுகிறது. இதற்காகத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டின்போது ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறும். இதில் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பன்னாட்டு கணினி நிறுவனங்களின் தமிழ் பணிகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் பேசுகின்றனர்.


300 பேர் வரை...:-

இம்மாநாட்டில் சுமார் 300 பேர் வரை பங்கேற்க உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து ஆகிய வெளிநாடுகளில் இருந்து சுமார் 60 பேர் வரை கலந்து கொள்கின்றனர்.


2 ஏக்கரில் கண்காட்சி...:-

இணைய மாநாட்டு கண்காட்சி நடத்த 2 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 128 அரங்குகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு அரங்கிலும் இணையதள வசதியுடன் கூடிய ஒரு கம்ப்யூட்டர் வைக்கப்பட்டிருக்கும்.


நாளிதழ், வார இதழ்கள்...:-

நாளிதழ்கள், வார இதழ்களுக்கு தனியாக அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தமிழில் வலைப்பூக்கள் பயன்பாடு குறித்த அரங்கமும் இடம்பெறுகிறது.

N. Kannan

unread,
Feb 16, 2010, 8:47:06 AM2/16/10
to mint...@googlegroups.com
2010/2/16 Kannan Natarajan <thar...@gmail.com>:

>
> 2 ஏக்கரில் கண்காட்சி...:-
>
> இணைய மாநாட்டு கண்காட்சி நடத்த 2 ஏக்கர் நிலப்பரப்பில் இடம்
> ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 128 அரங்குகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு அரங்கிலும்
> இணையதள வசதியுடன் கூடிய ஒரு கம்ப்யூட்டர் வைக்கப்பட்டிருக்கும்.
>

தமிழ் மரபு அறக்கட்டளையின் காட்சியகம் (பூத்) ஒன்று அங்கிருக்க
ஏற்பாடுகள் நடந்துவருகின்றன!!

தமிழ் இணைய மாநாட்டு கட்டுரை தேர்வுக் குழு (வல்லுநர்)வில் நம் சுபா
இருக்கிறார். தேர்வுகள் நடந்துவருகின்றன.

முதுசொம் இருப்பு செம்மொழி மாநாட்டில் இருக்கும்!

க.>

Tthamizth Tthenee

unread,
Feb 16, 2010, 12:35:23 PM2/16/10
to mint...@googlegroups.com
தமிழ் மரபு அறக்கட்டளையின் காட்சியகம் (பூத்) ஒன்று அங்கிருக்க
ஏற்பாடுகள் நடந்துவருகின்றன!!

மிக்க மகிழ்ச்சி

தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்த விளக்கப் படங்கள்
வைக்கலாமே,

 அன்புடன்
தமிழ்த்தேனீ

16-2-10 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Kannan Natarajan

unread,
Feb 17, 2010, 2:58:17 AM2/17/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு இன்னும் 127 நாள்கள்:- முதல்வர் தலைமையில் இன்று (17/02/10) அனைத்துக் குழுக்களின் சிறப்புக் கூட்டம்

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான சிறப்புக் கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் புதன்கிழமை (17/02/10) நடைபெறுகிறது.

செம்மொழி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுக்களின் செயல்பாடு தொடர்பாகவும், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இந்தச் சிறப்புக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்.

இதில் அனைத்துக் குழுக்களின் தலைவர்கள், அலுவல்சார் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று, தங்களது குழுக்களின் பணி முன்னேற்றம் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட பணிகளுக்கான உத்தரவுகளையும் முதல்வர் பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டின் முக்கிய நிகழ்வான ஆய்வரங்கத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான, ஆய்வுச் சுருக்கங்களை நுண்ணாய்வு செய்யும் பணி முடிந்துவிட்டது. எவ்வளவு ஆய்வுச் சுருக்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது பற்றி முதல்வர் தகவல் தெரிவிப்பார் என தெரிகிறது.

இணையதளத்தில் உடனுக்குடன் தகவல் அளிக்கப்படுமா?

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கென www.ulakathamizhchemmozhi.org என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.

ஆனால், அதில் குழுக்களின் அன்றாட கலந்தாய்வுக் கூட்டங்கள் போன்ற விவரங்கள் இடம்பெறவில்லை.

"செம்மொழி மாநாட்டுக்கான இணையதளத்தில் அன்றாட நிகழ்வுகள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்" என்று தமிழ் அறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் போட்டி
:-

உலகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி பள்ளி மாணவர்களுக்கு "கணினித் தமிழ் வரைகலைப் போட்டிகள்" நடத்தப்பட்டன.

இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதுபோல கல்லூரி மாணவர்களுக்கும் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் இணைய மாநாடு தொடர்பான கூட்டம், அதன் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் பிப்ரவரி 18ம் தேதி நடைபெறுகிறது.

இதில் கலை, அறிவியல், பொறியியல், வேளாண், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் கணினித் தமிழ் வரைகலைப் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் போட்டி நடைபெறும் தேதி, அதுபற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார் அக்குழுவின் உறுப்பினரும், கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான ஆன்டோ பீட்டர்.

கா. சேது | K. Sethu

unread,
Feb 17, 2010, 1:42:37 AM2/17/10
to மின்தமிழ்
On Feb 14, 4:16 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Feb 12, 10:13 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
[..]

>
> இருந்தாலும், இன்னும் தமிழ்நாட்டு அரசாங்க வலைத்தளங்கள் ஒன்றும்
> தமிழில் பெரிதாகக் காணோம். யூனிகோடில் இயங்கும் வகையில்
> செய்தால் பலருக்கும் செய்திகள் கிட்டும்.
>
> நா. கணேசன்

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் http://www.tamilvu.org/ தளத்தை நீண்ட
காலத்திற்குப்பின் இன்று பார்த்தேன். அதில் பின்வரும் குறிப்பு கீழே
இட்டுள்ளனர்.

//TAB to Unicode Conversion is undergoing, core content and part of
the lessons are available in Unicode. If you have any problem in
unicode,
click here to view in TAB encoding.//

ஆம், உள்ளே பல பக்கங்கள் ஒருங்குறிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளன.

அவ்வாறு அவர்கள் மாறுவதற்கு எனது வரவேற்பும் பாராட்டுகளும்.

Tamilnet99 வலைப்பக்கம் தமிழ்99 நியமங்களைத் தொடுக்கும் GOM-17 மற்றும்
தமிழ்99 விசைத்தொடர்கள் விவரிக்கும் Annexure -2 போன்ற பக்கங்களையும்
அவர்கள் விரைவில் ஒருங்குறிக்கு மேலும் மகிழ்ச்சியுருவேன்.

மேலும் நுழைவதற்கு முன் முதற் பக்கத்தில் புதிய தகவல்கள் பற்றிய
தலைப்புகளைக் காட்டும் ஓடையில் "Report on TACE16 and Mobile Phones" என்
கண்ணில் பட்டது.

அழுத்திப் பார்க்கையில் வரும் http://www.tamilvu.org/coresite/html/cwwhatnw.htm
பக்கத்தில் உள்ள பட்டியல்களில் TACE16 க்கான அறிக்கையும் Mobile Phones
அறிக்கையும் ஒவ்வொன்றுக்கும் ஆங்கில மற்றும் தமிழ் அறிக்கைகள் என
மொத்தும் 4 pdf உள்ளன.

TACE க்கான ஆங்கில அறிக்கை பதிவிறக்கி மேலோட்டமாக வாசித்தேன்.

அந்த அறிக்கை எப்போது வெளி வந்தது என யாராவது அறிந்தால் தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்.

தமிழக அரசு நினைத்தைச் சாதித்து ஒரு 16 bit குறியேற்ற முறையை எல்லாராலும்
ஏற்றுக்கொள்ள வைத்தது எனவோ அல்லது ஆம் முயற்சி ஒரு துன்பியல்
முடிவைத்தான் கண்டது எனவோ வருங்காலத்தில் வரலாற்றுக் குறிப்புகள்
கூறுமா?. நண்பர்களே, கருத்துக்கள் வாசிக்க விரும்புகிறேன்.

~சேது


Kannan Natarajan

unread,
Feb 18, 2010, 4:08:25 AM2/18/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு இன்னும் 126 நாள்கள்:- ஆய்வரங்கத்தில் பங்கேற்க 7,356 பேர் பதிவு

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்தில் பங்கேற்க வெளிநாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் உள்பட 7,356 பேர் இதுவரை தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகரில் ஜூன் 23 முதல் 27 வரை செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது.

http://www.dinamani.com/Images/article/2010/2/18/tamilconference.jpg

மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்காக 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (17/02/10) நடைபெற்றது.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குழுக்களின் தலைவர்கள், குழுவில் இடம்பெற்றுள்ள அலுவல்சார் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த முதல்வர் கருணாநிதி,

மாதக் கணக்கு என்பது போய், இப்போது மாநாட்டை நடத்துவதற்கான நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

எனவே, இன்னும் வேகமாகப் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது:-

"செம்மொழி மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயல்பாடுகள், மேலும் தொடர்ந்து நடைபெற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தச் சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஆய்வரங்கத்தில் பங்கேற்க வலைதளம், மின்னஞ்சல், அஞ்சல், நேரில் என்று 49 நாடுகளைச் சேர்ந்த 7,356 பேர் பதிவு செய்துள்ளனர்.

ஆய்வரங்கத்தில் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க, அறிஞர்கள், பேராசிரியர்களிடம் இருந்து ஆய்வுச் சுருக்கங்கள் வரப்பெற்றன.

6,086 ஆய்வுச் சுருக்கங்கள் 55 பெருண்மைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பெருண்மைக்கும் பேராசிரியர்கள், அறிஞர் பெருமக்கள் கொண்ட மூவர் குழு என்ற வகையில் அவை ஆய்வு செய்யப்பட்டன.

குழுவினர் அளித்த மதிப்பீடுகள் அடிப்படையில் ஆய்வுச் சுருக்கங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுரைகள் எழுதுமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

ஆய்வுக் கட்டுரைகள் படித்திட 1,500 பேர் அனுமதிக்கப்படுவர்.

தமிழ் இணைய மாநாடு:-

செம்மொழி மாநாட்டுடன், தமிழ் இணைய மாநாடும் நடைபெறுகிறது.

25 தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

கட்டுரைச் சுருக்கங்களை அளிக்க மார்ச் 15 கடைசி நாளாகும்.

இதில், 350 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணைய மாநாட்டையொட்டி, பள்ளி மாணவர்களுக்கான வரைகலைப் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

கல்லூரி அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் நடத்தப்படுகிறது என்றார் முதல்வர்.

Kannan Natarajan

unread,
Feb 19, 2010, 3:00:06 AM2/19/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு இன்னும் 125 நாள்கள்:- தமிழர் வரலாற்றை விவரிக்கும் பிரமாண்ட கண்காட்சி

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழர் வரலாறு, தமிழர் நாகரிகம் குறித்த பிரமாண்ட கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் கண்காட்சி அமைப்புக் குழு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் பணி முன்னேற்றம் குறித்து தங்கம் தென்னரசு கூறியது:-

மாநாட்டில் கண்காட்சி நடத்த 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • தமிழர் வரலாறு
  • தமிழர் நாகரிகம்
  • தொல்லியல் சிற்பங்கள், ஓவியங்கள்
  • தமிழர் தொன்மை
  • சிலைகள்
  • இலக்கிய வரலாறு
என பல்வேறு தலைப்புகளில் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.

சிந்து சமவெளி நாகரிகம் - ஆதிச்சநல்லூர் நாகரிகம் தொடர்பு குறித்து விளக்கக்கூடிய ஓவியங்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

கண்காட்சியில் 1,100க்கும் மேற்பட்ட
  • சிலைகள்
  • ஓவியங்கள்
  • பழங்கால போர்க்கருவிகள்
  • செப்பேடுகள்
  • பாறை ஓவியங்கள்
  • சோழர் கால சிற்பங்கள்
வைக்கப்பட உள்ளன.

இத்துடன் புத்தகக் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் ஒலி - ஒளி கண்காட்சியும் இடம்பெறுகிறது.

கலை வடிவமைப்பாளர் தோட்டா தரணி பல்வேறு தலைப்புகளில் ஓவியங்களை வரைந்து கொடுத்துள்ளார்.

கண்காட்சி நடத்துவதற்குத் தேவையான மதிப்பீடுகள் இம்மாத இறுதியில் இறுதி செய்யப்படும்.

அதைத்தொடர்ந்து கண்காட்சி அமைப்பது தொடர்பான பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என்றார்.

இணைய மாநாடு:-  

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒர் அங்கமாக நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டு ஆயத்தப் பணிகள் தொடர்பான கூட்டம், அதன் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை (18/02/10) நடைபெற்றது.

Kannan Natarajan

unread,
Feb 19, 2010, 3:52:11 PM2/19/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு இன்னும் 124 நாள்கள்:-  செம்மொழி மாநாட்டுக்கு புதிய இணையதளம்

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான விவரங்கள், குழுக்களின் செயல்பாடுகள் என அனைத்தையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்பட உள்ளது.

அழியும் நிலையில் உள்ள கலைகளை வெளிக் கொணர யோசனை:-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாக் குழு அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் பணிகள் குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சல்மா கூறுகையில், கடந்த ஜனவரி 5ம் தேதி குழு கூடி ஆலோசனை மேற்கொண்டது.

இக்குழுவில் உள்ள துணைத் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் என ஒவ்வொரிடமும் குழு எப்படி கலைநிகழ்ச்சிகளை நடத்துவது என்ற கருத்துக்கள் கேட்கப்பட்டன.

அழியும் நிலையில் உள்ள கலைகள் பற்றிய நிகழ்ச்சிகளை  நடத்துவதன் மூலம் அதுபற்றிய
  • விழிப்புணர்வும்
  • ஆய்வு நடத்தும் ஆர்வமும்
வரும் என கருத்து தெரிவித்திருந்தேன்.

சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலங்களின் ஓவியங்களையும் வைக்கலாம் என்பது உள்பட பல யோசனைகளையும் தெரிவித்திருந்தேன்.

இப்படி குழுவில் உள்ள பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.

கடிதங்கள் அனுப்பும் பணி மும்முரம்:-

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்தில் பங்கேற்க வெளிநாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் உள்பட 7,356 பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட 6,086 ஆய்வுச் சுருக்கங்கள் 55 பெருண்மைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குழுவினர் அளித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆய்வுச்  சுருக்கங்கள், நுண்ணாய்வு செய்து முடிக்கப்பட்டன.

அதன்பேரில் தகுதியான ஆய்வுச் சுருக்கங்கள் தேர்வு செய்யப்பட்டு, உரிய நபர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

கடிதங்கள் பெறப்பட்டவர்கள் தங்களது முழுக்கட்டுரைகளை மார்ச் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், ஆய்வரங்க ஏற்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ம.
ராஜேந்திரன்.

புதிய இணையதளம்:- 

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தொடர்பான விவரங்கள், குழுக்களின் செயல்பாடுகள், கூட்டங்கள் பற்றிய முழுவிவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் வழங்குவதற்காகப் புதிய இணையதளம் உருவாக்கப்பட உள்ளது என அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kannan Natarajan

unread,
Feb 20, 2010, 5:17:53 PM2/20/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு இன்னும் 123 நாள்கள்:- அடுத்த கட்டப் பணிகளில் குழுக்கள் தீவிரம்

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள 21 குழுக்களும், அடுத்தக் கட்டப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குழுவும், தங்களது பணிகளை இறுதி மதிப்பீடு செய்து வருகின்றன.

இம்மாத இறுதிக்குள் இறுதி மதிப்பீடு செய்த பிறகு, பணிகள் தொடங்கும் என தெரிகிறது.

மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்புக் குழுவில் உள்ளவர்களுக்குப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் உறுப்பினரும், சட்டப் பேரவை துணைத் தலைவருமான வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக...:-


"முதல்முதலாக செம்மொழி மாநாட்டுடன், தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படுகிறது. ஆங்கில மொழிக்கு அடுத்து தமிழில் தான் ஏராளமான இணையதளங்கள், வலைப்பூக்கள் உள்ளன. அடுத்தக் கட்டமாக இணையவழி மூலமாகத்தான் தமிழ் மொழியைப் பரப்ப முடியும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களை மையப்படுத்தி இணைய மாநாடு நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கும் கணினித் தமிழ்ப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன" என்றார் தமிழ் இணைய மாநாடு குழு உறுப்பினரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கனிமொழி.

Kannan Natarajan

unread,
Feb 22, 2010, 12:19:12 PM2/22/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு இன்னும் 122 நாள்கள்:- இன்னும் ஒரு வாரத்தில் இரு புதிய இணையதளங்கள்

  • உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கென ஒரு புதிய இணையதளமும்
  • தமிழ் இணைய மாநாட்டுக்கென ஒரு புதிய இணையதளமும்
உருவாக்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஈடுபட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் இந்த இரு இணையதளங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றிய அறிவிப்புக்குப் பிறகு www.ul​ak​ath​amizh​chemmozhi.org ​ என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டது.

இதில், கோவை மாநகரில் செம்மொழி மாநாடு நடத்துவதன் முக்கியத்துவம் மற்றும் 21 குழுக்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியான தேதி விவரம், குழுக்களில் இடம்பெற்றுள்ள தலைவர்கள், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இது தவிர, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றிய முழு விவரங்களை அறிய ஒரு இணையதளமும், மாநாட்டின் ஒரு அங்கமாக நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டு தகவல்களை அறிய புதிய இணையதளமும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்த இரு இணையதளங்களை உருவாக்கும் முயற்சியில் தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் இணைய மாநாட்டு குழு ஒருங்கிணைப்பாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருமான டேவிதார் மேற்பார்வையில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

"இணையதளங்களின் வடிவமைப்பு, பக்கங்கள் ஆகியவை முதல்வர் கருணாநிதி பார்வைக்கு கொண்டு செல்லப்படும். அதன் பிறகு ஒரு வாரத்தில் புதிய இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்படும்",

என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவையில் விருந்தோம்பல் குழு கூட்டம்:-

தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான விருந்தோம்பல் குழுவின் கலந்தாய்வு கூட்டம் பிப்ரவரி 24ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

Kannan Natarajan

unread,
Feb 22, 2010, 1:53:11 PM2/22/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு இன்னும் 121 நாள்கள்:- இன்று (23/02/10) பொது அரங்க நிகழ்ச்சி அமைப்புக் குழு கூட்டம்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆயத்தப் பணிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள பொது அரங்க நிகழ்ச்சி அமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்,​​ சென்னையில் செவ்வாய்க்கிழமை
(23/02/10) நடைபெறுகிறது.

குழுவின் தலைவரும்,​​ உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

குழுவின் பணிகள் குறித்து அதன் ஒருங்கிணைப்பாளரும்,​​ உயர்கல்வித் துறைச்
செயலாளருமான க.கணேசன் கூறியது:-

பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழுவில் கவியரங்கம்,​​ கருத்தரங்கம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.​

இதில் 12 நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.​

இதற்கான தலைப்புகளை முடிவு செய்தல்,​​ பங்கேற்பாளர்கள் யார் என்பது பற்றி முடிவு செய்தல் குறித்து,​​ இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றார்.

இத்துடன் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கல்லூரி மாணவர்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு,​​ மாணவர்களுக்காகப் பல்கலைக்கழக அளவில் கவிதை,​​ கட்டுரை,​​ பேச்சுப் போட்டிகள் நடந்து வருகின்றன.​

ஒவ்வொரு தலைப்பிற்கும் 3 மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.​

அதைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகள் மார்ச் 2வது வாரத்தில் சென்னையில் நடத்தப்பட உள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழு ஆலோசனைக் கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.

இக்குழுவில் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன்,​​ குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,​​ குமரி அனந்தன்,​​ கவிஞர்கள் வாலி,​​ வைரமுத்து உள்ளிட்டவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

Kannan Natarajan

unread,
Feb 23, 2010, 1:50:31 PM2/23/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு இன்னும் 120 நாள்கள்:- உலக அளவிலான கவிதைப்போட்டி: முதல் பரிசு ரூ.​ 1 லட்சம்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி,​​ உலக அளவிலான கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது.​

முதல் பரிசாக ரூ.1
லட்சம் வழங்கப்பட உள்ளது.​

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான,​​ பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழுவின் 2வது ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவரும்,​​ உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (23/02/10) நடைபெற்றது.​

இதில் கவியரங்கம்,​​ கருத்தரங்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.​

இக்குழுவின் சார்பில் நடத்தப்படும் 12 நிகழ்ச்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியது:​-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி,​​ உலக அளவிலான கவிதைப் போட்டி நடத்தப்பட உள்ளது.​ இதற்காக உலக அளவில் விளம்பரம் செய்யப்படும்.​ போட்டி தலைப்பு குறித்த அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படும்.​

இதில் முதல் பரிசாக ரூ.1
லட்சம் வழங்கப்படும்.​ 2வது பரிசாக ரூ.75 ஆயிரமும்,​​ மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும்,​​ ஆறுதல் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.​

கல்லூரி மாணவர்களுக்குப் போட்
டி:-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவிதை,​​ கட்டுரை,​​ பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.​

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படுகிறது.

தற்போது பல்கலைக்கழக அளவில் இப்போட்டிகள் நடந்து வருகின்றன.​

மாநில அளவிலான போட்டியை மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார்.​

இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும்,​​ 2வது பரிசாக ரூ.10 ஆயிரமும்,​​ 3வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என்றார் பொன்முடி.

''கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகள் பற்றி அந்தந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்,​​ பதிவாளர்களுக்கு ஏற்கெனவே கடிதம் மூலம் தகவல் அனுப்பியுள்ளோம்.​ போட்டி பற்றி தகவல் அறிய விரும்பும் மாணவர்கள்,​​ பல்கலைக்கழகப் பதிவாளர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்" என்றார் உயர்கல்வித்துறைச் செயலாளர் கணேசன்.

இன்று (24/02/10) விருந்தோம்பல் குழு கூட்டம்:​​-

விருந்தோம்பல் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவரும்,​​ உணவுத்துறை அமைச்சருமான எ.வ.வேலு தலைமையில் கோவையில் புதன்கிழமை (24/02/10) நடைபெறுகிறது.

Kannan Natarajan

unread,
Feb 24, 2010, 7:04:51 AM2/24/10
to Min Thamizh
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி,​​ சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்,​​ வரும் 26ம் தேதி கல்லூரி மாணவ மாணவியருக்கான போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக,​​ பதிவாளர் சேது.குணசேகரன் தெரிவித்துள்ளார்.​

அவர் வெளியிட்ட அறிக்கை:-

தமிழக உயர்கல்வித் துறை செயலரின் உத்தரவுப்படி,உலகத் தமிழ்
ச் செம்மொழி மாநாட்டின் பொது அரங்க நிகழ்வின் ஒரு பகுதியாக பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவ மாணவியருக்கான போட்டிகள் நடக்க உள்ளது.​

வரும் 26ம் தேதி "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற பொதுத்தலைப்பில்
  • காலை 11.30 மணி முதல் 12 மணி வரை கட்டுரைப் போட்டி
  • மதியம் 12 முதல் ​ 12.30 மணி வரை கவிதைப் போட்டி
ஆகியவை தமிழ்த்துறை வளாகத்தில் நடக்க உள்ளன.

இதே போல் காலை 11.30 மணி முதல் பேச்சுப் போட்டி,​​ ஆட்சிப்பேரவைக் கூடத்தில் நடைபெற உள்ளது.​

போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் அன்றைய தினம் காலை 10 மணியளவில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

Kannan Natarajan

unread,
Feb 25, 2010, 4:56:06 AM2/25/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு இன்னும் 119 நாள்கள்:- 6 ஏக்கரில் உணவுக் கூடம்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 6 ஏக்கரில் உணவுக் கூடம் அமைக்கப்படுகிறது.

தமிழறிஞர்கள், முக்கிய விருந்தினர்கள், அலுவலர்கள், பொதுமக்களுக்கு என தனித்தனியே உணவுக் கூடங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு வரும் தமிழறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள், ஊர்வலத்தில் பங்கேற்போர், கலை நிகழ்ச்சிகள் நடத்துவோருக்கு உணவு வழங்கும் பணிகளை மேற்கொள்ள உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் விருந்தோம்பல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (24/02/10) நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அமைச்சர் வேலு தலைமை வகித்தார்.

செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கம், பொது அரங்கம், துவக்க விழா, நிறைவு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு உணவு வழங்குவதற்காக தேவைக்கேற்ப உணவுக் கூடங்கள் அமைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஊர்வலம் செல்லும் பகுதியில் சாலையோரங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

உணவுக் கூடங்கள் அனைத்தும் ஒரே வடிவமைப்பில் அமைக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். தங்கும் இட ஏற்பாட்டுக் குழு, போக்குவரத்துக் குழுவுடன் கூட்டுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.

"விருந்தோம்பல் குழுவுக்கான துணைக் குழுக்களை அமைத்து ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். முக்கியப் பிரமுகர்கள் தங்கும் விடுதிகள், ஆய்வரங்கம், பொது அரங்க நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி உள்பட அனைத்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் உணவு வழங்குவதற்கான பட்டியல் தயாரித்து தேவைக்கு ஏற்ப உணவுக் கூடங்கள் அமைக்க வேண்டும்" என்று குழு உறுப்பினர்களை அமைச்சர் வேலு கேட்டுக் கொண்டார்.

ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, விருந்தோம்பல் குழு உறுப்பினர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், பேரூர் ஆதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகளார், உணவுத் துறை முதன்மைச் செயலர் க.சண்முகம், பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்களின் செயலர் நந்தினி
ரங்கசாமி, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் க.ராஜாராமன், சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், கோவை மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத், பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் சி.ஆர்.சுவாமிநாதன், தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க மாநிலப் பொருளாளர் டி.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Kannan Natarajan

unread,
Feb 26, 2010, 3:23:08 PM2/26/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு:- இணைய மாநாட்டுக்கு இதுவரை 140 ஆய்வுச் சுருக்கங்கள்!

தமிழ் இணைய மாநாட்டு ஆய்வரங்கத்தில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைக்காக இதுவரை சுமார் 140 ஆய்வுச் சுருக்கங்கள் பெறப்பட்டுள்ளன.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி பெரிய அளவில் ஆய்வரங்கம் நடத்தப்படுகிறது. அதேபோல மாநாட்டின் ஒரு அங்கமாக நடத்தப்படும்  தமிழ் இணைய மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்படுகின்றன.

http://www.infitt.org/ti2010/ti2010_hdtamil.jpg

இதற்கான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவோர் மார்ச் 15ம் தேதிக்குள் தங்களது கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இது தொடர்பாக இணைய மாநாட்டு குழுவின் தலைவரும், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவருமான மு.ஆனந்தகிருஷ்ணன் கூறியது:-

மாநாட்டு ஆய்வரங்கத்தில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைக்காகப் பெறப்படும் கட்டுரைச் சுருக்கங்கள் அமெரிக்காவில் உள்ள வாசு அரங்கநாதன் தலைமையிலான குழுவினரின் கருத்தைக் கேட்டு, தேர்வு செய்யப்படும்.

இது தொடர்பான விவரம், உரியவர்களுக்குத் மார்ச் 30ம் தேதி தெரிவிக்கப்படும்.

அதன் பின்னர் முழுக் கட்டுரைகளை ஏப்ரல் 15ம் தேதிக்குள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த முழுக்கட்டுரைகளும் உரிய குழுவால் ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கப்படும்.

முழுக்கட்டுரையை மாநாட்டில் வாசிப்பவர் தொடர்பான விவரம், ஏப்ரல் 30ம் தேதி தெரியப்படுத்தப்படும்.

ஆய்வுச் சுருக்கங்களை அனுப்ப மார்ச் 15ம் தேதி கடைசி நாள் என்பதால், மேலும் கூடுதலாக ஆய்வுச் சுருக்கங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார் மு.ஆனந்தகிருஷ்ணன்.

மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி:-  http://www.infitt.org/ti2010/register/ti2010_ti_signup.php

மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்க விரும்புவோர், இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

போக்குவரத்து ஏற்பாட்டுக் குழு:-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மற்றும் தமிழ் இணைய மாநாட்டில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் கோவை நகரில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.

குறிப்பாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை தகுந்த பாதுகாப்புடன் தங்கும் இடத்தில் இருந்து விடுதிகளுக்கு அழைத்துச் செல்லும் பணியைப் போக்குவரத்து ஏற்பாட்டுக் குழு செய்யும்.

இக்குழு தலைவராக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளார். போக்குவரத்து வசதிகளை சிறப்பாகச் செய்திடும் வகையில், ஒவ்வொரு குழுவில் இருந்து எவ்வளவு வெளிநாட்டினர் பங்கேற்கின்றனர் என்கிற தகவலை பெற்று வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kannan Natarajan

unread,
Feb 26, 2010, 5:06:12 PM2/26/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு:- மாநாட்டு சிறப்பு மலருக்கு மார்ச் 15, 2010 வரை கட்டுரை அனுப்பலாம்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கென மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடப்பட உள்ளது.

இதற்காக தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் மார்ச் 15ம் தேதி வரை கட்டுரை அனுப்பலாம்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, சிறப்பு மலர் வெளியிடப்பட உள்ளது.

இதற்காக நிதியமைச்சர் க.அன்பழகனை தலைவராகக் கொண்ட மாநாட்டு சிறப்பு மலர்க்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் தற்போது மாநாட்டு மலரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி மாநாட்டு மலருக்கு கட்டுரைகளை சமர்ப்பிக்க பல்வேறு தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கட்டுரைகளை மார்ச் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி மலர்க்குழு தலைவர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஆய்வரங்கம்...:-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்பதற்காக 7,356க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இப்போது, இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், இவர்களுக்கான தங்கும் இட வசதிகளை செய்து தருவது தொடர்பாக மாநாட்டு சிறப்பு தனி அலுவலர் அலாவுதீன், அவ்வப்போது அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாநாட்டுக்கு வருவோரை தங்க வைப்பதற்காக கோவை நகரில் உள்ள ஹோட்டல்கள், கல்லூரி விடுதிகள் என 4,800க்கும் அதிகமான அறைகள் ஏற்கெனவே முன்பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை அலாவுதீன் நேரில் வியாழக்கிழமை (25/02/10) ஆய்வு செய்தார்.

இத்துடன் மாநாட்டில் பங்கேற்க வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்பதால், நல்ல வசதியுடன் கூடிய விடுதிகளிலும் அறைகளைப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பணி ஆய்வு
...:-

அதேபோல, கோவை மாநகரின் உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ.300 கோடிக்கான திட்டப் பணிகளையும் தனி அலுவலர் அலாவுதீன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அடுத்தக் கட்ட பணிகளுக்கான திட்ட மதிப்பீடு குறித்தும்  கோவை மாநகர மேம்பாட்டுக் குழுவிடம் இருந்து கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Kannan Natarajan

unread,
Feb 27, 2010, 6:32:46 PM2/27/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு:-  இன்னும் 116 நாள்கள்: கண்காட்சியில் அரிய 1,000 பொருள்கள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் கண்காட்சியில் தமிழர் வரலாறு தொடர்பான ஓவியங்கள், கல்வெட்டுக்கள் என 1,000 அரிய பொருள்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், விருந்தினர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஒருங்கே குழும உள்ளனர்.

இவர்களை கவர்ந்திழுக்கும் வகையில்
  • தமிழ் மொழி
  • தமிழர் வரலாறு
  • தமிழர் பண்பாடு - நாகரிகம்
  • தமிழ் இலக்கியம்
  • தொல்லியல்
என 6 தலைப்புகளில் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதற்காக 30க்கும் மேற்பட்ட அரங்குகள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவுக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்கண்காட்சியில் தமிழர்கள் நாகரிகத்தின் ஆதாரமாக விளங்கும்
தொல்லியல் சான்றுகளான
  • கல்வெட்டுக்கள்
  • பாறை ஓவியங்கள்
  • சிற்பங்கள்
  • ஓலைச்சுவடிகள்
  • பழங்கால நாணயங்கள்
ஆகியவை பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

கற்காலம் முதல் அண்மைக்காலம் வரையிலானவை இதில் அடங்கும்.

சிந்து சமவெளி நாகரிகம்:-

மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தலைமைக் குழுவில் துணைத் தலைவராக உள்ள தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், சிந்து சமவெளி நாகரிகத்துடன் தமிழர் நாகரிகத்தின் தொடர்பு குறித்து தனி அரங்கு வைக்க உள்ளார்.

இதுபோல பல தலைப்புகளில் அரங்குகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழறிஞர்கள் படம்:-

கண்காட்சியில், தமிழுக்காக உழைத்த அறிஞர்கள்
  • பரிதிமாற்கலைஞர்
  • ரா.சேதுப்பிள்ளை
  • உடுமலை நாராயணகவி
  • மு.வரதராசன்
  • கி.ஆ.பெ.விசுவநாதம்
உள்ளிட்ட ஏராளமானவர்களின் அரிய புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன.

மேலும் தமிழ் மொழி குறித்த ஆதாரமாக விளங்கும் அரிய பல புத்தகங்களும் இடம்பெறுகின்றன.

இக்கண்காட்சி பற்றி தொல்லியல்துறை ஆணையரும், கண்காட்சி ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான டி.எஸ்.ஸ்ரீதர் கூறியது:-

தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் என 6 தலைப்புகளில் கண்காட்சி நடத்தப்படுகிறது.

அதுதொடர்பான ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் என 1,000 பொருள்கள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதில் உண்மையானவையும், மாதிரிகளும் அடங்கும்.

கண்காட்சியில் வைக்கப்படுவதற்கான பொருள் சேகரிப்பு தற்போது நடந்து வருகிறது என்றார்.

விஜயராகவன்

unread,
Feb 27, 2010, 7:16:32 PM2/27/10
to மின்தமிழ்
செம்மொழி மாநாடு தமிழ்நாட்டு எதோ ஒலிம்பிக் போட்டிகள் அளவில் தயார்
செய்து, பணம், நேரம், ஆட்கள் , பிரச்சாரம் முதலியவற்றை செலுத்துகிறது.

இந்த அளவில் சுகாதாரம் பற்றி மக்களுக்கு விழிப்புனர்வு எழுத்தி,
எல்லோருக்கும் குடிக்கும் தண்ணீரும், சுகாதாரமுள்ள வீடுகளும், நகர
திட்டம் போடுவதல்லவா அரசின் தலையாய கடன். இந்த உத்வேகத்துடன் மக்கள்
வாழ்வு முன்னேற்ற செய்யத் தவறினால், செம்மொழி மாநாடு வீண்

விஜயராகவன்

On 27 Feb, 23:32, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> *செம்மொழி மாநாடு:-  இன்னும் 116 நாள்கள்: கண்காட்சியில் அரிய 1,000 பொருள்கள்
> *


> உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் கண்காட்சியில் தமிழர் வரலாறு
> தொடர்பான ஓவியங்கள், கல்வெட்டுக்கள் என 1,000 அரிய பொருள்கள் பார்வைக்கு
> வைக்கப்படுகின்றன.
>
> உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், விருந்தினர்கள்,
> தமிழ் ஆர்வலர்கள் ஒருங்கே குழும உள்ளனர்.
>
> இவர்களை கவர்ந்திழுக்கும் வகையில்
>

>    - தமிழ் மொழி

>    - தமிழர் வரலாறு
>    - தமிழர் பண்பாடு - நாகரிகம்
>    - தமிழ் இலக்கியம்
>    - தொல்லியல்


>
> என 6 தலைப்புகளில் கண்காட்சி நடத்தப்படுகிறது.
>
> இதற்காக 30க்கும் மேற்பட்ட அரங்குகள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
>
> இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவுக்கு, பள்ளிக்கல்வி
> அமைச்சர் தங்கம் தென்னரசு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
>
> இக்கண்காட்சியில் தமிழர்கள் நாகரிகத்தின் ஆதாரமாக விளங்கும் தொல்லியல்
> சான்றுகளான
>

>    - கல்வெட்டுக்கள்
>    - பாறை ஓவியங்கள்
>    - சிற்பங்கள்
>    - ஓலைச்சுவடிகள்
>    - பழங்கால நாணயங்கள்


>
> ஆகியவை பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
>
> கற்காலம் முதல் அண்மைக்காலம் வரையிலானவை இதில் அடங்கும்.
>

> *சிந்து சமவெளி நாகரிகம்*:-


>
> மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தலைமைக் குழுவில் துணைத் தலைவராக
> உள்ள தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், சிந்து சமவெளி நாகரிகத்துடன் தமிழர்
> நாகரிகத்தின் தொடர்பு குறித்து தனி அரங்கு வைக்க உள்ளார்.
>
> இதுபோல பல தலைப்புகளில் அரங்குகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
>

> *தமிழறிஞர்கள் படம்*:-


>
> கண்காட்சியில், தமிழுக்காக உழைத்த அறிஞர்கள்
>

>    - பரிதிமாற்கலைஞர்
>    - ரா.சேதுப்பிள்ளை
>    - உடுமலை நாராயணகவி
>    - மு.வரதராசன்
>    - கி.ஆ.பெ.விசுவநாதம்


>
> உள்ளிட்ட ஏராளமானவர்களின் அரிய புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன.
>
> மேலும் தமிழ் மொழி குறித்த ஆதாரமாக விளங்கும் அரிய பல புத்தகங்களும்
> இடம்பெறுகின்றன.
>

> இக்கண்காட்சி பற்றி *தொல்லியல்துறை ஆணையரும், கண்காட்சி ஏற்பாட்டுக் குழு
> ஒருங்கிணைப்பாளருமான டி.எஸ்.ஸ்ரீதர்* கூறியது:-

தாரகை

unread,
Feb 27, 2010, 7:29:28 PM2/27/10
to மின்தமிழ்
> இந்த உத்வேகத்துடன் மக்கள் வாழ்வு முன்னேற்ற செய்யத் தவறினால், செம்மொழி மாநாடு வீண்

எந்த ஒரு நாட்டிலும், உலகளாவிய மொழி,கலை,பண்பாடு,விளையாட்டு மற்றும்
சமயம் சார்ந்த கூடல் நடைபெறுவது இயல்பு. அக்கூடல் நடைபெறும் போது
எதிர்மறையாக ஏதாவது சொல்லிக்கொண்டிருப்போரும் புதிது அல்ல! ஆண்டுக்கு ஒரு
முறை, இவ்வாறு தமிழ் மொழி மாநாடுகள் நடந்திருக்குமானால், விஜயராகவன்
சொல்வதில் பொருள் உள்ளது. 16 ஆண்டுகள் கழித்து நடைபெறும் ஒரு
தமிழ்க்கூடலுக்கு வீண் என்றால், ஆண்டாண்டுக் காலமாக, 14 ஆண்டுகள்
இராமபிரான் காட்டில் வாழ்ந்ததை நாம் இன்றும் கொண்டாடி வருகிறோமே, அதுவும்
வீண் என்ற நிலைக்கு வந்துவிடும் போலுள்ளது!

Kannan Natarajan

unread,
Mar 1, 2010, 3:32:42 PM3/1/10
to Min Thamizh
செம்மொழி மாநாடு:- அலங்கார ஊர்தியில் இடம்பெறும் ஓவியங்கள் ஒப்பீடு

உலகச் செம்மொழி மாநாட்டின் தொடக்க நிகழ்வான ஊர்வலத்தில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளில் இடம்பெறும் ஓவியங்களை ஒப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, தமிழ் இணைய மாநாடு ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவையில் நடைபெறவுள்ளது.

போட்டிகள்...

பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழுவின் சார்பில் பல்கலைக்கழக அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

மாநில அளவிலான போட்டிகளை மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் 10,800 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டியில் சிறப்பிடம் பெறும் மாணவர்களை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர். இந்த பணி இன்னும் இரண்டு வாரத்தில் நிறைவடையும்.

2 இணையதளங்கள்...

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மற்றும் இணையதள மாநாட்டுக்கென தனித்தனியாக இரண்டு இணையதளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இணையதளங்களும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி வைக்கப்படும்.

ஊர்வலம்:-

ஊர்வலத்தில் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை உணர்த்தும் 60க்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் செல்லும்.

ஓவியங்கள்...

அலங்கார ஊர்தியில் இடம்பெறும் ஓவியங்களை, ஓவியர் மருது, அரசுக் கவின் கலைக் கல்லூரியின் முதல்வர் மனோகர், முன்னாள் முதல்வர் சந்துரு ஆகியோர் வரைந்துள்ளனர். இவர்கள் 100க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து கொடுத்துள்ளனர்.

ஓவியங்கள் ஓப்பீடு செய்யும் பணி ஒரிரு வாரங்களில் நிறைவடையும். ஓவியங்களை அடிப்படையாக வைத்து சிற்பங்களும் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.

தாரகை

unread,
Mar 3, 2010, 1:56:25 PM3/3/10
to மின்தமிழ்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி
வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் இரு தாற்காலிக மருத்துவமனைகள்
அமைக்கப்படுகின்றன.

கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
நடைபெறுகிறது. இதையொட்டி, மருத்துவ வசதி, சிறப்பு மலர் மற்றும்
போக்குவரத்து வசதிக்கு ரூ.10.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள்


நடைபெற்று வருகின்றன.

இதில், சுகாதாரத் துறை சார்பில் மட்டும் ரூ.1 கோடியில் மேம்பாட்டுப்
பணிகள் நடந்து வருகின்றன. மாநாட்டுத் திடலிலும், பந்தலுக்கு வெளியேயும்
இரு தாற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன.

பொதுப்பணித்துறை சார்பில் சுமார் 2 ஆயிரத்து 500 சதுரடி பரப்பளவில்
பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. அதில், தாற்காலிக மருத்துவமனைகள்
செயல்படும். இங்கு 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில்
இருப்பார்கள்.

அதேபோல, மூன்று ஆம்புலன்ஸ்கள் மாநாட்டுப் பந்தலிலும், வெளியேயும்
நிறுத்தி வைக்கப்படும். இந்திய மருத்துவ சங்கம், அரசு மற்றும் தனியார்
மருத்துவமனை மருத்துவர்கள் இதற்காக பணியமர்த்தப்பட உள்ளனர்.

நாளொன்றுக்கு 25 மருத்துவர்கள் வீதம் மாநாடு நடக்கும் 5 நாட்களுக்கு
மொத்தம் 125 மருத்துவர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். 10 முதல் 15
ஆம்புலன்ஸ்கள் இதற்காக பயன்படுத்த உள்ளன.

அதேபோல, வ.உ.சி.பூங்காவில் இருந்து மாநாடு நடக்கும் கொடிசியா வளாகம் வரை
நடமாடும் மருத்துவக் குழு ஆம்புலன்ஸில் வரும். அதில், செவிலியர்,
உதவியாளர் மற்றும் ஒரு மருத்துவர் பணியில் இருப்பார்கள்.

பேரணியில் கலந்து கொள்பவர்கள், பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள்
சுவையான, சுத்தமான உணவைச் சாப்பிட பத்மாவதி கல்யாண மண்டபம்,
வ.உ.சி.பூங்கா மற்றும் சுகுணா கல்யாண மண்டபத்தில் ஹோட்டல்கள் அமைக்கப்பட
உள்ளன. இங்கு உயர்தர சைவ உணவுகள் கிடைக்கும். சுத்தமான குடிநீர்
கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரப் பணியின் ஒரு பகுதியாக மாநகரில் கொசுக்களை ஒழிக்க அனைத்து
வடிகால்களையும் சுத்தம் செய்யும் பணி விரைவில் துவங்க உள்ளது. திறந்த
வெளிகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன.

மாநாட்டை முன்னிட்டு சுகாதாரத் துறை மேற்கொள்ளும் பணிகளில் 30 சதவீதம்
நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள 70 சதவீத பணிகள் விரைவில் முடிந்துவிடும்
என்றார் அரசு மருத்துவமனை டீன் (பொறுப்பு) குமரன்.

தாரகை

unread,
Mar 3, 2010, 2:01:33 PM3/3/10
to மின்தமிழ்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஜூன் முதல்
வாரத்துக்குள் முடிக்கும்படி, மாநாட்டு தலைமைக்குழுவின் துணைத் தலைவரும்,
துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் அனைத்துக் குழுக்களையும் கேட்டுக்
கொண்டுள்ளார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்காகத்

1. தலைமைக் குழு
2. ஆய்வரங்க அமைப்புக் குழு
3. மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு
4. விருந்தோம்பல் குழு
5. தங்கும் இட ஏற்பாட்டுக் குழு
6. வரவேற்புக் குழு
7. கண்காட்சி குழு

என 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களின் பணிகள் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ளன.

தற்போது குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளும் இறுதி கட்டத்தை
எட்டியுள்ளன.

அனைத்துக் குழுக்களின் பணிகளையும், தலைமைக் குழு தலைவராக உள்ள முதல்வர்
கருணாநிதி, ஓரிரு வாரத்தில் இறுதி செய்வார் என்று கூறப்படுகிறது.

மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்க வரும் தமிழ் அறிஞர்கள், முக்கிய
விருந்தினர்களை வரவேற்று, தங்கும் இடம் வசதி செய்து தருதல், மாநாட்டுக்கு
அழைத்து வருதல் போன்ற பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது.

இதற்காக,

1. தங்கும் இடம் ஏற்பாட்டுக் குழு
2. வரவேற்புக் குழு
3. விருந்தோம்பல் குழு
4. வெளிநாட்டு பேராளர் குழு

ஆகிய 4 குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்பட முதல்வர் கருணாநிதி
அறிவுறுத்தி உள்ளார்.

இறுதி பெயர் பட்டியல்:-

"மாநாட்டில் ஆய்வரங்கத்தில் பங்கேற்பவர்களின் பதிவு செய்யும் பணியை,
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் செய்து முடித்துள்ளது.

இன்னும் ஓரிரு வாரத்தில் இறுதி பெயர் பட்டியல் கிடைத்துவிடும். அதன்பிறகு
யார், யாருக்கு எந்த ஹோட்டலில் அறை ஒதுக்குவது போன்ற பணிகள்
மேற்கொள்ளப்படும்" என்றார் கோவை மாநகர மேம்பாட்டுக் குழுவின்
உறுப்பினரும், மாநாட்டு சிறப்புப் பணி அலுவலருமான டாக்டர் பிரபாகரன்.

விமான நிலையங்களில் வரவேற்பு குழுவினர்:-

மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு அறிஞர்கள், முக்கிய விருந்தினர்களை
வரவேற்பதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள்
மற்றும் இரயில் நிலையங்களிலும் வரவேற்பு குழுவினர் நிறுத்தி வைக்கப்பட
உள்ளனர் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வழிகாட்டிகளாக மாணவர்களை ஈடுபடுத்த திட்டம்:-

இத்துடன் முக்கிய விருந்தினர்கள், வெளிநாட்டு அறிஞர்களுக்கு
வழிகாட்டுவதற்காக கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களை தன்னார்வத்
தொண்டர்களாக ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை
பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

ஜூன் முதல் வாரத்திற்குள்:-

செம்மொழி மாநாட்டு தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஜூன் முதல்
வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும்.

சிறு பணிகள் கூட நிலுவையில் இருக்காமல், அனைத்துப் பணிகளையும் விரைந்து
முடித்திடும்படி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், 21 குழுக்களின்
தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தாரகை

unread,
Mar 4, 2010, 2:20:29 AM3/4/10
to மின்தமிழ்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவைக்கு 100 சிறப்பு
இரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கோவையில் இந்த மாநாடு வரும் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசு
ஊழியர்கள் மற்றும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என


எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து மாநாட்டு ஏற்பாடுகளையும், போக்குவரத்து, அடிப்படை கட்டமைப்பு
வசதிகளை சிறப்பாக நிறைவேற்றவும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு
துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தில்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு
சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே பட்ஜெட்டில்
அறிவிக்கப்பட்டது.

இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாடு நடைபெற உள்ள கோவைக்கு சிறப்பு இரயில்களை இயக்க வேண்டும் என்ற
கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதை ஏற்கும் வகையில்,

1. கோவை - திருப்பதிக்கு (சேலம் வழி) "இன்டர்-சிட்டி" விரைவு இரயில்
வாரம் 3 முறையும்
2. சென்னை - கோவை பகல் நேர "துரந்தோ" விரைவு இரயில் சேவையும்
இயக்கப்படும்

என்று இரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஏற்கெனவே கோடை கால
சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயில் சேவைகளை தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து கோவைக்கு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பு விரைவு இரயில்களை இயக்க தெற்கு
இரயில்வே திட்டமிட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் முக்கிய இரயில்கள், கோடை
சிறப்பு இரயில்கள் மற்றும் சரக்கு இரயில் போக்குவரத்து என கோவை
வழித்தடத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது.

கோயம்புத்தூர் - இருகூர் 2வது அகலப் பாதை:-

கோவை - இருகூர் இடையே (24 கிலோமீட்டர்) 2வது அகலப் பாதை ரூ. 100 கோடி
செலவில் அமைக்கப்படுகிறது.

தற்போது இந்தப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இத்திட்டத்தின் நிலுவைப் பணிகளை நிறைவேற்ற ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்து
இரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், போத்தனூர் அருகே சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு மட்டும் நிலம்
கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தேவையான
நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைத்தால் மட்டுமே கோவை - இருகூர் 2வது அகலப்
பாதைப் பணிகளை நிறைவேற்ற முடியும்.

இதன்பின்னரே, கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு விரைவு
இரயில்களை இயக்க முடியும் என்று தமிழக அரசிடம் தெற்கு இரயில்வே
வலியுறுத்தியுள்ளது.

பொதுவாக இரயில்களில் 90 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி
உள்ளது.

எனவே, சிறப்பு இரயில் சேவைகளை விரைவாக தெற்கு இரயில்வே அறிவிக்க
வேண்டுமெனில், அகலப் பாதை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட
பல்வேறு பணிகளில் மாநில அரசு தரப்பில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய நிலை
உள்ளது.

சிறப்பு விரைவு பஸ்கள்:-

மாநாட்டையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கோவைக்கு சிறப்பு
பஸ்களை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

ச. குமரன்

தாரகை

unread,
Mar 4, 2010, 6:44:31 PM3/4/10
to மின்தமிழ்
கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும்
பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல 50 "ஏ.சி. வால்வோ" பஸ்களை பயன்படுத்த தமிழக
அரசு முடிவு செய்துள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் ஜூன் 23ம் தேதி முதல் 27ம்
தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு
நாடுகளிலிருந்தும், தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கானோர்
வரவுள்ளனர்.

இவர்களின் பயன்பாட்டுக்காக தனித்தனி வாகனங்கள் மற்றும் கார்களை
பயன்படுத்துவது போக்குவரத்து நெரிசலையும், அதிக செலவையும் ஏற்படுத்தும்
என்பதால் "ஏ.சி. வால்வோ" பஸ்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
பிரதிநிதிகளுக்கு என்று பிரத்யேகமாக இயக்கப்படும் இந்த பஸ்களில், அவர்கள்
இலவசமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்த பஸ்கள் இப்போது சென்னையிலும் தமிழகத்தின் மற்ற சில பகுதிகளிலும்
இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 50 பஸ்கள், கோவைக்கு கொண்டு செல்லப்பட
உள்ளன.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:-

பிரதிநிதிகள் தங்கியிருக்கும் இடங்களிலிருந்து, மாநாடு நடைபெறும்
இடத்துக்கு அவர்களை அழைத்துச் செல்ல இந்த பஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மாநாடு தொடங்குவதற்கு 4 நாள்களுக்கு முன்பே இந்த ஏ.சி. பஸ்கள் கோவை
கொண்டு செல்லப்பட்டு இயக்கப்பட உள்ளன.

மாநாட்டுக்கு முன்பும், மாநாட்டுக்குப் பின்னும் உதகை உள்ளிட்ட கோவையைச்
சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கும் பிரதிநிதிகளுக்காக சிறப்பு பஸ்கள்
இயக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதிலிருந்தும் இருந்து மாநாட்டுக்குச் செல்ல விரும்பும்
பொதுமக்களின் வசதிக்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோவைக்கு
தேவைக்கேற்ப சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

20 ஆயிரம் பஸ்களில் மாநாட்டு இலச்சினை ஸ்டிக்கர்:-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து அனைத்து தரப்பு மக்களும் அறியும்
வகையில் விளம்பரப்படுத்துவதற்காக, தமிழகத்தில் இயக்கப்படும் 20 ஆயிரம்
அரசு பஸ்களிலும் "மாநாட்டு இலச்சினை" ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது. பஸ்ஸின்
இரண்டு பக்கவாட்டிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படும். பஸ் டிக்கெட்களிலும்
இலட்சினை அச்சிடப்படும். மாநாடு முடியும் வரை இந்த நடைமுறை தொடரும்.

மாநாட்டை முன்னிட்டு கோவை விமான நிலையம் மற்றும் இரயில் நிலையத்தில் சாலை
வசதி, கூடுதல் பஸ் வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சிறந்த
வகையில் மேம்படுத்தப்படுகின்றன என்றார்.

தாரகை

unread,
Mar 4, 2010, 6:47:17 PM3/4/10
to மின்தமிழ்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, கோவை நகரில் தொடர்ந்து 3 நாள்கள்
பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கோவை நகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் 23ம் தேதி தொடங்கி 27ம்
தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டு தொடக்க நாளில், கோவை வ.உ.சி. பூங்காவில்
இருந்து கொடீசியா அரங்கம் வரையில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது.

மாநாட்டுக்கு முன்பாக "சென்னை சங்கமம்" நிகழ்ச்சி போல, 10 இடங்களில்
திறந்தவெளி மைதானத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக 3 நாள்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடங்களை, கனிமொழி எம்.பி. ஏற்கெனவே
பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதில் 800 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திடும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சர்
என்.சுரேஷ்ராஜன் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலா குழு
அமைக்கப்பட்டுள்ளது.

கலைநிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக கோவை வரும் கலைஞர்களுக்கு
போக்குவரத்து வசதி மற்றும் தங்கும் வசதியை இக்குழுக்கள் செய்கின்றன.

நடமாடும் கழிப்பறைகள்:-

மாநாட்டு நிகழ்ச்சியைக் காண கோவை நகருக்கு ஒரு இலட்சத்துக்கும்
அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டுக்கு வருவோரின் வசதிக்காக 60க்கும் மேற்பட்ட நவீன நடமாடும்
கழிப்பறைகள் புதிதாக வாங்க திட்டமிடப்பட்டுள்ளன. ஊர்வலத்தில் அலங்கார
ஊர்திகள் செல்லும் பாதை என மக்கள் நெரிசல் மிக்க இடங்களில் இந்த நவீன
நடமாடும் கழிவறைகள் வைக்கப்படும் என்று அரசுத்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.

துணை முதல்வர் ஆய்வு:-

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை (05/03/10) கோவை செல்ல
உள்ளார். அப்போது, செம்மொழி மாநாட்டுக்காக நடைபெற்றுவரும் உள்கட்டமைப்பு
பணிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளார். மேலும், குழு அதிகாரிகளுடன் அவர்
பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

Kannan Natarajan

unread,
Mar 5, 2010, 5:45:23 PM3/5/10
to Min Thamizh
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நினைவாக அமைக்கப்படும் தாவரவியல் பூங்காவுக்கான பூர்வாங்கப் பணிகள் முடிந்துவிட்டன.

பூங்கா அமைக்கும் பணியை சென்னையைச் சேர்ந்த நதிகள் புனரமைப்பு அறக்கட்டளை விரைவில் துவங்க உள்ளது.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை (05/03/10) ஆய்வு செய்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாநாட்டுப் பணிகள் தொடர்பாக கோவை சுற்றுலா மாளிகையில் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தமிழக அமைச்சர்கள்
    • பொங்கலூர் நா.பழனிசாமி
    • மு.பெ.சாமிநாதன், க.இராமச்சந்திரன்
    • மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத்
    • மேயர் ஆர்.வெங்கடாசலம்
    • முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் மற்றும்
    • அதிகாரிகள்
    உடன் இருந்தனர்.

    கோவை சிறை வளாகத்தில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான பணிகள் குறித்து துணை முதல்வர் ஸ்டாலின் கேட்டபோது, பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் முடிந்துவிட்டதாக ஆட்சியர் உமாநாத் தெரிவித்தார்.

    மேலும் இப்பூங்காவை அமைக்க உள்ள சென்னையைச் சேர்ந்த நதிகள் புனரமைப்பு அறக்கட்டளை விரைவில் பணியைத் துவங்க உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.60 கோடியில் மேற்கொள்ளப்படும் புதிய சாலைகள், சாலைகள் விரிவாக்கம் ஆகிய பணிகள் ஏப்ரல் இறுதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

    இருகூர் - போத்தனூர் இரட்டை இரயில்பாதை திட்டத்துக்கு 50 மீட்டர் அளவுக்கு தனியார் நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது.

    நில உரிமையாளரிடம் பேச்சு நடத்தி வருகிறோம்.

    விரைவில் நிலம் கையகப்படுத்தப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

    மாநாட்டில் பங்கேற்க வரும் தமிழறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்குவதற்காக 4 ஆயிரத்து 900 அறைகளும், அலுவலர்கள், வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்குவதற்காக 120 திருமண மண்டபங்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சரும், தங்குமிட ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான பொங்கலூர் நா.பழனிசாமி தெரிவித்தார்.

    புதைமின்வடப் பாதை அமைக்கும் பணி அவிநாசி சாலையில் இம்மாத இறுதிக்குள்ளும், திருச்சி சாலையில் ஏப்ரல் இறுதிக்குள் நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    கோவை மாநகராட்சி சார்பில் உயர்கோபுர மின்விளக்குகள், அவிநாசி சாலையில் 20 இடங்களில் புதிய நிழற்குடையில், 47 பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணிகள் ஏப்ரல் இறுதிக்குள் நிறைவு பெறும் என்று மேயர் ஆர்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

    அனைத்துப் பணிகளையும் மே இறுதிக்குள் முடிக்குமாறு துணை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

    Kannan Natarajan

    unread,
    Mar 6, 2010, 5:22:24 PM3/6/10
    to Min Thamizh
    செம்மொழி மாநாடு:- "விக்கிபீடியா" தமிழ் இணைய தளத்துக்கு கட்டுரை அளிக்க மாணவர்களுக்குப் போட்டி

    தமிழ் இணைய மாநாட்டில் கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது. செம்மொழி மாநாட்டில் நடத்தப்படும் ஆய்வரங்கத்தைப் போல, இணைய மாநாட்டிலும் ஆய்வரங்கம் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்க உள்ளனர்.

    இதுதவிர கணினியில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதுபற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுவிதப் போட்டி நடத்தப்படுகிறது.

    இப்போட்டி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகிறது.

    ஐ.ஐ.டி. கான்பூர் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் இணைய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    http://www.dinamani.com/Images/article/2010/3/7/david.jpg
    ப.வி.ச.டேவிதார்

    போட்டி குறித்து இணைய மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருமான ப.வி.ச.டேவிதார் கூறியதாவது:-

    கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் போட்டி நடத்தப்படுகிறது.

    பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடைத் துறை, விளையாட்டு துறை என 7 வகை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

    கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும்.

    இணையதளத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க இப்போட்டி வழி செய்கிறது.

    "விக்கிபீடியா" தமிழ் இணையதளம்:-

    எந்தவொரு தகவலையும் "விக்கிபீடியா" இணையதளத்தின் மூலம் பார்த்துவிட முடியும். இந்த இணையதளத்தில், ஒவ்வொரு மொழியிலும் பல்வேறு தலைப்பில் ஏராளமான கட்டுரைகள் உள்ளன.

    ஆனால், "விக்கிபீடியா" தமிழ் இணையதளத்தில் வெறும் 22,000 கட்டுரைகளே உள்ளன. இதை அதிகரித்தால் தான் இணையதளத்தில் தமிழின் பயன்பாடு அதிகமாகும்.

    அந்தவகையில் கல்லூரி மாணவர்களுக்காகப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் மாணவர்களிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.

    இந்தக் கட்டுரைகள் அனைத்தும்  "விக்கிபீடியா" தமிழ் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.

    கட்டுரைகளை "யுனிகோட்" முறையில் தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். போட்டி அறிவிப்பு மற்றும் இணையதளத்தில் மாணவர் பதிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

    Kannan Natarajan

    unread,
    Mar 9, 2010, 5:16:53 AM3/9/10
    to Min Thamizh
    செம்மொழி மாநாடு:- கண்காட்சியில் 30 அரங்குகள்

    செம்மொழி மாநாட்டு கண்காட்சியில் 30 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழர் வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கண்காட்சி அமைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தக் கண்காட்சி,
      • தமிழர் பண்பாடு
      • தமிழ் தொல்லியல்
      • தமிழ் இலக்கியம்
        என மொத்தம் 6 பேராண்மை தலைப்புகளில் நடைபெறுகிறது.

        மேலும் உட்பிரிவுகளாக,
        • இசைத் தமிழ் அரங்கம்
        • நாடகத் தமிழ் அரங்கம்
        • திரைத் தமிழ் அரங்கம்
        • கலைஞர் தமிழரங்கம்
        • ஓவியத் தமிழ் அரங்கம்
        என 30 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

        கண்காட்சி அமைப்புக் குழு செய்து வரும் பணிகள் குறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளரும், கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதாவது:-

        கண்காட்சியில் காட்சிப்படுத்த,
        • அசலான பொருள்கள்
        • மாதிரிகள்
        • நிழற்படங்கள்
        • கணினி அட்டைகள்
        இட அளவு, அதற்கான செலவு மதிப்பீடு ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன.

        தற்போது இந்தக் கருத்துரு, முதல்வர் கருணாநிதி தலைமையிலான தலைமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

        தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் தற்கால இலக்கியத்தில் முக்கியமான ஆளுமைகள் பற்றி கண்காட்சியில் அசலான பொருள்கள், மாதிரிகள் வைப்பது பற்றி ஆலோசனை கொடுத்துள்ளேன்.

        கதிர்வீச்சு (லேசர்) முறையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தமிழ் அரங்கு அமைக்கப்படுகிறது.

        இத்துடன் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்ட வரலாற்றை, கலைஞர் செம்மொழி செப்பேடு என்ற நூலில் காணப்படும் செய்திகளை ஓவியமாகவும், செய்திக் குறிப்பாகவும் கொண்டு தனிச் சிற்றரங்கம் அமைக்கப்பட உள்ளது.

        இது தவிர புத்தக கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

        சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் இந்தக் கண்காட்சி அமைக்கப்படுகிறது.

        உத்தரமேரூரில் கல்வெட்டு குறிப்பிடும் குடவோலை முறையினை ஒலி - ஒளி காட்சியாக காண்பிக்க தனிச் சிற்றரங்கம் ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

        செம்மொழி மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் குழுக்களின் கருத்துருக்களையும், முதல்வர் தலைமையிலான தலைமைக் குழு தான் இறுதி செய்யும்.

        கண்காட்சி அமைப்புக் குழுவைப் பொறுத்தவரையில், தலைமைக் குழுவின் உத்தரவு கிடைத்ததும், மார்ச் இறுதியில் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

        Kannan Natarajan

        unread,
        Mar 9, 2010, 3:17:29 PM3/9/10
        to Min Thamizh
        செம்மொழி மாநாடு இன்னும் 106 நாள்கள்:- 10 இடங்களில் உணவகங்கள்

        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, கோவை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.

        சுமார் 10 இடங்களில் இதுபோன்ற உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.

        கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு தமிழறிஞர்கள், அமைப்பாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் என
        லட்சக்கணக்கானோர் வருகைதர உள்ளனர்.

        இவர்களுக்கான உணவு வசதியை  உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான விருந்தோம்பல் குழு செய்து வருகிறது.

        இதுகுறித்து விருந்தோம்பல் குழுவினர் கூறியதாவது:-

        கொடீசியா அரங்கில் நடைபெறும் ஆய்வரங்கத்தில் பங்கேற்கும் அறிஞர்கள், அழைப்பாளர்கள், முக்கிய விருந்தினர்களுக்கென தனியாக உணவு வசதி செய்யப்படுகிறது. அதுதவிர மாநாட்டைக் காண வரும்
        லட்சக்கணக்கானோருக்கு அரசு சார்பில் தனித்தனியாக உணவு வசதி செய்யப்பட உள்ளது.

        இதுதவிர மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.

        இதற்காக காந்திபுரம் பஸ் நிலையம்,
        ரயில் நிலையம், ஊர்வலம் செல்லும் அவிநாசி பாதையில் ஓர் இடம் என 10 முக்கிய இடங்களில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த உணவகங்களில் ஹோட்டல்களைச் சேர்ந்தவர்கள், தங்களது அரங்குகளை வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு உணவகத்திலும் எவ்வளவு அரங்குகள் வைப்பது, யார் யாருக்கு அரங்குகள் ஒதுக்குவது என்பது பற்றி அடுத்து வரும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

        உணவகங்களை எங்கு அமைப்பது என்பது பற்றியும், அதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. மாநாட்டுக்கு வரும் மக்கள், உணவுக்காக எங்கும் அலையக் கூடாது என்ற நோக்கத்தில் உணவகங்கள் அமைக்கப்படுகின்றன. சிறந்த தரத்துடன் உணவும், குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படும். நகரில் உள்ள மற்ற ஹோட்டல்களில் கூட்டத்தைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.

        Kannan Natarajan

        unread,
        Mar 9, 2010, 3:21:44 PM3/9/10
        to Min Thamizh
        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு:- ஆய்வுக் கட்டுரைகள் 50 தலைப்புகளில் வகைப்பாடு - நிதி அமைச்சர் அன்பழகன் தகவல்

        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகள் 50 தலைப்புகளில் வகைப்பாடு செய்யப்படுகிறது என்று மாநாட்டின் சிறப்பு மலர்க் குழுத் தலைவரும், நிதி அமைச்சருமான க.அன்பழகன் தெரிவித்தார்.

        செம்மொழி மாநாடு நடைபெற உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தை செவ்வாய்க்கிழமை (09/03/10) அவர் பார்வையிட்டார்.

        தொழிற்காட்சி வளாகத்தில்,
        • ஆய்வரங்குகள் அமைக்கும் வளாகம்
        • தமிழ் இணைய மாநாடு நடைபெறும் அரங்குகள்
        • கண்காட்சி அமைக்கும் இடம்
        ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் வரைபடத்தின் மூலம் விளக்கினார்.

        பின்னர் செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் அன்பழகன் கூறியது:-

        செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கு ஆயிரக்கணக்கான கட்டுரைகள் பெறப்பட்டுள்ளன. அதனை 50 தலைப்புகளில் வகைப்படுத்தி சிறந்த கட்டுரைகளை ஆய்வறிஞர் குழு தேர்வு செய்யும்.

        இந்த கட்டுரைகள் மாநாட்டின் ஆய்வரங்கங்களில் வாசிக்கப்படும். கட்டுரைகள் மீது தமிழறிஞர்களின் விவாதம் இடம்பெறும்.

        மாநாட்டின் 2ம் நாள் ஆய்வரங்க நிகழ்வுகளை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்துப் பேசுகிறார்.

        ஆய்வரங்குகளில் பங்கேற்கும் 5 ஆயிரம் தமிழறிஞர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். நான்கு நாள்களும் ஆய்வரங்குகளின் துவக்க நிகழ்வு காலையில் நடைபெறும்.

        மாநாட்டின் ஊர்வலத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தமிழ் கலை மற்றும் பண்பாட்டை விளக்கும் ஓவியங்களைக் கொண்ட 60க்கும் மேற்பட்ட ஊர்திகள் இடம்பெறுகின்றன. அதேபோல, தமிழ் இணைய மாநாட்டுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

        மேடை அமைப்பு, ஒலி - ஒளி ஏற்பாடு, பாதுகாப்பு வசதிகள் ஆகிய பணிகள் தான் எஞ்சியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக கோவையில் நடைபெறும்  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இருக்கும். இம் மாநாடு கோவைக்கு மிகப்பெரிய பெருமையைத் தேடித் தரப்போகிறது. இம்மாநாடு சிறப்பான வெற்றியைப் பெறப்போவது உறுதி என்றார்.

        ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், மாநாட்டின் சிறப்புப் பணி அலுவலர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

        Kannan Natarajan

        unread,
        Mar 13, 2010, 8:25:38 PM3/13/10
        to Min Thamizh
        செம்மொழி மாநாடு இன்னும் 102 நாள்கள்:- இன்று ஊர்வலக்குழு கூட்டம்

        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்கான ஊர்வலக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (14/03/10) நடைபெறுகிறது.

        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்காக 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

        இதில் மாநாட்டு தொடக்க நாளான ஜூன் 23ம் தேதி பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது.

        ஊர்வலத்தைச் சிறப்பாக நடத்திடும் வகையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

        ஊர்வலத்தை முன்னிட்டு பார்வையாளர்களை கவரும் வகையில், 60க்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகள் செல்ல உள்ளன. இதில் தமிழர் வரலாற்றை விவரிக்கும் வகையிலான ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.

        திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் ஊர்வலத்தில் அழைத்துச் செல்லப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

        Kannan Natarajan

        unread,
        Mar 13, 2010, 8:28:48 PM3/13/10
        to Min Thamizh
        செம்மொழி மாநாடு:- சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் கலை, இலக்கிய நிகழ்ச்சி

        சென்னை பல்கலைக்கழகத்தின் அனைத்து இணைப்பு கல்லூரிகளிலும் தமிழ் தொடர்பான கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று துணைவேந்தர் க. திருவாசகம் கூறினார்.

        இது தொடர்பாக அவர் கூறியது:-

        உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வகை செய்யும் அளவில், அவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி கூறியுள்ளார். அதன்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் தமிழ் தொடர்பான கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் வரும் 22ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. தவிர, கல்லூரிகள் தாங்கள் நடத்திய நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.

        ஜூன் 18, 19 ஆகிய இரு தேதிகளில் அனைத்து கல்லூரிகளுக்கும் சேர்த்து ஒரு பொதுவான போட்டி சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும். போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் கல்லூரிகளுக்கு முதல்வர் கருணாநிதி மூலம் பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

        மேலும், புனித ஜார்ஜ் கோட்டையை அடுத்துள்ள பல்கலைக்கழகத்தின் மணி கூண்டை பழுது பார்த்து, அதில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மணி அடிக்கும்போது ஒரு திருக்குறளை தமிழில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இது ஜூன் மாதத்துக்குள் செய்து முடிக்கப்படும் என்றார்.

        Kannan Natarajan

        unread,
        Mar 13, 2010, 8:42:47 PM3/13/10
        to Min Thamizh
        செம்மொழி மாநாடு:- இணையதளம் மூலம் கட்டுரைகளை மாணவர்கள் அனுப்பலாம்

        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமான தமிழ் இணைய மாநாட்டையொட்டி விக்கிபீடியா தமிழ் இணையதளத்துக்கு கட்டுரைகளை பதிவு செய்ய விரும்பும் கல்லூரி மாணவர்கள் மார்ச் 15ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

        இணையதளம் குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும்.

        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழ் இணைய மாநாட்டுக் குழுவுக்குத் தலைவராக ஐ.ஐ.டி. கான்பூர் தலைவரான மு.ஆனந்தகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

        தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, குழுவின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு தலைப்புகளில் கணினித் தமிழ் வரைகலை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 8,473 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாணவர்கள் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கு லேப்டாப், கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமிரா ஆகியவை பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

        இந்தப் போட்டியில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த  மாணவர்கள் அதிகமானோர் பங்கேற்றனர். இவர்களில் சிறந்த பள்ளி மற்றும் சிறந்த மாணவர்களை தேர்வுக்குழுவினர் தெரிவு செய்துவிட்டனர்.

        ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 3 மாணவர்கள் என மொத்தம் 96 பேர் தெரிவு செய்யப்பட்டு, இறுதியாக 3 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

        இதுகுறித்து குழுவின் அமைப்பாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான பூங்கோதை கூறியது:-

        பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கணினித் தமிழ் வரைகலை போட்டிகளில் சிறந்த மாணவர்கள், சிறந்த பள்ளிகளை தேர்வுக் குழுவினர் தெரிவு செய்துவிட்டனர். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

        அடுத்து கல்லூரி மாணவர்களுக்கான "விக்கிபீடியா" தமிழ் இணையதளத்துக்கு கட்டுரை அளிக்க போட்டி நடத்தப்படுகிறது.

        தமிழ் மொழியைவிட குறைந்த அளவிலே பேசப்படும் ஸ்பானிஷ் மொழியில் விக்கிபீடியா இணையதளத்தில் ஏராளமான கட்டுரைகள் உள்ளன. சீன மொழியில் 2 இலட்சம் கட்டுரைகள் உள்ளன. ஆனால், தமிழ் மொழியில் சுமார் 19 ஆயிரம் கட்டுரைகளே உள்ளன. இதை அதிகரிக்கும் பொருட்டு இப்போட்டி நடத்தப்படுகிறது.

        மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை அறிவியல், கலை அறிவியல், சட்டம் என 7 துறை சார்ந்த பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்கள் தங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை அளிக்கலாம்.

        போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மார்ச் 15ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஏப்ரல் 30ம் தேதி வரை கட்டுரைகளை அளிக்கலாம். சிறந்த கட்டுரைகளை அளிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றார்.

        Kannan Natarajan

        unread,
        Mar 15, 2010, 6:04:23 AM3/15/10
        to Min Thamizh
        செம்மொழி மாநாடு:- இன்னும் 101 நாள்கள் - ஊர்வலத்தில் கண்கவர் வாண வேடிக்கை

        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் பிரமாண்ட ஊர்வலத்தின் ஒரு பகுதியாக கண்கவர் வாண வேடிக்கை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஊர்வலக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (14/03/10) நடைபெற்றது.

        இந்தக் குழு போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

        ஆலோசனைக் கூட்டத்தில்,
          • கனிமொழி எம்.பி
          • கோவை மாவட்ட ஆட்சியர் உமாநாத்
          • பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுவாமிநாதன்
          • தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.​ இராதாகிருஷ்ணன்
          • கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபு
          • சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி இராமநாதன்
          • பள்ளிக்கல்வி இயக்குநர் பெருமாள்சாமி
          உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

          மாநாட்டு தொடக்க நாளான ஜூன் 23ம் தேதி மாலையில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.​ ​ ஊர்வலத்தில் தமிழ் இலக்கியங்களில் வரும் நிகழ்வுகளைச் சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

          ஊர்வலப் பாதையின் முக்கிய இடங்களில் அலங்கார வளைவுகளை ஏற்படுத்துவது,​​ ஊர்வலத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களை பங்கேற்க வைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.​ ஊர்வலத்தின் ஒரு பகுதியாக கண்கவர் வாண வேடிக்கை நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது என்று குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

          மார்ச் 18ல் அடுத்த கூட்டம்:​​-

          ஊர்வலத்தின் அடுத்தக்கட்ட ஆலோசனைக் கூட்டம்,​​ மார்ச் 18ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.​ அப்போது ஊர்வலக் குழு பற்றி முழுமையாக ஆலோசிக்கப்பட்டு,​​ பணிகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

          Kannan Natarajan

          unread,
          Mar 16, 2010, 5:49:57 AM3/16/10
          to Min Thamizh
          செம்மொழி மாநாடு:- இன்று வெளிநாட்டுப் பேராளர் தொடர்புக் குழு கூட்டம்

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பேராளர் தொடர்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அதன் தலைவர் கவிஞர் வைரமுத்து தலைமையில் செவ்வாய்க்கிழமை (16/03/10) நடைபெறுகிறது.
           
          செம்மொழி மாநாட்டின் முக்கிய நிகழ்வான ஆய்வரங்கம் மற்றும் தமிழ் இணைய மாநாட்டு ஆய்வரங்கத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்கள், பல்வேறு தலைப்புகளில் தங்களது கட்டுரைகளைப் படிக்க உள்ளனர்.
           
          இதில் பங்கேற்க வரும் வெளிநாட்டு அறிஞர்கள், முக்கியப் பிரமுகர்களை விமான நிலையங்களில் இருந்து கோவைக்கு அழைத்துச் சென்று ஹோட்டல்களில் தங்க வைப்பது, அவர்களை மாநாட்டு இடத்துக்கு அழைத்துச் செல்ல போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்
          படுத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டி உள்ளது.
           
          இதற்காக போக்குவரத்து ஏற்பாட்டுக் குழு, தங்கும் இட ஏற்பாட்டுக் குழு, வரவேற்புக் குழுக்களுடன் வெளிநாட்டுப் பேராளர் தொடர்புக் குழு ஒருங்கிணைந்து செயல்பட உள்ளது.
           
          இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

          இதில் இணைத்தலைவர் கனிமொழி எம்.பி., துணைத் தலைவர்களாகப் பொறுப்பு வகிக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர், கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

          Kannan Natarajan

          unread,
          Mar 16, 2010, 5:55:46 AM3/16/10
          to Min Thamizh
          கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 50 முக்கிய சாலைகளுக்கு தமிழறிஞர்களின் பெயர்களைச் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

          மாநகராட்சியின் 2010 - 2011ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

          இதுகுறித்து மேயர் மா. சுப்பிரமணியன் கூறியது:-

          1968ல் சென்னையில் நடைபெற்ற 2
          ம் உலகத் தமிழ் மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் தமிழறிஞர்களின் சிலைகள் நிறுவப்பட்டன.

          இதுபோல்,இப்போது கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்
          ச் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 50 முக்கிய சாலைகளுக்கு தமிழறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.

          சென்னை மாநகராட்சி ஆற்றியுள்ள சிறப்புப் பணிகளான கல்வி, சுகாதாரம், குடும்ப நலம், அழகிய பூங்காக்கள், பாலங்கள் ஆகியவற்றைச் சித்திரிக்கும் வகையில் அலங்கார ஊர்தி ஒன்று மாநகராட்சி சார்பில், கோவை செம்மொழி மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

          மேலும் திருவள்ளுவரைப் போற்றும் வகையில் "வாயில் தோறும் வள்ளுவம்" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சியின் அனைத்து அலுவலகங்களின் வாயில்களிலும் ஒரு திருக்குறள் அதன் பொருளோடு, நிரந்தரப் பலகையில் பொறித்து வைக்கப்படும் என்றார்.

          Kannan Natarajan

          unread,
          Mar 17, 2010, 6:22:49 AM3/17/10
          to Min Thamizh
          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு:- ஆய்வரங்குகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு 30 ஆய்வரங்கங்கள் அமைக்கப்படுகின்றன என்று மாநாட்டு அரங்க அமைப்புக் குழுத் தலைவரும்,வேளாண் அமைச்சருமான வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் தெரிவித்தார்.

          ஏற்கெனவே 17 அரங்குகள் அமைப்பதென முடிவு செய்யப்பட்டிருந்தது.

          மாநாட்டில் பங்கேற்கும் தமிழறிஞர்கள், விவாதிக்கப்படும் தலைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அரங்குகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (16/03/10) அவர் ஆய்வு மேற்கொண்டார்.

          ஆய்வரங்குகள் நடைபெறும் தொழிற்காட்சி வளாகத்தின் பிரதான அரங்குகள் (ஏ,பி,சி), உணவுக் கூடம், திறந்தவெளி அரங்கு அமையும் இடம், புதிய நுழைவாயில் அமையும் இடம் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

          ஆய்வரங்கம் நடைபெறும் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

          அப் பணி குறித்து அமைச்சருக்கு, மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் விளக்கம் அளித்தார்.

          இந்த அரங்குகளுக்கு வந்து செல்லக் கூடிய நுழைவாயில் மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து அவர் தெரிவித்தார்.

          தொழிற்காட்சி வளாகத்தில் தலா 250 பேர் அமரும் வகையில் உணவுக்கூடம் அமைப்பதற்கான இடத்தையும் அவர் பார்வையிட்டார்.

          பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியது:-

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கங்கள் நடத்துவதற்கு 30 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அதேபோல, 1,000 பேர் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படுகிறது.இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அரங்குகள் அமைக்கும் பணி குறிப்பிட்ட காலத்தில் நிறைவடையும். கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்கான நுழைவாயில் குறுகியதாக இருந்தது. தற்போது பிரதான நுழைவாயில் பெரிய அளவில் அமைக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் இது ஏற்றதாக இருக்கும் என்றார்.

          Kannan Natarajan

          unread,
          Mar 17, 2010, 6:26:56 AM3/17/10
          to Min Thamizh
          செம்மொழி மாநாடு:- 214 வெளிநாட்டு அறிஞர்கள் கட்டுரை சமர்ப்பிக்கின்றனர்

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் 214 வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் தங்களது கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர்.
           
          மேலும் மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு அறிஞர்கள், விருந்தினர்களுக்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி உதவி மையம் ஏற்படுத்தப்பட உள்ளது.
           
          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்கான "வெளிநாட்டு பேராளர் தொடர்பு குழுவின்" ஆலோசனைக் கூட்டம், சென்னையில் பாலாறு இல்லத்தில் அதன் தலைவர் கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெற்றது.
           
          இதில் விருந்தோம்பல் குழு, வரவேற்புக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
           
          இணைத் தலைவர் கனிமொழி எம்.பி., மாநாட்டு தனி அலுவலர்கள் க.அலாவுதீன், டாக்டர் பிரபாகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
           
          வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழ் அறிஞர்கள், சிறப்பு அழைப்பாளர்களின் வசதிக்காக உள்ளூரில் பயன்படுத்தக் கூடிய வகையில் "செல்போன் சிம் கார்டுகளை" வழங்க வேண்டும் என்றும், இந்தியாவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகளையும் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்றும் கவிஞர் வைரமுத்து ஆலோசனைக் கூறினார்.
           
          இதுபற்றி முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார் மாநாட்டு தனி அலுவலர் க.அலாவுதீன்.

          கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-
           
          செம்மொழி மாநாட்டில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டினர், அவரவர் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயணச்சீட்டுக்கான தொகை, இந்திய மதிப்பில் அவரவர் நாட்டு கரன்சியில் வழங்கப்படும். தேசியமயமாக்கப்பட்ட வங்கி உதவியுடன் இப்பணி மேற்கொள்ளப்படும்.
           
          மாநாட்டுக்கு வருபவர்கள் விமானத்தில் சிக்கன வகுப்பில் முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பயணச்சீட்டு முன்பதிவு குறித்து, குழுவுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
           
          ஆய்வரங்கத்தில் கட்டுரை சமர்ப்பிக்கும் கட்டுரையாளர்கள் தங்களது புகைப்படங்களை குழுவுக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும்.
           
          கட்டுரையாளர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும். கட்டுரை சமர்ப்பிப்பவர்கள், அரை மணி நேரத்துக்கு முன்பாகவே மாநாட்டு அரங்கத்துக்கு வந்துவிட வேண்டும்.
           
          ஆய்வரங்கத்தில் பங்கேற்க வருவோருக்கு அவர்களின் நிகழ்ச்சி நிரல், மாநாட்டு நிகழ்ச்சி நிரல் குறித்த தனி கையேடு வழங்கப்படும்.
           
          தனி உதவி மையம்:-

          மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு அறிஞர்கள், விருந்தினர்களுக்கு உதவிடும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கும் இட ஏற்பாட்டுக் குழு, போக்குவரத்து ஏற்பாட்டுக் குழு, விருந்தோம்பல் மற்றும் வரவேற்புக் குழுவினரை அடக்கிய ஒரு தனி உதவி மையம் தொடங்கப்பட உள்ளது.
           
          ஏப்ரல் 3ல் அடுத்தக் கூட்டம்:-

          குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் கோவை நகரில் உள்ள கொடிசியா அரங்கில் ஏப்ரல் 3ம் தேதி நடைபெறும் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
          "மாநாட்டு ஆய்வரங்கத்தில் 214 வெளிநாட்டினர் கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். இத்துடன் 344 வெளிநாட்டினர் பார்வையாளர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களாக 85 பேரும் வருகின்றனர்" என்றார் ஆய்வரங்க அமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.
          ராஜேந்திரன்.

          Kannan Natarajan

          unread,
          Mar 18, 2010, 5:57:34 AM3/18/10
          to Min Thamizh
          செம்மொழி மாநாடு:- இன்னும் 98 நாள்கள் குழுக்களுக்கு உதவ ஆயிரம் பேர் கொண்ட கல்லூரி மாணவர் குழு

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு கட்டுரையாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் குழுக்களுக்கு உதவும் வகையில் ஆயிரம் பேர் கொண்ட கல்லூரி மாணவர் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கம் மற்றும் தமிழ் இணைய மாநாட்டு ஆய்வரங்கத்துக்குக் கட்டுரை சமர்ப்பிக்க சுமார் 500 வெளிநாட்டு கட்டுரையாளர்கள் வருவார்கள் எனத் தெரிகிறது.

          இது தவிர பார்வையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் வரவுள்ளனர்.

          பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்களில் வரும் இவர்களை சென்னை, கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களில் வரவேற்கும் பணியை வரவேற்புக் குழு மேற்கொள்ள உள்ளது.

          கோவை மாநகருக்கு அழைத்துச் சென்று ஹோட்டல்களில் தங்க வைப்பது, மாநாட்டு அரங்கத்துக்கு அழைத்துச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்தல் போன்ற பணிகளை வரவேற்புக் குழு, விருந்தோம்பல் குழு, தங்கும் இடம் ஏற்பாட்டுக் குழு, போக்குவரத்து ஏற்பாட்டுக் குழு ஆகியவை செய்து வருகின்றன.

          எனவே, கோவை நகருக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் குழுக்களுக்கு உதவும் வகையில் கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

          இது குறித்து, பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், மாநாட்டு ஆய்வரங்க அமைப்பு உதவிக் குழு தலைவருமான சி.சுவாமிநாதன் கூறியது:-

          மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள 21 குழுக்களுக்கு உதவும் வகையில், கல்லூரி உதவி பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள் தன்னார்வ தொண்டர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக சுமார் ஆயிரம் பேர் கொண்ட குழுவினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மாநாட்டு குழுக்களில் எந்தப் பிரிவில் பணிபுரிய விருப்பம் உள்ளது என்பது உள்ளிட்டவற்றை கேட்டறிந்து, மாணவர்களை தெரிவு செய்துள்ளோம்.இவர்களில் ஒரு பிரிவு மாணவர்களுக்கு குழுக்கள் குறித்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

          ரத்த தானம் வழங்க...

          இது தவிர அவசர காலங்களில்
          ரத்தம் தேவைப்படுமெனில், ரத்த தானம் வழங்க தயாராக உள்ள மாணவர்களின் விவரங்களையும் பெற்று வைத்துள்ளோம். மேலும் என்.எஸ்.எஸ். மாணவர்களை தன்னார்வ தொண்டர்களாகவும், என்.சி.சி. மாணவர்களை காவல் துறையுடன் சேர்ந்தும் பணியாற்ற வைக்க  உள்ளோம். மாநாட்டு குழுக்கள் கேட்டுக் கொண்டால், அந்தக் குழுக்களில் தன்னார்வ தொண்டர்களை ஈடுபடுத்தத் தயாராக உள்ளோம் என்றார்.

          Kannan Natarajan

          unread,
          Mar 18, 2010, 7:16:02 PM3/18/10
          to Min Thamizh
          செம்மொழி மாநாடு:- கட்டுரையாளர்கள், பார்வையாளர்களுக்கு 1,800 அறைகள் ஒதுக்கீடு

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முக்கிய நிகழ்வான ஆய்வரங்கத்தில் பங்கேற்கும் உள்நாட்டு, வெளிநாட்டு கட்டுரையாளர்களுக்கு 1,800 அறைகள் ஒதுக்கப்பட உள்ளன.

          செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் ஆய்வரங்கத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்கள் தங்கள் கட்டுரைகளை  சமர்ப்பிக்கின்றனர். இதுதவிர வெளிநாட்டு பார்வையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மாநாட்டுக்கு வருகின்றனர்.

          இவர்களுக்கான தங்கும் வசதியை, தங்கும் இட ஏற்பாட்டுக் குழு செய்து வருகிறது. இந்தக் குழு ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

          செம்மொழி மாநாட்டுக்காக மட்டும் கோவையில் சுமார் 4,500க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன.

          இதில், மாநாட்டு ஆய்வரங்கத்துக்கு வருவோருக்கு 1,800 அறைகள் ஒதுக்கப்பட உள்ளன. கட்டுரையாளர்கள் 1400 பேர், பார்வையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் 400 பேர் என மொத்தம் 1,800 அறைகள் ஒதுக்கப்பட உள்ளன.

          மாநாட்டுக்கு வருவோரை தங்க வைக்க 2,000 குளிர் சாதன அறைகள், 1,800 சாதாரண அறைகள் என 4,500க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

          மக்கள் தொடர்பு, விளம்பரக் குழு கூட்டம்:-


          செம்மொழி மாநாட்டுக்கான மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை (18/03/10) நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

          Kannan Natarajan

          unread,
          Mar 23, 2010, 5:30:05 AM3/23/10
          to Min Thamizh
          செம்மொழி மாநாடு:- இன்னும் 93 நாள்கள் - 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டப் பந்தல்

          கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் அறிஞர்கள்,​​ கட்டுரையாளர்கள்,​​ வெளிநாட்டுப் பார்வையாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கு பெறவுள்ளனர்.

          சேவை மையங்கள்...​

          மாநாட்டுக்கு வரும் உள்நாட்டு,​​ வெளிநாட்டு அறிஞர்கள்,​​ கட்டுரையாளர்களின் ​ வசதிக்காக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த சிறப்பு சேவை மையமும்,​​ சென்னையில் ஒரு சேவை மையமும் ஏற்படுத்த வெளிநாட்டு பேராளர் தொடர்புக் குழு திட்டமிட்டுள்ளது.​ ​

          தகவல் தொகுப்பு மையம்...​

          இது தவிர வெளிநாட்டு அறிஞர்களின் பயணத் தேதி,​​ தங்கும் இடம்,​​ விசா விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில்,​​ தகவல் தொகுப்பு மையம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.​ இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

          பிரமாண்ட பந்தல்...

          மாநாட்டின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சிகள்,​​ கண்காட்சி உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
          இவைகளை மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் கொடிசியா அரங்கத்தை ஒட்டி பிரமாண்டப் பந்தல் அமைக்கப்படுகிறது.​ இந்த பந்தலில் 50 ஆயிரம் பேர் வரை அமர முடியும்.​ பந்தல் அமைக்கும் பணியை மாநாட்டு அரங்க அமைப்புக் குழுவினர் செய்ய உள்ளனர்.​

          ​ஆலோசனை...

          சுமார் 4.5
          லட்சம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்படுகிறது.​ கோவையில் புதன்கிழமை ​(மார்ச் 24) தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி மாநாடு நடைபெறும் கொடிசியா அரங்கைப் பார்வையிடுகிறார்.​ அதன் பின்னர் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

          Kannan Natarajan

          unread,
          Mar 24, 2010, 7:48:08 AM3/24/10
          to Min Thamizh
          செம்மொழி மாநாடு இன்னும் 92 நாள்கள்:- கோவையில் இன்று ஆய்வுக் கூட்டம்

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாக தலைமைச் செயலாளரும்,​​ மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கே.எஸ்.ஸ்ரீபதி தலைமையில் புதன்கிழமை (24/03/10) கோவையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

          கோவை கொடிசியா அரங்கில் காலை 11 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில்,​​ குழுவில் உள்ள அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

          மாநாட்டுக்காக என்னென்ன பணிகள் தொடங்கப்பட்டுள்ளன,​​ ​அவைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.​

          அதேபோல அடுத்தக் கட்டப் பணிகள் குறித்தும் முடிவு செய்யப்படும்.

          ஆய்வரங்க அமைப்பு உதவிக் குழு:​​-

          கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வரங்க அமைப்பு உதவிக் குழு தற்போது வெளிநாட்டு பேராளர் தொடர்புக் குழுவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

          இக்குழுவினர் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கம் மற்றும் இணைய மாநாட்டு ஆய்வரங்கங்களில் பல்வேறு தலைப்பிலான பொருண்மைகளுக்கு ஏற்ப ஆய்வரங்க அரங்குகளை அமைப்பது உள்ளிட்ட பணிகளை கவனிப்பர் என்று குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

          Kannan Natarajan

          unread,
          Mar 25, 2010, 3:49:05 AM3/25/10
          to Min Thamizh
          செம்மொழி மாநாடு இன்னும் 91 நாள்கள்:- துவக்க விழாவுக்கு 8 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட பந்தல்

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவுக்கு 8.25 லட்சம் சதுர ​அடியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது.​ மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தின் பிரதான நுழைவாயில் அருகே துவக்க விழாவுக்கான பந்தல் அமைகிறது.​

          அதேபோல ஆய்வரங்குகள் நடத்த தலா 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் 15 அரங்குகளும்,​​ தலா 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் 15 அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.​ இவை அனைத்தும் ​ குளிரூட்டப்பட்ட அறைகளாகும்.​

          கோவையில் புதன்கிழமை (24/03/10) ஆய்வு மேற்கொண்ட தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி,​​ துவக்க விழா பந்தல்,​​ ஆய்வரங்குகள் அமைப்பது உள்பட மாநாடு தொடர்பான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

          கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தின் ஏ,பி,சி,டி மற்றும் இ அரங்குகளில் ஆய்வரங்கம் நடத்துவதற்கான அரங்குகள் அமைக்கும் பணியைப் பார்வையிட்டார்.​

          உணவுக் கூடம்,​​ தமிழ் இணைய மாநாட்டுக்கான அரங்கம் அமைக்கப்படும் ​பகுதிகளையும் பார்வையிட்டார்.​ மாநாட்டின் பூர்வாங்கப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.​ ​

          முன்னதாக செய்தியாளர்களிடம் ஸ்ரீபதி கூறியது:-

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் கருத்தரங்கம்,​​ ஆய்வரங்கம்,​​ பொழிவரங்கம் மற்றும் துவக்க விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி அரங்குகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.​ இதில் தொய்வோ,​​ சுணக்கமோ இல்லை.​ அனைத்துப் பணிகளும் குறித்த காலத்துக்குள் ​நிறைவடையும். கட்டமைப்பு வசதிகளைப் பொருத்தவரை அவிநாசி சாலையில் நடைபாதை அமைப்பது,​​ ஹோப் காலேஜ்
          ரயில்வே மேம்பாலம் விரிவாக்கம் ஆகிய பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் முடியும்.​ அதேபோல விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் நடைபெறக்கூடிய மேம்பாட்டுப் பணிகளும் விரைவில் நிறைவடையும்.​ இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

          அரங்கம் அமைத்தல்,​​ கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பணிகள் நடைபெறும் சூழலைப் பொருத்து தேவைப்பட்டால் கூடுதலாக தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றார்.

          Kannan Natarajan

          unread,
          Mar 26, 2010, 6:06:55 PM3/26/10
          to Min Thamizh
          செம்மொழி மாநாடு இன்னும் 89 நாள்கள்

          140 ஆய்வுச் சுருக்கங்கள் தேர்வு:-​​

          இணைய மாநாட்டுக் குழு ஆய்வரங்கத்துக்கு 400க்கும் மேற்பட்ட ஆய்வுச் சுருக்கங்கள் பெறப்பட்டன.​

          இதில் 140 ஆய்வுச் சுருக்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.​

          முழுக்கட்டுரைகளையும் அனுப்பும்படி கடிதம் அனுப்பி வருகிறோம்.

          இணைய மாநாட்டு ஆய்வரங்கத்துக்கு சுமார் 5க்கும் மேற்பட்ட அரங்குகள் ஒதுக்கப்பட உள்ளன.​

          இக்குழுவின் அடுத்தக் கூட்டம் சென்னையில் வரும் மார்ச் 31ம் தேதி நடைபெறுகிறது என்றார் குழுவின் தலைவரும்,​​ ஐ.ஐ.டி.​ கான்பூர் தலைவருமான மு.ஆனந்தகிருஷ்ணன்.

          Kannan Natarajan

          unread,
          Mar 27, 2010, 5:50:06 PM3/27/10
          to Min Thamizh
          செம்மொழி மாநாடு இன்னும் 88 நாள்கள்:- ஆய்வரங்கத்துக்கான மாதிரி அரங்குகள் ஆய்வு

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்குகள் நடத்துவதற்கான மாதிரி அரங்கத்தை மாநிலங்களவை உறுப்பினரும், மாநாட்டின் ஆய்வரங்க அமைப்புக் குழுச் செயலருமான கனிமொழி சனிக்கிழமை (27/03/10) பார்வையிட்டார்.

          மாநாட்டின் துவக்க விழா, ஆய்வரங்கம், கருத்தரங்கம், பொழிவரங்கம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது.

          ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் ஆய்வறிக்கைகளை ஆய்வரங்கில் சமர்ப்பிக்கின்றனர்.

          இதையொட்டி பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 3 வகையாக 25 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

          இருக்கைகள், ஒளி - ஒலி வசதி, குளிர்சாதன வசதி, ஆய்வறிக்கையின் சுருக்கத்தை கணினி மூலம் பெரிய திரையில் பங்கேற்பாளர்கள் பார்க்கும் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

          இதன்படி மாதிரி ஆய்வரங்கம் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது.

          இந்த அரங்கை எம்.பி கனிமொழி பார்வையிட்டு, மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

          ஒரு ஆய்வரங்கில் நிகழ்ச்சி நடைபெறும்போது அருகே இருக்கும் அரங்கில் அந்த நிகழ்ச்சியின் ஒலி கேட்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

          ஓர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சி மற்றொரு அரங்கிற்கு கேட்காதவாறு அரங்குகள் அமைக்கப்படும்.

          இதனால் ஆய்வரங்க நிகழ்ச்சிகளில் இடையூறு ஏற்படாது என்று ஆட்சியர் உமாநாத் தெரிவித்தார்.

          ஆய்வரங்கத்துக்கான அரங்க அமைப்பு குறித்து தமிழக முதல்வரிடம் தெரிவித்து, ஆலோசனைகளைப் பெறலாம் என்று எம்.பி கனிமொழி கூறினார்.

          மாநாட்டிற்கு வருகை தரும் தமிழறிஞர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து, தங்குமிட ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும், ஊரகத் தொழில் துறை அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.

          தமிழறிஞர்களை அவர்களது தங்கும் இடங்களில் இருந்து மாநாட்டு அரங்கிற்கு அழைத்து வருவது, அவர்களுக்கான பாதுகாப்பு குறித்து மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு உடன் ஆலோசித்தார்.

          கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்கு 120 அடி அகலத்தில் அமைக்கப்படும் புதிய நுழைவாயில், திறந்த வெளி அரங்கம் அமைக்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

          Kannan Natarajan

          unread,
          Mar 30, 2010, 11:19:21 PM3/30/10
          to Min Thamizh
          அரசுத் துறைகளில் எழுத்துரு பிரச்னை:- செம்மொழி மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?

          தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகள் அனைத்திலும் ஒரே மாதிரியான எழுத்துரு (font) பயன்படுத்தப்படுவதில்லை. இதனால், நிர்வாக ரீதியாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

          தமிழகத்தில் தலைமைச் செயலகம் முதல் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் கணினியின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

          • கோப்புகளை தயாரிப்பது
          • ஊழியர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வைப்பது
          • அரசாணை தயாரித்து வெளியிடுவது
          உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கணினி மூலமே நடைபெறுகின்றன. கோப்புகளை கணினியில் கையாளும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்ற கருத்தும் நிலவுகிறது.

          ஆனால், அரசுத் துறைகளின் கணினியில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு துறைக்கும் இது வேறுபடுகிறது. கன்னியாகுமரியில் இருந்து ஒரு செய்தியை இமெயில் மூலம் அனுப்பினால், எழுத்துரு பிரச்னை காரணமாக சென்னையில் அதைப் படிக்க முடிவதில்லை. இந்தப் பிரச்னை அரசுத் துறைகளில் தொடர்கதையாகி வருகிறது.

          பல
          லட்ச ரூபாய் செலவு:-

          ஒவ்வொரு அரசுத் துறையும் தனியாரிடம் இருந்து எழுத்துருக்களை கொள்முதல் செய்கின்றன. இதற்கான, உரிமக் கட்டணமாக ஒவ்வொரு துறையும் ஆண்டுக்கு பல
          லட்சம் ரூபாய்களை செலவு செய்கின்றன.

          எழுத்துருக்களை தயாரித்து வழங்க "எல்காட்" நிறுவனம் முயற்சிகளை எடுத்தது. ஆனால், அது கை கூடவில்லை. அரசின் மிகப் பெரிய துறைகள் எழுத்துருக்களுக்காக தனியாரை நாடும் நிலை இன்றும் தொடர்கிறது.

          2006ம் ஆண்டில்:-
           

          2006 - 2007ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் எழுத்துருக்களை உருவாக்குவது குறித்து கூறப்பட்டுள்ளது.

          எழுத்துருக்களுக்காக அதிகம் செலவு செய்யப்படுகிறது எனவும், இதைக் குறைக்க அரசு அலுவலகங்களுக்கு எழுத்துருக்களை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, ரூ.20
          லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

          ஆனால், 2007 - 2008ம் ஆண்டு தகவல் தொழில் நுட்பத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், 16 "பிட்" தமிழ் எழுத்துரு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க முனைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

          2008 - 2009ம் ஆண்டு அந்தத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், குழுவின் இறுதி அறிக்கை எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டது. இதன்பின்பு, எழுத்துருக்களை தமிழக அரசே உருவாக்குவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

          ஒருங்குறி (யூனிகோட்):-


          எழுத்துரு பிரச்னையைப் போக்க "ஒருங்குறி" முறை உள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
          ஒருங்குறி முறையால் தமிழ் எழுத்துகள் எந்த எழுத்துருவாக இருந்தாலும் அதைப் படிக்கலாம் என்பது நிஜம். ஆனால், தமிழக அரசுக்கென தனியாக எந்த எழுத்துருவும் இல்லாமல் தனியாரிடம் இருந்து அவற்றைப் பெறுவது எந்த வகையில் நியாயம் என அரசுத் துறை ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாய்க்குப் பதிலாக, புதிய எழுத்துருக்களை அரசே உருவாக்கலாம் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

          செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக, இணைய மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் முக்கிய பிரச்னையாக தமிழக அரசுத் துறைகளுக்கு நிலையான ஒரு எழுத்துருவை உருவாக்குவது குறித்து கட்டாயம் விவாதிக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

          Kannan Natarajan

          unread,
          Mar 30, 2010, 11:53:28 PM3/30/10
          to Min Thamizh
          செம்மொழி மாநாடு இன்னும் 86 நாள்கள்:- பிரபலங்கள் மூலம் விளம்பரப்படுத்த ஆலோசனை

          முக்கியப் பிரபலங்களை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து விளம்பரப்படுத்த மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு ஆலோசித்து வருகிறது.

          மேலும்,

          1. அண்டை மாநிலத் தலைவர்களை அழைத்தல்
          2. மாநாடு குறித்த குறும்படங்களை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெளியிடுதல்
          3. எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைப் பயன்படுத்துதல்
          4. அறிவியல் தமிழ் வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல்

          உள்ளிட்டவற்றை செயல்படுத்த செம்மொழி மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு ஆலோசித்து வருகிறது.

          அரங்க வடிவமைப்பு:​-

          உலகத் தமிழ்
          ச் செம்மொழி மாநாட்டையொட்டி,​​ ஆய்வரங்கம்,​​ சொற்பொழிவரங்கம்,​​ கவியரங்கம் உள்ளிட்டவைகளுக்காக சுமார் 30 அரங்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

          இந்த அரங்க ஏற்பாடுகள் மற்றும் அரங்க வடிவமைப்பு உள்ளிட்டவற்றை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஏற்கெனவே ஆய்வு செய்தார்.

          அரங்குகளின் உள்அலங்காரம்,​​ கம்ப்யூட்டர்கள்,​​ ஒலி அமைப்பு குறித்து அவர் சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வு செய்தார்.​ ​

          புதன்கிழமை ​(மார்ச் 31)  இணைய மாநாட்டுக் குழு கூட்டம்:-​​

          தமிழ் இணைய மாநாட்டுக் குழுவின் கூட்டம் புதன்கிழமை ​(மார்ச் 31) நடைபெறுகிறது.​ இணைய மாநாட்டு ஆய்வரங்கத்துக்கான அரங்குகள் ஒதுக்கீடு,​​ கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்,​​ ஆய்வரங்கத்தில் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளவர்களின் விவரம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும்.​ இக்குழு ஐ.ஐ.டி கான்பூர் தலைவர் மு.​ ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

          Kannan Natarajan

          unread,
          Apr 1, 2010, 4:13:19 AM4/1/10
          to Min Thamizh
          இணையத் தமிழ் மாநாடு:- கட்டுரை போட்டிகள் பரிசுக்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி, இணையத் தமிழ் மாநாடு நடத்தப்படுகிறது.

          இந்த மாநாட்டை மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையதளம் வழியாக கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
           
          இணையத் தமிழ் மாநாட்டை ஒட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகளுக்கு பரிசுகளை அளிக்க ரூ. 10
          லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
           
          கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் நடத்துவது குறித்து, தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை (31/03/10) நடைபெற்றது.
           
          அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இணையத் தமிழ் மாநாட்டுக் குழுவின் தலைவருமான ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

          தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பி.டபிள்யூ.டேவிதார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

          கூட்டத்துக்குப் பின், செய்தியாளர்களிடம் ஆனந்த கிருஷ்ணன் கூறியது:-

          "பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கட்டுரைப் போட்டியில் 8,400 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
           
          இப்போது, கல்லூரி அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.
           
          மருத்துவம், பொறியியல், இயன்முறை மருத்துவம், கலை மற்றும் அறிவியல், பல் மருத்துவம், சட்டக் கல்லூரி, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
           
          கட்டுரைகள் 250 முதல் 500 வார்த்தைகளில் அமைய வேண்டும். அதாவது, இரண்டு ஏ-4 தாள்கள் அளவுக்கு இருக்க வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை, இணையதள பதிவுகளில் தமிழ் மொழி மூன்றாவது இடத்திலும், உலக அளவில் 68வது இடத்திலும் உள்ளது. இதுபோன்ற போட்டிகளை நடத்துவதன் மூலம், அது மேலும் முன்னேற்ற நிலைக்குச் செல்லும்",என்றார் ஆனந்த கிருஷணன்.

          Kannan Natarajan

          unread,
          Apr 1, 2010, 7:08:48 AM4/1/10
          to Min Thamizh
          விக்கிப்பீடியா நிறுவனத்துடன் இணைந்து தமிழ் தகவல் பக்கங்கள் திரட்டும் போட்டி

          உலகத் தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டு, தமிழக அரசு மற்றும் தமிழ் விக்கிப்பீடியா சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான, விக்கிபீடியா தமிழ் தகவல் பக்கங்கள் போட்டி நடத்தப்படுகிறது.

          உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று (31/03/10) நடந்தது. இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், இராஜ்யசபா எம்.பி., கனிமொழி, தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் தேவிதார், 'எல்காட்' மேலாண் இயக்குனர் சந்தோஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

          கூட்டத்திற்கு பின், நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:-

          உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்காக, பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியைத் தொடர்ந்து, தற்போது கல்லூரி மாணவர்களுக்கும் போட்டி நடத்தப்படவுள்ளது. விக்கிபீடியா இணையதளத்தில், உலகில் உள்ள அனைத்து துறைகள் பற்றிய தகவல்களும் உள்ளன.

          இந்த இணையதளத்தில், 32 இலட்சம் பக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் மொழியில் 22 ஆயிரம் பக்கங்கள் மட்டுமே உள்ளன. இந்திய மொழிகளில், இந்தி 68 ஆயிரம் பக்கங்களுடன் முதல் இடத்திலும், தெலுங்கு 44 ஆயிரம் பக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழ் உலகளவில் 68வது இடத்திலும், இந்திய அளவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

          தமிழ் மொழியிலுள்ள பல அரிய தகவல்களை, இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்காக தமிழக அரசும், விக்கிப்பீடியா இணையதளமும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு, விக்கிப்பீடியா தமிழ் தகவல் பக்கங்கள் போட்டியை நடத்துகிறது. '

          www.tamilint2010.tn.gov.in
          ' இணையதளம் மூலம் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், பிசியோதெரபி, சித்த மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பல் தொழில்நுட்பப் பயிலகம் ஆகிய 13 துறைகளில் போட்டி நடக்கிறது. இப்போட்டியில், பங்கேற்க ஏப்ரல் 30ம் தேதிக்குள், தகவல் பக்கங்களை அனுப்ப வேண்டும்.

          தகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில், இனம், சமயம், அரசியல், தனிநபர் குறை, வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பை தூண்டாத வகையில் அமைய வேண்டும். இப்பக்கங்கள் 250 முதல் 500 சொற்கள் கொண்டதாக, 'யுனிகோட்' முறையில் அமைய வேண்டும். இதில் சிறந்த பக்கங்கள் தேர்வு செய்யப் பட்டு, பரிசு வழங்கப்படுவதுடன், தேர்வாகும் பக்கங்கள் விக்கிப்பீடியா இணையதளத்திலும் வெளியிடப்படும். தமிழகத்திலுள்ள மூன்றாயிரம் கல்லூரிகளிலிருந்து, 50 ஆயிரம் தகவல் பக்கங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தில், ஆண்டுதோறும் இத்தகைய போட்டிகள் நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசுபவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இவ்வாறு அனந்த கிருஷ்ணன் கூறினார்.

          அரசு அலுவலகத்தில், 2 மாதத்தில் தமிழ் 'யுனிகோட்' எழுத்துரு:-


          தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் தேவிதார் கூறும்போது, ''அரசு அலுவலகங்களில், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பல்வேறு தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு காண, ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ''தமிழ் இணையப் பல்கலைக்கழகம் சார்பில், இக்குழுவின் கூட்டங்கள் நடத்தப்பட்டு, இரண்டு மாதத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு முன், கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கான பொதுவான தமிழ் எழுத்துரு 'யுனிகோட்' தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்'' என்றார்.

          நன்றி:- தினமலர்

          Kannan Natarajan

          unread,
          Apr 1, 2010, 11:37:17 PM4/1/10
          to Min Thamizh
          செம்மொழி மாநாடு இன்னும் 83 நாள்கள்:- ஊர்வலத்தில் 40 அலங்கார ஊர்திகள்
           
          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஊர்வலத்தில் 40 அலங்கார ஊர்திகள் அணி வகுக்கின்றன என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

          செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் பணிகளை கோவையில் வியாழக்கிழமை (01/04/10) நேரடியாக அவர் ஆய்வு செய்தார்.

          செஞ்சிலுவைச் சங்க கட்டடம் அருகே அமைக்கப்பட்டுள்ள மாதிரி நிழற்குடை, மாநாட்டு ஊர்வலம் துவங்க உள்ள வ.உ.சி பூங்கா மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மாநாடு நடைபெற உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகம், ஊர்வலப் பாதையில் அமைக்கப்பட உள்ள நடமாடும் கழிப்பறை, உயர்கோபுர விளக்குகள் நிறுவும் பணி, இணைப்புச் சாலை அமைக்கும் பணி, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஆய்வரங்கம் நடத்துவதற்கான அரங்குகள் அமைக்கும் பணி ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

          ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, தனி அலுவலர் கே.அலாவுதீன், ஆட்சியர் பி.உமாநாத், மேயர் ஆர்.வெங்கடாசலம், மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் உடன் சென்றனர்.

          பின்னர் ரெட்பீல்டில் உள்ள செம்மொழி மாநாடு அலுவலகத்தில், மாநகராட்சி, மின் வாரியம், நெடுஞ்சாலைகள், பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி பணிகளைத் துரிதப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

          பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:-

          செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் அனைத்துப் பணிகளும் எதிர்பார்த்ததைப் போல சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாநாட்டின் ஆய்வரங்கம் நடத்துவதற்காக 30 அரங்குகள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் அமைக்கப்படுகின்றன. இதில் இருக்கை உள்பட அரங்க அமைப்பின் மாதிரியைப் பார்வையிட்டு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். அரங்கம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும்.

          ஊர்வலத்தில் 40 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. மாநாட்டின் சிறப்பை எடுத்துக்கூறும் வகையில் இந்த ஊர்திகள் வடிவமைக்கப்படுகின்றன. வஉசி பூங்காவிலிருந்து கொடிசியா தொழிற்காட்சி வளாகம் வரை ஏறத்தாழ 9 கி.மீ.க்கு ஊர்வலம் செல்லும்.

          குடியரசுத் தலைவர், தமிழக முதல்வர், முக்கியத் தலைவர்கள் ஊர்வலத்தைப் பார்வையிட தனி மேடை அமைக்கப்படுகிறது. இதேபோல வெளிநாட்டு அறிஞர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு 4 இடங்களில் மேடைகள் அமைக்கப்படுகின்றன.

          மாநாட்டின் நினைவாக சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா உருவாக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட பணிகள் விரைவில் துவங்கும் என்றார்.
           
          நன்றி:- தினமணி

          Kannan Natarajan

          unread,
          Apr 2, 2010, 4:49:01 PM4/2/10
          to Min Thamizh
          செம்மொழி மாநாடு:- கோவைக்கு சிறப்புப் பேருந்து வசதி

          உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு பெங்களூர், திருவனந்தபுரத்தில் இருந்து பஸ் வசதி செய்யப்படும் என்று மாநாட்டின் போக்குவரத்து ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

          போக்குவரத்து ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை (02/04/10) நடைபெற்றது.

            • ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி
            • போக்குவரத்து துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா
            • ஆணையர் மச்சேந்திரநாதன்
            • செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சி.காமராஜ்
            • மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத்
            • சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி
            • முன்னாள் எம்.பி க.ரா.சுப்பையன்
            உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

            மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் தேவைக்கு ஏற்ப வாகன வசதி, தற்போதைய நிலவரப்படி வெளிநாடுகளில் இருந்து வரும் கட்டுரையாளர்கள் 214 பேர், பார்வையாளர்கள் 342 பேருக்குத் தேவையான வாகன வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
             
            கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்களுக்குத் தேவையான வாகன வசதிகள் குறித்து கலை பண்பாட்டுத் துறை ஆணையர் ப.அ.மணி விளக்கினார்.

            வெளிநாடு, வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து ஏறத்தாழ 400 பத்திரிகையாளர்கள் கோவைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ்கள், கோவையில் அவர்கள் தங்கும் இடத்திலிருந்து கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்கு அழைத்து வர பஸ் வசதி தேவைப்படும் என்று செய்தித் துறை இயக்குநர் காமராஜ் கூறினார்.

            அதேபோல பாதுகாப்புப் பணிக்குத் தேவையான வாகனங்கள் தேவை குறித்து அமைச்சர் சாமிநாதனிடம்,  மாநகரக் காவல் துணை ஆணையர் என்.காமினி தெரிவித்தார்.

            பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் கூறியது:-

            போக்குவரத்து ஏற்பாட்டுக் குழுவின் 2வது கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரவேற்புக் குழு மற்றும் இதரக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் வாகன வசதி ஏற்படுத்தப்படும். தேவைக்கேற்ப வாகன வசதி முழுமையாகச் செய்து கொடுக்கப்படும்.
             
            கோவைக்கு
            ரயில் மற்றும் விமான சேவையை அதிகப்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் அறிவுரையின்படி தலைமைச் செயலர் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இருகூர் ரயில் பாதைப் பணி முடிந்தவுடன் ரயில் சேவை அதிகப்படுத்தப்படும்.
             
            வெளி மாநிலங்களில் இருந்து குறிப்பாக பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து கோவைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

            நகரையொட்டி முக்கியச் சாலைகளான
            • மேட்டுப்பாளையம் சாலை
            • சத்தியமங்கலம் சாலை
            • அவிநாசி சாலை
            • பொள்ளாச்சி சாலை
            • திருச்சி சாலை
            • பாலக்காடு சாலை
            ஆகியவற்றில் தாற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது என்று அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி தெரிவித்தார்.

            தாற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கொடிசியா வளாகத்துக்கு 100 பஸ்கள் இயக்கப்படும்.

            மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் மூவரைக் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.

            மருத்துவ வசதிக்காக "ஹெல்ப்-லைன்" வசதி ஏற்படுத்தப்படும்.

            வெளிநாட்டு அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் தங்குமிடங்களில் இருந்து மாநாட்டுக்குச் சென்றுவர வால்வோ பஸ்கள் இயக்கப்படும்.

            மாநாடு தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் தங்குமிடங்களில் சிறு கையேடு வைக்கப்படும் என்று ஆட்சியர் உமாநாத் தெரிவித்தார்

            Kannan Natarajan

            unread,
            Apr 3, 2010, 3:32:16 PM4/3/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு இன்னும் 81 நாள்கள்:- மே இறுதிக்குள் கிடைக்கும்படி அழைப்பிதழ் அனுப்ப முடிவு

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை மே இறுதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான வெளிநாட்டு பேராளர் தொடர்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், குழுத் தலைவர் கவிஞர் வைரமுத்து தலைமையில் சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பாலாறு இல்லத்தில் சனிக்கிழமை (03/04/10) நடைபெற்றது.

            இதில் வரவேற்புக் குழுவின்
            • துணைத் தலைவரும், சட்டத் துறை அமைச்சருமான துரைமுருகன்
            • வெளிநாட்டு பேராளர் தொடர்புக் குழுவின் இணைத் தலைவர் கனிமொழி எம்.பி.
            • துணைத் தலைவர் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுவாமிநாதன்
            • கோவை மாநகராட்சி மேயர் வெங்கடாசலம்
            • தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராஜேந்திரன்
            • ஒருங்கிணைப்பாளர் "தினமணி" ஆசிரியர் கே.வைத்தியநாதன்
            உள்பட பலர் பங்கேற்றனர்.

            வெளிநாடுகளில் இருந்து மாநாட்டு ஆய்வரங்கத்தில் கட்டுரை படிக்க வரும் கட்டுரையாளர்கள், பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்களை விமான நிலையங்கள்,
            ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து வரவேற்று அழைத்துச் சென்று தங்க வைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

            வெளிநாட்டு கட்டுரையாளர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கென தனித்தனியாக தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.
            ராஜேந்திரன் கூறினார்.

            இதற்கு ஹோட்டல்களில் ஒவ்வொரு தளத்தில் தங்கியிருக்கும் நபர்களுக்கேற்ப 7 பேருக்கு ஒரு தன்னார்வலரை  நியமிக்கலாம் என வைரமுத்து யோசனை தெரிவித்தார்.

            மாநாட்டுக்கு வருபவர்கள் தங்களுக்கான தகவல்களை அறியவும், எளிதாக குழுவினரைத் தொடர்பு கொள்ள வசதியாக இலவச தொலைபேசி எண் சேவையை வழங்கலாம் என்று "தினமணி" ஆசிரியர் கே.வைத்தியநாதன் தெரிவித்தார்.

            இதற்குப் பதில் அளித்த மாநாட்டு சிறப்பு அலுவலர் க.அலாவுதீன், பொதுமக்களின் பொதுச் சேவைக்காக தற்போது மூன்று இலக்க இலவச தொலைபேசி எண் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கென தனி இலவச தொலைபேசி சேவை வழங்குவது பற்றி தொலைத் தொடர்புத் துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். ஹோட்டல்களில் தகவல் மையங்களை நிறுவ ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

            எனவே குழுக்களின் முழு விவரங்களை அறிந்த தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்று கனிமொழி எம்.பி. கருத்து தெரிவித்தார்.

            அதைத் தொடர்ந்து, மாநாட்டு அழைப்பிதழ்களை எவ்வாறு அச்சடிப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

            ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு குழுவின் தலைவர் கவிஞர் வைரமுத்து கூறியதாவது:-

            செம்மொழி மாநாட்டுக்கான அழைப்பிதழ்களின் மாதிரிகளை முதல்வர் கருணாநிதி இறுதி செய்துவிட்டார். இந்த மாநாட்டு அழைப்பிதழ்களை, வெளிநாட்டு அறிஞர்கள், விருந்தினர்களுக்கு மே இறுதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

            Kannan Natarajan

            unread,
            Apr 3, 2010, 4:57:36 PM4/3/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு:- 1.5 லட்சம் பேர் உணவு அருந்த தயாராகும் மெகா உணவு வளாகம்

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 1.5
            லட்சம் பேர் உணவு அருந்தும் வகையில் 2 ஏக்கரில் மெகா உணவு வளாகம் அமைக்கப்படவுள்ளது என்று விருந்தோம்பல் குழுத் தலைவரும், உணவுத் துறை அமைச்சருமான எ.வ.வேலு கூறினார்.

            செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்தை அமைச்சர் வேலு தலைமையில் விருந்தோம்பல் குழு ஒருங்கிணைப்பாளர் க.சண்முகம் (உணவுத் துறை செயலர்), பொதுத் துறை செயலர் தேவஜோதி ஜெகராஜன், மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் ஆகியோர் சனிக்கிழமை (03/04/10) பார்வையிட்டனர்.

            கொடிசியா வளாகத்தில் உள்ள உணவுக் கூடத்தின் இரு தளங்களிலும் குளிர் சாதன வசதிகள் அமைக்கப்படுவதை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

            இந்த உணவுக் கூடத்தில் தமிழ் அறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கப்படவுள்ளது.

            மாநாட்டின் முதல் நாள், மொழி ஆய்வரங்கை முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க அரங்கின் பின்பகுதியில் 30 ஆயிரம் சதுர அடியில் பந்தல் அமைக்கவும் அமைச்சர் வேலு உத்தரவிட்டார்.

            இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

            செம்மொழி மாநாட்டின் முதல் மற்றும் கடைசி நாள்களில் 1.5
            லட்சம் பேர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு உணவு வழங்க 2 ஏக்கரில் வணிக முறையில் மெகா உணவு வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதில் 10 தனியார் உணவு விடுதிகள் அமைக்க டெண்டர் விடப்படவுள்ளது.

            உணவுக் கூடம் மற்றும் முகப்பு, தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். உணவுக் கூடத்தை தூய்மைப்படுத்த துப்புரவாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

            மாநாட்டுக்கு முன்பு, கோவை நகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன் அருகே உணவுத் திருவிழாவும் நடைபெறும் என்றார்.

            Kannan Natarajan

            unread,
            Apr 6, 2010, 3:55:36 AM4/6/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு இன்னும் 79 நாள்​கள்:- விமான, ரயில் நிலையங்களில் தகவல் மையங்கள்

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கம் மற்றும் பொது அரங்கத்தில் பங்கேற்க வரும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தமிழறிஞர்களை வரவேற்கவும், அழைப்பிதழ்களை அச்சிட்டு அனுப்புவதற்கான பணிகளையும் வரவேற்புக் குழு மேற்கொண்டு வருகிறது.

            இக்குழுவின் தலைவராக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி உள்ளார்.

            துணைத் தலைவராக சட்டத் துறை அமைச்சர் துரைமுருகனும், உறுப்பினராக சட்டப் பேரவைத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

            வரவேற்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், பொதுத் துறைச் செயலாளரும், குழு ஒருங்கிணைப்பாளருமான தேவஜோதி ஜெகராஜன் தலைமையில் கோவையில் அண்மையில் நடைபெற்றது.

            இதில் கோவை மாவட்ட ஆட்சியர் உமாநாத், மாநாட்டு தனி அலுவலர் டாக்டர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

            உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழறிஞர்களை விமான நிலையம் மற்றும்
            ரயில் நிலையங்களில் இருந்து வரவேற்று அழைத்துச் செல்லுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

            சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்களில் வரவேற்புக் குழு சார்பில் தகவல் மையங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

            விமான நிலையங்களில் தகவல் மையங்களை அமைப்பது தொடர்பாக, இந்திய விமான நிலையங்களின் ஆணையக் குழுத் தலைவரிடம் முறையான அனுமதி பெறவும் முடிவு செய்யப்பட்டது.

            அதேபோல
            ரயில் நிலையங்களில் வரவேற்புக் குழுவின் தகவல் மையங்களை அமைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெறவும் முடிவு செய்யப்பட்டது.

            தகவல் மையங்களில் அதிவேக இன்டர்-நெட் சேவையுடன் இணைய வசதியுடன் கம்ப்யூட்டர்கள், தொலைபேசிகளை அமைப்பது பற்றியும் முடிவு செய்யப்பட்டது.

            உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்கள் தங்கும் வசதி குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது.

            வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பு பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து  மேற்கொள்வதற்காக, 2 அலுவலர்கள் மே 15ம் தேதி முதல் நியமிக்கப்பட உள்ளதாக குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

            Kannan Natarajan

            unread,
            Apr 7, 2010, 11:58:16 PM4/7/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு இன்னும் 77 நாள்கள்:- மாநாட்டு சிறப்பு மலர் - சென்னையில் 11ம் தேதி ஆலோசனைக் கூட்டம்
             
             
            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கென சிறப்பு மலரை தயாரித்து அச்சிட்டு வெளியிடுவதற்காக, சிறப்பு மலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
             
            • மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன்
            • முனைவர் சிலம்பொலி செல்லப்பன்
            • சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம்
            ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
             
            தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் எழிலரசு, குழு ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
             
            சிறப்பு மலர்க் குழுவின் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமையில் சென்னையில் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது.

            சிறப்பு மலருக்கான கவிதை, கட்டுரைகள் அனைத்தும் பல்வேறு தமிழ் அறிஞர்களிடம் இருந்து பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டு மலரை எத்தனை பக்கங்களில் வடிவமைப்பது, எங்கு அச்சிடுவது என்பது தொடர்பாக இக்கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

            Kannan Natarajan

            unread,
            Apr 8, 2010, 3:07:10 PM4/8/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு இன்னும் 76 நாள்கள்:- கம்பியில்லா இணைய வசதி வளாகமாகிறது 'கொடிசியா'

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி உடைய வளாகமாக மாற்றப்படுகிறது.

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் ​நடத்தப்படுகிறது.​

            கான்பூர் ஐ.ஐ.டி தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் தமிழ் இணைய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

            கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தற்போது குளிரூட்டப்பட்ட வசதி உள்ள 'இ' பிளாக் அரங்கம் இணைய மாநாட்டுக்கு ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

            இணைய மாநாட்டையொட்டி பள்ளி,​​ கல்லூரி மாணவர்களுக்கு இணைய ​போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.​

            இணைய மாநாடு நடைபெறும் அரங்குக்கு இணையதள இணைப்புக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூலமாக கம்பி இழை கேபிள்கள் அமைக்கப்படுகின்றன.​

            இணைய மாநாடு நடைபெறும் அரங்கம்,​​ பத்திரிகையாளர்களுக்கான அரங்கம்,​​ பொது தகவல் மையம் ஆகியவற்றில் துரித இணைய இணைப்பு வசதியுடன் கூடிய கணினிகள் ​நிறுவப்படுகின்றன.​

            மேலும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் முழுவதும் கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.​

            இதற்கான ஆயத்தப் பணிகள் தொடர்பாக எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநரும்,​​ இணைய மாநாட்டின் உறுப்பினருமான சந்தோஷ் பாபு,​​ கொடிசியா தொழிற்காட்சி ​வளாகத்தை வியாழக்கிழமை (08/04/10) பார்வையிட்டார்.​

            http://www.dinamani.com/Images/article/2010/4/8/santhosh.jpg

            இணைய மாநாட்டுக்குத் தேவையான வசதிகளைச் செய்வது தொடர்பாக பி.எஸ்.என்.எல்,​​ தேசிய தகவல் மைய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

            இணையதள இணைப்பு,​​ அலைபேசி சேவை ஆகியவற்றுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

            Kannan Natarajan

            unread,
            Apr 9, 2010, 4:48:36 PM4/9/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு இன்னும் 75 நாள்கள்:- ஊர்வலத்தில் 34 வகையான பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு துவக்க விழாவின் போது நடைபெறும் ஊர்வலத்தில் 34 வகையான பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.​

            மாநாட்டின் ஊர்வலம் வ.உ.சி பூங்கா மைதானத்தில் துவங்கி கொடிசியா ​தொழிற்காட்சி வளாகத்தில் நிறைவடைகிறது.​

            அவிநாசி சாலையில் 9 கி.மீ தூரத்துக்கு இந்த ஊர்வலம் இருக்கும்.​

            இதில் ஏறத்தாழ 40 அலங்கார ஊர்திகள் இடம் ​பெறுகின்றன.​

            அண்ணா முதல்வராக இருந்தபோது சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.​ அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த,​​ தற்போதைய முதல்வர் கருணாநிதி ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்.​

            அந்த மாநாட்டின் ஊர்வலம் மிகுந்த பாராட்டைப் பெற்றது.​

            அதைப்போலவே செம்மொழி மாநாட்டின் ஊர்வலம் சிறப்புற அமைய முதல்வர் ​நேரடி கவனம் செலுத்தி வருகிறார்.​ ​​

            • ஒளவைக்கு நெல்லிக் கனி வழங்கிய அதியமான்
            • முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி
            என கடையேழு வள்ளல்களின் சிறப்பியல்புகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அமைக்க முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார்.​

            தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை விளக்கும் வகையில்
            • ஒயிலாட்டம்
            • மயிலாட்டம்
            • பொய்க்கால் குதிரை ஆட்டம்
            • காவடி ஆட்டம்
            • கரகாட்டம்
            • தேவராட்டம்
            • தப்பாட்டம்
            உள்பட 34 வகையான கலை நிகழ்ச்சிகள் ஊர்வலத்தில் ​இடம்பெறுகின்றன.​

            ஒவ்வொரு அலங்கார ஊர்திக்கும் இடையே கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.​

            தமிழகம் முழுவதும் இருந்து 2 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.​

            இவர்கள் தங்குவதற்கும்,​​ கலைநிகழ்ச்சி ஒத்திகை பார்ப்பதற்கும் 6 திருமண மண்டபங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.​

            ஊர்வலத்தைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.​

            அவிநாசி சாலையின் ஒரு பகுதியில் ஊர்வலம் செல்லும்.​ அதை மறுபுறத்தில் இருந்து பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன.

            குடியரசுத் தலைவர்,​​ முதல்வர்,​​ வெளிநாட்டு அறிஞர்கள்,​​ முக்கிய பிரமுகர்கள் ஊர்வலத்தைப் பார்வையிடுவதற்கு தனி மேடைகள் அமைக்கப்படுகின்றன.

            விஜயராகவன்

            unread,
            Apr 9, 2010, 5:10:23 PM4/9/10
            to மின்தமிழ்
            On 8 Apr, 20:07, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
            > *செம்மொழி மாநாடு இன்னும் 76 நாள்கள்:- கம்பியில்லா இணைய வசதி வளாகமாகிறது
            > 'கொடிசியா'*

            >
            > உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம்
            > கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி உடைய வளாகமாக மாற்றப்படுகிறது.

            கொடிசியா என்பது தமிழ் வார்த்தை கூட அல்ல, அங்கு செம்மொழி மாநாடு நடப்பது
            `செம்மொழியின்` நிலையை சரியாகா காட்டுகிரது - அதாவது ஆங்கில ஆதரவு
            இல்லாமல் `செம்மொழி` பேச்சு நடக்காது.


            விஜயராகவன்

            N. Ganesan

            unread,
            Apr 9, 2010, 6:04:08 PM4/9/10
            to மின்தமிழ்

            தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் மக்களிடையே தழைத்துவருவது கண்கூடு.
            பேச்சளவில் தமிழ், குழந்தைகளை முடிந்தால் ஆங்கிலக் கல்விக்கு
            என்று பெற்றோர் முடிவெடுத்துக் கடன்பட்டாவது கான்வெண்ட் என்னும் நிலை.

            திராவிட இயக்கத்தின் அடித்தளம் ஆங்கிலேயர்கள். தேவநேயப் பாவாணர் ஐயா
            உயர்கல்விக்கு ஆங்கிலம் கல்லூரிகளில் தேவை என்ற கொள்கை கொண்டவர்,
            ஏராளமான எழுத்துக்கள் பாவாணரிடமிருந்துண்டு. ஆனால், கல்லூரிக் கல்வி,
            அறிவியல் போன்றவை ஆங்கிலவழி என்பதில் உறுதியாய் இருந்த பெரியவர் அவர்.

            இன்று காலவளர்ச்சியில் இஞ்சினீயரிங் தமிழில் கற்பிக்க அரசு
            முன்னெடுக்கிறது.
            அரசு பணிகளில் முன்னுரிமை என்று அளித்தால் அதற்கும் கூட்டம் வரும்.
            இணையம், விக்கிபீடியா, விக்சனரி, பொறியியல்/அறிவியல்/மருத்துவம்/கணியியல்
            பட்டப் படிப்புகள் தமிழில், ... என்ற திட்டங்கள் முன்னேறும்போது
            தமிழ் அடிப்படை அறிவியலைக் கதைக்க வழிவகைகளை உண்டாக்கிக் கொள்ளும்.

            நா. கணேசன்

            தாரகை

            unread,
            Apr 9, 2010, 11:21:41 PM4/9/10
            to மின்தமிழ்
            > கொடிசியா என்பது தமிழ் வார்த்தை கூட அல்ல, அங்கு செம்மொழி மாநாடு நடப்பது
            > `செம்மொழியின்` நிலையை சரியாகா காட்டுகிரது - அதாவது ஆங்கில ஆதரவு
            > இல்லாமல் `செம்மொழி` பேச்சு நடக்காது.


            Most International seminars/conferences are conducted in halls/
            convention centres where the name of the hall & the contents of the
            seminar do not have connections. Even in western (developed)
            countries, scientific & language conferences are conducted in halls
            which bears the name of other languages!

            A state of any language is more on the outlook of the individual
            rather than the inclination over other languages:-)

            Kannan Natarajan

            unread,
            Apr 11, 2010, 10:36:38 PM4/11/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு இன்னும் 73 நாள்கள்:- 500 பக்கத்தில் தயாராகிறது சிறப்பு மலர்

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக 500 பக்கத்தில் வண்ணமயமாக சிறப்பு மலர் தயாராகிறது.

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக சிறப்பு மலர் தயாரிக்க நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமையில் சிறப்பு மலர்க்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

            இக்குழுவின் 3வது கூட்டம், சென்னையில் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (11/04/10) நடந்தது.

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலருக்கு வரப்பெற்ற கவிதை, கட்டுரைகள் மற்றும் ஓவியங்கள்  குறித்து ஆய்வு செய்யப்பட்டன. சிறப்பு மலர் அச்சிடுதல் தொடர்பாக மேற்கொள்ளபட வேண்டிய பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

            கூட்டத்தில் திட்டக்குழு துணைத் தலைவரும், குழுவின் துணைத் தலைவருமான மு.நாகநாதன், சிலம்பொலி சு.செல்லப்பன், மாநாட்டு தனி அலுவலர் கா.அலாவுதீன், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.இராஜேந்திரன், தமிழ் வளர்ச்சி இயக்குநரும், ஒருங்கிணைப்பாளருமான எழிலரசு, உலகத் தமிழராய்ச்சி நிறுவன இயக்குநரும், உறுப்பினருமான கரு.அழ.குணசேகரன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

            கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் அமைச்சர் க.அன்பழகன் கூறியது:-

            சிறப்பு மலரில் இடம்பெறும் கட்டுரைகள், கவிதைகளுக்கு முதல்வர் கருணாநிதி ஆலோசனை வழங்கி வருகிறார். 

            தமிழ் அறிஞர்கள், வெளிநாட்டு அறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ள 125 கட்டுரைகள், 25 கவிதைகள் வரப்பெற்றுள்ளன.


            எந்த ஒரு சமய இலக்கியமும் புறக்கணிக்கப்படவில்லை. 

            மலரின் முகப்பு அட்டையில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை படமும், தமிழன்னையின் படமும் இடம்பெறும் வகையில் மலர் வடிவமைக்கப்படும்.


            குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா மற்றும் சிங்கப்பூர், மாலத்தீவு, மலேசியா நாட்டு அதிபர்கள், மத்திய - மாநில அரசுகளின் அமைச்சர்களிடம் இருந்து சிறப்பு மலருக்கான வாழ்த்துச் செய்தி பெறப்பட்டு வருகிறது என்றார்.

            Kannan Natarajan

            unread,
            Apr 11, 2010, 10:53:32 PM4/11/10
            to Min Thamizh
            ஆயிரம் கவிஞர்கள் பங்கேற்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி கவியரங்கம் கோவையில் ஜூன் 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறுகிறது.

            இது குறித்து உலகத் தமிழ்ச் செம்மொழி மகாகவியரங்க அமைப்பாளர்கள் கவிதாசன், கோவை கோகுலன், செ.பழனிச்சாமி ஆகியோர் வெள்ளிக்கிழமை (09/04/10) வெளியிட்ட அறிக்கை:-
            கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி உலகத் தமிழ்ச் செம்மொழி கவியரங்கை ஜூன் 5 மற்றும் 6ம் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை வசந்த வாசல் கவிமன்றம், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து இக் கவியரங்கு நடத்தப்படுகிறது.

            சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதியையும் பெற்றுத் தந்துள்ளன.

            1. தொன்மை
            2. தனித்தன்மை, பொதுத்தன்மை
            3. நடுவு நிலைமை
            4. தாய்மைப்பண்பு
            5. பண்பாடு
            6. கலை பட்டறிவு வெளிப்பாடு
            7. பிறமொழி தாக்கமில்லா தனித்தன்மை
            8. இலக்கிய வளம்
            9. உயர் சிந்தனை
            10. கலை, இலக்கியத் தன்மை வெளிப்பாடு
            11. மொழி கோட்பாடு 

            ஆகிய 11 சிறப்புத் தன்மைகளை சங்க இலக்கியங்கள் கொண்டுள்ளன.
            இதை மையமாக வைத்து கவியரங்கம் நடத்தப்படவுள்ளது. 
            இக் கவியரங்கை கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெறச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
            மொத்தமுள்ள 16 அமர்வுகளில் ஆயிரம் கவிஞர்கள் பங்கேற்கின்றனர். 
            1,200 தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.

            இக் கவியரங்கில் பங்கேற்க விரும்பும் கவிஞர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்குள் தங்களது பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். 
            இது குறித்து கூடுதல் விவரம் அறிய, 
            கவிஞர் கோவை கோகுலன்
            9/68 பெரியார் நகர்
            நேரு நகர் கிழக்கு
            விமான நிலைய அஞ்சல்
            கோவை - 641014 
            இந்தியா.
            என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 
            அலைபேசி:- +91 - 98422-38022.

            Kannan Natarajan

            unread,
            Apr 15, 2010, 10:35:59 PM4/15/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு:- மாநாட்டுக்கு வருபவர்களை எந்த ஹோட்டல்களில் தங்க வைப்பது என முடிவு

            செம்மொழி மாநாட்டுக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள், வெளிநாட்டு அதிபர்கள், மத்திய - மாநில அமைச்சர்களை எந்த ஹோட்டல்களில் தங்க வைப்பது என்பது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது.

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கட்டுரை படிக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள், சிறப்பு விருந்தினர்கள், வெளிநாட்டு அதிபர்கள், மத்திய - மாநில அமைச்சர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை தங்கும் இடம் ஏற்பாட்டுக் குழு செய்து வருகிறது.

            இக்குழுவின் தலைவராக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் ந.பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

            தங்கும் இடம் ஏற்பாட்டுக் குழு பணிகள் குறித்து அதிகாரிகள் கூறியது:-

            செம்மொழி மாநாட்டில் கட்டுரை படிக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு கட்டுரையாளர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், முக்கிய விருந்தினர்கள், மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கென தனித்தனி ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட உள்ளன.

            இதற்காக 70 ஹோட்டல்கள் அடையாளம் காணப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

            இதில் வெளிநாட்டு அதிபர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு என தனியாக 2 ஹோட்டல்களும், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளை ஒரு ஹோட்டலில் தங்க வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல மாநாட்டுக்கு வரும் முக்கிய விருந்தினர்கள் உள்ளிட்டோரை எந்த ஹோட்டல்களில் தங்க வைப்பது என்பது பற்றி முடிவு செய்யப்பட்டு விட்டது.

            அடுத்தக் கட்டமாக குழுவின் தலைவரின் முடிவுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதுதவிர செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகளைக் காண பார்வையாளராக வந்து செல்ல மட்டும் 5,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு கட்டண அடிப்படையில் தங்கும் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.

            கோவை நகரில் 124 திருமண மண்டபங்களும், 70 ஹோட்டல்களும் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.
             
             
            நன்றி:- தினமணி

            --
            "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
            To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
            For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

            Kannan Natarajan

            unread,
            Apr 15, 2010, 10:43:38 PM4/15/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு:- மலர்ப் பிரதிகள் அச்சடிப்பு
             
            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக மலர்ப் பிரதிகள் அச்சடிக்கப்படவுள்ளன.

            இதற்காக சிறப்பு மலர்க் குழு நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. திட்டக் குழு துணைத் தலைவர் மு.நாகநாதன், சிலம்பொலி சு.செல்லப்பன், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

            ஒருங்கிணைப்பாளராகத் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கூ.வ.எழிலரசு நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு மலருக்காக உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அறிஞர்களிடம் இருந்து கவிதை, கட்டுரை, ஓவியங்கள் உள்ளிட்டவை பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. இப்போது சிறப்பு மலருக்கான மாதிரி தயாராகி வருகிறது.

            இது குறித்து உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் மலர்க்குழுவின் உறுப்பினருமான கரு.அழ.குணசேகரன் கூறியதாவது:-

            மாநாட்டு சிறப்பு மலர் மாதிரி தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் மொத்தம் 10 ஆயிரம் மலர்ப் பிரதிகள் அச்சடிக்கப்படவுள்ளன. இதில் கவிதை, கட்டுரை, ஓவியங்கள் வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தமிழறிஞர்களுக்கு 2,500 மலர்ப் பிரதிகள் வழங்கப்படும். மீதம் உள்ள மலர்ப் பிரதிகள் மாநாட்டு அரங்கத்தில் விற்பனைக்கு வைக்கப்படும். ஒரு மலரின் விலை உத்தேச விலையாக ரூ. 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

            இந்த மாதிரி மலர்கள் தயாரிப்பு குறித்து மே மாதம் இரண்டாவது வாரத்தில் முதல்வரைச் சந்தித்து ஆலோசனை பெறப்படும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் மலர்கள் அச்சடித்து முடிக்கப்படும் என அவர் கூறினார்.

            நன்றி:- தினமணி

            Kannan Natarajan

            unread,
            Apr 15, 2010, 10:48:07 PM4/15/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு:- குமரியில் ஏப்ரல் 17ல் குறுந்தொலைவு திரள் ஓட்டம்

            கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, தமிழ்நாட்டில் முதலாவதாக கன்னியாகுமரியில் ஏப்ரல் 17ம் தேதி கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 3,000 பேர் பங்கேற்கும் குறுந்தொலைவு திரள் ஓட்டம் (மினி மாரத்தான்) நடைபெற உள்ளது.

            திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஓட்டமானது, திருநெல்வேலி, தூத்துக்குடியிலும் அடுத்தடுத்து நடைபெற உள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.தி.சபாபதி மோகன் தெரிவித்தார்.

            இதுகுறித்து அவர் திங்கள்கிழமை (12/04/10) அளித்த பேட்டி:-
             
            கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கும், மாநாட்டில் திரளான மக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையிலும் கன்னியாகுமரியில் ஏப்ரல் 17ல்   குறுந்தொலைவு திரள் ஓட்டம் நடைபெற உள்ளது.

            செம்மொழி மாநாடு தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

            மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் முதலாவதாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்த ஓட்டத்தை நடத்துகிறது. இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.

            மாணவிகளுக்கான ஓட்டம் கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் இருந்து காலை 7 மணிக்குத் தொடங்கும். இதை சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தொடக்கி வைப்பார். மாணவர்களுக்கான ஓட்டம் கொட்டாரத்தில் காலை 7.30 மணிக்குத் தொடங்கும். இதை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடக்கி வைப்பார். எனது (துணைவேந்தர்) தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்று ஓடுவர்.
             
            வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா காந்தி மண்டபத்தில் நடைபெறும். இதில், மாவட்ட ஆட்சியர் இராஜேந்திர இரத்னூ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இராஜேந்திரன், ஹெலன் டேவிட்சன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

            இதற்கான ஏற்பாடுகளை பதிவாளர் ச.மாணிக்கம், இளைஞர் நலத் துறை இயக்குநர் ரோசரி மேரி, முதன்மையர் (கல்லூரி வளர்ச்சிக் குழு) சுரேந்திரா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுவாமிதாஸ் ஆகியோர் செய்து வருகின்றனர் என்றார் சபாபதி மோகன்.

            Kannan Natarajan

            unread,
            Apr 18, 2010, 10:22:09 PM4/18/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு இன்னும் 66 நாள்கள்:- மாநாட்டு அரங்கங்கள் அமைக்கும் முதல்கட்டப் பணிகள் தொடக்கம்

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான ஆய்வரங்கம் மற்றும் இணைய மாநாட்டு ஆய்வரங்கத்துக்கு சுமார் 30 அரங்கங்கள் வரை அமைக்கப்பட உள்ளன.

            இதற்கான முதல்கட்டப் பணிகளை மாநாட்டு அரங்க அமைப்புக் குழு, பொதுப் பணித்துறையினரின் மேற்பார்வையில் கொடிசியா நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான ஆய்வரங்கம் மற்றும் இணைய மாநாட்டு அரங்கத்தில் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் கட்டுரை படிக்கின்றனர்.

            இதற்கான அரங்கங்கள் ஏற்படுத்தும் பணியை வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் தலைமையிலான மாநாட்டு அரங்க அமைப்புக் குழு மேற்கொண்டு வருகிறது.

            இதில் வெளிநாட்டு பிரதிநிதிகள், சிறப்பு விருந்தினர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள் ஆகியோர் ஆய்வரங்கங்களை பார்வையிடும் வகையில் அரங்கம் அமைக்கும் பணி இப்போது நடந்து வருகிறது.

            இதற்கான அரங்குகள், இருக்கை வசதிகள், குளிர் சாதன வசதி, கம்ப்யூட்டர் வசதி, உள்அலங்காரம், உணவகங்கள் அமைத்திட சுமார் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

            இதுகுறித்து மாநாட்டு அரங்க அமைப்புக் குழு அதிகாரிகள் கூறியது:-

            "மாநாட்டுக்கான அரங்குகளை அமைக்கும் முதல்கட்ட பணிகளை, பொதுப் பணித்துறையினரின் மேற்பார்வையில் கொடிசியா நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

            ஆய்வரங்கத்தில் 3 வகை அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 120 பேர் அமரும் வசதி கொண்ட அரங்குகள், 200 பேர் அமரும் வசதி கொண்ட அரங்குகள், 500 பேர் அமரும் வசதி கொண்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

            அரங்கங்கள் முழுவதும் குளிர் சாதன வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. ஒலி - ஒளி வசதி, கம்ப்யூட்டர் மற்றும் எல்.சி.டி. வசதி மற்றும் ஒரு அரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சி மற்ற அரங்கத்தில் கேட்காதவாறு "சவுண்ட் ப்ரூப்" வகையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

            சோபா உள்ளிட்ட நவீன இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். தமிழ் அறிஞர்கள், சிறப்பு விருந்தினர்கள், அமைச்சர்களின் வசதிக்காக மாநாட்டு அரங்கில் உணவகங்கள் ஏற்படுத்தப்படும்.

            எவ்வளவு மாநாட்டு அரங்கங்களை அமைப்பது என்பது பற்றி தலைமைக் குழு தலைவர் முதல்வர் கருணாநிதி தான் இறுதி செய்வார்",என்று தெரிவித்தனர்

            Kannan Natarajan

            unread,
            Apr 18, 2010, 10:45:49 PM4/18/10
            to Min Thamizh
            கொல்லிமலையில் தமிழ் கிராமம்!

            நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சங்ககால அடிப்படையிலான தமிழ் கிராமங்கள் அமைக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படுகிறது.

            நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது கொல்லிமலை. வல்வில் ஓரி மன்னன் ஆட்சி செய்த பகுதியாக கருதப்படும் இங்கு 15 நாடுகள் (ஊராட்சிகள்) ஒவ்வொரு ஊராட்சியின் பெயரிலும் நாடு என்ற பெயர் இடம் பெற்றிருப்பது சிறப்பு. ஆசியாவிலேயே அதிக கொண்டை ஊசி வளைவுகளாக 70 கொண்டை ஊசி வளைவுகளை தன்னகத்தே கொண்டு சிறந்த கோடைவாசஸ்தலமாகவும் விளங்குகிறது.

            ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, அறப்பளீஸ்வரர் கோயில், வாசலூர்பட்டி படகு இல்லம், மூலிகைப் பண்ணை, ரோஜா தோட்டம், சிறுவர் விளையாட்டுப் பூங்கா, சிற்றருவி, எட்டுக்கை அம்மன் கோயில் ஆகியவை சிறப்புற்றுள்ளன.

            பலா, அன்னாசி, மா உள்ளிட்ட பழங்களும், மிளகு, பட்டை ஆகியவையும் கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு. பரிட்சார்த்த முயற்சியாக மலைப்பிரதேசங்களில் விளைவிக்கப்படும் காரட், முட்டைகோஸ், உருளை, பீட்ரூட், காபி பயிர்களும் வளர்க்கப்பட்டு வருகிறது. வரலாற்றுத் தொன்மையுடனும், தமிழ் சமுதாயத்தின் அடையாளங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த கொல்லிமலையில் சங்ககால அடிப்படையிலான தமிழ் கிராமங்கள் அமைக்க அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்படுகிறது.

            முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வரிசையில் கிராமங்களை அமைத்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நினைவாக இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கருத்துரு தயாரிக்கப்பட்டு தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவர் வி.பி. துரைசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது.

            இக்கருத்துருவை அரசுக்கு அனுப்பி முதல்வருடன் ஆலோசனை நடத்தி கொல்லிமலையில் சங்ககால தமிழ் கிராமம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் சகாயத்திடம் வி.பி. துரைசாமி உறுதியளித்துள்ளார்.

            Kannan Natarajan

            unread,
            Apr 18, 2010, 10:51:31 PM4/18/10
            to Min Thamizh
            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு உதவிட, அவர்கள் தங்கும் ஹோட்டல்களில் ஒரு தொடர்பு அலுவலர் தலைமையில் 4 பேர் கொண்ட உதவிக் குழு அமைக்கப்படுகிறது.

            கோவையில் சனிக்கிழமை (17/04/10) நடைபெற்ற தங்குமிட ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

            செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்கள், முக்கியப் பிரமுகர்கள், தமிழறிஞர்கள், வெளிநாட்டு அறிஞர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்ய, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி தலைமையில் தங்குமிட ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

            இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-

            செம்மொழி மாநாட்டில் பங்கேற்க குடியரசுத் தலைவர், பிரதமர், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிற மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், தமிழறிஞர்கள், கட்டுரையாளர்கள், உயர் அதிகாரிகள் வருகை தருகின்றனர்.

            இவர்களுக்காக கோவையில் உள்ள ஹோட்டல்களில் 4 ஆயிரம் அறைகள், மேட்டுப்பாளையம், திருப்பூர், உதகையில் மொத்தம் 1,700 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீஸர், தீயணைப்புத் துறையினர், கலைக் குழுவினருக்கு 140 திருமண மண்டபங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

            இன்னும் கிடைக்கக் கூடிய மண்டபங்களையும் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கூட்டத்தில் ஹோட்டல் உரிமையாளர்களும் அழைக்கப்பட்டு, அந்தந்த ஹோட்டல்களில் தேவைப்படும் வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

            தொடர்ந்து ஆட்சியர் உமாநாத் பேசியதாவது:-

            முன்பதிவு செய்யப்பட்ட ஹோட்டல், மண்டபங்களில் உள்ள அனைத்து வசதிகள் குறித்தும் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு உதவிட அவர்கள் தங்கும் ஒவ்வொரு ஹோட்டலிலும் ஒரு தொடர்பு அலுவலர் தலைமையில் 4 பேர் பணியில் இருப்பர் என்றார் அவர்.

            தங்குமிட ஏற்பாட்டுக் குழு துணைத் தலைவர்கள் திருப்பூர் மேயர் க.செல்வராஜ், முன்னாள் எம்பி மு.இராமநாதன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல், கோவை அண்ணா பல்கலை. பதிவாளர் எஸ்.பழனிசாமி, பாரதியார் பல்கலை. பதிவாளர் பி.திருமால்வளவன், தஞ்சை தமிழ்ப் பல்கலை. பதிவாளர் சா.பி.சரவணன், முன்னாள் எம்எல்ஏ குண்டன், மார்ட்டின், சிறப்பு பணி அலுவலர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

            Kannan Natarajan

            unread,
            Apr 21, 2010, 2:30:52 AM4/21/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு:- விருந்தோம்பல் குழுவின் பணிகளை இறுதி செய்ய 24ல் கோவையில் கூட்டம்
            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், கட்டுரையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் உணவு வழங்கப்பட உள்ளது. இதற்கான பொறுப்பை விருந்தோம்பல் குழு கவனித்து வருகிறது.
             
            இக்குழு உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
             
            இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் வரும் ஏப்ரல் 24ம் தேதி நடைபெறுகிறது.
             
            இதுகுறித்து குழு அதிகாரிகள் கூறியது:-
             
            மாநாடு நடைபெறும் கொடிசியா அரங்கத்தில் எத்தனை கவுன்ட்டர்கள் அமைத்து உணவு விநியோகிப்பது, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எந்த வகை உணவுகளை வழங்குவது, பார்வையாளர்களுக்கு எவ்வளவு கட்டணத்தில் உணவு தயாரித்து வழங்குவது, சிறப்பு விருந்தினர்கள், முக்கிய நபர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு எம்மாதிரியான உணவு வகைகளை வழங்குவது என்பது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
             
            கொடிசியா அரங்கத்தையொட்டி அமைக்கப்படும் பந்தலில் பொதுமக்களுக்கு பாக்கெட்டில் அடைத்து உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைச் சமாளிக்க எவ்வளவு கவுன்ட்டர்களை அமைப்பது, எத்தனை நாளுக்கு என்னென்ன வகை உணவுகளை விநியோகிப்பது என்பவை பற்றி ஆலோசிக்கப்படும்.
             
            சமையல் செய்ய கொடிசியா அரங்கத்தைச் சுற்றியுள்ள 10 திருமண மண்டபங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதேபோல மக்கள் அதிகம் கூடும் 10 இடங்களில் உணவுத்திருவிழா போன்று நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
             
            இக்கூட்டத்தில் விருந்தோம்பல் குழுவின் பணிகள் இறுதி செய்யப்பட்டு, அதற்கான பரிந்துரைகள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான தலைமைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஒப்புதல் பெறப்பட்ட பிறகு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

            Kannan Natarajan

            unread,
            Apr 25, 2010, 12:50:13 AM4/25/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு:- ஜூன் 10க்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும்


            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் ஜூன் 10க்குள் முழுமையாக நிறைவடையும் என்று மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், தமிழக அரசின் தலைமைச் செயலருமான கே.எஸ். ஸ்ரீபதி தெரிவித்தார்.

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவர் சனிக்கிழமை (24/04/10) ஆய்வு செய்தார். பணிகளைத் துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

            பின்னர் செய்தியாளர்களிடம் தலைமைச் செயலர் ஸ்ரீபதி கூறியது:-

            செம்மொழி மாநாட்டையொட்டி பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் மூன்றுகட்டமாக நிறைவேற்றுப்பட்டு வருகின்றன.

            இதன்படி சில பணிகள் முடிந்துள்ளன. மே 15ம் தேதிக்குள் 75 சதவீத பணிகள் முழுமை அடைந்துவிடும். விமான நிலையம், இரயில் நிலையம் ஆகியவற்றில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. ஹோப் காலேஜ் இரயில்வே மேம்பாலப் பணிகளை மே இறுதிக்குள் முடித்துவிடுவதாக இரயில்வே துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

            மாநாட்டின் துவக்க விழா மற்றும் நிறைவு விழாவுக்கு ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் பேர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



            நன்றி:- தினமணி

            Kannan Natarajan

            unread,
            Apr 28, 2010, 10:16:42 PM4/28/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு இன்னும் 56 நாள்கள்:- கோவை வ.உ.சி. பூங்காவில் தயாராகும் வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
             
            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஊர்வலத்தில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள், கோவை வ.உ.சி. பூங்காவில் வடிவமைக்கப்பட உள்ளன.
             
            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தொடக்க விழாவில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகள், ஊர்வலத்தை அலங்கரிக்க உள்ளன. கோவை வ.உ.சி. பூங்காவில் இருந்து மாநாட்டு அரங்கமான கொடிசியா வரையில் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது.
             
            சங்கத் தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டை விவரிக்கும் வகையில் ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளிட்டவை அலங்கார ஊர்திகளில் இடம்பெறுகின்றன.
             
            அலங்கார ஊர்திகளை வடிவமைத்திடும் பணிக்காக, கோவை வ.உ.சி. பூங்காவில் இடம் ஒதுக்கி தரப்பட உள்ளது. அங்குதான் அலங்கார ஊர்திகள் முழுவதும் செய்யப்பட உள்ளன.
             
            இதற்காக ரூ. 40 லட்சம் நிதி கேட்டு, முதல்வர் கருணாநிதியின் தலைமையிலான செம்மொழி மாநாட்டு தலைமைக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
             
            நிதியை அரசு ஒதுக்கியவுடன், அலங்கார ஊர்திகள் செய்யும் பணி விரைவில் தொடங்கி நடைபெறும் என்று குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
             
            ஊர்வலத்தின்போது 2 ஆயிரம் பேர் கொண்ட கலை நிகழ்ச்சி குழுவினர், அலங்கார ஊர்திகள் முன்பு கண்கவர் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்

            Kannan Natarajan

            unread,
            Apr 30, 2010, 3:06:27 PM4/30/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு இன்னும் 55 நாள்கள்:- பொது அரங்க நிகழ்ச்சிக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்
             
            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்பு துணைக் குழுவின் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (28/04/10) நடைபெற்றது.
             
            உயர்கல்வித் துறை செயலாளர் கணேசன், மாநாட்டு தனி அலுவலர் கா.அலாவுதீன், சிறப்புப் பணி அலுவலர் சு.பிரபாகரன், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
             
            மாநாட்டு பொது அரங்க நிகழ்ச்சிக்கு, முதல்வர் கருணாநிதி சார்பில் அழைக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் அரங்கில் தேவையான இருக்கைகளை ஏற்பாடு செய்வது, இதற்கான  பொறுப்பு அலுவலர்களாக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
             
            அரங்கில் உள்ளவர்களுக்கு பூங்கொத்து கொடுப்பது உள்ளிட்ட பணிகளை யாரை வைத்து செய்வது என்பது உள்பட பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
             
            குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் வரும் சிறப்பு பாதுகாப்புப் படை பிரிவினருக்கு (எஸ்.பி.ஜி.) வசதிகளை ஏற்படுத்தி தருதல், முக்கிய விருந்தினர்கள் உள்ளிட்டவர்களை எந்த வழியில் மாநாட்டு அரங்கத்துக்கு அழைத்து வருதல், வாகன நிறுத்துமிடம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.
             
            அனைத்துக் குழுக்களின் ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, இன்னும் ஒரு வாரத்தில் கோவை நகரில் மாநாட்டுப் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

            Kannan Natarajan

            unread,
            Apr 30, 2010, 3:11:09 PM4/30/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு இன்னும் 54 நாள்கள்:- கவிதைகளை அனுப்ப மின்னஞ்சல் அறிமுகம்
             
            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் உலகளாவிய கவிதைப் போட்டியில் பங்கேற்போர் மின்னஞ்சலிலும் தங்களது கவிதைகளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
             
            கோவையில் ஜூன் 23ம் தேதி தொடங்கவுள்ள, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி "சங்கத் தமிழ் அனைத்தும் தா" என்ற தலைப்பில் உலகளாவிய கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது.
             
            உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையிலான பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழு சார்பில், இப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.3.2 இலட்சம் பரிசு அளிக்கப்படுகிறது.
             
            கவிதைகளை அனுப்ப வயது வரம்பு கிடையாது. ஒரு பக்க அளவில் 24 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருக்க வேண்டும். கவிதை, மரபுக் கவிதையாகவோ, புதுக் கவிதையாகவோ இருக்கலாம். கவிதைகளை தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி குறித்து ஏற்கெனவே தகவல் வெளியிடப்பட்டது.
             
            இந்நிலையில், கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்புவோருக்கு என தனியாக மின்னஞ்சல் முகவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தபால் மற்றும் மின்னஞ்சலில் அனுப்புவோர் மே 20ம் தேதிக்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
             
            மின்னஞ்சல் முகவரி:- 
             

            ஸ்ரீ ராமதாஸ்

            unread,
            Apr 30, 2010, 3:35:50 PM4/30/10
            to mint...@googlegroups.com
            வணக்கம்,

            அங்கே ஸ்டால்கள் வைப்பதற்கான விளம்பரங்கள் செய்தித் தாள்களில் வந்ததாமே! இணைய தளத்திலும்
            தகவல்களை இற்றைப்படுத்திக் கொண்டு வந்திருந்தால் உதவியாய் இருந்திருக்கும்.

            ஸ்டால்கள் உண்டா? விண்ணப்பங்களை கொடுப்பது எங்கே?

            யாராகிலும் அறிந்திருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

            முன்னர், சுபா கட்டுரை அளிப்பது பற்றி எழுதியிருந்தார்.

            அதற்கு காலமிருக்கு என்பதால் இத்தருணத்தில் தவிர்த்திருந்தோம்.

            --

            ஆமாச்சு

            Subashini Tremmel

            unread,
            Apr 30, 2010, 5:28:05 PM4/30/10
            to mint...@googlegroups.com
            ஆமாச்சு,
             
            >ஸ்டால்கள் உண்டா? விண்ணப்பங்களை கொடுப்பது எங்கே?
            நீங்கள் ஆண்டோவை தொடர்பு கொண்டு உடன்  பதிவு செய்து கொள்ளுங்கள். கணித் தமிழ் சங்கம் வழி நீங்கள் இந்த உதவியைப் பெறலாம். முயற்சி செய்து பாருங்கள்.
             
            >முன்னர், சுபா கட்டுரை அளிப்பது பற்றி எழுதியிருந்தார்.
            நீங்கள் TI2010க்காண கட்டுரை பற்றி குறிப்பிடுகின்றீர்கள் என நினைக்கிறேன். 2010 இணைய மாநாட்டிற்கான கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்ட்டு கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதி நாள் இன்று ஏப்ரல் 30ம் தேதி.  கட்டுரை சமர்ப்பித்தல் தொடர்பாக மேலும் தகவல் தேவையென்றால்  ti201...@infitt.org க்கு கடிதம் எழுதுங்கள். 
             
            அன்புடன்
            சுபா
            2010/4/30 ஸ்ரீ ராமதாஸ் <rama...@amachu.net>

            Kannan Natarajan

            unread,
            May 3, 2010, 10:45:20 PM5/3/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு இன்னும் 51 நாள்கள்:- அலங்கார ஊர்திகள் வடிவமைக்கும் பணி மாத இறுதியில் தொடக்கம்

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஊர்வலத்தில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் வடிவமைப்பு பணிகள் மே மாத இறுதியில் தொடங்க உள்ளன.

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. ஊர்வலத்தைக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கொடியசைத்து தொடக்கி வைப்பார்.

            இதில் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 40 அலங்கார ஊர்திகள் அணி வகுத்து செல்லும். இந்த ஊர்திகள் முன்பு சுமார் 2 ஆயிரம் பேர் கொண்ட கலை நிகழ்ச்சிக் குழுவினர் தமிழ் பாரம்பரிய நடனங்களை ஆடிப் பாடி செல்வார்கள். ஊர்வலம் கோவை வ.உ.சி. பூங்காவில் தொடங்கி பல்வேறு முக்கியப் பகுதிகள் வழியாக மாநாட்டுத் திடலான கொடிசியா அரங்கை சென்றடையும்.

            மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டு அதிபர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் ஊர்வலத்தைப் பார்த்து இரசிக்கும் வகையில் ஊர்வலப் பாதையின் முக்கிய பகுதிகளில் மேடைகள் அமைக்கப்பட உள்ளன.

            மேலும் சாலையின் இரு பகுதிகளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை கண்டு இரசிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. ஊர்வலத்தில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளை வடிவமைக்க கோவை வ.உ.சி. பூங்காவில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

            இந்த அலங்கார ஊர்திகளை வடிவமைக்கும் பணிகள் மே இறுதியில் தொடங்கும். இதற்காக ஓவியர்கள் மருது, சந்துரு, சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி முதல்வர் மனோகர் உள்ளிட்ட குழுவினர் கோவை சென்று பணிகளை மேற்பார்வையிடுவார்கள். ஜூன் 2வது வாரத்தில் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். ஊர்வலக் குழுத் தலைவரான போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

            Kannan Natarajan

            unread,
            May 5, 2010, 12:26:29 AM5/5/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு:- மாநாட்டு நிறைவு விழாவில் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், சங்கத் தமிழ் வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது.

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் ஜூன் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டு அதிபர்கள், வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

            பிரமாண்ட ஊர்வலமும், 2,000 கலை நிகழ்ச்சி குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மாநாட்டு தொடக்க விழாவுக்கு 3 நாளுக்கு முன்பு, கோவை நகரின் முக்கிய 10 இடங்களில் "சங்கமம்" போன்ற மாபெரும் கலை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உணவுத் திருவிழாவும் நடத்தப்படும்.

            மாநாட்டின் முக்கிய நிகழ்வான ஆய்வரங்கத்தில் வெளிநாட்டு - உள்நாட்டு தமிழ் அறிஞர்கள் என 1,020 பேர் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளனர். 55 தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஒளி - ஒலி அம்சங்களுடன் கூடிய அரங்கும் அடங்கும்.

            இதுதவிர இணையத் தமிழ் மாநாடும் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வெளிநாட்டு - உள்நாட்டினர் என 350 பேர் பங்கேற்கின்றனர். 15 நாடுகளைச் சேர்ந்த கணினி வல்லுநர்கள் இடம்பெறுகின்றனர். இணையதளத்தில் தமிழ் மொழியை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, இணையதளத்தில் தமிழைப் பயன்படுத்தும்படி இளைய தலைமுறையினரை ஊக்குவிப்பது போன்றவை இணைய மாநாட்டின் முக்கிய அம்சங்களாகும்.

            ஜூன் 27ம் தேதி நடைபெறும் மாநாட்டு நிறைவு விழாவில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு, செம்மொழி மாநாட்டு தனி அலுவலர் கா.அலாவுதீன் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய தபால்துறையும் சில மாதிரிகளை கேட்டுள்ளது.

            அதன்படி சங்கத் தமிழ் வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான ஓலைச்சுவடிகள், ஓவியங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அஞ்சல் தலை இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

            Kannan Natarajan

            unread,
            May 5, 2010, 10:05:37 PM5/5/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு துவக்க விழாவுக்குத் தயாராகிறது
            மைதானம்!






            50 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல்
            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவுக்கு பிரம்மாண்ட பந்தல் அமைப்பதற்கான மைதானம் தயாராகி வருகிறது.

            கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் 23ல் துவங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டின் துவக்க, நிறைவு விழா, கண்காட்சி, பொது நிகழ்ச்சிகள் ஆகியன கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தின் வெளிப் பகுதியில் நடைபெறுகின்றன.

            மாநாட்டின் ஆய்வரங்கம், பொழிவரங்கம் நிகழ்வுகள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தின் ஏ,பி,சி,டி,இ அரங்குகளில் நடைபெறுகின்றன.

            பிரம்மாண்ட பந்தல்:-
            கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தின் பிரதான நுழைவாயிலின் எதிரே துவக்க விழா மேடை அமைக்கப்படுகிறது. இதற்காக  அப்பகுதியை மண்கொட்டி சமப்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

            மாநாட்டுப் பந்தல் 1000 அடி நீளம், 440 அடி அகலம் கொண்டதாக அமைகிறது. 50 ஆயிரம் பேர் அமரக்கூடியதாக பந்தல் இருக்கும்.   இராட்சத இரும்புக் குழாய்கள் கொண்டு மேடைக்கான அஸ்திவாரம் அமைக்கப்படுகிறது.

            ஆய்வரங்குகள்...:-
            கொடிசியாவின் ஏ,பி,சி,டி,இ அரங்குகளில் ஆய்வரங்க நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கென ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட அரங்குகள்அமைக்கப்படுகின்றன. 
            முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய இந்த அரங்குகள் அமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இம் மாத இறுதிக்குள் அரங்குகள் அமைக்கும் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

            கொடிசியா வளாகத்தின் பிரதான நுழைவாயிலில் பிரம்மாண்ட கோபுர நுழைவாயில் (ஆர்ச்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

            கண்காட்சி அரங்கம்:-
            கொடிசியா வளாகத்துக்குச் செல்லும் சாலையின் வலதுபுறத்தில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றன. பிரதான கண்காட்சி அரங்கும், தமிழ் இணைய மாநாட்டுக்கான கண்காட்சி அரங்கும் 12 ஏக்கரில் அமைக்கப்படுகிறது.

            அப் பகுதியிலும் மண்கொட்டி சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

            வாகன நிறுத்தும் இடங்கள்:முக்கிய விருந்தினர்கள், முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்களுக்கு என தனித்தனியே வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படுகின்றன.

            முக்கிய அலுவலகங்கள்:கொடிசியா சாலையின் இடதுபுறத்தில் ஜென்னி கிளப் ஹோட்டலின் பின்பகுதியில் மாநாட்டின் தனி அலுவலர் அலுவலகம், காவல் கட்டுப்பாட்டு அறை, மருத்துவக் குழு அலுவலகம், அரசு அலுவலர்கள் உணவுக் கூடம் அமைக்கப்படுகிறது.

            பசுமையாகும் கொடிசியா வளாகம்:-
            கொடிசியா தொழிற்காட்சி வளாகம் முழுவதிலும் புல்தரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அரங்கத்திற்கும் செல்வதற்கென கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்படுகிறது. இந்த நடைபாதையைத் தவிர மற்ற பகுதிகள் அனைத்திலும் புல்தரை அமைக்கப்படுகிறது.

            ஆட்சியர் ஆய்வு:-
            கொடிசியா வளாகத்தில் நடைபெறும் பணிகள், துவக்க விழாவுக்கான மைதானம் சமப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத்  செவ்வாய்க்கிழமை (05/05/10) பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநாட்டின் சிறப்புப் பணி அலுவலர் எஸ்.பிரபாகரன், பொதுப்பணித்துறை, மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வின்போது உடன் இருந்தனர்

            Kannan Natarajan

            unread,
            May 5, 2010, 10:10:33 PM5/5/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு:- மாநாட்டுப் பந்தலில் 4 எல்.சி.டி; 100 பிளாஸ்மா டி.வி.க்கள்!




            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பந்தலில், நிகழ்ச்சிகளை அனைவரும் காணும் வகையில் 4 எல்.சி.டி, 100 பிளாஸ்மா டி.வி.க்கள் அமைக்கப்பட உள்ளன என்று கோவை மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் தெரிவித்தார்.

            கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தின் வெளிப் பகுதியில் செம்மொழி மாநாட்டின் துவக்க, நிறைவு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. பந்தல் அமைக்கும் பணியை ஆட்சியர் பி.உமாநாத் புதன்கிழமை (5/5/10) துவக்கி வைத்தார். 
            பின்னர் அவர் கூறியது:- 
            மாநாட்டுப் பந்தல் 4.40 இலட்சம் சதுர அடியில் அமைகிறது. இதில் 80 அடி அகலம், 60 அடி நீளம் கொண்டதாக மாநாட்டு மேடை அமைக்கப்படுகிறது. மாநாட்டுப் பந்தலில் பார்வையாளர்கள் அமர்வதற்காக 50 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பந்தலின் இருபுறமும் தலா 20 அடி அகலத்தில் காலியிடம் ஒதுக்கப்படுகிறது.

            கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக 2 மேடைகள் அமைக்கப்படுகின்றன. முக்கிய பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களுக்கு தனித்தனியே தடுப்புகள் அமைக்கப்பட்டு இடம் ஒதுக்கப்படுகிறது. மாநாட்டு பந்தலில் கண்ணைக் கவரும் அலங்கார அமைப்புகள் செய்யப்படவுள்ளன.

            சிறந்த முறையில் ஒலி பெருக்கி வசதிக்காக உயர்தொழில்நுட்ப மின்னணு ஒலி பெருக்கிகள் அமைக்கப்படுகின்றன. மாநாட்டு நிகழ்ச்சிகளை பந்தலில் உள்ள அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் 14 அடி அகலம் 8 அடி உயரம் கொண்ட பிரமாண்ட எல்.சி.டி வண்ணத் தொலைக்காட்சிகளும், 42 அங்குலம் அளவிலான 100 பிளாஸ்மா வண்ணத் தொலைக்காட்சிகளும் அமைக்கப்படுகின்றன. மின் வசதிக்காக 125 கே.வி.ஏ திறன் கொண்ட 15 ஜெனரேட்டர்கள் நிறுவப்படுகின்றன என்றார்.

            மாநாட்டின் சிறப்பு பணி அலுவலர் எஸ்.பிரபாகரன், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர்கள் முருகேசன், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

            நன்றி:- தினமணி

            Kannan Natarajan

            unread,
            May 5, 2010, 10:13:16 PM5/5/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு துவக்க விழாவுக்குத் தயாராகிறது
            மைதானம்!



             
            > கொடிசியா வளாகத்தில் நடைபெறும் பணிகள், துவக்க விழாவுக்கான மைதானம் சமப்படுத்தும் 
            > பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத்  செவ்வாய்க்கிழமை (05/05/10) பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

               செவ்வாய்க்கிழமை (04/05/10)

             
            நன்றி:- தினமணி

            Kannan Natarajan

            unread,
            May 8, 2010, 2:08:30 AM5/8/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு:- கண்காட்சியில் 650க்கும் மேற்பட்ட கலைப் பொருள்கள், ஓவியங்கள்.

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் கண்காட்சியில் 650க்கும் மேற்பட்ட கலைப் பொருள்கள், ஓவியங்கள் இடம்பெறுகின்றன.

            கண்காட்சி அரங்கம் அமைப்பதற்காக நடைபெறும் பணிகளைப் பார்வையிட்ட கண்காட்சிக் குழுத் தலைவரும், பள்ளிக் கல்வி அமைச்சருமான தங்கம் தென்னரசு இத் தகவலைத் தெரிவித்தார்.

            செம்மொழி மாநாட்டில் கருத்தாழம் மிக்கதாக கண்காட்சி அரங்கம் அமையும். 38 ஆயிரம் சதுர அடியில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் தமிழின் பெருமை, கலை, இலக்கியம், தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை விளக்கும் 650க்கும் மேற்பட்ட கலைப் பொருள்கள், ஓவியங்கள் இடம்பெறுகின்றன.

            மேலும் ஒளி - ஒலி காட்சிகளும் நடைபெறுகின்றன. பொது அரங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மக்கள் நேரடியாகக் கண்காட்சி அரங்கத்தைப் பார்வையிட வரலாம். கண்காட்சி அரங்கத்துக்கு எளிதில் சென்று வரும் வகையில் 6 நுழைவாயில்கள் அமைக்கப்படுகின்றன.

            கண்காட்சி அரங்க அமைப்பு பணிகள் ஜூன் 10ம் தேதிக்குள் முடிவடையும். அதன் பிறகு பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலைநயம் மிக்க பொருள்கள் கண்காட்சிக்கு அரங்குக்கு கொண்டு வரப்படும். பொதுமக்கள், தமிழ் அறிஞர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் கண்காட்சி அமையும் என்றார்.

            "அனைத்து அரங்குகள் அமைக்கும் பணி மாநாடு துவங்குவதற்கு 15 நாள்களுக்கு முன்பே தயாராகிவிடும்",என்று அரங்க அமைப்புக் குழுத் தலைவரும், வேளாண் அமைச்சருமான வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் தெரிவித்தார்.

            கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஆய்வரங்குகளுக்கான அரங்குகள் அமைப்பு, மாநாட்டு பந்தல் அமைப்பு பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

            பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-

            மாநாட்டுப் பந்தல் இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத வகையில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது. பந்தலின் முகப்பு கலைநயம் மிக்கதாகவும், இயற்கையாகவும் அழகுற அமைக்கப்படும். கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தின் நுழைவாயிலில் 3 பறவைகள் பறப்பதைப் போல அலங்கார வளைவு தயாராகி வருகிறது என்றார்.

            கதர்த் துறை அமைச்சர் கே.இராமச்சந்திரன், செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர் கா.அலாவுதீன், தொல்லியல் துறை ஆணையர் தி.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத், வேளாண் பல்கலை. துணைவேந்தர் ப.முருகேசபூபதி உள்ளிட்டோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்

            Kannan Natarajan

            unread,
            May 8, 2010, 10:52:45 PM5/8/10
            to Min Thamizh
            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது நடைபெற உள்ள தமிழ் இணைய மாநாட்டு
            பணிகளை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, சனிக்கிழமை
            (8/5/10) ஆய்வு செய்தார்.

            கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் அரங்க அமைப்பு பணிகள், உணவுக்
            கூடம், திறந்தவெளி கலையரங்கம், கொடிசியா வளாகத்துக்கு வெளியே பந்தல்
            அமைக்கும் பணிகளை அவர் பார்வையிட்டார்.

            பின்னர் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, மாவட்ட
            ஆட்சியர் பி.உமாநாத் ஆகியோருடன் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

            செம்மொழி மாநாட்டிற்கு உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்
            ஏராளமானோர் வருகை தருவர். ஆகவே, சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்
            என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டார்.

            அதேபோல மாநாட்டின் துவக்க மற்றும் நிறைவு விழாவில் இலட்சக்கணக்கான மக்கள்
            கலந்து கொள்வர்.

            கொடிசியா வளாகத்திலும், மாநாட்டுப் பந்தல் பகுதிகளிலும் தேவையான அளவில்
            குடிநீர்த் தொட்டிகளை அமைத்து தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.

            வணிக வரித்துறை இணை ஆணையர் ஆனந்தகுமார், வேளாண் விற்பனைக் குழுத் தலைவர்
            ஆ.நாச்சிமுத்து, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் இ.ஆனந்தன்,
            துடியலூர் பேரூராட்சித் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ.
            அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

            Kannan Natarajan

            unread,
            May 9, 2010, 11:19:53 PM5/9/10
            to Min Thamizh
            செம்மொழி மாநாடு:- துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாநாட்டு ஏற்பாடுகள் குழுக் கூட்டம்

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வைக் குழுக் கூட்டம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை (மே 10)  நடைபெறுகிறது.

            மாநாட்டையொட்டி கோவை நகரில் நடந்து வரும் பணிகள் மற்றும் பல்வேறு குழுக்களின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அப்போது ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.

            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி,கோவை நகரில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

            மாநாட்டுத் தொடக்க விழா, கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் மற்றும் நிறைவு விழாவுக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

            சுமார் 4 இலட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் இந்தப் பந்தல் அமைக்கப்படுகிறது.

            சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட உள்ளன.

            இதுதவிர 20 ஆயிரம் பேர் வரை நின்று நிகழ்ச்சிகளை காணும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு வருவதாகக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

            பந்தல், இருக்கைகள், உள்அலங்காரம், மருத்துவக் குழுக்கள், சோதனைச் சாவடிகள், கண்காணிப்பு அறைகள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

            துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் மாநாட்டு தனி அலுவலர் கா.அலாவுதீன், கோவை மாவட்ட ஆட்சியர் உமாநாத், மாநாட்டு சிறப்பு தனி அலுவலர் டாக்டர் பிரபாகரன் மற்றும் குழுத் தலைவர்களாக உள்ள அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

            Kannan Natarajan

            unread,
            May 11, 2010, 11:29:46 PM5/11/10
            to Min Thamizh
            உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்​டின்​போது தன்​னார்​வ​லர்​க​ளா​கப் பணி​யாற்ற உள்ள கல்​லூரி ஆசி​ரி​யர்​கள்,​​ மாண​வர்​க​ளுக்கு மே 13ல் பார​தி​யார் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் பயிற்சி அளிக்​கப்​ப​டு​கி​றது.​

            செம்​மொழி மாநாடு கோவை​யில் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடை​பெ​று​கி​றது.​

            மாநாட்​டில் பங்​கேற்​கும் வெளி​நாட்​டி​னர்,​​ தமி​ழ​றி​ஞர்​க​ளுக்கு உத​விட கல்​லூரி மாண​வர்​கள் உத​வி​யா​ளர்​க​ளாக நிய​மிக்​கப்​ப​டு​கின்​ற​னர்.​ அதே போல மாநாட்​டின் ஆய்​வ​ரங்க உத​விப் பணி​க​ளில் கல்​லூரி ஆசி​ரி​யர்​கள் நிய​மிக்​கப்​ப​டு​கின்​ற​னர்.​

            ஊர்வ​லம்,​​ கண்​காட்சி அரங்​கம்,​​ துவக்க விழா,​​ பொது நிகழ்ச்​சி​கள்,​​ கலை நிகழ்ச்​சி​கள் நடை​பெ​றும் இடங்​க​ளில் பொது​மக்​களை ஒழுங்​கு​ப​டுத்​தும் பணி​க​ளில் நாட்டு நலப்​ப​ணித் திட்ட மாண​வர்​கள் ஈடு​ப​டுத்​தப்​ப​டு​கின்​ற​னர்.​

            ஒவ்​வொரு கல்​லூ​ரி​யில் இருந்​தும் இப் பணிக்கு விருப்​பம் உள்ள மாண​வர்​கள்,​​ ஆசி​ரி​யர்​கள் தேர்வு
            செய்​யப்​பட்​டுள்​ள​னர்.​  

            இவர்​க​ளுக்​கான பயிற்சி முகாம் பார​தி​யார் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் வியா​ழக்​கி​ழமை ​(மே 13) நடை​பெ​று​கி​றது.​

            உஷா மேத்தா அரங்​கில் நடை​பெ​றும் இப் பயிற்​சியை மாவட்ட ஆட்​சி​யர் பி.உமா​நாத் துவக்கி வைத்​துப்
            பேசு​கி​றார்.​ பார​தி​யார் பல்​க​லைக்​க​ழக துணை​வேந்​தர் சி.சுவா​மி​நா​தன் தலைமை வகிக்​கி​றார்.

            Kannan Natarajan

            unread,
            May 11, 2010, 11:33:43 PM5/11/10
            to Min Thamizh
            கோவை​யில் நடை​பெ​ற​வுள்ள செம்​மொழி மாநாட்​டை​யொட்டி பெரி​யார் பல்​க​லைக்​க​ழ​கம் சார்​பில் நான்கு
            மாவட்​டங்​க​ளில் கல்​லூரி மாணவ -​ மாண​வி​யர் பங்​கேற்​கும் குறுந்​தொ​லைவு திரள் ஓட்​டம் ​(மினி மாரத்​தான்)​ நடத்​தப்​பட உள்​ளது.​

            இது​ கு​றித்து பெரி​யார் பல்​க​லைக்​க​ழக துணை வேந்​தர் முனை​வர் மு.தங்​க​ராசு கூறி​யது:​​-

            செம்​மொழி மாநாட்​டை​யொட்டி நக​ரம் மற்​றும் ஊரக பகு​தி​க​ளில் அது​கு​றித்த விழிப்​பு​ணர்வை ஏற்​ப​டுத்​தும்
            வகை​யில் குறுந்​தொ​லைவு திரள் ஓட்​டம் பெரி​யார் பல்​க​லைக்​க​ழ​கம் சார்​பில் நான்கு மாவட்​டங்​க​ளில்
            நடத்​தப்​ப​டு​கி​றது.​

            • 26ம் தேதி ​கிருஷ்​ண​கி​ரி​யி​லும்
            • 27ம் தேதி நாமக்​கல்​லி​லும்
            • 29ம் தேதி சேலத்​தி​லும்
            • 30ம் தேதி தரு​ம​பு​ரி​யி​லும்
            நடை​பெ​றும் குறுந்​தொ​லைவு திரள் ஓட்​டத்​தில் மாவட்​டத்​திற்கு 3,500 பேர் வீதம் மாணவ -​ மாண​வி​யர்
            பங்​கேற்​கும் வகை​யில் ஏற்​பா​டு​கள் ​செய்​யப்​பட்​டுள்​ளன.​​

            மாண​வி​க​ளுக்கு நான்கு கிலோ மீட்​ட​ரும்,​​ மாண​வர்​க​ளுக்கு ஏழு முதல் ஒன்​பது கிலோ மீட்​டர் தூரம் வரை​யி​லும் திரள் ஓட்​டம் நடத்​தப்​ப​டும்.​

            ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் முதல் பத்து இடங்​களை பிடிக்​கும் மாண​வர்​கள் மற்​றும் மாண​வி​க​ளுக்கு பரி​சு​கள் வழங்​கப்​ப​டும்.​

            தமிழ் இலக்​கி​யங்​க​ளோடு தொடர்​பு​டைய வர​லாற்று சிறப்​பு​மிக்க இடங்​க​ளில் குறுந்​தொ​லைவு திரள் ஓட்​டம்
            நடத்​தப்​ப​டும் என்​றார்.
            It is loading more messages.
            0 new messages