தமிழ் பூதமும் கிரேக்க பூதமும்

24 views
Skip to first unread message

Santhanam Swaminathan

unread,
Apr 15, 2012, 3:27:25 AM4/15/12
to mint...@googlegroups.com
 கிரேக்க நாட்டிலுள்ள டெல்பி ஆரக்கிளுக்கும் (ஒரு பெண் சாமி ஆடி குறி சொல்லுதல்) தமிழ் நாட்டிலுள்ள சாமி ஆடிகள், கோடங்கி அடிப்போர், குறி சொல்லுவோருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது (இதைப் பற்றி தனி கட்டுரையில் தந்திருக்கிறேன்). இது போலவே கிரேக்க ஸ்பிங்ஸ் (SPHINX)  பூதத்துக்கும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பல வகை பூதங்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. ஏற்கனவே அப்பர், சுந்தரர் ஆகியோருக்கு உதவிய பூதங்கள் பற்றி தனி கட்டுரையில் கூறிவிட்டேன். எகிப்திலும் ஸ்பிங்ஸ் சிலகள் உண்டு. ஆனால் கிரீஸ் நாட்டின் தீப்ஸ் நகரில் உள்ளது பற்றித்தான் இந்தக் கதை.

இதோ சிலப்பதிகார பூதக் கதைகள்:

இந்திரன் தலை நகரான அமராவதியை முசுகுந்தன் என்ற சோழ மன்னன் காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதத்தையும் ஐந்து வகை மன்றங்களையும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் எழுதியுள்ளார் (5: 65-67, 6:7-17). (முசுகுந்தன் என்ற மன்னன் பெயரை உரைகாரர்கள் தந்தனர்).

காவல் பூதம் அமராவதியில் அசுரர் விடுத்த இருள் அம்பினைப் போக்கியது. இந்திரன் அனுப்பியதால் பூம்புகாருக்கு வந்து நாளங்காடியில் தங்கி பலிகளை ஏற்றுவருகிறது என்று சிலம்பு கூறும் (7: 14)

ஐவகை மன்றம் பற்றி சிலப்பதிகாரம் மிகவும் விரிவான தகவல்களைத் தருகிறது (5: 111- 140). 1.) சுருக்கமாகச் சொன்னால், களவாட நினைப்போரை நடுங்க வைக்கும் வெளியிட மன்றம் 2.) நோயால் அழுகியவரைக் குணப்படுத்தும் மன்றம். அதாவது ஒரு பொய்கையில் குளித்தவுடன் நோய்கள் ஓடிவிடும். நம் ஊர் புஷ்கணிகள் போல 3.) நஞ்சாலும் பேயாலும் துன்புற்றாரின் துயர் நீக்க ஒளியை வீசும் மன்றம். அதாவது நவீன லேஸர் ஒளிக் கற்றை சிகிச்சை போல.4.) ஒழுக்கம் கெட்டவரை நிலத்தில் புடைத்துச் சாப்பிட்டு விடும் சதுக்க பூதம் ( இது உண்மையில் இருந்தால் ஜனத்தொகைப் பெருக்கப் பிரச்சினை பற்றி நாம் கவலையே பட வேண்டாம். அதுவே மக்கட் தொகையைக் குறைத்துவிடும்!! 5.) அரசன் செங்கோல் தவறி ஆட்சி புரியினும் சபையோர் நேர்மை குன்றினாலும் கண்ணீர் விட்டு அழும் பாவை மன்றம் ( இது இன்று இருந்தால் நித்திய அழுகைதான்!!)

இது தவிர அழற்படுகாதையில் ஆதி பூதம், அரச பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் ஆகிய நால் வருணப் பூதங்களும் மதுரை தீப்பற்றி எரிவதற்கு முன்னரே வெளியேறி விட்டதாகவும் இளங்கோ பாடுகிறார்.

அடைக்கலக் காதையில் பத்தினிப் பெண் ஒருத்தியைப் பற்றிப் பொய்யுரை உரைத்த ஒருவனை ஒரு பூதம் பாசக் கயிற்றால் பற்றிப் புடைத்து உண்டதாகவும் இருக்கிறது. பொய்க்கரி சொன்னவனுடைய தாயார் தனது மகனை விட்டுவிட்டு தன்னைப் பிடித்துக் கொள்ளலாம் என்று கெஞ்சிக் கேட்டபோதும் அதை பூதம் ஏற்கவில்லை. அந்த மனிதனை அவர்கள் கண் முன்னாலேயே அறைந்து கொன்று உண்டு விட்டது என்கிறார் இளங்கோ.

காடுகாண் காதையில் மதுரைக்கு வழி கேட்ட கோவலனுக்குப் பதில் கூறிய மறையவன், திருமாலிருஞ் சோலை பக்கத்தில் மூன்று பொய்கைகள் உள்ளதாகவும் அங்குள்ள தெய்வங்கள் என்ன என்ன கேள்விகள் கேட்கும் என்றும் என்ன பதில் கூறினால் நல்லது என்றும் சொல்லித் தருகிறான். இவை எல்லாம் கிரேக்க பூதக் கதையில் வரும் சில அம்சங்கள்.
புலவர் பெயர்களிலும் பூதம், பேய் உண்டு. சதுக்க பூதனார், பேய்மகள் இளவெயினி, காரைக்கால் பேயார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்—இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கிரேக்க பூதம்

எகிப்திலும் கிரீஸிலும் ஸ்பிங்ஸ் உண்டு. ஸ்பிங்ஸ் சிலை பாதி சிங்கமாகவும், பாதி பெண் ஆகவும் இருக்கும். இரண்டு நாடுகளிலும் தீப்ஸ் என்ற நகரும் உண்டு. ஆனால் பூதக் கதை கிரேக்க வீரன் ஈடிபஸ் பற்றியது. அவன் பாதி சிங்க உடலும் பாதி பெண் உருவமும் கொண்ட ஸ்பிங்ஸைப் பார்க்கிறான். அது கேள்விகள் கேட்கும். பதில் சொல்லாதவர்களைப் பிடித்துச் சாப்பிட்டு விடும். தீப்ஸ் நகர மக்களுக்கு இது ஓயாத கவலை தந்தது. வழிப்போக்கர்களைக் கேள்வி கேட்டு அச்சுறுத்தி வந்தது. இதைப் படிக்கும் போது மஹாபாரதத்திலுள்ள யக்ஷப் ப்ரஸ்னம் கதையும் ,விக்ரமாதித்தன் வேதாளம் கதைகளும் ஞாபகத்துக்கு வரும்.
ஈடிபஸ் போனபோது அவனிடம் கேட்ட கேள்விகள்: எது சில நேரம் இரண்டு காலகளோடும் சில சமயம் மூன்று கால்களோடும் சில சமயம் நான்கு கால்களோடும் நடக்கும். எது அப்படி 4 கால்களோடு நடக்கையில் பலவீனமாக இருக்கும்?

ஈடிபஸ் கொடுத்த விடை: மனிதன். குழந்தையாக இருக்கும் போது எழுந்து நிற்க முடியால் நாலு “கால்”களில் தவழ்ந்து செல்லுவான். பின்னர் இரண்டுடன் நடந்து கைத்தடியுடன் நடக்கையில் மூன்று கால்களோடு இருப்பான்.

ஒருவரை ஒருவர் பாதிக்கும் சகோதரிகள் யார்? பகலும் இரவும் என்று ஈடிபஸ் பதில் கொடுத்தான். இறுதியில் ஸ்பிங்ஸ் ஒரு மலையிலிருந்து விழுந்து இறந்தது.
ஆக கேள்விகள் கேட்டு அச்சுறுத்துவது, தவறிழைப்போரைச் சாப்பிடுவது ஆகிய அம்சங்களில் சிலப்பதிகார தமிழ் பூதத்துடன் ஒற்றுமையைக் காணலாம்.
***************************
Swami
020 8904 2879
07951 370 697

N. Kannan

unread,
Apr 15, 2012, 6:56:43 AM4/15/12
to mint...@googlegroups.com
இந்த பூதங்கள் என்பதை Alien visitation என்று கொள்ளலாமோ? இல்லை, வேற்றுலக
சக்திகள் நம்முள் புகுவதால் வரும் அமானுஷ்ய சக்தி என்று கொள்ளலாமோ?
ஆனால், இவை ஏன் 21ம் நூற்றாண்டில் செயல்படுவதில்லை?இல்லை இது உளவியல்
சார்ந்த கருவோ?

க.>

2012/4/15 Santhanam Swaminathan <swam...@yahoo.com>:

Dhivakar

unread,
Apr 15, 2012, 7:25:22 AM4/15/12
to mint...@googlegroups.com
நம்மாழ்வார் அபயக்கரம் கொடுத்த 'வைகுந்தன் பூதங்கள்' பற்றிச் சொல்லவே இல்லையே.. கலியுக பயத்தைப் போக்கும் பூதங்கள் அவை அல்லவா?

2012/4/15 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

N. Kannan

unread,
Apr 15, 2012, 2:45:13 PM4/15/12
to mint...@googlegroups.com
2012/4/15 Dhivakar <venkdh...@gmail.com>:

> நம்மாழ்வார் அபயக்கரம் கொடுத்த 'வைகுந்தன் பூதங்கள்' பற்றிச் சொல்லவே இல்லையே..
> கலியுக பயத்தைப் போக்கும் பூதங்கள் அவை அல்லவா?
>

:-)

பொலிக பொலிக பொலிக
போயிற்று வல்லுயிர்ச்சாபம்

எனும் பாசுரத்தில் ‘கடல்வண்ணன் பூதங்கள் மலியப்புகுந்து உழிதரக்கண்டோம்’
என்றொரு prophecy வைக்கிறார்!

யார் இந்தக் கடல்வண்ணன் பூதங்கள்? :-)

கிருஷ்ணப்பிரேமி அண்ணா இது பாகவதர்களைக் குறிக்கிறது என்கிறார்.

பூத என்ற சொல்லுக்கான வடமொழி வேர்களைக் கண்டால் இதன் பொருள் பிடிபடும்.
அண்ணாவின் பிரவச்சனத்திலிருந்து:

”பூதம் என்பதற்கு அன்னம் என்றொரு பொருள் உண்டு. அதாவது திருமால் நாமமே
உணவாகக் கொள்வதால் ஒருவர் பூதத்தாழ்வார் ஆகிறார். (வைதீக திருமண
மந்திரத்தில் கணவன் மனைவியிடத்தில் "பூத" என்று சொல்லி பழம் தரவேண்டும்.
மனைவி "சுபூத" என்று சொல்லி பால்தர வேண்டும். ஒருவரையொருவர் பூதம் பிசாசு
என்று திட்டிக் கொள்வதாய் அர்த்தம் கொள்ளக்கூடாது)”

நா.கண்ணன்

Prakash Sugumaran

unread,
Apr 15, 2012, 3:30:23 PM4/15/12
to mint...@googlegroups.com
எல்லா பூதங்களும் சேர்ந்து தொலைந்த சிலம்பை தேடி கண்டுபிடித்தால் சரிதான்.

2012/4/16 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

Hari Krishnan

unread,
Apr 15, 2012, 10:08:10 PM4/15/12
to mint...@googlegroups.com


2012/4/16 N. Kannan <navan...@gmail.com>

யார் இந்தக் கடல்வண்ணன் பூதங்கள்? :-)

பொருள் கொள்ளும்போது, 

கடல்வண்ணன் கமா பூதங்கள் மலியப் புகுந்து உமிழ்தரக் கண்டோம்

என்று கமாவை கடல்வண்ணனுக்கு அப்புறம் போட்டுக் கொள்ள வேண்டும்.  ‘கடல்வண்ணன் பூதங்கள்’ என்று தனியாகப் பிரியாது.

இடைக்குரல்வரலுக்கு மன்னிக்கவும்.

--
அன்புடன்,
ஹரிகி.

Dhivakar

unread,
Apr 16, 2012, 12:40:19 AM4/16/12
to mint...@googlegroups.com
யார் இந்தக் கடல்வண்ணன் பூதங்கள்? :-) கிருஷ்ண பிரேமியார் அழகாகவே சொல்லியிருக்கிறார். (சென்ற மாதம் ஹைதராபாதில் விசாகா ஹரியின் பிரசங்கத்துக்கு அங்கேயே இருந்ததால் அழைப்பு இருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லாமல் போனதால் போக முடியவில்லை)

நம்மாழ்வார் மொத்தம் நான்கு இடங்களில் இந்தப் பத்துப்பாட்டில் (பொலிக பொலிக) மட்டுமே பாடியிருக்கிறார். கடல்வண்ணன் பூதங்கள் என இரண்டு முறையும், மறுத்திருமார்வன் அவன்தன் பூதங்கள் எனவும், வைகுந்தன் பூதங்கள் எனவும் குறிப்பிட்டிருப்பது அவன் அடியவர்களைத்தானே.. பூதம் என்ற சொல்லுக்கு சமயப்பெரியார்கள்  ’இறைவனின் சேவகர்கள்’ என்று சொல்கிறார்கள். . 




2012/4/16 N. Kannan <navan...@gmail.com>
2012/4/15 Dhivakar <venkdh...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

shylaja

unread,
Apr 16, 2012, 1:18:39 AM4/16/12
to mint...@googlegroups.com
கர விசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை
வரன் நவில் திறல்வலி அளி பொறையாய் நின்ற
 
கரவிசும்பு...ஆகாயம்..   குணம்(உயிர்போல) ஒலி(நவில்)
எரி..நெருப்பு                      குணம் (உயிர்போல்) அழித்தல்(திறல்)
வளி....காற்று                     குணம் (உயிர்போல்) வலிமை(வலி)
நீர்...தண்ணீர்                      குணம்(உயிர்போல்)  இரக்கம்(அளி)
நிலம்,,,,,,பூமி                     குணம்  (உயிர்போல்) பொறுத்தல்(பொறை)
 
எம்பெருமான்  பஞ்சபூதங்களாகவும் அவற்றின் உயிராகவும் விளங்குகிறான் என்பதை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் இப்படி அருளுகிறார்.நாயகிபாவத்தில்  அவர் கூறுவது,,எல்லோரையும்போல நெருப்பு சுடு்ம்என அறிந்தும் தீயைத்தழுவினாள் அவளைத்தீ சுடவில்லையாம் உடல் வெந்துபோகவில்லையாம், இதுதான் மெய் ஞானம். ஊனக்கண்களுக்கு பஞ்சபூதங்கள் மட்டுமே காட்சிதரும் ஞானக்கண்களுக்கு அவற்றில் உயிராய் இருப்பவன் இறைவன் காட்சி தருவான். ஞானம் கைகூடுமாயின் ஞாலம் கைகூடும் என்பார்கள் ஆன்றோர்கள்.
 
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
 
பாரதியின்  உற்சாகம் நினைவுக்கு வருகிறது!
 
 
 
 
 


 
2012/4/16 Dhivakar <venkdh...@gmail.com>



--
அன்புடன்
ஷைலஜா

DEV RAJ

unread,
Apr 16, 2012, 1:40:17 AM4/16/12
to மின்தமிழ்
On Apr 15, 9:40 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
>>>> நம்மாழ்வார் மொத்தம் *நான்கு* இடங்களில் இந்தப் பத்துப்பாட்டில் (பொலிக பொலிக)

மட்டுமே பாடியிருக்கிறார். கடல்வண்ணன் பூதங்கள் என இரண்டு முறையும்,
மறுத்திருமார்வன் அவன்தன் பூதங்கள் எனவும், வைகுந்தன் பூதங்கள் எனவும்
குறிப்பிட்டிருப்பது அவன் அடியவர்களைத்தானே. பூதம் என்ற சொல்லுக்கு

சமயப்பெரியார்கள் ’இறைவனின் சேவகர்கள்’ என்று சொல்கிறார்கள் <<<<


இரண்டாம் பாசுரத்தின் மாதவன் பூதங்களையும்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.

”வண்டார் தண்ணந்து ழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்,
பண்டான் பாடிநின் றாடிப் பரந்து திரிகின் றனவே”

பூதங்கள் = பக்தர்கள்

வடமொழியில் பூ - ஸத்தாயாம் என்கிற தாதுவடியாகப்
பிறந்தது பூதம் என்னுஞ்சொல்
ஸத்தை பெற்றது என்று பொருள்.
எம்பெருமானது திருக்குணங்களை யநுபவித்தே
ஸத்தை பெற்றவர்கள் என்றவாறு.

http://dravidaveda.org

ஒக்கத் தொழுகிற்றி ராகில் கலியுக மொன்றுமில் லையே !


தேவ்

On Apr 15, 9:40 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> யார் இந்தக் கடல்வண்ணன் பூதங்கள்? :-) கிருஷ்ண பிரேமியார் அழகாகவே
> சொல்லியிருக்கிறார். (சென்ற மாதம் ஹைதராபாதில் விசாகா ஹரியின் பிரசங்கத்துக்கு
> அங்கேயே இருந்ததால் அழைப்பு இருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லாமல் போனதால் போக
> முடியவில்லை)
>

> நம்மாழ்வார் மொத்தம் *நான்கு* இடங்களில் இந்தப் பத்துப்பாட்டில் (பொலிக பொலிக)


> மட்டுமே பாடியிருக்கிறார். கடல்வண்ணன் பூதங்கள் என இரண்டு முறையும்,
> மறுத்திருமார்வன் அவன்தன் பூதங்கள் எனவும், வைகுந்தன் பூதங்கள் எனவும்
> குறிப்பிட்டிருப்பது அவன் அடியவர்களைத்தானே.. பூதம் என்ற சொல்லுக்கு
> சமயப்பெரியார்கள்  ’இறைவனின் சேவகர்கள்’ என்று சொல்கிறார்கள். .
>

> 2012/4/16 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2012/4/15 Dhivakar <venkdhiva...@gmail.com>:


> > > நம்மாழ்வார் அபயக்கரம் கொடுத்த 'வைகுந்தன் பூதங்கள்' பற்றிச் சொல்லவே
> > இல்லையே..
> > > கலியுக பயத்தைப் போக்கும் பூதங்கள் அவை அல்லவா?
>
> > :-)
>
> > பொலிக பொலிக பொலிக
> > போயிற்று வல்லுயிர்ச்சாபம்
>
> > எனும் பாசுரத்தில் ‘கடல்வண்ணன் பூதங்கள் மலியப்புகுந்து உழிதரக்கண்டோம்’
> > என்றொரு prophecy வைக்கிறார்!
>
> > யார் இந்தக் கடல்வண்ணன் பூதங்கள்? :-)
>
> > கிருஷ்ணப்பிரேமி அண்ணா இது பாகவதர்களைக் குறிக்கிறது என்கிறார்.
>
> > பூத என்ற சொல்லுக்கான வடமொழி வேர்களைக் கண்டால் இதன் பொருள் பிடிபடும்.
> > அண்ணாவின் பிரவச்சனத்திலிருந்து:
>
> > ”பூதம் என்பதற்கு அன்னம் என்றொரு பொருள் உண்டு. அதாவது திருமால் நாமமே
> > உணவாகக் கொள்வதால் ஒருவர் பூதத்தாழ்வார் ஆகிறார். (வைதீக திருமண
> > மந்திரத்தில் கணவன் மனைவியிடத்தில் "பூத" என்று சொல்லி பழம் தரவேண்டும்.
> > மனைவி "சுபூத" என்று சொல்லி பால்தர வேண்டும். ஒருவரையொருவர் பூதம் பிசாசு
> > என்று திட்டிக் கொள்வதாய் அர்த்தம் கொள்ளக்கூடாது)”
>
> > நா.கண்ணன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Reply all
Reply to author
Forward
0 new messages