கோவிலூர்ப் புராண வ்ரலாறு - மகா வித்துவான் பிள்ளையவர்கள்(மீன்வ்ன்)

151 views
Skip to first unread message

meenavan2

unread,
Oct 10, 2013, 11:19:12 PM10/10/13
to mint...@googlegroups.com


            அன்புள்ள சுபா அவர்களே
             நான் முன்னர்க் குறிப்பிட்டிருந்தது போல் கோவிலூர்ப் புராண வரலாற்றை எழுதத்
             தொடங்குகிறேன்.கோவிலூர் ஆதீனத்தின் மூன்றாவது  மடாதிபதியாகச் சீர் வளர் சீர்
             சிதம்பர ஞான தேசிகர் என்ற கருணாநிதி சுவாமிகள் அருளாட்சி செய்து வ்ந்த காலம்.
             பிள்ளையவர்களிட்ம் ப்யின்று வந்த தேவகோட்டையைச் சார்ந்த வ்ன்றொண்டர்;
             என்ற சின்னையச் செட்டியார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஐயரவர்களுடன்
             நகரத்தார் வாழ்ந்து  வந்த செட்டி நாட்டுக்குப் பிள்ளையவ்ர்கள் வந்தார்.பிள்ளையவர்
             களுக்கும் கடன் சுமை அதிகமாக இருந்தபடியால் செட்டி நாட்டிலுள்ள தலங்கள் சில
             வற்றிற்கு உரிய  தலபுராணங்களை எழழுதினால் செட்டி ம்க்கள் ந்லல முறையில்
             பெருமைப் ப்டுத்துவார்கள் என்றெண்ணிப் புராணங்களை எழுதச்  செய்தார்கள்.அவரும்
             சூரை மாநகர்ப் புராணம்,வீரவனப் புராணம்,க்ண்டதேவிப்  புராணம்,கோவிலூர்ப் புராண்ம்
             முத்லியவ்ற்றை  எழ்தியதில் ரூ.5000.கிடைத்தது.அவர் கடனும் தீர்ந்தது.கோவிலூர்ப்
             புராணத்தை எழுதியமைக்கு உரிய அன்பளிப்பாக ரூபாய் ஆயிரம் வ்ழ்ங்கப் பெறற்து.
             இதுதான் கோவிலூர்ப்  புராணம்  தோன்றிய வரலாறு.முத்லில் புராணத்தின் உரை நடை
             யினைத் தருகின்றேன்.
             காப்பியக் க்விஞர.நா.மீனவன்

கி.காளைராசன்

unread,
Oct 11, 2013, 4:02:40 AM10/11/13
to mintamil
வணக்கம் ஐயா.

             நான் முன்னர்க் குறிப்பிட்டிருந்தது போல் கோவிலூர்ப் புராண வரலாற்றை எழுதத்
             தொடங்குகிறேன்.
மிக்க மகிழ்ச்சி ஐயா,

தங்கள் வழியாகக் கோவிலூர்ப்புராணம் அறிய ஆவலாக உள்ளேன் ஐயா.
 
கோவிலூர் ஆதீனத்தின் மூன்றாவது  மடாதிபதியாகச் சீர் வளர் சீர்
             சிதம்பர ஞான தேசிகர் என்ற கருணாநிதி சுவாமிகள் அருளாட்சி செய்து வ்ந்த காலம்.
             பிள்ளையவர்களிட்ம் ப்யின்று வந்த தேவகோட்டையைச் சார்ந்த வ்ன்றொண்டர்;
             என்ற சின்னையச் செட்டியார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஐயரவர்களுடன்
             நகரத்தார் வாழ்ந்து  வந்த செட்டி நாட்டுக்குப் பிள்ளையவ்ர்கள் வந்தார்.பிள்ளையவர்
             களுக்கும் கடன் சுமை அதிகமாக இருந்தபடியால் செட்டி நாட்டிலுள்ள தலங்கள் சில
             வற்றிற்கு உரிய  தலபுராணங்களை எழழுதினால் செட்டி ம்க்கள் ந்லல முறையில்
             பெருமைப் ப்டுத்துவார்கள் என்றெண்ணிப் புராணங்களை எழுதச்  செய்தார்கள்.அவரும்
             சூரை மாநகர்ப் புராணம்,வீரவனப் புராணம்,க்ண்டதேவிப்  புராணம்,கோவிலூர்ப் புராண்ம்
             முத்லியவ்ற்றை  எழ்தியதில் ரூ.5000.கிடைத்தது.அவர் கடனும் தீர்ந்தது.கோவிலூர்ப்
             புராணத்தை எழுதியமைக்கு உரிய அன்பளிப்பாக ரூபாய் ஆயிரம் வ்ழ்ங்கப் பெறற்து.
             இதுதான் கோவிலூர்ப்  புராணம்  தோன்றிய வரலாறு.முத்லில் புராணத்தின் உரை நடை
             யினைத் தருகின்றேன்.
             காப்பியக் க்விஞர.நா.மீனவன்

தகவலுக்காக..
அம்மா வள்ளி அவர்களது வழிகாட்டுதலின்படி “சூரை மாநகர்ப் புராணம்“ தட்டச்சு செய்யப்பெற்று பிழைத்திருத்தம் செய்யவேண்டிய நிலையில் உள்ளது.  பிழைத்திருத்தம் பார்த்தபின்னர் இணையத்தில் பதிப்பு செய்ய வேண்டும்.

அன்பன்
கி.காளைராசன்

 
 

Subashini Tremmel

unread,
Oct 11, 2013, 4:38:12 AM10/11/13
to மின்தமிழ், Subashini Tremmel


2013/10/11 meenavan2 <meen...@gmail.com>
வணக்கம். உங்களின் இக்கடிதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. நான் பிள்ளையவர்கள் தொடர்பாகத் தேடிக் கொண்டிருக்கும் பல தகவல்களை உங்கள் உதவியால் பெற முடியும் என்ற நம்பிக்கையும் எழுகின்றது.
இந்த கோவிலூர்ப் புராணத்தின் உரை நடை, புராணம் இரண்டுமே மின்தமிழில் பதிப்பிக்கப்படுவதை ஒரு முக்கியப் பதிவாகக் காண்கின்றேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடருங்கள் ஐயா.

அன்புடன்
சுபா 
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Subashini Tremmel

unread,
Oct 11, 2013, 4:40:06 AM10/11/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/10/11 கி.காளைராசன் <kalair...@gmail.com>
முனைவர் காளைராசன்,
சந்தோஷமான தகவலைத் தந்திருக்கின்றீர்கள். உங்களுக்கும் டாக்டர் வள்ளிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

அன்புடன்
சுபா 
அன்பன்
கி.காளைராசன்

 
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

N. Kannan

unread,
Oct 12, 2013, 10:13:53 AM10/12/13
to மின்தமிழ்
2013/10/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>

முனைவர் காளைராசன்,
சந்தோஷமான தகவலைத் தந்திருக்கின்றீர்கள். உங்களுக்கும் டாக்டர் வள்ளிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 


தம்பி உடையார் படைக்கு அஞ்சார் ;-)

என்நன்றிகளும்.

நா.கண்ணன் 
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

meenavan2

unread,
Oct 19, 2013, 8:05:54 AM10/19/13
to mint...@googlegroups.com

சமிவனச் சேத்திர மான்மியம்.

இதுதான் கோவிலூர்ப் புராணத்தின் வடமொழிப் பெயர்.சமி  என்பதன் பொருள் வன்னி மரம் என்பர்.வன்னி மரங்கள் நிறைந்த
காடு  என்பதால் இதனை வன்னி வனம் என்றனர்.இன்றும் இங்கே வ்ன்னி மரங்களை அதிக அளவில் காணலாம்.பின் நாளில்
இங்கு வீரபாண்டியன் என்ற ம்ன்னன் ஈசனுக்கு ஒரு சிறு கோவில் கட்டினான்.அதனால் இது வீரபாண்டிய புரம் என்ற பெயராலும்
அழைக்கப்பட்டது.வயல்கள் அதிகமாக இருந்தமையால் கழனி வாசல் என்றும் அழைக்கப் பட்டது.பாண்டிய மன்னர்களுக்கு உரிய ஏழகப் படைகள் ஏழு பெருந்தெருக்களில் இங்கு இருந்தமையால் ஏழகப்பெருந்தெரு என்றும் வழங்கப் பட்டது.பின்னாளில்
கோவிலூர் ம்டாலயத்தையும் பெரிய கோவில் ஒன்றையும் ஆண்டவர் என்று அழைக்கப் பட்டு வந்த முதல் ம்டாதிபதியான
முத்துராமலிங்க தேசிகர் கட்டிய காரண்த்தால் இது கோவிலூர் என்ற பெயரைப் பெற்றது.

நகரத்தார்கள் ஆதியில் ஏழு கோவிற் பிரிவினராக இருந்தனர்.பின்னர் சில காரணங்களால் ஒன்பது பிரிவினர் ஆகினர்.இன்றைய
நாளில்  நகர்த்தார்.திருமண வீடுகளில் எழுதும் இசைகுடிமானம் என்ற பதிவுப் புத்தகத்தில் ஒன்பது கோவில்களுக்குள் அடங்கிய
மாற்றூர்க் கோவிலார்,வயிரவன் கோவிலார்,ஆகியோர் முறையே கேரள சிங்க வளநாடாகிய பிரம்பூர் நாட்டில் மாற்றூரான வீர
பாண்டியபுரத்தில் என்றும்,கேரள சிங்க வளநாடாகிய ஏழகப் பெருந்திருவான வீரபாண்டிய புரத்தில் என்றும் எழுதி வரும் வழக்கம் இன்றும் உள்ளது.கோவிலூரின் வட பகுதியில் ஏழகப் பெருந்திரு  விண்ணகரம் என்ற பெயரில் ஒரு பெருமாள் கோவில் சிதைந்த நிலையில் உள்ளது.ஏழைபெண் ஒருத்திக்காக நெல்லைக் காத்தமையால் நெல்காத்த நாயகி  என்று அழைக்
கப் பெற்றாள்.வட மொழியில் சாலிவாடீஸ்வரி என்ற பெயரால் குறித்தனர்.பின்னாளில் ம்க்கள் திருநெல்லை நாயகி  என்ற.
பெயரால் அழைக்கத் தொடங்கினர்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 19, 2013, 8:58:47 AM10/19/13
to mintamil
பல விவரங்கள் அறிந்துகொண்டேன்.
நன்றி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/10/19 meenavan2 <meen...@gmail.com>

--

meenavan2

unread,
Oct 19, 2013, 11:12:16 PM10/19/13
to mint...@googlegroups.com

கோவிலூர்ப் புராணம் தொடர்ச்சி

இறைவன் திருநாமம் கொற்றவாளீசர் என்பதாகும்.வ்டமொழியில் ராஜகட்க பரமேஸ்வரர் என்றழைத்தனர்.இது கோவிலூரைப்
பற்றிய முன்னுரை.புராண வரலாற்றை  நாம் இனித் தொடரலாம்.தற்காலச் செய்திகளைப் பின்னர்க் காணலாம்.

புராணம் தோன்றக் காரணம்:-திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களை அறியாதார் த்மிழ்
நாட்டில் யாரும் இலர்.இந்தத் தலைமுறை எப்படியோ எனக்குத் தெரியாது.ஏடுகள் பலவற்றைத் தேடி எடுத்துச் சங்க நூல்களை
யும்,வேறு பல தமிழ் நூல்களையும் நமக்களித்த தமிழ்த் தாத்தா உ.வே.சா.அவர்கள் என் சரித்திரம் என்ற நூல் வழியாகவும்,
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம் என்ற நூல் வழியாகவும் அவர் வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.அதன்
மூலம் ஐயரவர்கள் பிள்ளையவர்களுடன் செட்டி நாட்டுப் பயணம் மேற்கொண்ட செய்தி தெரிய வ்ருகின்றது.

செட்டி நாட்டில் உள்ள தேவகோட்டை என்னும் நகரைச் சார்ந்த வன்றொண்டர் எனற சின்னைய செட்டியார், பிள்ளை அவர்க
ளிடம் மாணாக்கராய் இருந்தபோது செட்டி நாட்டுப் பகுதிக்கு வ்ருமாறு அழைத்தார்.அதனை ஏற்றுப் பிள்ளையவரகளும் செட்டி
நாட்டுக்குப் பயணம் ஆனார்கள்.அவ்வாறு அவர் வந்த செய்தி அறிந்த நகரத்தார் பெருமக்கள் அன்புடன் வரவேற்றனர்.(இங்கே
குறிப்பிட்டுள்ள சின்னைய செட்டியார் அவர்களிடம் பண்டிதமணி கதிரேசச் செட்டியார்,சித்தாந்தச் செல்வர் காரைக்குடி இராம.
சொக்கலிங்க ஐயா,என்னுடைய ஐயா புலவர் கூத்தலூர் இராமநாதச் செட்டியார் ஆகியோர் தமிழ் பயின்றனர்.)அப்பொழுதுதான்
நகரத்தார் பெருமக்களின் வேண்டுகோட்படி சூரை மாநகர்ப் புராண்ம்,வீரவனப் புராணம்,கண்டதேவிப் புராணம் முதலியவற்றை
இயற்றினார்.கோவிலூர் வேதாந்த மடத்தின் மூன்றாம் மடாதிபதியான் சீர வளர் சீர் சிதம்பர ஞான தேசிகர் என்ற கருணாநிதி
சுவாமிகளின் வேண்டுகோட்படி கோவிலூர்ப் புராணம் தோன்றியது.சீர வளர் சீர் சிதம்பர ஞான தேசிகர் அதற்கு அன்பளிப்பாக
ஆயிரம் ரூபாயை வழங்கினார்கள்.இனி உரைநடை வ்ழியாகப் புராணத்தை அறிவோம்.உரைநடை வ்ரலாறு முடிந்த பின்னர்,
பிள்ளையவர்களின் செய்யுள்களைக் காண்போம்.

இப்புராணத்திற்கு மூலம் வடமொழியிலுள்ள ஸ்காந்த புராணம்.வடமொழிப் புராணத்தைத் தமிழில் உரைநடை வ்டிவாக்கியவர்
திருவிடை மருதூர்ப் பிச்சு சாஸ்திரிகள்.இதன் அடிப்படையில்தான் பிள்ளையவர்கள் புராணத்தை இயற்றினார்கள்.இனி உரை  நடை வ்டிவினைக் காண்போம்.(மணிப்பிரவாள ந்டையை மாற்றித் தூய ந்டையில் தரப்படுகிறது)

சமிவனச் சேத்திர மான்மிய வசனம்

பாயிரம்
துன்பங்கள் அனைத்தையும் நீக்குகிற விநாயகரையும்,ஞான குருவான சண்முகப் பெருமானையும்,சத்திய ஞானானந்த வ்டிவி
னராய்,முழுமுதற் பொருளாய் விளங்குகின்ற் திரிபுவனேசுவரரையும்(கொற்றவாளீசரின் மற்றொருபெயர்)பேரின்ப வ்டிவின
ளாயும்,வேண்டுவார்க்கு வேண்டியன தருபவளாயும்,பேராற்றல் உடையவளாயும்,உலகம் அனைத்திற்கும் தாயாகவும் விளங்கு
கின்ற திரிபுவனேஸ்வரியையும்(திருநெல்லை) இவர்களின் அடியவர்களையும் மனம்,வாக்கு,காயங்களால் வணங்குவாம்.

இனி ஆறு சங்கிதைகளை உடையதாய் இலட்சம் சுலோகங்களோடு விளங்கும் ஸ்காந்த புராணத்தில் முதலாவதாக விளங்கும்
சனற்குமார  சங்கிதையில் சேத்திர காண்டத்தில் உள்ள வன்னி வன மான்மியத்தைச்  சூத முனிவர் நைமிசாரணியம் என்ற
வனத்தில் வசிக்கின்ற முனிவர்களுக்குக் கூறியபடி நான் என் புத்திக்குத் தோன்றிய அளவில் தமிழில் சொல்லுகின்றேன்.
பாயிரம் நிறைவுற்றது.

கி.காளைராசன்

unread,
Oct 20, 2013, 1:34:21 AM10/20/13
to mintamil
வணக்கம் ஐயா.

மின்தமிழுக்குத் தங்களது நல்வரவால் அருள்மிகு திருநெல்லை உடனாய திருக்கொற்றவாளீசர் புராணம் படிக்கும் பேறு கிடைக்கப் பெற்றோம்.
தாங்களும் தங்களது குடும்பத்தினரும்,
தங்களை மின்தமிழுக்கு அழைத்து வந்த அருமை அன்பர் திரு.வினைதீர்த்தான் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும்
அருள்மிகு திருநெல்லை மற்றும் கொற்றவாளீசர் திருவருளால் எல்லா நலன்களும் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

Subashini Tremmel

unread,
Oct 20, 2013, 3:46:04 AM10/20/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/10/19 meenavan2 <meen...@gmail.com>


சமிவனச் சேத்திர மான்மியம்.

இதுதான் கோவிலூர்ப் புராணத்தின் வடமொழிப் பெயர்.சமி  என்பதன் பொருள் வன்னி மரம் என்பர்.வன்னி மரங்கள் நிறைந்த
காடு  என்பதால் இதனை வன்னி வனம் என்றனர்.இன்றும் இங்கே வ்ன்னி மரங்களை அதிக அளவில் காணலாம்.பின் நாளில்
இங்கு வீரபாண்டியன் என்ற ம்ன்னன் ஈசனுக்கு ஒரு சிறு கோவில் கட்டினான்.அதனால் இது வீரபாண்டிய புரம் என்ற பெயராலும்
அழைக்கப்பட்டது.வயல்கள் அதிகமாக இருந்தமையால் கழனி வாசல் என்றும் அழைக்கப் பட்டது.பாண்டிய மன்னர்களுக்கு உரிய ஏழகப் படைகள் ஏழு பெருந்தெருக்களில் இங்கு இருந்தமையால் ஏழகப்பெருந்தெரு என்றும் வழங்கப் பட்டது.பின்னாளில்
கோவிலூர் ம்டாலயத்தையும் பெரிய கோவில் ஒன்றையும் ஆண்டவர் என்று அழைக்கப் பட்டு வந்த முதல் ம்டாதிபதியான
முத்துராமலிங்க தேசிகர் கட்டிய காரண்த்தால் இது கோவிலூர் என்ற பெயரைப் பெற்றது.

நகரத்தார்கள் ஆதியில் ஏழு கோவிற் பிரிவினராக இருந்தனர்.பின்னர் சில காரணங்களால் ஒன்பது பிரிவினர் ஆகினர்.இன்றைய
நாளில்  நகர்த்தார்.திருமண வீடுகளில் எழுதும் இசைகுடிமானம் என்ற பதிவுப் புத்தகத்தில் ஒன்பது கோவில்களுக்குள் அடங்கிய
மாற்றூர்க் கோவிலார்,வயிரவன் கோவிலார்,ஆகியோர் முறையே கேரள சிங்க வளநாடாகிய பிரம்பூர் நாட்டில் மாற்றூரான வீர
பாண்டியபுரத்தில் என்றும்,கேரள சிங்க வளநாடாகிய ஏழகப் பெருந்திருவான வீரபாண்டிய புரத்தில் என்றும் எழுதி வரும் வழக்கம் இன்றும் உள்ளது.கோவிலூரின் வட பகுதியில் ஏழகப் பெருந்திரு  விண்ணகரம் என்ற பெயரில் ஒரு பெருமாள் கோவில் சிதைந்த நிலையில் உள்ளது.ஏழைபெண் ஒருத்திக்காக நெல்லைக் காத்தமையால் நெல்காத்த நாயகி  என்று அழைக்
கப் பெற்றாள்.வட மொழியில் சாலிவாடீஸ்வரி என்ற பெயரால் குறித்தனர்.பின்னாளில் ம்க்கள் திருநெல்லை நாயகி  என்ற.
பெயரால் அழைக்கத் தொடங்கினர்.

தகவல் களஞ்சியமாக இருக்கின்றது உங்கள் பதிவு ஐயா. தொடர்ந்து எழுதி வாருங்கள். இதனை நான் த.ம.அ வலைப்பக்கத்தில் இணைத்து வைக்கின்றேன். 
நன்றியுடன்.
சுபா 


y, October 11, 2013 8:49:12 AM UTC+5:30, meenavan2 wrote:


            அன்புள்ள சுபா அவர்களே
             நான் முன்னர்க் குறிப்பிட்டிருந்தது போல் கோவிலூர்ப் புராண வரலாற்றை எழுதத்
             தொடங்குகிறேன்.கோவிலூர் ஆதீனத்தின் மூன்றாவது  மடாதிபதியாகச் சீர் வளர் சீர்
             சிதம்பர ஞான தேசிகர் என்ற கருணாநிதி சுவாமிகள் அருளாட்சி செய்து வ்ந்த காலம்.
             பிள்ளையவர்களிட்ம் ப்யின்று வந்த தேவகோட்டையைச் சார்ந்த வ்ன்றொண்டர்;
             என்ற சின்னையச் செட்டியார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஐயரவர்களுடன்
             நகரத்தார் வாழ்ந்து  வந்த செட்டி நாட்டுக்குப் பிள்ளையவ்ர்கள் வந்தார்.பிள்ளையவர்
             களுக்கும் கடன் சுமை அதிகமாக இருந்தபடியால் செட்டி நாட்டிலுள்ள தலங்கள் சில
             வற்றிற்கு உரிய  தலபுராணங்களை எழழுதினால் செட்டி ம்க்கள் ந்லல முறையில்
             பெருமைப் ப்டுத்துவார்கள் என்றெண்ணிப் புராணங்களை எழுதச்  செய்தார்கள்.அவரும்
             சூரை மாநகர்ப் புராணம்,வீரவனப் புராணம்,க்ண்டதேவிப்  புராணம்,கோவிலூர்ப் புராண்ம்
             முத்லியவ்ற்றை  எழ்தியதில் ரூ.5000.கிடைத்தது.அவர் கடனும் தீர்ந்தது.கோவிலூர்ப்
             புராணத்தை எழுதியமைக்கு உரிய அன்பளிப்பாக ரூபாய் ஆயிரம் வ்ழ்ங்கப் பெறற்து.
             இதுதான் கோவிலூர்ப்  புராணம்  தோன்றிய வரலாறு.முத்லில் புராணத்தின் உரை நடை
             யினைத் தருகின்றேன்.
             காப்பியக் க்விஞர.நா.மீனவன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Oct 20, 2013, 3:47:36 AM10/20/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/10/20 meenavan2 <meen...@gmail.com>


கோவிலூர்ப் புராணம் தொடர்ச்சி

இறைவன் திருநாமம் கொற்றவாளீசர் என்பதாகும்.வ்டமொழியில் ராஜகட்க பரமேஸ்வரர் என்றழைத்தனர்.இது கோவிலூரைப்
பற்றிய முன்னுரை.புராண வரலாற்றை  நாம் இனித் தொடரலாம்.தற்காலச் செய்திகளைப் பின்னர்க் காணலாம்.

புராணம் தோன்றக் காரணம்:-திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களை அறியாதார் த்மிழ்
நாட்டில் யாரும் இலர்.இந்தத் தலைமுறை எப்படியோ எனக்குத் தெரியாது.ஏடுகள் பலவற்றைத் தேடி எடுத்துச் சங்க நூல்களை
யும்,வேறு பல தமிழ் நூல்களையும் நமக்களித்த தமிழ்த் தாத்தா உ.வே.சா.அவர்கள் என் சரித்திரம் என்ற நூல் வழியாகவும்,
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம் என்ற நூல் வழியாகவும் அவர் வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.அதன்
மூலம் ஐயரவர்கள் பிள்ளையவர்களுடன் செட்டி நாட்டுப் பயணம் மேற்கொண்ட செய்தி தெரிய வ்ருகின்றது.

செட்டி நாட்டில் உள்ள தேவகோட்டை என்னும் நகரைச் சார்ந்த வன்றொண்டர் எனற சின்னைய செட்டியார், பிள்ளை அவர்க
ளிடம் மாணாக்கராய் இருந்தபோது செட்டி நாட்டுப் பகுதிக்கு வ்ருமாறு அழைத்தார்.அதனை ஏற்றுப் பிள்ளையவரகளும் செட்டி
நாட்டுக்குப் பயணம் ஆனார்கள்.அவ்வாறு அவர் வந்த செய்தி அறிந்த நகரத்தார் பெருமக்கள் அன்புடன் வரவேற்றனர்.(இங்கே
குறிப்பிட்டுள்ள சின்னைய செட்டியார் அவர்களிடம் பண்டிதமணி கதிரேசச் செட்டியார்,சித்தாந்தச் செல்வர் காரைக்குடி இராம.
சொக்கலிங்க ஐயா,என்னுடைய ஐயா புலவர் கூத்தலூர் இராமநாதச் செட்டியார் ஆகியோர் தமிழ் பயின்றனர்.)அப்பொழுதுதான்
நகரத்தார் பெருமக்களின் வேண்டுகோட்படி சூரை மாநகர்ப் புராண்ம்,வீரவனப் புராணம்,கண்டதேவிப் புராணம் முதலியவற்றை
இயற்றினார்.கோவிலூர் வேதாந்த மடத்தின் மூன்றாம் மடாதிபதியான் சீர வளர் சீர் சிதம்பர ஞான தேசிகர் என்ற கருணாநிதி
சுவாமிகளின் வேண்டுகோட்படி கோவிலூர்ப் புராணம் தோன்றியது.சீர வளர் சீர் சிதம்பர ஞான தேசிகர் அதற்கு அன்பளிப்பாக
ஆயிரம் ரூபாயை வழங்கினார்கள்.இனி உரைநடை வ்ழியாகப் புராணத்தை அறிவோம்.உரைநடை வ்ரலாறு முடிந்த பின்னர்,
பிள்ளையவர்களின் செய்யுள்களைக் காண்போம்.

அருமையான விவரங்களை அளித்துள்ளீர்கள்.
 

இப்புராணத்திற்கு மூலம் வடமொழியிலுள்ள ஸ்காந்த புராணம்.வடமொழிப் புராணத்தைத் தமிழில் உரைநடை வ்டிவாக்கியவர்
திருவிடை மருதூர்ப் பிச்சு சாஸ்திரிகள்.இதன் அடிப்படையில்தான் பிள்ளையவர்கள் புராணத்தை இயற்றினார்கள்.இனி உரை  நடை வ்டிவினைக் காண்போம்.(மணிப்பிரவாள ந்டையை மாற்றித் தூய ந்டையில் தரப்படுகிறது)

சமிவனச் சேத்திர மான்மிய வசனம்

பாயிரம்
துன்பங்கள் அனைத்தையும் நீக்குகிற விநாயகரையும்,ஞான குருவான சண்முகப் பெருமானையும்,சத்திய ஞானானந்த வ்டிவி
னராய்,முழுமுதற் பொருளாய் விளங்குகின்ற் திரிபுவனேசுவரரையும்(கொற்றவாளீசரின் மற்றொருபெயர்)பேரின்ப வ்டிவின
ளாயும்,வேண்டுவார்க்கு வேண்டியன தருபவளாயும்,பேராற்றல் உடையவளாயும்,உலகம் அனைத்திற்கும் தாயாகவும் விளங்கு
கின்ற திரிபுவனேஸ்வரியையும்(திருநெல்லை) இவர்களின் அடியவர்களையும் மனம்,வாக்கு,காயங்களால் வணங்குவாம்.

இனி ஆறு சங்கிதைகளை உடையதாய் இலட்சம் சுலோகங்களோடு விளங்கும் ஸ்காந்த புராணத்தில் முதலாவதாக விளங்கும்
சனற்குமார  சங்கிதையில் சேத்திர காண்டத்தில் உள்ள வன்னி வன மான்மியத்தைச்  சூத முனிவர் நைமிசாரணியம் என்ற
வனத்தில் வசிக்கின்ற முனிவர்களுக்குக் கூறியபடி நான் என் புத்திக்குத் தோன்றிய அளவில் தமிழில் சொல்லுகின்றேன்.
பாயிரம் நிறைவுற்றது.

பாயிர விளக்கத்திற்கு நன்றி.

சுபா

 

Subashini Tremmel

unread,
Oct 20, 2013, 3:50:23 AM10/20/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/10/20 கி.காளைராசன் <kalair...@gmail.com>

வணக்கம் ஐயா.

மின்தமிழுக்குத் தங்களது நல்வரவால் அருள்மிகு திருநெல்லை உடனாய திருக்கொற்றவாளீசர் புராணம் படிக்கும் பேறு கிடைக்கப் பெற்றோம்.
சகோதரர் காளைராசன்,
என் மனதில் நினைத்ததை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள்.

ஒரு முறை தங்களுக்கு வாய்ப்பு அமைந்தால் இந்த புராண நூல் பற்றிய விவரங்களை காப்பியக் கவிஞரை பேசச்செய்து ஒலிப்பதிவு பேட்டி ஒன்று செய்து தாருங்கள். தீபாவளிக்குப் பிறகு.

நன்றி
சுபா
 
தாங்களும் தங்களது குடும்பத்தினரும்,
தங்களை மின்தமிழுக்கு அழைத்து வந்த அருமை அன்பர் திரு.வினைதீர்த்தான் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும்
அருள்மிகு திருநெல்லை மற்றும் கொற்றவாளீசர் திருவருளால் எல்லா நலன்களும் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

meenavan2

unread,
Oct 20, 2013, 4:46:54 AM10/20/13
to mint...@googlegroups.com

கோவிலூர்ப் புராணம் - தொடர்ச்சி

முதலாவது அத்தியாயம்
சௌனகர் முதலான முனிவர்கள் சூதமா முனிவரை நோக்கி,வன்னிவன சேத்திரப் பெருமையைக் கேட்கும் அத்தியாயம்.

முன்னர் ஒரு காலத்தில் வேத வித்துக்களான அனைத்து முனிவர்களும் நைமிசாரணியத்தில் பன்னிரண்டு ஆண்டில் செய்து
முடிக்கத் தக்க வேள்வியைத் துவங்குவதற்காக ஒன்றாகக் கூடினர்.

செளனகர்,வசிட்டர்,வாமதேவர்,விசுவாமித்திரர்,சாதாதபர்,கெளதமர்,காசிபர்,கார்க்கியர்,பிருகு,அத்திரி,ம்காதபர்,போதாயனர்,
சத்தியாஷாடர்,மெளத்கல்யர்,ஆபஸ்தம்பர்,ஆணிமாண்டவியர்,யாக்கியவர்க்கர்,காத்தியாயனர்,சதானந்தர்,புலத்தியர்,ககோளர்,
பாஷ்களி,வீதிகோத்திரர்,சாகல்லியர்,சாலிகோத்திரர்,தூமிரர்,கெளஷீதகி முதலான முனிவர்களே அவர்கள்.இவர்கள்  உலக நலத்
தின் பொருட்டு வேள்விக்கு ஆச்சாரியராகவும்,அதனை நடத்துவோராகவும் இருந்து கொண்டு,விரதம் முதலான முறைகளுடன்
முன்சொன்ன வேள்வியைத் தொடங்கினர்.

அச்சமயத்தில் பரமசிவன் மேல் மாறாத பற்றுடையராய்,பதினெண் புராணமும்  அறிந்தவராய்,அனைத்துச் சாத்திரங்களையும்
அறிந்தவராய், தோற்றம்,நிலைபேறு,நீக்கம் ஆகியவற்றிற்குக் காரணராய் இருக்கின்ற சூதமா முனிவர் தன் சீடர்களுடன் வேள்விச் சாலைக்கு வ் ந்து சேர்ந்தார்.சவுனகர் முதலான அனைத்து முனிவர்களும் கண்டு  அவரை எதிர்கொண்டழைத்து முறைப்படி வழிபட்டு இருக்கையில் அமர்த்திச் சிறப்பித்தனர்.

கி.காளைராசன்

unread,
Oct 20, 2013, 5:44:31 AM10/20/13
to mintamil, Subashini Tremmel
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.


2013/10/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>

என் மனதில் நினைத்ததை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள்.
மிக்க மகிழ்ச்சி.
 
ஒரு முறை தங்களுக்கு வாய்ப்பு அமைந்தால் இந்த புராண நூல் பற்றிய விவரங்களை காப்பியக் கவிஞரை பேசச்செய்து ஒலிப்பதிவு பேட்டி ஒன்று செய்து தாருங்கள். தீபாவளிக்குப் பிறகு.

ஐயா வினைதீர்த்தான் அவர்களும் நானும் செல்கிறோம்.
விரைவில் நல்லதொரு பதிவினை மேற்கொள்வோம்.

meenavan2

unread,
Oct 20, 2013, 9:24:14 AM10/20/13
to mint...@googlegroups.com

கோவிலூர்ப் புராண்ம் - தொடர்ச்சி

செளனகர் முதலான் முனிவர்கள் செய்த உத்விகளால் வந்த களை தீர்ந்து ம்கிழ்ச்சியாக இருக்கும் போது மேற்படி முனிவர்கள்
சூதமா முனிவரை நோக்கிக் கேட்கத் தொடங்கினர்.

முனிவர் பெருமானே! த்ங்கள் வாயிலாக வெளி வருகின்ற புராணங்கள் ஆகிய அமுதத்தை நாங்கள் எவவளவு அருந்தினாலும்
அதனால் எள் அளவும் திருப்தி உண்டாகவில்லை.இமயமலை தொடங்கிச் சேது சமுத்திரம் வரையிலான புண்ணியதீர்த்தங்கள்,
புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பற்றி,அனைத்தும் அறிந்த உம்மால் எங்களுக்கு முன்னரே உபதேசம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் காவேரிக் க்ரைப் பகுதியில் அனைத்தையும் கொடுப்பதான மாயூரம்(மயிலாடுதுறை)முதலான புண்ணியச் சிவத்
தலங்கள் இருக்கின்ற்ன என்றும் தங்களால்  சிற்ப்பித்துச் சொல்லப் பட்டதே.

அவைகளுக்குள் திருவானைக்கா என்னும் சிவத்த்லத்திற்குத் தென் பகுதியில் ஐந்து யோசனை தொலைவில் உள்ளதாயும்,
சத்தியபுட்கரணி என்னும் தீர்த்தத்தோடு  கூடிய திருமெய்யம் என்று விள்ங்கும் சத்தியகிரி என்ற தலத்திற்குத் தெந்திசையில்
ஒரு யோசனை தூரத்தில் உள்ளதாயும்,கண்டதேவி என்ற பெயருடன் விள்ங்கும் சொர்ணேசுவரம் என்ற பதிக்கு வட திசையில் அரை யோசனை தொலைவில் உள்ளதாயும்,திருப்பெருந்துறை என்னும் தலத்திற்கு மேல் திசையில் ஒன்றரை
யோசனை தொலைவில் உள்ளதாயும்,திருப்புத்தூருக்குக் கிழக்கே முக்கால் யோசனை தொலைவில் உள்ளதாயும்,கழ்னிவாசல்
என்று அழைக்கப் பெறுவதும்,சாலி வாடி என்றும் வன்னி வனம் என்றும் பெயர் பெற்ற ஸ்ரீ வல்லபம் என்று  அழைக்கப் ப்[டுவதும்
ஆன ஒரு புகழ் பெற்ற சிவத்தலம்  உள்ளது என்று தங்களால் முன்னர்ச் சொல்லப் பெற்றது.இப்போது அதன் பெருமையைக்
கேட்பதற்கு எங்களுக்கு மிக விருப்பமாக உள்ளது.அதுபற்றித் தாங்கள் எங்களுக்குச் சொல்லியருள் வேண்டும் எனச் ச்வுனகர்
முதலான் முனிவர்கள் வேண்டினர்.

இவ்வாறு முனிவர்கள் கூறியதைக் கேட்ட சூத முனிவர் சிவபெருமானது அள்வில்லாத ம்ங்களகரமான குண்ங்களை நினைந்து
சடையில் பிறையும் கங்கையும் சூடி நீலகண்டத்தோடு மான் ம்ழு முத்லியன தரித்துப் பார்வதி உடனாக இருக்கின்ற பரம
சிவனை கணப்பொழுது தியானித்து  ஆன்ந்தக் கண்ணீர் பெருகப் புளகாங்கிதம் அடைந்து ம்கிழ்ச்சியுடன் வன்ன்ப் வனம் என்ற்
தல்த்தின் பெருமையைச் சொல்லத் தொடங்கினார்.

செளனகாதி முனிவர்களே!இன்று உங்களால் சிவத்தலத்தின் பெருமையும் அதைப் பற்றிய நினைப்பும் உண்டுபண்ணப் பட்ட
படியால் நானும் நீங்களும் மிகப்புண்ணியம் பெற்றவர்கள்  ஆனோம்.

வன்னிவனம் என்ற இப்பதியில் அனைத்துப் பாவ்ங்களையும் போக்குபவராய் தர்மத்தையும் பொருளையும் விரும்பத்தக்க வீடு
பேற்றையும் கொடுப்பவராய் இருக்கின்ற் பரமசிவன் எப்போதும் சிறப்புடன் விளங்கி, அடியவர்களின் அனைத்து விருப்பங்க
ளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற படியால் இச்சிவப்பதியை நினைத்த மாத்திரத்தில் அனைத்து உயிர்களின் பாவங்
களும் நீங்கி எல்லாம் பெற்றவர்கள் ஆவார்கள்.

பெரிய ஒளிமயமாய் விளங்கும் பரமசிவனுடைய திருவடிகளையும்,திருமுடியையும் காணும் பொருட்டு திருமால்,நான்முகன்
ஆகிய இருவரும் முறையே பன்றி வ்டிவுடனும் அன்ன வ்டிவுடனும் பாதாள்த்திலும்,வானத்திலும் மிக முயன்று தேடியும் அடி
முடி காணாராயினர்.அத்தகைய சந்திர சூடன் ஆகிய ப்ரமசிவனின் ஒப்பற்ற பெருமையை இவ்வுலகில் யாரே வருணிக்க
வல்லார்.

மந்தர ம்லையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு அனைத்துத் தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற்க் கடைந்த போது வாசுகியின் முகத்தில் இருந்து கொடிய ஆலகால நஞ்சு தோன்றி உலகெங்கும் பரந்து துன்பம் த்ந்த போது
நான்முகன் முதலாய அனைத்துக் கடவுளரும் அச்சம் அடைந்த பொழுது கருணா மூர்த்தியான சிவபெருமான் அந்த நஞ்சை
அமுதம் குடிப்பது போல்க் குடித்து அனைத்துலகையும் காப்பாற்றிய அவர் பெருமையை விரித்துச் சொல்ல வல்லவர் யாவர்;?
அவ்வாறு சொல்வதைக் காட்டிலும் ஊமையாகவே இருக்கலாம்.

ஆயினும் அன்பின் காரணமாக அவருடைய பெருமையை எனக்குத் தெரிந்தவரை தோன்றிய மட்டும் சொல்கின்றேன்.நீங்கள்
அனைவரும் ஒன்றுபட்ட மனத்துடன் கேளுங்கள்.

பூமியே  தேராகவும்  சந்திர சூரியர் சக்கரங்களாகவும் வேதங்களே குதிரைகளாகவும் நான்முகனே சாரதியாகவும் மேரு மலையே
வில்லாகவும் வாசுகியே  நாணாகவும்  திருமாலே  அம்பாகவும் கொண்ட பரமசிவன் விளையாட்டாகப் புன்சிரிப்புடன் திரிபு
ரத்தை எரித்தாரோ அப்படிப்பட்ட  வ்லிமை உடைய திரிபுவனேசுவரர் எப்போதும் என் இதயத்தில் விளங்கக் கடவர்.

இப்படிச் சர்வ சக்தி உடையவராய்ச் சந்திர சேகரராய் இனிய ம்ங்கள் மூர்த்தியாய்த் திருநெல்லை நாயகிக்கு நாதனாய் இருக்
கின்ற இராச கட்க பரமேசுவரரை வ்ணங்கிக் கொண்டு சமிவனத்தின் பெருமையைச்  சூத முனிவர் சொல்லத் தொடங்கினார்.

முதலாம் அத்தியாயம் நிறைவுற்றது.

On Friday, October 11, 2013 8:49:12 AM UTC+5:30, meenavan2 wrote:

கி.காளைராசன்

unread,
Oct 20, 2013, 11:47:59 AM10/20/13
to mintamil
வணக்கம் ஐயா.


இன்று உங்களால் சிவத்தலத்தின் பெருமையும் அதைப் பற்றிய நினைப்பும் உண்டுபண்ணப் பட்ட
படியால் நானும் நீங்களும் மிகப்புண்ணியம் பெற்றவர்கள்  ஆனோம்.

35B.gif

meenavan2

unread,
Oct 20, 2013, 10:26:50 PM10/20/13
to mint...@googlegroups.com

கோவிலூர்ப் புராணம் தொடர்ச்சி

இரண்டாவது அத்தியாயம்

சமிவனச் சேத்திரத்தின் பெருமை பற்றிக் கூறுதல்

சூத  மாமுனிவர் தொடர்ந்து கூறுதல்
சமிவனம் என்ற சிவத்தலம் மற்ற தலங்களைக் காட்டிலும் உத்தமம் ஆனது.உலகிலே உள்ள உயிர்கள் செய்யக் கூடிய பஞ்சமா
பாதகங்கள் அனைத்தையும் போக்குவிப்பது.மதுபுட்கரணி என்னும் புண்ணிய தீர்த்தத்தை உடையது.பலவிதமான விலங்குகள்
பறவைகள் நிறைந்து காணப் படுவது.தாமரை,செங்கழுநீர் முதலான பூக்கள் நிறைந்த வாவிகளால் அழகுடையதாகத் திகழ்வது.
மயில்களுடைய்  மூச்சுக் காற்றினால் பசி நீங்கித் திருப்தி அடைந்த பாம்புகளை உடையது.புலிக்குட்டிகளுக்கு அஞ்சாது பாலை
ஊட்டும் பசுக்கள் எங்கும் பரவித் திரியும் தன்மை உடையது.சிவபக்தி மிக்கவரான வாலதிவ்வியர் போன்ற் பல முனிவர்களா
லும் சூரியனுக்கும் நெருப்புக்கும் சமமான ஒளியுடைய சந்நியாசிகளாலும் வ்ணங்கப்படும் பெருமை உடையது.வேத வித்துக்
களான அந்தணர்கள் அன்றாடம் ஓதும் வேத முழக்கங்களை உடையது.

உயிர்கள் த்வம் செய்யத் தொடங்கிய மாத்திரத்திலேயே அனைத்துச் சித்திகளையும் கொடுத்து அருள் புரியும் சந்திர சூடரான
சிவபெருமானுக்குத் தென்கைலாயம் என்று சொல்லத் தக்கது.சிவனை வ்ழிபடாதவரகளாயும்,வவ்ள்வி/தானம் முதலான
வற்றைச் செய்யாது இருக்கின்ற ம்க்கள் இந்தச் சிவப்பதியை ஒரு காலத்திலும் அடைய மாட்டார்.இந்தச் சமிவனச் சேத்திரத்
திற்குச் சாலிவாடி,ஸ்ரீ வல்லபம்  என்ற பெயர்களும் உண்டு.

பல பிறவிகளில் செய்த பக்குவமான புண்ணியச் செயல்களின் காரணமாக இந்தச் சமிவனச் சேத்திரத்தின் நாயகரான திரிபுவ
னேவரரை எவர்கள் மிக்க பக்தியுடன் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு வேதம் ,வேள்வி,தானம்,தவம் முத்லான நற்செயல்கள்
ஒன்றும் வேண்டியதில்லை.இத்தகைய சச்சிதானந்தத்தைத் தரும் திரிபுவனேசுவரரை ஒரு முறையாகிலும் அன்புடனும் பக்தி
யுடனும் வழிபடும் சாதுக்கள் பார்த்த  மாத்திரத்திலேயே சீவன் முக்தர் ஆவார்கள்.

இவருக்கு இராச கட்க பரமேசுவரர் என்ற பெய்ருமுண்டு.இந்த்ப் புண்ணிய மூர்த்தியை எவர் ஒருவர் இரு கண்களாலும் த்ரிசிக்கி
றார்களோ அவர்கள் இந்திர புரியில் ஆயிரங்கண்ணுடைய இந்திரனாக  இருந்து அரம்பை முத்லான தேவ கன்னியருடைய நட
னத்தைக் க்ண்டு களிப்படைவார்கள்.இந்தப் பரமசிவனை எவரொருவர் ஒரு மனத்தோடு வணங்குகிறார்களோ அவர்கள் சத்திய
லோகத்தில் நான்முகத்தன் ஆகிய பிரமனுடைய பதவியை  அடைவார்கள்.


On Friday, October 11, 2013 8:49:12 AM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Oct 21, 2013, 7:51:49 AM10/21/13
to mint...@googlegroups.com

கோவிலூர்ப் புராணம்-தொடர்ச்சி

இத்தலத்தில் உள்ள திரிபுவனேசுவரருடய சந்நிதியில் நின்று நெல்லிக்கனி அளவு அன்னத்தை அந்தணர்  முதலான அனைவர்க்
கும் கொடுப்பவர்கள் சொர்க்கம் சென்று புதிய அமுதத்தை அருந்துவார்கள்.இங்குள்ள சாலிவாடீசுவரியின் நாயகரான திரிபுவ
னேசுவரருடைய சந்நிதி முன் நின்று பக்தி சிரத்தையுடன் ம்றையவர்களுக்குச் சொர்ணதானம் செய்தவர்கள் குபேரனை விட
அதிகமான செல்வத்தைப் பெறுவர்.இத்தலத்தில் வந்து யார் ஒருவர் இற்ப்பினை அடைகிறார்களோ அவர்கள் பிறைமதியை
முடித்த சடையுடன் கங்கையைத் தலையில் தாங்கியவராய் நீலகண்டத்துடன் மான்,மழு முதலியனவற்றை அணிந்துள்ள சிவ
பெருமானின் வடிவத்தை அடைவார்கள்.சிவராத்திரி நாளில் இத்தலத்தில் பக்தியுடன் கண் விழித்து வழிபாடு செய்கிறார்களோ
அவர்களுக்கும் மூன்று கண்களோடு கூடிய சிவபெருமானின் வடிவத்தை அடைவர்.எவர் இத்தலத்தில் ஒரு மணித்துளி அளவே
னும் தங்கியிருப்பார்களோ அவர்கள் வானுலகில் அரம்பை முதலான தேவ கன்னியரோடு இருக்கின்ற இன்பத்தை அடைவா.
எவர் ஒருவர் மிகுந்த பக்தியோடு தூய திருநீற்றை அணிந்து,மூன்று வரிகளாகத்  தரித்து,கழுத்து,தலை,கை முத்லிய உறுப்புக்
களில் உருத்திராக்க மாலைகளை விதிப்படி தரித்து,ஐந்தெழுத்தை ஓதிப் பெரியலிங்க வடிவாக இருக்கின்ற் திரிபுவனேசுவரரை
முறையாக வ்ணங்குகிறார்களோ அவர்கள் இப்பிறவியில் அனைத்து இன்பங்களையும் அனுபவித்து முடிவில் சிவனுடன் ஒன்றி இருக்கும் பேறு பெறுவார்கள்.விபூதி,உருத்திராக்கங்களைத் த்ரித்துக் கொண்டு செய்யும் செயல்களே பயன் கொடுக்கும்.
அவற்றை அணியாமல் செய்கின்ற செயல்கள் எப்பயனையும் தாராது.ஆத்லால் விபூதி,உருத்திராக்கம் தரித்துக் கொண்டவர்
களே மூன்று உலகங்களுக்கும் அதிகாரி ஆவார்களே தவிர அவ்வாறு அணியாதவர் அதிகாரி ஆக மாட்டார்கள்.ஆதலால் முக்தி
யினை விரும்புகினற சாதுக்கள் விபூதி,உருத்திராக்கம் முத்லியவற்றை அணிந்தவர்களாய்த் திரிபுவனேசுவரரை  முறைப்படி
வணங்கி ஞானப்பயிற்சியினை மேற்கொள்வார்கள் ஆனால் அவர்கள் ஆன்ம முத்தியையும் விதேக முத்தியையும் அடைவர்.
இவ்வாறு விபூதி உருத்திராக்கதாரிகளாய்ப் பரமசிவனை வழிபடுவோர்க்கே முக்தி கிடைக்கும் என்று பிரகத் ஜாபால உபநிஷத்
தும்,காலாக்கினி உருத்திர உபநிஷத்தும்,அதர்வ சிரோபநிஷத்தும்,மற்றும் பல உப நிஷத்துக்களும் கூறுகின்றன.

இரண்டாம் அத்தியாயம் சமிவனச் சேத்திரத்தின் பெருமை உரைக்கும் பகுதி நிறைவுற்றது.



On Friday, October 11, 2013 8:49:12 AM UTC+5:30, meenavan2 wrote:

ரா.கிருஷ்ணன்

unread,
Oct 22, 2013, 6:10:56 AM10/22/13
to mint...@googlegroups.com
இவ்விஷயங்களில் நாட்டம் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு மிக உபயோகமான இழை.


2013/10/21 meenavan2 <meen...@gmail.com>

--

meenavan2

unread,
Oct 22, 2013, 8:08:42 AM10/22/13
to mint...@googlegroups.com

கோவிலூர்ப் புராணம் -தொடர்ச்சி

மூன்றாம் அத்தியாயம்

அகத்தியர் சைமினி முனிவருக்கு வீரபாண்டியன் பெருமை உரைத்த பகுதி

முனிவர் பெருமக்களே! எவர் ஒருவர் இராசகட்க பரமேசுவ்ரருடைய கதையை விரும்பிக் கேட்கிறார்களோ அவ்வாறு கேட்ட
மாத்திரத்தில் பாவங்கள் அனைத்தும் நீங்கி,அனைத்தும் கிடைக்குமோ அப்படிப்பட்ட கதையைச் சொல்லுகிறோம்.சிரத்தை
யுடன் கேளுங்கள்.

இந்தக் கதை முற்காலத்தில் மாமுனிவராக விளங்கிய சைமினி முனிவருக்கு அகத்தியரால் சொல்லப்பட்டது.அத்னை இப்போது
நான் உங்களுக்குக் கூறுகிறேன்.

முன்னர்த் துவாபர யுகத்தில் வேத வித்துக்களுள் உத்தமமான் முனிவராக இருந்தவர் வேத வியாசர்.பின்னர் வர இருக்கும் கலி
யுகத்தில் பிறக்கப் போகின்றவர்கள் குறைந்த ஆயுளும்,அற்பமான புத்தியும்,விரிவான வேதங்களைப் பயில்கின்ற திற்மை இல்
லாமையும் உடையவர்களாய்ப் பிற்க்கப் போகின்ற நான்கு வருணத்தார்களும் எளிதில் பயிலும் பொருட்டு பரந்து விரிந்து
கிடந்த வேதங்களை இருக்கு,யசுர்,சாமம்,அதர்வணம் என நான்கு பகுதிகளாகச் சிவபெருமான் ஆணைப்படி பிரித்துக் கூறினார்.
பின்னர்; அந்த நான்கு வேதங்களையும் பயிலர்,வைசம்பாயனர்,சைமினி,சுமந்து என்னும் நான்கு சீடர்களுக்கும் முறைப்படி
உபதேசித்தார்.

அந்த நான்கு முனிவர்களும்,அந்த நான்கு  வேதங்களையும் உலகில் முறைப்படி விளங்கச் செய்தனர்.அவற்றுள் இருக்கு வேதம் 21 சாகைகளை உடையது.எசுர் வேதம் நூற்றொரு சாகைகளை உடையது.சாக வேதம் ஆயிரம் சாகைகளை உடையது.
அதர்வணம் ஒன்பது சாகைகளை உடையது.அந்நான்கு முனிவர்களுக்குள் சாம வேதத்தை உலகில் விளங்கச் செய்தவர் சைமினி முனிவர்.அவர் அக்கினிஷ்டோமம்,அதிராத்திரம்,வாசபேயம் முதலான வேள்விகளைச் செய்தும் சித்த சுத்தி அடைய
வில்லை.

ஒரு காலத்தில் அந்தச் சைமினி ஆனவர் அகத்திய முனிவரின் ஆசிரமத்தை அடைந்து முற்றும் அறிந்தவராய்,இந்திரியங்களை
வென்றவராய் இறைவனைத் தியானம் செய்பவராய் இருக்கும் அகத்திய முனிவரை நோக்கிச் சொல்லத் தொடங்கினார்.

அகத்திய மா முனிவரே! வேதத்தில் சொல்லப்பட்ட செயல்கள் அனைத்தையும் செய்தும் அதனால் எனக்குச் சித்த சுத்தி இன்னும் வரவில்லை.அதுவன்றியும் நான் கர்ம மீமாஞ்சை என்னும் சாத்திரத்தில் வேதங்களுக்குக் கர்ம பரத்துவம் சொல்லி
இருக்கிறேன்.அதனாலும் சித்த சுத்தி வரவில்லை.என்று சொன்ன சைமினியை நோக்கி அகத்திய முனிவர் சொல்லத் தொடங்கி
னார்.

ஏ! சைமினியே! நீ உன் செயல்களைச் சிவார்ப்பணமாகச் செய்யவில்லை.கேவலம் பயனை மட்டுமே கருதிச் செயதமையால்
உனக்குச் சித்த சுத்தி உண்டாகவில்லை.சிவார்ப்பணமாகச் செய்யப்பட்ட செயல்களால் ம்ட்டுமே சித்த சுத்தி உண்டாகும்.கேவல
மான செயல்களால் ஒருவருக்குச் சித்த சுத்தி ஒருபோதும் உண்டாகாது.

செயலைச் சாதிக்காத உனக்குப் பிரம ஞானம் கிடைக்க மாட்டாது.கருமிகள் தமது செயல் காரணமாகப் பிரமலோகம் என்னும்
புண்ணிய லோகத்தை அடைந்து புதிய வளர்ச்சியை அடைவர்.எங்கும் முழுமையாய் நிறைந்து விளங்கும் பரமசிவ வடிவத்
தைத் துதியாதவர்கள் ஒருகாலத்திலும் புதிய வ்ளர்ச்சியை அடைய மாட்டார்கள்.ஏனெனில் ஞான்த் தீயானது அவர்களுடைய
அனைத்துச் செயல்களையும் தகித்து விடுவதால் அவ்வாறு ஆகும்.

இவ்விதம் அகத்தியர் கூறியதைக் கேட்ட  சைமினி அகத்தியரை வணங்கி மாமுனிவரே!பரசிவ வடிவத்தைத் தொழுது பெற்ற
எந்த ஞானத்தால் வீடுபேறு  கிடைக்குமோ அந்த மேலான ஞானத்தைத் தாங்கள் கருணையோடு எனக்கு இப்போது அருள வேண்
டும் என்று கேட்ட சைமினியை நோக்கி அகத்தியர் சொல்லத் தொடங்குகிறார்.

ஏ!சைமினியே!கேட்பாயாக.முற்காலத்தில் சமிவ்னத்தில் இருக்கின்ற தேனாற்றங்கரை என்ற மதுபுட்கரணி தீரத்தில் மதுப்பிரியர்
என்னும் மகா முனிக்கு நான்முகனால் இந்த்ப் பரசிவ ஞானம் உபதேசிக்கப் பட்டுள்ளது.இதன் பொருள் யாதென்று நம்மை வீர
பாண்டியன் என்ற அரசன் கேட்க நாம் அதனை அவனுக்குச் சொல்லி இருக்கின்றோம்.அதனை இப்போது உனக்குச் சொல்லுகி
றோம்.

இந்தச் சமிவனத்திற்குத் தெற்கே இரண்டு யோசனை தொலைவில் பிரகார மாட மாளிகையினால் அலங்கரிக்கப் பட்டதாய்
அனைத்துச் செல்வங்களும் நிறைந்ததாய் பலவிதமான் ம்ரங்களுடன் பூக்களால் அலங்கரிக்கப் பட்டதான காளையார் கோவில்
என்றும் காளியபுரம் என்றும் அழைக்கப்படும் ஒரு சிவத்தலம் உள்ளது.


On Friday, October 11, 2013 8:49:12 AM UTC+5:30, meenavan2 wrote:

கி.காளைராசன்

unread,
Oct 22, 2013, 8:45:36 AM10/22/13
to mintamil
வணக்கம் ஐயா.

2013/10/22 meenavan2 <meen...@gmail.com>

அகத்தியர் சைமினி முனிவருக்கு வீரபாண்டியன் பெருமை உரைத்த பகுதி

முற்காலத்தில் சமிவ்னத்தில் இருக்கின்ற தேனாற்றங்கரை என்ற மதுபுட்கரணி தீரத்தில் மதுப்பிரியர்
என்னும் மகா முனிக்கு நான்முகனால் இந்த்ப் பரசிவ ஞானம் உபதேசிக்கப் பட்டுள்ளது.இதன் பொருள் யாதென்று நம்மை வீர
பாண்டியன் என்ற அரசன் கேட்க நாம் அதனை அவனுக்குச் சொல்லி இருக்கின்றோம்.அதனை இப்போது உனக்குச் சொல்லுகிறோம்.

பாண்டியரது வம்சாவழியில் இரண்டவாது அரசன், இந்த வீரபாண்டியனையே “முருகன்“ என்கின்றனர் அறிஞர்கள். முருகனுக்கு அகத்தியர் அருளிச் செய்ததைத் 
தாங்கள் எங்களுக்கு அருளிச் செய்கின்றீர்கள்.
தங்களது இந்தப் பதிவினைச் சிரத்தையுடன் படித்து வருகிறோம்.

காப்பியக்கவிஞர் கதையின் தொடர்ச்சியைச் சொல்ல வேண்டுகிறோம். 
 

இந்தச் சமிவனத்திற்குத் தெற்கே இரண்டு யோசனை தொலைவில் பிரகார மாட மாளிகையினால் அலங்கரிக்கப் பட்டதாய்
அனைத்துச் செல்வங்களும் நிறைந்ததாய் பலவிதமான் ம்ரங்களுடன் பூக்களால் அலங்கரிக்கப் பட்டதான காளையார் கோவில்
என்றும் காளியபுரம் என்றும் அழைக்கப்படும் ஒரு சிவத்தலம் உள்ளது.
இச் சிவத்தலத்தில் பிறந்ததால் காளைராசன் என்ற பெயர் கொண்ட,

meenavan2

unread,
Oct 23, 2013, 4:46:12 AM10/23/13
to mint...@googlegroups.com

கோவிலூர்ப் புராணம் - தொடர்ச்சி

அச்சிவப் பதியில் பெரு வலிமை உடையவனும்,கையிலே வில்லுடையவனாயும் பகைவர் பலரை வென்றவனாகவும் சிவபக்தி
காரணமாகச் சிவவழிபாட்டில் மேம்பட்டவனாகவும் அனத்து உயிர்களிடத்து எப்பொழுதும் கருணை உடையவனாய,முத்து
மாலை,பவளமாலை,உருத்திராக்க மாலைகளோடு விபூதி அணிந்தவனாய் உள்ள மன்னன் ஒருவன் வீரபாண்டியன் என்ற பெய
ருடன் விள்ங்கி வந்தான்.

அம்மன்னன் காளீசுவ்ரர் அருளால் மிகச் சிறந்த ஒரு வாளைப் பெற்றான்.அவ்வாளினால் அனைத்துப் பகை அரசர்கள் அனைவ
ரையும் வென்றபடியால் அவ்வாளுக்குக் கொற்றவாள் என்ற பெயர் வந்தது.பொன்மயமான் உறையில் போடப்பட்டு விளங்கும்
கொற்றவாள் என்னும் அந்த வாளை அரசன் எவ்விடம் சென்றாலும் கைவிடாமல் அணிந்து கொண்டிருந்தான்.

ஒரு சமயத்தில் அம்மன்னன் வேட்டையில் விருப்பம் உடையவனாய்க் க்த்தி,அம்பு,வில் ஆகிய ஆயுதங்களோடு உடும்பின்
தோலால் மறைக்கப்பட்ட வலிய கவசம் உடையவனாய்க் குறைந்த எண்ணிக்கையிலான சேனைகளோடு வேடர்கள் வழி காட்ட
வனத்திற்குள் சென்றான்.

பனை,பலா,மா,ம்கிழ்,இலுப்பை,அரசு,முருக்கு,பாதிரி,நாவல்,விளா,புன்னை,கருங்காலி,இலந்தை,வில்வம்,தாணி,நாரத்தை,
எலுமிச்சை,மந்தாரை,வேம்பு,தாழி,அலரி, நொச்சி முதலான பல்வகை மரங்கள் நிறைந்ததாய்,தேன் குடித்த வ்ண்டுகள் இசை பாட,சிங்கம்,புலி முதலான வனவிலங்குகள் பலவற்றை உடையதாய்,சிங்கத்தால் பிளக்கப் பட்ட யானையின் மத்தகத்தில்
இருந்து சிதறிய முத்துக்களை உடையதாய்,கோரைக் கிழ்ங்கிற்காகப் பன்றியால் பறிக்கப்பட்ட பூமியை உடையதாய்ப் பெரிய
பாம்புகள் சுற்றித் திரிய மிகவும் அச்சம் தருகின்ற அக்காட்டில் வேட்டைக்கு வேண்டிய பலவிதமான கருவிகளுட்ன் புகுந்து,
அஙகங்கே வ்லைகளைக் கட்டிப் பள்ளங்களையும் உண்டாக்கிச் சேனைகளின் மூலம் அம்மிருகங்களை வெருண்டோடச் செய்து
வரும்போது புலி,கரடி,பன்றி,எருமை,மான் முதலான் விலங்குகள் பேரொலியுடன் நான்கு திசைகளில் இருந்தும் கிள்ம்பி ஓடின.

அப்போது அந்த அரசன் வேட்டையாடுவதில் விருப்பமுற்று நாணில் பூட்டப் பெற்ற அம்புடன் வ்லை,பள்ளங்களில் அகப்பட்ட
விலங்குகளைத் தானே  கொன்று,தன் சேனைகளுடன் வெகு நேரம் வேட்டையாடி வருமபோது மிக்க வேகத்துடன் கூடிய அழ
கான மான் ஒன்று ஓடக் கண்டான்.

அந்த மானைக் கொல்லும் எண்ணம் உடையவனாய்த் தான் ஒருவனாகவே துரத்தும் போது,அந்த மானும் அஞ்சி ஓடியது.சில
பொழுது கண்ணுக்குத் தெரிந்தும், சில பொழுது ம்றைந்தும் ஓடி அந்த  அரசனை வஞ்சித்துக் காட்டிற்குள் இழுத்துக் கொண்டு
போனது.அவ்வாறு செல்லும் போது முன் செய்த புண்ண்ணியப் பயனால் சமிவனம் என்னும் தலத்தை அடைந்தான்.அங்கே
பார்க்கும் பொழுது தூய நீருடையதாய்,அனைத்துப் பாவங்களையும் போக்குவதாய்,ம்ங்களகரமாய் விளங்கும் மதுபுட்கரணி
என்னும் தீர்த்தத்தைக் கண்டான்.அத்தீர்த்தத்தில் நீராடத் தினசரிக் கரும்ங்களை முடித்துப் ப்ழம் முதலியனவற்றை உண்டு,
அத்தண்ணீரை அருந்தி,அங்கே த்ழைத்து வளர்ந்திருந்த ஒரு மர நிழ்லில் துணியை விரித்து அதில் படுத்துச் சுகமாக நித்திரை
செய்தான்.

அனைத்துச் சக்தியுடையவரும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து காண்ப்படுபவருமான பரமேசுவரன் அவ்விடத்தில் நித்திரை செய்யும் பக்தனான வீரபாண்டிய மன்னனது இதயத்தில் உள்ள பக்தியையும்,வீரம் முதலியவற்றையும் சோதிக்க
எண்ணித் தமது மாய சக்தியினால் அந்தக்  காட்டில் ஓர் அந்தணன் புலியால் பிடிக்கப்பட்டு வருந்துவது போல் ஒரு தோற்றத்
தினை அரசன் காணும்படி செய்தார்.

மூன்றாம் அத்தியாயம் நிறைவுற்றது.


On Friday, October 11, 2013 8:49:12 AM UTC+5:30, meenavan2 wrote:

கி.காளைராசன்

unread,
Oct 23, 2013, 5:37:14 AM10/23/13
to mintamil
காப்பியப் கவிஞருக்கு வணக்கம்.


2013/10/23 meenavan2 <meen...@gmail.com>

கோவிலூர்ப் புராணம் - தொடர்ச்சி

அச்சிவப் பதியில் பெரு வலிமை உடையவனும்,கையிலே வில்லுடையவனாயும் பகைவர் பலரை வென்றவனாகவும் சிவபக்தி காரணமாகச் சிவவழிபாட்டில் மேம்பட்டவனாகவும் அனத்து உயிர்களிடத்து எப்பொழுதும் கருணை உடையவனாய,முத்துமாலை,பவளமாலை,உருத்திராக்க மாலைகளோடு விபூதி அணிந்தவனாய் உள்ள மன்னன் ஒருவன் வீரபாண்டியன் என்ற பெயருடன் விளங்கி வந்தான்.

அம்மன்னன் காளீசுவரர் (காளையார் கோயிலில் உள்ள சுயம்புலிங்கம்) அருளால் மிகச் சிறந்த ஒரு வாளைப் பெற்றான்.  அவ்வாளினால் அனைத்துப் பகை அரசர்கள் அனைவரையும் வென்றபடியால் அவ்வாளுக்குக் கொற்றவாள் என்ற பெயர் வந்தது.பொன்மயமான உறையில் போடப்பட்டு விளங்கும் கொற்றவாள் என்னும் அந்த வாளை அரசன் எவ்விடம் சென்றாலும் கைவிடாமல் அணிந்து கொண்டிருந்தான்.

ஒரு சமயத்தில் அம்மன்னன் வேட்டையில் விருப்பம் உடையவனாய்க் கத்தி,அம்பு,வில் ஆகிய ஆயுதங்களோடு உடும்பின்

தோலால் மறைக்கப்பட்ட வலிய கவசம் உடையவனாய்க் குறைந்த எண்ணிக்கையிலான சேனைகளோடு வேடர்கள் வழி காட்ட வனத்திற்குள் சென்றான்.

பனை,பலா,மா,மகிழ்,இலுப்பை,அரசு,முருக்கு,பாதிரி,நாவல்,விளா,புன்னை,கருங்காலி,இலந்தை,வில்வம்,தாணி,நாரத்தை,
எலுமிச்சை,மந்தாரை,வேம்பு,தாழி,அலரி, நொச்சி முதலான பல்வகை மரங்கள் நிறைந்ததாய்,தேன் குடித்த வண்டுகள் இசை பாட,சிங்கம்,புலி முதலான வனவிலங்குகள் பலவற்றை உடையதாய்,சிங்கத்தால் பிளக்கப் பட்ட யானையின் மத்தகத்தில்
இருந்து சிதறிய முத்துக்களை உடையதாய்,கோரைக் கிழங்கிற்காகப் பன்றியால் பறிக்கப்பட்ட பூமியை உடையதாய்ப் பெரிய
பாம்புகள் சுற்றித் திரிய மிகவும் அச்சம் தருகின்ற அக்காட்டில் வேட்டைக்கு வேண்டிய பலவிதமான கருவிகளுடன் புகுந்து,
ஆங்காங்கே வ்லைகளைக் கட்டிப் பள்ளங்களையும் உண்டாக்கிச் சேனைகளின் மூலம் அம்மிருகங்களை வெருண்டோடச் செய்து வரும்போது புலி,கரடி,பன்றி,எருமை,மான் முதலான விலங்குகள் பேரொலியுடன் நான்கு திசைகளில் இருந்தும் கிளம்பி ஓடின.

அப்போது அந்த அரசன் வேட்டையாடுவதில் விருப்பமுற்று நாணில் பூட்டப் பெற்ற அம்புடன் வலை,பள்ளங்களில் அகப்பட்ட
விலங்குகளைத் தானே  கொன்று, தன் சேனைகளுடன் வெகு நேரம் வேட்டையாடி வரும்போது மிக்க வேகத்துடன் கூடிய அழகான மான் ஒன்று ஓடக் கண்டான்.

அந்த மானைக் கொல்லும் எண்ணம் உடையவனாய்த் தான் ஒருவனாகவே துரத்தும் போது, அந்த மானும் அஞ்சி ஓடியது.  சில
பொழுது கண்ணுக்குத் தெரிந்தும், சில பொழுது மறைந்தும் ஓடி அந்த  அரசனை வஞ்சித்துக் காட்டிற்குள் இழுத்துக் கொண்டு
போனது.  அவ்வாறு செல்லும் போது முன் செய்த புண்ண்ணியப் பயனால் சமிவனம் என்னும் தலத்தை அடைந்தான்.  அங்கே
பார்க்கும் பொழுது தூய நீருடையதாய், அனைத்துப் பாவங்களையும் போக்குவதாய், மங்களகரமாய் விளங்கும் மதுபுட்கரணி
என்னும் தீர்த்தத்தைக் கண்டான்.அத்தீர்த்தத்தில் நீராடித் தினசரிக் கருமங்களை முடித்துப் பழம் முதலியனவற்றை உண்டு,
அத்தண்ணீரை அருந்தி, அங்கே தழைத்து வளர்ந்திருந்த ஒரு மர நிழலில் துணியை விரித்து அதில் படுத்துச் சுகமாக நித்திரை

செய்தான்.

அனைத்துச் சக்தியுடையவரும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து காணப்படுபவருமான பரமேசுவரன் அவ்விடத்தில் நித்திரை செய்யும் பக்தனான வீரபாண்டிய மன்னனது இதயத்தில் உள்ள பக்தியையும்,வீரம் முதலியவற்றையும் சோதிக்க

meenavan2

unread,
Oct 24, 2013, 2:54:59 AM10/24/13
to mint...@googlegroups.com

நான்காம் அத்தியாயம்

வீரபாண்டியனுக்கும் மாயப் புலிக்கும் இடையே நடந்த வாக்கு வாதம்

அகத்தியர் சைமினி முனிவரை நோக்கி,சைமினியே!புலியின் கையில் அகப்பட்ட அவ்வந்தணன்,புலியால் கீறப்பட்ட நிலையில்
அரசனை நோக்கி,அரசே!புலியால் பிடிக்கப் பட்டுள்ள  என்னைக் காப்பாற்றுங்கள் என்று அழுதான்.அவ்வொலியைக் கேட்ட வீர
பாண்டியன் மிக்க பரபரப்போடு எழுந்து,தான் முன் வைத்திருந்த கொற்றவாளினை நான்கு திசையிலும்  தேடிக் காணாமையால்
ஆ! இதுவென்ன மாயம் என்ற எண்ணத்தோடு ஆயுதம் இல்லாதிருந்த நிலையிலும் தைரியத்தோடு புலிவாய்ப்பட்ட அந்தணனை
விடுவிக்க எண்ணிப் புலியின் அருகிற் சென்றான்.

அருகில் வரும் அரசனைக் கண்ட புலியானது,அரசனை நோக்கி,அரசே!நான் மிக்க பசியுடன் இருக்கிறேன். நீ என் அருகில் வருவா
யானால் உன் உடலை இப்பொழ்தே தின்று விடுவேன்.இத்ற்கு எந்த விதமான் ஐயமும் இல்லை என்று மனிதக் குரலால் சொல்ல
அதனை கேட்ட அரசன் மேலும் தைரியத்தோடு அப்புலியிடம் சொல்லத் தொடங்கினான்.

ஏ!புலியே! இவ்வந்தணன் அன்னம் முதலியவற்றை உண்ணாமையாலும்,உடலை வருத்தித் தவம் செய்தமையாலும் உடலில்
உள்ள எலும்புகள் வெளியே தெரியும்படியாக உள்ளன.இவன் உடலை நீ உண்டால் உன் பற்களுக்குத் துன்பம் உண்டாகுமே
தவிரப் பசி நீங்க மாட்டாது.ஆதலால் அன்னம்,கனி முதலியனவற்றை உண்டு பெருத்துள்ள என்னைத் தின்று பசியாறுக என்று
சொல்லக் கேட்ட புலி அரசனை நோக்கிக் கூறத் தொடங்குகிற்து.

அரசனே!கடல் சூழ்ந்த இந்தப் பரந்த பூமியை ஆள்வதோடு,தந்தை,தாய்,உற்றார்,உறவினர்களுக்கு ஆதரவாய் இருப்பவன் நீ.ஆத
லால் அனைவருக்கும் உதவியாய்  உள்ள் நீ,இந்த எளிய அந்தணனுக்காக ஏன் விடுகிறாய்?இந்த எண்ணத்தை இப்பொழுதே
விட்டு விட்டு உன் நகரம் செலக.என் பசி நீங்கும் பொருட்டு இவ்வந்தணனைப் புசிப்பேன் என்று கூறியதும் ம்ன்னன் கோபத்தி
னால் கண் சிவந்து,ஏ!புலியே! என் முன்னே நீ எந்த விதப் பயமும் இன்றி இவ்வந்தணனை உண்பேன் என்று சொன்னாய் அல்லவா?இச்சொற்களை நான் கேட்ட பின்னரும் அலட்சியமாக இருந்தால் என் உயிர் நீங்க வேண்டாமோ?என்னுடைய கை
வாள் என்னிடம் இருந்திருந்தால் இப்பொழுதே உன்னுடலைத் துண்டாக்கி இருப்பேன்.தெய்வத்தின் சோதனையால் என் கை
வாளைக் காணவில்லை.ஆத்லால் தெய்வமே வலிமை உடையது.மனித முய்ற்சி வ்லிமை உடையதன்று.

ஏ!புலியே!ஐம்பூதக் கலவையான இவ்வுடல் இன்றோ,நாளையோ,இல்லை,அடுத்த நாளோ காலனால் அழிக்கப்படும்.இச்செயல்
என்னால் செய்யப்பட்டது,இனி இதனைச் செய்யப் போகிறேன்,இதை இன்னும் செய்ய முடியவில்லை,என்று இது போன்ற சிந்த்
னைகளை உடைய மூட உயிர்களைக் காலன் கருணையின்றிக் கால பாசத்தால் கட்டி,ஒரு கணப்பொழுதில் அழித்து விடுவான்.
ஆதலால் புத்தி உடையவன் எப்பொழுதும் அனைவரும் புகழும்படி ந்ல்ல காரியங்களை எச்சரிக்கையாகச் செய்ய வேண்டும்.ஏன்
எனில் நற்செயல் செய்வோருக்கு மரணபயம் ஒரு காலத்திலும்  எள்ளளவு கூட ஏற்படாதன்றோ.ஆதலால் நிலையற்ற தசைப்
பிண்டமாகிய இவ்வுடல் மீது எனக்கு ஒரு போதும் ஆசை இல்லை.


On Friday, October 11, 2013 8:49:12 AM UTC+5:30, meenavan2 wrote:

meenavan2

unread,
Oct 24, 2013, 8:23:54 AM10/24/13
to mint...@googlegroups.com

கோவிலூர்ப் புராணம் - தொடர்ச்சி

அன்றியும் நான் அவ்வந்தணனைக் காப்பாற்றா விட்டால் என்னுடைய சத்திரியன் என்னும் தன்மை கெட்டுப் போகும்.புலி முத
லிய விலங்குகளால் அஞ்சி இருக்கக் கூடிய உயிர்களின் அச்சத்தைப் போக்கிக் காக்கும் தன்மை உடையவனே நல்ல சத்திரியன்
என்று பெரியோர் சொல்லுவர்.பயந்தவர்களைக் காப்பாற்றவே அரசர்கள் ஆயுதங்களைத் த்ரிப்பார்கள்.இப்போது என் கையில்
கத்தி இல்லாமையினால் நீ தயவு செய்து அந்தணனை விட்டுவிட்டு என்னைத் தின்பாயாக.என்னால் பாண்டிய குலத்திற்கு எந்த
விதமான் பழியும் வந்து விடாதபடி கருணை செய்வாயாக என்ற அரசன் சொல்லப் புலி அரசனை நோக்கி,

உன்னிடம் பலவிதமான் செல்வங்கள் நிரம்பியுள்ளன.தேர்,யானை,குதிரை,காலாள் என் நான்கு விதமான படைகளும் உள்ளன.
பொன்னுக்குச் சமமான ஒளி பொருந்திய அழ்கிய பெண்களும் நிறைய உள்ளனர்.புத்திரப் பேறும் வாய்க்கப் பெற்றவனாய் உள்ளாய்.இப்படி கிடைத்தற்கு அருமையான் இவ்வின்பங்களை விட்டு விட்டு நீ ஏன் வீணாக இற்க்க நினைக்கிறாய் என்று கூறிய புலியை நோக்கி அரசன்,

ஏ! புலியே! மின்னலுக்குச் சமமான,நிலையற்ற,ஆபத்துக்கள் அனைத்துக்கும் இடமாய்  இருக்கின்ற் அரச செல்வங்களை அழிக்க
வேண்டும்.அனைவரும் புகழுமாறு உலகிலே ந்ல்ல செயலைச் செய்பவன் பிரமனுடைய சத்தியலோகம் முதலான பல ய்ல்கங்
களை அடையலாம்.அத்தகைய் செயல்களைத்தான் அறிவாளிகள் செய்வர்.வேறு தீங்கை ஒருபோதும் செய்ய இயலாது என்று
சொல்லியவாறு தன் தலையைப் புலி வாயிற் கொடுத்தான்.அந்த ஆச்சரியமான செயலை வானிலே இருந்து கண்ட தேவர்கள்
பூ மாரி பொழிந்தனர்.உடனே அந்தணனும் புலியும் காணாம்ற் போயினர்.அரசன் இது என்ன ஆச்சரியம் என்று நினத்து அந்த வன்னி வனத்திலேயே தனித்து இருந்தான்.

நான்காம் அத்தியாயம் நிறைவுற்றது.


ஐந்தாம் அத்தியாயம்.
வீரபாண்டியனுக்குத் திரிபுவனேசுவரர் காட்சி கொடுத்து அருள் புரிந்தது.

அரசனுடைய் சேனைகள் அவ்வரசனை அனைத்து இடங்களிலும் தேடியவாறு வன்ன வனத்திற்கு வந்து சேர்ந்தது.சேனை
களைக் கண்ட மன்னன்,அவர்களுக்கு அங்கு நடந்தவற்றைக் கூறி,இவ்வனத்தில் ஏதோ ஒரு பெரிய ஆச்சரியமான செய்தி
இருக்கிறது,என்வே நீங்கள் சுற்றிப் பார்த்து வாருங்கள் என்று கட்டளை இட்டான்.அரசன் கூற்றைக் கேட்ட சேனைகள் அவ்வறே
எங்கும் தேடிப்  பார்த்த பொழுது ஒரு சோலை தென்பட்டது.அதன் நடுவில் இருந்த ஒரு வ்ன்னி மரத்தின் அருகில் ஒரு பெரிய
இலிங்கத்தையும் அதன் பக்கத்தில் இருந்த அரசனின் கொற்ற வாளையும் கண்டு உடனே அரசனிடம் வந்து கூறின்ர்;.கேட்ட அரசன் ப்க்தி மீதூற ஆனந்த்க் கண்ணீர் பெருக்கெடுக்க,ம்யிர்க்கூச்செறிந்து விரைவாக அவ்விடம் வந்து ம்காலிங்கத்தையும்,
அதன் அருகிலே இருந்த கொற்ற வாளையும் கண்டு,பூமியின் மேல் உடல் படிய வணங்கித் தலைமேல் கை கூப்பி அஞ்சலி செய்
தவாறு பரமேசுவரனைத் துதிக்கத் தொட்ங்கினான்.

சத்திய ஞானானந்தரே போற்றி.பரிபூரணரே போற்றி.ம்காசக்தி உடையவரே போற்றி.எங்கும் நிறைந்தவரே போற்றி.அனைவ
ருக்கும் விருப்பமானவரே போற்றி.எல்லாப் பயன்களையும் தருபவரே போற்றி.சந்திரனை தலையிற் சூடியவனே போற்றி.


On Friday, October 11, 2013 8:49:12 AM UTC+5:30, meenavan2 wrote:

K. Loganathan

unread,
Oct 24, 2013, 9:01:30 AM10/24/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

இந்த கோவிலூர் புராணம் வர்ணஸ்ரம தர்மத்தை பரிந்துரை செய்வதுபோல இருக்கின்றதே! இது உணமையான புராணமா அல்லது யாரோ ஓர் பிராமணர் சேடித்ட  கதையா?

உண்மையான புராணங்களில் தீயதை அழிப்பதும் ந்ல்லதை போற்றுவதுமாக அனைவருக்கும் பொதுவாகிய நல்லறம் பகரப்படும்

புராணங்கள் என்பன இறைவனது திருவிளையாடல்களாகும். இங்கு கூறுவதுபோல இறைவனே பொல்லாத அறத்திற்குப் புறம்பான வர்ணாஸ்ரம தர்மத்தை வற்புறுதுவதாக வருவது நியாயமா? இது உண்மையான புராணமா அல்லது யாரோ ஒருவர் மனதில் எழுந்த கற்பனையா?

இப்படிப்பட்ட கேள்விகைக் கேட்பதற்கு மன்னிக்கவும் தேவாரம் திவ்விய பிரபந்தம் போன்றவற்றில் வரும் புராணக் கதைகள் வர்னாஸ்ரம தர்மத்டை கண்டிப்பதாக்வே வர, அதனால் தான் இந்தக் கேள்வி,

உலகன்


2013/10/24 meenavan2 <meen...@gmail.com>

--

கி.காளைராசன்

unread,
Oct 24, 2013, 9:05:37 PM10/24/13
to mintamil
காப்பியக் கவிஞருக்கு வணக்கம்.

2013/10/24 meenavan2 <meen...@gmail.com>:
> ஒரு சோலை தென்பட்டது.அதன் நடுவில் இருந்த ஒரு வன்னி மரத்தின் அருகில் ஒரு > பெரிய> இலிங்கத்தையும் அதன் பக்கத்தில் இருந்த அரசனின் கொற்ற வாளையும் கண்டு உடனே
> அரசனிடம் வந்து கூறினர்.  கேட்ட அரசன் பக்தி மீதூற ஆனந்தக் கண்ணீர் > பெருக்கெடுக்க, மயிர்க்கூச்செறிந்து விரைவாக அவ்விடம் வந்து மகாலிங்கத்தையும்,
> அதன் அருகிலே இருந்த கொற்ற வாளையும் கண்டு, பூமியின் மேல் உடல் படிய வணங்கித் > தலைமேல் கை கூப்பி அஞ்சலி செய்> தவாறு பரமேசுவரனைத் துதிக்கத் தொடங்கினான்.

35B.gif

K. Loganathan

unread,
Oct 24, 2013, 9:06:24 PM10/24/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா தேமொழி

தாங்கள் கூற வருவது எனக்குத் தெளிவாகத்  தெரியவில்லை,. தேவராத் திவ்விய பிரபந்தங்களில் இல்லாத வர்ணாச்சிரம சிந்தனைகளை வலிந்து  இத்தகைய தல புராணங்க்ள் ஊடே பரப்புவதை எப்படி புரிந்துகொள்வது என்பதுதான் என் கேள்வி.

காலத்தின் கட்டயமாக இப்படிப்ப் பண்பாட்டு சீரழிவுகள் தமிழர்களாலேயே தமிழ் இலக்கியங்களில் புகுத்தப்பட்டதை ஆதரிக்கின்றீர்களா கண்டிக்கின்றீர்களா என்று புரியவில்லை,

இப்பட்ட தலபுராணங்கள்  சத்திரின் என்று அரசனை விழிப்பது அவன் உண்மையான சத்திரியனாக இருந்தால் ஓர் பிராமணனை தன் உயிரைக் கொடுத்தாலும் ஓர் பொல்லாத விலங்காகிய புலியிடமிருந்து தன் தலையைக் கொடுத்தாவது காப்பாற்ர  வேண்டும் எனும் போதனை நியாயமானதா?

இது பிராமணன் ஒருவனின் சதி என்றே படுகின்றது, அர்சன் என்பான் ஓர் அரசியல் தலைவன் என்பான் அனைவருக்கும் நன்மை செய்பவனாகத் தான் இருக்க வேண்டும் இவ்வாறு பிராமணனை மாத்திரம் உயிரையும் கொடுத்து காப்பாற்ற வேண்டும் எனும் போதனை  நீச்சயமாக ஓர் பிராமணனின் சூழ்ச்சியாகத்தான் இருக்க முடியும்

இங்கு நிச்சயாமாக் ஒர் புராணக் கரு திரிக்கப்பட்டு வர்ணச் சிந்தனை தர்மத்திற்கு உரியதாக திருத்தப்பட்டுள்ளது.

இது இன்று வரை கண்டிக்கப்படாது போற்றப்பட்டு ஓர் தலபுரணமாகவும் தமிழர்களால் பாராட்டப்படுள்ளது

இது தமிழனின் சிந்தனை ஆற்றலைப் பற்றி என்ன சொல்கின்றது என்பதை தங்கள சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்

உலகன்


2013/10/24 தேமொழி <them...@yahoo.com>

///இது உண்மையான புராணமா அல்லது யாரோ ஒருவர் மனதில் எழுந்த கற்பனையா?///

புலி பேசியது என்பது போன்ற விளக்கங்கள் கொடுக்கப்படும் படைப்புகள், குழந்தைகளை நன்னெறி படுத்துவதற்காக சொல்லப்படும் ஐவகை சூழ்ச்சி கதை வகைகளைச் சார்ந்தவை என்பதில் ஐயமில்லை.

இதுபோன்ற படைப்புகளுக்கு வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே உண்டு. 
ஆனால் அந்த முக்கியத்துவம் தலவரலாற்றிலோ, வழிபாட்டு ஆற்றுப்படுத்தலிலோ நிச்சயமாக  அல்ல.

படைப்பு படைக்கப்பட்ட காலத்தில் சமுதாயத்தில் மக்களின் நிலை என்ன? எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?  மக்களின் சிந்தனை எந்த வழி சென்றது? இது போன்ற படைப்புகளினால் மக்களுக்கு சொல்லப்படும் செய்தி  யாது?  அதன் விளைவு எவ்வாறாக எதிர்பார்க்கப்பட்டது என்பது போன்றவற்றை  அறிந்து கொள்ளவது மட்டுமே கவனிக்கப் பட வேண்டியவையாக எனக்குத் தோன்றுகிறது. .  இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்பதால் அக்கால நிலையைப் படம் பிடிக்கிறது.  அக்கால தலபுராணமோ, இக்கால காஞ்சிப்பெரியவர் போன்ற ஆன்மீக வாதிகளின் வரலாறோ கல்வெட்டுகள் போன்று கட்டாயம் படிக்கப்பட வேண்டியவை.

இவை படைக்கப்பட்ட நோக்கத்தையும் மீறி அறியத் தருவது நமது பண்பாட்டின் ஒவ்வொரு காலநிலை நடைமுறைகளை, சிந்தனைகளை.  பக்தியுடன் வழிபட ஒரு மணித்துளி மனதில் வாங்கினாலும் போதுமானது இல்லாவிட்டாலும் தன்னை வணங்காதவர்களை தண்டிப்பது கடவுளின் பண்பாக இருப்பதற்கு நியாமில்லை. அது இக்கால அரசியல்வாதிகளின் பண்புகளை கடவுளின் மீது ஏற்றுவது. இலக்கியத்தின் கலை அழகையோ, காலவரலாற்றையோ மட்டும்தான் நான் கருத்தில் கொள்வதால் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளேன். 

அன்புடன்
..... தேமொழி

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

கி.காளைராசன்

unread,
Oct 24, 2013, 9:45:57 PM10/24/13
to mintamil, vallamai, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com, K. Loganathan
வணக்கம் ஐயா,
இதுபோன்ற தலபுராணங்களின் நிலைகுறித்துக் கலந்துபேசிடுவதற்கெனத் தமிழக தலபுராணங்களின் நிலை - கலந்துரையாடல் என்ற பெயரில் ஒரு தனிஇழையைத் திருமதி.சுபாஷினிடெர்மல் அவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்.
எனவே
ஐயா, தாங்கள் அன்புள்ளம் கொண்டு தலபுராணங்கள் தொடர்பான தங்களது ஐயப்பாடுகளை அந்த இழையில் பதிவு செய்தால் நாங்களும் எங்களது கருத்துக்களை அந்த இழையில் பதிவு செய்திட நல்லதொரு வழிவகுக்கும்.

தங்களது மேலான ஒத்துழைப்பை பேரன்புடன் வேண்டுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

2013/10/24 K. Loganathan <k.ula...@gmail.com>

meenavan2

unread,
Oct 25, 2013, 2:10:35 AM10/25/13
to mint...@googlegroups.com

அன்புள்ள உலகன் அவர்களே!வணக்கம்
முதலில்  நான் புராண்ங்கள் பொய்யா?கற்பனையா என்ற விவாதத்திற்கு வர இச்சையில்லை.
அடுத்ததாக்ப் புராணங்கள் பெரும்பாலும் வ்டமொழியில் இருந்தே தமிழ் ஆக்கம் பெற்றுள்ளன என்பது பெரும்பாலோர் கொள்கை.
ஸ்காந்த புராண்ம் என்ற வடமொழிப் புராணமே இதற்கு மூலம்.
இந்தப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை புராண்ம் எழுதினார்.
அதுவும் கோவிலூர் மூன்றாம் ஆதீனகர்த்தரின் வேண்டுகோபளின்படி இப்புராண்ம் தமிழில் இயற்றப்பட்டது.
அதற்காக அவருக்கு ரூ.1000/..சனமானம் வழ்ங்கப் பட்டது.
வன்னி வனம் வந்த வீரபாண்டியன் பெரிய கோவில் ஒன்று எழுப்பியதாகப் புராண்ம் குறிப்பிடுகிற்து.
இந்தக் கோவிலூருக்கு வ்ந்தவரும், கோவிலூர் ஆதீனத்தை உண்டாக்கிய முதலாம் மடாதிபதியுமான சீர் வள்ர் சீர் முத்துராம
லிங்க ஆண்டவர் திருநெல்லை அம்மனை ஒரு கூரைக் கொட்டகையின் கீழே கண்டார்.அதற்குக் கோவில் ஒன்று எழுப்பிட்
எண்ணி நகரத்தார் பொருளுத்வியோடு இப்பெரிய கோவிலைச் சிற்ப வேலைப்பாடமைந்த கற்றளியாகக் கட்டினார்.
மேலும் இங்கே பாண்டியர் படைவீடு இருந்ததாக வரலாறு சொல்கிற்து.
அதற்கான சான்றுகள் புராண்த்தில் இல்லை.
அப்ப்டை ஏழகப்  பெரும்படை எனப்பட்டது.அப்படையினர் வணங்கி வந்த பெருமாள் ஏழகப் பெருமாள் என்று அழைக்கப்
பட்டார்.கோவிலூருக்குத் தெற்கே அக்கோவில் சிதைந்த நிலையில் இன்றும் உள்ளது
ஏழு படையினரும் இருந்த பகுதியை ஏழகப் பெருந்தெரு என்று வழ்ங்கி வந்தன்ர்.
நகரத்தார் தங்கள் திருமணத்தின் போது எழுதிக் கொள்கின்ற் இசைபிடிமானத்தில் மாற்றூர்க் கோவிலாரும் வயிரவன் கோவி
லாரும் ஏழகப் பெருந்திருவான வீரபாண்டியபுரம் என்றே எழுதுவர்.
ஏழகப் பெருந்தெரு,வீரபாண்டியபுரம் என்ற பெயர்கள் கோவிலூரின் மறு பெயர்களாகும்.
இத்தலத்தில் அந்தணர்களுக்கு அன்னம் கொடுத்தாலும்,சொர்ணம் கொடுத்தாலும் சொர்க்கம் கிடைக்கும் என்று புராணம்
சொல்கிறது.
அந்தணர்களுக்கு என்பது வ்ருணாசிரமத்தைக் குறிப்பது உண்மையே.
ஆனால் இம்மடாலயம் தொடங்கிய நாளிலிருந்து  இன்றுவரை இடைவிலாமல் தினந்தோறும் ஏராளமான ம்க்க்ளுக்குச் சாதி
வேறுபாடின்றி அன்னதானம் நடைபெற்று வருகின்ற்து.
கோவிலூரிலிருந்து காரைக்குடி வ்ரை ஏராளமான விளைநிலங்கள் இருந்தன.நிர்வாகத் திற்மைக் குறைவினால் பல நிலங்கள்
கைவிட்டுப் போயின.
மடாலயத்தின் வருவாய் குறைந்தது.இந்நிலையில் முதலாம் மடாதிபதியின் தலைமுறையில் ஆறாவது பேரனாக வந்த நாச்சி
யப்ப சுவாமிகள் தான் புகைப்பட வாயிலாகவும்,நூல்கள் வெளியீட்டின் மூலமாகவும் சேர்த்த கோடிக்கணக்கான பணத்தின் மூலம் கைவிட்டுப் போன நிலங்களை மீட்டு.9 க்ல்லூரிகளை உருவாக்கிக் குறைந்த கட்டணத்தில் பயில வைத்தார்;
ஆதரவற்ற  ம்க்கள் 1000 பேருக்கு மாதம் ரூ.500 வழங்கி வருகிறார்.ரூ.7000.வீதம் மாதம் 25 பேர்களுக்குத் திருமண உதவியாகப்
பணம் வழங்கப்பட்டு வருகிற்து.நாதஸ்வரம்,சிற்பம் போன்ற கலைகள் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்ற்ன.
திருநெல்லையின் அற்புதங்கள் இன்றளவும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிற்து.

முத்துராம்லிங்க ஆண்டவர் அன்னதான மண்ட்பத்திற்காக அடிக்கல் நாட்டுகையில் வெற்றிலை பாக்கு வாங்கியவர்கள் தேங்
காய் வாங்க மறந்து விட்டனர்.அப்பொழுது ஒரு சிறு பெண் தேங்காயைக் கொண்டு வந்து கொடுத்தாள்.பெயரைக் கேட்ட பொழுது திருநெல்லை என்று சொல்லியது.

நாச்சியப்ப சுவாமிகள் மழலையர் பள்ளி ஒன்று தொடங்குகையில் முதன் முதலாகச் சேர்ந்த பெண் குழ்ந்தையின் பெயர்
திருநெல்லை.

ஒன்பதாம் மடாபதி இராமநாத தேசிகர் காலத்தில் திருக்குட நீராட்டு நிகழ்ந்தது. நீண்ட காலமாக அம்மனுக்குத் தேன் பால் த்யிர்
முதலியவற்றால் அபிசேகம் நிகழ்ந்தமையால் பாதங்கள் தெரியாமல் தேய்ந்து போயின.அதற்கு மாற்றாக வேறு சிலை
தயாரானது.அன்றிரவு மடாதிபதியின் கனவில்  அம்மை தோன்றி,உன் மகளுக்குக் கால் ஒச்சமாக இருப்பின் தூக்கி எறிந்து
விடுவாயோ என்று கேட்கக் கண் விழித்த மடாதிபதி சிற்பிகளைக் கலந்தாலோசித்து வெள்ளி கொண்டு பாத வ்டிவம் செய்து
பொருத்தினர்.
புராணங்கள் பொய்யானாலும் நான் சொல்லும் இந்த வ்ரலாறுகள் உண்மையானவை

பெரியபுராணத்தில் நந்தனாரை இப்புல்லிய பிறப்பு நீங்க நெருப்பில் .மூழ்கி வாருமெனச் சொல்லித் தீ மூழக வைத்தனர்.நந்தன்
அந்தணக் கோலத்தில் வெளிவந்ததாகச் சொல்லும் செய்தி வருணாசிரமம் கலந்த செய்தி இல்லையா.புராண வர்லாற்றைக்
காண்பதை விடப் பிள்ளையவர்களின் இலக்கியச் செய்தி அறியலாம் அல்லவா?தெரிந்து கொள்ளவே புராணச் செய்தி முதலில்
எழுதப் படுகிற்து.

K. Loganathan

unread,
Oct 25, 2013, 2:34:20 AM10/25/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
திரு மீனவன் அவர்களே

தங்கள பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் . தங்கள் கூற்று

//ஸ்காந்த புராண்ம் என்ற வடமொழிப் புராணமே இதற்கு மூலம்.
இந்தப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை புராண்ம் எழுதினார்.//

 டாகடர் கமிழ் சுவலபில் ஆய்வின் படி கச்சியப்பரின் கந்த புராணமே மூலம் என்றும் அதன் தழுவலே வடமொழி ஸ்கந்த புரானம் என்றும் கூறுவர். தமிழ் கந்தபுராணம் வள்ளி திருமணத்தோடு முடிய ஸ்கந்த புராணம் அப்படி இல்லை, என்பர்,

 மேலும் கந்த புரானத்தின் உற்பத்திக் காண்ட கருத்துக்கள் சுமேருத் தமிழ்  En merukar En Arattaa  என்ற காவியத்தில் உண்டு,

 பதிணெண் புராணங்கள முதலில் சுமேருத் தமிழில் தோன்றி பிறகு இரண்டாம சங்கத் தமிழில் வளர்ந்து மக்கள் நாவில் ஒருவாறு நின்று பின் வடமொழியில் எழுதப்பட்டிருக்கலாம்

 ஆக எவ்வாறு இந்தப் புராணங்கள் தோன்றின என்பது இன்னும் ஆயந்து தெளிய வேண்டிய ஓர் கருத்த்து ஆகும். தமிழகத்தில் 16ஆம் நூற்றண்டுக்குப் பிறகே எதற்கெடுத்தாலும் வடமொழி மூலம் கற்பிப்பது வழக்கமாகிவிட்டது. அப்படி கற்பித்தால்தான் அந்த புராணம் தமிழில் வரும்போது ஏற்றுக்கொள்ள்ப்பட்ட ஓர் சூழ்நிலை இருந்ததாக அற்கின்றேன்

தொடர்ந்து ஆய்ந்து சிந்தித்துத் தெளியவே இக்கருத்துக்களை முன் வைக்கின்றேன்

உலகன்





2013/10/25 meenavan2 <meen...@gmail.com>
--

கி.காளைராசன்

unread,
Nov 10, 2013, 10:15:23 AM11/10/13
to mintamil
காப்பியப் புலவருக்கு வணக்கம்.

அன்புள்ளம் கொண்டு கொற்றவாளீசர் புராணத்தைத் தொடர்ந்து எழுதுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்


2013/10/24 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Nov 11, 2013, 2:15:34 AM11/11/13
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம் ஐயா.

5ம் அத்தியாயத்துடன் இத்தொடர் நிற்கின்றது. இதனைத் தொடர வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.
இன்னும் எத்தனை அத்தியாயங்கள் இப்புராணத்திற்கு உள்ளன என்றும் தெரிவித்தால் நறு.

சுபா


2013/10/24 meenavan2 <meen...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

meenavan2

unread,
Nov 25, 2013, 6:22:42 AM11/25/13
to mint...@googlegroups.com

கோவிலூர்ப் புராணம் 12 அத்தியாயங்களை உடையது.

கோவிலூர்ப் புராணம் - தொடர்ச்சி(5 ஆம் அத்தியாயம்)

இப்படிப் பலவாறு மன்னன் வீரபாண்டியன் பலவாறு இறைவனைத் துதித்துப் போற்றினான்.பக்திப் பரவசத்தில் மூழ்கி இருக்கும் போது,அநேக கோடிச் சூரிய ஒளியுடன் குளிர் பிறையை முடியில் தாங்கி ம்லைமகள் உடனாக விடையில் ஏறி நான்கு கரங்களோடு
நீல கண்டமுடையவராய் மூன்று கண்களோடு கங்கையைத் தலையில் தாங்கியவராய்க் கருணைக் கடலான பரமசிவன் அங்கிருந்த
பெரிய இலிங்கத்தில் இருந்து அவன் கண் காண வெளிப்பட்டு,வேந்தனே! உன்னுடைய வீரத்தையும் நம்மீது கொண்ட பக்திப் பெருக்
கையும் சோதிக்கும் பொருட்டு நம்முடைய மாயாவ்லிமையினால் ஒரு புலியை உண்டாக்கினோம்.அப்புலி ஓர் அந்தணனைக் கடிக்குமாறும் செய்தோம்.அவனைக் காப்பாற்ற நீ வ்ரும்போது உன்னுடைய கொற்றவாளையும் மறைத்தோம்.இதோ அந்த உடை
வாள்,நீ எடுத்துக் கொள்க என்று கூறி அவனுக்கு வேண்டிய அனைத்தையும் கொடுத்தான்.கொற்றவாளைப் பெற்றுக் கொண்ட
வேந்தன்,இறைவனை வண்ங்கிப் பெருமானே! உமது கையால் என்னுடைய கொற்றவாளை யான் அடைந்தமையால் இன்று முதல்
கொற்றவாளீசர் என்ற பெயருடனும் வன்னி மரத்தடியில் உம்மைத் தரிசித்தமையால் இத்தலத்திற்கு வன்னி வனம் என்ற பெயரு
டனும் விளங்கி அருள் பாலிக்க வேண்டும் என்று வணங்கி வேண்ட,இறைவனும் அவ்வாறே ஆகுக என்று கூறி அந்த இலிங்கத்துள்
மறைந்தான்.அன்று முதல் இறைவன் கொற்றவாளீசர் என்ற பெயரும்,அத்தலத்திற்கு வன்னி வனம் என்ற பெயரும் விளங்கி வரு
கின்றது.
அதன் பிறகு வீரபாண்டியன் கொற்றவாளீசரைப் பன்முறை வணங்கி,அங்குள்ள மரஞ்செடி கொடிகள் அனைத்தையும் வெட்டிச்
சுத்தம் செய்து பூமியைச் சமமாக்கி புதிய பெரிய கோபுரங்களோடு கூடிய சிவாலயத்தை உண்டாக்கி அதற்கான பெரும் பொருள்க
ளையும் அளித்தான்.

காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.

meenavan2

unread,
Nov 26, 2013, 6:21:45 AM11/26/13
to mint...@googlegroups.com

கொற்றவாளீசரை வடமொழியில் இராச கட்க பர்மேசுவரர் என்றும் வன்னிவனத்தைச் சமிவனச் சேத்திரம் என்றும் அழைப்பர்.

கோவிலை உண்டாக்கிய வீரபாண்டியன் பெரிய தேர்களை உருவாக்கிய்தோடு  பெருந்திரு விழாக்களையும் நடத்தினான்.பின்னர்
அந்தச் சிவதலத்தில் பலகாலம் வாழ்ந்து,தினமும் பக்திப் பரவசத்துடன் தோத்திரங்கள் பலவற்றைக் கூறி,மங்கள நீராட்டி,பல
விதமான மலர் மாலைகளை அணிவித்து தூபங்ளாலும்,நெய்த்தீபங்களாலும் வழிபட்டு நெய்கலந்த சர்க்கரைப் பொங்கலை முன்
வைத்து நாள் தோறும் வ்ழிபட்டு அன்னதானமும் செய்து வந்தான்.
இவ்வாறு தினந்தோறும் மதுபுட்கரணி தீர்த்தத்தில் நீராடித் தூய மனத்துடன் ஐந்தெழுத்தை ஓதி இலிங்க வழிபாடும் அன்னதானமும்
செய்து கொண்டு வாழும் நாளில் ஒரு நாள் கொற்றவாளீசரையும் திரிபுவனேசுவரியையும் வணங்கும் பொருட்டு நாம் அங்கு
வந்தோம்.

அப்போது அவ்வரசன் தன் புரோகிதர்களோடு எஃப்ஹிர் கொண்டு அழைத்துச் சென்று  முறைப்படி வழிபட்டு வணங்கியவாறு,
மாமுனிவரே தங்கள் வரவு ந்ல்வரவாகுக.தங்களைத் தரிசித்தமையால் நான் தூயவனானேன்.என் பிறப்பும் மேன்மை உற்றது.
என் குலமும் மேன்மை அடைந்தது என்று கூறி அவன் நம்மை வணங்கியபோது நாம் அவ்னிடம் இவ்வாறு கூறினோம்.


காப்பியக் கவிஞர்.நா.மீனவன்


கி.காளைராசன்

unread,
Nov 27, 2013, 1:58:37 AM11/27/13
to mintamil
வணக்கம் 


2013/11/25 meenavan2 <meen...@gmail.com>


கோவிலூர்ப் புராணம் 12 அத்தியாயங்களை உடையது.

கோவிலூர்ப் புராணம் - தொடர்ச்சி(5 ஆம் அத்தியாயம்)

இப்படிப் பலவாறு மன்னன் வீரபாண்டியன் பலவாறு இறைவனைத் துதித்துப் போற்றினான்.பக்திப் பரவசத்தில் மூழ்கி இருக்கும் போது,அநேக கோடிச் சூரிய ஒளியுடன் குளிர் பிறையை முடியில் தாங்கி ம்லைமகள் உடனாக விடையில் ஏறி நான்கு கரங்களோடு
நீல கண்டமுடையவராய் மூன்று கண்களோடு கங்கையைத் தலையில் தாங்கியவராய்க் கருணைக் கடலான பரமசிவன் அங்கிருந்த
பெரிய இலிங்கத்தில் இருந்து அவன் கண் காண வெளிப்பட்டு,வேந்தனே! உன்னுடைய வீரத்தையும் நம்மீது கொண்ட பக்திப் பெருக்
கையும் சோதிக்கும் பொருட்டு நம்முடைய மாயாவ்லிமையினால் ஒரு புலியை உண்டாக்கினோம்.அப்புலி ஓர் அந்தணனைக் கடிக்குமாறும் செய்தோம்.அவனைக் காப்பாற்ற நீ வ்ரும்போது உன்னுடைய கொற்றவாளையும் மறைத்தோம்.இதோ அந்த உடை
வாள்,நீ எடுத்துக் கொள்க என்று கூறி அவனுக்கு வேண்டிய அனைத்தையும் கொடுத்தான்.கொற்றவாளைப் பெற்றுக் கொண்ட
வேந்தன்,இறைவனை வண்ங்கிப் பெருமானே! உமது கையால் என்னுடைய கொற்றவாளை யான் அடைந்தமையால் இன்று முதல்
கொற்றவாளீசர் என்ற பெயருடனும் வன்னி மரத்தடியில் உம்மைத் தரிசித்தமையால் இத்தலத்திற்கு வன்னி வனம் என்ற பெயரு
டனும் விளங்கி அருள் பாலிக்க வேண்டும் என்று வணங்கி வேண்ட,இறைவனும் அவ்வாறே ஆகுக என்று கூறி அந்த இலிங்கத்துள்
மறைந்தான்.அன்று முதல் இறைவன் கொற்றவாளீசர் என்ற பெயரும்,அத்தலத்திற்கு வன்னி வனம் என்ற பெயரும் விளங்கி வரு
கின்றது.
அதன் பிறகு வீரபாண்டியன் கொற்றவாளீசரைப் பன்முறை வணங்கி,அங்குள்ள மரஞ்செடி கொடிகள் அனைத்தையும் வெட்டிச்
சுத்தம் செய்து பூமியைச் சமமாக்கி புதிய பெரிய கோபுரங்களோடு கூடிய சிவாலயத்தை உண்டாக்கி அதற்கான பெரும் பொருள்க
ளையும் அளித்தான்.

35B.gif
Reply all
Reply to author
Forward
0 new messages