தனிநாயகன் - ஆவணப்படம் பார்க்க வருக! தமிழ்மரபு அறக்கட்டளையின் பணிகள் வளர்க!
கவிஞர் நா.முத்துநிலவன்
மலேயாவில் பிறந்து ஜெர்மனியில் வாழ்ந்து வரும் மென்பொருளாளர் முனைவர் க.சுபாஷிணி அவர்களைத் தலைவராகக் கொண்ட பன்னாட்டு அமைப்பு – தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation - THF).
சாதி, மத, இன அடிப்படையிலேயே பெரும்பாலானவற்றை நடத்தி அதன் காரணமாகவே இழிநிலை நோக்கிச் சென்று வரும் தற்காலத் தமிழர்க்கு உண்மையான நமது வேர்களையும் விழுதுகளையும் அறிமுகப்படுத்தி ஆய்வுப் பணிகளைத் தொடரும் சிறப்பான அமைப்பு இது.
உலகளவிலான தமிழர்க்குத் தனது இணையப் பணிகளால் அறிமுகமான செங்கல்பட்டு–ஜெர்மனி-இங்கிலாந்து எனப் பறந்து வரும் முனைவர் ந.கண்ணன் இதன் தோற்றுநர்களில் ஒருவரும் துணைத்தலைவரும் ஆவார்.
திருச்சியில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வாழ்ந்துவரும் எழுத்தாளர் சமூகவியல் அறிஞர் முனைவர் தேமொழி அவர்கள் இதன் செயலாளர்.
இதன் பொருளாளராக முனைவர் இனியநேரு பணியாற்றி வருகிறார்
த.ம.அ. வெள்ளிவிழா, கடந்த 22-8-2026 அன்று சென்னையில் நடந்தது. வழக்கம் போல, நூல்கள் வெளியீடு நிகழ்வுடன் தனிநாயகம் ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.
உலகத் தமிழ் மாநாடுகளைத் தொடங்கி வைத்த பெருமை தனிநாயகம் அடிகள் அவர்களையே சாரும். அவரைப் பற்றிய சரியான மற்றும் முழுமையான ஊக்கச் செய்திகளை இன்றைய (ஜென்-ஸி) தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் அற்புதமாக ஆவணப் படம் இது. அனைவரும் பார்க்க வேண்டுகிறேன்.
த.ம.அறக்கட்டளை சுபாஷிணியின் கருத்தாக்கம், தயாரிப்பில், அருமை நண்பர் கவிஞர் பிருந்தாசாரதி எழுதி இயக்கியிருக்கிறார். இசை - ஜோஹன் சிவனேஷ்.
பாராட்டுகள் சுபா!
வாழ்த்துகள் பிருந்தாசாரதி! ஜோஹன்.
---------------------------------------------------------------
ஆவணப் படத்தின் இணைப்பு -
இதுபோலும் ஏராளமான தமிழ், தமிழ்ச் சமூகம் சார் பணிகளை இடையறாது, உலக அளவில் முன்னெடுத்துவரும் தமிழ் மரபு அறக்கட்டளை பணிகளை இதுவரையிலும் அறியாதவர்கள் அவசியம் தெரிந்து கொள்வதோடு இதன் பணிகளில் உதவலாம்
-------------------------------------------------------------------------
நா.முத்துநிலவன், புதுக்கோட்டை at ஆகஸ்ட் 28, 2026
வளரும் கவிதை
நா.முத்துநிலவன் வலைப்பக்கம்...