ஃ ஆயுதமேந்திய குறட்பாக்கள் ஃ

1,301 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 10, 2018, 2:58:06 AM6/10/18
to மின்தமிழ்

வெஃகாமை அதிகாரத்தில் அனைத்துக் குறட்பாக்களும் ஃ கொண்டவை 

வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
வாழ் நாள் வழி அடைக்கும் கல்

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு

பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி
தேரினும் அஃதே துணை

விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்

நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும்

படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார்
நடுவு அன்மை நாணுபவர்

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர்

இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
புன்மை இல் காட்சியவர்

அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும்
வெஃகி வெறிய செயின்

அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
பொல்லாத சூழ கெடும்

வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன்

அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள்

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு

இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு

ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்று கோள் தக்கது உடைத்து

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி

தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை

தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது

வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை
யாண்டும் அஃது ஒப்பது இல்

அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறிகல்லாதவர்

மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து

நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும்

இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃது ஒப்பது இல்

ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
உண்மை நிலைக்கு பொறை

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
புண் என்று உணரப்படும்

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார்
உடையது உடையரோ மற்று

உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
மரம் மக்கள் ஆதலே வேறு

இடுக்கண் வரும்-கால் நகுக அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்

செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும்
எஃகு அதனின் கூரியது இல்

பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு

அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு

ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃது இறந்து வாழ்தும் எனல்

வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்

அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்
பிணி அன்றோ பீடு நடை

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சால படும்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர்

மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும்

இன்பம் கடல் மற்று காமம் அஃது அடும்-கால்
துன்பம் அதனின் பெரிது

தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
அஃது ஆண்டு அவள் செய்தது

நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
காதலர் இல்லா வழி

nkantan r

unread,
Jun 10, 2018, 6:45:39 AM6/10/18
to மின்தமிழ்
நன்றி.

இவை பொருள் விளங்க சொல்லடிபடையில் பிரிக்கப்பட்டவை.
1. குறள் எண்ணையும் சுட்டி பதிவிட்டுருக்கலாம்.
2. இவை பொருள் விளங்க சொல்லடிபடையில் பிரிக்கப்பட்டவை.
சீர் அடிப்படையில் முதலில் பதிவிடுவோம்

rnk

nkantan r

unread,
Jun 10, 2018, 7:28:12 AM6/10/18
to மின்தமிழ்
குறள்-38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்

-----
நேர்-நேர்/நிரை-நிரை/நேர்-நேர்-நேர்/ நேர்-நிரை-நேர்/
நேர்-நேர்/நிரை-நிரை-நேர்/நேர
----

வள்ளுவர் எழுத்துச்சிக்கனம் பார்ப்பவர்.

'அது ஒருவன்' என்றால் (னதொருவன்) நிரை- நிரை என்று வரும். தளையும் ஓசையும் கெடும். இங்கு ஆயுதம் அசை அலகிடும் ஒற்று போல் வந்துள்ளது.

rnk

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
Jun 10, 2018, 7:43:42 AM6/10/18
to min tamil
அது ஒருவன் என்று வராது.  உயிரெழுத்துக்கு முன்னால் அஃது.  மற்றவற்றுக்கு முன்னால் அது. 

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Jun 10, 2018, 8:18:42 AM6/10/18
to மின்தமிழ்
அடிபடை என்பது வினைத்தொகை. ’தாக்குகின்ற படை’  எனப் பொருள். இராமன் அடிபடையொடும் இலங்கை சென்றான்.
அடியாள், அடிபடை, ....

நீங்கள் சொல்ல நினைப்பது: அடிப்படை.

‘சரவணன் தமிழ்மைந்தன்’ முகமது மேத்தா, அப்துல் ரகுமான், ... நல்ல புதுக்கவிதைகளை இடுகிறார்.
அவர் காழ்புணர்ச்சி என எழுதுகிறார். அஃது காழ்ப்புணர்ச்சி. பலர் ஃபேஸ்புக்கில். பார்ப்பனர் ‘priests' என்னும்
சொல்லைப் பார்பனர் என எழுதுகின்றனர். இவை போல் பல ....

நா. கணேசன்

nkantan r

unread,
Jun 10, 2018, 8:33:04 AM6/10/18
to மின்தமிழ்
ப் விட்டுப்போச்சு. அம்புட்டுதான்.
rnk

nkantan r

unread,
Jun 10, 2018, 9:14:15 AM6/10/18
to மின்தமிழ்
ஹரிகி அய்யா.

தங்கள் அளவு தமிழ் ஞானமும் புலமையும் இல்லாதவன். அஃது வந்தால் வரும்சொல் உயிர் கொண்டு துவங்கும் என்பது திருக்குறளில் கண்கூடு. ஆனால், உயிர் வந்தால் அது அஃது என மாறும் என்பது கேள்விக்குரியதே.

கூகுளார் உதவியுடன் (from tamilconcordance by mr pandyaraja) தங்கள் பார்வைக்கு:

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடா சிறப்பு - குறள் 8:4


ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு - குறள் 24:1


உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
புண் அது உணர்வார் பெறின் - குறள் 26:7

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
எ ப்பால் நூலோர்க்கும் துணிவு - குறள் 54:3

கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
இல்லை நிலக்கு பொறை - குறள் 57:10

பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன் - குறள் 100:6

கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து - குறள் 115:4
========

அது + ஒருவன்: அதொருவன்? அதுவொருவன்?

அது + அல்லது : அதல்லது? அதுவல்லது?

( ஏனென்றால் மேலே காட்டபட்ட குறள் 24:1

ஈதல் இசைபட வாழ்தல்ல(து) வல்லது
ஊதிய மில்லை யுயிர்க்(கு)

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்(கு)

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதிய மில்லை யுயிர்க்(கு)

என்றெல்லாம் பாடம் வரும்.)

rnk

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
Jun 10, 2018, 11:17:17 PM6/10/18
to min tamil
2018-06-10 18:44 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
ஹரிகி அய்யா.

தங்கள் அளவு தமிழ் ஞானமும் புலமையும் இல்லாதவன்.  அஃது வந்தால் வரும்சொல் உயிர் கொண்டு துவங்கும் என்பது திருக்குறளில் கண்கூடு. ஆனால், உயிர் வந்தால் அது அஃது என மாறும் என்பது கேள்விக்குரியதே.

கூகுளார் உதவியுடன்  (from tamilconcordance by mr pandyaraja) தங்கள் பார்வைக்கு:

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
  நண்பு என்னும் நாடா சிறப்பு - குறள் 8:4


ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
  ஊதியம் இல்லை உயிர்க்கு - குறள் 24:1


சுட்டியதற்கு நன்றி திரு nkantan.

அது ஒருவன் என்று கூடுவதைப் பார்த்ததில்லை.  அஃதொருவன் என்றுதான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.  என்னுடைய perception தவறாகவும் இருக்கலாம்.  இதன் விளக்கத்தைத் தேடிப் பார்க்கிறேன். 

nkantan r

unread,
Jun 24, 2018, 11:23:45 PM6/24/18
to மின்தமிழ்
அடுத்த ஆயுதக் குறள்:

49 (இல்வாழ்க்கை)

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று

அற/னெனப் பட்/டதே யில்/வாழ்க்/கை அஃ/தும்
பிறன்/பழிப்/ப தில்/லா/யின் நன்று.

நிரைநிரை நேர்நிரை நேர்நேர்நேர் நேர்நேர்
நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்(பு).

கருவிளம்-கூவிளம்-தேமாங்காய்-தேமா
கூவிளங்காய்-தேமாங்காய்-காசு.

rnk
இரண்டு குற்றியலுகரங்கள்

1) உம்மை உருபும், புணர் ஒற்றும் வந்ததால் அலகிடப்பட்டது (அஃதும்)
2) புணர்ச்சியில் மறைந்தது (பழிப்பது இல்லாயின்)

---
3) ஆய்தம் மெய் எழுத்துபோல் அசையிறுதியில் அலகில்லாமல் (அஃ தும்)

nkantan r

unread,
Jun 25, 2018, 12:17:21 AM6/25/18
to மின்தமிழ்
அடுத்த ஃ உள்ள குறள்:

( அன்புடைமை 76)

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

அறத்/திற்/கே அன்/புசார் பெ/ன்ப அறி/யார்
மறத்/திற்/கும் அஃ/தே துணை

நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர்

நிரைநேர்நேர் நேர்நேர் நேர்(நேர்பு).

கருமாங்காய் கூவிளம் தேமா கருவிளம்
கருமாங்காய் தேமா நாள்(காசு).

rnk
1) மூன்று குற்றியலுகரங்கள். நான் அலகிட்டது சரியென்றே எண்ணுகிறேன்.
2) பெரும்பாலும் ஈற்றுச்சீர் ஓரசையாகவோ குற்றியலுகரம் சேர்ந்தோ இருக்கும். ஐகாரக்குறுக்கம் இங்கே. ஆகையால் காசு க்குபதில் நாள்.
3) இது எப்படி??

அறத்/திற்/கே அன்/புசார் பெ/ன்ப அறி/யார்
மறத்/திற் குமஃ/தே துணை.

kanmani tamil

unread,
Jun 25, 2018, 1:24:43 AM6/25/18
to mintamil
அறத்/திற்/கே அன்/புசார் பெ/ன்ப அறி/யார்
மறத்/திற்/கும் அஃ/தே துணை

தவறு --- பென் /ப என்று தான் பிரிக்க வேண்டும்.


நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர்
நிரைநேர்நேர் நேர்நேர் நேர்(நேர்பு).

தவறு.---'ஐ 'காரத்தின் மாத்திரை அளவு 2...அது குறுக்கமாக அமையும் போது மாத்திரை அளவு 1. 
இதனால் 'துணை ' என்ற ஈற்றசையின் வாய்பாடு நிரை =மலர் .
கண்மணி  


கருமாங்காய் கூவிளம் தேமா கருவிளம்
கருமாங்காய் தேமா நாள்(காசு).

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Jun 25, 2018, 3:13:25 AM6/25/18
to மின்தமிழ்
நன்றி.

பென்ப மனம் ஒன்று நினைக்க கை வேறாக தட்டச்சு.

ஈற்றுச்சீர் மிகப்பெரிய தவறுதான்.

rnk

nkantan r

unread,
Jun 25, 2018, 3:18:47 AM6/25/18
to மின்தமிழ்
திருத்தியது..

அறத்/திற்/கே அன்/புசார் பென்/ப அறி/யார்


மறத்/திற்/கும் அஃ/தே துணை

நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர்

நிரைநேர்நேர் நேர்நேர் நிரை


கருமாங்காய் கூவிளம் தேமா கருவிளம்

கருமாங்காய் தேமா மலர்.

rnk


1) ஈற்றுச்சீரில்- ணை ஐகாரக்குறுக்கம். ஆதலால் இரு குறில். நிரை அசை. மலர் எனும் வாய்ப்பாடு.

nkantan r

unread,
Jun 25, 2018, 3:56:26 AM6/25/18
to மின்தமிழ்
அடுத்தது: அன்புடைமை 80

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

அன்/பின் வழி/ய துயிர்/நிலை அஃ/திலார்க்
கென்/புதோல் போர்த்/த உடம்பு

நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை

நேர்நிரை நேர்நேர் நிரை(பு)

தேமா-புளிமா-கருவிளம்-கூவிளம்
கூவிளம்-தேமா-பிறப்பு

rnk
(இது இயற்சீர் மட்டுமுள்ள குறள். அவ்விழையிலும் பதிவு)

nkantan r

unread,
Jun 25, 2018, 5:21:06 AM6/25/18
to மின்தமிழ்
அடுத்ததாக,...

ஒழுக்கமுடைமை. 132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

பரிந்/தோம்/பிக் காக்/க ஒழுக்/கந் தெரிந்/தோம்/பித்
தே/ரினு மஃ/தே துணை.

நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநேர் நிரைநேர்நேர்

நேர்நிரை நேர்நேர் நிரை

கருமாங்காய்-தேமா-புளிமா-கருமாங்காய்
கூவிளம்-தேமா-மலர்

rnk

kanmani tamil

unread,
Jun 25, 2018, 8:34:39 AM6/25/18
to mintamil
நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநேர் நிரைநேர்நேர்
நேர்நிரை நேர்நேர் நிரை
கருமாங்காய்-தேமா-புளிமா-கருமாங்காய்
கூவிளம்-தேமா-மலர்
rnk///

தவறு ........புளிமாங்காய்........நீங்கள் சொல்லும் புது வாய்பாடு பொருத்தமாக இருந்தாலும் அது மரபு அன்று ............கருப்பு மாங்காய் உலகிலும் கிடையாது .  
கண்மணி 

nkantan r

unread,
Jun 25, 2018, 12:58:10 PM6/25/18
to மின்தமிழ்
சும்மா! மாங்காய் என்றாலே ( எச்சிலூறும்) புளிப்புதானே. அதனால் புளிமாங்காய் என்ன? கருமாங்காய் என்றேன். :)
rnk

nkantan r

unread,
Jun 28, 2018, 12:04:39 AM6/28/18
to மின்தமிழ்
எமை போல குறைவான தமிழறிவும், யாப்பனுபவமும் உள்ளவர்க்கு, குறட்பாக்களை அலகிடுகையில் பெரும் இடர்கற்களாய் வருவன குற்றியலுகரம், ஆய்தம், அளபெடை.

குற்றியலுகரமும் ஆய்தமும் பொதுவாக அலகு கொள்ளா. குற்றியலுகரம், புணர்ச்சியில் பின்னொற்று வருகையில் குறிலாய்த் தோன்றி அலகு பெறும். தளை தட்டினால் அலகு பெறும்.

அதே முறையில், ஆய்தமும் பொதுவாக ஒற்றாக அலகு பெறாது. தளை தட்டினால் அலகு பெறும்.

======≠=====≠==========≠=====≠

அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:162)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்


அழுக்காற்றின் அன்மை பெறின்

விழுப்/பேற்/றி னஃ/தொப்/ப தில்/லையார் மாட்/டு
மழுக்/காற்/றி னன்/மை பெறின்.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர்

நிரைநேர்நேர் நேர்நேர் நிரை

புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா
புளிமாங்காய் தேமா மலர்
=======≠======≠======≠====

rnk

kanmani tamil

unread,
Jun 28, 2018, 12:44:04 AM6/28/18
to mintamil
///விழுப்/பேற்/றி னஃ/தொப்/ப தில்/லையார் மாட்/டு

மழுக்/காற்/றி னன்/மை பெறின். 
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா 
புளிமாங்காய் தேமா மலர்///
சரியாக உள்ளது 
கண்மணி  



rnk

nkantan r

unread,
Jun 28, 2018, 2:21:32 AM6/28/18
to மின்தமிழ்
அடுத்த ஃ உள்ள குறள், மீண்டும் அழுக்காறமை யில்.

அதிகாரம்:அழுக்காறாமை

குறள் எண்: 170

(இங்கு ஆய்தம் ஒற்றாக.)

அழுக்காற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

அழுக்/காற் றகன்/றா/ரு மில்/லையஃ தில்/லார்
பெருக்/கத்/திற் றீர்ந்/தா/ரு மில்.

நிரைநேர் நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர்

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்.

புளிமா புளிமாங்காய் கூவிளம் தேமா
புளிமாங்காய் தேமாங்காய் நாள்.

rnk

1). இணையத்தில் பல இடங்களில் ' 'அழுக்கற்று அகன்றாரும்' என்றே பதிவாயுள்ளது.
2) மதுரை தமிழிலக்கிய மின் தொகுப்பு பதிவிலும் ( தேமொழி அம்மையார் எடுத்த நகல்) அப்படியே.

kanmani tamil

unread,
Jun 28, 2018, 2:31:03 AM6/28/18
to mintamil
என்னுடைய புத்தகத்திலும் ,"அழுக்கற்று ...." என்று தான் உள்ளது.
அலகிட்டது சரியே .
கண்மணி 

nkantan r

unread,
Jun 28, 2018, 3:24:04 AM6/28/18
to மின்தமிழ்
எது சரி?

உவேசா, கிவாஜ முதிலியோர் என்ன சொல்லியுள்ளனர்.

'பெருக்கத்தில்' சொல்லோடு இயைய 'அழுக்கற்று' என்றாரா?

கெடுப்பதும் என்பதை 'கெடுப்பதூம்' என்று நீட்டினார்போல் அழுக்காற்று என்பதை அழுக்கற்று என்று குறுக்கினாரோ??

வஉசி அதிகாரமே ' அழுக்கறாமை' என்றும், அழுக்கறு என்றால் பொறாமை கொள் என்றும் பொருள் தருகிறார். (அஃதாவது, பொறாமை கொள்ளாமை.
தருமர் பாடம் அழுக்கறாமை. மணக்குடவர், நச்சர், பரிமேலழகர் பாடம் ‘அழுக்காறாமை’. தாமத்தர் பாடம் ‘அழுக்காறுறாமை’.)

http://vocarappal.blogspot.com/2010/09/blog-post_4649.html

ஆனால் இந்தக் குறளை அழுக்காற்று என்று பாடம் கொள்கிறார் (அகலம்: தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘அழுக்காற் றகன்றாரும்’. பரிமேலழகர் பாடம் ‘அழுக்கற் றகன்றாரும்’. நச்சர் பாடம் ‘அழுக்கற் றகன்றதும்’, ‘பெருக்கத்திற் றீர்ந்ததும்’. இல்லார் என்பது ஏழாம் வேற்றுமைத் தொகை.)

rnk


kanmani tamil

unread,
Jun 28, 2018, 7:44:41 AM6/28/18
to mintamil
அழுக்காறு  =பொறாமை 
இச்சொல் வழக்காறு /வரலாறு /கோளாறு போன்ற சொற்களைப் போல் '-ஆறு ' என்னும் விகுதி பெற்ற சொல்.
"அழுக்காற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்"
'அழுக்காற்று அகன்றாரும் இல்லை '---பொறாமையால் பெரியார் ஆனவரும் இல்லை...
'-ஆல் 'என்னும் வேற்றுமைப் பொருள் தர அழுக்காறு >>>அழுக்காற்று என்றானது எனலாம் .  
'அழுக்கற்று ' என்னும் போது அடிச்சொல்லுடன் கூடிய '-ஆறு' தொலைந்து போய் விடுகிறது .ஏன் ?என்னும் கேள்வி எழுகிறது.

இது என்னுடைய கருத்து.
பிறர் கருத்து தெரியவில்லை.
கண்மணி    


nkantan r

unread,
Jun 28, 2018, 9:23:42 AM6/28/18
to மின்தமிழ்
வெஃகாமை. குறள் 171

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

நடு/வின்/றி (நடு/வன்/றி) நன்/பொருள் வெஃ/கின் குடி/பொன்/றுங் (குடி/பொன்/றிக்)
குற்/றமு மாங்/கே தரும்.

நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர்நேர்

நேர்நிரை நேர்நேர் நிரை.

புளிமாங்காய் கூவிளம் தேமா புளிமாங்காய்

கூவிளம் தேமா மலர்.

( ஃ ஒற்றாக அலகு கொள்ளவில்லை.)
====≠====≠====≠====≠====≠====
172
படு/பயன் வெஃ/கிப் பழிப்/படு/வ செய்/யார்
நடு/வன்/மை நா/ணு பவர்

நிரைநிரை நேர்நேர் நிரைநிரைநேர் நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை.

கருவிளம் தேமா கருவிளங்காய் தேமா
புளிமாங்காய் தேமா மலர்.

( ஃ ஒற்றாக அலகு கொள்ளவில்லை. குற்றியலுகரம் 'ணு' குறிலாக, நேரசையாக அலகிடப்பட்டது)
====≠====≠====≠====≠====≠====
173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

சிற்/றின்/பம் வெஃ/கி யற/னல்/ல செய்/யா/ரே
மற்/றின்/பம் வேண்/டு பவர்.

நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.

தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமா மலர்

( ஃ ஒற்றாக அலகு கொள்ளவில்லை. குற்றியலுகரம் 'டு' குறிலாக, நேரசையாக அலகிடப்பட்டது)
====≠====≠====≠====≠====≠====
174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

இல/மென்/று வெஃ/குதல் செய்/யார் புலம்/வென்/ற
புன்/மையில் காட்/சி யவர்.

நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர்நேர்

நேர்நிரை நேர்நேர் நிரை.

தேமாங்காய் கூவிளம் தேமா புளிமாங்காய்
கூவிளம் தேமா மலர்.

(ஃ ஒற்றாக அலகு கொள்ளவில்லை. குற்றியலுகரம் 'று' குறிலாக, நேரசையாக அலகிடப்பட்டது. சிலர் -நானும் கூட- இலமென்றும் என்று கொள்ளுவர். இல்லாவிட்டாலும்..என்ற பொருளில்..அப்பொழுது குற்றியலுகரம் மறையும்).
====≠====≠====≠====≠===≠====≠
175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

அஃ/கி யகன்/ற வறி/வென்/னாம் யார்/மாட்/டும்
வெஃ/கி வெறி/ய செயின்.

நேர்நேர் நிரைநேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர்

நேர்நேர் நிரைநேர் நிரை.

தேமா புளிமா புளிமாங்காய் தேமாங்காய்
தேமா புளிமா மலர்.

(இரண்டு இடங்களில் ஃ ஆய்தம். இரண்டும் அலகிடப்படா ஒற்றெழுத்து )
====≠====≠====≠====≠
176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

அருள்/வெஃ/கி யாற்/றின்/க(ண்) ணின்/றான் பொருள்/வெஃ/கிப்
பொல்/லா/த சூ/ழக் கெடும்.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர்

நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.

புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய்
தேமாங்காய் தேமா மலர்.
(இரண்டு இடங்களில் ஃ ஆய்தம். இரண்டும் அலகிடப்படா ஒற்றெழுத்து. ' பொருள்வெஃகின்', இன்னும் பொருள் தரும் பாடம்.)
====≠====≠====≠====≠====≠====
177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

வேண்/டற்/க வெஃ/கியா மாக்/கம் விளை/வயின்
மாண்/டற் கரி/தாம் பயன்.

நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநிரை

நேர்நேர் நிரைநேர் நிரை.

தேமாங்காய் கூவிளம் தேமா கருவிளம்
தேமா புளிமா மலர்.
====≠====≠====≠====≠====≠====
178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

அஃ/கா/மை செல்/வத்/திற் (கி)யா/தெனின் வெஃ/கா/மை
வேண்/டும் பிறன்/கைப் பொருள்.

நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர்நேர்

நேர்நேர் நிரைநேர் நிரை.

தேமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமாங்காய்
தேமா புளிமா மலர்.

( 'கு' குற்றியலுகரம் 'யா" வர 'கி' எனும் குற்றியலிகரமாய் மாறி, அலகிடாமல் வந்தது. ).
====≠====≠====≠====≠=====≠===
179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு.

அற/னறி/ந்து வெஃ/கா வறி/வுடை/யார்ச் சே/ருந்
திற/னறிந் தாங்/கே திரு.

கருவிளங்காய் தேமா கருவிளங்காய் தேமா
கருவிளம் தேமா மலர்.

( மிகச் சில குறட்களே இரண்டு கருவிளங்காய்ச் சீர் கொண்டவை. இது ஒன்று. அற/னறி/ந்து சீரில் 'து' குற்றியலுகரம் என அலகிடாவிடில் தளை தட்டாது: கருவிளம் சீராய் மாறும்.)

180


இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னும் செருக்கு.

இற/லீ/னு மெண்/ணா/து வெஃ/கின் விற/லீ/னும்
வேண்/டா/மை யென்/னுஞ் செருக்கு.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரை(பு).

புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய்
தேமாங்காய் தேமா பிறப்பு.

(1. 'து' எனும் குற்றியலுகரம் சீர் இறுதியில் குறிலாய் மெண்/ணா/து அலகிட்டு காட்டியுள்ளேன். மாறாக, மெண்/ணா துவெஃ/கின் என்றும் அலகிடலாம்.

2. செருக்கு எனும் எழுவாய்க்கு விறலீனும் என்னும் பயனிலை. அவ்வழியே, வெஃகின் என்பதற்கு பதில் 'வெஃகு' அல்லது 'வெஃகல்' எனுமெழுவாய் சிறப்பான பாடம்.

வஉசி:
http://vocarappal.blogspot.com/2010/09/blog-post_8628.html
தருமர் பாடம் ‘இறலீனு மின்னாத’. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘வெஃகின்’. வெஃகின் என்னும் பாடத்தைக் கொள்ளுங்கால், ‘அது’ என்னும் தோன்றா எழுவாயை வருவிக்க வேண்டிய திருத்தலானும், ‘வேண்டாமை யென்னுஞ் செருக்கு விறலீனும்’ என்று கூறியிருத்தல் போல ‘வெஃகல் இறலீனும்’ என்று கூறுதலே பொருத்த மாகலானும், ‘வெஃகல்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.
====≠====≠====≠====≠====≠====

iraamaki

unread,
Jun 28, 2018, 9:47:06 AM6/28/18
to mint...@googlegroups.com
ஏழையின் சொல் அம்பலத்தில் என்றும் ஏறாது. இருப்பினும் ஆய்ந்ததைச் சொல்லாது இருக்கமுடியவில்லை. அழுக்காறு என்பது பொறாமையல்ல. அழுக்காறு, அவ்வியம், அழுக்காறாமை என்ற ஒவ்வொன்றும் வேறு வேறானவை. இவற்றை இந்த 2 பதிவுகளில் விளக்கியுள்ளேன். ஆர்வமுள்ளோர் படியுங்கள்.
 
 
அன்புடன்,
இராம.கி.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Jun 28, 2018, 11:16:45 AM6/28/18
to மின்தமிழ்
23. ஔவியம் பற்றி படித்தேன் / படித்துக்கொண்டிருக்கிறேன். கடினமான தமிழ் நடை! (அல்லது தமிழில் ஆழமாய்ப் படித்து பழக்கமின்மையால்..)

பொறுத்தல், பொறுமை, பொறாதல், மனச்சுருக்கம், புழுக்கம், மனவெரிச்சல், பொறாமை என தொடர்பு விளங்கினாற்போல் தோன்றுகிறது. செய்யவள் தவ்வையின் தொன்ம விளக்கமும் தாங்களே தந்திருக்கலாம்

இணைய மின்னூலகத்தில் முதல் இரு பாகங்கள் மட்டும். அதுவும் jpg படத்தொகுப்பாக. தேடுகிறேன்

rnk


kanmani tamil

unread,
Jun 29, 2018, 1:40:11 AM6/29/18
to mintamil
///படு/பயன் வெஃ/கிப் பழிப்/படு/வ செய்/யார்

நடு/வன்/மை நா/ணு பவர்

நிரைநிரை நேர்நேர் நிரைநிரைநேர் நேர்நேர் 
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை.
கருவிளம் தேமா கருவிளங்காய் தேமா 

புளிமாங்காய் தேமா மலர்.
( ஃ ஒற்றாக அலகு கொள்ளவில்லை. குற்றியலுகரம் 'ணு' குறிலாக, நேரசையாக அலகிடப்பட்டது) ///

'ணு ' குற்றியலுகரம் அன்று .
குற்றியலுகரம் வல்லின மெய்யின் மேல் மட்டுமே ஏறி வரும். (கு,சு,டு,து,பு,று )
கண்மணி 


rnk




kanmani tamil

unread,
Jun 29, 2018, 1:45:16 AM6/29/18
to mintamil
///சிற்/றின்/பம் வெஃ/கி யற/னல்/ல செய்/யா/ரே

மற்/றின்/பம் வேண்/டு பவர். 
நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர்  நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.
தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய் 
தேமாங்காய் தேமா மலர்
( ஃ ஒற்றாக அலகு கொள்ளவில்லை. குற்றியலுகரம் 'டு' குறிலாக, நேரசையாக அலகிடப்பட்டது)///
இங்கு 'டு' குற்றியலுகரம் அன்று. ஏனெனில் குற்றியலுகரம் சொல்லின் இறுதியில் மட்டுமே இடம் பெறும்.
'வேண்டுபவர் ' என்ற சொல் வேண்டு /பவர் என்று இரண்டு சீர்களாகப் பிரிந்து நின்றது. அவ்வளவே.
கண்மணி  

nkantan r

unread,
Jun 29, 2018, 5:51:48 AM6/29/18
to மின்தமிழ்
'ணு'

மன்னிக்கவும். இது நான் வேண்டுமென்றே எழுதியது. தவறுதான்.

rnk

nkantan r

unread,
Jun 29, 2018, 5:56:46 AM6/29/18
to மின்தமிழ்
'வேண்டுபவர்'. டு குற்றியலுகரம் அல்ல. நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

Rnk

nkantan r

unread,
Jun 29, 2018, 2:09:02 PM6/29/18
to மின்தமிழ்
(அதிகாரம்: ஒப்புரவறிதல் 
குறள் எண்: 220)
ஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.

ஒப்/புர/வி னால்/வருங் கே/டெனி னஃ/தொரு/வன்
விற்/றுக்/கோட் டக்/க துடைத்து.

நேர்நிரைநேர் நேர்நிரை நேர்நிரை நேர்நிரைநேர்

நேர்நேர்நேர் நேர்நேர் நிரை(பு)

கூவிளங்காய் கூவிளம் கூவிளம் கூவிளங்காய் தேமாங்காய் தேமா பிறப்பு

(ஆய்தம் அலகிடப்படவில்லை, ஒற்றெனக் கொள்ளப்பட்டது.)

kanmani tamil

unread,
Jun 30, 2018, 2:11:36 AM6/30/18
to mintamil
நன்று 
சக 

nkantan r

unread,
Jun 30, 2018, 5:08:38 AM6/30/18
to மின்தமிழ்
அதிகாரம்: ஈகை குறள் எண்: 226.

ஃஃஃ இக்குறளில் அஃதொருவன் எனும் சீரில் ஆய்தம் குறிலாக அலகிடப்பட்டது ஃஃஃ

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

அற்/றா ரழி/பசி தீர்த்/த லஃ/தொரு/வன்
பெற்/றான் பொருள்/வைப் புழி.

நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநிரைநேர்

நேர்நேர் நிரைநேர் நிரை.

தேமா கருவிளம் தேமா கருவிளங்காய்

nkantan r

unread,
Jun 30, 2018, 1:52:09 PM6/30/18
to மின்தமிழ்
அடுத்து,
அதிகாரம்: புகழ்.  குறள் எண்:236

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

தோன்/றிற் புக/ழொடு தோன்/றுக வஃ/திலார்
தோன்/றிலிற் றோன்/றா/மை நன்று.

நேர்நேர் நிரைநிரை நேர்நிரை நேர்நிரை

நேர்நிரை நேர்நேர்நேர் நேர்(பு).

தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்
கூவிளம் தேமாங்காய் காசு.

(ஃ, ஆய்தம் ஒற்றாகவே கொள்ளப்பட்டது. அலகிடபடவில்லை.)

rnk

nkantan r

unread,
Jun 30, 2018, 1:53:33 PM6/30/18
to மின்தமிழ்
(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:242) 
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல்லாற்றால்

தேரினும் அஃதே துணை.
(பல்லாற்றான் என்பதும் பாடம்)

நல்/லாற்/றா னா/டி யரு/ளாள்/க பல்/லாற்/றாற்
றே/ரினு மஃ/தே துணை.

நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர்

நேர்நிரை நேர்நேர் நிரை.

தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா மலர்.

(ஆய்தம், ஃ, ஒற்றாக அலகிடபடவில்லை)

rnk

nkantan r

unread,
Jun 30, 2018, 2:00:00 PM6/30/18
to மின்தமிழ்
(அதிகாரம்: தவம் குறள் எண்: 262)

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

தவ/முந் தவ/முடை/யார்க் கா/கு மவ/மத/னை
யஃ/திலார் மேற்/கொள் வது.

நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநிரைநேர்

நேர்நிரை நேர்நேர் நிரை.

புளிமா கருவிளங்காய் தேமா கருவிளங்காய்

கூவிளம் தேமா மலர்.

(ஃ, ஆய்தம், ஒற்றாகவே வந்தது. அலகு பெறவில்லை)
=====≠=====≠=====≠=====≠=====

kanmani tamil

unread,
Jul 2, 2018, 12:36:48 AM7/2/18
to mintamil
சரியே 
சக 

nkantan r

unread,
Jul 5, 2018, 6:56:36 AM7/5/18
to மின்தமிழ்
அதிகாரம்: அவா அறுத்தல்  
குறள் எண்: 363)

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
ஆண்டும் அஃதொப்பது இல்

வேண்/டா/மை யன்/ன விழுச்/செல்/வ மீண்/டில்/லை
யாண்/டு மஃ/தொப்/ப தில்.

நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்.

தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய்

தேமா புளிமாங்காய் நாள்.

(மேலே காட்டியபடி அலகிட்டால், 'ஆண்டும் அஃதொப்பது' என்பதில் ஃ குறிலாக 'அகுதொப்பது' என்று வந்து அலகிடப்பட்டது)
=======≠======≠======≠======

rnk
( இதுவரை பார்த்த 24 குறட்பாக்களில் இது இரண்டாவது, ஃ குறிலாக அலகிடப்பட்டது)

nkantan r

unread,
Jul 5, 2018, 7:21:15 AM7/5/18
to மின்தமிழ்
அதிகாரம்: அவா அறுத்தல்  
குறள் எண்: 368)

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

அவா/வில்/லார்க்/ கில்/லா/குந் துன்/பமஃ துண்/டேற்
றவா/அது மேன்/மேல் வரும்.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர்
நிரைநிரை நேர்நேர் நிரை.

புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா
கருவிளம் தேமா மலர்.

1) ஃ ஆய்தம் அலகிடப்படவில்லை
2) சீரின் இறுதி எழுத்தாக ஃ; 'து' வரும்சீரின் உயிரோடு புணர்ந்து மறைந்தது.
===≠===≠===≠=======≠===≠===≠

nkantan r

unread,
Jul 5, 2018, 9:05:21 AM7/5/18
to மின்தமிழ்
அதிகாரம்: கேள்வி 
குறள் எண்: 414

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு 
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

கற்/றில னா/யினுங் கேட்/க வஃ/தொரு/வற்
கொற்/கத்/தி னூற்/றாந் துணை.

நேர்நிரை நேர்நிரை நேர்நேர் நிரைநிரைநேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.

கூவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
தேமாங்காய் தேமா மலர்.

1) இங்கு ஃ ஆய்தம் குறிலாக அலகிடப்பட்டது.
2) அஃதொருவன் இங்கு அ'கு'தொருவன்.
====≠====≠====≠====≠====≠====

nkantan r

unread,
Jul 5, 2018, 10:16:58 AM7/5/18
to மின்தமிழ்
அதிகாரம்: அறிவுடைமை
குறள் எண்: 427

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

அறி/வுடை/யா ரா/வ தறி/வா ரறி/விலா
ரஃ/தறி கல்/லா தவர்.

நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர் நிரைநிரை

நேர்நிரை நேர்நேர் நிரை.

கருவிளங்காய் தேமா புளிமா கருவிளம்
கூவிளம் தேமா மலர்.

ஆய்தம் ஃ அலகிடப்படவில்லை. ஒற்றாகவே வந்தது.
===≠===≠===≠===≠===≠===≠===≠=

kanmani tamil

unread,
Jul 5, 2018, 10:35:35 AM7/5/18
to mintamil
வேண்/டா/மை யன்/ன விழுச்/செல்/வ மீண்/டில்/லை
யாண்/டு மஃ/தொப்/ப தில்.
நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்.
தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய் 
தேமா புளிமாங்காய் நாள்.
(மேலே காட்டியபடி அலகிட்டால்,  'ஆண்டும் அஃதொப்பது' என்பதில் ஃ குறிலாக 'அகுதொப்பது' என்று வந்து அலகிடப்பட்டத
rnk///

அ ஃ தொப்பது =அஃது+ஒப்பது 
அஃது / ஒப் /ப(து)   என்று அலகிட்டால் நிரை நேர் நேர் =புளிமாங்காய்  
இங்கு ஆய்தத் தொடர்க குற்றியலுகரம் உள்ளது.....'ஃது ' அடுத்தடுத்து இரண்டு ஒலிகளும் வருங்கால் ஆய்தத்தைக் குறிலாகக் கொள்ள வேண்டியதில்லை  
'து ' சொல்லுக்கு இடையில் வருவதால் அதைக் குறிலாக அலகிட்டதாகக் கொள்ளலாம்.
கண்மணி 




kanmani tamil

unread,
Jul 5, 2018, 10:54:07 AM7/5/18
to mintamil
///அவா/வில்/லார்க்/ கில்/லா/குந் துன்/பமஃ துண்/டேற்
                                                            துன் / பம்  அஃது / உண் / டேல்
                                                            நேர் நேர்       நிரை நேர் நேர்
                                                                தேமா         புளிமாங்காய்
                                       மா முன் நிரை =இயற்சீர் வெண்டளை   
றவா/அது மேன்/மேல் வரும்.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர் 
நிரைநிரை நேர்நேர் நிரை.
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா 

கருவிளம் தேமா மலர்.
1) ஃ ஆய்தம் அலகிடப்படவில்லை
2) சீரின் இறுதி எழுத்தாக ஃ;  'து' வரும்சீரின் உயிரோடு புணர்ந்து மறைந்தது.///
'ஃ து '=ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ;சேர்த்துப் பாருங்கள் 
கண்மணி 


nkantan r

unread,
Jul 5, 2018, 1:26:04 PM7/5/18
to மின்தமிழ்
மீண்டும் ஆகா!

Quote:======

அ ஃ தொப்பது =அஃது+ஒப்பது
அஃது / ஒப் /ப(து) என்று அலகிட்டால் நிரை நேர் நேர் =புளிமாங்காய்
இங்கு ஆய்தத் தொடர்க குற்றியலுகரம் உள்ளது.....'ஃது ' அடுத்தடுத்து இரண்டு ஒலிகளும் வருங்கால் ஆய்தத்தைக் குறிலாகக் கொள்ள வேண்டியதில்லை
'து ' சொல்லுக்கு இடையில் வருவதால் அதைக் குறிலாக அலகிட்டதாகக் கொள்ளலாம்.
கண்மணி

======
ஆச்சர்யமான விளக்கம்:

அஃது, இதில் 'து' ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம், அதனால் அஃது நிரை அசை என்கிறீர்கள். து தனியாக இல்லை, பின் வரும் உயிரில் புணர்ந்து து+ஒ தொ ஆகியது ( குற்றொலி உ மறைந்து முற்றொலி ஒ வந்தது.)

ஆக 'அஃ' நிரையானது (தளை தட்டாமலிருக்க). அதனால் ஃ அலகிடப்பட்டது.

தங்கள் விளக்கம் யாப்பிலக்கண விதிகளிலிருந்தா? அல்லது 'teachers and students escapism' விதியா?

ஒற்று பின் வரும் மற்ற குற்றியலுகரங்களுக்கும் இவ்விதி எற்கலாமோ? எ.கா:

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

இரு/மை வகை/தெரிந் தீண்/டறம் பூண்/டார்
பெரு/மை பிறங்/கிற் றுலகு.

இங்கு 'ஈண்டுஅறம்'. டு குற்றியலுகரம், நடுவில் உள்ளது.
இதை ஈண்டு/அறம் என்றும் அலகிடலாமொ? அதுவும் நிரை நிரை என்று?

rnk

nkantan r

unread,
Jul 5, 2018, 1:34:43 PM7/5/18
to மின்தமிழ்
Quote:

/அவா/வில்/லார்க்/ கில்/லா/குந் துன்/பமஃ துண்/டேற்
துன் / பம் அஃது / உண் / டேல்
நேர் நேர் நிரை நேர் நேர்
தேமா புளிமாங்காய்
மா முன் நிரை =இயற்சீர் வெண்டளை
றவா/அது மேன்/மேல் வரும்.

==========

அம்மணீ. மீண்டும் ஆகா! நீங்கள் காட்டியுள்ளது:

துன் / பம் அஃது / உண் / டேல்
நேர் நேர் நிரை நேர் நேர்

சரி. இதைத்தொடர்ந்து வரும் 'தவாஅது மேன்மேல் வரும்' என்ன ஆகும்? உங்கள் 'புளிமாங்காய்' பின் நிரை அல்லவா வருகிறது?

rnk

nkantan r

unread,
Jul 6, 2018, 8:04:39 AM7/6/18
to மின்தமிழ்
அதிகாரம்: சிற்றினம் சேராமை குறள் எண்: 459
மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து.

மன/நலத்/தி னா/கு மறு/மைமற் றஃ/து
மின/நலத்/தி் னே/மாப் புடைத்து.

நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்
நிரைநிரைநேர் நேர்நேர் நிரை(பு).

கருவிளங்காய் தேமா கருவிளம் தேமா
கருவிளங்காய் தேமா பிறப்பு.

ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை.

kanmani tamil

unread,
Jul 6, 2018, 11:06:29 AM7/6/18
to mintamil
ஆச்சர்யமான விளக்கம்:
அஃது, இதில் 'து' ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம், அதனால் அஃது நிரை அசை என்கிறீர்கள். து தனியாக இல்லை, பின் வரும் உயிரில் புணர்ந்து து+ஒ தொ ஆகியது ( குற்றொலி உ மறைந்து முற்றொலி ஒ வந்தது.)
ஆக 'அஃ' நிரையானது (தளை தட்டாமலிருக்க). அதனால் ஃ அலகிடப்பட்டது.

'அஃது '  என்பது ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம். தளை தட்டாமலிருக்க 'அஃ ' நிரை அசை எனச்  சொல்வது தவறு என்பது என் கருத்து. ஏனென்றால்' ஃ ' உரிய மாத்திரை அரை. 'து ' உயிர்மெய் ; மொழியிடையில் வரும் போது அது குற்றியலுகரம் இல்லை. எனவே அதன் மாத்திரை ஒன்று.'ஃ' ஒற்றாகக் கருதப்பட்டு
'து' மொழியிடையில் வரும்போது 'அ ஃ து ' நிரையசை. .   


தங்கள் விளக்கம் யாப்பிலக்கண விதிகளிலிருந்தா? அல்லது 'teachers and students escapism' விதியா?

நீங்கள் திருக்குறளை ஆய்வு நோக்கில் அலகிடுகிறீர்கள் . நான் என்றுமே அப்படிச் செய்ததில்லை.பாடநோக்கில் மட்டுமே அலகிட்டு இருக்கிறேன். மேலே நான் சொன்ன மாத்திரை பற்றிய விதிகள் நன்னூலிலிருப்பவை .அசை பற்றிய கருத்துக்கள் மட்டுமே யாப்பிலக்கணத்தில் உள்ளவை. யாப்பை என்றுமே teacher/student
கோணத்தில் தான் பார்ப்பேன். அதில் ஆய்வு செய்ய எனக்கு ஆர்வமும் கிடையாது. 


ஒற்று பின் வரும் மற்ற குற்றியலுகரங்களுக்கும் இவ்விதி எற்கலாமோ? எ.கா:
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.



இ.சீ .வெ.தளை      இ.சீ.வெ.தளை இ.சீ.வெ.தளை  இ.சீ.வெ.தளை 

புளிமா             கருவிளம்              கூவிளம்            தேமா   
நிரை நேர்       நிரை நிரை            நேர் நிரை         நேர் நேர் 
இரு/மை         வகை/தெரிந்         தீண்/டறம்        பூண்/டார்

     இ.சீ.வெ.தளை    இ.சீ.வெ.தளை 
  புளிமா            புளிமா           காசு  
நிரை நேர்      நிரை நேர்       நிரைபு 

பெரு/மை       பிறங்/கிற்       றுலகு.

இங்கு 'ஈண்டுஅறம்'. டு குற்றியலுகரம், நடுவில் உள்ளது.
 இதை ஈண்டு/அறம் என்றும் அலகிடலாமொ? அதுவும் நிரை நிரை என்று?

இங்கே பிரித்து அலகிட வேண்டிய தேவை ஏற்படவில்லையே 
rnk
கண்மணி 

kanmani tamil

unread,
Jul 6, 2018, 11:39:05 AM7/6/18
to mintamil
///அவா/வில்/லார்க்/ கில்/லா/குந் துன்/பமஃ துண்/டேற்
றவா/அது மேன்/மேல் வரும்.///

'அஃதுண்டேல்'என்னும் தொடரை அஃ / துண்டேல் என்று பிரிப்பது சரியில்லை.ஏனென்றால் ஆய்தத்தின் பணி  அடுத்து வரும் ஒலியை  உரசொலியாக்குவது ஆகும்.    
எனவே                                                கூவிளம்        தேமா 
                                                          நேர்     நிரை     நேர் நேர்  
                                                         துன் / பமஃது   உண் / டேல் 
                                                                                                                    என்று பிரித்துப் பார்க்கலாம். குறிலிணையை அடுத்து 2மெய் வந்தாலும் /. ஆய்தம்&குற்றியலுகரம்
சேர்ந்து வந்தாலும் நிரையசையே .
  
///நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர் 

நிரைநிரை நேர்நேர் நிரை.

புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா 
கருவிளம் தேமா மலர். ///


இப்போது தளை  தட்ட வழி இல்லை.
பிரச்சினை தீர்ந்ததா ?
ஆனைக்கும் அடி  சறுக்கும் .
ஆசிரியருக்கு சறுக்காதா !!!
கண்மணி 

Pandiyaraja

unread,
Jul 6, 2018, 1:21:51 PM7/6/18
to மின்தமிழ்
ஒரு ஐயம்.
கீழ்வரும் மூன்றுகுறள்களைக் கவனியுங்கள்.
 

அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி

 

வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங் கல்

 

ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்

விற்றுக்கோட் டக்க துடைத்து


இந்த மூன்று குறள்களிலும் அஃதொருவன் என்ற சீர் வருகிறது. ஆனால் முதலாவது குறளில், அதனை கருவிளங்காய் எனக் கொள்கிறோம். மற்றவற்றில் அதனையே கூவிளங்காய் எனக் கொள்கிறோம். ஏன்? இதற்குச் சொல்லக்கூடிய காரணம். முதல்குறளில் தளை தட்டுகிறது.அதனால் ஆய்தம் அலகு பெறுகிறது என்கிறார்கள். அடுத்த இரண்டிலும் ஆய்தம் அலகு பெறவில்லை. ஆனால், இங்கு இருப்பது ஒரே சீர்தான் - அதாவது அஃதொருவன். அப்படியென்றால், இந்தக் குறள்களைக் கொடுக்காமல் அஃதொருவன் என்ற சொல்லை மட்டும் கொடுத்து இதற்குச் சீர் பிரிக்கச் சொன்னால் எப்படிப் பிரிப்பீர்கள்? இப்படியும் பிரிக்கலாம், அப்படியும் பிரிக்கலாம் என்று ஒரு ambiguous statement விடுவீர்களா? இடத்தைப் பொறுத்து ஒரு சொல் வெவ்வேறுவிதமாக அலகிடப்படுவது எப்படி நியாயம்? ஆய்தத்துக்கு எத்தனை மாத்திரை? ஒரேசொல்லில் அதற்குச் சிலநேரங்களில் அரை மாத்திரை என்றும், சில நேரத்தில் ஒரு மாத்திரை என்றும் கொள்வது எப்படி சரியாகும்?
இதற்குப் பதிலாக வேறு ஒன்று சொல்லலாம். ‘கு’ வுக்கு எததனை மாத்திரை? அது இடத்தைப் பொறுத்தது. குடை என்பதில் ‘கு’வுக்கு ஒரு மாத்திரை. தெற்கு என்பதில் ‘கு’வுக்கு அரை மாத்திரை.இதைப் போலத்தான் ஆய்தத்துக்கும் என்பீர்களா? ஆனால்குற்றியலுகரத்துக்கு தீர்க்கமான விதிகள் உண்டு. அப்படி ஆய்தத்துக்கு உண்டா? மீண்டும் கேட்கிறேன்.
ஒரே சொல்லில்,அதாவது ’அஃதொருவன் ’என்ற ஒரே சொல்லில் சிலசமயம் ஆய்தத்துக்கு 1 மாத்திரை என்றும், சில சமயம் அரை மத்திரை என்றும் கூறுவது எப்படி சரியாகும்?
ப.பாண்டியராஜா
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Jul 6, 2018, 2:20:00 PM7/6/18
to மின்தமிழ்
நான், இணையத்திலிருந்து கற்றவரை, 'அஃதொருவன்' எனும் தனிச்சொற்றொடர் 'அஃ/தொரு/வன்' என்று பிரிக்கப்படும். ஏனென்றால் இங்கு தளை என்ற கட்டுபாடு கிடையாது.

ஃ பொதுவாக ஒற்று போல, குற்றியலுகரம் போல 1/2 மாத்திரை கொண்டது, அலகு பெறாது. ஆனால் தளை தேவைப் படும்போது அலகு பெறும். இது பாட்டின் தேவைக்கேற்ப.

ஃ மட்டுமல்ல, குற்றியலுகரம் சில இடங்களில் அலகு பெறுகிறது.

ஒருவேளை முன்பு குற்றியலுகரம் தனி அடையாளம் கொண்டதாய்க் காட்டப்பட்டது ( கீற்று, புள்ளி இப்படி) அதுபோலவே ஆய்தமும் குறிலாய் வருகையில் தனி வரிவடிவம் இருந்ததோ?

rnk

kanmani tamil

unread,
Jul 6, 2018, 2:25:47 PM7/6/18
to mintamil


  தேமா       கருவிளம்        தேமா      கருவிளங்காய்  

நேர் நேர்     நிரை நிரை      நேர் நேர்    நிரை நிரை நேர்   

அற் / றா      ரழி / பசி      தீர்த் / தல்  அஃது / ஒரு / வன்

பெற்றான் பொருள்வைப் புழி.


   தேமா       கருவிளம்      தேமாங்காய்        கூவிளங்காய்   

 நேர் நேர்     நிரை நிரை     நேர் நேர் நேர்      நேர் நிரை நேர்      

வீழ் / நாள்    படா / அமை      நன் / றாற் / றின்       அஃ / தொரு / வன்

வாழ்நாள் வழியடைக்குங் கல்.


 கூவிளங்காய்     கூவிளம்          கூவிளம்       கூவிளங்காய்  

நேர் நிரை நேர்    நேர் நிரை        நேர் நிரை      நேர் நிரை நேர்  

ஒப் / புர / வி     னால் / வருங்     கே / டெனி     னஃ / தொரு / வன்

விற்றுக்கோட் டக்க துடைத்து.


///இந்த மூன்று குறள்களிலும் அஃதொருவன் என்ற சீர் வருகிறது.///
ஆமாம் .

 ///ஆனால் முதலாவது குறளில், அதனை கருவிளங்காய் எனக் கொள்கிறோம். மற்றவற்றில் அதனையே கூவிளங்காய் எனக் கொள்கிறோம். ஏன்? இதற்குச் சொல்லக்கூடிய காரணம். முதல்குறளில் தளை தட்டுகிறது.அதனால் ஆய்தம் அலகு பெறுகிறது என்கிறார்கள்.///
இல்லை . முதல் குரலில் தளை தட்டுவதால் ....அ ஃ து / ஒரு /வன்  எனப் பிரிப்பதன் மூலம் குற்றியலுகரத்தை முற்றியலுகரம் ஆக்கி அதற்குரிய ஒரு மாத்திரையைக் கொடுத்து நிரைஅசை ஆக்குகிறோம். ஆய்தம் அலகு பெறாது. 

 /// அடுத்த இரண்டிலும் ஆய்தம் அலகு பெறவில்லை.///
ஆய்தத்திற்கு உரிய மாத்திரை அரை .அதனால் ஆய்தம் அலகு பெறாது.

///ஆனால், இங்கு இருப்பது ஒரே சீர்தான் - அதாவது அஃதொருவன். அப்படியென்றால், இந்தக் குறள்களைக் கொடுக்காமல் அஃதொருவன் என்ற சொல்லை மட்டும் கொடுத்து இதற்குச் சீர் பிரிக்கச் சொன்னால் எப்படிப் பிரிப்பீர்கள்? ///
தமிழில் செய்யுளுக்கு மட்டும் தான் அலகு பிரித்துப் பார்ப்போமே தவிர சொல்லுக்கு அலகிட வேண்டிய தேவையே இல்லை.

///இப்படியும் பிரிக்கலாம், அப்படியும் பிரிக்கலாம் என்று ஒரு ambiguous statement விடுவீர்களா?///
மேலே மூன்று குறள்களை அலகிட்ட போது என்ன statement விட்டிருக்கிறேன்?
 
/// இடத்தைப் பொறுத்து ஒரு சொல் வெவ்வேறுவிதமாக அலகிடப்படுவது எப்படி நியாயம்?///
செய்யுளில் ஓசை குறையாமலிருக்க ஒரு குறளில் பிரித்து எழுதி அலகிட்டுள்ளோம் .மற்ற இரு குறள்களில் சேர்த்து எழுதி அலகிட்டுள்ளோம். நியாயமே .
  
/// ஆய்தத்துக்கு எத்தனை மாத்திரை? ஒரேசொல்லில் அதற்குச் சிலநேரங்களில் அரை மாத்திரை என்றும், சில நேரத்தில் ஒரு மாத்திரை என்றும் கொள்வது எப்படி சரியாகும்?///
ஏற்கெனவே பதில் சொல்லி விட்டேன்.

///இதற்குப் பதிலாக வேறு ஒன்று சொல்லலாம். ‘கு’ வுக்கு எததனை மாத்திரை? அது இடத்தைப் பொறுத்தது. குடை என்பதில் ‘கு’வுக்கு ஒரு மாத்திரை. தெற்கு என்பதில் ‘கு’வுக்கு அரை மாத்திரை.இதைப் போலத்தான் ஆய்தத்துக்கும் என்பீர்களா? ஆனால்குற்றியலுகரத்துக்கு தீர்க்கமான விதிகள் உண்டு. அப்படி ஆய்தத்துக்கு உண்டா?///
'கு ' குற்றியலுகரமாக வரும்போது அரை மாத்திரை. முற்றியலுகரமாக வரும்போது ஒரு மாத்திரை.
ஆய்தம் =அரை மாத்திரை ;ஆய்தக்குறுக்கமாக வரும்போது கால் மாத்திரை.

 ///மீண்டும் கேட்கிறேன்.
ஒரே சொல்லில்,அதாவது ’அஃதொருவன் ’என்ற ஒரே சொல்லில் சிலசமயம் ஆய்தத்துக்கு 1 மாத்திரை என்றும், சில சமயம் அரை மத்திரை என்றும் கூறுவது எப்படி சரியாகும்?///
ஆய்தத்துக்கு ஒரு மாத்திரை ஒரு போதும் கிடையாது.

ப.பாண்டியராஜா
கண்மணி  
 


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Jul 6, 2018, 2:41:50 PM7/6/18
to mintamil
///நான், இணையத்திலிருந்து கற்றவரை, 'அஃதொருவன்' எனும் தனிச்சொற்றொடர் 'அஃ/தொரு/வன்' என்று பிரிக்கப்படும். ஏனென்றால் இங்கு தளை என்ற கட்டுபாடு கிடையாது. ///


ஃ பொதுவாக ஒற்று போல, குற்றியலுகரம் போல 1/2 மாத்திரை கொண்டது, அலகு பெறாது. ஆனால் தளை தேவைப் படும்போது அலகு பெறும். இது பாட்டின் தேவைக்கேற்ப. 
நான் இதுவரை அப்படிப் பார்த்ததில்லை .நீங்கள் ஆர்வத்தோடு அலகிட்ட போது நானும் உங்களோடு சேர்ந்து பழையதை நினைவூட்டி .....
படித்த காலத்தில் பத்து குறளுக்கு மேல் அலகிட்டுப் பார்த்ததில்லை....தேர்வு நோக்கிற்கு அது போதும். 
 பாடமெடுத்த போதும் தேர்வு நோக்கே ....ஆனால் என் வகுப்பு ஒருநாளும் one-way traffic ஆக இருக்காது. நானும் என் மாணவர்களும் சேர்ந்து ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வோம். ஆனால் கடந்த நான்கு நாட்களாக இந்த இழையில் இடம்பெறும் தொனி எனக்கு வித்தியாசமாக ஒலிக்கிறது. 

///ஒருவேளை முன்பு குற்றியலுகரம் தனி அடையாளம் கொண்டதாய்க் காட்டப்பட்டது ( கீற்று, புள்ளி இப்படி) அதுபோலவே ஆய்தமும் குறிலாய் வருகையில் தனி வரிவடிவம் இருந்ததோ?///
ஆய்தம் குறிலாய் வருமா? இது எனக்கு புதுச்  செய்தி. புரியவும் இல்லை.
அதனால் போதும் என்று நினைக்கிறேன். நன்றி .
rnk ///
கண்மணி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

iraamaki

unread,
Jul 6, 2018, 9:27:46 PM7/6/18
to mint...@googlegroups.com
ஐயா,
 
வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
 
நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர் நேர்நிரைநேர்
நேர்நேர் நிரைநிரைநேர் நேர்
------------------------
ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து
 
நேர்நிரை நேர்நிரை நேர்நிரை நேர்நிரைநேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரைபு
-------------------------
என்ற குறள்களில் அமைவதுபோல் நாலாஞ்சீரை நேர்நிரைநேர் என்றே கொள்ளவேண்டுமெனில்,
 
அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
 
நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நேர்நிரைநேர்
நேர்நேர் நிரைநேர் நிரை
 
என்ற குறளின் மூன்றாஞ்சீரில் நமக்குத் தெரியாது, ஏதோவொரு படியெடுப்புப் பிழை நடந்திருக்குமோ? பழஞ்சுவடிகளில் பாடபேதங்கள் ஏதுமுண்டா? தெரியவில்லை. காட்டாக, ”தீர்த்தலோடு” இங்கே இன்னொரு இல் பயிலுமானால் (தீர்த்தல்+ இல்+ அஃதொருவன் = தீர்த்தலி லஃதொருவன் என்றமைய) யாப்பில் சிக்கலில்லை. பொருளும் மாறாது அதேபொழுது ”ஈசனின் பொற்றாமரைக் குளத்தில் சங்கப்பலகை நீண்டு இடங்கொடுத்த திருக்குறளில் இதுபோல் கைவக்க நாம் யார்?” என்றும் தோன்றுகிறது. (20 ஆம் நூற்றாண்டில் குறளிற் கைவந்த ஆங்கிலேய ஆட்சியாளர் கதை என்னைப் பயமுறுத்துகிறது.) இது யாப்புபற்றிக் குறித்து வைக்கவேண்டிய குறளே. அதனாற்றான், ஒருசிலர் ஃ எழுத்தில் கைவைத்து ஒரு குறளில் அரை மாத்திரையும், இன்னொரு குறளில் இரு மாத்திரையும் கொடுக்கமுனைந்தார் போலும். அப்படிச் செய்கையில், ”இடம்பொறுத்து இருவேறு மாத்திரைகள் ஓரெழுத்திற்கு அமைய இலக்கண விதியென்ன? - என்ற கேள்வி ஞாயமாய் எழுகிறது. பேசாமல் படியெடுப்புப் பிழை என்றே கொள்ளலாமா? அப்படிச்செய்தால் யாப்பதிகாரம், இலக்கணம் என்ற இரண்டிலும் பிழை தவிர்க்கலாமே?. என்ன சொல்கிறீர்கள்?
 
அன்புடன்,
இராம.கி.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

nkantan r

unread,
Jul 7, 2018, 12:20:12 AM7/7/18
to மின்தமிழ்
@ இராம கி!

அய்யா, தாங்கள் வெளிப்படையாகக் கேட்டதே பலர் மனதிலும் உள்ளிருக்கும் எண்ணம்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் இந்த அலகிடும் முயற்சியில் நுழைந்தேன். SSLC படித்தபோது கடைசியாக முறையாக அசை, சீர் இதெல்லாம் பழக்கம். பின் தொடர்பில்லாமல் போனது. தமிழ் யாப்பு பின்புலம் இல்லாததால் இணையத்தில் படித்துப்பார்க்கிறேன். பலரும் எழுதுவது குற்றியலுகரம், ஆய்தம் மிகப்பெருவாரியாக மெய்போலவே அலகு பெறா --ஆனால்... இந்த ஆனால் இழுப்புதான் இங்கு பெருங்கேள்வி.

இதுமற்றுமின்றி, இல்/இல அன்று/அன்றும், சேராதார்/சேராதவர் என்று இதுபோல் சிறிய-சிறிய பாடபேதங்கள். உரையாசிரியர் விளக்கத்தில் இவை தெரிகின்றன.

எகா:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா
ரிறைவனடி சேரா தார்.

பிற/விப் பெருங்/கடல் நீந்/துவர் நீந்/தா
ரிறை/வ னடி/சே/ரா தார்.

பிற/விப் பெருங்/கடல் நீந்/துவர் நீந்/தா
ரிறை/வன/டி சே/ரா தவர்.
=====
rnk

Pandiyaraja

unread,
Jul 7, 2018, 12:34:14 AM7/7/18
to மின்தமிழ்
தளைதட்டும்போது ஆய்தம் அலகு பெறும் என்பது very very weak defence.  அவ்வாறு தளைதட்டப் பாடி, வலிய ஆய்தத்துக்கு அலகுகொடுத்து என்பதெல்லாம்,எனக்கென்னவோ, பாடலாசிரியரின் திறமையையோ, தமிழ் இலக்கணத்தின் நுணுக்கத்தையோ குறை சொல்வது போல் தோன்றுகிறது. இதற்கு வேறு ஒரு காரணம் இருக்கவேண்டும். இதற்குத் துணையாக குற்றியலிகரத்தை இழுக்கவேண்டும். பின்னர் எழுதுகிறேன்.
ப.பாண்டியராஜா

On Saturday, July 7, 2018 at 12:11:50 AM UTC+5:30, kanmanitamilskc wrote:
///நான், இணையத்திலிருந்து கற்றவரை, 'அஃதொருவன்' எனும் தனிச்சொற்றொடர் 'அஃ/தொரு/வன்' என்று பிரிக்கப்படும். ஏனென்றால் இங்கு தளை என்ற கட்டுபாடு கிடையாது. ///

ஃ பொதுவாக ஒற்று போல, குற்றியலுகரம் போல 1/2 மாத்திரை கொண்டது, அலகு பெறாது. ஆனால் தளை தேவைப் படும்போது அலகு பெறும். இது பாட்டின் தேவைக்கேற்ப. 
நான் இதுவரை அப்படிப் பார்த்ததில்லை .நீங்கள் ஆர்வத்தோடு அலகிட்ட போது நானும் உங்களோடு சேர்ந்து பழையதை நினைவூட்டி .....
படித்த காலத்தில் பத்து குறளுக்கு மேல் அலகிட்டுப் பார்த்ததில்லை....தேர்வு நோக்கிற்கு அது போதும். 
 பாடமெடுத்த போதும் தேர்வு நோக்கே ....ஆனால் என் வகுப்பு ஒருநாளும் one-way traffic ஆக இருக்காது. நானும் என் மாணவர்களும் சேர்ந்து ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வோம். ஆனால் கடந்த நான்கு நாட்களாக இந்த இழையில் இடம்பெறும் தொனி எனக்கு வித்தியாசமாக ஒலிக்கிறது. 

///ஒருவேளை முன்பு குற்றியலுகரம் தனி அடையாளம் கொண்டதாய்க் காட்டப்பட்டது ( கீற்று, புள்ளி இப்படி) அதுபோலவே ஆய்தமும் குறிலாய் வருகையில் தனி வரிவடிவம் இருந்ததோ?///
ஆய்தம் குறிலாய் வருமா? இது எனக்கு புதுச்  செய்தி. புரியவும் இல்லை.
அதனால் போதும் என்று நினைக்கிறேன். நன்றி .
rnk ///
கண்மணி 
2018-07-06 23:50 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
நான், இணையத்திலிருந்து கற்றவரை, 'அஃதொருவன்' எனும் தனிச்சொற்றொடர் 'அஃ/தொரு/வன்' என்று பிரிக்கப்படும். ஏனென்றால் இங்கு தளை என்ற கட்டுபாடு கிடையாது.

ஃ பொதுவாக ஒற்று போல, குற்றியலுகரம் போல 1/2 மாத்திரை கொண்டது, அலகு பெறாது. ஆனால் தளை தேவைப் படும்போது அலகு பெறும். இது பாட்டின் தேவைக்கேற்ப.

ஃ மட்டுமல்ல, குற்றியலுகரம் சில இடங்களில் அலகு பெறுகிறது.

ஒருவேளை முன்பு குற்றியலுகரம் தனி அடையாளம் கொண்டதாய்க் காட்டப்பட்டது ( கீற்று, புள்ளி இப்படி) அதுபோலவே ஆய்தமும் குறிலாய் வருகையில் தனி வரிவடிவம் இருந்ததோ?

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja

unread,
Jul 7, 2018, 12:39:29 AM7/7/18
to மின்தமிழ்
அன்புள்ள ஐயா!
எனக்கென்னவோ இது பாடபேதமாகத் தெரியவில்லை. தளைதட்டப் பாடுவது திருக்குறள் மரபல்ல. தளைதட்டும்போது அலகிட்டுக் கொள்வது ஒரு நொண்டிச் சாக்கு போல் தோன்றுகிறது. வேறு ஓர் உள் காரணம் இருக்கவேண்டும். இது பற்றி திருக்குறள் மாநாட்டில் கேள்வி எழுப்பி விடையும் தந்திருக்கிறேன். பின்னர் விரிவாக எழுதுகிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா

On Saturday, July 7, 2018 at 6:57:46 AM UTC+5:30, இராம.கி wrote:
ஐயா,
 
வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
 
நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர் நேர்நிரைநேர்
நேர்நேர் நிரைநிரைநேர் நேர்
------------------------
ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து
 
நேர்நிரை நேர்நிரை நேர்நிரை நேர்நிரைநேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரைபு
-------------------------
என்ற குறள்களில் அமைவதுபோல் நாலாஞ்சீரை நேர்நிரைநேர் என்றே கொள்ளவேண்டுமெனில்,
 
அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
 
நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நேர்நிரைநேர்
நேர்நேர் நிரைநேர் நிரை
 
என்ற குறளின் மூன்றாஞ்சீரில் நமக்குத் தெரியாது, ஏதோவொரு படியெடுப்புப் பிழை நடந்திருக்குமோ? பழஞ்சுவடிகளில் பாடபேதங்கள் ஏதுமுண்டா? தெரியவில்லை. காட்டாக, ”தீர்த்தலோடு” இங்கே இன்னொரு இல் பயிலுமானால் (தீர்த்தல்+ இல்+ அஃதொருவன் = தீர்த்தலி லஃதொருவன் என்றமைய) யாப்பில் சிக்கலில்லை. பொருளும் மாறாது அதேபொழுது ”ஈசனின் பொற்றாமரைக் குளத்தில் சங்கப்பலகை நீண்டு இடங்கொடுத்த திருக்குறளில் இதுபோல் கைவக்க நாம் யார்?” என்றும் தோன்றுகிறது. (20 ஆம் நூற்றாண்டில் குறளிற் கைவந்த ஆங்கிலேய ஆட்சியாளர் கதை என்னைப் பயமுறுத்துகிறது.) இது யாப்புபற்றிக் குறித்து வைக்கவேண்டிய குறளே. அதனாற்றான், ஒருசிலர் ஃ எழுத்தில் கைவைத்து ஒரு குறளில் அரை மாத்திரையும், இன்னொரு குறளில் இரு மாத்திரையும் கொடுக்கமுனைந்தார் போலும். அப்படிச் செய்கையில், ”இடம்பொறுத்து இருவேறு மாத்திரைகள் ஓரெழுத்திற்கு அமைய இலக்கண விதியென்ன? - என்ற கேள்வி ஞாயமாய் எழுகிறது. பேசாமல் படியெடுப்புப் பிழை என்றே கொள்ளலாமா? அப்படிச்செய்தால் யாப்பதிகாரம், இலக்கணம் என்ற இரண்டிலும் பிழை தவிர்க்கலாமே?. என்ன சொல்கிறீர்கள்?
 
அன்புடன்,
இராம.கி.

nkantan r

unread,
Jul 7, 2018, 1:21:49 AM7/7/18
to மின்தமிழ்
@ moderators: குறள்களின் அசை-சீர் அலகிடு பேதங்கள் என்று தனியிழைக்கு இவ்விவாதத்தை மாற்றுங்கள்

@திரு.பாண்டியராஜன், Mrs kanmani, /others,

மீதமிருக்கும் ஃ-குறியுள்ள குறட்பாக்களைத், தற்சமய புரிதல்படி (அலகிடாமலும், தளை தட்டினால் அலகிட்டும்) தொடர்கிறேன். தொடர்ந்து படித்துத் தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள்.

@கண்மணி. 'அஃது' தனி நிரையாக நான் கொள்ளவில்லை. (As i am in Chennai without a laptop and using an android, tough to show quotes when replying. So bear with me. I would reply later in detail on this when back in Mumbai.

rnk

nkantan r

unread,
Jul 7, 2018, 1:51:59 AM7/7/18
to மின்தமிழ்
அதிகாரம்: வலியறிதல்
குறள் எண்: 476

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி ஆகி விடும்.

நுனிக்/கொம்/ப ரே/றினா ரஃ/திறந் தூக்/கி
னுயிர்க்/கிறு/தி யா/கி விடும்.

நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நிரை நேர்நேர்

நிரைநிரைநேர் நேர்நேர் நிரை.

புளிமாங்காய் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளங்காய் தேமா மலர்.

ஆய்தம் (ஃ) ஒற்றாகவே கொள்ளப்பட்டது. அலகு பெறவில்லை.

nkantan r

unread,
Jul 7, 2018, 5:23:20 AM7/7/18
to மின்தமிழ்
அதிகாரம்: பொச்சாவாமை
குறள் எண்: 536

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃதுஒப்பது இல்.

இழுக்/கா/மை யார்/மாட்/டு மென்/றும் வழுக்/கா/மை 
வா/யி னஃ/தொப்/ப தில்.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்.

புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமா புளிமாங்காய் நாள்.

1) இப்படி அலகிட்டால் தளை தட்டாது ஆனால், ஃ (ஆய்தம்) குறிலாக அலகிடப்பட்டது.

2) மாறாக, 'இல்' என்பதை 'இல' எனக்கொண்டால்,

இழுக்/கா/மை யார்/மாட்/டு மென்/றும் வழுக்/கா/மை 
வா/யினஃ தொப்/ப தில.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரை.

புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய் கூவிளம் தேமா மலர்.

இப்படி அலகிட்டால் தளை தட்டாது; ஃ (ஆய்தம்) அலகிடத் தேவையும் இல்லை.

3) இணையத்தில் பல இடங்களில் இக்குறள் ஆய்தம் இல்லாமலும் வருகிறது
http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0536.aspx

http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=31&auth_pub_id=31&pno=54
ஆனால் எப்படி சீர் பிரிப்பார்கள் என்பது கேள்வி...

nkantan r

unread,
Jul 7, 2018, 8:46:24 AM7/7/18
to மின்தமிழ்
அதிகாரம்: செங்கோன்மை
குறள் எண்: 541

ஒர்ந்துகண் ணோடாது
இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

ஓர்ந்/துகண் ணோ/டா திறை/புரிந் (தி)யார்/மாட்/டுந் 
தேர்ந்/துசெய் வஃ/தே முறை.

நேர்நிரை நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர்

நேர்நிரை நேர்நேர் நிரை.

கூவிளம் தேமா கருவிளம் தேமாங்காய்

கூவிளம் தேமா மலர்.

(ஆய்தம், ஃ அலகிடப்படவில்லை.
குற்றியலுகரம் து பின்வரும் யா-வுடன் புணர்ந்து குற்றியலிகரம் தி ஆயிற்று -அலகிடப்படவில்லை.)

nkantan r

unread,
Jul 7, 2018, 10:37:35 AM7/7/18
to மின்தமிழ்
அதிகாரம்: கொடுங்கோன்மை
குறள் எண்: 556

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.

மன்/னர்க்/கு மன்/னுதற் செங்/கோன்/மை யஃ/தின்/றேல் 
மன்/னா/வா மன்/னர்க் கொளி.

நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.

ஆய்தம், ஃ அலகிடப்படவில்லை. 'மன்னர்க்கு' இருமுறை வந்தது- ஒருமுறை கு அலகுபெற்றது; இரண்டாம் முறை கு பின் வரும் உயிரோடு புணர்ந்த்து.
====≠====≠====≠====≠====≠====

nkantan r

unread,
Jul 7, 2018, 12:16:03 PM7/7/18
to மின்தமிழ்
அதிகாரம்: கண்ணோட்டம்.
குறள் எண்: 572

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

கண்/ணோட்/டத் துள்/ள துல/கிய(ல்) லஃ/திலா 
ருண்/மை நிலக்/குப் பொறை.

நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நிரை

நேர்நேர் நிரைநேர் நிரை.

தேமாங்காய் தேமா கருவிளம் கூவிளம்
தேமா புளிமா மலர்.

ஆய்தம், ஃ அலகிடப்படவில்லை.

===≠===≠===≠===≠===≠===≠===≠=

அதிகாரம்: கண்ணோட்டம்.
குறள் எண்: 575

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்

கண்/ணிற் கணி/கலங் கண்/ணோட்/ட மஃ/தின்/றேல் 
புண்/ணென் றுண/ரப் படும்.

நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர் நேர்நேர்நேர்

நேர்நேர் நிரைநேர் நிரை.

தேமா கருவிளம் தேமாங்காய் தேமாங்காய்
தேமா புளிமா மலர்.

ஆய்தம், ஃ அலகிடப்படவில்லை.

nkantan r

unread,
Jul 7, 2018, 12:38:50 PM7/7/18
to மின்தமிழ்
அதிகாரம்: ஊக்கமுடைமை.
குறள் எண்: 591

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

உடை/மை யெனப்/படு/வ தூக்/கமஃ தில்/லா 
ருடை/ய துடை/யரோ மற்று.

நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்(பு).

புளிமா கருவிளங்காய் கூவிளம் தேமா.
புளிமா கருவிளம் காசு.

ஆய்தம், ஃ (கூவிளம்) சீரின் ஈற்றொற்றாய் வந்தது. அலகிடப்படவில்லை.


===≠===≠===≠===≠===≠===≠===≠=

அதிகாரம்: ஊக்கமுடைமை.
குறள் எண்: 600

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
மரம்மக்கள் ஆதலே வேறு.

உர/மொரு/வற் குள்/ள வெறுக்/கையஃ தில்/லார் 
மர/மக்/க ளா/தலே வேறு.

நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்

நிரைநேர்நேர் நேர்நிரை நேர்(பு).

கருவிளங்காய் தேமா கருவிளம் தேமா
புளிமாங்காய் கூவிளம் காசு.

ஆய்தம், ஃ (கருவிளம்) சீரின் ஈற்றொற்றாய் வந்தது. அலகிடப்படவில்லை.

nkantan r

unread,
Jul 7, 2018, 8:06:18 PM7/7/18
to மின்தமிழ்
அதிகாரம்: பொருள்செயல்வகை.
குறள் எண்: 759

செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனில் கூரியது இல்.

செய்/க பொரு/ளைச் செறு/நர் செருக்/கறுக்/கு
மெஃ/கத/னிற் கூ/ரிய தில்.

நேர்நேர் நிரைநேர் நிரைநேர் நிரைநிரைநேர்

நேர்நிரைநேர் நேர்நிரை நேர்.

தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்.

(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை)

nkantan r

unread,
Jul 7, 2018, 9:16:14 PM7/7/18
to மின்தமிழ்
அதிகாரம்: படைச்செருக்கு
குறள் எண்: 773

பேராண்மை என்ப தறுகண் ஒன்றுஉற்றக்கால்
ஊராண்மை மற்றுஅதன் எஃகு.

பே/ராண்/மை யென்/ப/ தறு/கணொன் றுற்/றக்/கா
லூ/ராண்/மை மற்/றத னெஃகு.

நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை நேர்(பு).

தேமாங்காய் தேமா கருவிளம் தேமாங்காய்
தேமாங்காய் கூவிளம் காசு.

(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை. ஈற்றுச்சீர், நேர்பு-வில் நேரசைப்பகுதியில் வந்தது.).

nkantan r

unread,
Jul 7, 2018, 9:43:32 PM7/7/18
to மின்தமிழ்
அதிகாரம்: மருந்து
குறள் எண்: 943

அற்றால் அறவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

அற்/றா லள/வறிந் துண்/க வஃ/துட/ம்பு
பெற்/றா னெடி/துய்க்/கு மாறு.

நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநேர்நேர்

நேர்நேர் நிரைநேர்நேர் நேர்(பு).

தேமா கருவிளம் தேமா புளிமாங்காய்
தேமா புளிமாங்காய் காசு.

(ஆய்தம், ஃ அலகிடப்பட்ட மற்றொரு குறள்)

உண்க என்பதற்குப் பதில் உண்ணுக என்று வந்தால் ஆய்தம் அலகிடபடவேண்டிய அவசியம் இல்லை.

nkantan r

unread,
Jul 7, 2018, 11:45:17 PM7/7/18
to மின்தமிழ்
அதிகாரம்: பெருமை.
குறள் எண்: 971

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.

ஒளி/யொரு/வற் குள்/ள வெறுக்/கை யிளி/யொரு/வற்
கஃ/திற/ந்து வாழ்/து (வா/ழு) மெனல்.

நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர் நிரைநிரைநேர்

நேர்நிரைநேர் நேர்நேர் நிரை.

கருவிளங்காய் தேமா புளிமா கருவிளங்காய் கூவிளங்காய் தேமா மலர்.

(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை)

nkantan r

unread,
Jul 8, 2018, 12:06:20 AM7/8/18
to மின்தமிழ்
அதிகாரம்: நன்றியில்செல்வம்
குறள் எண்: 1001

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்

வைத்/தான்/வாய் சான்/ற பெரும்/பொரு ளஃ/துண்/ணான் 
செத்/தான் செயக்/கிடந்/த தில்.

நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர்
நேர்நேர் நிரைநிரைநேர் நேர்.

தேமாங்காய் தேமா கருவிளம் தேமாங்காய்
தேமா கருவிளங்காய் நாள்.

kanmani tamil

unread,
Jul 8, 2018, 1:37:03 AM7/8/18
to mintamil
///இழுக்/கா/மை யார்/மாட்/டு மென்/றும் வழுக்/கா/மை 

வா/யி னஃ/தொப்/ப தில்.
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்.
புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமா புளிமாங்காய் நாள்.
1) இப்படி அலகிட்டால் தளை தட்டாது ஆனால்,  ஃ (ஆய்தம்) குறிலாக அலகிடப்பட்டது.///

ஆய்தத்தைக் குறிலாகக் கொள்ள இயலாது. அதற்கு அரை மாத்திரை என்பது அடிப்படைத் தமிழ் இலக்கணம். மாற்றினால் நம் தமிழறிவு கேள்விக்குறியாகும்.....அஃது / ஒப் / ப என்று பிரித்து அலகிடும் போது தமிழ் இலக்கணத்தையும் மதிக்கிறோம். திருக்குறளுக்கும் சேதமில்லை .   

///2) மாறாக,  'இல்' என்பதை 'இல' எனக்கொண்டால், 

இழுக்/கா/மை யார்/மாட்/டு மென்/றும் வழுக்/கா/மை 
வா/யினஃ தொப்/ப தில.
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரை.
புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய் கூவிளம் தேமா மலர்.
இப்படி அலகிட்டால் தளை தட்டாது;  ஃ (ஆய்தம்) அலகிடத் தேவையும் இல்லை.///

மேலே நான் சொல்லியபடி அலகிட்டால் இப்படி நாமாக எழுத்து மாற்றத்  தேவையே இல்லையே 

///3) இணையத்தில் பல இடங்களில் இக்குறள் ஆய்தம் இல்லாமலும் வருகிறது
http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0536.aspx ///

பாடபேதங்கள் இலக்கியப் படியெடுப்பில் இடம்பெறுவது இயற்கை. அதற்காக நாமாக பேதத்தை உருவாக்கக் கூடாது.
கண்மணி 





--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Pandiyaraja

unread,
Jul 8, 2018, 2:06:06 AM7/8/18
to மின்தமிழ்
அஃதொப்ப என்பதை அஃது / ஒப் / ப என்று பிரித்து அலகிடுவது சரியன்று என்பது என் கருத்து. புணர்ச்சி விதிகளைப்பயன்படுத்திப் பிரிக்காமலேதான் அலகிடவேண்டும்.
ப.பாண்டியராஜா
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Jul 8, 2018, 2:06:52 AM7/8/18
to மின்தமிழ்
அதிகாரம்: நாணுடைமை
குறள் எண்: 1014

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.

அணி/யன்/றோ நா/ணுடை/மை சான்/றோர்க்/கஃ தின்/றேற் 
பிணி/யன்/றோ பீ/டு நடை.

நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர் நிரை.

புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா மலர்.

ஆய்தம், ஃ (தேமாங்காய்) சீரின் ஈற்றொற்றாய் வந்தது. அலகிடப்படவில்லை.

kanmani tamil

unread,
Jul 8, 2018, 2:22:17 AM7/8/18
to mintamil


nkantan r <rnka...@gmail.com>

22:08 (13 hours ago)
to மின்தமிழ்
அதிகாரம்: ஊக்கமுடைமை.
குறள் எண்: 591

உடையர் எனப்படுவது  ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

உடை/மை யெனப்/படு/வ/ தூக்/கமஃ  தில்/லா 

ருடை/ய துடை/யரோ மற்று.
இதற்குமுன்  இதேபோல் இன்னொரு குறளில்  நீங்கள் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரத்தைப் பிரித்தபோது என் கருத்தை ஏற்கெனவே பதிவிட்டு இருந்தேன்.
ஆய்தம்  தன் பணியைச் செய்ய இயலாதவாறு அதைப் பிய்த்து எடுத்து அலகிடுவது முறையல்ல .
தூக்  / கம் / அஃ(து)  ---நேர் நேர் நேர் ---தேமாங்காய்                     தூக்  / கமஃ(து )---நேர் நிரை ----கூவிளம்    
                                                                         இல்  / லா ---நேர் நேர் ---தேமா
மேற்சுட்டிய இரண்டு முறைகளில் எதைப்  பின்பற்றினாலும் தளை  தட்டவில்லை .
ஆய்தத்தொடர்க்குற்றியலுகரத்தை இரண்டாக உடைப்பது அதன் அடிப்படைத்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் இயந்திரத்தனமாகச் செயல்படுவதாக அமையும் . 
    
///நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்(பு).
புளிமா கருவிளங்காய் கூவிளம் தேமா. 
புளிமா கருவிளம் காசு///
கண்மணி 

kanmani tamil

unread,
Jul 8, 2018, 2:34:19 AM7/8/18
to mintamil
///உர/மொரு/வற் குள்/ள வெறுக்/கையஃ தில்/லார் 
மர/மக்/க ளா/தலே வேறு ///

வெறுக் / கையஃ(து)         இல் / லார்        என்று பிரித்து அலகிடுவது எந்த அடிப்படைத் தமிழ் இலக்கணத்தையும் பாதிக்காது.
கண்மணி   

nkantan r

unread,
Jul 8, 2018, 2:37:42 AM7/8/18
to மின்தமிழ்
அம்மணீ.

என்னிடம் கணினி இல்லாததால் இப்பொழுது என் கேள்வியையும், தாங்கள் கூறியுள்ள முறைக்கு என்னுடைய அடுத்த சந்தேகங்களையும் (with quotes from your detailed replies) எழுதவியலாத நிலை. இன்னும் இருநாட்கள் பொறுக்கவும்.

rnk

nkantan r

unread,
Jul 8, 2018, 2:39:18 AM7/8/18
to மின்தமிழ்
அதிகாரம்: உழவு
குறள் எண்: 1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

உழு/வா ருல/கத்/தார்க் கா/ணியஃ தாற்/றா
தெழு/வா/ரை யெல்/லாம் பொறுத்து.

நிரைநேர் நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர்

நிரைநேர்நேர் நேர்நேர் நிரை(பு).

புளிமா புளிமாங்காய் கூவிளம் தேமா
புளிமாங்காய் தேமா பிறப்பு.

1) ஆய்தம், ஃ (கூவிளம்) சீரின் ஈற்றொற்றாய் வந்தது. அலகிடப்படவில்லை.
2) மணக்குடவர் பாடம்:

( உழு/வா ருல/கத்/தார்க் கா/ணியஃ தாற்/றார்
தொழு/வா/ரே யெல்/லாம் பொறுத்து.)

kanmani tamil

unread,
Jul 8, 2018, 2:47:26 AM7/8/18
to mintamil
///அற்/றா லள/வறிந் துண்/க வஃ/துட/ம்பு
பெற்/றா னெடி/துய்க்/கு மாறு.

நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநேர்நேர் 
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்(பு).
தேமா கருவிளம் தேமா புளிமாங்காய் 

தேமா புளிமாங்காய் காசு.
(ஆய்தம், ஃ அலகிடப்பட்ட மற்றொரு குறள்) 
உண்க என்பதற்குப் பதில் உண்ணுக என்று வந்தால் ஆய்தம் அலகிடபடவேண்டிய அவசியம் இல்லை.///

நாம் குறளில் கை வைத்தால் உலகில் எல்லோரும் அவரவர் இஷ்டத்திற்கு கை  வைப்பார்கள்.
மூன்றாவது சீர்--- தேமா 
மா முன் நிரை வர வேண்டும்....அவ்வளவு தான்.
 வஃ/துட/ம்பு  என்று அலகிடாமல்..................  வஃது / உடம்(பு)  என்று பிரித்தால் ............. நிரை நிரை ............கருவிளம் ............சரியாகிவிட்டதே .என்ன கவலை ?
இன்னொரு விஷயம் 
உடம்பு ---மென்தொடர்க் குற்றியலுகரம்.'பு ' அலகிடத் தேவையில்லை.......அரை மாத்திரை.........ஒற்று போன்றது.
கண்மணி  

kanmani tamil

unread,
Jul 8, 2018, 2:56:01 AM7/8/18
to mintamil
///ஒளி/யொரு/வற் குள்/ள வெறுக்/கை யிளி/யொரு/வற்
கஃ/திற/ந்து வாழ்/து (வா/ழு) மெனல்.

நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர்  நிரைநிரைநேர் 
நேர்நிரைநேர் நேர்நேர் நிரை.
கருவிளங்காய் தேமா புளிமா கருவிளங்காய் கூவிளங்காய் தேமா மலர்.
(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை)///

ஆய்தம் அலகிடப்படவில்லை ; எனினும் அசை பிரித்ததில் தவறு உள்ளது. 
க ஃ /  திறந்(து)   ---நேர் நிரை    ---கூவிளம்   ---தலை தட்டவில்லை. 
கண்மணி  

kanmani tamil

unread,
Jul 8, 2018, 3:02:51 AM7/8/18
to mintamil
///அஃதொப்ப என்பதை அஃது / ஒப் / ப என்று பிரித்து அலகிடுவது சரியன்று என்பது என் கருத்து. புணர்ச்சி விதிகளைப்பயன்படுத்திப் பிரிக்காமலேதான் அலகிடவேண்டும்.
ப.பாண்டியராஜா///
நான் அப்படி நினைக்கவில்லை.
புணர்ச்சி விதிகளைக் காட்டி ; தமிழுக்கு கடினமான தோற்றத்தை நான் உருவாக்க மாட்டேன்.
எல்லோரும் தமிழை எளிதான தோற்றத்தில் காணவேண்டும் என்பது என் அடிப்படைக் கொள்கை .
பிரித்துப் படித்தாலும் ;பார்த்தாலும் தமிழ் மிக மிக எளிது.
கண்மணி 

kanmani tamil

unread,
Jul 8, 2018, 3:17:54 AM7/8/18
to mintamil
///அணி/யன்/றோ நா/ணுடை/மை சான்/றோர்க்/கஃ தின்/றேற் 
பிணி/யன்/றோ பீ/டு நடை.

நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர் நிரை.
புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா 
புளிமாங்காய் தேமா மலர்.///

என்னுடைய கோணம் ஏற்கெனவே சொன்னது தான்.
        தேமாங்காய்                         தேமா 
       நேர் நேர் நேர்                       நேர் நேர் 
சான்  / றோர்க் / கஃ(து)           இன்  / றேற்  
எந்தத் தளையும் தட்டவில்லை 
கண்மணி 

nkantan r

unread,
Jul 8, 2018, 3:40:58 AM7/8/18
to மின்தமிழ்
தட்டச்சில் தவறாக ப் போய்விட்டது.
=========={{{{ தவறு:

அதிகாரம்: மருந்து
குறள் எண்: 943
அற்றால் அறவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

அற்/றா லள/வறிந் துண்/க வஃ/துட/ம்பு


பெற்/றா னெடி/துய்க்/கு மாறு.

நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்(பு).
தேமா கருவிளம் தேமா புளிமாங்காய்
தேமா புளிமாங்காய் காசு.

(ஆய்தம், ஃ அலகிடப்பட்ட மற்றொரு குறள்)

_-----------------
திருத்தியது:

அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு


பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

அற்/றா லள/வறிந் துண்/க வஃ/துடம்/(பு)

பெற்/றா னெடி/துய்க்/கு மாறு.

நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநிரை(நேர்)

நேர்நேர் நிரைநேர்நேர் நேர்(பு).

தேமா கருவிளம் தேமா கருவிளம்(காய்)

தேமா புளிமாங்காய் காசு.

(ஆய்தம், ஃ அலகிடப்பட்ட மற்றொரு குறள். பு, குற்றியலுகரம் அலகிட்டாலும், இடாவிட்டாலும் தளை தட்டாது.)
==========
தவறான பதிவுக்கு மன்னிக்கவும்.

nkantan r

unread,
Jul 8, 2018, 3:53:32 AM7/8/18
to மின்தமிழ்
தவறும், திருத்தியதும்;

தவறு:============


அதிகாரம்: பெருமை.
குறள் எண்: 971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.

ஒளி/யொரு/வற் குள்/ள வெறுக்/கை யிளி/யொரு/வற்
கஃ/திற/ந்து வாழ்/து (வா/ழு) மெனல்.

நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர் நிரைநிரைநேர்

நேர்நிரைநேர் நேர்நேர் நிரை.
கருவிளங்காய் தேமா புளிமா கருவிளங்காய் கூவிளங்காய் தேமா மலர்.

(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை)

----+++++++++++++++
=========திருத்தியது:


அதிகாரம்: பெருமை.
குறள் எண்: 971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.

ஒளி/யொரு/வற் குள்/ள வெறுக்/கை யிளி/யொரு/வற்
கஃ/திறந்/(து) வாழ்/து (வா/ழு) மெனல்.

நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர் நிரைநிரைநேர்

நேர்நிரை(நேர்) நேர்நேர் நிரை.

கருவிளங்காய் தேமா புளிமா கருவிளங்காய்

கூவிளம்(காய்) தேமா மலர்.

(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை. குற்றியலுகரம் து அலகிட்டாலும், இல்லாவிட்டாலும் தளை தட்டாது.)

nkantan r

unread,
Jul 8, 2018, 4:31:50 AM7/8/18
to மின்தமிழ்
அதிகாரம்: குறிப்பறிதல்
குறள்: 1093

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

நோக்/கினா ணோக்/கி யிறைஞ்/சினா ளஃ/தவள் 
யாப்/பினு ளட்/டிய நீர்.

நேர்நிரை நேர்நேர் நிரைநிரை நேர்நிரை

நேர்நிரை நேர்நிரை நேர்.

கூவிளம் தேமா கருவிளம் கூவிளம்
கூவிளம் கூவிளம் நாள்.

ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை. (அஃதவள், அஃது/அவள் என்று பிரியாமல், அஃ/தவள் என்றே வந்தது. ஃ ஒற்றாகவே கொள்ளப்படுகிறது).

இயற்சீர் மட்டும் உள்ள குறள். அங்கும் பதிவு

nkantan r

unread,
Jul 8, 2018, 9:06:13 AM7/8/18
to மின்தமிழ்
≠=====≠====≠===
அதிகாரம்: படர்மெலிந்து இரங்கல் குறள் எண்: 1161

மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

மறைப்/பேன்/மன் யா/னிஃ/தோ நோ/யை யிறைப்/பவர்க்
கூற்/றுநீர் போ/ல மிகும்.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை
நேர்நிரை நேர்நேர் நிரை.

புளிமாங்காய் தேமாங்காய் தேமா கருவிளம்
கூவிளம் தேமா மலர்

ஃ, ஆய்தம் காய்ச்சீரின் இடையில் வந்ததால், அலகிட்டாலும், இல்லாவிட்டாலும் தளை தட்டாது.
இங்கு அலகிடப்படவில்லை.
====≠===≠===≠==≠=====≠====≠==
அதிகாரம்: படர்மெலிந்து இரங்கல் குறள் எண்: 1166

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதுஅடுங்கால்
துன்பம் அதனில் பெரிது

இன்/பங் கடல்/மற்/றுக் கா/ம மஃ/தடுங்/கால் 
துன்/ப மத/னிற் பெரிது.

நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநிரைநேர்

நேர்நேர் நிரைநேர் நிரை(பு).

தேமா புளிமாங்காய் தேமா கருவிளங்காய்
தேமா புளிமா பிறப்பு.

இக்குறளில் ஃ(ஆய்தம்) அலகு பெற்றது. 'மஃ' நிரையசையாகக் கொள்ளப்பட்டது.


====≠====≠====≠====≠====≠====

அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல் 
குறள் எண்: 1279

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்டு அவள்செய் தது.

தொடி/நோக்/கி மென்/றோ/ளு நோக்/கி யடி/நோக்/கி 
யஃ/தாண் டவள்/செய் தது.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர்

நேர்நேர் நிரைநேர் நிரை.

புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய்
தேமா புளிமா மலர்.

(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை)
====≠====≠====≠====≠====≠====

அதிகாரம்: புலவி 
குறள் எண்:1308

நோதல் எவன்மற்று நொந்தார்என்று அஃதுஅறியும்
காதலர் இல்லா வழி.

நோ/த லெவன்/மற்/று நொந்/தா/ரென் றஃ/தறி/யுங் 
கா/தல ரில்/லா வழி.

நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நிரை நேர்நேர் நிரை.

தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிளம் தேமா மலர்

(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை)
=============================

kanmani tamil

unread,
Jul 9, 2018, 2:20:47 AM7/9/18
to mintamil
இன்/பங் கடல்/மற்/றுக் கா/ம மஃ/தடுங்/கால் 
                                                                                 மஃது  / அடுங் /  கால் 
/// 'மஃ' நிரையசையாகக் கொள்ளப்பட்டது. ///
                                                                                  கூடாது
கண்மணி  

nkantan r

unread,
Jul 11, 2018, 1:51:20 AM7/11/18
to மின்தமிழ்


see enclosed snapshot' no option to add a file;



Message has been deleted
Message has been deleted

nkantan r

unread,
Jul 11, 2018, 3:30:38 AM7/11/18
to மின்தமிழ்

crap google settings; it trims a long post;  i give up!
rnk

தேமொழி

unread,
Jul 11, 2018, 4:09:47 AM7/11/18
to மின்தமிழ்


On Wednesday, July 11, 2018 at 12:30:38 AM UTC-7, nkantan r wrote:

crap google settings; it trims a long post;  i give up!

இணையம் வழி பதிவிடும் பொழுது இந்த நிலையை   நானும் எதிர் கொள்வேன், அதனால் நீளமாக இருப்பதைப்  பகுதி பகுதியாக  வெட்டித் தனித்தனித் தொடர் பதிவாகப் பதிவிடுவது  எனது வழக்கம். இது நான் கற்றுக் கொண்ட பாடம். 

நீங்கள் வர்ட்  டாக்குமெண்டில் இருந்து வெட்டி ஒட்டுவதாகக்  கருதுகிறேன், எழுத்துருக்களின் தோற்றம் அவ்வாறு காட்டுகிறது. 

கணினி வழி செய்கிறீர்கள் என்றால் டெக்ஸ்ட் எடிட்டிடரில் வெட்டி ஒட்டி, பிறகு அங்கிருந்து குழுமத்தில் பதிவிட்டுப் பாருங்கள்.

பதிவின் பகுதியை மறைக்கும் வேலையைச் செய்வது வர்ட் ப்ரோசெசிங் மென்பொருள் செய்யும் கோளாறு என்று நினைக்கிறேன். 

nkantan r

unread,
Jul 12, 2018, 7:33:32 AM7/12/18
to மின்தமிழ்
 ஆய்தமேந்திய குறட்பாக்கள் தொகுப்பு:

அதிகாரம்: அறன் வலியுறுத்தல். குறள் எண்: 38
 
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.

வீழ்/நாட் படா/அமை நன்/றாற்/றி் னஃ/தொரு/வன்
வாழ்/நாள் வழி/யடைக்/குங் கல்


நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர் நேர்நிரைநேர்
நேர்நேர் நிரைநிரைநேர் நேர்.

தேமா கருவிளம் தேமாங்காய் கூவிளங்காய்
தேமா கருவிளங்காய் நாள்.

கூவிளங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
===≠===≠===≠==1/0=≠===≠===≠===≠=
அதிகாரம்: இல்வாழ்க்கை  குறள் எண்: 49

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.

அற/னெனப் பட்/டதே யில்/வாழ்க்/கை யஃ/தும்
பிறன்/பழிப்/ப தில்/லா/யின் நன்று


நிரைநிரை நேர்நிரை நேர்நேர்நேர் நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்(பு).

கருவிளம் கூவிளம் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமாங்காய் காசு.

தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
===≠===≠===≠==2/0=≠===≠===≠===≠=
அதிகாரம்: அன்புடைமை   குறள் எண்: 76

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

அறத்/திற்/கே வன்/புசார் பெ/ன்ப வறி/யார்
மறத்/திற்/கு மஃ/தே துணை


நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை.

கருமாங்காய் கூவிளம் தேமா புளிமா
கருமாங்காய் தேமா மலர்.

தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
===≠===≠===≠==3/0=≠===≠===≠===≠

அதிகாரம்: அன்புடைமை   குறள் எண்: 80

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

அன்/பின் வழி/ய துயிர்/நிலை யஃ/திலார்க்
கென்/புதோல் போர்த்/த உடம்பு.


நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
நேர்நிரை நேர்நேர் நிரை(பு).

தேமா புளிமா கருவிளம் கூவிளம் கூவிளம்
கூவிளம் தேமா பிறப்பு.

கூவிளம்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
===≠====≠===4/0=≠=≠==≠===≠====,
அதிகாரம்: ஒழுக்கமுடைமை   குறள் எண்: 132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

பரிந்/தோம்/பிக் காக்/க வொழுக்/கந் தெரிந்/தோம்/பித்
தே/ரினு மஃ/தே துணை.


நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநேர் நிரைநேர்நேர்
நேர்நிரை நேர்நேர் நிரை.

புளிமாங்காய் தேமா புளிமா புளிமாங்காய்
கூவிளம் தேமா மலர்.

தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
======≠=====≠==5/0====≠=====
அதிகாரம்: அழுக்காறாமை  குறள் எண்: 162

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

விழுப்/பேற்/றி னஃ/தொப்/ப தில்/லையார் மாட்/டு
மழுக்/காற்/றி னன்/மை பெறின்.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை

புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா
புளிமாங்காய் தேமா மலர்.

தேமாங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
=======≠=====6/0=≠======≠====
அதிகாரம்: அழுக்காறாமை   குறள் எண்: 170

அழுக்காற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

அழுக்/காற் றகன்/றா/ரு மில்/லையஃ தில்/லார்
பெருக்/கத்/திற் றீர்ந்/தா/ரு மில்.


நிரைநேர் நிரைநேர்நேர் நேர்நிரை  நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்.

புளிமா புளிமாங்காய் கூவிளம் தேமா
புளிமாங்காய் தேமாங்காய் நாள்.

"அழுக்கற்று அகன்றாரும்" என்பது பரவலான பாடம்;

இங்கு கூவிளம்சீரின் ஈற்றசையின் (நிரை) ஈற்றொடடாய் அலகிடப்படாமல் வந்தது.
========≠====7/0===≠=====≠======
அதிகாரம்: வெஃகாமை.  குறள் எண்: 171

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

நடு/வின்/றி (நடு/வன்/றி) நன்/பொருள் வெஃ/கிற் குடி/பொன்/றுங் (குடி/பொன்/றிக்)
குற்/றமு மாங்/கே தரும்.


நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நிரை நேர்நேர் நிரை.

புளிமாங்காய் கூவிளம் தேமா புளிமாங்காய்
கூவிளம் தேமா மலர்.

தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠=8/0===≠====≠====
அதிகாரம்: வெஃகாமை.   குறள் எண்: 172

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

படு/பயன் வெஃ/கிப் பழிப்/படு/வ செய்/யார்
நடு/வன்/மை நா/ணு பவர்.


நிரைநிரை நேர்நேர் நிரைநிரைநேர் நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை.

கருவிளம் தேமா கருவிளங்காய் தேமா
புளிமாங்காய் தேமா மலர்.

தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠==9/0==≠====≠====
அதிகாரம்: வெஃகாமை. 
குறள் எண்:  173

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

சிற்/றின்/பம் வெஃ/கி யற/னல்/ல செய்/யா/ரே
மற்/றின்/பம் வேண்/டு பவர்.

நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர்  நேர்நேர்நேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.

தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமா மலர்.

தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠=10/0===≠====≠====
அதிகாரம்: வெஃகாமை.  குறள் எண்: 174

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

இல/மென்/று வெஃ/குதல் செய்/யார் புலம்/வென்/ற
புன்/மையில் காட்/சி யவர்.

நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நிரை நேர்நேர் நிரை.

தேமாங்காய் கூவிளம் தேமா  புளிமாங்காய்
கூவிளம் தேமா மலர்.

கூவிளம்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠=11/0===≠===≠====≠
அதிகாரம்: வெஃகாமை.    குறள் எண்: 175

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

அஃ/கி யகன்/ற வறி/வென்/னாம் யார்/மாட்/டும்
வெஃ/கி வெறி/ய செயின்.


நேர்நேர் நிரைநேர் நிரைநேர்நேர்  நேர்நேர்நேர்
நேர்நேர் நிரைநேர் நிரை.

தேமா புளிமா புளிமாங்காய் தேமாங்காய்
தேமா புளிமா மலர்.

ஈரிடங்களில் ஆய்தம் ஃ வந்தது;  இரண்டிடங்களிலும் தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠====≠==12/0≠====≠====≠
அதிகாரம்: வெஃகாமை.   குறள் எண்: 176.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

அருள்/வெஃ/கி
யாற்/றின்/க(ண்) ணின்/றான் பொருள்/வெஃ/கிப்
பொல்/லா/த சூ/ழக் கெடும்.


நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.


புளிமாங்காய்
தேமாங்காய் தேமா புளிமாங்காய்
தேமாங்காய் தேமா மலர்.

ஈரிடங்களில் ஆய்தம் ஃ வந்தது;  இரண்டிடங்களிலும்
புளிமாங்காய்ச்சீரின் இடையசையாய் (நேர்) அலகிடப்படாமல்  வந்தது; (அலகிடப்படடாலும் –நிரையசையாய்- தளை தட்டாது.
====≠====≠====≠===13/0=≠====≠====
அதிகாரம்: வெஃகாமை. குறள்:  177

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

வேண்/டற்/க வெஃ/கியா மாக்/கம் விளை/வயின்
மாண்/டற் கரி/தாம் பயன்.


நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநிரை
நேர்நேர் நிரைநேர் நிரை.

தேமாங்காய் கூவிளம் தேமா கருவிளம் 
தேமா புளிமா மலர்.

கூவிளம்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.

====≠====≠====≠===14/0==≠====≠====
அதிகாரம்: வெஃகாமை.  குறள்:  178

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

அஃ/கா/மை செல்/வத்/திற் (கி)யா/தெனின் வெஃ/கா/மை
வேண்/டும் பிறன்/கைப் பொருள்.


நேர்நேர்நேர்  நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர்நேர்
நேர்நேர் நிரைநேர் நிரை.

தேமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமாங்காய்
தேமா புளிமா மலர்.

ஈரிடங்களில் ஆய்தம் ஃ வந்தது;  இரண்டிடங்களிலும்
தேமாங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல்  வந்தது
====≠====≠====≠==15/0==≠=====≠===
அதிகாரம்: வெஃகாமை. குறள்: 179

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு.

அற/னறிந்(து) வெஃ/கா வறி/வுடை/யார்ச் சே/ருந்
திற/னறிந் தாங்/கே திரு.

நிரைநிரை நேர்நேர் நிரைநிரைநேர் நேர்நேர்
நிரைநிரை நேர்நேர் நிரை.

கருவிளம் தேமா கருவிளங்காய் தேமா
கருவிளம் தேமா மலர்.

தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல்  வந்தது

====≠====≠=====≠===16/0==≠===≠===
அதிகாரம்: வெஃகாமை.  குறள்: 180

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.

இற/லீ/னு மெண்/ணா/து வெஃ/கின் விற/லீ/னும்
வேண்/டா/மை யென்/னுஞ் செருக்கு.


நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நேர்நேர்  நேர்நேர் நிரை(பு).


புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய்
தேமாங்காய் தேமா பிறப்பு.

(1. 'து' எனும் குற்றியலுகரம் தேமாங்காய்ச்சீர் இறுதியில் குறிலாய் மெண்/ணா/து என்று அலகிட்டு காட்டியுள்ளேன்.  அப்போது ஃ ஆய்தம் தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல்  வந்தது
 அப்படியில்லாமல் 'து'-வை அலகிடாவிட்டால், - மெண்/ணா(து) வெஃ/கின்-  ஃஆய்தம் அலகிடப்படும். ஆனால் ஒலிப்பது கடினம்.
====≠====≠====≠===17/0==≠====≠====
அதிகாரம்: ஒப்புரவறிதல்  குறள் எண்: 220.

ஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.

ஒப்/புர/வி னால்/வருங் கே/டெனி னஃ/தொரு/வன்
விற்/றுக்/கோட் டக்/க துடைத்து.


நேர்நிரைநேர் நேர்நிரை நேர்நிரை நேர்நிரைநேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரை(பு)

கூவிளங்காய் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
தேமாங்காய் தேமா பிறப்பு.

கூவிளங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.

====≠====≠====≠====≠===18/0=≠====≠
அதிகாரம்: ஈகை குறள் எண்: 226.

ஃஃஃ இக்குறளில் அஃதொருவன் (அகுதொருவன்) எனும் சீரில் ஆய்தம் குறிலாக அலகிடப்பட்டது ஃஃஃ

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

அற்/றா ரழி/பசி தீர்த்/த லஃ/தொரு/வன்
பெற்/றான் பொருள்/வைப் புழி.

நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநிரைநேர்
நேர்நேர் நிரைநேர் நிரை.

தேமா கருவிளம் தேமா கருவிளங்காய்
தேமா புளிமா மலர்.

கருவிளங்காய்ச்சீரின் முதலசையில் (நிரை) குறிலாக அலகிடப்பட்டது

====≠====≠====≠====≠==19/1==≠====
அதிகாரம்: புகழ்.  குறள் எண்: 236

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

தோன்/றிற் புக/ழொடு தோன்/றுக வஃ/திலார்
தோன்/றிலிற் றோன்/றா/மை நன்று.


நேர்நேர் நிரைநிரை நேர்நிரை நேர்நிரை
நேர்நிரை நேர்நேர்நேர் நேர்(பு).

தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்
கூவிளம் தேமாங்காய் காசு.

கூவிளம்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.

=====≠=====≠===20/1==≠=====≠====,
அதிகாரம்: அருளுடைமை. குறள் எண்: 242

நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.

நல்/லாற்/றா னா/டி யரு/ளாள்/க பல்/லாற்/றாற்
றே/ரினு மஃ/தே துணை.

நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர்
நேர்நிரை நேர்நேர் நிரை.

தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
கூவிளம் தேமா மலர்.

தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல்  வந்தது
====≠====≠====≠====≠==21/1==≠=====≠====
அதிகாரம்: தவம்.  குறள் எண்: 262

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

தவ/முந் தவ/முடை/யார்க் கா/கு மவ/மத/னை
யஃ/திலார் மேற்/கொள் வது.


நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநிரைநேர்
நேர்நிரை நேர்நேர்  நிரை.

புளிமா கருவிளங்காய் தேமா கருவிளங்காய்
கூவிளம் தேமா மலர்.

கூவிளம்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.

=====≠=====≠=====≠=22/1====≠=====
அதிகாரம்: அவாஅறுத்தல்  குறள் எண்: 363

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
ஆண்டும் அஃதொப்பது இல்

வேண்/டா/மை யன்/ன விழுச்/செல்/வ மீண்/டில்/லை
யாண்/டு மஃ/தொப்/ப தில்.


நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர்
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்.

தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
தேமா புளிமாங்காய் நாள்.

('ஆண்டும் அஃதொப்பது' என்பதில் ஃ குறிலாக 'அகுதொப்பது' என்று வந்து அலகிடப்பட்டது)
புளிமாங்காய்ச்சீரின் முதலசையில் (நிரை) குறிலாக அலகிடப்பட்டது

=======≠======≠====23/2==≠======
அதிகாரம்: அவாஅறுத்தல். குறள் எண்: 368

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

அவா/வில்/லார்க்/ கில்/லா/குந் துன்/பமஃ துண்/டேற்
றவா/அது மேன்/மேல் வரும்.


நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர்
நிரைநிரை நேர்நேர் நிரை.

புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா
கருவிளம் தேமா மலர்.

கூவிளம்சீரின் ஈற்றசையில் (நிரை) ஒற்றாக அலகிடப்படாமல் வந்தது.

===≠===≠===≠====24/2===≠===≠===≠
அதிகாரம்: கேள்வி   குறள் எண்: 414

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

கற்/றில னா/யினுங் கேட்/க வஃ/தொரு/வற்
கொற்/கத்/தி னூற்/றாந் துணை.


நேர்நிரை நேர்நிரை நேர்நேர் நிரைநிரைநேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.

கூவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
தேமாங்காய் தேமா மலர்.

1) இங்கு ஃ ஆய்தம் குறிலாக அலகிடப்பட்டது. 2) அஃதொருவன் அ'கு'தொருவன்
கருவிளங்காய்ச்சீரின் முதலசையில் (நிரை) குறிலாக அலகிடப்பட்டது

====≠====≠====≠==25/3==≠====≠====
அதிகாரம்: அறிவுடைமை  குறள் எண்: 427

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

அறி/வுடை/யா ரா/வ தறி/வா ரறி/விலா
ரஃ/தறி கல்/லா தவர்.


நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர் நிரைநிரை
நேர்நிரை நேர்நேர் நிரை.

கருவிளங்காய் தேமா புளிமா கருவிளம்
கூவிளம் தேமா மலர்.

கூவிளம்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.

===≠===≠===≠==26/3=≠===≠===≠===≠=
அதிகாரம்: சிற்றினம்சேராமை குறள் எண்: 459

மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து.

மன/நலத்/தி னா/கு மறு/மைமற் றஃ/து
மின/நலத்/தி் னே/மாப் புடைத்து.


நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்
நிரைநிரைநேர் நேர்நேர் நிரை(பு).

கருவிளங்காய் தேமா கருவிளம் தேமா
கருவிளங்காய் தேமா பிறப்பு.

தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல்  வந்தது

====≠====≠====≠==27/3==≠====≠====
அதிகாரம்: வலியறிதல்  குறள் எண்: 476

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி ஆகி விடும்.

நுனிக்/கொம்/ப ரே/றினா ரஃ/திறந் தூக்/கி
னுயிர்க்/கிறு/தி யா/கி விடும்.


நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நிரை நேர்நேர்
நிரைநிரைநேர் நேர்நேர் நிரை.

புளிமாங்காய் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளங்காய் தேமா மலர்.

கூவிளம்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠===28/3=≠====≠====
அதிகாரம்: பொச்சாவாமை குறள் எண்: 536

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃதுஒப்பது இல்.


இழுக்/கா/மை யார்/மாட்/டு மென்/றும் வழுக்/கா/மை
வா/யி னஃ/தொப்/ப தில்.


நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்.


புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய்
தேமா புளிமாங்காய் நாள்.
 
ஃ (ஆய்தம்) குறிலாக (னஃ/தொப்/ப) அலகிடப்பட்டது.
புளிமாங்காய்ச்சீரின் முதலசையில் (நிரை) குறிலாக அலகிடப்பட்டது

====≠====≠====≠=29/4===≠====≠====
அதிகாரம்: செங்கோன்மை குறள் எண்: 541

ஒர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

ஓர்ந்/துகண் ணோ/டா திறை/புரிந் (தி)யார்/மாட்/டுந்
தேர்ந்/துசெய் வஃ/தே முறை.


நேர்நிரை நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர்
நேர்நிரை நேர்நேர் நிரை.

கூவிளம் தேமா கருவிளம் தேமாங்காய்
கூவிளம் தேமா மலர்.

குற்றியலுகரம் து பின்வரும் யா-வுடன் புணர்ந்து குற்றியலிகரம் தி ஆயிற்று -அலகிடப்படவில்லை.
தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல்  வந்தது
====≠====≠====≠===30/4==≠====≠===
அதிகாரம்: கொடுங்கோன்மை குறள் எண்: 556

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.

மன்/னர்க்/கு மன்/னுதற் செங்/கோன்/மை யஃ/தின்/றேல்
மன்/னா/வா மன்/னர்க் கொளி.


நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர்நேர் நேர்நேர்நேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமா மலர்.

'மன்னர்க்கு' இருமுறை வந்தது- ஒருமுறை ‘கு’ அலகுபெற்றது; இரண்டாம் முறை ‘கு’ பின் வரும் உயிரோடு புணர்ந்தது.

தேமாங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல்  வந்தது

====≠====≠====≠==31/4==≠====≠===
அதிகாரம்: கண்ணோட்டம். குறள் எண்: 572

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

கண்/ணோட்/டத் துள்/ள துல/கிய லஃ/திலா
ருண்/மை நிலக்/குப் பொறை.


நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நிரை
நேர்நேர் நிரைநேர் நிரை.


தேமாங்காய் தேமா கருவிளம் கூவிளம்
தேமா புளிமா மலர்.

கூவிளம்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.

===≠===≠===≠===≠==32/4==≠===≠===≠=
அதிகாரம்: கண்ணோட்டம்.  குறள் எண்: 575

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்
புண்ணென்று உணரப் படும்

கண்/ணிற் கணி/கலங் கண்/ணோட்/ட மஃ/தின்/றேல்
புண்/ணென் றுண/ரப் படும்.


நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர் நேர்நேர்நேர்
நேர்நேர் நிரைநேர் நிரை.

தேமா கருவிளம் தேமாங்காய் தேமாங்காய்
தேமா புளிமா மலர்.

தேமாங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல்  வந்தது

===≠===≠===≠===≠=33/4==≠===≠===≠=
அதிகாரம்: ஊக்கமுடைமை. குறள் எண்: 591


உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

உடை/மை யெனப்/படு/வ தூக்/கமஃ தில்/லா
ருடை/ய துடை/யரோ மற்று.


நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நிரை நேர்நேர்
நிரைநேர் நிரைநிரை நேர்(பு).

புளிமா கருவிளங்காய் கூவிளம் தேமா.
புளிமா கருவிளம் காசு.

இங்கு கூவிளம்சீரின் ஈற்றசையின் (நிரை) ஈற்றோற்றாய் அலகிடப்படாமல் வந்தது.
===≠===≠===≠===≠=34/4===≠===≠===≠=
அதிகாரம்: ஊக்கமுடைமை. குறள் எண்: 600

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
மரம்மக்கள் ஆதலே வேறு.


உர/மொரு/வற் குள்/ள வெறுக்/கையஃ தில்/லார்
மர/மக்/க ளா/தலே வேறு.


நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நிரை நேர்(பு).

கருவிளங்காய் தேமா கருவிளம் தேமா
புளிமாங்காய் கூவிளம் காசு.

இங்கு கருவிளம்சீரின் ஈற்றசையின் (நிரை) ஈற்றோற்றாய் அலகிடப்படாமல் வந்தது.

===≠===≠===≠===≠==35/4==≠===≠===≠=
அதிகாரம்: இடுக்கணழியாமை. குறள் எண்: 621

இடுக்கண் வரும்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல்.

இடுக்/கண் வருங்/கா னகு/க வத/னை
யடுத்/தூர்/வ தஃ/தொப்/ப தில்.


நிரைநேர் நிரைநேர் நிரைநேர் நிரைநேர்
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்.

புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமாங்காய் தேமாங்காய் நாள்.

தேமாங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல்  வந்தது

====≠====≠====≠==36/4==≠====≠====
அதிகாரம்: பொருள்செயல்வகை. குறள் எண்: 759

செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனில் கூரியது இல்.

செய்/க பொரு/ளைச் செறு/நர் செருக்/கறுக்/கு
மெஃ/கத/னிற் கூ/ரிய தில்.


நேர்நேர் நிரைநேர் நிரைநேர் நிரைநிரைநேர்
நேர்நிரைநேர் நேர்நிரை நேர்.

தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்.

கூவிளங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.

===≠===≠===≠===≠==37/4=≠===≠===≠=

அதிகாரம்: படைச்செருக்கு குறள் எண்:  773

பேராண்மை என்ப தறுகண் ஒன்றுஉற்றக்கால்
ஊராண்மை மற்றுஅதன் எஃகு.

பே/ராண்/மை யென்/ப/ தறு/கணொன் றுற்/றக்/கா
லூ/ராண்/மை மற்/றத னெஃகு.


நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர்
நேர்நேர்நேர் நேர்நிரை நேர்(பு).

தேமாங்காய் தேமா கருவிளம் தேமாங்காய்
தேமாங்காய் கூவிளம் காசு.

(ஃ, ஆய்தம் ஈற்றுச்சீர், நேர்பு-வில் நேரசைப்பகுதியில் அலகிடப்படாமல் வந்தது.).
====≠====≠====≠=38/4===≠====≠====

அதிகாரம்: மருந்து குறள் எண்:  943

அற்றால் அறவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

அற்/றா லள/வறிந் துண்/க வஃ/துட/ம்பு
பெற்/றா னெடி/துய்க்/கு மாறு.


நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்(பு).

தேமா கருவிளம் தேமா கருவிளங்காய்
தேமா புளிமாங்காய் காசு.

ஃ (ஆய்தம்) குறிலாக வஃ/துட/ம்பு அலகிடப்பட்டது.
கருவிளங்காய்ச்சீரின் முதலசையில் (நிரை) குறிலாக அலகிடப்பட்டது

====≠====≠====≠==39/5==≠====≠====

அதிகாரம்: பெருமை. குறள் எண்:  971

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.

ஒளி/யொரு/வற் குள்/ள வெறுக்/கை யிளி/யொரு/வற்
கஃ/திறந்(து) வாழ்/து (வா/ழு) மெனல்.


நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர்  நிரைநிரைநேர்
நேர்நிரை(நேர்) நேர்நேர் நிரை.

கருவிளங்காய் தேமா புளிமா கருவிளங்காய்
கூவிளம் தேமா மலர்.

குற்றியலுகரம் து அலகிட்டாலும் , இடாவிட்டாலும் தளை தட்டாது; இங்கு அலகிடப்படவில்லை
கூவிளம்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠==40/5==≠====≠====

அதிகாரம்: நன்றியில்செல்வம்  குறள் எண்: 1001

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்

வைத்/தான்/வாய் சான்/ற பெரும்/பொரு ளஃ/துண்/ணான்
செத்/தான் செயக்/கிடந்/த தில்.


நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர்
நேர்நேர் நிரைநிரைநேர் நேர்.

தேமாங்காய் தேமா கருவிளம் தேமாங்காய்
தேமா கருவிளங்காய்  நாள்.

தேமாங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠==41/5==≠====≠====

அதிகாரம்: நாணுடைமை குறள் எண்:  1014

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.

அணி/யன்/றோ நா/ணுடை/மை சான்/றோர்க்/கஃ தின்/றேற்
பிணி/யன்/றோ பீ/டு நடை.


நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை.

புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா மலர்.

இங்கு தேமாங்காய்ச்சீரின் ஈற்றசையின் (நேர்) ஈற்றோற்றாய் அலகிடப்படாமல் வந்தது.

====≠====≠====≠==42/5==≠====≠====

அதிகாரம்: உழவு  குறள் எண்:  1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

உழு/வா ருல/கத்/தார்க் கா/ணியஃ தாற்/றா
தெழு/வா/ரை யெல்/லாம் பொறுத்து.


நிரைநேர் நிரைநேர்நேர் நேர்நிரை  நேர்நேர் 
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை(பு).

புளிமா புளிமாங்காய் கூவிளம் தேமா
புளிமாங்காய் தேமா பிறப்பு.

இங்கு கூவிளம்சீரின் ஈற்றசையின் (நிரை) ஈற்றோற்றாய் அலகிடப்படாமல் வந்தது.

====≠====≠====≠ 43/5====≠====≠====
அதிகாரம்: உழவு குறள் எண்: 1037

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும்
வேண்டாது சாலப் படும்.

தொடிப்/புழு/தி கஃ/சா உணக்/கிற் பிடித்/தெரு/வும்
வேண்/டா/து சா/லப் படும்.


நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர் நிரைநிரைநேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.

கருவிளங்காய் தேமா புளிமா கருவிளங்காய்
தேமாங்காய் தேமா  மலர்.

தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠==44/5==≠====≠====
அதிகாரம்: குறிப்பறிதல்  குறள் எண் :1093

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதுஅவள்

யாப்பினுள் அட்டிய நீர்.

நோக்/கினா ணோக்/கி யிறைஞ்/சினா ளஃ/தவள்
யாப்/பினு ளட்/டிய நீர்.


நேர்நிரை நேர்நேர் நிரைநிரை நேர்நிரை
நேர்நிரை நேர்நிரை நேர்.

கூவிளம் தேமா கருவிளம் கூவிளம்
கூவிளம் கூவிளம் நாள்.

கூவிளம்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠===45/5==≠====≠===

அதிகாரம்: படர்மெலிந்து இரங்கல்  குறள் எண்: 1161

மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

மறைப்/பேன்/மன் யா/னிஃ/தோ நோ/யை யிறைப்/பவர்க்
கூற்/றுநீர் போ/ல மிகும்.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை
நேர்நிரை நேர்நேர் நிரை.

புளிமாங்காய் தேமாங்காய் தேமா கருவிளம்
கூவிளம் தேமா மலர்.

தேமாங்காய்ச்சீரின் இடையசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
(அலகிடடால் கூவிளங்காய்ச் சீராக மாறும்; தளை தடடாது)
====≠===≠===≠==≠==46/5===≠====≠==

அதிகாரம்: படர்மெலிந்து இரங்கல்  குறள் எண்:  1166

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதுஅடுங்கால்
துன்பம் அதனில் பெரிது

இன்/பங் கடல்/மற்/றுக் கா/ம மஃ/தடுங்/கால்
துன்/ப மத/னிற் பெரிது.

நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநிரைநேர்
நேர்நேர் நிரைநேர்  நிரை(பு).

தேமா புளிமாங்காய் தேமா கருவிளங்காய்
தேமா புளிமா பிறப்பு.

ஃ (ஆய்தம்) குறிலாக மஃ/தடுங்/கால் அலகிடப்பட்டது.
கருவிளங்காய்ச்சீரின் முதலசையில் (நிரை) குறிலாக அலகிடப்பட்டது

====≠====≠====≠==47/6==≠====≠====

அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்  குறள் எண்: 1279

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்டு அவள்செய் தது.

தொடி/நோக்/கி மென்/றோ/ளு நோக்/கி யடி/நோக்/கி
யஃ/தாண் டவள்/செய் தது.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நேர் நிரைநேர் நிரை.

புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய்
தேமா புளிமா மலர்.

தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠==48/6==≠====≠====

அதிகாரம்: புலவி  குறள் எண்:1308

நோதல் எவன்மற்று நொந்தார்என்று அஃதுஅறியும்
காதலர் இல்லா வழி.

நோ/த லெவன்/மற்/று நொந்/தா/ரென் றஃ/தறி/யுங்
கா/தல ரில்/லா வழி.

நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நிரை நேர்நேர் நிரை.

தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிளம் தேமா மலர்.

கூவிளங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠==49/6==≠====≠====


Message has been deleted

nkantan r

unread,
Jul 12, 2018, 10:04:33 AM7/12/18
to மின்தமிழ்
அதிகாரம்: கண்ணோட்டம்.  குறள் எண்: 575

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்
புண்ணென்று உணரப் படும்

கண்/ணிற் கணி/கலங் கண்/ணோட்/ட மஃ/தின்/றேல்
புண்/ணென் றுண/ரப் படும்.


நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர் நேர்நேர்நேர்
நேர்நேர் நிரைநேர் நிரை.

தேமா கருவிளம் தேமாங்காய் தேமாங்காய்
தேமா புளிமா மலர்.

தேமாங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல்  வந்தது

===≠===≠===≠===≠=33/4==≠===≠===≠=
அதிகாரம்: ஊக்கமுடைமை. குறள் எண்: 591


உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

உடை/மை யெனப்/படு/வ தூக்/கமஃ தில்/லா
ருடை/ய துடை/யரோ மற்று.


நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நிரை நேர்நேர்
நிரைநேர் நிரைநிரை நேர்(பு).

புளிமா கருவிளங்காய் கூவிளம் தேமா.
புளிமா கருவிளம் காசு.

இங்கு கூவிளம்சீரின் ஈற்றசையின் (நிரை) ஈற்றொற்றாய் அலகிடப்படாமல் வந்தது.

===≠===≠===≠===≠=34/4===≠===≠===≠=
அதிகாரம்: ஊக்கமுடைமை. குறள் எண்: 600

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
மரம்மக்கள் ஆதலே வேறு.

உர/மொரு/வற் குள்/ள வெறுக்/கையஃ தில்/லார்
மர/மக்/க ளா/தலே வேறு.


நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நிரை நேர்(பு).

கருவிளங்காய் தேமா கருவிளம் தேமா
புளிமாங்காய் கூவிளம் காசு.

இங்கு கருவிளம்சீரின் ஈற்றசையின் (நிரை) ஈற்றொற்றாய் அலகிடப்படாமல் வந்தது.


===≠===≠===≠===≠==35/4==≠===≠===≠=
அதிகாரம்: இடுக்கணழியாமை. குறள் எண்: 621

இடுக்கண் வரும்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல்.

இடுக்/கண் வருங்/கா னகு/க வத/னை
யடுத்/தூர்/வ தஃ/தொப்/ப தில்.


நிரைநேர் நிரைநேர் நிரைநேர் நிரைநேர்
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்.

புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமாங்காய் தேமாங்காய் நாள்.

தேமாங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல்  வந்தது

====≠====≠====≠==36/4==≠====≠====
அதிகாரம்: பொருள்செயல்வகை. குறள் எண்: 759

செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனில் கூரியது இல்.

செய்/க பொரு/ளைச் செறு/நர் செருக்/கறுக்/கு
மெஃ/கத/னிற் கூ/ரிய தில்.


நேர்நேர் நிரைநேர் நிரைநேர் நிரைநிரைநேர்
நேர்நிரைநேர் நேர்நிரை நேர்.

தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்.

கூவிளங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.

===≠===≠===≠===≠==37/4=≠===≠===≠=
அதிகாரம்: படைச்செருக்கு குறள் எண்:  773

பேராண்மை என்ப தறுகண் ஒன்றுஉற்றக்கால்
ஊராண்மை மற்றுஅதன் எஃகு.

பே/ராண்/மை யென்/ப/ தறு/கணொன் றுற்/றக்/கா
லூ/ராண்/மை மற்/றத னெஃகு.


நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர்
நேர்நேர்நேர் நேர்நிரை நேர்(பு).

தேமாங்காய் தேமா கருவிளம் தேமாங்காய்
தேமாங்காய் கூவிளம் காசு.

(ஃ, ஆய்தம் ஈற்றுச்சீர், நேர்பு-வில் நேரசைப்பகுதியில் அலகிடப்படாமல் வந்தது.).
====≠====≠====≠=38/4===≠====≠====

அதிகாரம்: மருந்து குறள் எண்:  943

அற்றால் அறவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

அற்/றா லள/வறிந் துண்/க வஃ/துட/ம்பு
பெற்/றா னெடி/துய்க்/கு மாறு.


நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்(பு).

தேமா கருவிளம் தேமா கருவிளங்காய்
தேமா புளிமாங்காய் காசு.

ஃ (ஆய்தம்) குறிலாக வஃ/துட/ம்பு அலகிடப்பட்டது.
கருவிளங்காய்ச்சீரின் முதலசையில் (நிரை) குறிலாக அலகிடப்பட்டது

====≠====≠====≠==39/5==≠====≠====

அதிகாரம்: பெருமை. குறள் எண்:  971

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.

ஒளி/யொரு/வற் குள்/ள வெறுக்/கை யிளி/யொரு/வற்
கஃ/திறந்(து) வாழ்/து (வா/ழு) மெனல்.


நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர்  நிரைநிரைநேர்
நேர்நிரை(நேர்) நேர்நேர் நிரை.

கருவிளங்காய் தேமா புளிமா கருவிளங்காய்
கூவிளம் தேமா மலர்.

குற்றியலுகரம் து அலகிட்டாலும் , இடாவிட்டாலும் தளை தட்டாது; இங்கு அலகிடப்படவில்லை
கூவிளம்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠==40/5==≠====≠====

அதிகாரம்: நன்றியில்செல்வம்  குறள் எண்: 1001

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்

வைத்/தான்/வாய் சான்/ற பெரும்/பொரு ளஃ/துண்/ணான்
செத்/தான் செயக்/கிடந்/த தில்.


நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர்
நேர்நேர் நிரைநிரைநேர் நேர்.

தேமாங்காய் தேமா கருவிளம் தேமாங்காய்
தேமா கருவிளங்காய்  நாள்.

தேமாங்காய்ச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠==41/5==≠====≠====
அதிகாரம்: நாணுடைமை குறள் எண்:  1014

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.

அணி/யன்/றோ நா/ணுடை/மை சான்/றோர்க்/கஃ தின்/றேற்
பிணி/யன்/றோ பீ/டு நடை.


நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை.

புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா மலர்.

இங்கு தேமாங்காய்ச்சீரின் ஈற்றசையின் (நேர்) ஈற்றொற்றாய் அலகிடப்படாமல் வந்தது.

====≠====≠====≠==42/5==≠====≠====
அதிகாரம்: உழவு  குறள் எண்:  1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

உழு/வா ருல/கத்/தார்க் கா/ணியஃ தாற்/றா
தெழு/வா/ரை யெல்/லாம் பொறுத்து.


நிரைநேர் நிரைநேர்நேர் நேர்நிரை  நேர்நேர் 
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை(பு).

புளிமா புளிமாங்காய் கூவிளம் தேமா
புளிமாங்காய் தேமா பிறப்பு.

இங்கு கூவிளம்சீரின் ஈற்றசையின் (நிரை) ஈற்றொற்றாய் அலகிடப்படாமல் வந்தது.

====≠====≠====≠ 43/5====≠====≠====
அதிகாரம்: உழவு குறள் எண்: 1037

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும்
வேண்டாது சாலப் படும்.

தொடிப்/புழு/தி கஃ/சா உணக்/கிற் பிடித்/தெரு/வும்
வேண்/டா/து சா/லப் படும்.


நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர் நிரைநிரைநேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.

கருவிளங்காய் தேமா புளிமா கருவிளங்காய்
தேமாங்காய் தேமா  மலர்.

தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠==44/5==≠====≠====
அதிகாரம்: குறிப்பறிதல்  குறள் எண் :1093

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதுஅவள்

யாப்பினுள் அட்டிய நீர்.

நோக்/கினா ணோக்/கி யிறைஞ்/சினா ளஃ/தவள்
யாப்/பினு ளட்/டிய நீர்.


நேர்நிரை நேர்நேர் நிரைநிரை நேர்நிரை
நேர்நிரை நேர்நிரை நேர்.

கூவிளம் தேமா கருவிளம் கூவிளம்
கூவிளம் கூவிளம் நாள்.

கூவிளம்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠===45/5==≠====≠===

அதிகாரம்: படர்மெலிந்து இரங்கல்  குறள் எண்: 1161

மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

மறைப்/பேன்/மன் யா/னிஃ/தோ நோ/யை யிறைப்/பவர்க்
கூற்/றுநீர் போ/ல மிகும்.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை
நேர்நிரை நேர்நேர் நிரை.

புளிமாங்காய் தேமாங்காய் தேமா கருவிளம்
கூவிளம் தேமா மலர்.

தேமாங்காய்ச்சீரின் இடையசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
(அலகிடடால் கூவிளங்காய்ச் சீராக மாறும்; தளை தடடாது)
====≠===≠===≠==≠==46/5===≠====≠==

அதிகாரம்: படர்மெலிந்து இரங்கல்  குறள் எண்:  1166

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதுஅடுங்கால்
துன்பம் அதனில் பெரிது

இன்/பங் கடல்/மற்/றுக் கா/ம மஃ/தடுங்/கால்
துன்/ப மத/னிற் பெரிது.

நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநிரைநேர்
நேர்நேர் நிரைநேர்  நிரை(பு).

தேமா புளிமாங்காய் தேமா கருவிளங்காய்
தேமா புளிமா பிறப்பு.

ஃ (ஆய்தம்) குறிலாக மஃ/தடுங்/கால் அலகிடப்பட்டது.
கருவிளங்காய்ச்சீரின் முதலசையில் (நிரை) குறிலாக அலகிடப்பட்டது

====≠====≠====≠==47/6==≠====≠====

அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்  குறள் எண்: 1279

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்டு அவள்செய் தது.

தொடி/நோக்/கி மென்/றோ/ளு நோக்/கி யடி/நோக்/கி
யஃ/தாண் டவள்/செய் தது.

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நேர் நிரைநேர் நிரை.

புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய்
தேமா புளிமா மலர்.

தேமாச்சீரின் முதலசையாய் (நேர்) அலகிடப்படாமல் வந்தது.
====≠====≠====≠==48/6==≠====≠====

அதிகாரம்: புலவி  குறள் எண்:1308

நோதல் எவன்மற்று நொந்தார்என்று அஃதுஅறியும்
காதலர் இல்லா வழி.

நோ/த லெவன்/மற்/று நொந்/தா/ரென் றஃ/தறி/யுங்
கா/தல ரில்/லா வழி.

நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நிரை நேர்நேர் நிரை.

தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்

தமிழ்மைந்தன் சரவணன்

unread,
Dec 21, 2019, 5:54:04 AM12/21/19
to மின்தமிழ்

நன்றி அய்யா தற்பொழுதுதான் பார்த்தேன்

திருத்திக்கொள்கிறேன்



On Sunday, 10 June 2018 17:48:42 UTC+5:30, N. Ganesan wrote:


On Sunday, June 10, 2018 at 3:45:39 AM UTC-7, nkantan r wrote:
நன்றி.

இவை பொருள் விளங்க சொல்லடிபடையில் பிரிக்கப்பட்டவை.
1. குறள் எண்ணையும் சுட்டி பதிவிட்டுருக்கலாம்.
2. இவை பொருள் விளங்க சொல்லடிபடையில் பிரிக்கப்பட்டவை.
சீர் அடிப்படையில் முதலில் பதிவிடுவோம்

rnk


அடிபடை என்பது வினைத்தொகை. ’தாக்குகின்ற படை’  எனப் பொருள். இராமன் அடிபடையொடும் இலங்கை சென்றான்.
அடியாள், அடிபடை, ....

நீங்கள் சொல்ல நினைப்பது: அடிப்படை.

‘சரவணன் தமிழ்மைந்தன்’ முகமது மேத்தா, அப்துல் ரகுமான், ... நல்ல புதுக்கவிதைகளை இடுகிறார்.
அவர் காழ்புணர்ச்சி என எழுதுகிறார். அஃது காழ்ப்புணர்ச்சி. பலர் ஃபேஸ்புக்கில். பார்ப்பனர் ‘priests' என்னும்
சொல்லைப் பார்பனர் என எழுதுகின்றனர். இவை போல் பல ....

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages