இன்று உலக சிட்டுக்குருவி தினம்!

29 views
Skip to first unread message

தாரகை

unread,
Mar 19, 2010, 10:34:28 PM3/19/10
to மின்தமிழ்
'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு... தென்றலே உனக்கென்ன சொந்த
வீடு...'

http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_62663996220.jpg

என்ற பாடலுக்கு ஏற்ப, சுதந்திரமாக சுற்றித் திரியும் பறவைகளில்
சிட்டுக்குருவி முதலிடம் வகிக்கிறது. தொல்காப்பியம் உட்பட இலக்கியங்களில்
அதிகம் பேசப்பட்டது. பாரதியார் கவிதைகளில், சிட்டுக்குருவியின் பெருமைகளை
குறிப்பிட மறக்கவில்லை.

உருவத்தில் சிறியதாக, அழகான தோற்றம் கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும்
சிட்டுக்குருவி, காகங்களைப் போல், மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப
தன்னை மாற்றிக் கொண்டு பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவை.

கூரை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட கூரைகளில் கூடு கட்டி முட்டையிடும் பெண்
குருவிக்கு, பக்க பலமாக ஆண் குருவி கூடவே இருந்து குஞ்சு பொரிக்க
உதவுகிறது. வீட்டுத் தோட்டங்களில் பூச்சிகளை குருவிகள் உண்பதால்,
'விவசாயிகளின் நண்பன்' என அழைக்கப்பட்டது. பல சரக்கு கடைகள் முன் சிதறிக்
கிடக்கும் தானியங்களை கூட்டமாகச் சேர்ந்து உண்டு மகிழும். ஆட்கள்
வந்தால், நடப்பதற்கு வழி விடுவதற்காக சற்று நகர்ந்து கொண்டு தானியங்களை
உண்ணும். சூரிய உதயத்திற்கு முன்பே குரல் எழுப்பும். அதன் அழகையும்,
குரலின் மென்மையையும் இரம்மியமாக இரசிக்கலாம்.

அழியும் குருவிகள்:-

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன
தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும்
சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும்
சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.

* வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், 'ஏ.சி'
செய்யப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.

* பெட்ரோலில் இருந்து வெளியேறும், 'மீத்தைல் நைட்ரேட்' எனும் இரசாயனக்
கழிவு புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள்
அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும்
குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.

* பல சரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பதிலாக,
டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பிளாஸ்டிக்
பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், ரோட்டில் தானியங்கள் சிதற
வாய்ப்பில்லை.

* வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து,
பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள்
அழிகின்றன.

* இவையனைத்துக்கும் மகுடம் சூட்டியது போல், மொபைல் போன் வருகைக்கு பின்,
குருவிகள் 90 சதவீதம் அழிந்துவிட்டன. மொபைல் போன் டவர்களில் இருந்து
வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது.
முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் சொற்ப அளவில்
சிட்டுக்குருவிகள் தென்படுகின்றன. தேனி, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட
பிற மாவட்டங்களில், பெயரளவிற்கு கூட இவற்றை காண முடியவில்லை. விருதுநகர்
மாவட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் சிட்டுக்குருவிகள் இருந்தன. மரங்கள்
வெட்டப்படுவதாலும், வறட்சி காரணமாகவும் குருவிகள் பசுமையான இடங்களுக்கு
இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது.

திருச்சி இயற்கை சங்கம் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ரெல்டன்
கூறியதாவது:-

ஆண் குருவி - பெண் குருவி ரோமத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
வீடுகளின் கட்டமைப்பு, நச்சுத்தன்மை வாய்ந்த உரம், பூச்சிக்கொல்லி
மருந்துகளினால் இந்த இனம் அழிகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை,
பன்றிமலை போன்ற இடங்களில் மட்டுமே இவற்றை காண முடிகிறது. இப்பறவை இனம்
அழியாமல் இருக்க, இயற் கையை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு ரெல்டன் கூறினார்.

மதுரை பறவை வியாபாரி திலீப்குமார் கூறியதாவது:-

மொபைல் போன் வருகைக்கு பின், சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய
இயலாதபடி, அதன் கருப்பையில் பாதிப்பு ஏற்பட்டு வருவதை பறவை
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொபைல் போன் டவர்கள் அல்லாத
மலைப்பகுதிகளில், சிட்டுக்குருவிகள் குறைந்த அளவில் வசிக்கின்றன.
கிராமங்களிலும் மொபைல் போன் சேவைகள் அதிகரித்து வருவதால்,
சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன. இவ்வாறு திலீப்குமார் கூறினார்.

குருவிகளை காக்கும் வழி:-

குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு
ஒவ்வொருவரிடமும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும், தோட்டம் அமைக்க
வேண்டும். பயிர்கள், தாவரங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து
தெளிக்கக்கூடாது. குருவிகள் குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்.
வீட்டு முன், மொட்டை மாடியில் தானியங்களை தூவ வேண்டும். மண்பானையில்
வைக்கோல் வைத்தால், குருவிகள் கூடு கட்ட பயன்படும்.

நன்றி:- தினமலர்

Hari Krishnan

unread,
Mar 19, 2010, 11:47:47 PM3/19/10
to mint...@googlegroups.com


2010/3/20 தாரகை <thar...@gmail.com>
1966 வரையில் சென்னை நகரில் எங்கள் வீட்டிலேயே ‘குருவி உபத்திரவம் ஜாஸ்தியா போச்சு’ என்ற வாக்கியம் அடிக்கடி பேசப்பட்டதுண்டு.   66ல் நங்கநல்லூருக்குக் குடிபெயர்ந்தோம்.  வீடு புகுந்து அவை செய்யும் அட்டகாசம் கணக்கில் அடங்காது.  சுவரில் மாட்டப்பட்டுள்ள நிலைக்கண்ணாடிக்கு முன்னால் உள்ள மரச்சட்டத்தில் உட்கார்ந்துகொண்டு கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தைக் கொத்தும்; ஒவ்வொரு புல்லாய்ப் பொறுக்கிக்கொண்டு வந்து வீட்டுக்குள் கூடுகட்டி, வீடு முழுக்க குப்பையாக்கும்.  குருவி, கூடு கட்டுவதற்கென்றே, என்னுடைய நோட்டுப் புத்தகத்தின் கெட்டி அட்டையை அப்படியே பிரித்தெடுத்து உத்தரக் கட்டைகளுக்கு நடுவில் ஆணி அடித்து இடம் ஏற்படுத்திக் கொடுத்தது உண்டு.  அது மணலில் (வண்டல் மணல் என்றால் இன்னும் விசேஷம்) குளிப்பதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.  வீடு முழுக்க எந்தப் பக்கம் திரும்பினாலும், எதில் வேண்டுமானாலும், எப்போது என்று சொல்ல முடியாதபடி வெள்ளையும் பச்சையும் கலந்து அதன் புழுக்கை விழுந்தபடி இருக்கும்.  எவ்வளவு முயன்றாலும் குருவிப் புழுக்கை கறை, சட்டையை விட்டுப் போகாது.  நங்கநல்லூரில் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் மூன்று ஏரிகள் இருக்கும்.  ஏரிக் கரையில் மாலைவேளைகளில் போய் அமர்ந்தால், கூட்டம் கூட்டமாக அவை விருட்விருட்டென்று பறப்பதும், ஆயிரமாயிரம் குருவிக் கீச்சல்கள் ஒன்றாக ஒலிப்பதுமாக, சூரிய அஸ்தமனத்துக்கே ஒரு அழகு வந்துவிடும்.  

அப்புறம், சிட்டுக் குருவியைப் பாத்து ரொம்ப நாளாச்சுல்ல என்று நான் (நங்கநல்லூரில் வசிக்கும் சமயத்தில்தான்) எனக்கு நாற்பது வயது கடந்திருந்தது.  எப்போது நகரப் பகுதியை நீங்கினவோ, எப்போது ஒன்றுகூட மிச்சமில்லாமல் விலகினவோ தெரியாது.  சிட்டுக்குருவியைக் காணோம் என்று உணர, குறைந்தது நான்கைந்து வருடங்களாவது ஆகியிருக்கலாம்.  நான் சொல்வது 1993க்கு முன்னால்.  அப்போதெல்லாம் செல்போன் என்றால் என்னவென்றே தெரியாது.  

நெரிசல்தான் காரணமாக இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.  பிறகு அண்ணா நகர் (தபால் தந்தி அலுவலர் குடியிருப்பு) சென்றோம்.  சுமார் 300 ஏக்கர் பரப்புள்ள அருமையான, அமைதியான பரப்பு அது.  நங்கநல்லூர் கூட்ட நெரிசலால் நரகமாக மாறிய பிறகு (ஆஞ்சநேயர் கோவிலுக்கு மிக அருகில்....நான் ஈஸனோபீலியா தும்மல் போட்டால் உம்மாச்சிக்குத் தலைவலிக்கும் அளவுக்கு அருகில்--சனிக்கிழமையானால், என் வண்டியை என் தெருவில் விட்டுக்கொண்டு என் வீட்டுக்குள் நுழைய முடியாது....‘சார் அங்கல்லாம் போக்கூடாது’ என்று காவலர்கள் வழி மறிப்பார்கள்.  ‘யோவ்...வீட்டுக்குப் போறேன்யா என்று நான் முறைப்பேன்...) அண்ணா நகர் பி அண்ட் டி குடியிருப்பு சொர்க்கமாக இருந்தது.  நிறைய சிட்டுக்குருவிகள் அங்கே இருந்தன.  (சிட்டுக்குருவியை விட காக்காதான் ரொம்ப ஜாஸ்தி.  அண்ணாநகர் டவர் பகுதியில் உள்ள தோட்டத்துக்குப் போய்ப் பாருங்கள்.  மரமெல்லாம் ஏன் இப்படி கருப்பு கருப்பாக இருக்கிறது என்று திகைப்பாக இருக்கும். இலைகளை விட காக்கைகள் அதிகம்.)  

அப்புறம் பெங்களூர் வந்தோம்.  நான் குடியிருப்பது நெரிசல் நிறைந்த ராஜாஜி நகர் பகுதி.  இங்கே சிட்டுக்குருவிகளைப் பார்த்ததும் ஆச்சரியம் தாங்கவில்லை.  ஆனால் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.  சித்ரகலா பரிஷத் (ஓவியக் கலைக் கல்லுரி) போன்ற விஸ்தாரமான பரப்புள்ள, மரங்களுள்ள இடங்களில் நிறைய சிட்டுக்குருவிகள் தென்படுகின்றனவாம்.    நகரத்தின் நெரிசல் நிறைந்த, போக்குவரத்து சிக்கல்களை நேர்செய்யவதற்காக மிகப் பெரிய அளவில் இடிப்புகளும் புழுதியும் சப்தமும் நிறைந்த, மெட்ரோ ரயிலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் பகுதியில் சித்ரகலா பரிஷத் இருக்கிறது.  அங்கே குரவிகள் நிறையக் காணப்படுகின்றன.  எங்கள் பகுதியில் ஒருசில தென்படுகின்றன.  அவ்வப்போது, தெரு முனைகளில் ஜோடிஜோடியாக மின்சாரக் கம்பிகளிலும், குப்பை மூலைகளிலும் (இவை மிகமிக அரிதான இடங்களில்தான் காணப்படும்--குப்பை மூலையைச் சொல்றேன்) சிட்டுக்குருவிகளைப் பார்க்கிறேன்.  எண்ணிக்கை அதிகமில்லை.  இப்போதுதான் நகர்நீங்கு படலம் தொடங்கியிருக்கிறது போலும்.

ஜன நெரிசலும் இல்லை; மோட்டார் வாகனப் பயன்பாட்டின் அதிகரிப்பும் இல்லை; செல்போனும் இல்லை.  எதெதென் மேலோ பழியைப் போட்டு ஏமாற்றிக் கொள்கிறோமா?

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
(காரணம் இருக்கும் இடத்தை சொல்றேன்....)

--
அன்புடன்,
ஹரிகி.

தாரகை

unread,
Mar 20, 2010, 1:03:00 AM3/20/10
to மின்தமிழ்
> ஜன நெரிசலும் இல்லை; மோட்டார் வாகனப் பயன்பாட்டின் அதிகரிப்பும் இல்லை;
> செல்போனும் இல்லை.  எதெதென் மேலோ பழியைப் போட்டு ஏமாற்றிக் கொள்கிறோமா?

Various causes for its dramatic decrease in population have been
proposed.

Predation by accipiters, housecats, or corvids has commonly been
proposed.

Other proposed causes include electromagnetic radiation from mobile
phones

disease and

lack of nesting sites because of a reduction in the number of badly
maintained buildings.

It seems, however, that the main cause of the House Sparrow's decline
is a fall in insect numbers, as the House Sparrow requires insect food
while in the nest.

The main reason for these declines of insects seems to be changes in
agricultural and gardening practices.

Other causes for the fall in insect numbers may include the
introduction of unleaded petrol, the combustion of which produces
compounds such as methyl nitrite, a compound highly toxic for small
insects;and reducing areas of free growing weeds.

The establishment of urban green spaces, the planting of native
plants, and the protection of insect habitats on farms all benefit the
House Sparrow.

Courtesy:- http://en.wikipedia.org/wiki/House_Sparrow

சாதிக் அலி

unread,
Mar 20, 2010, 12:41:36 AM3/20/10
to mint...@googlegroups.com
sittukkuruvi.jpg


-- 
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

sittukkuruvi.jpg

Innamburan Innamburan

unread,
Mar 20, 2010, 8:30:04 PM3/20/10
to mint...@googlegroups.com
'... காகங்களைப் போல், மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப
தன்னை மாற்றிக் கொண்டு பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவையான' சிட்டுக்குருவியை மனிதன் தொலைத்துவிட்டான்.
இன்னம்பூரான்



2010/3/19 சாதிக் அலி <sade...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--
இன்னம்பூரான்
sittukkuruvi.jpg

Krishnan S

unread,
Mar 21, 2010, 12:13:19 AM3/21/10
to mint...@googlegroups.com
சிட்டுக்குருவியினை குறித்த சில செய்திகள்,அதுவும்  உன்னத பறவைகளின் செய்தி
இந்த காலக்கட்டத்தில் நமக்கு இன்பம் அளிப்பவகையாக இருந்தது.

திரு, ஹரி கிருஷ்ணன் அவர்களின் அனுவமும் நமக்கு இன்பமளித்தது.

சென்னை போன்ற நகர்களில் சிட்டுக்குருவி இன்று சிறு பறவைகளை காண்பது
அரிதாகி இருந்தது எனக்கு.

சமீப கும்பக்மேளத்திற்காக ஹரிதுவார், ரிஷிகேசம் சென்று, திரும்பிய பின் சென்னையில்
ஒரிரு நாட்கள் நண்பர் இல்லத்தில் தங்கியிருந்தேன். அதன் போது காக்கைத்தான்
அதிகம் கண்டேன்.மற்ற பறவை நம் கண்ணுக்கு தெரியப்படவில்லை.

அதேபோல் தென்காசி அடுத்துள்ள மகாலிங்க மலையில் நான்கு நாட்கள்
தங்கியிருந்தேன். மலைச் சார்ந்த சிவன் ஆலயம்.
காலை பொழுது நமக்கு மனதுக்கு இதமளிக்கும் வகையில் அமைந்தது.
காலை ஏழு மணிவாக்கில் அணில், மயில், சிட்டுக் குருவி, வால் நீண்ட
மஞ்சள் சிட்டுக்குருவி,புறா,காக்கை என பல்வகை பறவைகள் இரைக்காக
காத்திருக்கும்.

அரிசி போன்ற தானியங்களை போடுவார்கள். மகிழ்ச்சியுடன் கொத்தி தின்னும்
அழகு மனதினை கொள்ளை கொள்ளும்.

குட்டி அணில் பயமறியாது அருகில் வந்து உணவினை பெற்று செல்லும்.
பழகிய மயில் கதவை தட்டி முறுக்கு கேட்கும்.

சிங்கப்பூரில் மத்திய நகர் பகுதியில் சிட்டுக்குருவிகளை பார்க்க இயலாவிட்டாலும்,
புற நகரில் பார்க்கலாம்.
நான் வசிக்கும் மகள் இல்லத்தில் காலையில் சுமார் இருபது, முப்பது சிட்டுக்குருவிகள்,
மைனாகள் கூரை மீது அமர்ந்து கீச்சிடும். ஒரு பிடி அரிசி பரவலாக வைத்தால்
அமைதியாக கொத்தி உண்ணும்.
அதே போல் மாலையும் வந்துவிடும்.

(ஆனால், சென்னை போல் இங்கு வழிவிட்டு தன் வேலையை பார்க்காது.
சற்று அருகில் சென்றால் எல்லாம் கூண்டோடு பறந்துவிடும்)

மனிதன் தன் இயற்கை இழந்து வருகிறான். விரைவில் முற்றாக இழந்து விடுவான்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

2010/3/21 Innamburan Innamburan <innam...@googlemail.com>



--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/
sittukkuruvi.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages