
2014-06-26 6:39 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
..இடமிருந்து வலமாக: இந்திரனின் சக்தியைக் குறிக்கும் இந்திராணி, இந்திரனின் ஆயுதமான இடியினைக் (வஜ்ராயுதம்) கரத்தில் ஏந்தி யானையின் (ஐராவதம்) மீது அமர்ந்துள்ளாள். கந்தன் அல்லது குமரன் என அழைக்கப் படும் தெய்வத்தின் துணைவியான குமாரி வேலினை ஏந்தி மயிலின் மீது அமர்ந்திருக்கிறாள். வராஹ அவதாரத்தில் வராஹத்தின் தலையினைக் கொண்டிருந்த விஷ்ணுவின் மனைவி வராஹி, கபாலத்திலான ஓட்டை ஏந்தி எருமையை வாகனமாகக் கொண்டிருக்கிறாள். ஆண் துணையற்ற சாமுண்டி, மண்டை ஓட்டையும், சூலத்தையிம் ஏந்தி பிணத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.
சிலையில் காணப்படாத மற்ற மூன்று இறைவிகள்: பிரம்மாவின் துணைவி பிராம்மணி, சிவனின் மனைவியான மகேஸ்வரி என அழைக்கப்படும் இறைவி, விஷ்ணுவின் மனைவியான வைஷ்ணவி என அழைக்கப் படும் இறைவி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சாக்தர்களின் சக்தி வழிபாட்டில் சப்தமாதர்கள் முக்கிய இடம் பெறுகின்றனர். மிகப் பழமையான சிவன் கோயில்களில் சப்தமாதர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காண முடியும். இவர்கள் அம்பிகையின் அம்சங்களே என தேவி மஹாத்மியம் கூறும்.
ப்ராம்மி அம்பிகையின் முகத்திலிருந்தும், மாஹேஸ்வரி அல்லது மகேஸ்வரி அம்பிகையின் தோளிலிருந்தும், கௌமாரி முருகப் பெருமானின் அம்சமாகவும், வைஷ்ணவி அம்பிகையின் கைகளில் இருந்தும் , விஷ்ணு, சிவன், சக்தி ஆகிய மூவரின் அம்சங்களோடு வாராஹியும்(இவளே அம்பிகையின் படைத்தளபதி ஆவாள்.), இந்திராணி இந்திரனின் அம்சமாகவும், ஈசனின் நெற்றிக்கண்களில் இருந்து தோன்றிய பத்ரகாளி சாமுண்டியாகவும் அவதரித்ததாகப் புராணங்கள் கூறும். சப்தகன்னியரோடு விநாயகரும், வீர பத்திரரும் இருப்பார்கள். சில இடங்களில் ஐயனாரும் காணப்படுவார்.கன்னிமார் வேறேனு தான் நினைக்கிறேன். கன்னிமார் வழிபாடு என்பது நாட்டார் வரலாற்றில் முக்கியமான ஒன்று. மணமாகாமல் மாண்டு தெய்வநிலை பெற்ற பெண்களைப்போற்றும் வகையில் எழுந்தது கன்னிமார் வழிபாடு. கன்னிமார் கோயில்களிலே வம்புலி எனப்படும் புலி காவல் காக்கும் என்பதோடு கன்னிமாரின் ஏழு அண்ணன்மாரும் காவலுக்கு இருப்பார்கள். முதலில் 7 கற்களையே நட்டு வழிபட்டு வந்தனர். பின்னல் காலப்போக்கில் பெண் உருவங்கள் இடம் பெற்றதாய்த் தெரிகிறது. ஆற்றங்கரைகளிலேயும், குளக்கரைகளிலேயும் கன்னிமார் கோயில்கள் அமைந்திருக்கும்.சப்தமாதர் எனப்படும் சப்த கன்னியரோ பெரிய ஆகம முறையான கோயில்களிலே குடி கொண்டிருப்பார்கள். கன்னிமார் வேறு, சப்தகன்னியர் வேறு.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தேவி மஹாத்மியம் தனிப்பட்ட ஒரு நூலன்று. மார்க்கண்டேய புராணத்தில் ஒரு பகுதி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மிகவும் தெரிந்து கொள்ள ஆசைப்படும் விஷயம்.. இது குறித்து தனி இழை ஆரம்பித்ததற்கு நன்றி சுபா...
///சப்த மாதாக்கள் ஆரம்ப நிலையில் இவர்கள் ஒரு ஆண் தெய்வத்தின் துணை என அறியப்படுவதை விட தனித்து இயங்கும் பெண் தெய்வங்களாக இருந்தவர்கள் என்பதும் சமூக சூழல் மாற்றங்களால் பின்னர் ஆண் தெய்வக் கடவுளர்கள் முக்கியத்துவம் பெற அவர்களுக்கு துணைவிகளாக மாற்றம் செய்யப்பட்டு சமூகத்தில் கோயில்களில் முக்கிய இடத்திலல்லாமல் தனிப்பகுதியில் தனியாக வைக்கப்பட்ட நிலையில் கி.பி 9, 10ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கோயில்களில் வைக்கும் நிலை தொடங்கியது என்றும் அறிய முடிகின்றது. ///இந்தக் கருத்திலிருந்து கொஞ்சம் மாறுபடுகிறேன்...'சக்தி'யை பெண்ணாக உருவகித்து வழிபடுகிறோம்.. சப்தமாதர்கள், ஆண் தெய்வங்களின் துணைவிகள் என்பதை விடவும், அவர்களது சக்தியின் ஸ்வரூபமே என்று தான் கொள்ள வேண்டும்..
அம்பிகை சர்வ சக்தி ஸ்வரூபிணி என்பதால், சப்த மாதர்கள் அனைவரும் அவளது அம்சமே.. இது குறித்து, நாம் கிராம தேவதைகள்..சிறு தெய்வங்கள் இழையிலும் விவாதித்திருக்கிறோம்.குமாரசம்பவத்தில், சப்தமாதர்கள் சிவபெருமானின் பணிப்பெண்கள் என்ற குறிப்பு வருவதால், சிவாலய திருச்சுற்றில் சப்தமாதர்கள் எழுந்தருளுவிக்கப்பட்டிருப்பதாக ஒரு கூற்று இருக்கிறது.. சப்தமாதர்களின் இருபுறமும் இருப்பது, விநாயகி, வீரபத்திரை என்ற பெண் தெய்வங்களே என்றும் சொல்கிறார்கள். முதலில் துவாரபாலகர்களோடு எழுந்தருளுவிக்கப்பட்ட சப்தமாதர்கள், குப்தர்கள் காலந்தொட்டு, ஆயுதங்களுடனும், விநாயகர், வீர்பத்திரருடனும் எழுந்தருளுவிக்கப்பட்டனர்.
சப்தகன்னிமார் வேறு..அவர்களின் பெயர்கள், 'பார்வதி அம்மன், பட்டத்தாள், அருந்தவம், பூவாள், பச்சையம்மன், மறலியம்மன்/காத்தாயி, பூங்காவனத்தம்மன். இவர்கள், தனித்து வழிபடப்படுவதில்லை.. பிற தெய்வங்களுடன் இணைத்தே வழிபாடு செய்யப்படுகின்றனர்.
கன்னிமார்களின் பூஜை முறைகளும் சப்தமாதாக்களின் பூஜை முறைகளும் வேறுபட்டவை.. கன்னிமார்கள் பொதுவாக வாழ்ந்து மறைந்த கன்னிப் பெண்களாக இருக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு.. நாட்டார் கதையொன்றில், 'சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன், புலியூர் பட்டத்தாள், காளிங்கராய நல்லூர் அருந்தவம், வ. சித்தூர் பூவாள், குமாரை பச்சையம்மன், வெங்கனூர் மறலியம்மன் என்னும் காத்தாயி, அரகண்ட நல்லூர் பூங்காவனம்' என்று ஏழு கன்னிமார்களின் ஊர்களும் குறிப்பிடப்பட்டிருப்பதைப் ப்டித்திருக்கிறேன்..கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கன்னிமார் வழிபாடு பிரசித்தம்.இவர்களின் காவல் தெய்வங்கள் பூமாலையப்பர், கருப்பையா, செம்மலையப்பர், முத்தையா, ராயப்பர் முதலானோர்..இவர்களும் வாழ்ந்து மறைந்தவர்களே!.. இவர்கள் குறித்த பல்வேறு கதைகள் வழக்கில் உண்டு..
சப்த மாதாக்களைக் குறிப்பிட, 'சப்த' என்ற சொல் இடம் பெற்ற காரணம் பற்றி பலரிடம் கேட்டும் இதுவரை விளக்கம் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.
செ . அ . வீரபாண்டியன்
சப்த மாதாக்களைக் குறிப்பிட, 'சப்த' என்ற சொல் இடம் பெற்ற காரணம் பற்றி பலரிடம் கேட்டும் இதுவரை விளக்கம் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.
செ . அ . வீரபாண்டியன்
ஸ்ரீ துர்கா சப்தசதி - 13 அத்தியாயம், 700 சுலோகங்கள் கொண்ட பிஜாட்சரம்.பிஜா - விதை; சரம் - தொடுத்தல்.
On Friday, 11 July 2014 07:36:50 UTC-7, Prakash Sugumaran wrote:ஸ்ரீ துர்கா சப்தசதி - 13 அத்தியாயம், 700 சுலோகங்கள் கொண்ட பிஜாட்சரம்.பிஜா - விதை; சரம் - தொடுத்தல்.
வியாசரால் தொகுக்கப்பட்டப் பதினெட்டுப் புராணங்களில் ஒன்று மார்க்கண்டேய புராணம். இது புராணங்களிலேயே மிகவும் சிறியதாக 9,000 ஸ்லோகங்கள் கொண்டது. வியாசரின் சீடர்களில் ஒருவரான ஜைமினி மஹரிஷிக்கு மஹாபாரத இதிஹாசத்தின் நிகழ்வுகளைக் குறித்த சந்தேகம் தோன்ற மார்க்கண்டேய மஹரிஷியை அணுகிக் கேட்கிறார். அவர் தனக்கு வேறு கடமைகள் இருப்பதால் விந்தியமலைக்குகையில் வேதம் ஓதிக்கொண்டிருக்கும் நான்கு பறவைகளிடம் சென்று கேட்குமாறு சொல்ல, ஜைமினி பறவைகள் வேதம் ஓதுவதைக் கண்டு ஆச்சரியமுற்று வினவுகிறார். இந்தப் பறவைகள் முக்காலமும் அறிந்தவர்கள் எனவும் துரோணர் என்பவரின் மகன்கள் எனவும் மார்க்கண்டேயர் எடுத்து உரைக்கிறார். இந்த துரோணர் மஹாபாரத ஆசாரியர் துரோணர் இல்லை. மந்தபாலன் என்பவனின் மகன் ஆன துரோணருக்கும் வபுஸ் என்னும் அப்ஸரஸுக்கும் பிறந்த குழந்தைகளே இந்த நான்கு பறவைகள் என்பார்கள். இவை ஜைமினி மஹரிஷிக்கு மஹாபாரதத்தில் தோன்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்த பதில்களே மார்க்கண்டேய புராணத்தில் அடங்கி உள்ளன. மார்க்கண்டேய புராணம் பெரும்பாலும் சிவனின் புகழையும் தேவியின் மகிமையையும் கூறும்.
http://www.youtube.com/watch?v=O6omKaHFCQY
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
தமிழகத்தின் பல கோயில்களுக்குச் சென்று பார்க்கும் வாய்ப்பு அமையும் போது அங்கே அமைந்திருக்கும் வடிவங்களில் சப்த மாதாக்களின் வடிவங்கள் என்னை எப்போதும் கவர்பவை. பழமையான கோயில்களாகட்டும்.. குடைவரைக் கோயில்களாகட்டும், சோழர் காலக் கோயில்களாகட்டும், நாயக்கர் கால கோயில்களாகட்டும்.. அண்மையில் கட்டப்பட்ட புதிய கோயில்களாகட்டும், கிராமத்துக் கோயில்களாகட்டும் .. இங்கேயெல்லாம் சப்த மாதாக்களின் சிலைகள் காணப்படுகின்றன. பற்பல மாறுதல்களை இந்தச் சிலை வடிவத்தில் காண்பதாகவும் உள்ளது.
சப்த மாதாக்கள் ஆரம்ப நிலையில் இவர்கள் ஒரு ஆண் தெய்வத்தின் துணை என அறியப்படுவதை விட தனித்து இயங்கும் பெண் தெய்வங்களாக இருந்தவர்கள் என்பதும் சமூக சூழல் மாற்றங்களால் பின்னர் ஆண் தெய்வக் கடவுளர்கள் முக்கியத்துவம் பெற அவர்களுக்கு துணைவிகளாக மாற்றம் செய்யப்பட்டு சமூகத்தில் கோயில்களில் முக்கிய இடத்திலல்லாமல் தனிப்பகுதியில் தனியாக வைக்கப்பட்ட நிலையில் கி.பி 9, 10ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கோயில்களில் வைக்கும் நிலை தொடங்கியது என்றும் அறிய முடிகின்றது.சப்த மாதாக்களின் ஆரம்ப கால வடிவத்தைப் பற்றியும் தொண்மை பற்றியும் ஆய்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றே கருதுகின்றேன். தொடர்வோமே..!
திருமலை வராஹி கோயிலலில் எடுக்கப்பட்ட படம்.
சுபா
---------- Forwarded message ----------
From: Suba.T. <ksuba...@gmail.com>
Date: 2014-07-11 9:13 GMT+02:00
Subject: Re: [MinTamil] Re: குடதிசை மருங்கில்: சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>
2014-07-11 8:59 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
2014-06-26 6:39 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
..இடமிருந்து வலமாக: இந்திரனின் சக்தியைக் குறிக்கும் இந்திராணி, இந்திரனின் ஆயுதமான இடியினைக் (வஜ்ராயுதம்) கரத்தில் ஏந்தி யானையின் (ஐராவதம்) மீது அமர்ந்துள்ளாள். கந்தன் அல்லது குமரன் என அழைக்கப் படும் தெய்வத்தின் துணைவியான குமாரி வேலினை ஏந்தி மயிலின் மீது அமர்ந்திருக்கிறாள். வராஹ அவதாரத்தில் வராஹத்தின் தலையினைக் கொண்டிருந்த விஷ்ணுவின் மனைவி வராஹி, கபாலத்திலான ஓட்டை ஏந்தி எருமையை வாகனமாகக் கொண்டிருக்கிறாள். ஆண் துணையற்ற சாமுண்டி, மண்டை ஓட்டையும், சூலத்தையிம் ஏந்தி பிணத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.
சிலையில் காணப்படாத மற்ற மூன்று இறைவிகள்: பிரம்மாவின் துணைவி பிராம்மணி, சிவனின் மனைவியான மகேஸ்வரி என அழைக்கப்படும் இறைவி, விஷ்ணுவின் மனைவியான வைஷ்ணவி என அழைக்கப் படும் இறைவி.
சப்தமாதாக்கள் பற்றி இன்னொரு விஷயமும் குறிப்பிட வேண்டும்.ஆரம்ப நிலையில் இவர்கள் ஒரு ஆண் தெய்வத்தின் துணை என அறியப்படுவதை விட தனித்து இயங்கும் பெண் தெய்வங்களாக இருந்தவர்கள் என்பதும் சமூக சூழல் மாற்றங்களால் பின்னர் ஆண் தெய்வக் கடவுளர்கள் முக்கியத்துவம் பெற அவர்களுக்கு துணைவிகளாக மாற்றம் செய்யப்பட்டு சமூகத்தில் கோயில்களில் முக்கிய இடத்திலல்லாமல் தனிப்பகுதியில் தனியாக வைக்கப்பட்ட நிலையில் கி.பி 9, 10ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கோயில்களில் வைக்கும் நிலை தொடங்கியது என்றும் அறிய முடிகின்றது.

--