[MinTamil] Re: [பண்புடன்] Re: [தமிழமுதம்] Awesome America

46 views
Skip to first unread message

செல்வன்

unread,
May 21, 2010, 12:13:48 AM5/21/10
to tamizh...@googlegroups.com, பண்புடன், mintamil
டாக்டர்கள் நற,நற.....

KFC-DOUBLE-DOWN-SUCCESS-EXTENDED.jpg

டபிள்டவுன் சாண்ட்விட்ச் என ஒரு சாண்ட்விட்சை அறிமுகபடித்தியிருக்கிறது கேஎப்சி.வழக்கமாக இரு ரொட்டி அல்லது பன் துண்டுகளுக்கு நடுவே மாமிசதுண்டை வைத்து சாண்ட்விட்ச் செய்வார்கள்.கே எப்சி இரு பொறித்த கோழிதுண்டங்களுக்கு நடுவே மாட்டுக்கறீயையும், பன்றிக்கறியையும் வைத்து டபுள்டவுன் சாண்ட்விட்ச் செய்கிறது.இதில் டன்கணக்கில் சாச்சுரேட்டட் கொழுப்பு இருக்கிறது என சொல்லி மருத்துவர்களும், உணவு எக்ஸ்பெர்ட்டுகளும் பல்லை நறநறக்க அமெரிக்க மக்கள் அதை பற்றி கவலைபட்டாமல் இதை உள்ளே தள்ளிகொண்டிருக்கிறார்கள்.

---------------------------------------------



--
செல்வன்

www.holyox.tk

"They who can give up essential liberty to obtain a little temporary safety deserve neither liberty nor safety"
- Benjamin Franklin

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
May 24, 2010, 1:16:40 AM5/24/10
to panb...@googlegroups.com, தமிழமுதம், mintamil
ரிடர்ன் ஆஃப் தெ டிராகன் படம் பார்த்தவர்கள் அதில் புருஸ்லியும், சக்நாரிசும் கொலேசியத்தில் போடும் சண்டையை மறக்கவே மாட்டார்கள்.அந்த படம் சக் நாரிசை கல்ட் பிகர் ரேஞ்சுக்கு உயர்த்தியது.

சக்நாரிஸ் இயல்பாகவே நல்ல கராத்தே வீரர்.ஆக்ஷன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.ஆனால் அவர் படத்தில் அதிநாயக பிம்பம் நிறைய இருப்பதால் அமெரிக்கர்கள் அவரை ஓட்டு ஓட்டு என ஓட்டுவார்கள்.சாம்பிளுக்கு சில...

செல்வன்

unread,
May 27, 2010, 1:54:42 AM5/27/10
to panb...@googlegroups.com, தமிழமுதம், mintamil
பட்டையை கிளப்பும் கிறிஸ் கிறிஸ்டி



அமெரிக்காவில் வரிகள் அதிகம் விதிக்கும் மாநிலம் நியூஜெர்சி.அதிகம் வரி விதித்தால் மாநில பட்ஜட் சிக்கலின்றி இருக்கவேண்டும் அல்லவா?அதுதான் இல்லை.நியூஜெர்சி பட்ஜெட்டில் சுமார் 12 பில்லியன் டாலர் பற்றாகுறை.கவர்னர் கொர்சைனை எதிர்த்து ரிபப்ளிக்கன் கட்சியின் கிறிஸ் கிறிஸ்டி அதிரடியான திட்டங்களை முன்வைத்து போட்டி இட்டார்.

நான் பதவி ஏற்றால் பணகாரர்கள் மேல் விதிக்கபடும் வரியை (மில்லியனர்ஸ் டாக்ஸ்) ஒழிப்பேன்.

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைப்பேன்.சலுகைகளை குறைப்பேன்.

நான் கவர்னராக இருக்கும் காலம்வரை ஒரு பைசா வரி உயர்வு கூட இருக்காது

மக்கள் கிறிஸ்டியை அமோகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.சொன்னமாதிரியே மில்லியனர் டாக்சை ஒழித்தார் கிறிஸ்டி.அரசு ஊழியர்களுக்கான பென்ஷனை குறைத்தார்.சம்பள உயர்வை ரத்து செய்தார்.பல அரசு ஊழியர்களை வேலையை விட்டு நீக்கினார்.அரசு துரைகளை தனியார் மயமாக்கினார்.அரசின் செலவுகள் பலவற்றை குறைத்தார்.

கடுப்பான அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.கிறிஸ்டி கண்டுகொள்ளவில்லை.ஊழியர்களுக்கு சார்பான நிருபர் ஒருவர் கிறிஸ்டியிடம் இந்த மாதிரி கேள்வி கேட்டார்

கேள்வி: மில்லியனர்ஸ் டாக்சை ஏன் குறைத்தீர்கள்?இப்படி பணகாரர்களுக்கு சாதகமாக செயல்படலாமா?

கிறிஸ்டி: சிம்பிள். நாட்டிலேயே அதிகமான வரி நியூஜெர்சியில்.அப்படி இருந்தும் ஏன் இங்கே பற்ராகுறை?அதிக வரி வித்தித்தால் மில்லியனர்கள் வேறு மாநிலங்களுக்கு குடிபோய்விடுவார்கள்.கூடவே தொழிர்சாலைகளும், வேலைவாய்ப்புக்களும் போய்விடும்.அதனால் தான் வரியை குறைத்தேன்.

கேள்வி: பள்ளிகளுக்கான நிதி ஒதுகீட்டை குறைத்தால் மானவர்கள் பாதிக்கபட மாட்டார்களா?

கிறிஸ்டி: நான் ஆசிரியர்களின் சம்பளத்தையும், பென்ஷனையும் தான் குறைத்தேன்.இதனால் மாணவர்கள் எப்படி பாதிக்கபடுவார்கள்?

நிருபர்:ஆசிரியர்கள் வேலையை விட்டு போனால்...

கிறிஸ்டி: ஹா.ஹா...அரசு வேலையை விட்டுவிட்டு ஒருவரும் போகமாட்டார்கள்...

கிறிஸ்டியை நம்ம நாட்டுக்கு கொஞ்சம் கடன் வாங்கணும்

--

Innamburan Innamburan

unread,
May 27, 2010, 8:01:01 AM5/27/10
to mint...@googlegroups.com
கூடவே மாஜி அலாஸ்கா கவர்னர் சேரா பாலின் அம்மையாரையும் அனுப்பவும்.
இன்னம்பூரான்

2010/5/27 செல்வன் <hol...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
May 27, 2010, 8:23:18 AM5/27/10
to mint...@googlegroups.com
கவர்னர் சேரா பாலின் அம்மையாரையும்  பற்றி  விவரமாக  சொல்லுங்கள்
 
நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யலாமா  என்று யோசிப்போம்
 
எல்லா  அயல் நாடுகளிலும் மேல் மட்டத்தில் ஊழலும், அதிகார துஷ்ப்ரயோகமும் இருக்கிறது
 
ஆனால் பொது மக்களை  வருத்தாமல்  அவர்களுக்குள்ளேயே  செய்துகொள்கிறார்கள்
 
நம் நாட்டில்  பாதிக்கப் படுவது பொதுமக்கள் மட்டுமே
 
அடிப்படை உரிமைகள் கூட இன்னும் செய்யப்படவில்லை
அடிக்கடி அயல் நாடுகளுக்கு  விஜயம் செய்யும் மந்திரிகள்  அயல் நாடுகளை வானளாவப் புகழ்கிறார்களே   தவிற  நம் நாட்டை உயர்த்தவேண்டும் என்னும் எண்ணமே எழாமல் இருக்கிறார்கள், அதனால் வந்த வினைதான் நாம் இப்போது அனுபவிக்கும்
 
சாக்கடைச் சாலைகளும், அன்னியச் செலாவணி வீக்கமும்,
 
ஒரு முறை மத்திய  அமைச்ச திரு பாய் அவர்கல் சொன்னார்கள்
புள்ளி விவரத்துடன்
 
வருமான வரிதுறையை மூடி விட்டால்
 
அதில் சேகரம் செய்யும் பணத்தை வைத்துக்கொண்டு  நாட்டை வளமாக்கிய பிறகும்,மீதமுள்ள பணத்தை  வைத்து   உலக வங்கியில் நாம் வாங்கி இருக்கும் கடனையும்  அடைத்துவிடலாம்  என்று
 
 
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 

 
27-5-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Raja sankar

unread,
May 27, 2010, 8:29:41 AM5/27/10
to mint...@googlegroups.com
வருமான வரிதுறையை மட்டுமல்ல நாட்டில் உள்ள நிறைய வரி துறைகளை மூடவேண்டி இருக்கும்.

சொத்து வரித்துறை வருடத்திற்கு வசூலிக்கும் வரி 300 கோடி ரூபாய்
சொத்து வரித்துறை வருடத்திற்கு செய்யும் செலவு 200 கோடி ரூபாய்.

இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்?


ராஜசங்கர்



2010/5/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

செல்வன்

unread,
May 27, 2010, 10:28:13 AM5/27/10
to mint...@googlegroups.com


2010/5/27 Innamburan Innamburan <innam...@googlemail.com>

கூடவே மாஜி அலாஸ்கா கவர்னர் சேரா பாலின் அம்மையாரையும் அனுப்பவும்.
இன்னம்பூரான்

அந்தம்மா காமடியான ஆள் இன்னாம்பூராரே.அவர் சரிப்பட்டு வராது:-)

டிம் பாலெண்டிக்கு தான் என் ஓட்டு(ஆனால் எனக்கு தான் ஓட்டே கிடையாதே?:-)

Innamburan Innamburan

unread,
May 27, 2010, 12:36:50 PM5/27/10
to mint...@googlegroups.com
அதான், அந்த ஐஸ்-ஹாக்கி-மாம் மை அனுப்பச்சொன்னேன்.

2010/5/27 செல்வன் <hol...@gmail.com>:
>
>

செல்வன்

unread,
May 27, 2010, 1:56:19 PM5/27/10
to mint...@googlegroups.com


2010/5/27 Innamburan Innamburan <innam...@googlemail.com>

அதான், அந்த ஐஸ்-ஹாக்கி-மாம் மை அனுப்பச்சொன்னேன்.


அந்தம்மா வந்தா உலகமே அழிஞ்சிடுங்க இன்னம்பூராரே:-) 

Innamburan Innamburan

unread,
May 27, 2010, 3:21:20 PM5/27/10
to mint...@googlegroups.com
யான் ஒன்று சொல்வேன். செவி மடுத்து கேட்பீராக. இந்த இழையை மிக்க
கவனத்துடன் படித்து வருகிறேன். இது போல் மற்றும் சில மெய்கீர்த்திகள்
ஆடி, பாடி வருகின்றன. அவற்றையும் கவனத்துடன் படித்து வருகிறேன்.

'சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,
என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,
என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே. '

என்றார் நம்மாழ்வார். அவர் மாதிரி 'ஆகிலும் சொல்வேன்' என்று சொல்ல
அச்சமாகுதையா. அத்தனை குழப்பம், அரசு திறன், அரசு பணி, அரசு கடன்,
முதலாளித்துவம். பொதுவுடமை, ஏழை பாழை, சொத்து பத்து, நீ ரைட்டா? நான்
ராங்கா? என்பதையெல்லாம் பற்றி. கருத்து வேறு படலாம். உண்மை மாறாது.
விதண்டாவாதம் மிகுந்து விட்ட நிலையில், வெங்கலகடையில் யானை புகுந்தால்
போல, நான் ஆரவாரம் செய்யலாமோ?

செல்வனோ அருமை நண்பர். அவருக்காக, 'அஹோ! வாரும் பிள்ளாய்' என்று ஒரு தனி
மொழி, பொது மடலில். உங்கள் வளர்ச்சி எனக்கு பெருமிதமே. இது சாத்தியமே
என்பதற்கு சான்றாக மடலொன்று வந்தது, ஒரு நிமிடம் முன்னால். அது என்னை
இவ்வாறு எழுத வைத்தது. இல்லையெனில், மகிஷாசுரமர்த்தினிக்கு
எதிர்மறையாகவோ, பூதகியாகவோ 'அந்தம்மா' வரட்டுமே என்று சொல்லிருப்பேன்.
அந்த மடலின் சாராம்சம். கடினமாக உழைத்து, அதற்கான கால் காசை
பணமூட்டைகளிடமிருந்து பெற்று உயிர் தரிக்கும் கிராமீய இளம்பெண் ஒருவள்,
யான் கொடுத்த ஊக்கத்தால், தான் பட்டப்படிப்பை வெற்றிகரமாக
முடித்துவிட்டதாக எழுதியிருக்கிறாள். ஐஏஎஸ் எழுத போவதாக சொல்கிறாள். இந்த
செய்தியின் நுட்பத்தை அறிய, செல்வனால் இயலும். அருமை நண்பர் நக்கினம்
சிவத்தால் இயலும். இருவரும் எதிர் துருவங்களில் அமர்ந்து, மோட்டுவளையை
பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மற்றவர்களைப்பற்றி சொல்ல எனக்கு துணிவு
இல்லை.


நன்றி, வணக்கம்

இன்னம்பூரான்

பி.கு: ஸேரா பாலினுக்கும் நன்றி. அந்தம்மா தானே எழுத வைத்தார்!

2010/5/27 செல்வன் <hol...@gmail.com>:
>
>

செல்வன்

unread,
May 27, 2010, 3:38:47 PM5/27/10
to mint...@googlegroups.com
இன்னம்பூரார் ஐயா,

இணைய குழுமங்கள் கருத்து பரிமாற்றத்துக்கு சங்கபலகைகளை போல் உதவுகின்றன.தமிழ் சங்கத்தில் நண்பர்களாக இருக்கும் புலவர்கள் கூட விவாதம் என வந்தால் நிர்த்தாட்சண்யமாக தான் உரையாடுவார்கள், நண்பரது கருத்தை கிழி,கிழி என கிழிப்பார்கள்.அதே சமயம் தனிப்பட்ட முறையில் நல்ல நட்பை கொண்டிருப்பார்கள் என படித்திருக்கிறேன்.குழுமங்களில் அதேபோன்ற நிலை நிலவவேண்டும் என்பதே என் அவா.என்னுடன் கடுமையாக கருத்துக்களால் மோதிய பலரும் தனிப்பட்ட முறையில் என் நல்ல நண்பர்கள்.அதனால் நண்பர் என்பதற்காக நீங்கள் நான் எழுதுவதை விமர்சனம் செய்யாமல் இருக்கவேண்டாம். தவறாக நான் எதுவும் சொன்னால் அடுத்த நிமிடம் நீங்களோ அல்லது யாரோ அதை கடுமையாக விமர்சிக்கலாம். அது என்னை நானே திருத்திகொள்ள எனக்கு உதவும்.

அரசு, பொதுவுடமை, தனியுடமை பற்றிய என் கருத்துக்கள் இந்திய அளவில் மெயின்ஸ்ட்ரீம் இல்லை என்பது எனக்கு தெரியும்.அதனால் இதுவிஷயத்தில் நான் சொல்லுவது பொதுகருத்தை ஒட்டி இருக்காது.எக்ஸ்ட்ரீம் ஆக வலப்புறத்தில் தான் இருக்கும்.நான் பொருளாதார ரீதியாக எக்ஸ்ட்ரீம் வலதுசாரி.சமூகரீதியாக எக்ஸ்ட்ரீம் இடதுசாரி.சற்று குழப்பமான காம்பினேஷன் கொள்கைகள்தான்:-)

//கடினமாக உழைத்து, அதற்கான கால் காசை

பணமூட்டைகளிடமிருந்து பெற்று உயிர் தரிக்கும் கிராமீய இளம்பெண் ஒருவள்,
யான் கொடுத்த ஊக்கத்தால், தான் பட்டப்படிப்பை வெற்றிகரமாக
முடித்துவிட்டதாக எழுதியிருக்கிறாள். ஐஏஎஸ் எழுத போவதாக சொல்கிறாள். //

என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஐயா.அரசு ஊழியர்கள் மேல் எனக்கு எந்த கோபமும், வருத்தமும் இல்லை என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.என் கோபம் எல்லாம் தொழிர்சங்கங்கள் மேலும், லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மேலும் மட்டுமே.எத்தனையோ லட்சம் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக தேசபணி ஆற்றுகிறார்கள்.பாரதியார் பல்கலைகழகத்தில் கடைசிநேரத்தில் விசாவுக்கு தேவைப்பட்ட ஒரு ஆவணத்தை போய் கேட்டேன்.பத்துபைசா லஞ்சம் இன்றி அத்தனை விரைவாக தயார் செய்து கொடுத்து எனக்கு பேருதவி புரிந்தனர்.இதுபோன்ற அரசு ஊழியர்கள் லட்சகணக்கில் இருப்பார்கள்.

இந்த பெண்ணும் அதேபோல அதிகாரத்துக்கு வந்து மக்களுக்கு நல்லதே செய்யவேண்டும் என்பதே என் விருப்பம்.

Innamburan Innamburan

unread,
May 27, 2010, 4:57:25 PM5/27/10
to mint...@googlegroups.com
நன்றி, தம்பி. புரிந்துகொண்டதால் தான் தனி மடல், கேலி, தனிமடல் வேடத்தில்
பொது மடல். கவலையற்க. பலவிஷயங்களில் நாம் ஒத்து போகிறோம். நண்பன்
என்பதற்காக உம்மை கடுமையாக விமர்சிப்பத்தில், தயக்கமே இல்லை.

இன்னம்பூரான்

2010/5/27 செல்வன் <hol...@gmail.com>:


> இன்னம்பூரார் ஐயா,
>
> இணைய குழுமங்கள் கருத்து பரிமாற்றத்துக்கு சங்கபலகைகளை போல் உதவுகின்றன.தமிழ்
> சங்கத்தில் நண்பர்களாக இருக்கும் புலவர்கள் கூட விவாதம் என வந்தால்
> நிர்த்தாட்சண்யமாக தான் உரையாடுவார்கள், நண்பரது கருத்தை கிழி,கிழி என
> கிழிப்பார்கள்.அதே சமயம் தனிப்பட்ட முறையில் நல்ல நட்பை கொண்டிருப்பார்கள் என
> படித்திருக்கிறேன்.குழுமங்களில் அதேபோன்ற நிலை நிலவவேண்டும் என்பதே என்
> அவா.என்னுடன் கடுமையாக கருத்துக்களால் மோதிய பலரும் தனிப்பட்ட முறையில் என்

> நல்ல நண்பர்கள்.அதனால் இது அரசியல்... மூச்!. தவறாக நான் எதுவும் சொன்னால் அடுத்த நிமிடம் நீங்களோ

karthi

unread,
May 27, 2010, 9:16:49 PM5/27/10
to mint...@googlegroups.com
மலேசியா வருமான வரி வசூலிப்பை தனியார் மயமாக்கியிருக்கிறது.
அதனால் வருமானம் பலமடங்கு பெருகியிருக்கிறது.
 
இணையத்தில் on-lineஇல் பாரம் பூர்த்தி செய்து அனுப்பலாம். ஆவணங்கள்
ஏதும் இணைக்க வேண்டியதில்லை. ஆனால் ஆவணங்களை 10 ஆண்டுகளுக்கு,
தேவைப்பட்டால் சோதனைக்குப் பாதுகாத்து வைத்திருக்கவேண்டும்.
 
ஓராண்டு இணையத்தில் பதிந்து விட்டால் அடுத்த ஆண்டு பாரத்தில் உங்கள்
அடிப்படை விவரங்கள் இருக்கும். தேவைப்பட்ட மாற்றத்தை மட்டுமே செய்யவேண்டும்.
இந்தப் பாரத்தைப் பூர்த்தி செய்ய எனக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகாது.
 
என்னைப் போன்ற பென்ஷனர்களுக்கு, டிவிடண்ட் வரி திரும்பச் செலுத்தப்படுவது
மூன்று வாரங்களுக்குள் வந்து விடும்.
 
ரெ.கா.
 
 

செல்வன்

unread,
May 27, 2010, 11:16:51 PM5/27/10
to mint...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம்
ரேகனிசம்

reagan2_large.jpg

அமெரிக்க பொருளாதாரத்தை தலைநிமிர்த்தியவர், கன்சர்வெடிவ் இயக்கத்தை உயிர்பித்தவர், காம்யூனிசத்தை தன் ஆட்சிகாலத்தில் ஒழித்தவர், அமெரிக்கா முழுவதிலும் அரசியல் கட்சி அடையாளங்களை தாண்டி நேசிக்கப்பட்டவர் என்ற பெருமைக்கு உரியவர் ஜனாதிபதி ரோனல்ட் ரேகன். 1980 முதல் 1988 வரை இவர் ஜனாதிபதியாக இருந்தார்.இதே காலகட்டத்தில் இந்தியாவில் நடிகர்- அரசியல்வாதி காம்பினேஷனில் எம்ஜிஆர், என்டிஆர் ஆகியோர் ஆட்சியில் இருந்தனர்.

ரேகனின் அரசியல், பொருளாதார கொள்கைகள்  ரேகனிசம் என அழைக்கப்பட்டன. ரேகன் சிறிய அரசு, வலுவான தனியார் துறை, குறைவான வரிகள், அரசு செலவீனங்கள் குறைப்பு, தொழிற்சங்க எதிர்ப்பு ஆகிய கொள்கைகளில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்.ரேகன் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்க விமானிகள் சங்கம் சம்பள உயர்வு, வாரத்துக்கு 32 மணிநேர வேலை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஸ்ட்ரைக்கை அறிவித்தது.அன்றைய காலட்டத்தில் அமெரிக்க பைலட்டுகளில் பெரும்பாலானோர் இந்தசங்கத்தில் உறுப்பினராக இருந்தனர்.ஸ்ட்ரைக் வந்தால் அமெரிக்க சிவில் விமானதுறையே முடங்கும் என்ற நிலை.

ரேகன் அசராமல் ஒரே உத்தரவு போட்டார்."நாளை காலை வேலைக்கு வராத அனைத்து பைலட்டுகளும் வேலை இழப்பு மற்றும் வாழ்நாள் முழுவதும் நிரந்தரமாக விமானம் ஓட்டமுடியாமல் லைசென்ஸ் பறிக்கபடும்" என்றார்.அதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இப்படி சொன்னதே இல்லை.ஸ்ட்ரைக் வந்தால் பணிந்துபோய் பேரம் பேசுவது தான் வழக்கம்.ரேகன் ஏதோ ஜோக் அடிக்கிறார் என பைலட்டுகள் நினைத்தனர்.

அடுத்த நாள் காலை விடிந்தது.பணிக்கு வராத 12,000 பைலட்டுகளை வேலைநீக்கம் செய்து வாழ்நாள் முழுக்க அவர்கள் எந்த விமானத்திலும் கால் வைக்க முடியாதபடிக்கு லைசென்ஸை பறித்தார் ரேகன்.(12,000 பைலட்டுகளுக்கும் சுமார் 12 வருடம் கழித்து பில்க்ளின்டன் ஆட்சிக்கு வந்துதான் பைலட்டுகளுக்கு லைசென்சை மீண்டும் கொடுத்தார்).அமெரிக்க விமானிகள் சங்கமே அத்துடன் இழுத்து மூடப்பட்டது.அதன்பின் ஸ்ட்ரைக் என்ற பேச்சே ரீகன் ஆட்சிகாலத்தில் எந்த தொழிற்சங்கத்தாலும் எழுப்பபடவில்லை.அமெரிக்க தொழில்துறை தலைநிமிர்ந்து நின்று வளர்ச்சி பாதையில் காலடி எடுத்து வைத்தது.

Raja sankar

unread,
May 28, 2010, 12:31:54 AM5/28/10
to mint...@googlegroups.com
செல்வன்,

சில திருத்தங்கள். வேலை நிறுத்தம் செய்தவர்கள் விமானிகள் இல்லை. அவர்கள் விமான போக்குவரத்து கண்காணிப்பாளர்கள். இரண்டாவது அவர்கள் மீண்டும் எந்த பெரடல் வேலைக்கும் வர முடியாதபடி செய்தார்.

ரீகன் அமெரீக்க வரலாற்றில் ஒரு மாற்றம் கொண்டு வந்தவர். பெர்லின் சுவரை உடைக்க கோரிக்கை விடுத்தவர்.

ராஜசங்கர்



2010/5/28 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
May 28, 2010, 12:38:05 AM5/28/10
to mint...@googlegroups.com
நன்றி ராஜாசங்கர்.நினைவிலிருந்து எழுதியது....இப்ப தான் விக்கியில் பார்த்தேன்.நீங்கள் சொன்னதுதான் சரி.அவர்கள் பிளைட் கண்ட்ரோலர்கள் தான்


2010/5/27 Raja sankar <errajasa...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
May 30, 2010, 2:50:21 AM5/30/10
to mintamil

செயற்கை உயிரை உருவாக்கி சாதனை:இனி மதங்கள் என்ன ஆகும்?

தபால் மூலம் வாங்கிய ரசாயனங்களை ஒன்றுசேர்த்து செயற்கையாக டி.என்.ஏவை உருவாக்கி அதன்மூலம் நுண்ணுயிரிகளை உருவாக்கி எம்.ஐ.டி விஞ்ஞானி க்ரெயிக் விட்டர் சாதனை புரிந்துள்ளார்.விட்டர் உருவாக்கிய நுண்ணுயிரி முதல் முதலாக பரிசோதனை கூடத்தில் தாய்,தந்தை,முன்னோர் என எதுவுமே இல்லாமல் செயற்கையாக உருவான உயிரினமாகும்.

விஞ்ஞானிகள் கடவுளின் படைப்பு தொழிலை செய்வதா என இப்போதே புலம்பல்கள் துவங்கிவிட்டன.கடவுள் இல்லாமல் படைப்பு நடந்திருக்க முடியும் என்பதை க்ரெயிக் விட்டர் நிருபித்துவிட்டார்.இனிவரும் காலத்தில் பரிசோதனை கூடத்தில் மனிதர்களையே கூட உருவாக்க இயலலாம்.இனி மதங்கள், கடவுள் எல்லாம் என்ன ஆகும்?

article-1279988-09B037B1000005DC-63_634x875.jpg

Artificial life: Have scientists created a monster?

By Michael Hanlon
Last updated at 11:07 AM on 21st May 2010

The creation of a living being in a laboratory is one of the staples of science fiction.

Now it is a scientific fact. Yesterday's announcement of the birth of a 'synthetic cell' - made by injecting a bacterium shell with genetic material created from scratch by scientists - raises many questions.

These range from the mundanely practical - how will this be useful? - to the profoundly philosophical - will we have to redefine what life is?

Maverick: Craig Venter made a synthetic cell from scratch in a 
world first

Maverick: Craig Venter made a synthetic cell from scratch in a world first

Depending on your viewpoint, it is either a powerful testament to human ingenuity or a terrible example of hubris - and the first step on a very dangerous road.

To understand what this development means, we need to discover who the team behind this innovation is.

It is led by Craig Venter, the world's greatest scientific provocateur, a 63-year-old Utah-born genius, a Vietnam veteran, billionaire, yachtsman, and an explorer. Above all he is a showman.

 

A master of self-publicity, he does not do things by halves; he led the private team which competed with scores of publicly funded scientists in the U.S. and UK to 'crack' the human genome by sequencing our DNA.

His rapid, innovative approach led to the possibility he would beat the scientific establishment.

So, to save face all round, the human genome was presented as a joint achievement. At around the same time, he began talking about making an artificial lifeform in the lab.

Not a Frankenstein's monster, or even a mouse, but a bacterium, one of the simplest living organisms. His blueprint was to be an unassuming and harmless little germ with only 485 genes (humans have around 25,000).

Venter talks grandly of a supercharged biotech revolution, with synthetic bacteria designed to produce biofuels, to mine precious metals from rocks and industrial waste, to digest oil slicks and render toxic spills harmless. Scientists could even create bacteria which can produce novel drugs and vaccines, or organisms engineered to live on Mars and other planets.

The potential is huge - but so are the dangers. An artificial species, created in the lab, might not 'obey the rules' of the natural world - after all, every living being on Earth has evolved over three billion years, when a myriad of competing species have had to share the same increasingly crowded environment.

It is possible to imagine a synthetic microbe going on the rampage, perhaps wiping out all the world's crop plants or even humanity itself.

Synthetic biology also challenges our most cherished notions of what life itself actually is. Non-scientists might not realise that we have, as yet, no proper definition of life.

A diamond is not alive; a baboon clearly is. But what about a virus? Viruses, which are even simpler than bacteria, have a genetic code written in DNA (or its cousin RNA).

The stuff viruses are made from is the stuff of life - protein coats and so on - yet they cannot reproduce independently.

Like diamonds, they can be grown into crystals - and you certainly cannot crystallise baboons. Most biologists say viruses are not alive, and that true biology begins with bacteria.

 
TODAY'S POLL  

Should scientists be allowed to create synthetic life?

 
 
aggregated M. mycoides
POLL RESULTS  
 
 Close
All polls Click to view yesterday's poll results

So is Synthia, Venter's tentative name for his new critter, alive? It is certainly not the result of Darwinian evolution, one of the (many) definitions of life. It is more 'alive' than any virus but it is the product of Man, not of evolution. Its genetic code is simple enough to be stored on a computer (but then again, so is ours).

Whatever the answer to this fundamental question, Venter's breakthrough is certainly the final rebuttal to the old notion of a vital spark - a mysterious essence that divides the quick from the dead. If you can carry around a genome on a computer memory stick and make a cell using a few simple chemicals, then the old idea of 'vitalism' is truly dead.

Of course, this is early days. It is not yet clear if Venter can negotiate the final step - creating a whole cell from scratch, using no bits of existing living organisms at all.

His bacterium is likely to be weak and feeble; we are a long way from synthetic super-plagues, and even further from an artificial animal or plant. But it is hard to escape the feeling that a boundary has been crossed. The problem is, it is far from clear where we go from here.

 


--
செல்வன்

www.holyox.tk

"They who can give up essential liberty to obtain a little temporary safety deserve neither liberty nor safety"
- Benjamin Franklin

Innamburan Innamburan

unread,
May 30, 2010, 7:55:22 AM5/30/10
to mint...@googlegroups.com
திரு. செல்வன்,
Should scientists be allowed to create synthetic life? ஓட்டுப்போடுவது
எல்லாம் இருக்கட்டும். 'சிந்திப்போமே' என்ற இழையில், இது பற்றி முதலில்
வந்த கட்டுரையில், திரு.கண்ணன் சொல்வதைப்பார்த்து, அங்கு தொடர்ந்தால்,
நலம்.

இன்னம்பூரான்

2010/5/30 செல்வன் <hol...@gmail.com>


>
>> செயற்கை உயிரை உருவாக்கி சாதனை:இனி மதங்கள் என்ன ஆகும்?
>>
>> தபால் மூலம் வாங்கிய ரசாயனங்களை ஒன்றுசேர்த்து செயற்கையாக டி.என்.ஏவை உருவாக்கி அதன்மூலம் நுண்ணுயிரிகளை உருவாக்கி எம்.ஐ.டி விஞ்ஞானி க்ரெயிக் விட்டர் சாதனை புரிந்துள்ளார்.விட்டர் உருவாக்கிய நுண்ணுயிரி முதல் முதலாக பரிசோதனை கூடத்தில் தாய்,தந்தை,முன்னோர் என எதுவுமே இல்லாமல் செயற்கையாக உருவான உயிரினமாகும்.
>>
>> விஞ்ஞானிகள் கடவுளின் படைப்பு தொழிலை செய்வதா என இப்போதே புலம்பல்கள் துவங்கிவிட்டன.கடவுள் இல்லாமல் படைப்பு நடந்திருக்க முடியும் என்பதை க்ரெயிக் விட்டர் நிருபித்துவிட்டார்.இனிவரும் காலத்தில் பரிசோதனை கூடத்தில் மனிதர்களையே கூட உருவாக்க இயலலாம்.இனி மதங்கள், கடவுள் எல்லாம் என்ன ஆகும்?
>>
>>
>>

>> Artificial life: Have scientists created a monster?
>>
>> By Michael Hanlon
>> Last updated at 11:07 AM on 21st May 2010
>>
>> Comments (12)
>> Add to My Stories
>>
>> The creation of a living being in a laboratory is one of the staples of science fiction.
>>
>> Now it is a scientific fact. Yesterday's announcement of the birth of a 'synthetic cell' - made by injecting a bacterium shell with genetic material created from scratch by scientists - raises many questions.
>>
>> These range from the mundanely practical - how will this be useful? - to the profoundly philosophical - will we have to redefine what life is?
>>

>> Maverick: Craig Venter made a synthetic cell from scratch in a world first
>>
>> Depending on your viewpoint, it is either a powerful testament to human ingenuity or a terrible example of hubris - and the first step on a very dangerous road.
>>
>> To understand what this development means, we need to discover who the team behind this innovation is.
>>
>> It is led by Craig Venter, the world's greatest scientific provocateur, a 63-year-old Utah-born genius, a Vietnam veteran, billionaire, yachtsman, and an explorer. Above all he is a showman.
>>
>>
>>
>> More...
>>
>> Scientists create artificial life: World first as genome pioneer makes designer microbe from scratch
>>
>> A master of self-publicity, he does not do things by halves; he led the private team which competed with scores of publicly funded scientists in the U.S. and UK to 'crack' the human genome by sequencing our DNA.
>>
>> His rapid, innovative approach led to the possibility he would beat the scientific establishment.
>>
>> So, to save face all round, the human genome was presented as a joint achievement. At around the same time, he began talking about making an artificial lifeform in the lab.
>>
>> Not a Frankenstein's monster, or even a mouse, but a bacterium, one of the simplest living organisms. His blueprint was to be an unassuming and harmless little germ with only 485 genes (humans have around 25,000).
>>
>> Venter talks grandly of a supercharged biotech revolution, with synthetic bacteria designed to produce biofuels, to mine precious metals from rocks and industrial waste, to digest oil slicks and render toxic spills harmless. Scientists could even create bacteria which can produce novel drugs and vaccines, or organisms engineered to live on Mars and other planets.
>>
>> The potential is huge - but so are the dangers. An artificial species, created in the lab, might not 'obey the rules' of the natural world - after all, every living being on Earth has evolved over three billion years, when a myriad of competing species have had to share the same increasingly crowded environment.
>>
>> It is possible to imagine a synthetic microbe going on the rampage, perhaps wiping out all the world's crop plants or even humanity itself.
>>
>> Synthetic biology also challenges our most cherished notions of what life itself actually is. Non-scientists might not realise that we have, as yet, no proper definition of life.
>>
>> A diamond is not alive; a baboon clearly is. But what about a virus? Viruses, which are even simpler than bacteria, have a genetic code written in DNA (or its cousin RNA).
>>
>> The stuff viruses are made from is the stuff of life - protein coats and so on - yet they cannot reproduce independently.
>>
>> Like diamonds, they can be grown into crystals - and you certainly cannot crystallise baboons. Most biologists say viruses are not alive, and that true biology begins with bacteria.
>>
>>
>> TODAY'S POLL
>>
>> Should scientists be allowed to create synthetic life?
>>
>>   Yes
>>   No
>> VOTE

>> POLL RESULTS
>>
>>  Close
>> All polls Click to view yesterday's poll results
>>
>> So is Synthia, Venter's tentative name for his new critter, alive? It is certainly not the result of Darwinian evolution, one of the (many) definitions of life. It is more 'alive' than any virus but it is the product of Man, not of evolution. Its genetic code is simple enough to be stored on a computer (but then again, so is ours).
>>
>> Whatever the answer to this fundamental question, Venter's breakthrough is certainly the final rebuttal to the old notion of a vital spark - a mysterious essence that divides the quick from the dead. If you can carry around a genome on a computer memory stick and make a cell using a few simple chemicals, then the old idea of 'vitalism' is truly dead.
>>
>> Of course, this is early days. It is not yet clear if Venter can negotiate the final step - creating a whole cell from scratch, using no bits of existing living organisms at all.
>>
>> His bacterium is likely to be weak and feeble; we are a long way from synthetic super-plagues, and even further from an artificial animal or plant. But it is hard to escape the feeling that a boundary has been crossed. The problem is, it is far from clear where we go from here.
>>
>>
>> Read more: http://www.dailymail.co.uk/debate/article-1280030/Artificial-life-Have-scientists-created-monster.html#ixzz0pOQHsvzF
>>
>>
>> --
>> செல்வன்
>>
>> www.holyox.tk
>>
>> "They who can give up essential liberty to obtain a little temporary safety deserve neither liberty nor safety"
>> - Benjamin Franklin
>
>
>
> --
> செல்வன்
>
> www.holyox.tk
>
> "They who can give up essential liberty to obtain a little temporary safety deserve neither liberty nor safety"
> - Benjamin Franklin
>

N. Kannan

unread,
May 30, 2010, 6:46:11 PM5/30/10
to mint...@googlegroups.com
2010/5/30 செல்வன் <hol...@gmail.com>

>> விஞ்ஞானிகள் கடவுளின் படைப்பு தொழிலை செய்வதா என இப்போதே புலம்பல்கள் துவங்கிவிட்டன.கடவுள் இல்லாமல் படைப்பு நடந்திருக்க முடியும் என்பதை க்ரெயிக் விட்டர் நிருபித்துவிட்டார்.இனிவரும் காலத்தில் பரிசோதனை கூடத்தில் மனிதர்களையே கூட உருவாக்க இயலலாம்.இனி மதங்கள், கடவுள் எல்லாம் என்ன ஆகும்?
>>


செல்வன், நாமும் ஆபிரகாமிய வழியில் சிந்தித்தால் எப்படி? இறைவனை இவ்வளவு
கீழாக எடை போட்டு நாம் ஒரு மேல் உட்கார்ந்துவிட்டது போல் கற்பனை செய்வது
எவ்வளவு வேடிக்கை. அந்த விஞ்ஞானி எப்படித் தோன்றினார். மெயில் ஆர்டர்
கம்பெனி எங்கிருந்து அமினோ அமிலங்களைத் தயாரிக்கிறது? From nothing?

தன்னுள்ளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுள்ளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின் கண் நின்றதே

இதுதான் தமிழர் காணும் இறைமை.

நாம் அறிவியல் சாதனையைப் புகழ்வோம். அது மானுடத்திற்கு மேலும் பயன்பட
வாழ்த்துவோம். ஆயின், அது ஆன்மீகத்திற்கு எதிர்முனை என்பது யோசிப்பதைத்
தவிர்ப்போம். இல்லையெனில் நமக்கு அறிவியலும் தெரியாது, ஆன்மீகமும்
தெரியாது என்று ஆகிப்போகும் ;-)

க.>

செல்வன்

unread,
May 31, 2010, 12:03:05 AM5/31/10
to mint...@googlegroups.com
நன்றி ஐயா.

செயற்கை உயிரை விஞ்ஞானிகள் உருவாக்க விழைவது அவசியம்.உங்கள் மடலை பார்த்துவிட்டு நான் சிந்திப்போமா இழையை தேடினேன்.இழை இரண்டுமூன்ராக பிரிந்து கிடக்கிறதா அல்லது ஒரே மடல் மட்டுமே உள்ல இழை ஓடுதான்னு தெரியலை.தயவு செய்து சரியான இழையில் ஒரு மடலை போட்டு மேலே அனுப்புங்கள்.அதில் இந்த விஷயத்தை அலசலாம்

2010/5/30 Innamburan Innamburan <innam...@googlemail.com>

திரு. செல்வன்,
Should scientists be allowed to create synthetic life? ஓட்டுப்போடுவது
எல்லாம் இருக்கட்டும். 'சிந்திப்போமே' என்ற இழையில், இது பற்றி முதலில்
வந்த கட்டுரையில், திரு.கண்ணன் சொல்வதைப்பார்த்து, அங்கு தொடர்ந்தால்,
நலம்.

செல்வன்

unread,
May 31, 2010, 12:07:33 AM5/31/10
to mint...@googlegroups.com
கண்ணன் ஐயா

நான் ஆன்மிகத்தை குறைகூறவில்லை.மதத்தையும் அது கூறும் கடவுளையும் தான் குறைகூறுகிறேன்.ஆன்மிகத்துக்கும் மதத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.ஆன்மிகம் கேள்விகளை கொண்டது.மதம் பதில்களை கொண்டது.ஆன்மிகத்தில் கடவுள் என்ற கோட்பாடு மதத்தில் உள்ளது போல் இறுக்கமானது அல்ல.முருகன், ஏசு, புத்தனை ஆன்மிக வழியிலும் அணுகலாம். மதவழியாகவும் அணுகலாம். பின்னதை நான் குறைகூறுவேன்,கிண்டல் அடிப்பேன்.முன்னதை ஒன்றும் சொல்லமாட்டேன்.

2010/5/30 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
May 31, 2010, 12:20:50 AM5/31/10
to mint...@googlegroups.com
மெமோரியல் நாள் எனப்படும் மாவீரர் நினைவு தினம் அமெரிக்காவில் நாளை துவங்குகிறது. தேசம் காக்க தன் உயிரை யாத்த அமெரிக்க வீரர்களுக்கு தேசமே நன்றி செலுத்தும் நாள் நாளை. இதை முன்னிட்டு இந்த கட்டுரையை இடுகிறேன்

மிட்வே

ஹிட்லரின் படைகள் 1941 வரை வெற்றி மேல் வெற்றி அடைந்து வந்தன.ஐரோப்பாவில் பிரிட்டனை தவிர அனைத்து நாடுகளும் ஹிட்லரின் காலடியில்.ஹிட்லரை எதிர்க்கும் வலுவை அன்று பெற்றிருந்தது ஒரே நாடு...அமெரிக்கா.ஆனால் அமெரிக்கா 1941 வரை போரில் இறங்கவில்லை.

அமெரிக்கா களத்தில் இறங்குமுன் ஹிட்லரின் யுபோட்டுகள் பிரிட்டிஷ் கப்பல்களை துவம்சம் செய்துவந்தன.உண்ண கோதுமையோ,மாமிசமோ இல்லாமல் ப்ரிட்டிஷ் மக்கள் ரேஷன் முறையில் துன்பப்பட்டனர்.உலகமே அஞ்சி நடுங்கிய யுபோட்டுகளை பிரிட்டன் வீரமிக்க முறையில் எதிர்த்து வந்தது.ஆனால் அந்த யுத்தத்தில் யுபோட்டுகள் மாதம் ஐந்து லட்சம் டன் எடையுள்ள பிரிட்டிஷ் கப்பல்களை மூழ்கடித்து வந்தன.

அமெரிக்க நேவியிடம் இந்த பிரச்சனை கொண்டுவரப்பட்டது.யுபோட்டுகளை அழிக்க வழக்கமான யுத்த தந்திரங்களை விட்டுவிட்டு டெக்னாலஜியின் உதவியை நாடினர் அமெரிக்கர்.விமானத்தில் ரேடாரை பொருத்தினால் யுபோட்டுகளை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கலாம்.அப்புறம் விண்ணிலிருந்து பறவை சுடுவது போல் சுட்டுதள்ள வேண்டியதுதான்...

1942ல் உலகை அச்சுறுத்தி வந்த ஜெர்மானிய யுபோட்டுகள் இப்படி டெக்னாலஜியை பயன்படுத்தி ஒழிக்கப்பட்டன.இந்த கடற்போர் இன்னும் சில மாதங்கள் தொடர்ந்திருந்தால் ப்ரிட்டன் சரணடைந்திருக்க வேண்டியதுதான் என்ற நிலையில் இந்த மகத்தான திருப்புமுனை.

-------------------

மிட்வே எனும் தீவில் அமெரிக்க ராணுவமும், ஜப்பானிய ராணுவமும் மோதிய யுத்தம் பசிபிக் பிராந்திய மேலாதிக்கத்துக்கு நடந்த போரில் மாபெரும் திருப்புமுனை.அதுவரை ஜப்பான் எந்த போரிலும் தோல்வியே சந்தித்ததில்லை.ஜப்பானிய ஜெனெரல் யமாமோட்டோவும் அமெரிக்க ஜெனெரல் ப்ளெட்சரும் இந்த யுத்தத்தில் பொருதினார்கள்.யமாமோட்டோ ஜப்பானிய ஹீரொ.ப்ளெட்சர் யார் என்றே பலருக்கும் தெரியாத அளவு சாதாரண நபர்.ஜப்பானிய வீரர்கள் உயிரை பற்றி கவலைபடாமல் தற்கொலை தாக்குதல் நடத்த தயாராக இருந்தனர்.அமெரிக்க வீரர்கள் அப்படி தற்கொலை தாக்குதல் எதுவும் நடத்த தயாராக இல்லை.அந்த யுத்தத்தில் தோற்றால் யமாமோட்டோ ஜப்பானிய வழக்கபடி தற்கொலை செய்துகொள்வார்.அல்லது கப்பலுடன் கடலில் மூழ்குவார்.ப்ளெட்சருக்கு கப்பல்கள் மேல் அத்தனை பிடிமானம் எல்லாம் இல்லை.ஒரு விமானம் தாங்கி கப்பல் ஜப்பானியர்களால் வீழ்ந்தப்பட்டவுடன் "சரி வாங்க அடுத்த கப்பாலுக்கு போகலாம்" என சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு அடுத்த கப்பலில் ஏறி யுத்தத்தை தொடர்ந்தார்.

இப்படி மாறுபட்ட இரு கலாசாரங்கள் மிட்வேயில் மோதின.வீர சுவர்க்கத்தை விரும்பி போராடிய ஜப்பானியர் தாம் விரும்பியதை அடைந்தனர்.அதாவது வீரசுவர்க்கம்.அந்த யுத்தத்தில் சுமார் 10,000 ஜப்பானியர் கொல்லப்பட்டனர்.நாலு ஜப்பானிய விமானம்தனக்கி கப்பல்கள் மூழ்கின.உயிரை வெல்லமாக மதித்த அமெரிக்கர் வெறும் 300 வீரர்களையும் ஒரு கப்பலையும் மட்டுமே இழந்தனர்.மாபெரும் தோல்வி அடைந்த யமாமோட்டோ வழக்கபடி பின்னாட்களில் தற்கொலை செய்துகொண்டு உயிர் துறந்தார்.

மிட்வே யுத்தம் பசிபிக் பிராந்திய யுத்தத்தில் மாபெரும் திருப்புமுனை.யுபோட் வெற்றியும், மிட்வே யுத்தமும், ஸ்டாலினிகிராடில் ரஷ்யர்கள் அடைந்த மாபெரும் வெற்றியும் உலக யுத்ததின் போக்கை திருப்பின.

மிட்வே சமர்க்களத்தில் சரித்திர சாதனை படைத்த அமெரிக்க போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். என்டெர்ப்ரைஸ்

02_uss_enterprise_cvn_65.jpg

N. Kannan

unread,
May 31, 2010, 3:40:17 AM5/31/10
to mint...@googlegroups.com
சௌகர்யத்திற்கு நாம் பிரித்துக்கொள்வதுதானே ;-)

அந்தத்தொணி அப்படியே ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு வருகிறது.
எழுதியவரின் கிறிஸ்தவப் பின்னணியைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அது
ஆபிரகாமிய நோக்கு. இந்திய சமயங்களில் அப்பார்வை இல்லை. இது மின்தமிழ்
என்பதால் இங்கு வரும் மடல்களில் நம் மரபு குறித்தான கண்ணோட்டத்துடன்
இருப்பது நலம். அவர்கள் உலகியல் நோக்கு வேறு நமது வேறு.

இங்கு அறிவியல் என்று தனியே ஏதும் கிடையாது. அறிந்து கொள்ளுதலின் ஒரு
பிரிவு அது. ‘அறிவின் பயன் இறைவனை அறிதலே’ என்பது நம் நோக்கு. எனவே
ஆபிரகாமிய பிரிவினை (religion vs science) இங்கு கிடையாது. அப்பாடலை
இன்னொருமுறை வாசியுங்கள், என்ன அற்புதமான பார்வை அது!

க.>

2010/5/31 செல்வன் <hol...@gmail.com>:

செல்வன்

unread,
May 31, 2010, 3:48:18 AM5/31/10
to mint...@googlegroups.com
சவுகரியத்துக்கு பிரிக்கலை கண்ணன் ஐயா.கடவுளும், மதமும் என்ற ஒரு இழையில் ஆன்மிகத்துக்கும் மதத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டைவிரிவாக எழுதியிருப்பேன்.

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/3ada198c187e8d25/8d437d5cf996c033?lnk=gst&q=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D#8d437d5cf996c033

"...வேதங்கள் என்பவை என்ன?இறைவனை தேடியவர்களின் ஆன்மிக அனுபவங்கள்.அந்த தேடலுக்கு விடையாக அவர்களுள் தோன்றிய இறை உனர்வை புத்தகத்தில் எழுதிவைக்க அது வேதமாகிவிட்டது.புத்தரின் ஞானதேடலை மற்றவர்களுக்கு எடுத்துகூற ஆரம்பிக்க அது பவுத்தமாகி விட்டது.

அடுத்தவன் காட்டிய வழியில் இறைவனை காணமுயற்சிக்கும் வழியே மதம்.தன் உள்ளுணர்வில் இறைவனை காணும் வழியே ஆன்மிகம்.மதம் என்பது இறைதேடலுக்கு பொருத்தமற்றது..ஆன்மிகமே பொருத்தமானது.

சொர்க்கம் எனும் குச்சி மிட்டாயும், நரகம் எனும் தடியும் இல்லாமல் ஒருத்தன்
நல்லவனாக இருக்க முடியுமா?

முடியும் என்கிறது ஆன்மிகம்.
முடியாது என்கிறது மதம்.

மக்களுக்கும், மாக்களுக்கும் இருக்கும் வித்தியாசம் இங்குதான் துவங்குகிறது.

உண்மையான ஆன்மிகவாதிக்கு நல்லவனாக இருக்க இறைவன் எனும் பூச்சாண்டி
தேவைப்படுவதில்லை..ஆன்மிகவாதியின் இறைவன் பழிவாங்கும் பேயல்ல.நரகத்தில் போட்டு
வதக்கும் சாடிஸ்டல்ல.ஒரு ஆன்மிகவாதி நல்லவனாக இருக்க காரணம் சுயசிந்தனையில்
தோன்றிய சிந்தனையே ஆகும்.உள்ளூர வரும் உணர்வால் நல்லவனாக இருப்பவன் தான்
ஆன்மிகவாதி.போலிஸ் ஸ்டேஷன் இருப்பதால் யோக்கியமாக இருப்பதை ஒத்த மதவாதிகள்
கும்பலில் அவன் ஒருத்தனாக இருக்க மாட்டான்.

செல்வன்

unread,
May 31, 2010, 3:55:51 AM5/31/10
to mint...@googlegroups.com
தன்னுள்ளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுள்ளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின் கண் நின்றதே

---இதுதான் தமிழர் காணும் இறைமை.

நல்ல ஆன்மிக அனுபவம்.இது குறித்து நான் முன்பு "கடவுளும், மதமும்" இழையில் எழுதியது பொருத்தமாக இருக்கிறது.


அடுத்தவன் காட்டிய வழியில் இறைவனை காணமுயற்சிக்கும் வழியே மதம்.தன்
உள்ளுணர்வில் இறைவனை காணும் வழியே ஆன்மிகம்.மதம் என்பது இறைதேடலுக்கு
பொருத்தமற்றது..ஆன்மிகமே பொருத்தமானது.

எருமை புல்லுக்கட்டை தின்றுகொண்டே தியானித்தால் கடவுள் அதற்கு எருமையாக தான்
காட்சியளிப்பார்..அந்த எருமை அப்புறம் "கடவுளை தரிசிக்க வழி புல்லை
தின்றுகொண்டே தியானிப்பதுதான்" என்று நூலில் எழுதிவைக்கும்.அது எருமை
மதமாகிவிடும்..அப்புறம் எல்லா எருமைகளும் புல்லுக்கட்டை தின்றுகொண்டே தியானிக்க
துவங்கிவிடும்.

மதத்தை கடுமையாக விமர்சிக்கும் ஆன்மிகவாதிகள் இருக்கிறார்கள்.அவர்கள்
விமர்சிப்பது செயற்கையாக தம்மேல் திணிக்கப்பட்ட மற்றவரது வழிமுறையை தானே அன்றி
இயற்கையாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தோன்றும் ஆன்மிக உணர்வை அல்ல.அந்த ஆன்மிக
உனர்வு இருப்பதால் தான் மதத்தின் பெயரால் நடக்கும் இத்தனை
அயோக்கியத்தனங்களுக்கும் பிறகும் அவர்களால் இறைநம்பிக்கையுடன் இருக்க
முடிகிறது.

இந்த ஆன்மிக உணர்வு உள்மனதில் இருப்பதால் தான் நாத்திகவாதிகளும் மனதில்
கேள்விகளுடனேயே "இருக்குமோ, இருக்காதோ" என்ற மனதின் அடியாழத்தில் இருக்கும்
சந்தேகத்துடன் தமது விமர்சனங்களை தொடர்கிறார்கள்.

பிச்சை எடுக்கும் ஆண்டிக்கு மனதில் வரும் இறை உணர்வு இறைவனை பிச்சைக்காரனாக
தான் காட்டும்.அதை அவன் அடுத்தவனுக்கு எடுத்து சொன்னால் அடுத்தவனும் இறைவனை
பிச்சைக்காரனாக தான் பார்ப்பான்.இன்னொருத்தனுக்கு இது கேலியாக தோன்றும்.கவி
காளமேகம் போல் பிச்சைக்காரனாக வரும் சிவனை கிண்டல் செய்வான்.

நச்சரவம் பூண்டதில்லை நாதரே; தேவரீர்
பிச்சையெடுத்து உண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம்
காளம் ஏன்? குஞ்சரம் ஏன்? கார்க்கடல்போ லேமுழங்கும்
மேளம் ஏன்? ராசாங்கம் ஏன்?

பிச்சைக்காரனுக்கு தோன்றிய இறை உணர்வு பொய்யா? இல்லை..அது அவனுக்கு மட்டுமே
இறைவன் கொடுத்த தரிசனம்.அதை அடுத்தவனுக்கு சொன்னதால் அது மதமானது.இறைவன் பிச்சை
எடுப்பது ஒரு சடங்கானது.அதை கிண்டல் செய்வது நாத்திகமானது.

காளமேகத்துக்கு இறைதரிசனம் கிட்டியிருந்தால் இறைவன் கவியாக தோன்றியிருக்க
கூடும்.அதை ஒரு ஐநூறு பேர் நம்பி இறைவன் கவிஞன் என்று கூறியிருந்தால் அது
மதமாகிவிடுகிறது.அதை இன்னொருவன் கிண்டல் செய்தால் அது நாத்திகமாகிவிடுகிறது.

N. Kannan

unread,
May 31, 2010, 4:16:42 AM5/31/10
to mint...@googlegroups.com
I think you miss the point.
The debate is not over liberal religious view (=ஆன்மீகம் in your point
of view) or orthodox religious view (மதம் in your view).
Whether there is a diabolically opposite view of Sciene and religion
in Indian point of view or not?
You translate a christian world view to fit in here (making it universal).
I do not see, as you presume that Scientist's have taken the role of
God. They can't because they are part of a divine design already.
It's bit complicated. Not much time now.

Kannan

2010/5/31 செல்வன் <hol...@gmail.com>:

devoo

unread,
May 31, 2010, 4:43:13 AM5/31/10
to மின்தமிழ்
May 31, 2:55 am, செல்வன்

>>> பிச்சை எடுக்கும் ஆண்டிக்கு மனதில் வரும் இறை உணர்வு இறைவனை பிச்சைக்காரனாக தான் காட்டும்.<<<

”ஆலமாமரத்தின் இலை மேல் ஒருபாலகனாய்
ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவினணையான்
கோலமாமணியாரமும் முத்துதாமும் முடிவில்லதோரெழில்
நீலமேனி ஐயோ! நிறைகொண்டது என் நெஞ்சினையே”

திருப்பாணாழ்வாருக்கு இறைவன் வீணை வித்துவானாகத் தெரியவில்லையே , ஐயா!
ஞாலம் உண்டவனாகக் காட்சி தருகிறானே. எதற்கும் அமலனாதிபிரானை மீண்டும்
ஒரு முறை படித்துப் பார்க்கிறேன்


தேவ்

Innamburan Innamburan

unread,
May 31, 2010, 7:11:48 AM5/31/10
to mint...@googlegroups.com
நான் சிந்திப்போமா இழையை தேடினேன்.இழை இரண்டுமூன்ராக பிரிந்து கிடக்கிறதா!
அது  ஒரே இழையில்: 'சிந்திப்போமே'

இன்னம்பூரான்
2010/5/30 செல்வன் <hol...@gmail.com>
>

N. Kannan

unread,
May 31, 2010, 8:09:49 AM5/31/10
to mint...@googlegroups.com
இப்போது நேரமுள்ளது. நான் என்ன சொல்ல விழைகிறேன் என்பதை இப்போது சொல்கிறேன்.

1. அடியைப்பிடிடா பாரத பட்டா! என்று செல்வன் போன்ற ஆர்வலர்கள் நம் பழைய
சரக்கையெல்லாம் வாசிக்காமல் தொபுக்கடீர்ன்னு மின்தமிழில் குதித்து
பட்டையைக் கிளப்பும் போது, உலகம் மீண்டுமொரு சுற்றுக்கு வருவதை
உணர்கிறேன் :-))

2. ஐயா! மேலை நாட்டில் வாழும் நாம் ஆங்கிலத்தில் படித்து, ஆங்கிலத்தில்
சிந்தித்து, மேலைக்கலாச்சார பதப்படுத்தலுக்கு நம்மை அறியாமலே ஆட்பட்டு,
ஒரு போலி விடுதலை உணர்வை அடைகிறோம். அது போது நமக்கு வசமாய் கிடைப்பது
களிம்பு மண்டிப்போன நம் சமய ஒழுங்குகள்தான் ;-)

எதற்கு சொல்கிறேன் என்றால் மேலை வளர்ப்பில் அறிவியலும், சமயமும் (உங்கள்
வார்த்தையில் மதமும்) மோதுகின்றன. ஏனெனில் அவர்கள் சமய தத்துவம் அப்படி
அமைந்திருக்கிறது அதனால்!! டார்வின் கூர்தலியக்கோட்பாடு புத்தகத்தை
எழுதிவிட்டு (20 வருட தயக்கத்திற்குப்பின்) எலிசபெத்தியன் மனோபாவம்
எப்படி இருக்குமென்று பயந்து கொண்டிருந்தார். அதே போல் மாட்டிக்கொண்டார்.
மேலை உலகமே ஒரு சுநாமியில் அகப்பட்டது போன்ற சூழல். அந்த நேரத்தில்
இங்கிலாந்தின் காலனியாக இருந்த இந்தியாவில் ஒரு சிறு அலை கூட
அடிக்கவில்லை. இவன் சாமி இங்கே மீனாக,பன்றியாக, சிங்கமாக, காட்டு மனிதனாக
இப்படியெல்லாம் முன்னமே பாவ்லா காட்டிவிட்டது. எனவே இவனுக்கு இது என்ன
பெரிய விஷயம் என்று இருந்தது.

மேலும் ஆன்மீகம் என்பது ஏதோ மதம் என்பதற்கு எதிர் என்பது போன்ற ஒன்னொரு
புதிய சூத்திரத்தையும் கொண்டு வருகிறீர்கள். இவையெல்லாம் மேலை மனோநிலை
என்பதைத் தெளிவாகக் காட்டும். இங்கு அப்படியொரு பிரிவும் இல்லை.

ஆதிசங்கர பகவத்பாதாள் அவர்களை ஷண்மத ஸ்தாபகர் என்கின்றனர். இராமானுஜரை,
மாத்வரை மதாச்சார்யர் என்றே இங்கு அழைக்கின்றனர். இவர்களின் கூர்மதிக்கு
முன் நாம் எம்மாத்திரம்? இவர்கள் தர்க்கவாதத்திற்கு முன் நாம் ஐந்து
நிமிடம் நிற்கமுடியுமா? வேதாந்தம் எனும் கூர்மையான தர்க்க
அணுகுமுறையில்தான் இவர்கள் தங்கள் மதங்களை ஸ்தாபிக்கின்றனர். ஆக, நீங்கள்
‘மதம்’ என்று சொல்லும் போது மேலைக் கண்ணோட்டத்தில், Religion என்பதற்கு
ஒப்பு என்று நினைத்து எழுதுகிறீர்கள். இந்திய உரையாடலில் அப்படியொரு
Genre இல்லை. இங்கு மதம் என்பதே தொன்நெறியின் தொடர் இயக்கமாக,
மேல்விரிவுரையாக மலர்கிறது.

சரி ஆன்மீகம் என்றால் ஏதோ புரட்சிக்கருத்துக்களை முன்வைக்கும் போக்கு
என்று நீங்கள் எழுதுகிறீர்கள். இராமானுஜருக்கு மேல் என்ன பெரிய புரட்சியை
நாம் செய்துவிட்டோம்? ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு orthodox brahmin
போல வைதீக மார்க்கத்தில் எக்குறையும் வைக்காமல் வாழ்ந்தார். ஆக,
வைதீகமாகவும் இருக்கமுடியும், லிபரலாகவும் இங்கு இருக்க முடியும். அது
எப்படி?

அங்குதான் இந்திய மெய்ஞானத்தின் சர்வ சுதந்திரமான ஒரு போக்கு கண்ணில்
படுகிறது. வேதமாகட்டும், இதிகாசமாகட்டும், புராணமாகட்டும், ஆழ்வார்களின்
அருளிச்செயலாகட்டும் எதையும் வாசிக்கும் நபரின் பரி பக்குவத்தைப்
பொருத்து பொருள் அடங்குகிறது அல்லது விரிகிறது. ஒருவனுக்கு வாமனனாகக்
காட்சி அளிக்கிறது. இன்னொருவனுக்கு திருவிக்ரமனாக எல்லை இல்லாமால பரந்து
விரிகிறது.

இது பற்றி, மாய்ந்து, மாய்ந்து ஸ்ரீரங்கம் மோகனரங்கன் இங்கு
எழுதிவிட்டார் (பழசு வாசிக்க நிறைய இருக்கு அண்ணாச்சி;-). பனுவல் என்பதை
நாம் எப்படிக் கையாள்கிறோமோ அதன்படி அதன் தன்மை அமைகிறது. ஆக தொன்நெறியான
(சநாதன மதம்) இந்து நெறியில் எதுவுமே மூடநம்பிக்கை. மடத்தனமானது இல்லை.
நம் நோக்கு, நம் பரிபக்குவம் இவையே நோக்கும் பொருளைத் தீர்மானிக்கிறது.
The observer is the observed என்கிறது நம் தொன்நெறி.

மீண்டும் பாயிண்ட் ஒன்றிலிருந்து தொடர்க ;-)

க.>

2010/5/31 N. Kannan <navan...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
May 31, 2010, 8:52:48 AM5/31/10
to mint...@googlegroups.com
நன்றி, திரு.கண்ணன். 'சிந்திப்போமே' இழையின் அடிப்படையை பற்றி
சொல்கிரீர்கள் என்று நினைக்கிறேன். அவ்வாறு இருந்தால் மேலே படிக்கவும்.
நான் அடுத்த இடுகையில் இடப்போவதை முன்கூட்டியே சொல்கிறிர்கள். நான் ஒரு
திட்டப்படி எழுதுகிறேன் என்று அப்போதே சொல்லிவிட்டேன், 'சிந்திப்போமே'
இழையில். அடுத்தப்படியாக, ஆங்கில மேற்கோள்கள் இடப்படுவது,
எல்லாக்கடலிலும் எல்லாரும் நீஞ்சினால் நலம் என்பதால்.

இன்னம்பூரான்

2010/5/31 N. Kannan <navan...@gmail.com>:

செல்வன்

unread,
May 31, 2010, 12:23:30 PM5/31/10
to mint...@googlegroups.com

கண்ணன் ஐயா,

சிந்திக்க வைக்கும் உங்கள் மடலுக்கு நன்றி.என் பதில்கள் பின்வருமாறு

2010/5/31 N. Kannan <navan...@gmail.com>

இப்போது நேரமுள்ளது. நான் என்ன சொல்ல விழைகிறேன் என்பதை இப்போது சொல்கிறேன்.

1. அடியைப்பிடிடா பாரத பட்டா! என்று செல்வன் போன்ற ஆர்வலர்கள் நம் பழைய
சரக்கையெல்லாம் வாசிக்காமல் தொபுக்கடீர்ன்னு மின்தமிழில் குதித்து
பட்டையைக் கிளப்பும் போது, உலகம் மீண்டுமொரு சுற்றுக்கு வருவதை
உணர்கிறேன் :-))


 
நான் எழுதினது நாலுவரி பதிவு.அதில் ஒரு வரி "கடவுள் என்னாவார், மதம் என்னாகும்?" என எழுதியிருந்தேன்.இந்துமதம், ஆபிரிக்க மதம் என தனிப்பட்டு எந்த மதத்தையும் குறிப்பிடவில்லை.அது மிக, மிக பொதுவான கமெண்டு.அந்த மிக,மிக பொதுவான கமெண்ட்டை ஸ்பெசிபிக்கா இந்துமதத்துக்கு பொருத்தி "இல்லை இது பொருந்தாது" என விளக்கம் கொடுக்கிறீர்கள்.ஏதோ இந்துமதம் பற்றி எனக்கு கொஞ்சம் தெரிவதால் இதுகுறித்து நான் பேசவாவது முடிகிறது.இதே ஆபிரிக்க பழங்குடி மதம் எதாவது "எனக்கும் இந்த கெம்ண்டு பொருந்தாது" என கூறினால் நான் எங்கே போவேன்?எனக்கு அவர்கள் மதம் பற்றியே ஒன்றும் தெரியாது:-)
 
ரொம்ப பொதுவான கமெண்ட்டின் மேல் ஓரளவு விவாதம் தான் நடக்கணும்.இல்லைன்னா அழுதுடுவேன் ஆமாம்:-))
 
2. ஐயா! மேலை நாட்டில் வாழும் நாம் ஆங்கிலத்தில் படித்து, ஆங்கிலத்தில்
சிந்தித்து, மேலைக்கலாச்சார பதப்படுத்தலுக்கு நம்மை அறியாமலே ஆட்பட்டு,
ஒரு போலி விடுதலை உணர்வை அடைகிறோம். அது போது நமக்கு வசமாய் கிடைப்பது
களிம்பு மண்டிப்போன நம் சமய ஒழுங்குகள்தான் ;-)


 
இருக்கலாம் ஐயா...ஊரை விட்டு வந்து பலவருடம் ஆகிவிட்டது.தமிழ் புத்தகங்களோடு இருந்த தொடர்ப்பும் சுத்தமா அறுந்துவிட்டது.இணையம் இல்லாட்டா தமிழில் எழுதியிருக்கும் சூழலே உருவாகியிருக்காது.ஆனால் நான் சமய மரபை தாக்கி அந்த கமெண்ட்டை எழுதலை.பொதுவா தான் எழுதினேன்.ஆக இதுக்கு அது காரணமல்ல.
 
 
எதற்கு சொல்கிறேன் என்றால் மேலை வளர்ப்பில் அறிவியலும், சமயமும் (உங்கள்
வார்த்தையில் மதமும்) மோதுகின்றன. ஏனெனில் அவர்கள் சமய தத்துவம் அப்படி
அமைந்திருக்கிறது அதனால்!! டார்வின் கூர்தலியக்கோட்பாடு புத்தகத்தை
எழுதிவிட்டு (20 வருட தயக்கத்திற்குப்பின்) எலிசபெத்தியன் மனோபாவம்
எப்படி இருக்குமென்று பயந்து கொண்டிருந்தார். அதே போல் மாட்டிக்கொண்டார்.
மேலை உலகமே ஒரு சுநாமியில் அகப்பட்டது போன்ற சூழல். அந்த நேரத்தில்
இங்கிலாந்தின் காலனியாக இருந்த இந்தியாவில் ஒரு சிறு அலை கூட
அடிக்கவில்லை. இவன் சாமி இங்கே மீனாக,பன்றியாக, சிங்கமாக, காட்டு மனிதனாக
இப்படியெல்லாம் முன்னமே பாவ்லா காட்டிவிட்டது. எனவே இவனுக்கு இது என்ன
பெரிய விஷயம் என்று இருந்தது.
 
 
அப்ப நம்மளுது அடிமைநாடு ஐயா.டார்வின் காலத்தில் நம்மிடையே இருந்த உயிரியல் விஞ்ஞானிகள் எண்ணிக்கை வெகுகுறைவு...அல்லது சுத்தமா இல்லை என சொல்லலாம்.அப்படியே டார்வினை படிச்சு யாராவது கலகம் செய்வதா இருந்தாலும் பொதுமக்களுக்கு அது என்னன்னே புரியாது.காரணம் நம்மகிட்ட ஆதாம் ஏவாள் மாதிரி வலுவான ஒரு படைப்புவாத கதை இல்லை.இந்து பொதுமக்களுக்கு பிரம்மன் உலகை படைத்தான் என்கிறமாதிரி மேம்போக்கா ஒரு படைப்புவாத கதைதான் தெரியும்.அப்புறம் எப்படி டார்வின் தியரி நம் சமூகத்தில் குழப்பத்தை உருவாக்கும்?
 
 


மேலும் ஆன்மீகம் என்பது ஏதோ மதம் என்பதற்கு எதிர் என்பது போன்ற ஒன்னொரு
புதிய சூத்திரத்தையும் கொண்டு வருகிறீர்கள். இவையெல்லாம் மேலை மனோநிலை
என்பதைத் தெளிவாகக் காட்டும். இங்கு அப்படியொரு பிரிவும் இல்லை.
 
இல்லை ஐயா.நம்மிடையேயும் மதமும் உண்டு,ஆன்மிகமும் உண்டு.இயல்பாக சித்தர்கள், மூதாதையர் வழிபாடு, இயற்கை வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு என இருந்த பொதுமக்களை ஒரே கட்டுக்குள் கட்ட முயன்ற முயற்சி தான் சைவம், வைணவம், அத்வைதம் எல்லாம். மதம் மாறாவிட்டால் கண்னைபிடுங்குவேன் என்கிறமாதிரியான விஷயங்கள் எல்லாம் பாரதநாட்டு ஆன்மிகம் கேள்விபடாதது.ஆனால் குலோத்துங்க சோழன் அந்த காரனத்துக்காக கூரத்தாழ்வான் கண்னைபிடுங்கி, பெருமாள் சிலையை கடலில் போட்டான்.காரணம் சைவம் என்ற இறுக்கமான மதக்கட்டுக்குள் அவன் புகுந்ததுதான்.
 
நான் சிறுவயதில் கடும் முருகபக்தனா இருந்தேன்.வருடா வருடம் குல வழக்கபடி பழனிமுருகனுக்கு மொட்டை போடுவேன்.நடந்து பழனிமலை ஏறுவேன்.ஆனால் எனக்கு அப்ப கூட சைவ,வைணவ பேதம் எல்லாம்  தெரியாது.பெருமாள் கோயிலுக்கு போனால் கும்பிடுவேன்.குருவிகூட்டில் குண்டுவைத்த கதையாய் எங்கள் வீட்டில் வைணவம் புகுந்தது.அதுக்கப்புறம் வீட்டில் இருந்த முருகன் சிலை எல்லாம் மாயமாய் மறைந்தது.என்னை யாரும் அதுக்கப்புறம் பழனி கூட்டிகொண்டு போகவில்லை.வீட்டுக்கு நிறைய பாகவதர்கள் வந்தனர்.முருகனை கும்பிடாதே, வினாயகனை கும்பிடாதே என என்னுடன் கடுமையாக சண்டை போட்டனர்.என்னை முத்திரை வைக்க சொல்லி கட்டாயபடுத்தினர்.இன்றுவரை நான் வைத்துகொள்ளவில்லை.வண்டி ஓட்ட தெரிந்தவன் என்ற பாவத்துக்காக வைனவ சத்சங்க மீட்டிங்குகளுக்கு போகும் சூழல் உருவானதுண்டு.அதில் ஒருதரம் தெலுங்கு வைணவர் ஒருவர் அன்னமாச்சார்யார் நம்மாழ்வாரை விட உயர்ந்தவர் என்கிரமாதிரி சொல்லிவைக்க அவரை அடித்து துரத்தாத குறையாக சத்சங்கத்தை விட்டு துரத்திவிட்டனர்.
 
எங்களது மாமிசம் சாப்பிடும் ஜாதி.வைணவம் வீட்டில் புகுந்ததில் மாமிசமும் வீட்டை விட்டு மறைந்தது.அதை நான் பெரிதாக குறையாக நினைக்கவில்லை.ஆனால் முத்திரை வைத்த வைணவர்கள் பலர் மாமிசம் சாப்பிடுபவர்களை மனிதபிறவிகளாக கூட மதித்ததில்லை.அவர்கள் மாமிசம் சாப்பிடுபவர்கள், சைவர்கள், பழனிக்கு காவடி எடுப்பவர்கள் எல்லோரையும் ஏதோ திருத்தி நல்வழிபடுத்தவேண்டிய கீழான மனிதர்களாகவும், மிருகங்களாகவும் தான் கருதிகொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்குள் பேசிகொள்ளும்போது இவர்களை எள்ளிநகையாடுவதையும், இளக்காரம் செய்வதையும் பலதரம் கேட்டிருக்கிறேன்.
 
இது எல்லாம் தான் ஐயா மதவெறி.எனக்கு தெரிந்த திருமால் எங்க ஊர் கோயிலில் இருக்கும் அன்பே உருவான தெய்வம்.நான் கும்பிட்ட முருகனும், எங்க குலதெய்வங்களான மேட்டுபாளையம் வனபத்திரகாளி அம்மனும், அங்காள்ளம்மன், சப்தகன்னியர், ரேணுகாதேவியும் எனக்கு திருமாலை வெறுக்க சொல்லிதரவில்லை.சொல்லபோனால் இங்கே எல்லாம் சின்னதா பெருமாள் கோயில் கூட இருக்கும்.இந்த வீரவைணவர்களின் அட்டகாசத்துக்கு பிறகும் நான் திருமாலை வெறுக்கவில்லை என்பதற்கும் இதுதான் காரணம்.இவர்கள் செய்யும் அக்கிரமத்துக்கு பெருமாள் என்ன செய்வார் பாவம்?அதுதான் இந்த மண்ணின் உண்மையான ஆன்மிகம்.என் மரபு.ஆனால் இந்த வீரவைணவர்களும், வீர சைவர்களும் இந்த சாமிகளை அன்னியதேவதை, பரதேவதை என்று எள்ளிநகையாடுவார்கள்.வைணவனானால் அதுக்கப்புறம் குலதெய்வத்தை கூட கும்பிட மாட்டார்கள்.அது மதம்.இந்த பாரதமண்ணுக்கு பொருந்தவே பொருந்தாத மத உணர்வு இது.

செல்வன்

unread,
May 31, 2010, 1:05:28 PM5/31/10
to mint...@googlegroups.com


2010/5/31 N. Kannan <navan...@gmail.com>

ஆதிசங்கர பகவத்பாதாள் அவர்களை ஷண்மத ஸ்தாபகர் என்கின்றனர். இராமானுஜரை,
மாத்வரை மதாச்சார்யர் என்றே இங்கு அழைக்கின்றனர். இவர்களின் கூர்மதிக்கு
முன் நாம் எம்மாத்திரம்? இவர்கள் தர்க்கவாதத்திற்கு முன் நாம் ஐந்து
நிமிடம் நிற்கமுடியுமா? வேதாந்தம் எனும் கூர்மையான தர்க்க
அணுகுமுறையில்தான் இவர்கள் தங்கள் மதங்களை ஸ்தாபிக்கின்றனர். ஆக, நீங்கள்
‘மதம்’ என்று சொல்லும் போது மேலைக் கண்ணோட்டத்தில், Religion என்பதற்கு
ஒப்பு என்று நினைத்து எழுதுகிறீர்கள். இந்திய உரையாடலில் அப்படியொரு
Genre இல்லை. இங்கு மதம் என்பதே தொன்நெறியின் தொடர் இயக்கமாக,
மேல்விரிவுரையாக மலர்கிறது.
 
 
இது எல்லாம் நான் ஒத்துகொள்ளவே முடியாத விஷயம். காரனம் அத்வைதிகளும், வைணவர்களும் அடித்துகொள்வதை நான் கண்முன் பார்த்திருக்கிறேன். விவாதங்களை கேட்டிருக்கிறேன். அத்வைதம் தான் வேதம் சொல்லும் ஒரே வழி என அத்வைதிக்ளும், வைணவம் தான் வேதம் சொல்லும் ஒரே வழி என விஷிச்டாத்வைதிகளும் கட்டும் சண்டைகள் ரொம்ப தமாசா இருக்கும்.பாரத மண்ணின் ஆன்மிகத்தை, இமயம் முதல் குமரிவரை வணங்கப்படும் பலகோடி சிறுதெய்வங்களை, வழிபாட்டு முறைகளை சைவம் வைணவம் அத்வைதம் போன்ற மூட்டைக்குள் அடைத்து ஒரே கட்டாக கட்டமுயன்றால் முடியுமா?முடியாது.ஆனால் இவர்கள் அதைதான் செய்ய முயன்றார்கள்.இன்று என்ன ஆனது?சைவமும், வைணவமும் இன்று இந்துமதம் என்ற கடலுக்குள்  சங்கமித்துவிட்டன.சமுத்திரத்தை விழுங்க முயன்ற மீன்களை சமுத்திரம் ஏற்றுகொண்டது போல இந்துமதத்தை விழுங்க முயன்ற சைவத்தையும், வைனவத்தையும் இந்துமதம் விழுங்கி இன்று சைவமும், வைணவமும், அத்வைதமும் இந்துமதத்துக்குள் இருக்கும் துணைபிரிவுகளாக மாறிவிட்டன.
 
 
சரி ஆன்மீகம் என்றால் ஏதோ புரட்சிக்கருத்துக்களை முன்வைக்கும் போக்கு
என்று நீங்கள் எழுதுகிறீர்கள். இராமானுஜருக்கு மேல் என்ன பெரிய புரட்சியை
நாம் செய்துவிட்டோம்? ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு orthodox brahmin
போல வைதீக மார்க்கத்தில் எக்குறையும் வைக்காமல் வாழ்ந்தார். ஆக,
வைதீகமாகவும் இருக்கமுடியும், லிபரலாகவும் இங்கு இருக்க முடியும். அது
எப்படி?


வைதீகர்கள் எப்படி லிபரலா இருக்கமுடியும்?அவர்களுக்கு சிவன்/பெருமாள் போன்ற மாற்றுதெய்வங்களின் பெயரை கேட்டாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல இருக்கும்.மாமிசம் சாப்பிடுபவர்கள் வீட்டுக்கு போனால் அங்கே தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள்.ஆட்டுகறி,கோழிகறி என சொன்னாலே துடித்துபோய் "யக்கி" என முகத்தை காட்டுவார்கள்.என் ஐந்துவயது குழந்தை ஸ்கூலுக்கு பூரி கொண்டுபோய் அங்கிருக்கும் அமெரிக்க குழந்தைகள் "யக்கி" என சொன்னதால் அழுதுகொண்டே சாப்பிடாமல் வீட்டுக்கு வந்தது.எனக்கு அந்த நிமிடத்தில் சொரேல் என மாமிச உனவை யக்கி என சொன்னால் அவர்கள் மனம் என்ன பாடுபடும் என்ற நினைவுதான் வந்தது.

லிபரல் என்பது சகிப்புதன்மை.பரந்தமனபான்மை. பல கோணங்களில் ஒரு விஷயத்தை அணுகுதல். டைவெர்சிட்டியை ஏற்றல்.வைதீகர்களுக்கு இது எதுவுமே கிடையாது. துரதிர்ஷ்டவசமாக இவர்களுடையதுதான் இந்த மண்ணின் உண்மையான மரபு என பலரும் நம்பிகொண்டிருக்கிறார்கள்.சைவம்,வைணவம்,அத்வைதம் எல்லாம் இந்த மண்ணின் மரபின் கிளைகளே அன்றி வேர்கள் அல்ல.இந்த மண்ணின் மரபு பன்முகதன்மை,பலதெய்வ வழிபாடு, அனைத்து தெய்வங்களையும் சமயங்களையும், நம்பிக்கைகளையும் மதித்தல்.சராசரி இந்து இந்த கோட்பாடுகள் அனைத்தையும் கொண்டிருக்கிறான்."எந்துரோ மகானுபாவலு" என்பதே அவன் நம்பிக்கை.எந்த ஆன்மிகவாதியையும் அவன் இகழ்வதில்லை.வைணவர்கள் சைவ ஆச்சாரியார்களை ஏற்பதில்லை,சைவர்கள் வைணவ ஆச்சாரியார்களை ஏற்பதில்லை.அத்வைதிகள் இவர்கள் இருவரையும் ஏற்பதில்லை.அப்புறம் அவர்கள் எப்படி லிபரலா இருக்கமுடியும்?

Hari Krishnan

unread,
May 31, 2010, 9:54:28 PM5/31/10
to mint...@googlegroups.com
இருந்தாலும் பொதுமக்களுக்கு அது என்னன்னே புரியாது.காரணம் நம்மகிட்ட ஆதாம் ஏவாள் மாதிரி வலுவான ஒரு படைப்புவாத கதை இல்லை.இந்து பொதுமக்களுக்கு பிரம்மன் உலகை படைத்தான் என்கிறமாதிரி மேம்போக்கா ஒரு படைப்புவாத கதைதான் தெரியும்.அப்புறம் எப்படி டார்வின் தியரி நம் சமூகத்தில் குழப்பத்தை உருவாக்கும்?
 

1:1 - In the beginning God created the heaven and the earth.
1:2 - And the earth was without form, and void; and darkness was upon the face of the deep. And the Spirit of God moved upon the face of the waters. 
(Holy Bible, Genesis.

டார்வின் இதைப் படித்திருப்பார் என்று நம்புகிறேன்.

Fiat Lux!

--
அன்புடன்,
ஹரிகி.

செல்வன்

unread,
May 31, 2010, 11:29:06 PM5/31/10
to mint...@googlegroups.com


2010/5/31 Hari Krishnan <hari.har...@gmail.com>
In the beginning God created the heaven and the earth.
2 
And the earth was without form, and void; and darkness was upon the face of the deep. And the Spirit of God moved upon the face of the waters.
3  ¶ And God said, Let there be light: 2 Cor. 4.6 and there was light.
4  And God saw the light, that it was good: and God divided the light from the darkness.
5  And God called the light Day, and the darkness he called Night. And the evening and the morning were the first day.
6  ¶ And God said, Let there be a firmament in the midst of the waters, and let it divide the waters from the waters.
7  And God made the firmament, and divided the waters which were under the firmament from the waters which were above the firmament: and it was so.
8  And God called the firmament Heaven. 2 Pet. 3.5 And the evening and the morning were the second day.
9  ¶ And God said, Let the waters under the heaven be gathered together unto one place, and let the dry land appear: and it was so.
10  And God called the dry land Earth; and the gathering together of the waters called he Seas: and God saw that it was good.
11  And God said, Let the earth bring forth grass, the herb yielding seed, and the fruit tree yielding fruit after his kind, whose seed is in itself, upon the earth: and it was so.
12  And the earth brought forth grass, and herb yielding seed after his kind, and the tree yielding fruit, whose seed was in itself, after his kind: and God saw that it was good.
13  And the evening and the morning were the third day.
14  ¶ And God said, Let there be lights in the firmament of the heaven to divide the day from the night; and let them be for signs, and for seasons, and for days, and years:
15  and let them be for lights in the firmament of the heaven to give light upon the earth: and it was so.
16  And God made two great lights; the greater light to rule the day, and the lesser light to rule the night: he made the stars also.
17  And God set them in the firmament of the heaven to give light upon the earth,
18  and to rule over the day and over the night, and to divide the light from the darkness: and God saw that it was good.
19  And the evening and the morning were the fourth day.
20  ¶ And God said, Let the waters bring forth abundantly the moving creature that hath life, and fowl that may fly above the earth in the open firmament of heaven.
21  And God created great whales, and every living creature that moveth, which the waters brought forth abundantly, after their kind, and every winged fowl after his kind: and God saw that it was good.
22  And God blessed them, saying, Be fruitful, and multiply, and fill the waters in the seas, and let fowl multiply in the earth.
23  And the evening and the morning were the fifth day.
24  ¶ And God said, Let the earth bring forth the living creature after his kind, cattle, and creeping thing, and beast of the earth after his kind: and it was so.
25  And God made the beast of the earth after his kind, and cattle after their kind, and every thing that creepeth upon the earth after his kind: and God saw that it was good.
26  ¶ And God said, Let us make man in our image, 1 Cor. 11.7 after our likeness: and let them have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over the cattle, and over all the earth, and over every creeping thing that creepeth upon the earth.
27  So God created man in his own image, in the image of God created he him; male and female created he them. Mt. 19.4 · Mk. 10.6
28  And God blessed them, Gen. 5.1, 2 and God said unto them, Be fruitful, and multiply, and replenish the earth, and subdue it: and have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over every living thing that moveth upon the earth.
29  And God said, Behold, I have given you every herb bearing seed, which is upon the face of all the earth, and every tree, in the which is the fruit of a tree yielding seed; to you it shall be for meat.
30  And to every beast of the earth, and to every fowl of the air, and to every thing that creepeth upon the earth, wherein there is life, I have given every green herb for meat: and it was so.
31  And God saw every thing that he had made, and, behold, it was very good. And the evening and the morning were the sixth day.

Man in the Garden of Eden
4  ¶ These are the generations of the heavens and of the earth when they were created, in the day that the LORD God made the earth and the heavens,
5  and every plant of the field before it was in the earth, and every herb of the field before it grew: for the LORD God had not caused it to rain upon the earth, and there was not a man to till the ground.
6  But there went up a mist from the earth, and watered the whole face of the ground.
7  And the LORD God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living soul. 1 Cor. 15.45
8  And the LORD God planted a garden eastward in Eden; and there he put the man whom he had formed.
9  And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life Rev. 2.7 ; 22.2, 14 also in the midst of the garden, and the tree of knowledge of good and evil.
10  ¶ And a river went out of Eden to water the garden; and from thence it was parted, and became into four heads.
11  The name of the first is Pison: that is it which compasseth the whole land of Hav'ilah, where there is gold;
12  and the gold of that land is good: there is bdellium and the onyx stone.
13  And the name of the second river is Gihon: the same is it that compasseth the whole land of Ethiopia.
14  And the name of the third river is Hid'dekel: that is it which goeth toward the east of Assyria. And the fourth river is Euphra'tes.
15  ¶ And the LORD God took the man, and put him into the garden of Eden to dress it and to keep it.
16  And the LORD God commanded the man, saying, Of every tree of the garden thou mayest freely eat:
17  but of the tree of the knowledge of good and evil, thou shalt not eat of it: for in the day that thou eatest thereof thou shalt surely die.
18  ¶ And the LORD God said, It is not good that the man should be alone; I will make him a help meet for him.
19  And out of the ground the LORD God formed every beast of the field, and every fowl of the air; and brought them unto Adam to see what he would call them: and whatsoever Adam called every living creature, that was the name thereof.
20  And Adam gave names to all cattle, and to the fowl of the air, and to every beast of the field; but for Adam there was not found a help meet for him.
21  And the LORD God caused a deep sleep to fall upon Adam, and he slept; and he took one of his ribs, and closed up the flesh instead thereof.
22  And the rib, which the LORD God had taken from man, made he a woman, and brought her unto the man.
23  And Adam said, This is now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, 1 because she was taken out of Man. 2
24  Therefore shall a man leave his father and his mother, and shall cleave unto his wife: and they shall be one flesh. Mt. 19.5 · Mk. 10.7, 8 · 1 Cor. 6.16 · Eph. 5.31
25  And they were both naked, the man and his wife, and were not ashamed.


 

செல்வன்

unread,
Jun 3, 2010, 12:54:18 AM6/3/10
to mint...@googlegroups.com, பண்புடன்


When someone complains about America , it is not always as it seems:


 

 
Cemetery at Normandy.When in England, at a fairly large
conference, Colin Powell was asked by the Archbishop of
Canterbury if our plans for Iraq were just an example of
empire building by George Bush. He answered by saying, 'Over the
years, the United States has sent many of its fine young
men and women into great peril to fight for freedom beyond
our borders. The only amount of land we have ever asked for
in return is enough to bury those that did not return.'  You could have heard a pin drop. 
(நார்மண்டியில்  அடக்கம் செய்யப்பட்ட உலகபோரில் மாய்ந்தஅமெரிக்க வீர்ர்களின் கல்லறை யை  காலின் பவல் குறிப்பிடுகிறார்)

***************************************
There was a conference in France where a
number of international engineers were taking part,
including French and American. During a break, one of the
French engineers came back into the room saying 'Have
you heard the latest dumb stunt Bush has done? He has sent
an aircraft carrier to Indonesia to help the tsunami
victims. What does he intend to do, bomb them?'
A Boeing engineer stood up and replied
quietly: 'Our carriers have three hospitals on board
that can treat several hundred people; they are nuclear
powered and can supply emergency electrical power to shore
facilities; they have three cafeterias with the capacity to
feed 3,000 people three meals a day, they can produce
several thousand gallons of fresh water from sea water each
day, and they carry half a dozen helicopters for use in
transporting victims and injured to and from their flight
deck. We have eleven such ships; how many does France
have?' 
  You could have heard a pin drop.

 
***************************************A U.S. Navy Admiral was attending a
Naval conference that included Admirals from the U.S ,
English, Canadian, Australian and French Navies. At a
cocktail reception, he found himself standing with a large
group of officers that included personnel from most of those
countries.. Everyone was chatting away in English as they
sipped their drinks but a French admiral suddenly complained
that, whereas Europeans learn many languages, Americans
learn only English. He then asked, 'Why is it that we
always have to speak English in these conferences rather
than speaking French?'  Without hesitating, the American
Admiral replied 'Maybe it's because the Brits,
Canadians, Aussies and Americans arranged it so you
wouldn't have to speak German.' You could have heard a pin drop.
(இல்லேன்னா இன்னைக்கு  ஹிடலரின் ஜெர்மன் மொழி உலகமொழி ஆகி இருக்கும்)

***************************************Robert Whiting, an elderly gentleman
of 83, arrived in Paris by plane. At French Customs, he
took a few minutes to locate his passport in his carry on.
'You have been to France before,
monsieur?' the customs officer asked sarcastically. Mr.
Whiting admitted that he had been to France previously.
'Then you should know enough to
have your passport ready.'  The American said, ''The last
time I was here, I didn't have to show it.'  'Impossible. Americans always have to
show your passports on arrival in France !'  The American senior gave the Frenchman
a long hard look. Then he quietly explained, ''Well,
when I came ashore at Omaha Beach on D-Day in 1944 to help
liberate this country, I couldn't find a single
Frenchman to show a passport to!!'


You could have heard a pin drop. 

Your freedom to choose was
fought for by a proud American who served this "one nation under God". 

(Courtesy: Thiru Vendan Arasu)

செல்வன்

unread,
Jun 4, 2010, 3:34:37 AM6/4/10
to mint...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்
இன்று பிளானட் எர்த்  என்ற பிரமிக்க வைக்கும் டிஸ்கவரி சானல் - பிபிசி டிவிடி பார்த்தேன்.பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகள், மிருகங்களை பற்றிய புதிய செய்திகளை அறிய முடிந்தது.

இஸ்ரேல் மலை ஆடுகள் மோதுவதை காட்டினார்கள்.அது சாதா மோதல் இல்லை.ஜெயிக்கும் ஆட்டுக்கு நிறைய பெண் ஆடுகள் கொண்ட மந்தை பரிசாக கிடைக்கும்.தோற்ற ஆடு காலம் முழுக்க கட்டை பிரமாசாரியாக காலம் தள்ளவேண்டியதுதான். சண்டையை சுவாரசியமாக பார்த்தேன்.இரண்டு ஆடும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்ததால் நான் சப்போர்ட் செய்த ஆடு ஜெயித்ததா இல்லையா என கண்டுபிடிக்க முடியவில்லை.இருந்தாலும் இந்த பலதார மண விவகாரம் ஆடுகளுக்கிடையே கூட குழப்பத்தை ஏற்படுத்துவதை நினைத்து ஆடாதிக்கத்துக்கு எதிராக பதிவு போடவேண்டும் என நினைத்துகொண்டேன். போட்டும் விட்டேன்.

*****

எறும்புகளை பற்றி ஒரு பயாலஜி மாணவனிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.பெண் எறும்புகள் தான் சுறுசுறுப்பனவையாம்.நாம பார்ப்பதெல்லாம் பெண் எறும்புகள் தானாம்.ஆண் எறும்புகள் புற்றை விட்டு வெளியே வராதாம்.புற்றுக்குள் இருந்துகொண்டு கலவி செய்தி பெண் எறும்பை கர்ப்பமாக்குவது மட்டும் தான் ஆண் எறும்பின் வேலையாம்.தின்பது, தூங்குவது, கலவி செய்வது...கொடுத்து வைத்த சுகவாசி வாழ்க்கைதான் இந்த ஆண் எறும்புகளுக்கு...மிருக இனந்திலும் கூட ஆணாதிக்கம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது பார்த்தீர்களா?(அடுத்த ஜென்மத்தில் பிறந்தால் ஆண் எறும்பா பிறக்கணும்)

*****

நேடலி ஹாலோவே என்ற 14 வயது அமெரிக்க பெண் டட்சு தீவு ஒன்றில் க்னாமல் போனார்.அவரை கொலை செய்ததாக வான்டெர்வட் என்ற டச்சு இளைஞன் விடியோவில் வாக்குமூலம் கொடுத்தான்.அதன்பின் அது குடித்துவிட்டு உளறியது என சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டான்.அமெரிக்க ஊடகங்கள் அவனை வறுத்தெடுத்து வந்தன.அவனை கைது செய்ய ஒத்துழைக்காத டச்சு அரசை திட்டி தீர்த்தன."இது அமெரிக்காவின் அத்துமீறிய செயல்.எங்கள் நாட்டு குடிமகன் நல்லவன்,வல்லவன்..அவனை கைது செய்ய சொல்ல நீங்கள் யார்/" என அலட்சியமாக இருந்தது டச்சு அரசு.இன்று அதே வன்டர்வாட் ஒரு பெரு நாட்டு பெண்ணை கொலை செய்தது கைது செய்யபட்டிருக்கிறான்.டச்சு அரசு இனியாவது திருந்துமா என்பது தான் கேள்வி?

*********

அவர் ஊர், பேர் எதுவும் சொல்லமாட்டேன்..நல்ல வசதியானவர்.கம்யூனிச சித்தாந்தம் பேசிய அவரது ஒரே மகள் திடீரென விடுமுறையில் கம்யூனிச நாடு ஒன்றுக்கு போய் அங்கே ஒரு கம்யூனிச தீவிரவாதியை கல்யாணம் செய்துகொண்டாளாம்.புரட்சிகர கல்யாணம் முடிந்த சில நாட்களில் போலிஸ் கணவனையும், மனைவியையும் கைது செய்ய அந்த பெண்ணுக்கு தீவிரவாதத்துக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது.தந்தை கண்ணீர் விட்டு கதறி அழுதுகொண்டிருக்கிறார்.



--

செல்வன்

unread,
Jun 7, 2010, 12:19:40 AM6/7/10
to தமிழமுதம், பண்புடன், mintamil
புரட்சிதலைவர் கிறிஸ் கிறிஸ்டி

0812_chris_christie.jpgநியூஜெர்சி கவர்னர் கிறிஸ் க்றிஸ்டி வரிகளை அதிகரிக்க மறுத்து, வெட்டி செலவுகளை குறைத்து வருவது தெரிந்ததே.அரசு ஊழியர், ஆசிரியரின் சம்பளத்தில் அவர் கை வைத்ததால் அரசு ஊழியர்கள் அனைவரும் கடுப்புடன் உள்ளார்கள்.சமீபத்தில் ஒரு பொதுகூட்டத்தில் மக்களிடம் தன் நடவடிக்கைகளை விளக்கி கொண்டிருந்தார் கிறிஸ்டி

அப்போது மைக்கை பிடித்த ரூதர்போர்ட் என்ற ஆசிரியை "நான் சொல்லிகொடுக்கும் ஒரு மாணவனுக்கு எனக்கு $3 சம்பளம் தந்தால் எனக்கு வருடத்துக்கு $83,000 சம்பளம் தரணும்.அதுதான் நியாயம்" என்றார்.

"உங்களுக்கு தரும் சலுகைகளை சேர்த்தால் அதுக்கு மேலேயே உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறது" என்றார் கிறிஸ்டி

"என் அனுபவத்துக்கும், படிப்புக்கும் இது போதாது" என்றார் ஆசிரியை

"அப்படியனால் இந்த கம்மி சம்பளம் தரும் வேலையை விட்டு விலகிவிடுங்கள்" என்றார் கிறிஸ்டி

அரங்கமே மக்களின் கைதட்டலால் அதிர்ந்தது....

அதிகாரத்தை நோக்கி உண்மையை பேசிய மக்களின் பிரதிநிதி கிறிஸ் கிறிஸ்டி அமெரிக்க ஜனாதிபதியாக இன்றே பிரார்த்தனையை துவக்கிவிட்டேன்.

வாழ்க கிறிஸ் கிறிஸ்டி....

அந்த விடியோ கீழே...


--
செல்வன்

www.holyox.tk

"கட்டிபிடிக்கும் போது ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்துதான் கட்டிப்புடிகிறாங்க. ஆனா கற்புன்னு வரும் போது ஆம்பள காணாம போயிடறான். என்னைக்கு கற்புக்குள்ள ரெண்டு பேருமே வராங்களோ அப்பத்தான் பாலியல் குற்றங்கள் குறையும்" - K. பாக்யராஜ்

செல்வன்

unread,
Jun 8, 2010, 2:43:47 AM6/8/10
to panb...@googlegroups.com, mintamil, தமிழமுதம்
போலிஸ் என்ற ஹீரொ

போலிஸ் என்றால் மக்களின் எதிரி என்ற இமேஜே எனக்கு இருந்தது.காப்ஸ் என்ற டிவி நிகழ்ச்சி அதை தகர்த்து எறிந்தது.
 
 cops.jpg

போலிஸுடன் ரவுண்ட்சுக்கு பத்திரிக்கையாளரையும் அழைத்து செல்லும் நிகழ்ச்சியே காப்ஸ்.போலிஸ் திருடர்களை எப்படி பிடிக்கிறார்கள், குற்றங்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதை உள்ளது உள்ளபடி காட்டும் நிகழ்ச்சியே காப்ஸ்.நிருபர்கள் போவதால் மட்டும் போலிஸ் ஒழுக்கமாக நடிக்குமா என்றால் இல்லை.அமெரிக்க போலிஸ்காரர் ஒவ்வொருவரின் காரிலும், ஜெயிலிலும் ஜெயில் அறைகளிலும் பல காமிராக்கள் இருக்கும்.அனைத்து குற்றவாளிகள் கையாளபடுவதையும் அது படம் பிடிக்கும்.

சரி காப்ஸ் சொல்லுவது என்ன?

சராசரி அமெரிக்க போலிஸ்காரர் மிகவும் உடல் உறுதியுடன், கட்டுமஸ்தான உடலுடன் இருக்கிறார்.எத்தனை ஃபிட்டான கயவர்களையும் அவரால் துரத்தி பிடிக்க இயல்கிறது.சண்டை வரவே பெரும்பாலும் போலிஸ்காரர்கள் விடுவதில்லை.அந்த அளவுக்கு சாம்ர்த்தியமாக கயவர்களை கையாள்கிறார்கள்.அதையும் மீறி சண்டை வந்தால் போலிஸ்காரரே பெரும்பாலும் சண்டையில் ஜெயிக்கிறார்.போலிஸ் தோற்கும் சண்டைகளும் உண்டு.ஆனால் அப்போது அசுரவேகத்தில் வேறு போலிசார் ஆஜராகிறார்கள்.பொதுமக்களும் போலிசுக்கு உதவுகிறார்கள்.

அமெரிக்க போலிஸ்காரர் சந்தேகத்தின் பேரில் எந்த காரையும், ஆளையும் நிறுத்தி சோதனை இடமுடியாது.அந்த கார் அல்லது ஆள் எதாவது டிராபிக் விதியை மீறினால் மட்டுமே நிறுத்த முடியும்.அப்படி நிறுத்தப்படும் காரில் போதைமருந்து கடத்தபடுவதாக சந்தேகம் வந்தால் "உன் காரை சோதனையிடலாமா?" என அனுமதி கேட்கவேண்டும்.அனுமதி கிடைத்தால் சோதனையிடலாம்.கிடைக்கவில்லையெனில் போலிஸ் நாயை விட்டு மோப்பம் பிடிக்க வைக்கலாம்.அது சிக்னல் தந்தால் மட்டுமே காரை சோதனையிடலாம்.

ஆக நீங்கள் போதைமருந்து கடத்தினால் எந்த டிராபிக் விதியையும் மீறாமல் கார் ஓட்டினால் நீங்கள் ஃசேப். இது இங்கே சிவில் உரிமைகளின் வலுவை காட்டுகிறது.

காரில் போதைமருந்து இருந்தால் யாரிடம் போதைமருந்து இருந்ததோ அவர் மட்டும் கைது செய்யபடுவார்.மற்றவர்கள் "அவர் போதைமருந்து வைத்திருந்தது எனக்கு தெரியாது" என சொல்லி எஸ்கேப் ஆகலாம்.காரணம் குற்றம் நிருபிக்கபடும் வரை நீங்கள் நிரபராதியே.

ஆனால் அதற்காக குற்ரவாளீகள் தப்ப முடியுமா என்றால் இல்லை.கொலை செய்தால், கொள்ளை அடித்தால் ஒரு துப்பு, ஒரே ஒரு சின்ன துப்பை மட்டும் வைத்து கொலைகாரனை தூக்கில் போட்டுவிடுவார்கள்.அந்த அளவு டெக்னாலஜி இங்கே வலுவானது.உதாரணத்துக்கு ஒரு பெண்ணை கடத்தி காரில் வைத்து பலாத்காரம் செய்து அவளை எரித்து விட்டு காரை வேக்வம் செய்து சமர்த்தாக தன்னை பிடிக்க எந்த ஆதாரமும் இல்லை என உட்கார்ந்திருந்தான் ஒருவன்.கொலை நடந்த இடத்தில் கிடைத்த கார் டயரை அவன் டயருடன் பொருத்தி ஆராய்ந்தார்கள்.டயரை அவன் சாம்ர்த்தியமாக மாற்றியிருந்தான்.காரை அலசியதில் அதன் உள்ளே கொலையான பெண்ணின் முடியின் ஒரே ஒரு துணுக்கு சிக்கியது. டி.என்.ஏ மேட்ச் செய்து குற்றவாளியை அந்த ஆதார்த்தை வைத்தே தூக்குக்கு அனுப்பினார்கள்.

(காப்ஸ் தொடரும்)
காப்ஸ் தொடரின் டைட்டில் பாடல் "பேட் பாய்ஸ்"..இது இங்கே மிக பிரபலம்
cops.jpg

செல்வன்

unread,
Jun 9, 2010, 3:44:48 AM6/9/10
to panb...@googlegroups.com, தமிழமுதம், mintamil
யூனியன்களை களத்தில் சந்தித்து வென்ற ப்ளான்சி லிங்கன்

ஆர்கன்சா மாநிலம் வால்மார்ட்டின் மாநிலம்.உலகில் நம்பர் ஒன் கம்பனி வால்மார்ட் பிறந்ததே அந்த மாநிலம்தான்.தன் நிறுவனத்தில் தொழிற்சங்கங்களை வளரவிடுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறது வால்மார்ட்.வால்மார்ட்டின் ஒரு கிளையிலும் தொழிற்சங்கம் இல்லை.அதனால் தான் வால்மார்ட் நம்பர் ஒன் கம்பனியாக உள்ளது.

தொழிற்சங்கங்களை ஒரு கம்பனியில் உருவாக்க வேண்டுமெனில் 50%+1 தொழிலாளிகள் தேர்தல் நடத்தி ஓட்டு போடவேண்டும்.அந்த தேர்தலில் தொழிற்சங்கம் ஆரம்பிக்க முயல்பவர்கள் வெற்றி பெறுவதில்லை.காரணம் அமெரிக்க தொழிலாளிகள் தொழிர்சங்கத்தில் சேர விரும்புவதில்லை.

இந்த தேர்தல் முறையையே ரத்து செய்து தொழிலாளிகளிடம் ஒவ்வொருவராக போய் கையெழுத்து வாங்கி தொழிற்சங்கம் ஆரம்பிக்கலாம் என ஒரு சட்டத்தை தொழிர்சங்க ஆதரவு காங்கிரஸ்மென்கள் (நம்ம ஊர் லோக்சபா எம்பி மாதிரி) கொண்டுவந்து அது காங்கிரஸில் நிறைவேறியது.அந்த சட்டம் நிறைவேறினால் தேர்தல் நடத்தாமல் ஒவ்வொரு தொழிலாளியையும் தொழிர்சங்க பிரமுகர்கள் நேரில் பார்த்து கையெழுத்து வாங்கி 50%+1 தொழிலாலியின் கையெழுத்து மூலம் சங்கத்தை துவக்க முடியும்.ஒவ்வொருவராக தனிதனியாக கையெழுத்து வாங்கினால் மிரட்டல், அதட்டல் எல்லாம் இருக்கும், ரகசிய தேர்தல் முறைதான் சரி என அமெரிக்க தொழில்துறை இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தது.

இந்த எதிர்ப்புகிடையே அமெரிக்க செனட்டுக்கு (நம் ஊர் ராஜ்யசபா மாதிரி) இந்த சட்டம் போனபோது ஆர்கன்சா மாநிலத்தை சேர்ந்த ப்ளான்சி லிங்கன் அந்த சட்டத்துக்கு ஓட்டுபோடாமல் தோற்கடித்தார்.

lincoln-portrait-2007.jpg

அவ்வளவுதான்...அமெரிக்காவை தொழிற்சங்கமயமாக்கும் முயற்சி தோற்றதே என ஆத்திரமடைந்த தொழிர்சங்கங்கள் ப்ளான்சி லிஙகனி தேர்தலில் தோற்கடிக்க கங்கணம் கட்டின.தொழிற்சங்கம் சார்பில் டெமாக்ரடின் கட்சியின் உள்கட்சி தேர்தலில் ஹால்ட்டர் என்பவரை நிறுத்தின.இது டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் உட்கட்சி தேர்தல்.ஆர்கன்சாவில் தேர்தல் நடந்தபோது அமெரிக்கா முழுவதிலும் இருந்து தொழிர்சங்கங்கள் சுமார் 10 மில்லியன் டாலரை (45 கோடி ரூபாய்) ஆர்கன்சாவில் இறக்கின.தொழிர்சங்க உறுப்பினர்கள் வீடு, வீடாக வீதி வீதியாக போய் "ப்லான்சிக்கு ஓட்டு போடாதீர்கள்" என காலில் விழாத குறையாக பிரச்சரம் செய்தார்கள்.

தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின.ப்ளான்சி 52௪2 என்ற சதவிகிதத்தில் ஹால்ட்டரையும், தொழிர்சன்கங்களையும் மண்ணை கவ்வ வைத்து மாபெரும் வெற்றி பெற்ரார்.தேர்தல் பற்றீ கருத்து தெரிவித்த வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளர் "தொழிற்சன்கங்கள் தம் சந்தாபணத்தில் பத்து மில்லியன் டாலரை டாய்லட்டில் போட்டு ப்ளஷ் செய்தார்கள்" என நக்கல் செய்து வைக்க அது வெந்த புண்ணீல் வேலைபாய்ச்சிய கதையாக ஆகி தொழிற்சங்கங்கள் கடுப்பில் உள்ளனர்.

ஒட்டு மொத்தமாக அமெரிக்க தொழிற்சங்கங்கள் அனைத்தையும் களத்தில் சந்தித்து வென்ற வீரமங்கை ப்ளான்சிக்கு மேலும் வெற்றிகள் உரித்தாகுக.

செல்வன்

unread,
Jun 11, 2010, 1:36:27 AM6/11/10
to tamizh...@googlegroups.com, பண்புடன், mintamil
சாக்கர் உலக கோப்பைக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம்?

சாக்கர் உலகின் மிக பிரபலமான ஆட்டமா இருந்தாலும் வல்லரசு நாடான அமெரிக்கா இதில் பெரிய பங்கு எதையும் ஆற்றவில்லை.உலககோப்பை வரலாற்றில் ரெண்டுதரம் தான் அமெரிக்க அணி முதல் ரவுண்டை தாண்டி இருக்கு.அமெரிக்க சாக்கர் அச்சொசியேஷன் தலைவர் ஒரு இந்தியர் (சுனில் குலாட்டி )இப்படி ஆட்டத்தில் கோட்டை விட்டாலும், சாக்கர் உலக கோப்பை வருமானத்துக்கு பெருமளவு அமெரிக்காவை தான் நம்பி இருக்கு என்றால் பலரும் ஆச்சரியபடுவார்கள்.ஆனால் உண்மை அதுதான்.

இந்த வருட உலககோப்பை பந்தயங்களில் போட்டி நடக்கும் தென்னாபிரிக்க ரசிகர்களுக்கு அடுத்தபடியா அதிக டிக்கட்டுகள் வாங்கிய நாடு அமெரிக்கா.1994ல் அமெரிக்காவில் நடந்த சாக்கர் உலககோப்பை பந்தயம் ஒன்றில் தான் வரலாற்றில் முதல் தடவையா அனைத்து போட்டிகளுக்கான அனைத்து டிக்கட்டுகளும் விற்று தீர்க்கப்பட்டன.டிவி உரிமையை அதிகம் காசு கொடுத்து வாங்கிய நாடும் அமெரிக்கா.2018 அல்லது 2022ல் சாக்கர் உலககோப்பை மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப இருக்கிறது.

இப்படி பொருளாதார ரீதியா அமெரிக்கா சாக்கர் உலககோப்பையை பெருமளவில் இம்ப்ரஸ் செய்தாலும் இந்த தடவையும் அமெரிக்க அணி பெருசா சாதிக்க வாய்ப்பில்லை.ஆனால் அமெரிக்கர்கள் சாக்கரை பற்றி பெருசா அலட்டிகொள்வதில்லை.அமெரிக்க புட்பால் (ரக்பி மாதிரியான ஆட்டம்) மேல் தான் அவர்களுக்கு கிரேஸ்.சாக்கர் உலககோப்பை $3.5 பில்லியன் வருமானம் ஈட்டும்.அமெரிக்க கால்பந்து உலககோப்பை (என்.எப்.எல்) 8 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும்.

செல்வன்

unread,
Jun 12, 2010, 1:24:17 PM6/12/10
to tamizh...@googlegroups.com, பண்புடன், mintamil
உலகில் மிக அமைதியான (போர் பயம் இல்லாத, லஞ்சம் குறைவான, குற்ற விகிதம் குறைவான) 15 நாடுகளை வரிசைபடுத்தி இருக்கிரார்கள் Sydney, Australia-based Institute for Economics and Peace, the Global Peace Index (GPI) என்ற அமைப்பினர்


1. நியூசி

2.ஐஸ்லாந்து

3.ஜப்பான்

4.ஆஸ்த்ரியா

5.நார்வே

இப்படி போகுது பட்டியல்.

இந்த நாடுகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை இவை அனைத்தும் சிறுநாடுகள், பெரும்பாலும் மேற்கத்தியநாடுகள், பெரும்பாலும் நாட்டோவில் இணைந்து அமெரிக்க ராணுவ பாதுகாப்பின் கீழ் இருக்கும் நாடுகள்.

இந்த நாடுகளை காப்பாற்ற ஆயுதம் ஏந்தி நிற்பதாலும் சண்டையில் ஈடுபடுவதாலும் அமெரிக்காவுக்கு இந்த பட்டியலில் இடம் இல்லை.

போலிஸுகாரன் வாழ்க்கை அமைதியாக இருந்தால் குடிமக்கள் வாழ்க்கை எப்படி அமைதியாக இருக்கும்?

செல்வன்

unread,
Jun 14, 2010, 3:43:01 AM6/14/10
to panb...@googlegroups.com, mintamil, தமிழமுதம்
மதங்களை இணைத்த  திருமகள்

haley-427cn061110-1276277261.jpg

தென்கரோலினா மாநில் கவர்னராக குடியரசு கட்சி சார்பில் நிக்கி ஹாலி போட்டியிடுகிறார்.தென்கரோலினா குடியரசு கட்சியின் கோட்டை என்பதால் நிக்கி வெல்வது உறுதி.நிக்கி ஹாலி இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்.இவரது பெற்றோர் பஞ்சாபிகள்.இன்னும் சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்கள்.நிக்கியின் உடன்பிறந்தவர்களும் சீக்கியர்கள்.நிக்கி மெதடிஸ்ட் கிறிஸ்தவர்.அமெரிக்கரை மணந்து இரு குழந்தைகளை பெற்றவர்.

குடியரசு கட்சி தீவிர கிறிஸ்தவ கொள்கைகளை கடைபிடிக்கும் கட்சி என்பதால் நிக்கியை வேட்பாளராக நிறுத்த ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது.நிக்கி சர்ச்சுக்கும் போகிறவர்,குருத்வாராவுக்கும் போகிறவர்.அதனால் இவர் கிறிஸ்தவரா என குடியர்சு கட்சியில் சிலர் சந்தேகித்தனர்.ஆனால் அம்மாதிரி சந்தேகத்தை எல்லாம் மக்கள் பெருவாரியாக ஓட்டுபோட்டு முறியடித்துவிட்டனர்

இப்போது நிக்கியுடன் நான் அவரது கணவருக்கு தெரியாமல் உடலுறவு கொண்டேன் என ஒரு பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரை பெரும் புயலை கிளப்பியுள்ளது.நிக்கி உடனடியாக "இந்த குற்றசாட்டை அவர் நிருபித்தால் உடனே பொதுவாழ்க்கையிலிருந்து விலக தயார்" என அறிவித்துவிட்டு ஊர் ஊராக கணவருடனும், பிள்ளைகளுடனும் சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார்.மக்கள் ஒரு சூப்பர்ஸ்டாருக்கு அளிக்கும் வரவேற்பை நிக்கிக்கு அளிக்கின்றனர்

இரு மதங்களை இணைத்த இந்தியாவின் திருமகள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செல்வன்

unread,
Jun 16, 2010, 1:41:14 AM6/16/10
to panb...@googlegroups.com, தமிழமுதம், mintamil
பிரசவமா மறுபிறப்பா?


சில மாதங்களுக்கு முன்பு உறவு பெண் ஒருத்திக்கு கோவை ஆஸ்பத்திரியில் நார்மல் டெலிவரி ஆனது.அது நல்ல வசதியான தனியார் ஆஸ்பத்திரிதான்.ஆனால் நார்மல் டெலிவரி அத்தனை கொடுமையாக இருந்தது என அந்த பெண் சொன்னார்.காரணம் ஆஸ்பத்திரி நர்சுகள்.வலி தாங்காமல் இந்த பெண் கதறியபோது 'சும்மா இரம்மா" என்றும் "கொஞ்சம் மெதுவா கத்து" என்றும் எல்லாம் திட்டிய நர்சுகள் ஒரு கட்டத்தில் "இப்ப இந்த கத்து கத்தறே.****** நல்லா இருந்துச்சா?" என்றெல்லாம் கேட்டிருக்கிறார்களாம்.

பிரசவம் என்பது எஞ்சாய் செய்ய வேண்டிய விசயம்.அப்கோர்ஸ் வலி, வாந்தி, உடல் நிலை மாற்றம், மனநிலை மாற்றம் எல்லாம் அந்த காலத்தில் வரும்.ஆனால் வீட்டில் தகுந்த சூழல், கனவரின் ஒத்துழைப்பு (இது மிக,மிக,மிக,மிக முக்கியம்) இருந்தால் பிரசவம் என்பது ஒரு இனிய அனுபவமே (டென்சனாவாதீங்க..சற்றுமிகைபடுத்தரேன் போல .நான் ஆண் என்பதால் இப்படி எழுதுகிறேனோ:-))

நம் நாட்டு பெண்களுக்கு பிரசவம் ஒரு தலைவேதனையாக இருக்க காரணம் முதலில் கணவன்.பிரசவகாலத்தில் மனைவியின் பார்ட்னராக இருக்கவேண்டிய ஆண்கள் அப்படி இருப்பதில்லை.வழக்கம் போல கட்டவிழ்த்த காளைகளாக தான் சுற்றிதிரிகின்றனர்.பிள்ளை பிறந்தாலும் பார்த்துகொள்ளுவது கிடையாது.அடுத்த காரணம் மேலே சொன்னமாதிரி இருக்கும் மான்ம் கெட்ட நர்சுகள்,டாக்டர்கள்..டாக்டர்கள் காசை குறியாக வைத்திருப்பதால் நார்மல் டெலிவரியை கூட சிச்சேரியனாக மாற்றிவிடுகின்றனர்.நார்மல் டெலிவரி என்றால் எவன் நாலு மணிநேரம்,ஐந்து மணீநேரம் காத்திருப்பது?அதுக்கு சிச்சேரியன் செய்தால் ஐந்துமணிநேரத்தில் ஐந்து பிரசவம் பார்க்கலாமே?இப்படிதான் டாக்டர்களின் மனநிலை ஓடுகிறது.

இதி இன்னும் விரிவாக எழுதலாம்..ஆனால் இப்ப நேரம் இல்லை.நேரம் கிடைக்கும்போது அமெரிக்காவில் பிரசவம், கர்ப்பம் எல்லாம் மருத்துவமனைகளில் எப்படி ஹாண்டில் செய்கிரார்கள்ன்னு எழுதறேன்



--
செல்வன்

www.holyox.blogspot.com

"ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால்,பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும்.பிறகு கஷ்டமே இருக்காது" - பெரியார்

வினோத்-VINOTH

unread,
Jun 16, 2010, 3:03:14 AM6/16/10
to mint...@googlegroups.com


2010/6/16 செல்வன் <hol...@gmail.com>

பிரசவமா மறுபிறப்பா?

மறுபிறப்பு என்பதெல்லாம் அவரவர் உடல் நலனை பொறுத்தது..

இன்றைய ஒரு செய்தி
ராமநாதபுரம்: 10 படிக்கும் மாணவி பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்று அதை அங்கேயே விட்டுச்சென்றுள்ளார்...

இத்தனைக்கும் அவர் கர்ப்பமாகஇருந்தது யாருக்கும் தெரியவில்லை.....
அவரது உடல் அப்படி.


--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth

S.Partha sarathy

unread,
Jun 16, 2010, 3:50:17 AM6/16/10
to mint...@googlegroups.com

///மறுபிறப்பு என்பதெல்லாம் அவரவர் உடல் நலனை பொறுத்தது.///

சமூக சூழல் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. செல்வன் அவர்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை.
அன்புடன்
பார்தசாரதி


2010/6/16 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--

mayakunar

unread,
Jun 16, 2010, 5:21:03 PM6/16/10
to மின்தமிழ்
பிரசவ வலி" என்பது பழம் கதை. தற்பொழுது "வலியற்ற" பிரசவ முறைகள்
( Epidural anaesthesia) உள்ளன . பெரிய தனியார் மருத்துவ மனைகளில்
கூடுதல் கட்டணத்தில் கேட்டு பெறலாம் .இந்த முறை மருத்துவத்தை டாக்டர்கள்
நோயாளிகுக்கு எடுத்து சொல்ல வேண்டும்
கோபாலன்


On Jun 16, 1:41 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> *பிரசவமா மறுபிறப்பா?*

செல்வன்

unread,
Jun 17, 2010, 12:28:31 AM6/17/10
to mint...@googlegroups.com


2010/6/16 mayakunar <gopal...@gmail.com>

பிரசவ வலி" என்பது பழம் கதை. தற்பொழுது  "வலியற்ற" பிரசவ முறைகள்
( Epidural anaesthesia)  உள்ளன . பெரிய தனியார் மருத்துவ மனைகளில்
கூடுதல் கட்டணத்தில் கேட்டு பெறலாம் .இந்த முறை மருத்துவத்தை டாக்டர்கள்
நோயாளிகுக்கு  எடுத்து சொல்ல வேண்டும்

எபிட்யூரல் போடுவதில் ரிஸ்க் இருக்கு.முதுகுதண்டு பாதிக்கபட்டால் ஆயுள் வரைக்கும் வெஜிட்டபிளா தான் வாழணும்.

அதுபோக எபிட்யூரல் போட்டால் வலி இல்லாமல் குழந்தையை வெளியே தள்ள முயலமாட்டார்கள்.இயற்கையா வலி எடுத்தால் சீக்கிரம் முயற்சி எடுத்து குழந்தையை வெளியே தள்ளிவிடுவார்கள்

mayakunar

unread,
Jun 17, 2010, 10:35:30 AM6/17/10
to மின்தமிழ்
மருத்துவ துறையில் சாதரண ஊசி போடுவதிலிருந்து சிக்கலான அறுவை சிகிச்சை
வரை ( invasive technique) ஆபத்துகள் உண்டு .அவ்வளவே இதிலும்.
மேலும் வலி இல்லாவிட்டாலும் , உடன் உள்ள நர்ஸ்களின் உதவியோடு முக்கி,
பிரசிவிக்கலாம். லிங்கை காண்க .
http://www.med.unc.edu/anesthesiology/patients/childbirth-1
கோபாலன்

On Jun 17, 12:28 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2010/6/16 mayakunar <gopalan1...@gmail.com>

N. Kannan

unread,
Jun 17, 2010, 10:56:18 AM6/17/10
to mint...@googlegroups.com
என்னங்கப்பா! இத்தனை ஆண்டுகளாக நம்ம அம்மாக்களும், பாட்டிகளும் சின்ன
ரூமுக்குள்தானே பிள்ளை பெத்து இருக்கிறார்கள். எங்க அம்மாவுக்கு எட்டுப்
பிள்ளைகள். எல்லாம் யார் உதவியும் இல்லாமல்...எந்த ஊசி போட்டார்கள்?

இப்ப சிசரியன் செய்தால் காசு. அது காஸ்மெடிக் சர்ஜெரி எனும் பிரிவில்
வந்துவிட்டது. என் மருமாளுக்கு சர்ஜெரி செய்து விட்டு டாக்டர் சொன்னார்,
பிக்கினி போட்டால் கூட தையல் தெரியாது என்று. யார் கேட்டார்கள்!!?

க.>

2010/6/17 mayakunar <gopal...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Jun 17, 2010, 12:17:22 PM6/17/10
to mint...@googlegroups.com
செல்வன் சொல்வதை தான் எங்கள் டாக்டர் சொன்னார்.

2010/6/17 செல்வன் <hol...@gmail.com>:

செல்வன்

unread,
Jun 19, 2010, 2:15:53 AM6/19/10
to mint...@googlegroups.com


2010/6/17 mayakunar <gopal...@gmail.com>

மருத்துவ துறையில்  சாதரண ஊசி போடுவதிலிருந்து சிக்கலான அறுவை சிகிச்சை
வரை ( invasive technique) ஆபத்துகள் உண்டு .அவ்வளவே இதிலும்.
மேலும் வலி இல்லாவிட்டாலும் , உடன் உள்ள நர்ஸ்களின் உதவியோடு முக்கி,
பிரசிவிக்கலாம். லிங்கை காண்க .

இது சாதா விஷயம் இல்லை.. பிரசவத்துக்கு முன்னேயே பேஷண்ட் 'நான் எபிட்யூரல் ஊசி போட்டுக்க சம்மதிக்கிறேன்.முழு விளைவுகளும் என்னையே சார்ந்தது.எனக்கு என்ன ஆனாலும் ஆஸ்பத்திரி பொறுப்பில்லைன்னு" எழுதி தரணும்.

mayakunar

unread,
Jun 20, 2010, 8:38:22 PM6/20/10
to மின்தமிழ்
'எபிடுரல்' முறையின் சாதக ,பாதகங்கள் விளக்கப்பட்டு கர்பிணியின்
ஒப்புதலின் பேரிலயே கையாளப்படுகிறது .அதன் சான்றாகவே கையொப்பம்
பெறப்படுகிறது இதனை ஆங்கிலத்தில் ' informed consent' என்று
கூறுவார்.அமெரிக்காவில் 50 முதல் 60 விழுக்காடு கர்பிணி பெண்கள்
இம்முறையில் வலி நிவாரணம் பெறுகின்றனர் . இந்தியாவில் இதில் பயிற்சி
பெற்ற மருத்துவர்கள் அதிகம் இல்லாத காரணத்தால் பிராபல்யம் பெறவில்லை
gopalan

On Jun 19, 2:15 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2010/6/17 mayakunar <gopalan1...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jun 20, 2010, 9:38:59 PM6/20/10
to mint...@googlegroups.com
திரு. மாயாகுமார்,

இந்தியாவில் 'எபிடூரல் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வேண்டிய அளவு
இருக்கிறார்கள். பிரச்னை அது அல்ல; ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே
தென்னாப்பிரிக்காவில் 'மருந்து மாயம் இல்லா, வலி இல்லா' பிரசவத்திற்கு
வழி வகுத்த மருத்துவ இயக்கம் இருந்தது. உலகளவில் புகழ் பெற்றது.
பெரும்பாலாக, பிரசவத்துக்கு 'எபிடூரல்' தேவை இல்லை. மருத்துவ
விஷயங்களில், 'இன்ஃபார்ம்ட் கன்செண்ட்' சிக்கல் மிகுந்தது; மாயம்.

இன்னம்பூரான்

2010/6/21 mayakunar <gopal...@gmail.com>:

mayakunar

unread,
Jun 22, 2010, 3:58:39 PM6/22/10
to மின்தமிழ்
திரு இன்னம்புறான் ,
எதை வைத்து எபிடுரல் மருத்துவர்கள் போதிய அளவில் உள்ளனர் என்று
கூறுகிறீர்கள் ? முதலில் மருத்துவர்களேக்கே பஞ்சம். இல்லையென்றால்
இவ்வளவு போலி மருத்துவர்கள் உருவாகி இருப்பார்களா? இதற்கு மேல் மயக்க
இயல் படித்து, அதிலும் குறிப்பாக , 'obstetric anaesthetist' ஆக பணி
புரிவோர் மிக மிக குறைவு
.
உலகளவில் புகழ் பெற்ற ' மருந்து மாயம் இல்லா, வலி இல்லா' மருத்துவம்
இன்று என்ன ஆனது ? இதை பாருங்கள்
Quote:
The Pain of Labor
First, let us briefly consider the question of pain in
connection with childbirth. Many women - normal, natural, and healthy
women - suffer but comparatively little in giving birth to an average-
sized baby during an average and uncomplicated labor. Like the Indian
squaw, they suffer a minimum of pain at childbirth - at least this is
largely true after the birth of the first baby; and so there is little
need of discussing any sort of anesthesia for this group of fortunate
women; for at most, all that would ever be employed in the nature of
an anesthetic in such cases, would be a trifle of chloroform to take
the edge off the suffering at the height or conclusion of labor.
But the vast majority of American mothers do not belong to this
fortunate and normal class of women who suffer so little during
childbirth; they rather belong to that large and growing class of
women who have dressed wrong; who have lived unhealthful and sometimes
indolent lives; who are more or less physically and temperamentally
unfitted to pass through the experiences of pregnancy and the trials
of labor.
The average American woman shrinks from the thought and prospect of
suffering pain; she is quite intolerant with the idea of undergoing
even the few brief moments of physical suffering attendant upon
childbirth. She refuses to contemplate the day of labor in any other
light than that which insures her against all possible pain and other
physical suffering.
And it is just this unnatural and abnormal fear of labor-pains - this
unwomanly dread of the slightest degree of physical suffering - that
has indirectly led up to so much discussion regarding the employment
of "twilight sleep" and other forms of obstetric anesthesia.
While the authors recognize the great blessing of anesthesia to the
woman in labor - and almost unfailingly make use of it in some form -
nevertheless, we also recognize that it would be a fine form of mental
discipline and mighty good moral gymnastics, if a great many self-
centered and pampered women would "spunk right up" and face the ordeal
of labor with natural courage and normal fortitude. It would be "the
making of them," it would make new women out of them, it would start
them out on the road to real living. At the same time we do not mean
to advocate that women should suffer unnecessary pain in childbirth
any more than we allow them to suffer in connection with surgery.
(unquote)

indirectly led up to so much discussion regarding the employment of
"twilight sleep" and other forms of obstetric anesthesia.
While the authors recognize the great blessing of anesthesia to the
woman in labor - and almost unfailingly make use of it in some form -
nevertheless, we also recognize that it would be a fine form of mental
discipline and mighty good moral gymnastics, if a great many self-
centered and pampered women would "spunk right up" and face the ordeal
of labor with natural courage and normal fortitude. It would be "the
making of them," it would make new women out of them, it would start
them out on the road to real living. At the same time we do not mean
to advocate that women should suffer unnecessary pain in childbirth
any more than we allow them to suffer in connection with surgery.

Informed consent: இந்த படிவத்தை பாருங்கள்

"The undersigned patient and /or responsible relative or person hereby
consent to and authorize Hospitals ,Physicians and medical personnel
to administer and perform medical examinations ,investigations,medical
treatments,Out patient procedures,vaccinations and immunizations
during the course of the patient's care as an out patient be deemed
advisable or necessary.
The undersigned also consent to the use of medical information for
research purpose or for insurance coverage
The undersigned also consent to the hospital contacting him/her by
telephone if needed regarding appointment and follow-up needs"

. இதில் கையொப்பம் இடாமல் நோயாளி எப்படி வைத்யம் செய்து செய்து
கொள்ள முடியும்
எல்லா மருத்துவ மனைகளிலும் இது போன்ற படிவங்களில் கையொப்பம்
பெறப்படும்.இதில் சிக்கல் என்ன ?

கோபாலன்


On Jun 20, 9:38 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> திரு. மாயாகுமார்,
>
> இந்தியாவில் 'எபிடூரல் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வேண்டிய அளவு
> இருக்கிறார்கள். பிரச்னை அது அல்ல; ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே
> தென்னாப்பிரிக்காவில் 'மருந்து மாயம் இல்லா, வலி இல்லா' பிரசவத்திற்கு
> வழி வகுத்த மருத்துவ இயக்கம் இருந்தது. உலகளவில் புகழ் பெற்றது.
> பெரும்பாலாக, பிரசவத்துக்கு 'எபிடூரல்' தேவை இல்லை. மருத்துவ
> விஷயங்களில், 'இன்ஃபார்ம்ட் கன்செண்ட்' சிக்கல் மிகுந்தது; மாயம்.
>
> இன்னம்பூரான்
>

> 2010/6/21 mayakunar <gopalan1...@gmail.com>:


>
>
>
> > 'எபிடுரல்' முறையின் சாதக  ,பாதகங்கள் விளக்கப்பட்டு கர்பிணியின்
> > ஒப்புதலின் பேரிலயே கையாளப்படுகிறது .அதன் சான்றாகவே கையொப்பம்
> > பெறப்படுகிறது இதனை ஆங்கிலத்தில் ' informed consent' என்று
> > கூறுவார்.அமெரிக்காவில் 50 முதல் 60 விழுக்காடு கர்பிணி பெண்கள்
> > இம்முறையில் வலி நிவாரணம் பெறுகின்றனர் . இந்தியாவில் இதில் பயிற்சி
> > பெற்ற மருத்துவர்கள் அதிகம் இல்லாத காரணத்தால் பிராபல்யம் பெறவில்லை
> > gopalan
>
> > On Jun 19, 2:15 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> >> 2010/6/17 mayakunar <gopalan1...@gmail.com>
>
> >> > மருத்துவ துறையில்  சாதரண ஊசி போடுவதிலிருந்து சிக்கலான அறுவை சிகிச்சை
> >> > வரை ( invasive technique) ஆபத்துகள் உண்டு .அவ்வளவே இதிலும்.
> >> > மேலும் வலி இல்லாவிட்டாலும் , உடன் உள்ள நர்ஸ்களின் உதவியோடு முக்கி,
> >> > பிரசிவிக்கலாம். லிங்கை காண்க .
>
> >> இது சாதா விஷயம் இல்லை.. பிரசவத்துக்கு முன்னேயே பேஷண்ட் 'நான் எபிட்யூரல் ஊசி
> >> போட்டுக்க சம்மதிக்கிறேன்.முழு விளைவுகளும் என்னையே சார்ந்தது.எனக்கு என்ன
> >> ஆனாலும் ஆஸ்பத்திரி பொறுப்பில்லைன்னு" எழுதி தரணும்.
>
> >> --
> >> செல்வன்
>
> >>www.holyox.blogspot.com
>
> >> "ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால்,பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை
> >> வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான
> >> சமரசம் தோன்றி விடும்.பிறகு கஷ்டமே இருக்காது" - பெரியார்
>
> > --

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

Innamburan Innamburan

unread,
Jun 22, 2010, 9:13:41 PM6/22/10
to mint...@googlegroups.com
Dear Gopalan,

Sorry for the English. My basis is lifelong experience with anaesthetics  and close association with anaesthetists (for example, my son, Dr.Vasudevan etc.

The 'Informed consent' is applied to all sorts of surgery.

Regards,
Innamburan

2010/6/23 mayakunar <gopal...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

mayakunar

unread,
Jun 23, 2010, 12:56:13 PM6/23/10
to மின்தமிழ்
இன்னம்புரன் அய்யா ,

மயக்க இயல் மருத்துவர்களுடனும் ,(தங்கள் புதல்வர் ), இயல்
சார்ந்த விடயங்களிலும் தங்களின் ஆர்வமும் ஈடுபடும் கண்டு மிக்க
மகிழ்ச்சி .
இணையத்தில் மேய்ந்த போது என் பார்வையில் பட்ட புத்தகம் . இணையத்திலேயே
படிக்க வசதி. 'Open Drops To Open Hearts !'(வெப்சைட் அட்ரஸ்
( http://www.csen.com/anesthesia/). 25 வருட obstetrics anaesthetist
அனுபவத்தை சுவைபட எழுதியுள்ளார் . நேரம் கிடைத்தால் தாங்கள்
படிக்கவும்.ஒவ்வொரு மயக்க மருத்துவரும் கட்டாயம் படிக்க வேண்டும் .
எனக்கு பிடித்த வரிகள்
No one should be crying on Labor Hall except newborns!
. கோபாலன்


On Jun 22, 9:13 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> Dear Gopalan,
>
> Sorry for the English. My basis is lifelong experience with anaesthetics
>  and close association with anaesthetists (for example, my son, Dr.Vasudevan
> etc.
>
> The 'Informed consent' is applied to all sorts of surgery.
>
> Regards,
> Innamburan
>

> 2010/6/23 mayakunar <gopalan1...@gmail.com>

> ...
>
> read more »

Innamburan Innamburan

unread,
Jun 23, 2010, 1:14:08 PM6/23/10
to mint...@googlegroups.com
நிச்சியமாகப்படிக்கிறேன். நன்றி. Most mothers don't cry at delivery time. Clinically speaking, contractions aid delivery and under anaesthesia, it is compromised.  Of course, there are individual differences.
Innamburan

2010/6/23 mayakunar <gopal...@gmail.com>

--

செல்வன்

unread,
Jun 24, 2010, 1:37:51 AM6/24/10
to mint...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம்
உதவிதொகை கிடையாது.உழைத்து பிழை

அமெரிக்காவில் பொருளாதார மந்தம் வந்தபிறகு வேலையில்லா திண்டாட்டம் வழக்கமான 4% இருந்து 9.5% ஆகிவிட்டது.போனமாதம் தான் வேலை இழப்புகள் நின்று வேலைவாய்ப்புகள் அதிகரிக்க துவங்கின.மே மாதம் அமெரிக்காவில் 4.5 லட்சம் வேலைகள் புதிதாக உருவாகின.ஆனால் இதே அளவு வளர்ச்சி இன்னும் பலமாதங்களுக்கு இருந்தால் தான் பலருக்கும் வேலை கிடைக்கும் என்ற நிலை.

மேற்கத்தியநாடுகளில் வழக்கமாக வேலை இழந்தவர்களுக்கு உதவி தொகை கொடுப்பார்கள்.மற்ர நாடுகளை விட அமெரிக்காவில் குறைந்த நாட்களுக்கு தான் உதவிதொகை கிடைக்கும்.காரணம் அப்போதுதான் அவர்கள் உதவிதொகையை எதிர்பாராமல் கிடைத்த வேலையை செய்வார்கள் என்பதால்.இதனால் தான் அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் எப்போதுமே குறைவு.

இந்த தரம் பொருளாதார மந்தம் இருப்பதால் 2 வருடமாக சுமார் ஒரு மில்லியன் பேருக்கு விதிகளை தளர்த்தி ஒபாமா உதவிதொகையை கொடுத்துவந்தார்.இந்த ஜூன் மாதத்துக்கு பிறகு மீண்டும் அந்த உதவிதொகையை அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க காங்கிரஸ் முன் வைத்தார்.

"2 வருடமாக வேலை கிடைக்கவில்லை என்பவர்களுக்கு உதவிதொகை கிடையாது.அவர்களை கிடைத்த வேலையை செய்ய சொல்லுங்கள்" என நிர்தாட்சண்யமாக கூறிவிட்டது அமெரிக்க காங்கிரஸ்.

ஓட்டுபொறுக்காமல்,மலிவு அரசியல் நடத்தாமல் உள்ளதை உள்ளபடி உரைத்த அமெரிக்க காங்கிரசுக்கு என் வாழ்த்துக்கள்.இதேபோல் அரசின் மற்ர சலுகை,இலவச திட்டங்களை ஒழித்து உறுதியுடன் செயல்படுங்கள் காங்கிரஸ் உறுப்பினர்களே...



--
செல்வன்

www.holyox.blogspot.com

"பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும். அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள், ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவிமுதல் சாவுவரை அடிமையாகவும் கொடுமையாகவுமே நடத்துகிறார்கள். " - பெரியார்

Tthamizth Tthenee

unread,
Jun 24, 2010, 10:32:17 AM6/24/10
to mint...@googlegroups.com
இலவசங்களையும்
 
இசங்களையும்
 
ஒழித்தாலே
 
வாழ்க்கை  வசப்படும்
 
வசந்தம் வீசும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


 
24-6-10 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதினார்:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

devoo

unread,
Jun 24, 2010, 11:18:54 AM6/24/10
to மின்தமிழ்
Jun 24, 12:37 am, செல்வன்

>>> ஓட்டுபொறுக்காமல்,மலிவு அரசியல் நடத்தாமல் உள்ளதை உள்ளபடி உரைத்த அமெரிக்க காங்கிரசுக்கு என் வாழ்த்துக்கள். இதேபோல் அரசின் மற்ர சலுகை,இலவச திட்டங்களை ஒழித்து உறுதியுடன் செயல்படுங்கள் காங்கிரஸ் உறுப்பினர்களே... <<<


டாக்டர் கலாம் கனவு காணச்சொன்னது உண்மைதான்; அதற்காக
இப்படியெல்லாம் ............


தேவ்

On Jun 24, 12:37 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> *உதவிதொகை கிடையாது.உழைத்து பிழை*

Tthamizth Tthenee

unread,
Jun 24, 2010, 11:40:42 AM6/24/10
to mint...@googlegroups.com
டாக்டர் கலாம் காணச் சொன்னதே  கனவுதான்
 
மக்கள்  தூக்கத்திலாவது  மகிழ்ச்சியாய் இருக்கட்டுமே  என்று
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
24-6-10 அன்று, devoo <rde...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jun 24, 2010, 12:13:28 PM6/24/10
to mint...@googlegroups.com
செல்வன்: இந்த புத்தகங்களை கொஞ்சம் படித்து பாருங்களேன்.
1. Susan George: A Fate Worse Than Debt;
2. Susan George: How The Other Half Dies;
3. Barbara Ehrenreich Ph D: Nickel and Dimed On (Not) Getting By in America. 
They are well-researched and peer-reviewed.
தமிழ்த்தேனி: 

இசங்களை எப்படி ஒழிப்பீர்கள்? எது இசம் அன்று? எல்லா இசங்களும் ஒன்று போலவா?


இன்னம்பூரான்

2010/6/24 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Raja sankar

unread,
Jun 24, 2010, 12:20:37 PM6/24/10
to mint...@googlegroups.com
இன்னம்பூரான்,

நீங்கள் ஏன் இலவசத்தையும் கடனையும் ஒப்பிடுகிறீர்கள்?

அன்னியசெலவாணியை கண்ட்ரோல் செய்வதே ஒரு வகையில் இலவசம் தான். அது பணக்காரகளுக்கு தரும் இலவசம்

ராஜசங்கர்



2010/6/24 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Tthamizth Tthenee

unread,
Jun 24, 2010, 12:29:42 PM6/24/10
to mint...@googlegroups.com
இலவசங்களையும் கடனையும் ஒப்பீடு செய்யலாம்
ஒரு நாட்டில்  அடுத்த நாட்டிலிருந்து  கல்விக்காகவோ, அல்லது வேறு திட்டங்களுகாகவோ  கோடி கோடியாய்க் கடன் வாங்கிவிட்டு அந்த தொகையை  குறிப்பிட்ட  அந்த  கல்விக்காகவோ, அல்லது மற்ற திட்டங்களுக்காகவோ செலவிடாமல் 
 
தங்களின் கட்சிகளை  வளர்த்துக்கொள்ள, தங்கள் ஆட்சியின் காலத்தை நீட்டித்துக்கொள்ள  மக்களுக்கு  அந்த தொகையில் இலவசமாக  தொலைக் காட்சி பெட்டிகள், இலவசமாக  சேலை, போன்றவற்றை அளித்தால்
 
மீண்டும் அந்த  கடன் தொகையை  அந்த நாட்டுக்கு திருப்பித்தர வேண்டும் அல்லவா
 
அப்போது  அந்தக் கடனை  சம பங்கீடாக பங்கிட்டு  ஒவ்வொரு  தனிப்பட்ட  மக்களின் தலையிலும் கடன் ஏற்றுகிறார்கள்  அல்லவோ?
 
தற்போதே இந்தியாவில் வாழும் மக்களில் ஒவ்வொருவர் தலையிலும் ஒரு குறிப்பிட்ட தொகை  கடனாக இருக்கிறது  அல்லவோ?
 
அதனால் இலவசங்களை  கடனுடன் ஒப்பீடு செய்யலாம்  அல்லவோ?
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 
 
24-6-10 அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதினார்:

Innamburan Innamburan

unread,
Jun 24, 2010, 12:30:31 PM6/24/10
to mint...@googlegroups.com
ராஜசங்கர்,

நான் அப்படி ஒப்பிடவில்லையே. ஒரு பரந்த நோக்கில், நண்பருக்கு எழுதினேன். 'அன்னியசெலவாணியை கண்ட்ரோல் செய்வதே ஒரு வகையில் இலவசம் தான். அது பணக்காரகளுக்கு தரும் இலவசம்.' என்பது உண்மை. அதா அன்று. இந்தியாவில், அதில் லஞ்சம் என்ற நஞ்சும் கலக்கப்பட்டது. யானை தன் தலையில் மண்ணை வார்ப்போட்டுக்கொண்டது போல், மற்ற சிக்கல்களும் இதில் உண்டு.

இன்னம்பூரான்

2010/6/24 Raja sankar <errajasa...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jun 24, 2010, 12:32:51 PM6/24/10
to mint...@googlegroups.com
இதுவும் சிந்திக்கவேண்டிய பார்வை, தேனியாரே. ஆனால், diversion of funds is also a different kettle of fish.

செல்வன்

unread,
Jun 24, 2010, 10:52:54 PM6/24/10
to mint...@googlegroups.com


2010/6/24 devoo <rde...@gmail.com>

டாக்டர் கலாம் கனவு காணச்சொன்னது உண்மைதான்; அதற்காக
இப்படியெல்லாம் ............


இது என்ன மோசமான கனவா?:-)

அமெரிக்காவில் பற்றாகுறையை ஒழிக்க டீபார்ட்டி தோன்றியாச்சு.இனி தண்டசெலவுகளுக்கு இருக்கு ஆப்பு:-)

செல்வன்

unread,
Jun 24, 2010, 11:08:48 PM6/24/10
to mint...@googlegroups.com


2010/6/24 Innamburan Innamburan <innam...@googlemail.com>

செல்வன்: இந்த புத்தகங்களை கொஞ்சம் படித்து பாருங்களேன்.
1. Susan George: A Fate Worse Than Debt;
2. Susan George: How The Other Half Dies;
3. Barbara Ehrenreich Ph D: Nickel and Dimed On (Not) Getting By in America. 
They are well-researched and peer-reviewed.


ஐயா,

.ஐ.எம்.எப் கடும் நிபந்தனைகளை விதிப்பது உண்மை.திவாலான நாடுகளுக்கு கொடுத்த கடனை வசூல் செய்ய அப்படி கடும் நிபந்தனை போட்டுதான் ஆகவேண்டும்.

பிறநாடுகளில் ஏழைகள் முன்னேறுவது கடினம் என சொல்லலாம்.அமெரிக்காவில் அப்படி இல்லை.இங்கே உழைப்பவன் எந்த உயரத்தையும் அடைய தடைகள் இல்லை.நீங்கள் சொன்ன புத்தகங்கள் இடதுசாரி கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவைஅதை மறுத்தும் புத்தகங்கள் வந்துள்ளன.

வெறும் $25உடன் அமெரிக்க தென்மாநிலம் ஒன்றில் இறக்கிவிடப்பட்டவர் தன் டிகிரியையோ, சிறப்பு தகுதியையோ பயன்படுத்தாமல் மூன்று மாதத்தில் பணம் சேர்த்து ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்து கையில் $5000 பணமும் சேர்த்துவிட்டார்.எத்தனை நாடுகளில் இம்மாதிரி முடியும்?

http://en.wikipedia.org/wiki/Scratch_Beginnings

Innamburan Innamburan

unread,
Jun 24, 2010, 11:31:40 PM6/24/10
to mint...@googlegroups.com
நான் இருதரப்பும் படிப்பவன், செல்வன். பார்பாரா ஒரு விஞ்ஞானத்துறையில்
வல்லுனர் எனினும், ஏழை பாழைகளுடன் வாழ்ந்து, ஆய்வு செய்தவர். மறுத்த
நூல்கள் அனுபவத்த்தின் ஆதாரத்தில் இல்லாமல், வாதங்களாக அமைந்து விட்டன.
கடும் நிபந்தனைகளைப் பற்ரி வருத்தம் இல்லை. மறைமுகமான உச்சவிலை வாணிகத்தை
புகுத்தியது நியாயமில்லை அல்லவா. எனக்கும் கணிசமான அளவில், இங்கிலாந்து
வெல்ஃபேர் ஸ்டேட் இயங்கும் முறை நேரிடையாகத்தெரியும். அமெரிக்க மினிமம்
கூலி முறையை வால்-மார்ட் வகையறா எக்ஸ்ப்ளாய்ட் செய்வதும் தெரியும்.
அமெரீக்காவின் உன்னதமான 'தகுதியை மட்டும் மதிக்கும்' கலாச்சாரமும்
தெரியும்.
நன்றி,

இன்னம்பூரான்

2010/6/25 செல்வன் <hol...@gmail.com>:

செல்வன்

unread,
Jun 24, 2010, 11:41:15 PM6/24/10
to mint...@googlegroups.com


2010/6/24 Innamburan Innamburan <innam...@googlemail.com>

நான் இருதரப்பும் படிப்பவன், செல்வன். பார்பாரா ஒரு விஞ்ஞானத்துறையில்
வல்லுனர் எனினும், ஏழை பாழைகளுடன் வாழ்ந்து, ஆய்வு செய்தவர். மறுத்த
நூல்கள் அனுபவத்த்தின் ஆதாரத்தில் இல்லாமல், வாதங்களாக அமைந்து விட்டன.


இல்லை ஐயா.நான் கொடுத்த சுட்டியில் இருந்த புத்தகமும்ம் களத்தில் இறங்கி செய்யப்பட்ட ஆய்வின் விளைவுதான்.
 
கடும் நிபந்தனைகளைப் பற்ரி வருத்தம் இல்லை. மறைமுகமான உச்சவிலை வாணிகத்தை
புகுத்தியது நியாயமில்லை அல்லவா.

ஐயா உச்சவிலை வாணிகம் என்றால் ஆங்கிலத்தில் என்ன பொருள்?மறைமுகமான உச்சவிலை வாணிகத்தை ஐ.எம்.எப் எங்கே புகுத்தியது>எதாவது சுட்டி கிடைக்குமா?


 
எனக்கும் கணிசமான அளவில், இங்கிலாந்து
வெல்ஃபேர் ஸ்டேட் இயங்கும் முறை நேரிடையாகத்தெரியும். அமெரிக்க மினிமம்
கூலி முறையை  வால்-மார்ட் வகையறா எக்ஸ்ப்ளாய்ட் செய்வதும் தெரியும்.
அமெரீக்காவின் உன்னதமான 'தகுதியை மட்டும் மதிக்கும்' கலாச்சாரமும்
தெரியும்.

ஐயா..அமெரிக்காவில் நான் மாதம் வெறும் $1000 சம்பளத்தில் நாலு வருடம் மனைவி,கை குழந்தையுடன் வாழ்ந்தவன்.அந்த சம்பளத்தில் இங்கே வாழ இயலுகிறது.அப்புறம் என்ன சொல்ல?

குறைந்த சம்பளத்துக்கு தான் வால்மார்ட் வேலை தருகிறது என்றாலும் அதுவும் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் நிலை என்ன?வால்மார்ர்ட் வேலை பெரும்பாலும் பார்ட்டைம் வேலைதான்.பார்டைம் வேலைக்கு குறைவாக தான் சம்பளம் கிடைக்கும்.

செல்வன்

unread,
Jun 25, 2010, 1:16:23 AM6/25/10
to mint...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம்
இந்த பால்வடியும் முகத்தை பாருங்கள்.

63778.jpg

இந்த மலரையும் ஒருவனால் அடித்து துன்புறுத்த முடியும் என்றால் அவனைபற்றி என்ன சொல்ல?

மாடல் கிம் கர்தஷியானை பாய்பிரண்ட் ரெஜ்ஜி புஷ் அடித்து துன்புறுத்தியதால் அவரை விட்டு விலகிய கிம், இன்று டாலஸ் கவ்பாய்ஸ் அணியை சேர்ந்த மைல்ஸ் ஆஸ்டினை காதலிக்க ஆரம்பித்துவிட்டார்.ரெஜ்ஜி கிம்முக்கு தூது அனுப்பியும் கிம் கண்டுக்கலை.குட் ஜாப் கிம்.
---------------------------------------------------------------

அமெரிக்க அணி அல்ஜீரியாவுடன் அதிரடியாக கடைசி நிமிடத்தில் கோல் போட்டதால் இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்துவிட்டது.இரண்டாவது சுற்றில் வலுகுறைந்த கானாவுடன் மோதல் என்பதால் அரை இறுதிவரை தட்டுதடுமாறி அமெரிக்கா போக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.அரை இறுதிவரை போனால் அப்புறம் கோப்பையை ஜெயித்தாலும் ஜெயிக்கலாம்...:-))

எப்படியோ அமெரிக்கா ஜெயிக்கலைன்னாலும் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த பிரேசிலோ, அர்ஜென்டினாவோ ஜெயிக்கணும்....ஜெயிச்சுடும்.:-)

---------------------------------------------

இன்றைக்கு வீட்டில் மாங்கோ ஐஸ் டீ செய்தேன்.புட் நெட்வர்க்கை பார்த்து நானே செய்தது:-)

ரெசிபி தருகிறேன்

ஆறு கோப்பை (1 கப் = 240 மில்லி) தண்ணி,6 உயர்தர பிளாக் டீ பேக்ஸ்,2 கோப்பை மாங்கோ நெக்டர் (கிடைக்கலைன்னா ப்ரூட்டி அல்லது மாங்கோ சாறு போட்டுக்கலாம்)

தண்ணியை கொதிக்க வெச்சு இறக்குங்க.உள்லே ஆறு டீ பாக்ஸை போடுங்க.ஐந்து நிமத்தில் தன்ணி டீயா மாறி கருப்பு கலரானதும், சர்க்கரை மாங்கோ நெக்டாரை உள்ளே சேர்த்து கலக்குங்க.ஒரு கோப்பைக்கு ரெண்டு டிஸ்பூனுக்கு மேலே டீ போட்டால் அது லிக்விட் சாக்லட்டுக்கு சமம் என்பது என் நம்பிக்கை.ஆனால் நீங்க உங்களுக்கு பிடிச்ச அளவு சர்க்கரை சேர்த்துக்கலாம்.

அப்புறம் அதை ஒரு ஜக்கில் ஊற்றி ப்ரிட்ஜில் வையுங்க.குளிரிந்ததும் எடுத்து குடிச்சா வெயில் சூட்டுக்கு நல்லா இருக்கும்.

நண்பன்

unread,
Jun 25, 2010, 1:26:24 AM6/25/10
to mint...@googlegroups.com
மூன்றும்  அருமை

2010/6/25 செல்வன் <hol...@gmail.com>



--
குற்றம் சொல்லின்
சுற்றம் இல்லை

நன்றியுடன் நாசரு  

செல்வன்

unread,
Jun 28, 2010, 3:02:02 AM6/28/10
to tamizh...@googlegroups.com, mintamil, பண்புடன்

இன்று கனடாவில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடந்தது. ஜி20 நாடுகள் என்றால் உலகின் 20 பணகார நாடுகள் என அர்த்தம்.அதில் நம்ம சிங்கும் இருந்தார்.மாநாட்டில் ஒபாமா "அரசு செலவுகளை குறைக்க கூடாது, அரசு அதிகம் செலவு செய்யவேண்டும்.அப்போதுதான் உலக பொருளாதார மந்தம் குறையும்" என வலியுறுத்தினார்.

இன்னும் அதிகமா குடித்தால் தான் போதை தெளியும் என்பது போன்ற இந்த கருத்தை நிராகரித்த ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் 2013க்குள் பற்ராகுறையை பாதியாக குறைப்பது என ஜி20 மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.இதனால் கவலையுடன் காணப்பட்டார் ஒபாமா.

பற்றாகுறையை இரு விதங்களில் குறைக்கலாம்.ஆரோகியமான வழி என்பது அரசின் செலவுகளை குறைப்பது.முட்டாள்தனமான வழி என்பது வரிகளை அதிகரிப்பது.அமெரிக்கா,ஐரோப்பாவில் வரிகளை அதிகரிக்க மக்கள் விடமாட்டார்கள்.அரசு தன் செலவுகளில் தான் கை வைக்கணும்.இந்தியாவில் என்ன நடக்கும் என நமக்கு தெரிந்ததுதானே?..ஆக இந்த மாநாட்டின் விளைவால் இந்தியாவில் வரிகள் ஏறலாம் என்பது வருத்தத்துகுக்குரிய செய்தி.

--------------------------------------

ஐபோன் 4 ஜி வருது, வருது என பலமாதமாக சொல்லிகொண்டிருந்தார்கள்.1 மாதத்துக்கு முந்தி ஒரு பிளாக்பெர்ரி வாங்கினேன்.அப்புறம் ஐபோன் 4 ஆசையில் திருப்பி கொடுத்துவிட்டு காத்திருக்கிறேன்.இன்னும் கடைகளில் வரவில்லை...முந்தி புக் செய்தவர்களுக்கு தான் கொடுக்கிறார்கள்.

மற்ர நாடுகளில் எப்படியோ..இங்கே ஏடிஅன்டி கம்பனியில் செல்போன் இணைப்பு இருந்தால் தான் ஐபோன் கிடைக்கும்.எனக்கு எடிஅன்டி பிடிக்காது.ஆனால் ஐபோனுக்காக வாங்கி தொலைக்கவேண்டிய நிலை

-----------------------------------------

டாய்ஸ்டோரி 3 என்ற படம் ரிலீசாகி சக்கைபோடு போடுகிறது.குழந்தைகள் படம் எனினும் பெரியவர்கள் தாராளமாக போய் பார்க்கலாம்.மிக அற்புதமான கதை,காட்சியமைப்பு..என கலக்கும் படம்.ரிலீசான முதல்நாள் திரையரங்கில் பார்த்தேன்.

poster-toystory3.jpg


--
செல்வன்

www.holyox.blogspot.com

அதிகாரத்தை எடுத்து கொள்ள தான் முடியும்.கேட்டு வாங்கி பெற இயலாது.அதிகாரத்தை கேட்டு பெறாமல் தானாக கையில் எடுப்பதன் பெயரே விடுதலை ஆகும்- க்ளோரியா ஸ்டெய்னிம்

செல்வன்

unread,
Jun 29, 2010, 2:07:58 AM6/29/10
to tamizh...@googlegroups.com, mintamil, பண்புடன்
உன்னால நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய்

பெட் எக்ஸ், யுபிஎஸ் இரண்டும் அமெரிக்காவின் பார்சல் சர்வீஸ்கள். யுபிஎஸ் முழுக்க யூனியன் மயமான கம்பனி.பெடெக்ஸில் தொழிற்சங்கமே கிடையாது.ஆமை புகுந்த வீடும், தொழிற்சங்கம் புகுந்த கம்பனியும் உருப்பட்டதா தான் வரலாறே கிடையாதே?அப்புறம் யூனியன் புகுந்த யுபிஎஸ் மட்டும் என்ன விதிவிலக்கா?

கொஞ்ச நாள் அடக்கி வாசித்த யூனியன் தன் வழக்கமான வேலையை காட்டியது.அதான் ஸ்ட்ரைக்.பலநாள் வேலைநிறுத்த நீடித்ததால் யுபிஎஸ்ஸை நம்பி இருந்த நிறுவனங்கள் அனைத்தும் பெடெக்ஸுக்கு தம் வணிகத்தை திருப்பின.அப்புறம் அடித்து பிடித்து ஸ்ட்ரைக்கை முடித்த யுபிஎஸ் ஒவ்வொரு வாடிக்கையாளரா போய் "ஐயா,சாமி ஆர்டர் போடுங்க.இனிமேல் ஒழுங்கா பார்சலை டெலிவரி செய்யறோம்" என கெஞ்சியது.ஆனால் வாடிக்கையாளர்கள் பலரும் "உன் கம்பனி யூனியன் கம்பனி.எப்ப வேணா ஸ்ட்ரைக் நடக்கும்.பெட்.எக்ஸில் யூனியன் இல்லை.அதனால் அதில் ஸ்ட்ரைக் பயமே இல்லை.அதனால் எங்க ஆர்டர்கள் இனி பெடெக்ஸுக்கே" என சொல்லிவிட்டன.

உன்னால நான் கெட்டேன்,என்னால் நீ கெட்டாய் என உட்கார்ந்து அழுத யுபிஎஸ்ஸும், யூனியன்களும் ஒரு முடிவுக்கு வந்தன.பெடெக்ஸில் யூனியன்களை அனுமதிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரவேண்டும் என அரசை நெருக்க ஆரம்பித்தன."எங்கள் கம்பனியில் யூனியன் இருக்கு.அதனால் யாரும் எங்களை நம்ப மாட்டேன் என்கிரார்கள்.பெடெக்ஸிலும் யூனியனை ஆரம்பித்து அவர்களையும் யாரும் நம்பாமல் செய்தால் தான் எங்களால் அவர்களுடன் போட்டி போடமுடியும்" என்ற வித்தியாசமான கோரிக்கையுடன் களம் இறங்கிய யுபிஎஸ்ஸை பார்த்து அமெரிக்காவே சிரித்தது.

யுபிஎஸ் யூனியன்களும் களமிறங்கி "எங்களால் தான் எங்கள் கம்பனிக்கு ஆர்டர்கள் கிடைப்பது இல்லை.பெடெக்ஸையும் எங்களை மாதிரி ஆக்குங்க.இல்லைன்னா எங்க கம்பனி இழுத்து மூடப்பட்டு, யூனியனும் காலி ஆயிடும்,எல்லோருக்கும் வேலையும் காலி ஆயிடும்" என நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொண்டனர்.இப்படி யூனியனால் ஒரு கம்பனிக்கு என்னென்ன இழப்பு ஏற்படும் என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் போலவே இந்த போராட்டம் இருந்தது.

பெடெக்ஸும், யுபிஎஸெஸும் இப்போது அமெரிக்க காங்கிரஸில் இந்த போராட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றன.இது குறித்து பேட்டியளித்த பெட்கெஸ் சேர்மன் "யுபிஎஸ்ஸிடம் யூனியன் இருப்பதால் அது நம்பகதன்மையை இழந்தது அவர்களுக்கு பிரச்சனை என்றால், நான் உங்களிடம் ஒரு உண்மையை சொல்லுகிறேன்..இதை கேட்டு என் கண்ணில் முதலை கணீர் வழிந்தோடுகிறது" என சொல்லிவிட்டு போனார்.

யூனியன் கோமாளிகள் இன்னும் என்னென்ன காமடிகளை அரங்கேற்றுவார்கள் என்பதை மக்கள் கான ஆவலுடன் இருக்கிறார்கள்.

Raja sankar

unread,
Jun 29, 2010, 4:02:46 AM6/29/10
to mint...@googlegroups.com
இதவிட பெட் எக்ஸ் வச்ச ஆப்பு தான் இருக்கறதிலேயே சூப்பர்

எங்களுக்கு யூனியன் வந்தா நாங்க அமெரிக்க போயிங் விமானங்களை வாங்க மாட்டோம் ன்னு சொல்லியிருக்காங்க. அப்படி வாங்காம விட்டா நிறைய வேலை யோயிடும். இப்போ சட்டம் நிறைவேறினா அதை விட பிரச்சினை

இந்த மாதிரி ஒரு ஆளும் இந்தியாவுக்கு வரமாட்டேன்கிறாங்களே

ராஜசங்கர்


2010/6/29 செல்வன் <hol...@gmail.com>
--

செல்வன்

unread,
Jun 29, 2010, 3:07:55 PM6/29/10
to tamizh...@googlegroups.com, பண்புடன், mintamil
அமெரிக்காவில் முன்பு பாலியல் கல்வி என்பது செக்சை தவிர் என்பதாக மட்டுமே இருந்தது.செக்சை தவிர்க்க வலியுறுத்திய vintage விளம்பரங்கள்..



செக்ஸ் வேண்டாம்.அதுக்கு பதில் ஹைக்கிங் செய்யுங்கள் என வந்த விளம்பரம்

slide_8052_107519_large.jpg?1277838155529

திருமணத்துக்கு முன் உறவுகொண்டால் அது ஹிட்லருடன் படுப்பதுக்கு சமம்.கல்யாணம் வரை சுத்தமாக இரு என சொல்லும் விளம்பரம்

slide_8052_107513_large.jpg?1277838275774

செக்ஸ் எளிதாக கிடைத்தால் ஆண்கள் பெண்களை மதிக்க மாட்டார்கள்.அதனால் கல்யாணம் ஆகும் வரை ஒழுக்கமா இரு

slide_8052_107533_large.jpg?1277838380425

slide_8052_107479_large.jpg?1277838445047

slide_8052_107671_large.jpg?1277838476996

--
செல்வன்

www.holyox.blogspot.com

Hari Krishnan

unread,
Jun 29, 2010, 10:21:50 PM6/29/10
to mint...@googlegroups.com


2010/6/30 செல்வன் <hol...@gmail.com>
அமெரிக்காவில் முன்பு பாலியல் கல்வி என்பது செக்சை தவிர் என்பதாக மட்டுமே இருந்தது.செக்சை தவிர்க்க வலியுறுத்திய vintage விளம்பரங்கள்..



செக்ஸ் வேண்டாம்.அதுக்கு பதில் ஹைக்கிங் செய்யுங்கள் என வந்த விளம்பரம்


திருமணத்துக்கு முன் உறவுகொண்டால் அது ஹிட்லருடன் படுப்பதுக்கு சமம்.கல்யாணம் வரை சுத்தமாக இரு என சொல்லும் விளம்பரம்

செக்ஸ் எளிதாக கிடைத்தால் ஆண்கள் பெண்களை மதிக்க மாட்டார்கள்.அதனால் கல்யாணம் ஆகும் வரை ஒழுக்கமா இரு


இதையும் போஸ்டரா அடிக்கச் சொல்லுங்க:

சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும்? மாதர்
நிறைகாக்கும் காப்பே தலை.  

பரவால்ல.  மறுபடியும் MCPகள் தலைதூக்கத் தொடங்கிவிட்டன போலிருக்கிறது.  வாழ்க ஆணாதிக்கப் பன்றிகள்! 
--
அன்புடன்,
ஹரிகி.

செல்வன்

unread,
Jun 30, 2010, 12:52:00 AM6/30/10
to mint...@googlegroups.com
இதை ஆணாதிக்கம்னு நான் கருதலை ஐயா...இது பொதுமக்களில் ஒரு பிரிவினரின் நம்பிக்கை.இதை எதாவது மதம், மடம், சர்ச் சார்பில் பிரச்சாரம் செய்திருந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையுமில்லை.அரசு சார்பில் இப்படி காசு விரயமானது தான் வேடிக்கை

2010/6/29 Hari Krishnan <hari.har...@gmail.com>

இதையும் போஸ்டரா அடிக்கச் சொல்லுங்க:

சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும்? மாதர்
நிறைகாக்கும் காப்பே தலை.  

பரவால்ல.  மறுபடியும் MCPகள் தலைதூக்கத் தொடங்கிவிட்டன போலிருக்கிறது.  வாழ்க ஆணாதிக்கப் பன்றிகள்! 



--

செல்வன்

unread,
Jul 1, 2010, 3:01:13 AM7/1/10
to tamizh...@googlegroups.com, mintamil, பண்புடன்
சாதனை நாயகன் கிறிஸ் கிறிஸ்டி

chris-christie-election-night-a8f650a4ba4106c2.jpg

நியூ ஜெர்சி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி வரிவிதிப்புக்கு எதிராகவும், அரசின் தண்டசெலவுகளுக்கு எதிராகவும் போராடி வருவது தெரிந்ததே.சமீபத்தில் நியூஜெர்சி மாநிலம் போட்ட பட்ஜெட்டில் 37% பற்றாகுறையை ஒழித்து, புதிதாக எந்த வரியும் இல்லாமல், செலவுகளை மட்டும் குறைத்து சாதனை படைத்துள்லார் கிறிஸ் கிறிஸ்டி.

செலவுகளை குறைக்க அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதை தூக்கி தூரபோட்டார் கிறிஸ்டி."செலவுகளை குறைக்காமல் கோடீஸ்வரர் வரி என ஒரு வரியை போட்டு பணகாரர்களிடம் இருந்து வரி வாங்கி, அதை செலவு செய்யலாம்" என அரசு ஊழியர் யூனியன் கொடுத்த ஐடியாவை நிராகரித்த கிறிஸ்டி "பணகாரர்கள் மேல் வரிபோட்டால் அவர்கள் தம் தொழில்நிறுவனங்களை தூக்கிகொண்டு வேறு மாநிலங்களுக்கு ஓடிவிடுவார்கள்.அதுக்கு பதில் உங்க சலுகைகளை குறைத்தாலே போதும்" என சொல்லி அவர்களுக்கு வேட்டு வைத்தார்.

கிறிஸ்டியை பேட்டி கண்ட இடதுசாரி மனபான்மை கொண்ட ஏபிசி நிருபர் "சோடா (பெப்சி,கோக்) மேல் வரிபோட்டால் அரசுக்கு அதிக வருமானம் வருமே?" என்றார்

"என் அரசு மக்கள் மேல் எந்த வரியையும் புதிதாக விதிக்காது" என்றார் கிறிஸ்டி

"வரிகள் மூலம் சோடா நுகர்வு குறைந்து மக்களின் எடை குறைந்தால் அவர்களுக்கு தானே நல்லது?" என்றார் நிருபர்.

"எடையை தானாக தான் அவர்கள் குறைக்கவேண்டும்.வரிகள் மூலம் அரசு குறைக்காது" என்றார் கிறிஸ்டி.

"அரசுக்கு எத்தனை வருமானம் அதிகமாக வரும் என சிந்தித்து பாருங்கள்" என ஆசை காட்டினார் நிருபர்.

"அரசுக்கு வருமானம் வந்தால் அந்த காசை அரசு மக்களிடமிருந்து பிடுங்குகிறது என தான் அர்த்தம்" என்றார் கிறிஸ்டி.

வாயடைத்து நின்றார் நிருபர்.

கிறிஸ் கிறிஸ்டி சுருக்கமாக விளக்கிய கன்செப்டின் பெயர் முதலாளித்துவம்....மார்க்சியத்தை விளக்க தலையணை சைசில் நூல் எழுதணும்.முதலாளித்துவத்தை சிம்பிளா ஒரே வரியில் விளக்கலாம்...

சிறிய அரசு, குறைந்த அளவு வரி,பற்றாகுறை இல்லாத அரசு பட்ஜெட்,தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கம்..இதுதான் முதலாளித்துவம்.


--
செல்வன்

www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Jul 4, 2010, 3:00:22 AM7/4/10
to tamizh...@googlegroups.com, mintamil, பண்புடன்
Awesome America: சுதந்திரத்தின் வயது 234

பிறக்கும்போதே சுதந்திர குடியரசாக பிறந்தது அமெரிக்கா. 234 ஆண்டுகளாக குடியரசாகவும், சுதந்திரமாகவும் நீடித்திருக்கும் முதல் சமூகம் அமெரிக்காதான். மன்னர் ஆட்சியையும், பரம்பரை ஆட்சியையும் பிறப்பிலேயே நிராகரித்த ரிபப்ளிக்கன் தேசம் இது.இதை மன்னர்கள் ஆள்வதில்லை.மக்கள் தான் ஆள்கிறார்கள்.

statue_of_liberty_-newyork-_harbor.jpg

ஐவோ ஜீமாவின் சமர்க்களத்தில் கொடியேற்றும் அமெரிக்க வீரர்கள்.வலுவானவர்களின் தேசமே சுதந்திரமான தேசமாக இருக்கமுடியும் என்பதை உணர்த்தும் தேசம் அமெரிக்கா.

iwo-jima.jpg

"ஒன்று எனக்கு சுதந்திரத்தை கொடு அல்லது எனக்கு மரணத்தை கொடு"இதுதான் இந்த நாட்டின் தாரகமந்திரம்.இதனால் தான் இது அமெரிக்கா.Awesome America
Patrick%20Henry.jpg

--
செல்வன்

www.holyox.blogspot.com

"நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா? சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி" - பெரியார்

செல்வன்

unread,
Jul 5, 2010, 2:10:33 AM7/5/10
to panb...@googlegroups.com, mintamil, தமிழமுதம்
இன்று சுதந்திர தின வாரவிடுமுறை என்பதால் இரு தினங்களும் நண்பர்களுடன் ஊர் சுற்றினேன்.அமெரிக்காவில் பண்டிகைநாட்கள் வாரவிடுமுறையில் வந்தால் திங்களன்றும் லீவு விடுவார்கள்.அதன்படி ஜூலை 4 ஞாயிறு அன்று வந்ததால் நாளைக்கும் பள்ளி, கல்லூரிகள்,அலுவலகங்களுக்கு விடுமுறை

நேற்று விஸ்கான்ஸின் டெல்ஸ் என்ற நீர்விளையாட்டு அரங்குக்கு சென்றேன்.81 டிகிரி வெயிலில் நிச்சல் உடையில் ஒரு ஆயிரம்,இரண்டாயிரம் பேர் இருந்தார்கள்.உலகின் அனைத்து தேசத்து மக்களும் இருந்தார்கள்.இந்தியர்கள் கையில் அதிகமா காசு புழங்குது போல..நிறைய இந்தியர்கள் இருந்தார்கள்.

இந்திய பெண்கள் நீச்சல் உடையில் குளத்தில் இறங்குகிறார்களா, இல்லை கூச்சபட்டுகொண்டு நிற்கிறார்களா என நோட்டம் விட்டேன்.அதெல்லாம் ரொம்ப ஜாலியா இறங்குகிறார்கள்.டூ பிஸில் இறங்கிய இந்திய பெண்கள் நிறைய இருந்தார்கள்.இந்தியா முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை மனதில் ஆழமாக வந்து விட்டது.

வயதான இந்திய பெண்கள் சிலர் இருந்தார்கள்.அவர்கள் நீச்சல் உடை உடுத்த கூச்சபட்டுகொண்டு சுடிதார்,சேலை கட்டிகொண்டு சும்மா அலை ஓரம் காலை மட்டும் நனைத்தார்கள்.இதுக்கா $34 கொடுத்து டிக்கட் வாங்கினார்கள் என வருத்தமா இருந்தது.குளத்தில் இறங்கினேன்.குளத்தில் செயற்கை அலை ஆவேசமா அடிக்க வைக்கிறார்கள்.அலை நம்மை பல அடி தூரம் உருட்டி தள்ளும்.அரைமணிநேரம் குளத்தில் உருண்டு புரண்டேன்.

அங்கிருந்த ரெஸ்டராண்டில் பெருசா சைவர்களுக்கு எந்த ஆப்ஷனும் இல்லை என்பதால் காரில் இருந்த ரொட்டி,பழத்தை தீன்னலாம் என வெளியே வந்தேன்.வெளியே சேட்டு பெண்கள் நாலு பேர் உட்கார்ந்து அடுப்பை விரித்து பஜ்ஜியா போட்டு கொண்டிருந்தார்கள்.இந்தி தெரிந்திருந்தால் வெட்கத்தை விட்டு கேட்டு வாங்கி தின்றிருக்கலாம்.ஆனால் இந்தி தெரியாதே?அதனால் ரொட்டி,பழத்துடன் மதிய ஆகாரம் முடிந்தது.

இரவு 8 மணிக்கு டெல்ஸை விட்டு கிளம்பினேன்.வரும்போது வழியெங்கும் சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார்கள்.சற்று வேடிக்கை பார்க்கலாம் என பாலத்தின் அருகே காரை நிறுத்தினேன்.காவாலர் இருவர் நடந்து வந்தார்கள்.மனது திக்,திக் என அடித்துகொண்டது.என்னருகே வந்த ஒருவர் "காணாம போன பொண்ணு கிடைச்சிருச்சா என்றார்?"

எனக்கு பக் என்றது.எந்த பொண்ணு என்றேன்.

"நேற்று இந்தியர் ஒருவர் காவல் நிலையத்தில் தன் மகளை காணோம் என புகார் கொடுத்தார்.அவர் யார்ன்னு உங்களுக்கு தெர்ஞ்சிருக்குமில்லே?"

"எனக்கு இந்த ஊர் பேரு கூட தெரியாது.சும்மா வேடிக்கை பார்க்க இறங்கினேன்"

"அப்ப சரி" என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.எனக்கு கொஞ்ச நேரம் மனசே ஓடலை.அந்த முகம் தெரியாத இந்திய பெண்ணை நினைத்து வருத்தபட்டுகொண்டிருந்தேன்.

பட்டாசு வெடிச்சு முடிந்ததும் காரை எடுத்தேன்.எதிரே மீண்டும் அந்த இரு காவலர்களும் நடந்து வந்தார்கள்.ஜன்னல் அருகே வந்து "அந்த பொண்ணு கிடைச்சிருச்சாம்" என சொல்லிவிட்டு போனார்கள்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் காரை ஓட்டிகொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

தானாடாவிட்டாலும் சதையாடுமில்லையா?

செல்வன்

unread,
Jul 6, 2010, 1:25:52 AM7/6/10
to tamizh...@googlegroups.com, பண்புடன், mintamil
வீராங்கனையின் ஆனந்தகூத்து

11 வருடங்களுக்கு முன்பு அமெரிக்க மகளிர் அணி உலககோப்பை கால்பந்து கோப்பையை ஜெயித்தது. (ஆண்கள் அணி இன்னமும் ஜெயிக்கலை.இதிலிருந்து பெண்கள் முன்னேற்றம் எந்த அளவில் இருக்குன்னு தெரியுதுல்ல?:-)..இந்த போட்டியில் கோல் அடித்த அமெரிக்க வீராங்கனை ப்ராண்டி செஸ்டியன் ஜெயித்து முடித்ததும் டிஷர்ட்டை கழட்டி சுழற்றி ஆனந்த கூத்தாடினார். கருப்பு ஸ்போர்ட்ஸ் பிராவுடன் ஆனந்த கூத்தாடும் ப்ராண்டியின் புகைப்படம் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேட்டடில் வந்து அமெரிக்காவில் கொண்டாடப்படும் ஒரு புகைப்படமாக மாறியது.அதே சமயம் ஒரு பெண் வீராங்கனை எப்படி மைதானத்தில்  டிசர்ட்டை கழற்றிவிட்டு பிராவுடன் குதிக்கலாம் என பலரும் கோபபட்டார்கள்.

brandi.jpg
 
சர்ச்சை சூடுபிடித்ததும் பலரும் வந்து அந்த கருப்பு பிராவை பலகோடி ரூபாய்களுக்கு பிராண்டியிடம் விலைபேசினார்கள்.பிராண்டி அதை விற்கமறுத்துவிட்டார்."அது அந்த நிமிடத்து மகிழ்ச்சியில் செய்த காரியம்.அதை விலைவைத்து விற்று அசிங்கபடுத்த விரும்பலை" என சொல்லி விட்டார்.அப்போது அமெரிக்காவின் ஸ்போர்ட்ஸ் மியூசியம் அதை தேசிய விலையாட்டு நினைவுசின்னமாக கருதி கண்காட்சியில் வைக்க பிராண்டியிடம் கேட்டது.மனமகிழ்வுடன் அதை மியூசியத்துக்கு கொடுத்துவிட்டார் பிராண்டி.அதை "உலகை மாற்றிய நைக்கி ஸ்போர்ட்ஸ் பிரா" என்று தலைப்பிட்டு கண்காட்சியில் வைத்து பிராண்டிக்கு பெருமை சேர்த்தது ஸ்போர்ட்ஸ் மியூசியம்
 
 
chastain_brandi_bra_label-200.jpg
 
நம்ம கங்கூலி கூட நாட்வெஸ்ட் கோப்பையை ஜெயிச்சதும் சட்டையை கழட்டிகிட்டு ஆடினாரே?அந்த சர்ட் என்னாச்சு?
 
 
sourav ganguly with his shirt.jpg--
செல்வன்

www.holyox.blogspot.com

There are very few jobs that actually require a penis or vagina.  All other jobs should be open to everybody.  ~Florynce Kennedy
brandi.jpg
sourav ganguly with his shirt.jpg
chastain_brandi_bra_label-200.jpg

செல்வன்

unread,
Jul 11, 2010, 1:23:49 AM7/11/10
to panb...@googlegroups.com, mintamil, தமிழமுதம்
ஜெயா அம்மையார் வளர்ப்புமகன் திருமணத்தை ஆடம்பரமா நடத்தியதையும்,கேள்வி கேட்டவர்களை "முதல்வர் வீட்டு திருமணம் எப்படி நடக்குமோ அப்படி நடந்தது" என பதில் சொன்னதும் தெரிந்ததே.இதை கேட்டவர்கள் முதல்வர் பதவி ஏதோ சொத்து சேர்க்கும் பிசினஸ் என தான் நினைத்திருப்பார்கள்...

சரி முதல்வர் வீட்டு கல்யாணமே இப்படி நடந்தது என்றால் அமெரிக்க ஜனாதிபதி வீட்டு கல்யாணம் எப்படி நடக்கணும்?இதோ இப்படிதான் நடந்தது...

ஜார்ஜ் புஷ் மகள் ஜென்னா புஷ் திருமணம்.புஷ் அதிபர் பதவியில் இருந்தப்ப நடந்தது.கல்யாணத்தை வெள்ளைமாளிகையில் நடத்தியிருக்க முடியும் என்றபோதும் ஜென்னாவும், புஷ்ஷும் அதை விரும்பவில்லை.ஜென்னா பிறந்த புஷ்ஷின் வீட்டிலேயே திருமணத்தை நடத்தினர்.இதனால் தான் தம்பதியினர் முகத்தில் அத்தனை அன்பும்,காதலும் தெரிகிறதா?


jenna-bush-wedding-pictures-06.jpg

jenna-bush-wedding-pictures-04.jpg

jenna-bush-wedding-pictures-05.jpg

--
செல்வன்

www.holyox.blogspot.com

"A democracy will continue to exist up until the time that voters discover that they can vote themselves generous gifts from the public treasury. From that moment on, the majority always votes for the candidates who promise the most benefits from the public treasury, with the result that every democracy will finally collapse due to loose fiscal policy" - Alexis de Tocqueville

Innamburan Innamburan

unread,
Jul 11, 2010, 1:58:05 AM7/11/10
to mint...@googlegroups.com
1. சரியான பாயிண்ட்.
2. மேற்கோள் உத்தமமானது. முற்றிலு, தமிழ்நாடு பற்றிய ஆரூடம்.
இன்னம்பூரான்

2010/7/11 செல்வன் <hol...@gmail.com>
--

செல்வன்

unread,
Jul 11, 2010, 2:04:02 AM7/11/10
to mint...@googlegroups.com
நன்றி ஐயா.

மக்களுக்கு சேவை செய்ய தான் அரசியல் என்பதையும், மக்கள் மூலமே அரசுக்கு அதிகாரம் பிறக்கிறது என்பதையும் நம் ஆட்சியாளர்கள் மறந்து ரொம்பநாள் ஆகிவிட்டது.

Innamburan Innamburan

unread,
Jul 11, 2010, 4:08:44 AM7/11/10
to mint...@googlegroups.com
ஆனைக்கும் அடி சறுக்கும். காத்திருக்கிறேன்.
இன்ன்ம்பூரான்

2010/7/11 செல்வன் <hol...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Jul 11, 2010, 4:32:43 AM7/11/10
to mint...@googlegroups.com
 மக்களுக்காக  மக்கள் வாக்களித்து  தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகள்
ஏதோ தாமே   வானிலிருந்து  புஷ்பக விமானத்தின் மூலமாக வந்து தரையிறங்கினாற்போலே
மக்களை வாட்டி வதைக்கும்  அநியாயம்  இந்தியாவைத்தவிர  வேறு எந்த நாட்டிலும் நடைபெறாது
 
மக்களும் தாங்களெல்லாம்  அடிமைகளாக வாழப் பிறந்தாற்ப் போன்ற  மனோ நிலையுடன்
 
மந்திரிகளிக்கு ஜே  போட்டு காலத்தை  ஒட்டிக்கொண்டிருக்கும் அவலம் இந்தியாவைத் தவிர  வேறு எந்த நாட்டிலும் நடக்காது
 
மந்திரிகள்  தங்கள் வாரிசுதாரர்களைத்தவிர  மற்ர மக்கள் யாருக்குமே  நாட்டை ஆளத் தகுதி கிடையாது  என்று நினைத்துக்கொண்டு  மக்களின் வரிப்பணத்தை  நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றாமல் தங்களின் குடும்ப சொத்தாக  மாற்றிக்கொண்டு வரும் அவலம் வேறு எந்த நாட்டிலும் நடக்காது
 
 
தாம் கொடுக்கும் வரிப்பணத்திலேதான் அவர்கள் கொழுக்கிறார்கள்  என்னும் அடைப்படையே  தெரியாத மக்கள்,  தம் அடிப்படைத் தேவைகளைக்கூட  செய்துதராத  அரசாங்கத்தை  எதிர்த்து கேள்வி கேட்கவும்  தம்க்கு உரிமை இருக்கிறது  என்னும் உண்மை உணராத  மக்கள் இந்தியாவைத்தவிர  வேறு எந்த நாட்டிலும் கிடையாது
 
தாம் வாங்கும் ஊதியத்தில் ஒரு முறை  வரி கட்டிவிட்டு
மீண்டும் தாம் வாங்கும் பொருட்கள் அனைத்துக்கும் வரி கட்டி,
 
தாம் வாழும் வீட்டுக்கும் , தாம நடக்கும் சாலைக்கும் , தாம் உபயோகிக்கும்   தண்ணீர் போன்ற  அத்யாவசியத் தேவைகளுக்கும்   மீண்டும் மீண்டும்  வரி கட்டியும்
 
மின்சாரம், தண்ணீர், உணவுப் பொருட்கள்  கிடைக்காமல் அவதிப்பட்டும்
 
அடிப்படைத்தேவைகளை கேட்டு வாங்கக் கூட தைரியமில்லாமல்  இருக்கும்  மக்கள் இந்தியாவைத்தவிர  வேறு எங்கும் இருக்க மாட்டார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 


 
11-7-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

செல்வன்

unread,
Jul 12, 2010, 3:26:52 AM7/12/10
to mint...@googlegroups.com


2010/7/11 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

மக்களுக்காக  மக்கள் வாக்களித்து  தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகள்
ஏதோ தாமே   வானிலிருந்து  புஷ்பக விமானத்தின் மூலமாக வந்து தரையிறங்கினாற்போலே
மக்களை வாட்டி வதைக்கும்  அநியாயம்  இந்தியாவைத்தவிர  வேறு எந்த நாட்டிலும் நடைபெறாது
 
மக்களும் தாங்களெல்லாம்  அடிமைகளாக வாழப் பிறந்தாற்ப் போன்ற  மனோ நிலையுடன்
 
மந்திரிகளிக்கு ஜே  போட்டு காலத்தை  ஒட்டிக்கொண்டிருக்கும் அவலம் இந்தியாவைத் தவிர  வேறு எந்த நாட்டிலும் நடக்காது

உண்மைதான் ஐயா...மாபெரும் ஞானிகளும்,தலைவர்களும் பிறந்த நாடு.இல்லத்தரசிகள் மாபெரும் முனிவர்களுக்கு வேதம் சொல்லிதந்த நாடு...அகிம்சையையும்,சத்தியாகிரகத்தையும் உலகுக்கு கற்பித்த நாடு..இன்று இந்த நிலையில் உள்ளது. ஏமாளி மக்களை, கோமாளி மன்னர்கள் ஆள்கிறார்கள். அப்துல் கலாம், டிராபிக் ராமசாமி மாதிரி நல்லவர்கள் செவிடன் காதில் சங்கை தொடர்ந்து ஊதியவண்ணம் உள்ளனர். டமார செவிடு ஆகிவிட்ட மக்கள் அதை எங்கே கேட்கும் நிலையில் உள்ளனர்?

ஜனநாயகம் பரம்பரை ஆட்சியாகவும், காசை கொடுத்து ஓட்டை வாங்கும் பிசினசாகவும் ஆகிவிட்டது.அரசியல்,கல்வி இரண்டும் இன்று வளம் கொழிக்கும் துறைகள். மார்ச்சுவரியில் இருக்கும் பிணத்தை எடுக்க லஞ்சம் கொடுக்கணும் ,அல்லது சிபாரிசு வேண்டும் என்ற நிலை.டில்லியில் முகமது பின் துக்ளக்கின் ஆவி கடந்த 700 வருடமாக ஆட்சியாளர்களை  பிடித்து ஆட்டி இந்தியாவை ஆண்டு வருகிறது போலும்.

செல்வன்

unread,
Jul 17, 2010, 2:22:44 PM7/17/10
to panb...@googlegroups.com, mintamil, தமிழமுதம்

பின்லேடன்: அப்பா இசுலாமியவாதி! மகன் அமெரிக்கவாதி!!

கட்டுரைக்கு நன்றி வினவு.
 
தமிழ்மணம் பரிந்துரை : 13/14
 
Pathivu Toolbar ©2010thamizmanam.com

ஒசாமா பின்லேடனது மகனின் பெயர் ஓமர் பின்லேடன். ஒசாமாவின் குடும்பம் சவுதியில் உள்ள பணக்காரக் குடும்பங்களில் ஒன்று என்பதை அறிந்திருப்பீர்கள். 29 வயதான ஓமர் சமீபத்தில்தான் தன்னைவிட 25 வயது அதிகமுள்ள ஆங்கிலேய பெண்ணான சாய்னாவை விவாகரத்து செய்தார்.

தற்போது ஹாலிவுட்டன் பிரபல நடிகையான 35 வயதுள்ள டிரி பாரிமோரோடு டேட்டிங் செல்வது தனது கனவு என்று ஓமர் அறிவித்துள்ளார். இந்த நடிகைதான் ஹாலிவுட்டில் மிகவும் அழகானவர் என்றும் வழிந்துள்ளார்.
அமெரிக்க பண்பாட்டின் மீது தனக்குள்ள காதலை விவரித்துள்ள ஜூனியர் பின்லேடனுக்கு, ஜிம்  கேரியின் படங்கள், அமெரிக்கன் கால்பந்து, ராக் இசை, மடோனா என்றால் மிகவும் விருப்பமாம். தோஹாவில் தங்கியிருக்கும் ஓமருக்கு தனது தந்தை உயிருடன் இருப்பதாகவும், ஆனால் எங்கிருக்கிறார் என்பது தெரியாது என்றும் கூறுகிறார்.

அப்பனுக்கு பிள்ளை தப்பாது என்பதற்கு முரணாக இந்த பிள்ளை தப்பி பிறந்திருக்குமோ என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அப்படி இல்லை. ஓமரின் அமெரிக்க மோகம் என்பது சமீபத்தில் வந்ததாக இருக்காது. அதற்காகன வரலாற்றுக் காரணமும் அதை மறுக்கிறது.

இசுலாமிய சர்வதேசியம் பேசும் பின்லேடன் முழுக்க முழுக்க அமெரிக்கா தயாரிப்பாகும். ஆப்கானை ஆக்கிரமித்த ரசியாவை விரட்டுவதற்காக அமெரிக்க சி.ஐ.ஏ திட்டமிட்டு தயாரித்த பொருள்தான் பின்லேடன். 80, 90 களில் தீவிர அமெரிக்க ஆதரவாளராக பின்லேடன் இருந்த போது அவரது குடும்பத்தினர் இயல்பாகவே அமெரிக்க கலாச்சாரத்தின் இரசிகர்களாகத்தானே இருக்க முடியும்?

அரபு நாடுகளின் எண்ணெய் தொழிலை அமெரிக்கா கட்டுபடுத்துவதற்கேற்ப, ஷேக்குகளின் பணம் அமெரிக்காவில்தான் முதலீடாக இருக்கிறது. மேட்டுக்குடி ஷேக்ககுகள் ஏழை இசுலாமியர்களை இசுலாத்தின் படி வாழவேண்டும் என்று பிரச்சாரம் செய்து நிதி உதவி வழங்கிவிட்டு தங்கள் வாழ்க்கையில் தீவிர அமெரிக்க நுகர்வு வெறியர்களாகத்தான் உள்ளனர். அதில் எல்லா பொறுக்கித்தனங்களும் உண்டு.

பின்லேடன்  வகையறாக்கள் இப்போது அமெரிக்காவை எதிர்ப்பது என்பது தற்செயலானதுதான். அடிப்படையில் ஜிகாதிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் நண்பர்கள்தான். தற்போதைய முரண்பாடு என்பது நீடித்ததாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நாளையே இவர்கள் சேரமாட்டார்கள் என்று யாரும் உத்திரவாதமளிக்க முடியாது.
பின்லேடன் குடும்பத்தில் அவர் மட்டும் போராளியாக வாழ்க்கையைக் கழித்த போதும், குடும்பத்தினர் வாழ்வை ஜாலியாகத்தான் கழிக்கின்றனர். எனவே தந்தை மதவாதியாகவும், மகன் அமெரிக்க அடிமையாகவும் இருப்பதில் முரண்பாடு இல்லை. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய சூட்சுமம் இசுலாமிய மதவாதிகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் பகைவர்கள் இல்லை என்பதே. கூடவே ஏழை நாடுகளின் ஏழை இசுலாமிய மக்களை தீவிர மதவாதிகளாக மாற்றும் இந்தக் கூட்டம்தான் தங்கள் வாழ்க்கையில் இசுலாத்திற்கு எதிரான எல்லா விசயங்களையும் அனுபவிக்கிறது.

பாக்கிஸ்தான் தீவிர இசுலாமியக் குடியரசாக இசுலாமியர்கள் மத்தியில் அறியப்படுகிறது. ஆனால் உலக அளவில் செக்ஸ், போர்னா விவகாங்களை இணையத்தில் அதிகம் தேடும் நாடு அதுதான் என்று ஒரு ஆய்வு கூகுளின் தேடுதல் விசயங்களை வைத்து கூறுகிறது. இசுலாமிய உட்பிரிவுகளுக்குள்ளேயே குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லும் நாட்டில், பெண்களை புர்கா முதல் பல்வேறு அடிமைத்தனங்களில் ஆழ்த்தி இன்பம் காணும் நாட்டில் ஆண்கள் மட்டும் இணையம் மூலம் லவுகீக விசயங்களை துய்க்கின்றனர். ஆக தீவிரமதவாதம், ஒழுக்கம் என்பது அப்பட்டமான பொய் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மதவாதக்கூட்டத்தின் பிடியிலிருந்து ஏழை இசுலாமியர்கள் வெளியேற வேண்டும். அப்போதுதான் வர்க்கமென்ற முறையில் தம்மை ஒடுக்கும் மேட்டுக்குடி பணக்கார ஷேக்குகளையும், அவர்களுக்கு காவல் அரணாக இருக்கும் அமெரிக்காவையும் எதிர்த்து விடுதலை பெற முடியும்.

ஆக ஓமர் பின்லேடன் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த மைனர் பிள்ளைதான்!  தப்பிப் பிறந்த பிள்ளை அல்ல !!




ஓமர் பின்லேடனுக்கு சீக்கிரம் அமெரிக்க விசா குடுங்கப்பு....எதிர்ப்பவர்களையும் ஈர்க்கும் தேசம் தான் அமெரிக்கா..அதனால் தான் இது ஆவ்சம் அமெரிக்கா.




--
செல்வன்

www.holyox.blogspot.com

"The United States did not invent slavery. It invented freedom.Someone name me another country on earth that fought a civil war to make men equal"- Rush Limbaugh

செல்வன்

unread,
Jul 19, 2010, 2:53:53 AM7/19/10
to tamizh...@googlegroups.com, பண்புடன், mintamil
BACK to the FUTURE

பேக் டு த பியூச்சர் என 1985ல் வந்த திரைப்படம்...காலபயணத்தை பற்றியது.டைம் டிராவலை மிகவும் பிரபலபடுத்திய அந்த படம் கல்ட் ஸ்டேட்டஸை அடைந்தது...அதன் பாகம் 1, பாகம் 3 இரண்டையும் நான் பார்த்தேன்.இப்ப அதுக்கு என்னன்னு கேக்கறீங்களா?

அந்த படத்துல வருவது போல காலபிரயாணம் செய்ய கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.அதுக்கு என்ன காரணம் என ஜாக்கபடில்லோ விவரிக்கிறார்

1. காலபிரயாணம் செய்தாலும் உங்களுக்கு வயது ஏறிகொண்டே போகும்.அதாவது சுமார் 7 வருஷம் காலபிரயாணம் செய்து திரும்பிவந்தால் உங்க ஆயுசில் 70 வருஷம் கூடிடுமாம்..7 வருஷத்துக்காக 70 வருசத்தை யாராவது ஆயுளில் இழப்பார்களா?

அடுத்த பிரச்சனை உணவு.சுமார் நூறு வருடத்துக்கு முன்பு போனால் அன்று இருந்த எந்த உணவையும் உங்களால் உண்ணமுடியாது.காரணம் அன்று உணவில் சுகாதாரகேடும், மைக்ரோபுகளும் ஏராளம்.கடந்த நூறூ வருடமாக உணவையும்,நீரையும் நிறைய சுத்தம் செய்து நம் வயிற்றின் அசுத்த உணவை ஏற்கும் தன்மையை ஒழித்துவிட்டோமாம்.நூறு வருடத்துக்கு முன் இருந்த நீரில்  சிறுநீர்,மலத்தின் டிரேஸ் கூட நிறைய இருக்குமாம்...அம்மாதிரி உணவை உண்ணும் வலு தற்கால மனிதனின் வயிற்றுக்கு கிடையாதாம்.

அப்புறம் மொழி,சுமார் நூறு,இருநூறு வருடத்துக்கு முன்னால் பேசிய வார்த்தை,ஆக்சென்ட் எல்லாம் சுத்தமாக வேறாம்.ஒரு ஐநூறு வருஷத்துக்கு முந்தி தற்போதைய தமிழ்,ஆங்கிலத்தை வைத்துகொண்டு போய் இறங்கினால் நீங்கள் பேசுவது யாருக்கும் புரியாமல் அன்னியநாட்டு உளவாளி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொல்லபடுவது உறுதி..

ஆக காலபிரயாணம் செய்வதில் இத்தனை ரிஸ்க் இருப்பதால் காலபயணம் செய்யவேண்டாம் என எச்சரிக்கிறார் ஜேகபடில்லோ

வினோத்-VINOTH

unread,
Jul 19, 2010, 2:58:42 AM7/19/10
to mint...@googlegroups.com
அதாவது டைம்டிராவல் சாத்தியம் என்பதை அந்த விஞ்ஞானி ஒத்துக்கொள்கிறார்..
 

--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth


செல்வன்

unread,
Jul 19, 2010, 3:01:56 AM7/19/10
to mint...@googlegroups.com
சாத்தியமானால் என்ன விளைவு ஆகும் என விவரிக்கிறார்.

ஸ்டீபன் ஹாக்கிங் டைம் டிராவல் சாத்தியமில்லை என சொன்னார்.காரணம் டைம் டிராவல் சாத்தியம் என்றால் "வருங்காலத்தில் இருந்து யாரும் ஏன் இதுவரை நம்மை வந்து பார்க்கலை/" என கேட்கிறார்

2010/7/19 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வினோத்-VINOTH

unread,
Jul 19, 2010, 3:12:47 AM7/19/10
to mint...@googlegroups.com


2010/7/19 செல்வன் <hol...@gmail.com>

சாத்தியமானால் என்ன விளைவு ஆகும் என விவரிக்கிறார்.

ம். அவர் பெயர் பத்திரிகையில் வரவேண்டும் என நினைத்திருப்பாரோ.
 
ஸ்டீபன் ஹாக்கிங் டைம் டிராவல் சாத்தியமில்லை என சொன்னார்.காரணம் டைம் டிராவல் சாத்தியம் என்றால் "வருங்காலத்தில் இருந்து யாரும் ஏன் இதுவரை நம்மை வந்து பார்க்கலை/" என கேட்கிறார்

நல்ல கேள்வி

டைம்டிராவல் என்பதே நிகழ்காலத்தில் இருந்து  காலத்தை தாண்டி பயணிப்பதுதானே

காலப்பதிவுகளை சேமிக்கப்பட்டிருந்தால் படித்துக்கொள்ளலாமே தவிர காலத்திற்கே சென்று அதனுடன் கலந்து கொள்வது சாத்தியமற்றதாகவே தோன்றுதிறது. 

--

செல்வன்

unread,
Jul 19, 2010, 5:04:29 PM7/19/10
to tamizh...@googlegroups.com, பண்புடன், mintamil
க்ரெய்க்ஸ் லிஸ்ட் என்ற வலைதளத்தில் இலவசமாக விளம்பரம் செய்யலாம் என்றதும் செய்திதாளில் வந்த "வீடு வாடகைக்கு தேவை" "ஸ்ட்ராலர் தேவை" மாதிரி வரி விளம்பரம் எல்லாம் க்ரெய்க்ஸ் லிஸ்டுக்கு இடம் பெயர்ந்துவிட்டன.இலவச விளம்பரம் என்பதால் "கொஞ்ச நாளைக்கு முன் உன்னை யதேச்சையாக ரெஸ்டராண்டில் சந்தித்து பேசினப்ப நீ தந்த விசிட்டிங் கார்டை தொலைத்துவிட்டேன்.என்னை மறுபடி தொடர்பு கொள்" மாதிரி விளம்பரங்களும் வர ஆரம்பித்துவிட்டன.மிஸ்ட் கனெக்ஷன்ஸ் எனப்படும் அத்தகைய சில விளம்பரங்களில் பல காமடி கூத்துக்கள் அரங்கேறுவதுண்டு.அவற்றில் சில

slide_8741_115912_large.jpg?1279572953051


slide_8741_115916_large.jpg?1279573331754


slide_8741_115917_large.jpg?1279573389424



slide_8741_116030_large.jpg?1279573481655

devoo

unread,
Jul 20, 2010, 12:23:38 AM7/20/10
to மின்தமிழ்
ஆடம்பரமான வடிவமைப்புக்கு இடம் தராமல் க்ரெய்க்ஸ் லிஸ்ட் முதலில்
இருந்த மாதிரியே வளர்ச்சி குறையாமல் நீடிப்பதும் வியப்பளிக்கிறது

தேவ்

செல்வன்

unread,
Jul 26, 2010, 3:32:19 AM7/26/10
to panb...@googlegroups.com, mintamil, தமிழமுதம்
போனவாரம் ஜே.சி. பென்னிக்கு போனேன்.அங்கே தொங்கவிடபட்டிருந்த ஒரு புத்தம் புது ripped ஜீன்ஸ் என் கண்ணில் பட்டது.பட்டதும் அண்ணலும் நோக்கினேன்,ஜீன்ஸும் நோக்கியது.தூக்கி வந்துவிட்டேன்.ரிப்பிட் ஜீன்ஸ் என்றால் கிழித்து புல்லட் ஹோல் எல்லாம் போட்டு வைத்திருக்கும்.அதுதான் ஜீன்ஸில் பேஷன்.

புகைபடம் கீழே
photo(19).JPG

ஆனால் இந்த ஜீன்ஸ் வீட்டுக்கு வந்ததும் தங்கமணி இதை காசு கொடுத்து வாங்கினேன் என்றே முதலில் நம்பலை.ஏதோ குப்பை தொட்டியில் கிடந்து தூக்கி வந்தேன் என நினைத்துவிட்டார்.அப்புறம் இதன் விலை நாற்பது டாலர் என தெரிந்ததும் சாமியாடி தீர்த்துவிட்டார்.இதை அணிந்தால் பிச்சைகாரன் மாதிரியே இருக்கும் என்றும்
இதை திருப்பி தரவில்லையெனில் நடப்பதே வேறு என எச்சரிக்கை செய்தார்.திருப்பி தர மனமில்லாமல் ஆபிசில் ஒளித்து வைத்திருக்கிறேன்.இன்னும் மூணூவாரம் கழிந்தால் திருப்பிதரும் காலகெடு கழிந்துவிடும்..என் சதி திட்டம் நிறைவேறுமா?ஆண்டவா காப்பாத்து:-))



--
செல்வன்

www.holyox.blogspot.com

I love my freedom.  I love my America.  ~Jessi Lane Adams

photo(19).JPG

Innamburan Innamburan

unread,
Jul 26, 2010, 3:47:12 AM7/26/10
to mint...@googlegroups.com
ரகஸ்யமாக, அத அணிந்து, ஃபோட்டோ அனுப்பவும். துகள் கிளம்பும்.
இன்னம்பூரான்

2010/7/26 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Jul 26, 2010, 3:49:04 AM7/26/10
to mint...@googlegroups.com
ஆமாங்க ஐயா...ஜீன்ஸ் "காணாம போனாலும்" போட்டோ எடுத்து வெச்சுட்டு பார்த்து ரசிக்கலாம்னு தான் போட்டோ எடுத்தேன்:-)

2010/7/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ரகஸ்யமாக, அத அணிந்து, ஃபோட்டோ அனுப்பவும். துகள் கிளம்பும்.
இன்னம்பூரான்

S.Krishnamoorthy

unread,
Jul 26, 2010, 6:32:24 AM7/26/10
to mint...@googlegroups.com
அன்புள்ள செல்வன்,
நான் வாஷிங்டன் சுற்றுலா சென்ற போது, இந்த மாதிரியான ஓட்டைகள் நிறந்து, திரி திரியாகத் தொங்க்கிக் கொண்டிருந்த ஷார்ட் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு நிஷ்கவலையாக அலைந்து திரிந்துகொண்டிருந்த அமெரிக்கர் ஒருவரைப் பிச்சைக்காரர் என்று எண்ணி என்னுடன் வந்த நண்பரைக் கேட்டது நினைவு வருகிறது.  ஆடை பாதி ஆள் பாதி என்பது பொய்யுரை போலும்.
வழிப்போக்கன்

2010/7/26 செல்வன் <hol...@gmail.com>
ஆமாங்க ஐயா...ஜீன்ஸ் "காணாம போனாலும்" போட்டோ எடுத்து வெச்சுட்டு பார்த்து ரசிக்கலாம்னு தான் போட்டோ எடுத்தேன்:-)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S. Krishnamoorthy

நண்பன்

unread,
Jul 26, 2010, 7:08:48 AM7/26/10
to mint...@googlegroups.com
நிஷ்கவலையாக  அப்படி என்றால்  கவலை  இல்லாமலா

2010/7/26 S.Krishnamoorthy <sundara.kri...@gmail.com>

--
குற்றம் சொல்லின்
 சுற்றம் இல்லை

 நன்றியுடன் நாசரு 
It is loading more messages.
0 new messages