சங்க இலக்கியத்தில் வண்டியும் சக்கரமும்

741 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 26, 2018, 1:21:43 AM9/26/18
to

புதன், 26 செப்டம்பர், 2018

சங்க இலக்கியத்தில் வண்டியும் சக்கரமும்


முன்னுரை:

வண்டி என்று சொன்னவுடன் இக்காலத்து மக்களுக்கு உடனே நினைவுக்கு வருவது என்னவோ ஈர்வை (டூவீலர் / மொபெட்) தான். அதிக வசதி கொண்டவர்களுக்கு நால்வை (கார்) நினைவுக்கு வரும். ஆனால் இவையெல்லாம் எத்தனை நூற்றாண்டுகளைக் கடந்து எப்படியெல்லாம் உருமாறி நம்முன்னால் வந்து நின்றன என்ற வரலாறு நம்மில் பலபேருக்குத் தெரியாது. உண்மையில் வண்டிகளின் ஆதி தோற்றம் பற்றிய சரியான கால ஆய்வு என்பது முழுமையாகச் செய்யப்படவுமில்லை இதுவரையிலும் அறியப்படவுமில்லை. இவ் ஆய்வுகளைச் செய்யப் புகுந்தோரும் கீழைநாடுகளின் பண்பாடுகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் அரைகுறையாக ஆய்வுசெய்து தமது முடிவுகளை அறிவித்திருக்கின்றனர்.

சக்கரங்களின் கண்டுபிடிப்பிற்குப் பிறகே வண்டிகள் கண்டறியப்பட்டு அவற்றில் சக்கரங்களைப் பயன்படுத்தினர் என்ற கருத்தே வலுவாக எங்கும் நிலவுகிறது. அதாவது சக்கரங்கள் கண்டுபிடிக்கப் பட்டபின்னர் அவை முதன்முதலில் மண்பாண்டத் தொழிலில்தான் பயன்படுத்தப் பட்டதென்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சக்கரங்கள் எப்போது எங்கே யாரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது?. இச் சக்கரங்களைக் கொண்டு யார் முதன்முதலில் மண்பானைகளைச் செய்தார்கள்?. என்ற கேள்விகளுக்கு மிகச்சரியான ஆதாரங்களுடன் கூடிய விடையினை இதுவரை எந்தவொரு ஆய்வாளரும் முன்வைக்கவில்லை என்பதே உண்மையாகும்.

முன்பொரு காலத்தில் இந்தியா முழுவதிலும் தமிழர்களே வாழ்ந்திருந்தனர் என்பது நான்கு கடவுள் - பகுதி 3 - தொல்தமிழகம் என்ற ஆய்வுக்கட்டுரையில் பல சான்றுகளுடன் காட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட தொல்தமிழர் பண்பாட்டில் வண்டிகளும் சக்கரங்களும் எவ்வகையான பயன்பாட்டில் இருந்தன என்பதற்குச் சங்க இலக்கியங்களைத் தவிர வேறு உறுதியான ஆதாரங்கள் கிடைக்காத நிலையே இதுநாள்வரையிலும் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த தொல்பொருள் எச்சங்கள், இலக்கிய ஆதாரங்களுக்குத் துணையாக நின்று மேலும் வலுசேர்க்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், சங்க இலக்கிய ஆதாரங்கள் மற்றும் அகழ்வாய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு சங்ககாலத் தமிழரின் பண்பாட்டில் வண்டியும் சக்கரங்களும் புழங்கப்பட்ட நிலையினைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையினைக் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க இலக்கியத்தில் வண்டி:

சங்க இலக்கியத்தில் வண்டி தொடர்பான பல பாடல்கள் உள்ளன. ஆனால் ஒரு பாடலில் கூட வண்டி என்ற சொல் பயிலப்படவில்லை. பாண்டில், தேர், வையம், சகடம், சாகாடு, ஒழுகை போன்ற பல பெயர்களால் வண்டியானது குறிக்கப்பெற்றுள்ளது. வண்டியைப் பற்றிப் பல சங்கப் பாடல்கள் கூறினாலும் பெரும்பாணாற்றுப்படையில்தான் விரிவான செய்திகளைக் காணமுடிகிறது. காளைமாடு பூட்டிய வண்டியினைக் கைக்குழந்தையினைக் கொண்ட பெண்ணொருத்தி ஓட்டிச்சென்ற நிகழ்வினை அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவரும் சங்கப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

.... கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து
முழவின் அன்ன முழு மர உருளி
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார்
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம்
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப
கோழி சேக்கும் கூடு உடை புதவின்
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
காடி வைத்த கலன் உடை மூக்கின்
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப .... - பெரும். 46

பொருள்விளக்கம்: அந்த வண்டிச் சக்கரத்தின் சூட்டானது பெருத்திருந்தது. ஆரக்கால்கள் திருத்தப்பட்டிருந்தன. உருளியானது ஒரே மரத்தில் செய்யப்பட்டு பார்ப்பதற்கு முரசினைப் போலத் தோன்றியது. வண்டியின் பாரானது கணையமரம்போல பருத்த கழியினால் செய்யப்பட்டு இருந்தது. வண்டியின்மேல் இருந்த ஆரையின்மேல் பசுந்தாள்களைக் குவித்து இருந்தனர். இத்தாள்கள் உலர்ந்து கருத்துப்போன நிலையில், ஆரைக்குமேலாக வெண்ணிறத் துணியாலான பொதிமூட்டைகள் கயிற்றால் கட்டிவைக்கப்பட்டு இருந்த தோற்றமானது கருநிறக் குன்றின்மேல் வெண்மேகங்கள் இருப்பதைப் போலத் தோன்றியது. வண்டியின் பின்புறத்தில் இருந்த கோழிகள் தங்கும் கூடானது யானைகளைத் துரத்தும் தோட்டக் காவலர்கள் தங்குகின்ற உயரமான குடிசையினைப் போல ஆரையின் மேல் தோன்றியது. சிறிய மருப்பினைக் கொண்ட பெண்யானையின் முழங்காலைப் போலத் தோன்றிய ஒரு சிறிய உரலானது வண்டியில் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. நாடகமாடும் பெண்கள் ஆடும்போது தம்கையில் எடுத்து வாசிக்கும் சிறியபறையினைப் போலத் தோன்றிய புளித்த மோர்க்கஞ்சியைக் கொண்ட மண்பானையானது வெண்ணிறத் துணியைக்கொண்டு மூடி கயிற்றால் கட்டப்பட்டிருக்க, கையில் குழந்தையைக் கொண்ட அப்பெண்ணானவள் வண்டியின் முன்னால் இருக்கும் வளைந்த பகுதியில் அமர்ந்தவாறு காளைமாட்டினைத் துரத்தி ஓட்டிக் கொண்டிருந்தாள்....

வண்டியின் பயன்பாடுகள்:

சங்ககாலத் தமிழர்கள் என்னென்ன வகையான வண்டிகளைப் பயன்படுத்தினர் என்பதைச் சங்க இலக்கியங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. காளைமாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளை இழுவைக்குப் பயன்படுத்திய செய்திகளைக் கூறும் சங்கப் பாடல்கள் பல உள்ளன. இவற்றில் காளைமாடு பூட்டிய வண்டிகளைப் பாரம் சுமந்து செல்வதற்கும் குதிரை வண்டிகளை மனிதர்கள் பயணம் செய்வதற்கும் பயன்படுத்தி உள்ளனர். இதைப் பற்றிச் சங்கப் பாடல்கள் கூறும் செய்திகளை இங்கே காணலாம்.

அ. உப்புவண்டி:

சங்ககாலத்தில் பொதுமக்கள் ஒரு மாட்டுவண்டியில் என்னென்ன திணைகளை எப்படியெல்லாம் ஏற்றிக்கொண்டு சென்றனர் என்பதை மேற்கண்ட பெரும்பாணாற்றுப்படை பாடலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி, கடலில் விளையும் உப்பினைச் சாத்தர்கள் (வணிகர்கள்) மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டு சென்று ஊருக்குள் விற்றனர். உமண் என்பது உப்பினைக் குறிக்கும் என்பதால் உப்பு விற்கும் சாத்தர்கள் உமணர் என்று அழைக்கப்பட்டனர். சங்க இலக்கியப் பாடல்களில் உமணர்களின் உப்பு வண்டி மிகப்பரவலாகப் பேசப்பட்டுள்ளது. ஒருசில பாடல்களை மட்டும் இங்கே சான்றாகக் காணலாம்.

இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம் - குறு.165
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட - புறம்.313
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் ஒழுகை உமணர் - நற்.331

இக்காலத்தில் இருப்பதைப்போன்ற தார்ச்சாலைகள் சங்ககாலத்தில் இல்லை. ஆனால் கற்களை மண்ணில் தொடர்ச்சியாகப் பதித்து அவற்றின்மேல் மணலைக் கொட்டிப் பரப்பிச் சாலைகள் அமைத்திருக்க வேண்டும் என்ற கருத்து தோன்றுகின்றது. காரணம் கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல்கள் ஆகும். 

... விரி மணல் ஞெமர கல் பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ - புறம்.90

வண்டிகள் சாலையில் செல்லும்போது பரப்பியிருந்த மணலின்மேல் சக்கரங்கள் ஏறுதலால் ஓசையுண்டாகவும் கற்கள் பிளந்து உடையவும் பெருமிதத்துடன் நடந்துசெல்லும் காளைமாட்டுக்குத் துறையும் உண்டா?. என்று மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

உமணர் வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனி
கரும் கால் வெண்குருகு வெரூஉம் - நற்.4

உமணர்கள் உப்பினை ஏற்றிய வண்டிகள் செல்லும் நீண்ட வழியில் மணலின்மேல் சக்கரங்கள் ஏறும்போது உண்டாகிய பெரும் ஓசையினைக் கேட்டு வயலில் இருந்த குருகினங்கள் அஞ்சிப் பறந்தன என்று மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

மேற்காணும் பாடல்களில் இருந்து, சங்க காலத்தில் உமணர்கள் தங்களின் உப்புவண்டிப் போக்குவரத்திற்காக இதுபோன்ற கல்-மணல் சாலைகளை அமைத்துப் பயன்படுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என்னதான் கல்-மணல் சாலைகளை அமைத்தாலும் மழையினால் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சீர்கெடத் தான் செய்யும். இதனால் ஆங்காங்கே சேற்றுநிலம் உண்டாகத் தான் செய்யும். வண்டிகள் உப்பினைச் சுமந்து செல்லும்போது வழியில் இருக்கும் சேற்றில் சில நேரங்களில் வண்டிச் சக்கரங்கள் சிக்கிக் கொள்ளும். பாரம் அதிகமாக இருப்பின் சிக்கிய சக்கரங்களை மீட்டு எடுத்து மேலேற்றுவதற்கு காளைமாடும் சரி மற்றவர்களும் சரி மிகவும் சிரமப்படுவார்கள். இதைப் பற்றிய செய்திகளைக் கூறும் சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் - புறம்.60
(பொருள்: உப்பங்கழியில் இருந்து உப்பினை ஏற்றிக்கொண்டு மலைநாடு செல்லும்வழியில் வண்டியின் சக்கரம் சேற்றில் சிக்கிக்கொள்ள, அதனைத் தனது வலிமையால் வென்று மீட்டெடுக்கும் எருதினைப் போன்ற பெரும் வலியுடைய எனது தலைவன்...)

நெய்தல் மரபின் நிரை கள் செறுவின்
வல் வாய் உருளி கதுமென மண்ட
அள்ளல் பட்டு துள்ளுபு துரப்ப
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து
சாகாட்டாளர் கம்பலை அல்லது பூசல் அறியா ...- பதி.27

(பொருள்: களிப்பான சேற்றில் வண்டியின் சக்கரங்கள் சிக்கிக்கொள்ள, எருதினையும் வண்டியினையும் மீட்க முயல்கின்ற வண்டிக்காரர்கள் எழுப்பும் பேரோசை அல்லது வேறோசையினைக் கேட்டறியாத....)

ஆ. குதிரை வண்டி:
 
சங்ககாலத்தில் தமிழர்கள் குதிரைகளின்மேலும் குதிரைகள் பூட்டிய வண்டிகளிலும் ஏறிப் பயணம் செய்தனர் என்று "சங்க இலக்கியத்தில் விலங்கியல் - குதிரை" என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டோம். சங்க இலக்கியத்தில் "தேர்" என்று கூறப்படுவதான குதிரை வண்டி தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகளை இங்கே காணலாம்.

குதிரை வண்டியை ஓட்டுபவனை வலவன் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. காளைமாடுகளைப் போலவே குதிரைகள் ஓட்டத்தின்போது தளர்ந்தால் அவற்றைக் குத்துக்கோல் கொண்டு வலவர்கள் குத்துவார்கள். குதிரைவண்டி வருவதனைப் பிறர் அறிந்து கொள்வதற்காக குதிரையின் கழுத்திலும் வண்டியிலும் ஒலிக்கின்ற பல மணிகளைக் கோர்த்துத் தொங்க விட்டிருப்பார்கள். இச்செய்திகளை எல்லாம் கீழ்க்காணும் நற்றிணைப் பாடலில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலிமா
வலவன் கோல் உற அறியா              
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே - நற்.78

குதிரை வண்டியின் சக்கரமானது மாட்டுவண்டியைப் போலன்றி மெலிதாக இருக்கும். மணற்பாங்கான நெய்தல் நிலங்களில் செல்லும்போது சக்கரங்கள் மணலில் புதைந்துவிடாமல் இருப்பதற்கு ஏதுவாக சக்கரங்களின் மேல்வளைவில் அரத்தின் வாய்போன்ற கூரிய பல பற்களை வரிசையாகக் கொண்ட இரும்பினாலான பட்டைத் தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும். ஏறத்தாழ இவ் அமைப்பானது சேறுநிறைந்த வயலில் உழுவதற்குத் தற்காலத்தில் பயன்படுகின்ற நுகத்தேரின் (டிராக்டர்) சக்கரங்களின் அமைப்பினை ஒத்திருக்கும். குதிரை வண்டிகளின் ஆழிக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு சொல்லவேண்டும் என்றால், திருமாலின் கையிலிருக்கும் சக்கரப்படையினைச் சொல்லலாம். இத்தகைய சக்கரங்களை வள்வாய் ஆழி (கூரிய வாயினைக் கொண்ட சக்கரம்) என்றும் நேமி என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

தேரும் ஓவத்து அன்ன கோப செம் நிலம்
வள்வாய் ஆழி உள் உறுபு உருள கடவுக - அகம்.54

வள்வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலிமா ... - நற்.78

குதிரை வண்டி வேகமாக ஓடும்போது வண்டிச் சக்கரங்களின்மேல் இருந்த தகடுகளில் கதிரொளி பட்டுத் தகதகவென ஒளிர்ந்தது. இதனால் இதனை இளம்பிறையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.

இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி .. - குறு.189

சக்கரங்களில் பல்போன்ற அமைப்புக்கள் இருந்த காரணத்தினால் குதிரை வண்டிகள் செல்லும்வழியில் வளர்ந்திருக்கும் செடிகொடிகள், பயிர்கள் மற்றும் பூக்கள் வண்டிச் சக்கரங்களின் வாய்ப்பட்டு அறுபடும். இச் செய்திகளைக் கீழ்க்காணும் சங்கப் பாடல்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர்
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா - நற்.338

இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப.. - குறு.189

பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி
வாள்முகம் துமிப்ப வள்இதழ் குறைந்த கூழைநெய்தலும்... - குறு.227

மலைக்குன்றில் இருந்து கீழ்நோக்கி வேகமாக இறங்கும்போது குதிரைவண்டியின் சக்கரங்கள் எழுப்பிய கடகட ஓசையானது கார்முகில்கள் மழைநேரத்தின்போது எழுப்பும் ஓசையினைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

விடு விசை குதிரை விலங்கு பரி முடுக
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி
கார் மழை முழக்கு இசை கடுக்கும்       
முனை நல் ஊரன் புனை நெடும் தேரே - அகம்.14

இ. வில்வண்டி:

தற்காலத்தில் வில்வண்டி என்று அழைக்கப்படும் வண்டியானது சங்க இலக்கியங்களில் ஆரைச்சாகாடு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஆரை என்பது வில்லைப் போன்று அரைவட்டமாக வளைந்த கூரையினைக் குறிப்பதாகும். வண்டியில் நீண்டதூர பயணம் செய்யும்போது வெயில் / மழையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கும் அலுப்பு தெரியாமல் இருப்பதற்கும் வண்டிக்கு மேலாக வில்போன்ற அமைப்பினை கூரையாக அமைத்திருப்பார்கள். அருகில் ஒரு வில்வண்டியின் படம் காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக, வில்வண்டியில் இருக்கும் ஆரையானது மரச்சட்டங்களை வளைத்து அதன்மேல் துணிகொண்டு போர்வைபோல மூடிச் செய்யப்பட்டு இருக்கும். மழைக்காலங்களில் இந்தத் துணிகளில் நீர் ஊறி உள்ளே சொட்டக்கூடாதென்றும் வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும் ஆரையின் மேற்புறத்தில் பசுந்தளைகளை குவியலாகப் போட்டுக் கயிற்றால் கட்டியிருப்பார்கள். அதுமட்டுமின்றி, ஆரையிலுள்ள துணியின் அடிப்புறத்தில் அதாவது உட்புறமாக செவ்வரக்கு என்னும் மெழுகினை உருக்கித் துணியில் ஊற்றி வார்த்திருப்பர். இதனால் துணியில் இருந்து உட்புறமாக நீர் சொட்டாது. ஆரைத்துணியில் வார்த்திருந்த செவ்வரக்கானது முருக்கமரம் முழுவதிலும் மலர்ந்திருந்த செந்நிற மலர்களைப் போல அழகுடன் தோன்றியதாகச் சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

... ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை - சிறு.252 

ஆரைத்துணியின் மேற்புறத்தில் குவித்து வைத்திருந்த பசுந்தளைகள் உலர்ந்துபோயிருக்க, உட்புறத்தில் செந்நிற அரக்கு பூசப்பட்டிருக்க அதைப்பார்த்த புலவருக்கு முதலையின் நினைவு வந்துவிட்டது. அந்த ஆரையின் அமைப்பானது பார்ப்பதற்கு எப்படி இருந்ததென்றால் ஒரு முதலையானது தனது வாயை அகலமாகத் திறந்து வைத்திருந்ததைப் போல நீண்டு இருந்ததென்று கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார்.

நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து - அக.301

இன்னொரு புலவரோ ஆரையினை மலைக்குன்றுக்கு ஒப்பாகக் கூறுகிறார். காய்ந்துபோன தளைக்குவியலுக்கு மேலாக வெண்ணிறத் துணியாலான மூட்டைகளை அடுக்கிக் கயிற்றால் கட்டியிருந்தனர். இதைப்பார்த்த புலவருக்குக் கரிய மலைக்குன்றும் அதன்மேல் தங்குகின்ற வெண்மேகப் பொதிகளும் நினைவுக்கு வர உடனே கீழ்க்காணுமாறு பாடுகிறார்.

மாரிக் குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் .. - பெரும். 37

வில்வண்டிகள் பயணத்திற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டன என்பதால் விரைவு கருதி பெரும்பாலும் குதிரைகளையே இவ் வண்டிகளில் பயன்படுத்தினர். பொருளாதார நிலைக்கேற்ப காளைமாடுகளும் வில்வண்டிகளில் பயன்படுத்தப்பட்டன.  

வண்டியின் உறுப்புக்கள்:

சங்க காலத்தில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வண்டிகளில் இருந்த பல்வேறு உறுப்புக்களின் பெயர்களைச் சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. காளைமாடுகள் பூட்டி இழுக்கப்படும் ஒரு வண்டியின் படமும் அதன் உறுப்புக்களைக் குறிக்கும் சங்கத் தமிழ்ப் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



 சகடு / சக்ர - எது முதலில்?:

மேலே கண்ட வண்டியின் பல்வேறு உறுப்புக்களில் சகடு என்பது வண்டியின் ஆழியைக் குறிக்கும் ஒரு சங்ககாலத் தமிழ்ச்சொல் ஆகும். இச்சொல்லில் இருந்தே வண்டியின் ஆழியைக் குறிக்கும் சக்ர என்னும் செங்கிருதச் சொல் தோன்றியது என்று இக்கட்டுரையின் ஏழாம் பகுதியில் கண்டோம். ஆனால், சக்ர என்னும் செங்கிருதச் சொல்லில் இருந்தே தமிழ்ச்சொல் ஆகிய சகடு / சகடம் தோன்றியது என்ற கருத்தே இதுவரையிலும் நிலவி வருகிறது. உண்மையில் இக்கருத்தானது மீள்பார்வை செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதனை இக்கட்டுரையின் முடிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாகக் கருதப்படும் சு`மேரியப் பண்பாடு, மாய்கோப் பண்பாடு, முந்தை கூர்க~ன் பண்பாடு, கிழக்கு ஐரோப்பா பண்பாடு போன்ற பண்பாட்டினர் தான் உலகில் முதன்முதலில் சக்கரங்களைப் பயன்படுத்தியதாக விக்கிபீடியா கூறுகிறது. ஆனால், இந்தப் பண்பாடுகளில் யார் முதன்முதலில் சக்கரங்களைப் பயன்படுத்தினர் என்ற கேள்விக்குச் சரியான விடையை இன்னும் காணமுடியவில்லை என்று அதே விக்கிபீடியா கூறுகிறது. அதுமட்டுமின்றி, உலகில் முதன்முதலில் சக்கரங்களை வண்டியில் பயன்படுத்தவில்லை என்றும் பானைசெய்யும் குயவர்கள் தான் சக்கரங்களை முதன்முதலில் பயன்படுத்தினர் என்றும் கூறுகிறது.

மேற்கூறிய நான்கு விதமான பண்பாடுகளையும் பார்த்தால் அவை வெவ்வேறு நாட்டினைச் சார்ந்தவை என்பது புலப்படும். இத்தனைப் பண்பாடுகளைப் பற்றிக் கூறிய ஆய்வாளர்கள் ஏன் இந்தியாவின் தொன்முது பண்பாட்டினராக வாழ்ந்துவந்த சங்கத் தமிழரின் பண்பாட்டினைப் பற்றிக் கூறவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. உண்மையில், உலகின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்துவந்த இப் பண்பாட்டினர்கள் சக்கரங்களைக் கண்டறிந்து மட்பாண்டத் தொழிலுக்குப் பயன்படுத்திய அதே சமயத்தில்தான் இந்தியாவில் சங்கத் தமிழர்களும் ஆழிகளைப் பயன்படுத்தலாயினர் என்று உறுதியாகக் கூறலாம். தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் எச்சங்களை இக்கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்ளலாம். இதைப்பற்றிய விரிவான செய்திகளைக் கீழே காணலாம்.

ஆதிச்சநல்லூர் தாழிகள்:

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் என்னும் ஊரானது தொல்தமிழகத்தின் பண்பாட்டுத் தொட்டில் என்று கருதப்படுகிறது. அந்த அளவுக்கு அங்கே தொல்தமிழர் பண்பாட்டின் எச்சங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. 2004 ஆம் ஆண்டு செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் பலனாக, நூற்றுக்கும் மேற்பட்ட ஈமத்தாழிகள் கிடைத்துள்ளன. இத்தாழிகளுக்குள் இறந்த மனிதர்களின் எலும்பின் எச்சங்களும் கிடைத்துள்ளன. காரணம், சங்ககாலத் தமிழரின் பண்பாட்டின்படி இறந்தவர்களை முதுமக்கட் தாழி எனப்படும் மண்ணால் செய்யப்பட்ட பெரிய பெரிய தாழிகளுக்குள் (பானைகள்) வைத்துத்தான் புதைப்பார்கள். இதைப்பற்றிய செய்திகள் பல சங்க இலக்கியப் பாடல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த ஈமத்தாழிகளுக்குள் இருந்த எச்சங்களின் வயதானது கார்பன் டே`ட்டிங் முறைப்படி 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து, ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னரும் அந்த ஊரில் தமிழர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதும் அத் தமிழர்கள் மண்தாழிகளை உருவாக்கத் தெரிந்தவர்கள் என்பதும் உறுதியாகிறது. சக்கரங்களின் உதவியின்றி இவ்வளவு பெரிய மண்தாழிகளை அதுவும் சரியான வடிவில் உருவாக்க இயலாது என்பதால் அவர்கள் கண்டிப்பாகச் சக்கரங்களைப் பயன்படுத்தி இருக்கவேண்டும் என்பதும் உறுதியாகிறது. இக்கூற்றுக்கு ஆதாரமாக உள்ள சங்கப் பாடல்கள் சிலவற்றையும் கீழே காணலாம்.

சான்று எண்: 1

கலம் செய் கோவே கலம் செய் கோவே
இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
தேவர்உலகம் எய்தினன் ஆதலின்
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்
இரு நிலம் திகிரியா பெரு மலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே - புறம்.228

பொருள்சுருக்கம்: நெடுமா வளவன் என்னும் மன்னன் இறந்துவிட்டான். அவனைப் புதைப்பதற்கு ஈமத்தாழி தேவைப்படுகிறது. மற்றவர்களைப் போலன்றி இம் மன்னன் கொடையிலும் வீரத்திலும் மிகப் பெரியவன் என்பதால் இவனை மிகப்பெரிய தாழிக்குள் வைத்துத்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று விரும்பும் புலவர் பானைசெய்யும் குயவனைப் பார்த்து இவ்வாறு கேட்கிறார் : " பானைசெய்யும் பெரும் குயவனே ! நெடுமாவளவனுக்கான ஈமத்தாழியை எவ்வாறு செய்யப் போகிறாய்?. இந்த மண்ணுலகத்தையே சக்கரமாகவும் பெரிய மலையினையே மண்ணாகவும் கொண்டு இம்மன்னனுக்கான ஈமத்தாழியைச் செய்ய உன்னால் முடியுமா?. ".

புலவர் இந்த மண்ணுலகத்தினைச் சக்கரமாகக் கருதியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஆம், இந்த மண்ணுலகம் ஒரு சக்கரத்தினைப் போல எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பதால்தான் புலவர் அதனை ஒரு சக்கரமாகக் கொள்ளச் சொல்கிறார். சக்கரத்தின்மேல் வைத்துச் செய்யப்படும் மண்ணுக்குப் பதிலாக பெரிய மலையினையே மண்ணாகக் கொள்ளச் சொல்கிறார். இந்த அருமையான உவமையிலிருந்து பெறப்படும் வரலாற்றுச் செய்தி இதுதான்: சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த குயவர்கள் சக்கரங்களைக் கொண்டே பானைகளை உருவாக்கி இருக்கின்றனர்.

சான்று எண்: 2

.... வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி
வனை கல திகிரியின் குமிழி சுழலும்      
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் ... - மலை.475

பொருள்விளக்கம்: வயலில் வெண்ணெல்லை அரிவோர் எழுப்பிய உடுக்கை ஒலியைக் கேட்டு அஞ்சிய எருமைக் கடாவொன்று தனது கூட்டத்தைப் பிரிந்து வேகமாக ஓடியது. அப்போது நிலத்தில் தேங்கியிருந்த நீரின்மேல் அதன் கால்கள் பதியவும் அதிலிருந்து வட்டவட்டமாக அலைகள் தோன்றிக் கொண்டே இருந்தன. இதைப் பார்ப்பதற்குக் குயவன் பானைசெய்யப் பயன்படுத்தும் சக்கரம் சுற்றுவதனைப் போலத் தோன்றியது.

இப்பாடலில் வரும் 'வனைகலத் திகிரி' என்பது குயவன் பானை வனைய / செய்யப் பயன்படுத்தும் சக்கரத்தைக் குறிப்பதாகும். இதிலிருந்து, சங்ககாலத் தமிழர்கள் பானைசெய்வதற்குச் சக்கரங்களைப் பயன்படுத்தினர் என்னும் செய்தியினைப் பெறமுடிகிறது.

முடிவுரை:

இதுவரை கண்டதிலிருந்து சங்ககாலத் தமிழகத்தில் சக்கரங்கள் இழுவைத் தொழிலுக்கு மட்டுமின்றி மண்பாண்டத் தொழிலுக்கும்  பயன்படுத்தப்பட்டு வந்தன என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த தொல்பொருள் எச்சங்களின் வயதின்படி தமிழகத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சக்கரங்களைக் கொண்டு மண்பானைகள் செய்யப்பட்டது என்றும் அறியப்பட்டது. இவ் இரண்டையும் இணைத்துப் பார்க்குமிடத்து, சக்கரங்கள், மண்பாண்டங்கள் மற்றும் வண்டிகளை உருவாக்கும் அறிவியலைத் தமிழர்கள் பிறரிடமிருந்து கற்கவில்லை என்பதும் சக்ர என்ற சொல்லில் இருந்து சகடு என்னும் தமிழ்ச்சொல் தோன்றவில்லை என்பதும் உறுதியாகிறது. இக் கூற்றுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சக்கரம், மண்பாண்டம், வண்டி தொடர்பான தமிழ்ச்சொற்கள் பலவும் எப்படியெல்லாம் திரிந்து இந்தியாவின் பிறமாநில மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை அடுத்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Pandiyaraja

unread,
Sep 26, 2018, 1:26:47 AM9/26/18
to மின்தமிழ்
அருமையான கட்டுரை. பாராட்டுக்கள் சரவணன்.
ப.பாண்டியராஜா

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 26, 2018, 1:33:08 AM9/26/18
to mintamil
On Wed, Sep 26, 2018 at 10:56 AM Pandiyaraja <pipi...@gmail.com> wrote:
அருமையான கட்டுரை. பாராட்டுக்கள் சரவணன்.
ப.பாண்டியராஜா

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா. :))

உங்களது சங்கச்சோலையில் உள்ள வண்டி பற்றிய உவமை விளக்கங்களும் தமிழ்கன்கார்ட`ன்ச்` இணையதளமுமே இவ் ஆய்விற்குப் பெரிதும் உதவி செய்தன.

உங்களுக்கு என்றும் நன்றி உடையவன். :))

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

iraamaki

unread,
Sep 26, 2018, 1:49:57 AM9/26/18
to mint...@googlegroups.com
வாழ்க! சிறப்பான கட்டுரை!
 
அன்புடன்,
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 26, 2018, 1:53:28 AM9/26/18
to mintamil
On Wed, Sep 26, 2018 at 11:19 AM iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:
வாழ்க! சிறப்பான கட்டுரை!
 
அன்புடன்,
இராம.கி.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா. :))
 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 26, 2018, 9:32:43 AM9/26/18
to mintamil

சக்கரத்தின் தோற்றம் பற்றிய பேச்சினைக் கொண்ட ஒரு விழியப் பதிவு கீழே:

பேச்சின் துவக்கம்: 17:25


KKSR

unread,
Sep 26, 2018, 10:24:20 AM9/26/18
to mint...@googlegroups.com
அருமை ஐயா! தகவல் திரட்டுக்கே தலைவணங்கி மகிழ்கிறேன்

நன்றி!
சுரேஜமீ




To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to <a href="mailto:mintamil+unsubscribe@googl
--
Sent from Mobile

Singanenjam Sambandam

unread,
Sep 26, 2018, 11:37:38 AM9/26/18
to mint...@googlegroups.com
சிறந்த கட்டுரை .....பாராட்டுகள். வாழ்த்துகள் 

செல்வன்

unread,
Sep 26, 2018, 12:33:51 PM9/26/18
to mintamil
பாராட்டுகள்..தொல்லியல் துறை ஆய்வுகளை சேர்த்து பிற துறைகளையும் ஆய்வுக்குள் கொண்டுவந்தமைக்கும், காலக்கணக்கு ஒரு அளவு கட்டுரையில் காணப்படுவதற்கும் நல்வாழ்த்துகள் சரவணன் அவர்களே.

மண்பானை செய்ய பயன்படும் குயவரின் சக்கரம் சுமேரியாவில் 5129 ஆண்டுகளுக்கு முன்பு (கிமு 3129ல்) சுமேரியாவில் பயன்படுத்தபட்டுள்ளது. எகிப்தில் கிமு 3500ல் குயவரின் சக்கரம் இருந்துள்ளது. சிந்துசமவெளியில் அதே காலகட்டத்தில் கிமு 3500 குயவரின் சக்கரம் பயனாகியுள்ளது. சீனாவிலும் குயவரின் சக்கரம் இருந்துள்ளது.


ஆதிச்சநல்லூர் பானைகளின் வயது 4000 ஆண்டுகள் என்கையில் கிமு 2000 சுமாராக அவற்றின் காலம் என வைத்துக்கொள்லலாம். எகிப்து, சுமேரியாவுக்கு இது 1500 ஆண்டுகள் பிந்தையது.

சங்க இலக்கியங்களின் காலகட்டம் கிமு 300க்கு முன்பு கொண்டு செல்வது கடினம். கிமு 300க்கு முன்பு சக்கரம் உலகெங்கும் பரவலாகிவிட்டது.

அதனால் இந்த ஆய்வு சக்கரம் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கபட்டதாக நிருபிக்கவில்லை. சக்கரம் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கபடவுமில்லை.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 27, 2018, 12:05:22 AM9/27/18
to mintamil
On Wed, Sep 26, 2018 at 7:54 PM KKSR <aur...@gmail.com> wrote:
அருமை ஐயா! தகவல் திரட்டுக்கே தலைவணங்கி மகிழ்கிறேன்

நன்றி!
சுரேஜமீ

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 27, 2018, 12:06:05 AM9/27/18
to mintamil
On Wed, Sep 26, 2018 at 9:07 PM Singanenjam Sambandam <singa...@gmail.com> wrote:
சிறந்த கட்டுரை .....பாராட்டுகள். வாழ்த்துகள் 

அன்புடன்,<b

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 27, 2018, 12:15:26 AM9/27/18
to mintamil
On Wed, Sep 26, 2018 at 10:03 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
பாராட்டுகள்..தொல்லியல் துறை ஆய்வுகளை சேர்த்து பிற துறைகளையும் ஆய்வுக்குள் கொண்டுவந்தமைக்கும், காலக்கணக்கு ஒரு அளவு கட்டுரையில் காணப்படுவதற்கும் நல்வாழ்த்துகள் சரவணன் அவர்களே.

மிக்க நன்றி செல்வன். :))
 

மண்பானை செய்ய பயன்படும் குயவரின் சக்கரம் சுமேரியாவில் 5129 ஆண்டுகளுக்கு முன்பு (கிமு 3129ல்) சுமேரியாவில் பயன்படுத்தபட்டுள்ளது. எகிப்தில் கிமு 3500ல் குயவரின் சக்கரம் இருந்துள்ளது. சிந்துசமவெளியில் அதே காலகட்டத்தில் கிமு 3500 குயவரின் சக்கரம் பயனாகியுள்ளது. சீனாவிலும் குயவரின் சக்கரம் இருந்துள்ளது.


ஆதிச்சநல்லூர் பானைகளின் வயது 4000 ஆண்டுகள் என்கையில் கிமு 2000 சுமாராக அவற்றின் காலம் என வைத்துக்கொள்லலாம். எகிப்து, சுமேரியாவுக்கு இது 1500 ஆண்டுகள் பிந்தையது.

சங்க இலக்கியங்களின் காலகட்டம் கிமு 300க்கு முன்பு கொண்டு செல்வது கடினம். கிமு 300க்கு முன்பு சக்கரம் உலகெங்கும் பரவலாகிவிட்டது.

அதனால் இந்த ஆய்வு சக்கரம் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கபட்டதாக நிருபிக்கவில்லை. சக்கரம் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கபடவுமில்லை.

அவசரப்பட்டு முடிவு செய்யவேண்டாம் செல்வன். :))
சுமேரியர்களும் எகிப்தியர்களும் சக்கரங்களைக் கண்டுபிடித்தபோது நாம் எங்கிருந்தோம்?. என்ன செய்துகொண்டிருந்தோம்?.
நமது பழமையைத் தோண்டிப் பார்த்து அறிந்துகொள்ளூம் ஆர்வம் இல்லையா உங்களுக்கு?

நம் இந்தியாவைப் பொருத்தவரை குறிப்பாகத் தமிழகத்தைப் பொருத்தவரையிலும் அகழ்வாய்வுகள் வீணானவை என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது.

முதலில் ஆதிச்சநல்லூர் அப்புறம் கீழடி இப்போது திருவில்லிபுத்தூர் அருகே குறவன் கோட்டை என்ற ஊரில் அகழ்வாய்வு செய்யக் கோரியுள்ளனர். நம்நாட்டில் அகழ்வாய்வுகள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கும். தொடருமா என்பதும் ஐயமே. இந்நிலையில் நமக்கு எப்படித் தொல்பொருள் சின்னங்கள் தொடர்ந்து கிடைக்கும்?. அது கிடைக்காதவரையிலும் நமது பண்பாட்டின் தொன்மையினை நாம் உலகோர்க்கு முழு ஆதாரங்களுடன் காட்டுவது கடினமான வேலைதானே.

எனது கருத்து யாதெனில், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அகழ்வாய்வுகள் மேற்கொண்டால் கண்டிப்பாக நமது சங்ககாலத்திற்கும் முந்தைய தமிழர்களின் தொல்பொருள் சின்னங்கள் கிடைக்கும்.

ஆனால் செய்வது யார்?. என்ற கேள்வியே பெரிதாக முன் நிற்கிறது. :))
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Sep 27, 2018, 4:53:13 AM9/27/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, செல்வன் கோவை


2018-09-26 9:33 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
>
> பாராட்டுகள்..தொல்லியல் துறை ஆய்வுகளை சேர்த்து பிற துறைகளையும் ஆய்வுக்குள் கொண்டுவந்தமைக்கும், காலக்கணக்கு ஒரு அளவு கட்டுரையில் காணப்படுவதற்கும் நல்வாழ்த்துகள் சரவணன் அவர்களே.
>
> மண்பானை செய்ய பயன்படும் குயவரின் சக்கரம் சுமேரியாவில் 5129 ஆண்டுகளுக்கு முன்பு (கிமு 3129ல்) சுமேரியாவில் பயன்படுத்தபட்டுள்ளது. எகிப்தில் கிமு 3500ல் குயவரின் சக்கரம் இருந்துள்ளது. சிந்துசமவெளியில் அதே காலகட்டத்தில் கிமு 3500 குயவரின் சக்கரம் பயனாகியுள்ளது. சீனாவிலும் குயவரின் சக்கரம் இருந்துள்ளது.
>
> https://en.wikipedia.org/wiki/Potter%27s_wheel#History
>
> ஆதிச்சநல்லூர் பானைகளின் வயது 4000 ஆண்டுகள் என்கையில் கிமு 2000 சுமாராக அவற்றின் காலம் என வைத்துக்கொள்லலாம். எகிப்து, சுமேரியாவுக்கு இது 1500 ஆண்டுகள் பிந்தையது.
>

ஆதிச்சநல்லூர் பானைகளின் வயது 4000 ஆண்டுகள் அல்ல. This error about the antiquity of Tamil megalithic sites is widely prevalent in tamil language internet writings. Archaeology gives us different dates: Sites like Adichanallur come some ~1500 years after Harappan classical civilization.

Adhichanallur is some 3000 years after wheels were found in Sumeria or Tripolye culture (Europe), and Sangam texts are even later: 3500 years after Ancient Near East, Ancient Europe had wheeled transport.

ஆதிச்சநல்லூர் பானைகளின் வயது 2500 - 2800 ஆண்டுகள் தான்.  ஆதிச்சநல்லூர் பானைகளில் கிடைத்த முக்கியத் தகவல்கள் பற்றி எழுதியுள்ளேன் : (Esp. Figure 7, from Adichanallur funerary pottery & its meaning).
https://archive.org/stream/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/IVC_Religion_in_IronAge_TamilNadu_by_NGanesan_2016_16th_WSC#page/n5

பிற பின்,
நா. கணேசன்


> சங்க இலக்கியங்களின் காலகட்டம் கிமு 300க்கு முன்பு கொண்டு செல்வது கடினம். கிமு 300க்கு முன்பு சக்கரம் உலகெங்கும் பரவலாகிவிட்டது.
>
> அதனால் இந்த ஆய்வு சக்கரம் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கபட்டதாக நிருபிக்கவில்லை. சக்கரம் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கபடவுமில்லை.
>

nkantan r

unread,
Sep 27, 2018, 5:19:44 AM9/27/18
to மின்தமிழ்
Present level of archaeological excavations leads to inference of 'cradle of civilization' to middle east-iran-iraq by 'dates'. Unless we get a local archaeological site dating to 5000 years back, we have to agree that Tamil civilization is certainly post the Sumerian sites.

rnk

Offhand: if i remember hand made (patted) pottery (made without wheels), pottery (made with wheels) and stone and wooden whhels (~4000 BC?) have been excavated from Sumerian sites.

Innamburan S.Soundararajan

unread,
Sep 27, 2018, 5:45:25 AM9/27/18
to mintamil
Present level of archaeological excavations leads to inference of 'cradle of civilization' to middle east-iran-iraq by 'dates'. Unless we get a local archaeological site dating to 5000 years back, we have to agree that Tamil civilization is certainly post the Sumerian sites.

~ அப்பாடா! இதை சொன்னதற்கு நான் வாங்கிக்கட்டிக்கொண்டேன். இதனால் தமிழ் பெருமை குறைந்து விடவில்லை என்றாலும்.
பழசு தான் பெரிசு இல்லை என்றாலும், 'கல் தோன்ரி, மண் தோன்றகாலத்திலே...

iraamaki

unread,
Sep 27, 2018, 6:33:07 AM9/27/18
to mint...@googlegroups.com

 

Modern historians have suggested that Sumer was first permanently settled between c. 5500 and 4000 BC by a West Asian people who spoke the Sumerian language (pointing to the names of cities, rivers, basic occupations, etc., as evidence), an agglutinativelanguage isolate.[3][4][5][6] These conjectured, prehistoric people are now called "proto-Euphrateans" or "Ubaidians",[7] and are theorized to have evolved from the Samarra culture of northern Mesopotamia.[8][9][10][11] The Ubaidians (though never mentioned by the Sumerians themselves) are assumed by modern-day scholars to have been the first civilizing force in Sumer, draining the marshes for agriculture, developing trade, and establishing industries, including weaving, leatherwork, metalwork, masonry, and pottery.[7]

Some scholars contest the idea of a Proto-Euphratean language or one substrate language; they think the Sumerian language may originally have been that of the hunting and fishing peoples who lived in the marshland and the Eastern Arabia littoral region and were part of the Arabian bifacial culture.[12] Reliable historical records begin much later; there are none in Sumer of any kind that have been dated before Enmebaragesi (c. 26th century BC). Juris Zarins believes the Sumerians lived along the coast of Eastern Arabia, today's Persian Gulf region, before it was flooded at the end of the Ice Age.[13]

Sumerian civilization took form in the Uruk period (4th millennium BC), continuing into the Jemdet Nasr and Early Dynastic periods. During the 3rd millennium BC, a close cultural symbiosis developed between the Sumerians, who spoke a language isolate, and Akkadian-speakers, which included widespread bilingualism.[14] The influence of Sumerian on Akkadian (and vice versa) is evident in all areas, from lexical borrowing on a massive scale, to syntactic, morphological, and phonological convergence.[14] This has prompted scholars to refer to Sumerian and Akkadian in the 3rd millennium BC as a Sprachbund.[14] Sumer was conquered by the Semitic-speaking kings of the Akkadian Empire around 2270 BC (short chronology), but Sumerian continued as a sacred language.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

iraamaki

unread,
Sep 27, 2018, 6:33:08 AM9/27/18
to mint...@googlegroups.com

கீழே இருப்பதை நீங்களே படித்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் சுட்டிவழி போய் முழுக் கட்டுரையையும் படித்துக்கொள்ளுங்கள். பொ.உ.மு. 2600 க்கு முன்னால் நம்பக்கூடிய எந்த வரலாற்றுத் தரவும் அங்கு இல்லை. சும்மா பொ.உ.மு. 5000 என்று அவரவர்கள் கதைகட்டிவிடுவதில் என்ன பலன்? தெக்சாசுக்காரருக்கு மாற்றிச் சொல்வதில் அப்படி என்ன அக்கறையோ? தமிழர்களாகிய நாம் ஏன் இப்படியிருக்கிறோம்?

ஆதிச்சநல்லூரின் காலம் இதே அளவு இருக்குமென்றுதான் அந்தச்சமயம் நாளிதழில் படித்தேன். சோகம் அதிலில்லை. ஆதிச்சநால்லூரின் தொல்லாய்வு முடிவுகளுக்கான அறிக்கையையே (2004 இல்) தொல்லாய்வு செய்தவர் இன்னும் சமர்ப்பிக்கக் காணோம். பலரும் விடாது கூப்பாடு போட்டுக்கொண்டே இருக்கிறார். வேலை செய்தவர் வாய்மூடி மோனியாய் இருக்கிறார். நடுவண் அரசு துளியும் கவலைப்படவோ, ஏனென்று கேட்கவோ காணோம். 

 

அன்புடன்,

இராம.கி. 

Modern historians have suggested that Sumer was first permanently settled between c. 5500 and 4000 BC by a West Asian people who spoke the Sumerian language (pointing to the names of cities, rivers, basic occupations, etc., as evidence), an agglutinativelanguage isolate.[3][4][5][6] These conjectured, prehistoric people are now called "proto-Euphrateans" or "Ubaidians",[7] and are theorized to have evolved from the Samarra culture of northern Mesopotamia.[8][9][10][11] The Ubaidians (though never mentioned by the Sumerians themselves) are assumed by modern-day scholars to have been the first civilizing force in Sumer, draining the marshes for agriculture, developing trade, and establishing industries, including weaving, leatherwork, metalwork, masonry, and pottery.[7]

Some scholars contest the idea of a Proto-Euphratean language or one substrate language; they think the Sumerian language may originally have been that of the hunting and fishing peoples who lived in the marshland and the Eastern Arabia littoral region and were part of the Arabian bifacial culture.[12] Reliable historical records begin much later; there are none in Sumer of any kind that have been dated before Enmebaragesi (c. 26th century BC). Juris Zarins believes the Sumerians lived along the coast of Eastern Arabia, today's Persian Gulf region, before it was flooded at the end of the Ice Age.[13]

Sumerian civilization took form in the Uruk period (4th millennium BC), continuing into the Jemdet Nasr and Early Dynastic periods. During the 3rd millennium BC, a close cultural symbiosis developed between the Sumerians, who spoke a language isolate, and Akkadian-speakers, which included widespread bilingualism.[14] The influence of Sumerian on Akkadian (and vice versa) is evident in all areas, from lexical borrowing on a massive scale, to syntactic, morphological, and phonological convergence.[14] This has prompted scholars to refer to Sumerian and Akkadian in the 3rd millennium BC as a Sprachbund.[14] Sumer was conquered by the Semitic-speaking kings of the Akkadian Empire around 2270 BC (short chronology), but Sumerian continued as a sacred language.

Sent: Thursday, September 27, 2018 3:15 PM
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

nkantan r

unread,
Sep 27, 2018, 6:45:47 AM9/27/18
to மின்தமிழ்
I said 5000 years (~3000 BC). And there is an excavated wheel (grinder or pot wheel??) dated ~3500 BC.

It was a great technological step linking the non-moving axle to a carrier platform which resulted in carts.

https://en.wikipedia.org/wiki/Ljubljana_Marshes_Wheel

rnk

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 27, 2018, 8:03:40 AM9/27/18
to mintamil
சக்கரம் தொடர்பான தொல்பொருள் எச்சங்களின் காலக்கணக்கீடு முழுமையான நம்பகத்தன்மையினைக் கொண்டது அல்ல என்பதே எனது கருத்தாகும். இதற்கான காரணங்களை முன்வைக்கிறேன்.

1. முழுக்கவும் கல்லால் ஆன ஒரு சக்கரத்தின் காலத்தை எவ்வாறு கணக்கிட்டுக் கூறுவது?. எந்தவொரு கணக்கீட்டு முறையினைப் பின்பற்றினாலும் அது அந்தக் கல் இந்தப் பூமியில் உருவான காலத்தைத் தான் காட்டுமே ஒழிய அக்கல்லில் இருந்து சக்கரம் செய்யப்பட்ட காலத்தைக் காட்டுவது எப்படி?

2. ஒரு சக்கரம் முழுக்கவும் மரத்தால் ஆகியிருந்தால் 5000 ஆண்டுகள் வரையிலும் மக்கிப் போகாமல் தாக்குப் பிடித்து நிற்குமா?.

அறிந்தோர் சரியான விளக்கம் கூறுங்கள்.

அன்புடன்,

தி.பொ.ச.







--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Sep 27, 2018, 9:05:35 AM9/27/18
to mintamil
சரவணன் அவர்களே,

சக்கரம் கண்டுபிடிக்கபட்டது சுமேரியா, இரான் பகுதிகளில் தான். இது உலகம் அறிந்த ஆய்வு உண்மை. சங்க இலக்கியம் மூலம் கிமு 300க்கு முந்தைய தகவல்களை அறியமுடியாது. சங்க இலக்கிய காலகட்டத்துக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வண்டி, குதிரை எல்லாமே உலகெங்கும் பரவலாக இருந்தன.

மற்றபடி பானைகளை செய்ய குயவரின் சக்கரம் அவசியமே இல்லை. அமெரிக்க பூர்வகுடி செவ்விந்தியர் சக்கரம் இல்லாமலே தான் பானைகளை செய்து வந்தார்கள். பானைகளில் மனிதர்களை புதைக்கும் வழக்கமும் மிக தொன்மையானது. பிரமிடுகள் கட்டுமுன்னர் எகிப்தில் முதல் பேரரசிலேயே எகிப்திய மன்னர்களை பானைகளில் தான் புதைத்து வந்தார்கள். காலம் சுமாராக கிமு 3100..இன்றைக்கு 5100 ஆண்டுகள் முன்பு.

ஹரப்பா, மொகஞ்சதாரோ மொழி தமிழ் அல்ல. அது இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளபடாத ஆதி திராவிட மொழி. சமஸ்கிருதத்தை ஹரப்பாவில் திராவிட மொழி புலவர்கள் உருவாக்கினார்கள் என சொல்லாமல் இருந்தால் சரி :-)...




செல்வன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 27, 2018, 9:30:50 AM9/27/18
to mintamil
On Thu, Sep 27, 2018 at 6:35 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
சரவணன் அவர்களே,

சக்கரம் கண்டுபிடிக்கபட்டது சுமேரியா, இரான் பகுதிகளில் தான். இது உலகம் அறிந்த ஆய்வு உண்மை.

செல்வன், உங்களுக்கு எனது கேள்விகள் புரிந்தனவா இல்லையா?. :))
சுமேரியா, இரான் பகுதிகளில் சக்கரங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால் அவற்றின் ஆயுள் எப்படி முடிவு செய்யப்பட்டது?. இந்தியாவில் தோண்டுங்கள். இங்கும் சக்கரங்கள் கிடைக்கும். கேள்வி இதுதான்: சுமேரியாவில் இருக்கும் சக்கரங்கள் தான் ஆயுளில் மூத்தவை என்பது எப்படி ?

 
சங்க இலக்கியம் மூலம் கிமு 300க்கு முந்தைய தகவல்களை அறியமுடியாது. சங்க இலக்கிய காலகட்டத்துக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வண்டி, குதிரை எல்லாமே உலகெங்கும் பரவலாக இருந்தன.

உலகமெங்கும் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதில் இந்தியாவும் அடக்கம் தானே.
 

மற்றபடி பானைகளை செய்ய குயவரின் சக்கரம் அவசியமே இல்லை. அமெரிக்க பூர்வகுடி செவ்விந்தியர் சக்கரம் இல்லாமலே தான் பானைகளை செய்து வந்தார்கள். பானைகளில் மனிதர்களை புதைக்கும் வழக்கமும் மிக தொன்மையானது. பிரமிடுகள் கட்டுமுன்னர் எகிப்தில் முதல் பேரரசிலேயே எகிப்திய மன்னர்களை பானைகளில் தான் புதைத்து வந்தார்கள். காலம் சுமாராக கிமு 3100..இன்றைக்கு 5100 ஆண்டுகள் முன்பு.

இந்தக் காலக்கணக்கீடு தான் தவறானது என்கிறேன். மரப்பொருள் தவிர ஏனை பொருட்களுக்கான ஆயுள் கணக்கீடு தவறான முடிவையே தரும். மாச்` ச்`பெக்ட்ரோமெட்ரி பற்றி விரிவாகப் படிக்கவும்.
 

ஹரப்பா, மொகஞ்சதாரோ மொழி தமிழ் அல்ல. அது இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளபடாத ஆதி திராவிட மொழி. சமஸ்கிருதத்தை ஹரப்பாவில் திராவிட மொழி புலவர்கள் உருவாக்கினார்கள் என சொல்லாமல் இருந்தால் சரி :-)...

அடடா, சுமேரியன், எகிப்தியன் நாகரிகங்களுக்குப் பிற்பட்டவர்கள் நாம் என்று சொன்னால் கேள்வி கேட்காமல் நம்புவீர்கள். ஆனால், செங்கிருதத்தினைத் தமிழ்ப் புலவர்கள் உருவாக்கினார்கள் என்றால் நம்ப மாட்டீர்கள். நல்ல வேடிக்கை செல்வன்.  :))

செல்வன்

unread,
Sep 27, 2018, 9:39:13 AM9/27/18
to mintamil
சரவணன் ஐயா

கார்பன் டேட்டிங் உள்ளிட்ட பலவகை ஆய்வுமுறைகள் மூலம் மரங்களின் ஆயுளை கண்டறியலாம். 5000 ஆன்டுகளுக்கு முந்தைய மர சக்கரங்கள் உலகின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன. 4 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மர ஈட்டிகள் கூட தேதி கண்டுபிடிக்கபட்டுள்ளன.

கல்லின் தேதியை அறிவது சிரமம். ஆனால் கல்லில் உள்ள ஆர்கானிக் மெடெரியல்களின் ஆயுளை கண்டுபிடிக்கலாம் (கல்லின் மேல் உள்ள பாசி, அதில் பதிந்துள்ள பூச்சிகளின் உடல்கள் எக்சட்ரா)

தேர், வண்டி எல்லாமே செம்பு காலத்தில் உருவானவை. அதிலுள்ள தாமிர உலோகத்தை டேட்டிங் செய்வதன் மூலமும் காலத்தை அறியலாம்.

சங்ககால தமிழ் நாகரிகம் நிச்சயமாக சுமேரிய, எகிப்திய நாக்ரிகங்களுக்கு பிந்தையதுதான். எகிப்து, சுமேரியன் அழிந்து போன நாகரிகங்கள். தற்போதும் வாழும் நாகரிகங்களில் தமிழும் சிறப்பான ஒன்று. அதனால் தான் அது செம்மொழி என அறியபடுகிறது. ஆனால் ப்ரோட்டோ- தமிழ், ப்ரோட்டோ--திராவிடம் (ஹரப்பா, மொகஞ்சதாரோ) சுமேரியத்துக்கு காலத்தில் ஒப்பிடகூடியது. அதை தற்கால தமிழுடன் சேர்த்து குழப்பிக்கொள்ள கூடாது.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 27, 2018, 10:20:21 AM9/27/18
to mintamil
On Thu, Sep 27, 2018 at 7:09 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
சரவணன் ஐயா

கார்பன் டேட்டிங் உள்ளிட்ட பலவகை ஆய்வுமுறைகள் மூலம் மரங்களின் ஆயுளை கண்டறியலாம். 5000 ஆன்டுகளுக்கு முந்தைய மர சக்கரங்கள் உலகின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன.

அடடா, 3500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் செய்த மரச்சக்கரம் ஒன்றுகூட கிடைக்கவில்லை. ஆனால் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் பிறர் செய்த மரச்சக்கரங்கள் கிடைத்துள்ளனவா?.  நல்ல வேடிக்கை.

 
4 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மர ஈட்டிகள் கூட தேதி கண்டுபிடிக்கபட்டுள்ளன.
 
முற்றிலும் தவறான கணிப்பு. எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் அப்படியே நம்பி விடுவதா?
 

கல்லின் தேதியை அறிவது சிரமம். ஆனால் கல்லில் உள்ள ஆர்கானிக் மெடெரியல்களின் ஆயுளை கண்டுபிடிக்கலாம் (கல்லின் மேல் உள்ள பாசி, அதில் பதிந்துள்ள பூச்சிகளின் உடல்கள் எக்சட்ரா)

தேர், வண்டி எல்லாமே செம்பு காலத்தில் உருவானவை. அதிலுள்ள தாமிர உலோகத்தை டேட்டிங் செய்வதன் மூலமும் காலத்தை அறியலாம்.

செம்பு இயற்கையான மாழை. செயற்கையான கணக்கீட்டு முறையில் கண்டறியப்படும் ஆயுள் செம்பு உருவான காலத்தைத் தான் காட்டும். செம்பில் இருந்து தகடு செய்த காலத்தைக் காட்டாது. அதனால்தான் சொல்கிறேன் மாச்` ச்`பெக்ட்ரோமெட்ரியை நன்றாகப் படித்துவிட்டு வாருங்கள் என்று.

செல்வன்

unread,
Sep 27, 2018, 10:38:13 AM9/27/18
to mintamil
On Thu, Sep 27, 2018 at 9:20 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:


On Thu, Sep 27, 2018 at 7:09 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
சரவணன் ஐயா

கார்பன் டேட்டிங் உள்ளிட்ட பலவகை ஆய்வுமுறைகள் மூலம் மரங்களின் ஆயுளை கண்டறியலாம். 5000 ஆன்டுகளுக்கு முந்தைய மர சக்கரங்கள் உலகின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன.

அடடா, 3500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் செய்த மரச்சக்கரம் ஒன்றுகூட கிடைக்கவில்லை. ஆனால் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் பிறர் செய்த மரச்சக்கரங்கள் கிடைத்துள்ளனவா?.  நல்ல வேடிக்கை.


3500 ஆண்டுகள் அல்ல. சக்கரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கில் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் 5000 ஆன்டு பழமையான சக்கரம் எதுவும் கண்டுபிடிக்கப்டாவில்லை

 




செம்பு இயற்கையான மாழை. செயற்கையான கணக்கீட்டு முறையில் கண்டறியப்படும் ஆயுள் செம்பு உருவான காலத்தைத் தான் காட்டும். செம்பில் இருந்து தகடு செய்த காலத்தைக் காட்டாது. அதனால்தான் சொல்கிறேன் மாச்` ச்`பெக்ட்ரோமெட்ரியை நன்றாகப் படித்துவிட்டு வாருங்கள் என்று.


செம்பு துருவேறின காலம், அதிலுள்ள பைக்ரோபார்ட்டிகிள்ஸின் காலத்தை வைத்து அதன் காலத்தை கணிக்கலாம். காண்க:

 

4 லட்சம் ஆன்டுகளுக்கு முந்தைய மர ஈட்டி
'

image.png

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 27, 2018, 10:55:11 AM9/27/18
to mintamil
ஒரு மாழை துருப்பிடித்தலைக் கொண்டு அது உருவான காலத்தைக் கணக்கிடுவதா?. என்ன பைத்தியக்காரத்தனம் இது?
ஒரு மாழை துருப்பிடிக்க என்னென்ன காரணிகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியாதா?

இரும்பு முதலான எந்தவொரு மாழையும்  இடம் மற்றும் சூழலுக்கேற்ப விரைவாகவோ மெதுவாகவோ துருப்பிடிக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் ஆய்வு தவறான முடிவையே தரும் செல்வன்.


 

4 லட்சம் ஆன்டுகளுக்கு முந்தைய மர ஈட்டி
'

image.png

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

செல்வன்

unread,
Sep 27, 2018, 11:01:15 AM9/27/18
to mintamil
On Thu, Sep 27, 2018 at 9:55 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:


ஒரு மாழை துருப்பிடித்தலைக் கொண்டு அது உருவான காலத்தைக் கணக்கிடுவதா?. என்ன பைத்தியக்காரத்தனம் இது?
ஒரு மாழை துருப்பிடிக்க என்னென்ன காரணிகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியாதா?

இரும்பு முதலான எந்தவொரு மாழையும்  இடம் மற்றும் சூழலுக்கேற்ப விரைவாகவோ மெதுவாகவோ துருப்பிடிக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் ஆய்வு தவறான முடிவையே தரும் செல்வன்.


விரைவாக துருபிடித்தால் என்ன, வேகமாக பிடித்தால் என்ன?

அதிலிருக்கும் முதல் துரு எந்த காலகட்டம் என்பது தெரிந்தால் போதும். நானோகிராம் அளவு துரு இருந்தாலும் காலம் கண்டுபிடிக்கலாம். 


திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 27, 2018, 11:17:40 AM9/27/18
to mintamil
இதற்குமேலும் உங்களுக்கு விளக்க வேண்டுமென்றால் முதலில் அந்த நூலை / கட்டுரையைக் கொண்டுவாருங்கள். அதிலுள்ள தவறுகளை விரிவாகக் கூறுகிறேன்.

மாழைகளில் மட்டுமல்ல, மரத்திலேயே கூட காலக்கணக்கீடு தவறாகும் வாய்ப்புள்ளது. எப்படி என்று ஒரு சான்றுடன் இங்கே விளக்குகிறேன்.

ஈரானில் 1-1-1 ல் ஒரு ஆல விதையிலிருந்து மரம் வளரத் துவங்கியது. ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள் வரையிலும் வாழ்ந்த அந்த மரம் சரியாக 1-1-501 அன்று மாண்டுபோனது. சுமார் 500 ஆண்டுகள் கழித்து அதாவது 1-1-1001 அன்று அம்மரத்தினை வெட்டிச் சக்கரம் செய்தார்கள். அதன்பின், அச்சக்கரம் சரியாக 500 ஆண்டுகள் கழித்து அதாவது 1-1-1501 ஆம் ஆண்டு தொல்பொருள் ஆய்வாளர்களின் கையில் கிடைத்தது. உடனே அவர்கள் கார்பன் டேட்டிங் முறையைப் பயன்படுத்தி அச்சக்கரத்தின் ஆயுள் அதாவது சக்கரம் செய்யப்பட்ட காலம் 1000 ஆண்டுகள் என்று கூறினார்கள்.

அவர்களின் கூற்று சரியாகுமா செல்வன்?.

 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

செல்வன்

unread,
Sep 27, 2018, 12:25:50 PM9/27/18
to mint...@googlegroups.com
சரவணன் அவர்களே

மரத்தை வெட்டி எத்தனை ஆண்டுகள் கழித்து சக்கரம் செய்ய்பட்டது என்பதை தாராளமகா காண்டுபிடிக்கலாம்

ச்லிவேனியாவில் 3200 ஆஅண்டுகளுக்கு முன்பிருந்த சக்கரம் கண்டுபிடிக்கபட்டது. மரத்தை வெட்டி 80 ஆண்டுகளுக்கு பின் சக்கரம் செய்தார்கள்
என்பதையும் சேர்த்தே கண்டுபிடித்தார்கள்


 The wheel was made from a tree that grew in the vicinity of the pile dwellings and at the time of the wheel construction was approximately 80 years old.

செல்வன்

செல்வன்

unread,
Sep 27, 2018, 12:26:38 PM9/27/18
to mint...@googlegroups.com
மன்னிக்கவும் 3200 ஆண்டுகள் அல்ல. கிமு 3200
--

செல்வன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 28, 2018, 12:52:25 AM9/28/18
to mintamil
On Thu, Sep 27, 2018 at 9:55 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
சரவணன் அவர்களே

மரத்தை வெட்டி எத்தனை ஆண்டுகள் கழித்து சக்கரம் செய்ய்பட்டது என்பதை தாராளமகா காண்டுபிடிக்கலாம்

அப்படியா?. எந்த முறைப்படி எப்படி இதனைச் செய்கிறார்கள் என்று கூறுங்கள் அல்லது இணைப்பு கொடுங்கள்.

செல்வன்

unread,
Sep 28, 2018, 1:22:02 AM9/28/18
to mintamil
On Thu, Sep 27, 2018 at 11:52 PM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:


On Thu, Sep 27, 2018 at 9:55 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
சரவணன் அவர்களே

மரத்தை வெட்டி எத்தனை ஆண்டுகள் கழித்து சக்கரம் செய்ய்பட்டது என்பதை தாராளமகா காண்டுபிடிக்கலாம்

அப்படியா?. எந்த முறைப்படி எப்படி இதனைச் செய்கிறார்கள் என்று கூறுங்கள் அல்லது இணைப்பு கொடுங்கள்.





The wheel and the axle were dated on the basis of stratigraphic data with dendrochronological research and with the radiocarbon method. The wheel is approximately 5,150 years old and is contemporary with the settlement of Stara gmajna where it was discovered. Radiocarbon dating was performed in the VERA laboratory (Vienna Environmental Research Accelerator) in Vienna.

The results were summarized in accordance with the studies that were performed at the Institute for archaeology ZRC SAZU and the Department of Wood Economy at the Biotechnological faculty of the University in Ljubljana under the guidance of Dr. Anton Velušček and Dr. Katarina Čufar.



N. Ganesan

unread,
Sep 29, 2018, 2:36:25 AM9/29/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
Thanks. The original word in all languages come from Proto-Indo-European source. So, IE folks in Europe "Tripolye Culture" seem to be the inventors of Wheeled vehicles, and the word for WHEEL 'to turn'.
That reaches Sumeria and Indus regions fast. I have written my thoughts on 'sakaTa derivation from interactions with Sumeria. Wheel being the most important part of vehicle, 'sakata "wheel" 
gets an extended meaning as "cart" also. 'saakaaTu (caakaaTu) = cart is used in Tamil (for example in KuRaL). The same source gives rise to "cakra". I wrote about these words
in my paper, K-initial words and preliminary observations on the Indus language, Int. Jl. of Dravidian Linguistics, Trivandrum, Kerala 2 months ago.

ஆழ்- தியானத்தில் ஆழ்வதால் ஆழ்வார் என்ற பெயர் சமண தீர்த்தங்கரர்களுக்கு முதலில் ஏற்பட்டது. கல்வெட்டுகளில் காண்கிறோம்.
பின்னர் ஸ்ரீ என்ற சொல்லையும், மணிப்ரவாள வ்யாக்யானங்களையும், ஆழ்வார் என்ற பட்டத்தையும் ஸ்ரீவைஷ்னவம் ஏற்கிறது.
இந்த ஆழ்- என்ற வினைச்சொல், ஆணி 'lynch-pin' என்ற சொல்லாக தேர்களுக்கு வேதத்தில் இருக்கிறது. தேர் : Chariot are related words, an old Aryan word in Sangam texts.

சிந்து சமவெளியில் மரங்கள் அரிதானவை. A scarce resource. எனவே, ஆரங்களை உடைய சகடு/சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்.
2 மாதம் முன்பு உத்தரப் பிரதேசத்தின் சிந்துநாகரீக அகழாய்வில் பெரிய, ஆரம் உடைய (spoked wheels) வண்டி கண்டுபிடிக்கப்பட்டது
நினைவிருக்கலாம். ஆரம் : தமிழ்ச் சொல் எனலாம். தாமரை நாண் = ஆரம். அதில் பூ விரிகிறது. ஆர-விரிந்த > அரவிந்த என்ற சொல் தாமரைக்குண்டு.
ஆரல் : ஆரம் போன்ற மெல்லிய, நீளமான மீன்.

ஆர்7 ārn. < āra or ara. 1. Spoke of a wheel; ஆரக்கால். ஆர்கெழு குறடுசூட் டாழி போன்று (சீவக. 828). 2. Axle-tree; அச்சு மரம். வீணாதண்டென் னாரின் (ஞானா. 7, 15). 3. Central bolt of a car; தேரினகத்திற்செறிகதிர். (பிங்.)  

ஆரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு (சிறுபாண். 253).  

369 Ta. ār (-v-, -nt-) to wear, put on; (-pp-, -tt-) to bind, tie, gird, put on, wear; ārppu tie, bondage. Ma. āruka to put on (as clothes or jewels). Tu. arkalů, arkaḷů, (B-K.) arkaṭů a knot, tie. Te. ānu to put on, wear (with -n- < -r-; cf. inu [474], kunuku [1902], penu [4411], and ānu [368]). Konḍa (BB.) ara- to put on (hat, shirt, spectacles). Pe. arpa- to put on (coat, on another), fix (load on carrying-yoke); arpiyā- (< arpiya ā-) to put on, wear (coat). DEDS(N) 53.

   370 Ta. ār (-pp-, -tt-) to fight, make war; ārppu battle. Kol. (SR) arpalīpeŋ to attack. (Kamaleswaran.) DEN 6.

   371 Ta. ār sharpness, pointedness; ārmai keenness, sharpness. Ma. ār chip, splinter (as of bamboo); āru splinter, needle-like splinter in the stem of coconut tree and other palm trees. Kur. ārcī goad, pointed end of goad, (Hahn) point of lance or stick. DED(S) 314.

(1) ஆணி < ஆழ்- (2) ஆரம் (aara and ara in Sanskrit) (3) நேமி (< நேம்பு- ) : இவை வண்டி தொழிநுட்பத்தில் சிந்து சமவெளியில் இருந்த த்ராவிட வார்த்தைகள். நேமி-, நேம்புதல் பற்றி விரிவாக
இங்கே எழுதியுள்ளேன்.

நா. கணேசன்

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages