தமிழ்நாட்டு வாழ்த்துப் பாடல் திருத்தப் பட வேண்டும்

324 views
Skip to first unread message

சி. ஜெயபாரதன்

unread,
Oct 18, 2016, 11:54:14 AM10/18/16
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Asan Buhari, Anne Josephine, Thamil Selvi

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த செந்தமிழ்நற் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமேவாழ்த்துதுமே!!வாழ்த்துதுமே!!!


சி.ஜெயபாரதன்.

 

தேமொழி

unread,
Oct 18, 2016, 12:51:00 PM10/18/16
to மின்தமிழ்
மனோன்மணியம் சுந்தரனார்  எழுதிய முழுப்பாடலும் கீழே.


"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!


அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!


பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்


சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"



திராவிட என்ற சொல்லுக்காக  மனோன்மணியம் சுந்தரனார் (1855 - 1897) பாடல் வரியை மாற்றுவதைட...


தமிழ் வணக்கப் பாடலையே மாற்றி வேறு பாடலைத் தேர்வு செய்து கொள்ளலாம்...


குறிப்பாக பாரதிதாசனின் தமிழுக்கும் அமுதென்று பேர் பாடலில் தேர்வு செய்யப்பட்ட சில வரிகள் என்பதைப் போன்று. வேறு ஒரு பாடலுக்குச் சென்றுவிடலாம்.



இதிலிருந்து 1879 இல் பெரியார் பிறந்தபொழுதே திராவிடம் என்ற கருத்தாக்கம் தமிழகத்தில் நிலைபெற்றுவிட்டிருந்திருக்கிறது என்பது தெரிகிறது. 


..... தேமொழி

Buhari

unread,
Oct 18, 2016, 1:01:03 PM10/18/16
to சி. ஜெயபாரதன், mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Anne Josephine, Thamil Selvi

அன்புடன் புகாரி
+1-416-500-0972

சி. ஜெயபாரதன்

unread,
Oct 18, 2016, 1:09:09 PM10/18/16
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan
தேமொழி,

////நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! //// 

இந்தப் பாடலின் சிறப்புகள் என்ன ?

தமிழ்நாட்டின் இருப்பிடத்தைக் காட்டுகிறது, தமிழர் பரந்து சென்ற வெளி உலகைக் காட்டுகிறது.

திராவிடநாடு பெரியார் காலத்திலே செத்துப் புதைக்கப்பட்டது.   அதைப் பாடிக் கொண்டு தமிழ் நாட்டில் வாழ்வது சுடுகாட்டில் வாழ்வதற்கு ஒப்பாகும்.  

அது அர்த்தமற்றது.  

நான் திராவிடன் அல்லன். நம் தாய் பூமி திராவிட நாடில்லை !  தமிழ்நாடு.

சி. ஜெயபாரதன்.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 18, 2016, 1:11:44 PM10/18/16
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில
தெக்கணமும் அதிற்சிறந்த செந்தமிழ்நற் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! 

இது மெய்யான தமிழ்நாட்டு வாழ்த்துப்பாடல்.

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
Oct 18, 2016, 1:35:55 PM10/18/16
to மின்தமிழ்
ஐயா, 

இப்பொழுது பாடப்படும்  பாடல் காலப்போக்கில் ஏற்பட்ட கருத்து மாற்றத்திற்கு ஏற்ப அமையவில்லை என்பது எனது கருத்து... 
அதனால் தமிழக அரசிடம் தமிழ் வணக்கப் பாடலை மாற்றுமாறு கோரிக்கை வைக்கிறேன் என மனு கொடுக்கவும்.

ஏற்றுக்கொண்டால் அவர்கள் தமிழறிஞர் குழு ஒன்றை அமைத்து தக்க பாடலைத் தேர்வு செய்து மாற்றாக  அறிவிக்கட்டும். 

ஆனால்,  மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய வரியை ஆளாளுக்கு மாற்றுவது சரியல்ல.  அது அவர் கருத்து வடிவம்.

நமக்கு வேறுபாடல் எழுதிக் கொள்ள பாடாசிரியர்களுக்கா குறைவு? 

..... தேமொழி

சி. ஜெயபாரதன்

unread,
Oct 18, 2016, 1:37:00 PM10/18/16
to tamilmantram, mintamil, Vallamai, vannan vannan, Oru Arizonan
இந்தியாவில் இல்லாத திராவிட நாட்டைப் பற்றி வாழ்த்தி வணங்க வேண்டுமா தமிழகத்தின் தமிழர் ?

சி. ஜெயபாரதன்.

2016-10-18 13:25 GMT-04:00 Anna Kannan <annak...@gmail.com>:
மனோன்மணியம் சுந்தரனார் மட்டுமில்லை, எவர் எழுதிய பாடலையும் திருத்துவது முறையானது இல்லை. பொருத்தமான வேறு பாடலைத் தேர்ந்தெடுக்கலாம்; அல்லது, புதிய பாடலை இயற்றிக்கொள்ளலாம். மலேசியாவிற்கு என, சீனி நைனா முகம்மது தனியே இயற்றிய தமிழ் வாழ்த்துப் பாடல் இங்கே: http://inbachudar.blogspot.in/2013/12/wmv.html

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 18, 2016, 1:42:05 PM10/18/16
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, Asan Buhari
தேமொழி,

நீங்கள் கூறுவது நல்ல ஆலோசனை.  அது ஒருபுறம் நடக்கட்டும்.  அதுவரை ஏற்றுக் கொண்ட பாடலில் திராவிட நாட்டுப் பெயரைத் தமிழ்நாடாக மாற்றிப் பாடுவோம்.

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
Oct 18, 2016, 1:52:03 PM10/18/16
to மின்தமிழ்


On Tuesday, October 18, 2016 at 10:42:05 AM UTC-7, jayabarathans wrote:
தேமொழி,

நீங்கள் கூறுவது நல்ல ஆலோசனை.  அது ஒருபுறம் நடக்கட்டும்.   
அதுவரை ஏற்றுக் கொண்ட பாடலில் திராவிட நாட்டுப் பெயரைத் தமிழ்நாடாக மாற்றிப் பாடுவோம்.

ஏற்கனவே ஒரு பாடல் புழக்கத்தில் உள்ளது ஐயா..:))


அதுவும் நல்ல பாடலே


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர்,
யாதும் ஊரே யாவரும் கேளீர்

உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றே என
உரைத்து வாழ்ந்தோம் – உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன் மொழியாம்
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்…

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான தமிழ் மொழியாம்…

கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான தமிழ் மொழியாம்…

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலகமொழி
நம் மொழி – நம் மொழி – அதுவே

செம்மொழியான தமிழ் மொழியாம்…

தமிழ்மொழி – தமிழ்மொழி – தமிழ்மொழியாம்
தமிழ் மொழியாம் – எங்கள் தமிழ் மொழியாம்
வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே…
செம்மொழியான தமிழ் மொழியாம்..!!!

..... தேமொழி

தேமொழி

unread,
Oct 18, 2016, 2:44:17 PM10/18/16
to மின்தமிழ்


On Tuesday, October 18, 2016 at 10:37:00 AM UTC-7, jayabarathans wrote:
இந்தியாவில் இல்லாத திராவிட நாட்டைப் பற்றி வாழ்த்தி வணங்க வேண்டுமா தமிழகத்தின் தமிழர் ?


ஆனால்.... இந்திய தேசிய கீதத்தில் திராவிட இருக்கிறதே....


ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

 ..... தேமொழி




சி. ஜெயபாரதன்

unread,
Oct 18, 2016, 5:08:57 PM10/18/16
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan
தேமொழி,

இவ்வினிய அரிய ரகுமான் இசைப்பாடல் செம்மொழி தமிழைப் பற்றி புகழ்ந்து பாடுவது.  தமிழ்நாட்டைப் பற்றிப் பாடும் நாட்டு வணக்கமாகுமா இது ? 

தாகூரின் பங்களா தேசப் பாடலைப் பாருங்கள் :

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்


பொன்னான என் வங்காள நாடே!
நின்னை நான் நேசிக்கிறேன்.
வானளாவிய நின் தென்றல் காற்று என் நெஞ்சைப்
புல்லாங்குழல் ஆக்கி எப்போதும் இசைமீட்டும்!
வசந்த காலத்தில்
என்னரும் தாயகமே!
நின் சதுப்புநிலத் தோப்பு மணம்
உல்லாசம் அளித்தென்னைத் தாலாட்டும்!
என்னே என் நெஞ்சின் புல்லரிப்பு!
இலையுதிர் காலத்தில்
என்னரும் தாயகமே!
முற்றும் மலர்ந்த நின் நெற்கதிர்கள்
புன்னகை சிதறிப் பொங்குவதைக் காட்டும்!
என்னரும் தாயகமே!
என்னே உந்தன் எழில்மயம்!
என்னே உந்தன் வண்ணமயம்!
என்னே உந்தன் அருமை!
என்னே உந்தன் மென்மை!
ஆலமரங்களின் பாதங்களிலே
ஆற்றங் கரைகளின் தோள்களிலே
எத்தகைய பச்சைக் கம்பளம் விரித்துளாய்!
என்னரும் தாயகமே!
உன்னிதழ்கள் உதிர்க்கும் மொழிகள்
தேனாய் இனிக்குமென் செவியினிலே!
என்னே என் நெஞ்சின் புல்லரிப்பு!
என்னரும் தாயகமே!
நின்முகத்தில் சோக நிழல் படியும் போது
என் கண்களில் பொங்கி எழும்
நீர்த்துளிகள்

*****************


கனடா தேசப் பாடலைப் பாருங்கள்.

கனடா தேசீய கீதம்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

++++++

ஓ கானடா !
எமது இல்லமே ! சொந்த பூமியே !
நின் மாந்தரிடம் எல்லாம்
நிஜ தேசப் பற்றை
நிலை நாட்டுவது நீதான் !
ஒளி நிறைந்த
உள்ளத் தோடு
நீ உயர்வதைக் காண்றோம் !
நேர்வட திசையில் நீ
நிலைத்திடும் தனி நாடே !
நீண்டு அகண்ட கண்டம்,
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
சீரும் சிறப்பும் பொங்கிட
எமது நாட்டை, இறைவா நீ
சுதந்திர நாடாய் வைத்திரு !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !

*********


சி. ஜெயபாரதன்.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 18, 2016, 5:17:42 PM10/18/16
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan
தேமொழி,

தாகூர் தேசீய கீதத்தில் குறிப்பிட்டு எழுதிய திராவிடப் பகுதி பழைய மெட்ராஸ் மாநிலம் [தமிழ், கேரளா, ஆந்திரா, மைசூர் பகுதிகள் இணைப்பு]. திராவிட நாடு இப்போது குறுகித் தமிழ்நாடு என்னும் சிறு பகுதியாய் மொழிவாரிப் பிரிவினையில் உருவானது. 

சி. ஜெயபாரதன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 18, 2016, 5:23:20 PM10/18/16
to மின்தமிழ்


On Tuesday, October 18, 2016 at 2:08:57 PM UTC-7, jayabarathans wrote:
தேமொழி,

இவ்வினிய அரிய ரகுமான் இசைப்பாடல் செம்மொழி தமிழைப் பற்றி புகழ்ந்து பாடுவது.  தமிழ்நாட்டைப் பற்றிப் பாடும் நாட்டு வணக்கமாகுமா இது ? 




எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!  தமிழணங்கே!  என்று போற்றுவது தமிழ்த்தாய் வாழ்த்து அல்லவா ஐயா?

இது தமிழ்நாட்டிற்கான பாடல் அல்லவே. நமக்கெதற்கு அப்படி ஒரு பாடல் தேவை ?

நமக்குதான்  இந்திய மக்கள் என்ற முறையில்  தேசியகீதம் உள்ளதே. அதனை நிகழ்ச்சியின் இறுதியில் பாடுவது நம் நாட்டின் மரபு.

அதற்கு நேரம் இல்லை என்றால் சுருக்கமாகவும் பாட, சிலவரிகளை நீக்கிப் பாடும் ஒரு முறையும் உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது சமயச்சார்பற்றமுறையில்  தமிழன்னையை வாழ்த்தித் தொடங்கும் முறை என்பது எனது புரிதல்.

..... தேமொழி


தேமொழி

unread,
Oct 18, 2016, 5:28:11 PM10/18/16
to மின்தமிழ்


On Tuesday, October 18, 2016 at 2:17:42 PM UTC-7, jayabarathans wrote:
தேமொழி,

தாகூர் தேசீய கீதத்தில் குறிப்பிட்டு எழுதிய திராவிடப் பகுதி பழைய மெட்ராஸ் மாநிலம் [தமிழ், கேரளா, ஆந்திரா, மைசூர் பகுதிகள் இணைப்பு]. திராவிட நாடு இப்போது குறுகித் தமிழ்நாடு என்னும் சிறு பகுதியாய் மொழிவாரிப் பிரிவினையில் உருவானது. 

ஆமாம், ஐயா. உண்மைதான். 
இதனால் கருத்துகளை ஆராயும்பொழுது  அது உருவான காலகட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.  
இப்பொழுது சென்னை மாகாணம் இல்லை என்று தேசிய கீதத்தையும் நாம் மாற்றி அமைக்கவியலாது. 

தேமொழி

unread,
Oct 18, 2016, 5:32:14 PM10/18/16
to மின்தமிழ்

https://ta.wikipedia.org/s/99c


புதுச்சேரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடலை எழுதியவர் பாரதிதாசன் ஆவார். 

இவர் எழுதிய இசை அமுது என்னும் பாடல் தொகுப்பின் இரண்டாம் பகுதியின் முதல் பாடல் இதுவாகும்.



வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!




..... தேமொழி

சி. ஜெயபாரதன்

unread,
Oct 18, 2016, 5:40:43 PM10/18/16
to mintamil
தேமொழி.

தெக்கணமும் அதிற்சிறந்த செந்தமிழ்நற் திருநாடும் என்று நாட்டைப் பற்றி முதலில் வருகிறதே.

சி. ஜெயபாரதன் 

தேமொழி

unread,
Oct 18, 2016, 5:48:30 PM10/18/16
to மின்தமிழ்


On Tuesday, October 18, 2016 at 2:40:43 PM UTC-7, jayabarathans wrote:
தேமொழி.

தெக்கணமும் அதிற்சிறந்த செந்தமிழ்நற் திருநாடும் என்று நாட்டைப் பற்றி முதலில் வருகிறதே.

இல்லை   ஐயா !!! 

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

என்றுதான் வருகிறது.

நான் பள்ளிநாட்களில் இருந்து இதனைத் "தமிழ்த்தாய் வாழ்த்து" என்றுதான் அறிந்திருக்கிறேன்.

Megala Ramamourty

unread,
Oct 18, 2016, 9:29:46 PM10/18/16
to vallamai, மின்தமிழ்
அன்பு நண்பர்களே!

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதிய ‘மனோன்மணீயம்’ ஓர் அரிய நாடகத் தமிழ்நூல். அதில் இடம்பெற்றுள்ள ’நீராருங்கடலுடுத்த’ எனத்தொடங்கும் ’தமிழ்த்தெய்வ வணக்கமும்’ வெகுசிறப்பானது. ஆம், தமிழ்த்தெய்வ வணக்கம் என்பதுதான் சுந்தரம்பிள்ளையவர்கள் அதற்கு வைத்த பெயர். தமிழ்த்தாய் வாழ்த்து என்பது  நாம் அப்பாடலுக்கு வைத்த புதுப்பெயர்.   :-) 

பிள்ளையவர்கள், தமிழைத்  தாய் என்று கூறாது தெய்வம் என்று போற்றுவது தமிழ்மீது அவர்கொண்ட அளவிறந்த காதலை/பக்தியைப் புலப்படுத்துகின்றது. 

நமக்குப் பாடப்புத்தகத்தில் வைக்கப்பட்டிருப்பது அவருடைய தமிழ்த்தெய்வ வணக்கத்தின் மீச்சிறு பகுதியே. அந்தப் பாடலை முழுமையாய்ப் படித்தால்தான் அவரின் தமிழ்ப்பற்றும், தமிழ்குறித்த அவரின் உயரிய பார்வையும் நமக்குத் தெற்றெனப் புலப்படும்.

முழுப்பாடலையும் காண்க: http://www.tamilvu.org/library/libindex.htm

தமிழ்த் தெய்வ வணக்கம்
(பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா.)


நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே

தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே 

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலையாளமுந் துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்

ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே 

 

கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே. (1)

ஒருபிழைக்கா அரனார்முன் னுரையிழந்து விழிப்பாரேல்

அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே

(2)

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்

முதுமொழிநீ யநாதியென மொழிகுவதும் வியப்பாமே

(3)

வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு

காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே

(4)

கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்

உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே 

(5)

தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை

மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே

(6)

வடமொழிதென் மொழியெனவே வந்தவிருவிழியவற்றுள்

கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே

(7)

வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்

கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்

(8)

கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள்

வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்

(9)

பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில்கற்பனையே

(10)

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி

(11)

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்

கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.

எனவாங்கு (தனிச்சொல்)

நிற்புகழ்ந் தேத்துநின் னெடுந்தகைமைந்தர்

பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்

பொற்படை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்

நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்

அடியேன் கடையே னறியாச் சிறியேன்

கொடுமலை யாளக் குடியிருப் புடையேன் 

ஆயினு நீயே தாயெனுந் தன்மையின்

மேயபே ராசையென் மீக்கொளவோர்வழி

உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந்நாடகம்

வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு

ஒள்ளிய சிறுவிர லணியாக்

கொண்மதி யன்பே குறியெனக் குறித்தே.

 

***********


’திரவிடநல் திருநாடு’ என்று சுந்தரம்பிள்ளையவர்கள் குறித்திருப்பதைப் பாடநூலார் திராவிடநல் திருநாடு என்று திருத்தி(?) எழுதியிருக்கிறார்கள். இருப்பினும் இரண்டிற்கும் பொருள்வேறுபாடு இல்லாததால் அதனைப் பெரிய பிழையாகக் கருதத் தேவையில்லை.  

************

சரி...திரவிடநல் திருநாடு என்பது எதைக்குறிக்கும்?

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் வழிநின்று ஆராய்வோம்!

பாவாணர் அவர்கள் தமிழம் என்னும் பெயரே திரவிடம் ->>> திராவிடம் எனத் திரிந்தது என்று தெளிவாகத் தன்னுடைய ’திரவிடத்தாய்’ எனும் நூலில் விளக்கியுள்ளார். http://www.tamilvu.org/library/libindex.htm

வடநாட்டு ஆரிய (சமஸ்கிருத) நூல்களில் திரவிடம் என்னும் சொல் முதலாவது த்ரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியிலில்லை. சில உயிர்மெய்ம்முதல்களை ’ரகர’ஞ் சேர்த்து, ’த்ர’, ’ப்ர’ எனப் புணரெழுத்துகளாகத் திரிப்பது வடநூலார் வழக்கம். -டு: படி - ப்ரதி; பவளம் - ப்ரவளம் (ப்ரவாளம் என நீண்டும் ஒலிக்கும்)இதனால், தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பேபின்பு அது நாளடைவில் த்ரமிடம் த்ரவிடம், எனத் திரிந்தது.
- , - , போலி. த்ரவிடம் என்பது மெய்ம் முதலாதலின் தமிழில் திரவிடம் என்றாகிப் 
பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது.


தமிழுக்குத் திரவிடம் என்னும் பெயர் தமிழ்நாட்டில் வழங்காமையானும், தமிழ் என்னும் வடிவத்தை யொட்டிய பெயர்களே மேனாட்டிலும் வடநாட்டிலும் பழங்காலத்தில் வழங்கி வந்தமையாலும், திரவிட மொழிகளெல்லாம் ஒரு காலத்தில் தமிழாகவே யிருந்தமையானும், தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தது என்று தெளியப்படும்.


******


ஆதலால் தமிழ்த்தெய்வ வணக்கத்தில் ’திரவிடநல் திருநாடு’ என்று பிள்ளையவர்கள் குறிப்பது கருநாடகத்தையோ, கேரளத்தையோ அல்லது ஆந்திரத்தையோ அல்ல! நம் தமிழ(க)த்தையே என்பது வெள்ளிடைமலை.


எனவே, அருமையான  தமிழ்த்தெய்வ வணக்கத்தைக் கையில் வைத்திருக்கும் நாம், அதனைப் ’பொன்னேபோல் போற்றாமல்’ தேவையற்ற திருத்தங்களைச் செய்வதோ அல்லது  பிறவற்றை நாடுவதோ... ’கனியிருப்பக் காய்கவர்வதற்கு ஒப்பாகும்!’ என்றே எண்ணுகிறேன்.


அன்புடன்,

மேகலா




 



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

nkantan r

unread,
Oct 18, 2016, 11:28:36 PM10/18/16
to மின்தமிழ்
very well written megala ramamourty (i got the spelling right? numeralogy basis)

it is an unnecessary and "uncalled for" controversy; essentially there is no need for a separate song/anthem for a state unless tamil nadu aspires to be an equal partner in india instead of being a part of india!  if i remember karnataka followed suit create its own anthem which is more of hinduish (talking of ram, krishna, vedas etc);
now that the deed is done, why tinker?  if at all somebody has to take umbrage, i will go for the word/phrase புகழ்மணக்க இருந்த -- if my knowledge and reading of tamil is right, it talks of the past - இருந்த  not இருக்கும் இருக்கின்ற --- like the smell in asafoedita container; only smell and no real matter!

with the poet himself talking about a past, there is no need to temper it for the present!  reading the full song, it is more of an oblique about other languages and followers; 

regards
rnkantan
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 18, 2016, 11:31:11 PM10/18/16
to mintamil, vallamai, tamilmantram
////தெக்கணமும் அதிற்சிறந்த செந்தமிழ்நற் திருநாடும் என்று நாட்டைப் பற்றி முதலில் வருகிறதே.  ///

இது நான் திருத்திய வரி தேமொழி..  சுந்தரம் பிள்ளை திராவிடநற் திருநாடு என்று எழுதியதை நான் அறிவேன்.              

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
Oct 18, 2016, 11:44:02 PM10/18/16
to vallamai, மின்தமிழ்
நன்றி மேகலா.

திராவிட நாடு என்பது தமிழ் நாடுதான் என்றால், கருணாநிதி ஏன் தமிழகத்துக்குத் திராவிட நாடு என்று பெயர் மாற்றவில்லை ? 

பெரியார் தனித்துக் கேட்டுப் போராடிய திராவிடநாடு தமிழகம், கேரளம், மைசூர், ஆந்திரா சேர்ந்த பழைய மெட்ராஸ் மாகாணம்.  தனித் தமிழ்நாடு பெரியார் கேட்கவில்லை. 

சி. ஜெயபாரதன்

N. Ganesan

unread,
Oct 19, 2016, 12:28:57 AM10/19/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, Prince Ennares Periyar, மு இளங்கோவன், sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, Soma Ilangovan


On Tuesday, October 18, 2016 at 6:29:46 PM UTC-7, megala.ramamourty wrote:
அன்பு நண்பர்களே!

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதிய ‘மனோன்மணீயம்’ ஓர் அரிய நாடகத் தமிழ்நூல். அதில் இடம்பெற்றுள்ள ’நீராருங்கடலுடுத்த’ எனத்தொடங்கும் ’தமிழ்த்தெய்வ வணக்கமும்’ வெகுசிறப்பானது. ஆம், தமிழ்த்தெய்வ வணக்கம் என்பதுதான் சுந்தரம்பிள்ளையவர்கள் அதற்கு வைத்த பெயர். தமிழ்த்தாய் வாழ்த்து என்பது  நாம் அப்பாடலுக்கு வைத்த புதுப்பெயர்.   :-) 

பிள்ளையவர்கள், தமிழைத்  தாய் என்று கூறாது தெய்வம் என்று போற்றுவது தமிழ்மீது அவர்கொண்ட அளவிறந்த காதலை/பக்தியைப் புலப்படுத்துகின்றது. 

நமக்குப் பாடப்புத்தகத்தில் வைக்கப்பட்டிருப்பது அவருடைய தமிழ்த்தெய்வ வணக்கத்தின் மீச்சிறு பகுதியே. அந்தப் பாடலை முழுமையாய்ப் படித்தால்தான் அவரின் தமிழ்ப்பற்றும், தமிழ்குறித்த அவரின் உயரிய பார்வையும் நமக்குத் தெற்றெனப் புலப்படும்.

முழுப்பாடலையும் காண்க: http://www.tamilvu.org/library/libindex.htm


பல முறை இங்கே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் சிறப்பு பேசியுள்ளோம். பழைய இழைகளில் காண்க. ”திராவிட” என்ற பொருள்பொதிந்த
ஸம்ஸ்கிருதச் சொல்லைப்  பொருத்தமாகப் பயன்படுத்தியவர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளையவர்கள். தமிழ்த்தாய் வாழ்த்து
வில்லி பாரதத்திலே தொடங்கி, துறைமங்கலம் கருணைப்பிரகாசர் சைவத்தில் முதன்முறையாகச் செய்கிறார். அதனை இந்திய
வரலாற்றை அறியச் செய்யும் வரலாற்றுமொழியியல் துறை கால்ட்வெல் பாதிரியாரால் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற
நூல் செய்யும் புரட்சியை அறிவிக்கும் பாடல்: தமிழ்நாட்டு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து.

காங்கிரஸ் ஆட்சியிலே மறைமலையடிகளின் ”தமிழ்த்தாய்” என்னும் கட்டுரை பள்ளியிறுதி வகுப்புப் பாடமாய் வைக்கப்பட்டது.
அக்கட்டுரையைக் காண்போம். அதில், மறைமலையடிகள் சுந்தரம்பிள்ளை பாடலைப் போற்றியுள்ளார். 1967-ல் ஆட்சி மாறிற்று.
இந்தப் பாடல், மறைமலை அடிகள் கட்டுரை எல்லாம் எடுத்துவிட மதறாஸ் பிரஸ் எழுதலாயிற்று, ஆனால், அண்ணா செவிசாய்க்கவில்லை.
மறைமலையடிகள் கட்டுரை தொடர்ந்தது பாடத்திட்டத்தில். பின்னர் அனைவர்க்கும் பொருந்துமாறுள்ள வரிகள்
தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழ்நாட்டுப் பள்ளிகள், அரசு நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள், ... எனப்
பாடுவது நீண்ட மரபானது. ஃஃபெட்னா-டிஎன்ஃஎப் விழாக்களில், அமெரிக்காவின் தமிழ்ப் பல்ளிகளில் பாடப்படுகிறது
தமிழ்வாழ்த்து - நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில். 

இப்பொழுது தமிழ் தேசியர்கள் பெரியார், மறைமலையடிகள் சம்பந்தமே இல்லாதது போல எழுதுகின்றனர் இ-மெயில்கள்.
https://en.wikipedia.org/wiki/The_Star-Spangled_Banner - அரசு அங்கீகாரம் பெற்ற அமெரிக்க நாட்டுப்பண், ஜனகணமன, .... 
இவற்றையெல்லாம் யாரும் மாற்றுவதில்லை. தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தும் அதுபோன்றதே. எம்ஜிஆர்
பதவிக்கு வந்தபோதே இப்பாட்டை மாற்ற/எடுக்க அறிவுரை வழங்கப்பெற்றது. ஆனால், தொடரச் செய்தார்.

”மறைமலை அடிகளாரிடம் பெரியார் பற்றி சொன்னதும்,
மறைமலை அடிகள் சொன்ன பதிலும்! http://viduthalai.in/previousyear/home/tamilnadu/90-asiriyar-speech/127729-2016-08-16-10-06-08


1967 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்கள். அதற்கு முன்பாக எஸ்.எஸ்.எல்.சி. என்று சொல்லக்கூடிய பள்ளி இறுதி வகுப்புப் பாடங்களை ஓராண்டு, ஈராண்டுகளுக்கு முன்பாக அமைத்துவிடுகிறார்கள். காமராசர் காலத்திலேயே, பக்தவத்சலம் காலத்திலேயே - எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து என்று மறைமலை அடிகளாருடைய கட்டுரையை எடுத்துப் போட்டிருந்தார்கள். அவருடைய கட்டுரையைப் போட்ட நேரத்தில், அதில் சமஸ்கிருதத்தை அவர்கள் கண்டித்து, வழக்கம்போல, அது இயல்பான மொழியல்ல. மக்கள் பேசுவதற்கு தமிழ் மொழி போன்று இயல்பான மொழியல்ல. அது சிக்கலானது. சமஸ்கிருத உச்சரிப்பு என்பது உடற்கூறுவிற்கே விரோதம் என்று ஆய்வு பூர்வமாக சொன்னார். சமஸ்கிருதம் அறிந்த பன்மொழிப் புலவர் அவர். எனவே, சமஸ்கிருத சொற்களை யெல்லாம் பயன்படுத்தி அவர் கட்டுரை எழுதியிருந்தார்.

அன்றைக்கு அண்ணா அவர்களுடைய ஆட்சி - தி.மு.க. ஆட்சி - உடனே பார்ப்பனர்கள் - ஏதோ தி.மு.க. ஆட்சி வந்தவுடன், இந்தப் பாடத்திட்டத்தை வைத்துவிட்டார்கள் என்பது போன்று - பெரிய ஏடுகள் - காகிதப் புலிகள் கிளம்பின.

அண்ணா அவர்கள் போட்ட எந்த ஆணையிலிருந்தும் அவர் பின்வாங்கவேயில்லை

அந்த நேரத்தில், அண்ணா அவர்கள் அமைதியானவர் - ஆனால், உறுதியானவர். அண்ணா அவர்கள் போட்ட எந்த ஆணையிலிருந்தும் அவர் பின்வாங்கவேயில்லை. அதே நேரத்தில், ஜனநாயகத்தில் எதிர்குரல் என்றால், அவர் உடன டியாக அதற்கு நான் என்ன பதில் சொல்வது என்று கவலைப் படாமல், அதற்கு வேண்டிய ஆதாரத்தைச் சொன்னார்கள்.

 

அப்பொழுது விடுதலையில் நாங்கள்தான் எழுதினோம். அய்யா அவர்கள், மிகக் கடுமையாக எழுத ஆரம்பித்தார். அந்தக் கட்டுரையில் எந்தப் பாகத்தை நீங்கள் மறுக்கிறீர்கள்; மறைமலையடிகளார் கட்டுரையில் எந்தப் பகுதியை தவறு என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டு, என்னிடம் பல செய்திகளைச் சொல்லி - இவற்றை தலையங்கமாக எழுதுங்கள் என்று. அந்தக் காலகட்டத்தில் விடுதலை பல செய்திகளை சொன்ன நேரத்தில் - அதற்கு முன்பு எப்படிப்பட்ட நிலைகள் இருந்தன என்பதையெல்லாம் மிகத் தெளிவாகச் சொல்லி, மனோன்மணியம் சுந்தரனார் அவர்களுடைய பாடல் - இப்போது கலைஞர் அவர்களாலே இங்கே பாடப்படுகிறதே - மொழி வாழ்த்தாக - தமிழ்த் தாய் வாழ்த்து என்ற பெயராலே மொழி வாழ்த்தாகப் பாடப்படுகிறதே - இந்தப் பாடலை, கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதை வைத்து அவர்கள் மிகப்பெரிய கிளர்ச்சியாக செய்தார்கள். அந்த ஒரு கட்டுரையில் வந்ததற்கே அவ்வளவு பெரிய கிளர்ச்சி. ஆனால், கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இன்றைக்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இன்றைக்கு மொழி வாழ்த்து என்றால், ‘நீராருங் கடலுடுத்த’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு எழுந்து நிற்கவேண்டிய நிலை.

மாற்ற மறுத்த எம்.ஜி.ஆர்.


எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக்கு வந்த நேரத்தில், சிலர் கேட்டார்கள் இதனை மாற்றச் சொல்லி, ஆனால், அவர், இதையெல்லாம் நாங்கள் மாற்றப் போவதில்லை. எங்களுக்குள் சில கருத்து மாறுபாடுகள் உள்ளனவே தவிர - நிச்சயமாக இது அடிப்படைக் கொள்கை - நாங்கள் மாற்றமாட்டோம் என்று சொன்னார்.

எனவேதான், மறைமலை அடிகளாருடைய உருவப்படத்திறப்பும், சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடும் மிக ஒன்று பட்ட ஒன்றாகும்.

உடனே, அண்ணா அவர்கள் என்ன செய்தார், டாக்டர் மு.வ. அவர்களுடைய தலைமையில் ஒரு குழு அமைத்தார்கள். அந்தக் குழு முடிவு செய்யட்டும். இந்தப் பாடத்தை எடுக்கவேண்டுமா? அல்லது இருக்கவேண்டுமா? என்று.

அண்ணா செய்த அறிவுப் புரட்சி -
நாட்டில் வந்த முதல் புரட்சி!


மு.வ. அவர்களும், அந்தக் குழுவில் இருந்த அத்தனை அறிஞர் பெருமக்களும் தெளிவாகச் சொன்னார்கள், இது ஆதாரபூர்வமானது, எதுவும் மறுக்கப்படக் கூடியதல்ல - எனவே, அதனை எடுக்க முடியாது என்று சொன்னவுடன், பத்திரிகைகளில் எழுதியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போனார்கள். அண்ணா அவர்கள் அதனை பாடத் திட்டத்தில் வைத்து - தேர்வுக்கு வைத்து - கொஞ்சம்கூட பின்வாங்காமல், ஒரு வரியைக்கூட மாற்றாமல் நடத்தினார்கள். இது அண்ணா செய்த அறிவுப் புரட்சி - நாட்டில் வந்த முதல் புரட்சி.” 


நா. கணேசன்

காங்கிரசு ஆட்சியில் பாடம் ஆகிய தமிழ்த்தாய் என்னும் அடிகளார் எழுதிய கட்டுரை. அண்ணா தொடர்ந்தார்.

    10. தமிழ்த்தாய்

      பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
      மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
      எண்ணிடைப் படக்கிடந்த்தா எண்ணவும் படுமோ"
              - திருவிளையாடற்புராணம்.

    தமிழராகிய நாம் நாடோறும் பேசிவருந் தாய்மொழி தமிழேயாகும். நாம் சிறு குழவியாய் இருந்தபோது நம் அன்னையின் தீம்பாலைப் பருகிப் பசி தீர்ந்து அவள் மடியிற்கிடக்க, அவள் நம்மைக் கொஞ்சி முத்தம் வைத்து நம்மைப் பாராட்டிப் பேசியது தமிழ் மொழியிலன்றோ? சிறு குழந்தையாய் இருந்த அந்தக் காலந்தொட்டு மறுபடியும் நாம் இந்த உலகைவிட்டு அகன்றுபோகும் வரையில் நம் தாய் தந்தையரோடும் உடன் பிறந்தவரோடும் மனைவி மக்களோடும் நம்நாட்டில் உள்ளவரோடும் நாம் ஊடாடிப் பேசுவதும் நமதருமைத் தமிழ்மொழியலன்றோ? இங்ஙனம் நமது உயிரோடும் உடம்போடுங் கலந்து நமதறிவைத் தன்வண்ணம் ஆக்கிக், கனாக் காணுங் காலத்துங் கனாவுலகில் உள்ளவரோடு நாம் பேசுகையில் அப் பேச்சோடும் உடன் வந்து நிற்பதாய்க் கிளர்ந்து விளங்குவது நமது இனிய செந்தமிழ் மொழியேயாய் இருத்தலின், நமதுயிர் இவ்வுலக வாழ்வைத் துறந்து மறுமையுலகிற் சென்று உலவும் போதும் நமக்கு உற்ற துணையாய் நம்மோடு உடன் வந்து நிற்பது தமிழ் மொழியேயாகுமென்பது தெளிவாகப் பெறப்படுகின்றது அன்றோ? இவ்வாறு இம்மை மறுமையிரண்டிலும் நமது உயிர்க்கு உற்ற துணையாய் இருந்து உதவுவது தமிழ் மொழி ஒன்றுமே யாகையால், நடுவே நாம் கற்கும் ஆங்கிலம் ஆரியம் முதலான மொழிகள் அதுபோல் நமக்கு எப்போதும் உதவுயுந் துணையும்ய் இருந்து பயன்படமாட்டா என்றுணர்க. 

    நமது வயிற்றுப் பிழைப்புக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் ஆங்கிலம் ஸமஸ்கிருதம் முதலான மற்ற மொழிகளை நாம் வருந்திக் கற்க வேண்டுவது கட்டாயமாய்த் தோன்றினாலும், இவற்றின் பொருடு நமது இனிய செந்தமிழை மறப்பதும் அதனைப் பயிற்சி செய்யாமற் வைவிட்டிருப்பதும் நமதுயிரையே நாம் அழிப்பதாய் முடியும். அழகுமிக்க செந்தாமரை மலரின் செந்நிறத்தையும் அதில் துளுங்கி வழியுங் கொழுந்தேனையும் அகற்றிவிட்டு, அவற்றிற்கு மாறாய் அதற்கு மஞ்சள் நிறத்தை ஊட்டிச் செங்கழநீர் மணத்தைப் புகுத்திக் கற்கண்டின் நீரைச் சொரிந்து வைப்பேன் என்று ஒருவன் அதன் இயற்கையை மாற்றப் புகுந்தால் அது கைகூடாமல் அத்தாமரை மலர் அழிந்து போவதைப் போல, மற்ற மொழிகளும் இனிய சொல்லுஞ் சிறந்த பொருளும் உயர்ந்த பயனும் உடையனவாய் இருந்தாலும், தமிழின் நிறமும் அதன் பொருளின் மணமும் அதன் சுவையின் தேனும் இயல்பாகப் பொருந்தப்பெற்ற நமதுயிரை அவ்வியற்கையினின்றும் மாற்றி அம் மற்ற மொழிகளின் தன்மையை அதற்கு ஏற்றினால் அது தன்றன்மை இழந்து அழிந்து போகும். தமிழ் முதலான மொழிகளுள் ஒன்றையேனும் அல்லது இரண்டு மூன்றையேனுந் தனது குழந்தைப் பருவந் தொட்டுப் பேசிவருபவர் தாம் பேசும் அவ் இயற்கை மொழிகளையே மேலும் மேலுங் கற்றுத் தமது அறிவை வளப்படுத்தாமல் அவற்றைக் கைவிட்டு முற்றும் புதியவான ஆங்கிலம் ஆரியம் முதலான மொழிகளையே பழகி வருவாராயின், அவர் நீண்ட நாள் உயிர் வாழார். இதனாலன்றோ; தமிழைக் கைவிட்டு ஆங்கிலம் ஆரியம் முதலிவற்றையே கற்றுப் பழகும் நம் நாட்டவர் பலர் முப்பது அல்லது நாற்பது ஆண்டுக்குட் பலவை நோய்களாற் பீடிக்கப்பட்டு மாய்ந்து போகின்றனர்! தன்னியற்கையில் வலுப்பட்டு நில்லாத ஒரு தூணின் மேற் பெருஞ் சுமைகளை ஏற்றினால் அவற்றைத் தாங்காமல் அது முறிந்து விழுவதுபோலத், தமக்குரிய மொழியைக் கற்று வலிவுபெறாத ஒருவனது அறிவின்மேல் வேறு மொழிகளை ஏற்றினால் அவற்றைத் தாங்க மாட்டாமல் அது பழுது பட்டுப் போமன்றோ? தாய்ப்பால் நிரம்பவுண்டு வளர்ந்த பிள்ளை ஆண்டு முதிரமுதிர அரிய பெரிய முயற்சிகளையெல்லாம் எளிதிற் செய்து நீண்ட நாள் உயிர் வாழ்தல் போலத் தமிழ்ப்பால் உண்டு வளர்ந்தவர் எத்தகைய மொழிகளையும் வருத்தமின்றிக் கற்று நெடுநாள் உயிர் வாழ்ந்திருப்பர். தமிழ்நாடு மற்ற மொழிகளையுங் கற்றவர் நீண்ட காலம் உயிர் பிழைத்திருத்தலுந், தமிழைவிட்டு அயல் மொழிகளை மட்டும் பயில்கின்றவர் விரைவில் உயிர் மாளுதலும் இயற்கையாய நிகழ்தலைக் காண்பவர்களுக்கு நாம் கூறும் இவ்வுண்மை நன்கு விளங்கும்.

    அறிவிற் சிறந்தவரான ஆங்கில நன்மக்கள் தமக்கு இயற்கையில் உரிய ஆங்கிலமொழியை நன்றாக்க் கற்ற பிறகுதான் வேறு மொழிகளைக் கற்கின்றார்கள்; தமது மொழியைக் கல்லாமல் வேறு மொழிகளைச் சிறிதுங் கற்கவே மாட்டார்கள். இப்படிப்பட்ட உயர்ந்த பழக்கம் அவர்களிடத்தில் இருப்பதனாலேதான், அவர்கள் தமது மொழியில் நிகரற்ற புலமையுடையராய் இருப்பதோடு, தாம் கற்கும் வேறு மொழிகளிலும் வல்லவராய்ச் சிறந்து விளங்கி, நீண்டநாள் உயிர் வாழ்ந்து உலகத்திற்கு அளவிறந்த நன்மைகளை யெல்லாம் விளைவித்து வருகின்றார்கள். நம்மவர்களோ தமக்குரிய செந்தமிழ் மொழியைச் சிறிதுங் கல்லாமலும், சிறிது கற்றாலுந் தமிழ் நூற்பயிறிச் நன்கு நிரம்பாமலும், வயிற்றுப்ப்பிழைப்பிற்குரிய ஆங்கிலம் முதலான அயல்மொழிகளையே மிகுந்த பொருட் செலவு செய்து, பல ஆண்டுகள் அல்லும் பகலும் உழைத்துக் கற்றுக் கொள்கின்றார்கள். கற்றும் என்? நம் தமிழ் நாட்டிற்குரிய தென்னங்கன்றைப் பெயர்த்துக் கொண்டு போய்ப் பனிமிகுந்த ஆங்கில நாட்டில் வைத்தால் அஃது அங்கே வளராமல் அழிந்து போவது போல, நமது செந்தமிழை விட்டு மற்ற மொழிகளையே தம் காலமெல்லாங் கற்ற அவர் அதனால் வலிவிழந்து மெலிந்து விரைவில் உயிர் துறக்கின்றனர்! ஐயோ! வயிற்றுப் பிழைப்புக்கே இடையூறு விளைத்து வருதலை நம்மவர் அறியாமல் வரவரத் தமது வாழ்வில் அருகிப்போவது நினைக்குந் தோறும் நமதுள்ளத்தை நீராய் உருக்குகின்றது! இந்நிலைமையைச் சிறிதாயினு கருதிப் பார்ப்பவர்கள் நமது தமிழ் மொழிப்பயிற்சி நம் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத அருமருந்தா மென்பதை உணராமற் போவரோ? 

    இது மட்டுமோ? இத் தென்னாட்டின்கண் நமது தமிழ்மொழியானது இருநூற்று மூன்று நூறாயிரத்துத் தொண்ணூற்றையாயிரம் பெயர்களாற் பேசப்பட்டு வருகின்றது. இத் தென்னாட்டில் மட்டுமேயன்றி, இலங்கையிலும் பர்மாவிலும் சிங்கப்பூர் பினாங்கு முதலான மலாய் நாடுகளிலும், மோரீசு தென்னாப்பிரிக்கா முதலான இடங்களிலும் நமது தமிழ் மொழியைப் பேசுவார் பெருந்தொகையாய் இருக்கின்றார்கள். இவ்வளவு பெருந்தொகையாய் உள்ள தமிழ் மக்களெல்லாரும் அறவிலும் நாகரிகத்திலும் உயர்ந்து விளங்க வேண்டுமாயின், அவர்கள் தமக்குத் தெரிந்துள்ள தமிழ் மொழியின் வழியாகவே அங்ஙனம் ஆதல் வேண்டும். மிகுந்த பொருட் செலவும் காலக் கழிவும் வருத்தமுமின்றி அவர்களைக் கல்வியில் வல்லவராக்குதற்கு இசைவான இந்த எளிய முறையை விடுத்து அவர்கட்குப் புதுமையாக ஆங்கிலம் ஆரியம் முதலான சொற்களைக் கற்பித்து அவர்களை உயர்த்தல் வேண்டுமென்று நினைப்பவர் ஒரு காலத்துந் தம் மெண்ணத்தை நிறைவேற்றமாட்டார். ஆதலால், நம் தமிழ் மக்களை உண்மையாகவே முன்னேற்ற வேண்டுமென்னும் எண்ணம் உடையவர்கள் அவர்களுக்குரிய தமிழ்க் கல்வியின் வாயிலாகவே அதனைச் செய்யக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். மற்ற மொழிகளில் நாடோறும் புதியனவாய் வெளிவரும் அரும்பொருள் நூல்களை யெல்லாந் தமிழில் மொழி பெயர்த்துக் கற்பிக்கத் தலைப்பட்டால், இப்போது பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆங்கில மொழியை மிக வருந்திக் கற்று ஒருவர் தெரிந்து கொள்ளும் பொருள்களெல்லாம், தமது செந்தமிழ் மொழியில் ஏழெட்டு ஆண்டுகளில் இன்னுஞ் செவ்வையாக்க் கற்றுத்தேறலாம், ஆங்கிலம் ஆரியம் முதலிய மொழிகளில் அவர் எவ்வளவுதான் கற்றுத் தேறினாலும், தாம் அம்மொழிகளில் அறிந்த பொருள்களைத் தமிழ் மக்கள் எல்லார்க்கும் புலப்படும்படி எடுத்துச் சொல்லிப் பயன் படுத்தல் இயலாது. தமிழ் கற்றவரோ தாம் அறிந்தவைகளைத் தமிழ் மக்களெவர்க்கும் நன்கு விளங்கும்படி எடுத்துச்சொல்லப் பெரிதும் பயன்படுவர். இதனால் தமிழ் நாட்டவர் தமிழ் கற்பதொன்றே தமக்கும் பிறர்க்கும் பயன்படுவதற்கு ஏதுவாம் என்க. 

    இனி, ஏழெட்டு நூற்றாடுகளாய்ப் புதிது முனைந்தெழுந்து இப்போது ஆங்காங்கு வழங்கி வரும் பல வேறு மொழிகளையும் போல்வதன்று நமது மொழி; இஃது இன்ன காலத்திலேதான் தோன்றியதென்று எவராலும் கட்டுரைத்துச் சொல்ல முடியாத பழமையுடையதாகும். இத்தனை காலமாகியுந் தனது இளமை சிறிதுங் குன்றாதாய் உலாவி வருகின்றது. தமிழைப் போலவே பழமையுடையனவென்று சொல்லத்தக்க ஆரியம் கிரேக்கு இலத்தின் ஈபுரு சீனம் முதலான பல தேய மொழிகளெல்லாம் இப்போது உலக வழக்கில் இன்றி இறந்தொழிய, நம் செந்தமிழ் மொழி ஒன்று மட்டுமே எல்லாம் வல்ல இறைவனைப் போல் என்றும் இறவாத இளமைத் தன்மை வாய்ந்து இலங்குகின்றது. இவ்வுண்மையை மனோன்மணீயத்தில், 

      "பல்லுலகும் பலவுயிருந்
              படைத்தளித்துத் துடைக்க கினும்ஓர்

      எல்லையறு பரம்பொருள் முன்
              னிருந்தபடி யிருப்பதுபோற்
      கன்னடமும் களிதெலுங்கும்

              கவின் மலையாளமுந் துளுவும் 
      உன்னுதரத் துதித் தெழுந்தே
              ஒன்று பல ஆயிடினும் 
      ஆரியம் போல் உலகவழக்
              கழிந்தெழிந்து சிதையா நின்,

      சீரிளமைத் திறம் வியந்து
              செயன்மறந்து வாழ்த்துது

    என்றுவந்த தமிழ்த்தாய் வணக்கச் செய்யுளிலுங் கண்டு கொள்க.

    பழமையில் இதனோடு ஒத்த ஆரியம் முதலான மொழிகளெல்லாம் இறந்தொழியவும், இதுமட்டும் இன்னும் இளமையோடு விளங்குவது எதனால் என்றால், தமிழ் அல்லாத மற்ற மொழிகளெல்லாம் மக்கள இயற்கைக்கு மாறான உரத்த ஓசைகளும் பொருந்தா இலக்கண முடிபுகளும் காணப்படுவதால் அவை வழங்குவதற்கு எளியனவாய் இல்லாமல் நாளடைவில் மாய்ந்துபோகத் தமிழில் இயல்பாற் பிறக்கும் அமைந்த இனிய ஒலிகளும் மிகவும் பொருத்தமான இலக்கண முடிபுகளும் இயைந்து, இஃது ஓதுதற்கு எளிதாய் இருத்தலினாற்றான் அங்ஙனம் இஃதின்னும் இளமை குன்றாமல் நடைபெறுகின்றதென்று உணர்ந்துகொள்க. ‘க்ருதம்‘ ‘த்ருஷ்டி‘ த்வரிதம்‘ ‘ச்ருஷ்டி‘ ‘ஹ்ருதயம்‘ முதலான ஆரியச் சொற்களைச் சொல்லிப் பாருங்கள்! அவை பேசுவதற்கு எவ்வளவு வருத்தமாய் இயற்கைக்கு மாறுபட்டனவாய் இருக்கின்றன! இச்சொற்களையே தமிழ்வடிவாகத் திரித்துக் ‘கிருதம்‘ ‘திருட்டி‘ ‘துரிதம்‘ ‘சிருட்டி‘ ‘இதயம்‘ என்று சொல்லிப் பாருங்கள். அப்போது அடிவ பேசுதற்கு எவ்வளவு எளியனவாய் வருத்தமில்லா தனவா யிருக்கின்றன! இனி, இவற்றிற்கு நேரான ‘இழுது‘ ‘பார்வை‘ ‘விரைவு‘ ‘படைப்பு‘ ‘நெஞ்சம்‘ முதலான தூய தமிழ்ச் சொற்களைச் சொல்லிப் பாருங்கள! இவை அவற்றைக் காட்டிலுஞ் சொல்லுதற்கு இன்னும் எத்தனை எளியவாய் இனியவாய் இருக்கின்றன! இங்ஙனமே ஆரியம் முதலான மற்ற மொழிகளின் இலக்கணங்கள் இயற்கைக்கு மாறாய் இருத்தலும், தமிழ் இலக்கணம் ஒன்றுமே இயற்கைக்குப் பொருத்தமாய் இருத்தலும் நாம் எழுதிய ஞானசாரக முதற்பதுமத்திலும், பண்டைக் காலத் தமிழர் ஆரியர் என்னும் நூலிலுங் கண்டு கொள்க. இங்கே அவையெல்லாம் விரித்துரைப்ப9தற்கு இடமில்லை. அது நிற்க. 

    இனி, மொழியின் அமைப்பையும் மக்களியற்கை உலக இயற்கைகளையுந் திறம்படி விரித்துரைத்த தொல்காப்பியம் போன்ற மிகப் பழைய நூலை நமது செந்தமிழிலன்றி வேறு மொழிகளிற் காணல் இயலுமோ? அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் முற்றும் எடுத்து விளக்கிய திருக்குறள், நாலடியார் போன்ற அரும் பெரு நூல்களை நம் செந்தமிழ் மொழியன்றி வேறு எந்த மொழியேனும் உடையதாமோ? சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பெரும் பழந்தமிழ்க் காப்பியங்களோடு ஒத்தவை எம் மொழியிலேனும் உளவோ? உலகவியற்கை பிறழாது பாடிய பத்துப்பாட்டு, கலித்தொகை முதலான பழைய தமிழ்ப் பாட்டுகளுக்கு நிகரானவை வேறு எந்த மொழியிலேனும் எடுத்துக்காட்டல் இயலுமோ? திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவை, தேவாரம், பெரியபுராணம், என்னும் தெய்வத்தமிழ் நூல்கள், கன்னெஞ்சமும் கரைந்துருகி எத்திறத்தவரும் இறைவன் அருட்பெருக்கில் அமிழ்ந்தி இன்புருவினராய் நிற்குமாறு செய்தல்போல, வேறு எந்த மொழியில் உள்ள எந்நூலேனுஞ் செய்தல் கண்டதுண்டோ? மக்கள் முடிவாய் தெரியவேண்டும் மெய்ப்பொருள்களையெல்லாந் தெளித்துக் கூறி முடிவுகட்டிய சிவஞான போதம், சிவஞானசித்தி போனற் மெய்த் நூல்களும் அவற்றிற்கு மெய்யுரை விரித்த சிவஞானமுனிவர் நுண்ணுரை போன்ற உரை நூல்களுந் தமிழிலன்றி வேறெந்த மொழியிலேனுங் காணப்படுவ துண்டோ? இந்நூற் பொருள்களென்னுந் தீம்பாலை நமதுயிரெல்லாந் திக்திக்க்க் குழைத்தூட்டும் நம் தமிழ்த் தாயை மறவாது பேணும் பெரும் பேற்றை நம் தமிழ் மக்கள் எல்லாரும் பெற்றுச் சிறந்திடுவாராக!  http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0470.html

N. Ganesan

unread,
Oct 19, 2016, 12:46:31 AM10/19/16
to மின்தமிழ், vallamai


On Tuesday, October 18, 2016 at 2:23:20 PM UTC-7, தேமொழி wrote:


On Tuesday, October 18, 2016 at 2:08:57 PM UTC-7, jayabarathans wrote:
தேமொழி,

இவ்வினிய அரிய ரகுமான் இசைப்பாடல் செம்மொழி தமிழைப் பற்றி புகழ்ந்து பாடுவது.  தமிழ்நாட்டைப் பற்றிப் பாடும் நாட்டு வணக்கமாகுமா இது ? 




எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!  தமிழணங்கே!  என்று போற்றுவது தமிழ்த்தாய் வாழ்த்து அல்லவா ஐயா?

இது தமிழ்நாட்டிற்கான பாடல் அல்லவே. நமக்கெதற்கு அப்படி ஒரு பாடல் தேவை ?

நமக்குதான்  இந்திய மக்கள் என்ற முறையில்  தேசியகீதம் உள்ளதே. அதனை நிகழ்ச்சியின் இறுதியில் பாடுவது நம் நாட்டின் மரபு.

அதற்கு நேரம் இல்லை என்றால் சுருக்கமாகவும் பாட, சிலவரிகளை நீக்கிப் பாடும் ஒரு முறையும் உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது சமயச்சார்பற்றமுறையில்  தமிழன்னையை வாழ்த்தித் தொடங்கும் முறை என்பது எனது புரிதல்.

..... தேமொழி


ரகுமான் பாடும் பாடல் போல நூற்றுக்கணக்கான தமிழ் வாழ்த்துப் பாடல்கள் உள்ளன. பல பாடல்களை
சந்தவசந்தம் குழுவில் பேசியிருக்கிறோம். சுத்தானந்த பாரதியாரின் பாடல் மிக அழகானது. மலேசியா
முனைவர் நயினா முகமது அவர்கள் பாடல் அழகானது. வைரமுத்து நான் பாடித்தருகிறேன் என்றார், ....
வில்லிபாரதத்திலே, சீகாளத்திப் புராணத்திலே (இதனை பெ. சுந்தரனார் மேற்கோளிட்டார். அதை அடிப்படையாக
வைத்து மேலைநாட்டார் செய்த அறிவியற்புரட்சியை உள்வாங்கித் தமிழ்த்தாய் வாழ்த்து அமைத்தார் -
ஆனால், இந்திய வரலாறு, மொழியியற் சான்றுகளின் முக்கியத்துவம் போன்றவற்றுக்கு மறைமலையடிகள்
தேர்ந்தெடுத்துப் போற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் போல ஒரு பாடல் இல்லை. 

திரு. ஜெயபாரதனின் இழைத்தலைப்பில் பிழையுண்டு. தமிழ்த்தாய் வாழ்த்து வணக்கப்பாடல். 
பெ. சுந்தரனாரோ, மறைமலை அடிகளோ, அண்ணாவோ, .... தமிழ்நாட்டு அரசாங்கமோ,
தமிழ்ப் பள்ளிகளோ, தமிழ் மன்றங்களோ தமிழ்நாட்டு வாழ்த்து என்று கொள்வதில்லை.
பாடலின் பொருளைப் பார்த்தால் எளிதில் புரியும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 19, 2016, 12:56:28 AM10/19/16
to வல்லமை, mint...@googlegroups.com, Kumar Mallikarjunan, Kalyanasundaram, K Kalyan, Vasu Renganathan
மொழியரசி என்ற நூலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்கள் பலவும் தொகுத்தளித்துள்ளார்
கரந்தைக் கவியரசு ர. வெங்கடாசலம்பிள்ளையவர்கள். மதுரை முன்னியத்தில் ஏறவேண்டிய நூலிது.

கரந்தைக் கவியரசு - தொல்காப்பியம், தெய்வச்சிலையார் உரை நன்முறையில் பதிப்பித்தவர்:

Singanenjam Sambandam

unread,
Oct 19, 2016, 12:57:54 AM10/19/16
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன் ஐயா  அவர்களுக்கு வணக்கம், நன்றி , என்னை 1971  ஆண்டிற்கு  அழைத்துச் சென்றதற்கு. 

என் நினைவிற்கு  எட்டிய வரை    தமிழ்த்தாய்  கட்டுரையின் முதல் பாடல், " பண்ணுறத் தெரிந்தாய்ந்த " அல்ல. அது கட்டுரையின்  உள்ளே வரும்.
 கட்டுரையின் முதற்பாடல் 
" கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து 
பண்ணுறத் தெரிந்தாய்ந்த  இப்பசுந்தமிழ் - ஏனை 
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் 
எண்ணிடப் படக் கிடந்ததா , எண்ணவும் படுமோ."


என்பது. (பிழைகள் இருக்கலாம்)


--

N. Ganesan

unread,
Oct 19, 2016, 1:06:19 AM10/19/16
to மின்தமிழ், vallamai


On Tuesday, October 18, 2016 at 9:57:54 PM UTC-7, singanenjan wrote:
அன்பின் கணேசன் ஐயா  அவர்களுக்கு வணக்கம், நன்றி , என்னை 1971  ஆண்டிற்கு  அழைத்துச் சென்றதற்கு. 

என் நினைவிற்கு  எட்டிய வரை    தமிழ்த்தாய்  கட்டுரையின் முதல் பாடல், " பண்ணுறத் தெரிந்தாய்ந்த " அல்ல. அது கட்டுரையின்  உள்ளே வரும்.
 கட்டுரையின் முதற்பாடல் 
" கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து 
பண்ணுறத் தெரிந்தாய்ந்த  இப்பசுந்தமிழ் - ஏனை 
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் 
எண்ணிடப் படக் கிடந்ததா , எண்ணவும் படுமோ."


என்பது. (பிழைகள் இருக்கலாம்)


அன்பின் சிங்கநெஞ்சன்,

தாங்கள் சொல்வது சரியே.
எந்தப் புராணப் பாடலும் 4 அடி. இங்கே முதலடி விடப்பட்டுள்ளது.

பழைய இலக்கியங்கள், கட்டுரைகள் தட்டெழுதும் தளங்களில் பல அச்சுப்பிழைகள், விடுபாடுகள் உள.
மெய்ப்புப் பார்ப்பாரும், திருத்துநரும் குறைவு. ப்ராஜெக்ட் மதுரை, இணையப் பல்கலை, ... என
எத்தளத்திலும் விடுபிழை அதிகம். என் செய? 

எனவே தான், நூலைத் தட்டச்சு செய்வோர் அதன் பிடிஎப்பும் இணைக்க வேண்டுகோள்.
அப்பொழுது ஐயப்படும் இடங்களை வாசகர் சரிபார்த்து இட இயலும். உ-ம்: காளைராசன் அவர்கள்
தட்டச்சும் நூல்கள். விபூதி என்பது வீபூதி என உள்ளது. காளை ஐயா பிடிஎப் தரவேண்டுகிறேன்.

 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Megala Ramamourty

unread,
Oct 19, 2016, 9:52:25 AM10/19/16
to vallamai, மின்தமிழ்
//திராவிட நாடு என்பது தமிழ் நாடுதான் என்றால், கருணாநிதி ஏன் தமிழகத்துக்குத் திராவிட நாடு என்று பெயர் மாற்றவில்லை ? //

தமிழ்த்தெய்வ வணக்கத்தில் சுந்தரனார் குறிப்பிடும் ’திரவிடநல் திருநாடு’ தமிழ்நாடுதான் ஜெயபாரதன் ஐயா. 

இப்போது அச்சொல்லின் பயன்பாடு முற்றிலும் மாறிவிட்டது என்பதையும் நாமறிவோம். அத்தோடு, ’திரவிடம்’ என்ற சொல் தமிழிலிருந்து திரிந்த வடமொழிச்சொல் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே தமிழ்மொழிக் காவலரான ’கலைஞர்’ அதனைத் தெரிவுசெய்யாததில் வியப்பில்லை.   :-)

Megala Ramamourty

unread,
Oct 19, 2016, 10:06:30 AM10/19/16
to vallamai, மின்தமிழ்
மாயோன் ஐயா,

இங்கே நம் கேள்வி சுந்தரனாரின் தமிழ்த்தெய்வ வணக்கத்திலுள்ள ’திரவிடநல் திருநாடு’ எனும் சொல்லில் மாற்றம் தேவையா இல்லையா என்பது. அதற்குத்தான் நான் பாவாணரின் ’திரவிடம்’ குறித்த வேர்ச்சொல் ஆராய்ச்சியை எடுத்துக்காட்டி, திரவிடம் என்பது தமிழம் என்பதன் திரிபே என்று சுட்டிக்காட்டினேன்.  :-)

//அம்மா, அதன் பிறகு அவர் எழுதிய நூல்கள் எல்லாம் பிடிக்கவில்லையா நீங்கள்?//

ஐயா,
பாவாணரின் நூல்கள் அனைத்தையும் படிக்கக் கால அவகாசம் எனக்குக் கிடைக்கவில்லை; கிடைத்தால் அவசியம் படிக்கிறேன். அனைவரும் படித்துப் பயன்பெறவேண்டிய இன்தமிழ் நூல்கள் அவை.  :-)

////தமிழ் வேறு, திராவிடம் வேறு. தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது, பாலையும் தயிரையும் கலப்பது போன்றதே.//
-'திரவிடம்' என்பதே தீது.////

ஐயா, திரவிடம் நமக்கு விடமாகிப்போனது பின்னாளில். அதற்கும் சுந்தரனாரின் பாடல்வரிக்கும் முடிச்சுப்போடுவது விஷ(ம)த்தனமானது!   :-)


அன்புடன்,
மேகலா





2016-10-19 6:09 GMT-04:00 மாயோன் <ts.m...@gmail.com>:
//பாவாணர் அவர்கள் தமிழம் என்னும் பெயரே திரவிடம் ->>> திராவிடம் எனத் திரிந்தது என்று தெளிவாகத் தன்னுடைய ’திரவிடத்தாய்’ எனும் நூலில் விளக்கியுள்ளார்.//

அம்மா, அதன் பிறகு அவர் எழுதிய நூல்கள் எல்லாம் பிடிக்கவில்லையா நீங்கள்?

//தமிழ் வேறு, திராவிடம் வேறு. தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது, பாலையும் தயிரையும் கலப்பது போன்றதே.//
-'திரவிடம்' என்பதே தீது.




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 19, 2016, 11:18:15 AM10/19/16
to vallamai, tamilmantram, mintamil, vannan vannan, Oru Arizonan
////திராவிட என்ற சொல் கால்ட்வெல் பாதிரியார் யாத்த இலக்கணம் இந்திய வரலாற்றில் திராவிட மொழிகளின் முதன்மையைக் குறிப்பிடுவதைச் சுட்டுவதற்காக
பிள்ளையவர்கள் எழுதிய பொருள்பொதிந்த வரிகள். என்றைக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தாக இலங்கும்.
நா. கணேசன் ////

கால்டுவெல் பாதிரியார் யாத்த  திராவிட என்னும் சொல், இந்திய வரலாற்றில் திராவிட மொழிகளின் தன்மை, பெரியார் குறிப்பிட்ட "திராவிடநாடு" ஆகுமா ?  

தனித் திராவிட நாடு பெரியார் காலத்திலே செத்துப் புதைக்கப்பட்டதே. பெரியார் திராவிட நாட்டில்தான் தமிழ் ஆரியருக்கு இடமில்லையே !  இப்போது திராவிட நாடு தமிழ் நாடா ?  தமிழ் நாடு திராவிட நாடா ? காற்றில் மிதந்து கொண்டிருக்கும் திராவிட நாடு பூமியில் கால்வைக்குமா ?  அல்லது வானில் பறக்குமா ?

சி. ஜெயபாரதன்

2016-10-19 0:36 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Tuesday, October 18, 2016 at 1:46:09 PM UTC-7, ஜெயபாரதன் wrote:
நண்பர் அண்ணா கண்ணன்,

ஏற்கனவே  மனோன்மணியம் சுந்தரனார் பாடலில் "ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழியா " என்ற வரி ஏன் நீக்கப்பட்டது என்று சொல்லுங்கள்.  அது பெருந்திருத்தம் அல்லவா ?

பல வரிகள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு நிமிஷத்தில் பாடும்படி அமைக்கவேண்டும். முழுப்பாடலையும் விரும்புவோர் தேடிப் படிக்கலாம் என விடப்பட்டது.

திராவிட என்ற சொல் கால்ட்வெல் பாதிரியார் யாத்த இலக்கணம் இந்திய வரலாற்றில் திராவிட மொழிகளின் முதன்மையைக் குறிப்பிடுவதைச் சுட்டுவதற்காக
பிள்ளையவர்கள் எழுதிய பொருள்பொதிந்த வரிகள். என்றைக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தாக இலங்கும்.

நா. கணேசன்
 

சி. ஜெயபாரதன்
2016-10-18 13:25 GMT-04:00 Anna Kannan <annak...@gmail.com>:
மனோன்மணியம் சுந்தரனார் மட்டுமில்லை, எவர் எழுதிய பாடலையும் திருத்துவது முறையானது இல்லை. பொருத்தமான வேறு பாடலைத் தேர்ந்தெடுக்கலாம்; அல்லது, புதிய பாடலை இயற்றிக்கொள்ளலாம். மலேசியாவிற்கு என, சீனி நைனா முகம்மது தனியே இயற்றிய தமிழ் வாழ்த்துப் பாடல் இங்கே: http://inbachudar.blogspot.in/2013/12/wmv.html

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Ibrahim Irfana

unread,
Oct 19, 2016, 11:32:33 AM10/19/16
to mint...@googlegroups.com, vallamai, Oru Arizonan, vannan vannan, tamilmantram

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தற்போதைய சூழலில் ,திராவிடம் என்ற சொல்லுக்கு பதில் தமிழ்நாடு என்று பயன்படுத்துவது நல்லது. தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் கேரளம் கர்நாடகம் போன்ற மாநிலங்களை இணைத்து நாம் ஏன் திராவிடம் என்று பாட வேண்டும்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Pandiyaraja

unread,
Oct 19, 2016, 1:47:34 PM10/19/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, vanna...@gmail.com, oruar...@gmail.com, vaiyav...@gmail.com, buh...@gmail.com, josephi...@hotmail.com, thamil...@gmail.com
இந்திய தேசியப் பாடலிலேலே (National Anthem) திராவிட என்ற சொல் உள்ளதே. அதனை என்ன செய்வீர்களாம்?
(பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உதகல பங்கா)
ப.பாண்டியராஜா



On Tuesday, October 18, 2016 at 9:24:14 PM UTC+5:30, jayabarathans wrote:

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்


தெக்கணமும் அதிற்சிறந்த செந்தமிழ்நற் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற


எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமேவாழ்த்துதுமே!!வாழ்த்துதுமே!!!

சி. ஜெயபாரதன்

unread,
Oct 19, 2016, 5:45:06 PM10/19/16
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Asan Buhari, Anne Josephine, Thamil Selvi
இந்திய தேசீய கீதத்தில் வரும் திராவிட என்னும் சொல் தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், கேரளா ஆகிய கூட்டு மாநிலப் பரப்பைத் தாகூர் குறிப்பதாகத் தெரிகிறது. அதில் பிரச்சனை இல்லை.

தமிழர் எதற்கு அந்த திராவிடக் கூட்டுப் பரப்புக்கு வாழ்த்துக் கூற வேண்டும் ?

சி. ஜெயபாரதன்.

--

Pandiyaraja

unread,
Oct 19, 2016, 9:47:07 PM10/19/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, vanna...@gmail.com, oruar...@gmail.com, vaiyav...@gmail.com, buh...@gmail.com, josephi...@hotmail.com, thamil...@gmail.com
இந்தக் கூட்டுப்பரப்புக்கு மனோன்மணியம் சுந்தரனார் வாழ்த்துப் பாடவில்லை. அவரது பாடலை நன்றாகப் படித்துப் பாருங்கள்.
...............................................................................

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
............................................................................................
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!

'இருந்த' என்றுதான் அவர்கூறுகிறார். 'இருக்கும்' என்று கூறவில்லை. ஒரு காலத்தில் திராவிடம் முழுக்க தமிழ் கோலோச்சியது என்கிறார்.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகத்து --
என்ற தொல்காப்பியர் அடிகளை நினைவுகூறுங்கள். இதுதான் திராவிடம். இது அன்றைக்குத் தமிழ்கூறு நல்லுலகமாய் இருந்தது.
கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளமும் --
உன்னுதரத்தே உதீத்து எழுந்து ஒன்று பலவாக அன்றைக்கு ஒன்றாக இருந்த தமிழ்நாடு என்னும் திராவிடம் இன்றைக்குக் கூட்டுப்பரப்பாகிவிட்டது. இந்தக் கூட்டுப்பரப்பில் ஒருகாலத்தில் புகழ்மணக்க இருந்த தமிழணங்கையே சுந்தரனார் பாடுகிறார். எனவே பாடலில் தவறில்லை. மாற்றவும் தேவையில்லை.
ப.பாண்டியராஜா



On Thursday, October 20, 2016 at 3:15:06 AM UTC+5:30, jayabarathans wrote:
இந்திய தேசீய கீதத்தில் வரும் திராவிட என்னும் சொல் தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், கேரளா ஆகிய கூட்டு மாநிலப் பரப்பைத் தாகூர் குறிப்பதாகத் தெரிகிறது. அதில் பிரச்சனை இல்லை.

தமிழர் எதற்கு அந்த திராவிடக் கூட்டுப் பரப்புக்கு வாழ்த்துக் கூற வேண்டும் ?

சி. ஜெயபாரதன்.
2016-10-19 13:47 GMT-04:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
இந்திய தேசியப் பாடலிலேலே (National Anthem) திராவிட என்ற சொல் உள்ளதே. அதனை என்ன செய்வீர்களாம்?
(பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உதகல பங்கா)
ப.பாண்டியராஜா



On Tuesday, October 18, 2016 at 9:24:14 PM UTC+5:30, jayabarathans wrote:

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த செந்தமிழ்நற் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமேவாழ்த்துதுமே!!வாழ்த்துதுமே!!!


சி.ஜெயபாரதன்.

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 19, 2016, 10:14:12 PM10/19/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Tuesday, October 18, 2016 at 8:44:02 PM UTC-7, jayabarathans wrote:
நன்றி மேகலா.

திராவிட நாடு என்பது தமிழ் நாடுதான் என்றால், கருணாநிதி ஏன் தமிழகத்துக்குத் திராவிட நாடு என்று பெயர் மாற்றவில்லை ? 

பெரியார் தனித்துக் கேட்டுப் போராடிய திராவிடநாடு தமிழகம், கேரளம், மைசூர், ஆந்திரா சேர்ந்த பழைய மெட்ராஸ் மாகாணம்.  தனித் தமிழ்நாடு பெரியார் கேட்கவில்லை. 

சி. ஜெயபாரதன்

திராவிடம் என்பது வடமொழி வார்த்தை. இதற்கு இரண்டு பொருள்கள் உண்டு: 
(1) தமிழ். ஆந்திராவில் திராவிடாலு என்றால் தமிழர். திராவிட தேசம் (*) என்றால் தமிழ்நாடு 
(2) திராவிட மொழிகள் பேசும் பாரதம். உ-ம்: வடமொழி இலக்கியங்களில் 
பஞ்ச திராவிடம் என்றால் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத்.
அதாவது அதற்கும் வடக்கே உள்ள பஞ்ச கௌடம் என்ற பகுதியைத் தவிர்த்த பாரதம்.
கௌடம் என்றால் வங்காளம். ஆனால், கௌடம் என்றால் திராவிட நாடுகள் தவிர உள்ள
இந்தியா என்ற பொருளும் உண்டு. அதுபோல, திராவிடம் = தமிழ், திராவிடமொழிகள்.
நிலத்தைச் சொல்கையில் தமிழ்நாடு, திராவிடமொழிகள் பேசப்பட்ட பஞ்ச திராவிட தேசம்.

திராவிட வேதம் = தமிழில் ஆழ்வார் அருளிச்செயல். (பாசுரங்கள்).

பழைய தெலுங்கு இலக்கியங்களில் திராவிட தேசம் என்றால் தமிழ்நாடு.

Not Entirely Hidden

Not entirely hidden, 
like the enormous breasts of those Gujarati women, 
and not open to view, 
like a Tamil woman's breasts,
but rather,
like the supple, half-uncovered breasts 
of a Telugu girl,
neither concealed nor exposed: 

that's how a poem should be composed. 
Anything else
is a joke.

ghanatara-ghūrjarī-kuca-yuga-kriya gūḍhamu gāka drāviḍī-
stana-gati teṭa gāka aracāṭ' agu āndhra-vadhūṭi cokkapun
canu-gava-līla gūḍhatayu cāṭutanambunu lekay uṇḍa cep-
pinan adipo kavitvam' anipiñcu nagiñc' aṭugākay uṇḍinan

டேவிட் ஷுல்மன் த்ராவிட என்பதை தமிழ் என மொழிபெயர்த்தலை அவதானிக்கவும்.

(pg. 33, A Poem at the Right Moment: Remembered Verses from Premodern South India, 1998).
குச்சிலியன்பாறை (> குஜிலியம்பாறை) என்னும் ஊர்ப்பேரை விளக்கின மடல்:

நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Oct 19, 2016, 11:58:21 PM10/19/16
to vallamai, மின்தமிழ்
////பழைய தெலுங்கு இலக்கியங்களில் திராவிட தேசம் என்றால் தமிழ்நாடு./////

தமிழ்நாடு என்பது அண்ணா / கருணாநிதி காலத்தில் தோன்றிய புதுப் பெயர் கொண்ட மெட்ராஸ் மாநிலம். அது எப்படித் திராவிட தேசம் ஆனது ?  

தெலுங்கர் தமிழரை "அரவாடு" என்று விளிப்பார். திராவிடர் என்று சொல்வாரா ?

அதாவது தெலுங்கர் தம்மைத் திராவிடர் என்று ஒப்புக் கொள்வதில்லையா ?

தாகூர் எழுதிய தேசீய கீதத்தில் சொல்லும் திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமா ?

பெரியார் கேட்டுப் போராடிய திராவிட நாடு வெறும் தமிழ் நாடு மட்டுமா ?   அதைத்தான் மொழிவாரியாகப் பிரித்து பண்டித நேரு தனியாக்கி விட்டாரே.

சி. ஜெயபாரதன்

--

சி. ஜெயபாரதன்

unread,
Oct 20, 2016, 12:14:03 AM10/20/16
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Asan Buhari, Anne Josephine, Thamil Selvi
/////கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளமும் --
உன்னுதரத்தே உதீத்து எழுந்து ஒன்று பலவாக அன்றைக்கு ஒன்றாக இருந்த தமிழ்நாடு என்னும் திராவிடம் இன்றைக்குக் கூட்டுப்பரப்பாகிவிட்டது.////

இலக்கணம் சரியாக இல்லை.  கன்னடம் [மொழி], களிதெலுங்கு [மொழி], கவின்மலையாளம் [மொழி] உன்னுதிரத்தே [தமிழ் மொழி] உதித்து ஒன்று பல ஆயிடினும், ஆரியம் [சமஸ்கிருத மொழி] போல் உலக வழக்கு அழிந்து ஒழியா உன் சீரிளமைத் [தமிழ்மொழி] திறம் வியந்து....போற்றுவோமே.  

இந்தச்  சங்கிலியில் எங்கே எப்படித் தமிழ்நாடு நுழைந்தது ???  மொழிகளைப் பற்றிப் பேசும் போது நாட்டைப் புகுத்துவது தவறான இடைச் சொறுகல் !!!! 

ஆரஞ்சு வேறு; ஆப்பிள் வேறு.  [You are mixing apples with oranges]

சி. ஜெயபாரதன்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Pandiyaraja

unread,
Oct 20, 2016, 12:43:26 AM10/20/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, vanna...@gmail.com, oruar...@gmail.com, vaiyav...@gmail.com, buh...@gmail.com, josephi...@hotmail.com, thamil...@gmail.com
விளங்காதவர்களுக்கு விளங்கியிருக்கும். விளங்கிக்கொள்ள விருப்பமில்லாதவர்களுக்கு விளக்கி வைக்க விருப்பமில்லை.
ப.பாண்டியராஜா

மாயோன்

unread,
Oct 20, 2016, 1:03:07 AM10/20/16
to mintamil
உலகில் எல்லோரும் அவர்கள் தாய்மொழி என வாழ்ந்தாலும், ஒரு சிலரின் பிழைப்பிற்காக திராவிட என்னும் சொல் தமிழகத்தில் இருப்பதும்-'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' இதை புரியாமல் திரைப்பட நடிகர்களின் பின்னால், சாராயம் பின்னால் ஓடுவதும் மாறுவது எந்நாளோ!!

20 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:13 அன்று, Pandiyaraja <pipi...@gmail.com> எழுதியது:
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 20, 2016, 10:52:29 AM10/20/16
to மின்தமிழ், vallamai


On Wednesday, October 19, 2016 at 10:03:07 PM UTC-7, மாயோன் wrote:
உலகில் எல்லோரும் அவர்கள் தாய்மொழி என வாழ்ந்தாலும், ஒரு சிலரின் பிழைப்பிற்காக திராவிட என்னும் சொல் தமிழகத்தில் இருப்பதும்-'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' இதை புரியாமல் திரைப்பட நடிகர்களின் பின்னால், சாராயம் பின்னால் ஓடுவதும் மாறுவது எந்நாளோ!!


காங்கிரஸ் என்னும் கட்சி இல்லாமல் இருப்பது போல, தமிழர் வாழ்வில் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக விளங்கு திராவிட மு.க., அண்ணா திராவிட மு.க., பதவிக்கு வரமுடியாது போகலாம்.

ஆனால், திராவிட எனுஞ் சொல் நீண்ட பாரம்பரியம் உடையது. திராவிடம் = தமிழ், தமிழ் தொடர்புடைய பஞ்ச திராவிட நாடுகளின் மொழிகள் மற்றும் நிலம் எனக்
குறிக்கும் ஸம்ஸ்கிருதச் சொல். ஆயிரக்கணக்கான சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழி புழங்குவது போலே, த்ராவிடம் என்ற சொல்லும் தமிழர் பாவிக்கின்றனர்.
திராவிட வேதம் என்றால் = ஆழ்வார்கள் அருளிய திவ்விய ப்ரபந்தம். திராவிட வேதமும், கால்ட்வெல்லின் திராவிட இலக்கணமும், சுந்தரனார் பாட்டில் புகழும்
திராவிட நல்திருநாடும் (தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து) என்றும் இருக்கும்.

கவிஞர் ருத்ரா எழுதும் கவிதைகளில் திரைவிடம் என்ற புதுச்சொல்லை உருவாக்க்கி, திரை = கடல் என்று விளக்கம் கொடுத்தார், திராவிடம் என்பது
தமிழ் என்ற சொல்லின் வடமொழித் திரிபாக்கம். (1) பவளம் > ப்ரவாளம், (2) கமுகு > க்ரமுக, 
(3) கரிஞ்சம் (அன்றில் என்று பழந்தமிழின் ஐபிஸ் பறவை நிறவாகுபெயர்) > க்ரௌஞ்சம் .... போல
தமிழ் > தமிள/தமிட > த்ரமிட (hypercorrect insertion of r) > திராவிட என ருத்ரா அவர்களுக்கு இச் சம்ஸ்கிருத சொல்லைப் பற்றி எழுதினேன்.

த்ராவிட கக்ஷிகள் ஆட்சியில் இருந்து விழலாம். ஆனால், திராவிடம் என்ற சொல்லும் ஏனை சம்ஸ்கிருதச் சொற்கள் போலவே
தமிழரிடை வாழும். 50 ஆண்டு கேடான ஆட்சி எப்படி 1000 வருஷ சொல்லை நீக்கமுடியும்?

நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Oct 20, 2016, 10:56:23 AM10/20/16
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Asan Buhari, Anne Josephine, Thamil Selvi
பெரியார் காலத்தில் செத்துப் புதைக்கப்பட்ட திராவிட நாட்டைத் தோண்டி எடுத்து, மூச்சூட்டி உயிர்ப்பிக்க முயல்வதை நான் தடுக்கவில்லை.

"திராவிடம்" என்னும் வடமொழிச்சொல் திரிந்து "தமிழ்" என்று மாறியது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.     

சி. ஜெயபாரதன்.  
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 20, 2016, 11:17:37 AM10/20/16
to mintamil, vallamai
///த்ராவிட கக்ஷிகள் ஆட்சியில் இருந்து விழலாம். ஆனால், திராவிடம் என்ற சொல்லும் ஏனை சம்ஸ்கிருதச் சொற்கள் போலவே
தமிழரிடை வாழும். 50 ஆண்டு கேடான ஆட்சி எப்படி 1000 வருஷ சொல்லை நீக்கமுடியும்? ////


"திராவிடம்" என்னும் வடமொழிச்சொல் காலப் போக்கில் எப்போது திரிந்து "தமிழ்" என்று "ழகரச்" சிறப்போடு மாறியது என்று விளக்க முடியுமா ?  

ஆரியக் கலாச்சாரத்தை அறவே வெறுப்போர் ஏன் "திராவிடம்" என்னும் கீழ்மை நிலையைச் சுட்டும் முத்திரையை நெற்றியில் ஒட்டிக் கருப்புச் சட்டை அணிந்து கொள்ள வேண்டும் ???  

நண்பர் நா. கணேசன், "நான் திராவிடன், நீ ஆதி திராவிடன்" என்று தமிழரைச் சுட்டிக் காட்டும் பிரிட்டன் / கால்டுவெல் இனப்பிரிவை ஏற்றுக் கொள்வீர்களா ???  

பாருங்கள், இன்னும் 50
​ -60​
ஆண்டுகளில் 
திராவிடம், திராவிடன், திராவிட நாடு ஆகிய சொற்கள் வெறும் தமிழகராதிச் சொற்களாய்
​க்​
காகித அச்சுப் பதிவாகப் போகும்.

 
சி. ஜெயபாரதன்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 20, 2016, 2:03:52 PM10/20/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Thursday, October 20, 2016 at 8:17:37 AM UTC-7, jayabarathans wrote:
///த்ராவிட கக்ஷிகள் ஆட்சியில் இருந்து விழலாம். ஆனால், திராவிடம் என்ற சொல்லும் ஏனை சம்ஸ்கிருதச் சொற்கள் போலவே
தமிழரிடை வாழும். 50 ஆண்டு கேடான ஆட்சி எப்படி 1000 வருஷ சொல்லை நீக்கமுடியும்? ////


"திராவிடம்" என்னும் வடமொழிச்சொல் காலப் போக்கில் எப்போது திரிந்து "தமிழ்" என்று "ழகரச்" சிறப்போடு மாறியது என்று விளக்க முடியுமா ?  

திராவிடம் என்ற சொல் திரிந்து தமிழ் என்ற சொல் ஆகிறது என்கிறீர்களா?
நான் அவ்வாறு எழுதவில்லை.

You can read about Sanskrit word, DraaviDa & its origin here:
https://groups.google.com/forum/#!msg/mintamil/Loh9ZF_7KiY/sPrM3_YNBgAJ

நா. கணேசன்

 

Oru Arizonan

unread,
Oct 20, 2016, 2:19:21 PM10/20/16
to mintamil


2016-10-19 22:02 GMT-07:00 மாயோன் <ts.m...@gmail.com>:
//உலகில் எல்லோரும் அவர்கள் தாய்மொழி என வாழ்ந்தாலும், ஒரு சிலரின் பிழைப்பிற்காக திராவிட என்னும் சொல் தமிழகத்தில் இருப்பதும்-'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' இதை புரியாமல் திரைப்பட நடிகர்களின் பின்னால், சாராயம் பின்னால் ஓடுவதும் மாறுவது எந்நாளோ!!//

தமிழர்கள் எனறு,'இவர் தமிழரல்லர், அவர் தமிழரல்லர்,' என்று பிரித்தாளும் சூழ்ச்சிசெய்வோர்க்கு ஆலவட்டம் சுற்றத்துவங்கி அவர்கள்பின் சென்று, பலி ஆட்டைத் [fallguy] தேடி, தம் முன்னேற்றத்தை நினையாது, பிரிப்போருக்கு வால்பிடிக்கத் துவங்கினார்களோ, அவர்கள் காட்டும் இலக்கு தமிழர்கள் என்றறியாது தாக்கத்துவங்கினார்களோ, அன்றே இந்நிலை ஏற்பட்டுவிட்டது.

தமிழைப்பேசும் அனைவரிடமும் தாம் தமிழர், உடன்பிறப்புகள் என்ற நினைவு, நிலைப்பாடு  என்று உறுதிபெறுகின்றதோ, அன்றுதான் நீங்கள் விரும்பும் மாற்றம் தமிழரிடையே ஏற்படும்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Megala Ramamourty

unread,
Oct 20, 2016, 2:34:28 PM10/20/16
to மின்தமிழ்
//very well written megala ramamourty (i got the spelling right? numeralogy basis)//

Thanks for your compliment  rnkantan sir. 'Ramamourty' is the French spelling of my father's name. (Actually, he used to write his name as Ramamurthi.)  :-) 

//புகழ்மணக்க இருந்த -- if my knowledge and reading of tamil is right, it talks of the past - இருந்த  not இருக்கும் இருக்கின்ற --- like the smell in asafoedita container; only smell and no real matter! //

இதனை அப்படியே லிட்டரலாகப் பொருள்கொள்ளத் தேவையில்லை. பாடலின் ஓசைநயம்/வாய்பாடு கருதி இருந்த என்ற சொல்லை இங்கே ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்; இருக்கின்ற என்ற சொல்லைப் பயன்படுத்தினால் தளைதட்டும்! No other intention behind the usage of ’இருந்த’ here.  :-)

//.....reading the full song, it is more of an oblique about other languages and followers//


That's the poet's perception about other languages.
From his standpoint, Tamizh is the oldest language of the world!


That's why he penned,

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்

முதுமொழிநீ யநாதியென மொழிகுவதும் வியப்பாமே.


On the whole, the poet's words about Goddess Tamizh might be slightly hyperbolic due to his admiration for her, but not fallacious! :-)


அன்புடன்,
மேகலா

2016-10-18 23:28 GMT-04:00 nkantan r <rnka...@gmail.com>:
very well written megala ramamourty (i got the spelling right? numeralogy basis)

it is an unnecessary and "uncalled for" controversy; essentially there is no need for a separate song/anthem for a state unless tamil nadu aspires to be an equal partner in india instead of being a part of india!  if i remember karnataka followed suit create its own anthem which is more of hinduish (talking of ram, krishna, vedas etc);
now that the deed is done, why tinker?  if at all somebody has to take umbrage, i will go for the word/phrase புகழ்மணக்க இருந்த -- if my knowledge and reading of tamil is right, it talks of the past - இருந்த  not இருக்கும் இருக்கின்ற --- like the smell in asafoedita container; only smell and no real matter!

with the poet himself talking about a past, there is no need to temper it for the present!  reading the full song, it is more of an oblique about other languages and followers; 

regards
rnkantan


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Pitchaimuthu

unread,
Oct 20, 2016, 2:42:29 PM10/20/16
to மின்தமிழ்
வணக்கம்.

கவிஞனின் கவி சிறப்பானது
அது சிதைக்காமல் இருக்கும் வரை.

தமிழர் என்றால் தமிழ்நாடு மட்டுமா?

தாயும் நாடும் ஒன்றா? வேறானதா? சந்தேகம்.

பேசும்ொமழிதான் தாய்.

தமிழ்த்தாய் என்றால் உலகு முழுதும் வாழும் தமிழரின் தாய் அல்லவா? அல்லது தமிழ்நாடு வாழ் மக்களுக்கு மட்டும் குறிப்பதா?

தமிழ்நாட்டில் வரும் தலைமுறையில் தமிழ் வாழுமா? வாழவேண்டும் என்பதே அவா.தமிழில் பாடம் பயிற்றுவித்த அரசும், மக்களும், ஆசிரியரும் வயது மூப்பின் காரணமாய் மறைந்து விட்டனரே!

தமிழ் உலகம் முழுமைக்குமான, உலகம் முழுதும் வாழும் தமிழ் மக்களுக்கான தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டும் என்பதே. நம் அவாவாக வேண்டும்.

இருப்பவை அப்படியே இருக்கட்டும். உருவாக்க உலகு வாழ் தமிழர்தமிழ்த்தாய்வாழ்த்து. அப்பாடல் இணைக்கட்டும் தமிழர் அனைவரையும்உலகம் முழுமையும்.

நன்றி.

Megala Ramamourty

unread,
Oct 20, 2016, 3:04:19 PM10/20/16
to மின்தமிழ், vallamai
//இலக்கணம் சரியாக இல்லை.  கன்னடம் [மொழி], களிதெலுங்கு [மொழி], கவின்மலையாளம் [மொழி] உன்னுதிரத்தே [தமிழ் மொழி] உதித்து ஒன்று பல ஆயிடினும், ஆரியம் [சமஸ்கிருத மொழி] போல் உலக வழக்கு அழிந்து ஒழியா உன் சீரிளமைத் [தமிழ்மொழி] திறம் வியந்து....போற்றுவோமே.  இந்தச்  சங்கிலியில் எங்கே எப்படித் தமிழ்நாடு நுழைந்தது ???  மொழிகளைப் பற்றிப் பேசும் போது நாட்டைப் புகுத்துவது தவறான இடைச் சொறுகல் !!!! 
[You are mixing apples with oranges]//

ஜெயபாரதன் ஐயா,

Here there is no mixing up of apples with oranges.  Let's see the meaning of this poem first and then come to a conclusion!  :-)

//நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே

தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்கஇருந்தபெருந் தமிழணங்கே 

பல்லுயிரும் பலவுலகும்படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன்இருந்தபடி யிருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்குங்கவின்மலையாளமுந் துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தேயொன்றுபல வாயிடினும்

ஆரியம்போ லுலகவழக்கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத்திறம்வியந்துசெயல்மறந்துவாழ்த்துதுமே. //


*****


பொருள்: நீரையே கடலாக உடுத்த நிலமடந்தையின் எழிலொழுகும் வதனமாகத் திகழ்வது பரதகண்டம். அதன் அழகிய பிறைபோன்ற நெற்றியாய் விளங்குவது  தென்னாடு (தெக்கணம்). நெற்றித் திலகமாய்த் திகழ்வது திரவிடநல் திருநாடாகிய தமிழகம்.  அத்திலகத்தின் வாசனைபோல் விளங்கி அனைத்துலகும் இன்பமுற எங்கும் புகழ்மணம் பரப்புவதோ தமிழெனும் தெய்வம். 


பல்லுயிர்களையும், பலவுலகையும் படைத்தளித்தும், பின்னர் அவற்றை அழித்தும் வருகின்ற எல்லையற்ற பரம்பொருள், தான்மட்டும் ஒருசிறிதும் அழிவின்றி என்றும் நிலைத்திருப்பதுபோல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என்று எத்தனையோ மொழிகளை நீ உன் மணிவயிற்றிலிருந்து  (பிள்ளைகளாய்) அளித்தபோதினும், ஒரு மொழியாய் இருந்த நீ பலமொழிகளாய்க் கிளைத்தபோதினும், அதனால் நீ அழிந்துபோய்விடவில்லை; மூப்படைந்துவிடவில்லை; என்றும் இளமையாகவே இருக்கின்றாய். இவ்விந்தைகண்டு நாங்கள் செயல்மறந்து உன்னை வாழ்த்துகிறோம்!!


இங்கே ஆசிரியர் குறிப்பாலுணர்த்துவது, ஆரியத்திலிருந்து (சமற்கிருதம்) இந்தி போன்ற மொழிகள் கிளைத்தபின்
அது (ஆரியம்) வழக்கற்றுப் போனது; ஆனால் அதற்கு மறுதலையாக நம் தாய்த்தமிழோ  கன்னடம், மலையாளம் என்று எத்தனையோ மொழிகளை (தன் குழந்தைகளாக) ஈன்றபோதினும் அழியவேயில்லை. என்றும் இளமையோடும், மாறா வளமையோடும் பொலிகின்றது. தமிழின் இத்தன்மையைக் கடவுட் பண்போடு ஒப்பிட்டு மகிழ்கின்றார் அவர்.


இவ்வாறு, சொல்லவந்த செய்திகளை நிரலாய் வகுத்தும் தொகுத்தும் உவமைநலம் மிளிரத் தம் பாடலில் பதிவுசெய்துள்ள பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் பெரும்புலமை போற்றுதலுக்குரியது! 


So, no mixing up of apples with oranges here.
I guess, we people are mixing up ourselves unnecessarily.  :-)


அன்புடன்,

மேகலா

 

சி. ஜெயபாரதன்

unread,
Oct 20, 2016, 4:48:16 PM10/20/16
to vallamai, மின்தமிழ்
மேகலா,


////கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளமும் --
உன்னுதரத்தே உதீத்து எழுந்து ஒன்று பலவாக அன்றைக்கு ஒன்றாக இருந்த தமிழ்நாடு என்னும் திராவிடம் இன்றைக்குக் கூட்டுப்பரப்பாகிவிட்டது. இந்தக் கூட்டுப்பரப்பில் ஒருகாலத்தில் புகழ்மணக்க இருந்த தமிழணங்கையே சுந்தரனார் பாடுகிறார். எனவே பாடலில் தவறில்லை. மாற்றவும் தேவையில்லை.
ப.பாண்டியராஜா ////

////இந்தச்  சங்கிலியில் எங்கே எப்படித் தமிழ்நாடு நுழைந்தது ???  மொழிகளைப் பற்றிப் பேசும் போது நாட்டைப் புகுத்துவது தவறான இடைச் சொறுகல் !!!! 

[You are mixing apples with oranges]/////

மொழிகளைப் பற்றிப் பேசும் போது நாடு எப்படி புகுந்தது ?  இதைத்தான் இடைச்சொறுகல் என்றேன்.  திரு. பாண்டியராஜா ஆப்பிளையும், ஆரஞ்சையும் கலக்கவில்லயா ?  அவர் என்ன சொல்கிறார் ?

சி. ஜெயபாரதன்



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Oct 20, 2016, 8:23:28 PM10/20/16
to தமிழ் மன்றம், மின்தமிழ், vallamai, vannan.1935, Oru Arizonan, vaiyavan mspm, Asan Buhari, Anne Josephine, G J Thamil Selvi


19 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:47 அன்று, Pandiyaraja <pipi...@gmail.com> எழுதியது:

இந்தக் கூட்டுப்பரப்புக்கு மனோன்மணியம் சுந்தரனார் வாழ்த்துப் பாடவில்லை. அவரது பாடலை நன்றாகப் படித்துப் பாருங்கள்.
...............................................................................

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
............................................................................................
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!

'இருந்த' என்றுதான் அவர்கூறுகிறார். 'இருக்கும்' என்று கூறவில்லை.

ஐயா, அது வழுவமைதி

திருநின்றவூர்
பூவிருந்தவல்லி

போன்ற சொற்களிலும் அவ்வமைதி காண்க. 

Pandiyaraja

unread,
Oct 20, 2016, 11:11:49 PM10/20/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
>>
பாண்டியராஜா ஆப்பிளையும், ஆரஞ்சையும் கலக்கவில்லயா ?  அவர் என்ன சொல்கிறார் ?
>>
நான் சொல்லிவிட்டு ஓய்ந்துவிட்டேன். நான் எதனையும் எதனுடனும் கலக்கவில்லை. நீங்கள்தான் நாட்டுவாழ்த்தையும், மொழிவாழ்த்தையும் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். முதலில் இந்த இழையின் தலைப்பே தவறு. தாங்கள் குறிப்பிடுவது தமிழ்நாட்டு வாழ்த்துப்பாடல் அல்ல. அது தமிழ்மொழி வாழ்த்துப்பாடல். பாடலை நன்கு படித்துப்பாருங்கள். இருந்த பெரும் தமிழணங்கே என்ற சொற்களில் உள்ள ஆழத்தையும் நுணுக்கத்தையும் நுண்ணிதின் கவனித்துப்பாருங்கள். இனிமேலும் notes போட எனக்கு விருப்பமில்லை. திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே காதுமடல்கள் ஜிவ்வென்று சிவப்போருக்கு இது புரியாதுதான். நான் மொழியால் தமிழன். இனத்தால் திராவிடன். தேசியத்தால் இந்தியன். முதல் இரண்டும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாறாது. ஐம்பதாண்டு கணக்கெல்லாம் சும்மா wishful thinking.
P.Pandiyaraja
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 21, 2016, 12:17:26 AM10/21/16
to mintamil, vallamai
நண்பர் பாண்டியராஜா,

உங்கள் ஆங்கிலப் பாஸ்போர்டில் பாருங்கள்:  எங்காவது நீங்கள் திராவிடன் என்று முத்திரை குத்தியுள்ளதா ? 

என்னிழைத் தலைப்பு : தமிழ்நாட்டு வாழ்த்துப் பாடல் திருத்தப்பட வேண்டும்.  நாட்டுப்பாடலில் தமிழ்மொழியை எப்படி வாழ்த்துவது ?  தமிழ்நாடு என்றால் தமிழ் மக்கள்.  தமிழ்மொழி என்றால் தமிழரைக் குறிப்பிடாது.

சி. ஜெயபாரதன் 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Pandiyaraja

unread,
Oct 21, 2016, 1:15:34 AM10/21/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
என்ன சார் இது தெரியாமல் பேசுகிறீர்கள். பாஸ்போர்ட்டில் Natioanality குத்துவார்கள். அதுதான் இந்தியன் என்றேனே. இனம் என்பது Race. அதற்கு பாஸ்போர்ட் முத்திரை கிடையாது. அது இறைவன் அளிக்கும் முத்திரை. உங்கள் ரத்தத்தில் குத்தப்படுவது.
அடுத்து, ஐயா! தாங்கள் குறிப்பிடுவது நாட்டுப்பாடலே அல்ல. அதுதான் திரும்பத்திரும்பக்கூறுகிறேன். புரிந்துகொள்வதற்குத் தங்களுக்கு விருப்பமில்லை. நான் என் கையை விட்டுவிட்டேன்.
ப.பாண்டியராஜா

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 21, 2016, 5:41:30 AM10/21/16
to mintamil, vallamai
இழையைப் பார்த்தேன்.
 “அத்திலக வாசனை போல் இருந்த பெரும் தமிழணங்கே” என்பதில் திராவிட நாடு திலகம்; திலகத்தின் சிறப்பகிய நறுமணம் தமிழ்/தமிழ்நாடு என்று பொருள் தோன்றுகிறது. நிலமகள்,பாரதம், தென்பகுதி, திராவிடம்/திலகம்,, தமிழ்/தமிழகம் நறுமணம் என்று சொல்லப்படுகிற வரிசை முடிகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் தமிழகத்தின் வாழ்த்தாகக்கொள்கிறோம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


Rathinam Chandramohan

unread,
Oct 21, 2016, 7:30:09 AM10/21/16
to mint...@googlegroups.com
Better to start with Agaram like

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலகமொழி
நம் மொழி – நம் மொழி – அதுவே

செம்மொழியான தமிழ் மொழியாம்…

தமிழ்மொழி – தமிழ்மொழி – தமிழ்மொழியாம்
தமிழ் மொழியாம் – எங்கள் தமிழ் மொழியாம்
வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே…
செம்மொழியான தமிழ் மொழியாம்..!!!


"Have a great Day.
An Evening away from Greatness"- From "More and Most" by T.R.R



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

nkantan r

unread,
Oct 21, 2016, 9:12:39 AM10/21/16
to மின்தமிழ்
thank you ma'am; i can visualize and virtually how french would pronounce ramamurthi.. 

1) you as well other participants in this thread have conveniently  skipped the first and second part of my post (unneccessary controversy and also the anthem itself is not needed)
2) yes; i expected this explanation from others (that it is வழுவமைதி, that the poet used the term for phonetic, for matching the தளை, etc)
3) i am sorry and i beg to differ; the poet expressly meant past tense;  it is clear that he talked that she was the SOLE (SINGULAR and UNIQUE) and that even after other languages appeared out of TAMIL, it still remains YOUNG and VIBRANT
4) i agree totally with the first part of the song;  but i am not that learned or qualified or accepted to crittically review a well received poem; but the phrase முன்இருந்தபடி யிருப்பதுபோல் is associated with
பரம்பொருள், many (including my learned friends) assume to have this connected to சீரிளமைத் திறம் (i forget the name of the அணி where the single pharase is connected to first and later part!....)
5) this is certainly a reverent submission of the poet about the language (not about the land or people) ;  thus this is not suited to be a state anthem  (however since the land is named parochially -- i mean narrowly- after the language), it is no boner that an ode - veneration-  to a language can be an anthem to the land!

regards
rnkantan



On Friday, October 21, 2016 at 12:04:28 AM UTC+5:30, megala.ramamourty wrote:
//very well written megala ramamourty (i got the spelling right? numeralogy basis)//

Thanks for your compliment  rnkantan sir. 'Ramamourty' is the French spelling of my father's name. (Actually, he used to write his name as Ramamurthi.)  :-) 

//புகழ்மணக்க இருந்த -- if my knowledge and reading of tamil is right, it talks of the past - இருந்த  not இருக்கும் இருக்கின்ற --- like the smell in asafoedita container; only smell and no real matter! //

இதனை அப்படியே லிட்டரலாகப் பொருள்கொள்ளத் தேவையில்லை. பாடலின் ஓசைநயம்/வாய்பாடு கருதி இருந்த என்ற சொல்லை இங்கே ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்; இருக்கின்ற என்ற சொல்லைப் பயன்படுத்தினால் தளைதட்டும்! No other intention behind the usage of ’இருந்த’ here.  :-)

//.....reading the full song, it is more of an oblique about other languages and followers//


That's the poet's perception about other languages.
From his standpoint, Tamizh is the oldest language of the world!


That's why he penned,

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்

முதுமொழிநீ யநாதியென மொழிகுவதும் வியப்பாமே.


On the whole, the poet's words about Goddess Tamizh might be slightly hyperbolic due to his admiration for her, but not fallacious! :-)


அன்புடன்,
மேகலா

2016-10-18 23:28 GMT-04:00 nkantan r <rnka...@gmail.com>:
very well written megala ramamourty (i got the spelling right? numeralogy basis)

it is an unnecessary and "uncalled for" controversy; essentially there is no need for a separate song/anthem for a state unless tamil nadu aspires to be an equal partner in india instead of being a part of india!  if i remember karnataka followed suit create its own anthem which is more of hinduish (talking of ram, krishna, vedas etc);
now that the deed is done, why tinker?  if at all somebody has to take umbrage, i will go for the word/phrase புகழ்மணக்க இருந்த -- if my knowledge and reading of tamil is right, it talks of the past - இருந்த  not இருக்கும் இருக்கின்ற --- like the smell in asafoedita container; only smell and no real matter!

with the poet himself talking about a past, there is no need to temper it for the present!  reading the full song, it is more of an oblique about other languages and followers; 

regards
rnkantan



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 21, 2016, 9:17:23 AM10/21/16
to மின்தமிழ்

On Friday, October 21, 2016 at 6:12:39 AM UTC-7, nkantan r wrote:
thank you ma'am; i can visualize and virtually how french would pronounce ramamurthi.. 

1) you as well other participants in this thread have conveniently  skipped the first and second part of my post (unneccessary controversy and also the anthem itself is not needed)
2) yes; i expected this explanation from others (that it is வழுவமைதி, that the poet used the term for phonetic, for matching the தளை, etc)
3) i am sorry and i beg to differ; the poet expressly meant past tense;  it is clear that he talked that she was the SOLE (SINGULAR and UNIQUE) and that even after other languages appeared out of TAMIL, it still remains YOUNG and VIBRANT
4) i agree totally with the first part of the song;  but i am not that learned or qualified or accepted to crittically review a well received poem; but the phrase முன்இருந்தபடி யிருப்பதுபோல் is associated with
பரம்பொருள், many (including my learned friends) assume to have this connected to சீரிளமைத் திறம் (i forget the name of the அணி where the single pharase is connected to first and later part!....)
5) this is certainly a reverent submission of the poet about the language (not about the land or people) ;  thus this is not suited to be a state anthem  (however since the land is named parochially -- i mean narrowly- after the language), it is no boner that an ode - veneration-  to a language can be an anthem to the land!

தமிழ்நாடு, தமிழர்கள், தமிழ் மன்றங்கள் விழாக்களில் முதலில் பாடுவது இறைவணக்கப்பாடல் என்னும் கடவுள்வாழ்த்து.
இங்கே, இறை = தமிழ்த்தாய். கடவுள்வாழ்த்தாக தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கிறது - தமிழர்களின் மூன்று சமயத்தவரும்
(ஹிந்துக்கள், கிறிஸ்தவர், இஸ்லாமியர்) பொதுவான இறைவணக்கப் பாடல்.

நிகழ்ச்சி (அ) சினிமா முடிவில் நாட்டுப்பண் - ஜனகணமன

நா. கணேசன்

மாயோன்

unread,
Oct 21, 2016, 1:50:23 PM10/21/16
to mintamil
//ஆனால், திராவிட எனுஞ் சொல் நீண்ட பாரம்பரியம் உடையது. திராவிடம் = தமிழ், தமிழ் தொடர்புடைய பஞ்ச திராவிட நாடுகளின் மொழிகள் மற்றும் நிலம் எனக்
குறிக்கும் ஸம்ஸ்கிருதச் சொல். ஆயிரக்கணக்கான சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழி புழங்குவது போலே, த்ராவிடம் என்ற சொல்லும் தமிழர் பாவிக்கின்றனர்.//

ஐயா இதற்கு சான்று.
பிருகத் சம்கிதா திராவிட என்பது அன்றைய தமிழகத்திற்கு வெளியே இருந்த நிலம் என சொல்கிறது. இதற்கு பிறகு வரும் சமசுகிருத இலக்கியங்களும் தமிழகத்தைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தவில்லை. 

//தமிழர்கள் எனறு,'இவர் தமிழரல்லர், அவர் தமிழரல்லர்,' என்று பிரித்தாளும் சூழ்ச்சிசெய்வோர்க்கு ஆலவட்டம் சுற்றத்துவங்கி அவர்கள்பின் சென்று, பலி ஆட்டைத் [fallguy] தேடி, தம் முன்னேற்றத்தை நினையாது, பிரிப்போருக்கு வால்பிடிக்கத் துவங்கினார்களோ, அவர்கள் காட்டும் இலக்கு தமிழர்கள் என்றறியாது தாக்கத்துவங்கினார்களோ, அன்றே இந்நிலை ஏற்பட்டுவிட்டது.

தமிழைப்பேசும் அனைவரிடமும் தாம் தமிழர், உடன்பிறப்புகள் என்ற நினைவு, நிலைப்பாடு  என்று உறுதிபெறுகின்றதோ, அன்றுதான் நீங்கள் விரும்பும் மாற்றம் தமிழரிடையே ஏற்படும்.//

ஐயா, உலகில் பூர்வக்குடி மக்களை அயலார் அடக்கி ஆளும் பொழுது இந்த பிரிவினை வருவது இயல்பு. இன்றும், தெலுங்கானாவில் ஆந்திரத் தெலுங்கர் அடக்கி ஆளுவதால் தனி மாநிலம் கேட்டு போராடவில்லையா? ஒரு மொழி பேசினாலும் ஆதிக்கம் என வரும் பொழுது அதை எதிர்ப்பது தவறு என உலகில் வேறெங்கும் சொல்வதில்லை,தமிழ்நாட்டை விட்டால்.

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி - எனில் 
     அன்னியர் வந்து புகல் என்ன நீதி?

என பாரதியார் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 21, 2016, 2:04:45 PM10/21/16
to mintamil, vallamai
நண்பர் பாண்டியராஜா,

பிறந்த இடம்: என்னும் இடத்தில் [உதாரணம்] மதுரை, தமிழ்நாடு என்று எழுதுவீர்களா ? மதுரை, திராவிட நாடு என்று எழுதுவீர்களா ?

சி. ஜெயபாரதன்.



To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 21, 2016, 3:18:47 PM10/21/16
to mintamil, vallamai
இறை வணக்கம், நாட்டு வாழ்த்து, மொழி வாழ்த்து [தமிகத்தில் மட்டுமே] என்று முத்தலைப்பு வணக்க /வாழ்த்துக்கள் உள்ளன.

தமிழ் நாட்டில் மட்டும் தனிக்குணப் பண்பாக தமிழ்மொழி வாழ்த்துள்ளது.  விந்தையாக அது நாட்டு வாழ்த்தாகக் கருதப்படுகிறது. மற்ற இந்திய மாநிலங்களிலோ, உலக நாடுகளிளோ தன்னாட்டுக்கென மொழி வாழ்த்து இருப்பதாகத் தெரியவில்லை.  

தமிழணங்கு என்று ஓர் உருவமில்லை.  கோயில் சிலையும் இல்லை.  தமிழ்த்தாய் என்பது தமிழ் நாட்டைக் குறிப்பதில்லை. தமிழ் நாடு என்பது தமிழ் மொழியில்லை.  ஆகவே தமிழ்மொழி வாழ்த்தைத் தமிழ்நாட்டு வாழ்த்தாக எடுத்துக் கொள்வது எனக்கு உடன்பாடில்லை. 

தமிழ்மொழி வாழ்த்து வேறு; தமிழ்நாட்டு வாழ்த்து வேறு. தமிழருக்கு / தமிழ் மாணவருக்கு நாட்டுப் பற்று உண்டாக நாட்டு வாழ்த்து தேவை. தமிழ்மொழிப் பற்று தமிழ்நாட்டுப் பற்றை உண்டாக்காது.   

சி. ஜெயபாரதன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 21, 2016, 3:25:29 PM10/21/16
to மின்தமிழ்

திரு. மாயோன்,

ஓர் வேண்டுகோள்....

உங்கள் பதிவைப் படிக்கும்பொழுது,    முன்பு  இவ்வாறு கருத்து சொன்னவர் யார் என மறந்துவிடுகிறது...
அதனால் மேற்கோள் கொடுக்கும் பொழுது "@"  குறியுடன் சொன்னவர் பெயர் இணைத்து பதிவிட்டால் உதவியாக இருக்கும்....

கீழுள்ளது போல...

@ நா. கணேசன்
///ஆனால், திராவிட எனுஞ் சொல் நீண்ட பாரம்பரியம் உடையது. திராவிடம் = தமிழ், தமிழ் தொடர்புடைய பஞ்ச திராவிட நாடுகளின் மொழிகள் மற்றும் நிலம் எனக்
குறிக்கும் ஸம்ஸ்கிருதச் சொல். ஆயிரக்கணக்கான சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழி புழங்குவது போலே, த்ராவிடம் என்ற சொல்லும் தமிழர் பாவிக்கின்றனர்.///

ஐயா இதற்கு சான்று.
பிருகத் சம்கிதா திராவிட என்பது அன்றைய தமிழகத்திற்கு வெளியே இருந்த நிலம் என சொல்கிறது. இதற்கு பிறகு வரும் சமசுகிருத இலக்கியங்களும் தமிழகத்தைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தவில்லை. 

----------------

@ ஒரு அரிசோனன் 
///தமிழர்கள் எனறு,'இவர் தமிழரல்லர், அவர் தமிழரல்லர்,' என்று பிரித்தாளும் சூழ்ச்சிசெய்வோர்க்கு ஆலவட்டம் சுற்றத்துவங்கி அவர்கள்பின் சென்று, பலி ஆட்டைத் [fallguy] தேடி, தம் முன்னேற்றத்தை நினையாது, பிரிப்போருக்கு வால்பிடிக்கத் துவங்கினார்களோ, அவர்கள் காட்டும் இலக்கு தமிழர்கள் என்றறியாது தாக்கத்துவங்கினார்களோ, அன்றே இந்நிலை ஏற்பட்டுவிட்டது.

தமிழைப்பேசும் அனைவரிடமும் தாம் தமிழர், உடன்பிறப்புகள் என்ற நினைவு, நிலைப்பாடு  என்று உறுதிபெறுகின்றதோ, அன்றுதான் நீங்கள் விரும்பும் மாற்றம் தமிழரிடையே ஏற்படும்.////

ஐயா, உலகில் பூர்வக்குடி மக்களை அயலார் அடக்கி ஆளும் பொழுது இந்த பிரிவினை வருவது இயல்பு. இன்றும், தெலுங்கானாவில் ஆந்திரத் தெலுங்கர் அடக்கி ஆளுவதால் தனி மாநிலம் கேட்டு போராடவில்லையா? ஒரு மொழி பேசினாலும் ஆதிக்கம் என வரும் பொழுது அதை எதிர்ப்பது தவறு என உலகில் வேறெங்கும் சொல்வதில்லை,தமிழ்நாட்டை விட்டால்.

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி - எனில் 
     அன்னியர் வந்து புகல் என்ன நீதி?

என பாரதியார் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.

---------------------


நன்றி.

...... தேமொழி 
 

Oru Arizonan

unread,
Oct 21, 2016, 4:51:58 PM10/21/16
to mintamil


2016-10-21 10:50 GMT-07:00 மாயோன் <ts.m...@gmail.com>:
//ஐயா, உலகில் பூர்வக்குடி மக்களை அயலார் அடக்கி ஆளும் பொழுது இந்த பிரிவினை வருவது இயல்பு. இன்றும், தெலுங்கானாவில் ஆந்திரத் தெலுங்கர் அடக்கி ஆளுவதால் தனி மாநிலம் கேட்டு போராடவில்லையா? ஒரு மொழி பேசினாலும் ஆதிக்கம் என வரும் பொழுது அதை எதிர்ப்பது தவறு என உலகில் வேறெங்கும் சொல்வதில்லை,தமிழ்நாட்டை விட்டால்.

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி - எனில் 
     அன்னியர் வந்து புகல் என்ன நீதி?

என பாரதியார் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.//

அன்புள்ள மாயோன் அவர்களே,

தங்களின் எதிர்மொழியிலிருந்து, நான் என் கருத்தைத் தங்களுக்குச் சரிவர விளக்கவில்லை என்றே கருதுகிறேன்.  முதலில் தாங்கள் பாரதியாரின் வரிகளை எனக்குத் தந்திருப்பது பொருத்தமான பதிலல்ல என்றும் கருதுகிறேன்.

பாரதியார் என்ன பறைந்து சென்றார் என்று எண்ணிப்பார்ப்போமாக:

ஆயிரம் உண்டிங்கு ஜாதி எண்பத்தின்மூலம் இந்தியமக்களுக்குள் ஆயிரம் பிரிவுகள் உண்டு, அவர்கலுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டு, அண்ணண்-தம்பி சண்டைபோல அவர்களுக்குள் சண்டை/உட்பூசல் வருவதுண்டு, ஆயினும் அவர்கள் ஓரினம் என்றே விளக்குகிறார்.

இப்படி நாங்கள் கருத்துவேறுபாறு கொண்டிருந்தாலும், எங்களுக்குள் உட்பூசல் இருந்தாலும், அவை நிரந்தரமானதல்ல,  தாற்காலிகமானதே, அவை குளத்தில் கல்விழுவதனால் ஏற்படும் அலை போல மெலிந்து மறைந்துவிடும்;  ஆனால், அதை நீ ஆப்புவைத்துப் பிளக்கிறாயே, ஆங்கிலேயா? நீ ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வணிகம்செய்து பிழைக்கவந்த பரங்கி.  நீ எங்கள் மாறுபாடுகளை [பலநிறப்பூக்களான எங்களை] நிரந்தரமாக்கி, உனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, எங்களை ஓரினம், ஒருநாட்டார் என்ற நினைவு வராதபடி செய்கிறாயே என்றுதான் பொருமினார்.

அதே பொருமலைத்தான் நான் செய்திருக்கிறேன்.

அவ்வளவே!

ஆந்திராவுக்கு, தெலுங்கானாவும் பிறந்ததை மேற்கோள்காட்டி என்ன சொல்லவருகிறீர்கள்?  தமிழர்களும் அப்படிப்பிரிந்துசெல்லவேண்டும் என்கிறீர்களா?  அப்படியானால் தமிழ்நாட்டை எத்தனை கூராக்கவேண்டும் எனவிரும்பிக்கிறீர்கள்?  தமிழ் உணர்வை எத்தனை கூராக்க விருபிக்கிறீர்கள் என்றும்  எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்வேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 22, 2016, 5:16:04 AM10/22/16
to mintamil

வணக்கம் ஐயா.
தங்களுடைய கருத்துகளும் அதனடிப்படையிலான வாதங்களும் ஆழ்ந்த பொருளுடையனவாய் உள்ளன.  தொடர்ந்து படித்து வருகிறேன்.  வாழ்த்துகள்  ஐயா.

On 22-Oct-2016 12:48 am, "சி. ஜெயபாரதன்" <jayaba...@gmail.com> wrote:
>
> இறை வணக்கம், நாட்டு வாழ்த்து, மொழி வாழ்த்து [தமிகத்தில் மட்டுமே] என்று முத்தலைப்பு வணக்க /வாழ்த்துக்கள் உள்ளன.
>
> தமிழ் நாட்டில் மட்டும் தனிக்குணப் பண்பாக தமிழ்மொழி வாழ்த்துள்ளது.  விந்தையாக அது நாட்டு வாழ்த்தாகக் கருதப்படுகிறது. மற்ற இந்திய மாநிலங்களிலோ, உலக நாடுகளிளோ தன்னாட்டுக்கென மொழி வாழ்த்து இருப்பதாகத் தெரியவில்லை.  
>
> தமிழணங்கு என்று ஓர் உருவமில்லை.  கோயில் சிலையும் இல்லை.  தமிழ்த்தாய் என்பது தமிழ் நாட்டைக் குறிப்பதில்லை. தமிழ் நாடு என்பது தமிழ் மொழியில்லை.  ஆகவே தமிழ்மொழி வாழ்த்தைத் தமிழ்நாட்டு வாழ்த்தாக எடுத்துக் கொள்வது எனக்கு உடன்பாடில்லை. 

>
> தமிழ்மொழி வாழ்த்து வேறு; தமிழ்நாட்டு வாழ்த்து வேறு. தமிழருக்கு / தமிழ் மாணவருக்கு நாட்டுப் பற்று உண்டாக நாட்டு வாழ்த்து தேவை. தமிழ்மொழிப் பற்று தமிழ்நாட்டுப் பற்றை உண்டாக்காது.   
>
> சி. ஜெயபாரதன்.

தகலுக்காக :

காரைக்குடியில் தமிழ்த்தாய் உருவம் கோயிலில் வைத்து வழிபாடு செய்யப்பெற்று வருகிறது.
முன்பு இங்கிருந்த தமிழ்த்தாய் சிற்பத்தை எடுத்துச் சென்று மதுரை தமுக்க மைதான வாயிலில் நிறுவியுள்ளனர். ஆனால் முறையான வழிபாடு இல்லை.

அன்பன்
கி.காளைராசன்.

nkantan r

unread,
Oct 22, 2016, 6:50:35 AM10/22/16
to மின்தமிழ்
முறையான என்றால் ?  ஆகம (!)  முறைப்படி? அல்லது பகுத்தறிவு வழிப்படி? அல்லது தினமும்  குறிப்பிட்ட நேரத்தில் ?

regards
rnkantan

சி. ஜெயபாரதன்

unread,
Oct 22, 2016, 10:01:54 AM10/22/16
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan
நன்றி, நண்பர் காளைராசன்,

இதுவரை தமிழ்த்தாயை நான் உருவ வழிபாட்டில் பார்க்க வில்லை; கேட்கவில்லை. 

தமிழ் நாட்டுக்கு வாழ்த்துப் பாட இந்தியத் தளப்படம் உள்ளது. 

தமிழ் மொழி தமிழரை எல்லாம் ஒன்றுபடுத்த வில்லை.  தமிழ் நாடு என்பது ஒற்றுமைப் படுத்தலாம்.

சி. ஜெயபாரதன்.

--

nkantan r

unread,
Oct 22, 2016, 10:28:18 AM10/22/16
to மின்தமிழ்
hi all!

another itching and unfathomable issue is why puducherry is still not integrated into tamil nadu? with the official language act of pondicherry, tamil has become the official language of administration and rule (with malayalam and telugu in mahe and yanam); the sensible thing (as states were originally demarcated on language basis, (not looking at telengana and andhra) puducherry should be part of tamilnadu ceding yenam and mahe)

regards
rnkantan


On Saturday, October 22, 2016 at 7:31:54 PM UTC+5:30, jayabarathans wrote:
நன்றி, நண்பர் காளைராசன்,

இதுவரை தமிழ்த்தாயை நான் உருவ வழிபாட்டில் பார்க்க வில்லை; கேட்கவில்லை. 

தமிழ் நாட்டுக்கு வாழ்த்துப் பாட இந்தியத் தளப்படம் உள்ளது. 

தமிழ் மொழி தமிழரை எல்லாம் ஒன்றுபடுத்த வில்லை.  தமிழ் நாடு என்பது ஒற்றுமைப் படுத்தலாம்.

சி. ஜெயபாரதன்.
2016-10-22 5:15 GMT-04:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம் ஐயா.
தங்களுடைய கருத்துகளும் அதனடிப்படையிலான வாதங்களும் ஆழ்ந்த பொருளுடையனவாய் உள்ளன.  தொடர்ந்து படித்து வருகிறேன்.  வாழ்த்துகள்  ஐயா.

On 22-Oct-2016 12:48 am, "சி. ஜெயபாரதன்" <jayaba...@gmail.com> wrote:
>
> இறை வணக்கம், நாட்டு வாழ்த்து, மொழி வாழ்த்து [தமிகத்தில் மட்டுமே] என்று முத்தலைப்பு வணக்க /வாழ்த்துக்கள் உள்ளன.
>
> தமிழ் நாட்டில் மட்டும் தனிக்குணப் பண்பாக தமிழ்மொழி வாழ்த்துள்ளது.  விந்தையாக அது நாட்டு வாழ்த்தாகக் கருதப்படுகிறது. மற்ற இந்திய மாநிலங்களிலோ, உலக நாடுகளிளோ தன்னாட்டுக்கென மொழி வாழ்த்து இருப்பதாகத் தெரியவில்லை.  
>
> தமிழணங்கு என்று ஓர் உருவமில்லை.  கோயில் சிலையும் இல்லை.  தமிழ்த்தாய் என்பது தமிழ் நாட்டைக் குறிப்பதில்லை. தமிழ் நாடு என்பது தமிழ் மொழியில்லை.  ஆகவே தமிழ்மொழி வாழ்த்தைத் தமிழ்நாட்டு வாழ்த்தாக எடுத்துக் கொள்வது எனக்கு உடன்பாடில்லை. 

>
> தமிழ்மொழி வாழ்த்து வேறு; தமிழ்நாட்டு வாழ்த்து வேறு. தமிழருக்கு / தமிழ் மாணவருக்கு நாட்டுப் பற்று உண்டாக நாட்டு வாழ்த்து தேவை. தமிழ்மொழிப் பற்று தமிழ்நாட்டுப் பற்றை உண்டாக்காது.   
>
> சி. ஜெயபாரதன்.

தகலுக்காக :

காரைக்குடியில் தமிழ்த்தாய் உருவம் கோயிலில் வைத்து வழிபாடு செய்யப்பெற்று வருகிறது.
முன்பு இங்கிருந்த தமிழ்த்தாய் சிற்பத்தை எடுத்துச் சென்று மதுரை தமுக்க மைதான வாயிலில் நிறுவியுள்ளனர். ஆனால் முறையான வழிபாடு இல்லை.

அன்பன்
கி.காளைராசன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 22, 2016, 7:48:21 PM10/22/16
to மின்தமிழ், vallamai
இவ்விழையில் ரசித்த மடல்களிலொன்று. கூராக்க - கூறாக்க என எழுதலாம்.

கூராக்கல் - ஆயுதத்தைக் கூராக்கல் என ஆகும். அமைதிப் பூங்கா என அனைத்து சமயத்தினர், மொழியினருக்கு இந்தியாவில் தமிழ்நாடு இருக்கிறது.
ஆயுதக் கூர்மையை விட மதிக் கூர்மை தமிழர்க்கு தேவை.

நா. கணேசன்

Oru Arizonan

unread,
Oct 23, 2016, 12:40:29 AM10/23/16
to mintamil, vallamai
2016-10-22 16:48 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Friday, October 21, 2016 at 1:51:58 PM UTC-7, oruarizonan wrote:
2016-10-21 10:50 GMT-07:00 மாயோன் <ts.m...@gmail.com>:
//ஐயா, உலகில் பூர்வக்குடி மக்களை அயலார் அடக்கி ஆளும் பொழுது இந்த பிரிவினை வருவது இயல்பு. இன்றும், தெலுங்கானாவில் ஆந்திரத் தெலுங்கர் அடக்கி ஆளுவதால் தனி மாநிலம் கேட்டு போராடவில்லையா? ஒரு மொழி பேசினாலும் ஆதிக்கம் என வரும் பொழுது அதை எதிர்ப்பது தவறு என உலகில் வேறெங்கும் சொல்வதில்லை,தமிழ்நாட்டை விட்டால்.

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி - எனில் 
     அன்னியர் வந்து புகல் என்ன நீதி?

என பாரதியார் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.//

அன்புள்ள மாயோன் அவர்களே,

தங்களின் எதிர்மொழியிலிருந்து, நான் என் கருத்தைத் தங்களுக்குச் சரிவர விளக்கவில்லை என்றே கருதுகிறேன்.  முதலில் தாங்கள் பாரதியாரின் வரிகளை எனக்குத் தந்திருப்பது பொருத்தமான பதிலல்ல என்றும் கருதுகிறேன்.

பாரதியார் என்ன பறைந்து சென்றார் என்று எண்ணிப்பார்ப்போமாக:

ஆயிரம் உண்டிங்கு ஜாதி எண்பத்தின்மூலம் இந்தியமக்களுக்குள் ஆயிரம் பிரிவுகள் உண்டு, அவர்கலுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டு, அண்ணண்-தம்பி சண்டைபோல அவர்களுக்குள் சண்டை/உட்பூசல் வருவதுண்டு, ஆயினும் அவர்கள் ஓரினம் என்றே விளக்குகிறார்.

இப்படி நாங்கள் கருத்துவேறுபாறு கொண்டிருந்தாலும், எங்களுக்குள் உட்பூசல் இருந்தாலும், அவை நிரந்தரமானதல்ல,  தாற்காலிகமானதே, அவை குளத்தில் கல்விழுவதனால் ஏற்படும் அலை போல மெலிந்து மறைந்துவிடும்;  ஆனால், அதை நீ ஆப்புவைத்துப் பிளக்கிறாயே, ஆங்கிலேயா? நீ ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வணிகம்செய்து பிழைக்கவந்த பரங்கி.  நீ எங்கள் மாறுபாடுகளை [பலநிறப்பூக்களான எங்களை] நிரந்தரமாக்கி, உனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, எங்களை ஓரினம், ஒருநாட்டார் என்ற நினைவு வராதபடி செய்கிறாயே என்றுதான் பொருமினார்.

அதே பொருமலைத்தான் நான் செய்திருக்கிறேன்.

அவ்வளவே!

ஆந்திராவுக்கு, தெலுங்கானாவும் பிறந்ததை மேற்கோள்காட்டி என்ன சொல்லவருகிறீர்கள்?  தமிழர்களும் அப்படிப்பிரிந்துசெல்லவேண்டும் என்கிறீர்களா?  அப்படியானால் தமிழ்நாட்டை எத்தனை கூராக்கவேண்டும் எனவிரும்பிக்கிறீர்கள்?  தமிழ் உணர்வை எத்தனை கூராக்க விருபிக்கிறீர்கள் என்றும்  எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்வேன்.
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

//இவ்விழையில் ரசித்த மடல்களிலொன்று. கூராக்க - கூறாக்க என எழுதலாம்.

கூராக்கல் - ஆயுதத்தைக் கூராக்கல் என ஆகும். அமைதிப் பூங்கா என அனைத்து சமயத்தினர், மொழியினருக்கு இந்தியாவில் தமிழ்நாடு இருக்கிறது.
ஆயுதக் கூர்மையை விட மதிக் கூர்மை தமிழர்க்கு தேவை.

நா. கணேசன்//

இரசிப்புக்கு நன்றி, கணேசன் அவர்களே.

'கூராக்க' என்று நான் எழுதியது தட்டச்சுப்பிழையே!  'கூறாக்க' என்றுதான் எழுதியிருக்கவேண்டும்.  எடுத்துக்காட்டியமைக்கு நன்றி.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Oct 23, 2016, 2:45:42 PM10/23/16
to vallamai, mintamil


2016-10-23 5:45 GMT-07:00 மாயோன் <ts.m...@gmail.com>:
//சீமாந்திரா மக்கள் தெலுங்கானா மக்கள் மேல் ஆதிக்கம் செலுத்தியதை தான் நான் சொன்னேன்; //இன்றும், தெலுங்கானாவில் ஆந்திரத் தெலுங்கர் அடக்கி ஆளுவதால் தனி மாநிலம் கேட்டு போராடவில்லையா? ஒரு மொழி பேசினாலும் ஆதிக்கம் என வரும் பொழுது அதை எதிர்ப்பது தவறு என உலகில் வேறெங்கும் சொல்வதில்லை,தமிழ்நாட்டை விட்டால்.//
இதற்கும் தமிழைக் கூறு போடுவதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையே.//

நான் நன்கு புரிந்துகொண்டுதான் கேட்கிறேன்.

  • தாங்கள் கொடுத்த எடுத்துக்காட்டில் ஒன்றிந்த ஆந்திர மாநிலத்தின் கிழக்குப்பகுதியர் [சீமாந்திரா], மேற்குப்பகுதியரை [தெலுங்கானா]ஆதிக்கம் செலுத்தினார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
  • அதே எடுத்துக்காட்டின்படி, தமிழ்நாட்டின் வடவெல்லையில் இருக்கும் சென்னையையும் அதை அடுத்த பகுதியையும் மேம்படுத்தவேண்டி, தென்பகுதிகளில் நலம் [சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, குமரி  போன்ற மாநிலங்களின் நலம்] புறக்கணிப்படுகிறது என்பது கண்கூடு.  அப்படியானால், தென் தமிழ்நாட்டை வடதமிழ்நாடு ஆதிக்கம் செலுத்துகிறது.
  • எனவே, தமிழ்நாடு இருகூறாகப் பிரிக்கப்படவேண்டும்.
  • உங்கள் பதிவோ, விளக்கமோ அப்படியில்லையே!
  • பாரதியின் கவிதையை எடுத்துக்காட்டாகக் கொடுக்காதீர்கள்.
  • தாங்கள் எழுதியதற்குச் சரியான விளக்கம் கொடுங்கள்.
எஎனவே, தங்கள் பாரதியில் பாடலும் சீமாந்திரா/தெலுங்கானா எடுத்துக்காட்டும் தங்கள் கூற்றுக்குப் பொருந்தாத ஒன்றே!

என்னைப்பொறுத்தவரையில், தாங்கள் சாதி அடிப்படையில் தமிழரைப்பிறித்துகூறாக்க முனைகிறீர்கள் என்றே கருதுகிறேன் -- மொழி அடிப்படையில் அல்ல.  உள்மனத்தைத் தொட்டுப்பார்த்து, அங்கிருக்கும் இரும்புத்திரையைப் பொடிபொடியாக்கிவிட்டு எனக்கு மறுமொழி இடுங்கள்.   

தமிழரில் யார் ஆதிக்கவாதி, யார் அடக்கப்பட்டோர்?  இருபகுதியாரும் தமிழரானால், தமிழருக்குள்தானே  குறைபாடு உள்ளது?   அதைத்தானே நானும் தமிழர் தம்மைக் கூறுபோடுவதை எதிர்க்கவேண்டும் என்றெழுதினேன்?  அதற்குத்தானே  பாரதியின், "ஆயிரம் உண்டிங்கு சாதி; இதில் அந்நியர் [தமிழரல்லாதோர்] வந்து புகலென்ன நீதி' என்று பொருள்படுத்திக்கொள்ளவேண்டும்.  தமிழகத்தைக் கூறுபோடவேண்டும் என்று எப்படிப் பொருள்கோண்டீர்கள்? 

மேலும், உங்கள்பக்கம் பேசும் எனக்கு  ஏன் எதிர்மொழி வைத்தீர்கள், மாயோன் அவர்களே?
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Oct 24, 2016, 3:52:12 PM10/24/16
to vallamai, mintamil


2016-10-24 0:41 GMT-07:00 மாயோன் <ts.m...@gmail.com>:
//பாரதியாரின் வரிகளை நான் ஆந்திர-தெலுங்கானா உவமைக்கு கொடுக்கவே இல்லை. அது இந்தியர்-அயலார் என்பதற்கு உவமையாக தமிழர்-அயலார் என கொடுத்தேன். பாரதியின் வரிகளை நீங்கள் தமிழர் அயலார் என பார்க்காமல், தமிழர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை இழுப்பதேன்?//

ஒன்றை உவமிக்கும்போது அந்த உவமை சரியாக இருக்கவேண்டும்.  பாரதி, இந்தியாவுக்குள் சாதிகள் ஆயிரமிருக்கலாம், அதில் அந்நியர் [வெள்ளைப்பறங்கி] புகக்கூடாது என்று இயம்பினான்.

அதே உவமையைத் தமிழருக்குச் சொல்லவேண்டுமென்றால் அதுபோலவே, 'தமிழருக்குள்ளும்  ஆயிரம் சாதி/சமயப் பிரிவுகள் உள்ளன; அதில் மற்ற மொழிமொழிபேசுவர் புகக்கூடாது என்று நீங்கள் சொல்லியிருந்தால் அது சரியே, ஆமென்றுதான் நான்  தலையசைத்திருப்பேன்.
[
ஆனால் நீங்கள் அவ்வாறு கூறாமல், ஆதிக்கம் , ஆந்திரா, தெலுங்கானா என்று தமிழநாட்டையே கூறுபோடமுயன்றீர்கள்.  தமிழ்நாட்டின் ஒருமைப்பாட்டைச்  சிதைக்கமுற்பட்டீர்கள்.  அதற்கே எனது எதிர்மொழி வைக்கப்பட்டது.

இன்னும் ஒன்று.  தமிழர் எந்நாட்டிலும் இருக்கலாம், எவ்வினமாக [race], எச்சாதியாக, எச்சமயமாக, ஏன் சமயமே இல்லாமல்கூட இருக்கலாம்.  தமிழர் என்பதற்கு அடையாளம் தமிழைத் தாய்மொழியாகக்கொண்டோ, தமிழின்பால் காதல்கொண்டோ தமிழைப் போற்றுவதுதான்.  அவரே தமிழர்.  அப்படிப்பார்த்தால் தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட நான் ஒரு தமிழன், அரிசோனா மாநிலத்தில் வாழ்வதால் நான் ஒரு அரிசோனன் ;  அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் நான் ஒரு அமெரிக்கன்.  இங்கு இருக்கும் அமெரிக்கர்கள் அனைவருக்கு உரிமை எனக்கும் இருக்கிறது.  என்னை எவரும் அமெரிக்கன் அல்ல என்று கூறவியலாது.  உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக மொழிகள் பேசப்படுகின்றன.  ஆங்கிலம் தாய்மொழி அல்ல என்பதால் என்னை யாரும் அமெரிக்கன் அல்ல என்று சொல்லிவிடமாட்டார்கள்.   குற்றமாகும்.

தமிழ்நாட்டில் வாசிக்கவில்லை என்பதால், நான் உள்பட வெளிநாடுகளில் இருக்கும் இலட்சக்கணக்கான  தமிழரைத்  [சான்றாக:   மின்தமிழர்கள்,உயர்திருவாளர்கள் சுபா, நா. கண்ணன், தேமொழி, ஜெயபாரதன், செல்வன்] தமிழரல்லர் என்று நீங்கள் சொல்லவியலாது.  அப்படிப்பட்ட நினைப்பை உடனே விட்டொழியுங்கள்.

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தமிழர், தமிழ்மொழி  நலத்தில், முன்னேற்றத்தில் அக்கறை உண்டு. 

நீங்கள் சொல்வது தமிழ்நாடு என்ற ஒரு நிலப்பரப்பை என்றால், அந்நிலப்பரப்பில் தொடர்ந்து வசித்துவருபவர், அவர்  எம்மொழியைப்பேசிவந்தாலும் அவர் தமிழ்நாட்டவரே!  அதில் இம்மியும் ஐயமில்லை.  

தமிழைத் தமிழர்கள் கற்பதில்லை என்பது உங்களுக்குமட்டுமல்ல, எனக்கும் மாபெரும் வருத்தத்தைத் தருகிறது.  அவர்கள் திரைப்படத்தைப் பார்த்து அதையே வாழ்க்கை என்று நீங்கள் கவலையுறுவது எனக்கும் கவலையளிக்கிறது.

அதைத்தான் நானும் எழுதினேன்.  தமிழருக்குள் பிரிவினை [சாதி/சமய/ஏழை/பணக்காரன்/ஆணின்/பெண்/திருநங்கை] என்று எழுதினேன். அதைப் புரிந்துகொள்ளாமல் எனக்கு எதிர்மொழி தொடர்ந்து ஏன் வைத்துவருகிறீர்கள் என்று நானறியேன்.
 

//என்னைப்பொறுத்தவரையில், தாங்கள் சாதி அடிப்படையில் தமிழரைப்பிறித்துகூறாக்க முனைகிறீர்கள் என்றே கருதுகிறேன் -- மொழி அடிப்படையில் அல்ல.  உள்மனத்தைத் தொட்டுப்பார்த்து, அங்கிருக்கும் இரும்புத்திரையைப் பொடிபொடியாக்கிவிட்டு எனக்கு மறுமொழி இடுங்கள்.   //
சாதி என்றால் உயிர்களின் பாகுபாடு என்று தான் நான் சொல்கிறேன்;தமிழர்கள் எல்லாம் ஒரே சாதி தானே-நான் ஏன் பிரிக்கணும்?தமிழர்-தமிழரல்லாதோர் என்று தான் நான் பிரிக்கிறேன். உங்களுக்கு இது பிடிக்கவில்லை என்பதால், தமிழரை நான் பிரிக்கிறேன் என்றெல்லாம் கதை கட்டி விடாதீர்கள் 😵//

 நான் விரிவாக விளக்கியிருப்பது தங்களுக்குப்புரியும் என்றே நினைக்கிறேன்.  முதலில் தமிழர் அனைவரையும் -- சாதி/சமய/இன/நாடு  வேறுபாடின்றி நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர் உரிமைபற்றிப் பேசலாம். 
தமிழ்மொழி பேசும் தமிழர் வேறு, தமிழ்நாட்டார் வேறு, இதை இரண்டையும் குழைப்பிக்கொள்ளாதீர்கள்.  தமிழ்நாட்டாருக்கு தமிழ்நாட்டில் வசிக்கும் உங்களுக்குள்ள உரிமை அனைத்தும் உண்டு.  தமிழனாக இருந்தாலும், தமிழ்நாட்டாரான உங்களுக்குள்ள உரிமை அனைத்தும் எனக்கு இல்லை. இந்தியராக இருந்தாலும், தமிழ்நாட்டாருக்குள்ள சிலஉரிமைகள் வேறுமாநிலத்தாருக்கு [சட்டப்படி] இல்லை.  இதை உணருங்கள்.  

வேறு எதை நீங்கள் எழுதினாலும் அது தமிழருக்கும் நீங்கள் செய்ய முற்படும் பிரிவினையே!  

பணிவன்புடன்,

Oru Arizonan

unread,
Oct 31, 2016, 5:06:31 PM10/31/16
to vannan vannan, சி. ஜெயபாரதன், mintamil, vallamai, tamilmantram, vaiyavan mspm, Asan Buhari, Anne Josephine, Thamil Selvi
திராவிடம் திரிந்து தமிழ் ஆகவில்லை.
தென்னாட்டாரையும், தமிழையும் 'மதராஸி' என்றும், வடவர் அழைப்பர்.  அவர்களுக்கு 'தமிழ்' என்றபெயரே தெரியாது.

அதுபோன்றே, வடவர்கள் [வடமொழி புழங்குவோர்] தமிழைத் 'திராவிட பாஷா' என்று அழைத்தார்கள்.தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் இவைகளை 'திராவிட வேதம்' என்று வடமொழி கூறும். அதுவே தென்னகத்தில் நிலைத்திருக்கக்கூடும்.

இன்றும், தமிழ்நாட்டு ஆகமக் கோவில்களில் கடவுளர்களின் பூசை நிறைவுபெறும்போது நான்கு வேதங்கள் [இருக்கு, யஜுர்,  சாம,அதர்வண] ஓதி முடிந்தபின்னர், 'திராவிடவேதம் அவதாரயே!' என்று சொல்லி தேவாரம், திருவாசகம் ஓதி நிறைவு செய்வார்கள்.  அதன்றி பூசை நிறைவடைந்ததாகக் கருதப்படாது.

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்திலும் அவ்வாறே நாள்தோறும் பூசை இறுதியில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தங்கள் ஓதப்படுகின்றன.
Reply all
Reply to author
Forward
0 new messages