நடராசன் உயிர் நீத்த சனவரி 15

282 views
Skip to first unread message

paari chezhian

unread,
Jan 14, 2011, 12:23:56 PM1/14/11
to tamil...@googlegroups.com, Neduchezhian T. Chezhian, Sakya group, mint...@googlegroups.com, dalitco...@googlegroups.com, Bhahujan Students, Buddhis...@yahoogroups.com, bliac...@yahoo.com, Keetru e-Journal, jeyamoha...@gmail.com, Kavitha Muralidharan, mumbai tamil dot com, Aiswarya Rao, tamilbloggersunit, uyirmmai *, விருத்தி கல்வி மேம்பாட்டு குழு, விடுதலைச் சிறுத்தைகள், veer...@gmail.com
முதல் மொழிப்போர்
முதல் களப்பலி

நடராசன் உயிர் நீத்த சனவரி 15
மொழிப்போர் தியாகிகள் நாள்
தமிழகத்தில் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரில் (1938) ஈடுபட்டு  ஜனவரி 15 ,1939  தமிழ் மொழி காப்பிற்காக முதல் உயிர்த்தியாகம் செய்தவர்  எசு.நடராஜன் என்னும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.அவருக்கு அடுத்தே மார்ச் மாதம் 11 , 1939 இல் தாளமுத்து  என்னும் தோழர் உயிர்த்தியாகம் செய்தார் இவர்   இடைநிலை சாதியை சேர்ந்தவர். ஆனால் வரலாற்று ஏடுகளில் பெயர் சூட்டலில் "தாளமுத்து நடராஜன் " என்று தாளமுத்து முன்பாகவும், நடராஜன் இரண்டாவதாகவும் மோசடியாக எழுதப்படுகிறது.  ஆனால் இது 1960 பிறகு நடந்த மோசடிதான். அதற்கு முன் "நடராஜன் -தாளமுத்து" என்றே வழங்கிவந்த இந்த கூட்டு அடையாளம். இடைநிலை சாதி வெறியர்களால் நடராஜனின் பெயரை இரண்டாவது இடத்திற்கு ஒதுக்கி தள்ளியுள்ளது . அதை எந்த சாதி ஒழிப்பு, சாமத்துவ, சுயமரியாதை தமிழ்தேசியம் .. பேசுற எவனும் கேட்கவில்லை.   
சென்னை வள்ளலார் நகரை அடுத்துள்ள மூலகொத்தளம் இடுகாட்டில் உள்ள அவர்களது நினைவு சின்னத்தில் "நடராஜன் -தாளமுத்து" என்றுதான் இன்றும் இருக்கிறது.  ஆனால்  தி மு க  அரசு  எழுப்பியுள்ள அரசு மாளிகை ஒன்றுக்கு "தாளமுத்து -நடராசன்" என்ற பிழையான வரிசையில் பெயர்சூட்டி
ஒரு உண்மை தியாக வரலாற்றை மோசடி செய்து விட்டது.
தமிழ், தமிழ்தேசியம், சாதி ஒழிப்பு ,சுயமரியாதை,சமதர்மம் ..பேசுகிற  கட்சிகளும் வாய்பொத்தி வேடிக்கைதான் பார்த்துகொண்டு இருக்கிறார்கள் .....     

பாரி செழியன்          
Untitled-1.jpg

N. Ganesan

unread,
Jan 17, 2011, 8:35:00 AM1/17/11
to மின்தமிழ்

On Jan 14, 11:23 am, paari chezhian <a.aa.nadu...@gmail.com> wrote:
> *முதல் மொழிப்போர்
> முதல் களப்பலி*

அன்பின் பாரி.

உங்கள் மடலை இப்போதுதான் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

எங்கள் ஊர் பொள்ளாச்சியில் 1960களில் (1966?) நடந்த
இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமானது. போலீசார்
துப்பாக்கிச் சூட்டில் 100-கணக்கானோர் இறந்துபட்டனர்
என்பார்கள். எத்தனை பேர் செத்தார்கள் என்ற விவரம்
முழுதுமாக அரசாங்கம் வெளியிடவே இல்லை என்று
சிறுவயதில் கேள்விப் பட்டிருக்கிறேன்.

தாளமுத்து நடராஜன் - என்று பல இடங்களில் பார்த்துள்ளேன்.
உங்கள் மடல் மூலம் தெளிவு கிட்டியது.

அன்புடன்,
நா. கணேசன்


>  Untitled-1.jpg
> 378KViewDownload

Sri Sritharan

unread,
Jan 17, 2011, 8:59:11 AM1/17/11
to மின்தமிழ்

>
> On Jan 14, 11:23 am, paari chezhian <a.aa.nadu...@gmail.com> wrote:
> > *முதல் மொழிப்போர்
> > முதல் களப்பலி*
> > நடராசன் உயிர் நீத்த சனவரி 15
>
> தாளமுத்து நடராஜன் - என்று பல இடங்களில் பார்த்துள்ளேன்.
> உங்கள் மடல் மூலம் தெளிவு கிட்டியது.

 
விக்கியிலும் தாளமுத்து, நடராஜன் என்றிருந்ததைத் திருத்தியுள்ளேன். நன்றி.
 
http://bit.ly/gqV3IY
 
அன்புடன்
சிறீதரன்

செல்வன்

unread,
Jan 17, 2011, 11:10:51 PM1/17/11
to mint...@googlegroups.com
இவர்கள் இருவருடைய சாதி என்ன என்பதையே இன்றுதான் தெரிந்து கொண்டேன்.



--
செல்வன்

அடுத்தவனை கெடுத்ததில்லை
வயத்துலதான் அடிச்சதில்லை
உழைப்பை நம்பி பொழச்சி நிக்கறேன்
நான் உண்மையாக ஊருக்குள்ளே

www.holyox.blogspot.com


Reply all
Reply to author
Forward
0 new messages