[MinTamil] ATRIL AZHAGAR

29 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Apr 28, 2010, 1:15:32 AM4/28/10
to min tamil

T, தமிழ்குறிஞ்சி

அழகர் ஆற்றில் இறங்கினார்
Wednesday , 28th April 2010 07:16:55 AM

image

லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா சரண கோஷத்தினிடையே கள்ளழகர் இன்று வைகையாற்றில் இறங்கினார். இன்று அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில், கள்ளழகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி ஒருமுறை வலம் வந்தார். பின், தமுக்கம் கருப்பண சுவாமி கோவில் முன்பு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.இதைத் தொடர்ந்து, தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்ட அழகர், காலை 7.05 மணியளவில் வைகையில் இறங்கினார். காலை 11 மணியளவில் ராமராயர் மண்டபத் தில் அழகருக்கு தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது.மாலை 5 மணிக்கு அண்ணாநகர் வழியாக அழகர் புறப்பட்டு, இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.

கள்ளழகர் எதிர்சேவை :

அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 24ம் தேதி முதல் சித்திரை திருவிழா துவங்கி நடக்கிறது. மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்காக, அழகர் மலையில் இருந்து 26ம் தேதி புறப்பட்டார் கள்ளழகர்.பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல், சர்வேயர் காலனி ஆகிய பகுதிகளில், பக்தர்கள் அமைத்திருந்த மண்டகபடிகளில் எழுந் தருளினார். நேற்று காலை 5.40 மணிக்கு மூன்று மாவடி வந்த கள்ளழகரை, பக்தர்கள் எதிர் கொண்டு அழைத்தனர்.அங்குள்ள புளியடி திம்மா திருக்கண் மண்டபத்தில், மேள, தாளம் முழங்க, வரவேற்பு அளித் தனர். பின், பன்னாங்கு (துணி) அவிழ்க்கப்பட்ட பல்லக்கில் அழகர் அருள்பாலித்தார்.

தல்லாகுளத்தில் எதிர் சேவை:

தொடர்ந்து காலை 8 மணிக்கு புதூரில் நடந்த எதிர்சேவையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொரி கடலை, சர்க்கரை நிறைந்த செம்பில், மஞ்சள் துணி, பூ சுற்றி, சூடம் ஏற்றி, 'கோவிந்தா...' கோஷமிட்டு வழிபட்டனர்.மாலை 5 மணிக்கு தல்லா குளம் மாரியம்மன் கோவிலில் எதிர்சேவை நடந்தது. இரவு 10.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் எழுந் தருளினார். அங்கு திருமஞ்சனம் நடந்தது.இன்று அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில், நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக, தடுப்புகள் முதன் முறையாக மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ளன.நேரடி ஒளிபரப்பு: ஆற்றுக் குள் இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்தாண்டு முதன்முறையாக 'சேட்டிலைட்' மூலம், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி, 'டிவி'க்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Apr 28, 2010, 1:29:58 AM4/28/10
to mint...@googlegroups.com
கும்பமேளாவிற்குப் பின் அதிகம் மக்கள் கூடும் நிகழ்ச்சியாக இது இருக்குமோ?

க.>

2010/4/28 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>


> அழகர் ஆற்றில் இறங்கினார்
> Wednesday , 28th April 2010 07:16:55 AM

kra narasiah

unread,
Apr 28, 2010, 1:55:58 AM4/28/10
to mint...@googlegroups.com
இன்று நான் இங்கு தான் உள்ளேன். நேற்றிரவே சென்னையிலிருந்து வந்து விட்டேன். எங்கள் வீட்டு வாசலில் ஒரு தண்ணீர் பந்தல் வைத்துள்ளோம் தெலுகு பிராம்மண சமாஜத்தின் பங்காக.; வரும் கூட்டத்திற்கு நீர்மோர்!
எவ்வளவு மகிழ்ச்சியாக் இருக்கிறது தெரியுமா?  கமலம் பார்த்தால் பூச்செண்டுகள் அளித்து விடுவார்; ரங்கன் பார்த்தால் வெண்பாவே எழுதி விடுவார்! சுபா பார்த்தால் ஒரு வலைப் பக்கமே உண்டாக்கலாம்.

நகரத்தின் அவலட்சணங்கள் இங்கில்லை! மக்கள் மக்களாகவே உள்ளனர்! நடிப்பு இல்லை முகமூடிகள் இல்லை! நமது அரசியல் வாதிகளும் நகரப்பெரும்க்களும் முகமூடிகள் அணிந்தே வாழ்ந்து தம்து இயற்கை முகத்தையே மறந்து விட்டன்ர்!

சாதாரணமக்கள். சாதாரண நம்பிக்கைகள்! இயற்கையான் புன்சிரிப்பு; ஆண்டவன் தந்தவ்ற்றினுடனேயே திருப்தி!

இங்கே நாடகமேடையில்லை! ஒளிவிளக்குகள் இல்லை! சூரியன் கூட இவர்கள் முகங்களில் பிரகாசிக்கிறான்!

அங்கே நமது அரசியல் வாதிகள் எந்த மகனை எந்த பதவியில் வைக்கலாம்; எந்த உறவினரை எந்த நிலையில் அமர்த்தலாம் என்று குழம்பிக்கிக் கொண்டு ஊருக்கு நல்லது செய்வதாக் நாடகமாடிக்கொண்டிருக்கையில் இவர்கள் ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு, அழகரை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்!

கும்பத்தினைப் போன்ற கூட்டமில்லையென்றாலும் பெரிய கூட்டம் தான்!

நான் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன் மதுரை வாழ்க என்று வாழ்த்திக்கொண்டு!

நரச்ய்யா


From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wed, April 28, 2010 10:59:58 AM
Subject: Re: [MinTamil] ATRIL AZHAGAR

Geetha Sambasivam

unread,
Apr 28, 2010, 1:59:50 AM4/28/10
to mint...@googlegroups.com
பச்சைப்பட்டுடுத்திக் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்.

2010/4/28 kra narasiah <nara...@yahoo.com>

V, Dhivakar

unread,
Apr 28, 2010, 2:14:00 AM4/28/10
to mint...@googlegroups.com
>>சாதாரணமக்கள். சாதாரண நம்பிக்கைகள்! இயற்கையான் புன்சிரிப்பு; ஆண்டவன் தந்தவ்ற்றினுடனேயே திருப்தி! <<


இது சாதாரணமனிதன் தந்தவரின் திருப்தி, ஆகையினால் எங்களுக்கும் மகிழ்ச்சியே!

திவாகர்


2010/4/28 kra narasiah <nara...@yahoo.com>

N. Kannan

unread,
Apr 28, 2010, 2:22:56 AM4/28/10
to mint...@googlegroups.com
கள்ளழகர், அவர் உற்சவங்கள், குறிப்பாக ஆற்றில் அழகர் இறங்குவது, இவை
எங்கள் குடும்பத்துடன் ஒன்றிப்போனவை. எத்தனைமுறை அழகர் கோயில்
போயிருப்பேன் என்று தெரியாது. குழந்தை முதல். கள்ளழகர் ஆற்றில் இறங்கும்
உற்சவம் எத்துணை முறை பார்த்திருப்பேன்? நினைவில் இல்லை. எத்தனை
கோணங்களில் அவர் ஆற்றில் இறங்குவதைப் பார்த்திருப்பேன்!

ஒன்றுமே பார்க்காதது போல் உள்ளது. உங்களோடு தண்ணீர் பந்தல்
கைங்கர்யத்தில் கலந்திருக்கவில்லையே என்று ஏக்கம் வருகிறது ;-(

மதுரை, மதுரைதான் !

க.>

2010/4/28 kra narasiah <nara...@yahoo.com>:


> இன்று நான் இங்கு தான் உள்ளேன். நேற்றிரவே சென்னையிலிருந்து வந்து விட்டேன்.
> எங்கள் வீட்டு வாசலில் ஒரு தண்ணீர் பந்தல் வைத்துள்ளோம் தெலுகு பிராம்மண
> சமாஜத்தின் பங்காக.; வரும் கூட்டத்திற்கு நீர்மோர்!

Kamala Devi

unread,
Apr 28, 2010, 5:20:52 AM4/28/10
to mint...@googlegroups.com
சார்,
 கேரளத்தில் எங்கள் இல்லத்தில், மாதமொருமுறை சத்யவட்டம்[அன்னலக்‌ஷ்மியின் ஆராதனை]
  உண்டு  .அங்கு அந்தணர்களோ, சாதுக்களோ , என்ற பாகுபாடே இன்றி, அனைவருக்கும் , திவ்ய
சம்பாவனை நடக்கும்.அந்த சந்தோஷம் வார்த்தைகளில் எழுத இயலாது.
அந்த மகிழ்வை நிங்ஙளின் தண்ணீர்ப்பந்தலில்  காண்கிறேன்
கமலம்

 
http://www.kamalagaanam.blogspot.com



From: kra narasiah <nara...@yahoo.com>
To: mint...@googlegroups.com
Sent: Wednesday, 28 April 2010 13:55:58

Geetha Sambasivam

unread,
Apr 28, 2010, 7:18:43 AM4/28/10
to mint...@googlegroups.com
கமலம், கீழே என்னோட மதுரை மீனாக்ஷி கல்யாண நினைவுகளில் ஒரு சிறு பகுதி!

//சப்தாவரணம்  பார்க்கப் போனதெல்லாம் நினைவில் வருது. மீனாக்ஷி கல்யாணத்தன்று எல்லார் வீட்டிலும் பாயாசம், வடை உண்டு. காலையில் ஆரம்பிச்சுச் சீர் வரிசைகள் ஒவ்வொன்றாக நாலு ஆவணி வீதியையும் சுற்றிக்கொண்டு வரும். எல்லாரும் ஓடிப் போய் ஆரத்தி எடுப்போம். அவரவர்களால் முடிஞ்சதை அந்தச் சீர் வரிசைகளோடு சேர்த்துக் கொடுப்பதும் உண்டு. வீடுகளில் கூட்டம், ஏதோ அவங்க வீட்டிலேதான் கல்யாணமோ என்னும்படி இருக்கும். திருக்கல்யாணம் முடிஞ்சதும், பதினொரு மணிக்கு ஆரம்பிச்சா மூணு மணி வரைக்கும் கல்யாண மண்டபத்தில் இருக்கும் ஸ்வாமியைக் கணக்கே இல்லாமல் யாரெல்லாம் போறாங்களோ அவங்களோட போறது உண்டு.

சில சமயம் தேரன்றே மாலை எதிர்சேவையும் இருக்கும். தல்லாகுளம் பெருமாள் கோயில் எதிரே இருக்கும் அப்பாவின் நண்பர் பரமசாமி என்பவரின் வீட்டு மண்டகப்படிக் கட்டிடத்துக்குப் போயிடுவோம். டிவிஎஸ் பஸ் ஓடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. பஸ்ஸே வரலைனால் அந்த ஸ்டாப்பில் இருக்கும் ஒரு ஊழியரிடம் சொன்னால் போதும், உடனே பஸ் வரவழைக்கப் பட்டு, இங்கே காத்துக்கொண்டிருக்கும் மக்கள் போகலாம். ஆஹா எவ்வளவு சுகமான நாட்கள் அவை?? சில சமயம் நடந்தே போயிருக்கோம். எதிர்சேவை பார்த்துட்டு ராத்திரிப் பத்துமணிக்கு அப்புறம் கொடுக்கும் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் , தயிர்சாத மூட்டையைத் தூக்கிண்டு நடந்தே வருவோம் கல்பாலத்தோடு. அப்போ திடீர்னு ஒரு மழை பெய்யும் பாருங்க! என்ன சுகமா இருக்கும் தெரியுமா?

வீடுகளில் எல்லாம் லக்ஷம் மல்லி, கோடி மல்லி என்று தானங்கள் நடக்கும், மஞ்சளும் கொடுப்பாங்க./ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
ம்


2010/4/28 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
சார்,
 கேரளத்தில் எங்கள் இல்லத்தில், மாதமொருமுறை சத்யவட்டம்[அன்னலக்‌ஷ்மியின் ஆராதனை]
  உண்டு  .அங்கு அந்தணர்களோ, சாதுக்களோ , என்ற பாகுபாடே இன்றி, அனைவருக்கும் , திவ்ய
சம்பாவனை நடக்கும்.அந்த சந்தோஷம் வார்த்தைகளில் எழுத இயலாது.
அந்த மகிழ்வை நிங்ஙளின் தண்ணீர்ப்பந்தலில்  காண்கிறேன்




--

--

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Apr 28, 2010, 8:34:48 AM4/28/10
to மின்தமிழ்
Apr 28, 6:18 am, Geetha Sambasivam

>> அப்பாவின் நண்பர் *பரமசாமி* என்பவரின் வீட்டு மண்டகப்படிக்


கட்டிடத்துக்குப் போயிடுவோம்<<


’பரம ஸ்வாமி’ என்பது கள்ளழகர் ஆலயத்தின் மூலவரின் திருநாமம். வலத்
திருக்கரத்தில் ப்ரயோக நிலையில் சக்கரம் தரித்தவர்; நாச்சியாரின் உள்ளம்
கவர்ந்தவர்; உடையவர் ஸமர்ப்பித்த நூறு தடா அக்கார அடிசிலையும் ஏற்ற ஏறு
திரு உடையவர் இவரே


தேவ்


On Apr 28, 6:18 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> கமலம், கீழே என்னோட மதுரை மீனாக்ஷி கல்யாண நினைவுகளில் ஒரு சிறு பகுதி!
>
> //சப்தாவரணம்  பார்க்கப் போனதெல்லாம் நினைவில் வருது. மீனாக்ஷி கல்யாணத்தன்று
> எல்லார் வீட்டிலும் பாயாசம், வடை உண்டு. காலையில் ஆரம்பிச்சுச் சீர் வரிசைகள்
> ஒவ்வொன்றாக நாலு ஆவணி வீதியையும் சுற்றிக்கொண்டு வரும். எல்லாரும் ஓடிப் போய்
> ஆரத்தி எடுப்போம். அவரவர்களால் முடிஞ்சதை அந்தச் சீர் வரிசைகளோடு சேர்த்துக்
> கொடுப்பதும் உண்டு. வீடுகளில் கூட்டம், ஏதோ அவங்க வீட்டிலேதான் கல்யாணமோ
> என்னும்படி இருக்கும். திருக்கல்யாணம் முடிஞ்சதும், பதினொரு மணிக்கு ஆரம்பிச்சா
> மூணு மணி வரைக்கும் கல்யாண மண்டபத்தில் இருக்கும் ஸ்வாமியைக் கணக்கே இல்லாமல்
> யாரெல்லாம் போறாங்களோ அவங்களோட போறது உண்டு.
>
> சில சமயம் தேரன்றே மாலை எதிர்சேவையும் இருக்கும். தல்லாகுளம் பெருமாள் கோயில்
> எதிரே இருக்கும் அப்பாவின் நண்பர் பரமசாமி என்பவரின் வீட்டு மண்டகப்படிக்
> கட்டிடத்துக்குப் போயிடுவோம். டிவிஎஸ் பஸ் ஓடிக்கொண்டிருந்த காலகட்டம் அது.
> பஸ்ஸே வரலைனால் அந்த ஸ்டாப்பில் இருக்கும் ஒரு ஊழியரிடம் சொன்னால் போதும், உடனே
> பஸ் வரவழைக்கப் பட்டு, இங்கே காத்துக்கொண்டிருக்கும் மக்கள் போகலாம். ஆஹா
> எவ்வளவு சுகமான நாட்கள் அவை?? சில சமயம் நடந்தே போயிருக்கோம். எதிர்சேவை
> பார்த்துட்டு ராத்திரிப் பத்துமணிக்கு அப்புறம் கொடுக்கும் புளியோதரை,
> சர்க்கரைப் பொங்கல் , தயிர்சாத மூட்டையைத் தூக்கிண்டு நடந்தே வருவோம்
> கல்பாலத்தோடு. அப்போ திடீர்னு ஒரு மழை பெய்யும் பாருங்க! என்ன சுகமா இருக்கும்
> தெரியுமா?
>
> வீடுகளில் எல்லாம் லக்ஷம் மல்லி, கோடி மல்லி என்று தானங்கள் நடக்கும், மஞ்சளும்
> கொடுப்பாங்க./ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
> ம்
>

> 2010/4/28 Kamala Devi <saahith...@yahoo.com.sg>


>
>
>
> > சார்,
> >  கேரளத்தில் எங்கள் இல்லத்தில், மாதமொருமுறை சத்யவட்டம்[அன்னலக்‌ஷ்மியின்
> > ஆராதனை]
> >   உண்டு  .அங்கு அந்தணர்களோ, சாதுக்களோ , என்ற பாகுபாடே இன்றி, அனைவருக்கும் ,
> > திவ்ய
> > சம்பாவனை நடக்கும்.அந்த சந்தோஷம் வார்த்தைகளில் எழுத இயலாது.
> > அந்த மகிழ்வை நிங்ஙளின் தண்ணீர்ப்பந்தலில்  காண்கிறேன்
> > கமலம்
>
> >http://www.kamalagaanam.blogspot.com
>

> > ------------------------------
> > **


>
> > --
>
> > --
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com


> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil

Kamala Devi

unread,
Apr 28, 2010, 8:40:48 AM4/28/10
to mint...@googlegroups.com
கீதா,
படிக்கும்போதேஎ பார்க்கும் ஆசை வருகிறது,என்றேனும் தமிழ்
நிகழ்வுகளைக்காணும் வாய்ப்பு ஈஷ்வரன் அருளிப்பாராக.
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wednesday, 28 April 2010 19:18:43

Subject: Re: [MinTamil] ATRIL AZHAGAR

N. Kannan

unread,
Apr 28, 2010, 9:07:07 AM4/28/10
to mint...@googlegroups.com
டி.வி.எஸ் நிர்வாகம் என்பது விட்டுப்போன ஆங்கில நிர்வாகம் போலிருக்கும்.
காலை ஐந்து மணிக்கு மதுரை ரோடுகளில் ஒரு லாரி போகும். அதில் காந்தம்
இருக்கும். அது ரோட்டில் கிடக்கும் ஆணி, கூர்மையான வேறு ஏதாவது இருந்தால்
சுத்தம் செய்துவிடும். பிறகு மெல்லிதாக நீரை வார்த்து விட்டுப் போகும்
இன்னொரு லாரி. பஸ் வரும் நேரத்தை வைத்து மணியைச் சரி செய்து கொள்வது
அப்போதெல்லாம் மதுரையில் சகஜம். பாண்டியன் போக்குவரத்து வந்து எல்லாப்
போக்கையும் ரத்து செய்துவிட்டு அது போக்கில் போய் கொண்டு இருக்கிறது!

அதுவொரு கனாக்காலம்!

அப்போது கொடுத்தது போல் புளியோதரையும், தத்தியானமும் இன்னும்
தருகிறார்களா என்று தெரியாது. தல்லாகுளத்தில் எங்கள் உறவுக்காரர்
மண்டகப்படியில் பெருமாள் இறங்குவார்.

அதுவொரு கனாக்காலம்!

ஆனால் நீங்கள் சொல்லும் மீனாட்சி கல்யாண வருணனை புதிது. அனுபவித்ததில்லை.
இன்னும் சொல்லுங்கள்.

க.>

2010/4/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>:


> கமலம், கீழே என்னோட மதுரை மீனாக்ஷி கல்யாண நினைவுகளில் ஒரு சிறு பகுதி!
>
> //சப்தாவரணம்  பார்க்கப் போனதெல்லாம் நினைவில் வருது. மீனாக்ஷி கல்யாணத்தன்று
> எல்லார் வீட்டிலும் பாயாசம், வடை உண்டு. காலையில் ஆரம்பிச்சுச் சீர் வரிசைகள்
> ஒவ்வொன்றாக நாலு ஆவணி வீதியையும் சுற்றிக்கொண்டு வரும். எல்லாரும் ஓடிப் போய்
> ஆரத்தி எடுப்போம். அவரவர்களால் முடிஞ்சதை அந்தச் சீர் வரிசைகளோடு சேர்த்துக்
> கொடுப்பதும் உண்டு. வீடுகளில் கூட்டம், ஏதோ அவங்க வீட்டிலேதான் கல்யாணமோ
> என்னும்படி இருக்கும்.

Geetha Sambasivam

unread,
Apr 28, 2010, 9:48:51 AM4/28/10
to mint...@googlegroups.com
’பரம ஸ்வாமி’ என்பது கள்ளழகர் ஆலயத்தின் மூலவரின் திருநாமம்//

உண்மையே, அவர் ஊரே அழகர் கோயில் தான், மதுரை நகரில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் வேலை பார்த்தார். அவங்க மண்டகப்படி அழகர்கோயிலிலும் உள்ளது.

2010/4/28 devoo <rde...@gmail.com>

Kandavel Rajan

unread,
Apr 28, 2010, 10:03:09 AM4/28/10
to mint...@googlegroups.com














































































































































மதுரை : லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா சரண கோஷத்திற்கிடையே கள்ளழகர் இன்று வைகையாற்றில் இறங்கினார். இந்த நிகழ்ச்சியை நமது இணைய தளம் நேரடியாக ஒளிபரப்பியது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடந்தது. மக்கள் வெள்ளத்தில், சூரியகதிர்களால் ஜொலித்த தங்க குதிரையில், காலை 7.05 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் அழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய போது, மக்கள் பக்தி மேலிட கோவிந்தா கோவிந்தா என சரணகோஷம் எழுப்பினர். மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.,16 கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த ஏப்.,25ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. மறுநாள் ஏப். 26 தேரோட்டம் நடந்ததை தொடர்ந்து, அன்று மாலை அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு கள்ளழகர் அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் புறப்பட்டார்.


நேற்று காலை 6 மணிக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடந்தது. இரவு 10.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடந்தது. பின், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சாத்தப்பட்டு, கோயிலைச் சுற்றி வெட்டிவேர் சப்பரத்தில் உலா வந்தார். அதிகாலை 4 மணியளவில், தமுக்கம் கருப்பண சுவாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின் ஒவ்வொரு மண்டகப்படியாக வந்தார். இதற்கிடையே அழகரை வரவேற்பதற்காக, அதிகாலை 5.50 மணிக்கு எழுத்தாணிகாரத் தெருவில் உள்ள வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரையில் ஆற்றில் எழுந்தருளி காத்திருந்தார்.


காலை 7.05 மணிக்கு, 'கோவிந்தா... நமோ நாராயணா...' என்று பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே, பச்சை பட்டு உடுத்தி, தங்கு குதிரையில் ஆற்றில் இறங்கி, திருக்கண் மண்டபத்தை சுற்றி வந்தார். அவருக்கு அழகர்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அழகரை வரவேற்ற வீரராகவப் பெருமாள், அவரை மூன்று முறை சுற்றி வந்தார். இதைதொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாத்தப்பட்டது. காலை 7.33 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட அழகர், அருகில் இருந்த இந்து சமய அறநிலையத் துறை மண்டகப்படியில் எழுந்தருளினார். அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் துறை அதிகாரிகளுக்கு பரிவட்டம் கட்டி, மரியாதை செலுத்தப்பட்டது. காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட அழகர், மக்கள் வெள்ளத்தில் நீந்தி, காலை 11.30 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அழகரை குளிர்விக்க தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 7 மணியளவில் அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.


நாளை சாபவிமோசனம் : நாளை காலை 6 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்த பின், சேஷ வாகனத்தில் எழுந்தருளி, காலை 9 மணியளவில் ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்திற்கு வருகிறார். மதியம் 12 மணியளவில் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சித் தருகிறார். நாளை மாலை மீண்டும் ராமராயர் மண்டபத்திற்கு செல்கிறார். இரவு 11 மணி முதல் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் காலை 6 மணிக்கு மோகனாவதாரத்துடன் மண்டபத்தில் உலா வரும் அழகர், மதியம் 12 மணிக்கு ராஜாங்க சேவை அலங்காரமாகி, தமுக்கம் அருகேயுள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அபிஷேகத்திற்கு பின், இரவு பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.


தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு : மதுரைக்கு பெருமை சேர்க்கும், சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை உலகெங்குமுள்ள தமிழர்கள் கண்டுகளிக்கும் வகையில், தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த ஒளிபரப்பு இந்திய நேரப்படி இன்று காலை 6.20 மணி முதல் 07:30 மணி வரை நடைபெற்றது. இதை உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தினமலர் வாசகர்கள் பார்த்ததாக நாங்கள் எடுத்த சர்வே தெரிவிக்கிறது.


சித்திரை திருவிழா சிறப்பு ஏற்பாடுகள் :
* சிறுவர் முதல் பெரியவர் வயது வித்தியாசமின்றி, மேள, தாளத்துடன், ஆட்டம் போட்டுக் கொண்டு, அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
* இதற்காக கீழமாசிவீதி தேர்முட்டி பகுதியிலிருந்து காலை 6 மணி முதல் சாரை சாரையாக ராமராயர் மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றனர். 
* ஆற்றில் அழகர் இறங்கிய இடத்தைச் சுற்றி இந்தாண்டு, செடி, கொடிகள் அகற்றப்பட்டதால், பக்தர்கள் பரவலாக நின்று தரிசித்தனர்.
*ஆற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை மொட்டை அடித்து, சர்க்கரை, சூடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
* ஏ.வி. மேம்பாலம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
* இந்தாண்டு ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததால், ஆழ்குழாய் அமைத்து, தொட்டியில் நீர் நிரப்பபட்டது. அதில் அழகர் இறங்குவதற்காக மலர்கள் தூவப்பட்டிருந்தன. கடந்த 2004ம் ஆண்டின்போதும் தண்ணீர் திறக்கப்படாததால், லாரிகள் மூலம் தண்ணீர் விடப்பட்டது.
* இந்தாண்டு முதன்முறையாக பெரியார் பஸ் ஸ்டாண்ட், விளக்குத்தூண், தல்லாகுளம் பெருமாள் கோயில், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், அழகர்கோவில் முன்பு பெரிய திரைகளில் 'சேட்டிலைட்' மூலம், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கோயில் நிர்வாகம் சார்பில் நேரடியாக ஒளிபரப்பபட்டது. 
* ஆற்றோரத்தில் பல அடி உயரமான இரும்புச் சட்டங்களில், உயிருக்கு ஆபத்தான வகையில் சிலர் நின்று, அழகரை தரிசித்தனர்.
* போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
* அழகருடன் வந்த கோயில் ஊழியர்கள் சிலரை, போலீசார் ஆற்றுக்குள் விடாததால் வாக்குவாதம் ஏற்பட்டது. 
* அழகருடன் ஆற்றுக்குள் நுழைய முயன்றவர்கள் மீது போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.
* தங்களை அடித்த போலீஸ்காரர் ஒருவரை, திட்டமிட்டு சுற்றி வளைத்து அவரை தாக்கினர். புகார் ஏதும் பதிவாகவில்லை.
* ஆற்றுக்குள் பிக்பாக்கெட் அடித்த இருவரை போலீசார் பிடித்து தல்லாகுளம் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
* அழகர் ஆற்றைவிட்டு கிளம்பி ஒருமணி நேரமாகியும், பக்தர்கள் அவர் சென்ற இடங்களில் எல்லாம் பின்தொடர்ந்து தரிசித்தனர். 
* ஆற்றுக்குள் முதன்முறையாக 'ஜாமர்' கருவி பொருத்தப்பட்டிருந்ததால், மொபைல் போன்கள் செயல் இழந்தன. 
* பஸ்களின் மேற்கூரையில் அமர்ந்துக்கொண்டு பக்தர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
* சித்திரைப் பொருட்காட்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய பலர், நள்ளிரவில் ஆற்றுக்குள்ளேயே படுத்து தூங்கினர்.
* நகர் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.






--
ஒழுக்கமும் வாழ்க்கையும் ஒரே விதமான விஷயம். கல் தடுக்கும் நேரம் போதும் உயிர் பிரிய, ஒழுக்கம் தவற.பிரிந்த உயிர் உடலுக்கு வருவதும், தவறிய ஒழுக்கம் சரி செய்வதும் நடக்கும் காரியமா?போனது போனதுதான். தவறியது தவறியதுதான்.


நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

K R A Narasiah

unread,
Apr 29, 2010, 11:00:13 PM4/29/10
to mint...@googlegroups.com
மதுரயிலிருந்து . . .
அழகரைப் பார்க்க இன்று காலை ஆற்ற்ங்கரை சென்றிருந்தேன். கண்கொள்ளாக் காட்சி! அற்புதமாக மோஹினி அவதாரத்தில்! ஆட் கொண்ட பெருமாளை எப்படிப் போற்றுவது என்றே தெரியவில்லை! இங்கு நான் காண்பது பல நூற்றாண்டுகளாக, திராவிடக் கட்சிகளின் எல்லா சீர்கேடுகளையும் தாண்டிக்கொண்டு பெருமாள் மக்களுக்க்காக வருகிறார். எவருக்கும் ஏமாற்றம் இல்லை!

அங்கே செம்மொழி என்ற பேரிலே த்னனையும் த்ன் குடும்பத்தையும் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியைக் கண்டும் காணாத மாதிரி கற்றவர்கள் கூட் சிறு சிறு மகிழ்வுகளுக்காக் தமது மனச் சாட்சியையே அடகு வைத்து விட்டு ஜால்ரா போட்டுக்கொண்டிரிக்கிறார்கள்.
 இங்கு தான் இயற்கையான் மக்களைப் பார்க்க முடிகிறது!
வாழக அவன் திரு நாமம்!
நரசய்யா

2010/4/28 Kandavel Rajan <kandav...@gmail.com>

Venkatachalam Subramanian

unread,
May 7, 2010, 2:55:30 PM5/7/10
to mint...@googlegroups.com
<http://www.templecity.in>

மேலே கண்ட சுட்டியில் ஆற்றில் அழகர் இறங்கி அருள்பாலிக்கும் வைபவத்தை, கிராமிய இசையில் அழகர் விருத்தம் பாடி வரவேற்கும் அன்பு உள்ளங்களின் காணொளி கண்டு கேட்கலாம்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

2010/4/29 K R A Narasiah <naras...@gmail.com>

N. Kannan

unread,
May 8, 2010, 12:07:28 AM5/8/10
to mint...@googlegroups.com
அன்பின் ஓம் ஐயா!
 
இன்று காலை என்னவொரு தரிசனத்தை வழங்கியுள்ளீர்கள். தன்யன் ஆனேன் சுவாமி! இவ்வளவு அழகாக அழகர் ஆற்றில் இறங்கியதைப் பார்த்ததில்லை. என்ன அழகு! என்ன அழகு! என்ன கதி! என்ன கம்பீரம்!
 
வாராரு! வாராரு! அழகர் வாராரு!
ஆகாயம் பூதமெல்லாம் ஆட்டிவச்சவர் அழகரு!
ஐம்பூதம் பிரிஞ்சிருந்ததை கூட்டிவச்சர் அழகரு!
சமயங்களின் வேற்றுமையைக் கூட்டிவச்சவர் அழகரு!
சமயம் வந்தா சக்கரத்தைத் தீட்டி வச்சவர் அழகரு!!
 
அடடா! என்ன கவிதை! என்ன புரிதல்! கடைசி வரி ரொம்பப் பிடித்தது ;-)
 
கண்கொள்ளாக் காட்சி. தன்யன்! தன்யன்!!
 
நா.கண்ணன்

2010/5/8 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

<http://www.templecity.in>

மேலே கண்ட சுட்டியில் ஆற்றில் அழகர் இறங்கி அருள்பாலிக்கும் வைபவத்தை, கிராமிய இசையில் அழகர் விருத்தம் பாடி வரவேற்கும் அன்பு உள்ளங்களின் காணொளி கண்டு கேட்கலாம்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

--

K R A Narasiah

unread,
May 8, 2010, 12:38:33 AM5/8/10
to mint...@googlegroups.com
நேரில் பார்த்த மகிழ்ச்சி!
நரசய்யா

2010/5/8 N. Kannan <navan...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages